என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 95492
நீங்கள் தேடியது "slug 95492"
விளக்கு எரியத் தொடங்கியவுடன் அந்த தீபத்துக்குள் சூரிய தேவதை ஆவாஹனமாகி விடுவாள். விளக்கேற்றிய பிறகு சில விஷயங்களை கண்டிப்பாக செய்யக்கூடாது. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
* விளக்கேற்றிய பிறகு தலை சீவக் கூடாது.
* விளக்கேற்றிய பிறகு கூட்டக் கூடாது.
* விளக்கேற்றிய உடன் சுமங்கலிப் பெண் வெளியே செல்லக் கூடாது.
* விளக்கேற்றும் நேரத்தில் உறங்க கூடாது.
* விளக்கேற்றியவுடன் துணி துவைக்கக் கூடாது.
* விளக்கேற்றி விட்டு உடன் தலை குளிக்கக் கூடாது.
* வீட்டுக்கு தூரமான பெண்கள் மூன்று நாள்களும் விளக்கை ஏற்றவோ, தொடவோ கூடாது.
* விளக்கேற்றிய பிறகு கூட்டக் கூடாது.
* விளக்கேற்றிய உடன் சுமங்கலிப் பெண் வெளியே செல்லக் கூடாது.
* விளக்கேற்றிய உடன் சாப்பிடக் கூடாது.
* விளக்கேற்றிய பிறகு பால், மோர், உப்பு, தவிடு, சுண்ணாம்பு, அரிசி, கடன் ஆகியவை கொடுக்கக் கூடாது.
* விளக்கேற்றி விட்டு உடன் தலை குளிக்கக் கூடாது.
* வீட்டுக்கு தூரமான பெண்கள் மூன்று நாள்களும் விளக்கை ஏற்றவோ, தொடவோ கூடாது.
தீபமேற்றினால், எண்ணெய் முழுவதும் தீர்ந்து தீபம் தானாகவே அணையும் வரை விட்டு விடக்கூடாது. தீபத்தை எப்படி குளிர வைக்க வேண்டும் என்று பார்க்கலாம்.
பொதுவாக மக்கள் தீபமேற்றினால், எண்ணெய் முழுவதும் தீர்ந்து தீபம் தானாகவே அணையும் வரை விட்டு விடுகின்றனர். இது தவறு!. தீபம் ஏற்றியதிலிருந்து தீபத்தைக் குளிர வைக்கும் வரை விளக்கில் எண்ணெய் இருந்து கொண்டே இருக்க வேண்டும்.
மேலும் விளக்கை அணை எனக் கூற கூடாது, விளக்கை குளிரவை எனக் கூற வேண்டும். விளக்கை ஆண்கள், ஏற்றுவதோ, குளிர வைப்பதோ செய்யக் கூடாது. பெண்களே செய்ய வேண்டும்.
தீபத்தை வாயினால் ஊதியோ, வெறுங்கையினாலோ அணைக்க கூடாது, தீபத்தைக் குளிர வைக்க திரியின் அடிப்பகுதியை (எண்ணெயில் அமிழ்ந்திருக்கும் நுனியை) ஓம் சாந்த ஸ்வலரூபிணே நம என்று சொல்லிப் பின் புறமாக இழுக்க வேண்டும். அப்போது தீச்சுடர் சிறிது சிறிதாகக் குறைந்து, திரி எண்ணெயில் அமிழ்ந்து தீபம் குளிரும்.
மேலும் விளக்கை அணை எனக் கூற கூடாது, விளக்கை குளிரவை எனக் கூற வேண்டும். விளக்கை ஆண்கள், ஏற்றுவதோ, குளிர வைப்பதோ செய்யக் கூடாது. பெண்களே செய்ய வேண்டும்.
தீபத்தை வாயினால் ஊதியோ, வெறுங்கையினாலோ அணைக்க கூடாது, தீபத்தைக் குளிர வைக்க திரியின் அடிப்பகுதியை (எண்ணெயில் அமிழ்ந்திருக்கும் நுனியை) ஓம் சாந்த ஸ்வலரூபிணே நம என்று சொல்லிப் பின் புறமாக இழுக்க வேண்டும். அப்போது தீச்சுடர் சிறிது சிறிதாகக் குறைந்து, திரி எண்ணெயில் அமிழ்ந்து தீபம் குளிரும்.
நாம் செய்யும் பாவங்களுக்கான பலன்களை அவசியம் சிவபெருமான் நமக்கு அளிப்பார் என்று சிவப்புராணம் கூறுகிறது. அப்படி சிவனுக்குப் பிடிக்காத, அவர் சகித்துக் கொள்ளாத பாவங்கள் எவை என்று பார்க்கலாம்.
மும்மூர்த்திகளில் சிவ பெருமான் சம்ஹார மூர்த்தியாக அறியப்படுகிறார். சிவன் சொத்து குல நாசம் என்பார்கள். பொதுவாகவே ஈசன் தவறுகளை பொறுத்துக் கொள்ள மாட்டார் என்றும், அவருக்கு கோபம் வந்தால் பிரளயம் ஏற்படும் என்றும் காலங்காலமாக நமக்கு சொல்லப்பட்டு வரும் செய்தியாகும்.ஆனால் உண்மையில் ஈசன் அன்பே உருவானவர். தன்னை யார் சிரத்தையுடன் வணங்கினாலும் அவர்களுக்கு அவரின் பரிபூரண ஆசி கிடைக்கும்.உண்மையான பக்தியுடன் சிவனை தொழுதால் சகல பிரச்சனைகளிலிருந்தும் நம்மை விடுவிப்பார்.
நாம் செய்யும் பாவங்களுக்கான பலன்களை அவசியம் சிவபெருமான் நமக்கு அளிப்பார் என்று சிவப்புராணம் கூறுகிறது. அப்படி சிவனுக்குப் பிடிக்காத, அவர் சகித்துக் கொள்ளாத பாவங்கள் எவை தெரியுமா?
பிறன் மனை நோக்குவது ஆண்மையற்றது மட்டுமின்றி அது பாவச் செயலாகும். அடுத்தவரின் மனைவியை அல்லது கணவன் மீது ஆசைப்படுவது நமது இந்து மத சாஸ்திரப்படி பாவமாகும்.
அடுத்தவரின் பணத்திற்கு ஆசைப்படுவதும், அவரின் சொத்துக்களை அபகரிக்க நினைப்பது கூட மகா பாவத்தில் அடங்கும்.
சுய நலத்திற்காக எளியவர்களின் வாழ்வை அழிப்பதும்,அவர்களின் மீது வீண் பழியை சுமத்துவதும் சிவனின் மூன்றாவது கண் எனப்படும் நெற்றிக் கண்ணில் இருந்து தப்பிக்க முடியாத பாவம்.
ஒருவன் தன் வாழ்நாளில் தொடர்ந்து தீய வழியிலே செல்வது, அல்லது சிறிதும் நன்மைகூட அடுத்தவர்களுக்கு செய்யாமலிருப்பது இரண்டுமே சிவனின் கோபத்திற்கு ஆளாகும் பாவங்கள்.
கர்ப்பிணிகளிடம் மிக மோசமான நடந்துகொள்வதும், அவர்களை தீய வார்த்தைகளால் திட்டுவதும், அதேபோல் மாதவிலக்கின் போது பெண்களை திட்டுவதும் பாவத்திற்கான வழிகளாகும்.
தனக்கு சம்பந்தம் இல்லாத இன்னொருவரைப் பற்றி அப்பட்டமான பொய் கூறி அவரை சீர்குலைய வைப்பதும் சிவனுடைய கோபத்திற்கு ஆளாக நேரிடும்.
வதந்திகளையும், தேவையில்லாத விஷயங்களையும்,எல்லாரிடம் பரப்புவது,அதனால் மற்றவர்களின் மனதை காயப்படுத்துவதும் மோசமான செய்கையாகும். இதனால் சிவனின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.
நமது இந்து சமயத்தில் சில உணவுகளை தவிர்க்க சொல்லப்பட்டிருக்கிறது. உதாரணத்திற்கு நாம் தெய்வமாக மதிக்கும் கோமாதா என்று போற்றப்படும் பசு. அவற்றை உண்பது பாவச் செயல்.
குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அனைத்தும் மன்னிக்கமுடியாத பாவமாக கருதப்படுகிறது.
மாதா, பிதா, குரு மற்றும் வயதானவர்களை மரியாதைக் குறைவாக நடத்துவது மற்றும் அவர்களை அடித்து துன்புறுத்துவது போன்றவை சிவனின் கோபத்திற்கு நம்மை ஆளாக்கும்.
மொத்தத்தில் நம்முடன் வாழும் நம் சக உயிருக்கு தீங்கு இழைக்காத ஒரு வாழ்வே நம்மை இறை தன்மைக்கு உயர்த்தக் கூடியது.
நாம் செய்யும் பாவங்களுக்கான பலன்களை அவசியம் சிவபெருமான் நமக்கு அளிப்பார் என்று சிவப்புராணம் கூறுகிறது. அப்படி சிவனுக்குப் பிடிக்காத, அவர் சகித்துக் கொள்ளாத பாவங்கள் எவை தெரியுமா?
பிறன் மனை நோக்குவது ஆண்மையற்றது மட்டுமின்றி அது பாவச் செயலாகும். அடுத்தவரின் மனைவியை அல்லது கணவன் மீது ஆசைப்படுவது நமது இந்து மத சாஸ்திரப்படி பாவமாகும்.
அடுத்தவரின் பணத்திற்கு ஆசைப்படுவதும், அவரின் சொத்துக்களை அபகரிக்க நினைப்பது கூட மகா பாவத்தில் அடங்கும்.
சுய நலத்திற்காக எளியவர்களின் வாழ்வை அழிப்பதும்,அவர்களின் மீது வீண் பழியை சுமத்துவதும் சிவனின் மூன்றாவது கண் எனப்படும் நெற்றிக் கண்ணில் இருந்து தப்பிக்க முடியாத பாவம்.
ஒருவன் தன் வாழ்நாளில் தொடர்ந்து தீய வழியிலே செல்வது, அல்லது சிறிதும் நன்மைகூட அடுத்தவர்களுக்கு செய்யாமலிருப்பது இரண்டுமே சிவனின் கோபத்திற்கு ஆளாகும் பாவங்கள்.
கர்ப்பிணிகளிடம் மிக மோசமான நடந்துகொள்வதும், அவர்களை தீய வார்த்தைகளால் திட்டுவதும், அதேபோல் மாதவிலக்கின் போது பெண்களை திட்டுவதும் பாவத்திற்கான வழிகளாகும்.
தனக்கு சம்பந்தம் இல்லாத இன்னொருவரைப் பற்றி அப்பட்டமான பொய் கூறி அவரை சீர்குலைய வைப்பதும் சிவனுடைய கோபத்திற்கு ஆளாக நேரிடும்.
வதந்திகளையும், தேவையில்லாத விஷயங்களையும்,எல்லாரிடம் பரப்புவது,அதனால் மற்றவர்களின் மனதை காயப்படுத்துவதும் மோசமான செய்கையாகும். இதனால் சிவனின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.
நமது இந்து சமயத்தில் சில உணவுகளை தவிர்க்க சொல்லப்பட்டிருக்கிறது. உதாரணத்திற்கு நாம் தெய்வமாக மதிக்கும் கோமாதா என்று போற்றப்படும் பசு. அவற்றை உண்பது பாவச் செயல்.
குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அனைத்தும் மன்னிக்கமுடியாத பாவமாக கருதப்படுகிறது.
மாதா, பிதா, குரு மற்றும் வயதானவர்களை மரியாதைக் குறைவாக நடத்துவது மற்றும் அவர்களை அடித்து துன்புறுத்துவது போன்றவை சிவனின் கோபத்திற்கு நம்மை ஆளாக்கும்.
மொத்தத்தில் நம்முடன் வாழும் நம் சக உயிருக்கு தீங்கு இழைக்காத ஒரு வாழ்வே நம்மை இறை தன்மைக்கு உயர்த்தக் கூடியது.
நமது கணக்குப்படி வருடத்துக்கு ஒரு முறை முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய பித்ரு கர்மாக்களை அவர்களை இறந்த திதியில் ஒரு புரோக்கிதரை வைத்து முன்னோர்களுக்கு பிண்டம்(உணவு) அளிக்க வேண்டும்.
நமது பெற்றோர்கள் உயிரேடு இருக்கும் போதே நாம் அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள் ஏராளமாக இருந்தாலும், அவற்றில் சிறிதளவாவது அவர்கள் மனம் குளிரும்படி செய்திருக்கிறோமா என்று எண்ணிக் பார்க்க வேண்டும். அதில் நாம் ஏதாவது குறையோ அல்லது தவறோ செய்து அதற்குள் அவர்கள் அமராகி விட்டால் அவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய பித்ரு கடன்களை வருடா வருடம் நாம் தவறாமல் செய்ய வேண்டியது நமது தலையாக கடமையாகும்.
நமக்கு 365 நாள்கள் என்பது நமது பித்ருக்களுக்கு ஒரு நாளாகும். எனவே அவர்களுக்கு ஒவ்வொரு நாளும் நாம் உணவளிக்க வேண்டும்.
அதாவது நமது கணக்குப்படி வருடத்துக்கு ஒரு முறை அவர்களுக்கு செய்ய வேண்டிய பித்ரு கர்மாக்களை அவர்களை இறந்த திதியில் ஒரு புரோக்கிதரை அழைத்துமுறைப்பிடி செய்து நம் முன்னோர்களுக்கு பிண்டம்(உணவு) அளிக்க வேண்டும்.
அப்படி செய்ய தவறிவிட்டால் நம் பித்ருக்களின் மனம் வருத்தம் அடையும். அந்த வருத்தமே நமக்கு பித்ரு தோஷத்தை ஏற்படுத்துகிறது. பித்ரு தோஷம் நமக்கு மட்டுமல்லாமல் நம் சந்ததியினருக்கு ஏற்பட்டு விடுகிறது. நமக்கு பிறக்கும் குழந்தைகளின் ஜாதகம் மூலமாக பித்ரு தோஷம் இருப்பதை நாம் தெரிந்து கொள்ளலாம்.
பித்ரு தோஷத்தை நிவர்த்தி செய்யும் பரிகாரங்கள் இதோ...
அனுஷம், பூசம், புனர்பூசம், விசாகம், பூரட்டாதி, திருவாதிரை, சுவாதி, சதயம், அவிட்டம் இந்த நட்சத்திரத்தில் அமாவாசை வருமானால் அன்றைய தினம் சிராத்தம் செய்தால் பித்ரு தோஷம் நீங்கும். மஹாளய பக்ஷத்ல் வரும் பரணி நட்சத்திரத்தில் திதி கொடுத்தால் மிகவும் விசேஷமாகும். ஏனொனில் இந்த பரணி மஹா பரணி எனப்படும். அட்சய திரிதியை வரும் நாளில் பித்ருக்களுக்கு சிராத்தம் செய்தால் பித்ரு தோஷம் நீங்கும்.
மேற்கூறிய நாள்களில் சிராத்தம் செய்தாலோ, அல்லது காளஹஸ்தி சென்று அங்கு பித்ரு பூஜை செய்தாலோ பித்ரு தோஷம் நிவர்த்தி ஆகி சகல சௌபாக்கியங்களும் வந்து சேரும் என்று தெரிவித்தார்.
நமக்கு 365 நாள்கள் என்பது நமது பித்ருக்களுக்கு ஒரு நாளாகும். எனவே அவர்களுக்கு ஒவ்வொரு நாளும் நாம் உணவளிக்க வேண்டும்.
அதாவது நமது கணக்குப்படி வருடத்துக்கு ஒரு முறை அவர்களுக்கு செய்ய வேண்டிய பித்ரு கர்மாக்களை அவர்களை இறந்த திதியில் ஒரு புரோக்கிதரை அழைத்துமுறைப்பிடி செய்து நம் முன்னோர்களுக்கு பிண்டம்(உணவு) அளிக்க வேண்டும்.
அப்படி செய்ய தவறிவிட்டால் நம் பித்ருக்களின் மனம் வருத்தம் அடையும். அந்த வருத்தமே நமக்கு பித்ரு தோஷத்தை ஏற்படுத்துகிறது. பித்ரு தோஷம் நமக்கு மட்டுமல்லாமல் நம் சந்ததியினருக்கு ஏற்பட்டு விடுகிறது. நமக்கு பிறக்கும் குழந்தைகளின் ஜாதகம் மூலமாக பித்ரு தோஷம் இருப்பதை நாம் தெரிந்து கொள்ளலாம்.
பித்ரு தோஷத்தை நிவர்த்தி செய்யும் பரிகாரங்கள் இதோ...
அனுஷம், பூசம், புனர்பூசம், விசாகம், பூரட்டாதி, திருவாதிரை, சுவாதி, சதயம், அவிட்டம் இந்த நட்சத்திரத்தில் அமாவாசை வருமானால் அன்றைய தினம் சிராத்தம் செய்தால் பித்ரு தோஷம் நீங்கும். மஹாளய பக்ஷத்ல் வரும் பரணி நட்சத்திரத்தில் திதி கொடுத்தால் மிகவும் விசேஷமாகும். ஏனொனில் இந்த பரணி மஹா பரணி எனப்படும். அட்சய திரிதியை வரும் நாளில் பித்ருக்களுக்கு சிராத்தம் செய்தால் பித்ரு தோஷம் நீங்கும்.
மேற்கூறிய நாள்களில் சிராத்தம் செய்தாலோ, அல்லது காளஹஸ்தி சென்று அங்கு பித்ரு பூஜை செய்தாலோ பித்ரு தோஷம் நிவர்த்தி ஆகி சகல சௌபாக்கியங்களும் வந்து சேரும் என்று தெரிவித்தார்.
நம்மால் உருவகப்படுத்தி வணங்கப்படும் தெய்வங்களை, எல்லா நேரங்களும் நாம் வழிபட முடியாது. தவிர்க்கப்பட வேண்டிய நேரங்களில் வழிபட்டால், அந்த வழிபாடு பயனற்றதாகி விடுகிறது.
மன அமைதி வேண்டியும், இந்த உலகில் நல்வாழ்வு வாழ நமக்கு மேல் இருக்கும் சக்தியை வணங்கி நல்லாசிகள் பெறவும், நாம் ஆலயங்களுக்குச் செல்கிறோம்.
நம்மால் உருவகப்படுத்தி வணங்கப்படும் தெய்வங்களை, எல்லா நேரங்களும் நாம் வழிபட முடியாது. தவிர்க்கப்பட வேண்டிய நேரங்களில் வழிபட்டால், அந்த வழிபாடு பயனற்றதாகி விடுகிறது.
தவிர்க்கப்பட வேண்டிய நேரங்கள்: விழாக்காலங்களில் சுவாமி புறப்பட்டு வீதியுலா வரும்போது மூலவரை வணங்குவதை தவிர்க்கவேண்டும். சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்படும்போதும், பிரசாதம் படைக்க திரையிட்டிருக்கும் போதும் சுவாமியை வணங்குவதைத் தவிர்க்க வேண்டும்.
நம்மால் உருவகப்படுத்தி வணங்கப்படும் தெய்வங்களை, எல்லா நேரங்களும் நாம் வழிபட முடியாது. தவிர்க்கப்பட வேண்டிய நேரங்களில் வழிபட்டால், அந்த வழிபாடு பயனற்றதாகி விடுகிறது.
தவிர்க்கப்பட வேண்டிய நேரங்கள்: விழாக்காலங்களில் சுவாமி புறப்பட்டு வீதியுலா வரும்போது மூலவரை வணங்குவதை தவிர்க்கவேண்டும். சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்படும்போதும், பிரசாதம் படைக்க திரையிட்டிருக்கும் போதும் சுவாமியை வணங்குவதைத் தவிர்க்க வேண்டும்.
மகாவிஷ்ணுவின் தீவிர விசுவாசியும் பக்தனுமாகிய ராதாகிருஷ்ணனுக்கு மகாவிஷ்ணுவும், சனி பகவானும் நிகழ்த்திய திருவிளையாடலை பார்க்கலாம்.
ஒரு சமயம் தன் அலுவல்களைக் கவனிக்கப் வேகமாக புறப்பட்ட சனிபகவானை, இடையில் வந்து தடுத்து நின்றார், விஷ்ணு பகவான். சனியின் பார்வை தெய்வத்திடம் பலிக்காது என்பதால் நேராக நின்ற பெருமாளிடம், “ஐயனே! என்னைத் தடுத்து நிறுத்தும் காரணம் என்ன?” என்று கேட்டார்.
“நீ யாரைப் பிடிப்பதற்காக இவ்வளவு அவசரமாகச் சென்று கொண்டிருக்கிறாய் என்பதை தெரிந்து கொள்ளலாமா?” என்று கேட்டார் மகா விஷ்ணு.
புன்னகையுடன் வினவிய பெருமாளைப் பார்த்த சனி “உமக்குத் தெரியாததைப் போன்று கேட்கலாமா? நீங்கள் இங்கு என்னைப் போக விடாமல் தடுக்கும் காரணமும் அதுவே அல்லவா? இருந்தாலும் கூறுகிறேன். உம்முடைய தீவிர விசுவாசியும் பக்தனுமாகிய ராதாகிருஷ்ணன் எனும் ஆலயத்திருப்பணி செய்யும் மனிதரைப் பிடிக்கும் காலம் இது. அதற்காகவே செல்கிறேன்” என்று பதிலளித்தார்.
உடனே பெருமாள், “அதைப்பற்றி பேசவே உன்னைத் தடுத்து நிறுத்தினேன். அவன் மனிதரில் மாணிக்கம். என் மேல் உள்ள பக்தியால் பார்ப்பவரிடம் எல்லாம், என் பெருமைகளை எடுத்துக்கூறி பக்தி மார்க்கத்தை வளர்த்து வருகிறான். மேலும் நான் குடியிருக்கும் பழுதடைந்த ஆலயங்களை எல்லாம் பிறரிடம் கையேந்தி கொடைகள் பெற்று, புதுப்பித்து திருப்பணிகள் செய்து வருகிறான். நீ அவனைத் துன்பப்படுத்துவதை எப்படி என் மனம் பொறுக்கும்?” என்றார்.
ஆனால் சனி கடமையில் சுத்தமானவன் அல்லவா? “பெருமாளே! அந்த ஈசனே சொன்னாலும் என் கடமைதான் எனக்கு முக்கியம். ஆனாலும் உங்கள் மனம் கவர்ந்த பக்தனுக்காக நீங்கள் கவலைப்படுவதை என்னால் பார்க்க முடியவில்லை. ஆகவே ஏழரை வருடங்களுக்குப் பதில் ஏழரை மாதங்கள் அவனைப் பிடித்துக் கொள்கிறேன்” என்று கூறினார்.
பெருமாளோ, “இல்லை.. இல்லை.. அவ்வளவு கஷ்டங்களை அவன் தாங்க மாட்டான். ஒரு ஏழரை நாழிகை மட்டும் அவனைப்பிடித்து உன் கடமையை ஆற்று” என கேட்க, சனிக்கு பெரும் மகிழ்ச்சி “நல்லது.. ஏழரை நாழிகையில் அவனைப்படுத்தும் பாட்டைக் காண தயாராக இருங்கள். வருகிறேன்” என்று சொல்லி அங்கிருந்து புறப்பட்டார் சனி.
பெருமூச்சு விட்ட பெருமாளும், நடப்பதைக் காணும் ஆவலில் பூலோகம் வந்தார்.
அங்கு கடமையே என்று விஷ்ணு சுலோகங்கள் சொல்லி, காலை வழிபாட்டை முடித்த ராதாகிருஷ்ணன் புதியதாக கட்டத் தொடங்கி இருக்கும் ஆலயத்தின் கணக்குகளை பார்க்கத் தொடங்கினார். இதுதான் சமயமென்று அவரைப் பிடித்தார் சனீஸ்வரன்.
அப்போது அங்கு வந்த இருவர் நன்கொடை என்று சொல்லி ஒரு மூட்டையை அவரிடம் தந்து வணங்கி விட்டு அவசரமாக சென்றனர். அதை அப்புறம் பிரிக்கலாம் என்றெண்ணி, மீண்டும் கணக்குகளை பார்க்கத் தொடங்கியவரை மீண்டும் அழைத்தது ஒரு குரல்.
நிமிர்ந்து பார்த்தவரை என்னவென்று கேள்வி எழுப்பக்கூட அனுமதிக்காமல், அடித்து துவைத்து அரசவைக்கு இழுத்துச்சென்று, அரசன் முன் நிறுத்தினான் ஒரு காவலாளி.
அங்கு இருந்த பணக்கார சீமாட்டி, “இதோ.. இவர்தான் கடைசியாக கோவிலுக்கு நன்கொடை என்று என் இல்லத்திற்கு வந்தவர். இவர்தான் அந்த நகைகளை எடுத்திருக்க வேண்டும்” என்று குற்றம் சாட்டினாள்.
ராதாகிருஷ்ணன் பதறினார். “ஐயோ! என்ன இது. நான் எதற்கு உங்கள் நகைகளை எடுக்கிறேன். பகவான் புண்ணியத்தில் மூன்று வேளை உணவுடன், இருக்க ஆலயம், உடுக்க காவித் துணி உள்ளது. எனக்கு எதற்கு உங்கள் நகை. நான் குற்றமற்றவன்.”
ஆனால் ராதாகிருஷ்ணன் இருந்த இடத்தில் இருந்து, காவலாளி கொண்டு வந்திருந்த மூட்டை, அந்தப் பெண்மணியின் குற்றச்சாட்டை நிரூபிப்பதாக இருந்தது. அதற்குள் அந்தப் பெண்மணியின் நகைகள் இருந்தன.
சனீஸ்வரனின் விளையாட்டு தொடங்கி விட்டது..
நகைகளைத் திருடிய குற்றத்திற்காக ராதாகிருஷ்ணனுக்கு சவுக்கடிகளும் சாணிக்கரைசலும் பொதுமக்கள் முன்னிலையில் நிறைவேற்றப்பட்டது. ஊர் மக்கள் அவரைத் தூற்றினர்.
மனம் ஒடிந்த அந்த விஷ்ணு பக்தர்கள் ஆலய திருக்குளம் முன்பாக நின்றார். “பெருமாளே! என் நினைவு தெரிந்த நாள் முதல் உன்னைத்தவிர வேறொன்றும் என் சிந்தையில் நிறுத்தியதில்லை. இந்தப் பழியையும் நீ எனக்குத் தந்த பரிசாகவே நினைக்கிறன். ஆனாலும் பழியோடு வாழ்வதை விட உன் காலடியில் சேர்கிறேன்” என்றபடி குளத்தில் மூழ்கி இறக்கப் போனார்.
அப்போது ஒரு அசரீரி அவரை தடுத்து நிறுத்தியது. ‘நான் சனீஸ்வரன்! உங்களின் இந்த துயரத்துக்கு நானே காரணம். பெருமாள் மீதான உங்களின் பக்தியால் பெருமாளின் வேண்டுகோளை ஏற்று வெறும் ஏழரை நாழிகை மட்டுமே, இத்துன்பங்களை நீங்கள் அனுபவிக்க நேர்ந்தது. இனி உங்கள் மேல் உள்ள பழிச்சொல் நீங்கும்.”
அந்த நேரத்தில் அங்கு வந்து சேர்ந்தனர், அரசரும், பணக்கார பெண்மணியும். சற்று முன்புதான் நகையைத் திருடிய உண்மையான திருடர்கள் பிடிப்பட்டதாகவும், அவர்கள் தான் நகையை வைத்திருந்தால் மாட்டிக்கொள்வோம் என ரதாகிருஷ்ணனிடம் நன்கொடையாக அளித்ததை ஒப்புக்கொண்டதையும் தெரிவித்தனர். இருவரும் அந்த பக்தரிடம் மன்னிப்பும் கோரினர். ஊர் மக்களுக்கு விஷயம் தெரிந்து அனைவரும் விஷ்ணு பக்தரை மரியாதையோடு வரவேற்றனர்.
“நீ யாரைப் பிடிப்பதற்காக இவ்வளவு அவசரமாகச் சென்று கொண்டிருக்கிறாய் என்பதை தெரிந்து கொள்ளலாமா?” என்று கேட்டார் மகா விஷ்ணு.
புன்னகையுடன் வினவிய பெருமாளைப் பார்த்த சனி “உமக்குத் தெரியாததைப் போன்று கேட்கலாமா? நீங்கள் இங்கு என்னைப் போக விடாமல் தடுக்கும் காரணமும் அதுவே அல்லவா? இருந்தாலும் கூறுகிறேன். உம்முடைய தீவிர விசுவாசியும் பக்தனுமாகிய ராதாகிருஷ்ணன் எனும் ஆலயத்திருப்பணி செய்யும் மனிதரைப் பிடிக்கும் காலம் இது. அதற்காகவே செல்கிறேன்” என்று பதிலளித்தார்.
உடனே பெருமாள், “அதைப்பற்றி பேசவே உன்னைத் தடுத்து நிறுத்தினேன். அவன் மனிதரில் மாணிக்கம். என் மேல் உள்ள பக்தியால் பார்ப்பவரிடம் எல்லாம், என் பெருமைகளை எடுத்துக்கூறி பக்தி மார்க்கத்தை வளர்த்து வருகிறான். மேலும் நான் குடியிருக்கும் பழுதடைந்த ஆலயங்களை எல்லாம் பிறரிடம் கையேந்தி கொடைகள் பெற்று, புதுப்பித்து திருப்பணிகள் செய்து வருகிறான். நீ அவனைத் துன்பப்படுத்துவதை எப்படி என் மனம் பொறுக்கும்?” என்றார்.
ஆனால் சனி கடமையில் சுத்தமானவன் அல்லவா? “பெருமாளே! அந்த ஈசனே சொன்னாலும் என் கடமைதான் எனக்கு முக்கியம். ஆனாலும் உங்கள் மனம் கவர்ந்த பக்தனுக்காக நீங்கள் கவலைப்படுவதை என்னால் பார்க்க முடியவில்லை. ஆகவே ஏழரை வருடங்களுக்குப் பதில் ஏழரை மாதங்கள் அவனைப் பிடித்துக் கொள்கிறேன்” என்று கூறினார்.
பெருமாளோ, “இல்லை.. இல்லை.. அவ்வளவு கஷ்டங்களை அவன் தாங்க மாட்டான். ஒரு ஏழரை நாழிகை மட்டும் அவனைப்பிடித்து உன் கடமையை ஆற்று” என கேட்க, சனிக்கு பெரும் மகிழ்ச்சி “நல்லது.. ஏழரை நாழிகையில் அவனைப்படுத்தும் பாட்டைக் காண தயாராக இருங்கள். வருகிறேன்” என்று சொல்லி அங்கிருந்து புறப்பட்டார் சனி.
பெருமூச்சு விட்ட பெருமாளும், நடப்பதைக் காணும் ஆவலில் பூலோகம் வந்தார்.
அங்கு கடமையே என்று விஷ்ணு சுலோகங்கள் சொல்லி, காலை வழிபாட்டை முடித்த ராதாகிருஷ்ணன் புதியதாக கட்டத் தொடங்கி இருக்கும் ஆலயத்தின் கணக்குகளை பார்க்கத் தொடங்கினார். இதுதான் சமயமென்று அவரைப் பிடித்தார் சனீஸ்வரன்.
அப்போது அங்கு வந்த இருவர் நன்கொடை என்று சொல்லி ஒரு மூட்டையை அவரிடம் தந்து வணங்கி விட்டு அவசரமாக சென்றனர். அதை அப்புறம் பிரிக்கலாம் என்றெண்ணி, மீண்டும் கணக்குகளை பார்க்கத் தொடங்கியவரை மீண்டும் அழைத்தது ஒரு குரல்.
நிமிர்ந்து பார்த்தவரை என்னவென்று கேள்வி எழுப்பக்கூட அனுமதிக்காமல், அடித்து துவைத்து அரசவைக்கு இழுத்துச்சென்று, அரசன் முன் நிறுத்தினான் ஒரு காவலாளி.
அங்கு இருந்த பணக்கார சீமாட்டி, “இதோ.. இவர்தான் கடைசியாக கோவிலுக்கு நன்கொடை என்று என் இல்லத்திற்கு வந்தவர். இவர்தான் அந்த நகைகளை எடுத்திருக்க வேண்டும்” என்று குற்றம் சாட்டினாள்.
ராதாகிருஷ்ணன் பதறினார். “ஐயோ! என்ன இது. நான் எதற்கு உங்கள் நகைகளை எடுக்கிறேன். பகவான் புண்ணியத்தில் மூன்று வேளை உணவுடன், இருக்க ஆலயம், உடுக்க காவித் துணி உள்ளது. எனக்கு எதற்கு உங்கள் நகை. நான் குற்றமற்றவன்.”
ஆனால் ராதாகிருஷ்ணன் இருந்த இடத்தில் இருந்து, காவலாளி கொண்டு வந்திருந்த மூட்டை, அந்தப் பெண்மணியின் குற்றச்சாட்டை நிரூபிப்பதாக இருந்தது. அதற்குள் அந்தப் பெண்மணியின் நகைகள் இருந்தன.
சனீஸ்வரனின் விளையாட்டு தொடங்கி விட்டது..
நகைகளைத் திருடிய குற்றத்திற்காக ராதாகிருஷ்ணனுக்கு சவுக்கடிகளும் சாணிக்கரைசலும் பொதுமக்கள் முன்னிலையில் நிறைவேற்றப்பட்டது. ஊர் மக்கள் அவரைத் தூற்றினர்.
மனம் ஒடிந்த அந்த விஷ்ணு பக்தர்கள் ஆலய திருக்குளம் முன்பாக நின்றார். “பெருமாளே! என் நினைவு தெரிந்த நாள் முதல் உன்னைத்தவிர வேறொன்றும் என் சிந்தையில் நிறுத்தியதில்லை. இந்தப் பழியையும் நீ எனக்குத் தந்த பரிசாகவே நினைக்கிறன். ஆனாலும் பழியோடு வாழ்வதை விட உன் காலடியில் சேர்கிறேன்” என்றபடி குளத்தில் மூழ்கி இறக்கப் போனார்.
அப்போது ஒரு அசரீரி அவரை தடுத்து நிறுத்தியது. ‘நான் சனீஸ்வரன்! உங்களின் இந்த துயரத்துக்கு நானே காரணம். பெருமாள் மீதான உங்களின் பக்தியால் பெருமாளின் வேண்டுகோளை ஏற்று வெறும் ஏழரை நாழிகை மட்டுமே, இத்துன்பங்களை நீங்கள் அனுபவிக்க நேர்ந்தது. இனி உங்கள் மேல் உள்ள பழிச்சொல் நீங்கும்.”
அந்த நேரத்தில் அங்கு வந்து சேர்ந்தனர், அரசரும், பணக்கார பெண்மணியும். சற்று முன்புதான் நகையைத் திருடிய உண்மையான திருடர்கள் பிடிப்பட்டதாகவும், அவர்கள் தான் நகையை வைத்திருந்தால் மாட்டிக்கொள்வோம் என ரதாகிருஷ்ணனிடம் நன்கொடையாக அளித்ததை ஒப்புக்கொண்டதையும் தெரிவித்தனர். இருவரும் அந்த பக்தரிடம் மன்னிப்பும் கோரினர். ஊர் மக்களுக்கு விஷயம் தெரிந்து அனைவரும் விஷ்ணு பக்தரை மரியாதையோடு வரவேற்றனர்.
மும்மூர்த்திகளில் ஒருவரான சிவபெருமான் எத்தனை எத்தனை அரிய வடிவங்கள்..! அந்த அரிய வடிவங்கள் என்னென்ன? அவர் எங்குக் கோயில் கொண்டுள்ளார் என்பதைப் பற்றி பார்ப்போம்.
பிரம்மா, விஷ்ணு, மகேஸ்வரன் ஆகிய மும்மூர்த்திகளில் ஒருவரான சிவபெருமான் எத்தனை எத்தனை அரிய வடிவங்கள்..! வார்த்தைகளில் வர்ணிக்க முடியாத பரம்பொருள் நம் ஈசன். அந்த அரிய வடிவங்கள் என்னென்ன? அவர் எங்குக் கோயில் கொண்டுள்ளார் என்பதைப் பற்றி பார்ப்போம்.
* பிருங்கி முனிவர் வண்டு வடிவெடுத்து சிவ பெருமானை வழிபட்டதால் சிவ லிங்கத்தில் வண்டு துளைத்த அடையாளம் ஏற்பட்டது. இந்த அரிய வடிவினை நாம் திருநல்லூரில் காணலாம். இங்கு இறைவன் பஞ்சவர்ணேஸ்வரர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.
* நீடூரில் ஒரு நண்டு சிவபெருமானை வணங்கியதால் சிவலிங்கத்தின் உச்சியில் நண்டு வளை உள்ளது. இங்கு சுவாமியின் பெயர் அருட்சோமநாதர்.
* ரத்தினம் வேண்டிய ஒரு அரசனை இறைவன் சோதித்தபோது அவனுடைய வாளால் வெட்டப்பட்ட லிங்கத் திருமேனியை ரத்தினகிரியில் காணலாம். இங்கு சிவபெருமான் ரத்தினகிரீஸ்வரர் என்ற பெயருடன் காட்சி தருகிறார்.
* தலைச்சங்காட்டில் திருமால், சிவபெருமானை வழிபட்டு, பாஞ்சஜன்ய சங்கைப் பெற்றதால் அங்கு சங்கு வடிவில் மூலவராகக் காட்சியளிக்கிறார் ஈசன். இறைவனுடைய பெயர் சங்காரண்யேஸ்வரர்.
* கேரள மாநிலம் திருச்சூரில் வடக்குநாதர் சுவாமி கோயிலில் சிவன் நெய் மலையாகக் காட்சி தருகிறார். ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த லிங்கம் இது.
* அமர்நாத்தில் உள்ள பனிலிங்கம் சந்திரனைப்போலவே 15 நாளில் வளர்ந்து பௌர்ணமியில் முழு லிங்கமாகவும் அடுத்த 15 நாளில் தேய்ந்து அமாவாசையில் மறைவதும் சிறப்பம்சம்.
* கரூர் பசுபதீஸ்வரர் கோயிலில் சிவலிங்கம் வடதுபுறம் சாய்ந்திருப்பதைக் காணலாம்.
* அர்ஜுனனின் அம்புபட்ட லிங்கத்தை திருவிஜயமங்கையில் தரிசிக்கலாம். இங்கு இறைவன் விஜயநாதேஸ்வரர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.
* செம்பனார்கோயிலில் உள்ள சிவபெருமான் சொர்ணபுரீஸ்வரர் என்ற பெயருடன் 32 இதழ்களை உடைய தாமரை வடிவ ஆவுடையாரில் சுயம்பு லிங்கமாக எழுந்தருளியிருக்கிறார்.
* காஞ்சிபுரத்தில் உள்ள கைலாசநாதர் ஆலயத்தில் சிவன் எட்டுக்கைகளுடன் சிற்பமாகக் காட்சியளிக்கிறார்.
* மகாராஷ்டிரா மாநில எல்லோரோ குகைகளுக்கு அடுத்து உள்ள “குஸ்மேசம்’ என்னும் ஊரில் உள்ள சிவலிங்கம் குங்குமத்தால் ஆனது.
* பொதுவாகப் பெருமாள் கோயிலில்தான் சடாரி வைப்பார்கள். ஆனால் மூன்று சிவன் கோயில்களில் மட்டும் சடாரி வைக்கப்படுகிறது. அவை காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோயில், காளஹஸ்தி கோயில், மற்றும் சுருட்டப்பள்ளி சிவன் கோயில் ஆகும்.
* திருவக்கரை வக்கிரகாளியம்மன் கோயிலில் உள்ள சிவபெருமானது பெயர் சந்திரமௌலீஸ்வரர். அவர் மும்முகலிங்கமாக தரிசனம் அளிக்கிறார். அதில் கிழக்கு முகம் தத்புருஷ லிங்கம் என்றும், வடக்கு முகம் வாமதேவ முகமாகவும், தெற்கு முகம் அகோர மூர்த்தியாகவும் வணங்கப்படுகின்றனர்.
* ஆலகால நஞ்சை உண்ட சிவபெருமான் அம்பிகையின் மடியில் சயனித்திருக்கும் அரிய காட்சியை காசியில் உள்ள "அனுமன் காட்"டில் காமகோடீஸ்வரர் கோயிலில் காணலாம். ஆந்திர மாநிலம் சுருட்டப்பள்ளியிலும் பள்ளிகொண்டீஸ்வரர் தரிசனம் கிடைக்கிறது.
* பெங்களூருக்கு அருகே சிவகெங்கா என்ற இடத்தில் சிவலிங்கத்தின் மேல் நெய்யை வைத்தால் வெண்ணெய்யாக மாறுகிறது. இந்த வெண்ணெய்யை வீட்டுக்குக் கொண்டு வரலாம். எத்தனை நாள் ஆனாலும் வெண்ணெய் உருகுவதில்லை.
* தாராசுரத்தில் உள்ள ஐராவதேஸ்வரர் கோயிலில் உள்ள ராஜகம்பீர மண்டபத்தில் மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர் இருக்கிறார்.
* ஐந்துமுகம் கொண்ட சிவபெருமான் ஏழு தலங்களில் அருள்புரிகிறார்.
1. காசி, 2. நேபாளம், 3. காளஹஸ்தி, 4. திருவானைக்காவல், 5. சித்தேஸ்வர் மகாதேவ், 6. ராசிபுரம், 7. காஞ்சி கைலாசநாதர் கோயில்.
* தஞ்சை மாவட்டம் குடவாசல் அருகே உள்ளது நாலூர் திருமயானம். இங்கு உள்ள சுயம்பு லிங்கத்தின் மேற்பகுதி பலாபழம் போன்று முள்ளுமுள்ளாக உள்ளது. சுவாமியின் பெயர் பிலாச வனேஸ்வரர்.
* காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கு தெற்கே சிறிது தூரத்தில் "ஜ்வரஹரேஸ்வரர்" என்ற பெயருடன் ஈசன் எழுந்தருளியுள்ளார். வேலூர் கோட்டை கோயிலிலும் மூன்று கால்களுடன் ஜ்வரஹரேஸ்வரர் காட்சியளிக்கிறார்.
* மயிலாடுதுறை அருகே திருவிற்குடியில் உற்சவமூர்த்தியான சிவபெருமான் திருக்கரத்தில் சக்கரம் ஏந்தி நிற்கும் காட்சியைக் காணலாம். வலது மேல்கரத்தில், மழுவும், இடது மேல் கரத்தில் மானும் வைத்திருக்கின்றார். இங்கு சிவனுக்கு துளசியால் அர்ச்சனை செய்கின்றனர்.
* பிருங்கி முனிவர் வண்டு வடிவெடுத்து சிவ பெருமானை வழிபட்டதால் சிவ லிங்கத்தில் வண்டு துளைத்த அடையாளம் ஏற்பட்டது. இந்த அரிய வடிவினை நாம் திருநல்லூரில் காணலாம். இங்கு இறைவன் பஞ்சவர்ணேஸ்வரர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.
* நீடூரில் ஒரு நண்டு சிவபெருமானை வணங்கியதால் சிவலிங்கத்தின் உச்சியில் நண்டு வளை உள்ளது. இங்கு சுவாமியின் பெயர் அருட்சோமநாதர்.
* ரத்தினம் வேண்டிய ஒரு அரசனை இறைவன் சோதித்தபோது அவனுடைய வாளால் வெட்டப்பட்ட லிங்கத் திருமேனியை ரத்தினகிரியில் காணலாம். இங்கு சிவபெருமான் ரத்தினகிரீஸ்வரர் என்ற பெயருடன் காட்சி தருகிறார்.
* தலைச்சங்காட்டில் திருமால், சிவபெருமானை வழிபட்டு, பாஞ்சஜன்ய சங்கைப் பெற்றதால் அங்கு சங்கு வடிவில் மூலவராகக் காட்சியளிக்கிறார் ஈசன். இறைவனுடைய பெயர் சங்காரண்யேஸ்வரர்.
* கேரள மாநிலம் திருச்சூரில் வடக்குநாதர் சுவாமி கோயிலில் சிவன் நெய் மலையாகக் காட்சி தருகிறார். ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த லிங்கம் இது.
* அமர்நாத்தில் உள்ள பனிலிங்கம் சந்திரனைப்போலவே 15 நாளில் வளர்ந்து பௌர்ணமியில் முழு லிங்கமாகவும் அடுத்த 15 நாளில் தேய்ந்து அமாவாசையில் மறைவதும் சிறப்பம்சம்.
* கரூர் பசுபதீஸ்வரர் கோயிலில் சிவலிங்கம் வடதுபுறம் சாய்ந்திருப்பதைக் காணலாம்.
* அர்ஜுனனின் அம்புபட்ட லிங்கத்தை திருவிஜயமங்கையில் தரிசிக்கலாம். இங்கு இறைவன் விஜயநாதேஸ்வரர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.
* செம்பனார்கோயிலில் உள்ள சிவபெருமான் சொர்ணபுரீஸ்வரர் என்ற பெயருடன் 32 இதழ்களை உடைய தாமரை வடிவ ஆவுடையாரில் சுயம்பு லிங்கமாக எழுந்தருளியிருக்கிறார்.
* காஞ்சிபுரத்தில் உள்ள கைலாசநாதர் ஆலயத்தில் சிவன் எட்டுக்கைகளுடன் சிற்பமாகக் காட்சியளிக்கிறார்.
* மகாராஷ்டிரா மாநில எல்லோரோ குகைகளுக்கு அடுத்து உள்ள “குஸ்மேசம்’ என்னும் ஊரில் உள்ள சிவலிங்கம் குங்குமத்தால் ஆனது.
* பொதுவாகப் பெருமாள் கோயிலில்தான் சடாரி வைப்பார்கள். ஆனால் மூன்று சிவன் கோயில்களில் மட்டும் சடாரி வைக்கப்படுகிறது. அவை காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோயில், காளஹஸ்தி கோயில், மற்றும் சுருட்டப்பள்ளி சிவன் கோயில் ஆகும்.
* திருவக்கரை வக்கிரகாளியம்மன் கோயிலில் உள்ள சிவபெருமானது பெயர் சந்திரமௌலீஸ்வரர். அவர் மும்முகலிங்கமாக தரிசனம் அளிக்கிறார். அதில் கிழக்கு முகம் தத்புருஷ லிங்கம் என்றும், வடக்கு முகம் வாமதேவ முகமாகவும், தெற்கு முகம் அகோர மூர்த்தியாகவும் வணங்கப்படுகின்றனர்.
* ஆலகால நஞ்சை உண்ட சிவபெருமான் அம்பிகையின் மடியில் சயனித்திருக்கும் அரிய காட்சியை காசியில் உள்ள "அனுமன் காட்"டில் காமகோடீஸ்வரர் கோயிலில் காணலாம். ஆந்திர மாநிலம் சுருட்டப்பள்ளியிலும் பள்ளிகொண்டீஸ்வரர் தரிசனம் கிடைக்கிறது.
* பெங்களூருக்கு அருகே சிவகெங்கா என்ற இடத்தில் சிவலிங்கத்தின் மேல் நெய்யை வைத்தால் வெண்ணெய்யாக மாறுகிறது. இந்த வெண்ணெய்யை வீட்டுக்குக் கொண்டு வரலாம். எத்தனை நாள் ஆனாலும் வெண்ணெய் உருகுவதில்லை.
* தாராசுரத்தில் உள்ள ஐராவதேஸ்வரர் கோயிலில் உள்ள ராஜகம்பீர மண்டபத்தில் மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர் இருக்கிறார்.
* ஐந்துமுகம் கொண்ட சிவபெருமான் ஏழு தலங்களில் அருள்புரிகிறார்.
1. காசி, 2. நேபாளம், 3. காளஹஸ்தி, 4. திருவானைக்காவல், 5. சித்தேஸ்வர் மகாதேவ், 6. ராசிபுரம், 7. காஞ்சி கைலாசநாதர் கோயில்.
* தஞ்சை மாவட்டம் குடவாசல் அருகே உள்ளது நாலூர் திருமயானம். இங்கு உள்ள சுயம்பு லிங்கத்தின் மேற்பகுதி பலாபழம் போன்று முள்ளுமுள்ளாக உள்ளது. சுவாமியின் பெயர் பிலாச வனேஸ்வரர்.
* காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கு தெற்கே சிறிது தூரத்தில் "ஜ்வரஹரேஸ்வரர்" என்ற பெயருடன் ஈசன் எழுந்தருளியுள்ளார். வேலூர் கோட்டை கோயிலிலும் மூன்று கால்களுடன் ஜ்வரஹரேஸ்வரர் காட்சியளிக்கிறார்.
* மயிலாடுதுறை அருகே திருவிற்குடியில் உற்சவமூர்த்தியான சிவபெருமான் திருக்கரத்தில் சக்கரம் ஏந்தி நிற்கும் காட்சியைக் காணலாம். வலது மேல்கரத்தில், மழுவும், இடது மேல் கரத்தில் மானும் வைத்திருக்கின்றார். இங்கு சிவனுக்கு துளசியால் அர்ச்சனை செய்கின்றனர்.
காசியப முனிவருக்கும் வினதை என்பவருக்கும் பிறந்தவர் கருடன். இவர் மகா விஷ்ணுவின் முதன்மை வாகனமாக உள்ளவர். மகாவிஷ்ணுவின் அன்பைப் பெற்றார்.
மகா விஷ்ணுவின் முதன்மை வாகனமாக உள்ளவர் கருடன். இவர் காசியப முனிவருக்கும் வினதை என்பவருக்கும் பிறந்தவர். இவர் பிறக்கும் போது இவரின் இறக்கைகள் பிரகாசமாக மின்னியது. இதனால் இவரை அக்னி தேவரின் அவதாரமாக நினைத்தனர்.
நாகதேவர்களின் தாயான கத்ருவிடம் அடிமையாக இருந்த தன் தாயை மீட்பதற்காக, தேவலோகம் சென்று அமிர்தத்தைக் கொண்டு வர முடிவு செய்தார். அமிர்தத்தை மீட்க வேண்டுமானால் தேவர்களுடன் போர்புரிய வேண்டியதிருந்தது.
இந்திரன் முதலான தேவர்களுடன் போரிட்டு வென்று, அமிர்தம் கொண்டு வந்து தாயை மீட்டார். இருப்பினும் அந்த அமிர்தத்தை நாகர்கள் சாப்பிட முடியாதபடி, மீண்டும் தேவர்களிடமே கொண்டுபோய் சேர்த்தார். இதனால் மகாவிஷ்ணுவின் அன்பைப் பெற்றார். அவருக்கு வாகனமாக இருக்கும் பெரும்பேற்றை அடைந்தார்.
நாகதேவர்களின் தாயான கத்ருவிடம் அடிமையாக இருந்த தன் தாயை மீட்பதற்காக, தேவலோகம் சென்று அமிர்தத்தைக் கொண்டு வர முடிவு செய்தார். அமிர்தத்தை மீட்க வேண்டுமானால் தேவர்களுடன் போர்புரிய வேண்டியதிருந்தது.
இந்திரன் முதலான தேவர்களுடன் போரிட்டு வென்று, அமிர்தம் கொண்டு வந்து தாயை மீட்டார். இருப்பினும் அந்த அமிர்தத்தை நாகர்கள் சாப்பிட முடியாதபடி, மீண்டும் தேவர்களிடமே கொண்டுபோய் சேர்த்தார். இதனால் மகாவிஷ்ணுவின் அன்பைப் பெற்றார். அவருக்கு வாகனமாக இருக்கும் பெரும்பேற்றை அடைந்தார்.
கந்தபெருமானின் திருநாமங்கள் ஒவ்வொன்றும், அடியார்கள் மீது அவர் காட்டுகிற கருணையையும் அடியார்களுக்காக அவர் எடுக்கும் வடிவங்களையும் பிரதிபலிப்பவை.
கந்தபெருமானின் திருநாமங்கள் ஒவ்வொன்றும், அடியார்கள்மீது அவர் காட்டுகிற கருணையையும் அடியார்களுக்காக அவர் எடுக்கும் வடிவங்களையும் பிரதிபலிப்பவை.
ஆறுமுகன், ஷண்முகன், ஷடானனன் (ஷட்=ஆறு, ஆனனம்=முகம்) - மூவிரு முகங்கள் கொண்டவர்;
அக்னிபூ - நெருப்பு வடிவான நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றியவர்;
சிவகுமாரன், குமாரன் - சிவனாருடைய மகனாகத் தோன்றியவர்;
பார்வதி நந்தனன், பார்வதிப் பிரியன் - அம்பிகைக்கு மகிழ்ச்சியைத் தருபவர்;
காங்கேயன் - கங்கையின் மகன் அல்லது கங்கையால் தோற்றுவிக்கப்பட்டவர் (கங்கைக் கரையில் நெருப்புப் பொறி குளிர்ந்ததால்);
சரவணன், சரவணகுமாரன் - நாணல் காட்டில் உருவெடுத்தவர்;
கார்த்திகேயன் - கார்த்திகைப் பெண் களால் வளர்க்கப்பட்டவர்;
ஷாண்மாதுரன் - ஆறு தாயர்களைக் கொண்டவர்;
விசாகன் - (வைகாசி) விசாகத் திரு நாளில் தோன்றியவர்;
முருகன் - அழகானவர்;
சேயோன் - குழந்தை வடிவானவர்; செம்மையானவர்;
செவ்வேள் - செந்நிறத்தவர்;
கந்தன் - முழுமையானவர்; ஆதாரமானவர்;
ஸ்கந்தன் - தொகுக்கப்பட்டவர்; தீமையை அழிப்பவர்;
குஹன் - இதய குகையில் வழிப்பவர்;
தகப்பன்சுவாமி, சுவாமிநாதன் - தந்தைக்கு (அதாவது, சிவனாரான சுவாமிக்கு) உபதேசம் செய்த நாதர்;
இளம்பூரணர் - முழுமையானவர், ஆனால், இளமை வடிவம் கொண்டவர்;
தண்டபாணி, தண்டாயுதபாணி - கையில் கோல் கொண்டவர்;
வேலன், வடிவேலன், வேலவன், வேலாயுதன் -வேல் என்னும் ஆயுதம் தாங்கியவர்;
சேனானி, சேனாபதி, சேனாதிபதி - இந்திரனின் படைகளின் தலைவர்;
முத்துக்குமரன் - முக்தியைத் தருகிற குமாரர்; முத்து போன்றவர்;
சேனாபதி - தேவசேனையான தெய் வானையின் மணாளர்;
வள்ளீசன், வள்ளிமனாளர், வள்ளி நாயகம் - வள்ளியின் மணாளர்;
மயில் வாஹனன், சிகி வாஹனன் (சிகி-=மயில்), மயூரநாதர் - மயிலை வாகன மாகக் கொண்டவர்;
கஜ வாஹனன் - (சில சமயங்களில்) யானையை வாகனமாகக் கொண்டவர்;
அஜ வாஹனன் - (சில சமயங்களில்) ஆட்டை வாகனமாகக் கொண்டவர்
சேவற்கொடியோன், குக்குடத்வஜன் - சேவலைத் தம்முடைய கொடியில் கொண்டவர்;
தாரகாரி - தாரகாசுரனை அழித்தவர்;
கிரௌஞ்சாரி, கிரௌஞ்சபித் - கிரௌஞ்ச மலையைப் பிளந்தவர்;
சூராரி, சூரஜித் - சூரனை வென்றவர்
இப்படிப்பட்ட ஏராளமான திரு நாமங்களில் முக்கியமான 16 திருநாமங்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றை ஜபிப் பவர்களுக்கான நற்பலன்களையும் வடமொழியிலுள்ள ஸ்காந்தமஹாபுராணம் நவில்கிறது. ஞான சக்தி ஆத்மா, ஸ்கந்தன், அக்னிபூ, பாஹலேயன், காங்கேயன், சரவண உத்பவன், கார்த்திகேயன், குமாரன், ஷண்முகன், குக்குடத்வஜன், சக்திதரன், குகன், பிரம்மசாரீ, ஷாண் மாதுரன், கிரௌஞ்சபித், சிகிவாஹனன்
-இந்தத் திருநாமங்களை நாள்தோறும் ஓதினால் என்ன கிட்டும்? விவாஹே துர்கமே மார்கே துர்ஜயே கவித்வே மஹா சாஸ்த்ரே வின்ஞானார்த்தீ பலம் லபேத் - திருமணம் நடைபெறும், திரு மணம் நற்பலனைத் தரும்; செல்லும் வழி நன்மையைப் பயக்கும்; செயல்கள் வெற்றி பெறும், வெல்ல முடியாததாகத் தோன்றியதும் வெற்றியைக் கொடுக்கும்; அறிவும் ஞானமும் பாண்டித்யமும் கைகூடும்; நல்ல நெறிகளின் பயன் கிட்டும். மொத்தத்தில், யாவும் நன்மை யாகவே அமையும்.
பார்வதியும் பரமேச்வரனும் முருகப் பெருமானின் பெருமைகள்குறித்து உரையாடியபோது, கந்தன் எடுத்துக் கொண்ட திருவடிவம் குறித்தும் குறிப்பிடுகிறார்கள். ஷட்வக்த்ர, துவாதச புஜ, அஷ்டாதச லோசன, அநுக்ரஹாய லோகானாம் ரூபம் அங்கீக்ருதம் சுபம் - ஆறுமுகங்கள், பன்னிரு தோள்கள், பதினெட்டுக் கண்கள் என்னும் அழகுத் திருக்கோலத்தை முருகப்பெருமான் ஏன் கொண்டாராம் தெரியுமா? இந்த உலகைக் காப்பதற்காகவும் அடியார்களுக்கு அருள் பாலிப்பதற்காகவும்!
ஆறுமுகங்களும் பன்னிரு தோள்களும் சரி, பதினெட்டுக் கண்கள் எப்படி? முருகப்பெருமான், சாட்சாத் சிவ அம்சம். சிவனாகத் தோற்றம் தருகிற பரம்பொருள், சிவகுமாரராகவும் தோற்றம் தருகிறது. பரம்பொருளுக்கே ‘பூரணர்’ என்று பெயர். இதே பரம்பொருள், இளமையான வடிவம் கொள்வதால், ‘இளம்பூரணர்’ ஆகிறார். சிவனுக்கு நெற்றிக்கண் இருப்பது போலவே, முருகருக்கும் உண்டு. ஆகவே, ஆறு முகங்கள் ஒவ்வொன்றிலும் மும்மூன்று திருவிழிகள் என்பதால், மொத்தம் 18 கண்கள்.
இந்த 18 திருவிழிகளைப் பற்றி முருகரே மொழிந்ததாகவும் தகவல் ஒன்றுண்டு. ‘பதினெட்டுக் கண்களோடு அவதார வடிவம் கொள்ளவேண்டுமா?’ என்று வினவினார்களாம். கந்தக்கடவுள் கூறினாராம்: இரு விழிகள் உள்ள் வடிவத்தில் அவதாரம் எடுத்தால், பூவுல கிற்குப் போதாது. அடியார்கள் ஒவ் வொருவரும் கடைக்கோடிப் பார்வையைக் கொடு என்றுதான் அடிபணிகிறார்கள். அனைவருக்கும் பார்வையை வீசவேண்டு மானால்,நிறைய கண்கள் இருந்தால் வசதி. குறைந்தபட்சம், பதினெட்டுக் கண்களாவது இருக் கட்டுமே!
அடடா, அடியார்கள்மீதுதான் இந்தக் கலியுக வரதனுக்கு எத்தனை கருணை! அருணகிரிநாதருக்காக கோபுரத்தின் மீது தோன்றி காட்சி கொடுத்தது, இராமலிங்க வள்ள லாருக்குக் கண்ணாடியில் காட்சி கொடுத்து அருளி யது, கச்சியப்பருக்காக இலக்கணம் செப் பியது, குமரகுருபரருக்குச் சொல் கொடுத்தது என்று முருகப்பெருமான் செய்திருக்கும் திருவிளையாடல்களும் அநேகம்.
முருகப்பெருமானின் அடியார்களின் வரிசையில், சமீப கால வரலாற்றில், ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகளுக்குத் தனிச் சிறப்பிடம் உண்டு. 19ஆம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் இராமேச்வரத்தில் தோன்றிய பாம்பன் சுவாமிகள், உடலுக்கும் உள்ளத்துக்கும் முருகப்பெருமானே பாதுகாப்பு என்னும் பொருள்படும்படியாக ஷண்முகக் கவசம் என்னும் தோத்திரத்தை இயற்றினார். இவருடைய வாழ்க்கையில் கந்தபிரான் செய்த அற்புதங்கள் எண்ணற்றவை.
இவருடைய மகள் ஒருநாள் வயிற்று நோயால் அழுதுகொண்டேயிருந்தாள். வைத்தியரிடம் போகலாம் என்று மனைவி சொல்ல, அதனை மறுதலித்த இவர், முருகரைப் பிரார்த்திக்கச் சொன்னார். அன்று மாலை; குழந்தை ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருக்க.என்ன என்று இவர் வினவ. முருக தியானத்தில் இவர் அமர்ந்த சிறிது நேரத்திற்கெல்லாம் சந்நியாசி ஒருவர் வந்து குழந்தைக்குத் திருநீறு பூசியதாகவும் அதன் பின்னர் குழந்தை அழுகையை விடுத்துச் சிரித்து விளையாடி உறங்கிவிட்டதாகவும் மனைவி கூறினார். வந்தது முருகனோ?
இவருக்காகச் செருப்புத் தைக்கச் சொன்னது, குமரகோட்டத்திற்கு வழி காட்டியது, பழனியாண்டியாகத் தோன்றி உபதேசம் தந்தது என்று தொடர்ந்து நடைபெற்ற அற்புதங்களில் தலையாயது, 1923-ல் நடந்த சிகிச்சை. சென்னையில் தங்கியிருந்த காலத்தில், 1923, டிசம்பர் 27ஆம் நாள், தம்புச் செட்டித் தெருவில், குதிரை வண்டி ஒன்றினால் கீழே தள்ளப்பட்டார் பாம்பன் சுவாமிகள். இடது கணுக்காலில் கடுமையான காயம். வண்டிச் சக்கரம் காலில் ஏறிவிட்டது. சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ரணம் சரியாக ஆறாத நிலையில், எலும்புகளிலும் உடைப்பு ஏற்பட்டிருந்ததால், 73 வய தான இந்த நோயாளிக்கு எலும்புகள் கூடுவதற்கு வாய்ப்பில்லை, ஆகவே இடது கணுக்கால் அளவில் வெட்டி எடுத்துவிடவேண்டும் என்று மருத்து வர்கள் கூறினர்.
இவருடைய சீடராகவும் நண்பராகவும் விளங்கிய சின்னசுவாமி என்பவர், பிறருக்கு உதவிய ஷண்முகக் கவசம் இவருக்கே உதவலாகாதா என்னும் ஆதங்கத்துடன் அதனை ஓதத் தொடங்கினார். அறுவை சிகிச் சைக்கு உடன்படாத சுவாமிகள், எது நடந்தாலும் அது இறைவன் சித்தம் என்று கூறிவிட்டு, முருகப்பெருமான் திருநாமத்தை ஜபித்தபடி இருந்தார். மருத்துவமனையில் சுவாமிகள் அனு மதிக்கப்பட்ட 11--வது நாள் மாலை, மயில் அகவும் குரல் கேட்டது. சுவாமிகள் சாளரத்தைத் திரும்பிப் பார்க்க, தோகை விரித்த மயிலொன்று வானை மறைத்தபடி நின்றது.
அருகில் மற்றொரு மயில் தோகை விரித்தாடியது. மயூரநாதரே வந்துவிட்டார் என்று சுவாமிகள் மகிழ்ந்த வேளையில் காட்சி மறைந்தது. கண்விட்டு மறைந்தாயே என்று சுவாமிகள் வருத்தப் பட்டார். சிறிது நேரத் தில் குழந்தை ஒன்று இவருடைய கட்டிலில் சிரித்தது. சிவந்த அக்குழந்தையே செவ்வேள் என்று ணரும் தருணத்தில் மறைந்தது. மறுநாள் சுவாமிகளைப் பரிசோதித்த மருத்து வர்கள், உடைந்துபோன எலும்புகள் ஒன்றுகூடி விட்டதாகவும் காலை வெட்டவேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவித்தனர்.
மயில்வாகனன் மயிலாகவும் குழந்தையாகவும் காட்சி கொடுத்துப் பிணி போக்கிய அந்நாளை நினைவுகூரும் விதத்தில், சுவாமிகளின் ஆணைப்படியே மயூர வாகன சேவன விழா கொண்டாடப் படலானது. சுவாமிகள் அனுமதிக்கப்ப ட்டிருந்தது அப்போதைய மன்ரோ வார்டு (பின்னாட்களில், இது வார்டு-11 என்றானது). சுவாமிகளின் படுக்கை எண் 11. மயில்கள் ஆடிய சம்பவம் நடந்தது 6.1.1924 (அனுமதிக்கப்பட்ட 11-வது நாள்). பூராட நட்சத்திரமும் பிரதமைத் திதியும் கூடிய அந்நாளை ஒட்டி, இப்போதும் சென்னை பாம்பன் சுவாமிகள் திருக்கோவிலில் மார்கழி மாத வளர்பிறைப் பிரதமையில் மயூர வாகன சேவன விழா நடைபெறுகிறது.
நக்கீரர் பாடிய திருமுருகாற்றுப் படையில், இரண்டாவது படைவீடாக இடம்பெறுவது திருச்சீரலைவாய் என்னும் திருச்செந்தூர். இங்கு, இன்றளவும் சூர சம்ஹாரப் பெருவிழா வெகு கோலாகலமாக நடைபெறுகிறது. வீரமகேந்திரபுரியில் சூரனை அழித்து, வீரமகேந்திரபுரியையே கடலுக்குள் அமிழ்த்திவிட்டு (அப்படியரு ஊரும் ஆணவமும் வேண்டாமென்று), வெற்றிவீரராகக் கந்தக் கடவுள் திருச்செந்தூர் திரும்பினார்; இங்கு,கைகளில் ஜபமாலை ஏந்திச் சிவபெருமானை வணங்கித் துதித்தார்.
எனினும், என்றைக்கோ ஆணவ மொழித்த சூரனை நினைவு கூர்வதுபோலவும், இப்போது ஆணவ மொழிப்பதற்காகவும், திருச்செந்தூரில் சூர சம்ஹாரப் பெருவிழா நிகழ்த்தப் பெறுகிறது.
ஏறுமயிலேறி விளையாடும் முகம் ஒன்று
ஈசருடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்று
கூறும் அடியார்கள் வினை தீர்த்த முகம் ஒன்று
குன்றுருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்று
மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்று
வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்று
- கந்தக் கடவுளின் ஆறு திருமுகங்களுக்கும் அழகு கூறுகிறார் அருணகிரியார். அழகுக்கு அழகு சேர்க்கும் விதமாகக் கந்தர் அனுபூதியில், ‘உல்லாச நிராகுல யோக இதச் சல்லாப வினோதனும் நீயலையோ’ என்றும் பாராட்டுகிறார்.
சூரசம்ஹாரப் பெருவிழாவில் ஆறாம் நாள் (கந்த சஷ்டி ஆறாம் நாள்) சூரன் சம்ஹரிக்கப்பட்டபின்னர், ஏழாம் நாள் திருக்கல்யாண வைபவம் நடைபெறும். தன்னுடைய செல்வங்களையும் பதவியையும் தேவலோகத்தையும் முருகப்பெருமான் மீட்டுத் தந்தார் என்பதால், தன்னுடைய மகள் தெய்வானையைத் திருமணம் செய்து தந்தானாம் தேவேந்திரன். இந்தத் திருமணம் திருப்பரங்குன்றத்தில் நடைபெற்றது. பின்னர், பரிபூரணம் என்றழைக்கப்படும் தணிகை மலையில் எழுந்தருளி, அன்பின் நாயகியாம் வள்ளியைச் சந்தித்து அவளையும் கைப்பிடிக்கிறார் கந்தபிரான்.
திருமாலின் ஆனந்தக் கண்ணீர்த் துளிகளிலிருந்து தோன்றியவர்கள் அம்ருதவல்லியும் சௌந்தரவல்லியும். இருவரும் கந்தனையே மணாளனாக வரிக்க, உள்ளத்து ஆசையை நிறைவேற்றிக் கொள்ள இருவரையும் வெவ்வேறு இடங்களுக்கு அனுப்பினார் அந்தப் பரந்தாமன். அம்ருதவல்லி, தேவேந்திரன் மகளாக வளர்வதற்குச் சென்றாள். சௌந்தரவல்லி, வள்ளிக் கொடியின் கீழ் குழவியாகத் தோன்றி, வேடுவத் தலைவன் நம்பிராஜன் மகளாக வளரத் தலைப்பட்டாள். ஒருத்தி தேவமகளானாள்; ஒருத்தி ஜீவ மகளானாள்.
இந்திரனின் ஐராவத யானை, இந்திரன் மகளைச் செல்லமாகப் பார்த்துக் கொண்டதாம்; எனவே, யானை வளர்த்ததால் அவள் ‘தெய்வ யானை’ ஆனாள். தேவசேனா என்றும் அழைக்கப்பட்டாள். முருகர்-தெய்வானை திருமணம் பல்லோரும் புடைசூழ விமரிசையாக நடந்தேறியது.
ஆனால், வள்ளி கதையோ வேறு. அவளைக் கரம்பிடிக்க வேண்டுமென்று பற்பல வேடங்களிட்டார் பரிபூரண நாயகர். வேடன் ஆனார், மரம் ஆனார், கிழவர் ஆனார். இதன் பின்னரும், வள்ளியை அழைத்துக் கொண்டு சென்றபோது, அவளுடைய சொந்தக் காரர்கள் சண் டைக்கு வந்தனர். அவர்களோடு போரிட்டு வெல்ல, அவர்களைக் காப்பாற்றும்படி வள்ளியே அழுதாள். அவளையே அவர்களை நோக்கச் சொன்னார்; அவர்கள் உயிர்த்தனர்.
வள்ளி தெய்வானை ஆகிய இருவரும் இருபுறம் திகழ, நடுநாயகமாகக் காட்சி தரும் கந்தக் கடவுள், ஞானத்தின் அடையாளம். ஞான சக்தி. வள்ளியே இச்சா சக்தி; தெய்வானை கிரியா சக்தி. எந்தச் செயலைச் செய்யவேண்டு மானாலும், அதற்கான ‘ஆசை, விருப்பம்’ உள்ளத்தில் எழவேண் டும். அதுவே இச்சா சக்தி. ஆசை எழுந்தால், அதனை நிறைவேற்ற செயலுக்கான உத்வேகம் தோன்றும்; அதுவே கிரியா சக்தி. இச்சா சக்தி நேர்மையாக அமைய, கிரியா சக்தி முறையாகச் செயல்பட, நிறைவான வெற்றி ஞானம் தரும். இதுவே வள்ளி-தெய்வானை-கந்த தத்துவம்.
வள்ளி என்பவள் ஜீவமகள். ஜீவாத் மாவின் அடையாளம். இந்த ஜீவாத்மாவைத் தம்முடன் இணைத்துக்கொள்வதற்காகப் பரமாத்மா பற்பல வேடங்கள் தாங்குகிறார். பற்பல வடிவங்களில் வந்து நிற்கிறார்; காத்திருக்கிறார்; அழைக்கிறார். இருப்பினும், குலம் என்றும் குடும்பம் என்றும் சுற்றம் என்றும் உறவு என்றும் பலவற்றையும் காட்டிக் காட்டி இந்த ஜீவன் உலகாயதத்தில் அழுகிறது. ஜீவனை உயர்த்தி, ஜீவன் வழியாகவே பிற ஜீவன்களுக்கும் உய்வு தருகிறார் கலியுக வரதன்.
ஆறுமுகன், ஷண்முகன், ஷடானனன் (ஷட்=ஆறு, ஆனனம்=முகம்) - மூவிரு முகங்கள் கொண்டவர்;
அக்னிபூ - நெருப்பு வடிவான நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றியவர்;
சிவகுமாரன், குமாரன் - சிவனாருடைய மகனாகத் தோன்றியவர்;
பார்வதி நந்தனன், பார்வதிப் பிரியன் - அம்பிகைக்கு மகிழ்ச்சியைத் தருபவர்;
காங்கேயன் - கங்கையின் மகன் அல்லது கங்கையால் தோற்றுவிக்கப்பட்டவர் (கங்கைக் கரையில் நெருப்புப் பொறி குளிர்ந்ததால்);
சரவணன், சரவணகுமாரன் - நாணல் காட்டில் உருவெடுத்தவர்;
கார்த்திகேயன் - கார்த்திகைப் பெண் களால் வளர்க்கப்பட்டவர்;
ஷாண்மாதுரன் - ஆறு தாயர்களைக் கொண்டவர்;
விசாகன் - (வைகாசி) விசாகத் திரு நாளில் தோன்றியவர்;
முருகன் - அழகானவர்;
சேயோன் - குழந்தை வடிவானவர்; செம்மையானவர்;
செவ்வேள் - செந்நிறத்தவர்;
கந்தன் - முழுமையானவர்; ஆதாரமானவர்;
ஸ்கந்தன் - தொகுக்கப்பட்டவர்; தீமையை அழிப்பவர்;
குஹன் - இதய குகையில் வழிப்பவர்;
தகப்பன்சுவாமி, சுவாமிநாதன் - தந்தைக்கு (அதாவது, சிவனாரான சுவாமிக்கு) உபதேசம் செய்த நாதர்;
இளம்பூரணர் - முழுமையானவர், ஆனால், இளமை வடிவம் கொண்டவர்;
தண்டபாணி, தண்டாயுதபாணி - கையில் கோல் கொண்டவர்;
வேலன், வடிவேலன், வேலவன், வேலாயுதன் -வேல் என்னும் ஆயுதம் தாங்கியவர்;
சேனானி, சேனாபதி, சேனாதிபதி - இந்திரனின் படைகளின் தலைவர்;
முத்துக்குமரன் - முக்தியைத் தருகிற குமாரர்; முத்து போன்றவர்;
சேனாபதி - தேவசேனையான தெய் வானையின் மணாளர்;
வள்ளீசன், வள்ளிமனாளர், வள்ளி நாயகம் - வள்ளியின் மணாளர்;
மயில் வாஹனன், சிகி வாஹனன் (சிகி-=மயில்), மயூரநாதர் - மயிலை வாகன மாகக் கொண்டவர்;
கஜ வாஹனன் - (சில சமயங்களில்) யானையை வாகனமாகக் கொண்டவர்;
அஜ வாஹனன் - (சில சமயங்களில்) ஆட்டை வாகனமாகக் கொண்டவர்
சேவற்கொடியோன், குக்குடத்வஜன் - சேவலைத் தம்முடைய கொடியில் கொண்டவர்;
தாரகாரி - தாரகாசுரனை அழித்தவர்;
கிரௌஞ்சாரி, கிரௌஞ்சபித் - கிரௌஞ்ச மலையைப் பிளந்தவர்;
சூராரி, சூரஜித் - சூரனை வென்றவர்
இப்படிப்பட்ட ஏராளமான திரு நாமங்களில் முக்கியமான 16 திருநாமங்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றை ஜபிப் பவர்களுக்கான நற்பலன்களையும் வடமொழியிலுள்ள ஸ்காந்தமஹாபுராணம் நவில்கிறது. ஞான சக்தி ஆத்மா, ஸ்கந்தன், அக்னிபூ, பாஹலேயன், காங்கேயன், சரவண உத்பவன், கார்த்திகேயன், குமாரன், ஷண்முகன், குக்குடத்வஜன், சக்திதரன், குகன், பிரம்மசாரீ, ஷாண் மாதுரன், கிரௌஞ்சபித், சிகிவாஹனன்
-இந்தத் திருநாமங்களை நாள்தோறும் ஓதினால் என்ன கிட்டும்? விவாஹே துர்கமே மார்கே துர்ஜயே கவித்வே மஹா சாஸ்த்ரே வின்ஞானார்த்தீ பலம் லபேத் - திருமணம் நடைபெறும், திரு மணம் நற்பலனைத் தரும்; செல்லும் வழி நன்மையைப் பயக்கும்; செயல்கள் வெற்றி பெறும், வெல்ல முடியாததாகத் தோன்றியதும் வெற்றியைக் கொடுக்கும்; அறிவும் ஞானமும் பாண்டித்யமும் கைகூடும்; நல்ல நெறிகளின் பயன் கிட்டும். மொத்தத்தில், யாவும் நன்மை யாகவே அமையும்.
பார்வதியும் பரமேச்வரனும் முருகப் பெருமானின் பெருமைகள்குறித்து உரையாடியபோது, கந்தன் எடுத்துக் கொண்ட திருவடிவம் குறித்தும் குறிப்பிடுகிறார்கள். ஷட்வக்த்ர, துவாதச புஜ, அஷ்டாதச லோசன, அநுக்ரஹாய லோகானாம் ரூபம் அங்கீக்ருதம் சுபம் - ஆறுமுகங்கள், பன்னிரு தோள்கள், பதினெட்டுக் கண்கள் என்னும் அழகுத் திருக்கோலத்தை முருகப்பெருமான் ஏன் கொண்டாராம் தெரியுமா? இந்த உலகைக் காப்பதற்காகவும் அடியார்களுக்கு அருள் பாலிப்பதற்காகவும்!
ஆறுமுகங்களும் பன்னிரு தோள்களும் சரி, பதினெட்டுக் கண்கள் எப்படி? முருகப்பெருமான், சாட்சாத் சிவ அம்சம். சிவனாகத் தோற்றம் தருகிற பரம்பொருள், சிவகுமாரராகவும் தோற்றம் தருகிறது. பரம்பொருளுக்கே ‘பூரணர்’ என்று பெயர். இதே பரம்பொருள், இளமையான வடிவம் கொள்வதால், ‘இளம்பூரணர்’ ஆகிறார். சிவனுக்கு நெற்றிக்கண் இருப்பது போலவே, முருகருக்கும் உண்டு. ஆகவே, ஆறு முகங்கள் ஒவ்வொன்றிலும் மும்மூன்று திருவிழிகள் என்பதால், மொத்தம் 18 கண்கள்.
இந்த 18 திருவிழிகளைப் பற்றி முருகரே மொழிந்ததாகவும் தகவல் ஒன்றுண்டு. ‘பதினெட்டுக் கண்களோடு அவதார வடிவம் கொள்ளவேண்டுமா?’ என்று வினவினார்களாம். கந்தக்கடவுள் கூறினாராம்: இரு விழிகள் உள்ள் வடிவத்தில் அவதாரம் எடுத்தால், பூவுல கிற்குப் போதாது. அடியார்கள் ஒவ் வொருவரும் கடைக்கோடிப் பார்வையைக் கொடு என்றுதான் அடிபணிகிறார்கள். அனைவருக்கும் பார்வையை வீசவேண்டு மானால்,நிறைய கண்கள் இருந்தால் வசதி. குறைந்தபட்சம், பதினெட்டுக் கண்களாவது இருக் கட்டுமே!
அடடா, அடியார்கள்மீதுதான் இந்தக் கலியுக வரதனுக்கு எத்தனை கருணை! அருணகிரிநாதருக்காக கோபுரத்தின் மீது தோன்றி காட்சி கொடுத்தது, இராமலிங்க வள்ள லாருக்குக் கண்ணாடியில் காட்சி கொடுத்து அருளி யது, கச்சியப்பருக்காக இலக்கணம் செப் பியது, குமரகுருபரருக்குச் சொல் கொடுத்தது என்று முருகப்பெருமான் செய்திருக்கும் திருவிளையாடல்களும் அநேகம்.
முருகப்பெருமானின் அடியார்களின் வரிசையில், சமீப கால வரலாற்றில், ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகளுக்குத் தனிச் சிறப்பிடம் உண்டு. 19ஆம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் இராமேச்வரத்தில் தோன்றிய பாம்பன் சுவாமிகள், உடலுக்கும் உள்ளத்துக்கும் முருகப்பெருமானே பாதுகாப்பு என்னும் பொருள்படும்படியாக ஷண்முகக் கவசம் என்னும் தோத்திரத்தை இயற்றினார். இவருடைய வாழ்க்கையில் கந்தபிரான் செய்த அற்புதங்கள் எண்ணற்றவை.
இவருடைய மகள் ஒருநாள் வயிற்று நோயால் அழுதுகொண்டேயிருந்தாள். வைத்தியரிடம் போகலாம் என்று மனைவி சொல்ல, அதனை மறுதலித்த இவர், முருகரைப் பிரார்த்திக்கச் சொன்னார். அன்று மாலை; குழந்தை ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருக்க.என்ன என்று இவர் வினவ. முருக தியானத்தில் இவர் அமர்ந்த சிறிது நேரத்திற்கெல்லாம் சந்நியாசி ஒருவர் வந்து குழந்தைக்குத் திருநீறு பூசியதாகவும் அதன் பின்னர் குழந்தை அழுகையை விடுத்துச் சிரித்து விளையாடி உறங்கிவிட்டதாகவும் மனைவி கூறினார். வந்தது முருகனோ?
இவருக்காகச் செருப்புத் தைக்கச் சொன்னது, குமரகோட்டத்திற்கு வழி காட்டியது, பழனியாண்டியாகத் தோன்றி உபதேசம் தந்தது என்று தொடர்ந்து நடைபெற்ற அற்புதங்களில் தலையாயது, 1923-ல் நடந்த சிகிச்சை. சென்னையில் தங்கியிருந்த காலத்தில், 1923, டிசம்பர் 27ஆம் நாள், தம்புச் செட்டித் தெருவில், குதிரை வண்டி ஒன்றினால் கீழே தள்ளப்பட்டார் பாம்பன் சுவாமிகள். இடது கணுக்காலில் கடுமையான காயம். வண்டிச் சக்கரம் காலில் ஏறிவிட்டது. சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ரணம் சரியாக ஆறாத நிலையில், எலும்புகளிலும் உடைப்பு ஏற்பட்டிருந்ததால், 73 வய தான இந்த நோயாளிக்கு எலும்புகள் கூடுவதற்கு வாய்ப்பில்லை, ஆகவே இடது கணுக்கால் அளவில் வெட்டி எடுத்துவிடவேண்டும் என்று மருத்து வர்கள் கூறினர்.
இவருடைய சீடராகவும் நண்பராகவும் விளங்கிய சின்னசுவாமி என்பவர், பிறருக்கு உதவிய ஷண்முகக் கவசம் இவருக்கே உதவலாகாதா என்னும் ஆதங்கத்துடன் அதனை ஓதத் தொடங்கினார். அறுவை சிகிச் சைக்கு உடன்படாத சுவாமிகள், எது நடந்தாலும் அது இறைவன் சித்தம் என்று கூறிவிட்டு, முருகப்பெருமான் திருநாமத்தை ஜபித்தபடி இருந்தார். மருத்துவமனையில் சுவாமிகள் அனு மதிக்கப்பட்ட 11--வது நாள் மாலை, மயில் அகவும் குரல் கேட்டது. சுவாமிகள் சாளரத்தைத் திரும்பிப் பார்க்க, தோகை விரித்த மயிலொன்று வானை மறைத்தபடி நின்றது.
அருகில் மற்றொரு மயில் தோகை விரித்தாடியது. மயூரநாதரே வந்துவிட்டார் என்று சுவாமிகள் மகிழ்ந்த வேளையில் காட்சி மறைந்தது. கண்விட்டு மறைந்தாயே என்று சுவாமிகள் வருத்தப் பட்டார். சிறிது நேரத் தில் குழந்தை ஒன்று இவருடைய கட்டிலில் சிரித்தது. சிவந்த அக்குழந்தையே செவ்வேள் என்று ணரும் தருணத்தில் மறைந்தது. மறுநாள் சுவாமிகளைப் பரிசோதித்த மருத்து வர்கள், உடைந்துபோன எலும்புகள் ஒன்றுகூடி விட்டதாகவும் காலை வெட்டவேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவித்தனர்.
மயில்வாகனன் மயிலாகவும் குழந்தையாகவும் காட்சி கொடுத்துப் பிணி போக்கிய அந்நாளை நினைவுகூரும் விதத்தில், சுவாமிகளின் ஆணைப்படியே மயூர வாகன சேவன விழா கொண்டாடப் படலானது. சுவாமிகள் அனுமதிக்கப்ப ட்டிருந்தது அப்போதைய மன்ரோ வார்டு (பின்னாட்களில், இது வார்டு-11 என்றானது). சுவாமிகளின் படுக்கை எண் 11. மயில்கள் ஆடிய சம்பவம் நடந்தது 6.1.1924 (அனுமதிக்கப்பட்ட 11-வது நாள்). பூராட நட்சத்திரமும் பிரதமைத் திதியும் கூடிய அந்நாளை ஒட்டி, இப்போதும் சென்னை பாம்பன் சுவாமிகள் திருக்கோவிலில் மார்கழி மாத வளர்பிறைப் பிரதமையில் மயூர வாகன சேவன விழா நடைபெறுகிறது.
நக்கீரர் பாடிய திருமுருகாற்றுப் படையில், இரண்டாவது படைவீடாக இடம்பெறுவது திருச்சீரலைவாய் என்னும் திருச்செந்தூர். இங்கு, இன்றளவும் சூர சம்ஹாரப் பெருவிழா வெகு கோலாகலமாக நடைபெறுகிறது. வீரமகேந்திரபுரியில் சூரனை அழித்து, வீரமகேந்திரபுரியையே கடலுக்குள் அமிழ்த்திவிட்டு (அப்படியரு ஊரும் ஆணவமும் வேண்டாமென்று), வெற்றிவீரராகக் கந்தக் கடவுள் திருச்செந்தூர் திரும்பினார்; இங்கு,கைகளில் ஜபமாலை ஏந்திச் சிவபெருமானை வணங்கித் துதித்தார்.
எனினும், என்றைக்கோ ஆணவ மொழித்த சூரனை நினைவு கூர்வதுபோலவும், இப்போது ஆணவ மொழிப்பதற்காகவும், திருச்செந்தூரில் சூர சம்ஹாரப் பெருவிழா நிகழ்த்தப் பெறுகிறது.
ஏறுமயிலேறி விளையாடும் முகம் ஒன்று
ஈசருடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்று
கூறும் அடியார்கள் வினை தீர்த்த முகம் ஒன்று
குன்றுருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்று
மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்று
வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்று
- கந்தக் கடவுளின் ஆறு திருமுகங்களுக்கும் அழகு கூறுகிறார் அருணகிரியார். அழகுக்கு அழகு சேர்க்கும் விதமாகக் கந்தர் அனுபூதியில், ‘உல்லாச நிராகுல யோக இதச் சல்லாப வினோதனும் நீயலையோ’ என்றும் பாராட்டுகிறார்.
சூரசம்ஹாரப் பெருவிழாவில் ஆறாம் நாள் (கந்த சஷ்டி ஆறாம் நாள்) சூரன் சம்ஹரிக்கப்பட்டபின்னர், ஏழாம் நாள் திருக்கல்யாண வைபவம் நடைபெறும். தன்னுடைய செல்வங்களையும் பதவியையும் தேவலோகத்தையும் முருகப்பெருமான் மீட்டுத் தந்தார் என்பதால், தன்னுடைய மகள் தெய்வானையைத் திருமணம் செய்து தந்தானாம் தேவேந்திரன். இந்தத் திருமணம் திருப்பரங்குன்றத்தில் நடைபெற்றது. பின்னர், பரிபூரணம் என்றழைக்கப்படும் தணிகை மலையில் எழுந்தருளி, அன்பின் நாயகியாம் வள்ளியைச் சந்தித்து அவளையும் கைப்பிடிக்கிறார் கந்தபிரான்.
திருமாலின் ஆனந்தக் கண்ணீர்த் துளிகளிலிருந்து தோன்றியவர்கள் அம்ருதவல்லியும் சௌந்தரவல்லியும். இருவரும் கந்தனையே மணாளனாக வரிக்க, உள்ளத்து ஆசையை நிறைவேற்றிக் கொள்ள இருவரையும் வெவ்வேறு இடங்களுக்கு அனுப்பினார் அந்தப் பரந்தாமன். அம்ருதவல்லி, தேவேந்திரன் மகளாக வளர்வதற்குச் சென்றாள். சௌந்தரவல்லி, வள்ளிக் கொடியின் கீழ் குழவியாகத் தோன்றி, வேடுவத் தலைவன் நம்பிராஜன் மகளாக வளரத் தலைப்பட்டாள். ஒருத்தி தேவமகளானாள்; ஒருத்தி ஜீவ மகளானாள்.
இந்திரனின் ஐராவத யானை, இந்திரன் மகளைச் செல்லமாகப் பார்த்துக் கொண்டதாம்; எனவே, யானை வளர்த்ததால் அவள் ‘தெய்வ யானை’ ஆனாள். தேவசேனா என்றும் அழைக்கப்பட்டாள். முருகர்-தெய்வானை திருமணம் பல்லோரும் புடைசூழ விமரிசையாக நடந்தேறியது.
ஆனால், வள்ளி கதையோ வேறு. அவளைக் கரம்பிடிக்க வேண்டுமென்று பற்பல வேடங்களிட்டார் பரிபூரண நாயகர். வேடன் ஆனார், மரம் ஆனார், கிழவர் ஆனார். இதன் பின்னரும், வள்ளியை அழைத்துக் கொண்டு சென்றபோது, அவளுடைய சொந்தக் காரர்கள் சண் டைக்கு வந்தனர். அவர்களோடு போரிட்டு வெல்ல, அவர்களைக் காப்பாற்றும்படி வள்ளியே அழுதாள். அவளையே அவர்களை நோக்கச் சொன்னார்; அவர்கள் உயிர்த்தனர்.
வள்ளி தெய்வானை ஆகிய இருவரும் இருபுறம் திகழ, நடுநாயகமாகக் காட்சி தரும் கந்தக் கடவுள், ஞானத்தின் அடையாளம். ஞான சக்தி. வள்ளியே இச்சா சக்தி; தெய்வானை கிரியா சக்தி. எந்தச் செயலைச் செய்யவேண்டு மானாலும், அதற்கான ‘ஆசை, விருப்பம்’ உள்ளத்தில் எழவேண் டும். அதுவே இச்சா சக்தி. ஆசை எழுந்தால், அதனை நிறைவேற்ற செயலுக்கான உத்வேகம் தோன்றும்; அதுவே கிரியா சக்தி. இச்சா சக்தி நேர்மையாக அமைய, கிரியா சக்தி முறையாகச் செயல்பட, நிறைவான வெற்றி ஞானம் தரும். இதுவே வள்ளி-தெய்வானை-கந்த தத்துவம்.
வள்ளி என்பவள் ஜீவமகள். ஜீவாத் மாவின் அடையாளம். இந்த ஜீவாத்மாவைத் தம்முடன் இணைத்துக்கொள்வதற்காகப் பரமாத்மா பற்பல வேடங்கள் தாங்குகிறார். பற்பல வடிவங்களில் வந்து நிற்கிறார்; காத்திருக்கிறார்; அழைக்கிறார். இருப்பினும், குலம் என்றும் குடும்பம் என்றும் சுற்றம் என்றும் உறவு என்றும் பலவற்றையும் காட்டிக் காட்டி இந்த ஜீவன் உலகாயதத்தில் அழுகிறது. ஜீவனை உயர்த்தி, ஜீவன் வழியாகவே பிற ஜீவன்களுக்கும் உய்வு தருகிறார் கலியுக வரதன்.
அழிவிடைதாங்கி பைரவர் கோவிலில் 30-ம் தேதி (வெள்ளிக்கிழமை) கால பைரவாஷ்டமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகமும், பூஜையும் நடைபெற உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் அருகே உள்ள அழிவிடைதாங்கியில் சொர்ணகால பைரவர் ஆலயம் அமைந்துள்ளது. சுமார் 500 வருடங்கள் பழமையானது இந்த திருக்கோயில்.
இத்திருக்கோயில் பைரவர் தெற்கு நோக்கி காட்சிதந்து, சுனவாகனம் கிழக்கு நோக்கி தனிக்கோயிலாக அருள்பாலிக்கிறார், பொதுவாக பைரவரின் வாகனம் மேற்கு நோக்கி இருக்கும். காசியிலிருக்கும் ஸ்ரீ கால பைரவருக்கு நிகரான ஷேத்திரம், தமிழ்நாட்டில் பல பைரவர் கோயில்கள் இருந்தாலும் ஸ்ரீசொர்ணகால பைரவர் போன்ற தனி ஆலயம் வேறு எங்கும் இதுபோன்று கிடையாது. ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இந்த ஆலயத்தில் வரும் 30-ம் தேதி (வெள்ளிக்கிழமை) கால பைரவாஷ்டமியை முன்னிட்டு சிறப்பு அலங்காரம், சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெற உள்ளது. சிறப்பு யாகமும் நடத்தப்பட உள்ளது. பக்தர்கள் திரளாக பங்கேற்று பைரவரின் அருள் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
ஸ்ரீசொர்ணகால பைரவரை வழிபடுவதினால் பலன்
வாஸ்து பகவானுக்கு குரு என்பதால் நிலம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் விலகும். சனி பகவானுக்கு குரு என்பதால் சனி பகவான் தொல்லையிலிருந்து விடுபடலாம். திருமணத்தடை, பிரிந்த கணவன்-மனைவி ஒன்று சேர்வர். பில்லி சூனியம் விலகும். வியாபார அபிவிருத்தி, வீட்டில் சண்டை சச்சரவுகள் விலகும். பூர்வீக தோஷம் அனைத்தும் நிவர்த்தி ஆகும். முன்னோர்களின் சாபமும், பெற்றோர்களின் பாவமும், பிறப்பின் கர்ம வினைகள் அகலும். குழந்தைகள் நன்றாக படிப்பர். கடன் பிரச்சினை விலகும். மனநிலை பாதிப்பு விலகும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். மனதுக்கு நிம்மதி கிடைக்கும்.
பரிகாரங்களும்.... தீர்வும்....
வறுமை நீங்க :
வெள்ளிக்கிழமை மாலை வில்வத்தினால் அர்ச்சனை செய்ய அஷ்ட தரித்திரம் விலகும்.
பிள்ளைப்பேறு உண்டாக :
தேய்பிரை அஷ்டமியில் விரதம் இருந்து,செவ்வரளிப் பூவாள் 11 அஷ்டமிகளில் அர்ச்சித்தால் கைமேல் பலன்.
வழக்குகளில் வெற்றி பெற, வியாபார லாபம் அடைய :
பைரவருக்கு ஸஹஸ்ர நாம அர்ச்சனை செய்து வடை, சர்க்கரைப் பொங்கல், தேன் முதலியன படைக்கவேண்டும்.
இழந்த பொருட்களை திரும்ப பெற :
7 மிளகுகளை துணியில் மூட்டை கட்டி, நல்லெண்ணைய் தீபம் ஏற்ற இழந்தவற்றை திரும்ப பெறலாம்.
திருமண தடை நீங்க :
ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால வேளையில் பைரவருக்கு விபூதி அபிஷேகம் செய்ய மிக விரைவில் பலன்.
நவக்கிரக தோஷம் விலக :
சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமை மாலை ராகுகால வேளையில் பைரவருக்கு விபூதி அபிஷேகம் செய்ய மிக விரைவில் பலன். ஸ்ரீ பைரவரை தொடர்ந்து இடைவிடாமல் வழிபடுவோருக்கு சிறந்த குருநாதர் அல்லது சித்தர் அருள் தன்னால் கிடைக்கும்.
அமைவிடம் :
திருவண்ணமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுக்கா அழிவிடைதாங்கி கிராமம் மதுரா பைரவபுரம்.
கோவில் திறந்திருக்கும் நேரம்:
தேய்பிறை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் காலை 9.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும்.
வழித்தடம்:
காஞ்சிபுரத்தில் இருந்து வெம்பாக்கம் வழியாக அழிவிடைதாங்கி வந்தடையலாம், வெம்பாக்கத்திலிருந்து ஷேர் ஆட்டோ மூலமாகவும் வரலாம்.
தொகுப்பு :
ஸ்ரீராஜசேகர்.பு
தொடர்புக்கு - 8248815001
4/43, இரன்டாவது மெயின் தெரு
அண்ணா நகர், செய்யார் - 604407
திருவண்ணாமலை மாவட்டம்
தமிழ்நாடு.
Mail id:-sreerajasekarp@gmail.com.
ஸ்ரீசொர்ணகால பைரவரை வழிபடுவதினால் பலன்
வாஸ்து பகவானுக்கு குரு என்பதால் நிலம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் விலகும். சனி பகவானுக்கு குரு என்பதால் சனி பகவான் தொல்லையிலிருந்து விடுபடலாம். திருமணத்தடை, பிரிந்த கணவன்-மனைவி ஒன்று சேர்வர். பில்லி சூனியம் விலகும். வியாபார அபிவிருத்தி, வீட்டில் சண்டை சச்சரவுகள் விலகும். பூர்வீக தோஷம் அனைத்தும் நிவர்த்தி ஆகும். முன்னோர்களின் சாபமும், பெற்றோர்களின் பாவமும், பிறப்பின் கர்ம வினைகள் அகலும். குழந்தைகள் நன்றாக படிப்பர். கடன் பிரச்சினை விலகும். மனநிலை பாதிப்பு விலகும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். மனதுக்கு நிம்மதி கிடைக்கும்.
பரிகாரங்களும்.... தீர்வும்....
வறுமை நீங்க :
வெள்ளிக்கிழமை மாலை வில்வத்தினால் அர்ச்சனை செய்ய அஷ்ட தரித்திரம் விலகும்.
பிள்ளைப்பேறு உண்டாக :
தேய்பிரை அஷ்டமியில் விரதம் இருந்து,செவ்வரளிப் பூவாள் 11 அஷ்டமிகளில் அர்ச்சித்தால் கைமேல் பலன்.
வழக்குகளில் வெற்றி பெற, வியாபார லாபம் அடைய :
பைரவருக்கு ஸஹஸ்ர நாம அர்ச்சனை செய்து வடை, சர்க்கரைப் பொங்கல், தேன் முதலியன படைக்கவேண்டும்.
இழந்த பொருட்களை திரும்ப பெற :
7 மிளகுகளை துணியில் மூட்டை கட்டி, நல்லெண்ணைய் தீபம் ஏற்ற இழந்தவற்றை திரும்ப பெறலாம்.
திருமண தடை நீங்க :
ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால வேளையில் பைரவருக்கு விபூதி அபிஷேகம் செய்ய மிக விரைவில் பலன்.
நவக்கிரக தோஷம் விலக :
சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமை மாலை ராகுகால வேளையில் பைரவருக்கு விபூதி அபிஷேகம் செய்ய மிக விரைவில் பலன். ஸ்ரீ பைரவரை தொடர்ந்து இடைவிடாமல் வழிபடுவோருக்கு சிறந்த குருநாதர் அல்லது சித்தர் அருள் தன்னால் கிடைக்கும்.
அமைவிடம் :
திருவண்ணமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுக்கா அழிவிடைதாங்கி கிராமம் மதுரா பைரவபுரம்.
கோவில் திறந்திருக்கும் நேரம்:
தேய்பிறை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் காலை 9.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும்.
வழித்தடம்:
காஞ்சிபுரத்தில் இருந்து வெம்பாக்கம் வழியாக அழிவிடைதாங்கி வந்தடையலாம், வெம்பாக்கத்திலிருந்து ஷேர் ஆட்டோ மூலமாகவும் வரலாம்.
தொகுப்பு :
ஸ்ரீராஜசேகர்.பு
தொடர்புக்கு - 8248815001
4/43, இரன்டாவது மெயின் தெரு
அண்ணா நகர், செய்யார் - 604407
திருவண்ணாமலை மாவட்டம்
தமிழ்நாடு.
Mail id:-sreerajasekarp@gmail.com.
சிவலிங்க பூஜைக்கு உதவும் பொருட்களில் நாகலிங்கப் பூவுக்கும் முக்கியப் பங்கு உண்டு. நாகலிங்கப் பூவுக்கு 21 ரிஷிகள் தங்களுடைய தவ ஆற்றல்களை அளித்துள்ளதாக புராணங்கள் தெரிவிக்கின்றன.
சிவலிங்க பூஜைக்கு உதவும் பொருட்களில் வில்வம், தாமரை, செவ்வரளி போல நாகலிங்கப் பூவுக்கும் முக்கியப் பங்கு உண்டு. நாகலிங்கப் பூவுக்கு 21 ரிஷிகள் தங்களுடைய தவ ஆற்றல்களை அளித்துள்ளதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. அந்த 21 ரிஷிகளும், ‘மாத்ருகா ரிஷிகள்’ என்று அழைக்கப்படுகிறார்கள்.
நாகலிங்கப் பூவைத் தொடவேண்டும் என்றால், சிவ பஞ்சாட்சரத்தை 1001 முறை சொல்லிய பின்னரே தொடவேண்டும். நாகலிங்கப் பூவை கையில் எடுத்தப் பின்னர், 21 பேருக்கு அன்னதானம் செய்ய வேண்டும். அப்படி 21 பேருக்கு அன்னதானம் செய்யும் போது, 21 மாத்ருகா ரிஷிகள் சூட்சுமமாக அந்த அன்னதானத்தைப் பெற்றுக்கொள்வதாக நம்பிக்கை. அதன் பிறகு தான் நமது கையில் இருக்கும் நாகலிங்கப் பூவை சிவலிங்கத்தின் தலையில் வைக்க வேண்டும்; இப்படிச் செய்தால் மட்டுமே நாகலிங்கப் பூவால் சிவலிங்கத்திற்கு பூஜை செய்த புண்ணியம் நமக்குக் கிட்டும்.
நாகலிங்கப் பூவை ஈசனுக்கு சாற்றி வழிபட்ட பிறகு, அது வாடியப் பின்னரும் கூட, நாம் குளித்து விட்டுத்தான் அதனை எடுக்க வேண்டும். வாடிய நாகலிங்கப் பூவை எடுத்து ஓடும் ஆற்றில் போட்டு விட வேண்டும். அல்லது கடலில் போட வேண்டும்.
நாகலிங்கப் பூவையே சிவலிங்கமாக எண்ணி வீட்டில் தினமும் பூஜை செய்யலாம். இப்படி ஒரு வழிபாட்டு முறை கலியுகத்தின் ஆரம்ப காலத்தில் பின்பற்றப்பட்டு வந்ததாக சொல்லப்படுகிறது.
சிவலிங்கத்திற்கு சாற்றிய நாகலிங்கப் பூவை, பிரசாதமாக பெற்றுக்கொண்டு வீட்டிற்கு கொண்டு வரவேண்டும். நமது வீட்டுப் பூஜை அறையில் சுவாமி படத்தின் முன்பாக அதனை வைத்துக்கொள்ள வேண்டும். நீண்டகாலமாக இருக்கும் நோய் தீரவோ அல்லது நீண்டகாலமாக இருக்கும் குறைபாடுகள் நீங்கிடவோ மனதார வேண்டிக் கொள்ள வேண்டும்.
நமது நோய் தீரும் வரை தினமும் வேண்டிக்கொண்டு சிவமந்திரங்கள் அல்லது தேவாரப் பாடல்கள் பாடி வழிபட வேண்டும். நமது வேண்டுதல்கள் நிறை வேறிய பிறகு, நாகலிங்கப் பூவை ஓடும் நதி அல்லது கடலில் போடலாம். அதுவரை அது எவ்வளவு காய்ந்து போனாலும், அதற்கு நமது வேண்டுதலை நிறைவேற்றும் சக்தி உண்டு.
நாகலிங்கப் பூவைத் தொடவேண்டும் என்றால், சிவ பஞ்சாட்சரத்தை 1001 முறை சொல்லிய பின்னரே தொடவேண்டும். நாகலிங்கப் பூவை கையில் எடுத்தப் பின்னர், 21 பேருக்கு அன்னதானம் செய்ய வேண்டும். அப்படி 21 பேருக்கு அன்னதானம் செய்யும் போது, 21 மாத்ருகா ரிஷிகள் சூட்சுமமாக அந்த அன்னதானத்தைப் பெற்றுக்கொள்வதாக நம்பிக்கை. அதன் பிறகு தான் நமது கையில் இருக்கும் நாகலிங்கப் பூவை சிவலிங்கத்தின் தலையில் வைக்க வேண்டும்; இப்படிச் செய்தால் மட்டுமே நாகலிங்கப் பூவால் சிவலிங்கத்திற்கு பூஜை செய்த புண்ணியம் நமக்குக் கிட்டும்.
நாகலிங்கப் பூவை ஈசனுக்கு சாற்றி வழிபட்ட பிறகு, அது வாடியப் பின்னரும் கூட, நாம் குளித்து விட்டுத்தான் அதனை எடுக்க வேண்டும். வாடிய நாகலிங்கப் பூவை எடுத்து ஓடும் ஆற்றில் போட்டு விட வேண்டும். அல்லது கடலில் போட வேண்டும்.
நாகலிங்கப் பூவையே சிவலிங்கமாக எண்ணி வீட்டில் தினமும் பூஜை செய்யலாம். இப்படி ஒரு வழிபாட்டு முறை கலியுகத்தின் ஆரம்ப காலத்தில் பின்பற்றப்பட்டு வந்ததாக சொல்லப்படுகிறது.
சிவலிங்கத்திற்கு சாற்றிய நாகலிங்கப் பூவை, பிரசாதமாக பெற்றுக்கொண்டு வீட்டிற்கு கொண்டு வரவேண்டும். நமது வீட்டுப் பூஜை அறையில் சுவாமி படத்தின் முன்பாக அதனை வைத்துக்கொள்ள வேண்டும். நீண்டகாலமாக இருக்கும் நோய் தீரவோ அல்லது நீண்டகாலமாக இருக்கும் குறைபாடுகள் நீங்கிடவோ மனதார வேண்டிக் கொள்ள வேண்டும்.
நமது நோய் தீரும் வரை தினமும் வேண்டிக்கொண்டு சிவமந்திரங்கள் அல்லது தேவாரப் பாடல்கள் பாடி வழிபட வேண்டும். நமது வேண்டுதல்கள் நிறை வேறிய பிறகு, நாகலிங்கப் பூவை ஓடும் நதி அல்லது கடலில் போடலாம். அதுவரை அது எவ்வளவு காய்ந்து போனாலும், அதற்கு நமது வேண்டுதலை நிறைவேற்றும் சக்தி உண்டு.
ராவணனுக்கு சிவபெருமானால் பரிசளிக்கப்பட்ட பிறை வடிவ வாளின் பெயர் தான் ‘சந்திரஹாஷம்’. எதற்கான இந்த சந்திரஹாஷம் ராவணனுக்கு வழங்கப்பட்டது என்று பார்க்கலாம்.
ராவணனுக்கு சிவபெருமானால் பரிசளிக்கப்பட்ட பிறை வடிவ வாளின் பெயர் தான் ‘சந்திரஹாஷம்’.
ஒருமுறை ராவணன் தனது புஷ்பக விமானத்தில் பறந்து சென்றுகொண்டிருந்தான். அவன் சென்ற வழியில் தான் சிவபெருமான் வசிப்பிடமான கயிலாய மலை இருந்தது. தன் பாதையில் குறுக்கிட்ட மலையை, தன் பலத்தால் தூக்க முற்பட்டான், ராவணன். ஆனால் சிவபெருமான் தன்னுடைய பெருவிரலால் அந்த மலையை அழுத்த, மலையின் அடியில் சிக்கிக்கொண்டான் ராவணன். அதில் இருந்து அவனால் விடுபடமுடியவில்லை.
ஆயிரம் ஆண்டுகள் அவன் அந்த மலையின் அடியில் வதைபட்டான். ஒரு கட்டத்தில் ராவணன் தனது பத்து தலைகளில் ஒன்றைக் கிள்ளி, தன் நரம்புகளை எடுத்து தலையோடு இணைத்து வீணை செய்தான். அதில் சாம கானம் இசைத்தான். அந்த இசையில் மயங்கிய சிவபெருமான், அவனை விடுவித்ததுடன், ‘சந்திரஹாஷம்’ என்ற வாளை பரிசளித்தார்.
அப்போது, ‘இந்த வாளை அநீதிகளுக்கு பயன்படுத்தக் கூடாது’ என்று எச்சரிக்கவும் செய்தார். ஆனால் சீதையைக் கடத்திச் சென்றபோது, ராவணனைத் தடுத்த ஜடாயுவை, சந்திரஹாஷ வாள் கொண்டு ராவணன் வெட்டினான். அதனால் அந்த வாள், சிவபெருமானிடமே திரும்பிச் சென்று விட்டது.
ஒருமுறை ராவணன் தனது புஷ்பக விமானத்தில் பறந்து சென்றுகொண்டிருந்தான். அவன் சென்ற வழியில் தான் சிவபெருமான் வசிப்பிடமான கயிலாய மலை இருந்தது. தன் பாதையில் குறுக்கிட்ட மலையை, தன் பலத்தால் தூக்க முற்பட்டான், ராவணன். ஆனால் சிவபெருமான் தன்னுடைய பெருவிரலால் அந்த மலையை அழுத்த, மலையின் அடியில் சிக்கிக்கொண்டான் ராவணன். அதில் இருந்து அவனால் விடுபடமுடியவில்லை.
ஆயிரம் ஆண்டுகள் அவன் அந்த மலையின் அடியில் வதைபட்டான். ஒரு கட்டத்தில் ராவணன் தனது பத்து தலைகளில் ஒன்றைக் கிள்ளி, தன் நரம்புகளை எடுத்து தலையோடு இணைத்து வீணை செய்தான். அதில் சாம கானம் இசைத்தான். அந்த இசையில் மயங்கிய சிவபெருமான், அவனை விடுவித்ததுடன், ‘சந்திரஹாஷம்’ என்ற வாளை பரிசளித்தார்.
அப்போது, ‘இந்த வாளை அநீதிகளுக்கு பயன்படுத்தக் கூடாது’ என்று எச்சரிக்கவும் செய்தார். ஆனால் சீதையைக் கடத்திச் சென்றபோது, ராவணனைத் தடுத்த ஜடாயுவை, சந்திரஹாஷ வாள் கொண்டு ராவணன் வெட்டினான். அதனால் அந்த வாள், சிவபெருமானிடமே திரும்பிச் சென்று விட்டது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X