search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95284"

    விவேகத்தன்மையுடன் செயல்படும்போது வெற்றிகள் குவியும். நீங்கள் எந்த நிலையில் இருந்தாலும் உங்களை தலைமைப் பண்புக்கு தகுதியாக்கும் சில முக்கிய விஷயங்களைப் பற்றி பார்ப்போம்...
    வாழ்க்கை விளையாட்டு விஷயமல்ல. மகிழ்ச்சியாக இருப்பதாய் நினைத்து வேடிக்கையாய் பொழுதுபோக்கி கழித்தவர்கள், பின்னாளில் தனது தவறு களுக்காக தினம் தினம் வருந்திய வரலாறுகள் உண்டு. நீங்கள் மாணவப் பருவத்திலும் சரி, வேலை உலகத்திலும் சரி விளையாட்டுக் குணங்களைக் குறைத்துக் கொண்டு, விவேகத்தன்மையுடன் செயல்படும்போது வெற்றிகள் குவியும். நீங்கள் எந்த நிலையில் இருந்தாலும் உங்களை தலைமைப் பண்புக்கு தகுதியாக்கும் சில முக்கிய விஷயங்களைப் பற்றி பார்ப்போம்...

    மாணவப் பருவத்தில் நிறைய மதிப்பெண் பெறுவதை லட்சியமாகக் கொண்ட சிலர், தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றதும், இனி எல்லாம் சரியாக அமைந்துவிடும் என்று ஆமை வேக செயல்பாட்டிற்கு சென்றுவிடுவதுண்டு. அதுபோல நல்ல வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் கொண்ட பலர், மதிப்புமிக்க ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்ததும், இனி ஒரு கவலையும் இல்லை என்று அமைதி அடைந்துவிடுவது உண்டு. இன்னும் சிலர், ஏதாவது ஒரு அரசுப் பணிக்குச் சென்றால் போதும் என்று நெடிய முயற்சி செய்து பணியில் சேர்ந்ததும் தனது வளர்ச்சிக்கு இதுபோதும் என்று முடங்கிவிடுவது உண்டு.

    ஆனால் சிறிது காலத்திலேயே, தாங்கள் இருக்கும் பணி எதிர் காலத்திற்கு பலன் தருமா? என்ற பயம் வந்துவிடும். அப்போது பல தடைகள், அடுத்தகட்ட வளர்ச்சிக்கு உங்களைச் செல்லவிடாமல் முட்டுக்கட்டை போடும். மேல் பதவிக்கு போட்டியிட வயது வரம்பு தடையாக மாறி அவதிப்படுபவர்கள் உண்டு. இருக்கிற வேலையை விட்டுவிட்டு, அடுத்த பதவிக்கான பயிற்சிகளை மேற்கொள்ள முடியாமல் தவிப்பவர்கள் உண்டு. செய்யும்வேலையுடன் கூடுதலாக பயிற்சி செய்ய முடியாமல் திணறு பவர்கள் உண்டு. குடும்பச் சூழல், பொருளாதார சூழல், கடன்கள், தேவைகள், நகர்ப்புற நெருக்கடி, கிராமப்புற நெருக்கடி என பல்வேறு நெருக்கடிகள் சூழ்ந்துகொண்டு வாழ்வையே விரக்தியாக பார்க்க வைக்கும்.

    இதுபோன்ற நெருக்கடிகள் எப்போதும் வரக்கூடாதென்றால், எதிர்காலத்தைப் பற்றிய தெளிவான செயல்பாடு அவசியம். இடையில் செயல்பாடற்ற நிலையிருந்தால் இதுபோன்ற இக்கட்டான நிலையில் மாட்டிவிடும் வாய்ப்புகள் எப்போது வேண்டுமானாலும் வரலாம். இதை விளக்கும் வரலாற்று நிகழ்வுகளில் ஒன்றை இங்கே நினைவுபடுத்திப் பார்க்கலாம்...

    உலகின் புகழ்மிக்க தொழில்அதிபரும், பணக்காரருமான ராக்பெல்லரிடம், விமானப் பயணத்தின்போது அருகில் இருந்த ஒருவர் கேட்டாராம், “உங்களிடம்தான் போதுமான அளவுக்கு செல்வம் இருக்கிறதே, இன்னும் ஏன் இப்படி ஓடிக்கொண்டிருக்கிறீர்கள்?” என்பது அந்த பயணியின் கேள்வி. அதற்கு ராக்பெல்லர் என்ன சொன்னார் தெரியுமா? “உண்மைதான், நாம் மிக உயரமான இடத்திற்கு வந்துவிட்டோம். இப்போது விமான இயக்கத்தை நிறுத்திவிட்டால் உயரமான இடத்தில் நிலைத்துவிடுவோமா? என்று பதில் கேள்வி கேட்டவர், “அது போலத்தான் செல்வம் சேர்ந்துவிட்டாலும் உழைப்பை நிறுத்த முடியாது” என்று விளக்கம் அளித்தாராம்.

    இருக்கும் நிலையில் திருப்தி அடைந்து விடக்கூடாது என்பது இதன் பொருளல்ல. எல்லா காலத்திலும் நிலைக்கும்படியான தகுதியும், உழைப்பும் உங்களிடம் இருக்க வேண்டும். அத்தகைய விவேகமும், தலைமைப் பண்பும் இருக்கும் வரை நீங்கள் வீழ்ந்துவிடாமல் இருப்பீர்கள். அது கீழ்நிலைப் பணியாக இருந்தாலும், அதைச் செய்து முடிப்பதில் உங்கள் விவேகமும், மேலாண்மைப் பண்பும் எல்லோரும் போற்றும்படியாக இருக்க வேண்டும்.

    உங்களைப் புறக்கணித்து ஒதுக்கும் வகையில் உங்கள் செயல்பாடு எப்போதும் இருந்துவிடக்கூடாது. எப்போதும் உங்களுக்கு எதிரான, எதிர்மறையான விஷயங்கள் விவாதிக்கப்படுவதாக இருக்கக்கூடாது. உங்களை சிறுமைப்படுத்தும் மதிப்பிடல்கள் தோன்றக் கூடாது.

    யாரும் உதாசீனப்படுத்த முடியாத அளவுக்கு உங்கள் செயல்பாடுகள் அமைய மாணவப் பருவத்திலும், வேலை உலகத்திலும் நீங்கள் செய்ய வேண்டியவை...

    எல்லாவற்றுக்கும் பொறுப்பாளராகுங்கள்: எல்லாவற்றையும் உங்களால் செய்ய முடியும் என்று நம்புங்கள். அதிகமான வீட்டுப்பாட பயிற்சிகள், புதுமையான பயிற்சித் திட்டங்களை நம்பிக்கையுடன் செய்யுங்கள். அலுவலகத்தில் உங்களுக்கு வழங்கப்படும் கூடுதல் பணிகளை, உங்கள் மேல் திணிக்கப்பட்டதாக நினைக்காமல், என்னால் செய்ய முடியும் என்பதை என்பதை எல்லோருக்கும் புரிய வையுங்கள். பொறுப்பேற்று செயல்படுங்கள். மேலதிகாரியிடம் நற்பேறு வாங்குவதற்காக பணி செய்யாமல், ஆத்மார்த்தமான பணியால் மன மகிழ்ச்சி கொள்ளுங்கள். அது இன்றில்லா விட்டாலும் ஒருநாள் உங்களை உயர்நிலைக்கு அழைத்துச் செல்லும்.

    முடிவு எடுக்க தயங்காதீர்கள் : வெற்றியைத் தடுக்கும் முக்கிய எதிரி தயக்கம். “ஒரு முடிவும் எடுக்காமல் இருப்பதைவிட தவறான முடிவு மேலானது” என்பது வணிக வாக்கு. தொடங்காமல் இருப்பதைவிட தோல்வி பலபடி முன்னேற்றம்தான். எனவே எந்த சூழ்நிலையிலும் தயங்கி நிற்பதுடன் ஒரு முடிவெடுத்து செயல்படுவது வெற்றியை நெருங்கிச் செல்ல பெரிதும் கைகொடுக்கும். இப்போது உங்களுக்கு தடையாய் இருக்கும் சூழலை எதிர்கொள்ள நீங்கள் எடுக்கும் முடிவில் தெளிவாகவும், உறுதியாகவும் செயல்படுங்கள், பலன் வெற்றியாய் மாற வாய்ப்புகள் அதிகம்.

    நட்புறவுச் செயல்பாடு: எப் போதும் நட்புணர்வுடன் கூடிய செயல்பாடு வெற்றியை எளிமையாக்கும். சிம்மாசனத்தை நிலைப்படுத் தும். நீங்கள் வகுப்பின் தலைமை மாணவராகவோ, பணியில் குழுவின் தலைவராகவோ, அதிகாரி யாகவோ இருக்கலாம். ஆனால் அனைவருடனும் இணக்கமான நட்புறவு கொண்டிருந்தால் மட்டுமே உங்கள் பொறுப்பில் நிலைத்திருக்கவும், மேலும் உயரவும், வெற்றி காணவும் முடியும். வெறும் அதிகாரத்தை மட்டுமே பயன்படுத்தி வெற்றி கண்டவா்கள் இல்லை.

    தன்னிலை அறிதல்: எந்த நிலையிலும் தனது செயல்பாடுகளை பரிசோதித்துப் பார்ப்பவர்கள் பின்னடைவைச் சந்திப்பதில்லை. மாணவப் பருவத்தில் நீங்கள் உங்கள் முந்தைய தேர்வுகளையும், படிக்கும் நேரத்தையும், மதிப்பெண் உயர்வையும் ஒப்பிட்டு உங்கள் செயல்பாட்டை மதிப்பிடுங்கள். அது உங்கள் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு உதவும். வேலை உலகில், தங்கள் குழுவினர் மத்தியிலும், உயர் அதிகாரி அளவிலும் உங்களின் செயல்பாடு திருப்தியாக இருக்கிறதா? உங்களைப்பற்றிய எதிர் மறையான எண்ணங்கள் இருக்கிறதா? என்பதை சுயமதிப்பீடு செய்யுங்கள். குறிப்பிட்ட கால இடைவெளியில் இப்படி தன்மதிப்பீடு செய்து கொள்வது வளர்ச்சியை சீராக வைத்துக் கொள்ள உதவும்.

    இத்தகைய விவேகமான செயல்பாடு வாழ்வில் என்றும் சரிவின்றி நிலைத்த வெற்றியைத் தரும்.
    இன்று வளர்ந்துள்ள தொழில்நுட்ப வளர்ச்சி பெரும்பாலானவர்களை தவறான பாதைக்கே அழைத்துச்செல்கிறது. குறிப்பாக சமூக வலைதளத்தினால் பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர்.
    தொழில்நுட்ப வளர்ச்சி என்பது நன்மை தருவதற்கு மட்டும் தானே தவிர கெடுதல் தருவதற்கு அல்ல. ஆனால் இன்று வளர்ந்துள்ள தொழில்நுட்ப வளர்ச்சி பெரும்பாலானவர்களை தவறான பாதைக்கே அழைத்துச்செல்கிறது. குறிப்பாக சமூக வலைதளத்தினால் பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். அப்படி பேஸ்புக் எனும் சோஷியல் மீடியா மூலம் எப்படி பெண்கள் தடம் மாறுகிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்!

    ஒருவர் தனது புகைப்படத்திற்கு அல்லது பதிவிற்கு தொடர்ந்து லைக் செய்து, கருத்து தெரிவித்து வந்தால் அவருடன் பெண்கள் பழக ஆரம்பித்துவிடுகிறார்கள்.

    அருகில் இருப்பவர்களுடன் பிடிப்பு இல்லாத நட்பு உடைய பெண்கள் பேஸ்புக் மூலம் ஆண் நண்பர்களை தேடி ஏமாந்து போகின்றனர்.

    பேஸ்புக்கில் அதிக லைக்ஸ் வாங்க வேண்டும் என்ற லைக்ஸ் மோகத்தினாலும் பெண்கள் அதிகம் பாதிப்படைகின்றனர்.

    நேரில் அல்லது அருகே அதிக தோழமை அல்லது உறவில் பெரிய பிடிப்பு இல்லாத பெண்கள், ஃபேஸ்புக் மூலம் பழகும் நட்பு வட்டாரத்தை பெரிதாக்கி கொள்ள விரும்புகின்றனர். இதனால், ஆயிரக்கணக்கான நட்புகள் சேர்த்துக் கொள்ள முகம் தெரியாத நபர்களை இணைத்துக் தனது விபரங்களை பகிர துவங்கி விடுகிறார்கள்!

    சின்ன, சின்ன பிரச்சனைகள் எழுந்தாலும் கூட, உடனே காதல் முறிந்து, அடுத்த நபருடன் இணையவும் சமூக தளம் ஒரு காரணியாக இருக்கிறது. இப்போதெல்லாம் காதல் தோல்வியை புகைப்படத்துடன் ஃபீலிங் எலோன் என பதிவு செய்வது அதிகரித்து விட்டது. இதை கண்டதும், தோள் கொடுத்து ஆசை வார்த்தை பேசி, காதலில் அப்பெண்ணை வீழ்த்த துடிக்கும் அன்(ம்)புகள் இங்கே ஏராளம்.

    இளவட்ட வயதான 17 - 24-க்குட்பட்ட வயதினர் அதிகமாக ஃபேஸ்புக் மாயைகளில் ஏமார்ந்துவிடுகின்றனர். புதிய நபர்களுடன் பழகுவதில் இருக்கும் ஈர்ப்பு, வெளி செல்ல வேண்டும் என்ற துடிப்பு போன்றவை இவர்களை ஏமாற செய்கிறது. ஃபேஸ்புக் மூலம் இணைந்த பல காதலர்களும் இருக்கிறார்கள், ஃபேஸ்புக் மூலம் பிரிந்த காதலர்களும் இருக்கிறார்கள். இவை அனைத்தும் ஒரு நபர் எப்படி ஃபேஸ்புக் என்ற கருவியை பயன்படுத்துகிறார் என்பதில் தான் இருக்கிறது.

    மார்பகத்தில் உள்ள திசு சுரப்பிகளின் எண்ணிக்கையையும், அவை தூண்டப்படும் விதத்தையும் பொறுத்துதான் ஒரு பெண்ணுக்கு எந்த அளவுக்கு தாய்ப்பால் சுரக்கும் என்பதை தெரிந்துகொள்ள முடியும்.
    பெண்களுக்கு என்று இறைவன் ஸ்பெஷலாக கொடுத்த வரம்தான்… தாய்ப்பால். குழந்தை பிறந்த அக்கணமே ஒரு பெண்ணின் மார்பகத்தில் சுரக்கக்கூடியது இது.

    சில பெண்களுக்கு மார்பகம் பெரியதாக இருக்கும். ஆனால், தாய்ப்பால் சுரப்பு குறைவாக இருக்கும். இன்னும் சிலருக்கு மார்பகம் சிறியதாக இருக்கும். அதேநேரம், தாய்ப்பால் அதிகமாக சுரக்கும்.

    இன்னும் சில நேரங்களில், சில தாய்மார்களுக்கு குழந்தை பெற்றெடுத்த சில நாட்களிலேயே தாய்ப்பால் சுரப்பு வெகுவாக குறைந்து விடும்.

    ஏன் அப்படியெல்லாம் நிகழ்கிறது?

    பொதுவாக குழந்தை பெற்றெடுத்த ஒரு ஆரோக்கியமான பெண்ணுக்கு தினமும் சுமார் 850 மில்லி லிட்டர் தாய்ப்பால் சுரக்கும். இந்த தாய்ப்பால் சுரப்புக்காக அந்தப் பெண் தினமும் சுமார் 600 கலோரியை கூடுதலாக இழக்க வேண்டியது இருக்கிறது.

    சத்தான கீரை வகைகள், காய்கறிகள், பால், பழங்கள், புரதம் மிகுந்த உணவு பொருட்கள், நீர் போன்றவற்றை சரியான விகிதத்தில் அந்த தாய் எடுத்து வந்தால்தான், அவளது தாய்ப்பால் சுரப்பால் ஏற்படுகின்ற கலோரி இழப்பு ஈடு செய்யப்படும்.

    அதை தவிர்த்து, சத்து குறைவான உணவு வகைகள் அவளுக்கு கொடுக்கப்பட்டால் அவளது உடல் திறனும் பாதிக்கப்படும். தாய்ப்பால் சுரப்பும் குறைந்துவிடும்.

    மேலும், தாய்ப்பால் ஊட்டும் பெண்களின் மார்பக அளவுக்கும், தாய்ப்பால் சுரப்புக்கும் சம்பந்தமே இல்லை.

    மார்பகத்தில் உள்ள திசு சுரப்பிகளின் எண்ணிக்கையையும், அவை தூண்டப்படும் விதத்தையும் பொறுத்துதான் ஒரு பெண்ணுக்கு எந்த அளவுக்கு தாய்ப்பால் சுரக்கும் என்பதை தெரிந்துகொள்ள முடியும்.

    குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்கிற ஆர்வம் கூட ஒரு பெண்ணின் தாய்ப்பால் சுரப்பு திசுக்களை தூண்டிவிடும்.
    நம் வாழ்க்கையில் நம்மைச் சுற்றியுள்ள சாமானிய மக்களிடமிருந்தும், சாதாரண நிகழ்வுகளிலிருந்தும் பாடங்களைக் கற்றுக் கொள்வது நல்ல முன்னேற்றத்தைத் தரும்.
    நாம் எப்போதும் நம்மைவிட புகழிலும், செல்வத்திலும் உயர்ந்த நிலையில் இருப்பவர்களையே நமது முன்னோடியாக ஏற்றுக்கொண்டு அவர்களைப்போல முன்னேற முயல்கிறோம். சில சமயங்களில் நமக்குக் கீழே இருப்பவர்களின் முயற்சியையும், சுறுசுறுப்பையும் கவனிக்கத் தவறிவிடுகிறோம். நம் வாழ்க்கையில் நம்மைச் சுற்றியுள்ள சாமானிய மக்களிடமிருந்தும், சாதாரண நிகழ்வுகளிலிருந்தும் பாடங்களைக் கற்றுக் கொள்வது நல்ல முன்னேற்றத்தைத் தரும்.

    புகழ்பெற்ற தன்னம்பிக்கை எழுத்தாளரான, ஜிம் ரோன் (Jim Rohn) வாழ்வில் முன்னேற ஊக்கமளிக்கும் `எறும்புகள் தத்துவம்' (Ants philosophy) என்று மூன்று செய்திகளை பாடங்களாக எடுத்துச் சொல் கிறார். அவை..

    1. முயற்சியை விட்டு விடாதே: எறும்பு களைப் பாருங்கள். எப்பொழுதாவது முயற்சியை விட்டு விடுகின்றனவா? அவைகள் செல்லும் வழியில் தடங்கலை ஏற்படுத்திப் பாருங்கள். முட்டி, மோதி தடம் மாறி மேலே செல்ல முயற்சிக்கும். முயற்சியைக் கைவிடுவதில்லை. இதுபோல நம் வாழ்விலும் பல நேரங்களில் நினைத்த காரியங்கள் நினைத்தவுடன் நடக்காமல் தடங்கல் ஏற்படலாம். துவளாமல் அவற்றை சவாலாக எடுத்து, மாற்று வழியை ஆராய்ந்து முயற்சி செய்யுங்கள். வெற்றி நிச்சயம். முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலும் இதையே, ‘விடாதே, விடாதே, விட்டு விடாதே' என்று தாரக மந்திரமாகச் சொன்னார்.

    2. துணிந்து செல்: எறும்புகள் எதிர் வரும் குளிர் காலத்தை மனதில் வைத்து, கோடை காலத்தில் சுறு சுறுப்பாக தானியங்களை சேமிக்கின்றன. ஆனால் வெட்டுக் கிளிகள் சோம்பேறியாக துள்ளித் திரிகின்றன. கோடை காலம் வெகு நாட் களுக்கு நீடிக்காது என்று எறும்புகளுக்குத் தெரியும். எறும்புகளைப்போல எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். எல்லோரிடமும் அன்பாய் இரு. சில சந்தர்ப்பங்களில் நேரம் சரியில்லாவிட்டாலும், துன்பம் வரும் நேரத்தில் நல்ல நண்பர்கள் கைகொடுப்பார்கள்.

    3. நம்பிக்கை வை: எறும்புகள் தாங்க முடியாத குளிர் காலத்தில், எதிர் வரும் கோடை காலத்தை மனதில் வைத்து பொறுமையாகக் காத்திருக்கும். கோடை காலம் வந்ததும் மீண்டும் சுறுசுறுப்பாக வெளிக் கிளம்பி, தானியங்கள் சேகரிக்க ஆரம்பித்து விடும். அது போல துன்பம் வரும் வேளையில் துவண்டு விடாமல் பொறுத்திரு. காத்திரு. தீராத பிரச்சினை என்று எதுவுமில்லை. அதற்கு பிறருக்கு தீங்கு நினையாத நல்ல மனம் வேண்டும். நல்லது நடக்கும் என்று நம்பி, காத்திருந்து முயற்சித்தால் எதிர் காலம் வளமாக அமையும்.

    ஒன்று தெரியுமா? எறும்புகள் தன் எடையைப் போல 50 மடங்கு கனமான பொருட்களை தூக்கிச் செல்ல முடியும். எனவே அடுத்த முறை நம்மால் முடியாது என்று நினைக்கும் போது, மிரண்டு விடாதே, சிறிய எறும்புகளை நினைத்துப் பார். உன் தோள்களின் சுமை எளிதாகும்.
    `பெண்கள்தான் ஷாப்பிங் செய்வதில் கில்லாடிகள். ஷாப்பிங் செய்வதற்கு பொறுமை தேவை. அது பெண்களிடம் நிறைய இருப்பதால், அவர்கள் ஷாப்பிங்கில் சிறந்து விளங்குகிறார்கள்..’ என்கிறது, சமீபத்திய ஆய்வுகள்.
    ஒரு பொருளை வாங்க பல கடைகளுக்கு ஏறி இறங்குவது பெண்கள்தான். அப்படி ஏறி இறங்க அவர்கள் அலுக்கவேமாட்டார்கள். ஒரு முறைக்கு பல முறை விலை விசாரித்து சரியான பொருளை, சரியான விலைக்கு வாங்குவது பெரும்பாலும் பெண்கள்தானாம். தேவைப்பட்டால், ஏற்கனவே அந்த பொருளை வாங்கியவர்களிடம் அதுபற்றி விசாரித்து, தரத்தை எல்லாம் பரிசோதித்து வாங்குவதில் பெண்கள் தான் கில்லாடிகள்.

    ஆண்களிடம், தங்களுக்கு எல்லாம் தெரியும் என்ற எண்ணமும், கொஞ்சம் கர்வமும் இருந்து கொண்டே இருப்பதால் தாங்கள் வாங்கப்போகும் பொருள் பற்றி அடுத்தவர்களிடம் விசாரிக்க விரும்பமாட்டார்கள். `என்ன ஆயிடும்! வாங்கிப் பார்த்திடலாமே’ என்ற எண்ணத்தில் அதிகம் ஆராயாமல் அந்த பொருளை வாங்கிவிடுவார்கள். பெண்கள் முன்பின் அறிமுகமில்லாதவர்களிடம் கூட தயங்காமல், புதிய பொருளைப் பற்றி விசாரி த்து உண்மை நிலையை அறிய முன்வருவார்கள். அதற்காக மெனக்கெடவும் செய்வார்கள். அதுதான் பெண்களிடம் இருக்கும் பிளஸ் பாயிண்ட்.

    பெரும்பாலான ஆண்கள் ஷாப்பிங் போவதை நேரத்தை வீணடிக்கும் செயல் என்று நினைக்கிறார்கள். அதனால் வாங்க வேண்டியது எவ்வளவு முக்கியமான பொருளாக இருந்தாலும் சீக்கிரமாக ஷாப்பிங்கை முடித்துக் கொள்ள வேண்டும் என்றே நினைப்பார்கள் அல்லது தனக்கு தேவையான பொருளை மற்றவர்களிடம் வாங்கிவரும்படி கூறிவிடுவார்கள். இதனால் ஆண்களிடம் ஷாப்பிங் திறமை வளர்வதில்லை.

    பேரம் பேசுவதை ஒரு தன்மானக் குறைவாக ஆண்கள் நினைக்கிறார்கள். ஒரு பொருளை இரு மடங்கு விலை கொடுத்து வாங்கியாவது தன்மானத்தை அந்த இடத்தில் காப்பாற்றிக் கொள்ள விரும்புவார்கள். தன்மானம் என்பது தான் ஏமாறுவது அல்ல என்று அவர்கள் புரிந்துகொள்வதில்லை. பேரம் பேசுவது தன்மானத்திற்கு இழுக்கு அல்ல என்பதை பெண்கள் புரிந்துவைத்திருக்கிறார்கள்.

    வீட்டிற்கு என்னென்ன பொருள்கள் தேவை, எந்த அளவுக்கு அவை தேவை என்பதை பெண்களே அதிகம் அறிந்திருக்கிறார்கள். ஒரு பொருளின் உபயோகம் என்ன, அந்த பொருளுக்கு எவ்வளவு செலவழிக்கலாம் என்ற முன்யோசனையும் பெண்களுக்கு உண்டு. அவர்கள் எதிர்பார்க்கும் விலைக்கு மேல் அந்த பொருள் இருந்தால் அதை வாங்காமலேயே வீட்டிற்கு கிளம்பிவிடுவார்கள். இப்படி பின்வாங்கிச் செல்லும் `டெக்னிக்’ ஆண்களுக்கு சுட்டுப்போட்டாலும் வராது.

    ஆண்கள் லிஸ்ட் எழுதிவிட்டால், லிஸ்டில் இருக்கும் அத்தனை பொருட்களையும் வாங்கி கையில் இருக்கும் பணம் அனைத்தையும் `ஐஸ்’ போல் கரைத்துவிட்டுத்தான் செல்வார்கள் என்பது பொதுவான மதிப்பீடு.

    பெண்களோ, மூச்சுக்கு மூச்சு `இவ்வளவு செலவழிக்க வேண்டியிருக்கிறதே!’என்று மனதுக்குள்ளாவது புலம்பிக்கொண்டேதான் வாங்குவார்கள். சூழ்நிலைக்கு ஏற்ப `லிஸ்டை’ மாற்றிக் கொள்ளும் பக்குவமும் பெண்களிடம் உண்டு. அதனால் கூடுமானவரை தங்கள் பட்ஜெட்டிற்குள் ஷாப்பிங்கை பெண்கள் பூர்த்தி செய்துவிடுவார்கள்.

    எந்தெந்த இடத்தில் எந்தெந்த பொருள் அதிகம் கிடைக்கும் என்பதையும் பெண்கள் தெரிந்து வைத்திருப்பார்கள். தேவை என்றதும் சற்றும் யோசிக்காமல் அந்த இடத்துக்கு போய் பொருட்களை வாங்கி வந்துவிடுவார்கள். இதனால் தேவையற்ற அலைச்சல் மிச்சம். பெண்களைப் பொறுத்தவரை ஷாப்பிங் என்பது ஒரு மகிழ்ச்சியான வேலை. அதனை கூடுமானவரை வசதியாக மாற்றிக் கொள்வார்கள். ஆண்களுக்கு ஷாப்பிங் என்பது பெரிய சுமை, கால விரயம். அதனால் தன்னை வருத்திக்கொண்டு அதை செய்வார்கள்.

    எந்தெந்த கடையில் எப்போது எந்த பொருளுக்கு தள்ளுபடி தருவார்கள் என்பது பெண்களுக்குத் தெரியும். ஷாப்பிங் போவது ஒருநாள் என்றாலும் அதற்கான முன்னேற்பாடுகளை பல நாட்களாக செய்வார்கள். விலையை பற்றிய மதிப்பீடும் அவர்களிடம் உண்டு. அதனால் பெண்கள் ஷாப்பிங் செய்வது சுலபமாகிவிடுகிறது.

    தான் வாங்கிய பொருளைப் பற்றி மற்றவர்களிடம் கூறுவது பெண்களின் வாடிக்கை. எல்லா பெண்களும் இதுபற்றி வெளிப்படையாக பேச விரும்புவதால், பெண்கள் அதிகமாக ஷாப்பிங் பற்றிதான் பேசுகிறார்கள். அதனால் பெண்களில் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு ஷாப்பிங் அனுபவம் நிறைய கிடைக்கிறது. இது அவர்களுடைய ஷாப்பிங் ஆர்வத்தை தூண்டும் விதமாக அமைகிறது. அதனால் பெண்கள் ஷாப்பிங் செய்யும்போது மகிழ்கிறார்கள்.

    பெரும்பாலான பெண்கள் ஆண்களை அழைத்துக் கொண்டு ஷாப்பிங் செல்வதை விரும்புவதில்லை. காரணம் சீக்கிரமாக ஷாப்பிங்கை முடித்துக் கொள்வதிலேயே ஆண்கள் கவனமாக இருப்பார்கள். அதனால் பெண்கள் தங்களுக்கு இணக்கமான பெண்களைத் தான் ஷாப்பிங் செல்ல உடன் அழைத்துச் செல்கிறார்கள். இது பெண்களிடையே ஆழமான நட்பை உருவாக்கவும் செய்கிறது.

    இதில் இன்னொரு முக்கியமான விஷயத்தையும் குறிப்பிட்டுத்தான் ஆகவேண்டும். விலை மதிப்புள்ள தங்கம், வெள்ளி ஆபரணங்களை வாங்கும்போது அதில் அதிக கவனம் செலுத்துவது ஆண்கள்தான் என்று ஆய்வு குறிப்பிடுகிறது. விலை, தரத்தை பரிசோதிப்பதில் ஆண்கள்தான் அதிக கவனம் எடுத்துக்கொள்வார்களாம்.

    பெண்கள் ஷாப்பிங் செய்வதில் கில்லாடிகளாக இருக்கலாம். ஆனால் ஆண்களின் அறிவுரைகளையும், மனதில் வைத்துக் கொண்டு ஷாப்பிங் செய்தால் அது மிகவும் லாபகரமான ஷாப்பிங்காக இருக்குமாம்!
    போன்களால் நமக்கு பலவகை ஆபத்துகளும் ஏற்படுகின்றன. குறிப்பாக நாம் செல்போன் வைத்திருக்கும் பல வகை அந்தரங்க தகவல்கள் திருடப்படுவதாக கூறப்படுகிறது.
    செல்போன் இன்று உலகம் முழுவதும் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. செல்போன் இல்லாதவர்களே இல்லை என்ற நிலையை நோக்கி தற்போது சென்று கொண்டிருக்கிறது. அதுவும் பல்வேறு வசதிகளையும் கொண்ட ஸ்மார்ட் போன்களுக்கு பெரும்பாலானோர் மாறி விட்டனர். ஆனால், இந்த போன்களால் நமக்கு பலவகை ஆபத்துகளும் ஏற்படுகின்றன. குறிப்பாக நாம் செல்போன் வைத்திருக்கும் பல வகை அந்தரங்க தகவல்கள் திருடப்படுவதாக கூறப்படுகிறது.

    போனில் எந்த ஒரு செயல்பாட்டையும் மேற்கொள்வதற்கு ஆண்ட்ராய்டு பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிளின் ஆப் ஸ்டோருக்கோ சென்று செயலிகளை பதிவிறக்கம் செய்கிறோம். பயன்படுத்தும் செயலியை இன்ஸ்டால் செய்வதற்கு முன் அது கேட்கும் அனுமதிகளை பார்த்தீர்களானால் அதிர்ச்சியடைய நேரிடும்.

    உதாரணமாக, புகைப்படத்தை எடிட் செய்யும் ஒரு பிரபல செயலியை இன்ஸ்டால் செய்வதாக வைத்து கொள்வோம். அப்போது கேமரா, தொடர்பு எண்கள், லொகேஷன், ஸ்டோரேஜ் போன்றபலவற்றிற்கு அனுமதி அளித்தால்தான் அந்த செயலியை செயல்படுத்த முடியும். ஆனால், புகைப்படத்தை எடிட் செய்யும் இந்த செயலிக்கு, புகைப்படம், தொடர்பு எண்கள், ஸ்டோரேஜ் ஆகியவை அவசியம்தான். ஆனால், முற்றிலும் தேவையற்ற லொகேஷன், இருப்பிடத்தை கண்டறிந்து அதன் மூலம் மிகச்சரியான விளம்பரங்களை உங்களது போனுக்கு அனுப்பி பணம் சம்பாதிப்பதற்காக அனுமதி கேட்கப்படுகிறது.

    இதேபோன்று பல்வேறு செயலிகளில் முற்றிலும் சம்பந்தமே இல்லாத தகவல்கள் கேட்கப்படுகின்றன. கண்மூடித்தனமாக செயலிகளை இன்ஸ்டால் செய்பவர்கள், அதிலுள்ள ஆபத்தை உணராமல் ஜி.பி.எஸ்., நெட்ஒர்க் செயல்பாடு, வைபை, மற்ற ஆப்களின் செயல்பாட்டை கண்காணித்தல் - முடக்குதல், ஐ.எம்.இ.ஐ. எண் போனை அணையாமல் இருக்க செய்தல், தகவல்களை மாற்ற, நீக்க அனுமதி போன்ற பல்வேறு தகவல்களுக்கு ஒப்புதல் கொடுத்து செயலியோடு பிரச்சினையையும் இலவசமாக வாங்கி கொள்கின்றனர்.

    போனில் இருக்கும் புகைப்படங்கள், வீடியோக்கள், ஆவணங்கள் போன்றவற்றை உங்களுக்கு தெரியாமலேயே அந்த செயலிகள் தனது சர்வர்களில் பதிவேற்றம் செய்துகொள்வதற்கு வாய்ப்புள்ளது. இதுபோல் அந்த ரங்க தகவல்களையும் எடுத்து கொண்டும் கூகுள் உள்ளிட்ட தேடுபொறி இணைய தளங்கள் உங்களுக்கு தெரியாமலேயே கூகுள் சேகரிக்கும் பட்டியல் மிகவும் நீண்டது. இந்த காலத்தில் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கணக்கு இல்லாதவர்களை கண்டறிய முடியாத அளவுக்கு அவற்றின் பயன்பாடு மிகப் பெரியளவில் விரிவடைந்துள்ளது.



    பேஸ்புக் பயன்பாட்டாளர்கள், அதில் ஒரு பதிவை பகிரும் போது அதை யார் யாரெல்லாம் பார்க்க முடியும் என்று தேர்ந்தெடுக்கலாம். அதன்படி, பேஸ்புக்கின் மென்பொருளில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினையின் காரணமாக சுமார் 14 மில்லியன் பயன்பாட்டாளர்கள் தங்களுக்கு தெரியாமலேயே பொதுவாக தெரிவு செய்யும் “ஒன்லி மீ” என்பதற்கு பதிலாக “பப்ளிக்கில்” பதிவுகளை போட்டிருக்கக் கூடும் என்று சமீபத்தில் அந்நிறுவனம் எச்சரித்திருந்தது. இதன் மூலம் தங்களது அந்தரங்க தகவல்களை தங்களுக்கு தெரியாமலேயே பயனாளர்கள் பொதுவெளியில் பகிர்ந்திருக்கக் கூடும்.

    கைபேசி செயலிகளை போன்றே பேஸ்புக்கை முதலாக கொண்டு ஒரு இணையதளத்தில் கணக்கை ஆரம்பிக்கும் போதோ அல்லது கேம் விளையாடும்போது நீங்கள் அந்தரங்கமாக வைத்திருக்கும் தகவல்கள், பதிவுகள், நண்பர்களின் தகவல்கள், உங்களது நடவடிக்கைகள் போன்றவற்றை பயன்படுத்துவதற்கு ஏதோவொரு செயலின் வடிவமைப்பாளருக்கு அதிலுள்ள ஆபத்து தெரியாமல் பலரும் அனுமதி தருகிறார்கள்.

    இதுபோன்ற செயலிகள் சில நேரங்களில் உங்களது கணக்கை பயன்படுத்தி உங்களது நண்பர்களுக்கு நீங்கள் அனுப்பியதாக தவறான வீடியோ, புகைப்படங்கள், இணையதள இணைப்புகளை பகிரும் சம்பவங்கள் பரவலாக நடந்து வருகின்றன. இலவச கிளவுட் ஸ்டோரேஜ் சேமிப்பு, கருத்துக் கணிப்பில் பங்கேற்றால் இலவச கூப்பன், பயனர் கணக்கு உள்ளவர்களுக்கே உள்நுழைய அனுமதி, புதிய கணக்கை தொடங்கினால் வாங்கும் பொருளில் தள்ளு படி போன்ற பல்வேறு கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி பலரும் தங்களது அந்தரங்க தகவல்களை அளித்து நம்பகத்தன்மையற்ற இணையதளங்களில் உள்நுழைகின்றனர்.

    மேற்குறிப்பிடப்பட்டது போன்ற விளம்பரங்களை நம்பி முன்பின் தெரியாத இணையதளங்களில் அந்தரங்க தகவல்களை அளித்த பயனீட்டாளர்களுக்கு என்றாவது ஒரு நாள், தன்னுடைய போட்டோ மார்பிங் செய்யப்பட்டு வெளிவரும்போதோ அல்லது வங்கியிலுள்ள பணம் நூதமான முறையில் திருடப்படும் போதோ தான் அதன் தீவிரம் தெரிய வருகிறது.

    ஒரு செயலியையோ, மென்பொருளையோ, இணையதள கணக்கையோ முதன் முதலாக பயன்படுத்துவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் நூற்றுக்கணக்கான பக்கங்களை கொண்ட விதிமுறைகளை படிக்காமல், அனைத்துக்கும் ‘அக்சப்ட்’ கொடுப்பவர்களுக்கு என்றாவது ஒருநாள் தங்களது அந்தரங்க தகவல்களுக்கு பாதிப்பு ஏற்படும் போது தான் அதன் வீரியம் புரிகிறது.
    தடை செய்யப்பட்ட வயதுடைய 2 பெண்கள் மட்டுமே சபரிமலையில் தரிசனம் செய்ததாக தேவசம் போர்டு மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார். #KadakampallySurendran #Sabarimala
    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடந்து வந்த நிலையில், கடந்த மாதம் 2-ந் தேதி தடை செய்யப்பட்ட வயதுடைய 2 பெண்கள் தரிசனம் செய்தனர்.

    இதைப்போல சபரிமலையில் சமீபத்தில் நடந்து முடிந்த மகரவிளக்கு-மண்டல பூஜை காலத்தில் தடை செய்யப்பட்ட வயதுடைய 51 பெண்கள் தரிசனம் செய்ததாக சுப்ரீம் கோர்ட்டில் மாநில அரசு தெரிவித்தது. இது மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இது தொடர்பாக மாநில சட்டசபையில் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின.



    இதற்கு தேவசம் போர்டு மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் எழுத்து மூலம் பதிலளித்தார். அதில் அவர், சபரிமலையில் சமீபத்தில் நடந்து முடிந்த சீசன் காலத்தில் தடை செய்யப்பட்ட வயதுடைய 2 பெண்கள் மட்டுமே தரிசனம் செய்ததாக கூறினார். சசிகலா (வயது 47) என்ற இலங்கைப்பெண் சபரிமலையில் தரிசனம் செய்ததாக வெளியான தகவல் குறித்து இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

    மந்திரியின் இந்த தகவலால் சபரிமலையில் தரிசனம் செய்த தடை செய்யப்பட்ட வயதுடைய பெண்களின் எண்ணிக்கையில் குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது. #KadakampallySurendran #Sabarimala

    வீட்டு நிர்வாகம், அலுவலக வேலை ஆகிய இரண்டு பணிச் சுமைகளை சுமந்து கொண்டிருக்கும் பெண்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகுவது தவிர்க்க முடியாததாகிவிட்டது.
    வீட்டு நிர்வாகம், அலுவலக வேலை ஆகிய இரண்டு பணிச் சுமைகளை சுமந்து கொண்டிருக்கும் பெண்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகுவது தவிர்க்க முடியாததாகிவிட்டது. அப்படி பணிக்கு செல்லும் தாய்மார்கள் மற்ற பெண்களை விட 40 சதவீதம் அதிகமாக மன அழுத்தத்திற்கு ஆளாகுவதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அதிலும் இரண்டு குழந்தைகள் கொண்ட தாய்மார்கள்தான் அதிக பாதிப்புக்கு ஆளாகிறார்கள்.

    அக்குழந்தைகள் 15 வயதுக்குட்பட்டவர்களாக இருக்கும்பட்சத்தில் அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு எதிர்கொள்ளும் சிரமங்கள் மன அழுத்தத்தை அதிகப்படுத்திவிடுகிறது. குழந்தை இல்லாமல் முழு நேரமாக வேலையில் ஈடுபடும் பெண்களை ஒப்பிடும்போது அவர்களை விட ஒரு குழந்தை கொண்ட தாய்மார்கள் 18 சதவீதம் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள்.

    மான்செஸ்டர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் மேற்கொண்ட இந்த ஆய்வில் 6025 பெண்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களின் ரத்த அழுத்தம், ஹார்மோன் அளவுகள், உடல் உழைப்பு, பணி சார்ந்த வாழ்க்கை முறை உள்ளிட்டவற்றை அடிப்படையாக கொண்டு மன அழுத்தம் அளவீடு செய்யப்பட்டிருக்கிறது. அத்துடன் பெண்களின் வயது, கல்வி, பார்க்கும் வேலை மற்றும் வருமானம், பணி நேரம், குடும்ப சூழ்நிலை போன்றவைகளும் கவனத்தில் கொள்ளப்பட்டன.

    இதுபற்றி ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், ‘‘குடும்பத்தில் நிலவும் மோதல் போக்கும், பணி நெருக்கடியும் மன அழுத்தத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டவை. இரண்டையும் சுமுகமாக கையாள வேண்டும். பணி பற்றிய சிந்தனை மேலோங்கும்போது குடும்பத்தினருடன் முழு ஈடுபாட்டோடு நேரத்தை செலவிட முடியாது. அவர்களின் விருப்பங்களை நிறைவேற்ற முடியாத சூழல் ஏற்படும். எப்படியாவது எடுத்த வேலையை முடித்தாக வேண்டும் என்ற மன நிலையிலேயே இருப்பதும், பணியிலேயே நேரத்தை அதிகமாக செலவிடுவதும் குடும்பத்தினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி விடும். அது மன அழுத்தத்திற்கும் காரணமாகிவிடும்’’ என்கிறார்கள்.

    வேலைக்கு செல்லும் பெண்கள் சம்பாதிக்கும் தொகையில் கொஞ்சமாவது எதிலாவது முதலீடு செய்தால் பிற்காலத்தில் உபயோகப்படுத்த வசதியாக இருக்கும். இதற்கான சில எளிய முதலீட்டு வழிகளை இங்கு பார்ப்போம்.
    பொதுவாக நமது நாட்டை பொறுத்தவரை அக்காலத்தில் ஆண்கள் வேலை பார்த்து பெண்களுக்கு தேவையானவற்றை வாங்கித் தந்து பணத்தை சேமித்து வைப்பர். பெண்களும் ஆண்களையே நம்பி இருந்தனர். ஆனால் தற்போது பெண்கள் ஆண்களுக்கு நிகராக நன்கு படித்து நல்ல வேலைக்கு செல்கின்றனர். எனினும் பல வீடுகளில் பெண்கள் சம்பாதித்து பணத்தை தங்கள் கணவன்மார்களிடமே தந்துவிடுகின்றனர்.

    தனக்காக எதையுமே சேமிக்காமல் வாழ்கின்றனர். இதனால் பின்னாளில், ஏதாவது பிரச்சனை என்று வரும் போது சம்பாதித்த பணம் கூட கையில் இல்லாமல் அவதியுறுகிறார்கள். ஆகவே வேலைக்கு செல்லும் பெண்கள் சம்பாதிக்கும் தொகையில் கொஞ்சமாவது எதிலாவது முதலீடு செய்தால் பிற்காலத்தில் உபயோகப்படுத்த வசதியாக இருக்கும். இதற்கான சில எளிய முதலீட்டு வழிகளை இங்கு பார்ப்போம்.

    • சம்பாதிக்கும் பணத்தில் சிறிதளவை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்யலாம். தங்க நகையாகவோ அல்லது தங்க காசாகவோ வாங்கலாம். இப்பொழுதெல்லாம் இ-கோல்ட் முறையில் தங்கத்தில் முதலீடு செய்யலாம். இது தங்கம் வாங்குவதற்கு இணையான நன்மையை தரும். இதனால் லாக்கரில் தங்கத்தை வைத்து பயப்படத் தேவையில்லை.

    • நிரந்தர வைப்புத்தொகை (fixed deposits) தொடங்கலாம். இப்பொழுதெல்லாம் பல வங்கிகளில் வைப்புத் தொகையை குறிப்பிட்ட காலம் முடிந்தபின் திரும்பப்பெறும் போது 6 முதல் 8.5 சதவிகிதம் வரை வட்டி தருகிறார்கள். இதில் அதிக பணத்தை முதலீடு செய்யக் கூடாது. இரண்டிலிருந்து மூவாயிரம் ரூபாய் வரை முதலீடு செய்தாலே போதும். வருமான வரி தள்ளுபடி பெறலாம்.

    • பி.பி.எஃப் கணக்கில் பணத்தை போடலாம். வருடத்திற்கு எட்டு சதவிகித வட்டி கிடைக்கிறது. இது ஒரு பாதுகாப்பான முதலீடாகும். இதிலும் வருமான வரி விலக்கு உண்டு.

    • ஒரு வீட்டை வாங்கலாம். இதனால் வாடகையை மிச்சப்படுத்தலாம். மேலும் ஒரு அசையா சொத்தை தக்க வைத்துக் கொள்ளும் சிறந்த நிலையைப் பெறலாம். இப்பொழுதெல்லாம் நிலத்தில் பணத்தை முதலீடு செய்தால், மிகக்குறுகிய காலத்தில் முதலீடு செய்த பணமானது இரட்டிப்பாகி விடுகிறது.

    • முதலீடு செய்வது பற்றி ஒவ்வொரு பெண்ணும் தெரிந்து கொள்வது நல்லது. இதற்காக தனிப்பட்ட முறையில் நன்கு விசாரித்து எதில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்கும் என்பதில் கவனமாக இருக்கவும்.

    • வேலைக்கு செல்லும் பெண்களாயின் கூட்டு முயற்சியின் மூலமும் பணத்தை சேமிக்கலாம். சிலர் கணவரின் துணையுடன் பல்வேறு துறைகளில் பணத்தை முதலீடு செய்து பெருத்த லாபத்தை ஈட்டுகிறார்கள். சில பெண்கள் சிறிய குழந்தைகள் காப்பகத்தை தொடங்கி நல்ல லாபத்தை ஈட்டுகிறார்கள்.

    • பொதுவாக பெண்களுக்கு அரசானது பல்வேறு வரிச் சலுகைகளை வழங்கியுள்ளது. உதாரணத்திற்கு மாதம் சம்பாதிக்கும் தொகையில் ஆண்டுக்கு இரண்டரை லட்சம் வரை வரி செலுத்த வேண்டியதில்லை. மேலும் காப்பீட்டு திட்டங்கள் போன்றவற்றில் பணத்தை முதலீடு செய்யும் போதும் திட்டங்களில் போடப்படும் பணத்திற்கும் வரிச் சலுகைகள் தரப்படுகின்றன. இவற்றை எல்லாம் தெரிந்து கொண்டு பெண்கள் சரியான விதத்தில் முதலீடு செய்ய பிற்காலத்தில் பெருத்த லாபத்தை அடையலாம். 
    மதுரை அருகே 3 பெண்களிடம் 11 பவுன் நகையை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    பேரையூர்:

    மதுரை அருகே உள்ள தனக்கன்குளம் அய்யனார் காலனியைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி மீனா (வயது 20). நேற்று இவர் வீட்டில் தனியாக இருந்தார்.

    அப்போது அங்கு வந்த 2 வடமாநில வாலிபர்கள் பாத்திரங்களுக்கு பாலீஷ் போட்டு தருவதாக கூறியுள்ளனர். அந்த நேரத்தில் 2 பேரும் மீனாவின் கழுத்தில் கிடந்த 3 பவுன் நகையை பறித்துக்கொண்டு மோட் டார் சைக்கிளில் தப்பினர்.

    தனக்கன்குளம் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். இவரது மனைவி சிவநாகஜோதி (36). நேற்று குறிஞ்சி நகரில் உள்ள கடைக்கு சென்று விட்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள், சிவநாகஜோதியை வழிமறித்து அவரது கழுத் தில் இருந்த 3 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பினர்.

    2 நகை பறிப்பு சம்பவங்கள் குறித்து ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வருகின்றனர்.

    மதுரை அருகே உள்ள கொடிமங்கலம் கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் கருப்பணன். இவரது மனைவி மூக்கம்மாள் (92). இவர் நேற்று மாலை தனது வீட்டு முன்பு அமர்ந்திருந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 நபர்கள் மூக்கம்மாள் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்துத் கொண்டு தப்பினர்.

    இதுகுறித்து நாகமலை புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட மதுரை ஜெய்ஹிந்துபுரம் ஜீவா நகரைச் சேர்ந்த கார்த்திக் ராஜா (22), ஜெய்ஹிந்துபுரம் வள்ளுவர் தெருவைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி (23) ஆகிய 2 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

    அப்போது இந்த நகை பறிப்பு சம்பவங்களில் இவர்கள் 2 பேரும் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.


    ‘சிவப்பு விளக்கு பகுதி’ சினிமாவில் காட்டுவதுபோல் அவர்கள் வாழ்க்கை இல்லை. இந்தியாவை பாரத தாய் என்றழைக்கும் நாம், தெய்வங்களை பெண்ணாக பார்க்கும் நாம் தான் இந்த பாவத்தை செய்கிறோம்!
    ‘சிவப்பு விளக்கு பகுதி’ என்பது, இந்தியாவில் சில மாநிலங்களில் அங்கீகரிக்கப்பட்ட இடமாக இயங்கிக்கொண்டிருக்கிறது. பாலியல் உணர்வுகள் வயதுக்கு வந்த ஆண்கள் அனைவருக்கும் இருந்தாலும் பலரும் சிவப்பு விளக்கு பகுதியை நாடுவதில்லை. பெரும்பாலானவர்கள் இந்த இடத்தை பற்றி சினிமாக்களில்தான் பார்த்திருக்கிறார்கள். கோடிகளில் சம்பளம் வாங்கும் பல நடிகைகள் விலை மாதர்களாக நடித்திருக்கின்றனர்.

    அவர்களின் நடிப்பைவைத்தும், சினிமாக்களில் பார்த்திருக்கும் காட்சிகளை வைத்தும், ‘சிவப்பு விளக்கு பகுதி இப்படித்தான் இருக்கும்’ என்ற கற்பனை எல்லோர் மனதிலும் இருந்துகொண்டிருக்கிறது. அதாவது அதனை ஒரு ஜாலியான இடமாகவும், பணம்புரளும் இடமாகவும், கூத்தும் கும்மாளமும் நடக்கும் இடமாகவும்தான் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது உண்மையில்லை!

    சிவப்பு விளக்கு பகுதி என்றாலே சில சினிமாக் காட்சிகள் நம் கண்முன்னே விரியும். பிரபல நடிகைகள் மீனாகுமாரி, ரேகா, வித்யாபாலன் போன்றோர் நம் கண் முன்னே வந்து போவார்கள். அவர்கள் விலைமாதுகளாக நடித்து புகழ் பெற்றவர்கள். பல கோடிகளை குவித்த ‘டர்ட்டி பிக்சர்ஸ்’ படத்தில் வித்யாபாலன் கிட்டதட்ட அப்படி ஒரு கதாபாத்திரத்தில்தான் நடித்தார். உம்ராவ்ஜான் படத்தில் ரேகா விலைமாதுவாக நடித்திருக்கிறார். கரீனா கபூர் சமேலி மற்றும் தலாஷ் போன்ற படங்களில் இந்த கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறார். மங்கள்பாண்டேவில்-ராணி முகர்ஜி, அமர் பிரேமில்-ஷர்மிளா தாகூர் போன்ற கதாநாயகிகளும் அந்த வேடங்களில் நடித்திருக்கிறார்கள். சாந்தினி பார் படத்தில் நடிகை தபு விலைமாது கதாபாத்திரத்திற்காக தேசிய விருது பெற்றிருக்கிறார்.

    புதுடெல்லியில் வசிக்கும் தினேஷ்குமார் என்ற இளைஞர் சிவப்பு விளக்கு பற்றி தெரிந்துகொள்ள புறப்பட்டார். அலகாபாத்தில் உள்ள மீர்கஞ்ச் என்ற சிவப்பு விளக்கு பகுதிக்கு சென்றார். அங்கு அப்படிப்பட்ட பல தெருக்கள் உள்ளன. மொழிவாரியாக அங்கு பெண்கள் பிரிக்கப்பட்டிருக்கிறார்கள். மதராசி தெருவிற்குள் நுழைந்தால் அங்கே தமிழ் பேசும் விலைமாதர்கள் மட்டும் உள்ளனர்.

    சினிமாவில் காட்டுவதுபோல் அவர்கள் வாழ்க்கை இல்லை. ‘மேக் அப்’ போட்ட முகங்கள். இறுகிய உணர்வுகள். எதிர்காலத்தை இருட்டில் தொலைத்த ஒளி இழந்த விழிகள். எங்கே செல்லும் இந்த பாதை...? என்ற கேள்விக் குறியோடு அவர்கள் வாழ்க்கை நகர்ந்துகொண்டிருக்கிறது. அடிப்படை வசதிகள்கூட இல்லாத நிலையில் அவர்கள் நரக வாழ்க்கை வாழ்கிறார்கள். ஒரேஅறையில் பல பெண்கள் வசிக்கிறார்கள். தடுப்புச் சுவர் என்ற பெயரில் சாயம்போன புடவைகள் கட்டித் தொங்கவிடப்பட்டிருக்கின்றன.

    காற்று வசதியோ, தண்ணீர் வசதியோ கிடையாது. முறையாக பராமரிக்கப்படாத கழிவு நீர் கால்வாய்களை கொசுக்கள் ஆக்கிரமித்திருக்கின்றன. துர்நாற்றம் வீசுகிறது. வாரத்திற்கு ஒருமுறை விலைமாதுகளுக்கு விடுமுறையும், சம்பளமும் வழங்கப்படுகிறது. குழுவாக வாழும் அவர்கள் தங்களுக்கு தேவையான உணவை தாங்களே தயாரித்துக் கொள்கிறார்கள். சுத்தமான குடிநீர் அவர்களுக்கு கிடைப்பதில்லை. வெளிஉலகத் தொடர்பும் இல்லை. போதுமான பணமும் கிடையாது. உழைப்பிற்கேற்ற ஊதியம் என்ற அவர்களுக்கு வார இறுதியில் சம்பளம் வழங்குகிறார்கள். அதற்கு மேல் எதுவும் கிடையாது. மாதமொரு முறை இலவச மருத்துவ பரிசோதனைக்கும் அவர்களை அனுமதிக்கிறார்கள்.

    விலைமாதுகள் தனித்தனி குழுவாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு தலைவர் இருக்கிறார். அவர்தான் வருமானத்தை கணக்கிடுகிறார். தனக்கான கமிஷனை எடுத்துக்கொண்டு. விலைமாதுகளுக்கு அவர்களது பணிக்கு தக்கபடி பணத்தை பிரித்துக்கொடுக்கிறார். அந்த பணத்தைவைத்து அவர்கள் வாழ்க்கையை நடத்திக் கொள்ள வேண்டும். அவர்கள் அனுமதியின்றி வெளியே செல்ல முடியாதநிலை உள்ளது. அவர்களுடைய தொலைபேசி முதற்கொண்டு அனைத்து அசைவுகளையும் கண்காணிக்க ஒரு மேற்பார்வையாளர் உள்ளார். அவர்களது செயல்பாட்டில் ஏதாவது சந்தேகம் வந்துவிட்டால் அவ்வளவுதான் அடித்து துன்புறுத்தப்படுகிறார்கள். பெண்களை பல நாட்கள் இருட்டறையில் அடைத்துவைத்து பட்டினிபோடுகிறார்கள். சூடு வைக்கப்படுகிறார்கள்.

    அவர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டால் தகுந்த சிகிச்சை கிடைப்பதில்லை. அவர்களுக்கென்றே இயங்கும் தனி மருத்துவமனைக்குச் சென்று உடலை பரிசோதித்துக் கொள்ளவேண்டும். அதையும் மீறி உடல்பாதிக்கப்பட்டால், அந்த பெண்ணை அடித்துதுரத்திவிடுவார்கள்.

    இந்தியாவை பாரத தாய் என்றழைக்கும் நாம், தெய்வங்களை பெண்ணாக பார்க்கும் நாம் தான் இந்த பாவத்தை செய்கிறோம்!
    தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு, எத்தனையோ தோல்விகள் கண்டும், அதைக் கண்டு மனம் தளராமல் வெற்றியாளர்களாய் இவ்வுலகில் வலம் வந்த எத்தனையோ பேர்களைச் சொல்லலாம்.
    “தன்னம்பிக்கையுடன் சிலரது வரலாறே உலகச் சரித்திரம் ஆகும். ஒரு மனிதனோ, நாடோ தன்னம்பிக்கை இழந்த உடனேயே அழிவை நோக்கி பயணிக்க ஆரம்பித்து விடுகிறது. தன்னம்பிக்கை என்பது வாழ்வின் ஒரு அங்கமாகும்”

    “கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்த இடத்து” என்று கூறுவார் திருவள்ளுவர். அதாவது கொக்கைப் போல வாய்ப்பு வரும் வரை காத்திருக்க வேண்டும். வாய்ப்பு வரும் போது மிக வேகமாகச் செயல்பட்டு வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது இதன் பொருள். நம் அவ்வைப்பாட்டி “மடக்குத்தலையில் ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி இருக்குமாம் கொக்கு” என்கிறார். வாய்ப்புக்காக காத்திருப்பது உணவுக்காக காத்திருக்கும் கொக்கு, மீனைக் கண்டதும் எப்படி வேகமாகச் செயல்பட்டு வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்கிறதோ அதேபோல் ஒவ்வொருவரும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது அவரது கருத்து.

    அவ்வையார் கூறுவது போல் நாம் வாடி இருக்க வேண்டாம் தேடிக்கொண்டே இருக்க வேண்டும். வாடி இருப்பதற்கு நாம் கொக்கு அல்ல என்பதை உணர்ந்து செயல்பட வேணடும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு, எத்தனையோ தோல்விகள் கண்டும், அதைக் கண்டு மனம் தளராமல் வெற்றியாளர்களாய் இவ்வுலகில் வலம் வந்த எத்தனையோ பேர்களைச் சொல்லலாம்.

    ஆபிரகாம் லிங்கன் காணாத தோல்வியா? தாமஸ் ஆல்வா எடிசன் பார்க்காத தோல்வியா? அவ்வளவு ஏன் பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்று சாதனைப் படைத்தாரே தங்க மாரியப்பன் அவர் எவ்வளவு சோதனைகளைத் தாண்டி வெற்றிபெற்றார் என்பது நம் எல்லாருக்கும் தெரியும். இன்று சாதனையாளராகியிருக்கிறார் என்றால் அவருடைய விடா முயற்சியும் தன்னம்பிக்கையும் தான். இன்று அந்த தன்னம்பிக்கை எங்கே போயிற்று?. “உன்னை நீ பலவீனன் என்று நினைத்தால் பலவீனனாகவே ஆகிவிடுவாய். வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமையுடையவனாகவே ஆகிவிடுவாய்”.

    சமீபத்திய நிகழ்வுகளை உற்றுநோக்கும்போது தன்னம்பிக்கைகள் தடம் மாறி போய்க்கொண்டிருக்கிறதோ? என நினைக்கத் தோன்றுகிறது. சமீபத்தில் படித்த ஒரு நிகழ்வு ஒரு அறையில் நான்கு நண்பர்கள். ஒருவனைத்தேடி ஒருவர் காலை நேரத்தில் வருகிறார். அவர் வரும் நேரத்தில் அந்த ஒருவன் அவரை அழைத்துக்கொண்டு வெளியில் சென்றுவிடுகிறான். இப்படியே பத்து பதினைந்து நாட்கள் செல்கிறது. ஒரு நாள் அவன் மட்டும் மிகவும் சந்தோஷமா இருக்கிறான். நண்பர்களுடன் சேர்ந்து அரட்டை அடிக்கிறான்.

    அன்று இரவு அறைக்குத் திரும்பவில்லை. இவர்களும் எங்கேயாவது சென்றிருப்பான் வந்துவிடுவான் என்று நினைத்தார்கள். அடுத்த நாள் ஒரு போலீஸ்காரர் வந்து மூவரையும் அழைத்துச் செல்கிறார். தேடப்பட்ட அந்த நண்பன் தற்கொலை செய்து இறந்து கிடந்தான். பிரேதப் பரிசோதனை முடிந்து அவனை ஊருக்கு கொண்டு சென்று காரியங்கள் எல்லாம் முடிந்த பின்னர் அவனுடைய அம்மா சொல்கிறார். ஏம்பா நீங்களாவது அவனிடம் பேசியிருக்கலாமே என்று? அப்போதுதான் மூவருக்கும் தெரிகிறது வீடு கட்டுவதற்காக வாங்கிய 75 ஆயிரம் ரூபாய் பணத்தைத் திருப்பித் தரமுடியாமல் தற்கொலை செய்து கொண்டிருக்கிறான் என்று.



    இன்னொரு நிகழ்வு நம்மைப் பேரதிர்ச்சி செய்திருக்கிறது. சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமியின் நிறுவனர் சங்கரின் தற்கொலை. பல ஆயிரம் பேருடைய வாழ்வில் தன்னம்பிக்கை ஒளியேற்றிய சங்கர் தன் வாழ்வை தற்கொலையாக்கியிருக்கிறார். கல்லூரியில் ராகிங் செய்த பெண்ணையே பதினொரு ஆண்டுகள் காதலித்து, அவளின் உதவியால் 4 வருடங்கள் ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதி தோல்வியைத் தழுவி அதில் கிடைத்த பாடங்களையும் அனுபவங்களையும் கொண்டு ஒரு நிறுவனத்தை திறம்பட நடத்தி பல அதிகாரிகளை உருவாக்கிய ஒரு தன்னம்பிக்கைச் சரித்திரம். தன்னம்பிக்கையின்றி தற்கொலை செய்திருக்கிறது என்றால் எதற்காக?.

    இதோ அடுத்த தற்கொலை. முதுகுவலிக்கு தற்கொலை. இன்னும் என்னவெல்லாம் பார்க்கப் போகிறோமோ? அதுவும் ஆசிரியர். அரசுப்பள்ளி ஆசிரியர். தன் முதுகுவலி தீரவில்லை என்று குடும்பத்திற்கு விஷம் வைத்து தானும் தற்கொலை செய்திருக்கிறார். என்ன ஒரு முட்டாள் தனமான முடிவு. அழகான மனைவி. அருமையான இரண்டு குழந்தைகள். அன்பான அம்மா இவர்கள் தான் என் உயிர் அவர்களை எப்படி விட்டுவிட்டு போவது என்று கொன்றிருக்கிறார். அவர்கள் அனுமதியோடு நடந்ததா இல்லை. இவர் கொன்றுவிட்டு தற்கொலை செய்திருக்கிறாரா என்பது இனிதான் தெரியும்.

    இங்கேதான் உலகம் எப்படி இருக்கும்? என்றுகூட தெரியாமல் எச்.ஐ.வி பரப்பிவிட்ட ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு குழந்தை பிறந்து இருக்கிறது. அப்படிப்பட்ட குழந்தையும் அந்த அம்மாவும் இந்த உலகில் தானே வாழப்போகிறார்கள். தினம் தினம் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளைப் பாருங்கள். எத்தனை எத்தனை வியாதி. எவ்வளவு துன்பங்கள். கைகள் இழந்த, கால்கள் இழந்த, பார்வையற்ற, மனநலம் குன்றிய இப்படி எத்தனை எத்தனை மனிதர்கள் வாழ்கிறார்கள். முதுகுவலிக்காக நடந்த தற்கொலை என்றால் இதைவிடக் கேவலம் வேறோன்றுமில்லை. ஆசிரியரே நீங்கள் தன்னம்பிக்கை இழந்து விட்டு தற்கொலை செய்து கொண்டீர்கள். உங்களை நம்பி வந்த பெண்ணையும் உங்கள் குழந்தையும் உங்களைப் படைத்த அம்மாவையும் ஏன் கொன்றீர்கள்? இது தான் அவர்கள் மேல் வைத்த பாசமா? உண்மையில் இவ்வுலகில் நீங்கள் வாழத் தகுதியில்லாதவர் தான்.

    இந்த மூன்று நிகழ்வுகளும் நம்மை யோசிக்க வைத்திருக்கின்றன. மூன்று நண்பர்களும் அந்த ஒருவனிடம் என்ன பிரச்சினை என்று பேசியிருந்தால் சிக்கல் தீர்ந்திருக்கும். 75 ஆயிரம் ரூபாய் என்பது இந்தக்காலத்தில் பெரிய தொகை இல்லை. மூவரும் ஏற்பாடு செய்திருக்கலாம் இல்லை கடன் வாங்கியவரிடம் கொஞ்சம் அவகாசம் கேட்டிருக்கலாம். பேசியிருந்தால் நண்பனைக் கட்டாயம் இழந்திருக்க மாட்டமார்கள். ஐ.ஏ.எஸ் அகாடமியின் நிறுவனர் சங்கர் நண்பர்களிடமும் வீட்டுப் பெரியவர்களிடமும் பேசியிருந்தால் சிக்கல் அவிழ்ந்திருக்கக்கூடும். கணவன் மனைவிக்குள் பிரச்சினை இல்லாமல் உள்ள குடும்பம் ஏது? ஈகோ பிரச்சினைகள் தலைதூக்கி விடுகிறதே ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில். இருவரும் மனம் விட்டுப் பேசியிருந்தால் கண்டிப்பாக சங்கர் சாகாமல் இருந்திருப்பார்.

    மூன்றாவதாக முதுகுவலிக்கு தற்கொலை செய்த ஆசிரியர். இவரின் தன்னம்பிக்கை தளர்ந்து போக யார் காரணம்? நோயா? நோயின் கொடூரமா? மருத்துவர்களா? இல்லை வேறு ஏதேனும் பிரச்சினையா? என்ன பிரச்சினை என்றாலும் தற்கொலை தீர்வல்ல. தற்கொலை கோழைகளின் ஆயுதம். முட்டாள்கள் தேர்ந்தெடுக்கும் பாதை கோமாளிகள் செய்யும் கோமாளித்தனம். அறிவிலிகள் செய்யும் அலப்பறை. தயவுசெய்து தற்கொலை செய்து கொள்ளா(ல்லா)தீர்கள். தற்கொலை செய்யும் அளவிற்கு தைரியம் இருக்கும் நீங்கள் வாழ்ந்துதான் பாருங்களேன். வாழ்க்கை வசமாகும்.

    மு.பாலகிருஷ்ணன், பட்டதாரி ஆசிரியர், கொம்மடிக்கோட்டை.
    ×