search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95284"

    புத்தாண்டு பிறந்திடும் போது நமது முன்னேற்றத்தை தடுக்கக்கூடிய பழைய எண்ணங்களை, செயல்முறை, நடவடிக்கைகளை மாற்றி அமைத்து புதிய தீர்மானத்தை மேற்கொண்டு அதற்கேற்ப செயல்பட தொடங்குவோம்.
    புத்தாண்டு பிறந்திடும் போது நம் வாழ்வில் புதிய எண்ணங்கள் உதயமாகும். அந்த வகையில் நமது முன்னேற்றத்தை தடுக்கக்கூடிய பழைய எண்ணங்களை, செயல்முறை, நடவடிக்கைகளை மாற்றி அமைத்து புதிய தீர்மானத்தை மேற்கொண்டு அதற்கேற்ப செயல்பட தொடங்குவோம்.

    பொதுவான புத்தாண்டு உறுதிமொழிகள்

    உலகளவில் எடுக்கப்படும் புத்தாண்டு உறுதிமொழிகள் என்பது உடல் நலத்தை மேம்படுத்துதல், உடல் எடை குறைப்பு, உடற்பயிற்சி செய்தல், மது, புகைபிடித்தல் போன்ற தீய பழக்கங்களை குறைத்தல் போன்றவையாகும். அதுபோல் நேர்மறை எண்ணங்களை வளர்க்க செய்வது, வாழ்க்கையை அனுபவித்து வாழ்தல், அதிக மகிழ்ச்சி மற்றும் சந்தோஷமான சூழலை பேணுதல் போன்றவாறு நமது உடல் நலம் மற்றும் மனநலனை பாதுகாக்கும் வகையிலான உறுதிமொழிகள் எடுக்கப்படுகின்றன.

    பொருளாதாரத்தை மேம்படுத் தும் வகையில் அதிக செலவுகளை கட்டுப்படுத்துதல், கடன்களை அடைத்தல், நிதி நிலைமையை மேம்படுத்த முயற்சிகள், கடன்கள் பெறாமல் வாழ்க்கையை நடத்துவது போன்றவையும், செய்யும் பணி சார்ந்த உறுதி மொழிகள் எடுக்கப்படுகின்றன.

    ஒவ்வொரு ஆண்டும் தான் செய்கின்ற பணியில் முன்னேற்றம் பெறுவது, பதவி உயர்வது, அதிக சம்பளம் பெறுவது போன்ற லட்சியங்களை அடைய ஏற்ற உறுதிமொழிகளை ஆண்டின் தொடக்கத்தில் எடுத்துக் கொள்கின்றனர்.

    தொழில் செய்வோர் தங்கள் தொழிலை இந்தாண்டு கூடுதல் லாபத்துடன் செய்ய முயற்சிப்பது, தொழிலை விரிவு படுத்துவது, புதிய கூடுதல் தொழில்களை உருவாக்குவது, போன்ற புதிய உறுதிமொழிகளை புத்தாண்டில் எடுத்துக் கொள்கின்றனர். புத்தாண்டு உறுதிமொழிகள் என்பவை நம் வாழ்வை வளப்படுத்துவது, மேம்படுத்துவதுடன் நாம் மேற்கொள்ளும் புதிய முயற்சிகளுக்கு உந்துதலாகவும் அமைகின்றன.

    பிரபலமான புத்தாண்டு தீர்மானங்கள்

    தினமும் அதிகாலையில் எழுந்திடுவேன், நேர மேலாண்மையை கடைபிடிப்பேன், புத்தாண்டில் என் உடல் எடையை குறைத்து கொள்வேன். ஆக்கமுடன் படிக்க முயல்வேன், என் அலுவலகம் மற்றும் வீட்டை சுத்தமாக வைத்திருப்பேன், குடும்பத்தினருடன் நேரம் செலவழிப்பேன். தினசரி நடைபயிற்சி மேற்கொள்வேன், இந்தாண்டில் புதிய வீடு வாங்குவேன், குடும்பத்தினர் உடன் புதிய இடங்களுக்கு சுற்றுலா செல்வேன், புதிய கல்வி சார்ந்த விஷயங்களை கற்றுக் கொள்வது, சமூக நலப்பணிகளை மேற்கொள்வது என்பது போன்ற புத்தாண்டு தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன. உடலினை அழகுபடுத்துதல், உடற்பயிற்சி மேற்கொள்வது போன்ற தீர்மானங்கள் அதிகளவில் எடுக்கப்படுகின்றன.
    பெண்களுக்கும் ஆண்களுக்கு இணையான உரிமைகளும், பாலின சமத்துவமும் கிடைக்க வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கையாக இருக்கிறது.
    பெண்களுக்கும் ஆண்களுக்கு இணையான உரிமைகளும், பாலின சமத்துவமும் கிடைக்க வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கையாக இருக்கிறது. ஆனாலும் உலக அளவில் இருபாலரிடையே சம உரிமை நிலைநாட்டப்படுவதில் சீரற்ற தன்மையே நிலவுகிறது. இந்த நிலையில் உலக பொருளாதார கூட்டமைப்பு நடத்திய ஆய்வில் ஆசியாவில் பாலின சமத்துவத்தை பின்பற்றும் நாடுகளின் பட்டியலில் பிலிப்பைன்ஸ் முதலிடம் பிடித்துள்ளது. கல்வி, சுகாதாரம், பொருளாதார பங்களிப்பு, அரசியல் அதிகாரமளித்தல் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் இந்த தரவரிசைப்பட்டியல் அமைந்திருக் கிறது.

    பிலிப்பைன்ஸ் நாட்டில் ஆண் - பெண் இடையேயான பாலின இடைவெளி 79 சத வீதம் வரை களையப்பட்டு இருப்பதாகவும், பெண்கள் கல்வியில் சாதனை படைத்திருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதேவேளையில் தெற்கு ஆசிய நாடுகளின் பட்டியலில் வங்காள தேசம் முன்னிலையில் இருக்கிறது. அங்கு ஆண்-பெண் இடையேயான பாலின இடைவெளி 72 சதவீதம் குறைந்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த நாடு பொருளாதார நிலையிலும் முன்னேற்றம் அடைந்திருக்கிறது. தெற்கு ஆசிய நாடுகள் பட்டியலில் இந்தியா 4-வது இடத்தில் இருந்தாலும் உலக அளவில் 108-வது இடத்தில்தான் இருக்கிறது. மற்ற ஆசிய நாடுகளான இலங்கை (100-வது இடம்), நேபாளம் (105), மாலத்தீவு (113), பூட்டான் (122) ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன. 149 நாடுகளை அடிப்படையாக கொண்டு வெளியிடப்பட்ட இந்த பட்டியலில் பாகிஸ்தான் மிகவும் பின் தங்கிய நிலையில் (148) இருக்கிறது.

    உலக அளவில் பாலின சமநிலையை கடைப்பிடிக்கும் நாடுகளின் பட்டியலில் ஐஸ்லாந்து முதலிடம் பிடித்திருக்கிறது. நார்வே, ஸ்வீடன், பின்லாந்து போன்ற நாடுகள் முறையே அடுத் தடுத்த இடங்களில் இருக்கின்றன. இங்கிலாந்து 15-வது இடத்திலும், கனடா 16-வது இடத்திலும், அமெரிக்கா 51-வது இடத்திலும், சீனா 103-வது இடத்திலும், ஜப்பான் 110-வது இடத்திலும், கொரியா 115-வது இடத்திலும், துருக்கி 130-வது இடத்திலும், சவுதி அரேபியா 141-வது இடத்திலும் இருக்கின்றன. ஏமன் கடைசி இடத்தில் இருக்கிறது.

    பல நாடுகளில் பெண்கள் தொழில்துறையில் ஆண்களுக்கு இணையாக உயர் பதவியில் இருக்கிறார்கள். நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திலும் முக்கிய பங்களிப்பு வழங்கி வருகிறார்கள். ஆண் - பெண் தொழிலாளர்களிடையே ஊதியத்தில் இருந்துவந்த முரண்பாடுகளும் ஓரளவு தளர்த்தப்பட்டிருக்கிறது.
    திருமணத்திற்கு முன்பே பெண் கர்ப்பம் அடைவது என்பது நமது கலாசாரத்தில் இன்னும் ஏற்றுக்கொள்ளப்படாத விஷயம். திருமணத்திற்கு முன் கர்ப்பம் என்பதை சமூக சீர்கேடாகவும், அவமானத்திற்குரியதாகவும்தான் கருதுகிறோம்.
    திருமணத்திற்கு முன்பே பெண் கர்ப்பம் அடைவது என்பது நமது கலாசாரத்தில் இன்னும் ஏற்றுக்கொள்ளப்படாத விஷயம். காலம் மாறிவிட்டது என்று நாம் வாய்வலிக்க பேசினாலும், இது போன்ற கலாசாரம் சார்ந்த நடைமுறையில் நாம் எந்த மாற்றத்தையும் அனுமதிக்கமாட்டோம். திருமணத்திற்கு முன் கர்ப்பம் என்பதை சமூக சீர்கேடாகவும், அவமானத்திற்குரியதாகவும்தான் கருதுகிறோம்.

    இது பற்றி பெண்களிடம் போதிய விழிப்புணர்வு இ்ல்லை. நகரத்து பெண்களைவிட கிராமத்து பெண்களே, திருமணத்திற்கு முந்தைய கர்ப்பத்தால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இது தொடர்பான ஆய்வு ஒன்று சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அஜ்மீர் பகுதியில் 4500 இளம் பெண்களிடம் ஆய்வு நடத்தியுள்ளார்கள். 8 கிராமங்களிலும், 8 நகரங்களிலும் ஆய்வு நடந்துள்ளது.

    ஆய்வு முடிவில், ‘படிக்கச் செல்லும் பெண்களைவிட வீட்டில் இருக்கும் பெண்கள்தான் அதிகமாக, திருமணத்திற்கு முன்பே கர்ப்பம் அடைகிறார்கள். முறையற்ற கர்ப்பத்திற்கு பின்னால் எடுக்கப்படும் சில பிரச்சினைக்குரிய நடவடிக்கைகளால் அவர்கள் பலியாகவும் செய்கிறார்கள். குறிப்பிட்ட பகுதிகளில் கிராமப் பெண்கள் 60 சதவீதம் பேர் திருமணத்திற்கு முன் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். நகரத்து பெண்களில் இது 40 சதவீதமாக இருக்கிறது’ என்று கூறப்பட்டிருக்கிறது.

    குடும்ப நல அமைச்சகம் இது பற்றிய விவரங்களை சேகரித்து, குறிப்பிட்ட பகுதிகளில் ஊர் ஊராகச் சென்று ஆய்வு நடத்தியது. பின்பு அவர்கள் ‘கிராமத்து பெண்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை. மேலும் கிராமங்களில் தனிமைக்கான இடங்கள் அதிகமாக இருப்பதால் இது போன்ற தவறுகள் அதிகம் நடைபெறுகிறது. பின்விளைவுகளைப் பற்றி சிறிதும் சிந்திக்காமல் கிராமத்துப் பெண்கள் இதற்கு அப்பாவித்தனமாக பலியா கிறார்கள்’ என்று கூறி நடவடிக்கையில் இறங்கியுள்ளது.



    நகரத்துப் பெண்கள் ஓரளவு விஷயம் தெரிந்து தங்களை பாதுகாத்துக் கொள்கிறார்கள். திருமணத்திற்கு முன் ஏற்படும் வேண்டாத கர்ப்பத்தை சிதைத்துவிடும் வழிமுறைகளும் அவர்களுக்கு தெரிந்திருக்கிறது. மாட்டிக்கொள்ளும் பெரும்பாலான கிராமத்து பெண் களுக்கு கர்ப்பத்தை மறைக்கத் தெரிவதில்லை. அந்த சிக்கலிலிருந்து விடுபட முடியாமல் சமூகத்திற்கு பயந்து தற்கொலை முயற்சியிலும் ஈடுபடுகிறார்கள்.

    இந்த ஆபத்தான நிலையை மாற்ற, குடும்பநல அமைச்சகம் இதற்கென பணியாளர்களை நியமித்து கிராமம் கிராமமாகச் சென்று அங்கு வசிக்கும் திருமணமாகாத பெண்களை சந்தித்து இது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இது அவர்களுடைய எதிர்காலத்தை காப்பாற்றும் முயற்சியாக வரவேற்கப்படுகிறது.

    16 வயதிற்கும் குறைவான பெண்கள், திருமணத்திற்கு முந்தைய கர்ப்பத்தால் அதிகம் பாதிக்கப்படுவதாக இன்னொரு ஆய்வு குறிப்பிடுகிறது. அவர்களில் பெரும்பாலான பெண்கள் என்னவென்றே புரியாத வயதில் தங்களிடம் கட்டாய உறவுகொண்டதாக கூறியிருக்கிறார்கள். விளைவுகளை எதிர்கொள்ளும்போதுதான் அதன் தீவிரம் அவர் களுக்கு புரிகிறது.

    தாங்கள் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்பதை உணரும்போது வாழ்க்கையில் விரக்தியடைகிறார்கள். இதில் மிகவும் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், பாதிக்கப்பட்ட பெண்கள் தங்கள் பெற்றோர்களாலேயே வெறுக்கப்படுகிறார்கள். சமூகம் தங்களை மட்டுமல்லாமல் குடும்பத்தாரையும் இழிவாக பேசுவதால் மிகுந்த மனஉளைச்சலுக்குள்ளாகிறோம் என்று பாதிக்கப்பட்ட பெண்கள் பரிதாபமாக வாக்குமூலம் கொடுத்துள்ளனர். இந்த அறியாப் பெண்களை பெற்றோர்களும் கைவிடுவது ஆபத்தின் உச்சம்.

    பெரும்பாலான வெளிநாடுகளில் திருமணத்திற்கு முந்தைய கர்ப்பம் ஒரு இயல்பான விஷயமாகவே கருதப்படுகிறது. அதனால் அந்நாட்டு பெண்கள் அதனை அவமானகரமானதாக கருதுவதில்லை. எந்த மன உளைச்சலுக்கும் அவர்கள் உள்ளாவதில்லை. ஒருவேளை மனஉளைச்சலுக்கு உள்ளாகினாலும், பெற்றோர்களும், மனநல அமைப்புகளும், அரசாங்கமும் அவர்களுக்கு ஆதரவாக இருந்து, அந்த தாக்கத்தில் இருந்து அவர்களை மீட்டெடுத்துவிடுகிறது.



    இங்கு அத்தகைய நெருக்கடி ஏற்பட்டுவிட்டால், பாதிக்கப்பட்ட பெண் அதனை தனது பெற்றோரிடம் சொல்லவே பயப்படுகிறாள். மகள் அதை சொன்னாலும், உடனே பெற்றோர் மனஅழுத்தத்திற்கு உள்ளாகி பிரளயத்தை உருவாக்கிவிடுகிறார்கள். நெருக்கமானவர்களிடம் ஆலோசனை கேட்டாலும் தவறான வழியைக்காட்டி அவர்களை பெரும் சிக்கலுக்குள்ளாக்கிவிடுகிறார்கள். பாதிக்கப்பட்ட சில பெண்கள், அதற்கு காரணமான குற்றவாளிகளுக்கே திருமணம் செய்து வைக்கப்படுகிறார்கள். சிலருக்கு சொந்தத்தில் உடனடியாக மாப்பிள்ளை தேடிப்பிடித்து அவசர திருமணம் செய்து வைத்துவிடுகிறார்கள்.

    விடுதிகளில் தங்கிப்படிக்கும் பெண்கள், வேலைக்குப்போகும் பெண்கள், பெற்றோரைப் பிரிந்து உறவினர்களிடத்தில் வசிக்கும் பெண்கள் போன்றோரே திருமணத்திற்கு முன்பு அதிக அளவில் கர்ப்பமடைவதாக இன்னொரு ஆய்வு குறிப்பிடுகிறது. காதல் என்ற பெயரில் கற்பை பறிகொடுக்கும் பெண்கள் அதிகரித்துக்கொண்டிருப்பதாகவும் அந்த ஆய்வு குறிப்பிடுகிறது.

    ஜெய்ப்பூரில் உள்ள அஸ்ரா என்ற பெண்கள் பாதுகாப்பு மையத்தின் தலைவியான யாமினி ஸ்ரீவாஸ்தவ் இது பற்றி கூறுகையில், “சிறு வயதிலே பெண்களுக்கு சமூகத்தில் நிலவும் நெருடலான விஷயங்களை பற்றி சொல்லிக்கொடுக்க வேண்டும். பள்ளிகளில் பாலியல் கல்வியை கற்றுக்கொடுக்க வேண்டும். விஞ்ஞானரீதியான விளக்கங்களை அவர்கள் பெறும்போது, அவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். பாதுகாப்பு சூழலையும் உணர்வார்கள். காதல் என்ற பெயரில் வீட்டை விட்டு ஓடிவந்த பெண்கள்தான் திருமணத்திற்கு முந்தைய கர்ப்பத்தால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

    காதலிப்பது தவறல்ல. பெற்றோருக்கு தெரியாமல் வீட்டைவிட்டு ஓடிப்போவது தவறு. இந்தியாவில் 1000 பெண்களில் 86 பேர் திருமணத்திற்கு முன் கர்ப்பமாகிறார்கள் என்று புள்ளிவிவரம் கூறுகிறது. அதனால் பெண்கள் அனைவரும் இதில் விழிப்புடன் இருக்கவேண்டும். திருமணத்திற்கு முன்பு கர்ப்பம் அடைவதை தடுக்க கல்வி நிலையங்களும், சமூக அமைப்புகளும் முழு முயற்சி எடுக்கவேண்டும்” என்கிறார்.
    ஆண்-பெண் நட்பு என்பது நிச்சயம் எல்லைக்குட்பட்டது என்பதை பெண்கள் நினைவில் வைக்க வேண்டும். அந்த எல்லையைத் தாண்டினால் அளவுக்கு மீறிய பிரச்சினைகளையும், தொல்லைகளையும் சந்திக்க வேண்டியதிருக்கும்.
    பருவ வயதுப் பெண்கள் `பாய்பிரண்ட்’ உடன் சுற்றித் திரிவதை இயல்பாக பார்க்க முடிகிறது. ஆண் நண்பர்களை தங்கள் அழகுக்கு கிடைத்த அங்கீகாரமாக அனேக பெண்கள் நினைக்கிறார்கள். பாய் பிரண்ட் இல்லையென்று வருத்தப்படும் பெண்களும் உண்டு.

    பாய்பிரண்டுகளுடன் இருப்பதே `ஜாலி` என்ற நினைப்பும் பெண்களிடம் இருக்கிறது. இளம்பெண்கள் இப்படி நினைத்துக் கொண்டிருக்க, பெற்றோருக்குள் எப்போதுமே பிள்ளைகள் மீது உரிமையுள்ள பொறுமல் இருந்து கொண்டுதான் இருக்கிறது.

    `ஆண் பெண் நட்பால் கலாசாரமே சீரழிந்து வருகிறது` என்ற எண்ணமும் சமூகத்தினரிடையே உள்ளது. பள்ளி - கல்லூரிகளில் ஆண், பெண் இருவரும் சேர்ந்து படிக்கிறார்கள். இது குழந்தைப் பருவத்திலேயே இயல்பாக பழகும் வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது.

    ஆணும் பெண்ணும் சமூகத்தில் சமமாக, ஒன்றாக இருப்பது நல்லதுதான் என்றாலும், இப்படி இருக்கும்போது ஏற்படும் புரிதலும், தெளிவும் இல்லாத பழக்கம்தான் இன்றைய சீரழிவு நிலைக்கு முக்கிய காரணம். பணத்தை வாரி இறைத்து பெண்களை வளைக்கும் பாய்பிரண்டுகளும் பெருகி வருகிறார்கள்.

    வெறும் பொழுதுபோக்கிற்காக பழகும் பாய்பிரண்டுகளும் அனேகம். நல்ல நட்புடன் இருப்பவர்கள் கொஞ்சப்பேர் தான். எனவே ஆண்-பெண் நட்பு என்பது நிச்சயம் எல்லைக்குட்பட்டது என்பதை பெண்கள் நினைவில் வைக்க வேண்டும்.

    அந்த எல்லையைத் தாண்டினால் அளவுக்கு மீறிய பிரச்சினைகளையும், தொல்லைகளையும் சந்திக்க வேண்டியதிருக்கும் என்பதை மறந்து விடக்கூடாது.
    மதுரை திருநகரில் காதலிக்க மறுத்த வாலிபரை தாக்கியதாக 2 பெண்கள் உள்பட 3 பேர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
    மதுரை:

    மதுரை திருநகர் பாலாஜி நகரை சேர்ந்தவர் கண்ணன் (வயது 43). இவர் திருநகர் போலீசில் கொடுத்துள்ள புகாரில் தனக்கன்குளத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தபோது அங்கு பணியாற்றிய ஒரு பெண் ஒருதலையாக காதலித்தார்.

    இதனை ஏற்க மறுத்த நான் வேலையை ராஜினாமா செய்து விட்டு வேறுநிறுவனத்தில் சேர்ந்தேன்.

    இந்த நிலையில் அந்த பெண் தனது சகோதரி அவரது கணவரோடு வீடு புகுந்து தன்னை தாக்கியதாக குறிப்பிட்டுள்ளார்.

    இதுகுறித்து திருநகர் போலீசில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நத்தி வருகின்றனர். #tamilnews
    ரோடியம் பிளேட்டிங் என்பது நகை வடிவமைப்பில் பயன்படுத்தப்படுகிறது. அதாவது நகைகளில் ரோடியம் டிப் செய்வது (அ) ரோடியம் பிளஷிங் செய்வது என்பதன் மூலம் நகையின் உறுதி தன்மை அதிகரிக்கிறது.
    ரோடியம் பிளேட்டிங் என்பது நகை வடிவமைப்பில் பயன்படுத்தப்படுகிறது. அதாவது நகைகளில் ரோடியம் டிப் செய்வது (அ) ரோடியம் பிளஷிங் செய்வது என்பதன் மூலம் நகையின் உறுதி தன்மை அதிகரிக்கிறது. தேய்மானம் ஏற்படாது என்பதுடன் ஒளிபாய்ச்சும் தன்மையும் நகைகளில் ஏற்பட உதவி புரிகிறது. ஏனெனில் ரோடியம் ஒளி வீசும் உலோகம் என்பதால் இந்த ரோடியம் பிளேட்டட் செய்யப்பட்ட நகைகள் கீறல் பாதுகாப்பு திறன் கொண்ட நகையாக உள்ளன.

    ரோடியம் பிளேட்டிங் என்பது வெள்ளி நிறமுடைய நகைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. அதாவது வெள்ளி நகைகள், வெள்ளை தங்கம், பிளாட்டினம் மற்றும் பல்லடியம் போன்றவைகளில் பயன்படுத்தப்படுகிறது. ரோடியம் பிளேட்டிங் என்பதின் தடிமன் 0.75 முதல் 1.0 மைக்ரோன் அளவுகளில் தான் இருக்கும்.

    ரோடியம் என்பது உறுதியானது

    ரோடியம் என்பது மிகக்குறைவான அளவில் கிடைக்கக்கூடிய மிக மதிப்பு மிக்க உலோகம். அதாவது தங்கத்தைவிட 10 முதல் 25 மடங்கு விலை மதிப்புமிக்கது. ரோடியம் என்பது பிளாட்டினம் வகை உலோகத்துடன் சார்ந்த வகையில் இணைக்கப்பட்டுள்ளது. வெள்ளி நிறத்தில், அதிகபட்ச ஒளிரும் தன்மையுடன் உள்ளது. ரோடியம் என்பது சுலபமாக ஒரு வடிவத்திற்கு கொண்டு வரமுடியாத உலோகம். அதனால் இதனை கொண்டு நகைகள் செய்வதில்லை. அதன் காரணமாகவே பிற நகைகள் மீது ரோடியம் பிளேட்டிங் செய்யப்பட்டு அதனை மேம்படுத்த உதவுகிறது.

    ரோடியம் பிளேட்டிங் மிக பாதுகாப்பானது


    ரோடியம் பிளேட்டிங் என்பது மிக பாதுகாப்பானது. இதன் மேம்பட்ட ஒவ்வாமை தன்மை என்பதன் மூலம் அணிபவரின் தோல் பகுதியில் ஏதும் பாதிப்பு ஏற்படுத்தாது. ரோடியம் என்பது நிக்கல் போன்று எந்த ஒவ்வாமையும் ஏற்படுத்தாத தன்மை கொண்டது. பிற நகைகளால் ஏதும் ஒவ்வாமை ஏற்பட்டு இருப்பினும் ரோடியம் பிளேட்டிங் செய்யப்பட்ட நகைகள் அணிந்தால் எந்த பிரச்சினையும் இருக்காது.

    ரோடியம் பிளேட்டிங் செய்யும் முறை

    ரோடியம் பிளேட்டிங் செய்யும் முறை என்பது எலக்ட்ரோ பிளேட்டிங் முறையில் செய்யப்படுகிறது. இதற்கு முன் ரோடியத்தில் உள்ள கசடுகளை நீக்கிட வேண்டும். டிஸ்லிட் வாட்டர், நீராவி முறை மற்றும் எலக்ட்ரோ கிளினிங் முறையில் ரோடியம் சுத்தம் செய்யப்படுகிறது. எலக்டிரிகல் சார்ஜ் மூலம் குறைவான வெப்ப அளவில் மட்டுமே பிளேட்டிங் செய்ய வேண்டும். அதிக படியான வெப்ப அளவில் பிளேட்டிங் செய்தால் ரோடியம் கருப்பு நிறமாக மாறிவிடும்.

    ரத்தின கற்கள் வைத்த நகையில் ரோடியம் பிளேட்டிங் செய்வது கூடாது. அதாவது முத்து, தோப்பிஸ், பவளம், ஓபல், மாணிக்க மரகத கற்கள் பதித்த நகைகளில் ரோடியம் பிளேட்டிங் செய்யும் போது அதிலுள்ள சல்பரிக் ஆசிட் என்பது கற்களை பாதிப்படைய செய்யும். எனவே ரத்தின கற்கள் பதியப்பட்ட நகைகளின் மீது ரோடியம் பிளேட்டிங் செய்வது கூடாது.

    தங்க நகைகளில் ரோடியம் பிளேட்டிங்

    தங்க நகைகளின் மீது ரோடியம் பிளேட்டிங் செய்வது நடைமுறையில் உள்ளது. அதாவது மஞ்சள் நிறமான தங்க நகையின் மீது வெள்ளை நிறத்தை ஏற்படுத்தும் வகையில் ரோடியம் பிளேட்டிங் செய்யப்படுகிறது. இதன் மூலம் தங்க நகை கூடுதல் அழகு மற்றும் இரட்டை வண்ண சாயல் கொண்ட வகையிலான நகை அமைப்பை தருகின்றது.

    ரோடியம் பிளேட்டிங் என்பது அதிக நாட்கள் நீடிக்கிறது. அதாவது குறைந்த பட்சம் சில வருடங்கள் மட்டுமே அதன் மேற்பூச்சு நிலைத்து இருக்கும். அதிகமான பயன்படுகின்ற நகைகளில் குறைந்த பட்சம் 6 மாதங்கள் மட்டுமே ரோடியம் பிளேட்டிங் நிலைத்து இருக்கும்.

    விலை அதிகமான ரோடியம் பிளேட்டிங்


    ரோடியம் பிளேட்டிங் என்பது மிக அதிகமான விலை மதிப்பில் நிகழ்த்தப்படுகிறது. அதாவது விலைமதிப்புமிக்க ரோடியத்தை கொண்டு இப்பணி செய்யப்படுகிறது. அதற்கு ஏற்றாற்போல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அதாவது ரோடியம் பிளேட்டிங் செய்யப்படும் நகை அளவு, அதற்கென பயன்படுத்தப்பட்ட உலோக எடை போன்றவற்றை கணக்கிட்டே அதற்கு விலை நிர்ணயம் அமைகிறது. எனவே எந்த அளவு ரோடியம் பூச்சு செய்யப்பட்டது என்பதை அறிய அந்த நகையுடன் அதன் அளவு குறிப்பிட்ட அட்டை நகையோடு இணைந்தும் கிடைக்கின்றது. பளபளப்பான ரோடியம் பிளேட்டிங் சற்று விலை அதிகமானது என்றாலும் அது பூசப்பட்ட நகைகள் வரவும் அதிகரித்துள்ளது.
    பணி செய்யும் இடத்தில் சில சபலபுத்தி கொண்டவர்களும் இருக்கத்தான் செய்வார்கள். அவர்களிடம் இருந்து தப்பிக்கும் கலையை பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்கிறார்கள், உளவியலாளர்கள்.
    பணி இடத்தில் அனைவரும் பெண்களிடம் கண்ணியமாக நடந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. சில சபலபுத்தி கொண்டவர்களும் இருக்கத்தான் செய்வார்கள். அவர்களிடம் இருந்து தப்பிக்கும் கலையை பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்கிறார்கள், உளவியலாளர்கள்.

    சக ஆண் ஊழியர்கள் தொடக்கத்தில் நல்ல மாதிரி பட்டால்கூட அளவுக்கு அதிகமாக அவர்களிடம் பேச வேண்டாம். யாரை பற்றியுமே சரியான முடிவுக்குவர சிறிது காலம் தேவை. அதுவரை பொறுத்திருந்து, பிறகு நட்பு பாராட்டுவது நல்லது. பெண்களுக்கு அவர்கள் வேலை மிகவும் தேவையானதாக இருக்கலாம்.

    அந்த வருமானத்தை நம்பித்தான் அவர்களின் குடும்பமும், வருங்காலமும் இருக்கிறது என்கிற நிலைகூட இருக்கலாம். ஆனால் இதை எல்லாம் உங்கள் உயர் அதிகாரியிடம் சொல்லாதீர்கள். சொந்த சோகங்களை அதிகமாக வெளிப்படுத்தினால் “நான் இருக்கிறேன் உனக்கு, கவலைப்படாதே“ என்கிற போர்வையில் எல்லைமீறப் பார்க்கலாம்.

    உடை வி‌ஷயத்தில் சுயசிந்தனை இருப்பதில் தவறில்லை. என்றாலும் பொதுவாக ஆடை குறித்து ஒரு சில ஆண்களின் எண்ணம் கொஞ்சம் வேறுவிதமாகத்தான் இருக்கிறது. அதனால் ஆடை வி‌ஷயத்தில் கவனம் தேவை. அதே சமயம் உடையைவிட முக்கியம் உடல் மொழி. துணிச்சலான பெண்களிடம் வாலாட்டுவதைவிட பயந்து நடுங்கும் பெண்களிடம் எல்லைமீறப் பார்ப்பது சபலக்காரர்களுக்கு எளிது.



    பலரும் காரில் செல்லும்போது ஒன்றை மறந்து விடுவார்கள். டிரைவர் ஒருவர் இருக்கிறார் என்பதை மறந்துவிட்டு வீட்டின் அந்தரங்கங்களை எல்லாம் பேசிக் கொள்வார்கள். இதேபோல பணி இடத்திலும் ஒரு தவறு நடக்கலாம். தொலைபேசியில் அந்தரங்க வி‌ஷயங்களைப் பேசும்போது பிறர் கேட்க வாய்ப்பு உண்டு என்பதை மறக்க வேண்டாம்.

    எந்த நியாயமான காரணமும் இல்லாமல் மேல் அதிகாரி உங்களுக்கு தனி சலுகை எதையாவது அளித்தால், அதை உறுதியுடன் மறுத்து விடுங்கள். ‘எனக்குப் பிறந்த நாள்‘ என்று சுவீட் பாக்சை நீட்டினால், மறுப்பது நாகரிகமாக இருக்காது என்கிறீர்களா? வாங்கிக் கொள்ளுங்கள். உடனடியாக உங்கள் துறையிலிருக்கும் பிறரையும் கூப்பிட்டு, அந்த மேல் அதிகாரி முன்பாகவே, பகிர்ந்து கொள்ளுங்கள்.

    சக ஆண் ஊழியர்கள் ஜோக்குகள் என்ற பெயரில் இரட்டை அர்த்தத்துடன் பேசினால், உடனே உங்கள் எதிர்ப்பை பதிவு செய்துவிடுங்கள். அதைவிட முக்கியம் நீங்களும் அதுபோன்ற ஜோக்குகளை பகிர்ந்துகொள்ளாமல் இருப்பது. சக பெண் ஊழியர்களிடம் நட்பை வளர்த்துக் கொள்ளுங்கள். சபல ஆண் பணியாளர்களை எதிர்க்க இது உதவும்.

    உங்கள் முழு நம்பிக்கையைப் பெற்ற சக ஊழியர்களும் உங்களுக்கு உதவ முன்வருவர். தனித்தீவாக இருக்காதீர்கள். உங்கள் வேலையில் நீங்கள் மிகச் சிறப்பானவராக இருந்துவிட்டால், எந்த மேல் அதிகாரியும் உங்களை அலட்சியப்படுத்திவிடவோ, தவறான கண்ணோட்டத்தில் அணுகவோ முயற்சிக்க மாட்டார்கள். எனவே பணியில் திறமைசாலிகளாக விளங்க முயற்சியுங்கள்.

    வலைத்தள பாலியல் வியாபார மோகத்தில் பாதிக்கப்படுவது ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும்தான். ஆண்களும், பெண்களும் விழிப்போடும், ஒழுக்கத்தோடும் இருந்தால் அவர்களுக்கு மட்டுமல்ல, சமூகத்திற்கும் நல்லது!
    திருமணத்திற்கு பிறகுகூட இலைமறைவு காயாக அனுமதிக்கப்பட்ட பாலியல் உறவு, வெளிப்படையாக மார்க்கெட்டிற்கு வந்துவிட்ட பிறகு அதன் விலையும் உயர்ந்துவிட்டது. பொது இடங்களில் மற்றவர்களிடம் இதைப்பற்றி பேசவே தயங்கும் தலைமுறைகள் இன்று இல்லை. அவர்களுக்கு தேவைக்கு அதிகமாக திகட்ட திகட்ட எல்லாமுமே வலைத்தளங்களில் கிடைத்துவிடுகிறது. அவைகள் சமூகத்தில் ஏற்படுத்திய மோசமான விளைவுகளால் திருமணத்திற்கு முந்தைய பாலியல் உறவு என்பது சாதாரண விஷயமாகிவிட்டது.

    சமூக வலைத்தளத்திற்கு அடிமையாகியிருக்கும் இளைஞர்கள் பற்றி எடுக்கப்பட்ட சர்வே, ‘22-ல் இருந்து 34 வயது வரையிலான இளைஞர்கள் அதுவே கதியென்று கிடக்க பாலியல் விஷயங்களே காரணமாக இருக்கின்றன’ என்று குறிப்பிடுகிறது. அவர்களின் மாத வருமானத்தில் 30 சதவீதம் இதற்கே செலவாகிவிடுகிறது. இதில் பல ஏமாற்று வேலைகளும் நடக்கிறது.

    எந்த ஓட்டல் உணவு தேவைப்படுகிறதோ அதை ஆன்லைனில் பதிவுசெய்து பெற்றுக்கொள்ளலாம். அதன் மூலம் வீட்டில் இருந்தே விரும்பிய சுவையை ருசிக்கலாம். அதுபோல், ‘போட்டோவை பாருங்கள்.. தேவையை சொல்லுங்கள்.. வீட்டிற்கே அனுப்பிவைக்கிறோம்’ என்று சொல்லும் அளவுக்கு ஆன்லைன் ‘வியாபாரம்’ அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. இ்ந்த வியாபாரத்திற்கான விளம்பரங்களிலும் புதிய யுக்திகளை கையாளுகிறார்கள். அவர்களாகவே வயதுக்குதக்கபடி பெண்களை வகைப் படுத்திக்கொள்கிறார்கள். கல்லூரி மாணவிகள், குடும்பப் பெண்கள், அலுவலகம் செல்வோர் என்று தனித்தனியாக பிரித்து, ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொருவிதமாக கட்டணம் நிர்ணயித்து வலைத் தளங்களில் பகிரங்கமாகவே விளம்பரம் செய்கிறார்கள்.

    இத்தகைய விளம்பரங்களை பார்த்து, தங்களது பாலியல் செயல்பாடுகளை ரகசியமாக தொடர விரும்பும் இளைஞர்கள் பல்வேறு விதமான ஆபத்துக்களை இதில் சந்திக்கிறார்கள். ஏராளமான பொருள் இழப்புகளும், மன அழுத்தங்களும், குற்ற உணர்வுகளும் ஏற்படுகின்றன. ‘பிளாக்மெயில்’ செய்யப்படும் சிக்கல்களும் உண்டு.

    மனிதர்களில் வெளிப்படைத்தன்மை கொண்டவர்கள், ரகசியத்தன்மை கொண்டவர்கள் என்று இருவகையினர் உண்டு. வெளிப்படைத்தன்மை கொண்டவர்கள் எதையும் நேருக்கு நேர் சந்திக்க விரும்புவார்கள். பிரச்சினைகள் ஏற்பட்டாலும் சமாளிக்கலாம் என்ற தன்னம்பிக்கை அவர்களிடம் அதிகம் இருக்கும். அப்படிப்பட்டவர்கள் பாலியல் வேட்கை விஷயத்திலும் நேரடியான அணுகு முறையை கொண்டிருப்பார்கள். நண்பர்களுடன் சேர்ந்து செல்வார்கள். வெளிப்படையாக அதை பற்றி நண்பர்களிடம் பேசவும் செய்வார்கள்.



    இரண்டாவது வகையான ரகசியத்தன்மை கொண்டவர்கள் எல்லாவற்றையும் மறைமுகமாகவே நடத்த விரும்புவார்கள். இவர்கள் மனதில் என்ன இருக்கிறது என்பதையோ, இவர்கள் பெண்கள் விஷயத்தில் எத்தகைய குணாதிசயங்களை கொண்டவர்கள் என்பதையோ கண்டுபிடிக்க முடியாது. தங்களது அத்தனை செயல்பாடுகளிலும் ரகசியம் காக்கும் இவர்கள், பாலியல் வேட்கை விஷயத்தில் மர்மமாக நடந்துகொள்வார்கள். இப்படிப்பட்டவர்களே சமூக வலைத்தளம் தொடர்பான பாலியல் செயல்பாடுகளில் அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அவைகளில் ஏமாறுவது, ஏமாற்றத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் தற்கொலை முடிவெடுப்பது போன்றவைகளிலும் ஈடுபடுகிறார்கள்.

    ‘எல்லாம் வலைத் தளமயம்’ என்ற நிலை ஏற்பட்டுள்ளதால் மரபுரீதியான பாலியல் தொழிலில் ஈடுபட்டிருக்கும் பெண்கள், தங்கள் தொழில் நசிந்துபோய்விட்டதாக புலம்புகிறார்கள். ‘சந்தைக்கு வராமலே நேரடியாக கொள்முதல் நடந்துவிடுகிறது’ என்று புலம்புகிறார்கள். இ்ன்னொருபுறத்தில் இவர்களை நம்பி வாழ்ந்த இடைத்தரகர்கள் கூட்டமும், ‘வேலைவாய்ப்பு பறிபோய்விட்டதாக’ சொல்கிறது.

    இளைஞர்கள் வலைத்தள பாலியலை பாதுகாப்பாக நினைக்கிறார்கள். ஆனால் பெருமளவு பணத்தை அதில் இழந்துகொண்டிருக்கிறார்கள். இழப்புகளை அவர்களால் வெளியில் சொல்லமுடிவதில்லை. விளம்பரத்தின் மூலம் அவர்கள் ஏமாறும்போது, விளம்பரம் செய்தவர்கள் யார் என்றே தெரிந்து கொள்ள முடிவதில்லை. மர்மமானவர்களுக்காக தங்கள் மாதச் சம்பளங்களை இழந்துகொண்டிருக்கிறார்கள்.

    வீடியோ சாட், செல்போன் சாட் மூலம் பணத்தை இழப்பதோடு, அவர்களது பாலியல் எண்ணங்களும் பாதை மாறி சென்றுகொண்டிருக்கிறது. இணைய பக்கங்களில் "பேச விருப்பமா" என்று ஒரு அழகான பெண் படத்தைப் போட்டு விளம்பரம் செய்திருப்பார்கள். சரி பேசித்தான் பார்ப்போமே என்று பேச ஆரம்பித்துவிட்டால், மணிக்கணக்கில் பேசி பணத்தை இழக்கவேண்டியதிருக்கும். வலைத் தளத்தில் வலைவீசுபவர்களில் பெரும்பாலானவர்கள் போலியானவர்களே!

    இந்த வலைத்தள பாலியல் வியாபார மோகத்தில் பாதிக்கப்படுவது ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும்தான். வேலைவாய்ப்பு வழங்குவதாக கூறி பெண்களை ஆசைகாட்டி இந்த தொழிலுக்கு அழைத்துவந்து அவர்களது எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிவிடுகிறார்கள். இதனால் பாதிக்கப்பட்ட பெண்களின் பட்டியலும் வெகு நீளமாகவே இருக்கிறது. ஆண்களும், பெண்களும் விழிப்போடும், ஒழுக்கத்தோடும் இருந்தால் அவர்களுக்கு மட்டுமல்ல, சமூகத்திற்கும் நல்லது!
    சமூக வலைத்தளங்களில் பெண்களுக்கு எதிராக அவதூறு பரப்பும் வகையில் கருத்துக்களை தெரிவித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த நரசிங்கபுரத்தில் ஒரு அமைப்பு சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பெண்களுக்கு எதிராக அவதூறு பரப்பும் வகையில் சிலர் பேசி முழக்கமிட்டனர்.

    சாதிகளை விமர்சிக்கும் வகையிலும் கருத்துக்களை தெரிவித்தனர். இது வாட்ஸ்- அப், மற்றும் சமூக வலைதளங்களில் வெளிவந்தது.

    இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. திருவள்ளூர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்தநிலையில் நரசிங்கபுரம் பகுதியை சேர்ந்த 4 பேர் இதை செய்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சாலமன், அன்பரசு, வினோத் ஆகியோரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். அன்பழகன் என்பவரை தேடி வருகின்றனர். #tamilnews
    நம் பெண்கள் உலகின் சமீபத்திய ஹாட் டாக். எப்படி அணிந்தோம் எனத் தெரியாத அளவுக்கு ஏகப்பட்ட வித்தியாசமான தோடுகள் அணிவகுக்கத் துவங்கியுள்ளன.
    நம் பெண்கள் உலகின் சமீபத்திய ஹாட் டாக். எப்படி அணிந்தோம் எனத் தெரியாத அளவுக்கு ஏகப்பட்ட வித்தியாசமான தோடுகள் அணிவகுக்கத் துவங்கியுள்ளன.

    டபுள் சைடட்

    ஒரு பக்கம் சிறியது, இன்னொரு பக்கம் பெரியதுமாக இரண்டு பந்துகள் இருக்கும். மேலும் இவை ஒரு பக்கம் பூ அல்லது கல் என மாறி மாறி வரும். அதாவது திருகாணிக்கு பதில் இரண்டு பக்கமும் தோடுகளாக போடும் விதம். இவை சாலையோர கடைகளிலேயே ரூ.30 துவங்கி ஆன்லைனில் ரூ.250க்கு 12 கலர் காம்போக்களாகவும் கிடைக்கின்றன. இவைகள் மிருகங்களாகவும் வருகின்றன.

    ஹக்கி

    பெயரே ஹக்கி(அரவணை). காது மடலை அரவணைத்தபடி இருக்கும். சிறிய வகை வளையம், இதயம், சதுரம், அறுங்கோணம், ஸ்டார் வடிவ காதணிகள். இவை நம்மூர் கல்லூரிப் பெண்கள் தங்கத்தில் இரண்டாவது தோடாகவும் அணிவதைப் பார்க்கலாம். சிலவகை இதில் சின்ன செயின் ட்ராப்களும் இருக்கும். இவைகள் பிளாஸ்டிக் துவங்கி தங்கம், பிளாட்டினம், வைரம் வரையென பல விலைகளில் உண்டு. இவைகளை நயன்தாரா அடிக்கடி அணிவதைப் பார்க்கலாம்.

    பார்பெல்

    பார்ப்பதற்கு சிறிய அளவிலான ஜிம்மில் தூக்கப்படும் வெயிட் போல் இருக்கும். ஒரு சிலவகை நீளமான மேல்புற காது மடல்களை இணைக்கும்படியும் இருக்கும். இதற்கென காதில் பல துளைகளைப் போட்டுக்கொள்ளும் இளசுகளும் உண்டு. இவை ஆண்களாலும் அணியப்படும் காதணி வகை. இவைகள் சாதார ணமாகவே ஃபேன்ஸி கடைகளிலேயே ரூ.10 முதல் கிடைக்கிறது.



    பேக் ஸ்டட்

    முன்பக்கம் சின்ன ஸ்டட் மட்டுமே இருக்கும். பின்பக்கம் பெரிய அளவிலான பூக்கள். அல்லது வரிசையான கற்கள் என பார்க்க காது மடலை பின்பக்கத்திலிருந்து விரித்துப் பிடித்திருப்பது போல் இருக்கும். இவைகள் ரூ.100 முதல் தரத்திற்கு ஏற்ப ஆன்லைனில் கிடைக்கிறது.

    இயர் த்ரெட்

    காதில் மெல்லிய செயினில் சின்ன கல் அல்லது வளையம் தொங்கும். பார்க்க நூலை காதில் இரண்டு பக்கமாக தொங்கும்படி அணிந்திருப்பது போல் தோற்றம் கொடுக்கும். ரூ.200 முதல் ஆன்லைன் மற்றும் மால் கடைகளில் வாங்கலாம்.

    இயர் ஸ்பைக்

    காதுகளில் கூர்மையாக ஒன்றோ அதற்கு மேலோ என அப்படியே நிற்கும் படி அணியும் தோடுகள். ‘இருமுகன்’ படத்தில் ‘கண்ணை விட்டு’ பாடலில் நயன்தாரா அணிந்திருக்கும் மற்றுமொரு தோடு. இவைத் தவிர ‘டேங்லர்’ எனப்படும் பெரிய அளவிலான தொங்கும் தோடு, ‘இயர் கஃப்’ எனப்படும் காதுகளை கவ்விப் பிடித்துக்கொள்ளும் வகை. ‘ஸ்டட்’, ‘ட்ராப்ஸ்’, ‘ஹூப்’ தோடுகள் என தினந்தோறும் பயன்படுத்தும் வகைகளும் உண்டு.

    ஸ்லேவ்

    ஸ்லேவ்(அடிமை).அடிமைப் போல் தோடு ஒரு சங்கிலியுடன் காது மடலுடன் இணைக்கப்பட்டிருக்கும். இவை மாட்டலாக முடியுடன் அணியும் வகையிலிருந்து வந்த லேட்டஸ்ட் ரகம். இவைகள் கொஞ்சம் விலை அதிகம். ரூ.400 முதல் ஆரம்பம்.

    சமூகத்தின் கண்கள் என வர்ணிக்கப்படும் பெண்கள் உலகம் தோன்றிய காலம் முதலே தங்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான போராட்டத்தில்தான் வாழ்க்கையை ஓட்டி வருகின்றனர்.
    இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதையும் சமீபத்தில் ‘மீ டூ’ என்ற பெரும் புயல் ஒன்று தாக்கி ஓய்ந்திருக்கிறது. ஆண்டாண்டு காலமாக பணித்தலங்களிலும், சமூகத்திலும் தங்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் கொடுமைக்கு எதிராக பெண்கள் வெகுண்டெழுந்ததன் விளைவுதான் அந்த சூறாவளியாக சுழன்றடித்தது.

    சமூகத்தில் நல்லவர் போல வேடமிட்டு திரியும் பல பெருந்தலைகளின் பொய் முகங்கள் இந்த புயலில் அடித்து செல்லப்பட்டு உண்மை முகம் வெளிப்பட்டன. ஆணாதிக்க சமூகத்துக்கு சவுக்கடி கொடுத்தது மட்டுமின்றி, மங்கையர் அனுபவித்து வரும் துயர்களுக்கு எதிரான விழிப்புணர்வையும் ஏற்படுத்தியதில் ‘மீ டூ’ இயக்கம் பாராட்டு பெற்றது.

    ஏராளமான பெண் பிரபலங்கள் பகிரங்கமாக பாலியல் புகார் கூறிய போது, உலகறிந்த மகளிருக்கே இந்த நிலை என்றால், ஊரறியா பெண்டிரின் நிலைமை எப்படியிருக்கும்? என்ற கேள்வி எழுந்தது. பெண்களுக்கு வெளியில் எங்குமே பாதுகாப்பு இல்லை என்ற எண்ணமும் தோன்றியது.

    ஆனால் வெளியிடங்களை விட பெண்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டிய வீட்டில்தான் அவர்களுக்கு அதிக பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாக கண்டறியப்பட்டு உள்ளது. இதற்கு உதாரணமாக சமீபத்திய 2 நிகழ்வுகளை கூற முடியும்.

    ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த கடீரா என்ற இளம்பெண் கடந்த 13 ஆண்டுகளாக தனது சொந்த தந்தையால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு 2 குழந்தைகளுக்கு தாயாகி இருக்கிறார். இடையில் சிலமுறை கருக்கலைப்பும் செய்திருக்கும் அவர், தற்போது தந்தையின் கொடூரத்தை உலகறியச்செய்து தண்டனை பெற்றுத்தருவதற்காக கோர்ட்டுகளின் படியேறி வருகிறார்.

    அடுத்ததாக மதுரை பெத்தானியாபுரத்தை சேர்ந்த 4 வயது சிறுமியின் நிலை இன்னும் மோசமானது. இரவில் குடிபோதையில் வரும் அவளது தந்தை பெல்ட்டால் அடிப்பது, கடிப்பது, ஊசியால் குத்துவது என தனது பாலியல் வக்கிரங்களை சிறுமியிடம் காட்டியுள்ளார். மாதர் சங்கத்தினரின் தலையீட்டால் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

    மேற்படி சம்பவங்கள் அனைத்தும் ஒரு பானை சோற்றுக்கு ஒருசோறு பதம் என்பது போலத்தான். ஏனெனில் சமீபத்தில் ஐ.நா. வெளியிட்டு இருக்கும் அதிர்ச்சிகரமான ஆய்வு முடிவொன்று இதைத்தான் உறுதி செய்திருக்கிறது.



    அதாவது பெண்கள் வாழ்வதற்கு மிகவும் ஆபத்தான இடமாக அவர்களது சொந்த வீடே இருப்பதாக ஐ.நா.வின் போதைப்பொருள் மற்றும் குற்றத்தடுப்பு அமைப்பு கண்டுபிடித்து உள்ளது. அதற்கு ஆதாரமாக சில புள்ளி விவரங்களை அந்த அமைப்பு வெளியிட்டு இருக்கிறது.

    அதன்படி உலக அளவில் கடந்த ஆண்டு மட்டும் சுமார் 87 ஆயிரம் பெண்கள் கொல்லப்பட்டு உள்ளனர். இதில் 34 சதவீதம் பேர் தனது துணைவராலும், 24 சதவீதம் பேர் பெற்றோர் அல்லது குடும்ப உறுப்பினர்கள் போன்ற உறவுகளாலும் படுகொலை செய்யப்பட்டு இருக்கின்றனர்.

    குறிப்பாக ஒரு மணி நேரத்துக்கு 6 பெண்கள் என நாளொன்றுக்கு சராசரியாக 137 பெண்கள் குடும்ப அங்கத்தினரால் கொலை செய்யப்பட்டு உள்ளனர். இப்படி கணவர் மற்றும் குடும்ப உறுப்பினர்களால் கொல்லப்படும் பெண்களின் எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் பலமடங்கு அதிகரித்து இருக்கிறது.

    இந்தியாவிலும் இத்தகைய குடும்ப வன்முறைக்கு பலியாகும் பெண்களின் எண்ணிக்கை அபரிமிதமாகவே இருக்கிறது. இங்கு 15 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் 27 சதவீதம் பேர் குடும்பத்தினரால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான ஆய்வு முடிவுகள் தெரிவித்தன.

    தேசிய குடும்ப நல ஆய்வு என்ற பெயரில் மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அந்த ஆய்வு முடிவுகளின்படி, 15 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் 3-ல் ஒருவர் இத்தகைய வன்முறையில் சிக்கியிருக்கிறார். இந்த வன்முறை சம்பவங்கள் நகர்ப்புறங்களை விட (23 சதவீதம்) கிராமங்களிலேயே அதிகமாக (29 சதவீதம்) இருக்கிறது.

    திருமணமான பெண்களில் 31 சதவீதத்தினர் உடல், உணர்வு மற்றும் பாலியல் ரீதியாக தங்கள் துணையால் (கணவர் மற்றும் முன்னாள் கணவர்) துயர்களை அடைகின்றனர். இதில் 27 சதவீதத்தினர் உடல் ரீதியாகவும், 13 சதவீதத்தினர் உணர்வு ரீதியாகவும் துன்பங்களை அடைவதாக அந்த ஆய்வு முடிவுகள் தெரிவித்தன. தங்கள் வாழ்க்கை துணையால் வன்முறைக்கு ஆளாகும் பெண்களில் 3-ல் ஒருவருக்கு உடல் ரீதியான காயங்கள் உண்டாகிறது.

    திருமணமாகாத பெண்களை பொறுத்தவரை தாய் அல்லது மாற்றாந்தாய் மூலம் 56 சதவீதத்தினரும், தந்தை அல்லது சித்தப்பா மூலம் 33 சதவீதம் பேரும், சகோதர-சகோதரிகள் மூலம் 27 சதவீதம் பேரும் துயர்களை சந்திக்கின்றனர். மேலும் உறவினர் (27 சதவீதம்), முன்னாள் அல்லது இந்நாள் ஆண் நண்பர் (18 சதவீதம்), நண்பர் அல்லது அறிமுகமானவர் (17 சதவீதம்) மற்றும் குடும்ப நண்பர் (11 சதவீதம்) போன்றவர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர்.

    இப்படி வீட்டில் அரங்கேறும் வன்முறையை சந்திக்கும் இந்திய பெண்களின் துயரப்பட்டியல் நீளுகிறது. இந்தியாவை பொறுத்தவரை வரதட்சணை பிரச்சினை, ஆணவக்கொலை, குழந்தை திருமணம், பாலியல் அத்துமீறல் போன்ற குற்றங்களால் வீட்டுக்குள்ளே பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருக்கிறது. கல்வியறிவு இல்லாத பாமரர்கள் முதல் கற்றறிந்த அறிஞர்கள் வரை பெண்களை இரண்டாம் தர மக்களாகத்தான் பார்க்கின்றனர். வீட்டுக்குள் அடைபட்டு கிடந்த பெண்கள் வெளியே வந்து வியத்தகு சாதனைகள் பல புரிந்த போதும், அவர்களுக்கு எதிரான குற்ற செயல்கள் இன்னும் குறைந்தபாடில்லை.

    சமூகத்தின் கண்கள் என வர்ணிக்கப்படும் அவர்கள் உலகம் தோன்றிய காலம் முதலே தங்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான போராட்டத்தில்தான் வாழ்க்கையை ஓட்டி வருகின்றனர். நாகரிகமும், கலாசாரமும் எவ்வளவுதான் உலகை நவீனத்துவத்தை நோக்கி நகர்த்தினாலும் பெண்களின் பாதுகாப்பு விஷயத்தில் என்னவோ மனிதகுலம், இன்னும் பின்தங்கி இருப்பதாகவே கூற முடியும். இதில் வீட்டு அங்கத்தினர்களாலும் அவர்களது பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருவது வேதனை அளிப்பதாகவே இருக்கிறது.

    அன்பு, அரவணைப்பு, பாதுகாப்பு, மன்னிப்பு, நட்பு போன்ற பண்பு நலன்களால் உருவாக்கப்பட்டது தான் வீடு. அதை விடுத்து வெறும் நான்கு சுவர்களால் மட்டும் கட்டப்பட்ட ஒரு மாளிகையை வீடு என்று கூற முடியாது. அது வெறும் உயிரற்ற கட்டிடமாகவே இருக்க முடியும்.

    - வினி ஜெசிகா, விரிகோடு.
    முக அழகை பாதிப்பதில் தோல் சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கு எத்தனை சம்பந்தம் உண்டோ அதேபோல் நரம்பு சம்பந்தப்பட்ட வியாதிகளும் முக அழகை பாதிக்கும்.
    பெண்கள் அதிகம் கவனம் செலுத்தும் ஒரு விஷயம் அழகு. அதிலும் முக அழகுக்கு ரொம்ப அதிகமாகவே முக்கியத்துவம் கொடுப்பார்கள். முக அழகை பாதிப்பதில் தோல் சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கு எத்தனை சம்பந்தம் உண்டோ அதேபோல் நரம்பு சம்பந்தப்பட்ட வியாதிகளும் முக அழகை பாதிக்கும்.முக அழகை பாதிக்கும் சில வியாதிகள் பற்றி பார்க்கலாம்.

    Bells Palsy or Facial palsy

    நம் மூளையில் இருந்து முகத்திற்கு செல்லும்12 நரம்புகளில் முகத்தசைகளுக்குச் செல்லும் 7வது நரம்பு பாதிக்கும்போது இந்தப் பிரச்சனை ஏற்படுகிறது. இந்தப் பிரச்சனை ஏற்பட்டவர்களுக்கு எந்தப் பக்கத்து நரம்பு பாதிக்கப்படுகிறதோ அந்தப் பக்க தசைகள் செயல்படாது. இதனால் ஒரு பக்கம் கண் திறந்தே இருக்கும். சிரிக்கும் போது வாய் ஒரு பக்கம் கோணலாக போகும். காரணம் சிரிப்பின்போது வாய்க்கு இரண்டு பக்கமும் உள்ள தசைகளும் விரிய வேண்டும். ஆனால் ஒரு பக்கம் உள்ள நரம்பு பாதிக்கப்படும் போது அந்த பக்கம் உள்ள முகத்தசைகள் செயல்படாது.

    இதனால் சிரிக்கும்போது ஒரு பக்கம் மட்டும் முகத்தசைகள் விரிவடையும் இன்னொரு பக்கம் அப்படியே இருக்கும். அதனால் சிரித்தால் முகம் கோணலாக இருக்கும். இந்தப் பிரச்சனை சில சமயம் கடுமையான வியாதிகளாலும் வரலாம். அல்லது சாதாரணமாகவும் வரலாம். சாதாரணமாக இந்தப் பிரச்சனை ஏற்படும் போது இதனை முழுவதுமாக சரி செய்துவிட முடியும். அதற்கு சரியான வைத்தியமும், முகத்திற்கான பயிற்சிகளும் மேற்கொள்ள வேண்டும். முறையாக இவ்விரண்டையும் செய்யும்போது குறைந்தபட்சம் இரண்டு வாரத்தில் இந்தப் பிரச்சனையை சரி செய்துவிட முடியும்.

    வலிப்புக்காக எடுக்கும் மாத்திரைகள்

    நரம்பு வியாதியான வலிப்புக்கு மருந்தாக பயன்படும் PHENYTOIN என்ற மருந்தினை உட்கொள்பவர்களுக்கு உடல் முழுவதும் முடி வளர்ச்சி அதிகமாக இருக்கும். அவ்வாறு முகத்திலும் முடிவளர்ச்சி அதிகம் இருக்கும் போது பெண்களுக்கு அது அவர்களின் அழகை பாதிக்கும். சிலருக்கு பல் ஈறுகளில் வீக்கம் உண்டாகும். அதுவும் அவர்களின் முகத்தோற்றத்தில் வித்தியாசத்தை உருவாக்கும். அதனாலேயே இந்த மாத்திரையை இளம் பெண்களுக்கு பெரும்பாலும் நரம்பு மருத்துவர்கள்பரிந்துரைப்பதில்லை. 
    ×