search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமன்னா"

    • முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து பிரபலமடைந்தவர் தமன்னா.
    • இவர் தொழிலதிபரை திருமணம் செய்யவுள்ளதாக தகவல் பரவி வருகிறது.

    தமிழில் விஜய், அஜித், சூர்யா, விஷால், தனுஷ் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் நடித்துள்ள தமன்னா தெலுங்கு, இந்தியிலும் அதிக படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடிப்பில் வெளியான பாகுபலி திருப்புமுனை படமாக அமைந்தது. இந்த நிலையில் தமன்னாவுக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது.


    தமன்னா

    இதற்கு முன்பு திருமண முடிவை பெற்றோரிடம் விட்டு விட்டேன். அவர்கள் பார்க்கும் மாப்பிள்ளையை மணப்பேன் என்று தமன்னா கூறியிருந்தார். தற்போது பெற்றோர் மாப்பிள்ளையை பார்த்து முடிவு செய்து இருப்பதாகவும், மணமகன் மும்பையை சேர்ந்த பெரிய தொழில் அதிபர் என்றும், அவரை மணக்க தமன்னாவும் சம்மதித்துவிட்டார் என்றும் கூறப்பட்டது. இதற்கு தமன்னா மறுப்பு தெரிவிக்காமல் இருந்ததால் தகவல் உண்மையாக இருக்கலாம் என்று ரசிகர்கள் பதிவிட்டு வந்தனர்.


    தமன்னா பதிவு

    இந்த நிலையில் இதற்கு பதிலளிக்கும் விதமாக தமன்னா தனது சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், தனது தொழில் அதிபர் கணவரை அறிமுகப்படுத்துவதாக குறிப்பிட்டு அவரே ஆண் வேடத்தில் இருப்பது போன்று தோன்றுகிறார். மேலும், #திருமண வதந்திகள் #எனது வாழ்க்கை பற்றி கதை எழுதும் ஒவ்வொருவருக்கும் என்று ஆங்கிலத்தில் ஹேஷ்டேக்கையும் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு வைரலாகி வருகிறது.

    • விஜய், அஜித், சூர்யா, விஷால், தனுஷ் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் நடித்துள்ளவர் தமன்னா.
    • தமன்னாவுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் பரவி வருகிறது.

    தமிழில் விஜய், அஜித், சூர்யா, விஷால், தனுஷ் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் நடித்துள்ள தமன்னா தெலுங்கு, இந்தியிலும் அதிக படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடிப்பில் வெளியான பாகுபலி திருப்புமுனை படமாக அமைந்தது. இந்த நிலையில் தமன்னாவுக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது. ஏற்கனவே இதுபோல் திருமண கிசுகிசு வந்தபோது தமன்னா உடனடியாக மறுத்தார். திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இப்போதைக்கு இல்லை என்று கூறினார். ஆனால் தற்போது திருமண ஏற்பாடுகள் நடப்பதாக வலைத்தளத்தில் மீண்டும் பரவி வரும் தகவலுக்கு தமன்னா மறுப்பு எதுவும் சொல்லவில்லை.

    தமன்னா

    தமன்னா

     

    திருமண முடிவை பெற்றோரிடம் விட்டு விட்டேன். அவர்கள் பார்க்கும் மாப்பிள்ளையை மணப்பேன் என்று முன்பு கூறியிருந்தார். தற்போது பெற்றோர்தான் மாப்பிள்ளையை பார்த்து முடிவு செய்து இருப்பதாகவும், மணமகன் மும்பையை சேர்ந்த பெரிய தொழில் அதிபர் என்றும், அவரை மணக்க தமன்னாவும் சம்மதித்துவிட்டார் என்றும் கூறப்படுகிறது. 

    • திரைத்துறையில் 17 வருடங்களான நிலைத்து நிற்கும் நடிகை தமன்னா.
    • தற்போது இவர் அளித்துள்ள பேட்டியில் திருமணம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

    தமிழில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்த தமன்னா 17 வருடங்களாக சினிமாவில் நீடிக்கிறார். தற்போது அவருக்கு 32 வயது ஆவதால் திருமணம் செய்து வைக்க பெற்றோர் மாப்பிள்ளை பார்க்கின்றனர் என்றும், விரைவில் அவரது திருமணம் நடக்க உள்ளது என்றும் தகவல்கள் பரவின.

     

    தமன்னா

    தமன்னா

    இதற்கு விளக்கம் அளித்து தமன்னா அளித்துள்ள பேட்டியில், ''எல்லாரையும் போலவே எனது பெற்றோரும் என்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்திக் கொண்டே இருக்கிறார்கள். எனக்கும் திருமண அமைப்பின் மீது நம்பிக்கை இருக்கிறது. திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும், தாயாக வேண்டும் என்றும் ஆசையாக உள்ளது. ஆனால் தற்போதைக்கு நான் எனது சொந்த வாழ்க்கைக்காக நேரத்தை ஒதுக்க முடியாத நிலையில் இருக்கிறேன்.

     

    தமன்னா

    தமன்னா

    நடிப்புத் தொழிலில் மிகவும் பிஸியாக இருக்கிறேன். பிஸி காரணமாக சில முறை எனது பெற்றோரிடம்கூட தொலைபேசியில் பேச முடியாத நிலையில் இருக்கிறேன். இப்போதைக்கு எனது சந்தோஷம் எல்லாமே சூட்டிங் லொகேஷனில்தான் இருக்கிறது. எனது தொழிலை நான் இந்த அளவிற்கு சிறப்பாக செய்வதற்கு எனது பெற்றோர் மற்றும் எனது ரசிகர்களின் ஆதரவு தான் காரணம் என்பதை மறக்க மாட்டேன்" என்றார்.

    • தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியான படம் புஷ்பா.
    • இப்படத்தின் இரண்டாம் பகத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

    இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் 'புஷ்பா'. இப்படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். செம்மரக்கட்டை கடத்தலை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டு தமிழ், இந்தி மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகி ரூ.350 கோடி வரை வசூலை ஈட்டியது.


    புஷ்பா

    இப்படத்தில் இடம்பெற்ற 'ஊ சொல்றியா மாமா...' என்ற பாடலுக்கு சமந்தா கவர்ச்சி நடனம் ஆடியிருந்தார். இந்த பாடல் தற்போது வரை ரசிகர்கள் பலரின் முணுமுணுப்பாக இருந்து வருகிறது. இதைத்தொடர்ந்து 'புஷ்பா-தி ரூல்' படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்கியது. இதிலும் முதல் பாகத்தில் இருந்தது போல் சமந்தாவின் பாடல் காட்சி ஒன்று இருக்கும் என்று கூறப்பட்டது.


    புஷ்பா

    இந்நிலையில், 'புஷ்பா-தி ரூல்' படத்தில் சமந்தா இடம் பெறவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, புஷ்பா இரண்டாம் பாகத்தில் நடிகை சமந்தாவிற்கு பதிலாக தமன்னா இடம்பெறவுள்ளதாகவும் அவரிடம் படக்குழு பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதை படக்குழு இதுவரை உறுதிப்படுத்தவில்லை.

    • தமிழ் திரையுலகில் முன்னணி நடிகை தமன்னா.
    • இவர் நடிப்பில் உருவாகியுள்ள 'பப்ளி பவுன்சர்' செப்டம்பர் 23-ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

    தமிழில் முன்னணி நடிகையாக திகழும் தமன்னா 'கேடி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். திரைத்துறைக்குள் நுழைந்த சில ஆண்டுகளிலே தன் நடிப்பு திறமையால் அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என அனைத்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார். அதன்பின்னர், தெலுங்கு படங்களில் வாய்ப்பு கிடைக்க அங்கேயே அதிக கவனம் செலுத்தி வருகிறார்.


    திலீப் - தமன்னா

    இந்நிலையில், நடிகை தமன்னா முதல் முறையாக மலையாளத்தில் அறிமுகமாகவுள்ளார். இயக்குனர் அருண் கோபி இயக்கத்தில் திலீப் கதாநாயகனாக நடிக்கும் படத்தில் இவருக்கு ஜோடியாக தமன்னா நடிக்கவுள்ளார்.

    இப்படத்தின் பூஜை கொல்லத்தில் உள்ள கொட்டாரக்கரை ஸ்ரீ மகா கணபதி ஆலயத்தில் வைத்து நடைபெற்றது. செப்டம்பர் 10-ம் தேதி தொடங்கும் இப்படத்தின் படப்பிடிப்பு மொத்தம் 130 நாட்கள் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.


    திலீப் - தமன்னா

    தமன்னா நடித்துள்ள 'பப்ளி பவுன்சர்' திரைப்படம் செப்டம்பர் 23-ஆம் தேதி நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • தமிழ் திரையுலகில் முன்னணி நடிகை தமன்னா.
    • இவர் நடிப்பில் உருவாகியுள்ள 'பப்ளி பவுன்சர்' செப்டம்பர் 23-ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

    தமிழில் முன்னணி நடிகையாக திகழும் தமன்னா 'கேடி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். திரைத்துறைக்குள் நுழைந்த சில ஆண்டுகளிலே தன் நடிப்பு திறமையால் அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என அனைத்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார். அதன்பின்னர், தெலுங்கு படங்களில் வாய்ப்பு கிடைக்க அங்கேயே அதிக கவனம் செலுத்தி வருகிறார்.


    தமன்னா

    இவர் நடிப்பில் உருவாகியுள்ள 'பப்ளி பவுன்சர்' திரைப்படம் செப்டம்பர் 23-ஆம் தேதி நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. ஜெயிலர் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தமன்னாவை ஒப்பந்தம் செய்து இருப்பதாக கூறப்படுகிறது.


    தமன்னா

    இந்நிலையில், நடிகை தமன்னா முதல் முறையாக மலையாளத்தில் அறிமுகமாகவுள்ளார் என தகவல் வெளியாகவுள்ளது. அதன்படி அருண் கோபி இயக்கத்தில் திலீப் கதாநாயகனாக நடிக்கும் படத்தில் தமன்னா கதாநாயகியாக நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது.

    • தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தமன்னா.
    • இவர் திரையுலகில் கதாநாயகிகளுக்கு மதிப்பே கிடையாது என்று ஆதங்கமாக பேசியுள்ளார்.

    தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் தமன்னா. சிம்ரனுக்கு அடுத்து இடையழகி என்று தமன்னா ரசிகர்களால் வர்ணிக்கப்படுபவர். தமிழ் பட உலகின் தங்க நிறத்தழகிகளில் ஒருவரான இவருக்கு ரசிகர்கள் ஏராளம்.

    தமன்னா 

    தமன்னா 

     

    சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமன்னா தனது ஆதங்கத்தை கொட்டி தீர்த்து இருக்கிறார். நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, "சினிமாவில் பெண்களுக்கு மதிப்பே கிடையாது. பெண்கள் பேச்சை ஒரு பொருட்டாக கூட பார்க்க மாட்டார்கள். கதாநாயகனுக்கு வழங்கப்படும் சம்பளம் கதாநாயகிகளுக்கு வழங்கப்படுவது கிடையாது. இந்த போக்கு சினிமா தோன்றியதில் இருந்தே தொடர்கிறது" என்று குறிப்பிட்டார்.

    தமன்னா

    தமன்னா

     

    மேலும் அவர் பேசுகையில், ''கதாநாயகிகளின் புகைப்படம் பட 'போஸ்டர்'களில் வருவதே பெரிய விஷயம். பட விழாக்களுக்கு கதாநாயகர்கள் வராமல் இருந்தால் ஒரு காரணம் சொல்வார்கள். அதேவேளை கதாநாயகி வரவில்லை என்றால் இட்டுக்கட்டி பேசுவார்கள். இந்த நிலைமை எப்போது மாறுமோ..." என்று ஆதங்கப்பட்டார்.

    2019-ம் ஆண்டில் வெளியான 'ஆக்‌ஷன்' என்ற படத்துக்கு பிறகு தமிழில் தமன்னாவுக்கு படங்கள் இல்லை. தற்போது தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் மட்டும் அவர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • ரஜினியின் 169-வது திரைப்படமான ஜெயிலர் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார்.
    • இப்படத்தில் கன்னட நடிகர் சிவராஜ் குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

    நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 169-வது படம் ஜெயிலர். இதில் கன்னட நடிகர் சிவராஜ் குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும்,ஐஸ்வர்யா ராய், பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.


    ஜெயிலர்

    சமீபத்தில் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 15-ஆம் தேதி அல்லது 22 -ஆம் தேதிகளில் தொடங்கப்படும் என ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இப்படத்தின் கதாநாயகி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

    அதன்படி ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக தமன்னா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • மதுர் பண்டர்கர் இயக்கத்தில் தமன்னா நடித்துள்ள படம் பப்ளி பவுன்சர்.
    • இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

    தமிழில் முன்னணி நடிகையாக திகழும் தமன்னா 'கேடி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். திரைத்துறைக்குள் நுழைந்த சில ஆண்டுகளிலே தன் நடிப்பு திறமையால் அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என அனைத்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார். அதன்பின்னர், தெலுங்கு படங்களில் வாய்ப்பு கிடைக்க அங்கேயே அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

    தமன்னா தற்போது நடித்துள்ள படம் 'பப்ளி பவுன்சர்'. இந்த படத்தை இயக்குனர் மதுர் பண்டர்கர் இயக்கியுள்ளார். இதில் சவுரப் சுக்லா, அபிஷேக் பஜாஜ் மற்றும் சாஹல் வைத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.


    பப்ளி பவுன்சர் போஸ்டர்

    ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் மற்றும் ஜங்ளி பிக்ச்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

    அதன்படி, இப்படம் செப்டம்பர் 23-ஆம் தேதி நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. 

    • கேடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிறகு அறிமுகமானவர் தமன்னா.
    • தற்போது இவர் தெலுங்கு படங்களில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.

    தமிழில் முன்னணி நடிகையாக திகழும் தமன்னா 'கேடி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். திரைத்துறைக்குள் நுழைந்த சில ஆண்டுகளிலே தன் நடிப்பு திறமையால் அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என அனைத்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார். அதன்பின்னர், தெலுங்கு படங்களில் வாய்ப்பு கிடைக்க அங்கேயே அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

    தமன்னா

    இந்நிலையில், தற்போது வித்யாசமான கவர்ச்சி உடையில் வலம் வரும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமன்னா ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சிக்காக இந்த உடையை அணிந்து சென்றிருக்கிறார் அதன் புகைப்படங்களையும் வீடியோவையும் அவர் பதிவிட்டிருக்கிறார்.

    தமன்னா

    கருப்பு நிற உடையில் வித்யாசமான கவர்ச்சி உடையில் அவர் இருக்கும் புகைப்படத்தை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

    தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை தமன்னாவின் புதிய புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
    நடிகைகள் அம்மன் வேடங்களில் நடித்த பக்தி படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றுள்ளன. கே.ஆர்.விஜயா உள்ளிட்ட பழம்பெரும் கதாநாயகிகள் பலர் அம்மனாக நடித்து இருக்கிறார்கள். கடந்த வருடம் வெளியான மூக்குத்தி அம்மன் பக்தி படத்தில் அம்மனாக நடித்த நயன்தாரா கதாபாத்திரத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது.

    இந்த நிலையில் தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் தமன்னா தற்போது அம்மன் வேடமிட்டு தலை வாழை இலையில் உணவு சாப்பிடும் புகைப்படத்தை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

    தமன்னா

    அதில், ‘‘வாழை இலையில் உணவு சாப்பிடும்போது என்னை கடவுளாக உணர்கிறேன்” என்ற பதிவையும் பகிர்ந்துள்ளார். தமன்னாவின் அம்மன் வேட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி ரசிகர்கள் பலரும் உங்களுக்கு அம்மன் வேடம் கச்சிதமாக உள்ளது. புதிய படத்தில் அம்மனாக நடிக்கிறீர்களா? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். தமன்னா தற்போது தெலுங்கில் 4 படங்களிலும், இந்தியில் 2 படங்களிலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
    ×