search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95381"

    • லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள படம் தளபதி 67.
    • இந்த படத்தின் கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

    விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். இந்த படத்துக்கு பிறகு விஜய் நடிக்கும் 67-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். ஏற்கனவே மாஸ்டர் படம் இவர்கள் கூட்டணியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.


    லோகேஷ் கனகராஜ் - விஜய்

    இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு 50 வயது தாதா கதாபாத்திரம் என்றும் அவருக்கு வில்லன்களாக 6 முன்னணி நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், இப்படத்தின் அறிவிப்பு இன்னும் ஓரிரு மாதங்களில் வெளியிடப்படும் என லோகேஷ் கனகராஜ் கூறியிருந்தார்.


    நந்தினி - தீனா

    இந்நிலையில், இப்படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, தளபதி 67 படத்தில் நடிகை மைனா நந்தினி மற்றும் விஜய் டிவி புகழ் தீனா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது.
    • இப்படத்தின் நேற்று முன்தினம் படப்பிடிப்பு தளத்தில் விஜய்யை பார்க்க வந்த ரசிகர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.

    வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

     

    வாரிசு - விஜய்

    வாரிசு - விஜய்

    இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்த மாத இறுதிக்குள் இதன் முழு படப்பிடிப்பும் முடிவடைந்துவிடும் எனக் கூறப்படுகிறது. நேற்று முன்தினம் சென்னை, எண்ணூரில் நடைபெற்ற படப்பிடிப்பில் நடிகர் விஜய் கலந்து கொண்டுள்ளார். அப்போது ரசிகர்கள் பலர் விஜய்யை பார்க்க குவிந்ததால் போலீசார் தடியடி நடித்தியுள்ளனர்.

     

    வாரிசு - விஜய்

    வாரிசு - விஜய்

    இதனால் ஆதங்கமடைந்த ரசிகர்கள், "நாங்க இதெல்லாம் யாருக்காக செய்கிறோம். எங்களுக்கு தளபதியே தேவையில்லை. எங்களுக்கு விஜய்யை பார்க்க ஆசையாக உள்ளது. இந்த வாசல் முன்பு வந்து கை அசைத்தால் போதும். ரஜினி, சூர்யா வந்த போது ரசிகர்களை அனுமதித்தார்கள். தளபதி வந்தால் மட்டும் ஏன் அனுமதிக்கவில்லை" என்று வருத்ததில் பலரும் பேசினர்.

    ரசிகர்களை பார்த்து கையசைத்த விஜய்
    ரசிகர்களை பார்த்து கையசைத்த விஜய்

      

    இந்நிலையில் நேற்று இரவு சென்னை எண்ணூரில் நடைபெற்ற படப்பிடிப்புக்கு இடையில் வெளியே வந்த விஜய் ரசிகர்களை பார்த்து கையசைத்துவிட்டு சென்றார். விஜய்யை பார்க்க வெகுநேரமாக காத்திருந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து உற்சாகப்படுத்தியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

    • விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படம் 2023 பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.
    • இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து நடிகை சம்யுக்தா பகிர்ந்துள்ளார்.

    வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    வாரிசு

    இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்த மாத இறுதிக்குள் இதன் முழு படப்பிடிப்பும் முடிவடைந்துவிடும் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தில் நடித்த சம்யுக்தா, வாரிசு படம் பற்றிய தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

    காஃபி வித் காதல் ஆடியோ வெளியீட்டு விழாவில் செய்தியாளர்களை சந்தித்த சம்யுக்தா, "வாரிசு படம் பயங்கரமா வந்திருக்கு. ரொம்ப பிரம்மாண்டமா இருக்கு. எனக்கு அவர்கூட டயலாக் எதுவும் இல்லை, ஆனால் இது குடும்பப்படம் என்பதால் அவர் வரும் சில காட்சியில் எல்லோரும் இருப்போம். அவர் நடிப்பு எல்லாம் வேற லெவல்ல இருக்கு.


    சம்யுக்தா

    முதல் முறையாக இதை நேரில் பார்ப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது ஒரு ஆசீர்வாதமாக நினைத்து கொள்கிறேன். படப்பிடிப்பு தளத்தில எல்லார்கிட்டயும் நல்லா பழகுவார். ஒரு ஸ்டார் மாதிரி நடந்து கொள்ளாமல் எளிமையான ஒருத்தராக நடந்துகொள்வார். சொல்லப்போனால் படப்பிடிப்பு தளத்தில் அவரது குடையை அவரே பிடித்து கொள்வார்" என கூறினார். வாரிசு திரைப்படம் 2023- ஆம் ஆண்டு பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது.
    • விஜய்யை பார்க்க வந்த ரசிகர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியுள்ளனர்.

    வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    வாரிசு

    இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்த மாத இறுதிக்குள் இதன் முழு படப்பிடிப்பும் முடிவடைந்துவிடும் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், சென்னை, எண்ணூரில் நடைபெற்ற படப்பிடிப்பில் நடிகர் விஜய் கலந்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதையடுத்து ரசிகர்கள் பலர் விஜய்யை பார்க்க குவிந்ததால்  போலீசார் தடியடி நடித்தியுள்ளனர். இதனால் ஆதங்கமடைந்த ரசிகர்கள், "நாங்க இதெல்லாம் யாருக்காக செய்கிறோம். எங்களுக்கு தளபதியே தேவையில்லை.


    வாரிசு

    எங்களுக்கு விஜய்யை பார்க்க ஆசையாக உள்ளது. இந்த வாசல் முன்பு வந்து கை அசைத்தால் போதும். ரஜினி, சூர்யா வந்த போது ரசிகர்களை அனுமதித்தார்கள். தளபதி வந்தால் மட்டும் ஏன் அனுமதிக்கவில்லை" என்று பேசினர்.

    • விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது.
    • வாரிசு திரைப்படம் 2023 பொங்கலுக்கு ரிலீசாகும் என்பதை படத்தயாரிப்பு நிறுவனம் உறுதி செய்துள்ளது.

    வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

     

    வாரிசு

    வாரிசு

    இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்த மாத இறுதிக்குள் இதன் முழு படப்பிடிப்பும் முடிவடைந்துவிடும் எனக் கூறப்படுகிறது. மேலும், இப்படத்தின் முதல் சிங்கிள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

     

    வாரிசு

    வாரிசு

    இந்நிலையில் வாரிசு படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இன்று தொடங்குவதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனை படத்தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ், தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளது. அதில் இன்னும் 2 பாடல்களும், 2 சண்டை காட்சிகளும் மட்டுமே படமாக்க வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் ஏற்கனவே அறிவித்தபடி, வாரிசு திரைப்படம் 2023 பொங்கலுக்கு ரிலீசாகும் என்பதையும் படத்தயாரிப்பு நிறுவனம் உறுதி செய்துள்ளது. இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

    • அஜித் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் துணிவு என்ற படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என கூறப்படுகிறது.

    எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் "துணிவு". இப்படத்தின் முதல் மற்றும் இரண்டாம் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.

    இதைத்தொடர்ந்து, இப்படத்தின் படப்பிடிப்பிற்காக நடிகர் அஜித் இன்று அதிகாலை பாங்காக் விமானத்தில் சென்றதாக கூறப்பட்டது. இது தொடர்பான வீடியோவும் சமூக வலைதளத்தில் வைரலானது.


    துணிவு - வாரிசு

    இந்நிலையில், இப்படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, "துணிவு" திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது என்று இணையதளங்களில் தகவல் பரவி வருகிறது.

    வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கு வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில் துணிவு திரைப்படத்தின் தகவல் இரு தரப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • இயக்குனர் அட்லீ தனது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார்.
    • இவருக்கு ஷாருக்கான் மற்றும் விஜய் நேரில் வாழ்த்து கூறியுள்ளனர்.

    தமிழில் ராஜா ராணி, மெர்சல், தெறி, பிகில் போன்ற படங்களை இயக்கி திரையுலகில் தனக்கான இடத்தை பிடித்தவர் இயக்குனர் அட்லீ. இவர் தற்போது ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் ஜவான் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.


    அட்லீ

    இதில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இப்படம் 2023-ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை அருகே பிரம்மாண்ட செட் அமைத்து நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து இயக்குனர் அட்லீ நேற்று (21-09-2022) தனது 36-வது பிறந்தநாளை கொண்டாடினார். இவருக்கு திரையுலகினர் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.


    விஜய் - அட்லீ- ஷாருக்கான்

    இந்நிலையில், இவருக்கு விஜய் மற்றும் ஷாருக்கான் இருவரும் நேரில் சென்று வாழ்த்து கூறியுள்ளனர். இதனை அட்லீ தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில், "என் பிறந்தநாளில் நான் இன்னும் என்ன கேட்க முடியும். என் தூண்களுடன் மிக சிறந்த பிறந்தநாள். மைடியர் ஷாருக்கான் சார் மற்றும் என்னோட அண்ணன் என் தளபதி விஜய்" என்று குறிப்பிட்டுள்ளார்.


    • இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன் -1.
    • இப்படம் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    கல்கியின் புகழ் பெற்ற "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாகக் கொண்டு மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் "பொன்னியின் செல்வன்". இரண்டு பாகங்களாக வெளிவரும் இப்படத்தின் முதல் பாகம் வருகிற 30-ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.


    பொன்னியின் செல்வன்

    ஜெயம்ரவி, விக்ரம், கார்த்தி, சரத்குமார், பார்த்திபன், ஜெயராமன், ஜஸ்வர்யா ராய், திரிஷா உள்பட முன்னணி திரைப்பிரபலங்கள் நடித்துள்ள இப்படத்தின் புரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

    இதைத்தொடர்ந்து சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் தொகுப்பாளர் திரிஷாவிடம் நீங்கள் தளபதி 67 படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த திரிஷா " என்னிடம் இப்பொழுது பொன்னியின் செல்வன் படம் குறித்து மட்டுமே பேச சொல்லி இருக்கிறார்கள்" என்று கூறினார்.


    திரிஷா

    'தளபதி 67' படத்தில் நடிப்பதை திரிஷா மறுக்கவில்லை என்பதால் விஜய் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். மேலும் இவர்கள் இருவரும் கில்லி, ஆதி, திருப்பாச்சி, குருவி போன்ற படங்களில் இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு திடீரென நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் 'வாரிசு'. இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    வாரிசு

    இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்த மாத இறுதிக்குள் இதன் முழு படப்பிடிப்பும் முடிவடைந்துவிடும் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், 'வாரிசு' படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


    வாரிசு படக்குழு

    இப்படத்தின் படப்பிடிப்பின் போது இயக்குனர் வம்சிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் அடுத்தவாரம் படப்பிடிப்பு தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

    • தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வருபவர் நடிகர் விஜய்.
    • வருமான வரித்துறை உத்தரவுக்கு இடைக்கால தடை நீட்டிப்பு

    நடிகர் விஜய், கடந்த 2016-17-ம் நிதியாண்டிற்கான வருமானவரி கணக்கை தாக்கல் செய்த போது அதில், அந்த ஆண்டிற்கான வருமானம் 35 கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 890 ரூபாய் பெற்றதாக குறிபிட்டுள்ளார்.

    அந்த ஆண்டுக்கான மதிப்பீட்டு நடவடிக்கையை மேற்கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள், நடிகர் விஜய் வீட்டில் கடந்த 2015-ம் ஆண்டு நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களுடன் ஒப்பிட்டு பார்த்தது. அதன்படி, புலி படத்திற்கு பெற்ற 15 கோடி ரூபாய் வருமானத்தை கணக்கில் காட்டவில்லை என கண்டறிந்தது.


    இதையடுத்து, இந்த வருமானத்தை மறைத்ததற்காக நடிகர் விஜய்க்கு ஒன்றரை கோடி ரூபாய் அபராதம் விதித்து கடந்த ஜூன் 30-ஆம் தேதி வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்தது. தனக்கு அபராதம் விதிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    அதுமட்டுமல்லாமல், அபராதம் விதிப்பதாக இருந்திருந்தால், 2019-ஆம் ஆண்டிலேயே உத்தரவு பிறப்பித்திருக்க வேண்டும். காலதாமதமாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.


    இந்த மனுவை விசாரித்த நீதிபதி வருமான வரித்துறை உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். இந்த நிலையில் இடைக்காலத் தடையை அக்டோபர் 26 வரை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • வம்சி இயக்கத்தில் விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தை தொடர்ந்து விஜய்யின் 67 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார்.

    விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். இந்த படத்துக்கு பிறகு விஜய் நடிக்கும் 67-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். ஏற்கனவே மாஸ்டர் படம் இவர்கள் கூட்டணியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.


    வாரிசு

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து சமீபத்தில் வெளியான விக்ரம் படம் வசூல் சாதனை நிகழ்த்தியதால் விஜய்யின் 67-வது படத்துக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு 50 வயது தாதா கதாபாத்திரம் என்றும் அவருக்கு வில்லன்களாக 6 முன்னணி நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    இந்த படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட, மலையாள மொழிகளில் எடுக்க இருப்பதால் ஒவ்வொரு மொழியில் இருந்து ஒரு வில்லன் நடிகர்களை தேர்வு செய்ய படக்குழு திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. இந்நிலையில், தளபதி 67 படத்தின் அப்டேட் ஓரிரு மாதங்களில் வெளியாகும் என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார்.


    விஜய் - லோகேஷ் கனகராஜ்

    மேலும், வாரிசு படத்தின் அப்டேட் வெளிவராமல் தளபதி 67 படத்தின் அப்டேட் வெளியிட முடியாது எனவும் இவ்வளவு நாட்கள் காத்திருந்த ரசிகர்கள் இன்னும் ஓரிரு மாதங்கள் காத்திருங்கள் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    • விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் 'வாரிசு'. இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    வாரிசு

    இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்த மாத இறுதிக்குள் இதன் முழு படப்பிடிப்பும் முடிவடைந்துவிடும் எனக் கூறப்படுகிறது. மேலும், இப்படத்தின் முதல் சிங்கிள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் 'வாரிசு' படப்பிடிப்பில் விஜய்யுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை நடிகை ராஷ்மிகா தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகிறது. 'வாரிசு' படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின்னர் நடிகர் விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கும் 'தளபதி 67' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




    ×