search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95359"

    பிரபல நடிகை ஒருவர் பட வாய்ப்பை பிடிப்பதற்காக முன்னணி நடிகர் ஒருவருக்கு தொடர்ந்து வலை வீசி வருகிறாராம்.
    தமிழில் உச்ச நடிகர் படத்தில் அறிமுகமான நடிகை, அடுத்ததாக முன்னணி நடிகருடன் நடிக்க ஆசைப்பட்டு ஒரு வழியாக பட வாய்ப்பை பிடித்தாராம். அடுத்ததாக உச்ச நடிகரின் உறவினருக்கு கொக்கி போட்டு தூது அனுப்பி பட வாய்ப்பை பிடித்திருக்கிறாராம்.

    இந்நிலையில், நடிகை அடுத்ததாக தமிழில் முன்னணி நடிகராக இருப்பவருடன் நடிக்க ஆசைப்பட்டு இருக்கிறாராம். இதற்காக தூது அனுப்பி வருகிறாராம். மேலும் அவரின் கவனத்தை ஈர்க்க பல முயற்சிகளிலும் இறங்கி இருக்கிறாராம். ஆனால், முன்னணி நடிகர், நடிகையை கண்டுக்கொள்ளாமல் இருக்கிறாராம்.
    பல வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருப்பவரிடம் நடிகை ஒருவர் தொடர்ந்து வாய்ப்பு கேட்டு வருகிறாராம்.
    நடிப்பிலும், நடனத்திலும் ‘ராசா’வான மூன்றெழுத்து நடிகர், அவர். சமீபகாலமாக அவர் நடித்த படங்கள் அனைத்தும் அதிரிபுதிரியாக ஓடி அமோக வெற்றி பெற்று வருகின்றன. அவருடைய நட்சத்திர அந்தஸ்து, படத்துக்கு படம் உயர்ந்து கொண்டே போகிறதாம்.

    நடிகருடன் ஏற்கனவே ஜோடியாக நடித்த ஒரு நடிகை கைவசம் தற்போது படமே இல்லையாம். அதனால் அந்த நடிகரை சந்தித்து வாய்ப்பு கேட்டாராம். ‘‘ஒரு பாட்டு என்றாலும் பரவாயில்லை... உங்களுடன் சேர்ந்து ஆடினால் போதும்...’’ என்றாராம். வட இந்திய பெயரை கொண்ட அந்த நடிகைக்கு வாய்ப்பு தருவதாக வாக்குறுதி கொடுத்து இருக்கிறாராம், நடிகர்.
    தமிழ், தெலுங்கில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்த நடிகை ஒருவர், தற்போது பட வாய்ப்புகளை இழந்து வருகிறாராம்.
    கோலிவுட்டில் தல, தளபதி போன்ற உச்ச நடிகர்களுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்ற ஸ்வீட் கடை பெயர் கொண்ட நடிகை, திருமணத்துக்கு பின்னரும் படங்களில் பிசியாக நடித்து வந்தாராம். அந்த நடிகை தற்போது கர்ப்பமாக இருக்கிறாராம். 

    இதனால் அவர் தொடர்ந்து நடிக்க முடியாத சூழல் உருவாகி உள்ளதாம். அந்த நடிகைக்கு பட வாய்ப்புகள் ஒவ்வொன்றாக நழுவி வருகிறது. தற்போது பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் இருந்து அவர் நீக்கப்பட்டு உள்ளாராம். அவருக்கு பதில் வேறு நடிகையை நடிக்க வைக்க படக்குழு முயற்சித்து வருகிறார்களாம். 
    அக்கட தேசத்தை சேர்ந்த நடிகை ஒருவர் கதாநாயர்களுடன் ரொமான்ஸ் காட்சியில் நடிக்க மறுப்பு தெரிவித்து வருகிறாராம்.
    முன்னணி நடிகையாக இருக்கும் போதே திருமணம் செய்துக் கொண்ட கதாநாயகி, தற்போதும் பல படங்களில் நடித்து வருகிறாராம். தற்போது வேறு கதாநாயகர்களுடன் ரொமான்ஸ் காட்சியில் நடிக்க மறுக்கிறாராம். 

    தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் “டூயட் எல்லாம் வைக்காதீர்கள். அதை இப்ப ரசிகர்கள் விரும்புவதில்லை” என்கிறாராம். அதுபோல் ஆபாச காட்சிகளிலும் நடிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டாராம். இதற்கு காரணம் நடிகையின் கணவர் வீட்டார் கொடுக்கும் அழுத்தம் என்கிறார்கள்.
    அந்த இளம் ஜோடி தங்களுக்கு இடையேயான காதலை முறித்துக் கொண்டது போல் வெளியில் ‘சீன்’ போட்டாலும், உள்ளுக்குள் அவர்கள் இடையே காதல் ரகசியமாக தொடர்கிறதாம்.
    அந்த இளம் ஜோடி தங்களுக்கு இடையேயான காதலை முறித்துக் கொண்டது போல் வெளியில் ‘சீன்’ போட்டாலும், உள்ளுக்குள் அவர்கள் இடையே காதல் ரகசியமாக தொடர்கிறதாம்.

    நடிகையின் சம்பளம் உள்பட அவர் நடிக்க வேண்டிய படத்தையும் நடிகரே முடிவு செய்கிறாராம். ஏறக்குறைய நடிகையின் ஆலோசகர் போல் செயல்படுகிறாராம் நடிகர்.

    அரசியல் குடும்பத்தை சேர்ந்த நாயகன் நடிக்கும் ஒரு புதிய படத்துக்காக அந்த நடிகையை கேட்டபோது, “ஒரு கோடி ரூபாய் சம்பளம் கேள்” என்று உத்தரவிட்டவர், நடிகர்தானாம். அவ்வளவு சம்பளம் தர முடியாது என்று தயாரிப்பாளர் சொன்னதும், “சம்பளத்தை குறைத்து நான் நடிக்க முடியாது என்று சொல்லிவிடு” என்று நடிகையின் பின்னால் இருந்து சொன்னவரும் நடிகர்தானாம்.
    மிக பிரபலமான அந்த நடிகையை காதல் மணம் புரிய இருந்த நடன நடிகர், கடைசி நேரத்தில் இது சரி வராது என்று முடிவு செய்து, நடிகையுடன் இருந்த காதலை முறித்துக் கொண்டாராம்.
    மிக பிரபலமான அந்த நடிகையை காதல் மணம் புரிய இருந்த நடன நடிகர், கடைசி நேரத்தில் இது சரி வராது என்று முடிவு செய்து, நடிகையுடன் இருந்த காதலை முறித்துக் கொண்டாராம். கல்யாணமும் ரத்தாகி விட்டதாம். அதன் பிறகு அந்த நடிகை இன்னொரு டைரக்டருடன் காதல் வளர்த்தாராம்.

    அவரைப்போல் தற்போது நடன நடிகரும் வேறு ஒரு நடிகையுடன் காதல் வளர்த்து வருகிறாராம். அவருடைய காதல் வலையில் சிக்கியிருக்கும் அந்த வீரமான நடிகை, வலையில் இருந்து வெளியே வருவாரா அல்லது வலைக்குள் மாட்டிக் கொண்டு நடன நடிகர் பின்னால் ஒதுங்கி விடுவாரா? என்பது விரைவில் தெரிந்து விடும்.
    பாடகியான நடிகை தற்போது நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடித்து வருகிறாராம்.
    பாடகியான நடிகை தற்போது நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடித்து வருகிறாராம். சமீபத்தில் நடிகை கலந்துக் கொண்ட விழாவில், மற்ற மாநிலங்களில் இருந்து இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் எல்லாம் என்னை வைத்து படம் இயக்குகிறார்கள், ஆனால், தமிழ் நாட்டில் இருப்பவர்களுக்கு யாருக்கும் என்னுடைய அருமை தெரியவில்லை என்று பேசியிருந்தாராம்.

    தமிழ் நாட்டில் இருக்கும் இயக்குனர்கள் பலரும் நாயகியை தொடர்பு கொண்டு பேசினால், சம்பளம் இவ்வளவு தந்தால்தான் நடிப்பேன், அங்குதான் ஷூட்டிங் எடுக்கணும் என்று கட்டளை எல்லாம் போடுகிறாராம். 
    அந்த மூன்றெழுத்து நடிகர், மிகவும் வசதியான குடும்பத்தை சேர்ந்தவராம். இவர் நடித்த பெரும்பாலான படங்கள் வெற்றி பெறவில்லை. இருப்பினும் ரூ.2 கோடி சம்பளம் கேட்கிறாராம்.
    அந்த மூன்றெழுத்து நடிகர், மிகவும் வசதியான குடும்பத்தை சேர்ந்தவராம். இவர் நடித்த பெரும்பாலான படங்கள் வெற்றி பெறவில்லை. இருப்பினும் ரூ.2 கோடி சம்பளம் கேட்கிறாராம்.

    சமீபகாலமாக இவர் தனக்கு ஜோடியாக, ‘நம்பர்-1’ நடிகையை ஒப்பந்தம் செய்யும்படி தயாரிப்பாளர்களை வற்புறுத்தி வருகிறாராம். “உனக்கெல்லாம் ஜோடியாக அந்த நடிகை நடிக்க மாட்டார்” என்று சொல்லும் தயாரிப்பாளர்களிடம், “பதி நடிகருடன் ஜோடி சேர்ந்த அவர் என்னுடன் ஜோடி சேர மாட்டாரா?” என்று எதிர் வாதம் செய்கிறாராம்!

    “எல்லாம் எங்க தலையெழுத்து” என்று ஒரு புது பட அதிபர் தலையில் அடித்துக் கொண்டாராம்! 
    தமிழ்நாட்டில் பேய் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. பேய் படங்கள் அனைத்தும் வெற்றி பெறுகின்றன.
    தமிழ்நாட்டில் பேய் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. பேய் படங்கள் அனைத்தும் வெற்றி பெறுகின்றன. பேய் வேடங்களில் நடிக்க எல்லா கதாநாயகிகளும் தயாராக இருக்கிறார்களாம். இந்த நிலையில், ஒரே ஒரு நாயகி மட்டும் பேய் வேடம் போட மறுக்கிறாராம்.

    அந்த நாயகி கேரளாவை சேர்ந்தவர். யானை படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு வந்தவர். பேயாக நடிப்பதற்கு வந்த 2 பட வாய்ப்புகளை, “வேண்டாம்” என்று அவர் மறுத்து விட்டாராம்! 
    குளிர்ச்சியான நடிகை பற்றி ஒரு பரபரப்பான தகவல் கோடம்பாக்கம் முழுவதும் பரவியிருக்கிறதாம்.
    குளிர்ச்சியான நடிகை பற்றி ஒரு பரபரப்பான தகவல் கோடம்பாக்கம் முழுவதும் பரவியிருக்கிறதாம். சமீப காலமாக அவருடன் நடித்து வரும் ஒரு கதாநாயகனுடன் இணைத்து பேசப்படுகிறாராம். எந்த படத்தில் நடிக்க வேண்டும்? எந்த படத்தில் நடிக்க கூடாது என்று அந்த நடிகர்தான் வழிகாட்டியாக இருந்து உதவுகிறாராம்.

    இருவருக்கும் இடையே நல்ல புரிதல் ஏற்பட்டு இருப்பதால், நடிகர் சொல்வதைத்தான் நடிகை கேட்கிறாராம்! (நண்பர் சொல்வதே வேதம்.)
    அடல்ட் காமெடி படமாக வந்த, மச்சமுள்ள படத்தில் படுகவர்ச்சியாக நடித்த நடிகை, அடுத்து படங்கள் குவியும் என்று எதிர்பார்த்தாராம்.
    அடல்ட் காமெடி படமாக வந்த, மச்சமுள்ள படத்தில் படுகவர்ச்சியாக நடித்த நடிகை, அடுத்து படங்கள் குவியும் என்று எதிர்பார்த்தாராம். ஆனால் நடிகைக்கு பட வாய்ப்புகள் பெரிதாக வரவில்லையாம். தற்போது தனது பப்ளிசிட்டிக்காக இணைய தளத்தை நம்பி இருக்கிறாராம்.

    அடிக்கடி குறைந்த ஆடை அணிந்த படங்களை வெளியிட்டு வரும் நடிகை, தற்போது தலைகீழாக நின்று யோகாசனம் செய்யும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறாராம். ரசிகர்கள் அவரிடம் இது என்ன பட வாய்ப்புக்கான தவமா? என்று கிண்டல் செய்திருக்கிறார்களாம்.
    மதராச இயக்குனர் தனது காதல் மனைவியை விவகாரத்து செய்த பின், திரைப்படம் இயக்குவதில் பிசியாக இருந்து வருகிறாராம்.
    மதராச இயக்குனர் தனது காதல் மனைவியை விவகாரத்து செய்த பின், திரைப்படம் இயக்குவதில் பிசியாக இருந்து வருகிறாராம். இவருக்கும் சமீபத்தில் ரவுடி பேபியாக வலம் வரும் நடிகைக்கும் காதல் இருந்ததாகவும், விரைவில் நடிகையை இரண்டாவது திருமணம் செய்ய போவதாகவும் செய்திகள் வெளியானதாம்.

    இதைக்கேட்டு நடிகையின் ரசிகர்கள் அதிர்ச்சியானார்களாம். ஆனால், இது வதந்தி என்று நெருங்கிய வட்டாரங்கள் கூறுகிறார்களாம். இருவரும் நண்பர்களாக தான் பழகி வருகிறார்களாம். 
    ×