search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95284"

    ஆர்.கே.நகர் தொகுதியில் தினகரனை வழி மறித்து 20 ரூபாய் நோட்டுடன் பெண்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ராயபுரம்:

    ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் நடந்த ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக டி.டி.வி. தினகரன் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றார்.

    தேர்தலின்போது வாக்காளர்களுக்கு 20 ரூபாய் நோட்டு டோக்கனாக கொடுக்கப்பட்டது என்றும் ஓட்டுக்கு ரூ.10 ஆயிரம் வரை வழங்கப்பட்டது எனவும் அ.தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சியினர் குற்றம் சாட்டினர். இதனை தினகரன் மறுத்து வந்தார்.

    சில நாட்களுக்கு முன்பு தண்டையார்பேட்டை யில் உள்ள கோவில் திருவிழாவில் கலந்து கொள்ள தினகரன் வந்த போது 20 ரூபாய் நோட்டை காட்டி பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் கோ‌ஷமிட்டனர்.

    இந்த நிலையில் தினகரனுக்கு எதிராக மீண்டும் 20 ரூபாய் நோட்டுடன் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தண்டையார்பேட்டையை சேர்ந்த தனியார் பள்ளி மாணவர்கள் சந்தோஷ், சரவணகுமார், ரசாக் ஆகியோர் புனேவுக்கு சுற்றுலா சென்றபோது அங்கு தண்ணீரில் மூழ்கி பலியானார்கள்.

    அவர்களது குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்குவதாக தினகரன் அறிவித்து இருந்தார். இதனை வழங்குவதற்காக தினகரன் இன்று காலை தண்டையார்பேட்டையில் உள்ள மாணவர்களின் வீட்டுக்கு வந்தார். அவர் மாணவர்களின் பெற்றோருக்கு ஆறுதல் கூறி நிதி உதவி வழங்கினார். பின்னர் அவர் காரில் புறப்பட்டார்.

    தினகரன் வந்திருப்பதை அறிந்த ஆர்.கே.நகர் தொகுதியைச் சேர்ந்த பெண்கள் உள்பட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் 20 ரூபாய் நோட்டுடன் ஜீவரத்தினம் சாலையில் திரண்டு இருந்தனர்.

    அவர்கள் தினகரனின் கார் வந்ததும் அதனை மறித்து 20 ரூபாய் நோட்டை காட்டியபடி ரூ.10 ஆயிரம் எங்கே என்று கோ‌ஷமிட்டனர்.

    இதனை கண்டு தினகரனுடன் வந்த ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந் தனர். அவர்கள் 20 ரூபாய் நோட்டுடன் நின்ற பெண்களை பார்த்து சில வார்த்தைகளை கூறினர்.

    இதனால் பெண்களுக்கும், தினகரன் ஆதரவாளர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் தினகரன் ஆதரவாளர்கள் பெண்களை சரமாரியாக தாக்கி அங்கிருந்து விரட்டியடித்தனர்.

    இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தினகரனுக்கு எதிராக திரண்டு நின்ற பெண்களும், ஆண்களும் அங்கிருந்து ஓடினர்.

    இதனை படம் பிடித்த பத்திரிகையாளர்களையும் தினகரன் ஆதரவாளர்கள் மிரட்டினர். தாக்குதல் சம்பவம் நடந்து கொண்டிருந்த போது காரில் தினகரன் அமர்ந்து இருந்தார்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் காசிமேடு போலீசார் ஏராளமானோர் அங்கு குவிக்கப்பட்டனர். அவர்கள் இரு தரப்பினரையும் சமாதானம் செய்தனர். இதையடுத்து அங்கு நிலைமை கட்டுக்குள் வந்தது.

    இதைத் தொடர்ந்து தினகரன் தனது ஆதரவா ளர்களுடன் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். எனினும் அப்பகுதியில் தொடர்ந்து பதட்டமான நிலை நீடித்து வருகிறது. அசம்பாவிதத்தை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். தாக்குதல் தொடர் பாக 2 பேரை போலீசார் பிடித்து விசாரித்து வருகிறார்கள்.

    இந்த தாக்குதலில் 15-க்கும் மேற்பட்ட பெண்கள் காயம் அடைந்தனர். சுமார் 1 மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    50 வயதுக்கு மேற்பட்டப் பெண்களுக்கு அதிக அளவில் இதய நோய் வர முக்கியமான காரணங்கள் என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    பெண்களுக்கு மாதவிடாயின்போது சுரக்கும் ஹார்மோன்கள் இதய நோய் வராமல் தடுக்கிறது. மாதவிடாய் நின்றுவிட்டால் பெண்கள் கூடுதல் கவனத்துடன் இருக்கவேண்டும். பொதுவாக பெண்களுக்கு 50 வயதுக்குள்ளே மாதவிடாய் நின்றுபோய்விடுகிறது. அப்போது பெண்கள் உணவு உட்கொள்வதில் கவனமின்றி இருக்ககூடாது.

    முக்கியமாக இறைச்சி உணவைத் தவிர்த்து அதிகம் காய்கறிகளைச் சேர்த்துக்கொள்ளவேண்டும். இறைச்சியில் அதிகம் கொழுப்புச் சத்து இருக்கிறது. ருசிக்காக அதிக அளவில் எண்ணெய், காரம் சேர்த்து சமைப்பதால் கலோரியின் அளவையும் அதிகரிக்கச் செய்துவிடுகிறது. உதாரணத்துக்கு, ஒரு கப் சாதத்தோடு சமைத்த இறைச்சி சேர்த்துக்கொண்டால் மூன்று கப் அளவிற்கு மாறிவிடுகிறது. இதனால் கொலஸ்ட்ரால் அதிகரித்து இதயத்தைப் பாதிக்கச் செய்யும்.

    கொழுப்புச் சத்து அதிகம் உடலில் சேர்வதற்குக் காரணம் இறைச்சி மட்டும் அல்ல. எண்ணெய்க்கும் முக்கியப் பங்கு உண்டு. ஒரு நபர் நாள் ஒன்றுக்கு 15மி.லி ((3 டீ-ஸ்பூன்) எண்ணெய் மட்டும் உணவில் சேர்த்துக் கொண்டாலே போதும். ஹோட்டலில் சாப்பிடுவதாலும் கொழுப்புச் சத்து அதிகரிக்கிறது. வெளியே சமைக்கும் உணவில் எவ்வளவு எண்ணெய் பயன்படுத்துகிறார்கள் என்று நமக்குத் தெரியாது. அதனால் உணவகங்ளில் சாப்பிடுவதை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது.

    கொலஸ்ட்ரால் இல்லாமல் உடல் ஆரோக்கியமாக இருக்கவேண்டும் எனில், காய்கறிகளை அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. அந்தந்த சீசன்களில் கிடைக்கும் பழங்களைச் சாப்பிடலாம்.



    அசைவம் சாப்பிட விரும்பினால் மாதத்தில் ஒரு முறை ஆட்டு இறைச்சி சாப்பிடலாம். அதுவும் 75 கிராம் முதல் 100 கிராம் அளவுக்குள் இருக்கவேண்டும். இதை பகல் நேரத்தில் மட்டுமே சாப்பிடவேண்டும். ஆட்டு இறைச்சியை விரும்பாதவர்கள், வாரத்தில் ஒருமுறை நாட்டுக் கோழி (பிராய்லர் கோழி சாப்பிடக்கூடாது) அல்லது மீன் சாப்பிடலாம். இதுவும் 75 முதல் 100 கிராம் அளவுக்குள் இருக்கவேண்டும். இவற்றை வறுத்து சாப்பிடக் கூடாது. குறிப்பாக மதிய உணவின்போது மட்டுமே அசைவ உணவுகளைச் சாப்பிட வேண்டும். அசைவ உணவு செரிமாணமாக அதிக நேரமாகும் என்பதால் இரவில் சாப்பிடுவதை  தவிர்க்கவும்.

    பிட்சா, பர்கர், ஃப்ரென்ச் ஃப்ரை, பப்ஸ், கேக் போன்ற பேக்கரி உணவுப்பொருட்கள் மற்றும் சமோசா, பரோட்டா போன்றவற்றையும் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். அதேபோல் இனிப்பு வகைகளையும் தவிர்க்கலாம். இதில் எல்லாமே வனஸ்பதி (டால்டா) சேர்க்கப்படுவதால் கொலஸ்ட்ரால் அதிகரித்து உடல் பருமன் மற்றும் இதய நோய் வர காரணமாகிறது.

    எல்லாப் பெண்களுக்கும் 40 வயது தாண்டியதும் உடல் ரீதியான பிரச்சனைகள் வர ஆரம்பிக்கும் என்பதால் உணவு விஷயத்தில் மட்டுமல்ல உடற்பயிற்சி செய்வதிலும் கவனம் செலுத்தவேண்டும். தினமும் 45 நிமிடங்கள் நடைப் பயிற்சி மேற்கொண்டாலே போதும். உணவு விஷயத்திலும், உடற்பயற்சியிலும் தவறாமல் கவனம் செலுத்தி வந்தாலே இதய நோய் கண்டு அஞ்ச வேண்டியதில்லை.
    குடும்பம் என்பது அனைவரும் ஒருவரையொருவர் சார்ந்து தங்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுத்தலும், அன்பு, பாசம், சோகம், துயரம் இவற்றை பங்குப்போட்டுக் கொள்ளுதலும், இணக்கமாக வாழுதலும் தான்.
    சமீபத்தில் ஒரு துணுக்கு படித்தேன். நீங்கள் கூட்டுக் குடும்பமா? அல்லது தனி குடித்தனமா? என்ற கேள்விக்கு ஒரு கணவர் கூறும் பதில் ‘கூட்டு குடும்பம்தான்! நான், எனது மனைவி மற்றும் என் குழந்தையுடன் கூட்டாக வசிக்கிறோம்’ என்று வேடிக்கையாக சொல்கிறார்.

    இது சிரிப்புக்காக என்றாலும் நாம் கூட்டுக் குடும்பமாக வாழ்வதையே மறந்து விட்டோம் என்பதை நினைக்கும்போது நெஞ்சம் சற்று கனக்கத்தான் செய்கிறது.

    சமீபகாலங்களில் மணவிலக்குகள் அதிகரித்துள்ளன. குடும்பநல நீதிமன்றங்களில் வழக்குகள் குவிகின்றன. மனம் பொருந்தாதவர்கள் நித்தம் நித்தம் சித்ரவதை அடைவதைவிட பிரிந்துச் செல்வது சிறந்தது. அது அவர்களது உரிமை. ஆனால், 90 சதவீதத்தினர் மிக அற்பக் காரியங்களுக்காக பிரிய முயல்வது வருத்தத்தை அளிக்கிறது.

    தனது பெற்றோர் வீட்டுக்கு போவதா அல்லது சினிமாவுக்கு செல்வதா என்கிற பிரச்சினையின் தொடர்ச்சி சண்டையில் முடிந்து கணவனும் மனைவியும் விலக்குக் கேட்க நீதிமன்றத்தை அணுகியுள்ளதாக வழக்கறிஞர் நண்பர் ஒருவர் கூறினார்.

    இந்த கூட்டுக் குடும்ப வாழ்வினைத் துறந்ததால் நாம் தொலைத்தது அன்பு, பாசம், அரவணைப்பு, அறிவுரைகள், வழிக்காட்டுதல் இன்னும் ஏராளம் உண்டு. இதில் பெருநஷ்டம் அடைந்தது குழந்தைகள்.

    நண்பர் ஒருவரின் மகன், மகள் இருவரும் 90-களில் அமெரிக்கா சென்றவர்கள். நண்பரும் அவரது மனைவியும் சென்னையில் வாழ்கின்றனர். மக்களுக்கு திருமணமாகி பேரக் குழந்தைகள் என்று குடும்பம் பெருகினாலும், இங்கு சென்னையில் தாத்தாவும் பாட்டியும் தனிமையில் வாழ்கின்றனர்.

    சில காலங்கள் முன்புவரை இவர்கள் ஒரு ஆண்டு செல்வார்கள், பிறகு அவர்கள் வருவார்கள். காலம் செல்லசெல்ல அவர்கள் வருவதும் குறைந்தது. இவர்கள் செல்வதற்கும் உடல் ஒத்துழைக்கவில்லை. பேரக் குழந்தைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆகிவிட்டனர். தாத்தா பாட்டி அன்பு என்றால் என்னவென்று தெரியாமல் வளர்ந்துவிட்டார்கள்.

    இவர்களுக்கு எல்லாம் இருந்தும் ஒன்றுமே இல்லாத மனநிலை. ஒருவேளை அன்றைக்கு தம்மக்களை அமெரிக்கா செல்லவேண்டும் என்று கட்டாயப்படுத்தி தங்கள் விருப்பத்தை அவர்கள் மீது திணித்தது தவறோ என்று அவர்களை நினைக்க வைத்தது.



    இங்கு இந்தியாவிலேயே வாழ்பவர்கள் நிலை மட்டும் போற்றத்தக்க வகையில் உள்ளதா? என்றால், அதுவும் இல்லை.

    பெரியப்பா பிள்ளைகள், சித்தப்பா பிள்ளைகள், அத்தை மகள், மாமன் மகன் என்று உற்றார், உறவினரோடு விளையாடி மகிழ்ந்த காலம் போய், இன்று பெற்றவர்கள் முகத்தை மட்டும், அதுவும் அரிதாக, பார்த்து வளரும் குழந்தைகளை தான் அதிகம் பார்க்கின்றோம். இதில் பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்லும் சூழ்நிலை அமைந்தால், குழந்தைகள் ‘திரைக்கடலில்’ மூழ்கி விடுகிறார்கள். அது தொலைக்காட்சி திரையாகவும் இருக்கலாம் அல்லது கைபேசிகளின் திரையாகவும் இருக்கலாம்.

    சமீபத்தில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் ஒரு ஆராய்ச்சி முடிவுப்படி புத்தகங்கள் படிப்பதின் மூலமாகவும், கதைகள் கேட்டு வளர்வதின் மூலமாகவும் ஒரு குழந்தைக்கு கிடைக்கும் அறிவுத்திறன் தொலைக்காட்சி, வலைக்காட்சி இவைகளைப் பார்ப்பதின் மூலம் கிடைப்பதில்லை என்பதே.

    பாட்டி வடை சுட்ட கதை, தொப்பிக்காரன் குரங்குகளிடம் தொப்பி தொலைத்தக் கதை, ராஜா-ராணி கதைகள், தெனாலிராமன் கதைகள் என்று நாம் நமது தாத்தா பாட்டிகளிடம் கற்ற கதைகளை நமது அடுத்த தலைமுறைக்கு சொல்லத் தவறிவிட்டோமா? என்கிற தவிப்பு உள்ளது.

    கதை மூலம் கற்பிப்பது குழந்தைகளின் மனதில் ஆழமாக பதியும். அவர்களது கற்பனைத் திறனை விரிவடையச் செய்யும். மூளைக்கு சிறந்த பயிற்சியாக அமையும். அது மட்டுமின்றி கதைகள் வாயிலாக நன்னெறியையும், தன்னம்பிக்கையும் ஊட்ட முடியும். இன்று பாடங்களில் முதல் மதிப்பெண் வாங்குபவர்கள் கூட ஒரு சிறு தோல்வி வந்தால் துவண்டு விடுகிறார்கள். மனமுடைந்து தற்கொலை வரை செல்வதற்கு காரணம் தன்னம்பிக்கை குறைவதும், எதிர்மறையான எண்ணங்கள் எழுவதும்தான். தத்தம் உணர்வுகளை பகிர்ந்துக்கொள்ள உறவுகள் அருகாமையில் இல்லாமால் போவதும் முக்கியக்காரணம்.

    தாத்தா பாட்டிகள் கதை மட்டும் சொல்பவர்கள் அல்ல. நமது பண்பாடு, நாகரிகம், அடையாளம் மற்றும் உயர்ந்த எண்ணங்கள் என்று எல்லாவற்றையும் கற்றுத் தருபவர்கள். அதுவும் உணர்வுடன் கற்றுத்தருபவர்கள். தங்கள் பேரன், பேத்திகளுக்கு கதைகள் சொல்வதின் மூலமாக பெரும் மகிழ்ச்சியும், சாதனை உணர்வும் தாத்தா பாட்டிகளுக்கு கிடைக்கும்.

    குடும்பம் என்பது கணவன், மனைவி குழுந்தைகள் கொண்ட வெறும் தொகுப்பு அல்ல. அனைவரும் ஒருவரையொருவர் சார்ந்து தங்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுத்தலும், அன்பு, பாசம், சோகம், துயரம் இவற்றை பங்குப்போட்டுக் கொள்ளுதலும், இணக்கமாக வாழுதலும் தான்.

    இன்றைய பொருள் தேடும் உலகில் பெற்றோருக்கும் நேரமின்மை; அதிக மதிப்பெண்கள் தேடி குழந்தைகளும் ஓட்டத்துக்கு இடையில் குடும்ப உறவை பலப்படுத்த ஒரே வழி இருக்கிறது. ஒவ்வொரு நாளும், அரைமணி நேரம் ஒதுக்கி, அன்றைக்கு நடந்த செய்திகளையும் உணர்வுகளையும் பகிர்ந்துக் கொள்ள வேண்டும். ஒரு வேளையாவது அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடவேண்டும்.

    ஒவ்வொருவரும் தங்கள் நேரத்தை தொழில், குடும்பம், சமூகம், தனக்கு என்று பகுத்து திட்டமிட்டு பயன்படுத்தினால் குடும்பம் ஏற்றம் பெறும், நாடு செழிக்கும், மனிதகுலம் தழைக்கும். நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகமா கட்டும்.

    இன்று (மே 15-ந்தேதி) உலக குடும்ப தினம்.

    கமலேஷ் சுப்பிரமணியன், எழுத்தாளர்
    வீட்டின் ஏதாவது ஒரு இடத்தில் 6 சதுர அடி இடம் இருந்தால் இந்த நவீன சமையலறையை கொண்டுபோய் வைத்து சமையல் வேலைகளை செய்ய இயலும்.
    நகர்ப்புற வளர்ச்சிகள் காரணமாக குடியிருப்புகளில் இடப்பற்றாக்குறை ஏற்படுவது இப்போது சகஜமான விஷயமாக மாறிவிட்டது. குளியலறை, கழிவறை மற்றும் சமையலறை ஆகியவை இட நெருக்கடி காரணமாக குறுகிய அளவுகள் கொண்டதாகவும், நெருக்கமாகவும் கட்டமைக்கப்படுகின்றன. சிங்கிள் பெட்ரூம் பிளாட்டில் குடியிருப்பவர்களுக்கு மட்டுமல்லாமல், இரண்டுக்கும் மேற்பட்ட குடும்ப அங்கத்தினர்கள் கொண்ட சிறிய குடியிருப்புகளிலும் சமையலறைக்கான இடத்தை ஒதுக்குவது சிக்கலான விஷயமாக உள்ளது.

    மேற்கண்ட பிரச்சினையை தவிர்க்க உதவும் கண்டுபிடிப்பாக ‘ஆல் இன் ஒன் கிச்சன்’ என்ற சமையலறை உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது, எளிதாக நகர்த்தவும், சுழலச்செய்யவும், இன்னொரு இடத்திற்கு எடுத்துச்செல்லவும் உகந்த பல்வேறு சிறப்பம்சங்களோடு இந்த அமைப்பு தயாரிக்கப்பட்டுள்ளது. வீட்டின் ஏதாவது ஒரு இடத்தில் 6 சதுர அடி இடம் இருந்தால் இந்த நவீன சமையலறையை கொண்டுபோய் வைத்து சமையல் வேலைகளை செய்ய இயலும்.

    மேலை நாட்டு முறை

    மேலை நாடுகளில் பரவலாக உபயோகத்தில் இருந்து வரும், அலமாரிகளுடன் இணைந்த சமையலறை ‘கான்செப்ட்’ இப்போது நமது நாட்டிலும் ஆங்காங்கே பரவி வருகிறது. 400-க்கும் குறைவான சதுர அடி பரப்பளவில் கட்டப்படும் மலிவு விலை வீடுகளில் சமையலறைக்கான இடத்தை ஒதுக்குவதில் உள்ள சிக்கலை இந்த நவீன அமைப்பு மூலம் தீர்க்க இயலும் என்பது கவனிக்கத்தக்கது.

    மின் இணைப்புகள்

    இந்த அமைப்பை சமையல் வேலைகள் முடிந்த பிறகு சாதாரண பீரோவைப் போல மூடி வைத்துக் கொள்ள முடியும். இந்த மாடர்ன் கிச்சனில் ‘லைட்டிங்’, ‘எலட்ரிகல் சர்க்கியூட்’ போன்ற மின் அமைப்புகள் மற்றும் இணைப்புகள் கச்சிதமாக அமைக்கப்பட்டு ‘எலக்ட்ரிக் ஓவன்’, ‘மிக்சி’, ‘ஸ்டவ்’ போன்ற மின்சார சாதனங்களை உபயோகித்துக் கொள்ள தக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளன.



    தண்ணீர் குழாய்கள்

    மேலும், தண்ணீருக்கான பைப் லைன் மற்றும் உபயோகித்த தண்ணீரை வெளியேற்றுவதற்கு உரிய வசதிகளும் இணைக்கப்பட்டுள்ளன. சமையலறை பொருட்கள், பாத்திரங்கள், உபகரணங்கள் ஆகிய அனைத்தையும் இந்த அமைப்புக்குள் அதற்குரிய இடங்களில் வைத்துக்கொள்ளலாம். குறிப்பிட்ட அறையில் உள்ள பொருட்கள் அல்லது சாதனங்களை எடுத்து இந்த சமையலறையில் பயன்படுத்தும் வகையில் 180 டிகிரி முதல் 360 டிகிரி வரை சுழலும் அமைப்பில் இது உருவாக்கப்பட்டுள்ளது.

    பயன்படுத்த எளிது

    உட்புறம் முழுவதும் ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் தகடுகள் மூலம் வடிவமைக்கப்பட்டு, வெளிப்புறத்தில் ஸ்டீல் மற்றும் மரத்தாலான வேலைப்பாடுகள் கொண்டதாகவும் ‘பினிஷிங்’ செய்யப்பட்டுள்ளது. ‘பென்ச் டாப்’, மற்ற ‘பிட்டிங்ஸ்’, ‘பினிஷிங்’ மற்றும் அழகான வண்ணப்பூச்சு ஆகிய அம்சங்கள் கொண்டதாக உள்ள இந்த நவீன சமையல் கூண்டு அமைப்பு மேலை நாடுகளில் பரவலான உபயோகத்தில் இருந்து வருகின்றன.

    இந்த வகை குட்டி சமையல் அறைகளை சிறிய அளவு கொண்ட வீடுகளில் சமையல் அறைக்காக பிரத்தியேக அமைப்பு ஏதும் செய்யப்படாமலேயே அமைத்து பயன்படுத்த முடியும் என்பதோடு, மாணவர்கள் தங்கள் அறைகளில் அமைத்து எளிதாக சமையல் வேலைகளை செய்து கொள்ளலாம் என்பது கவனிக்கத்தக்கது.

    சிறிய இடம் போதும்


    சாதாரண சமையலறை அமைக்க 20 சதுர அடி முதல் 30 சதுர அடிகளுக்கும் மேல் இடம் தேவைப்படும். ஆனால், 6 சதுர அடி மட்டும் தேவைப்படக்கூடிய இந்த ‘ஆல் இன் ஒன் கிச்சன்’ வீடுகளில் உள்ள குட்டி அலமாரி போன்ற தோற்றம் தரக்கூடியது. நமது பகுதியில் புதுமையாக உள்ள இந்த அமைப்பு ரெடிமேடாக நமது கடைகளில் கிடைக்க இன்னும் சற்று கால தாமதம் ஆகலாம். இருப்பினும், கொஞ்சம் அதிகமான பட்ஜெட் கொண்ட, இந்த மொபைல் சமையலறையை செய்து தரக்கூடிய தனி நபர்கள் அல்லது பர்னிச்சர் நிறுவனங்கள் நமது பகுதியிலும் இருக்கலாம். 
    பெண்கள் தங்கத்தை வெறும் நகையாகத்தான் வாங்க வேண்டும் என்பதில்லை. வேறு வகைகளிலும் வாங்கலாம் என்பதை இன்றும் பலரும் அறிந்திருக்கவில்லை.
    இந்தியர்கள் அனைவரும் தங்க நகைகள் மீது கொண்டிருக்கும் மாறாக்காதலுக்கு, அவை அவசரப் பணத் தேவையில் உடனடியாகக் கைகொடுக்கும் என்ற நம்பிக்கையும் முக்கியக் காரணம். ஆனால், தங்கத்தை வெறும் நகையாகத்தான் வாங்க வேண்டும் என்பதில்லை. வேறு வகைகளிலும் வாங்கலாம் என்பதை இன்றும் பலரும் அறிந்திருக்கவில்லை.

    சரி, தங்கத்தில் முதலீடு செய்யும் பல்வேறு வழிகளைப் பார்க்கலாம்...

    தங்க நகைகள்:

    தங்க நகைகளை வாங்குவதன் மூலம் தங்கத்தில் முதலீடு செய்வது வழக்கமாக நாம் பின்பற்றும் வழி. தங்க நகைகள் வாங்கும்போது மொத்தக் கொள் முதல் செலவுடன், தயாரிப்புச் செலவுகளும் சேர்ந்திருக்கும். அது மொத்தச் செலவில் 10 முதல் 20 சதவீதம் வரை இருக்கலாம். அதாவது, செய்கூலி, சேதாரம் என்று நாம் கணிசமானதொரு தொகையை செலுத்த வேண்டியிருக்கும்.

    வாங்கிய நகையை அதே நகைக்காரரிடம் விற்கும்போது அவர் சந்தை விலைக்கு அல்லது அதைவிடக் கொஞ்சம் குறைவான விலைக்கு வாங்கிக்கொள்வார் என்றாலும் சேதாரம் அல்லது அழுக்கு என்கிற பெயரில் குறிப்பிட்ட அளவு தங்கத்தைக் கழித்துவிடுவார். இதனால் நமக்குக் கிடைக்க வேண்டிய லாபத்தின் அளவு குறையும். ஆனால் பலர் இதை உணர்வதில்லை.

    தங்க நாணயம், தங்கக் கட்டிகள்:

    தங்க நகைகள் வாங்குவதைவிட தங்க நாணயங்கள் மற்றும் தங்கக் கட்டிகளில் முதலீடு செய்வது சிறந்தது. நகைக் கடைகளிலும் வங்கிகளிலும் தங்க நாணயங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

    வங்கிகள் தங்க நாணயங்களை விற்றாலும், அவற்றை அவை திரும்ப வாங்கிக்கொள்வதில்லை. நகைக் கடைகள் திரும்ப வாங்கிக் கொண்டாலும், பணமாக திரும்பக் கிடைக்காது. மீண்டும் நகையாகவே வாங்கிக்கொள்ளும்படி வற்புறுத்துவார்கள். தங்கக் கட்டிகளைப் பொறுத்தவரை, மிக அதிகமான பணம் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே அது சரியாக இருக்கும்.

    தங்க நகைகளாக இருந்தாலும் சரி அல்லது தங்க நாணயம் மற்றும் கட்டிகளாக இருந்தாலும் சரி அவற்றின் பாதுகாப்பில் கவனமாக இருக்க வேண்டும்.

    கோல்டு ஈ.டி.எப்:

    மியூச்சுவல் பண்ட் திட்டத்தில் இருக்கும் பலவகையான முதலீட்டு முறைகளில் இந்த கோல்டு ஈ.டி.எப்.பும் ஒன்று. இதில் முதலீடு செய்யப்படும் பணத்தைக் கொண்டு தங்கம் வாங்கி வைக்கப்படும். தங்கத்தின் விலை உயர்வு அல்லது குறைவுக்கேற்ப நம் முதலீட்டின் மதிப்பு மாறும்.



    பொதுவாக, யூனிட் கணக்கில் (ஒரு யூனிட்- ஒரு கிராம் தங்கம்) இதில் முதலீடு செய்யலாம். இதில் முதலீடு செய்வதற்கு டீமேட் கணக்கு மற்றும் டிரேடிங் கணக்கு அவசியம். டீமேட் பராமரிப்புக் கட்டணத்தை நாம் கட்ட வேண்டும். மேலும், இதை வாங்கும்போதும், விற்கும்போதும் தரகருக்கான கட்டணத்தைச் செலுத்தியாக வேண்டும். வாங்கிய யூனிட்களை விற்றால் பணமாகத்தான் கிடைக்கும், தங்கமாகக் கிடைக்காது.

    கோல்டு பண்டு:

    கோல்டு பண்டும் கோல்டு ஈ.டி.எப். போன்றதுதான். தங்களுக்கு டீமேட் கணக்கு இல்லை, டிரேடிங் கணக்கு இல்லை என்பவர்கள் இந்த கோல்டு பண்டு மூலம் முதலீடு செய்யலாம். இதில் ஒருமுறை முதலீடு செய்வதற்கு ரூ. 5 ஆயிரம் குறைந்தபட்சத் தொகையாகும். எஸ்.ஐ.பி. முறையில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் ரூ. 500, ரூ. 1000 என்கிற அளவில் செய்யலாம்.

    கோல்டு ஈ.டி.எப் மற்றும் கோல்டு பண்டு திட்டங்கள் காகித வடிவில் இருப்பதால் பராமரிப்பது எளிது. திருடு போய்விடும் என்கிற பயமில்லை. மேலும் செய்கூலி, சேதாரம் என்கிற எந்தப் பிரச்சினையும் இல்லை. வேண்டும் என்கிறபோது உடனே விற்கவும் முடியும்.

    பங்கு அடிப்படையிலான தங்க முதலீடு:

    நேரடியாக தங்கத்தில் முதலீடு செய்யாமல், தங்கச் சுரங்க நிறுவனங்கள் மற்றும் தங்கத்தைப் பிரித்தெடுப்பது மற்றும் மார்க்கெட்டிங் செய்வது போன்றவற்றில் ஈடுபடும் நிறுவனங்களில் முதலீடு செய்வதாகும். இந்த நிறுவனங்கள் எப்படிச் செயல்படுகின்றன என்பதைப் பொறுத்தே நமக்குக் கிடைப்பது லாபமா அல்லது நஷ்டமா என்பது முடிவாகும்.

    ஆனால் மேற்சொன்ன முதலீட்டில் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துக்கு ஏற்ப உங்கள் லாப, நஷ்டம் அமையும். எனவே, அதிக ரிஸ்க் எடுக்க நினைப்பவர்கள் மட்டுமே இதில் முதலீடு செய்யலாம். இதற்கு டீமேட் கணக்கு வேண்டும். அதற்கு ஆண்டு பரிவர்த்தனைக் கட்டணம் கட்ட வேண்டும்.

    ‘ரிஸ்க்’ வேண்டாம் என்பவர்கள் கோல்டு ஈ.டி.எப். அல்லது கோல்டு பண்டு ஆகிய இரண்டில் ஏதாவது ஒன்றைத் தேர்வு செய்வது நல்லது.

    அவ்வப்போது சில ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் எப்போதும் தங்கம் ஒரு நல்ல முதலீடுதான். எனவே நாம் விரும்பும் விதத்தில் தங்கம் வாங்கலாம்.
    பாலியல் வன்கொடுமையால் உயிர் இழக்கும் பெண்களுக்கு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சம் வரை நஷ்ட ஈடு வழங்கும் வகையில் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. #Centralgovt
    புதுடெல்லி:

    பாலியல் வன்கொடுமை, ஆசிட் வீச்சு போன்ற பல்வேறு குற்றங்களில் பாதிக்கப்படும் பெண்களுக்கு நஷ்டஈடு வழங்குவது வழக்கமாக உள்ளது. ஆனால், மாநிலத்துக்கு மாநிலம் இந்த நஷ்ட ஈட்டின் தொகை மாறுபடுகிறது.

    எனவே, குறைந்த பட்சம் அனைத்து மாநிலங்களிலும் ஒரே மாதிரியான நஷ்டஈடு வழங்கும் வகையில் மத்திய அரசு திட்டங்களை உருவாக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.

    அதன்படி மத்திய சட்ட சேவை வாரியம் மத்திய அரசுடன் கலந்து பேசி புதிய நஷ்டஈடு திட்டத்தை உருவாக்கி உள்ளது.

    இதன் மூலம் பாலியல் வன்கொடுமையில் உயிர் இழக்கும் பெண்களுக்கு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சம் வரை வழங்கும் வகையில் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

    அதேபோல் பலரால் கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்யப்படும் பெண்களுக்கும் ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சம் வரை நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    மேலும் பல்வேறு பாதிப்புகளை சந்திக்கும் நபர்களுக்கும் நஷ்டஈடு வழங்கும் வகையில் திட்டங்களை உருவாக்கி உள்ளனர்.

    இதன்படி பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு ரூ.4 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சம் வரையிலும், இயற்கைக்கு மாறான பாலியல் பிரச்சனையில் பாதிக்கப்படும் நபருக்கு ரூ.4 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சம் வரையிலும், பாலியல் குற்றத்தில் கர்ப்பம் அடைந்தால் ரூ. 2 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சம் வரையிலும், கற்பழிப்பில் கர்ப்பமானால் ரூ. 3 லட்சத்தில் இருந்து ரூ. 4 லட்சம் வரையிலும்,

    திராவகம் வீச்சு மற்றும் தீக்காயங்கள் ஏற்படுத்தப்பட்டு கடுமையாக பாதிக்கப்பட்டால் ரூ. 7 லட்சத்தில் இருந்து ரூ. 8 லட்சம் வரையிலும், 50 சதவீதம் காயம் அடைந்திருந்தால் ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.8 லட்சம் வரையிலும் வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த திட்ட வரையரை கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    அதே நேரத்தில் இது போன்ற குற்றங்களில் ஆண்கள் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு நஷ்டஈடு வழங்கும் வகையில் திட்டங்கள் வரையரை செய்யவில்லை.

    இது சம்பந்தமாக நீதிபதிகள் மதன்லோகூர், தீபக் குப்தா ஆகியோர் கொண்ட சுப்ரீம் கோர்ட்டு பெஞ்சு கூறும் போது, மைனராக உள்ள சிறுவர்கள் இது போன்ற குற்றத்தால் பாதிக்கப்பட்டாலும் அவர்களுக்கும் நஷ்ட ஈடு வழங்கும் அம்சங்களை சேர்க்கும்படி உத்தரவிட்டனர். #Centralgovt
    தற்போது இந்தியாவின் பெண்கள் விரும்பும் வகையில் சிறப்பு மிகு தனிப்பட்ட உணவுகளுக்கு ஏற்றவாறு சமைத்திட வசதியான மைக்ரோ வேவ் ஓவன்கள் வந்து விட்டன.
    சமையலறையில் கேஸ் ஸடவ் சமையலைவிட தற்போது மைக்ரோவேவ் ஓவன் சமையல் தான் அதிகப்படியாக நடைபெறுகிறது. ஏனென்றால் கேஸ் அடுப்பின் வெந்தனல் சமையலின் போது சமைப்பவரும் ஏறக்குறைய வெப்பத்தின் பிடியில் சிக்கி தவிக்க வேண்டிய சூழல். ஆனால் மைக்ரோவேவ் ஓவன் அப்படி இல்லை. எந்த அனலும் இல்லை. புகையும் இல்லை.

    சுவைமிகு அனைத்து அயிட்டங்களும் ருசியுடன் சமைத்து தந்துவிடுகிறது. அதுவுமின்றி நேரம் சிக்கனம், எரிபொருள் சிக்கனம். ஒவ்வொரு விதமான உணவு தயாரிப்பிற்கும் ஏற்ற இயக்க வசதி என அனைத்திலும் மைக்ரோ வேவ் ஓவன்கள் தனித்து விளங்குகின்றன. தற்போது இந்தியாவின் சிறப்பு மிகு தனிப்பட்ட உணவுகளுக்கு ஏற்றவாறு சமைத்திட வசதியான மைக்ரோ வேவ் ஓவன்கள் வந்து விட்டன.

    அனைத்து சமையலும் ஒரே ஓவனில்

    சமையல் என்பதில் அவித்தல், பொறித்தல், வறுத்தல், வேகவைத்தல் போன்ற பல பணிகள் உண்டு. இது போன்ற ஏராளமான பணிகள் பலவற்றையும் மேற்கொள்ள வசதியான தனிச்சிறப்பு ஓவன்கள் வந்துள்ளன. இதன் மூலம் விதவிதமான இந்திய மற்றும் வெளிநாட்டு உணவு வகைகளையும் சமைத்து உண்ணலாம். விருந்தினர்கள் மற்றும் பண்டிகை நேரத்தில் பல வகையான உணவு வகைகளை தயார் செய்வது கடினமான பணி. ஆனால் அனைத்து வகையான சமையலையும் மேற்கொள்ளக் கூடிய மைக்ரோ வேவ் ஓவன் ஒன்று இருந்தால் போதும் அத்தனையும் சில மணிநேரத்தில் செய்து பரிமாறலாம்.

    வறுத்தல், பொறித்தல், பார்பிக்யூ, சூடுபடுத்துதல், நீராவி வேகவைத்தல், கிரில்லிங், பேக் செய்தல், பதப்படுத்துவது, ஸ்டூவிங், அதிக எண்ணெயின்றி வறுத்தல் என பல பணிகளை ஒரே ஓவன் செய்து முடித்து விடுகிறது.



    சுவைமிகு பார்பிக்யூ உணவுகள்

    பார்பிக்யூ உணவுகளை தயாரித்திட தனிப்பட்ட கருவி வேண்டாம். புதிய அனைத்தும் உள்ளடங்கிய மைக்ரோ வேவ் ஓவனில் அதே சுழலக்கூடிய ரோட்டினரி வசதியுள்ளதால் முற்றிலும் 360 டிகிரி சுழற்சியில் ஒரே சீரான வேகவைத்தல், மொறுமொறுப்பு என சிக்கன் டிக்கா, பன்னீர் டிக்கா போன்றவைகளை செய்து உண்ண முடியும். மோட்டார் வசதியுடன் சுழலக்கூடிய கம்பி அமைப்பு உள்ளதால் மற்ற ஓவன்களை விட இதில் பார்பிக்யூ உணவுகள் சீக்கிரமாக, சுவையுடன் செய்து கொள்ள முடியும். குழந்தைகள் முதல் பெரியவர் வரை விரும்பும் விதவிதமான பார்பிக்யூ உணவு வகை மெனுவும் உள்ளது.

    ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் உட்புற அமைப்பு

    உட்புற தகடு அமைப்பு என்பது புதிய ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பொருந்தியவாறு வந்துள்ளது. இதன் மூலம் சூடு உட்புறம் சீராக பரவி சீரான வேகவைத்தலை நடைமுறை படுத்துகிறது. சிராய்ப்பு மற்றும் பூச்சுகள், காயம் ஏற்பட்டு விடும் என்ற பயமின்றி சமைக்க முடியும்.

    சுத்தமான நெய் உருக்க வசதியான ஓவன்

    பெரும்பாலும் வெண்ணெய்யை வாங்கி வீட்டில் நெய்யை உருக்கும் போது ஒரு வித வாசம் வீசும். அந்த வாசம் ஏதும் வீசாமல் 12 நிமிடத்தில் வெண்ணெய்யை நெய்யாக உருக்கி தந்துவிடுகிறது ஓவன். மைக்ரோ ஓவன் கிளாஸ் பவுலில் வெண்ணெய்யை போட்டு நெய் பட்டனை அழுத்தினால் போதும் நெய் காய்ச்சி தந்து விடும்.

    அதிக எண்ணெய்யின்றி பொறித்தல்

    கொழுப்பு மற்றும் எண்ணெய் பதார்த்தங்கள் சாப்பிட தயங்குபவர்களுக்கு என அதிக எண்ணெய் உறிஞ்சாத சமோசா, வடை, பஜ்ஜி போன்றவைகளை சமைத்து உண்ண வசதியான அமைப்பு உள்ளது. இதன் மூலம் பொறிக்கும் போது அந்த உணவு பொருளில் வெகு குறைந்த அளவு எண்ணெய்தான் இருக்கும். பயமின்றி உண்ணலாம். ஆரோக்கியமானது. 
    பெண்ணின் வாழ்க்கை ஒரு பூமாலை போன்றது. குற்ற பின்னணி கொண்டவர்கள் கையில் அவர்கள் வாழ்க்கை ஒப்படைக்கப்பட்டால் அது (குரங்கு கையில் கிடைத்த பூமாலையாக) சின்னாபின்னமாகிவிடும்.
    கசப்பான உண்மை இது, பெற்றோர் மிகுந்த கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயம் இது. இந்த சமூகம் கிரிமினல்கள், ரவுடித்தனம் செய்பவர்கள், ஊருக்கு அடங்காதவர்கள் என்று பலரை ஒதுக்கிவைக்கிறது. அப்படிப்பட்டவர்களில் சிலரை ‘டீன்ஏஜ்’ பெண்கள் விரும்புகிறார்கள். அவர்களுடன் ஒட்டி உறவாட ஆசைப்படுகிறார்கள். நெருப்போடு விளையாடுவது போன்ற விபரீதம் அது என்று அவர்களுக்கு தெரியத்தான் செய்கிறது. ஆனாலும் அந்த விளையாட்டுக்கு அவர்கள் தயாராகி விடுகிறார்கள்.

    இப்படி கிரிமினல்களையும், குற்ற பின்னணி கொண்டவர்களையும் டீன்ஏஜ் பெண்கள் விரும்புவது அதிகரித்துக்கொண்டிருக்கிறது. தவறானவர்கள் என்று தெரிந்த பின்பும் தயக்கமில்லாமல் அவர்கள் வலையில் போய் இளம் பெண்கள் விழ என்ன காரணம்? என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

    டீன் ஏஜில் பெண்களிடம் உடல்ரீதியான, மனோரீதியான மாற்றங்கள் நிறைய ஏற்படும். அப்போது ஒவ்வொரு விஷயத்தையும் தர்க்கரீதியாக பார்க்கும் எண்ணம் அவர்களிடம் மேலோங்கும். ‘பலரும் தவறென்று சொல்வதை நாம் ஏன் சரியென்று சொல்லக்கூடாது?’ என்ற கேள்வியை தனக்குள்ளே கேட்டு, அந்த தப்புக்குள் சரியென்று வாதிட என்னென்ன வாய்ப்புகள் இருக்கின்றன என்று அவர்கள் தேடத் தொடங்குகிறார்கள். இப்படித்தான் ‘நெகட்டிவிட்டி’ என்ற எதிர்மறையின் மீது அவர்களுக்கு முதல் ஈர்ப்பு ஏற்படுகிறது.

    ஊடகங்களில் சில ‘வில்லன்களை’ பற்றி வெளிவரும் கட்டுரைகளை இவர்கள் படிக்கும் போதும், அவர்களை பற்றிய புத்தகங்களை வாசிக்கும்போதும், அவர்கள் செய்யும் எதிர்மறையான சாகசங்களை மட்டும் நினைவில் நிலைநிறுத்தி வியக்கிறார்கள். தொடர்ந்து அவர்களை பற்றியே சிந்தித்து அவர்களை தங்கள் மனதுக்குள் ஒரு ஹீரோ லெவலுக்கு உயர்த்திவிடுகிறார்கள். அந்த நேரங்களில் சினிமாக் களிலோ, டெலிவிஷன் தொடர்களிலோ வரும் வில்லன் கதாபாத்திரங்களை அவர்கள் வீரம் நிறைந்த கதாபாத்திரம் போல் உணருவார்கள். அதற்கு அவர்கள் மனது பழகிவிட்டால், நிஜ வாழ்க்கையில் வில்லன்களாக இருப்பவர்களுக்கும், ஹீரோ அந்தஸ்து கொடுத்து ரசிக்கத் தொடங்கிவிடுவார்கள்.

    டீன்ஏஜ் பெண் ஒருத்தி, ரவுடி ஒருவரை காதலிக்கிறாள் என்றால் அதற்கு அவள் வாழும் இடத்து சுற்றுச்சூழல், அவளது தோழிகள், அவளது குடும்பச்சூழல், எதிர்மறை கதாபாத்திரங்களை விரும்பும் அவளது எண்ணங்கள் போன்ற பல விஷயங்கள் காரணமாக இருக்கின்றன. சமூகம் அந்த ரவுடி மீது வைத்திருக்கும் பயத்தை, அவள் மரியாதை என்ற கணக்கில் தவறாக எடுத்துக்கொள்வாள். எல்லோரும் அவருக்கு அஞ்சுவதால் தனக்கு அவர் மூலம் மிகுந்த பாதுகாப்பு கிடைத்துவிடும் என்று தவறாக நம்புகிறாள்.



    தோழிகளில் சிலர் ரவுடி ஒருவரிடம் இருக்கும் ஒருசில நல்ல குணங்களை சொல்லும்போது, அவரை சிறந்த மனிதர் என்ற அந்தஸ்துக்கு தவறாக கணித்து விடுகிறாள். அவர்களது தோற்றமும், அவர்கள் கையில் புழங்கும் பணமும், அவர்களது நெட்ஒர்க் செயல்பாடுகளும்கூட சில பெண்களை கவர்ந்துவிடுகிறது. ஒருசில பெண்கள், அத்தகைய ரவுடிகள் காதல் கலைகளிலும் வல்லவர்களாக இருப்பார்கள் என்றும் தவறான நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். இப்படி ரவுடிகளையும், குற்றபின்னணி கொண்டவர்களையும் டீன்ஏஜ் பெண்கள், விரும்ப பல காரணங்கள் இருக்கின்றன.

    குற்றபின்னணி கொண்டவர்களை காதலிப்பவர்களும், கல்யாணம் செய்துகொண்டவர்களும் வாழ்க்கையில் சொல்ல முடியாத இன்னல்களை அனுபவிக்கிறார்கள். அவர்கள் தவறை உணர்ந்து, இயல்பான வாழ்க்கைக்கு திரும்ப நினைக்கும்போது அவர்களை மீட்டுக்கொண்டு வரும் முயற்சியில் குடும்பமும், சமூகமும் இணைந்து செயல்பட வேண்டும். இதற்கு மனோதத்துவ கவுன்சலிங் உதவும். தவறான அபிப்பிராயங்களை மனதில் இருந்து அகற்ற தியானமும் கைகொடுக்கும். அதே நேரத்தில் தங்கள் டீன்ஏஜ் பிள்ளைகள் இதுபோன்றவர்களிடம் சிக்கிக்கொள்ளாமல் இருக்க பெற்றோர் தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.

    உங்கள் மகளுக்கு 12 வயதாகும்போதே அவளிடம் நட்பு பாராட்டத் தொடங்கிவிடுங்கள். அந்த வயதை கடக்கும்போது பெற்றோரின் பாதுகாப்பு வளையத்தைவிட்டு வெளியே வந்து கருத்துக் களாலும், எண்ணங்களாலும் தன்னைத்தானே வடிவமைத்துக்கொள்ள ஒவ்வொரு பெண்ணும் முயற்சிப்பாள். அப்போது அவர் களுக்கு பெற்றோர் நம்பிக்கை, பாதுகாப்பு, அன்பு, மரியாதை, சுதந்திரம் போன்ற அனைத்தையும் வழங்கி, நல்ல தோழமையை உருவாக்கிக்கொடுத்து அவர்களிடம் நேர்மறையான சிந்தனையை வளர்க்கவேண்டும்.

    பெற்றோரும் நல்லவர்களாக வாழ்ந்து காட்டி, மகள்களுக்கு ரோல்மாடலாக திகழவேண்டும். தவறான தொடர்புகளை பெற்றோர் ஏற்படுத்திக்கொள்ளக்கூடாது. மகள்களுக்கு ரோல்மாடலாக திகழவேண்டும். தங்களுக்குள் சண்டையிட்டு குடும்பத்தில் நிம்மதியற்ற சூழலையும் உருவாக்கிவிடக் கூடாது. பெண்களுக்கு சுயகவுரவம் மிக முக்கியம் என்பதை உணர்த்தவேண்டும்.

    அவர்களை மதிப்புமிக்கவர்களாக வளர்த்தெடுக்கவேண்டும். ஏழையாக இருந்தாலும் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்று நம்பிக்கையூட்டவேண்டும். வாழ்க்கையில் கசப்பான சம்பவங்களை சந்தித்தவர்களும், மற்றவர்களால் வஞ்சிக்கப்பட்டவர்களும், தங்களுக்கு நல்ல வாழ்க்கைத்துணை அமையாது என்ற எண்ணத்தில் இருப்பவர்களும் குற்ற பின்னணி கொண்டவர்களை காதலிக்கிறார்கள்.

    பெண்ணின் வாழ்க்கை ஒரு பூமாலை போன்றது. குற்ற பின்னணி கொண்டவர்கள் கையில் அவர்கள் வாழ்க்கை ஒப்படைக்கப்பட்டால் அது (குரங்கு கையில் கிடைத்த பூமாலையாக) சின்னாபின்னமாகிவிடும்.

    - விஜயலட்சுமி பந்தையன். 
    பெண்களை வர்ணிக்கும்போது வண்ணமயிலோடு ஒப்பிட்டு புகழ்வர். பெண்களின் அழகிய வளைவு நெளிவுக்கு ஏற்ற அலங்கார நகைகள் விதவிதமான மயில்கள் வடிவமைக்கப்பட்டு விற்பனைக்கு வருகின்றன.
    பெண்களை வர்ணிக்கும்போது வண்ணமயிலோடு ஒப்பிட்டு புகழ்வர். அந்த கையில் அவர்களது ஆடைகள், நகைகள் பெரும்பாலும் பயன்படுத்தும் பல பொருட்கள் அனைத்திலும் மயில்கள் பிரதான வடிவமைப்பு பொருளாக அலங்கரிக்கின்றன. குறிப்பாக பெண்கள் அணியும் தங்க நகைகளில் மயில் டிசைன் நகைகள் என்றவாறு பிரத்யேக அணிவகுப்பு நகைகள் உள்ளன. இவை மயில்களின் அலங்கார அணிவகுப்பு, வண்ண தோகை அலங்காரம், அழகிய வளைவுகள் என்றவாறு கைநுணுக்க வேலைப்பாட்டுடன் உருவாக்கப்படுகின்றன.

    பெண்களின் அழகிய வளைவு நெளிவுக்கு ஏற்ற அலங்கார நகைகள் விதவிதமான மயில்கள் வடிவமைக்கப்பட்டு விற்பனைக்கு வருகின்றன. பழங்கால ஆண்டிக் நகைகள் முதல் நவீன கால் வடிவமைப்பு நகைகள் வரை அனைத்திலும் மயில்களின் தாக்கம் அதிகரித்தே காணப்படுகிறது.

    மயில்கள் அணிவகுக்கும் ஆன்டிக் ஆரம் :

    ஆன்டிக் நகைகள் பெரிய பிரம்மாண்ட தோற்றத்துடன் காணப்படும் நகை. அதன் வடிவங்கள் சிற்ப வேலைப்பாடு பழமையின் பிரதான சின்னங்களுடன் கூடுதல் உழைப்புடன் காணப்படுபவை. ஆன்டிக் நகைகள், பாதுகாக்கப்பட வேண்டிய அரிய பொக்கிஷ நகையாக உள்ளன. மயில்கள் இருபுறமும் வரிசை கிரமமாய் தோகை விரித்தப்படி அணிவகுக்க அதன் இரு பெரிய மயில்கள் தொங்குவது போன்ற பதக்க அமைப்பு, பதக்க ஓரப்பகுதியில் இலை மோடிப் கொண்டவாறும், கீழ் மணி உருளைகள் தொங்குகின்றன. பதக்கத்தின் நடுப்பகுதியில் கற்கள் பதித்த மயில் வண்ணமாய் நடனமிடுகிறது. ஆன்டிக் மயில் ஆரத்தில் எட்டு தங்க மயில் வடிவங்களும், ஒன்பதாவதாக கல் மயில் உருவமும் செதுக்கப்பட்டுள்ளன. மயில்களின் கூடாரமாய் திகழும் இந்த ஆரம் பெண்களின் கழுத்திற்கு மயில் தோரணமாய் அலங்கரிக்கின்றன.



    வண்ணமயமான நாக்ஷி- போல்கி மயில் ஆரங்கள் :

    தங்கத்தில் அழகிய தோகையுடன் கூடிய மயில் உருவத்தின் ஓரப்பகுதி, தலை பகுதி, தோகைப்பகுதியில் அன்-கட் டைமண்ட் மற்றும் வண்ணக் கற்கள் மணிகள் பதித்து மயிலை அழகுற வடிவமைத்து உள்ளன. இந்த மயில்கள் இருபுறமும் வண்ணமா ஜொலிக்க நடுவே பெரிய இருமயில்கள் வளைந்தவாறு தொங்கும் அமைப்பில் கற்கள், மணிகள் தொங்க விடப்பட்டபடி உள்ளன. பெரிய வெள்ளைக்கற்கள் மற்றும் மோல்கி வடிவமைப்பில் பெரிய அகலமான ஆரங்கள் கைநேர்த்தியுடன் உருவாக்கப்பட்டுள்ளன. இருமயில் தோகைகளுடன் இணைந்த ஆரமும் அற்புதம்.

    பச்சை வண்ண மயில் காதணிகள் :

    மயில்கள் வெள்ளை மற்றும் பச்சை கற்கள் பதித்தவாறு வளைந்தவாறும் தொங்கும் அமைப்பிலும் உள்ள காதணிகள் அழகோ அழகு. இதில் தோகை பகுதியில் பச்சை நிற கற்கள் பதித்தவாறு கீழ் பகுதியும், கொண்டை மற்றும் முகப்பகுதியில் வேறு வண்ண கற்கள் காதுடன் பொருந்தும் பகுதியாகவும், உடல் பகுதியில் வெள்ளை கற்கள் பதிய விடப்பட்டுள்ளன. தோகைகள் சுருள் அமைப்பு, நீள் அமைப்பு, வளைந்த அமைப்பு பல வகை வடிவத்துடன் மயில்கள் மாறுபட்டவாறு டிசைன் செய்யப்பட்டுள்ளன.



    இரட்டை மயில்கள் நடனமாடும் வளையல்கள் :

    முழுக்க முழுக்க தங்கத்தில் சிற்ப வேலைப்பாடு கொண்ட ஆன்டிக் வளையல்கள் அகலமாய், இடையில் கொடிகள் ஓடுவது போன்று டிசைன் செய்யப்பட்டு உள்ளன. அதுபோல் கம்பி வளையல் அமைப்பின் நடுப்பகுதியில் மட்டும் கல் பதித்த மயில்கள் நடனமாடுவதுபோன்றும், தோகையுடன் ஜொலிப்பது போன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்திற்கும் முத்தாய்ப்ாய் தங்க உடல் பகுதியில் கொண்டை, கண், தோகை அனைத்தும் மாறுபட்ட வண்ணத்தில் எனாமல் பூசப்பட்ட மயில் வளையல்கள் வர்ணஜாலம் நிகழ்த்துகின்றன. அதுபோக 'பென்டன்ட் எனும் பதக்க அமைப்புகள் தனிப்பட்ட டாலர் அமைப்பாய் மயில் உருவத்துடன் கிடைக்கின்றன.
    சிறிய அளவு 'பட்ஜெட்' கொண்ட வீடாக இருந்தாலும் கண் கவரும் அலங்கார பொருட்கள் மற்றும் அமைப்புகள் மூலம் ஒவ்வொரு அறையையும் அழகாக காண்பிக்கவே பெண்கள் விரும்புவார்கள்.
    சிறிய அளவு 'பட்ஜெட்' கொண்ட வீடாக இருந்தாலும் கண் கவரும் அலங்கார பொருட்கள் மற்றும் அமைப்புகள் மூலம் ஒவ்வொரு அறையையும் அழகாக காண்பிக்கவே அனைவரும்(பெண்கள்) விரும்புவார்கள். பொதுவாக, எல்லா அறைகளுக்கும் உள் அலங்காரம் தேவை என்ற நிலையில், ஒரு சில அறைகளை நமக்கு பிடித்தமான வகையில் அழகுபடுத்த முடியும்.

    ஒரே தோற்றம் :

    சமையல் அறை, 'வார்ட்ரோப்ஸ்' என்ற அலமாரிகள், பூஜை அறை, டி.வியை வைப்பதற்கான 'கேபினட்டுகள்', குட்டி பசங்களின் ஸ்கூல் புராஜக்ட் மற்றும் பரிசு கோப்பைகள் வைக்கும் கண்ணாடி பொருத்திய அலமாரிகள், பல்வேறு 'லேமினேஷன்கள்' ஆகியவற்றை ஒரே மாதிரியாக அமைத்தால், வித்தியாசமான அழகாக இருக்கும். சமையல் அறையில் 'வாட்டர் புரூப்' கொண்ட பொருட்களையும் பயன்படுத்தலாம்.

    அலமாரிகள் அவசியம் :

    சுவர் அலமாரிகள் 'ஸ்லைடிங்' கதவுகள் கொண்டதாக இருப்பது வழக்கம். வீட்டில் குறைவான உபயோகம் கொண்ட பொருட்களை சுவர் அலமாரிகள் அல்லது மர கதவு பொருத்தப்பட்ட 'லாப்ட்' அமைப்புகளில் வைத்து பராமரிப்பது வழக்கம். பொதுவாக கான்கிரீட் பரண்கள் அதிகமாக அமைப்பதில் பலரும் ஆர்வம் காட்டுவதில்லை. 'வார்ட்ரோப்' அமைக்கும்போது மேற்கூரையை தொடும் வகையில் உயரமாக அமைத்துவிட்டால், சூட்கேஸ்கள் உள்ளிட்ட 'டிராவல் பேக்' போன்றவற்றை அவற்றில் வைப்பது சுலபமாக இருக்கும்.



    சுவர் அலமாரிகள் :

    'வால்க் இன் க்ளோசட்' என்ற அலமாரிகளை உள்ளே அமைத்து ஒற்றை கதவு பொருத்தப்படும் முறையானது இப்போது மெதுவாக பல இடங்களில் பரவி வருகிறது. இந்த முறையில் அதிக செலவில்லை என்பது கவனிக்கத்தக்கது. ஒற்றைக் கதவு என்பதால் பொருட்கள் வைக்க நிறைய இடம் கிடைக்கும். நமது செலவுகளை பொறுத்து இரண்டு அறைகளுக்கு இடைவெளிகளில் இதை அமைத்துக்கொள்ளலாம். வீட்டு கட்டுமான பணிகளின்போதே இந்த முறைக்கான இடத்தை கச்சிதமாக தேர்வு செய்து கொள்வது சிறப்பு.

    'ஸ்கர்டிங்' பலகைகள் :

    நவீன சமையலறை அமைப்பில் கவனிக்க வேண்டிய விஷயம், கேபினட்டுகளை தாங்கக்கூடிய 'புஷ்' அமைப்பை மறைக்கும் 'ஸ்கர்டிங்' என்ற சிறிய பலகைகள் ஆகும். மேலும், அங்கே குப்பைகள் சேராமல் தடுக்கவும் இந்த அமைப்பு பயன்படும். அந்த 'ஸ்கர்டிங்' அமைப்பை மரத்தால் செய்யப்பட்டதாக இல்லாமல் 'பி.வி.சி' தயாரிப்புகளான 'பிளாஸ்டிக்' பொருள்கள் மூலம் அமைத்து, தண்ணீர் பாதிப்புகள் வராமல் தடுக்கலாம்.



    அழகிய படுக்கையறை :

    பொதுவாக, படுக்கையறை கதவு திறந்தவுடன் கண்ணில் படுக்கை படாதவாறு அமைக்கவேண்டும். படுக்கையறைக்கு போதுமான வெளிச்சம் இருக்குமாறு ஜன்னல்களை கச்சிதமாக அமைக்கவேண்டும். அறை நடுவில் கட்டில் போடும்போது 'சைடு டேபிள்' இருப்பின் அவற்றின் மீது புத்தகங்களை வைத்து உபயோகப்படுத்தலாம். சிறிய அறையாக இருந்தாலும் முக்கியமாக கருதப்படுவது படுக்கை அறையாகும்.

    படிக்கும் இடம் :

    அலுவலக பணிகள் மற்றும் பள்ளி மாணவர்களின் வீட்டுப்பாடம் போன்றவற்றை செய்வதற்காக பல வீடுகளில் 'லேப்டாப்' பயன்படுத்தப்படுவது வழக்கம். அதை பயன்படுத்தும்போதும், 'சார்ஜ்' செய்யும்போதும் தனியாக வைத்து பராமரிப்பதற்காக தனியிடம் தேவைப்படும். முக்கியமாக பசங்கள் படிக்கும்போது அமைதியாக இருப்பது அவசியம். அந்த அறைகளில் 'டிரெஸ்ஸிங் டேபிள்' வைக்கப்படும் சூழலில் அலமாரிகளில் கண்ணாடியை பதித்துக்கொள்ளலாம்.
    ×