search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜெய்"

    நிதின் சத்யா தயாரிப்பில் பிச்சுமணி இயக்கத்தில் ஜெய் - ரெபா மோனிகா ஜான் நடிப்பில் உருவாகி இருக்கும் `ஜருகண்டி' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. #Jarugandi #Jai
    வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய பிச்சுமணி இயக்கியிருக்கும் படம் ஜருகண்டி. ஜெய் - ரெபா மோனிகா ஜான் நடிப்பில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் ரோபோ சங்கர், டேனியல் அனி போப், அமித் குமார் திவாரி, இளவரசு, போஸ் வெங்கட் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

    நடிகர் நிதின் சத்யா இந்த படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகி இருக்கிறார். நமக்கு தேவைனு வரும் போது நாம் ஒரு விஷயத்தை நியாயப்படுத்துவோம். அந்த வகையில் லோன் வாங்கி கஷ்டப்படும் ஒருவரை மையப்படுத்தி படத்தின் கதை நகர்கிறது. 

    போபோசிஸ் இசையில் படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், படம் வருகிற 
    செப்டம்பர் 28-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. 

    அதேநோளில் தான் மணிரத்னமின் செக்கச்சிவந்த வானம் படமும், பா.ரஞ்சித் தயாரித்துள்ள பரியேறும் பெருமாள் படமும் ரிலீசாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. #Jarugandi #Jai

    வெங்கட் பிரபு இயக்கத்தில் பிரமாண்ட கூட்டணியுடன் உருவாகி இருக்கும் `பார்ட்டி' படத்தின் தொலைக்காட்சி உரிமையை பிரபல நிறுவனம் ஒன்று கைப்பற்றியுள்ளது. #PARTY #VenkatPrabhu
    அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரித்துள்ள படம் `பார்ட்டி'. 

    வெங்கட் பிரபு இயக்கியிருக்கும் இந்த படத்தில் சத்யராஜ், ஜெயராம், ஜெய், சிவா, கயல் சந்திரன், ரம்யா கிருஷ்ணன், நிவேதா பெத்தராஜ், ரெஜினா கேசந்திரா, சஞ்சிதா ஷெட்டி என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. நடிகர் ஷியாம் ஸ்டைலிஷ் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

    முதல்முறையாக வெங்கட் பிரபு படத்துக்கு நடிகர் பிரேம்ஜி இசையமைக்கிறார். கே.எல்.பிரவீன் படத்தொகுப்பு செய்ய, ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் தொலைக்காட்சி கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.



    முன்னதான வெளியான `பார்ட்டி' படத்தின் டீசர் மற்றும் பாடல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. படம் விரைவில் ரிலீசாக இருப்பதாக கூறப்படுகிறது. 

    வெங்கட் பிரபு விரைவில் சிம்புவை வைத்து மாநாடு என்ற படத்தை இயக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #PARTY #VenkatPrabhu

    தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் ஜெய், கார் ஓட்டுவதில் அஜித்தை வழியை பின்பற்றுவது போல், தற்போது மற்றொரு விஷயத்திற்கும் அவரை பின்பற்றி வருகிறார். #Ajith #Jai
    பைக்ரேஸ், கார்பந்தயம் ஆகியவற்றில் அதிக விருப்பம் உள்ளவர் அஜித். இதில் பல்வேறு சாதனைகள் படைத்து இருக்கிறார். சர்வதேச போட்டிகளிலும் கலந்து கொண்டிருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு துப்பாக்கி சுடுவதில் அஜித் மிகுந்த ஆர்வம் காட்டி வந்தார். மேலும் துப்பாக்கி சுடுவதற்கு முறையான பயிற்சி பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியானது.

    தற்போது நடிகர் ஜெய்யும் துப்பாக்கி சுடுவதற்கு பயிற்சி பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. தான் துப்பாக்கி சுடும் புகைப்படத்தை நடிகர் ஜெய் தனது சமூக வலைத்தில் பதிவு செய்திருக்கிறார்.



    ஏற்கனவே அஜித் போல் கார் பந்தயத்தில் ஆர்வம் கொண்ட நடிகர் ஜெய், அதற்கான போட்டிகளில் கலந்துக் கொண்டிருந்தார். தற்போது துப்பாக்கி சுடுவதையும் அஜித் வழியில் பின் பற்றி வருகிறார்.
    தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்கள் பட்டியலில் இருக்கும் பலர் திருமணம் செய்து கொள்ளாமலே வாழ்ந்து வருகிறார்கள். #Arya #STR
    தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்கள் பட்டியலில் பலர் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருகிறார்கள். 30 வயதானாலே கதாநாயகிகள் திருமணம் பற்றி யோசிக்கிறார்கள்.

    ஆனால் கதாநாயகர்கள் 35 வயதை தாண்டியும்கூட திருமணம் பற்றி யோசிக்காமல் இருக்கின்றனர். தமிழ் சினிமாவில் நடிகர் ஆர்யா பற்றி பல்வேறு கிசுகிசுக்கள் வந்துவிட்ட நிலையிலும் அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. சமீபத்தில் நடந்த நிகழ்ச்சில் பெண் தேடியும் செட்ஆகவில்லை.



    ஆனால் அதற்குள் அவர் தம்பி காதல் திருமணம் செய்துகொண்டார். அவரது நண்பர் விஷாலும் நடிகர் சங்க கட்டிடம் கட்டிவிட்டு திருமணம் என்று கூறி வருகிறார். அஞ்சலியுடன் கிசுகிசுக்கள் வந்தாலும், ஜெய் திருமணம் பற்றி வாயே திறப்பதில்லை. இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா இவர்களுக்கு எல்லாம் சீனியர். இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் தனியாக வாழ்ந்து வருகிறார். 

    இவர்கள் தவிர சிம்பு, அதர்வா, கவுதம் கார்த்திக் என இளம் கதாநாயகர்கள் இன்னமும் திருமணம் செய்யாமலேயே இருக்கின்றனர். #Arya #STR
    சுப்ரமணியபுரம் படம் வெளியாகி 10வது வருடத்தை கொண்டாடி வரும் நிலையில், இயக்குனர் சசிகுமாருக்கு நடிகர் ஜெய் நன்றி சொல்லியிருக்கிறார். #10yearsofsubramaniyapuram
    2008ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘சுப்ரமணியபுரம்’. இப்படத்தை சசிகுமார் இயக்கி நடித்திருந்தார். மேலும் ஜெய், சமுத்திரகனி, ஸ்வாதி, கஞ்சா கருப்பு, உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.

    தமிழ் திரைப்படங்களில் முக்கிய இடத்தைப் பெற்ற இப்படம் வசூல் ரீதியிலும், விமர்சன ரீதியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் வெளியாகி இன்று 10 ஆண்டுகள் நிறைவுபெற்றுள்ள நிலையில் இயக்குனர் சசிகுமாருக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் குவிந்தவண்ணம் உள்ளன. மேலும் ரசிகர்கள் இப்படத்தின் புகைப்படங்களை வெளியிட்டு சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு கொண்டாடி வருகிறார்கள்.

    இந்நிலையில், பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் தனது ட்விட்டர் பக்கத்தில், சசிகுமார் சுப்ரமணியபுரம் போன்ற படத்தைக் கொடுத்து இன்றுடன் 10 வருடங்களாகிவிட்டன. ஆனால் இப்போது நீங்கள் நடிகராகி விட்டீர்கள். சுப்ரமணியபுரம் போன்ற படங்களை தாருங்கள் என கோரிக்கை வைத்துள்ளார். மேலும் இப்படம் தான் கேங்ஸ் ஆஃப் வாஸேப்பூர் படம் எடுக்க தனக்கு ஊக்கமாக அமைந்ததாகவும் அனுராக் காஷ்யப் கூறியுள்ளார்.



    தற்போது இப்படத்தில் கதாநாயகனாக நடித்த ஜெய், ‘சுப்ரமணியபுரம் படத்தில் இருந்து அழகர் வந்து 10 வருடங்கள் ஆகிவிட்டது. என்னுடைய ரசிகர்கள் என்னை நடிகராக நிலைக்க வைத்திருக்கிறார்கள். நீங்கள் இல்லையென்றால் நான் ஒன்றும் இல்லை. இயக்குனர் சசிகுமாருக்கு சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை. நன்றி. எப்பவும் ரசிகர்கள் பாராட்டும் படத்தை கொடுத்திருக்கிறார். எல்லோருக்கும் நன்றி’ என்று பதிவு செய்திருக்கிறார்.
    பலூன் படத்தை தொடர்ந்து ஜெய் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஜருகண்டி’ படத்தின் படக்குழுவினர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள். #Jarugandi
    'பலூன்' படத்தை தொடர்ந்து ஜெய் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் 'ஜருகண்டி'. இப்படத்தை வெங்கட் பிரபுவின் முன்னாள் இணை இயக்குனர் பிச்சுமணி இயக்கியுள்ளார். நடிகர் நிதின் சத்யா மற்றும் பத்ரி கஸ்துரி ஆகியோர் தயாரித்து வருகிறார்கள்.

    இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது படக்குழுவினர் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள். அதாவது இப்படத்தின் டிரைலரை ஜூலை 6ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிட இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். 



    இப்படத்தில் ஜெய்க்கு ஜோடியாக ரேபா மோனிகா ஜான் நடிக்கின்றார். ரோபோ ஷங்கர், டேனி அருண், ஜெயக்குமார், போஸ் வெங்கட் மற்றும் இளவரசு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவில், போபோ சஷியின் இசையில் உருவாகியுள்ளது 'ஜருகண்டி'.
    நிதின் சத்யா தயாரிப்பில் பிச்சுமணி இயக்கத்தில் ஜெய் நடிப்பில் உருவாகி இருக்கும் ஜருகண்டி படத்தில் லோன் வாங்கி கஷ்டப்படும் கதாபாத்திரத்தில் ஜெய் நடித்துள்ளதாக தெரிகிறது. #Jarugandi #Jai
    வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய பிச்சுமணி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ஜருகண்டி. ஜெய் - ரெபா மோனிகா ஜான் நடிப்பில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் ரோபோ சங்கர், டேனியல் அனி போப், அமித் குமார் திவாரி, இளவரசு, போஸ் வெங்கட் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படத்தை நடிகர் நிதின் சத்யா தயாரித்துள்ளார். இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நிதின் சத்யா பேசுகையில், 

    பிச்சுமணியை சென்னை 28 படத்தில் இருந்தே தெரியும். மங்காத்தா, சரோஜா என பல படங்களில் அவரது வேலை பிடித்துப் போனது. படத்தை சரியாக 46 நாட்களில் முடித்துவிட்டோம். ஜெய் உட்பட அனைவருமே நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார்கள். அனைவருமே நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார்கள். படத்தை விரைவில் சென்சாருக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளோம். சிங்கம்-3 படத்திற்கு பிறகு இந்த படத்தில் நடித்திருக்கிறேன் என்றார்.



    படத்தின் இயக்குநர் பிச்சுமணி பேசியதாவது, 

    வேறு கதைக்கு வைத்த தலைப்பை, இந்த படத்திற்கு வைக்க சொல்லி உற்சாகப்படுத்தினார் வெங்கட்பிரபு. அனைவருமே படத்தில் விரும்பி நடித்தார்கள். போபோசிஸ் இசையில், பிரவீண்.கே.எல் படத்தொகுப்பில் படம் சிறப்பாக வந்துள்ளது. படத்தின் திரைக்கதை வேகமாக நகரும் வகையில் இருக்கும். வேகம், ரன், ஸ்பீடு என பல பெயர்கள் வந்துவிட்டது. அடுத்ததாக ஜருகண்டி வரப்போகிறது. 

    நமக்கு தேவைனு வரும் போது நாம் ஒரு விஷயத்தை நியாயப்படுத்துவோம். அந்த வகையில் லோன் வாங்கி கஷ்டப்படும் ஒருவரை மையப்படுத்தி படத்தை படம் படத்தின் கதை நகரும் என்றார். #Jarugandi #Jai

    ×