என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 95381"
- இயக்குனர் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்திருந்த படம் பீஸ்ட்.
- இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.
நடிகர் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் பீஸ்ட். நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் பெரும் எதிர்ப்பார்ப்பில் வெளியான இப்படம் கலவையான விமர்சனம் பெற்று வசூலை குவித்தது. இப்படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
பீஸ்ட்
இந்த படத்தில் வணிக வளாகத்தை கைப்பற்றும் பயங்கரவாதிகள் கூட்டத்தில் ஒருவராக மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ நடித்திருந்தார். இவர் அண்மையில் மலையாள யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்திருந்தார்.
அதில் ''பீஸ்ட் படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. அந்த படம் குறித்த ட்ரோல்களைப்பார்த்தேன். பொதுவாக ஒருவர் எடையை தூக்கினால் முகத்தில் அந்த கஷ்டம் தெரியும். ஆனால், விஜய் அப்படி எதையும் முகத்தில் காட்டவில்லை. தீவிரவாதியை சூட்கேஸாக எடுத்துச் செல்லும் காட்சிகள் லாஜிக் இல்லாதவை" என குறிப்பிட்டிருந்தார்.
விஜய் - ஷை டாம் சாக்கோ
இதனால் ஆத்திரமடைந்த விஜய் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ஷைன் டாம் சாக்கோவிற்கு எதிராக கருத்துக்களைப் பதிவிட்டு வந்தனர். இந்நிலையில் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டதாக பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், "நான் ஊடகத்தின் வாயிலாக தெரிவித்த கருத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அது என்னுடைய தவறுதான். சாரி நண்பா" என்று குறிப்பிட்டுள்ளார்.
- இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் வாரிசு.
- வாரிசு படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
பீஸ்ட் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தோழா உள்ளிட்ட படங்களை இயக்கிய வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் வாரிசு. இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார்.
முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், ஷாம், ஸ்ரீகாந்த், ஜெயசுதா, சங்கீதா, சம்யுக்தா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். இப்படத்தைப் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார்.
அண்மையில் வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் வாரிசு படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஜவான்
இந்நிலையில், ஷாருக்கான் படத்தில் விஜய் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வரும் படம் ஜவான். இந்த படத்தில் நடிகர் விஜய் சம்பளமே இல்லாமல் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவுள்ளதாகவும் அந்த காட்சிகள் ஒரேநாளில் படமாக்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
- சென்னையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சில தினங்களுக்கு முன்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
- விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக ‘தளபதி விஜய் குருதியகம்’ என்ற பெயரில் செயலியும் தொடங்கப்பட்டது.
சென்னையை அடுத்துள்ள பனையூரில் சில தினங்களுக்கு முன்பு விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதில், நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் சார்பாக அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களும், ரத்த தானத்திற்காக 'தளபதி விஜய் குருதியகம்' என்ற பெயரில் செயலியும் தொடங்கப்பட்டது. ரசிகர்களின் இந்த செயல் அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றது.
இந்நிலையில் விஜய் மக்கள் இயக்கம் செங்கல்பட்டு [மேற்கு] மாவட்ட செம்பாக்கம் நகர மக்கள் இயக்கம் சார்பில் 25-வது வாரமாக ஏழை எளிய குழந்தைகள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு ரொட்டி, பால், முட்டை, வாழைப்பழம், பிஸ்கட் மற்றும் நோட்டு புத்தகம் வழங்கி வருகின்றனர். ரசிகர்களின் இந்த செயலால் அனைவரும் அவர்களை பாராட்டி வருகின்றனர்.
- சென்னையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
- இதில் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக ‘தளபதி விஜய் குருதியகம்’ என்ற பெயரில் செயலியும் தொடங்கப்பட்டுள்ளது.
சென்னையை அடுத்துள்ள பனையூரில் இன்று விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்தாகவும் மாவட்ட தலைவர், மாவட்ட செயலாளர்கள் என ஒரு மாவட்டத்தில் இருந்து 6 நிர்வாகிகள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்றும் அறிவுருத்தப்பட்டது.
அதன்படி விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் விஜய் ஆனந்த் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது. இதில், நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் சார்பாக அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களும், ரத்த தானத்திற்காக 'தளபதி விஜய் குருதியகம்' என்ற பெயரில் செயலியும் இன்று தொடங்கப்பட்டுள்ளது. முன்னதாக, பனையூரில் விஜய் மக்கள் இயக்கத்தின் புதிய அலுவலக கட்டிடம் திறக்கப்பட்டுள்ளது. விஜய் ரசிகர்களின் இந்த புதிய முயற்சி பலரின் பாராட்டுக்களை பெற்று வருகிறது.
- நடிகர் விஜய் வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.
- இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
நடிகர் விஜய் தற்போது இயக்குனர் வம்சி இயக்கத்தில் தமிழ்-தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகும் 'வாரிசு' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
விஜய்
தற்போது, வாரிசு படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருவதாகவும் அதற்காக விஜய் ஐதராபாத் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரின் பிறந்த நாள் மற்றும் ஆயுஷோமம் நிகழ்ச்சியில் நடிகர் விஜய் கலந்து கொள்ளாதது ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
எஸ்.ஏ. சந்திர சேகர்
இந்நிலையில், விஜய் மக்கள் இயக்கம் வலுவிழந்து விட்டது என்பதை விஜய் சிந்திக்க வேண்டும் என்று விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் கூறியுள்ளார்.
மேலும், விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மீண்டும் இணைக்கப்படுவார்கள் என்றும் நிர்வாகிகளை மீண்டும் இணைப்பது குறித்து பலமுறை விஜய்யிடம் பேசியுள்ளேன் என்றும் எஸ்.ஏ. சந்திரசேகர் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- பிரபல இயக்குனரும் நடிகர் விஜய்யின் தந்தையுமாவார் சந்திர சேகர்.
- சந்திர சேகர் 80 வயது பூர்த்தி அடைந்ததை முன்னிட்டு ஆயுஷோமம் செய்து கொண்டார்.
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோவிலில் திரைப்பட இயக்குனரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ. சந்திரசேகர் 80 வயது பூர்த்தி அடைந்ததை முன்னிட்டு தனது மனைவி ஷோபாவுடன் வந்து ஆயுஷோமம் செய்து கொண்டார்.
சந்திர சேகர் - ஷோபா
மேலும், தனது மகன் விஜய் பெயரில் அர்ச்சனையும் செய்தார். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார். நடிகர் விஜய் இல்லாமல் இயக்குனர் சந்திர சேகர் ஆயுஷோமம் செய்து கொண்டதைத் தொடர்ந்து பீஸ்ட் பட ஹீரோயின் பிறந்தநாளுக்கெல்லாம் கேக் வெட்டி கொண்டாடிய விஜய் ஜோசப் அப்பாவின் 80-வது பிறந்த நாளில் கூடவாவது இருந்திருக்கலாம் என்று ரசிகர்கள் மத்தியில் பல கருத்துக்கள் எழுந்து வருகின்றன.
- இயக்குனர் வம்சி இயக்கி வரும் வாரிசு படத்தில் விஜய் நடித்து வருகிறார்.
- இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
நடிகர் விஜய் தற்போது இயக்குனர் வம்சி இயக்கத்தில் தமிழ்-தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகும் 'வாரிசு' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
விஜய்யின் அடுத்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாக ஏற்கெனவே தகவல் வெளியானது. 'மாஸ்டர்' படத்தின் படப்பிடிப்பின் போது லோகேஷ் கனகராஜ் ஒரு வரிக்கதையை விஜய்யிடம் கூறியதாகவும், தற்போது அதை முழுக்கதையாக உருவாக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் 'மாஸ்டர்', 'விக்ரம்' ஆகிய படங்களில் இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் திரைக்கதை எழுத்தாளராக இணைந்து பணியாற்றிய இயக்குனர் ரத்ன குமார் 'தளபதி 67' படத்திலும் திரைக்கதை எழுத்தாளராகப் பணியாற்ற உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
இயக்குனர் ரத்னகுமார் 'மேயாத மான்', 'ஆடை' உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- விஜய் தற்போது வாரிசு என்ற படத்தில் நடித்து வருகிறார்.
- இப்படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கி வருகிறார்.
நடிகர் விஜய் நடித்து வரும் வாரிசு படத்தின் படப்பிடிப்பை விறுவிறுப்பாக நடத்தி வருகிறார் இயக்குனர் வம்சி. விஜய் நடிப்பில் குடும்பக்கதையுள்ள படம் வெளிவந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டதால் இந்தப் படத்தை அவர் தேர்ந்தெடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
அண்ணன், தங்கை உறவுகளின் பாசப் போராட்டக் களத்தை விவரிக்கும் இந்தக் கதை குடும்ப ரசிகர்களின் எண்ணிக்கையை விஜய்க்கு அதிகரிக்கும் என்கிறார்கள். இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். படத்தில் முக்கியமான இடத்தில் இடம்பெறும் ஒரு பாடல் காட்சியில் விஜய் படத்தின் பாடலையே ரீமிக்ஸ் செய்ய இருப்பதாக தெரிகிறது. அதன்படி 2002-ஆம் ஆண்டு வெளியான யூத் படத்தில் இடம்பெற்று ரசிகர்களின் மனதை கொள்ளையடிதத "ஆல்தோட்ட பூபதி நானடா" என்ற பாடலை வாரிசு படத்தில் ரீமிக்ஸ் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்பாடலை மணிஷர்மா இசையமைத்திருந்ததால் அவரிடம் இது குறித்து பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
- விஜய் தற்போது வாரிசு என்ற படத்தில் நடித்து வருகிறார்.
- இப்படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கி வருகிறார்.
பீஸ்ட் படத்துக்கு பிறகு விஜய் வாரிசு என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். இது விஜய்க்கு 66-வது படம். பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இப்படத்தை இயக்கி வருகிறார். இதில் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். பணக்கார குடும்பத்தை சேர்ந்த விஜய் தனது குடும்பத்துக்கு வரும் பிரச்சினைகளை எதிர்கொண்டு எப்படி முறியடிக்கிறார் என்ற கதையம்சத்தில் படம் தயாராவதாக கூறப்படுகிறது. இப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் சரத்குமார், ஷ்யாம், பிரபு, பிரகாஷ் ராஜ் ஆகியோரும் நடித்து வருகின்றனர். விஜய்யின் தந்தையாக சரத்குமாரும் சகோதரராக ஷ்யாமும் நடிப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இப்படத்தில் குஷ்பு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 1999-இல் வெளியான மின்சார கண்ணா படத்தில் விஜய்யும் குஷ்புவும் இணைந்து நடித்திருந்தனர். அதன்பின் 23 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வாரிசு படத்தில் குஷ்பு நடிக்கவுள்ளதாக வெளியான தகவலால் ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர். விஜய்யின் பிறந்தநாள் அன்று விஜய்யுடன் சமீபத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை குஷ்பு வலைதளத்தில் வெளியிட்டிருந்தார். இதன் மூலம் வாரிசு படத்தில் குஷ்பு நடிப்பதை உறுதிப்படுத்துவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
விஜய் நடிப்பில் வெளியான வில்லு படத்தில் ஒரு பாடலுக்கு குஷ்பு சிறப்பு நடனம் ஆடியிருந்தது குறிப்பிடத்தக்கது.
- வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் 'வாரிசு'.
- இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது.
பீஸ்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் 'வாரிசு'. இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், ஷாம், ஸ்ரீகாந்த், ஜெயசுதா, சங்கீதா, சம்யுக்தா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர்.
இப்படத்தைப் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். இப்படம் குடும்ப பின்னணி படமாக இருக்கும் என படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. இதையடுத்து பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
வாரிசு ஃபர்ஸ்ட் லுக்
இந்நிலையில், வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ஓட்டோ நிறுவனத்தின் விளம்பரத்தில் இருந்து காப்பி அடிக்கப்பட்டது என்று சமூக வலைதளத்தில் புகைப்படம் ஒன்று வைரலானது. தற்போது இந்த புகைப்படத்திற்கு ஓட்டோ நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
ஓட்டோ விளக்கம்
அதில், " ஓட்டோவில், நாங்கள் அறிவுசார் சொத்துரிமை மீறலை எளிதாக எடுத்துக் கொள்ள மாட்டோம். மேலே உள்ள படம் எந்த வகையிலும் ஓட்டோவுடன் தொடர்புடையது அல்ல. மேலும், பொழுதுபோக்கு நோக்கங்களுக்காக மட்டுமே சில மீம் கிரியேட்டர்களால் உருவாக்கப்பட்டது. வாரிசு அணிக்கு எங்கள் தரப்பில் இருந்து வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்' என்று தெரிவித்துள்ளது.
- விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்திந்தார்.
- பீஸ்ட் படப்பிடிப்பின்போது உதவியாளர்களுக்காக அதிக செலவு செய்த சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
தமிழ், தெலுங்கு, இந்தி பட உலகில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ள பூஜா ஹெக்டே பீஸ்ட் படத்தில் விஜய் ஜோடியாக நடித்த போது பட நிறுவனத்தின் ஒப்பந்தத்தை மீறி அதிக செலவு வைத்து சர்ச்சையில் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பூஜா ஹெக்டே பெற்றோருடன் மும்பையில் வசிக்கிறார். படப்பிடிப்புக்காக சென்னை அல்லது ஐதராபாத்துக்கு வரும்போது தன்னுடன் சிகை அலங்கார நிபுணர், ஆடை வடிவமைப்பாளர் உள்ளிட்ட 10 முதல் 12 உதவியாளர்களை அழைத்து வருவதாக குற்றச்சாட்டு உள்ளது.
பீஸ்ட் படப்பிடிப்பின்போது உதவியாளர்களுக்காக அநாவசியமான செலவுகளை செய்ய கூடாது என்று அவரிடம் அறிவுறுத்தப்பட்டு இருந்ததாம். சமீபத்தில் படத்தின் வரவு செலவு கணக்குகளை ஆய்வு செய்தபோது அதிக உதவியாளர்களை அழைத்து வந்து அவர்களுக்கு பட நிறுவனத்தின் பணத்தில் பூஜா ஹெக்டே செலவு செய்தது தெரியவந்து இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து உதவியாளர்களுக்கான ஓட்டல், சாப்பாடு உள்ளிட்ட செலவு பில்களை பூஜா ஹெக்டேவுக்கு அனுப்பி அந்த பணத்தை திருப்பி தரவேண்டும் என்று கண்டிப்பான அறிவுறுத்தல் விடுத்து இருப்பதாகவும், இதனால் அதிர்ச்சியான பூஜா ஹெக்டே பணத்தை கட்டி விட தயாராகி வருவதாகவும் திரைப்பட உலகில் பரபரப்பாக பேசப்படுகிறது.
- தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய்யின் 48-வது பிறந்தநாள் இன்று.
- இவருக்கு திரையுலக பிரபலங்கள் ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
நடிகர் விஜய்யின் 48-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் நலத்திட்ட உதவிகள் வழங்குவது போன்ற நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். அவருக்கு விதவிதமாக போஸ்டர்களை ஒட்டியும் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். நடிகர் விஜய்க்கு திரையுலக பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ், விஜய்யின் பிறந்தநாளான இன்று அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் விஜய்க்கு சிறிய கவிதை எழுதி பதிவிட்டுள்ளார். அதில், பூ போல மனசு.. ஏறாத வயசு.. கோலிவுட்டின் வாரிசு.. அந்த பெயர் தளபதி என்று பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
Poo pola manasu..
— Keerthy Suresh (@KeerthyOfficial) June 22, 2022
yeratha vayasu,
kollywood-in #Varisu
The name is THALAPATHY ❤️
Happy Birthday @actorvijay sir!!
Let this year bring you lots of happiness & verithanamaana box office success 🤗
Can't wait to watch #Varisu on the big screens!!#HBDDearThalapathyVijay pic.twitter.com/m0PydoLQfs
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்