search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95492"

    நரசிம்மரை வழிபட்டால் சிவன் - பார்வதியை வழிபட்ட பலனும் கிடைக்கும். நரசிம்மர் பற்றிய 51 அரிய தகவல்களை அறிந்து கொள்ளலாம்.
    1. நரசிம்மரை தொடர்ந்து மனம் ஒன்றி வழிபட்டு வந்தால் எதிரிகளை வெல்லும் பலம் கிடைக்கும்.

    2. நரசிம்மரை உபாசனா தெய்வமாக ஏற்றுக் கொள்பவர்களுக்கு 8 திசைகளிலும் புகழ் கிடைக்கும்.

    3. நரசிம்ம அவதாரம் காரணமாகவே மறந்து போன வேதங்களும், பொருள் புரியாத மொழிகளும், விடுபட்ட யாகங்களும் சாதாரண நிலை நீங்கி, உயர் நிலையைப் பெற்றன.

    4. நரசிம்ம அவதாரத்தின் முதல் குறிப்பு பரிபாடலில் காணப்படுகிறது.

    5. நரசிம்மருக்கு நரசிங்கம், சிங்கபிரான், அரிமுகத்து அச்சுதன், சீயம், நரம் கலந்த சிங்கம், அரி, ஆனரி ஆகிய பெயர்களும் உண்டு.

    6. திருமாலின் பத்து அவதாரங்களில் பரசுராமன், பலராமன் இருவரும் கோபத்தின் வடிவமாக திகழ்பவர்கள். இதனால் அந்த இரு அவதாரங்களும் வைணவர்களால் அதிகம் வணங்கப்படவில்லை. ஆனால் நரசிம்ம அவதாரம் உக்கிரமானதாக கருதப்பட்டாலும் பக்தர்கள் அவரை விரும்பி வணங்குகிறார்கள்.

    7. நரசிம்ம அவதாரம் பற்றி முதன் முதலில் முழுமையாக சொன்னவர் கம்பர்தான்.

    8. திருத்தக்கதேவர் தனது சீவக சிந்தாமணியில், ‘‘இரணியன்பட்ட தெம்மிறை எய்தினான்’’ என்று நரசிம்ம அவதாரம் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

    9. இரணியனின் ரத்தத்தை குடித்ததால் சீற்றம் பெற்ற நரசிம்மரின் ரத்தத்தை சிவன் சரபப்பறவையாக வந்து குடித்தார். இதன்பிறகே நரசிம்மரின் சீற்றம் தணிந்ததாக சொல்வார்கள். இந்த தகவல் அபிதான சிந்தாமணியில் கூறப்பட்டுள்ளது.

    10. சிங்க பெருமாள் கோவில், மட்டப்பள்ளி, யாதகிரி கட்டா, மங்கள கிரி ஆகிய தலங்களில் நரசிம்மர் சன்னதிகள் குகைக் கோவிலாக உள்ளன.

    11. கீழ் அகோபிலத்தில் நாம் கொடுக்கும் பாகை நைவேந்தியத்தில் பாதியை நரசிம்மர் ஏற்றுக் கொண்டு மீதியை அவர் வாய் வழியே வழிய விட்டு நமக்கு பிரசாதமாக தருவதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.

    12. நங்கநல்லூர் நரசிம்மர் ஆலயம் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முற்பட்டது. இந்திய தொல்பொருள் ஆய்வாளர்கள் இதை 1974-ம் ஆண்டு கண்டுபிடித்து வெளிப்படுத்தினார்கள்.

    13. சிவனை கடவுளாக ஏற்ற ஆதிசங்கரர், ஸ்ரீலட்சுமி நரசிம்மரைப் போற்றித் துதித்ததும் அவருக்கு உடனே நரசிம்மர் காட்சி கொடுத்தார்.

    14. நரசிம்ம அவதாரத்தை எப்போது படித்தாலும் சரி, படித்து முடித்ததும் பானகம், பழவகைகள், இளநீரை நிவேதனமாக படைத்து வணங்குதல் வேண்டும்.

    15. ‘‘எல்லா பொருட்கள் உள்ளேயும் நான் இருக்கிறேன்’’ என்பதை உணர்த்தவே பகவான், நரசிம்ம அவதாரம் எடுத்தார். எனவே நரசிம்மரை எங்கும் தொழலாம்.

    16. திருமாலின் அவதாரங்களில் நரசிம்ம அவதாரமே திடீரென தோன்றிய அவதாரமாகும்.

    17. நரசிம்மரின் வலது கண்ணில் சூரியனும், இடது கண்ணில் சந்திரனும், இடையில் புருவ மத்தியில் அக்னியும் உள்ளனர்.

    18. நரசிம்மன் என்றால் ஒளிப்பிழம்பு என்று அர்த்தம்.

    19. நரசிம்மனின் தேஜஸ் காயத்ரி மந்திரத்துக்குள்ளே இருப்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.

    20. இரண்யகசிபுவை வதம் செய்த போது எழுந்த நரசிம்மரின் சிம்ம கர்ஜனை 7 உலகங்களையும் கடந்து சென்றதாக குறிப்புகள் உள்ளது.

    21. மகாலட்சுமிக்கு பத்ரா என்றும் ஒரு பெயர் உண்டு. இதனால் நரசிம்மனை பத்ரன் என்றும் சொல்வார்கள். பத்ரன் என்றால் மங்களமூர்த்தி என்று அர்த்தம்.
    22. பகவான் பல அவதாரங்களை எடுத்தாலும், அவனுடைய நாமங்கள் இறுதியில் நரசிம்மரிடத் திலேதான் போய் முடியும் என்று கருதப்படுகிறது.

    23. சகஸ்ரநாமத்தில் முதன் முதலாக நரசிம்ம அவதாரம்தான் இடம் பெற்றுள்ளது.

    24. நரசிம்ம அவதாரத்தை எதைக் கொண்டும் அளவிட முடியாது என்ற சிறப்பு உண்டு.

    25. ராமாயணம், மகாபாரதம், பாகவதம், 18 புராணங்கள், உப புராணங்கள் அனைத்திலும் நரசிம்மருடைய சிறப்பு குறிப்பிடப்பட்டுள்ளது.

    26. நரசிம்ம மந்திரம் ஒரு எழுத்தில் தொடங்கி, ஒரு லட்சத்து நூற்றி முப்பத்திரண்டு என்று விரிந்து கொண்டே போய் பலன் தரக்கூடியது.

    27. நரசிம்மர் எங்கெல்லாம் அருள் தருகிறாரோ, அங்கெல்லாம் ஆஞ்சநேயர் நிச்சயம் இருப்பார்.

    28. வேதாத்ரியில் உள்ள யோக நரசிம்மர் இடுப்பில் கத்தி வைத்துக் கொண்டிருக்கிறார். அறுவை சிகிச்சைக்கு செல்பவர்கள் இவரை வணங்கி சென்றால் நல்ல பலன் கிடைக்கும்.

    29. வாடபல்லி தலத்தில் உள்ள நரசிம்மரின் மூக்குக்கு எதிரில் ஒரு தீபம் ஏற்றப்படும். அந்த தீபம் காற்றில் அசைவது போல அசையும், நரசிம்மரின் மூச்சுக் காற்று பட்டு அந்த தீபம் அசைவதாகக் கருதப்படுகிறது. அதே சமயத்தில் நரசிம்மரின் கால் பகுதியில் ஏற்றப்படும் தீபம் ஆடாமல் அசையாமல் நின்று எரியும்.

    30. மட்டபல்லியில் உள்ள நரசிம்மரை வணங்கினால் மன சஞ்சலங்கள் நீங்கும்.

    31. நரசிம்மரை வழிபடும் போது ‘‘ஸ்ரீநரசிம்ஹாய நம’’ என்று சொல்லி ஒரு பூ-வைப் போட்டு வழிபட் டாலே எல்லா வித்தையும் கற்ற பலன் உண்டாகும்.

    32. ‘‘அடித்த கை பிடித்த பெருமாள்’’ என்றொரு பெயரும் நரசிம்மருக்கு உண்டு. அதாவது பக்தர் கள் உரிமையோடு அடித்து கேட்ட மறு வினாடியே உதவுபவன் என்று இதற்கு பொருள்.

    33. நரசிம்மரை ம்ருத்யுவேஸ் வாகா என்று கூறி வழி பட்டால் மரண பயம் நீங்கும்.

    34. விழுப்புரம், அந்திலியில், கருடனுக்கு காட்சியளித்த நரசிம்மரை தரிசிக்கலாம். ஆண்டு முழுவதும் சூரிய ஒளி இந்த நரசிம்மமூர்த்தியின் மீது படர்வது அதிசயமான நிகழ்வாகும்.

    35. காஞ்சிபுரம், அழகிய சிங்கப்பெருமாள் கோயிலில் நரசிம்மருக்கு எதிரில் வீற்றிருக்கும் கருடாழ்வார், நரசிம்மரின் உக்கிரம் தாங்காது சற்றே தலை சாய்த்த நிலையில் காணப்படுகிறார்.

    36. திருநெல்வேலி, மேலமாடவீதியில் உள்ள நரசிம்மர் ஆலயத்தில் நரசிம்மரின் தோளை அணைத்தபடி மகாலட்சுமி தாயார் வீற்றுள்ளார்.

    37 சென்னை, மேற்கு சைதாப்பேட்டையில் பிரசன்ன வேங்கட நரசிம்மப் பெருமாள் எனும் திருப்பெயருடன் நரசிம்மரை தரிசிக்கலாம். இவருக்கு சிம்மமுகம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    38. திண்டுக்கல், வேடசந்தூரில் உள்ளது, நரசிம்மப் பெருமாள் ஆலயம். இரண்யனை அழித்த கோபத்துடன் இருந்த நரசிம்மரை ஈசன் சரபேஸ்வர வடிவம் கொண்டு தணித்ததால் சிங்க முகம் நீங்கி, இயல்பாக தரிசனம் தருகிறார், பெருமாள்.

    39. பண்ருட்டிக்கு அருகில் உள்ள திருவதிகையில் சரநாராயணப் பெருமாள் ஆலயத்தில், திருவக் கரையில் வக்ராசுரனை அழித்த களைப்பு தீர, சயன நிலையில் நரசிம்மரை தரிசிக்கலாம்.

    40. தாம்பரம்-செங்கல்பட்டு பாதையில் உள்ள சிங்கப்பெருமாள் ஆலயத்தில் பிரமாண்டமான நரசிம்மமூர்த்தியை தரிசிக்கலாம். கடன்கள் தீர, வழக்குகளில் வெற்றி பெற, இவர் அருள்கிறார். ஆலயத்தில் உள்ள அழிஞ்சில் மரத்தில் தொட்டில் கட்டி வேண்டிக்கொள்வோருக்கு குழந்தை பாக்கியம் கிட்டுகிறது.

    41. சென்னை, திருவல்லிக் கேணி பார்த்தசாரதிப் பெருமாள் ஆலயத்தில் முதல் பூஜை அழகியசிங்கர் என போற்றப்படும் யோக நரசிம்மருக்கே. அவர் எப் போதும் யோகத்திலேயே இருப்பதால் ஓசையால் அவர் யோகம் கலையக் கூடாது என்பதற்காக அவர் கருவறை கதவுகளில் உள்ள மணிகளுக்கு நாக்கு கள் இல்லை.
    42. நரசிம்மரின் அவதாரம் இறைவன் எங்கும் உள்ளான் என்பதை உணர்த்துகிறது.

    43. நரசிம்மருக்கு எத்த னையோ வடிவங்கள் இருந்தாலும் லட்சுமி நரசிம்மர் வடிவமே அதிக பக்தர்களால் விரும்பப்படுகிறது.

    44. வைணவத்தில் அதிகம் வழிபடக் கூடிய தெய்வம் நரசிம்மர்தான்.

    45. வட இந்தியாவை விட தென் இந்தியாவில்தான் அதிக நரசிம்மர் ஆலயங்கள் உள்ளன.

    46. நரசிம்ம அவதாரம் நிகழ்ந் தது ஆந்திரா என்றாலும் நரசிம்மர் சாந்தமானது தமிழகத்தில்தான்.

    47. தமிழ்நாட்டில் உக்கிர நரசிம்மரை மூலவராக கொண்ட ஒரே இடம் புதுச்சேரி அருகே உள்ள சிங்கிரி என்ற ஊரில் உள்ள ஆலயமாகும்.

    48. சோளிங்கரில் உள்ள நரசிம்மர் கார்த்திகை மாதம் கண் திறந்து பார்ப்பதாக ஐதீகம்.

    49. ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மங்களகிரியில் பானக நரசிம்மர் உள்ளார். இவர் பானகம் அருந்துவதை கண்கூடாக பார்க்கலாம்.

    50. நரசிம்மர் மூர்த்தங்களில் மொத்தம் 32 வகையான அமைப்புகள் உள்ளன.

    51. தமிழ்நாட்டில் ஸ்ரீரங்கம் மற்றும் நெல்லை அருகே கீழப்பாவூரில் அமைந்துள்ள நரசிம்மர் தலங்கள் தனித்துவம் கொண்டவை. ஒரு காலத்தில் இந்த இரு ஆலயங்களில் இருந்தும் சிங்கம் கர்ஜிப்பது போல நரசிம்மர் ஆவேசமாக குரல் எழுப்பியதாக புராணங்களில் பதிவுகள் உள்ளன.

    தம்மிடம் யார் வந்து எதைக் கேட்டாலும் அதைக் கேட்டபடியே கொடுக்கும் குணம் கொண்டவன் நரசிம்மர். நரசிம்மர் பற்றிய அரிய தகவல்களை அறிந்து கொள்ளலாம்.

    சோகத்தூர் யோக நரசிம்மர்

    வந்தவாசி அருகே சோகத்தூரில் யோக நரசிம்மர் கோவில் உள்ளது. பிரம்மாவுடைய சோகத்தை தீர்த்து வைத்ததால் இந்த ஊர் சோகத்தூர் என்று பெயர் பெற்றது. இங்கு சுவாதி நட்சத்திரத்தன்று நரசிம்மருக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் நடக்கிறது. நரசிம்மர் ஜெயந்தியன்று சுவாதி ஹோமம், சிறப்பு அபிஷேகம், சாமி வீதி உலா நடக்கிறது. இந்த சிறப்பு அபிஷேக நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு அவர்கள் வேண்டிய பலன், நினைத்த காரியம் நடக்கும். புத்திர பேரு கிடைக்கும். சுவாதி ஹோமத்தில் பங்கேற்க முன் அனுமதி பெற வேண்டும்.

    தொடர்புக்கு- நரசிம்ம பட்டாச்சார், 82485 64734.

    அந்திலி: லட்சுமி நரசிம்மர் கோவில்

    விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சி புரம் தாலுகா, அரகண்டநல்லூர் ரெயில் நிலையம் அருகே அந்திலியில் லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது. இந்த கோவில் 1,600 ஆண்டுகளுக்கு முற்பட்டது. 8 நரசிம்மர் கோவில்களில் இது முக்கியமான கோவிலாகும். இங்கு கருடன் வடிவில் உள்ள பாறை மீது பெருமாள் அமர்ந்து அருள்பாலிக்கிறார். இது கருடனுக்கு பெருமாள் காட்சி அளித்த தலமாகும்.

    நரசிம்மருக்கு முதல் வணக்கம்

    திருப்பதி வெங்கடாஜலபதி தன் திருமணத்திற்கு முன்பு அகோபிலம் சென்று நரசிம்மரிடம் ஆசிகள் பெற்றார். திருக்கல்யாணம் நடைபெற்றதும் முதலில் நரசிம்மருக்கு நிவேதனம் செய்த பிறகே அனைவரும் உணவருந்தினர். ஆகவே நரசிம்மரையும் வெங்கடாஜலபதியையும் தரிசித்தால் சிறப்பான வாழ்வு அமையும்.



    நாளை என்பது நரசிம்மரிடம் இல்லை

    நாளை என்பதில்லை நரசிம்மனிடம் என்பது பழமொழி. வழிபட்ட உடன் பலன் தருவது நரசிம்ம அவதாரத்திற்கே உரிய தனிச் சிறப்பாகும். பிரகலாதனைப் போன்ற ஆழ்ந்த, மெய்யான பக்தியுடனும், மிகுந்த நம்பிக்கையுடனும் வழிபடுவர்களின் கோரிக்கைகளை நரசிம்மர் புறக்கணித்ததோ காலம் தாழ்த்தியதோ இல்லை. தம்மிடம் யார் வந்து எதைக் கேட்டாலும் அதைக் கேட்டபடியே கொடுக்கும் குணம் கொண்டவன் நரசிம்மன். தன் பக்தன் மீது நரசிம்மனுக்கு அவ்வளவு பிரியம்.

    நரசிம்மருக்கு 30 பெயர்கள்

    நரசிம்மருக்கு உருவ அமைப்பு ஏந்தியுள்ள ஆயுதங்கள், பார்வை நிலை, அணிந்துள்ள ஆபரணங்கள், இருக்கும் பாங்கு, அருட்தன்மை போன்றவற்றின் அடிப்படையில் வெவ்வேறு அடைமொழியோடு 30 திருப்பெயர்கள் உள்ளன.

    சோமப்பிரதோஷமும், சனிப்பிரதோஷமும் சிறப்பு போல நரசிம்மர் அவதரித்த நட்சத்திரமான சுவாதியிலும் வழிபடுதல் சிறப்பு. நரசிம்மர் விஷ்ணுவே என்பதால், பொதுவாக, விஷ்ணு வழிபாட்டில் பயன்படுத்தும், மலர்கள், வஸ்திரம், நைவேத்யம் ஆகியவற்றை உபயோகிக்கலாம். எனினும் செவ்வரளி போன்ற சிகப்பு வண்ண மலர்களும், சர்க்கரைப் பொங்கல், பானகம் போன்ற இனிப்புகளும் நல்லது.

    விஷ்ணு மூலவராக உள்ள ஆலயங்கள் தமிழகத்தில் சுமார் 5,200 உள்ளன. அவற்றில் பெருமாளுக்கு வழங்கும் சுமார் 6000 நாமங்களில், பரவலாக உள்ளதில் நரசிம்மரும் ஒன்று அப்பெயரோடு சுமார் 100 கோயில்கள் உள்ளன. அங்கெல்லாம், பெருமாள் வெறுமனே நரசிம்மர் என்று மட்டும் அழைக்கப்படுவதில்லை. உருவ அமைப்பு ஏந்தியுள்ள ஆயுதங்கள், பார்வை நிலை, அணிந்துள்ள ஆபரணங்கள், இருக்கும் பாங்கு, அருட்தன்மை போன்றவற்றின் அடிப்படையில் வெவ்வேறு அடைமொழியோடு 30 திருப்பெயர்கள் உள்ளன.

    சிங்கதலை, மனித உடல்

    நரசிம்ம அவதாரம் விஷ்ணுவின் நான்காம் அவதாரம் ஆகும். இதில் இவர் சிங்கத்தின் தலையையும் மனித உடலையும் கொண்ட நரசிம்ம அவதாரம் எடுத்தார். நரசிம்மரின் உருவம் சிங்க முகத்துடனும் நகங்களோடும் மனித உடலோடும் தோற்றமளிக்கிறது. வைஷ்ணவர் பலர் நரசிம்மரை முதன்மைக் கடவுளாக வழிபடுகின்றனர். தனது பக்தர்களைத் தக்க தருணத்தில் வந்து காக்கும் கடவுளாக இவர் கருதப்படுகிறார்.

    ஸ்ரீரங்கம் காட்டழகிய சிங்கர்

    ஸ்ரீரங்கம் பெரிய கோவிலில் தாயார் சன்னதிக்கு அருகில் உள்ளது மேட்டழகிய சிங்கர் கோவில். பெரியாழ்வாரின் சீடராகத் திகழ்ந்த நெடுமாறன் என்ற சீர்ப் பெயர் பெற்ற வல்லபதேவ பாண்டியன், லட்சுமி நரஸிம்மப் பெருமாளை இங்கே எழுந்தருளச் செய்து, கோவிலும் கட்டுவித்தான்.

    கருவறையில், மஹாலட்சுமியை மடியில் இருத்தி, ஆலிங்கனம் செய்த கோலத்தில் லட்சுமி நரசிம்ஹராக காட்டழகிய சிங்கப் பெருமானை தரிசிக்கலாம். மிகப் பெரீய்ய உருவம். சுமார் எட்டு அடி உயரம். திருத்தமான அமைப்பு. வெள்ளியில் அமைந்த பற்கள் அமைப்பு நரசிம்மப் பெருமானின் தத்ரூப தரிசனத்தை மனக்கண்முன் நிறுத்துகிறது.
    இசை, நடனம் உள்ளிட்ட அனைத்து கலைகளிலும் சிறப்பான தேர்ச்சியும், பதவி, நிர்வாகம் ஆகிய பாக்கியங்களையும் அளிப்பவள் ராஜமாதங்கி என்னும் சியாமளா தேவி.
    இசை, நடனம் உள்ளிட்ட அனைத்து கலைகளிலும் சிறப்பான தேர்ச்சியும், பதவி, நிர்வாகம் ஆகிய பாக்கியங்களையும் அளிப்பவள் ராஜமாதங்கி என்னும் சியாமளா தேவி. அவளை மகாகவி காளிதாசர், பாஸ்கர ராயர், முத்துசாமி தீட்சிதர் ஆகியோர் வணங்கி அருள் பெற்றனர் என்பது வரலாறு. தச மகா வித்யைகளுள், மாதங்கி தேவி ஒன்பதாவது வித்யா ரூபம் ஆவாள். சரஸ்வதியின் சொரூபமாக உள்ள சியா மளாதேவி வழிபாடு என்பது, சங்கீதத்தில் ஒருவரை பிரபலம் அடையச்செய்யும் என்பதும் ஐதீகம்.

    * அம்பாளின் 51 சக்தி பீடங்களில் ராஜமாதங்கி -சியாமளா சக்தி பீடமாக, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உள்ளது.

    * காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்தில் உள்ள காயத்ரி மண்டபத்திற்கு வலப்புறத்தில் ராஜ சியாமளா தேவியின் அழகிய உருவத்தை தரிசனம் செய்யலாம்.

    * புதுக்கோட்டை புவனேஸ்வரி கருவறைக்கு முன்புறத்தில் ராஜ மாதங்கியை தரிசனம் செய்யலாம்.

    * சென்னை ஆதம்பாக்கம் புவனேஸ்வரி ஆலய கருவறைக்கு முன்புறம் நின்ற கோலத்தில் மாதங்கியை தரிசிக்கலாம்.

    * சேலம், மன்னார்பாளையத்தில் பசுமை நிறைந்த சுற்றுச்சூழலில் ராஜ மாதங்கி ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது.

    * திருப்போரூர், செம்பாக்கம் ஸ்ரீ பீடம் பாலா சமஸ்தானத்தில் ராஜ மாதங்கி கோவில் இருக்கிறது.
    ஒருவரது சுய ஜாதகத்தில் சந்திரன் நின்ற ராசிக்கு இரண்டாம் வீட்டில் சூரியன், ராகு, கேது போன்ற கிரகங்களை தவிர்த்து, மற்ற கிரகங்களில் ஒன்று தனியாக இருப்பது அல்லது அவை ஒன்றாக சேர்ந்து இருப்பது ஆகிய நிலைகளில் சுனபா யோகம் ஏற்படுகிறது.
    செல்வமும், மகிழ்ச்சியும் அளிக்கும் விதத்தில் ஜாதக ரீதியாக நூற்றுக்கும் மேற்பட்ட யோகங்கள் இருப்பதாக ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகிறது. ஒரு மனிதன் பிறக்கும்போது வான மண்டலத்தில் சுழலும் ஒன்பது கோள்களும், வெவ்வேறு நிலைகளில் அமைகின்றன. சில குறிப்பிட்ட நிலைகளில் அமர்ந்த கிரகங்கள் அளிக்கும் பலன்களை யோகம் என்று ஜோதிடம் குறிப்பிடுகிறது. அத்தகைய நிலையில் கிரகங்களால் உருவாகும் சுப யோகங்கள் பற்றிய குறிப்புகளை இங்கே காணலாம்.

    கனவுகளை நிறைவேற்றும் சுனபா யோகம்

    ஒருவரது சுய ஜாதகத்தில் சந்திரன் நின்ற ராசிக்கு இரண்டாம் வீட்டில் சூரியன், ராகு, கேது போன்ற கிரகங்களை தவிர்த்து, மற்ற கிரகங்களில் ஒன்று தனியாக இருப்பது அல்லது அவை ஒன்றாக சேர்ந்து இருப்பது ஆகிய நிலைகளில் சுனபா யோகம் ஏற்படுகிறது. சந்திரன் கடகத்தில் நிற்க இரண்டாம் வீடான சிம்மத்தில் குரு, சுக்ரன் போன்ற சுபகிரகங்களில் ஏதேனும் ஒன்று தனியாகவோ அல்லது இந்த இரண்டு கிரகங்களும் சேர்ந்திருந்தாலும் அதிக நன்மைகள் உண்டாகும் என்பது பல ஜோதிட வல்லுனர்களின் கருத்தாகும். சுனபா யோகத்தில் பிறந்தவர்கள் இயற்கையாகவே புத்திக்கூர்மையும், புகழும் உடையவராக இருப்பார்கள். பார்வை மற்றும் சப்தம் ஆகியவற்றால் கிடைக்கும் சந்தோஷங்களால் மகிழ்வார்கள்.

    பிறரை வசீகரிக்கும் முகம் மற்றும் தோற்றம், அமைதியான சுபாவம் மற்றும் நேர்மறையான குணங்கள் நிறைந்தவர் களாக இருப்பார்கள். இவர்கள் எதையும் சுலபத்தில் புரிந்து கொள்ள கூடிய திறன் கொண்டவர்கள். பூர்வீக சொத்து இருந்தாலும், சுய முயற்சியால் செல்வத்தை ஈட்டுவார்கள். கலைகளில் ஆர்வமும் ஈடுபாடும் இருப்பதால் சில கலைகளில் நிபுணத்துவம் பெற்றிருப்பார்கள். சிலர் திரைப்பட நடிகர்களாகவும் இருப்பார்கள். அரசாங்க பணியில் குறைந்த காலத்திலேயே பிறரை நிர்வகிக்க கூடிய அதிகாரம் மிகுந்த பதவிகளை பெறுவார்கள். இளமையில் சிறிது கஷ்டப்பட்டாலும் பிற்கால வாழ்க்கை இன்பமானதாக இருக்கும்.

    துவஜ யோகத்தில் பிறந்தவர்கள் தலைமை பண்புகளுடன் பிறந்துள்ளார்கள் என்றும், அவரது உத்தரவை நிறைவேற்றப் பலர் காத்துக்கொண்டிருப்பார்கள் என்றும் அர்த்தம்.
    துவஜம் என்ற சொல்லிற்குக் கொடி என்று பெயர். அதாவது, இந்த யோகத்தில் பிறந்தவர்கள் தலைமை பண்புகளுடன் பிறந்துள்ளார்கள் என்றும், அவரது உத்தரவை நிறைவேற்றப் பலர் காத்துக்கொண்டிருப்பார்கள் என்றும் அர்த்தம்.

    துவஜ யோகம் என்பது ஒருவரது லக்னத்தில் சுப கிரகங்களான குரு, சுக்ரன், சந்திரன், புதன் ஆகிய கிரகங்கள் இருந்து, லக்னத்திற்கு எட்டாம் இடத்தில் பாப கிரகங்களான சூரியன், செவ்வாய், சனி, ராகு அல்லது கேது ஆகியவை இருக்கும் நிலையாகும். துவஜ யோகம் என்பது அரிதான யோகம் என்ற நிலையில் லட்சத்தில் ஒருவருக்கு மட்டும் ஏற்படக்கூடிய சாத்தியங்கள் இருப்பதாக ஜோதிட வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். அவர்கள் பிறக்கும்போது குடும்பத்தில் செல்வச் செழிப்பு இல்லை என்றாலும் இவர்கள் பிறந்த பின்னர் செல்வ வளம் ஏற்படும்.

    இளம் வயதிலேயே சிறந்த ஆளுமை கொண்ட இவர்களுக்கு வசதியான வீடு, ஆடம்பர வாகனங்கள், சேவைபுரியும் பணியாட்கள் என ஒரு மன்னருக்கு நிகரான வாழ்க்கை வாழ்வார்கள். இந்த யோகத்தில் பிறந்த பலரும் கல்வியில் ஆர்வம் கொள்ளாமல், இளம் வயதிலேயே தொழில் மற்றும் வியாபார துறைகளில் ஈடுபட்டு, சிறந்த நிர்வாகிகள் என பெயரெடுப்பார்கள்.

    சமூகத்திற்கு அவசியமான பள்ளிகள், மருத்துவமனைகள் போன்றவற்றை கட்டி தந்து அனைத்து மக்களின் நன்மதிப்பையும் பெறுவார்கள். துவஜ யோக ரீதியாக எட்டாம் இடத்தில் பாப கிரகங்கள் இருப்பதால், அவ்வப்போது சில ஆயுள் கண்டங்களை சந்திக்கும் நிலை ஏற்பட்டாலும், தர்ம காரியங்கள் மற்றும் இறைவழிபாடு ஆகியவை மூலம் ஆபத்துகளை தவிர்த்து விடுவார்கள்.
    ராஜமாதங்கி தேவி, பக்தர்களுக்கு சகல நலன்களையும், செல்வத்தையும் அளிப்பதற்காக, சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகிய மூவரின் சக்திகளும் ஒருங்கே பெற்றவளாக இருக்கிறாள் என்பது ஐதீகம்.
    கல்வி மற்றும் செல்வம் ஆகிய இரண்டு பாக்கியங்களுக்கும் அதிதேவதையாக இருப்பவள் ராஜமாதங்கி ஆவாள். ஒப்பற்ற அழகும், அனைவரையும் வணங்கச் செய்யும் கம்பீரமும் கொண்ட ராஜமாதங்கிக்கு, ராஜ சியாமளா, காதம்பரி, வாக் விலாஸினி என்ற பெயர்களும் உள்ளன. ஆதிசங்கரர் முதல் சங்கீத மும்மூர்த்திகள் வரை ஆன்மிக சான்றோர்கள் பலரும் இந்த அன்னையை வழிபட்டு சிறப்படைந்துள்ளனர்.

    ஆதி பராசக்தியின் மந்திரிணியாக இருந்து ஆலோசனைகள் சொல்லும் இவள், சாக்த வழிபாட்டில் சப்த மாதர்களில் ஒருவராகவும், தசமகா வித்யைகளில் ஒன்பதாவது நிலையிலும் இருக்கிறாள். இந்தியாவின் வட மாநிலங்களில் இவளை ‘சியாமளா தேவி’ என்று அழைக்கிறார்கள். இதற்கு ‘நீலம் கலந்த பச்சை நிறம்’ என்று பொருளாகும். ராஜமாதங்கி தேவி, பக்தர்களுக்கு சகல நலன்களையும், செல்வத்தையும் அளிப்பதற்காக, சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகிய மூவரின் சக்திகளும் ஒருங்கே பெற்றவளாக இருக்கிறாள் என்பது ஐதீகம்.

    மதங்க முனிவரின் மகள்


    இறைவனின் அருள் வேண்டி கடும் தவம் செய்தார் மதங்க முனிவர். அவரது தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் அவருக்கு காட்சியளித்தார். ஈசனிடம், “அன்னை பார்வதியே தனக்கு மகளாக பிறக்க வேண்டும்” என்றும், “மகளை மணந்து கொண்டு ஈசன் தனக்கு மருமகனாக இருக்க வேண்டும்” என்றும் வேண்டுகோள் வைத்தார். அப்படியே சிவனும் அருளினார்.

    மகாசக்தி மனித உருவம் எடுக்க இயலாது என்பதால், அன்னையின் மந்திர சக்தி மதங்க முனிவரின் மகளாகப் பிறந்தது. திருவெண்காடு ஆலயத்தில் உள்ள மதங்க புஷ்கரணியில் மலர்ந்திருந்த நீலோத்பல மலரில் ராஜ மாதங்கி பிறந்தாள். அது ஒரு ஆடி மாத வெள்ளிக்கிழமையாகும். அன்னை ஸ்ரீ லலிதாம்பிகையின் கையில் உள்ள கரும்பு வில்லே ராஜமாதங்கியாக உருவெடுத்தது என்றும் கூறப்படுகிறது. மாதங்கி பருவம் அடைந்ததும், ஈசனின் வாக்குப்படியே அவருக்கு திருமணம் செய்ய ஆசைப்பட்டார் மதங்க முனிவர். சித்திரை மாத வளர்பிறை சப்தமி திதியில், சிவபெருமான் மதங்கேஸ்வரராக வருகை புரிந்தார். மாதங்கிக்கும், ஈசனுக்கும் திருவெண்காட்டில் திருமணம் நடந்தது என்று திருவெண்காடு தல புராணம் கூறுகிறது.

    திருமணத்தின்போது, அன்னை மாதங்கிக்கு எவ்விதமான சீர் வரிசையும் செய்யப்படவில்லை. அகிலத்தையே தன் கைப்பிடியில் வைத்திருக்கும் நாயகிக்கு, தம்மால் என்ன செய்ய முடியும் என்று மதங்க முனிவர் அமைதியாக இருந்துவிட்டார். ‘ஆண்டவனின் திருமணமே ஆனாலும், சீர் வரிசை இல்லாமல் திருமணம் செய்யக்கூடாது’ என தேவர்களுக்குள் விவாதம் ஏற்பட்டது. அது பெரிய சர்ச்சையாக மாறிய நிலையில் சிவனே தலையிட்டு, “சீர்வரிசை தருவதும், பெறுவதும் தவறு” என்று கண்டித்தார்.

    “சீர் பெறுவது திருமணச் சடங்குகளில் ஒன்று” என பிரம்மா கூறியதை அடுத்து, சிவனின் ஆணைப்படி நந்திதேவர் கயிலையில் இருந்து பெரும் செல்வத்தினை கொண்டு வந்து, அன்னைக்கு கொடுத்து பிரச்சினையை தீர்த்ததாக திருநாங்கூர் மாதங்கீஸ்வரர் ஆலய தல புராணம் தெரிவிக்கிறது.

    அரச போகம் அளிக்கும் மாதங்கி தேவியின், அங்க தேவதைகளாக ஹசந்தி சியாமளா, சுக சியாமளா, சாரிகா சியாமளா, வீணா சியாமளா, வேணு சியாமளா, லகுஷ்யாமளா என ஆறு தேவிகள் தோன்றி கலைகளின் அதிபதிகளாக மாறினர். லலிதா சகஸ்ர நாமம், ஸ்ரீசாக்த பிரமோதத்தம், மீனாட்சி பஞ்ச ரத்னம், ஸ்ரீவித்யார்ணவம், சாரதா திலகம், நவரத்தின மாலா போன்ற பல நூல்களில் ராஜ மாதங்கியின் புகழ் போற்றப்படுகிறது.

    இந்த தேவியின் மரகதப் பச்சை வண்ணம் - ஞானத்தைக் குறிக்கிறது. கைகளில் உள்ள வீணை - சங்கீத மேதை என்பதை சொல்கிறது. கிளி - பேச்சுத் திறமை வாய்க்க அம்பிகையின் அருள் அவசியம் என்பதையும், ஆத்ம ஞானத்தையும் காட்டுகிறது. மலர் அம்பு - கலைகளில் தேர்ச்சியையும், பாசம், ஈர்ப்பு, சக்தியையும், அங்குசம் - அடக்கி ஆளும் திறனையும், கரும்பு- உலகியல் ஞானத்தையும் குறிப்பதாக ஐதீகம்.
    சில வழிபாட்டு சடங்கு செய்யும் போது சில விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். அவை என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    * உருவச் சிதைவுள்ள பொருட்களை உபயோகப்படுத்தக் கூடாது. பின்னம் (சிதைவு) உள்ள விக்கிரகங்களை வைத்து வழிபடக் கூடாது. அப்படி வழிபட்டால், அதோடு அதே போன்ற நல்ல விக்கிரகம் ஒன்றையும் வைத்து வழிபாடு செய்ய வேண்டும்.

    * அட்சதை தூவும் பொழுது (திருமணவீட்டில்) உடையாத முழு அரிசியாக இருக்கவேண்டும்.

    * கோவில் மணி, சங்கு, அடுப்பு, தாலிச்சரடு போன்றவை உடைந்தால் அதன் சக்தி இழந்து போய் விடும். எனவே அவற்றை உடனடியாக மாற்றிவிட வேண்டும்.

    * துளசி இலைகளை கொத்துக் கொத்தாக வழிபாட்டிற்கு கொடுக்க வேண்டும். உதிர்த்துக் கொடுக்கக் கூடாது.

    * சுமங்கலிப் பெண்களுக்கு விருந்து வைக்கும் பொழுது, வாழை இலை கிழிந்திருக்கக் கூடாது.

    * சான்றோர்களுக்கு விருந்தளிக்கும் பொழுது, நுனி இலைபோட்டு பரிமாற வேண்டும்.

    * சிரார்த்த சடங்கு, ருது சடங்கு, புனிதச் சடங்கு மற்றும் விரத நாட்களில், கிழிந்த ஆடை, பழைய ஆடைகளை அணியக்கூடாது.
    மகா முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி அனுமந்தராயன்கோட்டை அருகே உள்ள குடகனாற்றில் இருந்து பால் குடங்கள் எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர்.
    ஆத்தூர் ஒன்றியம் பிள்ளையார்நத்தத்தில் உள்ள மகா முத்துமாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது. இதையொட்டி அனுமந்தராயன்கோட்டை அருகே உள்ள குடகனாற்றில் இருந்து பால் குடங்கள் எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர்.

    பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர் கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்களும், விழா கமிட்டியினரும் இணைந்து செய்திருந்தனர். விழாவையொட்டி கிராமம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
    பெண் தெய்வங்களுள் லட்சுமியின் இடம் உயர்ந்தது. அவள் சொர்க்கத்தில் சொர்க்கலட்சுமி, பூவுலகில் அரசர்களிடையே ராஜ்ஜிய லட்சுமி, வீடுகளில் இல்லத்தரசிகள் உருவில் கிரக லட்சுமி என்று அழைக்கப்படுகிறாள்.
    லட்சுமிதேவியின் கடாட்சம் இருந்தால் புகழ், கல்வி, வீரம், வெற்றி, நன்மைகள், துணிவு, செல்வம், தான்யம், சுகம் போகம், அறிவு, அழகு, பெருமை, அறம், நற்குடி, உடல்நலமுள்ள நீண்ட வாழ்வு ஆகிய 16 பேறுகளை பெறலாம்.

    பெண் தெய்வங்களுள் லட்சுமியின் இடம் உயர்ந்தது. அவள் சொர்க்கத்தில் சொர்க்கலட்சுமி, பூவுலகில் அரசர்களிடையே ராஜ்ஜிய லட்சுமி, வீடுகளில் இல்லத்தரசிகள் உருவில் கிரக லட்சுமி என்று அழைக்கப்படுகிறாள். உலகையும், உடலையும் துறந்த ஞானிகள் கூட மோட்ச லட்சுமியின் அருள் கடாட்சத்தை விரும்புகிறார்கள்.



    தேவர்கள் ஸ்ரீதேவியை வணங்கி ''தாயே தாங்கள் எங்கு வசிக்கிறீர்கள்?” என்று கேட்டதற்கு லட்சுமி தேவி “எந்த வீட்டில் காலையில் எவரும் தூங்காமல் எழுந்திருந்து நாம ஸ்மரணம் செய்கின்றனரோ, எங்கு காலை வேலைகளில் வீட்டு வாயிலில் சாணி தெளித்து கோலம் போட்டுத் தீபம் ஏற்றி வைக்கின்றனரோ, எங்கு ஆசாரம் கடைபிடிக்கப்படுகிறதோ, எங்கு ஸ்வதர்மம் நன்கு அனுஷ்டிக்கப்படுகிறதோ எங்கு பாத்திரங்கள் பரப்பப்படாமலும் தானியங்கள் சிந்தாமலும் இருக்கிறதோ எங்கு கோபூஜை வேதத்துடன் நடத்தப்படுகின்றதோ அங்கு இருப்பேன்” என்றாள்.

    யாரிடம் லட்சுமி தங்கமாட்டாள்? கலகம் செய்பவர், குரோதமாகப் பேசுபவர், பொய் கூறுபவர், சந்தியா காலத்தில் உண்பவர், மயிர், கரி, எலும்பு இவைகளைக் காலால் மிதிப்பவர், கால் அலம்பாமல் வீட்டுக்குள் வருகிறவர், மாத்ரு, பித்ரு பணிவிடை செய்யாதவர், ஸ்வகர்மாவை விட்டவர், நகத்தைப் பல்லால் கடிப்பவர் ஆகியோர்களிடம் லட்சுமி தங்கமாட்டாள். 
    திருப்பரங்குன்றம் கோவிலில் மொட்டையரசு உற்சவத்தையொட்டி தெய்வானையுடன் முருகப் பெருமான் தங்கக் குதிரையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா நடைபெற்றது. திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியாக மொட்டையரசு உற்சவம் நேற்று காலையில் நடைபெற்றது. கோவிலில் இருந்து சன்னதி தெருவில் உள்ள கல்யாண விநாயகர் கோவில் வரை மேள, தாளங்கள் முழங்க தெய்வானையுடன் முருகப் பெருமான் சட்டத்தேரில் எழுந்தருளி பவனி வந்தார்.

    இதனையடுத்து தங்கக்குதிரையில் தெய்வானையுடன் முருகப்பெருமான் அமர்ந்து மொட்டையரசு திடல் வரை சென்றார். வழிநெடுகிலும் பக்தர்கள் திருக்கண்கள் அமைத்து சாமி தரிசனம் செய்தனர். மொட்டையரசு திடல் சார்ந்த ஒரே இடத்தில் 75-க்கும் மேற்பட்ட பாரம்பரிய திருக்கண்களில் சாமி எழுந்தருளினார்.

    ஒவ்வொரு திருக்கண்களிலும் சாமிக்கு சிறப்பு பூஜைகள், மகா தீபாராதனை நடந்தது. அங்கு கூடி இருந்த பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா என்ற பக்தி கோஷங்கள் எழுப்பி பய பக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். காலையிலிருந்து மாலை வரை மொட்டையரசு திடலில் தங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்த முருகப்பெருமான் இரவு 9 மணி அளவில் பூப்பல்லக்கில் எழுந்தருளி இருப்பிடம் நோக்கி சென்றார்.வழிநெடுகிலும் பக்தர்கள் குவிந்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
    நெல்லை, பாபநாசத்தில் தாமிரபரணி ஆற்றுக்கு தீப ஆரத்தி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    நெல்லை அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோசாலை ஜடாயூத்துறையில் வைகாசி விசாகமான நேற்று தாமிரபரணி ஆறு பிறந்த நாளையொட்டி மாலை 6 மணிக்கு தாமிரபரணிக்கு சிறப்பு அபிஷேக பூஜைகளும், சுமங்கலி பூஜையும் நடந்தது. இதைத்தொடர்ந்து ஆற்றுக்கு ஒரு கரையில் இருந்து மறுகரை வரைக்கும் 15 பட்டு புடவைகளை ஒன்றாக இணைந்து ஆற்றில் சாத்தி சிறப்பு பூஜையும், மகா ஆரத்தியும் நடத்தினார்கள். ஜடாயூத்துறையில் நேற்று அமலைசெடிகள் தேங்கி கிடந்தது. இதை அந்த ஆரத்தி பூஜைக்கு வந்தவர்கள் அகற்றினார்கள்.

    இந்த சிறப்பு பூஜையில் ராமானந்தாசுவாமிகள், ஆத்மானந்தா சுவாமிகள், வரதராஜூ சுவாமிகள், அன்னை ராமலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பாபநாசத்தில் சித்தர்கள் கோட்ட ஆரத்திக்குழு, 27 சமுதாய பொதுமக்கள் சார்பில், தாமிரபரணி பவுர்ணமி தீப ஆரத்தி விழா, வைகாசி விசாக நதி உற்பவ நாள் விழா நடந்தது. விழாவில் தத்துவ நிஷ்டானந்த சரஸ்வதி சுவாமி தாமிரபரணி நதிக்கு தீப ஆரத்தியை தொடங்கி வைத்தார். பொன் பெருமாள் தாமிரபரணி மகா புஷ்கர நினைவு கல்வெட்டை திறந்து வைத்தார்.

    தாமிரபரணி கலச பூஜை, தீப ஆரத்தி விழா நினைவு மலர் வெளியீடு, சகஸ்ரநாமம் பாராயணம் செய்யும் மகளிருக்கு மஞ்சள் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னதாக இந்து முன்னணி மாவட்ட துணை தலைவர் பால்ராஜ், செயற்குழு உறுப்பினர்கள் ஆறுமுகம், நாகராஜன் உள்ளிட்ட பக்தர்கள் பாபநாசசுவாமி கோவிலில் இருந்து தாமிரபரணி நதிக்கு சீர்வரிசையுடன் ஊர்வலமாக வந்தனர்.
    தஞ்சை பெரியகோவிலில் தனி சன்னதியில் பெரியநாயகி அம்மனுக்கு இந்த ஆண்டிற்கான பூச்சொரிதல் விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    தஞ்சை பெரியகோவிலில் தனி சன்னதியில் பெரியநாயகி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். ஆண்டுதோறும் உலக நன்மைக்காக பெரியநாயகி அம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடத்தப்படும்.

    இந்த ஆண்டிற்கான பூச்சொரிதல் விழா வைகாசி விசாகமான நேற்று மாலை நடந்தது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் பூக்களை அன்பளிப்பாக அளித்தனர். இந்த பூக்களை கூடைகளில் வைத்து பெரியகோவில் வளாகத்தில் உள்ள நால்வர் மண்டபத்தில் இருந்து பக்தர்கள் ஊர்வலமாக புறப்பட்டனர். அவர்கள், கோவில் வளாகத்தை சுற்றி வந்து பெரியநாயகி அம்மன் சன்னதியை சென்றடைந்தனர்.

    பின்னர் பக்தர்களால் வழங்கப்பட்ட ரோஜா, மகிழம், தும்பை உள்ளிட்ட 36 வகையான மலர்களால் பெரியநாயகி அம்மனுக்கு பூச்சொரிதல் நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் வழங்கிய மலர்களின் எடை 1,000 கிலோ ஆகும்.
    ×