search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95284"

    அரக்கோணம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு லாட்ஜில் பெண்களை வைத்து விபச்சாரம் நடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

    தக்கோலம்:

    அரக்கோணம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு லாட்ஜில் பெண்களை வைத்து விபச்சாரம் நடப்பதாக அரக்கோணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அவர் தலைமையிலான சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் நேற்றிரவு லாட்ஜில் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது 30 மற்றும் 26 வயதில் 2 பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் 2 பெண்களையும் மீட்டு அரக்கோணம் பெண்கள் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைத்தனர்.

    மேலும் லாட்ஜில் விபச்சாரம் நடத்தியதற்காக லாட்ஜ் உரிமையாளர் கும்மினிபேட்டையை சேர்ந்த நரசிம்மலு (வயது 46). மேலாளர் சந்திரபாபு (60). 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விபத்தும் உயிரிழப்பும் எப்போது வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும் நிகழலாம். ஒருவேளை நம் குடும்பத்தில் அது நிகழ்ந்தால் அடுத்து என்ன செய்வது என்பதையாவது பெண்கள் அறிந்து வைத்திருக்க வேண்டும்.
    திடீரென எதிர்பாராத சூழ்நிலை வந்தால் அதைச் சமாளிக்கத் தேவைப்படும் அனைத்து விவரங்களையும் பெண்கள் அறிந்திருக்க வேண்டியது அவசியம். இதைப் பற்றி பெண்களிடம் வலியுறுத்துவதைப்போலவே, ஆண்களிடமும் பேச வேண்டியுள்ளது. பெண்களின் பொருளாதாரப் பாதுகாப்புக்கு ஆண்களும் பெண்களும் செய்ய வேண்டியவை இவைதாம்…

    பொருளாதார ரீதியாக ஆணைச் சார்ந்திருக்கும் ஒவ்வொரு பெண்ணும் (மனைவி, தாய், மகள்) அவரை டெர்ம் பாலிசி (ஆயுள் காப்பீடு) எடுக்க வைக்க வேண்டும். அவரது ஆண்டு வருமானத்தின் 15 மடங்காவது காப்பீட்டுத் தொகை இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

    காப்பீடு குறித்துத் திட்டமிடும்போது பெண்களும் இருப்பது அவசியம். தேவையற்ற பாலிசிகளைத் தவிர்த்தல், விண்ணப்ப விவரங்களை ஒன்றுக்கு இரண்டு முறை சரிபார்த்தல், நாமினியாகத் தன்னை நியமிக்கச் சொல்லி வலியுறுத்துதல், நாமினியின் விவரங்களைச் சரியாக எழுதுதல் (பெயர், உறவு, பிறந்த தேதி இன்ன பிற) ஆகியவை பெண்களின் கடமை.

    எங்கெல்லாம் ஜாயின்ட் ஓனர்ஷிப் சாத்தியமோ (வங்கிக்கணக்கு, அசையும், அசையாச் சொத்துகள் அனைத்தும்) அவையெல்லாம் இருவர் பெயரிலும் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.

    அப்படி இல்லாவிட்டாலும், குறைந்தபட்சம் என்னென்ன சேமிப்புகள்/முதலீடுகள் உள்ளன, அவற்றைக் கணவரின் ஆயுளுக்குப் பிறகு எப்படி வாங்குவது என்பதைத் தெளிவாகக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். இதில் தவறோ, சென்ட்டிமென்டோ எதுவும் இல்லை.

    உயில் இன்றியமையாதது. தெள்ளத் தெளிவாக யார் யாருக்கு என்னென்ன சேர வேண்டும் என உயிலில் எழுதி கையெழுத்திட்டு சாட்சிக் கையெழுத்துகளோடு வையுங்கள். உயில் பல பிரச்னைகளுக்குத் தீர்வாக இருக்கும். உயிலை எழுதுபவர் அவர் வாழ்நாளில் எத்தனை முறை வேண்டுமானாலும் அதை மாற்றி எழுதலாம். ஒருமுறை எழுதிவிட்டால் கன்ட்ரோல் போய்விடும் என்று அவர் பயப்படத் தேவையில்லை.



    பிள்ளைகள் எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும், மனைவியையே நாமினியாகவும் வாரிசுதாரராகவும் எழுதுங்கள். மனைவியைப் பிள்ளைகளின் தயவில் விட்டுவிடாதீர்கள்.

    வங்கிக்கணக்கு, செல்போன் அக்கவுன்ட் லாகின், இ-மெயில் லாகின் உள்பட அனைத்து பாஸ்வேர்டுகளையும் இருவரும் அறிந்த ஓரிடத்தில் (லேப்டாப், நோட்புக்) சேமித்து வையுங்கள். ஒவ்வொரு முறை பாஸ்வேர்டு மாற்றும்போதும் தவறாமல் அதில் அப்டேட் செய்துவிடுங்கள்.

    கணவன் மனைவி இருவரும் உபயோகிக்கும் செல்போன்கள் பரஸ்பரம் மற்றவர் பெயரில் இருந்தால் நல்லது. திடீரென ஒருவருக்கு ஏதேனும் விபரீதம் என்றால் மற்றவர் அந்த போன் நம்பரைத் தொடர்ந்து உபயோகிக்க இயலும். செல்போனில் வரும் ஓடிபி (One Time Password) இல்லாமல் வங்கிக் கணக்கு, இணையப் பணப்பரிவர்த்தனை என எதிலும் பாஸ்வேர்டு மாற்றுவது கடினம்.

    பெரும்பாலான தளங்களில் பாஸ்வேர்டு ரெக்கவரிக்கு சில கேள்வி பதில்கள் இருக்கும். அவற்றிலிருந்து 10 கேள்விகளைத் தேர்ந்தெடுத்து, இருவருமாகச் சேர்ந்து அவற்றுக்கான பதில்களை உள்ளீடு கொடுத்து வையுங்கள். அவற்றையும் பாஸ்வேர்டு ஷீட்டில் சேமித்து வையுங்கள். ஒருவேளை ஏதோ ஒரு தளத்தின் பாஸ்வேர்டு தெரியாவிட்டாலும் இவற்றின் மூலம் பாஸ்வேர்ட்டை மாற்ற இயலும்.

    குழந்தை பிறப்புக்குப் பின் குடும்ப நிர்வாகியாக மாறும் பெண்கள், குழந்தைகள் ஓரளவு வளர்ந்து முழுநேரப் பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்த பின்னர் மீண்டும் வேலைவாய்ப்பு தேட வேண்டும். பகுதி நேரமாகவோ, வீட்டிலிருந்தோ செய்யும் வாய்ப்புகள் இன்று எல்லா துறைகளிலும் பெருகியிருக்கின்றன. அவற்றை பற்றிப் பெண்கள் யோசிப்பதும் முக்கியம்.

    விபத்தும் உயிரிழப்பும் எப்போது வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும் நிகழலாம். நம் குடும்பத்தில் நிகழாதவரை பேரிழப்பும் வெறும் புள்ளிவிவரமே. ஒருவேளை நம் குடும்பத்தில் அது நிகழ்ந்தால் அடுத்து என்ன செய்வது என்பதையாவது பெண்கள் அறிந்து வைத்திருக்க வேண்டும். 
    விஷம நோக்கத்துடன் வருபவர்களைச் சமாளிக்க தற்காப்பு வித்தைகளை கற்று வைத்திருப்பது பெண்களுக்கு நல்ல பாதுகாப்பை வழங்கும். விழிப்புணர்வு, பாதுகாப்பு ஏற்பாடுகளே உங்கள் தனிமையை கவலையற்றதாக்கும்.
    தனிமையில் நடக்கும் பெண்களைத் தாக்கி நகை பறிப்பது, வீடுபுகுந்து கொள்ளையடிப்பது, எதிர்த்து போராடுபவர்களை கொலை செய்துவிடுவது போன்ற செய்திகளை அடிக்கடி பத்திரிகைகளில் பார்க்கிறோம்.

    வீடு புகுந்து குற்றங்களில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் கொடிய ஆயுதங்களுடன் வருவதாக கணிக்கப்படுகிறது. நம் நாட்டிலும் இதுபோன்ற குற்றங்கள் ஆங்காங்கே நடக்கின்றன. இத்தகைய ஆபத்துகளில் இருந்து தங்களை பாதுகாக்க தனிமையில் இருக்கும் இல்லத்தரசிகள், மாணவிகள் நிச்சயம் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இருபது அவசியம். உங்கள் தனிமையை யாரோ கவனிக்கிறார்கள் என்பதுதான் இதுபோன்ற குற்றங்களின் பின்னணி. எனவே விழிப்புணர்வுடன் இருங்கள், ரகசியத்தை கசியவிடாதீர்கள்.

    கதவைத் தொட்டால் ஓசை எழுப்பும் கருவியை பொருத்தலாம். இப்போதெல்லாம் நவீன கருவிகள் கிடைக்கின்றன. வெளிபுறம் நிற்பவரை படம் பிடித்துக் காட்டும் கருவி, செல்போனுக்கு தகவல் அனுப்பும் கருவிகள் கூட வந்துவிட்டன.

    வீட்டின் சுற்றுபுறத்தில் நல்ல விளக்கு வசதி செய்யுங்கள். மறைவிடங்களோ, இருட்டோ இல்லாமல் இருப்பது குற்றவாளிகளை வீட்டை நெருங்காமல் செய்யும் ஒரு வழியாகும்.



    மிளகாய்த்தூள், மிளகுத்தூள் ஸ்பிரே, தற்காப்புக் கம்பி ஆகியவற்றை கைவசம் வைத்திருக்கலாம். வெளிநாடுகளில் மின்தாக்குதல் நடத்த `எலக்ட்ரிக் ஷாக்’ கருவிகள்கூட கிடைக்கின்றன. துப்பாக்கி பயன்படுத்தும் பெண்களும் இருக்கிறார்கள்.

    வீட்டுக்கு அருகில் முன்பின் தெரியாதவர்கள் நடமாடினாலோ, தங்கி இருந்தாலோ காவலாளிகளிடம் அவர்களை கண்காணிக்கச் சொல்லலாம். சந்தேகம் அதிகரித்தால் காவல் துறைக்குத் தகவல் கொடுக்கலாம்.

    பக்கத்து வீட்டில் இருப்பவர்களை எளிதாக தொடர்பு கொள்ளும் வகையில் தகவல் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அக்கம்பக்கத்தினருடன் நல்ல நட்புறவுடன் இருப்பது கூடுதல் பாதுகாப்பாக இருக்கும்.

    வீட்டிற்குள் வரும் திருடர்களின் முக்கியக் குறி நகை மற்றும் பணமாக இருக்கிறது. எனவே உங்கள் தேவைக்கான பணம் மற்றும் நகைகளை மட்டுமே கையில் வைத்து பயன்படுத்துங்கள். அதிகமாக இருக்கும் பணம், நகைகளை வங்கிகளில் பாதுகாக்க வேண்டும்.

    விஷம நோக்கத்துடன் வருபவர்களைச் சமாளிக்க தற்காப்பு வித்தைகளை கற்று வைத்திருப்பது பெண்களுக்கு நல்ல பாதுகாப்பை வழங்கும். பாதுகாப்புகளை மீறி குற்றம் நடக்கும் இக்கட்டான சூழலில் சாதுரியமாக செயல்படும் திறனையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

    உங்களின் ரகசியங்கள் கசிந்து விடுவதே ஆபத்துகளுக்கு காரணமாகும். நீங்கள் தனிமையில் இருக்கிறீர்கள் என்பது யாருக்கும் தெரியாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உங்களிடம் எவ்வளவு பணம், நகை இருக்கிறது, அவற்றை எங்கே வைத்திருக்கிறீர்கள் போன்ற விவரங்களையும் உங்கள் குடும்பத்தினரைத் தவிர மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளக்கூடாது. டைரி, இணையதளங்களில் இதுபோன்ற ரகசிய விவரங்களை குறித்து வைப்பதும் சிக்கலை ஏற்படுத்தக்கூடும். விழிப்புணர்வு, பாதுகாப்பு ஏற்பாடுகளே உங்கள் தனிமையை கவலையற்றதாக்கும்.

    தற்போது, உடனடி தகவல் பரிமாற்றத்துக்காக பிரபலமாகி வரும் ‘வாட்ஸ்ஆப்’ எனும் தொழில்நுட்பத்திலும் பெண்களுக்கான பிரச்சனைகள் பல உள்ளன.
    சமூக வலைதளங்கள் மூலமாக பெண்களுக்கு நேரும் பிரச்சனைகளும் ஆபத்துகளும் அனைவரும் அறிந்த ஒன்றே! தற்போது, உடனடி தகவல் பரிமாற்றத்துக்காக பிரபலமாகி வரும் ‘வாட்ஸ்ஆப்’ எனும் தொழில்நுட்பத்திலும் பெண்களுக்கான பிரச்சனைகள் பல. ‘வாட்ஸ்ஆப் என்பது தனிநபர், தன் செல்போனில் உபயோகிக்கும் ஆப்ஸ்தானே… இதில் என்ன ஆபத்து வந்துவிடப் போகிறது?’ என்பது உங்களின் கேள்வியாக இருந்தால்… இதோ பதில் விரிவாக!

    என்னென்ன ஆபத்துகள்?


    தெரிந்தவரோ, தெரியாதவரோ… உங்களுக்குத் தொல்லை கொடுக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு, உங்களின் செல்போன் நம்பர் கிடைத்தால் போதும்… அவர்களால் உங்கள் ‘வாட்ஸ்ஆப்’ கணக்கைப் பார்க்கவும், அதிலிருக்கும் புகைப்படங்களை டவுன்லோடு செய்யவும் முடியும். உங்களுக்குத் தெரியாத நபர்கள்கூட, உங்கள் ஸ்டேட்டஸ் மூலம் உங்களைத் தொடர முடியும். போலி பெயருடன் ஒருவர் ஒரு குறிப்பிட்ட செல்போன் எண்ணிலிருந்து தோன்றும்போது, எதிர்முனையில் இருக்கும் நபர் இவர்தான் என்று உங்களால் உறுதிபடுத்த முடியாத சூழலில், அவர் உங்களைத் தொடர்புகொண்டு, உங்களது தகவல்களைப் பெற வாய்ப்புள்ளது. தோழிகளால் ‘வாட்ஸ்ஆப்’ குரூப்களில் உங்கள் பெயர் இணைக்கப்படும்போது, உங்கள் எண் அந்த குரூப்பில் ஏற்கெனவே உள்ள அனைவரிடமும் பகிரப்பட வாய்ப்புள்ளது.

    எப்படித் தவிர்க்கலாம்?

    பிரச்சனைகளைத் தவிர்க்க, ‘வாட்ஸ்ஆப்’ செட்டிங்கில் உள்ள, பிரைவஸி செட்டிங்கை மாற்றியமைக்க வேண்டும். அதாவது,  பிரைவஸி செட்டிங் பகுதிக்குச் சென்று உங்கள் புகைப்படம், ஸ்டேட்டஸ், ‘லாஸ்ட் ஸீன்’ ஆகியவற்றை, மைகான்டாக்ஸ் அல்லது ஒன்லி மீ ஆப்ஷன்களைப் பயன்படுத்தி பாதுகாத்துக்கொள்ளலாம்.



    நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்பதை அறிவுறுத்தும் ஸ்டேட்டஸ்களைப் பதிவு செய்யாதீர்கள். குரூப்களில் இணைவதிலும், அதில் அதிதீவிரமாக செய்திகளை அனுப்புவதிலும் எச்சரிக்கையாக இருங்கள். ‘ப்ளாக்’ (Block) ஆப்ஷனை பயன்படுத்தி, உங்களுக்குத் தொல்லை தருபவரை உங்கள் கணக்கைத் தொடராமல் தடுக்கும் வசதியும் இதில் உள்ளது. இப்படிப்பட்ட நபர்களின் செல்போன் எண்களை உங்கள் மொபைல் போனில் இருந்து நீக்கிவிட்டால்… போயே போச்!

    தெரிந்தவர்களோடு மட்டும் ‘வாட்ஸ்ஆப்’ பேசுவது எப்போதுமே பாதுகாப்பானது.

    ஆபத்துதவி ஆப்ஸ்!

    ஆபத்தில் சிக்கிக் கொள்ளும்போது, அதிலிருந்து தப்பிப்பதற்கு உதவக்கூடிய ஆப்ஸ் ஒன்று, ஆண்ட்ராய்டு போன்களில் பிரபலமடைந்துள்ளது. இது இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப பிரிவான ‘நாஸ்காம்’ அமைப்பு நடத்திய, பெண்கள் பாதுகாப்புக்கான ஆப்ஸ் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

    நீங்கள் ஏதாவது பிரச்சனையில் மாட்டிக்கொண்டால், ‘ஆபத்துதவி’யாக யார் இருப்பார்களோ அவருடைய செல்போன் நம்பர் மற்றும் இ-மெயில் முகவரியை இந்த ஆப்ஸில் பதிவு செய்ய வேண்டும். ஆபத்து நேரத்தில் செல்போன் திரையில் இருக்கும் இந்த ஆப்ஸை விரல் நுனியில் அழுத்தினாலே, வாய்ஸ் ரெக்கார்டர் வேலை செய்ய செய்ய ஆரம்பித்துவிடும். 45 விநாடிகள் பதிவானதும், நீங்கள் இருக்கும் இடத்தின் விவரத்தோடு குறுந்தகவல் மற்றும் மின்னஞ்சல் இரண்டும், அந்த ஆபத்துதவிக்கு போய்ச் சேர்ந்துவிடும். ஒருவேளை நீங்கள் அப்போது இருப்பது இன்டர்நெட் வசதி இல்லாத இடமாக இருந்தால், குறுஞ்செய்தி மட்டும் சென்று சேர்ந்துவிடும்.

    வாழ்க்கையில் திருமணத்திற்கு முன்பு கல்விரீதியாக நிறைய கற்றுக்கொள்கிறோம். திருமணத்திற்கு பிறகு கணவரிடம் இருந்தும், குழந்தையிடம் இருந்தும் புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள முடிகிறது.
    ‘திருமணம் செய்துகொண்டால் அழகு போய்விடும். ஆற்றலும் குறைந்துவிடும். சுதந்திரம் பறிபோய், சாதிக்கும் துடிப்பும் மங்கிவிடும்’ என்று திருமணத்தை தள்ளிப்போடும் பெண்கள் சொல்வதுண்டு. அவர்களுக்கு சவால்விடும் விதத்தில் அழகைப் பேணி, ஆற்றலை மேம்படுத்தி, துடிப்போடு சாதனை நிகழ்த்திக்கொண்டிருக்கிறார்கள், திருமணமான பெண்கள். மேடைகளில் அரங்கேறும் அவர்களது திறமைகளை பார்த்து, திருமணமாகாத பெண்களே ஆச்சரியப்பட்டு அசந்து போகிறார்கள்.

    ‘திருமணம் ஒருபோதும் பெண்களின் திறமைக்கு தடையில்லை’ என்பதை நிரூபிக்க களம் அமைத்துத் தருகிறது, ‘மிஸஸ் சென்னை’ எனப்படும் திருமதி சென்னை திறன்மிகு போட்டி.

    வாழ்க்கையில் திருமணத்திற்கு முன்பு கல்விரீதியாக நிறைய கற்றுக்கொள்கிறோம். திருமணத்திற்கு பிறகு கணவரிடம் இருந்தும், குழந்தையிடம் இருந்தும் புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள முடிகிறது. குழந்தையை வளர்ப்பது என்பது நமக்கு கடினமான வேலையில்லை. நமது குழந்தை எப்படி வளரவேண்டும் என்று நினைக்கிறோமோ அப்படியே நாம் வாழ்ந்து காட்டவேண்டும்.

    திருமணமான பெண்கள் தாய்மையடைந்து பிரசவித்ததும் இயல்பாகவே அவர்களது உடல் எடை அதிகரித்து விடுகிறது. அதை சுட்டிக்காட்டிதான், திருமணத்திற்கு பின்பு பெண்களின் அழகு குலைந்துவிடுவதாக சொல்கிறார்கள். தொடர்ந்து முறையான உடற்பயிற்சிகளை செய்துவந்தால், உடல் எடையை கட்டுக்குள் கொண்டுவந்து உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க முடியும்.

    மணமான பெண்கள் இப்போது உடல்வலுவோடுதான் இருக்கிறார்கள். ஆனால் செக்குமாடு மாதிரி ஒரே வேலையை செய்தும், ஒரே மாதிரியான சிந்தனையில் உழன்றும் மனஅழுத்தத்தில் சிக்கி மனபலம் இல்லாதவர்களாக காட்சியளி்க்கிறார்கள். இதுபோன்ற போட்டிகளில் கலந்துகொள்ள தங்களை தயார்படுத்திக்கொள்ளும்போது அவர்கள் சிந்தனை, செயல் எல்லாவற்றிலுமே மாற்றம் ஏற்பட்டு மகிழ்ச்சி உருவாகும். 40 வயதுகளில் நிற்கும் அம்மாக்கள் அனைவருமே உடல் நலத்தோடு, மனநலத்தையும் பாதுகாத்தால்தான் வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும். அதற்கான முயற்சிகளை பெண்கள் முழுமனதோடு மேற்கொள்ளவேண்டும்.

    மகிழ்ச்சியாக இருக்கும் எல்லோரிடமும் உயிரோட்டமான புன்னகை இருந்துகொண்டிருக்கும். மகிழ்ச்சி வேண்டுமானால், மனநிறைவு இருக்கவேண்டும். மனநிறைவு பெறவேண்டுமானால் இருப்பதைக் கொண்டு திருப்தியடையவேண்டும். மகிழ்ச்சியாக இருக்கும் பெண்ணால், அவளது குடும்பத்தையே மகிழ்ச்சியாக வைத்திருக்கமுடியும். மகிழ்ச்சியும், மனதில் கருணையும் இருந்தால், நம்மால் பேரழகியாக வலம்வர முடியும்.

    ஒரு குறிப்பிட்ட ஆப்பை உருவாக்குபவர் தவறாக பயன்படுத்தினால், உங்களது அந்தரங்க தகவல்களின் நிலை என்னவாகும் என்று கொஞ்சம் நினைத்து பாருங்கள்.
    வெறும் அழைப்புகள், குறுஞ்செய்திகள் என்பதை தாண்டி வாழ்க்கையின் அனைத்து நிலைகளிலும் பயன்படக்கூடிய அத்தியாவசியமான ஒன்றாக கைபேசிகள் உருவெடுத்துள்ள அதே வேளையில், இதுவரை நாம் அறியாத பிரச்சனைகளின் பிறப்பிடமாகவும் கைபேசிகள் உள்ளன.

    குறிப்பாக, உங்களது கைபேசியில் எந்த ஒரு செயல்பாட்டையும் மேற்கொள்வதற்கு ஆண்ட்ராய்டு பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிளின் ஆஃப் ஸ்டோருக்கோ சென்று செயலிகளை பதிவிறக்கம் செய்கிறீர்கள் தானே? என்றாவது நீங்கள் பயன்படுத்தும் செயலியை இன்ஸ்டால் செய்வதற்கு முன் அது கேட்கும் அனுமதிகளை பார்த்தீர்களானால் அதிர்ச்சியடைய நேரிடும்.

    உதாரணமாக, புகைப்படத்தை எடிட் செய்யும் ஒரு பிரபல செயலியை நீங்கள் இன்ஸ்டால் செய்வதாக வைத்துக்கொள்வோம். அப்போது,, கேமரா, தொடர்பு எண்கள், லொகேஷன், ஸ்டோரேஜ், போன்ற பலவற்றிற்கு அனுமதியளித்தால்தான் அந்த செயலியை செயல்படுத்த முடியும் என்கிறது. ஆனால், இந்த இடத்தில் கூர்ந்து கவனித்தீர்களானால், புகைப்படத்தை எடிட் செய்யும் இந்த செயலிக்கு, புகைப்படம், தொடர்பு எண்கள், ஸ்டோரேஜ் ஆகியவை அவசியம்தான். ஆனால், முற்றிலும் தேவையற்ற லொகேஷன், உங்களது இருப்பிடத்தை கண்டறிந்து அதன் மூலம் மிகச் சரியான விளம்பரங்களை உங்களது கைபேசிக்கு அனுப்பி பணம் சம்பாதிப்பதற்காக அனுமதி கேட்கப்படுகிறது.

    இதேபோன்று, பல்வேறு செயலிகளில், முற்றிலும் சம்பந்தமேயில்லாத தகவல்கள் கேட்கப்படுகின்றன. கண்மூடித்தனமாக செயலிகளை இன்ஸ்டால் செய்பவர்கள், அதிலுள்ள ஆபத்தை உணராமல் ஜிபிஎஸ், நெட்ஒர்க் செயல்பாடு, வைஃபை, மற்ற ஆஃப்களின் செயல்பாட்டை கண்காணித்தல் & முடக்குதல், ஐஎம்இஐ எண், கைபேசியை அணையாமல் இருக்க செய்தல், தகவல்களை மாற்ற/ நீக்க அனுமதி போன்ற பல்வேறு தகவல்களுக்கு ஒப்புதல் கொடுத்து செயலியோடு பிரச்சனையையும் இலவசமாக வாங்கி கொள்கின்றனர்.



    உங்களது கைபேசியில் இருக்கும் புகைப்படங்கள், காணொளிகள், ஆவணங்கள் போன்றவற்றை உங்களுக்கு தெரியாமலேயே அந்த செயலிகள் தனது சர்வர்களில் பதிவேற்றம் செய்துகொள்வதற்கு வாய்ப்புள்ளது. இதன் மூலம் உங்களது கைபேசியில் இருக்கும் புகைப்படங்கள், காணொளிகள், ஆவணங்கள் போன்றவற்றை உங்களுக்கு தெரியாமலேயே அந்த செயலிகள் தனது சர்வர்களில் பதிவேற்றம் செய்துகொள்வதற்கு வாய்ப்புள்ளது.

    கைபேசி செயலிகளை போன்றே ஃபேஸ்புக்கை முதலாக கொண்டு ஒரு இணையதளத்தில் கணக்கை ஆரம்பிக்கும்போதோ அல்லது கேம் விளையாடும்போது நீங்கள் அந்தரங்கமாக வைத்திருக்கும் தகவல்கள், பதிவுகள், நண்பர்களின் தகவல்கள், உங்களது நடவடிக்கைகள் போன்றவற்றை பயன்படுத்துவதற்கு ஏதோவொரு செயலின் வடிவமைப்பாளருக்கு அதிலுள்ள ஆபத்து தெரியாமல் பலரும் அனுமதி தருகிறார்கள்.

    இதுபோன்ற செயலிகள், சில நேரங்களில் உங்களது கணக்கை பயன்படுத்தி உங்களது நண்பர்களுக்கு நீங்கள் அனுப்பியதாக தவறான காணொளிகள்/ புகைப்படங்கள்/ இணையதள இணைப்புகளை பகிரும் சம்பவங்கள் பரவலாக நடந்து வருகின்றன.

    ஒரு செயலியையோ, மென்பொருளையோ, இணையதள கணக்கையோ முதன் முதலாக பயன்படுத்துவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் நூற்றுக்கணக்கான பக்கங்களை கொண்ட விதிமுறைகளை படிக்காமல், அனைத்திற்கும் ‘அக்சஃப்ட்’ கொடுப்பவர்களுக்கு என்றாவது ஒருநாள் தங்களது அந்தரங்க தகவல்களுக்கு பாதிப்பு ஏற்படும்போதுதான் அதன் வீரியம் புரிகிறது.

    மேற்கண்ட தகவல்களை ஒரு குறிப்பிட்ட ஆப்பை உருவாக்குபவர் தவறாக பயன்படுத்தினால், உங்களது அந்தரங்க தகவல்களின் நிலை என்னவாகும் என்று கொஞ்சம் நினைத்து பாருங்கள். 
    பெண்களுக்கு நாட்டுக்கோழி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 10-ந்தேதி தொடங்கி வைக்கிறார். #EdappadiPalanisamy
    சென்னை:

    சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் அளித்த பதில் வருமாறு:-

    தமிழ்நாட்டில் ஏழை, எளிய மக்களுக்கு ஆடு, மாடு வழங்கும் திட்டத்தை புரட்சித் தலைவி தொடங்கி வைத்தார். தற்போது 75 ஆயிரத்து 448 பசுமாடுகள் வழங்கப்பட்டுள்ளன.

    8 லட்சத்து 72 ஆயிரத்து 152 பெண்களுக்கு 32 லட்சம் வெள்ளாடுகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த சட்டசபை கூட்டத்தொடரின்போது 110-வது விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்ட முதல்-அமைச்சர் பெண்களுக்கு நாட்டுக்கோழி குஞ்சுகள் வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என்று அறிவித்தார்.



    வருகிற 10-ந்தேதி இந்த திட்டம் தொடங்கப்பட உள்ளது. 77 ஆயிரம் பெண்களுக்கு தலா ரூ.2500 மதிப்புள்ள கோழிக் குஞ்சுகள் கூண்டுடன் வழங்கப்படும். இதற்கு 650 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த திட்டத்தை தொடங்கி வைப்பார்.

    இவ்வாறு அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறினார். #EdappadiPalanisamy

    இந்த புத்தாண்டில் நீங்கள் நிறைய உறுதிமொழிகள், சபதங்களை ஏற்றிருப்பீர்கள். உங்கள் உறுதிமொழிகளையும், சபதங்களையும் இடையில் நிறுத்திவிடாமல் வெற்றிகொள்ள நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் சில....
    இந்த புத்தாண்டில் நீங்கள் நிறைய உறுதிமொழிகள், சபதங்களை ஏற்றிருப்பீர்கள். நன்றாகப் படிக்க வேண்டும், மருத்துவம், பொறியியல் என நினைத்த படிப்பில் சேர தகுதியான கட்-ஆப் மதிப்பெண் பெற வேண்டும், நினைத்த வேலையை கேம்பஸ் தேர்விலேயே வென்றுவிட வேண்டும், வேண்டாத பழக்கங்களை கைவிட வேண்டும், சொன்னதை செய்து முடித்து பெற்றோரிடம் ஆசைப்பட்டதை கேட்டுப் பெற வேண்டும் என பல்வேறு லட்சியங்களை நீங்கள் சவால்களாக ஏற்றிருக்கலாம். அதை அடைய வாழ்த்துக்கள். ஏறத்தாழ எல்லோருமே இப்படியான சபதங்களை ஏற்பதுண்டு. ஆனால் அதை தொடர்ந்து கடைப்பிடித்து வென்று முடிப்பவர்கள் வெகுசிலரே. உங்கள் உறுதிமொழிகளையும், சபதங்களையும் இடையில் நிறுத்திவிடாமல் வெற்றிகொள்ள நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் சில..

    சோம்பேறித்தனம்

    பலரது லட்சியங்களை வீழ்த்திய ஒரே அசுரன் சோம்பேறித்தனம். அலட்சிய மனப்போக்கு சோம்பேறித்தனத்தின் புகலிடமாகும். சின்ன விஷயம்தானே பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்ற அலட்சியத்தால் தள்ளிப்போடப்படும் பல்வேறு விஷயங்கள், அவசியமான நேரத்தில் நமது காலைவாரிவிடும்.

    இப்படி ஒட்டுமொத்தமாக சேர்ந்துவிடும் சின்னச்சின்ன விஷயங்கள், குறித்த நேரத்தில் எைதயும் செய்ய இயலாத சிக்கலை ஏற்படுத்தும். அதனால் பரபரப்பும், தவறுகளும் ஏற்படும். நீங்கள் எழுதி முடிக்காமல் மிச்சம் வைத்த பாடங்கள், கட்டுரைகள், ஓவியங்கள் கடைசி நேரத்தில் பரபரப்பை உருவாக்கியதை கண்டிருக்கிறீர்களா?

    ஒதுக்கி வைத்த பாடங்கள் பரீட்சையில் கேட்கப்பட்டு மதிப்பெண்களை இழந்த அனுபவம் நேர்ந்திருக்கிறதா? கல்விக்கு அவசியமான கத்தரிக்கோல், டேப், பசை, ஸ்டாப்லர் பின், காம்பஸ், புரொடக்டர், பள்ளி அடையாள அட்டை என எத்தனையோ சின்னச் சின்ன பொருட்களை பத்திரப்படுத்தி வைக்காமல், அவசியமான நேரத்தில் கையில் கிடைக்காமல் அவதிப்பட்டிருக்கிறீர்களா? அதை பள்ளி கிளம்பும் நேரத்தில் தேடி, வீட்டுப் பயிற்சிகளை செய்து முடிக்காமல் பள்ளியில் திட்டுவார்களே என சங்கடப்பட்டதுண்டா?

    இதுபோன்ற காரணங்களுக்காக பள்ளிக்கு முழுக்கு போட்டு, வகுப்பு புறக்கணிப்பவர்கள் உண்டு. இந்த விஷயங்களுக்கெல்லாம் அடிப்படையாக இருப்பது சோம்பேறித்தனம்தான். உங்களுக்கான பொருட்களை பத்திரமாக வைத்திருந்து, கொடுக்கப்பட்ட பயிற்சிகளை கடைசி நேரத்தில் முடிக்க முயலாமல், சுறுசுறுப்பாக செயல்பட்டு முன்கூட்டியே முடித்துவிட்டால் எந்த பரபரப்பும் இன்றி எல்லா செயல்களிலும் வெற்றி பெறலாம். அதற்கு முதலில் சோம்பேறித்தனத்தை களைய வேண்டும். இந்த புத்தாண்டின் லட்சியங்களையும் உங்கள் சோம்பேறித்தனம் களவுகொண்டுவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

    நேரமில்லையா?


    “எல்லாம் எனக்கும் தெரிகிறது, ஆனால் எனக்கு நேரம் போதவில்லையே” என ஆதங்கப்படுகிற ரகமா நீங்கள்? எல்லோருக்குமே இதே 24 மணி நேரம்தான் என்பதை உங்களுக்கு நினைவுபடுத்துகிறோம். இந்த 24 மணி நேரத்தில்தான் உங்களால் முடியாததையெல்லாம் இன்னொருவர் செய்து கொண்டிருக்கிறார். அப்படியிருக்க உங்களால் முடியாமல்போக காரணம் என்ன என்பதை நீங்களே ஆராய்ந்தறிந்து கொள்ள வேண்டும்.

    அதற்கு உங்கள் நேரத்தை நீங்கள் எப்படி செலவிடுகிறீர்கள் என்பதை முதலில் எழுதிப் பாருங்கள். எந்தச் செயலுக்கு அதிகமான நேரத்தை வீணடிக்கிறீர்கள் என்பதை கண்டறிந்து அதை கட்டுப்படுத்த முயற்சி செய்யுங்கள். மிச்சம்பிடித்த நேரத்தை உங்கள் லட்சியத்தை வெற்றிகொள்ளப் பயன்படுத்துங்கள்.

    பயம் வேண்டாம்

    பலரது வெற்றிகளை தட்டிப்பறிப்பதில் பயத்திற்கு முக்கிய இடமுண்டு. தோல்வி பயத்தில் ஒரு காரியத்தை தொடங்காமலே தோற்றவர்கள் நிறைய பேர். பல திறமைகள் நம்மிடம் இருப்பதையே ஒரு ஓரமாக ஒதுங்கியிருக்கும் பயம் மறக்கடிக்கச் செய்துவிடுகிறது.



    கல்விப் பருவத்தில் பயம் கொள்ள அவசியமில்லை. சிறுகச்சிறுகப் படித்துக் கொண்டே வந்தால் நிச்சயம் தோல்விக்கு வாய்ப்பே இல்லை. உண்மையில் முடியாததென்று எதுவுமில்லை. உங்களுடன் படிக்கும் சிலர் முழு மதிப்பெண் பெறும் பாடங்களில் உங்களால் தேர்ச்சிகூட அடையமுடியாதா என்ன?

    அடிப்படை பாடங்களான ஆங்கிலமும், கணிதமும், அறிவியலும் சிலருக்கு பயமுறுத்தும் பாடங்களாக அமைந்துவிடுவது உண்டு. நிச்சயம் இவை வாழ்வின் அடிப்படை அறிவை வளர்க்கத் தேவையான பாடங்களாகும். நீங்கள் எவ்வளவு சிரமப்பட்டேனும் இந்தப் பாடங்களில் தேர்ச்சிக்கு முயல வேண்டுமே தவிர பயந்து ஒதுங்கி விடக்கூடாது. பள்ளிக் கல்விக்குப் பிறகு, நீங்கள் விருப்பம்போல உங்கள் பிரியமான பாடப்பிரிவை படித்து வெற்றிபெறலாம். பயத்தை வெற்றிகொள்ள ஒரே ஒரு மந்திரச்சொல்லை மனதில் உச்சரியுங்கள், அது “என்னால் முடியும்” என்பதுதான்!

    புலம்பாதீர்கள்...

    லட்சியங்களை கோட்டைவிட்டுவிட்டு ‘என்னால் முடியவில்லையே’ என்றும், ‘எனக்கு அது கிடைக்கவில்லையே’ என்றும் புலம்பிக் கொண்டிருக்காதீர்கள். உங்கள் இயலாமைக்கு பெற்றோரையோ, ஆசிரியரையோ, மற்ற எவரையுமோ குற்றம் சொல்லாதீர்கள்.

    உங்களின் செயல்பாடுகள் முழுமையாகவும், முயற்சிகள் சரியானதாகவும் இருந்தால், இப்போது வெற்றி நழுவிப்போயிருந்தால், அடுத்தமுறை நிச்சயமாக அது சாத்தியமாகும், வெற்றி கைகூடும். அதற்காக அழுது புலம்புவதோ, யார்மீதும் குற்றம் சொல்வதோ தீர்வாகாது. கடந்த முறை உங்கள் லட்சியம் நழுவிப்போனதற்கான காரணத்தை ஆராய்ந்து, இந்த முறை நிச்சயம் அந்த வெற்றியை ருசிப்பது என உறுதியுடன் செயல்படுங்கள்.

    திட்டமும், செயலும்...


    உங்கள் லட்சியத்தை உறுதியாக அடைய நீங்கள் பின்பற்ற வேண்டியது, சரியான திட்டமிடலும், செயல்பாடும்தான். இந்த லட்சியத்தை ஏன் தேர்வு செய்தீர்கள்? அது உங்கள் வாழ்க்கையை எப்படி வளப்படுத்தும்? அதில் ஏன் நீங்கள் தோல்வி அடையக்கூடாது? என்பதை தெளிவாக சிந்தனை செய்யுங்கள்.

    அதை வென்றுமுடிப்பது எப்படி? என திட்டமிடுங்கள். அதற்கு எதையெல்லாம் தடை செய்ய வேண்டும், எதை தியாகம் செய்ய வேண்டும், எந்த விஷயங்களை முன்னுரிமை கொடுத்து செய்ய வேண்டும்? என முடிவெடுங்கள். அதன்படி செயல்படுங்கள்.

    உங்கள் செயல்களை அவ்வப்போது ஆராயுங்கள். வெற்றியை நோக்கி சீராக சென்று கொண்டிருக்கிறீர்களா? என்பதை உறுதிப்படுத்துங்கள். நிச்சயம் நினைத்ததை நிறைவேற்றி முடிக்கலாம்.

    உங்கள் சபதங்களை நிறைவேற்ற தடையாக இருக்கும் இந்த விஷயங்களில் நீங்கள் கவனமாக இருந்தால், உங்கள் புத்தாண்டு கனவுகள் எளிதில் நிறைவேறிவிடும். வெற்றி அடைய வாழ்த்துக்கள்.
    வீட்டை விட்டு வெளியே வரும் பெண்களுக்கு, எண்ணிலடங்கா பிரச்சினைகள், பாலியல் அத்துமீறல்கள் நாள்தோறும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
    சமீபத்தில், சென்னையில் உள்ள பெண்கள் தங்கும் விடுதி காப்பகம் ஒன்றில் ரகசிய கேமராக்கள் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள குளியலறை, உடை மாற்றும் அறை, தூங்கும் பகுதி என எல்லா இடங்களிலும் கேமராக்கள் பொருத்தப்பட்டு ஆண் உரிமையாளரால் கண்காணிக்கப்பட்டிருக்கிறது. இச்சம்பவம் பெண்களிடையேயும், குறிப்பாக பல்வேறு ஊர்களிலிருந்து வேலைக்காக பெண்களை அனுப்பி வைத்திருக்கும் பெற்றோர்களையும் அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது. ஒரு வீட்டில்தான் இவ்விடுதி நடத்தப்பட்டிருக்கிறது.

    கீழ் தளத்தில் வீடு, மேல் தளத்தில் காப்பகம் என இயங்கி வந்திருக்கிறது. பகலில் பெண்கள் வேலைக்குச் சென்றதும், அதே இடம் அலுவலகமாகவும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அந்த சமயத்தில்தான், கேமராக்கள் வெவ்வேறு இடங்களில் பொருத்தப்படுவதும், அதில் உள்ள காட்சிகள் பார்க்கப்படுவதுமாய் இருந்திருக்கிறது. இதற்கு பயன்படுத்திய கேமரா, உளவுத்துறை உபயோகப்படுத்தும் வகையைச் சேர்ந்தது.

    துல்லியமாக காட்சிகளைப் பதிவு செய்யக் கூடியது. நாட்டைப் பாதுகாப்பதற்கு பயன்படுத்தக் கூடிய ஒரு கருவி, பெண்களின் வாழ்க்கையை சீரழிப்பதற்கு ஒரு காமுகனின் கையில் இருந்ததுதான் வேதனை. அதுவும் ஆன்- லைன் வர்த்தகத்தில் சுலபமாக வாங்கியிருக்கிறான். இந்த ஒரு சம்பவம்தான், தற்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

    இதுபோல், வீட்டை விட்டு வெளியே வரும் பெண்களுக்கு, எண்ணிலடங்கா பிரச்சினைகள், பாலியல் அத்துமீறல்கள் நாள்தோறும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும், படிப்பு, பயிற்சி வகுப்புகள், வேலை போன்றவற்றுக்காக சென்னையை நோக்கி வருகிறார்கள். இப்படி பெற்றோர், உற்றார், உறவினர்களை விட்டு வரும் அவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டுவது இம்மாதிரியான தங்கும் விடுதிகள்தான்.

    ஆனால், தற்போது வேலியே பயிரை மேயும் நிலைமை ஆகிவிட்டது. வியாபாரநோக்கில் மூலைக்கு மூலை திடீர் விடுதிகள் தோன்றிவிடுகின்றன. அப்பகுதியின் செல்வாக்கு மிக்கவர்களால் தொடங்கப்படும் இவ்விடுதிகள் பல்வேறு குற்றச் செயல்களுக்கும் உள்ளாக்கப்படுகிறது.

    ஒரு விடுதி ஆரம்பிக்கப்பட வேண்டுமானால், தீயணைப்பு, காவல்துறை, மாநகராட்சி, சுகாதாரத்துறை, வருவாய்த் துறை ஆகியவற்றில் உரிமம் பெற்று, இறுதியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும் . சரியான உள்கட்டமைப்பு வசதிகளுடனும், பாதுகாப்புடனும் கட்டடம் இயங்க வேண்டும். பெண்கள் விடுதியில் கண்டிப்பாக குறைந்தபட்சம் ஒரு பெண் விடுதி கண்காணிப்பாளர், ஒரு பாதுகாவலர் இருக்க வேண்டும்.

    அங்கு தங்கியிருக்கும் பெண்கள் எங்கு வெளியே செல்கிறார்கள், திரும்பும் நேரம், அவர்களை விடுதிக்குள் சந்திக்கும் நபர்களின் விவரங்கள் போன்றவற்றை குறித்துக் கொள்ள வேண்டும். விடுதியால் வழங்கப்பட்ட அடையாள அட்டை உள்ளவர்களுடன் மட்டுமே அவர்களை அனுப்ப வேண்டும். ஆனால் இதுபோன்ற விதிமுறைகள் கொண்ட விடுதிகள் மிக மிகக் குறைவு.

    ஆரம்பத்தில் சேரும்போது நல்ல தரமான சாப்பாடு, வாரம் ஒருமுறை அசைவம், அலுவலகத்திற்கும் உணவு கட்டித்தரப்படும் என பல வாக்குறுதிகள் கொடுக்கப்படுகின்றன. ஆனால், சில நாள்களிலேயே இவை அனைத்தும் பொய்யாகி விடுகின்றன. எதிர்த்து கேட்டால், வேறு விடுதி தேடும் நிலைமை வரும். ஏற்கெனவே தங்கியிருந்த விடுதியிலிருந்து தாங்கள் கட்டிய முன்பணத்தைக் கேட்டால் அதுவும் சரியான நேரத்துக்கு கிடைக்காமல் அலைக்கழிக்கப்படுவார்கள்.

    இதற்கு தற்போது இருக்கும் விடுதியே பரவாயில்லை என்று பலர் சகித்துக் கொள்கிறார்கள். விடுதிக்குள்ளும் தங்கியிருப்பவர்களிடையே திருட்டு, மனக் கசப்பு, தவறான பழக்கவழக்கம் என ஏகப்பட்ட பிரச்சினைகள் உலா வரும். இவற்றையெல்லாம் வீட்டில் கூறினால், பெற்றோர் பயப்படுவர். பலவித கனவுகளுடன் வரும் தங்களை, திரும்ப வீட்டிற்கு வரச்சொல்லி விடுவர் என பெண்கள் மறைத்து விடுகின்றனர்.

    இவற்றையெல்லாம் சகித்துக் கொண்டாலும், உச்சக்கட்டமாய், பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும்போது விழித்துக் கொள்வது அவசியம். எனவே, பெண்கள், பெற்றோர் என அனைவருக்கும் இதைப் பற்றிய விழிப்புணர்வு தேவை. பெண்கள் ஒரு விடுதியில் சேரும்போது, அவ்விடுதி பாதுகாப்பானதா, முறையாக பதிவு செய்யப்பட்டிருக்கிறதா, பெண் விடுதிக் காப்பாளர் இருக்கிறாரா என்பதை உறுதி செய்தபின்னரே சேர வேண்டும்.

    விடுதியில் சேர்ந்த பின்னும், பெண்கள் எப்போதும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தங்களின் மொபைல்களில் ஹிட்டன் கேமரா டிடெக்டர் ஆப் போன்ற செயலிகளை பொருத் திக் கொள்ளலாம். தற்கொலை போன்ற எந்தவொரு தவறான முடிவுக்கும் செல்லாமல், தங்கள் பிரச்சினைகளை பெற்றோரிடமோ, உறவினர்களிடமோ வெளிப்படையாக கூறவேண்டும். அரசு வகுத்துள்ள விதிமுறைகளின்படி செயல்படாத விடுதிகளைப் புறக்கணிக்கவேண்டும். அது பற்றிய தகவல்ளை, புகார்களை காவல்துறையிடம் தெரிவிக்க வேண்டும்.

    கலைச்செல்வி சரவணன், எழுத்தாளர்
    பெண்களே வீட்டிலிருந்து புறப்படும் முன் சிலவற்றை மறக்காமல் செய்யப் பழக வேண்டும். வெளியில் செல்லும் போது பெண்கள் மறக்காமல் செய்ய வேண்டியவற்றை அறிந்து கொள்ளலாம்.
    எங்காவது புறப்படுவது போதெல்லாம் கடிகாரம் வேகமாக சுற்றுவது போல இருக்கும். என்னது ஒன்பது மணியாடுச்சா" என சத்தமாகவே சொல்லிக் கொண்டு, அவசர அவசரமாக டிபனைச் சாப்பிட்டு விட்டு, வீட்டை விட்டு கிளம்பி பஸ் ஸ்டாப்புக்கு கிட்டத் தட்ட ஓடிவோம்.

    நெருக்கியடித்து பஸ்ஸில் ஏறி, டிக்கெட் எடுக்கும் போது தான் 'வீட்டை ஒழுங்காக பூட்டினோமா' என்கிற சந்தேகம் வரும். பிறகு, சந்தேகங்கள் ஒவ்வொன்றாக அதிகரித்து விடும். அது மெல்ல பதட்டத்தை அதிகரிக்கச் செய்து, அடுத்த பஸ் ஸ்டாப்பில் இறங்கி, வீட்டை நோக்கி செல்ல ஆரம்பித்து விடுவோம்.

    இது அடிக்கடி நடந்தால் அலுவகலமோ வெளியிலோ செல்லும் போதெல்லாம் டென்ஷன் தான். அதனால் வீட்டிலிருந்து புறப்படும் முன் சிலவற்றை மறக்காமல் செய்யப் பழகலாமே பெண்களே!

    * சிலிண்டரிலிருந்து கேஸ் அடுப்புக்குச் செல்லும் ரெகுலேட்டரை ஆஃப் பண்ண வேண்டும். வழக்கமாக எல்லோரும் சொல்வது தான். ஆனால் கொஞ்சம் கவனக்குறைவாக இருந்தால், சேதமும் அதிகமாகும் அல்லவா. அதனால் சமையல் வேலைகள் முடிந்ததும் மறக்காமல் ரெகுலேட்டரை ஆஃப் செய்து விடுங்கள். ஒரு வேளை அப்படியே செய்தாலும் வீட்டிலிருந்து புறப்படும் முன் அவசியம் அதை செக் பண்ணத் தவறாதீர்கள்.

    * பாத்ரூம், கழிவறை, சமையலறை உள்ளிட்ட இடங்களில் இருக்கும் தண்ணீர் டேப்களை நீர் சொட்டாமல் மூடப்பட்டிருக்கிறதா எனப் பாருங்கள். ஏனெனில் ஒவ்வொரு சொட்டாக சொட்டினால் நீங்கள் திரும்ப வருவதற்குள் வாளிக் கணக்கில் நீர் விரயமாயிருக்கும். நீரைச் சேமிப்பது நமது கடமையும் அல்லவா.



    * சமையல் செய்யும் போது சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட பாத்திரங்களை அவசரத்தில் மூடாமல் மறந்திருப்பீர்கள். அதனால் சமையல் முடிந்த பிறகோ, வீட்டிலிருந்து புறப்படும் முன்போ மறக்காமல் செக் பண்ணாவிட்டால், எறும்பு, பூச்சிகள் புகுந்து பொருட்கள் கெட்டுவிடும்.

    * பலரின் வீட்டில் குடும்ப உறுப்பினர் போல ஆகி விட்டது பிரிட்ஜ். ஆனால், அது கெட்டுப் போகாமல் பாதுகாக்கிறது என்பதற்காக சில பொருட்களை, பல நாட்களாக அதிலே வைத்திருப்பீர்கள். அதிலிருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியிருக்கும். அதை குப்பையில் எறிய வேண்டும் என நினைத்து மறந்திருப்பீர்கள். ஆனால் வெளியே சென்று வர பல மணிநேரமாகும் எனில் அதை பிரிட்ஜைத் திறந்து ஒருமுறை செக் பண்ணி விடுவதே நல்லது.

    * பீரோவைத் திறந்திருப்போம் ஏதோ நினைவில் சாவியை பீரோவிலேயே வைத்திருப்பீர்கள். பிறகு மற்ற வேலைகளில் மூழ்கியிருப்பீர்கள். அது இயல்பு தான். ஆனால், வெளியே புறப்படும் போது, அப்படி இருப்பது நல்லதல்ல. அதனால் மறக்காமல் அதைப் பத்திரப்படுத்துங்கள்.

    * புறப்படும் முன் வீட்டுக்குள் ஏதேனும் மறந்து விட்டோமா என்று சுற்றிப் பார்ப்பதுடன் வெளியே வந்து விடுவீர்கள். ஆனால் வீட்டின் வேறு பகுதியில் துணியைக் காயப் போட்டிருந்தால், அதுவும் வெளியிருந்து யாரேனும் எடுக்கும் வசதியில் இருந்தால் அவசியம் அதை எடுத்து விடுங்கள். அது, உங்களுக்கோ வீட்டினருக்கோ மிக விருப்பமான உடைகளாக கூடவே இருக்கக் கூடும்.

    * அயர்ன் பண்ணும் போதோ, மிக்ஸியில், கிரைண்டரில் அரைக்கும் போதோ, மின்சாரம் போயிருக்கும் ஏதோ நினைவில் ஸ்விட்சை ஆஃப் பண்ண மறந்திருப்பீர்கள். வீட்டிலிருந்து புறப்படும் வரை மின்சாரம் வந்திருக்காது. அதனால் அப்படியே விட்டு விட்டுப் போய் விடுவீர்கள். அதனால் புறப்படும் முன் ஸ்விட்ச் போர்டு அனைத்தையும் செக் பண்ண மறக்காதீர்கள். இது போன்ற மின் சாதனப் பொருட்களில் நீர் பட்டு அல்லது நீண்ட நாட்களுக்கு பயன்படுத்தாமல்
    திரும்பவும் பயன்படுத்தும் போது என்னென்ன செய்ய வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

    * கடைசியாக, வாசல் கதவைப் பூட்டும் போது, பதட்டத்தில் சரியாக பூட்டாமல் விடுவோர் அதிகம். அதனால், அந்த பத்து நொடிகளை மிகவும் நிதானமாக இருப்பது பெரும் நிம்மதியைக் கொடுக்கும். அதோடு சாவியை உங்களின் ஹேண்ட் பேக்கில் பத்திரப்படுத்தவும் மறக்காதீர்கள்.
    சபரிமலைக்கு பெண்கள் சென்றதற்கு எதிராக திருவனந்தபுரம் அருகே நடந்த போராட்டத்தில் பா.ஜனதா தொண்டர்கள் மற்றும் போலீஸ் இடையே மோதல் ஏற்பட்டது. #Sabarimala #BJP
    திருவனந்தபுரம்:

    சபரிமலை அய்யப்பன் கோவிலில், இதுவரை இல்லாத வகையில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களையும் அனுமதித்து சுப்ரீம் கோர்ட்டு கடந்த செப்டம்பர் மாதம் 28-ந் தேதி உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்று வருகிறது. பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில் மாநிலத்தில் உள்ள இடதுசாரி அரசு ஸ்திரமாக இருந்தது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிற்கு பின்னர் கோவில் திறக்கப்பட்ட போது பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றதால் அவர்கள் செல்ல முடியவில்லை. பெண்களையும் அனுமதிப்பதற்கு எதிராக பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்து அமைப்புகள் தீவிரமாக போராட்டம் நடத்தி வருகிறது.

    இந்நிலையில் இன்று அதிகாலை 3.45 மணி அளவில் கேரளாவை சேர்ந்த பிந்து, கனகதுர்கா இரு பெண்கள்  சபரிமலைக்கு போலீஸ் பாதுகாப்புடன் சென்று அய்யப்பனை தரிசனம் செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.



    சபரிமலைக்கு பெண்கள் சென்றதற்கு எதிராக திருவனந்தபுரத்தில் பா.ஜனதாவினர் தரப்பில் போராட்டம் நடைபெற்றது. அப்போது பா.ஜனதா தொண்டர்கள் மற்றும் போலீஸ் இடையே மோதல் நேரிட்டது. #Sabarimala #BJP
    கேரளாவைச் சேர்ந்த 2 பெண்கள் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர். #SabarimalaProtest #SabarimalaWomen
    சபரிமலை:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு சபரிமலை கோவில் ஆச்சாரத்திற்கு எதிரானது என்று கூறி ஐயப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கோவில் நடை திறந்த நாள் முதல் அங்கு சென்ற இளம்பெண்கள் பக்தர்களால் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர்.

    ஆனால் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவதில் உறுதியாக உள்ள கேரள அரசு, சபரிமலை செல்ல விரும்பும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க தொடங்கியது.

    இந்த நிலையில் கேரள மாநிலம் கோழிக்கோடு கொயிலாண்டியைச் சேர்ந்த பிந்து, மலப்புரத்தைச் சேர்ந்த கனகதுர்கா ஆகியோர் கடந்த மாதம் 24-ம் தேதி அதிகாலை இருமுடி கட்டி பம்பையில் இருந்து சன்னிதானம் புறப்பட்டனர். பம்பை போலீஸ் பாதுகாப்புடன் சென்ற அவர்கள் அப்பாச்சிமேடு வரை தடங்கலின்றி நடந்து சென்றனர்.

    அப்பாச்சிமேடு சென்றதும் நூற்றுக்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் திடீரென அங்கு குவிந்து போராட்டம் நடத்தியதால் அவர்களை மேற்கொண்டு அழைத்துச் செல்ல முடியவில்லை. போராட்டம் தீவிரமடைந்ததால் பெண்கள் இருவரும் சபரிமலையில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டனர்.



    இந்நிலையில், அவர்கள் நேற்று மீண்டும் போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலைக்கு புறப்பட்டனர். இன்று அதிகாலை 3.45 மணிக்கு  இருவரும் சன்னிதானம் சென்று ஐயப்பனை தரிசனம் செய்துள்ளனர். அவர்கள் 18 படி ஏறாமல் மற்றொரு வாசல் வழியாகச் சென்று ஐயப்பனை தரிசனம் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. பெண்கள் இருவரும் கோவிலுக்குள் செல்லும்போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி உள்ளது. #SabarimalaProtest #SabarimalaWomen
    ×