search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95284"

    விழுப்புரம் அருகே கணவன்மார்கள் நீண்ட தூரம் சென்று குடிக்க முடியாமல் தவிப்பதாகக் கூறி மூடப்பட்ட டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்க வேண்டும் என பெண்களே போராட்டத்தில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #Viluppuram #Tasmac
    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் சாலாமேடு பகுதியில் இயங்கி வந்த டாஸ்மாக் கடை, அப்பகுதியைச் சேர்ந்த சில பெண்களின் போராட்டத்தால் மூன்று மாதங்களுக்கு முன்பு மூடப்பட்டது. இதனால் மதுப்பிரியர்கள் 5 கிலோ மீட்டர் தூரம் சென்று மது வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

    இந்நிலையில், தங்கள் கணவன்மார்கள் மது வாங்குவதற்காக வெகுதூரம் சென்று சிரமப்படுவதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்று கூறி மதுப்பிரியர்களின் மனைவிகள், மீண்டும் டாஸ்மாக்கை திறக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவர்களை கலைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    இதனிடையே டாஸ்மாக் கடை மூடுவதற்கு காரணமாக இருந்த பெண்கள் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மீண்டும் டாஸ்மாக் கடை திறந்தால் தீக்குளித்து தற்கொலை செய்துகொள்வோம் என அவர்கள் எச்சரிக்கை விடுத்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. #Viluppuram #Tasmac
    ஆண்கள் அவர்கள் நடந்துகொள்ளும் தோரணையை பெண்கள் அதிகம் ரசிக்கின்றனர். ஆண்களின் எந்த விஷயங்களை பார்த்து பெண்கள் அவர்களை மதிப்பிடுகிறார்கள் என்று பார்க்கலாம்.
    உருவம் எப்படி இருந்தாலும், உடை பக்காவாக இருந்தால் ஆண்கள் செம ஹாட் என்கின்றனர் பெண்கள்!

    தலை முடி, தாடியை சரியாக வெட்டி, ஷேவ் செய்து வைத்திருப்பவர்களை பெண்களுக்கு மிகவும் பிடிக்கிறது.

    அதிகம் பேசி மொக்கை போடாமல் அளவாக பேசும் ஆண்களை தான் பெண்கள் அழகு என்கின்றனர்.

    எதிலும் தனித்துவமான ஆண்கள் ஹாட் என்பது பெண்களின் கருத்து!

    மாடலிங், டான்ஸ் என்று சகலகலா வல்லவர்களை பெண்களுக்கு ரொம்பவே பிடிக்கும்.

    அதே போல் நல்ல உடற்கட்டுடன் இருக்கும் ஆண்களை பெண்களை அதிகம் விரும்புவார்கள்.

    ஆண்கள் அவர்கள் நடந்துகொள்ளும் தோரணையை பெண்கள் அதிகம் ரசிக்கின்றனர். மிகவும் ஷார்ப்பாக நடந்து கொள்ளும் ஆண்களை பெண்கள் ஹாட் என்கின்றனர்.

    இந்தோனேசியாவில் ஆட்ஜே மாகாணத்தில் இரவு 9 மணிக்கு மேல் தனியாக வரும் பெண்களுக்கு ஓட்டலில் சாப்பாடு கிடையாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. #Acehprovince
    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவில் அச்சே என்ற மாகாணம் உள்ளது. இங்கு ‌ஷரியத் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

    இதனால் அந்த மாகாணத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. உறவினர் அல்லாத ஆண்-பெண் ஒன்றாக அமரக்கூடாது. திருமணமாகாத பெண்கள் மற்ற ஆண்களுடன் சுற்றக் கூடாது போன்ற கட்டுப்பாடுகள் ஏற்கனவே அமலில் உள்ளன.

    இப்போது பிர்யூன் மாவட்டத்தில் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளனர். இரவு 9 மணிக்கு மேல் பெண்கள் ஓட்டலுக்கு தனியாக வந்து உணவு கேட்டால் அவர்களுக்கு உணவு வழங்க கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இந்த சட்டங்களை மீறினாலும், தற்போது வரை கடுமையான நடவடிக்கைகள் எதுவும் எடுப்பது இல்லை. ஆனால் இனி கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கு விதிமுறைகள் கொண்டு வரப்படும் என்று மாகாண அரசு அறிவித்துள்ளது. #Acehprovince
    ஒருவரை சந்திக்கும்போது நமது தோற்றம் மட்டுமல்ல, நாம் நடந்துகொள்ளும் விதமும்தான் நம்மைப்பற்றிய ‘இமேஜை’ அவரிடம் உருவாக்கும்.
    நாகரிகமாக உடை உடுத்துவதையும், அலங்காரம் செய்து கொள்வதையும் வைத்து மட்டுமே ஒருவருடைய ஆளுமை தீர்மானிக்கப்படுவதில்லை. செயல்பாடு, நடத்தை, குணாதிசயங்களையும் வைத்துதான் அவரது ஆளுமை மதிப்பீடு செய்யப்படுகிறது. மக்கள் தொடர்புத் துறையில் பணியாற்றுகிறவர்கள், அலுவலக பணிகளில் இருப்பவர்கள், புதிதாக வேலைக்கு முயற்சிப்பவர்கள் அனைவருமே தங்கள் ஆளுமைத்திறனில் அதிக கவனம் செலுத்த வேண்டியதிருக்கிறது.

    ஆளுமைத் திறன் கொண்டவர்களால்தான் மற்றவர்களை எளிதாக கவரமுடியும். ஈடுபட்ட துறையில் சாதிக்கவும் முடியும். இப்படி ஒவ்வொருவரிடமும் இருக்கும் ஆளுமைத்திறனை மேம்படுத்துவதற்காக, ‘இமேஜ் கன்சல்டென்ட்’ என்ற துறை வழிகாட்டுகிறது.

    நடை, உடை, பாவனைகளில் எத்தகைய மாற்றங்களை செய்யவேண்டும்- மற்றவர்களிடம் நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பவைகளை பற்றி எல்லாம் அந்தந்த துறையில் நிபுணத்துவம் பெற்றவர்கள் ஆலோசனை வழங்குவார்கள்.

    ஒருவரை சந்திக்கும்போது நமது தோற்றம் மட்டுமல்ல, நாம் நடந்துகொள்ளும் விதமும்தான் நம்மைப்பற்றிய ‘இமேஜை’ அவரிடம் உருவாக்கும். நல்ல படிப்பும், அனுபவமும் மட்டுமே எல்லா நேரங்களிலும் நன்மதிப்பை பெற்றுத்தந்துவிடுவதில்லை. அதற்கு மேலும் காலத்துக்கு தக்கபடி புதிய விஷயங்கள் தேவைப்படுகிறது. அவைகளை ‘இமேஜ் கன்சல்டென்ட்’ துறை வழங்குகிறது.

    ஒருவரை சந்திக்கும்போது கை குலுக்கி அறிமுகப்படுத்திக்கொள்ளும் முறை, வாழ்த்து, பாராட்டு தெரிவிக்கும் விதம், பேசும் விதம், தொலைபேசியில் உரையாடும் விதம், தகவல் பரிமாறும் முறை, நடை பாவனை, உடை அலங்காரம் என கவனிக்க வேண்டிய விஷயங்களை எல்லாம் ‘இமேஜ் கன்சல்டென்ட்’ துறை கற்றுத்தருகிறது. இந்த துறையில் தேர்ச்சி பெற்றவர்கள், ஒருவரிடம் பேசிக்கொண்டிருக்கும்போதே ஓரளவாவது அவரது குணாதிசயங்களை கண்டறிந்து விடுவார்கள்.

    பொது மக்களோடு நெருங்கிப்பழகும் துறைகளில் இருப்பவர்களுக்கு ‘இமேஜ் கன்சல்டென்ட்’ வழிகாட்டும். அதன் மூலம் மற்றவர்கள் மத்தியில் அவர்கள் தங்களுடைய இமேஜை உயர்த்திக்கொள்ளலாம். மேலை நாடுகளில் பரவலாக நடைமுறையில் இருக்கும் இந்த துறை பற்றிய விழிப்புணர்வு இப்பொழுது இந்தியாவில் அதிகரித்துக்கொண்டிருக்கிறது.
    சமூக வலைதளத்தில் அறிமுகம் இல்லாத நபர் ஒருவரிடம் பழகுவது அனைவருக்கும் கடினம். அதையும் தாண்டி, நீங்கள் சமூக ஊடகங்களில் பெண் தோழிகளை சந்திக்க சிலவழிமுறைகள் உள்ளன.
    முன்பெல்லாம், ஒருவருடன் பழக வேண்டும் என்றால், அவர்களைச் சந்தித்து, அவர்களிடம் பேசி, அதன்பின் அவர்களுடன் பழக வேண்டியிருந்தது. ஆனால், தற்போது இருக்கும் சமூக ஊடகங்கள் இந்த சுமைகளை குறைத்துள்ளது. இருப்பினும், அறிமுகம் இல்லாத நபர் ஒருவரிடம் பழகுவது அனைவருக்கும் கடினம். அதையும் தாண்டி, நீங்கள் சமூக ஊடகங்களில் பெண் தோழிகளை சந்திக்க சில டிப்ஸ்கள் இதோ

    உங்களுக்கு அறிமுகம் இல்லாத, எந்த வகையிலும் தொடர்பில்லாதவரை தொடர்பு கொள்வது மிகவும் தவறானது. உங்கள் நண்பரின் தோழி அல்லது, உங்கள் சமூகத்தில் இருப்பவர் என உங்களுடன் ஏதாவது ஒரு விதத்தில் தொடர்புடையவரை தொடர்பு கொள்ளுங்கள்

    அவரை சமூக ஊடகத்தில் நண்பர் ஆக்கிவிட்டீர்கள் எனில், அவருக்கு ஒரு ஹாய், ஹலோ என மெசேஜ் செய்து உரையாடலைத் தொடங்குங்கள். அவர் பதில் பதிவு செய்யும் வரை காத்திருங்கள். சில நாட்களுக்குப் பிறகும் பதில் பதிவு செய்யவில்லை என்றால், அவரை விட்டு விலகுங்கள்

    அவர் பதில் பதிவு செய்தால், உடனடியாக அவருக்கு நிறைய மெசேஜ் செய்து தொந்தரவு செய்யாதீர்கள். அவர் ஒரு மெசேஜ் செய்தால், அதற்கு பத்து மெசேஜ் பதில் பதிவு செய்வது போன்றவற்றை தவிர்த்திடுங்கள். அப்போதுதான் உங்கள் மீது ஒரு நன்மதிப்பு வரும்

    உங்களுக்கு அவர் மெசேஜ் செய்வது பாதுகாப்பானது என்பதை உணரச் செய்யுங்கள். அவருக்கு அடிக்கடி மெசேஜ் செய்து தொந்தரவு செய்வது, உங்களை ஆபத்தானவர் என்பதைப் போல் காட்டும். பொறுமையை கடைப்பிடிப்பது மிகவும் அவசியம்.

    பெண் தோழிக்கு மெசேஜ் செய்யும் போது நாகரீகமான வார்த்தைகளை பயன்படுத்துங்கள். இரண்டு அர்த்த வார்த்தைகளை பயன்படுத்தாதீர்கள். தெரியாத விஷயங்களை பற்றி பொய் சொல்லாதீங்க. அதே போல் தெரிந்த விஷயங்களையும் அளவுடன் பேசுங்க. அப்போது உங்களது நட்பு எந்த பிரச்சனையும் இல்லாமல் பல காலங்கள் தொடரும். நட்பும் நிலைத்திருக்கும்.
    மலேசியாவில் ஓரின சேர்க்கையில் ஈடுபட்ட 2 பெண்களுக்கு முதன்முறையாக பிரம்படி தண்டனை நிறைவேற்றப்பட்டது. #Malaysia #lesbian
    கோலாலம்பூர்:

    முஸ்லிம் நாடான மலேசியாவில் இஸ்லாமிய சட்டம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நிலையில் டிரெங்கானு மாநிலத்தில் காருக்குள் 22 மற்றும் 32 வயது மதிக்கத்தக்க பெண்கள் ஓரின சேர்க்கையில் (‘லெஸ்பியன்’ )ஈடுபட்டிருந்தனர்.

    அவர்களை கைது செய்த போலீசார் ‌ஷரியா ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அவர்களை குற்றவாளி என அறிவித்தார்.

    மேலும் அப்பெண்கள் 2 பேருக்கும் தலா 6 தடவை பிரம்படி தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். அதை தொடர்ந்து கோர்ட்டில் வைத்தே அவர்களுக்கு பிரம்படி தண்டனை நிறைவேற்றப்பட்டது.

    அப்போது கோர்ட்டில் 100-க்கும் மேற்பட்டோர் கூடியிருந்தனர். ஓரின சேர்க்கை குற்றத்துக்காக மலேசியாவில் பெண்களுக்கு பிரம்படி தண்டனை நிறை வேற்றப்பட்டது. இதுவே முதன்றையாகும்.



    இதற்கு மனித உரிமை ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது ஒரு கொடுஞ்செயல் என கூறியுள்ளனர். அதே நேரத்தில் டிரெங்கானு மாநில செயல் கவுன்சில் உறுப்பினர் சாதிபுல் பக்ரி மமத் கூறும்போது, ‘‘ஒருவரை துன்புறுத்தி காயப்படுத்த இந்த தண்டனை வழங்கப்படவில்லை. இத்தகைய குற்றம் புரியக்கூடாது என பொதுமக்களுக்கு உணர்த்தவே தண்டனை வழங்கப்பட்டுள்ளது’’ என்றார். #Malaysia #lesbian
    பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டையில் உரையாற்றியபோது, ராணுவ ஊழியர் தேர்வாணையத்தில் பெண் அதிகாரிகள் நிரந்தரப் பணியைப் பெறுவார்கள் என்பதை சூசகமாக தெரிவித்தார்.
    பல திருப்பங்களுக்குப்பின் இந்திய ராணுவத்தில் பெண்களின் இடம் குறித்த பிரச்சினை பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டையில் உரையாற்றியபோது சாதகமாக கையாளப்பட்டு உள்ளது.

    நாடு முழுவதும் பயணம் செய்யும்போது ராணுவத்தில் நிரந்தரமான பணிக்காக பல்வேறு பின்னணிகளில் இருந்து பெண்களின் பெருங்குரலை ஒருவரால் கேட்கமுடியும். மிகக்குறைவான பிரிவுகளில் என்றாலும், கடந்த சில ஆண்டுகளாக நிரந்தரமான பணிகளுக்கு பெண்கள் பரிசீலிக்கப்படுவது உண்மையாகும்.

    பெண்கள் விரக்தி அடைவதற்கு ராணுவத்தின் சுருக்கமான நிலையைப் பார்க்கும்போது இந்தப் பிரச்சினை சிக்கலானதாகவும், ஒப்பீட்டு முறையிலும் எப்படி இருக்கிறது? என்பதை ராணுவத்தின் சுருக்கமான நிலையால் காண முடிகிறது. இதன்மூலம், விரிவான தொலைநோக்குப் பார்வையைப் பெறலாம். தெளிவுக்காகப் பார்த்தால், மருத்துவ மற்றும் செவிலியர் பணிகளில் பெண்களின் எண்ணிக்கையை இந்த விவாதத்திற்கு வெளியே வைக்க வேண்டும்.

    2010-ம் ஆண்டுக்கு முன்பு வரை இந்திய ராணுவத்தில் பெண்களுக்கு நிரந்தரப் பணி என்பது ஏற்புடையதாக இல்லை. அந்த ஆண்டிலிருந்து ராணுவ கல்விப் படையிலும், நிர்வாகப் பிரிவிலும் மட்டுமே பெண்கள் நிரந்தரப் பணியை விரும்பினார்கள். 2017-ம் ஆண்டுவரை இந்த இரண்டு பிரிவுகளிலும் 83 பெண்கள் நிரந்தரப் பணிக்கு எடுக்கப்பட்டார்கள்.

    இதுதொடர்பான இந்திய விமானப்படையின் கடந்த இருபதாண்டுகால அனுபவம் வேறுவிதமாக உள்ளது. பொருத்தப்பாட்டையும், விருப்பத்தையும் பொறுத்து நிரந்தர பணிக்கான தேர்வு 2006-ம் ஆண்டு மே மாதத்துக்கு முன் நியமிக்கப்பட்ட அனைத்து ராணுவ ஊழியர் தேர்வு ஆணையர்களின் விருப்பமாக இருந்தது. அதன் பிறகு, நிரந்தரப் பணிக்கான நிதி நிறுத்தப்பட்டது.

    எனவே, 2006-ம் ஆண்டு வரை 338 பெண்கள் மட்டுமே நிரந்தரப்பணிக்கு அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் நிர்வாகம், ஏரோனாட்டிகல் பொறியியல் மற்றும் மின்னணுவியல், தடவாளங்கள், கணக்கு பிரிவுகளில் இருந்தனர். 2010-க்குப் பிறகு இந்திய கடற்படையும்கூட நிரந்தர பணிக்கான அனுமதியை நிறுத்திவிட்டது.

    பல பெண் அதிகாரிகள், ஆண்களோடு பெண்களுக்கும் சம உரிமை தரப்படவேண்டும் எனக் கோரி நீதிமன்றங்களை அணுகினார்கள். நாட்டின் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. முப்படைகளும் நீதிமன்றத்தின் உத்தரவுக்காக காத்திருந்தன. நீதிமன்றம் ஒன்றின் தீர்ப்பை கேட்ட பிறகு பாதுகாப்பு அமைச்சகம் அதற்கு அடுத்த நீதிமன்றத்திற்கு மேல்முறையீடு செய்தது அல்லது குறிப்பிட்ட சில விஷயங்களில் உத்தரவை பின்பற்றியது.



    பிரபலமான பபிதா புனியா வழக்கில் ராணுவ ஊழியர் தேர்வாணையத்தில் உள்ள ஆண் அதிகாரிகளுக்கு இணையாக பெண் அதிகாரிகளுக்கும் நிரந்தர பணி வழங்க வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவு அரசின் நடைமுறை கொள்கைக்கு முரணாக உள்ளது என்று உச்சநீதிமன்றத்தில் சிறப்பு அனுமதி மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இருப்பினும், உயர்நீதிமன்ற உத்தரவிற்கு உச்சநீதிமன்றம் தடை வழங்கவில்லை. இதன் காரணமாக பல பெண்கள் தங்களின் பணியில் (ராணுவ ஊழியர் தேர்வாணையத்தின் கால நிர்ணயம் முடிவடைந்த பின்னரும்) நீடிக்கும் நிலை உருவானது. இருப்பினும், அவர்கள் திரிசங்கு சொர்க்கத்தில் இருக்கிறார்கள்.

    எனவே, பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டையில் உரையாற்றியபோது, ராணுவ ஊழியர் தேர்வாணையத்தில் பெண் அதிகாரிகள் நிரந்தரப் பணியைப் பெறுவார்கள் என்பதை சூசகமாக தெரிவித்தார்.

    விமர்சனம் செய்வதில் பேரார்வம் கொண்ட சிலர், பிரதமர் எதையும் புதிதாக சொல்லவில்லை என்று கூறினார்கள். வேறு சிலரோ அவர் தவறாக வழிகாட்டப்பட்டுள்ளார் என்று கருத்து தெரிவித்தனர். இதற்கெல்லாம் நேர்மாறாக கொள்கை நிலையை அறிவித்ததன் மூலம் குழப்பமான சூழலை பிரதமர் அகற்றி இருக்கிறார். பெண்களுக்கு அதிகாரமளித்தல் என்ற கொள்கைக்கு தொடர்ச்சியாக அவர் ஒவ்வொரு நடவடிக்கையையும் மேற்கொண்டு வருகிறார்.

    விமானப்படையில் பெண் விமானிகள் ஏற்கனவே சாதனைப் படைத்திருக்கிறார்கள். கப்பல் படையில் தாரிணியில் பயணம் செய்தவர்கள் உச்சத்தை தொட்டிருக்கிறார்கள். தற்போது நாட்டின் உயர்நிலை நீதிமன்றத்தில் மூன்று பிரபலமான நீதிபதிகள் உள்ளனர். பாதுகாப்புக்கான அமைச்சரவை குழுவில் நான்கு அமைச்சர்கள் உள்ளனர். பிரதமர் தலைமையிலான இந்தக் குழுவில் 50 சதவீதம் பெண்களாவர்.

    ‘ரக்க்ஷாபந்தன்’ நேரத்தில் இந்த சிறப்பு மிக்க அறிவிப்பை பிரதமர் செய்திருப்பதன் மூலம் இந்தியாவிலுள்ள பெண்களுக்கு சிறந்த பரிசை வழங்கியிருக்கிறார். தன்னம்பிக்கையுடனான இத்தகைய போராட்டத்தால் பெண்கள் இழப்பதற்கு ஏதுமில்லை. அவர்களின் முன்னேற்றத்திற்கு வழிவகுப்பதாக மட்டுமே அரசின் நடைமுறை உள்ளது.

    நிர்மலா சீதாராமன், ராணுவ மந்திரி,
    இந்திய அரசு
    இந்திய ராணுவத்தில் அதிக அளவில் பெண்கள் சேரவேண்டும் என்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
    சென்னை :

    சென்னை மயிலாப்பூரில் உள்ள லேடி சிவசாமி அய்யர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தென் இந்தியாவின் முதல் பெண்கள் பள்ளியாக திகழ்கிறது. இப்பள்ளியின் 150-வது ஆண்டு தொடக்க விழா பள்ளி அருகே உள்ள ஆர்.ஆர்.சபாவில் நடைபெற்றது.

    ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்து விளையாட்டு மற்றும் படிப்பில் சிறந்த மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். முன்னாள் மாணவிகள் டாக்டர் வி.சாந்தா, பின்னணி பாடகி வாணி ஜெயராம், நடிகை லட்சுமி ஆகியோருக்கு சிறப்பு விருதுகளையும் அவர் வழங்கினார்.

    விழாவில் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:-

    ஒரு பள்ளி 150-வது ஆண்டுவிழா கொண்டாடுவது மிகச்சிறப்பு. இந்த பள்ளியில் படித்தவர்கள் நிறைய பேர் பல்வேறு துறைகளில் பணியாற்றுகிறார்கள். டாக்டர் வி.சாந்தா, பின்னணி பாடகி வாணி ஜெயராம், நடிகை லட்சுமி ஆகியோர் இந்தப் பள்ளியின் முன்னாள் மாணவிகள். அவர்கள் பேசுகையில் இந்த பள்ளியில் படித்த நாட்களை நினைவு கூருகிறோம் என்றனர். மேலும் தங்களுக்கு கற்பித்த ஆசிரியர்களின் பெயர்களையும் மறக்காமல் கூறினார்கள். அந்த அளவுக்கு ஆசிரியர்கள் மீது அவர்களுக்கு ஈடுபாடு இருந்துள்ளது.

    டாக்டர் வி.சாந்தா பேசுகையில் சீனிவாச சாஸ்திரி தனக்கு ஆங்கில வகுப்பு எடுத்தார் என்றார். நான் பிரமித்து போனேன். அவரைப் பற்றி நான் நிறைய கேள்விப் பட்டிருக்கிறேன். ஏனென்றால் சீனிவாச சாஸ்திரி பெரிய மனிதர். ஆங்கிலத்தில் மிகுந்த புலமை பெற்றவர். அவரிடம் ஆங்கிலம் படித்ததற்கு கொடுத்து வைத்திருக்கவேண்டும்.

    ஏழை மற்றும் நடுத்தர மக்களின் குடும்பத்தினருக்கு இந்த பள்ளி கல்வி வழங்கி வருவது பாராட்டத்தக்கது. இந்திய ராணுவத்தில் அதிக அளவில் பெண்கள் சேரவேண்டும். இந்த பள்ளியில் நல்ல குணத்தை மாணவிகள் பெற்றிருக்கிறார்கள். இந்த பள்ளியில் இருந்தும் ராணுவம், விமானப்படை, கப்பற்படை ஆகியவற்றிற்கு நிறைய மாணவிகளை உருவாக்கவேண்டும். முன்பு தமிழகத்தை தவிர பிற மாநிலங்களில் ஐ.ஏ.எஸ்., ஐ.ஐ.டி. போன்றவற்றில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் அதிகம் இருப்பார்கள். இப்போது ஐ.ஏ.எஸ்., ஐ.ஐ.டி. மத்திய அரசு பணிகளில் தமிழக மாணவர்கள் குறைந்து வருகிறார்கள். இதில், அவர்கள் கூடுதலாக வரவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசுகையில் “தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறை அதிக மாற்றங்களை மாணவர்களின் முன்னேற்றத்திற்காக கொண்டு வருகிறது. அதன்படி பாடத்திட்டம் மாற்றப்பட்டு இந்த வருடம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. நீட் தேர்வு, ஐ.ஐ.டி., சி.ஏ.தேர்வுகளுக்கு அடுத்த மாதம் முதல் இலவசமாக மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது” என்றார்.

    தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், பள்ளியின் செயலாளர் லீலா, துணைத்தலைவர் சீனிவாசன் உள்பட பலர் பேசினார்கள். டாக்டர் ஜெயவர்த்தன் எம்.பி., நட்ராஜ் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஸ்ரீதரன் நன்றி கூறினார். 
    இன்றைய நாளில் இளம் பெண்களின் கரங்களில் தவழ்வன பெரிய தங்க வளையல்கள் தான். தற்போது பெண்களை கவரும் விதத்தில் ஒற்றை பெரிய வளையல்கள் உலா வருகின்றன.
    இன்றைய நாளில் இளம் பெண்களின் கரங்களில் தவழ்வன பெரிய தங்க வளையல்கள் தான். அதிக விருப்பமும், ஆர்வமும் நிறைந்த நகையாய் தற்போது பெண்களை கவரும் விதத்தில் ஒற்றை பெரிய வளையல்கள் உலா வருகின்றன. பாரம்பரிய திருமண நகைகளின் வகையில் இந்த பெரிய வளையல்கள் பழங்கால வடிவமைப்பு மற்றும் தற்கால வடிவமைப்பு என்றவாறு கூடுதல் மெருகுடன் வடிவமைக்கப்படுகின்றன.

    இந்த பெரிய வளையல்கள் அனைவரின் கவனத்தை தன் வண்ணம் ஈர்க்கும் வகையில் இருப்பதுடன், அணிபவரின் கையின் கவுரவத்தையும், அழகையும் மேம்படுத்தும் வகையில் உள்ளது. அனைத்து வயதுள்ள பெண்களும் இதனை விரும்பி அணியலாம். குறிப்பாக இளம்வயதினர் மற்றும் மத்திய வயதுள்ள பெண்களே விரும்பி வாங்கி அணிகின்றனர்.

    ஆசிய நாடுகள் பலவற்றிலும் புதிய நவநாகரீக அணிகலனான இந்த பெரிய ஒற்றை தங்க வளையல்கள் அதிகமாக பிரபலமாகி வருகின்றது. இந்த பெரிய வளையல்கள் அனைத்தும் பெரும்பாலும் அணிபவரின் கையில் நுழைந்து சென்று விடாது. காரணம் கையில் கச்சிதமாக அமர்வதற்கு ஏற்ப பிரித்து மாட்டி கொள்ளும் கொக்கியுடன் இவ்வளையல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இதன் மூலம் வளையல்கள் எவ்வளவு பெரியதாகவும், மெல்லிய மற்றும் தகடு அமைப்பில் இருப்பினும் அணியும் போது வளைவோ, சேதமோ ஏற்படாது. அதிக வேலைப்பாடு மற்றும் எனாமல், கற்கள் பதித்த வளையல்கள் என்பதால் விழாகளுக்கு அணிந்து சென்று உடனே கழற்றி பாதுகாத்திடுவது நலம்.

    தங்கமணி குஞ்சரங்கள் தொங்கும் பிலிகிரி வளையல் :

    அற்புதமான தங்க நகை வேலைப்பாடு நிறைந்த இந்த வளையல் பெண்களின் கரங்களில் ஓர் நடன சாம்ராஜ்யத்தையே நிகழ்த்திடும். ஆம் அந்த அளவிற்கு வளையலின் இரு ஓரப்பகுதிகளிலும் தங்க மணி குஞ்சரங்கள் தொங்குகின்றன. அதில் பட்டையிலான வளைபின்னல் வேலைப்பாட்டின் இடையஇடையே மூன்று தங்க மணிகள் ஊஞ்சலாடுகின்றன. பட்டையான அமைப்பில் வளைவுகளாய் தங்க முத்துக்கள் மேலெழும்பியவாறு இடையில் சல்லடை அமைப்பும் தனித்துவத்துடன் உருவாக்கப்பட்டுள்ளன.



    எனாமல் பட்டாம்பூச்சி பறக்கும் வலை பின்னல் வளையல் :

    பெரிய அகலமான வளைபின்னல் அதிக செதுக்கல்களுடன் இருக்க அதன் மேல் அழகிய வண்ண பட்டாம்பூச்சிகள் மற்றும் பூக்கள் உள்ளவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இது இரு பிரிவுகளாக பிரித்து அணியும் வகை என்பதால் இருபக்கமும் இதே வடிவமைப்பு பிரம்மாண்ட வளையல் அமைப்பை தருகிறது. நேர்த்தியான வளைவுகளுடன் பிலிகிரி வேலைபாட்டுடன் இவ்வளையல் உள்ளது.

    டெம்பிள் வளையல்கள்:

    டெம்பிள் ஜிவல்லரி என்ற இறைஉருவம் பொறித்த மற்றும் கோயில் சின்னங்கள் நகை வடிவமைப்பிலும் பெரிய வளையல்கள் வருகின்றன. கையில் இறுக பிடிக்கும் அமைப்பில் மஹாலட்சுமி, அஷ்டலட்சுமி, பாரம்பரிய பூவேலைப்பாடு, சின்னங்கள் செதுக்கப்பட்ட இவ்வளையல்கள் அணியும் வகையிலும், மாட்டும் வகையிலும் உருவாக்கி தரப்படுகின்றன.

    கல்பதித்த ஒற்றைவளையல்கள் :

    நடுவில் கயிறு போன்ற அமைப்பும், ஓரப்பகுதிகள் இருபுறமும் ஓவல் வடிவில் நடுப்பகுதி மரகத கல்லும் சுற்றி சிறு சிறு மாணிக்க கல்லும் பதியப்பட்ட அமைப்பும், இடைவெளிவிட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் நடுவே சதுர அமைப்பும் அதில் வெள்ளை கல் பதியப்பட்டுள்ளது. இதன் கீழ் ஓரப்பகுதிகள் சிறு சிறு முத்துக்களால் இணைக்கப்பட்டுள்ளது. ஓர் அழகிய முத்து, மாணிக்க, மரகத தோரணம் இருபுறமும் உள்ளவாறு அழகுடன் இவ்வளையல் வடிவமைக்கப்பட்டுள்ளது. அழகிய வெள்ளை கற்கள் மட்டும் பதித்த பட்டை வடிவ பூ வளையல் மற்றும் பிலிகிரி வளையல்கள் அதிஅற்புதமாக உள்ளன. ஒற்றை பெரிய வளையல்கள் பெண்களின் அழகிய கலைசின்னயமாய் வலம் வருகின்றன.
    தூத்துக்குடி மாவட்டத்தில் 22,862 பெண்களுக்கு 16 வகையான தரமான பொருட்கள் உள்ளடங்கிய அம்மா குழந்தைகள் நல பரிசு பெட்டகம் இதுவரை வழங்கப்பட்டுள்ளது.
    தூத்துக்குடி:

    மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா ஏழை மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார். அவரது வழியில் தமிழக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஜெயலலிதா தொடங்கிவைத்த அம்மா குழந்தைகள் நல பரிசு பெட்டகம் வழங்கும் திட்டம் எல்லோராலும் பாராட்டு பெற்றுள்ளது.

    இந்த திட்டத்தில், குழந்தையை பாதுகாப்பாக பராமரிப்பதற்கு தேவையான பராமரிப்புத் துண்டு, குழந்தைக்கான உடை, படுக்கை, கொசு வலை, நாப்கின், 100 மில்லி லிட்டர் அளவு கொண்ட எண்ணெய் டப்பா, பிளாஸ்டிக் குப்பியில் 60 மில்லி லிட்டர் ஷாம்பு, சோப்புடன் கூடிய சோப்புப் பெட்டி, நகவெட்டி, கிலுகிலுப்பை, பொம்மை, சுத்தமான கைகளுடன் குழந்தையை பராமரிக்க பிளாஸ்டிக் டப்பாவில் 250 மில்லி லிட்டர் அளவு கை கழுவும் திரவம்,

    பிரசவித்த தாய்க்கு 100 கிராம் எடையுள்ள சோப்பு, பிரசவித்த தாயின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் தாய்ப்பாலை அதிகரிக்கவும் சவுபாக்கியா சுண்டிலேகியம், தாய் மற்றும் பச்சிளம் குழந்தையை பராமரிக்க தேவையான பொருட்களை வைத்துக் கொள்ள ஒரு பெட்டகம் உட்பட 16 வகையான பொருட்கள் உள்ளன.

    தூத்துக்குடி மாவட்டத்தில் அரசின் சுகாதாரத்துறையின் மூலம், தூத்துக்குடி வட்டத்தில் உள்ள 28 அரசு ஆரம்ப சுகாதாரம் நிலையங்களில் 2108 பெண்களுக்கும், 7 நகர் புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் 91 பெண்களுக்கும், 5 அரசு மருத்துவமனையில் 7214 பெண்களுக்கும், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 6739 பெண்களுக்கும்,

    கோவில்பட்டி வட்டத்தில் உள்ள 22 அரசு ஆரம்ப சுகாதாரம் நிலையங்களில் 1598 பெண்களுக்கும், 2 நகர் புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் 8 பெண்களுக்கும், 4 அரசு மருத்துவமனையில் 5104 பெண்களுக்கும், என மொத்தம் 22,862 பெண்களுக்கு 16 வகையான தரமான பொருட்கள் உள்ளடங்கிய அம்மா குழந்தைகள் நல பரிசு பெட்டகம் இதுவரை வழங்கப்பட்டுள்ளது.

    இத்திட்டத்தில் பயன்பெற்ற அத்திமரப்பட்டி வடக்குத்தெருவை சேர்ந்த நாகதுரை மனைவி முத்துக்கனி கூறுகையில், "அம்மா குழந்தைகள் நல பரிசு பெட்டகத்தின் மூலம் எங்கள் சுமை எங்களுக்கு குறைந்துள்ளது. இதில் உள்ள அனைத்து பொருட்களும் தரமானதாக உள்ளது" என்றார்.

    மேலதட்டப்பாறை யாதவர்தெருவை சேர்ந்த கந்தவடிவேல் மனைவி மாரியம்மாள் கூறுகையில், "இப்பொருட்களை நாங்கள் வெளியே வாங்க வேண்டுமென்றால் அதிகமாக செலவாகும். மகப்பேறு சிகிச்சையும் இலவசமாக அளித்து குழந்தை பிறந்தவுடன் அக்குழந்தையையும் கவனிப்பதற்கு இலவசமாக பொருட்கள் வழங்கிய அம்மா அவர்களுக்கும், தமிழக அரசுக்கும் என்றென்றும் நன்றியுடன் இருப்பேன்” என்றார்.
    வீட்டுக்குள்ளே வந்து நம்மோடு உறவாடும் டி.வி., குடும்ப பெண்களின் நெஞ்சில் நிற்க வேண்டும் என்று எண்ணி, கண்ணீரை கடல் நீராக்கியது போதாதென ஒழுக்க சிதைவுகளுக்கும் பாலம் போட புறப்பட்டுள்ளது.
    பொழுதுபோக்குக்காக வந்ததே பெரிய திரை என்னும் சினிமா திரைப்படம். நாளடைவில் பொழுது போக்கிலும் மக்களுக்கான நல்ல அறிவுரைகள் இருந்தன. சமுதாய புரட்சிகளும், நாட்டு நலன், மொழி வளர்ச்சி, குடும்ப நடைமுறை என்ற வட்டத்துக்குள் சினிமா சுழன்றது.

    நாகரிக வளர்ச்சிக்குப் பிறகு அதன் போக்கு மாறியது. திரைப்படங்களில் வன்முறை காட்சிகள் அதிகரித்தன. தற்போது, திரைப்படத்தின் ஊடே ஆங்காங்கே ஆபாசங்களை இடைச்செருகி ஆர்ப்பாட்டங்களை விதைத்து வருகிறார்கள்.

    திரைப்படங்களின் கதை இப்படி என்றால், சின்னத்திரையோ திரைப்படங்களை மிஞ்சிவிட்டன. இவை வீட்டுக்குள்ளே வந்து நம்மோடு உறவாடும் டி.வி., குடும்ப பெண்களின் நெஞ்சில் நிற்க வேண்டும் என்று எண்ணி, கண்ணீரை கடல் நீராக்கியது போதாதென ஒழுக்க சிதைவுகளுக்கும் பாலம் போட புறப்பட்டுள்ளது.

    நல்ல சிந்தனைகளை விதைக்கும் நேரத்தில் அருவருப்பான காட்சிகளை இயக்குவதில் பல இயக்குனர்களும் ஒரே மாதிரி இருப்பது புரியாத புதிராக இருக்கிறது. முக்கியமாக கல்யாணமான ஒருவனை இன்னொருத்தி அடைந்தே தீருவேன் என்று சபதமிடுவதும், வேறு ஒருவன் மனைவியை மணமுடித்தே தீருவேன் என இன்னொருவன் முழக்கமிடுவதும் காட்சிகள்தோறும் கங்கணம் கட்டிக்கொண்டு வருகின்றன. இதுதான் வில்லத்தனம் என்று எண்ணி எல்லோரும் தொடர்வது ஏற்புடையதா?

    ஒன்றோடு நின்றால் பரவாயில்லை. எல்லா சேனல்களின் சீரியல்களுமே இப்படித்தான் இருக்கின்றன. காட்சிக்கு காட்சி குடும்பத்தை எப்படியெல்லாம் கெடுப்பது என்ற கருவை மெருகேற்றி தரப்படுவது சரியானதல்ல.

    இத்தகைய போக்கால், தமிழர் தம் கலாசாரம் சிதைந்து போகாதா? பண்பாடு பண்படுமா? பாழ்ப்பட்டு போகாதா? ஏதோ ஒன்று என்றால் திருத்திக்கொள்ளலாம். தினமும் தொடர்கதையாக தொடர்ந்தால் நலமா? கற்பனைக்கு அளவுகோலே கிடையாதா? கண்ணியம் சிதைந்திட விடலாமா?

    சீரியல்களில் தாங்கள் சமூகத்தில் நடப்பதை பிரதிபலிப்பதாக கூறி சமாளிக்க முடியாது. பெரிய திரையும், சின்னத் திரை சீரியல்களும் சமூகத்துக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்பதுதான் காலத்தின் தேவை.

    ஆபாசத்தை முடக்கி, அன்பை வளர்த்து, சிந்திக்கும் மனிதர்களுக்கு மேலும் சிந்தனையை ஊட்டி, ஒழுக்க சிதைவுகளுக்கு இடம் தரக்கூடாது. செல்வம் சேர்க்க வேண்டும் என்ற ஒரே கண்ணோட்டத்தை விட்டு, கண்ணிய பாதையில் கதைகளை இயக்கினால் தமிழ் கலாசார, பண்பாட்டுக்கு சிதைவுகள் ஏற்படாது என்பதை உணர்ந்து சின்னத்திரை சிறப்புகள் பெறட்டும்.

    கவிஞர் பொன்னகரம் சுல்தான்
    பெண்கள் ஸ்மார்ட்போனில் உள்ள பாதுகாப்பு அம்சங்களை எவ்வாறு கையாளுவது என்ற விளக்கங்களை அறிந்து கொண்டு பயன்படுத்தினால் பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம்.
    நம்மை எப்போதும் அச்சத்திலேயே ஆழ்த்தி, அழுத்தி வைத்து இருக்கும் ஸ்மார்ட்போன் யுகம் இது. கவர்ச்சியான பெயரை சுமக்கும் இந்த ஸ்மார்ட்போன்களால் மகிழ்ச்சி ததும்பிய பல இல்லங்கள் நிம்மதியை இழந்து தவிக்கின்றன. பல தம்பதியினர் மகிழ்ச்சியை தொலைத்து தேடிக்கொண்டு இருக்கிறார்கள். குழந்தைகள் முதல் முதியோர் வரை யாரிடமும் குதூகலம் இல்லை.

    காரணம் நன்மைகளை அள்ளித்தரும் ஸ்மார்ட்போன்கள்தான், கூடவே தீமைகளையும் அன்பளிப்பாக வழங்குகின்றன. அனைத்தும் அறிந்தும் ஸ்மார்ட்போன்கள் இல்லாமல் யாரும் இல்லை. அதை சரியாக பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் சொற்பமாகவே இருக்கிறது.

    ஸ்மார்ட்போன்களை பல வழிகளில் தவறாக பயன்படுத்த முடியும். குறிப்பாக பெண்களின் அந்தரங்கங்களை வெளிச்சம்போட்டு காட்டும் செயலிகள் (ஆப்) கயவர்கள் பலரால் பயன்படுத்தப்படுகின்றன. இக்கயவர்களின் குறிக்கு சிறுமிகள், பள்ளி, கல்லூரி மாணவிகள், இல்லத்தரசிகள் என யாரும் விதிவிலக்கல்ல.

    தங்களை அறியாமலே கயவர்களுக்கு சில பெண்கள் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்துவிடுகிறார்கள். அவர்கள் ஆபத்தை உணராமல் தங்களின் ரகசிய புகைப்படங்களை, வீடியோக்களை செல்போன்களில் வைத்திருக்கிறார்கள். சிலர் தங்களின் காதலனுக்காக ரகசிய புகைப்படம், வீடியோக்களை எடுக்கிறார்கள். தம்பதியினர் சிலரும் தங்களின் அந்தரங்கங்களை செல்போனில் பதிவு செய்து வைத்திருக்கிறார்கள்.

    இதுதான் பேராபத்தை விளைவித்துவிடுகிறது. அதாவது செல்போனில் உள்ள புகைப்படங்கள், வீடியோக்கள், தகவல்கள் என எதையும் வெளியில் இருந்து ஒருவரால் பார்க்க முடியும். இதற்கு எமன் வடிவில் வந்திறங்கும் ‘டிராக்கிங்’ செயலிகள் துணை நிற்கின்றன.

    ஒருவருக்கு தெரியாமல் அவருடைய ஸ்மார்ட்போனில் இந்த செயலிகளை பதிவிறக்கம் செய்து செயல்பாட்டுக்கு கொண்டுவந்துவிட்டால் போதுமானது. எங்கிருந்து வேண்டுமானாலும் அந்த செல்போனின் செயல்பாடுகளை உளவு பார்க்க முடியும். இது பெண்களுக்கு பேராபத்தை தேடித்தந்துவிடும்.

    அதாவது, செல்போன் உரையாடல்களை ஒட்டுக்கேட்க முடியும். வாட்ஸ்-அப் உரையாடல்களை பார்க்கலாம். புகைப்படங்கள், வீடியோக்களை பார்க்க முடியும். பெண்ணுக்கு தெரியாமல் அவரின் செல்போன் கேமராவை இயக்கி அவரை ரகசியமாக படம் பிடிக்க முடியும். படுக்கை அறை காட்சிகளை, உடை மாற்றும் காட்சிகளை கயவர்களால் எங்கிருந்தோ பதிவு செய்ய முடியும்.

    கொடுமை என்னவென்றால், ஒரு செல்போனில் இந்த செயலியை பொருத்தி இருந்தால், அதை கண்டுபிடிப்பதும் கடினம். அது வேறு தோற்றத்தில் செல்போனில் நிறுவப்படும். இந்த உளவு செயலி கிட்டத்தட்ட நம் செல்போனில் இருக்கும் ‘கால்குலேட்டர்’ மாதிரிதான் இருக்கும். இதனால் யாரும் எளிதில் சந்தேகம் அடையமுடியாது.



    இன்னொருவரின் செல்போனில் இந்த செயலியை ‘இன்ஸ்டால்’ செய்யும் கயவர் கூட்டம், அதற்காக பயன்படுத்திய ஒரு ரகசிய குறியீட்டு எண்ணை கொண்டு மாஸ்டர் உளவு செயலியில் இருந்து சம்பந்தப்பட்ட செல்போனை தங்களின் முழு கட்டுப்பாட்டுக்கு கொண்டுவர முடியும்.

    சமீபத்தில் கூட ‘டிராக் வியூ’ என்னும் செயலியை ஒருவன் 100-க்கும் மேற்பட்ட பெண்களின் ஸ்மார்ட்போன்களில் ரகசியமாக இன்ஸ்டால் செய்து அப்பெண்களின் குளியல் காட்சிகள், படுக்கையறை காட்சிகள் மற்றும் உடை மாற்றும் காட்சிகளை ரகசியமாக படம் பிடித்த அதிர்ச்சி தகவல்களை செய்திகளில் படித்து இருப்போம்.

    அந்த ஆபாச படங்கள் மூலம் பல பெண்களை மிரட்டி, தனது இச்சைக்கு இணங்க வற்புறுத்தியதும், பயந்துபோய் பலர் அவன் விரித்த வலையில் வேறு வழியின்றி வீழ்ந்ததையும் மறந்திருக்க முடியாது. இதில் கொடுமை என்னவென்றால், அவன் தனது அக்கா உறவுமுறை கொண்ட பெண்ணின் அந்தரங்கத்தையும் படம்பிடித்து இருக்கிறான். காமம் அவன் கண்ணை மறைத்துவிட்டது.

    இந்த நிகழ்வு ஸ்மார்ட்போன் யுகத்தில் பெண்களுக்கு அடிக்கப்பட்டு இருக்கும் எச்சரிக்கை மணி. இதுபோன்ற காம கயவர்கள் உறவினர், பக்கத்து வீட்டுக்காரர், நண்பர்கள் என எந்த முகமூடிக்குள்ளும் பதுங்கி இருக்கலாம். எனவே, ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பெண்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். அவர்களுக்கு போதிய அறிவுரைகளை பெற்றோர் வழங்க வேண்டும்.

    ஆபாச இணையதளங்களில் அந்தரங்க படங்களுக்கு அதிக மவுசு இருப்பதால், பெண்கள் விழிப்போடு இருக்க வேண்டியது அவசியம். சமூகவலைத்தளங்களில் தங்களின் புகைப்படங்களை முகப்பு படமாக வைப்பதையும், தங்கள் படங்களை பதிவு செய்வதையும் தவிர்ப்பது நல்லது. இல்லையென்றால், அந்த படங்களை பதிவிறக்கி மார்பிங் செய்து ஆபாச இணையதளங்களுக்கு விற்றுவிடும் ஆபத்தும் உள்ளது.

    இதுபோன்ற ஆபத்துகளில் இருந்து பெண்கள் தப்பிக்க வேண்டுமானால், முதலில் தங்களின் செல்போன்களை வேறு எந்த நபரையும் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது. தங்களின் இ-மெயில் முகவரி மற்றும் பாஸ்வேர்டை யாரிடமும் கண்டிப்பாக தெரிவிக்கக்கூடாது. தெரிவித்தால், அதை தெரிந்த நபர்கள் இணையதளத்தில் நீங்கள் என்ன செய்தீர்கள்? என்ன செய்துகொண்டு இருக்கிறீர்கள் என்பதை பார்க்க முடிவும்.

    மேலும், தங்களை ஆபாசமாக புகைப்படம், வீடியோ எடுக்கவோ, அவற்றை யாருக்கும் பகிரவோ கூடாது.

    உங்கள் செல்போன் வழியாக யாரோ உங்களை கண்காணிப்பதாக சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது பழுது ஏற்படும்போது செல்போன் கடையில் கொடுத்து பழுது சரி செய்து வாங்கிய பின்னர் செல்போனில் ஏதேனும் ரகசியமாக இணைக்கப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டாலோ, ஒருமுறை ‘பேக்டரி ரீசெட்’ செய்வது நல்லது. அப்போதுதான் தேவையில்லாத ஆபத்துகளில் இருந்து பெண்கள் தப்பிக்க முடியும்.

    அதே போல, பெண்கள் ஸ்மார்ட்போனில் உள்ள பாதுகாப்பு அம்சங்களை எவ்வாறு கையாளுவது என்பது தொடர்பான விளக்கங்களை அறிந்து கொண்டு செல்போனை பயன்படுத்தினால் பெரும்பாலான பிரச்சினைகளில்இருந்து விடுபடலாம்.

    க.தர்மராஜ்,
    தகவல் தொழில்நுட்ப செயற்பாட்டாளர்
    ×