search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95381"

    • வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘வாரிசு’ திரைப்படம் நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியானது.
    • இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'வாரிசு'. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    வாரிசு

    பெரும் எதிர்பார்ப்பில் உருவான இப்படம் நேற்று முன்தினம் ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் தெலுங்கு பதிப்பான 'வாரசுடு' நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    வாரசுடு போஸ்டர்

    இந்நிலையில், 'வாரசுடு' திரைப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.



    • இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ‘தளபதி 67’ படத்தை இயக்கி வருகிறார்.
    • இதன் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் நேற்று வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதைத்தொடர்ந்து விஜய் நடிக்கும் 67-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.


    லோகேஷ் கனகராஜ்

    ஏற்கனவே மாஸ்டர் படம் இவர்கள் கூட்டணியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தளபதி 67 படத்தில் விஜய்க்கு 50 வயது தாதா கதாபாத்திரம் என்றும் அவருக்கு வில்லன்களாக 6 முன்னணி நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், இப்படம் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் எதிர்பார்ப்பை அதிகப்படுத்திக் கொண்டே வருகிறது.


    லோகேஷ் கனகராஜ்

    இந்நிலையில், கோவையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது, " ரசிகர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். இது வெறும் சினிமா தான். உயிரை விடும் அளவிற்கு இதற்கு முக்கியத்துவம் தர வேண்டியதில்லை. சந்தோஷமாக படத்தை பார்த்துவிட்டு பத்திரமாக வீட்டிற்கு சென்றாலே போதும். உயிரே போகும் அளவிற்கு கொண்டாட்டம் தேவையில்லை என்பது தான் என் கருத்து" என்று கூறினார்.

    • விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.
    • இதைத்தொடர்ந்து விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடிக்கிறார்.

    விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் நேற்று வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதைத்தொடர்ந்து விஜய் நடிக்கும் 67-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.


    விஜய் - லோகேஷ் கனகராஜ்

    ஏற்கனவே மாஸ்டர் படம் இவர்கள் கூட்டணியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தளபதி 67 படத்தில் விஜய்க்கு 50 வயது தாதா கதாபாத்திரம் என்றும் அவருக்கு வில்லன்களாக 6 முன்னணி நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், இப்படம் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் எதிர்பார்ப்பை அதிகப்படுத்திக் கொண்டே வருகிறது.


    விஜய் - லோகேஷ் கனகராஜ்

    இந்நிலையில், கோவையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது, "வாரிசு திரைப்படம் ரிலீஸாக வேண்டும் என்பதற்காக தான் எந்த அப்டேட்டும் கொடுக்காமல் இருந்தோம். இப்போது வாரிசு படம் ரிலீஸாகிவிட்டது. இன்னும் ஒரு பத்து நாட்களில் அப்டேட் எதிர்பார்க்கலாம். இனி தொடர்ந்து அப்டேட்கள் வெளியாகும்" என கூறினார். இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

    • துணிவு - வாரிசு திரைப்படங்கள் நேற்று திரையரங்குகளில் வெளியானது.
    • ஜனவரி 13-ஆம் தேதி முதல் 16 -ஆம் தேதி வரை வாரிசு மற்றும் துணிவு படங்களின் அதிகாலை 4 மணி மற்றும் 5 மணி காட்சிகள் ரத்து செய்யப்பட்டது.

    இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் மற்றும் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படமும் வெகு விமர்சையாக நேற்று திரையரங்குகளில் வெளியானது. இரு நடிகர்களின் ரசிகர்கள் மட்டுமல்லாது பல திரைப் பிரபலங்களும் ரசிகர்களுடன் சிறப்புக் காட்சியைக் கண்டு மகிழ்ந்தனர்.


    வாரிசு -துணிவு

    இதைத்தொடர்ந்து ஜனவரி 13-ஆம் தேதி முதல் 16 -ஆம் தேதி வரை வாரிசு மற்றும் துணிவு படங்களின் அதிகாலை 4 மணி மற்றும் 5 மணி காட்சிகள் ரத்து செய்யப்பட்டது. அதுமட்டுமல்லாமல், திரையரங்க வளாகங்களில் உள்ள உயர்வான பேனர்களுக்கு ரசிகர்கள் பால் அபிஷேகம் செய்யவும் விதிகளை மீறி அதிக கட்டணம் வசூலிப்பதற்கும் தடை விதித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது.


    துணிவு - வாரிசு

    இந்நிலையில், தற்போது திரையரங்க அதிபர்கள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12, 13 மற்றும் 18-ம் தேதிகளில் வாரிசு மற்றும் துணிவு திரைப்படங்களுக்கு கூடுதல் காட்சிகளை திரையிட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும், 14-ம் தேதி முதல் 17 -ம் தேதி வரையி்ல் திரையரங்குகளில் 4 காட்சிகளுக்கு மட்டுமே அனுமதி உண்டு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • விஜய்யின் வாரிசு திரைப்படமும் அஜித்தின் துணிவு திரைப்படமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் நேற்று வெளியானது.
    • இப்படங்கள் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

    விஜய்யின் வாரிசு திரைப்படமும் அஜித்தின் துணிவு திரைப்படமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் நேற்று வெளியானது. இந்த இரு படங்களும் ஒரே சமயத்தில் வெளியானதால் ரசிகர்கள், திரையுலகினர், சினிமா விமர்சகர்கள் என பலரின் மத்தியிலும் எதிர்பார்ப்பு அதிகரித்தது. மேலும் ரசிகர்கள் திரையரங்குகளில் மேள தாளம் முழங்க, கட் அவுட் வைத்து மாலை அணிவித்து தங்களின் சந்தோஷத்தை வெளிப்படுத்தினர். இதற்கு முன்பு விஜய்யின் ஜில்லா, அஜித்தின் வீரம் திரைப்படமும் 9 ஆண்டுகளுக்கு முன்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.

     

    வாரிசு - துணிவு

    வாரிசு - துணிவு


    இந்நிலையில் வாரிசு-துணிவு திரைப்படங்களின் தமிழ்நாட்டில் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படங்கள் தமிழ்நாட்டில் மட்டும் வெளியான முதல் நாளில் தலா ரூ.20 கோடிக்கு மேல் வசூலித்ததாக கூறப்படுகிறது. 

    • வாரிசு, துணிவு திரைப்படங்களுக்கு சிறப்பு காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியது.
    • இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் வெளியானதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    சென்னை:

    அஜித் நாயகனாக நடித்துள்ள துணிவு படத்தை எச்.வினோத்தும், விஜய் ஹீரோவாக நடித்திருக்கும் வாரிசு படத்தை வம்சியும் இயக்கி உள்ளனர். இந்த திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது.

    தமிழ்நாட்டில் துணிவு திரைப்படம் நள்ளிரவு சரியாக 1 மணிக்கும், வாரிசு திரைப்படம் அதிகாலை 4 மணிக்கும் வெளியாகியது. இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் வெளியானதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 12, 13, 14 தேதிகளில் வாரிசு, துணிவு ஆகிய திரைப்படங்களுக்கு சிறப்பு காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.

    இதுதொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் கூடுதல் காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திரைப்பட விநியோகஸ்தர்களின் கோரிக்கையை ஏற்று 12-ம் தேதி , 13-ம் தேதி மற்றும் ஜனவரி 18-ம் தேதி ஆகிய தேதிகளில் மட்டுமே வாரிசு, துணிவு திரைப்படங்களுக்கு சிறப்பு காட்சிகளுக்கான அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 14-ம் தேதி முதல் 17-ம் தேதி வரையில் திரையரங்குகளில் 4 காட்சிகளுக்கு மட்டுமே அனுமதி உண்டு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் இன்று வெளியான திரைப்படம் 'வாரிசு'.
    • 'வாரிசு'படக்குழு வெளியிட்டுள்ள பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'வாரிசு'. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    வம்சி - விஜய்

    பெரும் எதிர்பார்ப்பில் உருவான இப்படம் இன்று ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் வெளியானது. இந்நிலையில் 'வாரிசு' படக்குழு சமூக வலைதளத்தில் விஜய்யுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து 'வாரிசு கொண்டாட்டங்கள் ஆரம்பம்' என்று பதிவிட்டுள்ளனர். இந்த பதிவு தற்போது இணையத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வைரலாகி வருகிறது.


    • விஜய்யின் வாரிசு, அஜித்தின் துணிவு திரைப்படங்கள் இன்று தியேட்டர்களில் வெளியானது.
    • இதற்காக ரசிகர்கள் இரவு முதலே தியேட்டர்களில் குவித்து உற்சாகத்துடன் படத்தை வரவேற்றனர்.

    இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் மற்றும் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் பொங்கல் பண்டிகை ஒட்டி இன்று அதிகாலை தியேட்டர்களில் வெளியானது. இரு முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியானதால் பெரும் பாரபரப்பு ஏற்பட்டது.

     


    தியேட்டர்கள் முன்பு அசம்பாவிதங்களை தடுக்க நேற்று இரவு முதல் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இரு திரைப்படங்களையும் பார்க்க நேற்று இரவு முதல் ஏராளமான ரசிகர்கள் தியேட்டர் முன்பு குவிந்திருந்தனர். இதனால் தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.



    துணிவு மற்றும் வாரிசு படங்கள் சேலம் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 70 தியேட்டர்களில் 50-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் இன்று திரையிடப்பட்டன. துணிவு திரைப்படம் இன்று அதிகாலை 1 மணிக்கும், வாரிசு திரைப்படம் அதிகாலை 4 மணிக்கும் தியேட்டர்களில் ரிலீசானது. இதனை ரசிகர்கள் உற்சாகமாக ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர். மேலும் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் திரைப்படங்களை ரசிகர்கள் ஆர்வத்துடன் வரவேற்றனர்.



    இந்நிலையில், சேலம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள மல்டிபிளக்ஸ் தியேட்டரில் ரசிகர்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது. படம் பார்க்க வந்த ரசிகர்கள் தியேட்டர்களுக்குள் முண்டி அடித்தபடி நுழைந்தனர். அப்போது கூட்ட நெரிசலுக்கு தாக்குபிடிக்க முடியாமல் அங்கிருந்த கண்ணாடிகள் உடைந்து நொறுங்கி விழுந்தன. மேலும் 2 ரசிகர்கள் கேட்டின் மீது இருந்து கீழே குதித்ததில் கண்ணாடிகள் குத்தி ரத்த காயமடைந்தனர். இது தவிர மற்றொரு ரசிகர் கூட்ட நெரிசலில் சிக்கி காலில் பலத்த காயம் அடைந்தார். மேலும் அதிவேகத்தில் அதிக சத்தத்துடன் ஒலி எழுப்பியபடி மோட்டார் சைக்கிளில் சென்ற சிலரை கைது செய்த போலீசார் அவர்களின் மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். 

    • விஜய் நடித்த வாரிசு படத்தின் முதல் காட்சி அதிகாலை 4 மணிக்கு வெளியானது.
    • நள்ளிரவில் நடிகர் அஜித்தின் துணிவு படம் ரிலீசானது.

    சென்னை:

    நடிகர் அஜித்குமார் நடிப்பில் துணிவு படம் உலகம் முழுவதும் தற்போது தியேட்டரில் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் துணிவு திரைப்படம் நள்ளிரவு சரியாக 1 மணிக்கு வெளியானது.

    இந்நிலையில், வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் வாரிசு திரைப்படம் தியேட்டரில் வெளியாகியது.

    இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    அதிகாலை 4 மணிக்கு முதல் காட்சி வெளியானது. வாரிசு திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாகி உள்ளது.

    நள்ளிரவில் அஜித்தின் துணிவு ரிலீசான நிலையில், தற்போது விஜய்யின் வாரிசும் ரிலீசானதால் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

    • இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் "பதான்".
    • இப்படத்தின் டிரைலரை விஜய் இன்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டார்.

    இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் "பதான்". இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்திருக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.


    பதான்

    சமீபத்தில் "பதான்" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர் மற்றும் பாடல்களை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது. இதையடுத்து இப்படத்தின் டிரைலரை நடிகர் விஜய் இன்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்நிலையில், விஜய்க்கு நன்றி தெரிவித்து ஷாருக்கான் தனது இணையப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.


    பதான்

    அதில், "மிக்க நன்றி நண்பா! இதனால்தான் நீங்க தளபதி.. கூடிய விரைவில் ஒரு அருமையான விருந்தில் சந்திப்போம்" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.


    • வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘வாரிசு’.
    • இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    வாரிசு

    இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்று வருகிறது. 'வாரிசு' திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், 'வாரிசு' திரைப்படத்தின் இசையமைப்பாளர் தமன் சமூக வலைதளத்தில் விஜய்யுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.


    விஜய் - தமன்

    அதில், "வாரிசு படத்தின் அனைத்து எமோஷனல் காட்சிகும் என் இதயத்திலிருந்து அழுதேன் அண்ணா. கண்ணீர் விலை மதிப்பற்றது. வாரிசு திரைப்படம் என் குடும்பம் அண்ணா, இது என் இதயத்திற்கு நெருக்கமானது. இந்த மிகப்பெரிய வாய்ப்பை எனக்கு வழங்கியதற்கு நன்றி அண்ணா" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.



    • வாரிசு- துணிவு திரைப்படங்கள் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
    • நீண்ட இடைவேளைக்கு பிறகு அஜித்-விஜய் திரைப்படங்கள் ஒன்றாக வெளியாவதால் ரசிகர்கள் மட்டுமல்லாது சினிமா பிரியர்களும் இந்த படங்களை எதிர்பார்த்திருக்கின்றனர்.

    விஜய்யின் வாரிசு திரைப்படமும் அஜித்தின் துணிவு திரைப்படமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த இரு படங்களும் ஒரே சமயத்தில் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர். இதற்கு முன்பு விஜய்யின் ஜில்லா, அஜித்தின் வீரம் திரைப்படமும் 9 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான நிலையில், நீண்ட இடைவேளைக்கு பிறகு அஜித்-விஜய் திரைப்படங்கள் ஒன்றாக வெளியாவதால் ரசிகர்கள் மட்டுமல்லாது சினிமா பிரியர்களும் இந்த படங்களை எதிர்பார்த்திருக்கின்றனர்.


    வாரிசு - துணிவு

    இப்படங்களின் டிக்கெட் முன்பதிவு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. துணிவு திரைப்பட சிறப்புக் காட்சி நாளை அதிகாலை 1 மணிக்கும் வாரிசு திரைப்பட சிறப்புக் காட்சி நாளை அதிகாலை 4 மணிக்கும் திரையிடப்பட உள்ளது. இந்நிலையில், தற்போது இந்த படங்களின் சிறப்பு காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.


    துணிவு - வாரிசு

    அதாவது, ஜனவரி 13-ஆம் தேதி முதல் 16 -ஆம் தேதி வரை வாரிசு மற்றும் துணிவு படங்களின் அதிகாலை 4 மணி மற்றும் 5 மணி காட்சிகள் ரத்து செய்யப்பட்டு உள்ளது. மேலும், திரையரங்க வளாகங்களில் உள்ள உயர்வான பேனர்களுக்கு ரசிகர்கள் பால் அபிஷேகம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், விதிகளை மீறி அதிக கட்டணம் வசூலித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    ×