search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95492"

    தீய சக்தியை அழிப்பதற்கான, சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்ட பார்வதி தேவியின் மறு உருவம் ‘காளி’ என்று கூறப்படுகிறது.
    தீய சக்தியை அழிப்பதற்கான, சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்ட பார்வதி தேவியின் மறு உருவம் ‘காளி’ என்று கூறப்படுகிறது. காளிதேவி பார்ப்பதற்கு அச்சமூட்டும் வகையில் இருக்கும் பெண் தெய்வமாகும். ‘காளி’ என்பதற்கு கருப்பு என்று பெயர்.

    காலம் மற்றும் மரணம் என்பதை குறிக்கும் சொல்லாகவும் கருதலாம். அகண்ட சிவந்த கண்களும், நாக்கினை வெளியே நீட்டிக் கொண்டும், ஆயுதங்களை கையில் ஏந்திய படியும் காளிதேவி தோற்றமளிக்கிறாள். பெண் தெய்வமான துர்க்காதேவி, மகிஷாசூரன் என்ற அசுரனை எதிர்த்து போரிட்டாள்.

    மகிஷா சூரனின் படைகளில் இருந்த மற்றொரு அசுரன், ரத்தபாசன். இவனை காளி தேவி வதம் செய்தாள். அவனில் இருந்து வெளிப்பட்ட ரத்தமானது போர்க்களத்தையே மூழ்கடிப்பதாக இருந்தது. அந்த ரத்தத்தை காளிதேவி குடித்து, ரத்தபாசனின் உடலை தூக்கி எறிந்தாள்.
    சிவபெருமான் உலக உயிர்களிடம் அன்பு கொண்டு, அருள் செய்த கருணையை கதைகளாக விவரிக்கிறது ‘திருவிளையாடல் புராணம்’ என்ற நூல். இதனை இயற்றியவர் பரஞ்சோதி முனிவர் ஆவார்.
    மதுரை மாநகரில் சிவபெருமான் நிகழ்த்திய லீலைகள் ‘திருவிளையாடல் புராணம்’ என்று அழைக்கப்படுகிறது. அந்த திருவிளையாடல் புராணம் 64 நிகழ்வுகளின் தொகுப்பாகும். சிவபெருமான் உலக உயிர்களிடம் அன்பு கொண்டு, அருள் செய்த கருணையை கதைகளாக விவரிக்கிறது ‘திருவிளையாடல் புராணம்’ என்ற நூல். இதனை இயற்றியவர் பரஞ்சோதி முனிவர் ஆவார்.

    தமிழ் மொழியில் மூன்று புராணங்கள், சிவபெருமானின் மூன்று கண்களாக போற்றப்படுகின்றன. அவை, சேக்கிழார் இயற்றிய பெரியபுராணம், பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடல் புராணம், கச்சியப்ப சிவாச்சாரியார் இயற்றிய கந்தபுராணம். இதில் திருவிளையாடல் புராணம், சிவபெருமானின் இடதுகண் என்று போற்றப்படுகிறது.

    பரஞ்சோதி முனிவர் வேதாரண்யம் என்றழைக்கப்படும் திருமறைக்காட்டில் தோன்றியவர். இவர் தென்மொழி, வடமொழி, திருமுறைகள், சித்தாந்த சாஸ்திரங்களை கற்றுணர்ந்தவர். தம் தந்தையான மீனாட்சி சுந்தரதேசிகரிடம் சிவதீட்சை பெற்றவர். சிவபெருமானிடமும், சிவனடியார்களிடமும் மிகுந்த பக்தி கொண்டவர்.

    பரஞ்சோதி முனிவர், சிவபெருமானின் பல திருத்தலங்களுக்குச் சென்று தரிசனம் செய்து கொண்டிருந்தார். அதன் ஒரு பகுதியாக மதுரையில் மீனாட்சி சோமசுந்தரரை தரிசித்து மதுரையம்பதியில் தங்கியிருந்தார். அப்போது மீனாட்சியம்மை அவருடைய கனவில் தோன்றி, இறைவனின் திருவிளையாடல்களைப் பாட கட்டளையிட்டார். அன்னையின் ஆணைக்கிணங்க ‘சத்தியாய்..’ எனத் தொடங்கும் திருவிளையாடல் புராணத்தை பரஞ்சோதி முனிவர் இயற்றினார். இவர் ‘திருவிளையாடற் போற்றிக் கலிவெண்பா’, ‘மதுரை பதிற்றுப் பத்தந்தாதி’ என்ற நூல்களையும் இயற்றியுள்ளார்.

    திருவிளையாடல் புராணமானது, மதுரைக்காண்டம், கூடற்காண்டம், திருஆலவாய்காண்டம் என மூன்று காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மதுரைக்காண்டத்தில் 18 படலங்களும், கூடற்காண்டத்தில் 30 படலங்களும், திருஆலவாய்காண்டத்தில் 16 படலங்களும் உள்ளன. இந்த நூலில் மொத்தம் 3,363 பாடல்கள் உள்ளன.

    இந்திரன் பழி தீர்த்த படலம் முதல், வருணன் அனுப்பிய கடல்நீரை சிவன் வற்றச் செய்த படலம் வரை மதுரைக்காண்டத்தில் இடம் பெற்றுள்ளன. நான் மாடக்கூடலான படலம் முதல் நாரைக்கு முக்தி அளித்த படலம் வரை கூடற்காண்டத்தில் உள்ளன. திருஆலவாயான படலம் முதல் வன்னியும், கிணறும், லிங்கமும் அழைத்த படலம் வரை திருஆலவாய்க்காண்டத்தில் இடம் பெற்றுள்ளன.
    காயத்ரி தேவிக்கான மந்திரங்கள், மந்திரங்களிலேயே அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இந்த மந்திரங்கள் அனைத்து பலன்களையும் தருவதாக அமைந்துள்ளது.
    சூரிய தேவனை புகழ்ந்து பாடும் பெண் தெய்வமாய்; பிரம்ம தேவனின் மனைவி மற்றும் நான்கு வேதங்களின் தாயாக விளங்குகிறாள், இந்த காயத்ரி தேவி. அவள் தாமரை மீது அமர்ந்தவாறு ஐந்து தலைகள், பத்து கரங்கள் கொண்டவளாக சித்தரிக்கப்பட்டிருக்கிறாள்.

    அவளது கைகளில் நிறைய ஆயுதங்கள் உள்ளன. அவற்றுள் கோடாரி, சவுக்கை, தண்டாயுதம் போன்றவையும் இருக்கிறது. இந்த காயத்ரி தேவிக்கான மந்திரங்கள், மந்திரங்களிலேயே அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. காயத்ரி மந்திரங்களை விசுவாமித்திர முனிவர் உருவாக்கினார்.

    இந்த மந்திரங்கள் அனைத்து பலன்களையும் தருவதாக அமைந்துள்ளது.
    லட்சுமி நரசிம்மர் வடிவமைப்பும் நமது வாழ்க்கைக்கு தேவையான மிக முக்கியமான ஒரு விஷயத்தை உணர்த்தும் வகையில் உள்ளது. இது குறித்து அறிந்து கொள்ளலாம்.

    இறைவனின் ஒவ்வொரு அவதாரமும் நமது வாழ்க்கைக்கு தேவையான ஒரு விஷயத்தை உணர்த்துவதாகவும், கற்றுத்தருவதாகவும் அமைந்துள்ளன. அதுபோல இறை வடிவங்களிலும் நமது வாழ்க்கைக்கு தேவையான சூட்சமங்கள் நிறைந்துள்ளன.

    உதாரணத்துக்கு தமிழ் கடவுள் முருகப்பெருமானின் வடிவ அமைப்பை எடுத்துக்கொண்டால் வாழ்க்கை தத்துவங்கள் மறைந்து இருப்பதை உணரமுடியும். முருகப்பெருமானின் கையில் உள்ள வேல் மற்றும் பொருட்கள் ஒவ்வொரு தத்துவத்தை நமக்கு சுட்டிக்காட்டுகின்றன.

    அதுபோலத்தான் லட்சுமி நரசிம்மர் வடிவமைப்பும் நமது வாழ்க்கைக்கு தேவையான மிக முக்கியமான ஒரு விஷயத்தை உணர்த்தும் வகையில் உள்ளது. பொதுவாக கடவுள் உருவங்கள் தனித்தனியாக தான் இருக்கும். ஆனால் லட்சுமி நரசிம்மர் இருக்கும் ஆலயங்களில் லட்சுமியும் நரசிம்மரும் ஒரே அம்சமாக ஒருங்கிணைந்து காணப்படுவார்கள்.

    அதாவது நரசிம்மர் மடிமீது லட்சுமி அமர்ந்திருப்பார். லட்சுமியை அன்போடு அணைத்தபடி நரசிம்மர் இருப்பார். நரசிம்மர் அவதாரம் எடுத்து தனது நோக்கத்தை நிறைவேற்றிய பிறகு தொடர்ந்து ஆக்ரோஷமாக காணப்பட்டார். அவரது கோபத்தை தணித்தது லட்சுமிதான். கோபம் தணிந்த பிறகே சாந்தமான நரசிம்மர் லட்சுமியை தனது மடிமீது அமர்த்தி மகிழ்ந்தார். அந்த வகையில் லட்சுமி வந்த பிறகே நரசிம்மர் தம் வாழ்வில் பரிபூரணம் பெற்றார்.

    எனவே இறைவடிவங்களில் லட்சுமி நரசிம்மர் வடிவம் நிகரற்றது. மிகவும் தனித்துவம் கொண்டது. மனைவிக்கு மரியாதை கொடுக்க வேண்டும். மனைவியை கவுரவப் படுத்த வேண்டும் என்ற மிகப்பெரிய தத்துவத்தை லட்சுமி நரசிம்மர் வடிவம் நமக்கு காட்டுகிறது. ஆக்ரோஷமாக இருக்கும் நரசிம்மரையும் பாருங்கள், அவரை சாந்தப் படுத்திய பிறகு அவர் மடியில் அமர்ந்திருக்கும் லட்சுமி நரசிம்மரையும் பாருங்கள்... லட்சுமி நரசிம்மரின் முகத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடும்.

    கோபத்தில் இருப்பவரிடம் போய் ஏதாவது கேட்டால் கிடைக்காது. ஆனால் மகிழ்ச்சியோடு இருப்பவரிடம் போய் கேட்டால் நிச்சயம் பலன் உண்டு. இந்த தத்துவத்தையும் லட்சுமி நரசிம்மரின் வடிவம் நமக்கு காட்டுகின்றது. அதுமட்டுமின்றி ஆணுக்கு பெண் சமம் என்ற உயர்ந்த கோட்பாட்டையும் லட்சுமி நரசிம்மர் வடிவத்தில் காணமுடியும்.

    பொதுவாக வேலைக்கு சென்றுவிட்டு வீடுதிரும்பும் கணவனை மனைவி சாந்தப்படுத்தி உபசரிக்க வேண்டும். கணவன் எவ்வளவு டென்ஷனாக இருந்தாலும், மனைவி முகத்தைப் பார்த்ததும் சாந்தமாக மாற வேண்டும். அதுதான் உண்மையான தாம்பத்தியம். ஒவ்வொரு விஷயத்திலும் பெண்ணை முன்னிலைப்படுத்த வேண்டும். எந்த வீட்டில் பெண் சுதந்திரமாக முன்நிறுத்தப்படுகிறாளோ, அந்த வீட்டில் லட்சுமி குடியிருப்பாள் என்பார்கள். 

    வீட்டில் இருக்கும் பெண்கள் கண்ணீர் விடக்கூடாது என்பது ஐதீகம் ஆகும். அதற்கேற்ப ஆண்கள் நடந்துகொள்ள வேண்டும். ஒவ்வொரு கணவனும் தனது சம்பாத்தியம் முழுவதையும் மனைவி கையில் கொடுத்துவிட்டே வாங்க வேண்டும். ஐந்து ரூபாயாக இருந்தாலும் சரி, ஐந்து லட்சமாக இருந்தாலும் சரி மனைவி கையில் கொடுத்துவிட்டு பெற்றால் அந்த வீடு லட்சுமிகரமாக மாறும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர்.

    இதைத்தான் மறைமுகமாக லட்சுமி நரசிம்மர் கோலம் நமக்கு சொல்கிறது. இதை உணர்ந்துவிட்டால் போதும் கணவன் மனைவிக்கு இடையில் எந்த சிறு மனஸ்தாபமும் வராது. எனவே கணவனுக்கோ, மனைவிக்கோ சிறு வருத்தம் ஏற்பட்டாலும் லட்சுமி நரசிம்மர் இருக்கும் திசை நோக்கி, நரசிம்மா எனது குடும்பத்தை வாழையடி வாழையாக வாழவை என்று மனம் உருகி பிரார்த்தனை செய்தாலே போதும் லட்சுமி நரசிம்மர் ஓடோடி வந்து உதவி செய்வார். 
    அரியலூர் மாவட்டம் ஈச்சங்காடு லட்சுமி நரசிம்மரை வழிபாடு செய்தால் பதவி உயர்வு, குழந்தை பாக்கியம், வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுப்பார்.
    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள ஈச்சங்காடு கிராமத்தில் சுமார் 100 ஆண்டுகள் பழமையான லட்சுமி நரசிம்மர் கோவில் அமைந்துள்ளது. தனி கோவிலாக அமைந்துள்ள இங்கு லட்சுமி நரசிம்மர் மூலவராக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் 11 நாட்கள் திருவிழா நடத்தப்பட்டு, அதில் 9-ம் நாளன்று தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெறும். தினமும் இரண்டு கால பூஜை நடைபெறும். இக்கோவிலில் வாரந்தோறும் சனிக்கிழமை நரசிம்மருக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது.
     
    அன்று லட்சுமி நரசிம்மருக்கு துளசி மாலை, அலரிப்பூ, வெள்ளெருக்கு மாலைகள் சூட்டியும், சுண்டல், பொரி, பழம் வைத்து வழிபட்டால் அதனை முழுமையாக ஏற்றுக் கொண்டு பக்தர்கள் மனம் குளிர அருள்பாலிக்கிறார் லட்சுமி நரசிம்மர்.

    குறிப்பாக சேவிப்போர் வேண்டும் வரம் அருளுகிறார். இதில் முக்கியமாக பணிகளில் பதவி உயர்வு, குழந்தை பாக்கியம், வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.

    இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஈச்சங்காடு லட்சுமி நரசிம்மர் கோவிலில் வாரந்தோறும் சனிக்கிழமை மாலை திருவிளக்கு பூஜை நடத்தப்பட்டு வருகிறது. நினைத்ததை நிறைவேற்றித் தரும் ஈச்சங்காடு லட்சுமி நரசிம்மர் கோவிலுக்கு அரியலூர் மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதி களில் இருந்தும் பக்தர்கள் வந்து தரிசனம் செய்துவிட்டு செல்கிறார்கள்.
     
    இந்தியாவிலேயே சிங்கிரியில் மட்டும் தான் நரசிம்மர் ஸ்ரீதேவி மற்றும் பூதேவி மற்றும் மகாலட்சுமியுடன் நின்றபடியாக காட்சியளிக்கின்றார். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    தமிழக எல்லையான ஊத்துகோட்டையில் இருந்து 35 கிலோ மீட்டர் அடுத்த நாரயணவரம் ஸ்ரீதிருமலை கல்யாண வெங்கடேச பெருமாள் ஆலயம் அருகே சிங்கிரி என்ற இடத்தில் நான்கு திசைகளுக்கு மலைகளின் நடுவே அடர்ந்த மூலிகைகள் வாசம் நிறைந்த காட்டுபகுதியில் 16-ம் நூற்றாண்டில் கிருஷ்ண தேவராய பல்லவ பேரசால் கட்டபட்ட இந்த கோயில் நரசிம்மர் சுயம்பாக அதாவது இந்தியாவிலேயே இங்கு மட்டும் தான் நரசிம்மர் ஸ்ரீதேவி மற்றும் பூதேவி மற்றும் மகாலட்சுமியுடன் நின்றபடியாக காட்சியளிக்கின்றார்.

    பாலக பக்தன் பிரகலா தன் தன்மேல் கொண்ட தூய அன்பிற்காகவும், தீயவன் இரண்ய கசிபுவை அழிப்பதற்காகவும் மகாவிஷ்ணு எடுத்த திருவடிவம்தான் நரசிம்ம அவதாரம் அந்நேரத்தில் அசுரனை அழித்துவிட்டு இந்த சிங்கிரி மலை காட்டுபகுதிக்கு உக்கிர நரசிம்மராக வந்தபோது சிவபெருமான் நாரத ரிஷியிடம் ஸ்ரீவிஷ்ணு உக்கர அவதாரமான நரசிம்மரை சாந்தபடுத்த என்ன செய்வதேன்று யேசித்த போது ஸ்ரீமகாலஷ்மியால் மட்டுமே சாந்தபடுத்த முடியும் என்று கூறிய நாரத ரிஷி உடனே மகாலட்சிமியிடம் முறையிடவே உடனே அதனை ஏற்று லஷ்மி தேவி சிங்கிரி மலை காட்டு பகுதிக்கு சென்று வனதேவதையாக உருமாறி நரசிம்மரை சாந்தபடுத்தியதால் இத்தலத்தில் நரசிம்மர் மற்றும் மகாலட்சுமி இருவருமே பக்தர்களுக்கு வரம்கொடுக்கவே நின்றபடியே காட்சியளிகிறார்கள்.

    வைகாசி மாதம், வளர்பிறை சதுர்த்தசியில், சுவாதி நட்சத்திரத்தில் பிரதோஷ வேளையில் தான் நரசிம்ம அவதாரம் நிகழ்ந்ததாகச் சொல்லபடுகிறது. அவ்வேளையில் இங்கு வரும் பக்தர்களுக்கு உள்ள அனைத்து குறைகளும் நீங்கும். நரசிம்ம அவதாரம் அந்த வேளையில் நிகழ்ந்ததால் நரசிம்மருக்கும் சிறப்பான நேரமாக பிரதோஷம் கருதப்படுகிறது. எப்படி ஈசனுக்கு சனிப் பிரதோஷம் மிகவும் மகிமை வாய்ந்ததோ அதே போல நரசிம்மருக்கு செவ்வாய்க்கிழமைகளிலும், சுவாதி நட்சத்திரத்திலும் வரும் பிரதோஷங்கள் மிகவும் விசேஷமானவை.

    இந்த சிங்கிரி லஷ்மி நரசிம்மரை அந்த நேரத்தில் வணங்க நரசிம்மரை வணங்கி விருதமிருந்தால் நினைத்த காரியம் கைகூடும், திருமண தடை நீங்கும், குழந்தையில்லாத தம்பதியினருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும், எதிரிபயம் தீரும், தீவினைகள் விலகும்,தீராத நோயும் தீரும், கடன்கள் தீரும்,மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை இந்த ஸ்தலத்திற்கு அழைத்து வந்தால் பூரண குணம் கிடைக்கும், மற்றும் குடும்பத்தில் அமைதி நிலவும் என்பது ஐதிகம்.

    இந்த திருத்தலத்தில் நரசிம்மரின் அவதாரத் திருநாளான நரசிம்ம ஜெயந்தி அன்று விரதம் இருந்து வழிபட்டால் பகைவர்களால் தீராத தொல்லை. அபிசார தோஷம் எனப்படும் பில்லி சூனிய பிரச்னை, கடன் தொல்லை, வீட்டில் எப்போதும் சண்ட சச்சரவு, எத்தனை சம்பாதித்தாலும் பணம் சேரவே இல்லை என்ற ஏக்கம் போன்ற பிரச்னைகள் கதிரவனைக் கண்ட பனி போல விலகிவிடும்.
    உங்கள் பெயரின் முதல் எழுத்தை போலவே உங்கள் பெயரின் மூன்றாவது எழுத்தும் உங்கள் குணத்தையும், ஆளுமையையும் கூறக்கூடும். இந்த பதிவில் உங்கள் பெயரின் மூன்றாவது எழுத்து உங்களை பற்றிக்கூறும் ரகசியம் என்னவென்று பார்க்கலாம்.
    நமது அடையாளமாக இருந்து நமக்கு சமூகத்தில் ஒரு அங்கீகாரத்தையும் பெற்றுத்தருவது நமது பெயர்தான். இப்பொழுது நமது பெயரை மாற்றிக்கொள்ளும் வாய்ப்புகள் இருக்கலாம். ஆனால் நமக்கு கிடைத்த முதல் இயற்பெயர் என்பது தானாக அமைந்துவிடுவதில்லை. அதற்கு பின்னால் நிச்சயம் ஒரு காரணம் இருக்கிறது. ஏனெனில் நமது பெயர் நமது குணத்தையும், எதிர்காலத்தையும் பிரதிபலிப்பதாகும்.

    பொதுவாக பெயரின் முதல் எழுத்தை வைத்து உங்கள் பலத்தையும், பலவீனத்தையும் கண்டறியலாம் என்பார்கள். அது உண்மைதான், ஆனால் முதல் எழுத்தை போலவே உங்கள் பெயரின் மூன்றாவது எழுத்தும் உங்கள் குணத்தையும், ஆளுமையையும் கூறக்கூடும். ஒருவேளை முதல் எழுத்தும், மூன்றாவது எழுத்தும் ஒரே எழுத்தாக இருந்தால் கூட அவை இருக்கும் இடத்தை பொறுத்து அதன் அர்த்தம் மாறுபடும். இந்த பதிவில் உங்கள் பெயரின் மூன்றாவது எழுத்து உங்களை பற்றிக்கூறும் ரகசியம் என்னவென்று பார்க்கலாம்.

    மூன்றாம் எழுத்து A

    உங்கள் பெயரின் மூன்றாவது எழுத்து A வாக இருந்தால் இயற்கையிலேயே நீங்கள் காதல் உணர்வு மிகுதியவர்களாக இருப்பீர்கள். அதுமட்டுமின்றி A என்பது ஆற்றலின் அடையாளமாகும், இவர்கள் துணிச்சலானவர்களாகவும், திறமையானவர்களாகவும் இருப்பார்கள். உங்களின் பலம் மற்றும் பலவீனம் இரண்டுமே உங்களுடைய தன்னம்பிக்கைதான். உங்களுடைய திறமையையும், சாகசத்தையும் எப்போதும் பிறருக்கு காண்பிக்க விரும்புவீர்கள்.

    மூன்றாம் எழுத்து B

    உங்கள் பெயரின் மூன்றாம் எழுத்து B ஆக இருந்தால் உங்களுடைய அடிப்படை குணம் பாசம் ஆகும். நீங்கள் எப்பொழுதும் உங்கள் அனைத்து உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்துவதில் வல்லவர்களாக இருப்பீர்கள். மற்றவர்களை எப்படி அக்கறையாகவும், பாதுகாப்பாகவும் பார்த்துக்கொள்ள வேண்டுமென்று நீங்கள் நன்கு அறிவீர்கள். ஆனால் சிலசமயம் உங்களுக்குள் எழும் பேராசை உங்களை பலவீனமாக்கும்.

    மூன்றாம் எழுத்து C

    C என்ற எழுத்து மூன்றாவது எழுத்தாக உள்ளவர்கள் இனிமையான குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். தங்களின் அப்பாவியான குணத்தாலும், இனிமையாக பழகுவதன் மூலமும் அனைவருடனும் எளிதில் நன்கு பழகக்கூடியவர்கள். அதேசமயம் நீங்கள் காயப்பட்டுவிட்டால் நிச்சயம் அதற்கு பழிவாங்காமல் இருக்கமாட்டார்கள். அனைத்திற்கும் மேலாக உங்களிடம் இருக்கும் ஒரு சிறந்த குணம் நேர்மை ஆகும்.

    மூன்றாம் எழுத்து D

    D எழுத்தானது சமநிலை, கடின உழைப்பு மற்றும் பாதுகாப்பை குறிக்கும். இவர்கள் எப்பொழுதும் இருக்கும் இடத்தை சுத்தமாகவும், பொருட்களை அதற்குண்டான இடத்தில் வைப்பதிலும் அக்கறை செலுத்துவார்கள். இவர்கள் இயற்கையிலேயே தலைமைப்பண்பு மிக்கவர்களாக இருப்பார்கள். இவர்கள் அனைவராலும் விரும்பப்படுபவர்களாக இருப்பார்கள். உங்களின் எதிர்மறை குணம் என்பது பிடிவாதம் ஆகும்.



    மூன்றாம் எழுத்து E

    பெயரில் மூன்றாம் எழுத்தை E ஆக வைத்திருப்பவர்கள் இயற்கையிலேயே கருணையும், மென்மையான குணமும் கொண்டவர்கள். எந்தவித சிக்கலையும் எளிதாக தீர்க்கக்கூடியவர்கள், விரைவான சிந்தனையாளர்கள், வாழ்க்கை மீதான ஆழமான எண்ணம் கொண்டவர்கள். உங்களுடைய வசீகரிக்கும் குணம் நீங்கள் எங்கு சென்றாலும் உங்களுக்கு நண்பர்களை பெற்றுத்தரும். ஆனால் காதல் உறவுகளில் உங்கள் மீது நம்பிக்கை வருவது கடினம்.

    மூன்றாம் எழுத்து F

    இவர்கள் குடும்பத்தின் மீது அதிக அன்பு கொண்டவர்களாகவும், பொறுப்பானவர்களாகவும் இருப்பார்கள். காதல் உறவுகளில் இறுதிவரை நேர்மையாக இருப்பார்கள். ஆனால் பழிவாங்கும் எண்ணமும், வேஷமிடும் குணமும் இவர்களுக்கு அதிகம்.

    மூன்றாம் எழுத்து G

    இவர்கள் தனக்கென ஒரு தனிவழியில் வாழ்பவர்கள், அதீத கற்பனைதிறன் மிக்கவர்கள். நீங்கள் அரிவுரையை வெறுப்பவர்கள், உங்கள் எண்ணம்போல வாழ்க்கையை வாழ நினைப்பீர்கள். திறமையாலும், புத்திசாலித்தனத்தாலும் ஆசீர்வதிக்கப்பட்ட உங்களின் பலவீனம் சந்தேகம் ஆகும்.

    மூன்றாம் எழுத்து H

    இவர்கள் வாழ்க்கையை எப்பொழுதும் எதார்த்தமாக பார்ப்பார்கள், அதேசமயம் பணவிஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருப்பார்கள். அடிப்படையிலேயே இருக்கும் வியாபார குணத்தால் இவர்கள் எளிதில் தலைவர்களாக வரமுடியும். தன் இலட்சியத்தை அடைய எந்த எல்லைக்கும் செல்வார்கள். இவர்கள் உறவுகளில் அதிக பொறாமை படுவார்கள்.

    மூன்றாம் எழுத்து I

    இவர்கள் இயற்கையிலேயே உதவும் குணம் கொண்ட தூய ஆத்மாக்கள். மற்றவர்களை சார்ந்து இருந்தாலும் ஆழமாக யோசிக்க கூடியவர்கள், இல்லாதவர்களுக்கு யோசிக்காமல் உதவக்கூடியவர்கள்.இவர்களின் பலவீனமும் இதுதான் பலசமயங்களில் எளிதில் ஏமாறக்கூடியவர்கள்.

    மூன்றாம் எழுத்து J


    சுறுசுறுப்பும், ஆர்வமும் இவர்களின் கூட பிறந்த குணங்களாகும். வாழ்க்கையில் தனக்கு என்ன வேண்டும், என்ன வேண்டாம் என்று சிந்தித்து ஒவ்வொரு நொடியையும் ரசித்து வாழக்கூடியவர்கள். இவர்களை புரிந்து கொள்ளும் வாழ்க்கை துணை அமைந்தால் இவர்களின் வாழ்க்கை மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கும்.



    மூன்றாம் எழுத்து K

    மிகவும் இரகசியமான குணம் கொண்ட இவர்கள் மற்றவர்களின் கவனம் எப்பொழுதும் தன் மீதே இருக்கவேண்டுமென்று நினைப்பார்கள். இதனால் சிலசமயம் மற்றவர்களுக்கு எரிச்சல் ஏற்படலாம். வாழ்க்கையில் இவர்கள் எப்பொழுதும் சமநிலைக்கும், மகிழ்ச்சிக்கும் முக்கியத்துவம் கொடுப்பார்கள். உறவுகளில் விளையாட்டுத்தனமாக இருப்பது இவர்களுக்கு பிடிக்காது.

    மூன்றாம் எழுத்து L

    இவர்களுக்கு வாழ்க்கை மீது எப்பொழுதும் ஒரு வித்தியாசமான அதேசமயம் தனித்துவமான கண்ணோட்டம் இருக்கும். இவர்களின் துணைதான் இவர்களுக்கு வாழ்க்கையிலே மிகவும் முக்கியமானவர்கள். இவர்கள் கூடவே பிறந்த சுட்டித்தனம் இவர்களை அனைவரும் விரும்புபவர்களாக வைத்திருக்கும்.

    மூன்றாம் எழுத்து M

    இவர்கள் எப்பொழுதும் நேர்மையாகவும், கடின உழைப்பாளிகளாகவும் இருப்பார்கள். இவர்கள் எப்பொழுதும் வேலைக்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருப்பார்கள். மற்றவர்களை கவர்வதற்கு என எதையும் செய்யமாட்டார்கள், தன் வாழ்க்கையை தன்னுடைய விதிகளின் படி வாழ்வார்கள். இவர்களின் பிடிவாதமும், முன்கோபமும்தான் இவர்களின் பலவீனம்.

    மூன்றாம் எழுத்து N

    N எழுத்து மூன்றாவதாக உள்ளவர்கள் எப்பொழுதும் தான் செய்யும் காரியங்கள் முழுமையானதாக இருக்கவேண்டுமென்று ஆசைப்படுவார்கள். இவர்கள் இயற்கையிலேயே அதிகமாக பேசும் சுபாவம் கொண்டவர்கள். மற்றவர்களின் வாழ்க்கை முறையை பின்பற்றாமல் தனக்கென ஒரு வழியை உருவாக்குபவர்கள்.

    மூன்றாம் எழுத்து O

    இரக்கமும், பிரியமும் கொண்டவர்கள் இவர்கள். இவர்களை கண்ணைமூடிக்கொண்டு நம்பலாம். தனக்கான பாதையை தானே கண்டறிந்து அதனை வடிவமைத்து அதில் செல்லக்கூடியவர்கள். மற்றவர்களின் முயற்சிக்கு எப்போதும் உறுதுணையாக இருப்பார்கள்.

    மூன்றாம் எழுத்து P

    இவர்கள் வாழ்க்கையின் மீது அதீத ஆர்வம் கொண்டவர்கள் அனைத்திலும் தான்தான் முன்னிலையில் இருக்கவேண்டுமென்று நினைப்பவர்கள். தன்னை சுற்றி இருப்பவர்களை எப்பொழுதும் மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டுமென நினைப்பவர்கள். அதற்காக எந்தவித வேடிக்கையான செயலையும் செய்ய தயங்கமாட்டார்கள்.



    மூன்றாம் எழுத்து Q

    இவர்களை சுற்றி எப்பொழுதும் ஒரு மர்மம் இருக்கும். இவர்கள் மற்றவர்கள் பின்பற்றும் எந்தவொரு நடைமுறையையும் பின்பற்றமாட்டார்கள். நேர்மையான இவர்கள் எப்போதும் சிறந்த நண்பர்களாகவும், அறிவுரையாளர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் எப்பொழுதும் தங்கள் சுயத்தை இழக்க விரும்பமாட்டார்கள். இதுவே சிலசமயம் பலவீனமாகவும் அமையும்.

    மூன்றாம் எழுத்து R

    இவர்கள் அதிகளவு ஞானத்தையும், உள்ளுணர்வையும் கொண்டவர்கள். மற்றவர்களின் மனக்காயங்களை குணப்படுத்துவதற்கெனவே பிறந்தவர்கள். அமைதியை விரும்பும் உங்கள் குணமும், வாழ்க்கையை எதார்த்தமாக பார்க்கும் குணமும் அனைவரையும் விரும்பவைக்கும். இவர்கள் எளிதில் கோபப்படக்கூடியவர்கள்.

    மூன்றாம் எழுத்து S

    இவர்களை போல சிறந்த நேர்மையானவர்கள் யாரும் இருக்க வாய்ப்பில்லை, ஆனால் அவர்களுக்கு காதல் உணர்வு கொஞ்சம் குறைவுதான். இயற்கையாகவே தலைமை குணம் கொண்ட இவர்களின் வசீகரம் எப்பொழுதும் இவர்களை சுற்றி ஆட்களை இருக்க வைக்கும். தங்களுக்கான இலட்சியங்களை எப்பொழுதும் உயர்ந்ததாகவே வைப்பார்கள். உண்மையான இரக்கமும், அரவணைக்கும் குணமும் இவர்கள் கூடவே பிறந்தது.

    மூன்றாம் எழுத்து T

    இராஜதந்திர குணம் அதிகமிக்கவர்கள் இவர்கள், எந்த சூழ்நிலையையும் சமாளிக்க கூடியவர்கள். அதிர்ஷ்டத்தை விட உழைப்பை அதிகம் நம்புபவர்கள். உங்களின் வெகுளித்தனமும், உதவும் குணமும் அனைவரும் உங்களை விரும்ப வைக்கும். அவர்கள் விரும்பும்படி செயல்கள் நடைபெறாவிட்டால் இவர்கள் எளிதில் மனதளவில் பாதிக்கப்படுவார்கள்.

    மூன்றாம் எழுத்து U

    இவர்கள் எப்பொழுதும் வசதியான ஆடம்பரமான வாழ்க்கையை விரும்புவார்கள். வலிமையான உள்ளுணர்வு மற்றும் மனநிலையை கொண்ட இவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது நன்றாகவே தெரியும். எப்பொழுதும் புதிய யோசனைகளை செய்ய தயங்கமாட்டார்கள். இவர்களின் ஈகோ காரணமானாக அடிக்கடி தங்கள் உடனிருப்பவர்களை காயப்படுத்துவார்கள்.

    மூன்றாம் எழுத்து V


    இவர்களை போன்றவர்களை பார்ப்பது மிகவும் அரிது. அந்த அளவிற்கு இவர்கள் உண்மையாக இருப்பார்கள். இவர்களின் சிறப்பே இவர்களின் அதீதமான நினைவாற்றல்தான். உறவில் இவர்கள் எப்பொழுதும் பொறாமைபடுபவர்களாக இருப்பார்கள். இவர்களின் அதீதமான அர்பணிப்பே இவர்களுக்கு சிலசமயம் பலவீனமாக அமையும்.



    மூன்றாம் எழுத்து W

    இவர்கள் இயற்கை மீது அதிக காதல் கொண்டவர்கள். உறவுகளில் அடிக்கடி நீங்கள் சிக்கல்களை சந்திப்பீர்கள், அதனை சரிசெய்ய உங்களுக்கு நீண்ட காலம் தேவைப்படும். உங்களின் செயல்கள் சிலசமயம் மற்றவர்களை அதிக வெறுப்படையச்செய்யும்.

    மூன்றாம் எழுத்து X

    இவர்கள் எந்தவொரு உறவுகளிலும் முழுமையான அர்ப்பணிப்புடன் இருக்க விரும்பமாட்டார்கள். ஆனால் அனைவரையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க விரும்புவார்கள். இவர்களின் பேராசைதான் இவர்களின் மிகப்பெயய பலவீனம்.

    மூன்றாம் எழுத்து Y

    இவர்கள் தங்களின் சுதந்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள் அதற்காக என்ன வேண்டுமென்றாலும் செய்வார்கள். இவர்கள் சமூகத்தில் தங்கள் நிலை குறித்து அதிக கவலைப்படுவார்கள். இவர்கள் தங்கள் இடத்தில் மட்டும்தான் மகிழ்ச்சியாக இருப்பார்கள், மற்றவர்களின் இடம் இவர்களுக்கு ஏற்றதல்ல.

    மூன்றாம் எழுத்து Z


    இவர்கல் மிகவும் தன்னம்பிக்கை மிகுந்தவர்கள் தன்னால் எதையும் செய்ய முடியும் என்று நினைப்பவர்கள். இலட்சியத்தை பற்றியே எப்போதும் நினைத்துக்கொண்டிருப்பார்கள், சிறந்த முதலாளிகளாக இருக்க இவர்களுக்கு நிறைய வாய்ப்புள்ளது. மற்றவர்களிடம் இருந்து எப்படி வேலை வாங்கவேண்டும் என்று நன்கு தெரிந்தவர்கள்.
    ஒவ்வொரு சிவாலயத்திற்கும் ஒவ்வொரு விருட்சம் ஸ்தல விருட்சமாக அமையும். கோவிலுக்குச் செல்லும் பொழுது அந்த விருட்சங்களை வழிபட்டு வந்தால் நமக்கு வாழ்வில் விருத்தி அம்சம் கூடுதலாகக் கிடைக்கும்.
    இயல்பாக இறைவனால் படைக்கப்பட்டது இயற்கை. மனிதனால் உருவாக்கப்பட்டது செயற்கை. என்ன இருந்தாலும் இயற்கை சக்தியை நம்மால் வெல்ல முடியாது. அதனால் தான் இயற்கைக்கு ஐம்பூதம் என்று பிரமாண்டமான உருவம் கொடுத்து அழுதும், தொழுதும் நம்முன்னோர்கள் வழிபட்டனர்.

    அதில் மண்ணில் முளைக்கும் தாவரங்கள் எண்ணில்லாத நற்பலன்களைத் தருவதாக அமைகின்றது. ஆரோக்கியம் சீராக வேண்டுமானால் மூலிகைகள், பழங்களை உண்ண வேண்டும். அதிர்ஷ்டம் நம்மை நாடிவரவேண்டுமானால் மாபெரும் மரங்களை நாம் ஆராதிக்க வேண்டும். மழை வரவேண்டுமானால், மரம் வளர்க்க வேண்டும். மழலை பிறக்க வேண்டுமானால் மரத்தைச் சுற்றி வந்து நாம் வழிபட வேண்டும்.

    இறைவன் எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கின்றான். அதனால் தான் “தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான்” என்று இறைவனைக் குறிப்பிடுகிறார்கள். நீராய், நிலமாய், தீயாய், காற்றாய், நெடுவானாய் நிற்பவன் இறைவன்.

    கண்களுக்குத் தெரியாமல் இருக்கும் கடவுளை வழிபடுவதற்கு எண்ணற்ற முறைகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று தாவரங்கள். தாவர வழிபாட்டின் மூலம் இறையருளைப் பெறமுடியும். தாவரங்களை, ‘விருட்சம்’ என்று நாம் அழைக்கின்றோம்.

    பழமை வாய்ந்த ஒவ்வொரு சிவாலயங்களிலும் பாருங்கள். ஒவ்வொரு சிவாலயத்திற்கும் ஒவ்வொரு விருட்சம் ஸ்தல விருட்சமாக அமையும். கோவிலுக்குச் செல்லும் பொழுது அந்த விருட்சங்களை வழிபட்டு வந்தால் நமக்கு வாழ்வில் விருத்தி அம்சம் கூடுதலாகக் கிடைக்கும்.

    சரணாகதி தத்துவத்தை உணர்ந்த பொழுதுதான் வழிபாடுகள் உருவாகத் தொடங்கின. நெருப்பை, ‘செந்தீ’ என உருவ வழிபாடாகவும், வாயு பகவானின் மகனை அனுமனாகவும் உருவங்களைக் கொடுத்து வழிபடத் தொடங்கினான்.

    இந்த வழிபாட்டினால் உள்ளம் சீராகியது. உடல் சீராவதற்கு மூலிகைகளைப் பறித்துச் சாப்பிட்டான். பின் ஆரோக்கியம் சீரானது. பிறகு இறைவழிபாட்டில் ஆர்வம் மிகுந்து தாவரங்களையும் போற்றி வழிபடத் தொடங்கினர். இப்படி உருவாகியது தான் தாவர வழிபாடு.

    வில்வம், துளசி, வேம்பு, அரசு, அருகு போன்றவை தெய்வீக மூலிகைகள். ‘வில்வம்’ என்பது சிவனுக்கு உகந்ததாகும். வில்வ தீர்த்தத்தை நமக்கு சிவாலயங்களில் தருவார்கள். வில்வ இலையை சிவனுக்கு அர்ச்சனை செய்தால் எண்ணற்ற பலன் கிடைக்கும். சிவராத்திரியன்று ஒரு வேடன் சிவனுக்கு வில்வ இலைகளை அர்ச்சித்து முக்தியடைந்த கதையைப் புராணங்கள் கூறுகின்றன.

    ‘துளசி இலை’ என்பது திருமாலிற்கு உகந்ததாகும். இது உஷ்ண குணம் வாய்ந்ததாகும். இருமல், சளி போன்றவற்றைப் போக்கும் தன்மையும், விஷ முறிவுத் தன்மையும் இந்த மூலிகைக்கு உண்டு.

    ‘வேப்பிலை’ என்பது அம்பிகைக்கு உகந்ததாகும். கிருமி நாசினி என்பதால் வீட்டில் வேம்பு வளர்த்து அதன் காற்றைச் சுவாசித்தால் எந்த நோயும் நன்மை அணுகாது.

    அரச மரங்களின் அடியில் வீற்றிருக்கும் நாகர், விநாயகர் போன்றவற்றை குழந்தை இல்லாத தம்பதியர் அதிகாலையில் சுற்றி வந்து வழிபட்டால் நல்ல பலன் கிடைக்கும். ஏனென்றால், அரச மரத்தின் காற்று, குழந்தைப் பேற்றைக் கொடுக்கும் தன்மை வாய்ந்தது. அரச மரத்தில் அத்தனை தேவதைகளும் குடியிருப்பதாகப் புராணங்கள் சொல்கின்றன.

    அருகம்புல் என்பது விநாயகருக்கு மிகவும் உகந்தது. மிகுந்த குளிர்ச்சி மிக்கது. ரத்தத்தைச் சுத்தமாக்கும், விஷத்தைப் போக்கும் தன்மை கொண்டது. ஒவ்வொரு நாளும் விநாயகருக்கு 16 அருகம்புல் வைத்து வழிபட்டால் மூன்று வருடங்களுக்குள் முன்னேற்றம் பலமடங்காக உயரும். அணிவிக்கும் பொழுது அதற்கான சுலோகத்தைச் சொல்ல வேண்டும்.

    வீட்டின் முன்புறம் துளசி மாடம் வைத்து வழிபட வேண்டும். சுமங்கலிப் பெண்கள் துளசிக்கு மஞ்சள், குங்குமம் வைத்து கோலமிட்டு தினமும் துளசி பாடல்கள் மற்றும் லட்சுமி பாடல்களைப் பாடி வழிபட்டால் தனவரவு தாராளமாக வந்து சேரும். தாலி பாக்கியமும் கிடைக்கும்.

    இப்படி அற்புதமான தெய்வீக மூலிகைகளை அவசியம் ஒவ்வொருவரும் வழிபட வேண்டும். ஒவ்வொரு கோவிலுக்கும் செல்லும் பொழுது விருட்சங்களை மறக்காமல் வழிபட்டு வாருங்கள்.

    விருச்சிக ராசிக்காரர்கள் கண்டிப்பாக விருட்ச வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். மற்ற ராசி நட்சத்திரக்காரர்கள் அவரவர்களுக்குரிய விருட்சங்களைத் தேர்ந்தெடுத்து அவை இருக்கும் ஸ்தலங்களில் சென்று வழிபட்டால் நினைத்தது நிறைவேறும். நிம்மதி கிடைக்கும்.

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகில் உள்ள மாத்தூரில் 27 நட்சத்திரங்களுக்கும் உரிய விருட்சங்களை கோவிலின் முன்புறம் வைத்துள்ளனர். அவரவர் களுக்குரிய விருட்சங்களை வழிபட்டு வருவதற்கு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.

    வாழை மரத்தை ஸ்தல விருட்சமாகக் கொண்ட கோவிலில் சென்று வழிபட்டால் வாரிசு இல்லாதவர்களுக்கு வாரிசு கிடைக்கும். சிவகங்கை மாவட்டம் ஆத்தங்குடி என்ற ஊரிலுள்ள சிவாலயத்தில் ஸ்தல விருட்சமாக வாழை உள்ளது.

    பலா மரத்தை விருட்சமாகக் கொண்ட தலம் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகில் உள்ள கீழ்ச்சிவல்பட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம். இங்குள்ள பலா மர விருட்சத்தை வழிபட்டால் குடும்ப ஒற்றுமை கூடும்.

    இயற்கையைப் போற்றுவோம், வாழ்வில் இன்பங்களை நாளும் பெறுவோம்.
    வீட்டின் பூஜை அறையில் தீபம் ஏற்றி வழிபாடு செய்வது பழந்தமிழர் வழக்கம். விளக்கேற்றிய பிறகு என்ன செய்யக் கூடாது என்பதைப் பற்றி நம்முன்னோர்கள் எடுத்துரைக்கின்றனர்.
    பூஜை அறை என்பது ஒரு புனிதமான அறை. தெய்வப் படங்களை அதில் வைத்து வழிபடுவது வழக்கம். வீட்டின் பூஜை அறையில் மாலை நேரத்தில் விளக்கேற்றி வழிபடுவது பழந்தமிழர் வழக்கம். அங்ஙனம் விளக்கேற்றிய பிறகு என்ன செய்யக் கூடாது என்பதைப் பற்றி நம்முன்னோர்கள் எடுத்துரைக்கின்றனர்.

    குறிப்பாக விளக்கேற்றிய பிறகு அடுத்தவர்களுக்கு பால், மோர், உப்பு, அரிசி, சுண்ணாம்பு போன்ற வெள்ளைப் பொருட்கள் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. விளக்கேற்றியதும் வீட்டைக் கூட்டக் கூடாது. துணி துவைக்கக் கூடாது.
    புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்களையும், சில அற்புத பொருட்களையும் பற்றி இந்தப் பகுதியில் சிறிய குறிப்புகளாக பார்த்து வருகிறோம். இந்த வாரமும் சில கதாபாத்திரப் படைப்புகள் உங்களுக்காக...
    புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்களையும், சில அற்புத பொருட்களையும் பற்றி இந்தப் பகுதியில் சிறிய குறிப்புகளாக பார்த்து வருகிறோம். இன்றும் சில கதாபாத்திரப் படைப்புகள் உங்களுக்காக...

    துவாரபாலகர்கள்

    கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்பவர்கள், கருவறையின் வாசலில் இரு புறமும் சிற்பங்கள் இருப்பதை பார்த்திருப்பீர்கள். அவர்களே ‘துவார பாலகர்’ என்று அழைக்கப்படுகின்றனர். அதாவது ‘வாயில் காப்போர்’ என்பது பொருள். சிவாலயங்களில் எண்ணற்ற துவாரபாலகர்கள் இருப்பதாக அறியப்படுகிறது. சண்டி- முண்டி, திரிசூலநாதர்- மழுவுடையார், சண்டன்- பிரசண்டன் உள்பட ஐந்து இணை துவாரபாலகர்கள் முக்கியமானவர்களாக கருதப்படுகின்றனர். வைணவ ஆலயங்களில் ஜெயன்-விஜயனும், பெண் தெய்வ கருவறை முன்புள்ள துவாரபாலகிகளில் சுபத்ரா-அரபத்ரா ஆகியோரும் முக்கியமானவர்களாக உள்ளனர்.

    சயவன் முனிவர்

    அஸ்வினி குமாரர்களால் இளமையும், கண் பார்வையும் திரும்ப வரப் பெற்றவர் இந்த சயவன் முனிவர். வயோதிகரான சயவன், நெடுங்காலமாக தவத்தில் இருந்தார். அதனால் அவரைச் சுற்றி புற்று வளர்ந்து, பறவைகள் கூடுகட்டி இருந்தன. ஒரு முறை அங்கு வந்த சர்யாதி மன்னனின் மகள் சுகன்யா, விளையாட்டாய் பறவைகளின் கூட்டைக் கலைக்க, அவளது விரல் எதிர்பாராத விதமாக தவத்தில் ஆழ்ந்திருந்த முனிவரின் கண்ணில்பட்டு பார்வை பறிபோனது.



    இதையடுத்து தனது மகளை, முனிவருக்கே திருமணம் செய்து வைத்தான் சர்யாதி மன்னன். ஒரு நாள் அஸ்வினி குமாரர்கள், சுகன்யாவைச் சந்தித்தனர். சயவன் முனிவருக்கு இளமையையும், கண் பார்வையையும் தருவதாக கூறினர். பின் சயவன் முனிவரும், அஸ்வினி குமாரர்களும் அங்கிருந்த குளத்தில் மூழ்கி எழுந்தனர். அப்போது அவர்கள் மூவருமே ஒரே உருவத்தில் காட்சியளித்தனர். அதில் சயவன் முனிவரை சரியாக அடையாளம் காட்டினாள் சுகன்யா. இதையடுத்து சயவன் முனிவருக்கு இளமையும், கண் பார்வையும் கிடைத்தது.

    துரியோதனன்

    திருதராஷ்டிரன்- காந்தாரி தம்பதியரின் மூத்த மகன். கவுரவர்கள் நூறு பேரில் முதன்மையானவன். ‘துரியோதனன்’ என்பதற்கு ‘வெற்றி கொள்ளப்பட முடியாதவன்’ என்று பொருள். உடல் குறைபாடு காரணமாக தந்தையிடம் இருந்து நழுவிச்சென்ற அரசாளும் பதவியை, பாண்டவர்களிடம் இருந்து பெறவேண்டும் என்ற எண்ணம், துரியோதனன் உள்ளிட்ட கவுரவர்களிடம் வன்மத்தை விதைத்தது. அதன் காரணமாக மகாபாரதப் போர் மூண்டது. 18 நாட்கள் நடந்த மகாபாரதப் போரின் இறுதி நாளில் பீமனுடன் நடந்த யுத்தத்தில் துரியோதனன் கொல்லப்பட்டான்.

    துர்வாசர்

    மாபெரும் தவசிகளான அத்திரி - அனுசூயா தம்பதியரில் ஆகச் சிறந்த புதல்வர் தான் துர்வாசர். இவர் மற்ற முனிவர்களைப் போல அல்ல.. தன்னுடைய முன் கோபத்தாலும், சட்டென்று ஒருவரை சபித்துவிடும் தன்மையாலும் கவனம் பெற்றவர். விஸ்வாமித்திரரின் மகளான சகுந்தலை, துஷ்யந்தன் என்ற மன்னனை கந்தர்வ மணம் செய்து கொண்டாள். ஒரு முறை தன்னை அவமதித்த குற்றத்திற்காக துஷ்யந்தனின் மனதில் இருந்து சகுந்தலையின் நினைவுகளை அகற்றி சாபம் அளித்தார் துர்வாசர். சாபத்தை மட்டுமே அளிப்பவர் அல்ல அவர். தன் மனம் மகிழும் படி நடந்து கொள்பவர்களுக்கு வரமும் அளிப்பவர். அவர் பாண்டுவின் மனைவி குந்திக்கு ‘தேவர்களில் எவரை நினைத்தாலும் அவர்கள் வந்து அருள்வார்கள்’ என்ற வரம் அளித்தார். அந்த வரம் தான் கர்ணன், பாண்டவர்களான தருமன், பீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன் ஆகியோர் பிறக்க காரணமாக இருந்தது.
    பூவரசன்குப்பம் ஸ்ரீலட்சுமி நரசிம்ம பெருமாளை 48 நாட்கள் விரதமிருந்து உள்ளன்போடு வழிபட்டால் கடன்தொல்லைகள் தீரும். எதிரிகள் தொல்லை தீரும்.
    பூவரசன்குப்பம் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் கோவில் கருவறையில் அழகு சொரூபமாக நரசிம்ம மூர்த்தியும், அமிர்தவல்லி தாயாரும் அருள் பாலிக்கின்றனர். இத்திருக்கோவிலில் இருக்கும் தாயார் அமிர்தத்திற்கு இணையான பலனை கொடுக்க வல்லவள். இதனால் அமுதவல்லி என திருநாமம் கொண்டு அழைக்கபடுகிறாள்.

    கருவறையில் லட்சுமி நரசிம்மர் நான்கு கரங்களுடன் காணப்படுகிறார். இரண்டு கரங்களில் சங்கும் சக்கரமும் காணப்படுகின்றன. ஒரு கையால் லட்சுமியை (அமிர்த வல்லித்தாயாரை) அனைத்துக் கொண்டிருக்கிறார். வலது கை அருள் காட்டுகிறது.

    இடது காலை மடக்கி வைத்து அதில் லட்சுமியை அமர்த்தியுள்ளார். நரசிம்மருடைய மடியில் பெருமிதத்துடன் தாயார் அமர்ந்திருக்கிறார். வலக்கரம் அன்புக்கரமாக அண்ணலைத் தழுவிக் கொண்டிருக்கிறது. ஒரு கண் அண்ணலை நோக்குகின்றது. மற்றொரு கண் பக்தர்களை நோக்கியுள்ளது. இது போன்ற அமைப்பு இந்த பூவுலகில் வேறு எங்கும் இல்லை.

    முனிவர்களின் வேண்டுகோளுக்கிணங்க நரசிம்மர் இத்தலத்தில் மகாலட்சுமியை தன் இடது மடியில் அமர்த்தி காட்சி அளித்தார். அப்போது லட்சுமி முனிவர்களை பார்க்காமல் நரசிம்மரையே பார்த்தார்.

    உடனே நரசிம்மர், “நீ முனிவர்களை பார்த்து அருள்பாலிக்காமல் என்னை மட்டும் ஏன் பார்த்து கொண்டிருக்கிறாய்” என்றார். அதற்கு லட்சுமி, “கோபமாக உள்ள நீங்கள் உங்களது வெப்பத்தை, தரிசிக்க வரும் பக்தர்களிடம் காட்டக் கூடாது. எனவேதான் நான் உங்களையே பார்த்து கொண்டிருக்கிறேன்” என்றார்.

    அதன் பின் நரசிம்மரின் கட்டளைக்கிணங்க லட்சுமி ஒரு கண்ணால் நரசிம்மரையும், மற்றொரு கண்ணால் பக்தர்களையும் பார்த்து அருள்பாலித்து வருகிறாள். பிரகாரத்தினுள் இராமானுஜர், நாகசன்னதியும் இருக்கிறது.

    இந்த லட்சுமி நரசிம்ம பெருமாளை 48 நாட்கள் விரதமிருந்து உள்ளன்போடு வழிபட்டால் கடன்தொல்லைகள் தீரும். பதவி உயர்வு வந்து சேரும் மற்றும் எதிரிகள் எல்லாம் இல்லாமல் நண்பர்களாகி விடுகிறார்கள் என்பது ஐதீகம்.
    ஸ்ரீ லட்சுமி நரசிம்மரை வழிபட, பூஜிக்க சில விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
    ஸ்ரீலட்சுமி நரசிம்மரை வழிபட, பூஜிக்க சுத்தமான பூஜை அறை தேவை. அசைவம் எக்காரணம் கொண்டும் சாப்பிடக்கூடாது. பூஜைக்கு ஏற்ற நாள் வியாழக்கிழமை. ஏற்ற நட்சத்திரம் சுவாதி ஆகும். இதே போல வைகாசி மாதத்தில் வரும் நரசிம்மர் ஜெயந்தியும் வழிபாட்டுக்கு ஏற்ற நாட்கள் ஆகும். தினசரியும் நரசிம்மரையும் வழிபடலாம்.

    ஸ்ரீலட்சுமி நரசிம்மர் படம் வைத்து, அதற்கு பூ வைத்து, பத்தி வைத்து, நெய் விளக்கு ஏற்றி, ஸ்ரீலட்சுமி நரசிம்மர் படத்தை ‘12’ முறை வலம் வர வேண்டும். பானகம் நைவேத்தியம் செய்ய வேண்டும். இங்கு குறிப்பிடப்பட்டுள்ள காயத்திரி மந்திரம், ஸ்லோகம் அனைத்தையும் பூஜை செய்து வழிபட்டு படிக்கவும்.
    ×