search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95284"

    சில அவசிய பரிசோதனையை பெண்கள் பலர் கடைபிடிக்கத் தவறி விடுகின்றனர். ஒவ்வொரு பெண்ணுக்கும் அவரவர் வயதிற்கேற்ப, உடல் பாதிப்பிற்கு ஏற்ப மருத்துவ பரிசோதனைகள் தேவைப்படுகின்றது.
    நிறைய உடல் நல செய்திகளை இன்று பத்திரிகைகளும், ஊடகங்களும் தரும் காரணத்தினால் நிறையவே தெரிந்து கொள்கிறோம். ஆரோக்கிய உணவு, உடற்பயிற்சி இவற்றில் அதிக கவனம் செலுத்துகின்றோம். ஆனால் சில அவசிய பரிசோதனையை பெண்கள் பலர் கடை பிடிக்கத் தவறி விடுகின்றனர். ஒவ்வொரு பெண்ணுக்கும் அவரவர் வயதிற்கேற்ப, உடல் பாதிப்பிற்கு ஏற்ப மருத்துவ பரிசோதனைகள் தேவைப்படுகின்றது.

    அவரவர் உயரம், எடைக்கு ஏற்ப body man index BMI) வேண்டும். இதனை தமிழில் உடல் நிலை குறியீட்டெண் என்று சொல்வார்கள். உயரம், எடைக்கேற்ப இந்த குறியீட்டெண் சரியாக இருக்க வேண்டும். கூடுதலாக இருப்பது பல நோய்களில் குறிப்பாக Etatolic Syndrome எனப்படும் சரக்கரை நோய், ரத்தக் கொதிப்பு, அதிக கொலஸ்டிரால், அதிகமாக வயிற்றில் கொழுப்பு.

    இதன் காரணமாக இருதய பாதிப்பு, பக்க வாதம் எனும் பிரச்சினைகளை எளிதில் கூட்டி வந்து விடும். இவை இந்தியர்களுக்கு மற்றவர்களை விட அதிகமாகவே ஏற்படுகின்றன. கர்ப்பமாக திட்டமிடும் மணமான பெண்கள் முதலிலேயே நல்ல மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது நல்லது. உடலில் நல்ல கொழுப்பு இருந்து கெட்ட கொழுப்பு நீங்க நல்ல உடற்பயிற்சி, நடை பயிற்சி மட்டுமே கை கொடுக்கும்.

    * முழு ரத்த பரிசோதனை
    கொழுப்பு பரிசோதனை
    சிறு நீரக பரிசோதனை
    கல்லீரல் பரிசோதனை
    சர்க்கரை அளவு பரிசோதனை

    ஆகியவை இன்றைய கால சூழ்நிலையில் பல நேரங்களில் அவசியமாகின்றது.

    கிட்டத்தட்ட 60-75 சதவீத பெண்கள் ரத்த சோகை பாதிப்பு உடையவர்களாகவே இருக்கின்றனர். மேலும் பரம்பரையாக குடும்ப நபர்களுக்கு பாதிப்பு இருப்பின் அடுத்த தலைமுறை கண்டிப்பாய் அதற்கான மருத்துவ பரிசோதனைகளை செய்து கொள்வது அவசியம்.

    அதிக கார்போ ஹைடிரேட் அதாவது மாவு சத்து உணவுகளைக் குறைத்து விடுங்கள். சர்க்கரை, கொழுப்பு எல்லாம் இதிலிருந்து வந்து விடும். பெண்ணே எந்த வயதிலும் ஆரோக்கியமாய் வாழலாமே!
    பெண் குழந்தைகளை பெற்றோர்கள் மிகவும் கண்ணும், கருத்துமாக பார்த்துக்கொள்ள வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.
    ‘மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா’ என்றார் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை.

    ஆனால், நாட்டில் பெண்கள், சிறுமிகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை பார்த்தால், இந்த சமுதாயம் எங்கே போகிறது? என்ற கேள்வி எழுகிறது. பெண் குழந்தைகளை பெற்றோர்கள் மிகவும் கண்ணும், கருத்துமாக பார்த்துக்கொள்ள வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.

    * அறிமுகம் இல்லாதவர்கள் குழந்தைகளை கொஞ்சவோ, பேசவோ அனுமதிக்கக்கூடாது.

    * உறவினர்கள், தெரிந்தவர்கள் என்றாலும் யாரையும் முழுமையாக நம்பி அவர்களிடம் குழந்தைகளை ஒப்படைக்கக்கூடாது.

    * பிற ஆண்களுடன் குழந்தை பேசும் போதும், பழகும் போது பெற்றோர் கவனத்துடன் இருக்கவேண்டும்.

    * நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் பற்றி குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும்.

    * தெரிந்தவர்கள், அறிமுகம் இல்லாதவர்கள் யாராவது தனியாக அழைத்தால் அவர்களுடன் செல்லக்கூடாது என்று சொல்லி வைக்க வேண்டும்.

    * யாராவது தேவை இல்லாமல், தவறான நோக்கத்தில் பேசினாலோ, தொட்டாலோ அதுபற்றி எந்த தயக்கமும் இன்றி கூறுமாறு சொல்லி வைக்க வேண்டும்.

    * விழாக்கள், விருந்து நிகழ்ச்சிகள், பொது இடங்களுக்கு அழைத்துச் செல்லும் போது குழந்தைகள் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

    * எல்லாவற்றுக்கும் மேலாக, பெண் குழந்தைகளை மட்டுமின்றி, ஆண் குழந்தைகளையும் ஒழுக்கம், கட்டுப்பாடு, பிறரை மதித்தல் போன்ற நல்ல பழக்க வழங்கங்களை சொல்லிக்கொடுத்து வளர்க்க வேண்டும். பையன் எங்கே போகிறான்? யார்-யாருடன் பழகுகிறான்? என்ன மாதிரியான விஷயங்களில் கவனம் செலுத்துகிறான்? என்பதை கண்காணிக்க தவறக்கூடாது.

    இன்றைய செடிதான் வளர்ந்து நாளை மரமாகி சுவையான கனியை தரவேண்டும். எனவே, குழந்தை பருவத்திலேயே பிள்ளைகளை பக்குவப்படுத்தி நல்லவர்களாக வளர்ப்பது பெற்றோரின் கடமை ஆகும். 
    குடும்பத்தை தூக்கி சுமக்கும் அம்மாக்களுக்கு எப்போதும் வேலை இருந்து கொண்டுதான் இருக்கும். ஆனாலும் அவர்கள் அழகு, ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவேண்டும்.
    அம்மாக்களுக்கு அழகும் அவசியம். ஆரோக்கியமும் அவசியம். குடும்பத்தை தூக்கி சுமக்கும் அம்மாக்களுக்கு எப்போதும் வேலை இருந்து கொண்டுதான் இருக்கும். கழுத்தைப் பிடிக்கிற அளவுக்கு குடும்ப பொறுப்புகளும் இருக்கவே செய்யும். ஆனாலும் அவர்கள் அழகு, ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவேண்டும். ஏன்என்றால் அம்மா ஆரோக்கியமாக இருந்தால்தான் குடும்பமே ஆரோக்கியமாக இருக்கும். அம்மாக்களுக்கான சில அழகான ஆலோசனைகள்!

    தினமும் காலையில் எழுந்ததும் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது, கணவருக்கும், குழந்தைகளுக்குமான மதிய உணவு தயார் செய்வதில்தான் முழு கவனமும் இருக்கும். அதுவே மன நெருக்கடிக்கும் உள்ளாக்கும். வேலைக்கு செல்லும் பெண்களாக இருந்தால் அவசரகதியில் கிளம்பும்போது கவனச் சிதறல்கள் ஏற்படும். அதனால் முன்தினம் இரவே மறுநாளுக்காக திட்டமிடவேண்டும். ‘நாளை என்ன சமைக்க வேண்டும், என்ன உடை உடுத்த வேண்டும், எந்த மாதிரி அலங்காரம் செய்ய வேண்டும்’ என்று திட்டமிட 10 நிமிடங்கள் செலவிட்டால் போதும். இது காலை நேர பரபரப்பை குறைக்கும். அவசரத்தில் முக்கியமான விஷயங்களை தவறவிடுவதையும் இதன் மூலம் தவிர்க்கலாம்.

    இரவில் எல்லா வேலை களையும் முடித்த பின்னர் வெதுவெதுப்பான நீரில் அவசர குளியல் போடலாம். மனதை வருடும் இசை தொகுப்புகளை ரசித்து கேட்டபடி தூங்க செல்லலாம். இவை பெண்களை ஆழ்ந்த தூக்கத்திற்கு கொண்டு செல்லும். மறுநாள் உற்சாகத்துடன் இயங்கவும் உதவி புரியும்.

    கூந்தலை இறுக்கமாக பின்னியிருந்தால், தூங்க செல்வதற்கு முன்னால் அதை தளர்வாக்கிக்கொள்ளுங்கள். இவ்வாறு செய்தால் காலையில் எழுந்திருக்கும்போது கூந்தல் சிக்காகுவதை தவிர்த்துவிடலாம். விரைவாக கூந்தல் அலங்காரத்தை முடித்துவிடலாம். சிகை அலங்காரம் செய்வதற்கு போதுமான நேரம் இல்லாவிட்டால் அதற்கான லோஷனை சிறிதளவு கூந்தலில் தடவினால், அலங்காரத்தை விரைவாக முடித்துவிடலாம். தூக்கமின்ைமயால் அவதிப் படுபவர்களின் கண்களை சுற்றி கருவளையத்திற்கான அறிகுறிகள் தென்பட தொடங்கும். ‘ஐ லைனர்’ உபயோகித்து அவைகளை போக்க முயற்சிக்கலாம்.

    பெண்களின் அழகு என்பது அவர்களது ஆரோக்கியத்தோடு சம்பந்தப்பட்டது. ஆரோக்கியத்திற்காக பெண்கள் தினமும் சமச்சீரான சத்துணவை உண்ணவேண்டும். அளவோடு சாப்பிட்டு, தினமும் உடற்பயிற்சியும் மேற்கொள்ளவேண்டும். நல்ல தூக்கமும், மன அமைதியும் மிக அவசியம். 
    பெண்களின் முக அழகை குறைக்கும் சில அம்சங்களில், கண்களுக்கு கீழே உருவாகும் வீங்கிய பை போன்ற அமைப்பும் ஒன்றாகும். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
    பெண்களின் முக அழகை குறைக்கும் சில அம்சங்களில், கண்களுக்கு கீழே உருவாகும் வீங்கிய பை போன்ற அமைப்பும் ஒன்றாகும். இது ஏன் உருவாகிறது? கண்களுக்கு கீழே இருக்கும் சருமம் மிக மிருதுவானது. அதனாலே இந்த வீக்கம் ஏற்படுவதாக மருத்துவர்கள் சொல்கிறார்கள். முகத்தில் ஏகப்பட்ட ரத்தக்குழாய்கள் பரவலாக இருக்கின்றன.

    இந்த ரத்தக்குழாய்களில் ஏற்படும் சின்ன மாற்றம் கூட முகத்தில் ஏதாவது ஒரு பகுதியை வீங்கச் செய்துவிடும். இந்த மாற்றம் கண்ணுக்கு கீழே பை போன்று வீங்குவதற்கும், கருவளையங்கள் ஏற்படுவதற்கும் காரணமாக இருக்கிறது. முதுமையின் காரணமாக கண்களுக்கு அடியில் வீங்கி பை போல் ஆகலாம். முதுமையில் உடலில் உள்ள கொழுப்பு குறையத் தொடங்கும். கண்ணுக்கு கீழேயும் இது நிகழும். அப்போது அங்கு அதிக ரத்த ஓட்டம் பாயும். இதனால் வீக்கம் ஏற்படுகிறது. மேலும் சைனஸ் போன்ற பிரச்சினைகளாலும் கண்களுக்கு அடியில் வீங்கும். வைரஸ் காய்ச்சல் மற்றும் ஜலதோஷத்தில் மூக்கடைப்பு ஏற்படும்போது கண்களுக்கு அடியில் வீக்கம் வரும். கருவளையமும் ஏற்படும்.

    இரவில் சரியாக தூங்கவில்லை என்றாலும் கண்களைச் சுற்றிய ரத்தக்குழாய்கள் புடைத்துக்கொண்டு தெரியும். அதனால் வீக்கம் ஏற்படும். மிகவும் களைப்பாக இருந்தாலோ, ஏதோ காரணத்துக்காக உணர்ச்சிவசப்பட்டு அழ நேரிட்டாலோ கண்களைச் சுற்றி வீங்கிவிடும். இதை சரி செய்ய தூக்கமே சிறந்த வழி. 7 முதல் 8 மணி நேர தூக்கமே இதற்கு மருந்து.

    நாம் சாப்பிடும் பழங்கள், காய்கறிகள் போன்றவற்றில் இருந்தே நமது சருமத்தை பராமரிக்க தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்றன. ஆரோக்கியமான அந்த இயற்கை உணவுகளை தவிர்த்தாலும் கண்களுக்கடியில் பைகள் உருவாகும். இதுபோக உணவில் உப்பு அதிகமாக சேர்த்துக்கொண்டாலும் ரத்த நாளங்கள் அதிகமான திரவத்தை உறிஞ்சி வைத்துக்கொள்ளும். இந்த அதிகப்படியான திரவமே கண்களைச் சுற்றி நீராக கோர்த்துக்கொண்டு வீக்கமாக தெரிகிறது.



    சிலசமயங்களில் தவறான அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்துவதும் கூட இந்தப் பிரச்சினைக்கு காரணமாகிவிடுகிறது. நீண்ட நேரம் மேக்கப்போடு இருப்பதும் கருவளையங்களையும், கண்களுக்கு அடியில் பைகளையும் உருவாக்கிவிடும். இரவில் தூங்கப்போகும்போது மேக்கப்பை சுத்தமாக கழுவிவிட வேண்டும். கண்களுக்கு கீழே வீங்கிய பையை செலவில்லாமல் சரி செய்யலாம்.

    எவர்சில்வர் ஸ்பூன் ஒன்றை எடுத்து பிரிட்ஜில் உள்ள ப்ரீஸரில் வைக்கவும். ஜில்லென்று ஆனதும் ஸ்பூனை எடுத்து, கண்ணுக்கு கீழே எங்கெல்லாம் வீங்கியிருக்கிறதோ அங்கெல்லாம் ஜில் ஸ்பூனால் மென்மையாக அழுத்தி ஒத்தடம் கொடுத்தால் வீங்கிய பை காணாமல் போய்விடும். வெள்ளரிக்காய்க்கு வீக்கத்தைக் குறைக்கும் திறன் உண்டு. அதனால், வெள்ளரியிலிருந்து இரண்டு பெரிய துண்டுகளை வெட்டி கண்களை மூடிக்கொண்டு கண்களிலும் கண்களுக்கு அடியில் படுமாறும் ஒருசில நிமிடங்கள் வைத்துக்கொண்டால் போதும், இது கண்களைச் சுற்றிய பகுதிகளுக்கு நல்ல ரத்த ஓட்டத்தை தந்து சீராக்கி, புத்துணர்வு பெற வைக்கும்.

    ஒரு தம்ளரில் ஐஸ் வாட்டரும், ஐஸ் கட்டியும் எடுத்துக்கொண்டு அந்த தண்ணீரில் பஞ்சை உருண்டையாக்கிப் போட்டு ஜில்லென்று ஆனதும் எடுத்து கண்களை சுற்றி ஒற்றி எடுக்கவும். பஞ்சில் உள்ள குளிர்ச்சி போனதும் மீண்டும் குளிர்ந்த நீரில் போட்டு ஊறவைத்து, பிழிந்து மீண்டும் ஒற்றி எடுக்க வேண்டும் இப்படி 15 நிமிடங்கள் தொடர்ந்து செய்தால் வீக்கம் வற்றி கண்கள் அழகு பெறும்.

    இப்படி செலவில்லாமல் கண்களுக்கு அடியில் தோன்றும் வீக்கத்தை சரி செய்யலாம். 
    பெண்கள் மற்றும் குழந்தைகளை தொந்தரவு செய்யும் நபர்களின் கைகளை வெட்டுவேன் என் உத்தர பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் மந்திரியின் மகன் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. #ArvindRajbhar #Ministerson
    லக்னோ:

    உத்தர பிரதேச மாநில மந்திரி ஓம் பிரகாஷ் ராஜ்பரின் மகனும் சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியின் தலைவருமான அரவிந்த் ராஜ்பர் சண்டவ்லியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார். அப்போது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும் ஆவேசமாக பேசினார்.

    ‘பெண்கள் மற்றும் குழந்தைகளை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்யும் நபர்களின் கைகளை வெட்டுவேன். எங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் இதுபோன்ற குற்றவாளிகளை இல்லாமல் செய்துவிடுவோம்’ என்று அரவிந்த் பேசினார். இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

    கடுமையான சட்டம் வந்தால் ஒழிய, இந்த அழுக்கு மனப்பான்மை கொண்ட மக்கள் எப்போதும் நம்மைச் சுற்றி இருப்பார்கள் எனவும், அத்தகைய குற்றவாளிகளை தூக்கிலிடும் வகையில் கடுமையான சட்டம் வேண்டும் என்றும் ஓம் பிரகாஷ் ராஜ்பர் ஏற்கனவே கூறியது குறிப்பிடத்தக்கது. #ArvindRajbhar #Ministerson

    ஆண் குழந்தை இருக்கும் போது பெண்கள் குறித்த கீழ்த்தரமான டயலாக்குகளை பேசுவது, அவர்களை விமர்சித்து திட்டுவது போன்றவற்றை தவிர்த்திடுங்கள். இல்லையேல் அது ஆண்களின் மனதில் பெண்கள் மீதான மதிப்பை குறைத்து விடும்.
    பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளில் எல்லாம் குற்றம் சுமத்தப்படுபவர்கள் ஆண்கள் என்றால், இன்னொரு பக்கம் ஆண் என்றாலே வில்லன் மாதிரியான மனோபாவம் இருக்கிறது. இதனை தடுக்க சிறுவயதில் இருந்தே ஆண் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். அதற்கான சூழலை நாம் தான் ஏற்படுத்த வேண்டும் என்று மனநல ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். ஆண், பெண் சமத்துவத்திற்கு ஆண் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டியவை:-

    குழந்தைப் பருவத்தில் அவர்கள் கவனம் விளையாட்டில் தான் இருக்கும். ஆண், பெண் குழந்தைகளை ஒன்றாக விளையாட விடுங்கள். ஆண்குழந்தைகளுக்கும் பார்பி பொம்மை பிடிக்கும் பட்சத்தில்,அதை வைத்து விளையாடுவதில் தவறேதும் இல்லை.

    ஆண் குழந்தைகள் குறிப்பிட்ட வயது வரை தான் அழ முடிகிறது. அதற்கு பிறகு அவன் மீது ஆண் என்ற முள் கிரீடத்தைதூக்கி வைத்துவிடுகிறீர்கள் அவனும் அழ மறந்து விடுகிறான். நீ ஆண், அழக்கூடாது என்று எச்சரிக்கைசெய்வதோ, ஆம்பளப்புள்ள எங்கயாவது அழுவாங்களா என்று கேட்டு கிண்டலடிப்பதோ செய்யாமல் அழஅனுமதியுங்கள்.

    மனதில் ஏற்படும் சங்கடங்களை அழுகையின் மூலம் வெளிப்படுத்தாமல் இருப்பது பிற்காலத்தில் மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தும். தன் அறையை சுத்தம் செய்வது, தான் சாப்பிட்ட தட்டுகளை கழுவுவது போன்ற சின்ன சின்ன வேலைகளை ஆண்குழந்தைகளை செய்ய அனுமதியுங்கள். அதை பழக்கப்படுத்துங்கள். தனக்கு மட்டுமல்லாமல் பிறருக்கும் உதவி செய்வதை உற்சாகப்படுத்துங்கள்.



    அது வீட்டு வேலையாக இருந்தாலும் சரி, சமையல் வேலையாக இருந்தாலும் சரி இன்னொருவரின் கஷ்டத்தில் பங்கெடுப்பதால் அந்த சூழலை சமாளிக்க அவர்களுக்கு பழக்கமாகும். மிக முக்கியமாக பள்ளியில் பெண் தோழிகள் இருந்தால், அதை ஊக்கப்படுத்துங்கள். பெண் குழந்தைகளிடம் சேரக்கூடாது, பேசக்கூடாது என்று மிரட்டி வைக்காதீர்கள்.

    அதே போல பெண் குழந்தைகளையும் ஆண் குழந்தைகளிடம் பேச விடுங்கள் ஆண், பெண் சமம் என்ற எண்ணத்தை அவர்கள் மனதில் தூவுங்கள். இன்னொருவரின் மனம் அறிந்து செயல்படும் விதமாக, இன்னொருவரின் விருப்பங்களுக்கு மதிப்பு கொடுக்க கற்றுக்கொடுங்கள். சுயநலமாக தன்னைப் பற்றி மட்டும் சிந்திப்பதை தவிர்த்து தன்னைச் சுற்றி இருப்பவர்கள் பற்றியும் சிந்திக்க வழிவகையாக அமையும்.

    பெண் குழந்தைகளை திட்டினாலோ அவர்களை மரியாதைக்குறைவாக நடத்தினாலோ கண்டியுங்கள். உன்னைப்போலவே தான் அவளும் என்பதை ஆண் குழந்தையிடம் புரிய வையுங்கள். ஆண் குழந்தை இருக்கும் போது பெண்கள் குறித்த கீழ்த்தரமான டயலாக்குகளை பேசுவது, அவர்களை விமர்சித்து திட்டுவது போன்றவற்றை தவிர்த்திடுங்கள். இல்லையேல் அது ஆண்களின் மனதில் பெண்கள் மீதான மதிப்பை குறைத்து விடும்.

    ஆண் குழந்தை என்று சொல்லி, சொல்லியே அவர்கள் மீது பொறுப்புகளை திணிக்காமல் அவர்களை கொண்டாடுங்கள். நீ ஆண் பலசாலி, தைரியசாலி என்று அவன் மீது பெரும் பொறுப்புகளை திணிப்பதை தவிருங்கள். குழந்தைப் பருவத்தை ரசிக்கட்டும். கொண்டாடட்டும்.

    இத்தகைய நடவடிக்கைகள் நல்ல பலனைத்தரும். 
    பாலியல் பலாத்காரங்களில் சிக்கும் சிறுமிகளின் எண்ணிக்கை பொதுவாக ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    பாலியல் பலாத்காரங்களில் சிக்கும் சிறுமிகளின் எண்ணிக்கை பொதுவாக ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.

    நாடு முழுவதும் கடந்த 2004-ம் ஆண்டு பதிவான பாலியல் பலாத்கார வழக்குகளில் 19.9 சதவீதம் சிறுமிகள் சம்பந்தப்பட்டவை ஆகும்.

    2005-ல் இது 22.2 சதவீதமாகவும், 2006-ல் 25.6 சதவீதமாகவும் அதிகரித்தது. 2007-ல் 24.7 சதவீதமகவும் 2008-ல் 25.4 சதவீதமாகவும், 2009-ல் 25.1 சதவீதமாகவும், 2010-ல் 25 சதவீதமாகவும், 2011-ல் 29.8 சதவீதமாகவும், 2012-ல் 36.5 சதவீதமாகவும், 2013-ல் 39.4 சதவீதமாகவும், 2014-ல் 38.6 சதவீதமாகவும், 2015-ல் 32.8 சதவீதமாகவும், 2016-ல் 43.2 சதவீதமாகவும் இருந்தது.

    சில ஆண்டுகளில் மட்டும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் பலாத்கார வழக்குகள் குறைந்த போதிலும், மொத்தத்தில் அதிகரித்தே வருகிறது.

    2016-ம் ஆண்டு நிலவரப்படி, நாடு முழுவதும் 1 லட்சத்து 52 ஆயிரத்து 165 கற்பழிப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருந்தன. இதில் 18 ஆயிரத்து 552 வழக்குகளில் விசாரணை முடிந்து 4,739 பேர் தண்டிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதாவது, 25.5 சதவீதம் பேர் மட்டுமே குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டு உள்ளனர். 13 ஆயிரத்து 813 பேர் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர்.

    அதே 2016-ம் ஆண்டு நிலவரப்படி, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக இந்தியா முழுவதும் 2 லட்சத்து 27 ஆயிரத்து 739 வழக்குகள் இருந்தன. இதில் 22 ஆயிரத்து 763 வழக்குகளில் விசாரணை முடிந்து 6,991 வழக்குகளில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டார்கள். அதாவது 30.7 சதவீத வழக்குகளில் மட்டுமே குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டு உள்ளனர். 15 ஆயிரத்து 772 வழக்குகளில் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டு இருக்கிறார்கள். 
    உங்கள் காதலியைக் கவர்வது எப்படி? அதாவது, எப்படியோ ஒரு லவ்வர் செட் செய்துவிட்ட புது லவ்வர் பாய்ஸுக்கான ஜில்ஜில் டிப்ஸ்கள் இவை.
    இந்த மாதிரியான கட்டுரையை இன்னும் ஐம்பது வருடங்களுக்குப் பிறகு எழுதினாலும் அதன் தன்மை மாறாது. ஏனென்றால், இதெல்லாம் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பே வள்ளுவர் எழுதியதுதான். உங்கள் காதலியைக் கவர்வது எப்படி? அதாவது, எப்படியோ ஒரு லவ்வர் செட் செய்துவிட்ட புது லவ்வர் பாய்ஸுக்கான ஜில்ஜில் டிப்ஸ்கள் இவை.

    நம்பர் 1:

    குத்திக்காட்டாதீர்கள். அவர்கள் தப்பே செய்திருந்தாலும் எடுத்தவுடனே `எனக்குத் தெரியும் நீ இப்படித்தான் செய்வே'ன்னு என ஆரம்பிக்காதீர்கள். வேறு ஒருவர் குத்திக்காட்டுவதைவிட, நீங்கள் குத்திக்காட்டுவதுதான் அவருக்கு அதிகம் வலிக்கும். உங்களைக் காதலிக்கத் தொடங்கிய பெண், இந்த உலகத்தில் வேறு யாரைவிடவும் உங்களைத்தான் அதிகம் நம்புவார்.

    நம்பர் 2:

    அதிகமாக வழியாதீர்கள். உலகத்திலேயே உங்களுக்கு அதிகம் பிடித்த நபர் உங்கள் காதலியாகத்தான் இருப்பார். அதுவும் உங்கள் லவ் `சைவக் காதலா'க இருந்தால் சொல்லவே வேண்டாம். கல்யாணம் வரை அநியாயத்துக்கு ஜொள்ளின் உச்சத்துக்குப் போய் புகழ்ந்துகொண்டே இருப்பீர்கள். இப்படி இருப்பது, உங்களின் காதல் வாழ்க்கைக்கு நிச்சயமாக ஒருநாள் இடைஞ்சலைக் கொண்டுவரும்.

    முடிந்தவரை இயல்பாக இருங்கள். குறிப்பாக, உங்கள் காதலியுடன் இருக்கும்போது நீங்கள் நீங்களாகவே இருங்கள். இம்ப்ரெஸ் செய்வதாக நினைத்து அளவுக்கு அதிகமாக வழிந்துவைத்தால், இதுதான் உங்கள் குணம் என நினைத்துக்கொள்வார். என்றாவது ஒருநாள் உங்களின் நிஜ முகம் தெரியவரும்போது அதிர்ச்சியடைவார். நீங்கள் நீங்களாக இருப்பதைத்தான் எந்தப் பெண்ணும் விரும்புவார்.



    நம்பர் 3:

    அக்கறை. சுயமான முடிவுகளை எடுப்பதைப் பெண்கள் விரும்பினாலும், தன் மீது அக்கறையுள்ள ஆணைத்தான் எந்த ஒரு பெண்ணும் விரும்புவார். காதலி என்பவர், உங்களின் நிரந்தரத் தோழி; பிரியவே கூடாது என நீங்கள் நினைக்கும் வாழ்க்கைத்துணை. மேற்சொன்னது உண்மையாக இருக்கும்பட்சத்தில் உங்களைப் பற்றிய விஷயங்களைவிட அவர் குறித்த விஷயங்களை நீங்கள் அதிகம் அறிந்துவைத்திருக்கவேண்டும்.

    அவரின் பிறந்த நாள் தொடங்கி அனைத்து விவரங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் என விரும்புவார். அதை சரியான நேரத்தில் வெளிப்படுத்த வேண்டும் என்றும் எதிர்பார்ப்பார். "தெருவில் விற்றுக்கொண்டு போனது. உனக்குப் பிடிக்கும்னு வாங்கிட்டு வந்தேன்" என்பது, எழுதும்போது சாதாரணமாகத் தெரியலாம். ஆனால், அதுதான் அவருக்கு 'க்ளவுட் இடைவெளி. உங்கள் காதலி மீதான அக்கறை எப்படி உங்கள் காதலுக்கு ஆக்ஸிஜனோ, அதேபோல் உங்களுக்குள் போதுமான இடைவெளி இருப்பதையும் அவர் விரும்புவார்.

    இருவரும் இருக்கிறீர்கள் அப்போது ஒரு கால் வருகிறது. அவர் பேசி முடித்தவுடனே க்யூரியாசிட்டி உந்தித்தள்ள "போனில் யார்?" என்று கேட்பது உங்கள் காதலிக்கு சர்வநிச்சயமாகக் கோபம் வரவழைக்கும் கேள்வி. உங்களிடம் சொல்லவேண்டியதாக இருந்தால் அவரே சொல்வார். அந்த இடைவெளியை அவருக்கு வழங்காமல் 'யார்... என்ன?' என்பது போன்ற கேள்விகளை நீங்கள் எழுப்பினால், அதுதான் உங்கள் காதலுக்கு நீங்களே வைக்கும் டைம்பாம். உங்கள் மொபைலின் பேட்டன் லாக் முதல் மெயில் பாஸ்வேர்டு வரை காதலிக்குத் தெரிந்திருந்தாலும், அவருக்கான ஸ்பேஸை நீங்கள் கொடுத்தே ஆகவேண்டும்.
    கடலை எண்ணெயில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் இது கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் அவசியமானது. கர்ப்பிணிகள் தினமும் இந்த எண்ணெயைப் பயன்படுத்தினால் மகப்பேறில் சிரமம் இருக்காது.
    பொதுவாக ‘கடலை எண்ணெய்’ எனப்படும் வேர்க்கடலை எண்ணெயில் கணக்கற்ற நன்மைகள் அடங்கி இருக்கின்றன. போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் இது கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் அவசியமானது. அவர்கள் தினமும் இந்த எண்ணெயைப் பயன்படுத்தினால் மகப்பேறில் சிரமம் இருக்காது என்று தெரிவிக்கப்படுகிறது.

    கடலை எண்ணெய், நீரிழிவு நோயைத் தடுக்கும். நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து அதிகம் உள்ளது. மாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் மாங்கனீஸ் முக்கியப் பங்காற்றுகிறது.

    நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்ற சத்து நிறைந்திருக்கிறது. இது இதய வால்வுகளை பாதுகாக்கிறது. பெண்களுக்கு இதய நோய்கள் ஏற்படுவதையும் தடுக்கிறது. மிகச் சிறந்த ஆன்டி ஆக்சிடென்டாகவும் கடலை எண்ணெய் உள்ளது.



    நிலக்கடலையில் உள்ள பாலிபீனால் என்ற ஆன்டி ஆக்சிடென்ட் நமக்கு நோய் வருவதைத் தடுப்பதுடன், இளமையைப் பராமரிக்கவும் உதவுகிறது. நிலக்கடலையில் உள்ள வைட்டமின் 3 நியாசின், மூளை வளர்ச்சிக்கும், ஞாபக சக்திக்கும் பெரிதும் பயனளிக்கிறது. நிலக்கடலையில் உள்ள ஒமேகா 6 சத்து, நமது உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது.

    பெண்களுக்கு மார்பகக் கட்டி உண்டாவதை வேர்க்கடலை தடுக்கிறது. பெண்களுக்கு பெரிதும் தேவையான போலிக் அமிலம், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், இரும்பு, வைட்டமின்கள் போன்றவை இதில் நிறைந்துள்ளன. பெண்களுக்கு கருப்பைக் கட்டிகள், நீர்க்கட்டிகள் ஏற்படுவதையும் வேர்க்கடலை தடுக்கிறது. 
    தனி வீடுகள் மற்றும் அடுக்கு மாடி குடியிருப்புகளில் வீட்டுத்தோட்டம் அல்லது மாடித்தோட்டம் அமைப்பது அனைவருக்கும் சாத்திமான ஒன்றுதான் என்று தோட்டக்கலை வல்லுனர்கள் குறிப்பிடுகிறார்கள்.
    தனி வீடுகள் மற்றும் அடுக்கு மாடி குடியிருப்புகளில் வீட்டுத்தோட்டம் அல்லது மாடித்தோட்டம் அமைப்பது அனைவருக்கும் சாத்திமான ஒன்றுதான் என்று தோட்டக்கலை வல்லுனர்கள் குறிப்பிடுகிறார்கள். சிறு அளவிலான காலி இடம் இருந்தாலும் போதும். அதை வைத்து நமக்கு தேவையான காய்கறிகளை விளைவிக்கலாம். அதுவும் குறைந்த பட்ஜெட் அல்லது பெரிய அளவிலான செலவுகள் இல்லாமல் செய்யலாம். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு இது சிறந்த சிறுதொழிலாகவும் அமையும். மேலும் வீட்டுக்கு தேவையான காய்கறிகளையும் பயிரிடலாம்.

    இயற்கையான காய்கறிகளை, மீதியாக உள்ள இடத்தை பயன்படுத்தி, நமது பார்வையில் வளர்த்து அவற்றை பயன்படுத்தும்போது ஏற்படும் மனத்திருப்தியை தோட்டம் அமைத்த பலரும் குறிப்பிட்டிருக்கிறார்கள். தோட்டம் அமைக்க முதலில் தேவை நல்ல மண். எனவே, இடம் மண்ணை கொட்டுவதற்கு ஏற்றவாறு உள்ளதா..? என்று கவனிக்கவேண்டும்.

    பாதுகாப்பு நடவடிக்கைகள்

    வீட்டுக்கு வெளிப்புறமாக என்றால் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியது இல்லை. அல்லது காலி இடம் சிமெண்டு தரை என்றால் கொஞ்சம் முன்னேற்பாடு செய்ய வேண்டியதாக இருக்கும். ஏனெனில், நேரிடையாக மண்ணை சிமெண்டு தரையில் கொட்டுவது கூடாது. மேல்மாடி என்றால் பயிரிடும் போது ஊற்றப்படும் நீர் மேல்மாடியில் இறங்கி பல சிக்கல்களை ஏற்படுத்தும். இதைத் தவிர்க்க மண் தொட்டி அல்லது பிளாஸ்டிக் பைகளை உபயோகப்படுத்துவது பாதுகாப்பு.



    பிளாஸ்டிக் பைகள்

    சென்னை போன்ற நகரங்களில் மண் தொட்டிகள் கிடைத்தாலும், அவற்றை கச்சிதமாக பராமரிப்பது கடினம். அதற்கு மாற்றாக Hdpe Grow Bags எனப்படும் ‘பிளாஸ்டிக்’ பை வகைகளை சந்தையில் வெவ்வேறு அளவுகளில் தேவைக்கு ஏற்ப வாங்கி பயன்படுத்தலாம். மேலும், நல்ல தரமான மண் கிடைப்பது சிரமமாக இருந்தால், அதற்கு மாற்றாக தென்னை நார் கழிவு மண்புழு உரம் கலந்து பயன்படுத்தலாம். எடை குறைவாக உள்ள தென்னை நார் கழிவு நன்றாக அழுத்தி, அடைக்கப்பட Hdpe Grow Bags வகைகள் சந்தையில் கிடைக்கிறது. சுலபமாக வாங்கி அவற்றை பயன்படுத்தலாம்.

    தேவையான பொருட்கள்

    போதுமான நிலம் மற்றும் மண், தொட்டி அல்லது பிளாஸ்டிக் பை, கொஞ்சம் தண்ணீர் அல்லது வீணாகும் நீரை பயன்படுத்தலாம். வீட்டு குப்பைகளையும் உரமாக போடலாம். கொஞ்சம் விதைகளை கடைகளில் வாங்கலாம் அல்லது சமையலறையில் கிடைக்கும் விதைகளை பயன்படுத்தலாம். பராமரிப்புக்காக தினமும் கொஞ்சம் நேரம் ஒதுக்கி, கவனிக்க வேண்டும். வீட்டுத்தோட்டம் என்பது சிறிய அளவிலான விவசாயம் என்பதால், அனைத்து வகை பயிர்களையும், காய்கறிகளையும் எளிதாக விளைவித்து அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தலாம்.
    ஆபாச படங்களை பார்த்து பாலியல் பலாத்கார குற்றங்களில் ஈடுபட்டு மற்றவர்களின் வாழ்க்கையை சீரழிப்பதோடு, தங்கள் எதிர்காலத்தையும் தொலைத்துவிடுகிறார்கள்.
    நல்ல பழக்க வழக்கங்கள், செயல்கள் கசப்பு மருந்தை போன்றவை. கசப்பு மருந்தை யாரும் விரும்புவதில்லை; ஆனால் உடலுக்கு நல்லது. உண்மையே பேசவேண்டும் என்று உறுதி எடுத்து அதன்படி நல்லொழுக்கத்துடன் வாழ்ந்து காட்டுவது சிரமம்.

    கெட்ட விஷயங்கள்-பழக்கங்கள் இனிப்பு மருந்தை போன்றவை. அவை எளிதில் நம்மை ஒட்டிக்கொளம்.

    சமுதாயத்தில் குற்றங்கள் அதிகரித்ததற்கு சமூக ஊடகங்களின் தாக்கமும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. குறிப்பாக ஸ்மார்ட் போன்களின் வருகை இதில் முக்கிய பங்கு வகிப்பதாக சமூக ஆர்வலர்கள் கருதுகிறார்கள்.

    இந்த போன்கள் இல்லாத இளைய சமுதாயத்தை இப்போது பார்க்க முடியாது. பஸ், ரெயில் பயணங்கள், பூங்கா போன்ற பொது இடங்கள் என எங்கு பார்த்தாலும் இளைஞர்கள் தலைகுனிந்தபடி செல்போனில் எதையோ பார்த்துக்கொண்டு-தேடிக்கொண்டு இருப்பதை காணலாம். எங்கிருந்தபடியும் உள்ளங்கையில் இருக்கும் செல்போன் மூலம் உலக நடப்புகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள முடிகிறது. தகவல் தொழில்நுட்ப புரட்சியால் கிடைத்த வரப்பிரசாதம் இது.

    அறிவுக்களஞ்சியமான இணையதளங்களில் எண்ணிலடங்கா தகவல்கள், படங்கள், வீடியோக்கள் கொட்டிக்கிடக்கின்றன. அவற்றில் நல்லதும் உண்டு; கெட்டதும் உண்டு. ஆனால் பலர் பாலுணர்வை தூண்டும் ஆபாச தளங்களுக்கு சென்று பொழுதை கழிக்கிறார்கள். பாலுணர்வை தூண்டும் ஹார்மோன்கள் செய்யும் சேட்டையால் சிறுவர்கள், விடலைப்பருவ பையன்கள், இளைஞர்கள் பலர் அதில் சிக்கிக்கொள்கிறார்கள். இதனால் தூண்டப்படும் சிலர் பாலியல் பலாத்கார குற்றங்களில் ஈடுபடுகிறார்கள். குழந்தைகள், சிறுமிகள் என்றுகூட அந்த கயவர்கள் பார்ப்பது இல்லை.



    சுமார் 25 அல்லது 30 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் பாலியல் தொடர்பான விஷயங்களை பேசுவது, படிப்பது, படங்களை பார்ப்பது ஆகியவற்றுக்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. அன்று குதிரை கொம்பாக இருந்த விஷயம் இப்போது தண்ணீர்பட்ட பாடாகிவிட்டது. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் கைங்கர்யத்தால் ஆபாசங்கள் இப்போது கைக்குள் வந்து, வயது வித்தியாசம் இன்றி எளிதாகிவிட்டது. யாருக்கும் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் போய்விட்டது. மனக்கட்டுப்பாடு உள்ளவர்கள் அந்த பக்கமே போவதில்லை. ஆனால் மற்றவர்கள் அதிலேயே லயித்து விடுகிறார்கள். சிறுவர்கள் கூட ஆபாச படங்களை பார்த்து பாலியல் பலாத்கார குற்றங்களில் ஈடுபட்டு மற்றவர்களின் வாழ்க்கையை சீரழிப்பதோடு, தங்கள் எதிர்காலத்தையும் தொலைத்துவிடுகிறார்கள்.

    பாலியல் பலாத்கார குற்றங்களில் ஈடுபட்டதால் சிறுவர்கள் கைது செய்யப்பட்டதாக சமீப காலங்களில் அடிக்கடி வெளியாகும் செய்திகள் சமூக நலனில் அக்கறை கொண்டவர்களுக்கு அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

    பிஞ்சிலே பழுத்தால் காய் மட்டுமல்ல, வாழ்க்கையும் சுவைக்காது.

    பாலியல் குற்றசெயல்களில் ஈடுபடாமல் அவர்களை தடுத்து நிறுத்தி, நல்வழிப்படுத்துவதில் சட்டத்துக்கு மட்டுமின்றி பெற்றோர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள் என அனைத்து தரப்பினருக்குமே பொறுப்பு உள்ளது.
    போதைப் பொருட்கள் ஆண்களைவிட பெண்களின் ரத்தத்தில் வேகமாக கலக்கிறது. அதனால் ஆண்களைவிட பெண்கள் இரு மடங்கு பாதிப்பிற்குள்ளாகிறார்கள்.
    மது அருந்துவது இப்போது ‘பேஷன்’ ஆக்கப்பட்டிருக்கிறது. சமூகத்தில் தன்னை உயர்ந்தவராக காட்டிக்கொள்ள விரும்பும் பெண்கள் குடிக்கிறார்கள். குடிக்க மறுப்பவர்கள் பழமைவாதிகள் என்று கேலி செய்யப்படுகிறார்கள். குடிப்பதன் மூலம் சுதந்திரத்தை அனுபவிப்பதாகவும் சிலர் நினைக்கிறார்கள். இந்த நிலை தொடருமானால் பெண்கள் பல இழப்புகளுக்கு ஆளாவார்கள். குடிப்பதில் எந்தப் பயனுமில்லை. அதனால் பெண்களின் உடல்நிலைதான் கெடுகிறது.

    குடிக்கும் ஆண்களைவிட பெண்கள் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். இது விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ‘ராஜீவ் காந்தி கேன்சர் இன்ஸ்ட்டிட்யூட்’ சார்பில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், டாக்டர் இந்து அகர்வால் என்பவர் ‘போதைப் பொருட்கள் ஆண்களைவிட பெண்களின் ரத்தத்தில் வேகமாக கலக்கிறது. அதனால் ஆண்களைவிட பெண்கள் இரு மடங்கு பாதிப்பிற்குள்ளாகிறார்கள்’ என்கிறார்.

    மது குடிக்கும் பெண்கள் அதிகமாக பாதிக்கப்பட என்னென்ன காரணங்கள் தெரியுமா?

    பெண்கள் மென்மையான உடல்வாகு கொண்டவர்கள். ஆண்களின் உடலில் தண்ணீர் அதிகம். பெண்கள் உடலில் கொழுப்பு அதிகம். தண்ணீரில் கலக்கும் மதுவின் தீவிரம் குறைகிறது. ஆனால் கொழுப்பில் கலக்கும் மதுவின் தீவிரம் வெகுநேரம் நீடிக்கிறது. மது அருந்தும் பெண்களால் சீக்கிரம் தெளிவு நிலைக்கு வர முடியாது.

    பெண்களின் உடலில் இருக்கும் ‘என்சைம்’களின் அளவு குறைவு. அதனால் ஆல்ஹகால் ரத்தத்தில் அதிக அளவு கலந்து, உடல் போதையை சமன்படுத்த முடியாமல் தவிக்கும். போதையின் விளைவுகள் அதிகமாகி, மூளையையும் வெகுவாக பாதிக்கும்.



    பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் ஹார்மோன் சுரப்பில் பெரிய அளவில் மாற்றம் ஏற்படும். அப்போது அவர்கள் மது அருந்தினால், போதையின் தாக்கம் அதிகமாக இருக்கும். அந்த நேரத்தில் அவர்களது மனநிலையில் சீரற்றநிலை உருவாகி, தன்னை மீறிய செயல்களில் ஈடுபடுவார்கள். இதனால் சமூக அந்தஸ்து குறையும். குடும்ப வாழ்க்கை பாதிக்கும். நட்பு, சுற்றம், அலுவலகத்திலும் கெட்டபெயர் ஏற்படும்.

    மது அருந்தும் பெண்களுக்கு கல்லீரல் வெகுவாக பாதிக்கும். வீக்கம், வலி தோன்றும். பின்பு அவர்கள் மது அருந்துவதை விட்டுவிட்டு முறையான சிகிச்சை பெறாவிட்டால் கல்லீரல் முழு அளவு பாதிக்கப்பட்டு உயிரிழக்க நேரிடும். ஆண்களைவிட பெண்களுக்கு கல்லீரல் பாதிப்பு அதிகமாக உருவாகும்.

    பெண்களில் மது அருந்துபவர்களுக்கு அளவுக்கு அதிகமான சோர்வு ஏற்படும். குடிக்காத நேரங்களிலும் அந்த சோர்வு நீடிக்கும். மது அருந்தும் பெண்களின் உடலில் வைட்டமின் பி12 சத்து மிகவும் குறைந்து போகும். அதனால் மயக்கம், தலைசுற்றல், ஞாபக மறதி போன்றவை ஏற்படும்.

    மது உடலில் அதிகமான பசியை தோன்றுவிக்கும். அதனால் பெண்கள் நிறைய சாப்பிடுவார்கள். அதுவும் கலோரி அதிகம் கொண்ட ருசியான உணவுகளை கண்டபடி சாப்பிடுவார்கள். உடல் எடை அதிகரிக்கும். அப்போது பல்வேறு நோய்கள் உடலில் குடிகொள்ளத் தொடங்கிவிடும்.

    மது உள்ளே போனதும் அதிக அளவு ரத்தத்தில் கலந்து, ரத்த அழுத்தத்தை உயர்த்தும். அதனால் அவர்களிடம் பதற்றமும், பரபரப்பும் தோன்றும். செயல்திறன் குறைந்துபோகும்.



    மது அருந்தும் பெண்களுக்கு மலட்டுத்தன்மை உருவாகும். கர்ப்பிணிகள் மது அருந்தினால் கருச்சிதைவு தோன்றும். கருமுட்டையையும் பாதிக்கும். ஒருவேளை அவர்கள் கர்ப்பம்தரித்து குழந்தையை பெற்றெடுத்தாலும், குழந்தைக்கும் பாதிப்பு ஏற்படும். கடந்த 5 வருடத்தில் 30 சதவீதம் அளவுக்கு பெண்களிடம் மலட்டுத்தன்மை அதிகரித்திருக்கிறது. அதற்கு மதுப்பழக்கமும் முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

    விளையாட்டுத்தனமாக ஆரம்பிக்கும் மதுப்பழக்கம் பெண்களை அலைக்கழித்து, அவர்களை வாழ்க்கையின் எல்லைக்கே துரத்திச் சென்றுவிடும். தூக்கமின்மை அவர்களிடம் தோன்றும். வாழ்க்கையில் விரக்தியை ஏற்படுத்தி தற்கொலைக்குகூட தூண்டும்.

    மது பெண்களின் மூளையையும் எளிதாக பாதிக்கும். நினைவாற்றலை குறைக்கும். மூளை நரம்புகளை செயலிழக்கச் செய்வதால் காக்காய் வலிப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது. நரம்புகள் பலவீனமாகி ரத்த ஓட்டம் குறையும். அப்போது வெயிலில் நிற்க வேண்டி வந்தால் மயக்கம் ஏற்படும்.

    கர்ப்பகாலத்தில் பெண்கள் மது அருந்துவது, வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு விஷத்தைக் கொடுப்பதற்கு சமமாகிறது. தாயின் தொப்புள் கொடி வழியாக மது குழந்தைக்குள் பிரவேசிக்கும். இளம் ரத்தத்தில் கலந்து வெகுநேரம் சஞ்சரிக்கும். குழந்தையின் ஜீரண உறுப்பு வளர்ச்சியடையும் நேரத்தில் ஆல்ஹகால் உள்ளே சென்றால், அது குழந்தையின் வளர்ச்சியை பாதிக்கும்.

    மதுப்பழக்கம் உள்ளவர்களுக்கு தலை, கழுத்து, ஜீரண உறுப்புகள், குடல், மார்பகம், கல்லீரல் போன்றவைகளில் புற்றுநோய் வர வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது.
    ×