search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95492"

    சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்பவர்கள் மாலை அணிந்து விரதம் கடை பிடித்து செல்வது போல குலசை முத்தாரம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களும் விரதம் இருந்து மாலை அணிகிறார்கள்.
    சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்பவர்கள் மாலை அணிந்து விரதம் கடை பிடித்து செல்வது போல குலசை முத்தாரம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களும் விரதம் இருந்து மாலை அணிகிறார்கள். ஆனால் இந்த பழக்கம் ஆதி காலத்தில் இருந்தே கடை பிடிக்கும் பழக்கம் அல்ல. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு உருவான பழக்கம்தான்.

    ஒரு தடவை குலசை கோவில் தசரா திருவிழா வுக்கு வந்த குறவர் இனத்தவர்கள் தங்கள் தயாரிப்பான பாசி மணி மாலைகளை விற்பதற்காக, ‘இந்த மாலையை வாங்கிச் சென்று கடல் தண்ணீரில் சுத்தம் செய்து ஆலயத்தில் வழிபாடு செய்து அணிந்தால் நினைத்தது நடக்கும்’ என்றனர்.
    அதை பக்தர்கள் ஆர்வமுடன் வாங்கி அணிந்தனர். அதன் பிறகே குலசை பக்தர்கள் மாலை அணியும் புதிய மரபு ஏற்பட்டது.

    காப்பு கட்டி வேடம் அணிவோர் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்

    தசரா திருவிழா நாட்களில் அன்னை முத்தாரம்மனின் அருள் வேண்டி காப்பு கட்டி வேடம் அணிவோர் கீழ்க்கண்ட விதிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அப்போதுதான் அன்னையின் பேரருளை பரிபூரணமாய் வேடம் அணிவோர் அடைய முடியும்.

    * வேடம் அணிபவர்கள் உடலும், உள்ளமும் தூய்மையாக இருத்தல் வேண்டும். காப்புக்கட்டிய பின்னரே வேடம் அணிதல் வேண்டும்.

    * வேடம் அணிபவர்கள் எந்த வேடம் அணிந்தாலும் அது புனிதமானது என்பதை உணர்ந்து அதன் புனிதத்தன்மையை பேணிப் பாதுகாக்கவேண்டும்.

    * வேடம்அணிபவர்கள் அன்னையின் நாமங்களை மட்டுமே உச்சரிக்க வேண்டும்.

    * வேடம் அணிபவர்கள் இரும்பினால் செய்யப்பட்ட ஆயுதங்களை ஏந்தி வரக்கூடாது.

    * காளி வேடம் அணிபவர்கள் பெண்களாக இருந்தால் 10 வயதிற்கு உட்பட்டவராகவும் அல்லது 50 வயதிற்கு மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.

    காப்பு அவிழ்க்கும் வரை காத்திருக்க வேண்டாம்

    விரதம் இருந்து காப்பு கட்டி வேடம் அணிந்த பக்தர்கள் நள்ளிரவில் மகிசாசூரசம்காரம் முடிந்த பின் அம்மனுக்கு காப்பு அவிழ்க்கும் வரை காத்திருக்க வேண்டியதில்லை. தங்களது சொந்த ஊருக்கு செல்லலாம். அன்னை முத்தாரம்மனுக்கு காப்பு அவிழ்க்கும் நேரத்தை தெரிந்து கொண்டு அவரவர் சொந்த ஊரில் உள்ள கோவில்களில் காப்பு அவிழ்த்து கொள்ளலாம். கூட்ட நெரிசலை தவிர்க்க எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு பக்தர்கள் ஓத்துழைக்க வேண்டும்.
    சக்தி பீடங்கள் என்பது தாட்சாயிணி தேவியின் உடல் பாகங்கள் விழுந்த இடங்களில் எழுதப்பட்ட கோவில்களாகும். சக்தி பீடங்களில் பல்வேறு சக்தி பீடங்கள் நம் தமிழகத்திலும் உள்ளன.
    நவராத்திரி கொண்டாட்டத்தின் சிறப்பம்சமே சக்தி சொரூபங்களை வழிபடுவதே. அந்த வகையில் ஆதி சக்தி ரூபமான தாட்சாயிணி எனும் பார்வதி தேவியின் சக்தி பீடங்களை அறிவது வேண்டும். சக்தி பீடங்கள் என்பது தாட்சாயிணி தேவியின் உடல் பாகங்கள் விழுந்த இடங்களில் எழுதப்பட்ட கோவில்களாகும்.

    சக்தி பீடம் என்றால் சக்தியின் அமர்விடம் என்று பொருள். இந்தியாவில் எண்ணற்ற சக்தி பீடங்கள் உள்ளன. அவை அட்சர சக்தி பீடங்கள், மகா சக்தி பீடங்கள், ஆதி சக்தி பீடங்கள் என்று கூறப்படுகின்றன. தேவி பாகவதம் எனும் சக்தி தேவிக்கு 108 சக்தி பீடங்கள் உள்ளதாகவும், அதில் 64 சக்தி பீடங்கள் முக்கியமானதாகவும் கூறப்படுகிறது.

    அட்சர சக்தி பீடங்கள் என்பவை 51 சக்தி பீடங்களாகும். மகா சக்தி பீடங்கள் என்பதை பதினெட்டு சக்தி பீடங்கள், ஆதி சக்தி பீடங்கள் என்பவை நான்கு சக்தி பீடங்கள் என்றவாறு கூறப்படுகிறது. அதுபோல் நவசக்தி பீடங்கள் மற்றும் சப்த சக்தி பீடங்கள் போன்றவாறும் உள்ளதாக புராணங்கள் மற்றும் நூல்கள் குறிப்பிடுகின்றன. ஆனால் அதற்குரிய ஆதாரங்கள் ஏதுமில்லை. எப்படியாயினும் இறைவியின் இன்னருளை பெற பக்தர்கள் அனைவரும் ஒவ்வொரு சக்தி பீடத்திலும் பிரார்த்தனையையும், வேண்டுதல்களையும் செய்து வருகின்றனர்.

    சக்தி பீடங்களில் பல்வேறு சக்தி பீடங்கள் நம் தமிழகத்திலும் உள்ளன.

    சக்தி பீடங்கள் உருவான புராண நிகழ்வு

    தேவி தாட்சாயிணி அவரது தந்தை தட்சன் நடத்திய யாகத்திற்கு அழைக்கப்படாமல் அவமதிக்கப்பட்டார். இதன் காரணமாக யாகத்தை அழியுமாறு சபித்துவிட்டு, தன் உடலை அந்த யாகத்திலேயே செலுத்தி எரிந்து போகிறாள். சிவனால் உருவான வீரபுத்திரர் அந்த யாகத்தை அழிக்கின்றனர். மனைவி இறந்த சோகத்தில் சிவன் தாட்சாயிணியின் இறந்த உடலை எடுத்துக்கொண்டு ஊழித்தாண்டவம் ஆடினார். சிவனின் ஆட்டத்தை நிறுத்த வேண்டி மகாவிஷ்ணு தன் சக்ராயுதத்தை விட அது தாட்சாயிணியின் உடலை 51 துண்டுகளாக வெட்டி வீழ்த்தியது பிறகே சிவன் சாந்தமானார். அவ்வாறு வெட்டப்பட்ட தாட்சாயிணியின் உடல் துண்டுகள் விழுந்த இடங்களே சக்தி பீடமாக உருவாயின. அதுபோல் சமஸ்கிருதத்தின் 51 அட்சரங்கள் தோன்றிய இடங்களிலேயே பிறகு தேவியின் உடல் பகுதிகள் விழுந்தன என்றும் அதனாலேயே அவை 51 அட்சர சக்தி பீடங்கள் என்றும் அழைக்கப்படுகிறது என நூல்கள் கூறுகின்றன.

    ஆதி சக்தி பீடங்கள்


    51 சக்தி பீடங்களையும், மகாசக்தி பீடங்கள் போன்றவற்றை முற்றிலும் வழிபட முடியாவிட்டாலும், ஆதி சக்தி பீடங்கள் நான்கு மட்டுமாவது தரிசித்து அன்னையின் அருள் பெறவேண்டும் என்பது நியதி. அந்த வகையில் ஆதி சக்தி பீடங்கள் நான்கினை பற்றி அறிவோம்.

    அசாமின் காமாக்யா கோவில்

    அசாம் மாநிலம் கவுகாத்தி நகரில் இருந்து சுமார் 12 கி.மீ. தூரத்தில் நீலாச்சல் மலை மீது பழமையான காமாக்யா கோவில் உள்ளது. 51 சக்தி பீடங்களில் ஒன்றாகவும், ஆதி சக்தி பீடமாகவும் விளங்கும் இக்கோவிலின் தாட்சாயிணியின் யோனி உடல் பகுதி விழுந்த பீடமாக விளங்குகிறது. இங்கு தேவிக்கு மாதவிலக்கு நிகழ்வதாகவும், அந்த மூன்று நாட்கள் ஆலயம் திறக்கப்படாது என்பது முக்கியமானது. அந்த விழாவின்போது பக்கத்தில் ஆறு சிவப்பு நிறமாக ஓடுகிறது. காமிக்யா தேவி கோவில் அருகிலேயே தச மகா வித்யா எனப்படும் 10 தேவியருக்கும் தனித்தனி சன்னதிகள் உள்ளன.

    கொல்கத்தா காளிகாட்காளி கோவில்

    மேற்கு வங்க மாநில தலைநகரான கொல்கத்தாவின் காளிகாட் எனும் பகுதியில் காளி கோவில் உள்ளது. ஆதி கங்கை நதியின் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. தேவியின் வலது காலின் (கட்டை விரல் தவிர்த்து) விரல்கள் விழுந்த இடமாக இந்த ஆதி சக்தி பீடம் உள்ளது. காளிகா புராணத்தில் தேவியின் முகம் விழுந்த இடம் எனவும் கூறுகிறது. புராதன முக்கியத்துவம் வாய்ந்த கோவிலாக கங்கை ஆற்றங்கரையில் உள்ளது. இந்த காளிகாட் என்ற பெயரில் இருந்தே கொல்கத்தா என்ற நகர பெயர் உருவானதாகவும் கூறப்படுகிறது.

    தாரதாரிணி கோவில்


    ஒடிசா மாநிலத்தின் பெர்காம்பூர் நகரில் இருந்து 40 மைல் தூரத்தில் உள்ள கஞ்சாம் மாவட்டம் புருஷோத்தம்பூரில் ருசிகுல்ய ஆற்றின் அருகில் உள்ள மலை மீது தாரதாரிணி கோவில் உள்ளது. 999 படிகட்டுகளில் மலை மீது ஏறி 1,000 படியில் ஆலயம் உள்ளது. தேவியின் இரு மார்பகங்களும் விழுந்த பகுதியாக உள்ளது. ஆகவே இங்கு இரு தேவியராய் தாரா மற்றும் தாரிணி தெய்வ சிலைகளாய் வழிபடப்படுகிறது. ஒடிசாவின் தெற்கு பகுதி மக்களின் குலதெய்வமாக விளங்கும் இக்கோவில் ஆதி சக்தி பீடமாக விளங்குகிறது.

    விமலா சக்தி கோவில்

    அன்னையின் உடல் பாகத்தில் நாபி விழுந்த பகுதியே விமலா தேவி சன்னதி. இது பூரி ஜெகந்நாதர் கோவில் வளாகத்தில் உள்ளது. இருப்பினும் இப்புகழ் பெற்ற தலத்தில் முதலில் குடியேறியவர் அன்னை விமலைதான். சக்தி பீடமாக விளங்கிய இப்பகுதியிலேயே ஸ்ரீஜகந்நாதர் குடிகொள்ள விரும்பி பின்பு ஜெகந்நாதர் இங்கு குடியேறியதாக புராண தகவல் கூறுகிறது. ஆதி சக்தி பீடமாக விளங்கும் விமலை அன்னை நிவேதனம் முதலில் செய்யப்பட்ட பிறகே ஜகந்நாதர்க்கு நிவேதனம் செய்யப்படும். துர்க்காஷ்டமி விழா மிக கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

    புனித நதியில் நீராடுவதற்கென்று தர்ம சாஸ்திரம் சில விதிகளை வகுத்து வைத்திருக்கிறது. அவைகளைக் கடைப் பிடித்தால் நிச்சயம் நல்ல பலன்கள் கிட்டும்.
    12 நாட்களிலும் தொடர்ந்து நீராடுவது இந்தியாவில் உள்ள அனைத்து புனித நதிகளிலும் நீராடுவதற்குச் சமம். புனித நதியில் நீராடுவதற்கென்று தர்ம சாஸ்திரம் சில விதிகளை வகுத்து வைத்திருக்கிறது. அவைகளைக் கடைப் பிடித்தால் நிச்சயம் நல்ல பலன்கள் கிட்டும். அவைகளை வரிசையாகப் பார்ப்போம்.

    1.  சூரிய உதயத்திற்கு முன் நான்கு நாழிகைகள் (96 நிமிடம்) அருணோதய காலமாகும். அப்பொழுது நீராடுவது சிறப்பானது என்று சொல்லப்பட்டுள்ளது. அதாவது காலை 4.24 மணி முதல் 6.00 மணி வரையில் நீராடுவது சிறப்பு என்று சொல்லப்பட்டு உள்ளது.

    2.  இந்த 96 நிமிடத்திலும் காலை 4.24 முணி முதல் 5.12 மணி வரையிலான 48 நிமிட காலம் மிகச் சிறப்பு என்று சொல்லப்பட்டுள்ளது. 4.24 மணி முதல் 5.12 மணி வரை உள்ள இரண்டு நாழிகைகள் “பிரம்ம முகூர்த்தம்” என்று சொல்லப்படும். இதை பிரசாந்தவேளை என்பர். மனித மனம் அலைபாயாமல் பரிசுத்தமாக இருக்கும் வேளை இது. பிரகிருதியிலே இயற்கையிலேயே பகவானால் பிரத்தியேகமாக செய்து வைத்தது பிரம்ம முகூர்த்தம் ஆகும். இந்த வேளையில் 15 நிமிடம் தியானம் செய்தால், மற்ற வேளையில் இரண்டு மணி நேரம் தியானம் செய்ததற்குச் சமமாகும். இந்த பிரம்ம முகூர்த்தத்தில் நீராடுவது ஒரு தனி ஆனந்தம். ஏன்? நம் உள்ளத்தில் கடவுள் பக்தி மேலோங்கி இருக்கும் வேளை இது.

    3.  குழந்தைகள், வியாதியினால் பீடிக்கப்பட்டவர்கள், வயது ஆனவர்கள் சமயத்திற்குத் தகுந்தவாறு பகலில் நீராடலாம். ராகு காலத்தைத் தவிர்க்கவும்.

    4.  புண்ணிய நதிகளில் நீராடப் போகிறவர்கள் குடை பிடித்துக் கொண்டோ, செருப்பு அணிந்து கொண்டோ செல்லக் கூடாது. கார், வேன், இருசக்கர வாகனங்களில் போய் நதிக்கரையில் இறங்கக் கூடாது. நடந்து செல்ல வேண்டும். குடை பிடித்துக் கொண்டு சென்றால் தீர்த்தத்தில் நீராடிய பலனில் கால் பங்கும், செருப்பணிந்து சென்றால் அரைப்பங்கு பலமும், வண்டி வாகனங்களில் சென்றால் முழு பலமும் நசித்து விடுகிறது. நோயாளியாக இருந்தால் குதிரை வண்டியில் போகலாம். மாட்டு வண்டியில் போகக் கூடாது.

    5.  நதிக்கரையில் உள்ள மண்ணை எடுத்துத் தன் உடம்பில் பூசிக்கொண்டு நதியை வணங்கி மெல்ல அதனுள் இறங்க வேண்டும். புண்ணிய நதிகளில் நீச்சலடித்து குளிக்கக் கூடாது. நீச்சலடிப்பதன் மூலம் நதியைக் காலால் உதைக்க நேரிடும். நதியை உதைக்கலாமா? இது பாபச் செயல் அல்லவா?

    6.  தூய்மையான வெண்ணிற ஆடை உடுத்திக் கொண்டே நீராட வேண்டும். ஒற்றை வஸ்திரத்தோடு நீராடக்கூடாது. இடுப்பில் ஒரு துண்டை கட்டிக் கொள்ள வேண்டும்.

    7.  சிகப்பு, கருப்பு, நீல நிறத் துணி, தலைப்பு இல்லாத வஸ்திரம், ஈரமான வஸ்திரம் இவைகளை ஒரு பொழுதும் உடுத்திக் கொண்டு நீராடக் கூடாது. ஓரத்தில் நீலக் கரை, கருப்புக்கரை போட்ட வஸ்திரமும் உடுத்திக் கொள்ளக் கூடாது. கைலிகள், லுங்கிகள் உடுத்தக் கூடாது.

    8.  அரைஞாண் கயிறு (இடுப்புக் கயிறு) இல்லாமல் ஆண்கள் நீராடக் கூடாது. அப்படிச் செய்பவன் நதியில் நீராடிய புண்ணிய பலனைப் பெற மாட்டான்.

    9.  அரை ஞாண் கயிற்றில் கச்சம் கட்டிக் கொண்டும் நீராடக் கூடாது. இது வஸ்திரம் தரிக்காதவருக்குச் சமம். இதனாலும் புண்ணிய பலன் கிட்டாமற் போய் விடும்.

    10.  நதியின் பிரவாகத்திற்கு (ஓட்டத்திற்கு) எதிர்முகமாக நின்றே நீராட வேண்டும். முதுகைக் காட்டக் கூடாது. இது பாபமாகும்.

    11.  புனித நீராடல் முதலிய சகல காரியங்களிலும் நாராயணனை அவசியம் தியானம் செய்ய வேண்டும். நீரில் நின்று கொண்டு மனதில் வேறு எண்ணம் இல்லாமல் “ஹரி, ஹரி” என்று சொல்லிக் கொண்டு மூன்று முறை நன்கு மூழ்கி எழ வேண்டும். லக்ஷ்மி சூக்தம் தெரிந்தவர்கள் அதைக் கூறலாம். வலது கையால் நீரை எடுத்து மூன்று முறை அருந்த வேண்டும்.

    12.  நீண்ட தலைமுடி கொண்ட ஆண்களும், பெண்களும் தலைமுடியை முன்புறம் போட்டுக் கொண்டு நீராட வேண்டும். பின்புறம் போடக் கூடாது. தலைமுடியில் உள்ள நீர் முன்புறமாக விழுந்தால் அது கங்கை தீர்த்தத்திற்குச் சமமாகும். பின்புறம் விழுந்தால் அது கள்ளுக்குச் சமமாகும். ஆகையால் முன்புறமாக குனிந்து கொண்டு தலைமுடியில் உள்ள நீரை பூமியில் விழச் செய்ய வேண்டும்.

    13.  நதியில் நீராடும் போது எச்சிலைக் காறி உமிழ்வதும், அதில் சிறுநீர் கழிப்பதும் பாபச் செயலாகும்.

    14.  நதியினுள் ஈரத்துணிகளைப் பிழியக் கூடாது. கரைக்கு வந்தே பிழிய வேண்டும்.

    15.  நீரிலிருந்து வெளியே வந்து தலைமயிரை கையால் உதறக் கூடாது. தலைமயிரில் உள்ள நீர், வஸ்திர நீர் பிறர் மேல் படக் கூடாது. இது எவர் மீது படுகிறதோ அவரிடம் உள்ள செல்வமெல்லாம் தொலைந்து தரித்திரராகி விடுவார்.

    16.  நீராடி முடித்தவுடன், காய்ந்த வஸ்திரத்தை மேலே சுற்றிக் கொண்டு ஈர வஸ்திரத்தைக் கீழாக விட வேண்டும். மேலாக எடுத்துப் போடக் கூடாது.

    17. நெற்றியில் திருநீறோ அல்லது கோபி சந்தனமோ பூசிக் கொண்டு மீண்டும் ஒரு முறை நதியை வணங்க வேண்டும்.
    தாமிரபரணியில் சிந்துபூந்துறை என்று சொல்லப்படுகின்ற தீர்த்தத்தில் ஸ்நானம் செய்வோர் அல்லது அதைப் பானம் செய்வோர் தடையின்றி மோட்சத்தைப் பெறுகின்றனர்.
    1. பூலோகத்திலிருக்கின்ற எவ்விதமான புண்ணியத் தீர்த்தங்களும் ஸ்ரீதாமிரபரணியின் ஒரு திவலையின் பதினாறில் ஒரு பாகத்திற்கும் இணையில்லாததே.

    2. பெரியோர்கள் மற்ற சாதாரண நதிகளைத் தீர்த்தம் என்று கூறலாம். ஆனால் அவற்றிலும் தாமிரபரணி என்ற எண்ணத்தைச் செலுத்தி தியானம் செய்தாலோ, நீராடினாலோ, இம்மகாநதியின் புண்ணியம் கிடைக்கும்.

    3. சம்சாரம் என்ற சமுத்திரத்தைத் தாண்ட விரும்புபவர்கள், அவனுடைய உயிர் நிலைகாலத்தில் ஒருமுறையாவது தாமிரபரணி மகாநதியில் ஸ்நானம் செய்ய வேண்டும்.

    4. தாமிரபரணியில் சிந்துபூந்துறை என்று சொல்லப்படுகின்ற தீர்த்தத்தில் ஸ்நானம் செய்வோர் அல்லது அதைப் பானம் செய்வோர் தடையின்றி மோட்சத்தைப் பெறுகின்றனர்.

    5. சூரியன் சிம்மராசியில் வரும்போதெல்லாம், அகத்திய மாமுனியானவர் சகலமான தேவர்களோடும், முனிகளோடும், சித்த சிரோமணிகளோடும் மலய பர்வதத்தின் அடிவாரத்திலிருக்கின்ற நகாரணியம் தலத்திரத்திற்கு வந்து, சிறந்த மேன்மை பெறுவதற்காக மனதை அடக்கி பூஜை செய்து வருகின்றார்.

    6. ஆத்மஞானம் பெற விரும்புவோர் ஒருமுறையாவது புண்ணியமான ஸ்ரீதாமிரபரணியில் ஸ்நானம் செய்து கோஷ்டீசுவரரைப் பூஜை செய்ய வேண்டும்.

    7. தர்மம், அர்த்தம், காமம், மோட்சம் என்ற நான்கையும் விரும்புவோர் மகாபாவத்தைத் தொலைக்கின்ற பாபவிநாசத்தில் ஸ்நானம் செய்ய வேண்டும்.

    8. தாமிரபரணியில் உள்ள சாலா தீர்த்தம், தீபதீர்த்தம், கஜேந்திரமோட்ச தீர்த்தம், புடார்ச்சுன தீர்த்தம், துர்க்கா தீர்த்தம், பைரவ தீர்த்தம், சோம தீர்த்தம், வியாச தீர்த்தம், ரோமச தீர்த்தம், ஜோதிர்வன தீர்த்தம், சாயா தீர்த்தம், மந்திர தீர்த்தம், நான்கு அக்னி தீர்த்தங்கள், ஷிப்தபுஷ்ப தீர்த்தம், ராமதீர்த்தம், விஷ்ணுவன தீர்த்தம், கலச தீர்த்தம், ஸ்ரீபுர தீர்த்தம், ஸோமாரண்ய தீர்த்தம், சங்கம தீர்த்தம் ஆகிய இவை புராணங்களில் முக்கியத் தீர்த்தங்களாகக் கூறப்பட்டிருக்கின்றன.

    9. பிராணாயாமம், பஞ்சகவ்யம், சூட்சுமணை என்ற நாடியில் பிராணவாயுவை ஏற்றித் தவம் செய்தல், பிராஜாபத்யம், மலையிலிருந்து விழுதல், அக்னிப் பிரவேசம் ஆகிய பெருஞ்செயல்களால் மானிடர் பெறக்கூடிய பயனை தாமிரபரணி நதியில் ஒருமுறை ஸ்நானம் செய்வதன் மூலம் பெற முடியும்.

    10. ஸ்ரீதாமிரபரணி தேவியானவள் பூமிக்கு வாழ்வளிக்க வந்தவள். இல்லற வாழ்க்கையைச் சிறப்பித்து வழங்குபவள். முக்திக்கு முத்தானவள் என்று வீரசேன மகாராஜனுக்கு சங்கமா முனிவர் கூறியுள்ளார்.

    11. தாமிரபரணி பிறந்த நாளான வைகாசி விசாகம் அன்று குபேரன் இந்த ஆற்றில் மூழ்கிதான் குபேர பேறு பெற்றான் என்று புராணங்கள் கூறுகின்றன.

    12. கங்கை நதி தன் பாப அழுக்கை போக்க மார்கழி மாதம் தோறும் தாமிரபரணியில் வந்து அடைக்கலம் ஆகி விடுவாள். ஆகவே மார்கழி மாதம் தாமிரபரணியில் எந்த இடத்தில் நீராடினாலும் கங்கையில் நீராடிய பலன் கிடைக்கும்.

    13. சேர்ந்த பூ மங்கலத்தில் தாமிரபரணி நதியின் சங்கு முகத்தில் நீராடி கடலரசனும் அகத்திய பெருமானும் ரோமரிஷியும் நீராடி நற்கதியடைந்தனர்.

    14. தசரதனுக்கு ராமபிரான் தாமிரபரணியின் பாணதீர்த்தத்தில்தான் தர்ப்பணம் செய்தார். எனவே தாமிரபரணியில் ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசையில் லட்சக்கணக்கானவர்கள் நீராடி நலம் பெறுகிறார்கள்.

    15. தாமிரபரணி வங்க கடலில் சேரும் சங்குமுகத்தில் நீராடினால் தங்களது பாவம் போய் விடும். முன்னோர்களுக்கு தர்பணம் செய்ய பாணதீர்த்தம் போலவே சங்கு முகமும் ஒரு சிறந்த இடமாகும்.



    16. தாமிரபரணியில் மிக முக்கிய தீர்த்தமாக கருதப்படுவது பாணதீர்த்தம், பாபநாச தீர்த்தம், ஊர்காட்டில் உள்ள கோடிஸ்வர தீர்த்தம், திருப்புடைமருதூரில் உள்ள சுரேந்திரமோட்ச தீர்த்தம், திருநெல்வேலியில் சிந்துபூந்துறை தீர்த்தம் மற்றும் சங்குமுக தீர்த்தம் போன்ற தீர்த்தமாகும்.

    17. தாமிரபரணி நதி வங்க கடலில் கலக்கும் இடத்தில் சங்கு தீர்த்தம் இருப்பதால் இந்த தீர்த்தத்தில் வந்து தீர்த்தம் எடுத்து கோவிலுக்கு கும்பாபிசேகம் நடத்தினால் மிகவும் நல்லது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நிறைய ஆலயங்களுக்கு திருவிழா, கொடை விழா நடக்கும் போது இந்த தீர்த்தத்தில் இருந்துதான் தீர்த்தம் எடுத்து செல்கிறார்கள்.

    18. தாமிரபரணி ஆற்றில் ஒருமுறை நீராடினால் ஒரு லட்சம் தடவை காயத்திரி மந்திரம் ஜெபித்த புண்ணியம் கிடைக்கும் என்ற ஐதீகம் உள்ளது.

    19. தாமிரபரணி புஷ்கரத்தை முன்னிட்டு ஸ்ரீதாமிரபரணி சிலை உருவாக்கப்பட்டுள்ளது. சிருங்கேரி ஐகத்குரு பாரதி தீர்த்தர் பூஜை செய்து கொடுத்துள்ள இந்த சிலைக்கு புஷ்கரம் நடக்கும் 12 நாட்களும் சிறப்பு பூஜைகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

    20. தாமிரபரணி ஆற்றுத் தண்ணீரில் தாமிரசத்தும், மூலிகைகளும் அதிகம் உள்ளன. இதனால்தான் தாமிரபரணியில் நீராடினால் நோய்கள் குணமாகிறது.

    21. தாமிரபரணி நதிக்கரையில் நவ கைலாயமும், நவ திருப்பதிகளும் உள்ளன. தமிழ்நாட்டில் வேறு எந்த நதிக்கும் இத்தகைய சிறப்பு இல்லை.

    22. ஆழ்வார் திருநகரியில் இருக்கும் நம்மாழ்வார் திருமேனி தாமிரபரணி புனித நீரால் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    23. தாமிரபரணி ஆறு கடல் மட்டத்தில் இருந்து சுமார் 6 ஆயிரம் அடி உயர பொதிகை மலையில் தோன்றுவது குறிப்பிடத்தக்கது.

    24. தமிழ்நாட்டில் காவிரி, தென்பெண்ணை, பாலாறு, வைகை, தாமிரபரணி ஆகிய ஐந்தும் முக்கிய நதிகளாகும். இதில் தமிழ்நாட்டிலேயே தோன்றி, தமிழ் நாட்டிலேயே கடலில் சங்கமிக்கும் ஒரே நதி தாமிரபரணி நதிதான்.

    25. தாமிரபரணிக்கு பச்சையாறு, மணிமுத்தாறு, குற்றாலம் அமைந்துள்ள சித்தாறு, ராமநதி, கடனாநதி, உப்பாறு ஆகிய உபநதிகள் உள்ளன. தாமிரபரணியிலும், உப நதிகளிலும் 37 அணைக்கட்டுகள், 7 நீர்த்தேக்கங்கள் இருக்கின்றன. தமிழ்நாட்டில் எந்த ஒரு நதியிலும் இந்த அளவுக்கு அணைக்கட்டுகள் கிடையாது.

    26. தாமிரபரணி நீர் பிடிப்புப் பகுதிகளில் ஆண்டுக்கு 1082 மி.மீ. மழை பெய்கிறது. இதில் 50 சதவீதம் கடலில் கலந்து வீணாகிறது.

    27. தாமிரபரணி பல இடங்களில் மிக அகலமாக உள்ளது. சீவலப் பேரியில்தான் மிக அகலமாய் உள்ளது.

    28. தாமிரபரணியில் பரிகாரம் என்ற பெயரில் உடுத்தியுள்ள துணிகளை போட்டு விடாதீர்கள். அது குடும்பத்துக்கு தேவை இல்லாத தோஷங்களை ஏற்படுத்தி விடும்.

    29. தாமிரபரணி தண்ணீர் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். கடனா நதி பகுதியில் கரும்பாக இனிக்கும். சித்தாறு பகுதியில் குளிர்ச்சியாக இருக்கும். முறப்பநாடுக்கு பிறகு பளீர் வெள்ளை நிறமாக மாறி விடும்.

    30. தாமிரபரணி நதியில் காலை வைப்பதற்கு முன்பு, ‘‘தாயே உன்னைப் போற்றுகிறேன், என் பாவங்களைப் போக்கு’’ என்று கூறி வணங்கியபடி இறங்க வேண்டும். புனித நீராடும் போது குல தெய்வத்தை நினைத்து மானசீக வழிபாடு செய்து நீராட வேண்டும். காயத்ரி மந்திரம் உள்ளிட்ட மந்திரங்களை சொல்லி புனித நீராடுவது அதிக பலன்களை அள்ளித் தரும்.
    நெல்லை தாமிரபரணியில் மகாபுஷ்கர விழா தொடங்கியுள்ளது. இனி தாமிரபரணி நதியின் மகிமையையும், அது பிறந்த வரலாற்றையும் காணலாம்.
    குருபகவான் திருக்கணித பஞ்சாங்கப்படி, 11.-10-.2018 அன்று இரவு 7.17 மணிக்கு துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அதாவது தாமிரபரணி நதியில் குருபகவான் பிரவேசிக்கிறார். சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு புண்ணிய நதியில் நீராடக் கூடாது என்பதால், 12-10-2018 (வெள்ளி) அன்று காலை தாமிரபரணி புஷ்கர விழா நெல்லையில் தொடங்கியுள்ளது.

    கி.பி. 1874-ம் ஆண்டுக்குப் பின்னர் இந்த ஆண்டு “மஹா புஷ்கரம்” என்ற மகோன்னத நிலையை, பெரும் மகிமையை தாமிரபரணி நதி அடையவிருக்கிறது. ‘மஹா’ என்றால் ‘பெரிய’ என்று பொருள். அகில ரூபமாக விளங்கும் இறைவனின் சொரூபமாகவே இந்நதி மாறி விடுகின்ற காலம் இது.

    இதனால் தாமிரபரணி நதிக்கரையில் உள்ள மண்ணும் மகா பவித்திரம் (தூய்மை) ஆகிறது. அதை நெற்றியில் பூசிக் கொள்வதாலேயே கங்கையில் நீராடிய பலன் கிடைக்கிறது. தாமிரபரணியிலிருந்து வீசும் காற்று தன் தேகத்தில் படுவதாலேயே ஆத்மா புனிதமடைகிறது. இனி தாமிரபரணி நதியின் மகிமையையும், அது பிறந்த வரலாற்றையும் காணலாம்.

    சிவபெருமானால் உருவாக்கப்பட்ட நதி :

    சிவபெருமான், பார்வதி தேவியாரைக் கைலாய மலையில் திருமணம் செய்த பொழுது, தேவர் முதலியோர் வடதிசையில் வந்து குவிந்ததால் தென்திசை உயர்ந்தது. இதை சமப்படுத்த எண்ணிய சிவபெருமான் அகத்திய முனிவரை அழைத்து, “தென்நாடு செல்க” எனக் கட்டளையிட்டார். அக்கட்டளைக்கு அடிபணிந்த அகத்தியர் சிவபெருமானிடம், “அது தமிழ்நாடு. தமிழ் பாஷை தமக்குத் தெரியாது. ஆகவே அதை எமக்கு சொல்லித் தருக” எனக் கேட்டனர்.

    உடனே சிவபெருமான் அகத்தியரை தம் அருகில் அமர வைத்து அவருக்கு தமிழ் மொழியைக் கற்பித்தார் என்று கந்த புராணம் கூறுகிறது. தமிழ் மொழியைக் கற்றுக் கொண்டு பொதிகை மலையில் வந்து அமர்ந்தார் அகத்தியர். சூரியபகவான் அவர் முன் தோன்றி தமிழ் இலக்கணங்களையெல்லாம் கற்றுக் கொடுத்தார். முருகப் பெருமானும் அவ்வப்போது அகத்தியர் முன் தோன்றி தமிழ் மொழியின் பல சிறப்புக் கூறுகளை உபதேசித்ததாக கந்த புராணம் சொல்கிறது.

    முதல் தமிழ்ச் சங்கத்தை நிறுவி அதன் முதல்வராய் இருந்து தமிழை வளர்க்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டார் அகத்தியர். பொதிகை மலையில் தங்கி அகத்தியரால் இயற்றப்பட்ட எழுத்துச் சொற்பொருள், யாப்பு, அணி முதலிய அடங்கிய இலக்கணத் தமிழ் நூல் “அகத்தியம்” எனப்படும். கலியுகத்திற்கு 4573 வருடங்களுக்கு முன் பிறந்தவர் அகத்தியர். கி.மு. 7673-ம் ஆண்டு கும்ப மாதத்தில் (மாசி மாதத்தில்) கும்ப ராசியில், கும்ப லக்னத்தில், ஒரு கும்பத்தில் பிறந்தவர் அகத்தியர். எனவே, இவருக்கு ‘கும்பமுனி’ என்ற பெயர் ஏற்பட்டது.

    அகத்தியரின் காலத்தை வைத்துப் பார்க்கும் போது அவரால் இயற்றப்பட்ட ‘அகத்தியம்’ என்ற தமிழ் இலக்கண நூல் 9600 ஆண்டுகளுக்கு முற்பட்டது எனத் தெரிய வருகிறது. அகத்தியர் பொதிகை மலையில் தங்கி தமிழ்ப்பணி செய்யும் போது சிவபெருமான் அவர் முன் தோன்றி “உனக்கு இங்கே என்ன வேண்டும்? கேள். தருகிறேன்” என்றார்.

    “எனக்கு நீராட நதி ஒன்று வேண்டும்” என்றார் அகத்தியர். உடனே, பொதிகை மலையில் நதி ஒன்றை உருவாக்கி அதை அவருக்கே தானமாகக் கொடுத்தார் சிவபெருமான். இந்நதி உருவான போது, அது தாம்பிர வர்ணத்தில் இருந்ததால் அதற்கு ‘தாம்பிர வர்ணி’ என்று பெயர் சூட்டினார் ஈசனார். காலப் போக்கில் அது தாமிரபரணி என்று மாற்றம் பெற்றது.

    தாமிரபரணியின் உற்பத்தி ஸ்தானம் பாண தீர்த்தம் எனப்படும். இது பொதிகை மலையில் உள்ளது. இதை அடைவது மிகக் கடினம். 1730 மீட்டர் உயரத்தில் உற்பத்தியாகி திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள் வழியாக 125 கி.மீட்டர் தூரம் பயணம் செய்து தூத்துக்குடிக்கும் திருச்செந்தூருக்கும் இடையே புன்னைக்காயல் என்ற இடத்தில் வங்கக்கடலில் சங்கமமாகிறது தாமிரபரணி.

    வற்றாத ஜீவ நதியாக வருடம் முழுவதும் ஓடிக் கொண்டிருக்கும் இந்நதிக்கரையில் உள்ள திருநெல்வேலியில் தான் நடராஜப் பெருமானின் நாட்டிய சபைகளுள் ஒன்றான “தாமிரசபை” அமைந்துள்ளது.இந்நதிக்கரையில் ஏராளமான திருக்கோயில்கள் உள்ளன. ‘நவகைலாயம்’ என்று புகழ் பெற்ற ஒன்பது கைலாயங்கள் இந்நதிக்கரையில் உள்ளன. நவதிருப்பதி என்று புகழ் பெற்ற ஒன்பது வைணவ தலங்களும், தாமிரபரணி நதிக்கரையின் அருகிலேயே அமைந்துள்ளன.

    சைவமும், வைணவமும் ஞான சுகங்களை பிறப்பிக்கும் இடமாக தாமிரபரணி நதிக்கரை விளங்குகிறது. இத்தகைய புனித நதியான தாமிரபரணி நதியில் படைப்புக் கடவுளான பிரம்மனின் புஷ்கரம் வரும் 12-10-2018 அன்று முதல் கலந்து கரைந்து போகவிருக்கிறது. இதன் மூலம் தெய்வீகமான இன்னியல்பு தாமிரபரணிக்கு அதிகரிக்கவிருக்கிறது. புதிய புனிதம் ஒன்று அதற்கு வந்து சேரவிருக்கிறது.

    12-10-2018 முதல் 23-10-2018 வரை மஹா புஷ்கரம் என்ற பெயரோடு முற்றிலும் புனித நிலையில் 12 நாட்கள் பரமானந்த சொரூபமாய் நிலைத்திருக்கவிருக்கிறது தாமிரபரணி. பரம புண்ணியமயமாகும் இந்நதியில், எல்லாவற்றின் ஆத்மாவாகவும் விளங்குகின்ற பிரம்ம தேவர் அமர்ந்து அந்த நதியைத் தன்மயமாக்கிக் கொண்டு சகல ஜனங்களுக்கும் நன்மை உண்டாகும் பொருட்டு அருள்பாலிக்கின்றார்.

    இந்த தீர்த்தத்தில் பிரம்மாவோடு விஷ்ணுவும், ருத்திரரும் சகல தேவர்களுடன் வசிக்கிறார்கள். இந்த புஷ்கர தீர்த்தத்தில் (தாமிரபரணியில்) பலகோடி தீர்த்தங்கள் சங்கமமாகின்றன. அதனால் சகல தீர்த்தங்களிலும் நீராடிய பலனை இந்த புஷ்கர தீர்த்தமே அளிக்கிறது. புஷ்கர தீர்த்த ஸ்நானம் செய்பவரை அவருடைய பித்ருக்கள் எல்லோரும் மற்றும் தேவர்களும் வாழ்த்துகிறார்கள்.

    ஏனென்றால் அது பித்ருக்களுக்கும் மோட்சம் அளித்து தேவ கணங்களுக்கும் பிரீதி, சந்தோஷம் அளிக்கிறது.இதனால் தரித்திரம் நீங்கி சிறப்பான பலன்களை அடைய முடியும். மந்திரதந்திரங்கள், பில்லி, சூனியம், ஏவல் போன்ற தோஷங்கள் உங்களை நெருங்காது.



    சரி, இந்த 12 நாள் நீராடல் என்ற கணக்கு எப்படி வந்தது?


    ஜோதிட சாஸ்திரப்படி ராசிகள் மொத்தம் 12. ஒவ்வொரு ராசிக்கு ஒரு நாள் வீதம் 12 ராசிக்காரர்களுக்கு 12 நாள் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அதன் விபரம் வருமாறு:-

    வ.எண்.  - தேதி -  கிழமை ராசி

    1.    12.10.2018     (வெள்ளி)     விருச்சிகம்
    2.    13.10.2018 (சனி)     தனுசு
    3.    14.10.2018 (ஞாயிறு)     மகரம்
    4.    15.10.2018 (திங்கள்)     கும்பம்
    5.    16.10.2018     (செவ்வாய்) மீனம்
    6.    17.10.2018 (புதன்)     மேஷம்
    7.    18.10.2018     (வியாழன்) ரிஷபம்
    8.    19.10.2018     (வெள்ளி)     மிதுனம்
    9.    20.10.2018 (சனி)     கடகம்
    10.    21.10.2018 (ஞாயிறு)     சிம்மம்
    11.    22.10.2018 (திங்கள்)     கன்னி
    12.    23.10.2018 (செவ்வாய்) துலாம்

    ஒவ்வொருவரும் தமது ஜென்ம ராசிக்குரிய தேதி, கிழமையில் நீராடுவதால் முழுப்பலன் கிட்டும்.குடும்பத்தலைவரோடு தொலை தூரத்திலிருந்து நீராட வருகின்றவர்கள் குடும்பத் தலைவரின் (தந்தையின்) ஜென்ம ராசி எதுவோ அந்த ராசிக்குரிய நாள், கிழமையில் நீராடினாலே போதும். அது குடும்பம் முழுவதும் பிரகாசத்தைக் கொண்டு வரும்.

    மலர் தூவி வழிபடுதல் :

    நல்ல மனதுக்குப் புறச்சின்னமாய் அமைந்திருப்பது மலர். அதனிடத்துப் புதுமையும், எழிலும், மணமும் திகழ்ந்து கொண்டிருக்கின்றன. மனது என்றென்றும் மலர் போன்று இருத்தல் வேண்டும். அத்தகைய மனதைக் கடவுளிடத்து ஒப்படைப்பதற்கு அறிகுறியாகக் கையால் மலரை எடுத்துக் கடவுளுக்குத் தூவுகிறோம். அச்செயல் இறைவனுக்கு மிகவும் பிடித்த செயல் ஆகிறது.

    தாமிரபரணி நதியில் நீராடி முடித்தவுடன் குருபகவானுக்கு உகந்த மஞ்சள் நிற மலர்களை நதியில் விடுவதும், மஞ்சள் துண்டுகளைப் போடுவதும், மஞ்சள் தூளைக் கொட்டுவதும் சிறந்த செயலாகும். பொருள் வசதி கொண்டோர் தங்கக் காசுகளை நதி நீரில் விடலாம். தாமிரபரணி நதிக்கு கற்பூர ஆரத்தி எடுத்து பூஜை செய்வது சிறப்பு.

    சிரார்த்தம் (திதி) கொடுத்தல் :

    “புஷ்கரம் எனும் புனித நதிக்கரையில் செய்யப்பட்ட சிரார்த்தம், ஜபம், ஹோமம், தபசுகள் அட்சயமான (அழிவற்ற) பலனைக் கொடுக்கின்றன” என்று வியாச முனிவர் கூறுகின்றார். இங்கே திதி கொடுப்பது காசி, கயாவில் கொடுப்பதற்குச் சமம். இங்கே பிண்ட தானம் செய்பவர் தனது பித்ருக்கள் அனைவருக்கும் திருப்தியளித்தவர் ஆகிறார். அவருடைய பித்ருக்கள் பிரளய காலம் வரையிலுமே மிகவும் திருப்தியுடன் இருப்பார்கள். இங்கே பித்ரு காரியம் செய்பவர் தனது மூதாதையர் அனைவரும் விமோசனம் அடைவதற்கு வழி செய்தவராவார்.

    நதிக்கரையில் பித்ரு காரியம் செய்பவர்கள் ஒரு சிறிய துணிப் பந்தல் அமைத்து அதனடியில் அமர்ந்து இதைச் செய்ய வேண்டும். வெட்ட வெளியில் செய்யக்கூடாது என்பது தர்ம சாஸ்திர விதி.


     
    தாமிரபரணியில் எங்கே நீராடலாம்? :

    தாமிரபரணி நதிக்கரை யில் பாபநாசம் முதல் புன்னைக்காயல் (முகத்துவாரம்) வரை மொத்தம் 143 படித்துறைகள் இருப்பதாக கணக்கிடப்பட்டு உள்ளது.
    இதில் எந்த படித்துறையில் வேண்டுமானாலும் நீராடலாம்; திதி கொடுக்கலாம்; தானம் செய்யலாம் என்றாலும் நவகைலாயம் அமைந்துள்ள ஒன்பது சிவ திருத்தலங்களில் நீராடுவது அதிக மகிமை உடையதாகும்.

    நடராஜமூர்த்தியின் ஐந்து நாட்டிய சபைகளுள் ஒன்றான “தாமிரசபை” அமைந்துள்ள திருநெல்வேலி தாமிரபரணி நதி “பிரம்ம தீர்த்தம்” எனப்படும். ஆகவே, திருநெல்வேலி நகர் முழுமையும் உள்ள தாமிரபரணி நதியில் நீராடுவதும் அதிகமான நற்பலனைத்தரும். ஆலயம் உள்ள தலத்தில் ஓடும் நதி அதிக சுபகரமானதாகும். அது அதிக சுகத்தையும் மங்களத்தையும் கொடுக்கும். ஆகவே ஆலயம் உள்ள இடங்களில் நீராடுவது நல்லது.

    யாகம் நடத்துதல் :

    உலக மக்கள் நலன் கருதி புஷ்கர தீர்த்தக் கரையில் 12 நாட்களும் யாகம் நடத்த வேண்டும் என்று பத்மபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.தாமிரபரணி நதி பாய்கின்ற ஊர்களில் வசிக்கின்ற மக்கள் எல்லாம் ஒன்று கூடி யாகம் நடத்தினால் ஊர் செழிக்கும், ஒற்றுமை மேலோங்கும் என்று சொல்லப்பட்டு உள்ளது. ஒவ்வொரு ராசிக்காரர்கள் ஒன்று கூடி நிதி திரட்டி இந்த யாகத்தை நடத்தி நன்மை பெறலாம்.

    12-10-2018 அன்று விருச்சிக ராசிக்காரர்களும், அதன் பின்னர் தனுசு, மகரம், கும்பம், மீனம், மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம் ஆகிய ராசிக்காரர்களும் என வரிசையாக 12 நாட்கள் யாகம் நடத்தலாம். ‘புஷ்கர்’ என்றால் தாமரை. பிரம்மாவின் கையிலிருந்து தாமரை ரசாதலத்தின் மேல் விழுந்ததின் காரணமாக புஷ்கர தீர்த்தம் உண்டாயிற்று என்று பத்ம புராணம் கூறுகிறது. பிரம்மம் என்று சொல்லப்படுகின்ற பரம்பொருளே யாகங்களுக்கு தலைவரான சாஸ்வதப் பிரபு ஆவார்.

    யாகங்களை நாம் நடத்துவதன் மூலம் பிரம்மன் முதலான அனைத்து கடவுளர்களும் அந்த யாகங்களில் தோன்றி நம்மை ஆசீர்வதிக்கின்றனர்.
    அந்தக் காரணத்தினால் இவ்விடத்தில் சிரத்தையோடு வேத பாடங்களை உச்சரிப்பவர்களும், விதிமுறைப்படி மந்திரங்களை உச்சரிப்பவர்களும் குரு பகவானின் கிருபையால் பல நன்மைகளை அடைவார்கள்.

    ஆன்மிக சொற்பொழிவுகள், பக்திக் கச்சேரிகள், கர்நாடக இசை நிகழ்ச்சிகள், வில்லிசை, நாதஸ்வர கச்சேரிகள், நாட்டியாஞ்சலிகள் என நாளும் ஒரு பக்தி நிகழ்ச்சி நடத்தி அன்னை தாமிரபரணியிடம் சிரத்தை, பக்தி, விசுவாசம் கொண்டு அத்யாத்மிக அன்போடு உங்களை பரிபூரணமாக்கி ஒருவிதமான கசப்பும் இல்லாமல் ஊர் முழுக்க ஒற்றுமையோடும் வளமோடும் ஆயுள் ஆரோக்கியத்தோடும் வாழப் பிரார்த்திக்க வேண்டும்.

    பஜனை, தியானம் :

    இறைவன் ஆட்சி புரியும் உன்னதமான தாமிரபரணி நதிக் கரையில் விடியற்காலை சாத்வீகமான நேரத்தில் பிரார்த்தனை, தியானம், காயத்ரி ஜபம், பிராணாயாமம், பஜனை, ஜபம், நாம சங்கீர்த்தனம் இவைகளைச் செய்வதால் சாந்தி, ஆனந்தம், விவேகம், வைராக்கியம் எல்லாம் கிடைக்கும். பிரம்ம முகூர்த்தத்தில் 15 நிமிடம் தியானம் செய்தால் வேறு காலத்தில் இரண்டு மணி நேரம் தியானம் செய்ததற்கு சமமாகும்.

    எல்லா மொழிகள் பேசும் மாநிலங்களிலிருந்தும் ஏராளமான சாதுக்கள், ஞானிகள், தபஸ்விகள், ஆன்மீகப் பெரியவர்கள் இந்த விழாவில் பங்கேற்கவிருக்கிறார்கள். வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமானோர் இங்கு வருகை தர விருப்பம் கொண்டு அதற்கான செயல்களில் ஈடுபட்டு இருக்கிறார்கள். தாமிரபரணி நதி தீரம் இப்போதே தீபங்களால் சுடரொளியுடன் பிரகாசிக்கத் தொடங்கி விட்டது.

    144 ஆண்டுகளுக்குப் பிறகு புனித நீராடும் நல்லதோர் வாய்ப்பு நமக்கு கிடைத்திருக்கிறது. இனி 2162 ஆம் ஆண்டில்தான் இந்தப் பெரும் பாக்கியம் நமக்குக் கிட்டும். எந்த ஒரு காரியத்தை எடுத்துக் கொண்டாலும் அதை மனப் பூர்வமாகச் செய்தால் பகவான் அதற்குப் பரிபூரணமாக அனுக்கிரகம் புரிவார்.

    இந்த நதி நீராடல், சிரார்த்தம், தானம் இவைகளை மனப் பூர்வமாகச் செய்து ஒவ்வொருவரும் பேரானந்தத்தையும், தெய்வீக சாந்தியையும், வாழ்வில் வெற்றியையும் அடைய வேண்டும். மண்ணையும் மனிதனையும் வளமாக்கும் அன்னை தாமிரபரணியின் அருள் எப்பொழுதும் உங்கள் மேல் இருக்கட்டும்.

    புஷ்கர புண்ணிய காலத்தில் சிவன், விஷ்ணு, பிரம்மா, தேவர்கள், ரிஷிகள் போன்றோர் தாமிரபரணி நதியில் வாசம் செய்வதால் இந்த புண்ணிய காலங்களில் நதியில் நீராடுவதால் மூன்றரை கோடி தீர்த்தத்தில் ஸ்நானம் செய்த பலனும், அன்னதானம், வஸ்திரதானம் போன்ற பல தானங்களை செய்தால் பன்மடங்கு பலனையும் தரும், இந்த மகா புஷ்கரமானது எல்லா ராசிக்கும் உகந்தது என்றும், இந்த குருப்பெயர்ச்சியின்போது மேஷம், மிதுனம், கன்னி, விருச்சிகம், தனுசு, மீனம் ராசிக்காரர்கள் பரிகாரம் செய்வது மிகவும் அவசியம் என்றும் கூறப்பட்டுள்ளது.

    புஷ்கர காலங்களில் தானங்கள் செய்வது சிறந்த பரிகாரம் ஆகும். பித்ருக்களுக்கு தர்பணம், திதி முதலிய சடங்குகள் செய்து முன்னோர்களை வழிபட்டால் பிதிர்சாபம் நீங்கி வாழ்க்கையில் சகல நன்மைகளும் கிடைக்கப்பெறுவார்கள்.

    தாமிரபரணி மகாத்மியம் :

    வட இந்தியாவில் உள்ள கங்கை, யமுனை, சரையூ போன்ற நதிகளுக்கு ஈடாக தென்னிந்தியாவில் தாமிரபரணி மிகவும் பிரசித்தி பெற்றது. இதன் பெருமையை உணர்ந்த வேத வியாசர் தனது மகனாகிய சுக பிரம்ம ரிஷிக்கு தாமிரபரணியின் பெருமையை உபதேசம் செய்தார். அந்த உபதேச நூல்தான் ஸ்ரீதாமிரபரணி மகாத்மியம்.

    தாமிரபரணியில் கல்கி அவதாரம் :


    தாமிரபரணி நதிக்கரையில்தான், தசாவதாரத்தில் நிறைவான அவதாரமான கல்கி அவதாரம் நிகழப்போவதாகவும் சொல்லப்பட்டு இருக்கிறது.
    தாமிரபரணி கடலில் சங்கமிக்கும் முகத்துவாரத்தில் உலகத்திலேயே மிக அரிதான விலை உயர்ந்த முத்துக்கள் விளைந்ததாக இலக்கியங்களும் வரலாறும் பேசுகின்றன. தொன்மை வாய்ந்த இந்தத் தாமிரபரணி நதியானது, கடல்கோள் நிகழ்வதற்கு முன்னதாக இன்றைய இலங்கை வரை சென்று செழுமை சேர்த்திருக்கிறது. இதுபற்றிய குறிப்புகள் வரலாற்று நூல்களிலும், இலக்கியங்களிலும் நிறையவே காணப்படுகின்றன.

    தாமிரபரணி பொதிகை மலையில் இருந்து சமவெளி பகுதியில் பாயும் முதல் இடமான பாபநாசத்தில் சித்தர்கள் கோட்டம் ஒருங்கிணைப்பில் தமிழ் ஆகம முறைப்படி 16 வகை தீப ஆராதனைகள் தாமிரபரணிக்கு வழிபாடு செய்ய உள்ளனர்.  மேலும் அகத்தியர் மாமுனிவரின் 10 அடி உயர திரு உருவச் சிலை விழா மேடை அருகே வைக்க பட உள்ளது.

    -எட்டயபுரம் க. கோபிகிருஷ்ணன் (ஜோதிடர்)
    செல்: 98407 67760



    சிறப்பான ‘வடிவம்’ கொண்ட ‘கண் திருஷ்டி கணபதி’யை ஒவ்வொரு வீட்டிலும், வேலை செய்யும் இடத்திலும் வைத்து வணங்க வேண்டியது மிகமிக அவசியமாகும்.
    ஒருவரது கண் பார்வை சாதாரணமாக, இயல்பாக இருக்கும் பட்சத்தில் அதனால் எந்தக் கெடுதலும் ஏற்பட வாய்ப்பு இல்லை. ஆனால். அதே கண்பார்வை பொறாமை, வயிற்றெரிச்சல், தீய எண்ணம் என்ற உணர்வுகளை தாங்கி, அதனால் எழுகின்ற எண்ண அலைகளைக் குவித்து, கண் களின் மூலம் தீர்க்கமாகப் பார்க்கப்படும் போது, அது மிகவும் வலிமையாகப் பாய்ந்து மிகக் கெடுதலான விளைவுகளை ஏற்படுத்தி விடும்.

    அகஸ்திய மகாமுனிவர், இந்த கண் திருஷ்டி என்ற அசுரனை அழித்து சம்காரம் செய்து இந்த உலகையும், உலக மக்களையும் பாதுகாக்க ஒரு சர்வவல்லமை பொருந்திய மகாசக்தியைத் தோற்றுவித்தார். அவர் தான் ‘‘கண் திருஷ்டி கணபதி’’.

    இவர் முப்பத்து மூன்றாவது மூர்த்தமாக இந்த உலகில் உதயமான சர்வ மகாசக்தி கணபதி ஆவார்.

    இந்தக் கண் திருஷ்டி கணபதி படத்தை வீட்டில் குறிப்பாக வடக்குத்திசை நோக்கி இருக்குமாறு மாட்டி வணங்கலாம். பூஜை அறையில் வைத்தும் வணங்கலாம். வீட்டின் முன் அறையில் மற்றவர்கள் கண் பார்வை படுமாறு வைத்தும் வணங்கலாம்.

    வியாபாரஸ்தலம், அலுவலகம் மற்றும் தொழிற்சாலைகளிலும் வைத்து வழிபடலாம். கண் திருஷ்டி கணபதியின் தோற்றம், போர்க்களம் சென்று எதிரிகளை வென்று திரும்பி வந்த போர்க்கோலத் தோற்றம்.

    இந்தச் சிறப்பான ‘வடிவம்’ கொண்ட ‘கண் திருஷ்டி கணபதி’யை ஒவ்வொரு வீட்டிலும், வேலை செய்யும் இடத்திலும் வைத்து வணங்க வேண்டியது மிகமிக அவசியமாகும்.

    ஸ்ரீரங்கம் கோவிலில் ஸ்ரீ ரெங்கநாச்சியாருக்கு ஆண்டுக்கு ஒரு முறை திருவடி சேவை நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நாளை (செவ்வாய்க்கிழமை) திருவடி சேவை நடைபெற உள்ளது.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நவராத்திரி விழா நடந்து வருகிறது. ஸ்ரீ ரெங்கநாச்சியார் மூலஸ்தானத்தில் இருந்து தினமும் மாலையில் புறப்பட்டு கொலு மண்டபத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார்.

    உறையூர் கமலவல்லி நாச்சியாருக்கு திருவடி சேவையை போல ஸ்ரீரங்கம் கோவிலில் ஸ்ரீ ரெங்கநாச்சியாருக்கும் ஆண்டுக்கு ஒரு முறை திருவடி சேவை நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நாளை (செவ்வாய்க்கிழமை) திருவடி சேவை நடைபெற உள்ளது.

    நாளை மாலை 4 மணிக்கு திருவடி சேவையுடன் தாயார் புறப்பட்டு கொலு மண்டபத்தை மாலை 4.45 மணிக்கு வந்தடைகிறார். இரவு 10.30 மணி வரை தாயார் திருவடி சேவையில் மண்டபத்தில் எழுந்தருளுவார். இரவு 10.30 மணிக்கு மேல் தாயார் மூலஸ்தானத்திற்கு புறப்பட்டு சென்றடைவார்.
    தாமிரபரணி மகா புஷ்கர விழாவையொட்டி ஆற்று படித்துறைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
    தாமிரபரணி மகா புஷ்கர விழா 144 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 11-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் தாமிரபரணி ஆற்றில் உள்ள தீர்த்தக்கட்டங்களில் புனிதநீராடி வருகின்றனர். தாமிரபரணி ஆற்றுக்கு தீப ஆரத்தி எடுத்து வழிபாடுகளும் நடைபெற்று வருகிறது. இதில் நாடு முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து பங்கேற்ற வண்ணம் உள்ளனர்.

    ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது. வெளியூர்களில் இருந்து நெல்லைக்கு வந்த ரெயில்கள், பஸ்களில் ஏராளமான மக்கள் வந்தனர். இதுதவிர கார், வேன்களிலும் ஏராளமானோர் வந்தனர்.

    நெல்லை சந்திப்பு கைலாசபுரம் தைப்பூச மண்டபம், குறுக்குத்துறை சுப்பிரமணியசுவாமி கோவில் படித்துறை, மேலநத்தம் அக்னிதீர்த்த கட்டம், சிந்துபூந்துறை சப்ததீர்த்த கட்டம், வண்ணார்பேட்டை பேராட்சி அம்மன் கோவில் படித்துறை, எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலை அருகில் உள்ள ஜடாயு துறை, மணிமூர்த்தீசுவரம் உச்சிஷ்ட கணபதி கோவில் படித்துறை உள்ளிட்ட இடங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    சேரன்மாதேவியில் தாமிரபரணிக்கு ஆரத்தி பூஜை நடந்தபோது எடுத்த படம்.

    இதுதவிர பலர் ஆற்றில் பரவலாக அனைத்து இடங்களிலும் குளித்தனர். தாமிரபரணி ஆற்றில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாகவே காட்சி அளித்தது. ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் அதிகளவு மக்கள் வந்திருந்தனர்.

    கூட்ட நெரிசல் காரணமாக தாமிரபரணி ஆற்றில் பாதுகாப்பு நடவடிக்கையாக தண்ணீர் திறப்பு அளவு குறைக்கப்பட்டது. தைப்பூச மண்டப படித்துறையில் நேற்று காலை வேத பாராயணம், ஹோமங்கள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து பன்னிரு திருமுறை பாராயணம் நடைபெற்றது.

    மேலதிருவேங்கடநாதபுரம் தாமிரபரணி ஆற்றில் உள்ள சீனிவாச தீர்த்த கட்டத்தில் நேற்று அதிகாலை முதல் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இங்கு பக்தர்கள் புனிதநீராடி சீனிவாச பெருமாள் கோவிலில் தரிசனம் செய்தனர்.

    தாமிரபரணி ஆற்றில் உள்ள தீர்த்தகட்டங்கள் பகுதியில் நேற்று கூடுதலாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 
    மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வழிபாடு செய்தால், சகல சவுபாக்கியமும் கிடைக்கும். காரிய சித்தியைத் தருவார். எந்த பிள்ளையார் எந்த பிரச்சனையை தீர்க்கும் என்று பார்க்கலாம்.
    மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வழிபாடு செய்தால், சகல சவுபாக்கியமும் கிடைக்கும். காரிய சித்தியைத் தருவார்.

    குங்குமத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால், செவ்வாய் தோஷம் அகலும். குழந்தைகளைப் படிப்பில் வல்லவராக்குவார்.

    புற்று மண்ணினால் பிள்ளையார் செய்து வணங்க நோய்கள் அகலும். விவசாயம் செழிக்கும், வியாபாரத்தைப் பெருகச் செய்வார்.

    வெல்லத்தில் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால், உடலில் உள்ளேயும், வெளியேயும் உள்ள கட்டிகள் (கொப்பளம்) கரையும். எல்லா வளங்களையும் தருவார்.

    உப்பினால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால் மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். எதிரிகளின் தொல்லையில் இருந்து காப்பாற்றுவார்.

    வெள்ளெருக்கில் பிள்ளையார் செய்து வணங்கினால் பில்லி, சூனியம் விலகும். செல்வ நிலையைஉயரச் செய்வார்.

    விபூதியால் விநாயகர் பிடித்து வழிபட்டால், உஷ்ண நோய்கள் நீங்கும்.

    சந்தனத்தால் பிள்ளையார் செய்து வழிபட்டால் புத்திர பேறு கிடைக்கும்.

    சாணத்தால் பிள்ளையார் செய்து வணங்கினால், சகல தோஷமும் விலகி, வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற வழிவகுக்கும்.

    வாழைப் பழத்தில் பிள்ளையார் செய்து வழிபட்டால், வம்ச விருத்தி உண்டாகும்.

    வெண்ணெயில் பிள்ளையார் செய்து வணங்கினால், கடன் தொல்லை நீங்கும்.

    சர்க்கரையில் விநாயகர் உருவம் செய்து வழிபட்டு வந்தால், சர்க்கரை நோயின் வீரியம் குறையும்.

    பசுஞ்சாணத்தில் பிள்ளையார் பிடித்து வைத்து வழிபட தீராத நோய்கள் கூட தீரும்.

    கல் விநாயகரை வணங்கி வந்தால் வெற்றிகளைத் தருவார்.

    மண் விநாயகரை வழிபாடு செய்து வந்தால், உயர் பதவிகள் கொடுப்பார். 
    அறியாமை எனும் இருளை போக்கி ஞான ஒளியை உள்ளமெங்கும் பரவ செய்யும் பூஜையாகவே நவராத்திரி பூஜை கொண்டாடப்படுகிறது.
    இந்தியா முழுவதுமே நவராத்திரி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. 9 நாளும் மாலை நேரத்தில் பூஜை ஆரம்பித்து இரவில் நடைபெறும் பண்டிகை என்பதுடன் முடிந்து 10-ம் நாள் விஜயதசமி என்றவாறு நவராத்திரி விழா முழுமை பெறுகிறது. நவராத்திரி என்து 9 இரவை குறிப்பிடுகிறது. இரவு என்பது இருள் மயமானது. அறியாமை எனும் இருளை போக்கி ஞான ஒளியை உள்ளமெங்கும் பரவ செய்யும் பூஜையாகவே நவராத்திரி பூஜை கொண்டாடப்படுகிறது. நவராத்திரி விழாவில் முதல் 3 நாட்கள் துர்க்கை வழிபாடும், அடுத்த 3 நாள் லட்சுமி வழிபாடும், கடைசி 3 நாட்கள் சரஸ்வதி வழிபாடும் நடைபெறுகின்றன.

    முதல் 3 நாட்களின் வழிபாடாக சிங்க வாகினி துர்க்கை வழிபாடு நிகழ்கிறது. துர்க்கை என்பவள் சக்தி ரூபம். உக்கிரத்தின் வடிவம். நமது உள்ளத்தில் உள்ள எதிரிகளை அழிக்க மனம் உறுதி பெறவேண்டும். மன உறுதியை பெற சக்தி வேண்டும். துர்க்கையை வழிபடுவதன் மூலமே உள் மனதில் சக்தியை பெற்று மன பலவீனங்களை எதிர்த்து போரிட முடியும் என்பதே அதன் தத்துவம்.

    இவ்வாறு பெறும் ஆத்ம சக்தியினால் மனதில் உள்ள தீய எண்ணங்கள் அகன்று மனதில் நற்குணங்கள் நிறைவதற்கு வழி பிறக்கும். அதற்காகவே அடுத்த 3 தினங்கள் மகாலட்சுமியை வழிபடுகிறோம். மகாலட்சுமியின் பூஜையின் மூலம் நற்குணங்களை பெறமுடியும். அன்பு, இரக்கம், கருணை, தானம், பொறுமை, சகிப்புத்தன்மை போன்ற நற்குண செல்வங்களை பெறவே இம்மூன்று தின வழிபாடு செய்யப்படுகிறது. இதில் பெறும் நற்குணங்களை கொண்டு மனம் புதிய உத்வேகத்துடன் ஞானம் பெறும்.

    கடைசி 3 நாட்களும் ஞானம், கல்வியின் தெய்வமான சரஸ்வதி தேவியை வழிபடுகிறோம். ஞானத்தின் பிறப்பிடமான சரஸ்வதி தேவியை வணங்கி அஞ்ஞானம் விலகி மெய்ஞானம் பெற்று உலகம் சிறக்க, மனிதர்கள் சிறக்க வழி வகை செய்ய பூஜை மேற்கொள்ளப்படுகின்றன. இந்நாளில் செய்யப்படும் ஜப, தியான, ஹோமங்கள் வெற்றி பெறும் நோக்கில் விஜயதசமி என்பது பத்தாம் நாள் விழாவாக கொண்டாடப்படுகிறது.

    நான்கு நவராத்திரிகள் :

    பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் 4 நவராத்திரிகள் உண்டு. சித்திரை மாதத்தில் வரும் நவராத்திரி வசந்த நவராத்திரி எனப்படும். ஆடி மாதத்தில் வரும் நவராத்திரி ஆஷாட நவராத்திரி. புரட்டாசி மாதத்தில் வரும் நவராத்திரி பாக்ரபத (அ) சாரதா நவராத்திரி என கூறப்படும். இந்த புரட்டாசி மாதத்தில் வரும் நவராத்திரியைதான் அனைவரும் கொண்டாடுகின்றனர். புரட்டாசி மாதத்தை சரத்காலம் என்று கூறுவர். சரத் காலத்தில் வரும் நவராத்திரியை சாரதா நவராத்திரி என்று கூறுகின்றனர்.

    இந்த நவராத்திரி விழாவில் ஒருநாள் இணைந்து 10 நாள் தசரா விழாவாக மைசூர் சாமுண்டிஸ்வரி அம்மனுக்கு கொண்டாடப்படுகிறது. இதுவே மேற்கு வங்காளத்தில் துர்க்கா பூஜை என்றவாறு கொண்டாடப் படுகிறது.

    நவராத்திரி விழாவில் நவசக்தி வழிபாடு :


    9 நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி விழாவில் முப்பெரும் சக்திகளுக்கு உரிய தனித்தனி 3 சக்தி அம்சங்கள் உள்ளன. துர்க்கா தேவிக்கு மகேஸ்வரி, கவுமாரி, வராகி எனவும், லட்சுமிக்கு மகாலட்சுமி, வைஷ்ணவி, இந்திரராணி எனவும், சரஸ்வதிக்கு சரஸ்வதி, நாரசிம்மி, சாமுண்டி என்றவாறு அவரவர்க்கு உரிய சக்திகள் வழிபடப்படுகிறது. நவராத்திரியின் 9 நாட்களிலும் வரிசைப்படி நவசக்தி வழிபாடும் செய்யவேண்டும். இந்த 9 தேவியர்களில் ஒரு தேவி முதன்மையானவராகவும், மற்றவர்களை பரிவார தெய்வமாக கொண்டு நவசக்தி வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது.

    கன்னியர்கள் வழிபாடு :


    நவராத்திரி வழிபாட்டில் கன்னி வழிபாடு பிரதானமாக விளங்குகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கன்னியரையும் ஒவ்வொரு தேவியாக பாவித்து வழிபாடு நிகழ்த்தப்படும். கன்னிகளும், பெண் குழந்தைகளும் தேவியாக பாவித்து குடும்பத்தினர் அனைவரும் அவர்களை மகாசக்தியின் உருவமாக மனதார நினைத்து வழிபாடு செய்கின்றனர். நவராத்திரி என்பது குடும்பத்தினர் மன அழுக்குகளை நீக்கி மனபூர்வமாக சந்தோஷத்துடன் கொண்டாடும் விழாவாகும். 
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான கருடசேவை நாளை இரவு 7 மணிக்கு நடக்கிறது.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 3-வது நாளான நேற்று இரவு 7 மணிவரை கோவில் அருகே உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் ஊஞ்சல் சேவை நடந்தது.

    இரவு 8 மணியில் இருந்து 10 மணிவரை முத்துபந்தல் வாகனத்தில் உற்சவரான ஏழுமலையான் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்தார்.

    இன்று காலை 9 மணியில் இருந்து 11 மணிவரை கல்ப விருட்ச வாகன வீதி உலா நடந்தது. அதில், மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். சாமி ஊர்வலத்தின் முன்பு கோலாட்டம், கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

    விழாவில் திருமலை- திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால், இணை அதிகாரி கே.எஸ்.சீனிவாசராஜு, திருப்பதி துணை அதிகாரி போலா பாஸ்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இன்று இரவு சர்வ பூபால வாகனத்தில் உற்சவர் ஏழுமலையான் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான கருடசேவை நாளை இரவு 7 மணிக்கு நடக்கிறது. தங்க கருட வாகனத்தில் ஏழுமலையான் எழுந்தருளி மாடவீதிகளில் உலா வருகிறார்.

    விடுமுறை தினத்தில் கருட சேவை வருவதால் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்க்கப்படுகிறது. இதற்காக திருப்பதி தேவஸ்தானம் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். திருமலையில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணிக்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

    மேலும் சென்னை, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், ஓசூர் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 150 சிறப்பு பஸ்கள் தமிழ்நாடு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படுகிறது.

    இதேபோல் பெங்களூரு பகுதியில் இருந்து 50 பஸ்கள் இயக்கப்படுகின்றன. கருட சேவை அன்று பெங்களூரிலிருந்து வரும் பஸ்கள் அன்னமய்யா சர்க்கிள் பஸ் நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்படும்.

    மேலும் சிறப்பு வாகன பராமரிப்பு குழுக்களும் மலைப்பாதையில் தயார் நிலையில் இருக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பஸ் நிலையங்களில் மருத்துவம், சுகாதாரம் சார்பில் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 
    பாபநாசத்தில் உள்ள 28-வது தீர்த்தக் கட்டமான திரிநதி சங்கம தீர்த்தத்தில் தாமிரவருணி மஹா புஷ்கர தீப ஆரத்தி பெருவிழா அக்டோபர் 4 முதல் 22 வரை நடைபெறுகிறது.
    பாபநாசத்தில் உள்ள 28-வது தீர்த்தக் கட்டமான திரிநதி சங்கம தீர்த்தத்தில் தாமிரவருணி மஹா புஷ்கர தீப ஆரத்தி பெருவிழா அக்டோபர் 4 முதல் 22 வரை நடைபெறுகிறது. சித்தர்கள் கோட்டம், பாபநாசம், விக்கிரமசிங்கபுரம் ஊர் பொதுமக்கள் சார்பில் இந்த புஷ்கர விழா நடத்தப்படுகிறது. இந்த விழாவில் சிவனடியார்களை கொண்டு தமிழ் ஆகம விதிப்படி பூஜைகள் நடைபெறும்.

    வரும் அக்டோபர் 3-ந்தேதி இரவு பொதிகை மலையில் வசிக்கும் காணிக்கார சமூகத்தினர் நடத்தும் சாத்துப்பட்டு நிகழ்ச்சி நடைபெறுகிறது. 4-ந்தேதி தாமிரவருணிக்கு தீப ஆரத்தி விழா, கால்கோள் விழா ஆகியவை அனைத்து சமுதாயத் தலைவர்கள், ஊர் முக்கியப் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் நடைபெறவுள்ளது.

    மேலும் காலை 8 மணிக்கு திருவிளக்கு வழிபாடு, புனிதநீர் வழிபாடு ஆகியவையும், காலை 10.30 மணிக்கு தாமிரவருணி நதியின் உற்பத்தி வரலாறு பற்றிய ஓவியக் கண்காட்சியும் நடைபெறுகிறது. காலை 11.30 மணிக்கு 28-வது தீர்த்தக் கட்டமான திரிநதி சங்கம தீர்த்த பகுதியில் பல்வேறு பூஜைகள், வழிபாடுகள் நடைபெறும். மாலை 6 மணிக்கு தாமிரவருணி சகஸ்ரநாம பாராயண வழிபாடும், தீப ஆரத்தியும் நடைபெறுகிறது.

    அக்டோபர் 5-ந்தேதி காலை 10.30 மணிக்கு திருவாசகம் முற்றோதுதல், 6-ந் தேதி காலை 10.30 மணிக்கு தேவாரம் முற்றோதுதல், 7-ந்தேதி மாலை 5 மணிக்கு ஆதிபராசக்தி மன்றம் சார்பில் தீப வழிபாடு, 8-ந்தேதி பிற்பகல் 3.30 மணிக்கு விக்கிரமசிங்கபுரம் அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் நடத்தும் ஐயப்பன் வழிபாடு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    9-ந்தேதி காலை 10.30 மணிக்கு அருட்பா பாராயணம், 10-ந் தேதி காலை 10.30 மணிக்கு தாமிரவருணி நதி பற்றிய கவியரங்கம், ஓவியப் போட்டி, மாலை 6 மணிக்கு ராமபூதத்தான் தெய்வீக கருத்தரங்கம் ஆகியவை நடைபெறுகிறது. அக்டோபர் 11-ந்தேதி காலை 7.30 மணியளவில் புனித தீர்த்தமான கல்யாண தீர்த்தத்தில் இருந்து அடியார்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் தீர்த்த கலசங்களுடன் ஊர்வலமாக வந்து நதிக்கு வழிபாடு தொடங்குதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    அன்றைய தினம் மாலை 6.15 மணியளவில் பஞ்சபூத மேடையில் 16 வகை தீபங்கள், 5 வகை உபச்சாரங்களுடன் தமிழ் ஆகம விதிப்படி சிவனடியார்களால் மகா ஆரத்தி நிகழ்ச்சி நடைபெறும். இதை மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தொடங்கி வைக் கவுள்ளார்.

    12-ந்தேதி நடைபெறும் தீப ஆரத்தி பெருவிழாவில் தமிழக அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்களும், 13-ந்தேதி நடைபெறும் தீப ஆரத்தி விழாவில் நீதியரசர்கள் மற்றும் வக்கீல்களும், 14-ந்தேதி நடைபெறும் தீப ஆரத்தி விழாவில் உலக தமிழ் வர்த்தக குழுவினரும், 15-ந்தேதி நடைபெறும் தீப ஆரத்தி விழாவில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினரும் பங்கேற்கிறார்கள்.

    16-ந்தேதி நடைபெறும் விழாவில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், 17-ந்தேதி நடைபெறும் விழாவில் இந்து முன்னணி பிரதிநிதிகள் என ஒவ்வொரு நாளிலும் பல்வேறு தரப்பினர் பங்கேற்கிறார்கள். புஷ்கர விழாவை சிறப்பாக நடத்துவதற்காக 400 தன்னார்வத் தொண்டர்களை நியமித்திருக்கிறோம். இவர்கள் 27 குழுவாக பிரிக்கப்பட்டுள்ளனர்.

    இவர்களில் 25--க்கும் மேற்பட்டவர்கள், பல்வேறு மாநிலத்தவர்க ளுக்கு உதவும் வகையில் பல மொழிகளை பேசக்கூடியவர்கள். இதுதவிர சாதுக்கள், பொதுமக்கள் என அனைவரையும் தங்க வைப்பதற்காக 13 திருமண மண்டபங்களை தயார் நிலையில் வைத்துள்ளனர். அந்த மண்டபங்களில் கூடுதல் கழிப்பறை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    தாமிரபரணியில் நெய் தீப ஆரத்தி மட்டுமே நடைபெறும். பூஜைக்காக பூக்கள் பயன்படுத்தப்பட மாட்டாது. அதனால் நதி மாசடைய வாய்ப்பில்லை என்கின்றனர் விழா குழுவினர்.
    ×