என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 95381"
- விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'லியோ'.
- இப்படத்தின் படப்பிடிப்பில் அர்ஜுன் இன்று இணையவுள்ளதாக கூறப்படுகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். இதில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் லியோ படத்தின் படப்பிடிப்பில் அர்ஜுன் இன்று இணையவுள்ளதாக கூறப்படுகிறது. பிரம்மாண்ட செட் அமைத்து படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதில் அர்ஜுனின் பகுதியை இன்று படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதற்காக அர்ஜுக்கு லுக் டெஸ்ட் எடுக்கப்பட்டதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘லியோ’.
- இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். இதில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் லியோ படத்தில் மலையாள நடிகை இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி திரிஷ்யம் 2 பட நடிகை சாந்தி மாயாதேவி லியோ படத்தில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. லோகேஷ் கனகராஜுடன், சாந்தி மாயாதேவி எடுத்தக் கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. லியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில் மலையாள நடிகை இணைந்துள்ளது ரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளது.
- இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘லியோ’.
- இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். இதில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்றதையடுத்து சமீபத்தில் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்தது. தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், திரிஷாவின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு விஜய் மற்றும் திரிஷா இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
- விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார்.
- விஜய் நடிக்கவுள்ள தளபதி 68 படத்தின் அப்டேட்டை நடிகர் ஜீவா ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார்.
வாரிசு படத்தை தொடர்ந்து விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய்-லோகேஷ் கனகராஜ் இணைந்துள்ளது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் பிறகு விஜய் நடிக்கவுள்ள தளபதி 68 படத்தின் அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்த்திருக்கின்றனர்.
இந்நிலையில் தளபதி 68 படத்தின் அப்டேட் விரைவில் வெளியாகும் எனக்கூறி விஜய் ரசிகர்களுக்கு நடிகர் ஜீவா சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்துடன் நடிகர் விஜய் இணையவுள்ளதாக தகவல் பரவி வந்த நிலையில், ரசிகர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் தளபதி 68 அப்டேட் கொடுங்க என்று பதிவிட்டிருந்தார். இதற்கு பதிலளித்த ஜீவா,விரைவில் என்று பதிவிட்டு விஜய் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
- நடிகர் விஜய் நேற்று 22 மாவட்டங்களை சார்ந்த நிர்வாகிகளை சந்தித்தார்.
- இந்த சந்திப்பில் புதியதாக சில நலத்திட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என விஜய் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் ஒரு ஆண்டுக்கு மேலாக விலையில்லா விருந்தகம் நடத்தும் திருச்சி, சேலம், தஞ்சாவூர் உள்ளிட்ட 22 மாவட்டங்களை சார்ந்த மக்கள் இயக்க நிர்வாகிகளை சென்னை பனையூரில் உள்ள அலுவலகத்தில் விஜய் நேரில் சந்தித்தார். அப்போது நிர்வாகிகளுக்கு பாராட்டுகளை தெரிவித்த நடிகர் விஜய் இந்த உதவியை செய்ய மேலும் பணம் வேண்டும் என்றால் தன்னிடம் கேளுங்கள் உதவி செய்கிறேன் என கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய்
அடுத்தடுத்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை மேற்கொள்ள திட்டமிட இருப்பதாகவும், அதனை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்றும் ரசிகர்களிடம் விஜய் கேட்டுக்கொண்டார். சுமார் 2 மணி நேரம் நடந்த சந்திப்பில், புதியதாக சில நலத்திட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என விஜய் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
ரசிகர்களை சந்தித்த விஜய்
இந்த நிகழ்ச்சில் ரசிகர் ஒருவர் தனது நெஞ்சில் ஆட்டோகிராப் கேட்டு அதை பச்சை குத்த போகிறேன் என்று கூறிய போது அது தவறு இந்த தவறை செய்யாதீர்கள் என்று தவிர்த்து வெள்ளை காகிதத்தில் ஆட்ரோகிராப் போட்டு தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார் விஜய். மேலும் தொடர்ந்து மக்கள் பணிகளை செய்ய அவர் அறிவுறுத்தியதாகவும் வழக்கம்போல் கூட்டத்திற்கு வரும் இன்னோவா காரில் வராமல் எளிமையான காரில் வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சந்திப்பு ரசிகர்களிடையே பெறும் நெகிழ்சியை ஏற்படுத்தியுள்ளது.
- குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது பல படங்களில் மாஸ்டர் மகேந்திரன் நடித்து வருகிறார்.
- இவர் தற்போது பகிர்ந்திருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
நாட்டாமை, கோயம்பத்தூர் மாப்பிள்ளை, காதலா காதலா, மின்சார கண்ணா உள்ளிட்ட பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததன் மூலம் பிரபலமடைந்தவர் மகேந்திரன். அதன்பின்னர் விழா படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்த மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதியின் சிறு வயது கதாப்பாத்திரத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். இவர் கதாநாயகனாக நடித்திருந்த ரிப்பப்பரி திரைப்படம் சமீபத்தில் வெளியானது.
இந்நிலையில் மாஸ்டர் மகேந்திரன் பகிர்ந்திருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. வீடியோவில் பெட்ரோல் பங்க்கில் பணிபுரியும் மாற்றுத்திறனாளி நபர் மகேந்திரனிடம் தான் விஜய்யின் தீவிர ரசிகர் என்றும் அவரை இதுவரை பார்த்ததில்லை என்றும் எப்படியாவது பார்க்க வேண்டும் என்று கூறுகிறார். இதற்கு பதிலளித்த மகேந்திரன், இந்த வீடியோவை பார்த்து விஜய் அண்ணா அழைத்தால் ஹேப்பி என்று தெரிவித்தார்.
மேலும் அவருடைய செல்போன் பேக் கேசில் "அன்புக்கு ஆயிரம் அர்த்தங்கள் இருக்கலாம். ஆனால் நாங்கள் கண்ட முதல் அர்த்தம் தளபதி" என்ற வாசகத்துடன் விஜய்யின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
- விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’.
- இப்படத்தின் டீசர் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகவுள்ளது.
திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்திருக்கும் படம் 'மார்க் ஆண்டனி'. இப்படத்தின் நாயகியாக ரித்து வர்மா நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா மற்றும் செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். சமீபத்தில் 'மார்க் ஆண்டனி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது. இப்படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு நிறைவடைந்தது. 'மார்க் ஆண்டனி' படத்தின் டீசர் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து மார்க் ஆண்டனி படத்தின் டீசரை விஜய்யிடம் காண்பிக்க படக்குழுவினர் அனுமதி கேட்டு தொடர்புக் கொண்டபோது விஜய் உடனே அழைப்பு விடுத்துள்ளார். அந்த சந்திப்பின் போது "மார்க் ஆண்டனி" திரைப்படத்தின் டீசரை கண்டு மகிழ்ந்த விஜய் படக்குழுவினரை வெகுவாக பாராட்டி உள்ளார். இதற்காக நன்றி தெரிவித்த விஷாலிடம், "நண்பனுக்காக இதை செய்யமாட்டேனா" என்று விஜய் கூறியது படக்குழுவினரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பின்னர் விஜய் அவர்களுக்கு மார்க் ஆண்டனி படக்குழுவினர்கள் பூங்கொத்து வழங்கினார்கள், மேலும் விஜய் பெயரில் அன்னை தெரசா முதியோர் இல்லத்தில் உணவு வழக்கியதற்கான ரசீதையும் விஷால் வழங்கினார். தனது நீண்ட நாள் விருப்பமான திரைப்படம் இயக்கும் ஆசை "துப்பறிவாளன் 2" மூலம் தொடங்கியுள்ளதாக விஜய்யிடம் கூறிய விஷால், தொடர்ந்து திரைப்படங்களை இயக்க உள்ளதாகவும் தங்களுக்கும் இரண்டு கதை தயார் செய்துள்ளதாகவும் கூறியுள்ளார். அப்போது "நீ வா நண்பா நான் இருக்கிறேன் சேர்ந்து பயணிப்போம்" என்று விஜய் கூறி உற்சாகப்படுத்தியுள்ளார்.
இச்சந்திப்பின் போது "மார்க் ஆண்டனி" திரைப்படத்தின் தயாரிப்பாளர் "மினி ஸ்டூடியோஸ் " வினோத் குமார், இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், ஒளிப்பதிவாளர் அபிநந்தன், நிர்வாக தயாரிப்பாளர் ஹரிகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடன் இருந்தது குறிப்பிடத்தக்கது.
Happy to have met my dearest Brother & Hero @actorvijay
— Vishal (@VishalKOfficial) April 27, 2023
Thank you so much for watching my teaser….
Always proud to be your fan, GB pic.twitter.com/2jmKM4h4jz
- இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் இணை இயக்குனராக பணியாற்றிய வெங்கி இயக்கத்தில் சதிஷ் புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.
- இப்படத்தின் மோஷன் போஸ்டரை லோகேஷ் கனகராஜ் இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் இணை இயக்குனராக பணியாற்றிய வெங்கி இயக்கத்தில் சதிஷ் புதிய படத்தில் நடித்து வருகிறார். இதில் கதாநாயகியாக சிம்ரன் குப்தா நடிக்கிறார். மேலும் ஆனந்தராஜ், ஜான் விஜய், ரமேஷ் திலக், தங்கதுரை, மதுசூதனன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தை அருள்நிதி நடிப்பில் வெளியான தேஜாவு படத்தை தயாரித்த வைட் கார்ப்பட் ஃபிலிம்ஸ் சார்பில் கே.விஜய் பாண்டி தயாரிக்கிறார்.
சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் மோஷன் போஸ்டரை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். வித்தைக்காரன் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் மோஷன் போஸ்டர் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
All the best and congrats @Venki_dir one of my associate director and I wish him great success with his debut film ?congrats @actorsathish bro and the entire team ?https://t.co/r774f9S8YV@actorsathish #SimranGupta @WCF2021 @vijaywcf @Venki_Dir @Vbrcomposer @iamyuvakarthick… pic.twitter.com/OslBUfSaBh
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) April 27, 2023
- நடிகர் விஜய் தற்போது ’லியோ’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
- இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தமிழ் திரையுலகின் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வரும் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். இதில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
ஷோபா சந்திரசேகர் -விஜய்
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நடிகர் விஜய் தனது தாயார் ஷோபா சந்திரசேகரை நேரில் சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
- நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘ ருத்ரன்’.
- இப்படம் ஏப்ரல் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
ராகவா லாரன்ஸ் நடித்துள்ள ருத்ரன் திரைப்படம் ஏப்ரல் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இப்படத்தின் மூலம் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். இதில் சரத்குமார், பிரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ராகவா லாரன்ஸ்
ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் முதல் நாள் வசூல் உலகளவில் சுமார் ரூ.3.5 கோடியை கடந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தரப்பில் கூறப்பட்டது. இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றி கலந்து கொண்ட நடிகர் ராகவா லாரன்ஸ், விஜய் குறித்து நெகிழ்ச்சியாக பேசியுள்ளார். அவர் கூறியதாவது, எனக்கு விஜய்யோட அமைதி ரொம்ப பிடிக்கும். அதிகம் பேசமாட்டார். செயல் அதிகமா இருக்கும் வார்த்தை குறைவா இருக்கும். எனக்கு டிரஸ்ட்டில் சில உதவிகள் தேவைப்படும் போது எப்போ போன் பண்ணாலும் உடனே அந்த உதவி செய்வார்.
ராகவா லாரன்ஸ்
நான் வளர்க்கும் என்னுடைய குழந்தைகள் விஜய் சார் படம் வெளியான போது படம் பாக்கனும் னு கேட்பார்கள். நான் விஜய் சாருக்கு அழைத்து இது குறித்து கேட்டேன். அவர் அவங்களுக்காக தனியா ஷோவே போடலாம் என்று சொன்னார். விஜய் சாருடன் நடிக்கனும்னு எழுதிருந்து அது நடந்தா.. முதல்ல சந்தோஷப்படுறது நானாதான் இருப்பேன் என்று கூறினார்.
- தினத்தந்தி அதிபர் டாக்டர். பா.சிவந்தி ஆதித்தனாரின் 10-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
- நாம் தமிழ் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சிவந்தி ஆதித்தனாருக்கு மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
தினத்தந்தி அதிபர் டாக்டர். பா.சிவந்தி ஆதித்தனாரின் 10-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. சென்னை போயஸ் கார்டனில் உள்ள சிவந்தி ஆதித்தனார் நினைவு இல்லத்தில் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் பலரும் மரியாதை செலுத்தினர். நாம் தமிழ் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சிவந்தி ஆதித்தனாருக்கு மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அவர் பேசியதாவது, பத்திரிக்கை துறை மட்டும் இல்லாமல் விளையாட்டுத் துறையிலும் அவருக்கு ஆர்வம் அதிகம். பல விளையாட்டு வீரர்களை உருவாக்கிய பெருமை அவரை சாரும், அனைவரையும் நேசித்த பெருமகன். அவருடைய நினைவை போற்றுவதில் பெருமை அடைகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது அம்பேத்கர் பிறந்தநாளுக்கு நடிகர் விஜய்யின் இயக்கம் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது அரசியல் நகர்வாக இருக்குமோ? என்று சீமானிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த சீமான், அதற்கான முயற்சியை தான் தம்பி செய்கிறார். அதை நான் வரவேற்கிறேன். மாற்று என்பதில் இந்த கட்சியை விட்டால் அந்த கட்சி என்று அரை நூற்றாண்டுகளை இந்த நிலம் கடந்து விட்டது. தம்பியெல்லாம் வரும்போது இன்னும் வலிமையாக இருக்கும் என்று நினைக்கிறேன். அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்று நினைத்து தான் இதையெல்லாம் செய்கிறார் என்றார்.
மேலும் விஜய் அரசியலுக்கு வந்தால் சீமானின் ஆதரவு இருக்குமா? என்று கேட்டதற்கு, நான் யாரையும் ஆதரிக்க வேண்டியதில்லை. தம்பிதான் என்னை ஆதரிக்க வேண்டும் என்றார். எங்களின் கோட்பாட்டை ஏற்றுக் கொண்டு வருபவர்கள் எங்களுடன் இணைந்து பயணிக்கலாம் என்றும் சீமான் தெரிவித்தார்.
- இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘லியோ’.
- இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். இதில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
லியோ
இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்றதையடுத்து சமீபத்தில் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்தது. தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
லியோ
இந்நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை திரிஷாவிடம் ரசிகர்கள் 'லியோ' அப்டேட் கேட்டு ஆர்ப்பரித்தனர். இதற்கு திரிஷா, "நீங்கள் எங்கே போனாலும் இந்த கேள்வி கேட்பதனால் சொல்கிறேன். 'லியோ' படப்பிடிப்பில் இருந்து தான் வருகிறேன். இயக்குனர் லோகேஷ் கனகராஜ், உங்க தளபதி விஜய் எல்லோரும் நல்லாயிருக்காங்க, மற்றவை 'லியோ' நிகழ்ச்சியில் பேசலாம்" என்று கூறினார். இதனால் உற்சாகமடைந்த ரசிகர்கள் கைதட்டல்களால் அரங்கத்தை அதிர செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்