search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95284"

    ஆண்களைவிட பெண்களுக்கு தான் மது பழக்கம் அதிக பாதிப்பைத் தருகிறது. கருவுற்றிருக்கும் பெண்களுக்கு வயிற்றில் உள்ள குழந்தையை தாக்கும் சக்தி கொண்டது மது.
    ஆண்களைவிட பெண்களுக்கு தான் மது பழக்கம் அதிக பாதிப்பைத் தருகிறது. ஆண்களைவிட பெண்கள் உடலில் நீரின் அளவு குறைவாக உள்ளது. அதனால் உள்ளுறுப்புகளை மது வெகு வேகமாக தாக்கும். மூளை, கல்லீரல் போன்ற உறுப்புகள் உடனடியாக பாதிக்கும் அபாயம் உள்ளது.

    நேரடியாக இதயத்தை தாக்கி ஹார்ட் அட்டாக் வர வாய்ப்பிருக்கிறது. கருவுற்றிருக்கும் பெண்களுக்கு வயிற்றில் உள்ள குழந்தையை தாக்கும் சக்தி கொண்டது மது. குறைப்பிரசவம் ஆகவும், கருக்கலைப்பு ஏற்படவும் அதிக வாய்ப்பிருக்கிறது.



    அதோடு குழந்தையின் உள்ளுறுப்புகளின் வளர்ச்சி பாதிக்கும். அப்படியே குழந்தை பிறந்தாலும் நினைவாற்றல் மழுங்கி பார்வை குறைவுடன் தான் இருக்கும்.

    பால் கொடுக்கும் தாய்மார்கள் குடிப்பதால் பால் குறைந்து போகும். அதையும் மீறி சுரக்கும் பாலில் எதிர்ப்பு சக்திகள் குறைந்து மதுவின் தீமைகள் குழந்தைகளுக்கு போய் சேரும்.

    உடல் எடை பருமனாகும் வாய்ப்புள்ளது. மூட்டு வலியும் ஏற்படும். சிறிய பிரச்சினையை கூட சமாளிக்கும் திரணியற்று உடைந்து போவார்கள். போதையின் பாதையில் எதிர்காலம் எட்டவே முடியாத அளவுக்கு தொலைதூரமாகி விடும் என்பதை இன்றைய பெண்கள் உணர வேண்டும்.
    சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் தடுக்கப்பட்டு வரும் நிலையில், 2 வழக்கறிஞர்கள் உட்பட 4 பெண்கள் சபரிமலைக்கு செல்ல போலீஸ் பாதுகாப்பு வேண்டி கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். #KeralaHighCourt #SabarimalaTemple
    திருவனந்தபுரம்:

    சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கி இருந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து இந்து மக்கள் அமைப்புகளும், பாஜகவும் போர்க்கொடி தூக்கினர். சபரிமலைக்குள் செல்ல முயலும் பெண்களை வழிமறைத்து போராட்டங்கள் நடத்தி திருப்பி அனுப்பினர்.

    மேலும், போராட்டக்காரர்கள் மற்றும் பக்தர்களின் வலியுறுத்தலால் தேவசம் போர்டு உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய சம்மதித்தது. மேலும், பல்வேறு அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுக்கள் நவம்பர் 13-ம் தேதி விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் இன்று தெரிவித்து இருந்தது.



    இந்நிலையில், சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் செல்ல காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும் என 2 வழக்கறிஞர்கள் உட்பட 4 பெண்கள் கேரள உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுவில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை சுட்டிக்காட்டி, கோவிலுக்குள் செல்ல பாதுகாப்பு அளிக்கும்படி அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். #KeralaHighCourt #SabarimalaTemple
    திருச்சி மற்றும் புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சல் அறிகுறியுடன் 4 பெண்கள் உள்பட 5 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். #swineflu
    திருச்சி:

    புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியை சேர்ந்தவர் சாகுல் ஹமீது. இவரது மனைவி நூர்ஜகான் (வயது 48). இவருக்கு கடந்த 13-ந் தேதி காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் அறந்தாங்கியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அவருக்கு காய்ச்சல் சரியாகவில்லை.

    தொடர்ந்து அவர் மேல்சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவருக்கு அனைத்து சோதனைகளும் செய்யப்பட்டது. பின்னர் அவர் வீடு திரும்பினார்.

    இந்நிலையில் மதுரை தனியார் மருத்துவமனையில் நூர்ஜகானுக்கு எடுக்கப்பட்ட சோதனையின் முடிவுகள் வந்தது. அதில் நூர்ஜகானுக்கு பன்றி காய்ச்சலின் அறிகுறிகள் இருப்பது தெரியவந்தது.

    இது குறித்து தகவல் அறிந்த அறந்தாங்கி நகராட்சி அதிகாரிகள், நூர்ஜகான் வீட்டிற்கு சென்று, அவரை உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறும்படி அறிவுரை கூறினர். இதையடுத்து அவர், புதுக்கோட்டையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதனிடையே நூர்ஜகானின் மகள் பாத்திமாவிற்கும் காய்ச்சல் ஏற்பட்டது. சோதனையில் அவருக்கும் பன்றி காய்ச்சல் அறிகுறிகள் இருப்பது தெரியவந்தது. அவரும் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதேபோல் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் திருச்சி மாவட்டம், லால்குடியை அடுத்த கீழப்பெருங்காவூர் மளவனூர் கிராமம் கிழக்கு தெருவை சேர்ந்த தொழிலாளி நீலமேகத்தின் மனைவி சாரதா (40) மற்றும் ஒரு பெண் உள்பட 2 பேர் பன்றி காய்ச்சல் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 6 பேர் சாதாரண காய்ச்சலுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு டாக்டர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். #swineflu
    பெண்களின் ஆபரணங்கள் உலோகங்களில் செய்யப்பட்டது போல தற்போது வண்ணமயமான ஜொலிக்கும் பட்டு நூல்கள் கொண்டு தயாராகின்றன.
    இளம் பெண்கள் தங்களின் ஆடை வடிவமைப்புக்கு ஏற்றவாறு விதவிதமான புதிய ஆபரணங்களை அணிந்து கொள்கின்றனர். பெண்களின் ஆபரணங்கள் உலோகங்களில் செய்யப்பட்டது போல தற்போது வண்ணமயமான ஜொலிக்கும் பட்டு நூல்கள் கொண்டு தயாராகின்றன. பட்டு நூல் லேசானது. எடை குறைவானது. மேலும் பளபளப்பும் வழவழப்பும் தன்மை கொண்டது.

    அதன் மூலம் உருவாகும் ஆபரணங்கள் நாளடைவில் மங்காத தன்மையுடன் உள்ளது. அத்துடன் எந்த வண்ண ஆடை அணிகின்றோமோ அந்த வண்ணத்திலான நூல்களை கொண்ட ஆபரணங்களை அணிந்து கொள்ளலாம். இதன் மூலம் ஆடை நெய்த நூல் அமைப்பிலேயே ஆபரணமும் அணியும்போது கூடுதல் அழகும், பொலிவும் ஏற்படும்.

    பட்டு நூல் ஆபரணங்கள்

    பட்டு நூல் கொண்டு தற்போது காதணி, நெக்லஸ், வளையல், பிரேஸ்லெட் போன்றவை உருவாக்கப்படுகின்றது. ஒவ்வொரு ஆபரண வகையும் அதற்கென உள்ள பிரத்யேக கம்பி வடிவங்கள், கொக்கி அமைப்புகள் கொண்டு அழகுற பின்னப்படுகிறது. பட்டு நூல் இறுக்கமான அமைப்புடன் ஆபரணமாக செய்யப்படும்போது அதன் உறுதி தன்மை அதிகரிக்கிறது. மேலும் அதன் மேம்பட்ட பொலிவு தன்மை எந்த புறம் திரும்பினாலும் அழகிய வண்ண சாயலுடன் பிரதிபலிக்கின்றன. விலை மதிப்புமிக்க பட்டு நூல் சேலையாக அணியும் பெண்கள் பட்டு நூல் ஆபரணத்தையும் ஆர்வமாக அணிய தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக அதிகபட்ச அழகியலுடன் கூடிய பட்டு நூல் நகை தயாராகின்றன.

    சிறு மணி கொத்துகளுடன் கூடிய நெக்லஸ்கள்

    முற்றிலும் பட்டு நூல் கொண்டு நெக்லஸ் வடிவமைப்பு மேற்கொள்ளாது நடுநடுவே சிறு மணிகள், கற்கள், முத்துக்கள் இணைக்கப்பட்டவாறு உருவாக்கப்பட்டுள்ளன. சீரான இடைவெளியில் அழகிய சிறு சிறு முத்து மணிகள் கொத்துகளை உள்ளதுடன் அதன் இணைப்பாக வண்ண பட்டு நூல் இணைந்தபடி உள்ளது. அதுபோல் அதன் நடுப்பகுதி பதக்கங்கள் பட்டு நூல் சேர்ந்தபடியும், கற்கள் பதித்த பதக்கங்கள் என்றவாறும் இணைக்கப்பட்டுள்ளன.

    சிறு மணி குஞ்சரங்கள் இணைந்த பட்டு நூல் நெக்லஸ்-யின் அதே அமைப்பிலான காதணி மற்றும் வளையல்கள் போன்றவை செட்-ஆக உருவாக்கம் செய்யப்பட்டுள்ளன.



    உலோக மணிகளுடன் கூடிய மாலைகள்

    இரட்டை வண்ண கலவையுடன் நடுநடுவே உலோக மணிகள் இணைப்புடன் கூடிய மாலைகள் பட்டு நூலில் தயார் செய்யப்படுகின்றன. பெரிய நீளமான மாலைகள் பந்து வடிவ உருளைகள் மற்றும் நீள் வடிவ உருளைகள் என்றவாறு பல வண்ண கலப்பு நூல்களுடன் மாலையாக உருவாக்கப்பட்டுள்ளன. இந்த மாலைகளில் நடுநடுவே உலோக மணிகள் இணைப்பும், நடுவே பெரியஉலோக பதக்கங்களுடன் காட்சி தருகிறது. பித்தளை உலோக மணிகள் என்பதுடன் வெள்ளி உலோக மணிகள் என்றவாறும் இம்மாலைகளில் இடம் பெறுகின்றன.

    பிரகாசமான வண்ணங்களை பச்சை, நீலம், மஞ்சள், சிகப்பு மற்றும் இளஞ்சிகப்பு நூல்கள் கொண்ட மாலைகளில் சில ஒற்றை வண்ண நூல்களுடன் உருவாக்கி தரப்படுகிறது. பார்க்க பரவசமான உருவ அமைப்புடன் பட்டு நூல் மாலைகள் உருவாகின்றன.

    அழகிய பட்டு நூல் ஜிமிக்கிகள்

    காதணிகளில் அழகிய பட்டு நூல் ஜிமிக்கிகள் பாந்தமான வடிவமைப்புடன் காட்சி தருகின்றது. பட்டு நூல் ஜிமிக்கிகளின் நடுப்பகுதி மற்றும் ஓரப்பகுதிகள் கற்கள் மற்றும் மணிகள் தொங்கும் அமைப்பில் உருவாகியுள்ளன. இதிலும் ஒற்றை நிற ஜிமிக்கி மற்றும் பல நிறத்திலான ஜிமிக்கிகள் கிடைக்கின்றன. இதில் சிறிய மற்றும் பெரிய அளவிலான ஜிமிக்கி காதணிகள் விதவிதமான அளவில் கிடைக்கின்றன.

    வண்ண பிரகாசத்துடன் வளையல்கள்


    வளையல்கள் என்பதில் பட்டு நூல் இடைவெளியுடன் உலோக உருவங்கள் இணைப்புடன் கூடிய அகலமான பெரிய வளையல்கள் வருகின்றன. அதுபோல் மெல்லிய கம்பி அளவு பட்டு நூல் வளையல்கள் என்பது பல இணைந்தவாறு ஓரப்பகுதி வளையல்கள் கற்கள் வைக்கப்பட்டவாறு பல வளையல் அமைப்புடன் உள்ளன. ஒரே வளையலில் பல வண்ண நூல்கள் சாய்வான அமைப்புடன் உருவான வளையல்கள் ஒளிவெள்ளத்தில் பார்க்கும்போது அழகிய வானவில் போன்று காட்சி அளிக்கிறது.

    பட்டு நூல் வளையல்களில் சிறு சிறு மணிகள் தொங்கியபடி அமைப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எந்தவிதமான ஆடை அலங்காரத்திற்கும் ஏற்ற பட்டு நூல் ஆபரணங்கள் பாரம்பரிய பட்டாடைகளுக்கு அணியும்போது தனிப்பட்ட கூடுதல் அழகை தருகின்றது. இளம்பெண்கள் குர்தி போன்ற வண்ண பருத்தி ஆடைகளுக்கும் பட்டு நூல் ஆபரணங்கள் அணிந்து மகிழ்கின்றனர்.
    சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் விளம்பரத்துக்காக பெண்கள் செல்வதாக குற்றம்சாட்டி அவர்களை அனுமதிக்கக் கூடாது என இந்து மக்கள் கட்சியினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். #SabarimalaTemple
    சென்னை:

    கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவிலில் 10 வயதுக்கு மேற்பட்ட 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது.  இந்த தடையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்குள் செல்லலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

    இந்த தீர்ப்புக்கு பல்வேறு இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். சபரிமலைக்குள் செல்ல முயலும் பெண்களை வழிமறைத்து போராட்டக்காரகள் மற்றும் பக்தர்கள் சிலர் கோவிலுக்குள் செல்லவிடாமல் தடுக்கின்றனர்.



    இந்நிலையில், சென்னை அண்ணா நகரில் உள்ள ஐயப்பன் கோவிலில் பெண்கள் சபரிமலைக்கு செல்வதை கண்டித்து இந்து மக்கள் கட்சியினர் போராட்டம் நடத்தினர். கண்களில் கருப்புத்துணிகளை கட்டியபடி, ‘10 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் சபரிமலைக்கு செல்ல வேண்டாம்’ என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பெண்கள் விளம்பரத்துக்காக சபரிமலைக்கு செல்வதாகவும், அவர்கள் பக்தர்கள் இல்லை எனவும் போராட்டக்காரர்கள் கூறியுள்ளனர். மேலும், அவர்கள் தூய்மையாக இல்லை எனவும், அவர்கள் கோவிலுக்குள் சென்றால் ஐயப்பனின் புனிதம் மற்றும் பிரம்மச்சரியம் வீணாகிவிடும் எனவும் இந்து மக்கள் கட்சியினர் தெரிவித்துள்ளனர். #SabarimalaTemple
    திருச்சி அருகே வெள்ளாளப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அச்சப்பன் கோவிலில் பெண்களை சாட்டையால் அடித்து பேய் விரட்டும் வினோத நிகழ்ச்சி நடைபெற்றது.
    தா.பேட்டை:

    திருச்சி மாவட்டம் தா.பேட்டை அடுத்த வெள்ளாளப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அச்சப்பன் கோவிலில் ஆண்டுதோறும் ஆயுதபூஜை மறுநாள் விஜயதசமி அன்று பெண்களை சாட்டையால் அடித்து பேய் விரட்டும் வினோத வழிபாடு நடத்தப்படுவது வழக்கம்.

    இந்த ஆண்டு நேற்று நடைபெற்ற விழாவில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு அச்சப்பன், அகோர வீரபத்திரர், மதுரைவீரன், வெடி கார குள்ளன், பாப்பாத்தி, மகாலட்சுமி உள்ளிட்ட தெய்வங்களுக்கு பக்தர்கள் தீபமேற்றி வழிபட்டனர்.

    நேற்று காலை பெண்கள் பொங்கல் வைத்தனர். பின்னர் கோவிலில் இருந்து அச்சப்பன் மற்றும் அகோர வீரபத்திரன் உள்ளிட்ட சுவாமிகளை பக்தர்கள் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் வாணவேடிக்கையுடன் அருகிலுள்ள காட்டு கோவிலுக்கு சுமந்து சென்றனர். அப்போது கோவிலை சேர்ந்த சேர்வை காரர்கள் (பூசாரிகள்) தப்பு அடித்து நடனம் ஆடினர். மேலும் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கப்பட்டது.

    அந்த சமயத்தில் காட்டுக் கோவில் திடலில் நீண்ட வரிசையில் தலைவிரி கோலத்துடன் கைகளை உயர்த்தி மண்டியிட்டபடி அமர்ந்திருந்த பெண்களின் கைகளில் கோவில் பூசாரி சாட்டையால் அடித்தார். பின்னர் சாட்டை அடி வாங்கிய பெண்கள் கோவிலுக்கு சென்று சுவாமியை வழிபட்டு விபூதி பிரசாதம் வாங்கி சென்றனர்.

    அச்சப்பன் கோவிலில் நடைபெறும் விழாவில் கலந்து கொண்டு பூசாரியிடம் சாட்டையால் அடி வாங்குவதால் காத்துக்கருப்பு, பில்லி சூனியம், பேய் பிடித்தல் ஆகிய வற்றிலிருந்து பாதுகாத்து கொள்வதாகவும், திருமணம் ஆகி குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள் சுவாமியிடம் வேண்டி கொண்டு சாட்டையால் அடி வாங்கினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும், திருமணம் ஆகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்று நம்புவதாக பக்தர்கள் தெரிவித்தனர்.

    இதில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். #tamilnews
    பேட்ட படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த், மீ டூ என்பதை பெண்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது என தெரிவித்துள்ளார். #Rajini #MeToo
    சென்னை:

    நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் பேட்ட என்கின்ற படத்தின் படப்பிடிப்பு நேற்று முடிவடைந்தது. இதனை அடுத்து வாராணாசியில் இருந்து இன்று சென்னை திரும்பிய ரஜினி செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது பேசிய அவர்,  டிசம்பர் 12-ம் தேதி அரசியல் கட்சி குறித்த அறிவிப்பு இல்லை எனவும், கட்சி துவங்குவதற்கான பணிகள் 90 சதவிகிதம் நிறைவடைந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், சபரிமலைக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை தாம் வரவேற்பதாகவும், அதே சமயம் ஐதீகம் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

    தொடர்ந்து பேசிய அவர், மீ டூ என்பது பெண்களுக்கு பாதுகாப்பு தர வேண்டும் எனவும், பெண்களும் அதனை தவறான வழியில் பயன்படுத்தக்கூடாது எனவும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். #Rajini #MeToo 
    பெண்கள் விரும்பி அணியும் சேலைகள் என்பதும் தற்போது இயற்கை சார்ந்த வகையில் உருவாக்கம் பெறுகின்றன. அதாவது ஆர்கானிக் பருத்தி சேலைகள் விற்பனைக்கு வருகின்றன.
    இயற்கையை விரும்பும் மக்கள் இயற்கையான பொருட்களால் தயாராகும் பொருட்களின் மீதும் அதிக ஆர்வம் கொள்கின்றனர். பெண்கள் விரும்பி அணியும் சேலைகள் என்பதும் தற்போது இயற்கை சார்ந்த வகையில் உருவாக்கம் பெறுகின்றன. அதாவது ஆர்கானிக் பருத்தி சேலைகள் விற்பனைக்கு வருகின்றன. இவற்றின் அருமை, பெருமை அறிந்து பல பெண்களும் இதனை விரும்பி வாங்கி உடுத்தி கொள்கின்றனர். ஆர்கானிக் பருத்தி சேலைகள் என்பது பருத்தி விளைவது முதல் நெய்தல் வரை அனைத்தும் இயற்கையான முறையில், இயற்கையான பொருட்கள் கொண்டும் தயார் செய்யப்படுகிறது.

    ஆர்கானிக் பருத்தி சேலைகள் என்பது தமிழகத்தில் கோயம்புத்தூர், திண்டுக்கல், திருச்சி மாவட்டம் மணமேடு, சேலம் மற்றும் பரமக்குடி போன்ற பகுதியில் உள்ள நெசவாளர்கள் மூலம் உற்பத்தி செய்யப்பட்டு பின் விற்பனைக்கு வருகின்றன. ஆண்டுக்கு ஆண்டு மவுசு அதிகரித்து கொண்டே வரும் இயற்கை பருத்தி சேலையின் விலை சற்று அதிகமாகவே உள்ளது. இயற்கையோடு இயைந்த வாசமிகு சேலை என்பதால் இதனை நேசத்தோடு பெண்டீர் வாங்கி மகிழ்கின்றனர்.

    இயற்கை பருத்தியால் உருவாகும் சேலைகள்

    இயற்கை பருத்தி எனும்போது முழுக்க முழுக்க ரசாயன உரங்கள் பயன்படுத்தாமல் விளைவிக்கப்படும் ஆர்கானிக் பருத்தி தான் இச்சேலை தயாரிக்கப்பயன்படுத்தப்படுகிறது. இதற்கென இயற்கை ஆர்வலர்கள் மூலம் பயிர் பருத்தி ஆய்வு செய்யப்பட்டு வாங்கப்படுகிறது. பின் அந்த பருத்தியின் மூலமே நூல் நெய்யப்படுகிறது. இதன் காரணமாகவே இதனை இயற்கை (அ) ஆர்கானிக் பருத்தி சேலை என்கின்றனர். மேலும் நூலில் ஏற்றப்படும் சாயம் மற்றும் வண்ணம் சேர்க்கை என்பது இயற்கை முறையிலேயே அரங்கேற்றப்படுகின்றன.



    இயற்கை முறையில் சாயமேற்றுதல்

    இயற்கை பருத்தி என்பது நூலாக நூற்பாலைகளில் திரிக்கப்படும். பின் இந்த நூலில் இயற்கை முறை சாய ஆலைகளில் தயார் செய்யப்பட்ட காய கரைசல்கள் கொண்டு மூழ்க வைக்கப்பட்டு சாயம் ஏற்றப்படுகிறது. அதாவது சரிசலாங்கன்னி, அரளிப்பூ, சங்குப்பூ, புளியமரச் சுள்ளி, புளியம்பழம், செவ்வாழை, கடுக்காய், செண்டுமல்லி, பலாசம்பூ, அவரை இலை அவுரி, மாதுளம் தோல், அவுரி போன்றவை உலர வைத்து பொடியாக்கப்பட்டு, அதனை நீரில் ஊற வைத்து காய்ச்சியும், காய்ச்சாமலும் இயற்கை சாயம் உருவாக்கப்படுகிறது. இந்த இயற்கை சாற்றின் கரைசலில் நூல்கள் சாயமேற்றப்பட்டு விதவிதமான வண்ணங்கள் பெறப்படுகிறது. இவ்வாறு உருவாகும் நூலின் வண்ணம் மங்காமல் இருக்க இதனை மறுபடியும் வெற்றிலை சாற்றில் ஊற வைத்த பின் தேங்காய் எண்ணெய் (அ) வேப்ப எண்ணெயில் நனைத்து உலர வைக்கப்படும். இந்த சாயமேற்ற நூல்களில் தான் பருத்தி சேலை நெய்யப்படும்.

    கைத்தறி நெசவாளர்கள் மூலமாக இயற்கை சாயம் ஏற்றப்பட்ட பருத்தி நூல்கள் மூலமாக அழகிய வண்ணமிகு சேலைகள் விதவிதமாக நெய்யப்படுகின்றன. இவ்வாறு நெய்யப்பட்ட சேலையே இயற்கை பருத்தி சேலைகள் எனப்படுகிறது. இயற்கை பருத்தி சேலைகள் என்பது மற்ற பருத்தி சேலையை போன்று ரசாயன நாற்றமோ, பசை நாற்றமோ இன்றி முழுக்க முழுக்க மணமணக்கும் வாசத்துடன் வெளி வருகின்றன. இயற்கை பருத்தி, இயற்கை வண்ணம், இயற்கையான வாசம் என்பதில் தனித்து விளங்கும் இச்சேலைகள் மங்கையர் விரும்பும் வண்ண கலவையுடன் விதவிதமான டிசைன்களில் வடிவமைத்து நெய்து தரப்படுகின்றன.

    கோடை காலம், மழை காலம் என இரண்ட பருவ காலத்திலும் அணிய ஏற்ற சேலையாக திகழ்கிறது. மேலும் இதன் ரசாயன கலப்பில்லாத நூலும், சாயமும் பெண்களின் உடலோடு ஒட்டி உறவாடும் போது சருமத்திற்கு எந்த பாதிப்ை-யும் எற்படுத்துவதில்லை. சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத இயற்கை விவசாய முறையில் பயிர் செய்யப்பட்ட இயற்கை வண்ணம் பூசப்பட்ட இச்சேலைகள் அழகிய தோற்ற பொலிவை தருவதுடன், உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. இயற்கை பருத்தி சேலைகள் இளநங்கையர்களின் விருப்பமான சேலையாகவும் திகழ்கிறது.
    கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் பலத்த பாதுகாப்புடன் சபரிமலை ஐயப்பன் கோவிலை நெருங்கிய பெண்களை உள்ளே செல்ல அனுமதிக்கக்கூடாது என வலியுறுத்தி பக்தர்கள் சன்னிதானம் அருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். #Sabarimala #SabarimalaProtests
    பத்தனம்திட்டா:

    சபரிமலை கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு கேரளாவில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. தீர்ப்பைக் கண்டித்து இந்து அமைப்புகள் சார்பில் தொடர் போராட்டங்கள் நடந்து வந்த நிலையில், சமீபத்தில் சபரிமலையில் நடை திறக்கப்பட்டதை தொடர்ந்து இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது.

    தீர்ப்பை சுட்டிக் காட்டி குறிப்பிட்ட வயது பெண்களும் கோவிலுக்கு செல்வதற்கு முயற்சித்தனர். ஆனால், கோவிலுக்குள் செல்ல முயன்ற பெண்களை போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தி வருகின்றனர். பெண்களின் காலில் விழுந்து முறையிட்டு திருப்பி அனுப்புகின்றனர்.  செய்தி  சேகரிக்க சென்ற பெண் பத்திரிகையாளரும், எதிர்ப்பு காரணமாக தனது பயணத்தை பாதியில் முடித்துக்கொண்டு திரும்பினார்.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று ஐதராபாத்தைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர், எர்ணாகுளத்தைச் சேர்ந்த ஒரு பெண் ஆகியோர் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பம்பையில் இருந்து சபரிமலைக்கு சென்றனர். பம்பையில் இருந்து நடந்து சென்ற அவர்களை சுற்றி பாதுகாப்பு கவசங்களுடன் சுமார் 200 போலீசார் பாதுகாப்புக்குச் சென்றனர். பெண்கள் இருவருக்கும் பாதுகாப்புக்காக தலைக்கவசம் அணிவிக்கப்பட்டிருந்தது.

    போலீஸ் புடைசூழ சென்ற பெண்கள் இருவரும் இன்று 9 மணியளவில் சன்னிதானத்தை நெருங்கினர். அப்போது பெண்கள் சன்னிதானத்திற்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐயப்ப பக்தர்கள் முழக்கங்கள் எழுப்பினர். சரண கோஷம் எழுப்பிய அவர்கள், பெண்களை உள்ளே செல்ல அனுமதிக்கக் கூடாது என தொடர்ந்து வலியுறுத்தினர். ஆனால், அவர்களின் முழக்கங்களை காதில் வாங்கிக் கொள்ளாத போலீசார், தொடர்ந்து அந்த பெண்களை சன்னிதானம் நோக்கி அழைத்துச் சென்றனர்.



    இதையடுத்து சன்னிதானம் அருகே உள்ள நடைபந்தலில் ஐயப்ப பக்தர்கள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பெண்களை உள்ளே செல்ல ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொண்டனர். ஆனால், தங்கள் பாரம்பரிய நடைமுறைகளை மாற்றக்கூடாது என பக்தர்கள் கையெடுத்து கும்பிட்டு கேட்டுக்கொண்டனர்.

    இதையடுத்து போலீஸ் ஐஜி பத்மகுமார், அங்கு வந்து பக்தர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். போராட்டத்திற்கான காரணம் குறித்து கேட்ட அவர், உச்ச நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும், அதனால் பக்தர்கள் ஒத்துழைப்பு அளிக்குமாறும் கூறினார். எனினும் பக்தர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட மறுத்தனர். இதையடுத்து மேற்கொண்டு என்ன செய்யலாம்? என காவல்துறை அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர். இதனால் கோவில் வளாகத்தில் பரபரப்பான சூழல் நிலவுகிறது. #Sabarimala #SabarimalaVerdict #SabarimalaProtests #DevaswomBoard #DevoteesDharna 
    திருமணம் ஆகாத பெண்களுக்கு கருத்தடை மருந்துகள் வழங்க கூடாது என்று டெல்லி பா.ஜ.க. தலைவர் பிரவீன் கபூர் கூறி இருப்பது சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது. #BJP
    புதுடெல்லி:

    பாரதிய ஜனதா செய்தி தொடர்பாளர் பிரவீன் கபூர், மத்திய சுகாதார மந்திரி ஜெ.பி. நட்டா, பெண்கள் குழந்தைகள் நல மந்திரி மேனகாகாந்தி ஆகியோருக்கு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    சமீப காலமாக எப்.எம். ரேடியோவில் கருத்தடை சாதனம் குறித்து விளம்பரங்கள் வருகின்றன. அதில் குறிப்பிட்ட ஊசி மருந்தை பயன்படுத்தினால் பெண்கள் பாதுகாப்பாக இருக்கலாம் என்று குறிப்பிடுகின்றனர்.

    இதுபோன்ற விளம்பரங்களால் திருமணம் ஆகாத பெண்களையும் தவறான வழிகளுக்கு இழுத்து செல்லும் நிலை ஏற்படலாம்.

    இது, அவர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதுடன் சுகாதாரத்தையும் பாதிக்கும் செயலாக அமைந்து விடும்.

    மேலும் பெண்களை வைத்து தவறான தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு இது உதவும் வகையில் அமைந்து விடும். இதன் காரணமாக பல்வேறு இன்னல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    எனவே, கருத்தடை சாதன விவகாரத்தில் மத்திய அரசு சில பாதுகாப்பு அம்சங்களை உத்தரவாதப்படுத்த வேண்டும்.

    திருமணம் ஆன பெண்களுக்கு மட்டுமே கருத்தடை மருந்துகள் வழங்குவதற்கு விதிமுறைகளை ஏற்படுத்த வேண்டும்.

    திருமணம் ஆகாத பெண்கள் இவற்றை வாங்கி பயன்படுத்தாத முறையில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    கருத்தடை மருந்துகள் எளிதாக கிடைக்கும் போது அவற்றை தவறான முறையில் பயன்படுத்துவதற்கு பல வாய்ப்புகள் உள்ளன. அதற்கு இடம் அளிக்க கூடாது.

    இவ்வாறு அவர் கடிதத்தில் கூறி உள்ளார்.

    திருமணம் ஆகாத பெண்களுக்கு கருத்தடை மருந்துகள் வழங்க கூடாது என்று அவர் கூறி இருப்பது சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது. #BJP
    பொறுப்புணர்வு, வியாபார உத்தி, வாடிக்கையாளர்களிடம் சமூக உறவு, முடிவெடுக்கும் தன்மை, நெருக்கடியான சூழ்நிலையிலும் சிறப்பாக செயல்படும் தன்மை போன்ற பண்புகளும் உங்களை சிறந்த தொழில் அதிபராக மாற்றும்.
    அறிவியல் வளர்ச்சி இளைய தலைமுறையினரை சோம்பேறியாக மாற்றிவிட்டதோ என்று எண்ண தோன்றுகிறது. விவசாய பணிகள், தொழிற்சாலைகளில் வியர்வை சிந்தி உழைக்கும் எண்ணம் மாறி, கம்ப்யூட்டர் முன்பு தவம் கிடக்கும் பணிகளை தான் இன்றைய இளைஞர்கள் பலரும் விரும்புகின்றனர். தொழில் தொடங்கி 10 பேருக்கு வேலை கொடுக்கும் வாய்ப்பு இருந்தாலும் ரிஸ்க் எடுக்க விரும்பாமல், பத்தோடு, பதினொன்றாக கிடைக்கும் பணிக்கு விண்ணப்பிக்கிறார்கள்.

    எல்லோரும் அலுவலக பணியை எதிர்நோக்கி கொண்டிருப்பதால் தான் சாதாரண வேலைக்கு கூட அதிக போட்டி நிலவுகிறது. இதனால் தான் வேலை கிடைப்பது குதிரை கொம்பாகி விட்டது. கொஞ்சம் மாற்று வழியை பற்றியோசித்தால் வாழ்க்கையில் ஜெயிக்க ஆயிரம் வாய்ப்புகள் உங்கள் முன்பு இருப்பது புரியும். ஆம், சுய தொழில் தொடங்கியும் சாதிக்கலாம். நீங்கள் தேர்ந்தெடுக்கும் தொழிலில் ஜெயிக்க நாணயம் மட்டும் இருந்தால் போதாது. தொழில் முன்னேற்றத்தில் அக்கறையும், சிறந்த நிர்வாகத்திறமையும் அவசியம் ஆகும். இதற்காக எம்.பி.ஏ. படித்து விட்டு தான் தொழில் தொடங்க வேண்டும் என்பதில்லை.

    ஆரம்பத்தில் சிறிய முதலீட்டுடன் தொடங்கிய பின்பு அந்த தொழிலில் உள்ள நெளிவு, சுழிவுகளை நன்கறிந்து தொழில் சார்ந்த அனுபவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். இதற்கு கொஞ்ச காலம் பிடிக்கும். இந்த முதற்கட்ட பரீட்சையில் நீங்கள் சிறப்பாக செயல்பட்டு தொழிலில் கைப்பிடித்தம் வராமல் லாபம் பார்த்து விட்டால், நிர்வாகத்திறமை வந்து விட்டது என்று அர்த்தம். பின்னர் காலத்தை கணித்து படிப்படியாக உங்கள் தொழிலின் வளர்ச்சியை அபிவிருத்தி செய்து கொள்ளலாம்.



    சிறந்த தொழில் அதிபராக நீங்கள் பிரகாசிக்க வேண்டும் என்றால், சந்தை நிலவரத்தை அடிக்கடி கண்காணிக்க வேண்டும். காரணம், போட்டியாளர், உங்களைவிட திறமைசாலியாக இருந்தால், நீங்கள் எளிதில் வீழ்ந்து விடுவீர்கள். தொழில் தொடங்க மூலதனமே பிரதானம். அதற்கு வங்கிகள் கடன் வசதி செய்து கொடுத்து ஊக்குவிக்கின்றன. இவை தவிர பின்வரும் குணாதிசயங்களையும் தொழில் தொடங்குபவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

    அதாவது தொழில் தொடர்பாக நடைமுறைக்கு வரும் புதிய விஷயங்களை கற்றுக்கொள்வதற்கான ஆர்வம், தொழில் தொடங்குபவர்களிடம் இருக்க வேண்டிய முதன்மையான பண்பாகும். தொழிலில் இலக்கை நிர்ணயித்துக்கொண்டு செயல்படும் போது இடையூறுகள் வரலாம். அந்த நேரத்தில் மன உறுதியுடன் சமாளிக்கும் மனப்பக்குவமும் வேண்டும். பொறுப்புணர்வு, வியாபார உத்தி, விற்பனை முன்னேற்றம், வாடிக்கையாளர்களிடம் சமூக உறவு, முடிவெடுக்கும் தன்மை, நெருக்கடியான சூழ்நிலையிலும் சிறப்பாக செயல்படும் தன்மை போன்ற பண்புகளும் உங்களை சிறந்த தொழில் அதிபராக மாற்றும்.
    ஓடியாடி செய்யும் தொழில்களைவிட ஒரு இடத்தில் அமர்ந்து செய்யக் கூடிய தொழில்கள் பெண்களுக்கு மிகவும் ஏற்றதாகும். பெண்கள் என்னென்ன தொழில்கள் செய்யலாம் என்று தெரிந்து கொள்வோம்.
    ஓடியாடி செய்யும் தொழில்களைவிட ஒரு இடத்தில் அமர்ந்து செய்யக் கூடிய தொழில்கள் பெண்களுக்கு மிகவும் ஏற்றதாகும். பெண்கள் என்னென்ன தொழில்கள் செய்யலாம் என்று தெரிந்து கொள்வோம். அதற்கு முன்பாக பெண்கள் சுய தொழில் தொடங்கும்போது நமது தொழிலுக்கான உற்பத்தி பொருளை முதலில் தேர்ந்தெடுக்க வேண்டும்.

    தொழிலகம் அமைக்க வேண்டிய இடம், தொழில் நடத்தும் முறை, தொழிலகத்தில் பதிவு செய்தல், நிதி உதவி, உரிமம், மின் இணைப்பு, நீர்வசதி, எந்திரங்கள் மற்றும் தளவாட சாமான்கள் வாங்குதல், திறமையான பணியாளர்களை அமர்த்துதல் என ஒவ்வொன்றையும் அக்கறையுடன் கவனிக்க வேண்டும்.

    இனி பெண்களுக்கு ஏற்ற தொழில்களை பற்றி பார்ப்போம்...

    உணவு பொருட்கள்:- பெண்கள் தாங்களாகவே ஊறுகாய் தயாரிக்கலாம். இதே போல ரொட்டி, ஜாம், மிட்டாய், சிப்ஸ், கேக், சேமியா, அப்பளம், சாம்பார் பொடி, குச்சி ஐஸ், தேங்காய் பப்ஸ், சீவல் ஆகியவற்றை தயாரிக்கும் தொழில்களையும் பெண்கள் குறைந்த முதலீட்டில் செய்ய லாம்.

    வீட்டு உபயோக பொருட்கள்:- பெண்கள் சோப்பு தயாரிக்கும் தொழில் செய்யலாம். இதேபோல வெள்ளை பினாயில், பல் பொடி, கிளனிங் பவுடர், ஆயுர் வேதிக் பல் பொடி, வாசனை பத்தி மற்றும் குடை, பாய், பிளாஸ்டிக் பை, வயர் கூடை, கயிறு தயாரிக்கும் தொழில் ஆகியவற்றையும் பெண்கள் செய்யலாம்.

    ஸ்டேசனரி பொருட்கள்:- பென்சில், சாக்பீஸ், பால்பென் ரீபிள், மை, நோட்டு லேமினேஷன், காகிதம், நைலான் பிரஷ், எழுது அட்டை, பைல் ஆகியவற்றை தயாரிக்கும் தொழில்களையும் பெண்கள் தயாரிக்கலாம்.

    துணி வகைகள்:- பெண்கள், குழந்தைகளுக்கான உடைகள் தயாரிக்கலாம். டைலரிங் தொழில் செய்யலாம். துணி யில் ஸ்கிரீன் பிரிண்டிங், எம்ப் ராய்டரி, பித்தான், ஊக்கு, தலைமுடி கிளிப், ரப்பர் பேண்ட் ஆகியவை தயாரிக்கலாம்.

    இந்த தொழில்களை செய்ய ஆலோசனை பெறவும், இது போன்ற தேவைகளுக்காக மத்திய-மாநில அரசுகள் தொழில் அமைச்சகம் மூலம் பயிற்சியும் வழங்கி வருகிறது. 
    ×