search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95440"

    மும்பையில் நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் சென்னை அணியின் வெற்றிக்கு இன்னும் 5 ஓவர்களில் 33 ரன்கள் தேவைப்படுகிறது. #IPL2018 #VIVOIPL #CSKvSRH #IPL2018Final
    மும்பை:

    11-வது சீசன் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று மாலை 7 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கியது. இதில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் விளையாடி வருகிறது. இப்போட்டியில், டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் டோனி, பந்துவீச்சு தேர்வு செய்தார். 

    இதையடுத்து களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்தது. வில்லியம்சன் 47 ரன்களும், யூசுப் பதான் 45 ரன்களும் எடுத்தது. இதன்மூலம்  சென்னை அணிக்கு 179 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஐதராபாத். 

    இதையடுத்து சென்னை அணி பேட்டிங் செய்தது. வாட்சன், டுபிளெசிஸ் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். முதல் ஓவரை புவனேஷ்வர் குமார், வாட்சனுக்கு மெய்டனாக வீசினார். 2-வது ஓவரை வீசிய சந்தீப் சர்மா 5 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். மீண்டும் 3-வது ஓவரை வீசிய புவனேஷ்வர் குமார் அந்த ஓவரில் 5 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். 

    4-வது ஓவரை சந்தீப் சர்மா வீச, அந்த ஓவரின் கடைசி பந்தில் டுபிளெசிஸ் கேட்சாகி வெளியேறினார். அவர் 10 ரன்கள் எடுத்திருந்தார். அவரைத்தொடர்ந்து ரெய்னா களமிறங்கினார். 5-வது ஓவரை புவனேஷ்வர் குமார் வீசினார். அந்த ஓவரில் சென்னை அணிக்கு 3 ரன்கள் மட்டுமே கிடைத்தது. 6-வது ஓவர் சந்தீப் சர்மாவிடம் கொடுக்கப்பட்டது. அந்த ஓவரில் சென்னை அணி 15 ரன்கள் எடுத்தது. இதனால் 6 ஓவர்கள் முடிவில் சென்னை அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 35 ரன்கள் எடுத்தது.

    7-வது ஓவரை சித்தார்த் கவுல் வீசினார். அந்த ஓவரில் சென்னை அணி அதிரடியாக விளையாடி 16 ரன்கள் எடுத்தது. 8 ஓவர்கள் முடிவில் சென்னை அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 56 ரன்கள் எடுத்துள்ளது. வாட்சன் 28 ரன்களுடனும், ரெய்னா 15 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.



    9-வது ஓவரை சித்தார்த் கவுல் வீசினார். இந்த ஓவரில் சென்னை அணி ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி உள்பட 16 ரன்களை குவித்தது. தொடர்ந்து 10வது ஓவரை ரஷித் கான் வீச ஒரு பவுண்டரியுடன் 8 ரன் மட்டுமே கிடைத்தது.

    11வது ஓவரை ஷகிப் அல் ஹசன் வீசினார். முதல் பந்தில் சிக்சர் அடித்த வாட்சன் தனது அரை சதத்தை பதிவுசெய்தார்.
    இந்த ஓவரில் சென்னை அணிக்கு 2 சிக்சர் உள்பட 15 ரன்கள் கிடைத்தது.

    12வது ஓவரை பிராத்வைட் வீசினார். இந்த ஓவரின் 3வது பந்தில் சென்னை அணி 100 ரன்களை கடந்தது. இந்த  ஓவரில் ஒரு பவுண்டரியுடன் 9 ரன்கள் கிடைத்தது. அடுத்த ஓவரை சந்திப் சர்மா வீசினார். இதில் 3 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 27 ரன்களை குவித்தது. 13வது ஓவரில் சென்னை ஒரு விக்கெட்டுக்கு 131 ரன்கள் எடுத்திருந்தது.

    14-வது ஓவரை பிராத்வைட் வீசினார். மூன்றாவது பந்தில் சுரேஷ் ரெய்னா அவுட்டானார். இவர் 24 பந்துகளில் 32 ரன்கள் எடுத்திருந்தார். அவரை தொடர்ந்து அம்பதி ராயுடு களமிறங்கினார். இந்த ஓவரில் ஒரு சிக்சர், பவுண்டரியுடன் 14 ரன்கள் கிடைத்தது. சென்னை அணி 2 விக்கெட்டுக்கு 145 ரன்கள் எடுத்திருந்தது.

    15-வது ஓவரை ரஷித் கான் வீசினார். இந்த ஓவரில் ஒரு ரன் மட்டுமே கிடைத்தது. இதையடுத்து சென்னை அணி வெற்றி பெற 5 ஓவர்களில் 33 ரன்கள் தேவைப்படுகிறது. #IPL2018 #VIVOIPL #CSKvSRH #IPL2018Final
    கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற பரபரப்பான போட்டியில் கொல்கத்தாவை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தது ஐதராபாத் அணி. #IPL2018 #KKRvSRH
    ஐபிஎல் 2018 தொடரின் குவாலிபையர் 2 கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்கியது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.

    டாஸ் வென்ற கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி சன்ரைசர்ஸ் ஐதராபாத்தின் தவான், சகா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இந்த ஜோடி 7.1 ஓவரில் 56 ரன்களாக இருக்கும்போது பிரிந்தது. தவான் 24 பந்தில் 34 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய கேன் வில்லியம்சன் 3 ரன் எடுத்து அவுட்டானார்.

    தொடர்ந்து, சகா 35 ரன்களும், ஷாகிப் அல் ஹசன் 28 ரன்களும், தீபக் ஹூடா 19 ரன்களும், யூசுப் பதான் 3 ரன்களும், பிராத்வைட் 8 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    இறுதியில், ஐதராபாத் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்தது. சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் அதிரடியாக ஆடி 10 பந்துகளில் 2 பவுண்டரி, 4 சிக்சருடன் 34 ரன்களுடனும், புவனேஸ்வர் குமார் 2 பந்தில் ஐந்து ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    கொல்கத்தா சார்பில் குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும், ஷிவம் மாவி, சுனில் நரேன், பியூஷ் சாவ்லா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.



    இதையடுத்து, 175 ரன்களை இலக்காக கொண்டு கொல்கத்தா அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ் லின், சுனில் நரேன் ஆகியோர் இறங்கினர்.

    அணியின் எண்ணிக்கை 40 ஆக இருக்கும்போது சுனில் நரேன் 26 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய நிதிஷ் ரானா 22 ரன்னிலும், ராபின் உத்தப்பா 2 ரன்னிலும், தினேஷ் கார்த்திக் 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால் கொல்கத்தா அணி 5 விக்கெட்டுக்கு 108 ரன்கள் எடுத்திருந்தது. ஷுப்மான் கில் 20 பந்தில் 30 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

    இறுதியில், கொல்கத்தா அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்து போட்டியில் இருந்து வெளியேறியது. 

    ஐதராபாத் அணி சார்பில் ரஷித் கான் 3 விக்கெட்டும், சித்தார்த் கவுல், பிராத்வைட் ஆகியோர் 2 விக்கெட்டும், ஷாகிப் அல் ஹசன் ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

    இதைத்தொடர்ந்து, கொல்கத்தாவை வீழ்த்திய ஐதராபாத் அணி, ஐபிஎல் இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. #IPL2018 #KKRvSRH
    டெல்லியில் நடைபெற்ற ஐபில் போட்டியில் மும்பை இந்தியன்சை வெளியேற்றி அதிர்ச்சி அளித்தது டெல்லி டேர்டெவில்ஸ். #IPL2018 #DDvMI
    ஐபிஎல் தொடரின் 55-வது ஆட்டம் டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக டெல்லி டேர்டெவில்ஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

    அந்த அணியின் பிரித்வி ஷா, மேக்ஸ்வெல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். பிரித்வி ஷா 12 ரன்னிலும், மேக்ஸ்வெல் 22 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் 6 ரன்னில் ஏமாற்றம் அளித்தார்.

    ரிஷப் பந்த் அதிரடியாக ஆடி 44 பந்துகளில் தலா 4 பவுண்டரி, 4 சிக்சருடன் 64 ரன்கள் குவித்தார். அடுத்து வந்த விஜய் சங்கர், அபிஷேக் ஷர்மா முறையே 43 ரன்களும், 15 ரன்களும் அடிக்க டெல்லி டேர்டெவில்ஸ் 20 ஓவரில் 174 ரன்கள் எடுத்தது.

    மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் குருணால் பாண்ட்யா, பும்ரா, மயங்க் மார்க்கண்டே ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

    இதையடுத்து, 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சூர்யகுமார் யாதவ், எவின் லெவிஸ் களமிறங்கினர்.



    எவின் லெவிஸ் மட்டும் பொறுப்புடன் ஆடி 31 பந்துகளில் 4 சிக்சர், 3 பவுண்டரியுடன் 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் பென் கட்டிங் 20 பந்துகளில் 3 சிக்சர், 2 பவுண்டரியுடன் போராடி 37 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் யாரும் நிலைத்து நின்று ஆடவில்லை.

    இறுதியில், மும்பை இந்தியன்ஸ் அணி 19.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 163 ரன்களை எடுத்து 11 ரன்களில் தோல்வி அடைந்து போட்டியில் இருந்து வெளியேறியது.

    டெல்லி அணி சார்பில் லாமிச்சென், ஹர்ஷர் படேல், அமித் மிஷ்ரா ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். #IPL2018 #DDvMI
    ஐதராபாத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற 173 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்துள்ளது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி. #IPL2018 #SRHvKKR
    ஐதராபாத்:

    ஐதராபாத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெற்று வரும் இரண்டாவது லீக் ஆட்டத்தில் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத்தும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகளும் மோதின.

    டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவானும், ஸ்ரீவத்சவ் கோஸ்வாமியும் களமிறங்கினர். இருவரும் இணைந்து நிதானமாக ஆடினர். இதனால் முதல் விக்கெட்டுக்கு 75 ரன்கள் சேர்த்தது.

    கோஸ்வாமி 35 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். அடுத்து இறங்கிய கேன் வில்லியம்சன் அதிரடியாக ஆடி 17 பந்துகளில் 3 சிக்சர், ஒரு பவுண்டரி உள்பட 36 ரன்கள் எடுத்து வெளியேறினார். சிறப்பாக ஆடிய ஷிகர் தவான் அரை சதமடித்த நிலையில் ஆட்டமிழந்தார்.



    அப்போது அணியின் எண்ணிக்கை 15.1 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்திருந்தது. அவரை தொடர்ந்து இறங்கிய யூசுப் பதான் 2 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அடுத்து வந்தவர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை.

    இறுதியில், ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்துள்ளது.

    கொல்கத்தா அணி சார்பில் பிரசித் கிருஷ்ணா 4 விக்கெட்டுகளும், சுனில் நரேன், குல்தீப் யாதவ், ஜவோன் சியர்லஸ், ஆண்ட்ரூ ரசல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 173 ரன்களை இலக்காக கொண்டு கொல்கத்தா அணி விளையாடி வருகிறது. #IPL2018 #SRHvKKR
    ஐதராபாத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது. #IPL2018 #SRHvKKR
    ஐதராபாத்:

    ஐ.பி.எல். போட்டியில் லீக் ஆட்டங்கள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மட்டுமே ‘பிளேஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

    இதற்கிடையே, ஐதராபாத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் இரண்டாவது லீக் ஆட்டத்தில் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதின.

    இந்நிலையில், இரு அணி கேப்டன்கள் முன்னிலையில் டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது. #IPL2018 #SRHvKKR
    ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூரை 30 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பிளே ஆப் சுற்றை தக்க வைத்துள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. #IPL2018 #RRvRCB
    ஜெய்ப்பூர்:

    ஜெய்ப்பூரில் நடைபெற்று வரும் இன்றைய முதல் போட்டியில் ரகானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதின.

    டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ராகுல் திரிபாதியும், ஜோல்டா ஆர்ச்சரும் களமிறங்கினர். இரண்டாவது ஓவரிலேயே ஆர்ச்சர் ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

    அடுத்து இறங்கிய கேப்டன் ரகானே 33 ரன்னிலும், சஞ்சு சாம்சன் ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டாகினர். கிளாசன் 32 ரன்னிலும், கிருஷ்ணப்பா கவுதம் 14 ரன்னிலும் வெளியேறினர். ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் திரிபாதி இறுதி வரை ஆட்டமிழக்காமல் பொறுப்புடன் விளையாடினார்.



    இறுதியில், ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்துள்ளது. திரிபாதி 58 பந்துகளில் 3 சிக்சர், 5 பவுண்டரியுடன் 80 ரன்களுடன் களத்தில் நின்றார். பெங்களூர் அணி சார்பில் உமேஷ் யாதவ் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூர் அணி களமிறங்கியது. அந்த அணியின்  தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலியும், பர்திவ் படேலும் இறங்கினர். ஆனால், கோலி 4 ரன்களில் ஆட்டமிழந்தது அந்த அணியை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

    அடுத்து இறங்கிய டி வில்லியர்ஸ் நிதானமாக விளையாடினார். பர்திவ் படேல் 33 ரன்களில் வெளியேறினார். டி வில்லியர்ஸ் சிறப்பாக விளையாடி அரை சதமடித்தார். அவர் 35 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து அவுட்டாகினார்.

    இவர்கள் இருவரை தவிர மற்ற வீரர்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை. இதனால் பெங்களூர் அணி இறுதியில், 20 ஓவர் முடிவில் 134 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி அடைந்து போட்டியில் இருந்து வெளியேறியது. 

    ராஜஸ்தான் அணி சார்பில் ஷ்ரேயஸ் கோபால் அபாரமாக பந்து வீசி 4 விக்கெட் கைப்பற்றினார். பென் லாப்லின், ஜெயதேவ் உனத்கட் ஆகியோர் 2 விக்கெட்களை வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் அணி பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது. #IPL2018 #RRvRCB
    ஜெய்ப்பூரில் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணி வெற்றி பெற 165 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. #IPL2018 #RRvRCB
    ஜெய்ப்பூர்:

    ஜெய்ப்பூரில் நடைபெற்று வரும் இன்றைய ஐபிஎல் முதல் போட்டியில் ரகானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதின.

    டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ராகுல் திரிபாதியும், ஜோல்டா ஆர்ச்சரும் களமிறங்கினர். இரண்டாவது ஓவரிலேயே ஆர்ச்சர் ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

    அடுத்து இறங்கிய கேப்டன் ரகானே திரிபாதியுடன் இணைந்து நிதானமாக ஆடினார். இருவரும் இணைந்து 99 ரன்கள் ஜோடி சேர்த்த நிலையில், ரகானே 33 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து ஆடிய சஞ்சு சாம்சன் டக் அவுட்டாகினார். அடுத்து ஆடிய கிளாசன் 32 ரன்னிலும், கிருஷ்ணப்பா கவுதம் 14 ரன்னிலும் வெளியேறினர்.



    ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் திரிபாதி இறுதி வரை ஆட்டமிழக்காமல் பொறுப்புடன் விளையாடினார்.

    இறுதியில், ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்துள்ளது. திரிபாதி 58 பந்துகளில் 3 சிக்சர், 5 பவுண்டரியுடன் 80 ரன்களுடன் களத்தில் நின்றார்.

    பெங்களூர் அணி சார்பில் உமேஷ் யாதவ் 3 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து, 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூர் அணி விளையாடி வருகிறது. #IPL2018 #RRvRCB
    ஜெய்ப்பூரில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது. #IPL2018 #RRvRCB
    ஜெய்ப்பூர்:

    ஐ.பி.எல். போட்டியில் லீக் ஆட்டங்கள் இறுதிகட்டத்தை எட்டி உள்ளது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் (18 புள்ளி), சென்னை சூப்பர் கிங்ஸ் (16 புள்ளி), ஆகிய 2 அணிகள் மட்டுமே ‘பிளேஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. எஞ்சிய 2 அணி எவை எவை என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    இன்று மாலை 4 மணிக்கு ஜெய்ப்பூரில் நடைபெறும் ஆட்டத்தில் ரகானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ்- விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி ‘பிளே ஆப்’ வாய்ப்பில் நீடிக்கும். தோல்வி அடையும் அணி போட்டியில் இருந்து வெளியேற்றப்படும். இதனால் இரு அணியும் தங்களது கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றி பெற கடுமையாக போராடும்.

    இந்நிலையில், இரு அணி கேப்டன்கள் முன்னிலையில் டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது. #IPL2018 #RRvRCB
    பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும் ஆர்வத்தில் ராஜஸ்தான்- பெங்களூர் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றனர். மற்றொரு ஆட்டத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ்- ஐதராபாத்துடன் மோதுகிறது. #IPL2018
    ஜெய்ப்பூர்:

    ஐ.பி.எல். போட்டியில் லீக் ஆட்டம் இறுதிகட்டத்தை எட்டி உள்ளது.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் (18 புள்ளி), சென்னை சூப்பர் கிங்ஸ் (16 புள்ளி), ஆகிய 2 அணிகள் மட்டுமே ‘பிளேஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. எஞ்சிய 2 அணி எவை எவை என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (14 புள்ளி) மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் (தலா 12 புள்ளி) ஆகிய 5 அணிகள் இதற்கான போட்டியில் உள்ளன. டெல்லி டேர்டெவில்ஸ் (8 புள்ளி) ஏற்கனவே வாய்ப்பை இழந்துவிட்டது.

    இன்னும் 4 ஆட்டங்களே எஞ்சியுள்ளன. அதாவது 8 அணிக்கும் ஒரு ஆட்டமே உள்ளன. இன்றைய போட்டியின் முடிவில் ஒரு அணி வெளியேற்றப்படும்.

    நாளையுடன் ‘லீக்‘ ஆட்டம் முடிகிறது. 43-வது நாளான இன்று இரண்டு ஆட்டங்கள் நடக்கிறது.

    மாலை 4 மணிக்கு ஜெய்ப்பூரில் நடைபெறும் ஆட்டத்தில் ரகானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ்- விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.

    இதில் வெற்றி பெறும் அணி ‘பிளே ஆப்’ வாய்ப்பில் நீடிக்கும். தோல்வி அடையும் அணி போட்டியில் இருந்து வெளியேற்றப்படும். இதனால் இரு அணியும் தங்களது கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றி பெற கடுமையாக போராடும்.

    ரன்ரேட் முக்கிய பங்கு வகிப்பதால் வெற்றி பெறும் அணி நிகர ரன்ரேட்டையும் உயர்த்துவது அவசியமாகும். பெங்களூர் அணியின் ரன்ரேட் +0.26 ஆக உள்ளது. ராஜஸ்தான் நிகர ரன்ரேட் -0.39 ஆகும்.

    பட்லா, பென்ஸ்டோர் ஆகியோர் இங்கிலாந்துக்கு திரும்பியது ராஜஸ்தான் அணிக்கு பாதிப்பே. உள்ளூரில் விளையாடுவது மட்டுமே அந்த அணிக்கு சாதகம். அந்த அணியில் கேப்டன் ரகானே, சஞ்சு சாம்சன், ஆர்சிஷார்ட் போன்ற முன்னணி வீரர்கள் உள்ளனர். பெங்களூரை ராஜஸ்தான் 19 ரன்னில் தோற்கடித்து இருந்தது. இதனால் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது.

    பெங்களூர் அணி ராஜஸ்தானுக்கு பதிலடி கொடுத்து வெற்றியை பெற்று ‘பிளே- ஆப்’ சுற்றில் நீடிக்கும் ஆர்வத்தில் உள்ளது. விராட் கோலி, டிவில்லியர்ஸ், மொய்ன்அலி போன்ற அதிரடி வீரர்கள் முழு திறமையை வெளிப்படுத்தி தங்களது அணியை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்ல போராடுவார்கள். பந்து வீச்சில் சாஹல், உமேஷ்யாதவ் நல்ல நிலையில் உள்ளனர்.

    ஐதராபாத்தில் இரவு 8 மணிக்கு நடைபெறும். 2-வது ஆட்டத்தில் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத்- தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

    ஐதராபாத் அணியை பொறுத்தவரை சம்பிரதாயமான ஆட்டமே. ஏற்கனவே ‘பிளே ஆப்’ சுற்றுக்கு முன்னேறியது. ஆனால் அந்த அணி 10-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. கடைசியாக ஆடிய 2 போட்டியில் தோற்றதால் அந்த அணி வெற்றிக்காக போராடும். கேப்டன் வில்லியம்ஸ், தவான், மனிஷ் பாண்டே, யூசுப்பதான் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும், புவனேஸ்குமார், ரஷித்கான், சித்தார்த்கவுல் போன்ற சிறந்த பவுலர்களும் உள்ளனர்.

    கொல்கத்தா அணி, ஐதராபாத்தை வீழ்த்தி ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு நுழையும் ஆர்வத்தில் உள்ளது. 14 புள்ளியுடன் இருக்கும் அந்த அணி வெற்றி பெற்றால் தகுதி பெறும்.

    தோல்வி அடைந்தால் நாளை நடைபெறும் ஆட்டங்களின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும். அதே நேரத்தில் மோசமாக தோற்றால் வெளியேறும் நிலையும் ஏற்படலாம். இதனால் அந்த அணி வீரர்கள் வெற்றிக்காக போராடுவார்கள். கிறிஸ் லின், உத்தப்பா, கேப்டன் தினேஷ் கார்த்திக், நரேன், ரஸ்சல் போன்ற சிறந்த வீரர்கள் அந்த அணியில் உள்ளனர்.

    கொல்கத்தா அணி ஏற்கனவே ஐதராபாத்திடம் 5 விக்கெட்டில் தோற்றது. இதனால் பதிலடி கொடுக்கும் வகையில் ஆடும்.

    பிளே ஆப் சுற்றுக்கு நுழையும் ஆட்டங்கள் என்பதால் இன்றைய 2 போட்டிகளும் பரபரப்பாக இருக்கும். #IPL2018
    இந்தூரில் நடந்த ஐபிஎல் போட்டியில் துல்லியமான பந்து வீச்சு மற்றும் அதிரடியான பேட்டிங்கால் பஞ்சாப் அணியை எளிதில் வீழ்த்தியது பெங்களூர் அணி. IPL2018 #KXIPvRCB
    ஐபிஎல் தொடரின் 48-வது லீக் ஆட்டம் இந்தூரில் நடைபெற்றது. இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் கேப்டன் விராட் கோலி பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேஎல் ராகுல், கிறிஸ் கெய்ல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

    ஆனால், பெங்களூர் அணியினரின் துல்லியமான பந்து வீச்சில் பஞ்சாப் அணி திணறியது. அந்த அணியில் ஆரோன் பிஞ்ச் 26 ரன்னும், லோகேஷ் ராகுல் 21 ரன்னும் எடுத்தனர். மற்றவர்கள் விரைவில் அவுட்டாகினர். இதனால் பஞ்சாப் அணி 15.1 ஓவரில் 88 ரன்களுக்கு ஆல அவுட்டானது.



    பெங்களூர் அணி சார்பில் உமேஷ் யாதவ்  3 விக்கெட்டும், சிராஜ், சாஹல், கிராண்ட்ஹோம், மொயின் அலி ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

    இதையடுத்து, 89 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் பெங்களூர் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக பர்திவ் படேலும், விராட் கோலியும் இறங்கினர்.

    இருவரும் முதலில் இருந்தே அடித்து ஆடியதால் அணியின் எண்ணிக்கை மளமளவென உயர்ந்தது. இதனால் 8.1 ஒவரில் விக்கெட் இழப்பின்றி 92 ரன்கள் எடுத்து எளிதில் வென்றது. விராட் கோலி 48 ரன்னும், பர்திவ் படேல் 40 ரன்னும் எடுத்து அவுட்டாகாமல் இருந்தனர். IPL2018 #KXIPvRCB
    ஐபிஎல் 11-வது சீசனில் அதிக ரன்கள், அதிக சிக்ஸர்கள் பட்டியலில் பெரும்பாலான இடங்களை சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் ஆக்கிரமித்துள்ளனர். #CSK #msdhoni
    சென்னை சூப்பர் கிங்ஸ் இரண்டு ஆண்டுகள் தடைக்குப்பின் தற்போது 11-வது சீசனில் களம் இறங்கியுள்ளது. இரண்டு ஆண்டு தடையால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் பிரிய வேண்டிய நிலை ஏற்பட்டது.

    இந்த சீசனுக்கான ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 30 வயதிற்கு மேற்பட்ட அனுபவ வீரர்களை குறிவைத்து எடுத்தது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடிய ஹர்பஜன் சிங் மற்றும் அம்பதி ராயுடு, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் விளையாடிய ஷேன் வாட்சன் ஆகியோரை எடுத்தது.

    இந்த மூன்று பேரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக அம்பதி ராயுடு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். யாரும் எதிர்பார்க்காத வகையில் கேப்டன் எம்எஸ் டோனி கடந்த 9 சீசனை விட ஆக்ரோசமான ஆட்டத்தை வெளிக்காட்டி வருகிறார். இதனால் அதிக ரன்கள், அதிக சிக்ஸர்கள் பட்டியலில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள்.



    அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதல் 10 இடங்களில் 3 இடங்களை சென்னை சூப்பர் கிங்ஸ் ஆக்கிரமித்துள்ளது. அம்பதி ராயுடு 535 ரன்களுடன் 4-வது இடத்தில் உள்ளார். ஷேன் வாட்சன் 424 ரன்களுடன்  8-வது இடத்திலும், எம்எஸ் டோனி 413 ரன்களுடன் 9-வது இடத்திலும் உள்ளனர். முதல் 10 இடத்தில் 3 இடங்களை கைவசப்படுத்தியுள்ளனர்.

    சென்னை அணி பிளே-ஆஃப்ஸ் சுற்றை உறுதியாக்கியுள்ளதால் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், பட்லர், கேஎல் ராகுல் ஆகியோரை இந்த மூன்று பேரும் பின்னுக்குத் தள்ள வாய்ப்புள்ளது.



    அதேபோல் அதிக சிக்ஸ் அடித்தவர்கள் பட்டியலில் அம்பதி ராயுடு 29 சிக்சர்களடன் 3-வது இடத்திலும், எம்எஸ் டோனி 29 சிக்சர்களடன் 5-வது இடத்திலும், வாட்சன் 26 சிக்சர்களுடன் 8-வது இடத்திலும் உள்ளனர்.
    மும்பையில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ஜோஸ் பட்லரின் அதிரடி ஆட்டத்தால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மும்பையை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. #IPL2018 #MIvRR
    மும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் தொடரின் 47-வது மற்றும் இன்றைய 2-வது ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் ரகானே பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    மும்பை அணியின் சூர்யகுமார் யாதவ், எவின் லெவிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இருவரும் சிறப்பாக ஆடினர்.

    அணியின் எண்ணிக்கை 87 ரன்னாக இருந்தபோது சூர்யகுமார் யாதவ் 38 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் ரோகித் சர்மா முதல் பந்தில் டக் அவுட்டாகி வெளியேறினார்.

    மறுமுனையில் சிறப்பாக ஆடிய எவின் லெவிஸ் 42 பந்தில் 60 ரன்னிலும், இஷான் கிஷான் 12 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். குருணால் பாண்டியா 3 ரன் எடுத்து அவுட்டானார். ஹர்திக் பாண்ட்யா 21 பந்தில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் 36 ரன்கள் சேர்த்து வெளியேறினார்.



    இறுதியில், மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 168 ரன்கள் எடுத்தது.

    ராஜஸ்தான் சார்பில் ஆர்ச்சர், பென் ஸ்டோக்ஸ் தலா 2 விக்கெட்டும், தவால் குல்கர்னி, உனத்கட் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஷார்ட்டும், ஜோஸ் பட்லரும் இறங்கினர்.

    ஷார்ட் 4 ரன்னில் அவுட்டானார். அடுத்து வந்த கேப்டன் ரகானே பட்லருக்கு ஓரளவு கம்பெனி கொடுத்தார். இருவரும் இணைந்து 95 ரன்கள் சேர்த்தனர். ரகா8னே 37 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    மறுமுனையில் ஜோஸ் பட்லர் தூணாக நின்று சிக்சர், பவுண்டரியுமாக விளாசி அரை சதம் கடந்தார். அவருக்கு சஞ்சு சாம்சன் ஈடுகொடுத்தார். சாம்சன் 26 ரன்னில் அவுட்டானார்.

    இறுதியில், ராஜஸ்தான் அணி 18 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 171 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஜோஸ் பட்லர் 53 பந்துகளில்  5 சிக்சர், 9 பவுண்டரியுடன் 94 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஜோஸ் பட்லர் ஆட்ட நாயகன் விருது வென்றார்.

    மும்பை அணி சார்பில் ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட்டும், பும்ரா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். #IPL2018 #MIvRR
    ×