search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95359"

    தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்த வீரமான நடிகை, சமீபத்தில் உருவான படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும்...
    தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்த வீரமான நடிகை, சமீபத்தில் உருவான படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் குத்தாட்டம் போட்டாராம். அந்த பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததாம். இதைப் பார்த்த பல இயக்குனர்கள், பல தயாரிப்பாளர்கள் நடிகையை அணுகி எங்கள் படத்திலும் ஒரு பாடலுக்கு நடனம் ஆடுங்கள் என்று கேட்டிருக்கிறார்களாம்.

    ஆனால், நடிகை ஒரு பாடலுக்கு இனி நடனம் ஆட மாட்டேன் என்று கூறிவிட்டாராம். அந்த பாடலுக்கு ஆடியதால் தன்னுடைய இமேஜ் போய் விட்டது என்று நினைத்து, இனிமேல் அந்த தவறை செய்ய மாட்டேன் என்று பலரிடமும் கூறி வருகிறாராம். 
    பால் நடிகை தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என 4 மொழி படங்களில் நடித்து வருகிறாராம்.
    பால் நடிகை தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என 4 மொழி படங்களில் நடித்து வருகிறாராம். அதனால் அவர் அடிக்கடி வானத்தில் பறந்து கொண்டே இருக்கிறாராம். படங்களில் நடிப்பதுடன், அவ்வப்போது தனது கவர்ச்சி படங்களையும் வெளியிட்டு வருகிறாராம்.

    சமீபத்தில் அவர் நடித்து வெளிவந்த படம் வெற்றி அடைந்ததை தொடர்ந்து அவரிடம் கதை சொல்வதற்கு டைரக்டர்கள் வரிசையில் நிற்கிறார்களாம். இந்த நிலையில், படுகவர்ச்சியான புகைப்படங்களையும், சிகரெட் பிடிப்பது போன்ற புகைப்படங்களையும் வெளியிடுவது, ஒரு பெரிய நடிகைக்கு அழகு அல்ல என்று நடிகைக்கு ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்களாம்.
    கண்ணக்குழி அழகியுடன் காதல் கிசுகிசுவில் சிக்கிய பிரபல இசையமைப்பாளர், சமீப காலமாக தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருந்தாராம்.
    கண்ணக்குழி அழகியுடன் காதல் கிசுகிசுவில் சிக்கிய பிரபல இசையமைப்பாளர், சமீப காலமாக தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருந்தாராம். ஆனால், தற்போது நட்சத்திர நடிகர், ஹெட் நடிகர் என அவர்களுடைய படங்களில் சிறிய வேடத்தில் நடித்து வரும் நடிகையுடன் பார்ட்டி, நிகழ்ச்சிகளுக்கு சென்று வருகிறாராம். 

    நடிகையும் இசையமைப்பாளருடன் நெருக்கம் காண்பித்து வருகிறாராம். இந்த பழக்கம் இவர்களுக்குள் நட்பா, அல்லது காதலா என பலரும் பேசி வருகிறார்களாம்.
    போராட்ட பெண்ணாக இருந்தவர் பெரிய முதலாளிக்கு வீட்டுக்கு சென்று மிகவும் பிரபலமானாராம்.
    போராட்ட பெண்ணாக இருந்தவர் பெரிய முதலாளிக்கு வீட்டுக்கு சென்று மிகவும் பிரபலமானாராம். அப்போது இருந்தே அம்மணியை சமூக வலைத்தளத்தில் நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்களாம். சமீபத்தில் அம்மணி சாமி படத்திலும், டாக்டர் கதாபாத்திரத்தில் நடிப்பதாக அறிவித்தாராம்.

    இதற்கு நடிகையை சாமி வேடமா, டாக்டர் வேடமா என்று மீண்டும் கலாய்க்க தொடங்கினார்களாம். நீண்ட காலமாக சமூக வலைதளத்தில் எந்த புகைப்படத்தையும் போட நடிகை, இரு தினங்களுக்கு முன்பு புது படத்தில் நடிப்பதாக புகைப்படம் ஒன்றை வெளியிட்டாராம்.

    இதைப்பார்த்த நெட்டிசன்கள், முதலில் நடித்த படமே வரல... அதுகுள்ள அடுத்த படமா என்று மீண்டும் கலாய்க்க தொடங்கி இருக்கிறார்களாம்.
    சமீபத்தில் வெளியான படத்தில் பள்ளி மாணவியாக நடித்த நடிகைக்கு ரசிகர்கள் அதிகமாக கிடைத்து விட்டார்களாம்.
    சமீபத்தில் வெளியான படத்தில் பள்ளி மாணவியாக நடித்த நடிகைக்கு ரசிகர்கள் அதிகமாக கிடைத்து விட்டார்களாம். முதல் படத்திலேயே பலருடைய பாராட்டை பெற்றதால் நடிகைக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிய ஆரம்பமானதாம். 

    பல இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் நடிகைக்கு போன் செய்து கதை சொல்லட்டுமா என்று கேட்கிறார்களாம். ஆனால், நடிகையோ, ஓவராக பில்டப் கொடுக்கிறாராம். நிறைய கதை கேட்டுட்டேன். அப்புறம் கேட்கிறேன். நேரம் இல்லை. அப்புறம் போன் செய்யுங்கள் என்று பெரிய நடிகை போல் பில்டப் கொடுக்கிறாராம்.

    இவரிடம் பேசிய பலரும் இப்பவே இப்படி பேசுகிறாரே... இன்னும் இரண்டு மூன்று படங்கள் வெற்றி பெற்றால் நடிகை எப்படி பேசுவாரோ என்று புலம்பிக் கொண்டு இருக்கிறார்களாம்.

    பாடகி, நடிகை என பன்முகம் கொண்டவர் தற்போது நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறாராம்.
    பாடகி, நடிகை என பன்முகம் கொண்டவர் தற்போது நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறாராம். இவரை ஒரு விளம்பர நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள தரகர் அணுகி இருக்கிறாராம். நடிகையோ எங்கே எப்போது என்று கேட்டு விட்டு ரூ.8 லட்சம் தந்தால் வரேன் என்று கூறிவிட்டாராம்.

    இதைக்கேட்டு நிகழ்ச்சிக்கு ஒப்பந்தம் செய்ய சென்ற தரகர் அதிர்ச்சி அடைந்தாராம். பெரிய நாயகிகளே இவ்வளவு பெரிய தொகை கேட்டதில்லை. இவர் இப்படி கேட்கிறாரே...” என்று முணுமுணுத்துக் கொண்டே வெளியேறினாராம், அந்த ‘தரகர்!’
    சமீபத்தில் வட நாட்டில் இருந்து வந்த நடிகைக்கு மடமடவென பட வாய்ப்புகள் குவிந்ததாம்.
    சமீபத்தில் வட நாட்டில் இருந்து வந்த நடிகைக்கு மடமடவென பட வாய்ப்புகள் குவிந்ததாம். அவர் நடனம் ஆடும் அழகை பார்த்தே பல ஹீரோக்கள் அசந்து தங்கள் படங்களுக்கு பரிந்துரை செய்தார்களாம்.

    அம்மணிக்கு பட வாய்ப்புகள் வந்த குவிந்த நிலையில் லைட்டா தலைக்கனமும் ஏறியதாம். சர்ச்சை நடிகையை விரட்டிக் காட்டுகிறேன் பார் என்று சவால்விட்டாராம். இதை கேட்டு சர்ச்சை நடிகை ஒன்றுமே சொல்லவில்லையாம். இதற்கிடையே சீனியர் நடிகருடன் சேர்த்து கிசுகிசுக்கப்பட்டாராம் நடிகை.

    அம்மணிக்கு தற்போது பட வாய்ப்புகள் குறைந்துவிட்டதாம். அதற்கு காரணம் நடிகையின் தலைக்கனம் காரணம் என்று பலரும் பேசி வருகிறார்களாம். 
    தமிழில் இரண்டு, மூன்று படங்களில் நடித்தாலும், தெலுங்கில் முன்னணி நடிகையாக ஒல்லி நடிகர் வலம் வந்தாராம்.
    தமிழில் இரண்டு, மூன்று படங்களில் நடித்தாலும், தெலுங்கில் முன்னணி நடிகையாக ஒல்லி நடிகர் வலம் வந்தாராம். சமீபத்தில் நடிகைக்கு திருமணம் ஆகிவிட்டது என்றும், தற்போது அவர் கர்ப்பமாக உள்ளார் என்றும், விரைவில் சினிமாவுக்கு முழுக்க போடப்போகிறார் என்றும் செய்திகள் பரவியதாம். இதனால் நடிகை கடும் ஆத்திரம் அடைந்துள்ளாராம்.

    இந்த வதந்திகள் ஆதாரமற்றவை. எதிலும் உண்மை இல்லை. எனக்கு திருமணம் ஆகவில்லை, நான் கர்ப்பமாகவும் இல்லை. என்னை அடையாளம் காட்டிய சினிமாவை விட்டு நான் எப்படி போவேன்? 20 வயதில் நடிக்க வந்தேன், இப்போது எனக்கு 32 வயதாகிறது என்று ஆவேசமாக பேசியிருக்கிறார்.

    இதுபோன்ற தொடர் புரளிகள் எனக்கு மன அழுத்தத்தை உண்டாக்குகின்றது என்று பலரிடமும் கூறி வருகிறாராம்.
    யுனிவர்சல் நடிகர் தற்போது பிரம்மாண்டமான நடிகருடன் இணைந்து இரண்டாவது பாகமான படத்தில் நடிக்க இருக்கிறாராம்.
    யுனிவர்சல் நடிகர் தற்போது பிரம்மாண்டமான நடிகருடன் இணைந்து இரண்டாவது பாகமான படத்தில் நடிக்க இருக்கிறாராம். இப்படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறதாம். இதில் நடிகையாக பெரிய நம்பர் நடிகையிடம் பேசியிருக்கிறாரார்களாம். நடிகையும் சரி என்று ஒப்புக் கொண்டிருக்கிறாராம்.

    இந்நிலையில், அந்த படத்தில் வம்பு நடிகர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பேச்சு வார்த்தை நடந்ததாம். இதையறிந்த நடிகை, படத்தில் நான் நடிக்க மாட்டேன் என்று கூறியிருக்கிறாராம். 
    மூன்றெழுத்து நடிகை கதாநாயகியாக நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த படம், மிகப்பெரிய வெற்றியை பெற்றதாம்.
    மூன்றெழுத்து நடிகை கதாநாயகியாக நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த படம், மிகப்பெரிய வெற்றியை பெற்றதாம். இந்த வெற்றியை தொடர்ந்து அந்த நாயகிக்கு புதிய பட வாய்ப்புகள் வந்து குவிகிறதாம். அவரிடம் கதை சொல்வதற்கு புது டைரக்டர்கள், ‘கியூ’வில் நிற்கிறார்களாம்.

    தன்னை தேடி வருகிற அத்தனை படங்களையும் ஏற்றுக் கொள்ளாமல், இதுவரை நடிக்காத கதாபாத்திரங்களை மட்டும் தேர்வு செய்து, நடிக்க சம்மதிக்கிறாராம், அந்த மூன்றெழுத்து நடிகை!
    நம்பர்-1 இடத்தை நோக்கி வேகமாக முன்னேறி வரும் வாரிசு நடிகை திடீரென்று ஓய்வு எடுக்கப் போகிறேன் என்று அறிவித்தது,
    நம்பர்-1 இடத்தை நோக்கி வேகமாக முன்னேறி வரும் வாரிசு நடிகை திடீரென்று ஓய்வு எடுக்கப் போகிறேன் என்று அறிவித்தது, பட அதிபர்களை அதிர்ச்சி அடைய வைத்து இருக்கிறதாம். இந்த வயதிலேயே ஓய்வு எடுப்பதா? என்று தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்துகிறார்களாம்.

    வெளிநாடு சென்று ஓய்வு எடுக்கிற அளவுக்கு அப்படியென்ன உழைத்து விட்டார்?” என்று சில புது டைரக்டர்கள் கேள்வி எழுப்பு கிறார்களாம்.
    நாயகியாக அறிமுகமான லட்சுமியான நடிகைக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லையாம்.
    நாயகியாக அறிமுகமான லட்சுமியான நடிகைக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லையாம். இதனால், ஒரு பாடலுக்கு நடனம் ஆட முடிவு செய்தாராம். அது அவருக்கு பெயர் தரவே பல படங்களில் குத்துப்பாடலுக்கு நடனம் ஆடினாராம். ஆனால், தற்போது ஒரு பாடலுக்கு நடனம் ஆட நடிகையை அணுகி இருக்கிறாராம்.

    ஆனால், அவர் நேரடியாக மறுக்காமல் அதிக சம்பளம் கேட்டாராம். இதைகேட்ட படக்குழுவினர் நடிகை வேண்டும் என்றே ஆட மறுக்கிறார் என்று பேசிக்கொண்டே சென்றார்களாம்.
    ×