search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95284"

    இன்றைய இளைய தலைமுறையினருக்கு பெற்றோர் மீதான பாசம் என்பது தூரமாகி கொண்டிருக்கிறது. வயதான பெற்றோரை, பாரமாக கருதும் மனப்போக்கு ஏற்பட்டுள்ளது.
    சுவாசிப்பதை போல நேசிப்பதே நிஜமான அன்பு. இத்தகைய அன்புக்கு சொந்தக்காரர்களாக இருப்போர் நம் பெற்றோர். இவர்களை தெய்வங்களாக தொழுவோரும் உள்ளனர். அதேசமயத்தில், முதுமையை சுமையாக கருதி பெற்றோரை தூக்கி எறிவோரும் இருக்கிறார்கள்.

    பண்டைக்காலத்தில் முதியோரின் சொல் மந்திரமாக மதிக்கப்பட்டது. ஒரு குடும்பத்தில் எந்தவொரு முடிவையும் அவர்களே எடுத்தனர். அதன் விளைவு, சிறந்த பயனை தந்தது. ஆனால் இன்றைக்கு நிலைமை தலைகீழாக மாறி விட்டது. முதியோரின் வார்த்தைகள் அலட்சியப்படுத்தப்படுவதோடு, தங்களது மகன், மகள், மருமகன், மருமகள், பேரன், பேத்திகள் என அனைவராலும் அவர்கள் அவமானப்படுத்தப்படுகின்றனர்.

    கணவன், மனைவி, குழந்தைகள் என குறுகிய வட்டத்தில் வாழ்க்கை பயணம் நகர்ந்து கொண்டிருக்கிறது. அனுபவம் வாய்ந்த முதியோரின் அறிவுரை பேரன், பேத்திகளுக்கு கிடைப்பதில்லை. தாத்தா, பாட்டியின் அரவணைப்பு இல்லாததால், வளர்ந்து வாலிபர்கள் ஆனவுடன் கால்போன போக்கில் சென்று தங்களது வாழ்க்கை பயணத்தை வீணாக முடித்து கொள்கின்றனர். அன்பு இன்றி இதயம் இறுகி விடுகிறது.

    உலகில் உதித்த நாளில் இருந்து, நம்மை சீராட்டி பாராட்டி வளர்க்கும் பெற்றோரின் உழைப்பை அட்டைப்பூச்சியாய் உறிஞ்சு வளர்கிறார்கள். ஆனால் அவர்கள் தள்ளாடும் போது, தவிக்க விட்டு விடுகின்றனர்.



    பெற்றோரின் சொத்துக்கள், தங்களுக்கு தான் சொந்தம் என்று உரிமை கொண்டாடி எடுத்து கொள்கின்றனர். அதன்பிறகு தங்களது பெற்றோரை முதியோர் இல்லத்தில் சேர்த்து விடுவோரும் உண்டு. வயதான காலத்தில் ஒவ்வொரு பெற்றோரும் தனது மகன் அல்லது மகள் அன்பாக, ஆறுதலாக ஒரு வார்த்தை பாசமாக பேச மாட்டார்களா? என்ற ஏக்கத்தில் இருப்பார்கள். ஆனால் அது கிடைக்காத பட்சத்தில், மனம் நொந்து வெந்து விடுகிறது. இன்றைய இளைய தலைமுறையினருக்கு பெற்றோர் மீதான பாசம் என்பது தூரமாகி கொண்டிருக்கிறது. வயதான பெற்றோரை, பாரமாக கருதும் மனப்போக்கு ஏற்பட்டுள்ளது.

    எத்தனையோ முதியோர்கள் சொத்துகளை எழுதி வாங்கி கொண்டு மகனும், மகளும் செய்த கொடுமைகளை மனதுக்குள்ளே பூட்டி வைத்து புழுங்கி கொண்டிருக்கின்றனர். ஒரு வேளை சாப்பாட்டுக்கே வழியில்லாமல், பிறரிடம் கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தனக்கு தராவிட்டாலும் பரவாயில்லை தனது மகனோ, மகளோ சந்தோஷமாக வாழட்டும் என்ற எண்ணத்தில் நடமாடும் பிணமாக வாழ்ந்து வருகிறார்கள்.

    இவர்களை போன்றோரை கணக்கெடுத்து, அவர்களின் நிலையை மாற்றுவது என்பது கடினம் தான். அதேநேரத்தில் சொத்துக்களை எழுதி வாங்கி கொண்டு சொந்தம் இல்லை என்று உதறி தள்ளும் கல்நெஞ்சம் படைத்த மகனுக்கும், மகளுக்கும் இதுபோன்ற சவுக்கடி கொடுப்பது அவசியம் தான். அன்பு, பாசம், நேசம் ஆகியவற்றுக்கு பயிற்சி அளிக்க முடியாது. இது, மனநிலை சார்ந்த விஷம் ஆகும்.

    பெற்றோரின் முதுமை அவர்களின் மகன், மகள்களுக்கு சுமையாக தெரிகிறது. உண்மையாகவே அது சுமை அல்ல. அவர்களை சுமப்பது ஒரு சுகமான அனுபவமே. பல்வேறு பிரச்சினைகளுக்கு முதியோரால் முற்றுப்புள்ளி வைக்க முடியும். எனவே மனதை இளக வைத்து, அதில் முதுமையை மகுடம் சூட்ட வேண்டும். அப்போது தான் கண்ணன்-பூங்காவனம் போன்றோர் உருவாகாமல் தடுக்க முடியும்.

    -தாமிரன்
    ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் டாப் 50 அமெரிக்க டெக் ஜாம்பவான்கள் பட்டியலில் நான்கு இந்திய வம்சாவளி பெண்கள் இடம்பிடித்துள்ளனர். #Forbes



    ஃபோர்ப்ஸ் பத்திரிகை சார்பில் டெக் உலகின் டாப் 50 பெண்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் தொழில்நுட்ப சந்தையில் முன்னணி பதவியில் இருக்கும் பெண் அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர். 

    ஃபோர்ப்ஸ் பட்டியலில் தேர்வு செய்யப்பட்டு இருக்கும் பெண் அதிகாரிகள் சைபர்செக்யூரிட்டி, நிறுவனம் மற்றும் நுகர்வோர் தொழில்நுட்பம், கேமிங், செயற்கை நுண்ணறிவு, ஏரோ-ஸ்பேஸ், பயோடெக் மற்றும் பல்வேறு பிரிவுகளில் தலைமை வகிக்கின்றனர். 

    அந்த வகையில், ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் டாப் 50 அமெரிக்க டெக் ஜாம்பவான்கள் 2018 பட்டியலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த நான்கு பெண்கள் இடம்பெற்றுள்ளனர்.



    அவ்வாறு, சிஸ்கோவின் முன்னாள் தலைமை தொழில்நுட்ப அலுவலரான பத்மஸ்ரீ வாரியர், உபெர் நிறுவன மூத்த தலைவர் கோமல் மங்டானி, உபெர் நிறுவன தொழில்நுட்ப அலுவலர் நேஹா நர்கடெ, டிராபிரெக் நிறுவன தலைமை செயல் அதிகாரி காமாக்‌ஷி சிவராமகிருஷ்ணன் ஆகியோர் இப்பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். 

    அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணினி உள்ளிட்ட துறைகளில் பெரும்பாலும் ஆண்களின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதாக கருதப்படும் நிலையில், ஃபோர்ப்ஸ் பட்டியலில் இடம்பிடித்திருக்கும் பெண் தலைவர்கள் அவரவர் துறைகளில் தங்களை நிரூபித்து வருகின்றனர்.
    நமது ராணுவத்தில் பெண்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. எனவே ஏராளமான பெண்கள் ராணுவத்தில் சேர வேண்டும் என மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் அழைப்பு விடுத்துள்ளார். #BJP #NirmalaSitharaman
    சென்னை :

    சென்னை தியாகராயநகர் வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் சாரதா வித்யாலயா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், ‘மெட்ராஸ் கிழக்கு ரோட்டரி கிளப்’ சார்பில் ரூ.95 லட்சம் மதிப்பிலான சிறந்த கல்வி மற்றும் பயிற்சி திட்டம் தொடங்கப்பட்டது. இதனை மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார்.

    இந்த திட்டத்தின் மூலம் சென்னையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் குழும பள்ளிகளுக்கு கம்ப்யூட்டர், வேதியியல், இயற்பியல், உயிரியல் ஆய்வுக்கூடங்கள் அமைக்கப்படுவதுடன் மரத்தால் ஆன நாற்காலிகள், மேசைகள் வழங்கப்பட்டன. மேலும் இந்த திட்டத்தின் மூலம் கற்றல் திறன் குறைபாடு உடைய மாணவிகளுக்கு சிறப்பாக கல்வி கற்பிக்கும் வகையில் ஆசிரியர்களுக்கு பயிற்சிகளும் வழங்கப்படும்.

    இந்த நிகழ்ச்சியில் ‘மெட்ராஸ் கிழக்கு ரோட்டரி கிளப்பின்’ கவர்னர் பாபு பேரம், தலைவர் ஆர்.எம்.நாராயணன், உலகளாவிய திட்டத் தலைவர் திவ்யா சித்தார்த், ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் வித்யா பீடத்தின் செயலாளர் சுவாமி சுகதேவானந்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பேசியதாவது:-



    பெண்களுக்கு கல்வி என்பது புது சிந்தனை அல்ல. நம் நாட்டில் பெண்கள் கல்விக்கு எப்போதும் வாய்ப்பு இருந்து இருக்கிறது. குறிப்பாக வேதங்களில் பழமையான ரிக் முதலான வேதங்களை வழங்கியவர்களில் 22 பேர் பெண்கள். அந்த வகையில், சுவாமி ஸ்ரீ ராமகிருஷ்ணரே அன்னை சாரதா தேவியை குரு ஸ்தானத்தில் வைத்திருந்தார் என்றால் அவர் எப்படிப்பட்டவராக இருந்திருக்க வேண்டும். எனவே, அறிவை வளர்ப்பதில் பெண்களின் பங்கு நம் நாட்டில் எப்போதும் இருந்து இருக்கிறது.

    எனவே, தற்போதைய நவீன கல்வி யுகத்தில், கல்வி கற்றல் குறைபாடு உள்ள மாணவிகளையும் சக மாணவிகளுடன் வைத்து கற்றுக் கொடுத்தால், அவர்களும் சமூகத்தில் சமமாக இருக்க முடியும். அதன் முதற்கட்டமாக அவர்களுக்கு என சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். படிக்கிற மாணவிகளுக்கு மட்டும் கல்வியை கொடுத்து நல்ல மதிப்பெண் வாங்கினார்கள் என்று கூறுவதை விட இதே போன்று கற்றல் குறைபாடு உள்ள மாணவிகளுக்கும் கல்வி கற்பிக்க முயற்சி எடுத்து உள்ளதை வரவேற்கிறேன்.

    தற்போது இது போன்ற உதவிகளை பெறும் மாணவிகளாகிய நீங்களும், இதனை மனதில் வைத்துக் கொண்டு பெரியவர்களான பிறகு உங்களுக்கான வாய்ப்புகள் வரும் போது இது போன்ற உதவிகளை செய்ய வேண்டும். அவரவரால் முடிந்த அளவுக்கு உதவி செய்ய வேண்டும். மாணவிகளுடன் ½ மணி நேரம் இருந்தாலும் நான் ஊக்கம் பெற்றதாக கருதுவேன். இன்று மாணவிகளுடன் அதிக நேரம் இருந்தமையால் முழு ஊக்கம் பெற்றதாக கருதுகிறேன்.

    14 லட்சம் எண்ணிக்கை கொண்ட நமது ராணுவத்தில் பெண்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. எனவே உங்களில்(மாணவிகள்) நிறைய பேர் ராணுவத்தில் சேர வேண்டும். இன்று பள்ளிக்கூட சீருடையில் பார்க்கும் உங்களில் நிறை பேரை இன்னும் 5 வருடங்கள் கழித்து விமானப்படை சீருடையிலோ, கப்பல்படை சீருடையிலோ, ராணுவ சீருடையிலோ பார்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியை தொடர்ந்து மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பள்ளி வளாகத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ணர், விவேகானந்தர் மற்றும் சாரதா தேவி வேடம் அணிந்து இருந்த மாணவிகளுடன் கலந்துரையாடினார். நிகழ்ச்சியின் முன்னதாக சாரதா வித்யாலயா பள்ளி சார்பில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. #BJP #NirmalaSitharaman
    பியூட்டி பார்லர்கள் அதிகமாகிவிட்ட இன்றைய நிலையில் சுயதொழில் செய்ய விரும்பும் பெண்கள் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். அவை என்னவென்று பார்க்கலாம்.
    அழகுத்துறை என்பது என்றுமே ஆடம்பரமாகப் பார்க்கப்படுவதில்லை. அதை ஆரோக்கியத்துடனும் தொடர்புடைய ஒரு துறையாகவே பார்க்க வேண்டியிருக்கிறது. எத்தனை பியூட்டி பார்லர்கள் திறக்கப்பட்டாலும் எல்லாவற்றுக்கும் நிச்சயம் வரவேற்பு இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. புதிதாக பார்லர் தொடங்கும் முன் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

    பார்லர் தொடங்கப் போகிற ஏரியா மிக முக்கியம். பார்லர் தொடங்கப்படவிருக்கிற இடத்தின் அருகில் உள்ள மக்கள் எப்படிப்பட்டவர்கள், அவர்களுக்கு பார்லர் வர வேண்டிய தேவையும் வசதியும் இருக்குமா எனப் பார்க்க வேண்டும்.  ‘என்னிடம் திறமை இருக்கிறது.. என்னைத் தேடி எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் மக்கள் வருவார்கள்’ என்று நினைக்க வேண்டாம். அதெல்லாம் நீங்கள் பார்லர் பிசினஸில் உங்களைத் தக்க வைத்துக் கொண்டு, வாடிக்கையாளர்களிடம் பாராட்டையும் நன்மதிப்பையும் பெற்ற பிறகுதான் சாத்தியம்.

    அடுத்தது வேலை தெரிந்த ஆட்களை நியமிக்க வேண்டியது முக்கியம். கற்றுக்குட்டிகளை வைத்து வேலை வாங்கினால் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுவார்கள். அடுத்த முறை உங்களைத் தேடி வர மாட்டார்கள். மூன்றாவதாக தரமான அழகு சாதனங்களை உபயோகிக்க வேண்டியது முக்கியம். நீங்கள் உபயோகிக்கிற பொருட்கள் வாடிக்கையாளர்களுக்கு அலர்ஜியையோ, பக்க விளைவுகளையோ ஏற்படுத்தக்கூடாது.

    தரத்தில் எக்காரணம் கொண்டும் விட்டுக் கொடுக்கக்கூடாது.  இன்று பார்லர் ஆரம்பித்துவிட்டு, நாளைக்கே லாபம் கொட்டும் என்கிற கனவில் மிதப்பது மிகவும் தவறு. இந்தத் துறையில் பொறுமை மிக மிக அவசியம். உழைப்பையும் முயற்சியையும் தொடர்ந்து கொண்டிருங்கள். லாபமும் நற்பெயரும் தானாக வரும்.
    புதிதாக வேலைக்குச் சேர்ந்து சம்பாதிக்கத் தொடங்கும் பெண்கள் அந்தப் பணத்தை எப்படிச் செலவழிப்பது என்பதில் கொஞ்சம் தடுமாறுகிறார்கள். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    புதிதாக வேலைக்குச் சேர்ந்து சம்பாதிக்கத் தொடங்கும் இளைஞர், இளைஞிகள், அந்தப் பணத்தை எப்படிச் செலவழிப்பது என்பதில் கொஞ்சம் தடுமாறுகிறார்கள். தமது தகுதிக்கு ஏற்ப நல்ல வேலையில் சேர்ந்து கைநிறையச் சம்பாதித்தும் மாதக் கடைசியில் பர்ஸ் வறண்டு தவிப்போர் அதிகம்.

    பணம் சம்பாதிக்கத் தொடங்கும்போதே, அதை எவ்வாறு சரியாகப் பயன்படுத்துவது என்று கற்றுக்கொள்வது வாழ்க்கை முழுவதும் உதவும்.

    பணத்தைச் சரியாக செலவழிப்பது என்பது, பணம் சம்பாதிப்பதற்கு ஈடான கடினமான விஷயம்.

    சேமிப்பு, முதலீடுகள், சிறப்பான நிதி நிர்வாகம் மூலம் நம் சம்பாத்தியத்தின் வாயிலாக நமது எதிர்கால நிதிநிலையைப் பிரகாசப்படுத்திக் கொள்ளலாம்.

    புதிதாக சம்பாதிக்கத் தொடங்கியுள்ளவர்கள், தமது சம்பாத்தியத்தை செம்மையாகப் பயன்படுத்திக்கொள்வதற்கான வழிகள் குறித்துப் பார்ப்போம்...

    * பெரிய நிறுவனங்கள் எளிமையான பட்ஜெட்களை வகுத்துக்கொண்டு சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. மார்க்கெட்டிங் துறை, விளம்பர பட்ஜெட்டையும், உற்பத்தித்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களையும் வகுத்துக் கொள்வது போல, தனி மனிதரான நீங்களும் ஒரு பட்ஜெட்டை வடிவமைத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாதமும் வருவாயில் 60 சதவீதத்துக்கு மிகாமல் செலவுகளை வரன்முறைப்படுத்திக் கொள்ள வேண்டும். அடுத்தவரின் வரவு- செலவு திட்டத்தை கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றாமல், உங்கள் வரவு செலவுகளுக்கு ஏற்ப பட்ஜெட்டை அமைத்துக்கொள்ள வேண்டும். அந்த பட்ஜெட் கடைப்பிடிப்பதற்குக் கஷ்டமானதாக இருக்கக் கூடாது.

    * உங்கள் வரவு- செலவுத் திட்டம், சோதனை முறையில் பல்வேறு தவறுகளையும், சோதனைகளையும் கடந்த பின்னர்தான், நேர்த்தி ஆகும். உங்களைத் தேவையற்ற செலவுகளை நோக்கி இழுக்கும் விளம்பரங்களைப் புரிந்துகொள்ள வேண்டும். காலப்போக்கில் செலவுகளை கட்டுக்குள் கொண்டுவந்த பிறகு, மிஞ்சும் தொகை உயரும். செலவு பிடிக்கும் சில பழக்கங்களைக் கைவிடுவது கடினம்தான். உதாரணமாக, அடிக்கடி ஓட்டல், சினிமா செல்வது போன்றவை. ஆனால் தேவையற்ற செலவுகளுக்கு கடிவாளம் போட்டால்தான் சேமிப்பு உயரும்.

    * நிதி விஷயத்தில் நாம் எட்ட வேண்டிய குறுகிய கால, நீண்ட கால இலக்குகளைத் திட்டமிட்டுக்கொள்ள வேண்டும். அவற்றை ஒவ்வொன்றாக நிறைவேற்றும்போது, அதைத் தொடர்வதற்கான ஆர்வம் கூடும்.

    * கிரெடிட் கார்டுகள் என்பது அத்தியாவசியமான விஷயம் என்று கூற முடியாது. நீங்கள் நிதி நிர்வாகத்தில் ஓர் ஒழுங்குக்கு வந்துவிட்டீர்கள் என்றால், அது குறித்து ஆலோசிக்கலாம்.

    * உங்கள் பணியிடமும், நகரமும் அடிக்கடி மாறக்கூடியதாக இருந்தால், அதற்கேற்ப ஒரு நெகிழ்வான திட்டத்தை வடிவமைத்துக் கொள்ளுங்கள். அடிக்கடி இடம் மாறுவோருக்கு வீட்டுக் கடன் போன்ற நீண்டகாலக் கடன் திட்டங்கள் தேவையில்லை.

    * உங்கள் நிதி இலக்குகளுக்கு ஏற்றவாறு முதலீடுகளை அமைத்துக் கொள்ளுங்கள். உதாரணத்துக்கு, 3 வருடத்தில் திருமணம் செய்யத் திட்டமிட்டிருந்தால், 3 வருட முதலீட்டுத் திட்டத்தில் இணையலாம்.

    * சேமிப்பு மற்றும் முதலீடுகளில் ஈடுபடுவதற்கு முன் நிச்சயமற்ற சூழல்களிலிருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ள ஓர் அவசர நிதியை ஒதுக்கி வையுங்கள். ஒரு வேலையில் இருந்து வேறு வேலைக்கு மாறும்போதோ அல்லது வருவாயில் துண்டு விழும்போதோ இந்த அவசரகால நிதி உங்களுக்கு உதவும்.

    * பங்குச்சந்தைகள் உங்களுக்கு அறிமுகம் இல்லாமல் இருக்கலாம். ஆகையால் ஈக்விட்டி தொடர்பான சேமிப்புத் திட்டங்கள், புராவிடன்ட் பண்ட், டிவிடன்ட் பண்டில் முதலீடு செய்யுங்கள். ஓய்வு காலம் குறித்து யோசித்து அதற்குத் திட்டமிடுங்கள்.

    * உங்களின் முதலீடுகள், நிதி தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு தருவதாக இருக்க வேண்டும். பங்குச் சந்தை சில நேரம் மோசமான சரிவை சந்திப்பதால், அது குறித்த அறிவை வளர்த்துக்கொள்ளும் வரை அதில் இறங்கும் ‘ரிஸ்க்’கை தவிர்க்கலாம்.

    * ஆயுள் காப்பீடு, மருத்துவக் காப்பீடு பெற்றுக்கொள்வதில் கவனம் செலுத்துங்கள்.

    * இன்றைய சூழலில், வங்கிக் கடனை தவிர்க்க முடியாது. ஆனால் எதற்காக கடன் பெறுகிறோம், அதை எவ்வாறு முறையாக திருப்பிச் செலுத்துகிறோம் என்பது முக்கியம். நீங்கள் கடனை திருப்பிச் செலுத்துவதில் தவறிழைத்தால், அது உங்கள் கடன் மதிப்பெண்ணில் பாதிப்பை ஏற்படுத்தும். எதிர்காலத்தில் பெரிய கடன்கள் பெறுவது சிக்கலாகும். எனவே இந்த விஷயத்தில் மிகக் கவனமாக இருக்க வேண்டும்.

    ஆண்டுகள் நகர நகர, உங்கள் சம்பளம் உயரும் அதேநேரத்தில், செலவுகளும் கூடும். எனவே நமது சேமிப்புகள், முதலீடுகளை அதிகரித்துக்கொண்டே செல்ல வேண்டும் என்பதை மனதில் வையுங்கள்.
    பெண்கள் வைரத்தில் செய்த நெக்லஸ்கள் மீது அதிக ஆர்வம் கொண்டுள்ளனர். அதற்கேற்ப நகை வடிவமைப்பாளர்கள் தனிக் கவனத்துடன் மேம்பட்ட வடிவமைப்பு உத்தியை பயன்படுத்தி விதவிதமான வைர நெக்லஸ்களை தயார் செய்து தருகின்றனர்.
    வைரம் ரத்தின கற்களில் தனிச்சிறப்பு பெற்றது. அதன் ஜொலிப்பும், வெண்மை பிரகாசமும் அனைவரையும் மடக்கிட செய்கிறது. வைரம் பூமிக்கடியில் வெட்டி எடுப்பது முதல் நகையில் பதிப்பது வரை அதிக படியான பணி நிலைகளை கடந்து வருகிறது. ஏனெனில் வைரம் ஜொலிக்க செய்ய பட்டை தீட்டும் பணிகள் அதிக மெனக்கெடல் உடன் செய்யப்படுகிறது.

    தரமான வைரம் என்பது பலவிதமான சோதனைகளுக்குப்பின் ஆய்வு செய்து அதற்கு என சர்வதேச தர குறியீடு தரப்படுகிறது. நாம் விரும்பி அணிகின்ற பலவிதமான ஆபரணங்கள் என்பதில் வைரம் பதித்தும், தனிப்பட்ட வைர நகைகள் என்றவாறும் விலை மதிப்புமிக்க வைர நகைகள் தயார் செய்யப்படுகிறது. இதில் பதியப்படும் வைரங்கள் என்பது ஒவ்வொரு விதமான உருவ அமைப்பிலும், அதன் மதிப்பை காட்டும் காரட் அளவீடுகளை கொண்டே வகைப்படுத்தப்படுகின்றன. முந்தைய நாளில் வைரங்கள் என்பதில் போலியும், தோஷமும், அதிகமாக காணப்பட்டன. இன்றைய நாளில் தர சான்றுதலுடன் கூடிய தோஷம் நீக்கப்பட்ட வைரங்கள் கிடைக்கின்றன.

    வைர நகைகள் என்பது தங்கம், பிளாட்டினம் போன்றவற்றில் பதியப்பட்டு கிடைக்கின்றன. அதுபோல் 18 காரட் வெள்ளை தங்கம், ரோஸ் கோல்டு, 18 காரட் தங்கம் போன்ற உலோகங்களும் வைர நகைகள் செய்ய பயன்படுத்தப்படுகின்றன. வைரம் எப்படியாயினும் வடிவமைத்தாலும் அதன் அழகே அதன் சிறப்பை உயர்த்தி பிடிக்கின்றது.

    வைரத்தின் உருவ அமைப்புகள்:

    வைர நகைகளில் பதியப்பட்டுள்ள வைரத்தின் வடிவம், உருவ அமைப்பு எப்படி இருக்கின்றன என்பதை அறிந்திட வேண்டும். வைரங்கள் வட்டம், ரேடியண்ட், பிரின்ஸஸ், பியர், ஓவல், மார்குயிலி, இதயம், எமரல்டு, குஷன், கிரவுன்ஸ்டார், அஸ்சர் என்றவாறு ஒவ்வொரு விதமான உருவ அமைப்பில் வைரங்கள் பட்டை தீட்டப்ட்டு விற்பனைக்கு வருகின்றன. சர்வதேச அளவில் நிறைய வைர நிறுவனங்கள் நகை தயாரிப்பிற்கு என பிரத்யேகமான சிறிய மற்றும் பெரிய வைரக் கற்களை தயாரித்து வழங்குகின்றன.



    ஆர்வத்தை தூண்டும் வைர நெக்லஸ்கள்

    பெண்கள் வைரத்தில் செய்த நெக்லஸ்கள் மீது அதிக ஆர்வம் கொண்டுள்ளனர். அதற்கேற்ப நகை வடிவமைப்பாளர்கள் தனிக் கவனத்துடன் மேம்பட்ட வடிவமைப்பு உத்தியை பயன்படுத்தி விதவிதமான வைர நெக்லஸ்களை தயார் செய்து தருகின்றனர். தங்க செயின் அமைப்பின் நடுநடுவே வைர பூக்கள், வைர தொங்கல்கள் கொண்டவாறும், முற்றிலும் அதிகபட்ச வைரங்கள் பதியப்பட்டு அடுக்கடுக்கான வளைவுகளுடன் கூடிய நெக்லஸ்கள் வரை ஆர்வத்தை தூண்டும் விதத்தில் கிடைக்கின்றன.

    தங்க செயின் பின்னணியில் இடைவெளி விட்டு நட்சத்திர பூக்கள் உள்ளன. ஒவ்வொரு பூவிலும் ஏழு வைர கற்கள் என்றவாறு மொத்தம் ஐந்து பூக்களிலும் 35 வைரக்கற்கள் பதியப்பட்ட நெக்லஸ் அழகின் உச்சம். ஏனெனில் தங்க செயின் வளைவின் மேற்புற அமைப்பில் ஜொலிக்கும் நட்சத்திர பூக்கள் கண்கவர் தோற்ற பொலிவை தருகின்றது.

    சூரிய கதிர்கள் போன்று விரியும் நெக்லஸ்

    காலை எழுந்தவுடன் சூரியனை பார்க்கும்போது அதன் கதிர்கள் மேலெழுந்து வரும் அழகு தனிச்சிறப்பு. அந்த அரை வட்ட சூரிய ஒளிக்கதிர்கள் போன்ற அமைப்புடன் நெக்லஸ் உருவாக்கம் உள்ளது. மெல்லிய இருபக்க செயின் அமைப்பு அரை வட்ட வடிவில் மேலிருந்து கீழிறங்க நீளமான ஒளிக்கதிர்கள் போல் வைரம் பதியப்பட்டு தொங்க விடப்பட்டுள்ளன. வட்டமான சிறு வைரகற்கள், மேற்பகுதியிலும், கீழ் தொங்கும் அமைப்பில் பியர் வைரக்கற்கள் பதியப்பட்டும் கலை நயத்துடன் உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. ஒளிக்கதிர்கள் பிரகாசத்தை வைரக்கற்கள் தத்ரூபமாக வழங்குவதால் கழுத்து பகுதி அதிகபட்ச ஒளிப்பிரகாசத்துடன் ஜொலிக்கிறது.

    பெரிய பூக்களாய் தொங்கும் வைர காதணிகள்

    சிறுசிறு வைரக்கற்கள் பதியப்பட்ட சிறுகாதணிகள் என்பதுடன் பெரிய வைரக்கற்கள் பதித்த காதணிகளும் பிரம்மாண்ட அமைப்பில் உள்ளன. பெரிய பூ விதழ்கள் கொண்ட பூ அமைப்பு வண்ண கற்கள் இணைப்புடன் ஜொலிக்கும் பூக்களாய் காட்சித் தருகின்றது. இதன் பிற வடிவங்களாய் மெல்லிய கம்பி இணைப்பு, ஜல்லடை அமைப்பு, கணித அமைப்பு போன்றவைகளும் பெரிய காதணிகளாய் உலா வருகின்றன. நவீன கால பெண்களின் ரசனையை பூர்த்தி செய்யும் வடிவில் காட்சியளிக்கின்றன.
    சபரிமலைக்கு பெண்கள் வர ஆதரவு தெரிவித்து பலத்த கண்காணிப்பையும் மீறி மாவோயிஸ்டுகள் ஊருக்குள் புகுந்து போஸ்டர் ஒட்டிய சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #Maoist #SabarimalaTemple
    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் வயநாடு, கோழிக்கோடு, பாலக்காடு அட்டப்பாடி ஆகிய வனப்பகுதிகளில் மாவோயிஸ்டு நடமாட்டம் அதிகமாக உள்ள பகுதியாகும்.

    கடந்த 5-ந்தேதி அட்டபாடிபுதூர் என்ற இடத்தில் சுற்றித்திரிந்த கோவை புலியகுளத்தை சேர்ந்த மாவோயிஸ்டு தலைவர் டேனியஸ் (வயது 30) என்பவரை அகழி போலீசார் கைது செய்தனர்.

    இதனையடுத்து தமிழக கியூ பிரிவு போலீசார், கேரள தண்டர் போல்டு போலீசார் தமிழக- கேரள எல்லையில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் அட்டப்பாடி பகுதியில் உள்ள ஜெல்லிப்பாறை, தென்மலை ஆகிய ஊர்களில் அரசு அலுவலகங்கள், டீ கடைகள் உள்ளிட்ட இடங்களில் மாவோயிஸ்டுகள் போஸ்டர்களை ஒட்டியிருந்தனர்.

    அதில் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும். யூ.ஏ.பி.ஏ. சட்டத்தை திருத்த வேண்டும். மாவோயிஸ்டுகள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெற வேண்டும். மாவோயிஸ்டுகளை அரசியல்வாதிகளாக கருத வேண்டும் என்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.

    பலத்த கண்காணிப்பையும் மீறி மாவோயிஸ்டுகள் ஊருக்குள் புகுந்து போஸ்டர் ஒட்டிய சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில் இன்று காலை அட்டப்பாடியில் மாவோயிஸ்டுகள் பெயரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. அதில் சபரிமலைக்கு வர பெண்களை தடுப்பவர்களுக்கு எதிராக போராடுங்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

    இதுகுறித்து அட்டப்பாடி மற்றும் அகழி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Maoist #SabarimalaTemple

    சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் அருகே பெண்கள் மட்டும் வழிபடுவதற்காக புதிய கோயில் கட்டத்தயாராக இருப்பதாக நடிகர் சுரேஷ்கோபி தெரிவித்துள்ளார். #Sabarimala #SureshGopi
    கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் திறப்புவிழா ஒன்றில் கலந்துகொண்ட நடிகரும் எம்பியுமான சுரேஷ்கோபி பேசும்போது, ’சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் அருகே பெண்கள் மட்டும் வழிபடுவதற்காக புதிய கோயில் கட்டத்தயாராக இருக்கிறேன்.

    காணிக்கைக்கான உண்டியல்கள் இல்லாத வகையில் புதிய கோயிலை அமைக்கும் திட்டம் என் மனதில் உள்ளது. இதற்கான விளம்பரம் விரைவில் வெளியாகும். மத்திய அரசோ, மாநில அரசோ இடம் ஒதுக்கித்தந்தால் உடனே கோயில் கட்டப்படும். அல்லது நல்லவர்கள் யாராவது சபரிமலையை ஒட்டியுள்ள பகுதியில் இடம் வழங்கினால் அங்கு கோயில் அமைக்கலாம்.



    சபரிமலை அல்லது பத்தணம்திட்டா பகுதியை ஒட்டிய பகுதியில் புதிய கோயில் கட்டும் திட்டம் உள்ளது. புதிய கோயில் விக்கிரகம் நாடு முழுவதும் ஊர்வலமாக எடுத்து வந்து பிரதிஷ்டை செய்யப்படும். இந்தக் கோயிலில் பெண் பூசாரியை நியமிப்பது குறித்தும் ஆலோசித்துவருகிறேன்” என்று பேசியுள்ளார். #Sabarimala #SureshGopi
    நமது அலுவலகக் குடும்பத்துடன் ஒன்றி இருக்கவும் நண்பர்களை நண்பர்களாகவே தொடர்ச் செய்வதற்கும் சில வழிமுறைகளைப் பின்பற்றலாம்.
    நமது ஒரு நாள் மட்டுமல்ல வாழ்க்கையின் ஒரு அத்தியாயத்தியே நாம் நம் அலுவலகத்தில் தான் செலவழிப்போம். அந்த நேரத்தை மகிழ்ச்சியும் நிம்மதியும் குழையாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம் ஆகும். நமது அலுவலகக் குடும்பத்துடன் ஒன்றி இருக்கவும் நண்பர்களை நண்பர்களாகவே தொடர்ச் செய்வதற்கும் சில வழிமுறைகளைப் பின்பற்றலாம்.

    அலுவலகத்தில் உங்களுக்கென தனி நட்பு வட்டம் இருந்தாலும் உடன் பணி செய்வோர் அனைவரிடமும் நல்ல நட்பு முறையில் ஆன உறவு அவசியம். சுமூகமான, எளிதாக அணுகக்கூடியவராக உங்களை வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் உடன் இருப்போர் குறித்து அறிந்து கொள்ள முயற்சி எடுங்கள். அனைவரிடமும் சமமாக பழகுங்கள்.

    உங்களுக்கும் உடன் பணியாற்றுவோரில் சிலருக்கும் இடையில் சில பிடித்தமான விஷயங்களில் ஒற்றுமை இருக்கும். அதை அறிந்துகொண்டு நட்பு பாராட்டுவது கூடுதல் பலமாக அமையும்.

    அக்கம் பக்கம் இருப்பவர்களிடம் அடுத்தவர் பற்றி புரளியும் புரணியும் பேசுவதை தவிர்க்கவும். எப்போதும் உங்களுக்கும் உங்களைச் சுற்றி இருப்போருக்கும் ஒரு பாஸிட்டிவான அலைகளைக் கொடுங்கள்.

    உங்கள் உடன் இருக்கும் நண்பர்கள் உங்கள் மூலமாக சலிப்பு அடையக் கூடாது. ஆர்வமிக்க சந்திப்புகள், பேச்சுகள், உரைகள் என ஆராவராமக உங்கள் வட்டத்தை மாற்றி அமைத்துக்கொள்ளுங்கள்.
    நாம் இறுக்கமான உள்ளாடைகளை அணியும் போது அவை நமது சருமத்துடன் உராயும் போது அந்த இடத்தில் அரிப்பு, எரிச்சல், நமநமப்பு போன்றவை ஏற்படுகிறது.
    நாம் இறுக்கமான உள்ளாடைகளை அணியும் போது அவை நமது சருமத்துடன் உராயும் போது அந்த இடத்தில் அரிப்பு, எரிச்சல், நமநமப்பு போன்றவை ஏற்படுகிறது.அது மட்டுமல்லாமல் உடலுறுவின் போது ஏற்படும் உராய்வினாலும் பிறப்புறுப்பில் வலி மற்றும் அரிப்பு பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

    நாம் அணியும் ஆடைகள் சருமத்தில் உரசும் போது ஏற்படும் பாதிப்பு ஷேஃப்டிங் என்று அழைக்கப்படுகிறது. இதனால் அரிப்பு, நமநமப்பு, எரிச்சல், வலி போன்றவை ஏற்படும். இந்த மாதிரியான ஷேஃப்டிங் பிரச்சினை தொடை இடுக்குகளில், அக்குள் பகுதிகளில், மார்பக காம்புகளில் ஏற்படுகிறது. இந்த பிரச்சினையை அவ்வளவு சாதாரணமாக விட்டு விடவும் கூடாது. இதனால் உங்களுக்கு அடிக்கடி தொந்தரவு மற்றும் அசெளகரியமும் ஏற்படும். எல்லார் முன்னிலையிலும் சிரமத்திற்கு உள்ளாவீர்கள்.

    காரணங்கள்

    உடலுறுவின் போது பிறப்புறுப்பில் ஏற்படும் உராய்வு

    சுய இன்பம் காணுதல்

    இறுக்கமான உள்ளாடைகள்

    நாப்கின்

    அந்த பகுதியில் ஏற்படும் அதிகப்படியான வியர்த்தல்.

    உடல் பருமன்

    கெமிக்கல் நிறைந்த வெஜினல் காஸ்மெட்டிக் பொருட்களை பயன்படுத்தும் போது அதிலுள்ள ஆல்கஹாலால் அரிப்பு, எரிச்சல், வறட்சி ஏற்படுதல்

    யோனி பகுதியில் உள்ள முடிகளை நீக்கும் லேசர் முறைகள், வேக்சிங் செய்தல் போன்றவற்றால் சருமம் சிவந்து போய் அரிப்புடன் காணப்படும்.

    அறிகுறிகள்


    பாதிக்கப்பட்ட யோனி பகுதியில் ஏற்படும் அரிப்பு, வலி, சரும பிளவுகள், சிவத்தல், தோல் உரிதல், தொடும் போது வலி மற்றும் அரிப்பு ஏற்படுதல் போன்றவை அறிகுறிகளாகும்.

    இயற்கை முறைகள்

    * சரும பிரச்சினைகள் அனைத்தையும் போக்குவதில் தேங்காய் எண்ணெய் சிறந்து விளங்குகிறது. இது ஒரு ஆன்டி பாக்டீரியல், பூஞ்சை எதிர்ப்பு பொருள், அழற்சி எதிர்ப்பு தன்மை காலை கொண்டது. பாதிப்புகள் அதிகமாகும் முன்பாக கொஞ்சம் தேங்காய் எண்ணெயை பாதிக்கப்பட்ட சருமத்தில் ஒரு இரண்டு தடவை என போட்டு வந்தால் போதும் யோனி பகுதியில் ஏற்படும் அரிப்பு எல்லாம் காணாமல் போகும்.

    * மஞ்சளில் உள்ள குர்குமின் இயற்கையாகவே ஆன்டி பாக்டீரியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பொருள் கொண்டது. சருமத்தில் ஏற்பட்ட பாதிப்பை தீவிரம் ஆக்காமல் உடனடியாக குறைக்கிறது.

    1 டீஸ்பூன் பட்டர், 1/2 டீஸ்பூன் மஞ்சள் பொடி சேர்க்கவும். இந்த பேஸ்ட்டை பாதிக்கப்பட்ட சருமத்தில் தடவி 30 நிமிடங்கள் விட்டு விடவும். பிறகு கழுவி விடுங்கள். இதை ஒரு நாளைக்கு இரண்டு தடவை என செய்து வாருங்கள்.



    * வேப்பிலையில் பூஞ்சை எதிர்ப்பு பொருள், ஆன்டி பாக்டீரியல் பொருட்கள் உள்ளன. அதனால் தான் இது நிறைய அழகு சாதனப் பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது. இதை சருமத்திற்கு வெளியேவும் உள்ளேயும் கூட பயன்படுத்தலாம்.

    யோனி பகுதியில் ஏற்படும் அரிப்பை போக்க ஒரு கைப்பிடியளவு வேப்பிலையை எடுத்து கைகளைக் கொண்டு நசுக்கியோ அல்லது பேஸ்ட்டாக்கி பாதிக்கப்பட்ட இடத்தில் தடவுங்கள். 1/2 மணி நேரம் கழித்து கழுவி விடுங்கள்.

    * கற்றாழை ஒரு மேஜிக் தாவரம் என்றே கூறலாம். இதன் ஜெல்லை யோனி பகுதியில் தடவி வந்தால் சருமத்தில் ஏற்பட்ட சரும வடுக்கள், எரிச்சல், அரிப்பு போன்றவை சரியாகி விடும்.

    கற்றாழை ஜெல்லை மட்டும் தனியாக பிரித்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி உலர விடவும். பிறகு கழுவி விடுங்கள். இதை ஒரு நாளைக்கு இரண்டு தடவை என சில நாட்களுக்கு செய்து வாருங்கள் நல்ல பலன் கிடைக்கும்

    தடுக்கும் முறைகள்

    இறுக்கமான உள்ளாடைகளை தவிர்த்து நல்ல காற்றோட்டமான ஆடைகளை அணியுங்கள்.

    குளித்து முடித்த பிறகு பிறப்புறுப்புப் பகுதியில் கொஞ்சம் பேபி பவுடர் போட்டுக் கொள்ளுங்கள்.

    நன்றாக அந்தப் பகுதியை உலர்த்தி விடுங்கள்.

    உடலுறவின் போது உராய்வு ஏற்படாமல் இருக்க எண்ணெய் பயன்படுத்தி கொள்ளுங்கள்.

    ஈரமான துணியை வெகுநேரம் அணியாதீர்கள்.

    பிறப்பிறுப்பில் முடிகளை நீக்கும்போது கவனமாக எடுங்கள்.

    இந்த இயற்கை வழிகளை பின்பற்றி எளிதாக யோனிப் பகுதியில் ஏற்படும் அரிப்பை, சரும பிரச்சினைகளை சரி செய்யலாம். 
    நாம் இயற்கை முறையில் வளர்க்கும் காய்கனிகளில் இயற்கை உரங்களை இட்டு வளர்ப்பதால் பூச்சி மருந்து மற்றும் நச்சு இல்லாத காய்கனிகளை பெறலாம்.
    வீடுகளில் இருக்கும் காலி இடங்களில் தோட்டம் அமைத்து காய்கனிகளை சாகுபடி செய்யலாம். கடைகளில் வாங்கும் காய்கறிகளில் பூச்சி மருந்தின் தாக்கம் இருக்கும். ஆனால், நாம் இயற்கை முறையில் வளர்க்கும் காய்கனிகளில் இயற்கை உரங்களை இட்டு வளர்ப்பதால் பூச்சி மருந்து மற்றும் நச்சு இல்லாத காய்கனிகளை பெறலாம்.

    காலி இடம்

    வீடுகளில் இருக்கும் காலி இடங்களில் சிறிய அளவில் வீட்டு தோட்டம் அமைக்கலாம். ஆனால், ஒரு குடும்பத்திற்கு ஆண்டு முழுவதும் காய்கனிகளை பெற சற்று கூடுதலான இடத்தில் தோட்டங்களை அமைக்கலாம். ஒரு நபருக்கு ஒரு சென்ட் என்ற விகிதத்தில் 5 நபர்கள் உள்ள குடும்பத்திற்கு 5 சென்ட் வீதம் தோட்டம் அமைத்தால் ஆண்டு முழுவதும் வீட்டிற்கு தேவையான காய்கனிகளை பெறலாம்.

    வீட்டு தோட்டம் அமைக்க உள்ள இடத்தை தேர்வு செய்து கொண்டு அந்த இடத்தில் காணப்படும் தேவையற்ற சிமெண்டு கட்டிகள், கற்கள் உள்பட செடிகளின் வளர்ச்சியை பாதிக்கும் பொருட்களை முதலில் அகற்ற வேண்டும். தேர்ந்தெடுத்த நிலத்தை சத்துள்ளதாக மாற்ற அந்த மண்ணின் வளத்தை மேம்படுத்த வேண்டும்.

    தொழு உரம்

    உதாரணமாக, நிலத்தின் மண் உவர் மண்ணாக இருந்தால் பசுந்தாள், செம்மண் மற்றும் தொழுஉரத்தை நிலத்தில் இட்டு 2½ அடி ஆழம் வரை மண்ணை கொத்தி விட வேண்டும். களிமண் நிலமாக இருந்தால் பசுந்தாள் உரம், தொழுஉரம், சாம்பல் இவைகளை கலந்தும், களர் மண்ணாக இருந்தால் பசுந்தாள் உரத்தை அதிக அளவில் இட வேண்டும். சாதாரணமாக தோட்ட மண்ணில் தொழுஉரம் அல்லது கம்போஸ்ட் இவைகளை அதிகமாக இட்டு மண்ணை வளப்படுத்தி கொள்ளலாம்.



    காய்கனிகளை பயிரிடும் போது நீண்ட காலப்பயிர்களான முருங்கை, கருவேப்பிலை, கொய்யா, மாதுளை, எலுமிச்சை, பப்பாளி, லட்சக்கொட்டை கீரை, தவசிக்கீரை போன்றவற்றை தோட்டத்தின் ஓரத்தில் நட வேண்டும். இந்த சிறிய ரக செடிகளில் நிழலானது, தோட்டத்தின் உள்பகுதியில் விளையும் காய்கனி பயிர்களின் மீது படாதவாறு இருக்க வேண்டும். விரைவில் பலன் தரக்கூடிய கீரைவகைகள், கொத்தமல்லி இவைகளை தோட்டத்தில் நடப்பதற்காக விடப்பட்ட நடைபாதைகளின் 2 பக்கங்களிலும் சிறுபாத்தி அமைத்து பயிரிடலாம். பாத்திகளை பிரித்து, வரப்புகளில் வெங்காயம், முள்ளங்கி, இஞ்சி இவைகளை பயிரிடலாம்.

    கொடி வகைகள்

    படரும் கொடிவகைகளை தனி கவனத்துடன் பயிரிட வேண்டும். தோட்டத்தின் 4 மூலைகளிலும் பந்தல் அமைத்து அதன்கீழ் பாகல், பீர்க்கு, புடலை, அவரை ஆகியவற்றை விதைத்து பயன் பெறலாம். அவரை மற்றும் புடலையை ஒரே பந்தலில் படர விட வேண்டும். அவரை பூ விடும் முன் புடலை பூ விட்டு பலன் கொடுத்து விடும். அதிக வயதுடைய பயிரான கத்தரி, மிளகாய் பயிர்களுக்கு இடையே ஊடுபயிராக குறைந்த கால வயது பயிரான முள்ளங்கி, தண்டுக்கீரை இவைகளை சாகுபடி செய்து பலன் பெறலாம்.

    பயிர் நோய்கள் தாக்கும் நிலை காணப்பட்டால் வேம்பு கரைசல் உள்ளிட்ட இயற்கை பூச்சி கொல்லிகளை பயன் படுத்தி நோய்களை கட்டுப்படுத்த வேண்டும்.

    நடவு காலம்

    வீட்டு தோட்டம் அமைக்க தேர்ந்தெடுக்கப்பட்ட காலி இடத்தை சம அளவுள்ள பாத்திகளாக பிரித்து கொண்டால் முதல் பாதி பிப்ரவரி, மே மாதத்தில் தக்காளி பயிரும், ஜூன், ஜூலை மாதத்தில் டிசம்பர் மாதம் வரை கத்தரியும், ஜனவரி முதல் பிப்ரவரி வரை கீரை வகைகளையும் பயிர் செய்யலாம். இதே போல் 2-வது பாத்தியில் மார்ச் முதல் ஜூன் வரை வெண்டையும், ஜூன் முதல் செப்டம்பர் வரை கொத்தவரையும், செப்டம்பர், அக்டோபரில் முள்ளங்கியும், நவம்பர், பிப்ரவரியில் வெங்காயமும் பயிரிடலாம்.

    இதே போல் 3-வது, 4-வது பாத்திகளில் பயிரினை மாற்றி மாற்றி ஆண்டு முழுவதும் அனைத்து காய்கறிகளும் தினந்தோறும் கிடைக்கும் வண்ணம் திட்டமிட்டு பயிரிடலாம். காய்கறி பயிருக்கு என்று தயாரிக்கப்படும் நுண்ணுயிர் மற்றும் காய்கனி கலப்புரத்தை இட்டு கூடுதல் மகசூல் பெறலாம். இதன் மூலம் அன்றாடம் வீட்டு சமையலுக்கு நமது வீட்டு தோட்டத்தில் விளையும் காய்கறிகள் சுவையுடன் சத்தையும் தருவதாக இருக்கும்.
    வடபழனியில் பெண் பார்க்க அழைப்பது போல நடித்து வாலிபரிடம் நூதன முறையில் கொள்ளையடித்த 3 பெண்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    போரூர்:

    அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ. காலனி திருக்குறளார் தெருவைச் சேர்ந்தவர் காளிசரண்.தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

    இவர் திருமணம் செய்ய பெண் தேவை என தனியார் திருமண தகவல் மையம் மூலம் ஆன்லைனில் பதிவு செய்திருந்தார்.

    நேற்று மாலை காளிசரணை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட பெண் ஒருவர் தங்களை பற்றிய தகவல்கள் அனைத்தும் ஆன்லைனில் பார்த்து விட்டோம் நேரில் வந்தால் பெண்ணை பார்த்துவிட்டு பேசி முடிவு செய்து கொள்ளலாம் என்றும் வடபழனியில் உள்ள வீட்டிற்கு உடனடியாக வருமாறு அழைத்தார்.

    இதை நம்பிய காளிசரண் நேற்று இரவு வடபழனி நூறடி சாலை அருகே உள்ள பொன்னம்மாள் தெருவில் உள்ள தனியார் தங்கும் விடுதிக்கு சென்றார். அங்கு கீழே காத்து நின்ற பெண் ஒருவர் காளிசரணை மேலே உறவினர்கள் இருப்பதாக கூறி அழைத்து சென்றார்.

    அங்கிருந்த 2 பெண்கள் நாங்கள் போலீஸ் உன்னை சோதனை செய்ய வேண்டும் உன் மீது ஏராளமான புகார்கள் உள்ளது என்று கூறி அவரிடமிருந்துவிலை உயர்ந்த ஐபோன், செயின் மோதிரம் உள்பட 5 சவரன் தங்க நகைகள் மற்றும் ஏ.டி.எம். கார்டை பறித்து விட்டு காளிசரணை அனுப்பிவிட்டனர்.

    இதுகுறித்து காளிசரண் வடபழனி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். தனியார் விடுதி மேலாளர் மற்றும் சாலையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து நூதன முறையில் கொள்ளையில் ஈடுபட்டு தப்பி சென்ற பெண்களை தேடி வருகின்றனர். #tamilnews
    ×