search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆண்கள்"

    திருமணமான 15-49 வயது பெண்களில் மூன்றில் இருபங்கினர் அதாவது 66.7 சதவீதத்தினர் கருத்தரிப்பை தள்ளிப்போட அல்லது கட்டுப்படுத்த குடும்ப கட்டுப்பாட்டு முறைகளை பயன்படுத்துகின்றனர்.
    புதுடெல்லி:

    இந்தியாவில் முதல்முறையாக ஆண்கள் எண்ணிக்கையை விட பெண்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக தேசிய குடும்ப சுகாதார ஆய்வில் தெரியவந்துள்ளது.

    இந்தியாவில் 2019-21 ஆண்டுகளுக்கான தேசிய குடும்ப சுகாதார சர்வே-5 நடத்தப்பட்டுள்ளது. 2 கட்டங்களாக நடத்தப்பட்ட குடும்ப சுகாதார சர்வேயின் முடிவுகளை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

    இதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    * 88.6 சதவீத குழந்தைகள் ஆஸ்பத்திரிகளில் பிறந்துள்ளன. முந்தைய சர்வேயில் இது 78.9 சதவீதமாக இருந்தது. இது இந்தியா ஆஸ்பத்திரிகளில் குழந்தைகள் பிறப்பதை நோக்கி இந்தியா முன்னேறி செல்கிறது என்பதற்கு சான்றாக அமைகிறது.

    * இந்தியாவில் முதல்முறையாக ஆண்களின் எண்ணிக்கையை விட பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 1,000 ஆண்களுக்கு 1,020 பெண்கள் என்கிற அளவுக்கு பெண்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதன்மூலம் இந்தியா, வளர்ந்த நாடுகளுடன் சேருகிறது.

    * பெரும்பாலான மாநிலங்களில் ஆண்களை விட பெண்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஆனால் ஆண்களை விட பெண்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள மாநிலங்களாக குஜராத், மகாராஷ்டிரா, அருணாசலபிரதேசம், அரியானா, மத்திய பிரதேசம், பஞ்சாப் உள்ளன.

    * குழந்தைகள் பிறப்பை பொறுத்தவரையில், 2015-16-ல் 1,000 ஆண் குழந்தைகளுக்கு 919 பெண் குழந்தைகள் என இருந்தது. இது 2019-20-ல் 1,000 ஆண் குழந்தைகளுக்கு 929 பெண் குழந்தைகள் என்ற அளவுக்கு அதிகரித்தது.

    * ஐந்தில் நான்கு தாய்மார்கள் அதாவது 78 சதவீத தாய்மார்கள் பிரசவத்துக்கு பிந்தைய பராமரிப்பை பிரசவித்த 2 நாட்கள் வரையில் டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்ட சுகாதார பணியாளர்கள் மூலம் பெற்றுள்ளனர். முந்தைய சர்வேயில் இது 62.4 சதவீதமாக இருந்துள்ளது. இது பிரசவத்தின்போதும், அதற்கு பின்னரும் குழந்தைகள் இறப்பை தடுக்கும்.

    கர்ப்பிணி பெண்

    * மொத்த கருத்தரிப்பு விகிதம், ஒரு பெண்ணுக்கு 2 குழந்தைகள் என்கிற அளவை எட்டி உள்ளது. முந்தைய சர்வேயில் இது 2.2 ஆக இருந்து இருக்கிறது. இது பெண்கள் கருத்தரிப்பு காலத்தில் குறைவான எண்ணிக்கையில் குழந்தை பெறுகின்றனர், குடும்பக்கட்டுப்பாடு, சற்றே தாமதமாக திருமணம் செய்தல் போன்ற அறிவினை பெண்கள் கொண்டுள்ளனர் என்பதை காட்டுகிறது.

    * குழந்தைகள் பிறப்பு பதிவை பொறுத்தமட்டில் 5 வயது வரையில் பதிவு செய்வது 89.1 சதவீதமாக அதிகரித்துள்ளது. முந்தைய சர்வேயில் இது 79.7 சதவீதம் ஆகும்.

    * 41 சதவீத குடும்பங்களில் குறைந்தது ஒருவராது சுகாதார காப்பீடு செய்துள்ளனர். முந்தைய சர்வேயில் இது 28.7 சதவீதமாக இருந்துள்ளது.

    * தற்போது திருமணமான 15-49 வயது பெண்களில் மூன்றில் இருபங்கினர் அதாவது 66.7 சதவீதத்தினர் கருத்தரிப்பை தள்ளிப்போட அல்லது கட்டுப்படுத்த குடும்ப கட்டுப்பாட்டு முறைகளை (கருத்தடை முறைகள்) பயன்படுத்துகின்றனர்.

    * நாட்டில் தற்போது திருமணமான 15-49 வயது பெண்களின் குடும்ப கட்டுப்பாட்டு தேவை 9.4 சதவீதமாக குறைந்துள்ளது. இது 2015-16-ல் 12.9 சதவீதமாக இருந்துள்ளது.

    * 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலை கடந்த சர்வேயில் இருந்து இந்த சர்வேயில் ஓரளவு முன்னேற்றம் கண்டுள்ளது.

    இவ்வாறு குடும்ப சுகாதார சர்வே முடிவுகள் காட்டுகின்றன.


    ஆண்கள் ராஜ கம்பீர தோற்றத்தை பெறுகின்ற வகையிலான ஆடை வகைதான் ஷெர்வாணி. தற்காலத்தில் ஆண்கள் பண்டிகைகள் மற்றும் விழாக்களில் அணியவும் ஷெர்வாணியை பயன்படுத்தி வருகின்றனர்.
    ஆண்கள் ராஜ கம்பீர தோற்றத்தை பெறுகின்ற வகையிலான ஆடை வகைதான் ஷெர்வாணி. பெரும்பாலும் திருமணத்திற்கு அணிய ஏற்ற ஆடையாக ஷெர்வாணி திகழ்கின்றது. ஆயினும் தற்காலத்தில் ஆண்கள் பண்டிகைகள் மற்றும் விழாக்களில் அணியவும் ஷெர்வாணியை பயன்படுத்தி வருகின்றனர்.

    அதாவது ஷெர்வாணி என்பது பெண்கள் அணிகின்ற பிரம்மாண்ட ஆடைகளுக்கு ஏற்ற நிகரான வேலைப்பாடுகளுடன் உருவாக்கப்படுகிறது. ஆண்கள் அணிகின்ற ஷெர்வாணி வடிவமைப்பு என்பது ஒன்பது வகையிலான பிரிவுகளில் அடங்கி விடுகிறது. அதாவது சிப்கான் ஷெர்வாணி, இன்டோ-வெஸ்டர்ன் ஷெர்வாணி, அச்கன் ஷெர்வாணி, ஜோத்பூரி ஷெர்வாணி, ஜாக்கெட் ஸ்டைல் ஷெர்வாணி, அனார்கலி ஸ்டைல் ஷெர்வாணி, பிரிண்டட் ஷெர்வாணி, பாகிஸ்தானி ஷெர்வாணி உள்பட ஒன்பது பிரிவுகளை அடிப்படையாக கொண்ட ஷெர்வாணி உருவாக்கம் செய்யப்படுகிறது.

    சிறப்பு மிகு சிப்கான் ஷெர்வாணி


    பழங்கால ஆடை வடிவமைப்புக்கு ஏற்றவாறு அழகிய வடிவில் சிப்கான் உள்ளது. அதாவது ராஜாக்கள் எந்தவிதமான கம்பீர தோற்றத்துடன் கச்சிதமான, இறுக்கமான ஷெர்வாணி அணிந்து இருப்பார்களோ அதே போன்று வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. அதாவது முகலாக காலத்தில் உருவாக்கப்பட்ட மாடல்களை அடிப்படையாக கொண்டு சிப்கான் ஷெர்வாணி வடிவம் பெற்றுள்ளது. மேல் சட்டை அமைப்பு என்பது இரட்டை அடுக்கு கொண்டதால் மார்பு பகுதியில் கவசம் போன்ற அமைப்பும் அதற்கு கீழ் இருந்து இரு பிரிவு வெட்டுகளுடன் கால் முட்டி வரை நீண்ட ஆடை அமைப்பு. இதனுடன் அதற்கேற்ற டர்பன், மாலை, கத்தி போன்றவை இணைப்பாகவும் கிடைக்கின்றது.

    நவீன காலத்திற்கேற்ற இண்டோ-வெஸ்டர்ன் ஷெர்வாணி

    தற்கால இளைஞர்கள் விரும்பி வாங்கும் பிரிவாக இண்டோ வெஸ்டர்ன் உள்ளது. இதன் மேம்பட்ட நவீன வடிவமைப்பு என்பது மாறுபட்ட வண்ண சேர்க்கை, வண்ண சாயல் போன்றவை கூடுதல் பொலிவை தருகின்றன. தொடை பகுதி வரை நீண்ட இந்த ஷெர்வாணி கைப்பகுதி, காலர் போன்றவை வண்ணத்துடனும், நடுப்பகுதி பிரகாசமான வண்ணத்துடன் காட்சி அமைப்புடன் பெரும்பாலும் காணப்படும். சில மாடல்கள் ஒற்றை வண்ண சாயலுடன் காட்சி தருகின்றது. இதன் மேற்புற அழகை மேம்படுத்த மணிகள், கற்கள் மற்றும் ராஜகம்பீர பட்டன்கள் போன்றவை பயன்படுத்தப்படுகிறது.



    பிரிண்டட் ஷெர்வாணி

    நவீன மாடல் என்பதில் பிரிண்டட் ஷெர்வாணியும் இடம் பிடித்துள்ளது. பலதரப்பட்ட உருவ அமைப்பு, வடிவம் மற்றும் வரைவோவிய வேலைப்பாடுகள் போன்றவை பிரிண்ட் செய்யப்பட்டவாறு மேம்பட்ட வண்ண கலவையுடன் உள்ளன. கண்டவுடன் மயங்கும் அமைப்பில் மேற்சட்டை அமைப்பு முழுவதும் பிரிண்ட் வேலைப்பாடு செய்யப்பட்டவாறு கிடைக்கின்றன. இரட்டை வண்ண சாயலில் கீழ்பகுதி பேண்ட்-க்கு இணையான வண்ண அமைப்பு மேல்சட்டையில் வெளிப்படும் வகையில் பூ வேலைப்பாடு செய்யப்பட்டிருக்கும்.

    ஜோத்பூரி ஷெர்வாணி

    அதிகபட்ச ராயல் தோற்றத்தை வழங்கிடும் கச்சிதமான ஷெர்வாணி. இதன் உருவாக்கம் கவுரவ தோற்றத்தை அளிக்கும் வகையிலேயே இருக்கும். ஒற்றை வண்ணத்தில் அழகிய வெட்டுகள் மற்றும் பட்டன் அமைப்புகள் மட்டும் செய்யப்பட்டு இருக்கும். இதில் எம்ப்ராய்டரி மற்றும் கற்கள் ஏதும் பதியப்படாமல் அதிகபட்ச வேலைப்பாடு ஏதுமின்றி அதேசமயம் வியக்கும் வடிவமைப்புடன் ஜோத்பூரி ஷெர்வாணிகள் உள்ளன. மேம்பட்ட துணிகள் கொண்ட சற்று சுகமான அமைப்புடன் ஜோத்பூரி ஷெர்வாணி உருவாக்கப்படுகிறது.

    ஜாக்கெட் ஸ்டைல் ஷெர்வாணி

    உயர் தரமான துணி வகைகளை உஸ்ஸர், ராசில்க், பனாரஸி மற்றும் ஜாம்வார் கற்கள் கொண்டு அதிகபட்ச கவர்ச்சியுடன் இந்த ஷெர்வாணி உருவாக்கம் திகழ்கிறது. மேல்சட்டை அமைப்பு என்பது இரு அடுக்கு பிரிவுகளாக வேறு வண்ணப்பகுதிகளாக உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. ஜாக்கெட் அமைப்பில் அதிகபட்ச வேலைப்பாடும் அதற்கு அடுத்த பகுதியில் பிளைன் துணி அமைப்பும் உள்ளவாறு உள்ளது. தங்க சரிகை மற்றும் எம்பிராய்டரி செய்யப்பட்ட ஜாக்கெட் ஷெர்வாணி தங்கமயமாய் ஜொலிக்கும் அமைப்பில் உள்ளன.

    அனார்கலி ஷெர்வாணி

    மார்பு பகுதியில் கச்சிதமான இறுக பற்றும் அமைப்புடன் இருக்க கீழ் இறங்க இறங்க அகலமான அமைப்புடன் உள்ளவாறு உருவாக்கப்பட்டுள்ளது. சில மாடல்கள் குடை மாதிரி விரிந்த அமைப்புடனும், சில ‘க்ஷி’ வடிவ கட்டிங் கொண்டவாறும், சில கனமாக கோட் அமைப்புடன் உட்புற சுருள் வடிவ துணியமைப்புடன் திறம்பட வடிவமைக்கப்பட்டுள்ளது. ராயல் லுக் தரும் வகையில் அனார்கலி ஷெர்வாணியின் மேற்பகுதியில் திரட் வேலைப்பாடு மற்றும் மணிகள், கற்கள் பதித்த வேலைப்பாடும் செய்யப்பட்டிருக்கும். அதுபோல் ஷெர்வாணி ஆடைகளுக்கு ஏற்ற ஷால் மற்றும் ஜீட்டிஸ் ஷு போன்றவை கம்பீர அமைப்புடன் இணைப்பாக கிடைக்கின்றது. 
    ஆண்களின் லைப்-ஸ்டைல் பெண்களை காட்டிலும் வெகுவாக மாறுபட்டது. சரி ஆண்கள் எப்படி தங்கள் அழகை பராமரிப்பது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
    ஆண்களின் லைப்-ஸ்டைல் பெண்களை காட்டிலும் வெகுவாக மாறுபட்டது. இதில் அழகுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களை காண்பது மிகக் கடினமான ஒன்று. அழகு பராமரிப்பு உணர்ச்சியை ஆண்கள் மற்றவர்களுக்காக மறைத்து, செய்துக் கொள்வதற்கு வெட்கபட வேண்டிய அவசியம் இல்லை. சரி ஆண்கள் எப்படி தங்கள் அழகை பராமரிப்பது என்று கேட்குறீர்களா? இதோ, ஆண்களுக்கான சில எளிய அழகுக்குறிப்புகள்...

    * பெண்களை விட ஆண்களின் சருமம் அதிக எண்ணெய் சுரக்கும் தன்மை கொண்டது. இதனால் தான் ஆண்களின் முகத்தில் எண்ணெய் வழிந்த வண்ணம் இருக்கும். இதற்கு சரியான தீர்வு கிரீம் அல்ல, ஜெல் பயன்படுத்துவது தான். ஜெல் பயன்படுத்துவதினால், பிக்மென்டேசன் மாசு மருக்களையும் கட்டுப்படுத்தலாம்.

    * முகத்தில் ஷேவ் தொடர்ந்து செய்வதினால் சருமம் கடினமாக மாறிவிடும். இதில் இருந்து தப்பிக்க ஒரு வழி இருக்கிறது. ஷேவ் செய்தப்பின் தேங்காய் எண்ணெய் அல்லது தூய பாதாம் எண்ணெயை தேய்தால் சருமம் மென்மையாகவே இருக்கும்.

    * கணினி வேலை செய்பவர்களுக்கும், அதிக படியான மனஅழுத்தம் கொண்டவர்களுக்கும் கண்களின் கீழ் பை போன்று வருவதுண்டு. வெள்ளரிக்காயில் தேன் தடவி கண்கள் மீது வைத்து கட்டிக்கொள்ளுங்கள். மாறாக பயன்படுத்திய டீ பேக்-களை பயன்படுத்தலாம். 10 நிமிடம் கழித்து கழுவி மென்மையான துணியால் ஒத்தி எடுங்கள். சில நாட்களில் மாற்றம் தெரியும்.

    * பெண்களை மட்டும் இல்லை, ஆண்களையும் விட்டு வைப்பதில்லை இந்த வெப்பம். சீக்கிரம் கருத்துவிடும் சருமத்தை காப்பாற்ற ஆண்களும் சன் லோஷனை தேவைப்படுகிறது. அதிக SPF உடைய சன் லோஷனை பயன்படுத்துவது நல்லது.

    * ஆண்களின் சருமத்திற்கும் ஈரபதம் மிக அவசியம் என்பதை மறக்கவேண்டாம். ஈரப்பதத்தை இழக்கும் சருமமானது வறண்டு, வெடிப்பு விட்டு, காய்ந்த திட்டுகளாக தென்படும். அதற்கு நீர் அதிகமாக அருந்துங்கள், அவ்வப்போது சோப்பு இல்லாமல் வெறும் குளிர்ந்த தண்ணீரில் முகம் கழுவுங்கள்.
    ஆண்களுக்கு இளம் வயதிலேயே முடி அதிகம் கொட்டி, விரைவிலேயே வழுக்கை ஏற்பட்டுவிடுகிறது. உங்களுக்கு வழுக்கை விழுந்தால், அதனை மறைக்க என்ன வழிமுறைகளை பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.
    தற்போது வழுக்கைத் தலை என்பது சாதாரணமான ஒன்றாகிவிட்டதோடு, ஃபேஷனாகியும் விட்டது. ஆம், இன்றைய ஆண்களுக்கு இளம் வயதிலேயே முடி அதிகம் கொட்டி, அதனால் விரைவிலேயே வழுக்கை ஏற்பட்டுவிடுகிறது. ஆகவே ஆண்கள் பலரும் தங்களின் முடிக்கு அதிக பராமரிப்புக்களைக் கொடுத்து வருகின்றனர்.

    இருப்பினும், அதையும் மீறி சிலருக்கு வழுக்கை ஏற்பட்டுவிடுகிறது. இதற்கு அவர்களின் ஜீன்கள் தான் காரணம். உங்கள் பரம்பரையில் யாருக்கேனும் விரைவில் வழுக்கை விழுந்திருந்தால், உங்களுக்கும் வழுக்கை விரைவில் ஏற்படக்கூடும். அப்படி உங்களுக்கு வழுக்கை விழுந்தால், அதனை மறைக்க என்ன வழிமுறைகளை பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.

    உங்களுக்கு வழுக்கை ஏற்பட ஆரம்பித்தால், கைத்தேர்ந்த சிகை ஒப்பனையாளரை சந்தித்து, அவர்களின் பரிந்துரையின் பேரில் நடந்து கொள்ளுங்கள். ஏனெனில் சிகை ஒப்பனையாளருக்கு உள்ள அனுபவத்தால், நிச்சயம் உங்களுக்கு ஏதேனும் ஒரு நல்ல வழியைக் காட்ட முடியும். எனவே அவர்கள் சொல்வதை தவறாமல் பின்பற்றி உங்கள் வழுக்கைத் தலையை மறைத்துக் கொள்ளுங்கள்.

    உங்கள் தலையில் ஆங்காங்கு மட்டும் முடி இருப்பதைப் பார்க்க உங்களுக்கு கஷ்டமாக இருந்தால், மொட்டை அடித்துக் கொள்ளுங்கள். மேலும் தற்போது மொட்டைத் தலையுடன் ஆண்கள் இருப்பது ஃபேஷனும் கூட. எனவே அவ்வப்போது உங்கள் தலையை ஷேவ் செய்து, மொட்டைத் தலையுடன் சுற்றுங்கள்.



    உச்சந்தலையில் நிறமூட்டல் (Scalp Pigmentation)

    இந்த முறை மிகவும் விலை அதிகம் கொண்ட செயல்முறை தான் உச்சந்தலையில் நிறமூட்டல். வழுக்கைத் தலையுள்ள பல்வேறு பிரபலங்களும் இந்த செயல்முறையைப் பின்பற்றுகின்றனர். இந்த முறை உலகின் பல பகுதிகளில் மேற்கொள்ளப்படுகிறது. எனவே சரியான இடத்தைத் தேடி கண்டுப்பிடித்து பின்பற்றுங்கள்.

    முடி மாற்றம் (Hair Transplants)

    இது வழுக்கைத் தலையை மறைப்பதற்கு எளிதில் கிடைக்கும் ஓர் சிகிச்சை. இந்த சிகிச்சை சற்று விலை அதிகமானது மட்டுமின்றி, கடுமையான வலியைத் தரக்கூடியதும் கூட. இதனால் தலையில் தழும்புகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. இருப்பினும் பல ஆண்கள் இதனை தேர்வு செய்கின்றனர். உங்களுக்கு விருப்பமிருந்தால், இதனை நீங்கள் மேற்கொள்ளலாம்.

    தலையில் விக் பயன்படுத்தலாம்

    கடைசியாக மேற்கூறிய வழிகள் எதுவும் உங்களுக்கு பொருந்தாவிட்டால், கடைசியில் தலைக்கு விக்கை பயன்படுத்தி தான் ஆக வேண்டும். ஆனால் அப்படி தலைக்கு விக் பயன்படுத்துவதாக இருந்தால், உங்களுக்கு பொருத்தமாக உள்ளதைப் பார்த்து பயன்படுத்துங்கள். இல்லாவிட்டால் அது நீங்கள் விக் வைத்துள்ளீர்கள் என்பதை நன்கு வெளிக்காட்டிவிடும்.

    மனைவிகளின் கொடுமைகளில் இருந்து கணவர்களை காக்க தனியாக ஆணையம் அமைக்க வேண்டும் என்று பா.ஜ.க எம்.பி.க்களான ஹரிநாராயன் ராஜ்பர், அன்சுயல் வர்மா ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர். #BJP #AnshulVerma #HarinarayanRajbhar
    லக்னோ:

    சட்டங்களை தவறாக பயன்படுத்தி கணவன்களை கொடுமை செய்யும் மனைவிகள் மீது ஆண்கள் கொடுக்கும் புகாரை விசாரிக்க தனியாக ஆணையம் அமைக்க வேண்டும் என்று உத்தரபிரதேச மாநில பா.ஜ.க எம்.பி.க்களான ஹரிநாராயன் ராஜ்பர், அன்சுயல் வர்மா ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

    மேலும், இதுதொடர்பாக ஆதரவு திரட்ட இம்மாதம் 23-ம் தேதி சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

    இதுதொடர்பாக எம்.பி ஹரிநாராயன் ராஜ்பர் பேசுகையில், ‘மனைவிகளால் ஆண்களும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகுகிறார்கள். இதுபோன்ற வழக்குகள் நீதிமன்றங்களில் உள்ளது. பெண்களுக்கு நீதி கிடைக்க சட்டம் மற்றும் ஆணையம் உள்ளது. ஆனால் ஆண்களுக்கென்று இதுவரையில் அப்படி கிடையாது. தேசிய பெண்கள் ஆணையம் போன்று ஆண்களுக்கு என்றும் தனியாக ஆணையம் அமைக்கப்பட வேண்டும்,” என்று கூறியுள்ளார்.

    மற்றொரு எம்.பி.யான அன்சுயல் வர்மா கூறுகையில், ‘இவ்விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற நிலைக்குழுவில் தன்னுடைய நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தியுள்ளேன். இந்திய தண்டனை சட்டம் பிரிவு 498ஏ-யில் திருத்தம் கொண்டுவர வேண்டிய அவசியம் உள்ளது.

    கணவன் மற்றும் அவருடைய உறவினர்களால் பெண்கள் வரதட்சணை போன்ற கொடுமைப்படுத்தப்படுதல் இப்பிரிவில் அடங்குகிறது. இந்த சட்டப்பிரிவு ஆண்களை இலக்காக்க தவறாக பயன்படுத்தப்படுகிறது. 1998 முதல் 2015-ம் ஆண்டு வரையில் இதுபோன்ற விவகாராங்களில் தவறாக 27 லட்சம் பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்’ என தெரிவித்துள்ளார். #BJP #AnshulVerma #HarinarayanRajbhar
    ஆண்களின் திருமண வயதை 18 ஆக குறைக்க வேண்டும் என்று மத்திய சட்ட கமிஷன் சிபாரிசு செய்துள்ளது.
    புதுடெல்லி:

    நமது நாட்டில் இப்போது ஆண்களின் திருமண வயது 21, பெண்களின் திருமண வயது 18.

    இந்த நிலையில், குடும்ப சட்டத்தில் சீர்திருத்தங்கள் என்ற தலைப்பில் மத்திய சட்ட கமிஷன் சில சிபாரிசுகளை செய்து உள்ளது. அந்த வகையில் ஆண்களின் திருமண வயதையும், பெண்கள் திருமண வயதைப் போன்று 18 ஆக குறைக்க வேண்டும் என்று கூறி உள்ளது.

    இதுபற்றி கருத்து தெரிவிக்கையில், “பெரும்பான்மைக்கான உலகளாவிய வயது 18 என அங்கீகரிக்கப்பட்டு உள்ளது. அனைத்து குடிமக்களும் தங்கள் அரசுகளை தேர்ந்தெடுக்கும் உரிமை அந்த வயதில் வழங்கப்பட்டு உள்ளது. அப்படி இருக்கிற போது, அவர்களுக்கு தங்கள் மனைவியை தேர்ந்தெடுக்கும் திறனும் அந்த வயதில் வந்து விடுகிறது என்று கருத வேண்டும்” என கூறப்பட்டு உள்ளது.

    திருமணத்துக்கு பெண்ணுக்கு 18 வயது, ஆணுக்கு 21 வயது என மாறுபட்ட வயது வரையறை இருப்பது, மனைவியானவள் கணவனை விட இளமையாக இருக்க வேண்டும் என்ற ஒரே மாதிரியான பங்களிப்புக்குத்தான் வழிவகுக்கும் என சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.

    மேலும், குடும்பத்தின் பெண்களின் பங்கை அங்கீகரிப்பது அவசியம்; அவர்கள் குடும்பத்துக்காக பணம் சம்பாதித்து தந்து இருக்கிறார்களா என பார்க்காமல், அவர்கள் விவாகரத்து செய்திருந்தாலும், திருமணத்துக்கு பின் வாங்கிய சொத்தில் சம பங்கு அளிக்க வேண்டும் எனவும் சட்ட கமிஷன் பரிந்துரை செய்து உள்ளது.
    டெல்லி ஆஸ்பத்திரியில் 3 பெண்களும் தங்கள் கணவன்மார்களுக்கு சிறுநீரகம் தானம் கொடுக்க முடியாத நிலையில், ஒருவர் மற்றொருவரின் கணவருக்கு சிறுநீரகத்தை தானமாக கொடுத்து ஒருவருக்கு ஒருவர் பலன் பெற்று உள்ளனர்.#KidneyDonate
    புதுடெல்லி:

    டெல்லியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில், டெல்லியைச் சேர்ந்த முகமது உமர் யூசுப் (வயது 37), அஜய் சுக்லா (40) மற்றும் பீகார் மாநிலம் மதுபானியைச் சேர்ந்த கமலேஷ் மண்டல் (54) ஆகியோர் சிறுநீரக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சை செய்ய டாக்டர்கள் முடிவு செய்தனர்.

    ஆனால் ரத்த பரிசோதனையில் அந்த மூவருக்கும் அவர்களுடைய மனைவிமார்களின் சிறுநீரகங்கள் பொருந்தாது என தெரியவந்தது. மேலும் உறவினர்களிடம் இருந்தும் அவர்களுக்கு சிறுநீரகங்கள் தானம் பெறமுடியவில்லை.

    அதேசமயம் அதிசயமாக, முகமது உமர் யூசுப்பின் மனைவி சனா காதுனின் (26) சிறுநீரகம் அஜய் சுக்லாவுக்கும், அஜய் சுக்லாவின் மனைவி மாயா சுக்லாவின் (37) சிறுநீரகம் கமலேஷ் மண்டலுக்கும், கமலேஷ் மண்டலின் மனைவி லட்சுமி சாயாவின் (40) சிறுநீரகம் முகமது உமர் யூசுப்புக்கும் பொருந்துவது தெரியவந்தது. இதுபற்றி டாக்டர்கள் அந்த பெண்கள் மூவரிடமும் கூறிய போது, அவர்கள் தங்கள் சிறுநீரகத்தை தானம் வழங்க சம்மதம் தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து சிறுநீரகம் தானம் பெறும் 3 ஆண்கள், சிறுநீரகம் தானம் கொடுக்கும் 3 பெண்கள் ஆகிய 6 பேருக்கும் ஒரே நேரத்தில் ஆபரேஷன் நடந்தது. சனா காதுனின் சிறுநீரகம் ஆபரேஷன் மூலம் மாயா சுக்லாவின் கணவர் அஜய் சுக்லாவுக்கு பொருத்தப்பட்டது. இதேபோல் மாயா சுக்லாவின் சிறுநீரகம் லட்சுமி சாயாவின் கணவல் கமலேஷ் மண்டலுக்கும், லட்சுமி சாயாவின் சிறுநீரகம் சனா காதுனின் கணவர் முகமது உமர் யூசுப்புக்கும் பொருத்தப்பட்டது. 14 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆபரேஷன் வெற்றிகரமாக அமைந்தது.

    3 பெண்களும் தங்கள் கணவன்மார்களுக்கு சிறுநீரகம் தானம் கொடுக்க முடியாத நிலையில், ஒருவர் மற்றொருவரின் கணவருக்கு தங்கள் சிறுநீரகத்தை தானமாக கொடுத்து ஒருவருக்கு ஒருவர் பலன் பெற்று உள்ளனர்.

    ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் இல்லாத இன்று 3 தம்பதியினரும் சிறுநீரக தானத்தின் மூலம் நண்பர்களாகி விட்டனர். இந்த மூன்று சிறுநீரக மாற்று ஆபரேஷன்களும் அபூர்வ நிகழ்வு என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.  #tamilnews  #KidneyDonate
    ×