என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 95480
நீங்கள் தேடியது "ஜெய்"
நடிகர் ஜெய்யும், அஞ்சலியும் காதலிப்பதாக கிசுகிசு பரவிய நிலையில், இதுகுறித்த ஜெய் அளித்த பேட்டியில், அஞ்சலியுடனான நட்பு தொடரும் என்றும், கண்டிப்பாக தான் காதல் திருமணம் தான் செய்வேன் என்றார். #Jai #Anjali #Nayanthara
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவரான ஜெய் நடிப்பில் ‘பார்ட்டி’, ‘நீயா-2’ உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராகி இருக்கின்றன. மலையாளத்தில் மம்முட்டியுடன் இணைந்து ‘மதுரராஜா’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
‘எங்கேயும் எப்போதும்’, ‘பலூன்’ ஜெய்க்கும், அஞ்சலிக்கும் இடையே காதல் மலர்ந்ததாகவும், இருவரும் திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும் செய்தி பரவியது. ஆனால், அந்த காதல் சீக்கிரமே முறிந்து போனதாகவும் பேசப்படுகிறது.
இதுபற்றி ஜெய்யிடம் கேட்டபோது, “நானும், அஞ்சலியும் நெருங்கி பழகியது உண்மைதான். எங்கள் இருவருக்கும் இடையே நல்ல நட்பு இருந்தது. அஞ்சலி என் காதலி அல்ல; தோழிதான். எங்கள் நட்பு தொடரும்” என்று கூறினார்.
“எனக்கு மிகவும் பிடித்த நடிகை நயன்தாரா. மிகவும் மென்மையானவரும் அவர் தான். 2013-ல் நாங்கள் இருவரும் ‘ராஜாராணி’ படத்தில் இணைந்து நடித்தோம். படப்பிடிப்பின்போது எங்கள் இருவருக்கும் நெருக்கமான நட்பு ஏற்பட்டது. அது இப்போதும் தொடர்கிறது. தொடர்ந்து அவருடன் பல படங்களில் ஜோடியாக நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்” என்றார்.
“திருமணம் பற்றி கேட்டதற்கு, எனது திருமணம் பற்றி நான் யோசிக்கவே இல்லை. அப்படி திருமணம் செய்துகொள்வதாக இருந்தால், அது காதல் திருமணமாகத்தான் இருக்கும்.” இவ்வாறு நடிகர் ஜெய் கூறினார். #Jai #Anjali #Nayanthara #Neeya2 #Party
வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தை தொடர்ந்து, சிம்பு நடிக்க இருக்கும் மாநாடு படத்தில் பிரபல நடிகர் நடிக்க இருக்கிறார். #STR #Maanadu #STRinMaanaadu
சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’. சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பு வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
இப்படத்தை அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘மாநாடு’ படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. இதில் சிம்புவுடன் நடிகர் ஜெய் இணைந்து நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார். #STR #Maanadu #STRinMaanaadu #VP9 #Jai
பட விழாக்களில் கலந்துக் கொள்ளாமல் இருந்த நடிகர் ஜெய், தற்போது தனது கொள்கையை மாற்றிக் கொண்டிருக்கிறார். #Jai #Neeya2 #Party
நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் ஜெய் அளித்த பேட்டி:-
உங்கள் நடிப்பில் அடுத்து வர இருக்கும் படங்கள்?
நீயா 2, பார்ட்டி படங்கள் ரிலீசுக்கு தயாராக இருக்கின்றன. மம்முட்டிக்கு தம்பியாக மதுர ராஜா என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறேன். புலி முருகன் படத்தை இயக்கிய வைசாக் இயக்குகிறார். பார்ட்டி படத்தில் வில்லத்தனம் கலந்த வேடம். அதற்கு அடுத்து கோபி நயினார் படம். இதில் வடசென்னையை சேர்ந்த கால்பந்து வீரராக நடிக்கிறேன்.
உங்கள் பலமே காதல் படங்கள் தான். அதை விட்டு விட்டு ஆக்ஷன் பாதைக்கு செல்வது ஏன்?
ஒரு மாற்றம் வேண்டும் என்று காதல் பாதையில் இருந்து மாறினேன். அதன் பிறகு காதல் படங்கள் அமையவில்லை. இப்போது கதைகள் கேட்டு வருகிறேன்.
இரண்டு கதாநாயகர்கள் படங்களில் அதிகம் நடிப்பது ஏன்?
இந்தி சினிமாவை போல் நடிகர்கள் சேர்ந்து நடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். நான் அறிமுகமானதில் இருந்தே அதிகமாக ஒன்றுக்கு மேற்பட்ட கதாநாயகர்கள் படங்களில்தான் நடித்துள்ளேன். நண்பர், பெரிய டைரக்டர் என்பதால் நான் இதை பெரிதாக பார்க்கவில்லை.
வாலு போன்ற சில ஹிட் படங்கள் கையைவிட்டு போனதில் வருத்தம் உண்டா?
இல்லை. அந்த படம் சிம்பு நடித்ததால் இந்த அளவுக்கு போனது. நான் நடித்து இருந்தால் எப்படி வந்து இருக்கும் என்று தெரியும்.
எந்த டைரக்டர் படத்தில் நடிக்க ஆசை?
கவுதம் மேனன், முருகதாஸ். சசிகுமார் சாருடன் இன்னொரு படம் பண்ணவும் ஆசை.
படங்களின் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லையே, ஏன்?
எனது கூச்ச சுபாவம் தான் படங்களின் விளம்பர நிகழ்ச்சிக்கு வராமல் இருந்ததற்கான காரணம். சரியான வழிகாட்டியும் இல்லை. இப்போது தயாரிப்பாளர் சுப்பு பஞ்சுதான் எனது மாற்றத்துக்கு காரணம். இனி படங்களின் விளம்பர நிகழ்ச்சிகளுக்கு வருவேன்.
சன்னி லியோனுடன் 2-வது படம் நடிக்கும் அனுபவம்? தொடர்பில் இருக்கிறீர்களா?
இதுபற்றி அவரிடம் தான் கேட்க வேண்டும். அவங்க ரொம்ப பிரெண்ட்லி. டுவிட்டரில் மட்டும்தான் தொடர்பில் இருக்கிறேன்.
காதல் அனுபவம்?
நிஜ வாழ்க்கையில் இதுவரை சீரியசான காதல் வரவில்லை. காதல் அமைந்தால் காதல் திருமணம் செய்வேன். இல்லாவிட்டால் பெற்றோர் பார்த்து வைக்கும் திருமணமாக இருக்கும். இப்போது திருமணம் செய்ய திட்டம் இல்லை. சினிமாவில் இன்னும் சாதிக்கவேண்டி இருக்கிறது.
உங்களுக்கு பிடித்த கதாநாயகி?
அப்படி யாரும் ஸ்பெஷலாக இல்லை. நயன்தாராவுடன் நடித்த போது மிகவும் வசதியாக உணர்ந்தேன். அவர் மிகவும் மென்மையானவர்.
விஷாக் இயக்கத்தில் மம்முட்டி நடிக்கும் மதுர ராஜா படத்தின் மூலம் நடிகர் ஜெய் மலையாளத்தில் அறிமுகமாகிறார். இந்த படத்தில் ஒரு பாடலுக்கு சன்னி லியோன் நடனமாடுகிறார். #MaduraRaja #Mammootty #Jai
ஜருகண்டி படத்திற்குப் பின் வெங்கட் பிரபு இயக்கத்தில் பார்ட்டி, எல்.சுரேஷ் இயக்கும் நீயா 2 ஆகிய படங்களில் நடித்துள்ள ஜெய் அந்தப் படங்களின் வெளியீட்டை எதிர்பார்த்துள்ளார். அதற்கு முன்பாக அவர் நடித்துள்ள மலையாள திரைப்படம் வெளியாக உள்ளது.
மலையாளத்தில் மம்முட்டி கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் மதுர ராஜா. மோகன்லால் நடித்த புலி முருகன் படத்தை இயக்கிய விஷாக் இந்தப் படத்தை இயக்குகிறார். ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த இப்படத்தில் மம்முட்டியுடன் இணைந்து ஜெய் நடிக்கிறார். மம்முட்டியின் தம்பியாக ஜெய் நடிப்பதாக கூறப்படுகிறது.
2010-ம் ஆண்டு மம்முட்டி, பிரித்வி ராஜ் இணைந்து நடித்த போக்கிரி ராஜா திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக இப்படம் உருவாகிறது. முதல் பாகத்தில் நடித்த பிரித்வி ராஜுக்கு இதில் சிறப்பு தோற்றம் வழங்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் சன்னி லியோன் ஒரு பாடலுக்கு நடனமாடுகிறார். கோபி சுந்தர் இசையமைக்க, ஷாஜி குமார் ஒளிப்பதிவு செய்கிறார். #MaduraRaja #Mammootty #Jai
வெங்கட் பிரபு இயக்கத்தில் பிரமாண்ட கூட்டணியுடன் உருவாகி இருக்கும் `பார்ட்டி' படத்தின் தணிக்கைக் குழு சான்றிதழை படக்குழு வெளியிட்டுள்ளது. #PARTY #VenkatPrabhu
அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரித்துள்ள படம் `பார்ட்டி'.
வெங்கட் பிரபு இயக்கியிருக்கும் இந்த படத்தில் சத்யராஜ், ஜெயராம், ஜெய், சிவா, கயல் சந்திரன், ரம்யா கிருஷ்ணன், நிவேதா பெத்தராஜ், ரெஜினா கேசந்திரா, சஞ்சிதா ஷெட்டி என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. நடிகர் ஷியாம் ஸ்டைலிஷ் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
முதல்முறையாக வெங்கட் பிரபு படத்துக்கு நடிகர் பிரேம்ஜி இசையமைக்கிறார். கே.எல்.பிரவீன் படத்தொகுப்பு செய்ய, ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்திற்கு தணிக்கைக் குழுவில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.
Hey #partypeople out there!! #party has been certified with a U/A!! Da bars are will be opening real soon in a theatre near u @Amma_Creations@TSivaAmma@Premgiamaren@actorshiva@Cinemainmygenes@Actor_Jai@iSanchitaa@ReginaCassandra@moulistic@nivethaPethurai@vasukibhaskarpic.twitter.com/mabrtqp0V3
— venkat prabhu (@vp_offl) December 10, 2018
முன்னதான வெளியான `பார்ட்டி' படத்தின் டீசர் மற்றும் பாடல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. படம் விரைவில் ரிலீசாக இருப்பதாக கூறப்படுகிறது.
வெங்கட் பிரபு விரைவில் சிம்புவை வைத்து `மாநாடு' என்ற படத்தை இயக்கவிருக்கிறார். #PARTY #VenkatPrabhu
எல்.சுரேஷ் இயக்கத்தில் ஜெய் - வரலக்ஷ்மி சரத்குமார், ராய் லக்ஷ்மி மற்றும் கேத்தரின் தெரசா நடிப்பில் உருவாகி இருக்கும் நீயா 2 படத்தின் திரையரங்கு உரிமையை பிரபல நிறுவனம் ஒன்று கைப்பற்றியுள்ளது. #Neeya2 #Jai
கமல்ஹாசன் - ஸ்ரீப்ரியா நடிப்பில் 1979-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் `நீயா'. 39 வருடங்களுக்கு பிறகு `நீயா 2' என்ற பெயரில் புதிய படம் ஒன்று தயாராகி இருக்கிறது. கதைக்கு தேவைப்பட்டதால் `நீயா 2' என்று பெயர் வைத்துள்ளதாக படத்தின் இயக்குநர் எல்.சுரேஷ் தெரிவித்திருக்கிறார்.
இந்த படத்தில் 22 அடி நீளம் கொண்ட ராஜநாகம் முக்கிய அங்கம் வகிக்கிறது. அந்த ராஜநாகம் படம் முழுக்க இடம்பெறும்டியாக படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.
படத்தின் நாயகனாக வித்தியாசமான வேடத்தில் ஜெய் நடிக்கிறார். ஜெய் இரண்டு வித பரிமாணத்திலும், பாம்பு பெண்ணாக வரலட்சுமியும் நடித்துள்ளனர். மேலும் ராய்லட்சுமி, கேத்தரின் தெரேசா நாயகியாக நடித்திருக்கிறார்கள். பாலசரவணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் தமிழக திரையரங்கு உரிமையை ஸ்க்ரீன் சீன் மீடியா எண்டர்டைன்மெண்ட் கைப்பற்றியிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
படத்தை டிசம்பரில் வெளியிட முடிவு செய்துள்ளனர். #Neeya2 #Jai
வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி இருக்கும் பார்ட்டி படத்தில் நடித்துள்ள சஞ்சிதா ஷெட்டி, படப்பிடிப்பின் போது ரெஜினா உட்கார்ந்தபடியே தூங்குவார் என்று கூறியுள்ளார். #Party #SanchitaShetty #ReginaCassandra
பார்ட்டி படத்தில் ரெஜினா, சஞ்சிதா ஷெட்டி, நிவேதா பெத்துராஜ் என 3 கதாநாயகிகள் இணைந்து நடிக்கிறார்கள். ரெஜினாவுடன் நடித்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார் சஞ்சிதா ஷெட்டி. நாற்காலியில் உட்கார்ந்தபடியே தூங்கும் பழக்கம் ரெஜினாவுக்கு இருக்கு.
இரவு நேரங்களில் படப்பிடிப்பு நடக்கும்போது அவரால் தூக்கத்தை கட்டுப்படுத்த முடியாது. நானும் அப்படித் தூங்க முயற்சி பண்ணேன். முடியவில்லை. சூதுகவ்வும் வெளிவந்த சமயத்துல ஒரு சேனலுக்கு பேட்டி கொடுக்க சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர விடுதிக்குப் போய் இருந்தேன். அங்கே `பிரியாணி’ படப்பிடிப்பு நடந்துவந்தது.
அங்கேதான் வெங்கட் பிரபுவை முதன்முதலாக சந்தித்தேன். `சூதுகவ்வும்‘ படத்தைப் பாராட்டியவர், கொஞ்ச நாளைக்கு அப்புறம் `பார்ட்டி’ படத்துல நடிக்கிறீங்களானு கேட்டார். கதை பிடிச்சிருந்தது, ஓகே சொல்லிட்டேன்’ என்று கூறியுள்ளார். #Party #SanchitaShetty #ReginaCassandra
பிச்சுமணி இயக்கத்தில் ஜெய், ரெபா மோனிகா ஜான், டேனி, ரோபோ சங்கர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘ஜருகண்டி’ படத்தின் விமர்சனம். #Jarugandi #JarugandiReview
நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர் ஜெய். பணம் கட்டாதவர்களின் கார்களை எடுத்து செல்லும் வேலை செய்து வருகிறார். ஒருநாள் கவுன்சிலர் ஒருவரின் காரை தூக்குவதால் அவருடைய வேலை பறிபோகிறது. இதனால் ஏதாவது ஒரு தொழில் செய்து வாழ்க்கையில் செட்டிலாக வேண்டும் முயற்சி செய்து வருகிறார்.
டிராவல்ஸ் வைக்க வேண்டும் என்று முடிவு செய்து, பேங்க்கில் லோனுக்கு முயற்சி செய்கிறார். ஆனால், எங்கும் கிடைக்கவில்லை. இதை நண்பன் டேனியிடம் சொல்ல, அவரோ இளவரசு மூலம் போலி ஆவணங்கள் வைத்து லோன் வாங்குகிறார்.
அந்த பணத்தை வைத்து கார்கள் வாங்கி டிராவல்ஸ் நடத்தி வருகிறார் ஜெய். சில நாட்களில் இன்ஸ்பெக்டர் போஸ் வெங்கட்டுக்கு, போலி ஆவணங்கள் வைத்து ஜெய் லோன் வாங்கியது தெரியவருகிறது.
ஜெய் மற்றும் டேனியை அழைத்து ரூ.10 லட்சம் தரவேண்டும் இல்லையென்றால் ஜெயிலில் அடைத்து விடுவேன் என்று மிரட்டுகிறார். மேலும் இந்த பணத்தை இரண்டு நாளில் தரும்படியும் போஸ் வெங்கட் கேட்கிறார்.
என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கும் நேரத்தில், செல்வந்தரும், நாயகி ரெபா மோனிகாவை காதலிப்பவருமான ரோபோ சங்கரை சந்திக்கிறார்கள். பத்து லட்சம் பணம் தர சம்மதிக்கும் ரோபோ சங்கர், அதற்கு பதிலாக, நாயகி ரெபா மோனிகாவை கடத்தி வர சொல்லுகிறார்.
இறுதியில் ஜெய், நாயகியை ரெபா மோனிகாவை கடத்தினாரா? போஸ் வெங்கட்டுக்கு ரூ.10 லட்சம் கொடுத்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தின் நாயகனாக நடித்திருக்கும் ஜெய்யை வேறொரு பரிமாணத்தில் பார்க்க முடிகிறது. வழக்கமான வெகுளித்தனமான ஜெய்யாக இல்லாமல், காமெடி, ஆக்ஷன் என அனைத்திலும் திறம்பட செய்திருக்கிறார். ஜெய்யின் கதாபாத்திரம் அளவிற்கு டேனி மற்றும் ரோபோ சங்கரின் கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இருவரும் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். குறிப்பாக டேனிக்கு இது பெயர் சொல்லும் படமாக அமைந்திருக்கிறது. போலீசாக வரும் போஸ் வெங்கட், அவருக்கே உரிய பாணியில் நடித்திருக்கிறார்.
கதாநாயகியாக நடித்திருக்கு ரெபா மோனிகா ஜான், அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். திரையில் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறார்.
வித்தியாசமான திரைக்கதையுடன் படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் பிச்சுமணி. திரைக்கதையில் ஆங்காங்கே தோய்வு ஏற்பட்டிருந்தாலும் ஒரு சில இடங்களில் ரசிக்க வைத்திருக்கிறார். கதாபாத்திரங்களிடம் சிறப்பாக வேலை வாங்கி இருக்கிறார்.
போபோ ஷஷியின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணியில் அதிக ஸ்கோர் செய்திருக்கிறார். ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவு சிறப்பு.
மொத்தத்தில் ‘ஜருகண்டி’ ரசிக்கலாம்.
சிம்புதேவன் இயக்கவிருந்த இம்சை அரசன் இரண்டாம் பாகத்தில் ஒப்பந்தமாகி பின்னர் விலகுவதாக வடிவேலு அறிவித்துள்ள நிலையில், இயக்குநர் சிம்புதேவன் புதிய படமொன்றை தொடங்கினார். #Chimbudevan #VenkatPrabhu
சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு ஹீரோவாக நடித்த படம் ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’. 2006-ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை, இயக்குநர் சங்கர் தயாரித்தார். இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தொடங்கப்பட்டது.
ஆனால், படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களிலேயே சில பிரச்சினைகள் காரணமாக படம் நிறுத்தப்பட்டது. இந்தப் பிரச்சினை எப்போது முடியும் என்று தெரியாததால், இயக்குநர் சிம்புதேவன் வேறொரு படத்தை இயக்குகிறார்.
6 முக்கியக் கதாபாத்திரங்களை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்தில் ஜெய், சிவா, வைபவ், பிரேம்ஜி, விஜயலட்சுமி, அஜய் மாஸ்டர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பிளாக்டிக்கெட் கம்பெனி சார்பில் இயக்குநர் வெங்கட்பிரபு தயாரிக்கும் இந்தப் படத்திற்கு பிரேம்ஜி இசையமைக்க இருப்பதாக கூறப்படுகிறது.
Gudmorning my world😘!! Starting my new movie with Dir Chimbudevan sir n my darling producer @vp_offl. Need ur love and support ❤️. #shootmode@blacktktcompanypic.twitter.com/TpVQInvQe6
— Vijayalakshmi A (@vgyalakshmi) October 13, 2018
சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான ‘அந்த நாள்’ திரைப்படம் போல் கதையம்சம் கொண்ட திரைப்படமாக உருவாக இருக்கிறது. சமீபத்தில் துவங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. #Chimbudevan #VenkatPrabhu
அறம் படத்தை இயக்கிய கோபி நயினார் இயக்கத்தில் ஜெய் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Jai #AishwaryaRajesh
அறம் படத்தின் வெற்றியை தொடர்ந்து அறம் படத்தின் இரண்டாம் பாகத்தை கோபி நயினார் இயக்க இருப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், அதற்கு முன்பாக வடசென்னை பின்னணியில் புதிய படமொன்றை இயக்குகிறார் கோபி. இந்த படத்தில் நாயகனாக ஜெய் நடிக்கிறார்.
ஜெய் ஜோடியாக நடிக்க ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. குத்துச் சண்டையை மையப்படுத்தி இந்த படம் உருவாகுவதாக முன்னதாக கூறப்பட்ட நிலையில், வட சென்னையில் வாழும் ஒடுக்கப்பட்ட மக்களின் திறமை மற்றும் அந்த பகுதியில் வாழும் இளைஞர்களின் கால்பந்தாட்ட திறமையை மையப்படுத்தி இந்த படம் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.
காமெடி நடிகர் டேனியல் அனி போப் மற்றும் கல்லூரி வினோத் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தை முடித்த பிறகு அடுத்த ஆண்டு அறம் படத்தின் இரண்டாம் பாகத்தை கோபி நயினார் இயக்கவிருப்பதாக கூறப்படுகிறது. #Jai #AishwaryaRajesh #GopiNainar
பிச்சுமணி இயக்கத்தில் ஜெய் - ரெபா மோனிகா ஜான் நடிப்பில் உருவாகி இருக்கும் `ஜருகண்டி' படத்தின் முன்னோட்டம். #Jarugandi #Jai
ஷ்ரத்தா என்டர்டெயின்மெண்ட் சார்பில் பத்ரி கஸ்தூரி மற்றும் ஷிவேதா குரூப் சார்பில் நடிகர் நிதின் சத்யா இணைந்து தயாரித்துள்ள படம் `ஜருகண்டி'.
ஜெய் - ரெபா மோனிகா ஜான் நாயகன், நாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் டேனியல் அனி போப், அமித் குமார் திவாரி, இளவரசு, போஸ் வெங்கட் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இசை - போபோ சசி, ஒளிப்பதிவு - ஆர்.டி.ராஜசேகர், படத்தொகுப்பு - பிரவீன்.கே.எல்., கலை - ரேமியன் ரெமி, சண்டைபயிற்சி - டான் அசோக், நடன இயக்குநர் - அஜய் ராஜ், உடை வடிவமைப்பாளர் - ஷில்பா உம்மிட்டி, தயாரிப்பு - பத்ரி கஸ்தூரி, நிதின் சத்யா, இயக்கம் - பிச்சுமணி. இவர் இயக்குநர் வெங்கட் பிரபவிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார்.
படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் பிச்சுமணி பேசியதாவது,
வேறு கதைக்கு வைத்த தலைப்பை, இந்த படத்திற்கு வைக்க சொல்லி உற்சாகப்படுத்தினார் வெங்கட்பிரபு. அனைவருமே படத்தில் விரும்பி நடித்தார்கள். போபோசிஸ் இசையில், பிரவீண்.கே.எல் படத்தொகுப்பில் படம் சிறப்பாக வந்துள்ளது. படத்தின் திரைக்கதை வேகமாக நகரும் வகையில் இருக்கும். வேகம், ரன், ஸ்பீடு என பல பெயர்கள் வந்துவிட்டது. அடுத்ததாக ஜருகண்டி வரப்போகிறது.
நமக்கு தேவைனு வரும் போது நாம் ஒரு விஷயத்தை நியாயப்படுத்துவோம். அந்த வகையில் லோன் வாங்கி கஷ்டப்படும் ஒருவரை மையப்படுத்தி படத்தை படம் படத்தின் கதை நகரும் என்றார். #Jarugandi #Jai
அறம் படத்தை இயக்கிய கோபி நயினார் அடுத்ததாக இயக்கவிருக்கும் புதிய படத்தில் நடிகர் ஜெய் - டேனியல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #Jai #DanielAnniePope
கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான அறம் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்த நிலையில், அறம் படத்தின் அடுத்த பாகத்தை இயக்கப் போவதாகவும் கோபி நயினார் அறிவித்தார்.
அறம் 2 மூலம் கோபி நயினார் - நயன்தாரா மீண்டும் இணையவிருக்கின்றனர். அறம் 2 படப்பிடிப்பு அடுத்த ஆண்டு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இதற்கிடையே கோபி தனது அடுத்த படத்தை துவங்கியிருக்கிறார். இந்த படத்தில் நாயகனாக ஜெய் நடிக்கிறார். முன்னதாக இந்த கதையில் நடிக்க ஆர்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், சில தவிர்க்க முடியாத காரணங்களால் ஆர்யா இந்த படத்தில் ஒப்பந்தமாகவில்லை. வடசென்னையில் நடக்கும் குத்துச் சண்டையை மையப்படுத்தி படம் உருவாகுவதாக கூறப்படுகிறது.
— Daniel Annie Pope (@Danielanniepope) September 23, 2018
பிக்பாஸ் 2-வது சீசனில் பங்கேற்ற காமெடி நடிகர் டேனியல் அனி போப் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதனை டேனியல் அவரது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.
இதுகுறித்து டேனியல் கூறியிருப்பதாவது,
எனது அடுத்த படத்தில் மீண்டும் ஜெய்யுடன் இணைவதில் மகிழ்ச்சி. அறம் படத்தின் இயக்குநர் கோபி நயினார் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று துவங்கியது. என்று குறிப்பிட்டுள்ளார். #Jai #DanielAnniePope #GopiNainar
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X