search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95492"

    கேதார யோகம் என்பது ஒருவரது பிறப்பு ஜாதகத்தில் ராகு, கேது என்ற சர்ப்ப கிரகங்களை தவிர்த்து மற்ற 7 கிரகங்களும் ஏதேனும் 4 ராசிகளில் அமர்ந்திருப்பது ஆகும்.
    ஜோதிடம் குறிப்பிடும் அபூர்வமான யோகங்களில் ஒன்று கேதார யோகம் ஆகும். மொத்த மக்கள் தொகையில் மிகவும் குறைவான சதவீத எண்ணிக்கையில்தான் இந்த யோகம் அமையும் என்பது ஜோதிட வல்லுனர்களின் கருத்தாகும். கேதார யோகம் என்பது ஒருவரது பிறப்பு ஜாதகத்தில் ராகு, கேது என்ற சர்ப்ப கிரகங்களை தவிர்த்து மற்ற 7 கிரகங்களும் ஏதேனும் 4 ராசிகளில் அமர்ந்திருப்பது ஆகும்.

    அபூர்வமான இந்த யோகத்தில் பிறப்பவர்களின் குடும்பம் பெரும்பாலும் செல்வச்செழிப்பு கொண்டதாக இருக்கும். பூமிகாரகனான செவ்வாய் கிரகத்தின் அருள் இவர்களுக்கு இருப்பதால், நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை கொண்டவர்களாகவும், விவசாயம் மற்றும் பண்ணை தொழில்கள் மூலம் செல்வம் பெறுபவர்களாகவும் இருப்பார்கள். தன்னடக்கமும், ஆன்மிக விஷயங்களில் ஈடுபாடும் உள்ளவர்கள்.

    இவர்களது வீடு மரங்கள், செடிகள் சூழ்ந்த இயற்கை சூழலில் அமைந்திருக்கும். பல வாகனங்களை வைத்துள்ள இவர்களுக்கு வாகனம் சம்பந்தப்பட்ட தொழில் மூலமும் லாபம் பெறுவார்கள். வகை வகையான உணவு வகைகளை மக்களுக்கு அன்னதானமாக அளித்து அவர்களது பசியை போக்குவதில் ஈடுபாடு கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
    சுவாதி நட்சத்திரம் வாயுவின் நட்சத்திரம், வாயுபகவான் எவ்வளவு வேகத்தில் வருகிறாரோ அது போல் நரசிம்மரை சுவாதி நட்சத்திரத்தில் வழிபாடு செய்தால் வாயு வேகத்தில் வந்து நரசிம்மர் நம்மை பாதுகாத்து அருள் செய்வார்.
    சுவாதி நட்சத்திரம் வாயுவின் நட்சத்திரம், வாயுபகவான் எவ்வளவு வேகத்தில் வருகிறாரோ அது போல் நரசிம்மரை சுவாதி நட்சத்திரத்தில் வழிபாடு செய்தால் வாயு வேகத்தில் வந்து நரசிம்மர் நம்மை பாதுகாத்து அருள் செய்வார். சுவாதி நட்சத்திரத்தில் நரசிம்மரை தொடர்ந்து வழிபாடு செய்தால் ருண விமோசனம் என்று கூறக்கூடிய கடன் தொல்லைகள் நீங்கி செல்வச் செழிப்புகள் ஏற்படும், வியாபார அபிவிருத்தி உண்டாகும். நரசிம்மர் அவதாரம் எடுத்த காலம் மாலைப்பொழுது என்பதால் மாலை வேளையில் நரசிம்மரை வழிபாடு செய்தால் விசேஷமான பலன்கள் கிட்டும்.

    சுவாதி நட்சத்திரத்தன்று நடைபெறும் மூலிகை ஹோமம் வழிபாடு மிகுந்த பலன்களைத் தரும். இந்த ஹோமத்தில் என்னென்ன பொருட்களை சேர்த்தால், என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்ற விவரம் வருமாறு:-

    அருகம்புல் - காரியத்தடை நீங்குதல்
    தேன் கலந்த மல்லிகை புஷ்பம் -
    கல்யாணத் தடை நீங்குதல்
    துளசி பத்ரம் - சர்வபாப நிவர்த்தி

    எள் - பிதுர்தோஷம் நீக்கும்.
    அரசு சமித்து - சந்தான பாக்யம்
    பச்சைக் கற்பூரம் - கல்வியல் முன்னேற்றம்
    சிந்தில் - ஆயுள் அபிவிருத்தி

    செந்தாமரை -  கடன் தொல்லை நீங்குதல்
    வில்வ பத்ரம் - மகாலட்சுமி கடாஷம்
    வெண் கடுகு - எதிரிகள் தொல்லை நீங்குதல்
    நாயுருவி - நவக்கிரக தோஷ நிவர்த்தி

    கருங்காலி - பில்லி, சூன்யம் நிவர்த்தி
    குங்குமப்பூ - ரத்தம் சம்பந்தப்பட்ட வியாதி நிவர்த்தி
    வெற்றிவேர், விளாமுச்சுவேர் - சகலகாரிய அனுகூலம்
    விஷ்ணுக்ரந்தி - சர்வதோஷ நிவாரணம்.

    கண்ணப்ப நாயனார் என்ற வேடனுடைய பக்தியை சிவபெருமான் உலகிற்கு வெளிப்படுத்திய போன்று நரசிம்மரும் ஒரு வேடனுடைய பக்தியை வெளிப்படுத்தி உள்ளார்.
    கண்ணப்ப நாயனார் என்ற வேடனுடைய பக்தியை சிவபெருமான் உலகிற்கு வெளிப்படுத்திய போன்று நரசிம்மரும் ஒரு வேடனுடைய பக்தியை வெளிப்படுத்தி உள்ளார். ஆதிசங்கரருடைய சீடன் பத்மபாதர் நரசிம்ம உபாசகர். தியானத்தில் அடிக்கடி ஈடுபடுவார்.

    ஒருவேடன் அவரிடம் தவமிருக்க வேண்டிய காரணம் என்ன? என்று அவரைக் கேட்ட போது அவனுக்குப் புரிய வேண்டி, ஓர் அதிசய மிருகத்தைத் தேடி வந்து தியானம் செய்கிறேன் என்றார்.

    வேடன் விலங்கின் அடையாளம் கேட்க மனித உடம்பும் சிங்க முகமும் கொண்டது என்று கூற, வேடனும் காடெங்கும் தேடி கிடைக்காததால் காட்டுக் கொடிகளைக் கொண்டு தூக்குப் போட்டு இறக்க முனைந்த போது வேடன் முன் நரசிம்மர் தோன்றினார். காட்டுக் கொடிகளைக் கொண்டு அவரைக் கட்டி, வேடன் பத்மபாதர் முன் கொண்டு வந்து காட்டினார். வேடன் கண்ணுக்குப் புலப்பட்ட நரசிம்மர் பத்மபாதர் கண்ணிற்குத் தெரியவில்லை. வேடன் செய்வதறியாது திகைத்த போது நரசிம்மர் கர்ச்சனை செய்து குரல் ஒலிமூலம் அவருக்குப் புலப்படுத்தினார் என்று கூறுவர்.

    இதே பத்மபாதரை இரண்டு முறை சாவிலிருந்து நரசிம்ம சுவாமி மீட்டதாகவும் கூறுவர். ஆதிசங்கரரும் நரசிம்மர் மீது கராவலம் என்ற நூலை இயற்றியுள்ளார்.
    பெரிய பெருமாள் மகாவிஷ்ணுவை பெருமாள் என்றழைப்பார். பெருமாள் என்றால் பெரிய ஆள் என்று அர்த்தம். ஆக்கல், அழித்தல், காத்தல், அருளல், மகிழ்தல் ஆகிய அனைத் துப் பணிகளையும் செவ் வனே செய்து முடித்து பூர்ணத்துவமான அவதாரமாக விளங்குவதால் நரசிம்மருக்கு பெரிய பெருமாள் என்ற பெயரும் உண்டு.

    நரசிம்மரை தொடர்ந்து வழிபட்டு வந்தால் எதிரிகளை வெல்லும் பலம் கிடைக்கும். நரசிம்மரை வழிபாடு செய்யும் போது சொல்ல வேண்டிய 108 போற்றி பார்க்கலாம்.
    ஓம் திருக்கடிகைத் தேவா போற்றி
    ஓம் திருமாமகள் கேள்வா போற்றி
    ஓம் யோக நரசிங்கா போற்றி
    ஓம் ஆழியங்கையா போற்றி
    ஓம் அங்காரக் கனியே போற்றி
    ஓம் அனுமனுக்கு ஆழி அளித்தாய் போற்றி
    ஓம் எக்காலத் தேந்தாய் போற்றி
    ஓம் எழில் தோள் எம்மிராமா போற்றி
    ஓம் சங்கரப்ரியனே போற்றி
    ஓம் சார்ங்க விற்கையா போற்றி

    ஓம் உலகமுண்ட வாயா போற்றி
    ஓம் உலப்பில் கீர்த்தியம்மா போற்றி
    ஓம் அடியவர்க்கருள்வாய் போற்றி
    ஓம் அனைத்துலக முடையாய் போற்றி
    ஓம் தாமரைக்கண்ணா போற்றி
    ஓம் காமனைப் பயந்தாய் போற்றி
    ஓம் ஊழி முதல்வா போற்றி
    ஓம் ஒளி மணிவண்ணனே போற்றி
    ஓம் இராவணாந்தகனே போற்றி
    ஓம் இலங்கை எரித்த பிரான் போற்றி

    ஓம் பெற்ற மாளியே போற்றி
    ஓம் பேரில் மணாளா போற்றி
    ஓம் செல்வ நாரணா போற்றி
    ஓம் திருக்குறளா போற்றி
    ஓம் இளங்குமார போற்றி
    ஓம் விளங்கொளியே போற்றி
    ஓம் சிந்தனைக்கினியாய் போற்றி
    ஓம் வந்தெனையாண்டாய் போற்றி
    ஓம் எங்கள் பெருமான் போற்றி
    ஓம் இமையோர் தலைவா போற்றி
    ஓம் சங்கு சக்கரத்தாய் போற்றி

    ஓம் மங்கை மன்னன் மனத்தாய் போற்றி
    ஓம் வேதியர் வாழ்வே போற்றி
    ஓம் வேங் கடத்துறைவா போற்றி
    ஓம் நந்தா விளக்கே போற்றி
    ஓம் நால் தோளமுதே போற்றி
    ஓம் ஆயர்தம் கொழுந்தே போற்றி
    ஓம் ஆழ்வார்களுயிரே போற்றி
    ஓம் நாமம் ஆயிரம் உடையாய் போற்றி
    ஓம் வாமதேவனுக்களித்தாய் போற்றி

    ஓம் மூவா முதல்வா போற்றி
    ஓம் தேவாதி தேவா போற்றி
    ஓம் எட்டெழுத்திறைவா போற்றி
    ஓம் எழில்ஞானச் சுடரே போற்றி
    ஓம் வரவரமுனிவாழ்வே போற்றி
    ஓம் வடதிருவரங்கா போற்றி
    ஓம் ஏனம்முன் ஆனாய் போற்றி
    ஓம் தானவன் ஆகம் கீண்டாய் போற்றி
    ஓம் கஞ்சனைக் கடிந்தாய் போற்றி
    ஓம் நஞ்சரவில் துயின்றாய் போற்றி

    ஓம் மாலே போற்றி
    ஓம் மாயப் பெருமானே போற்றி
    ஓம் ஆலிலைத் துயின்றாய் போற்றி
    ஓம் அருள்மாரி புகழே போற்றி
    ஓம் விண் மீதிருப்பாய் போற்றி
    ஓம் மண் மீதுழல்வோய் போற்றி
    ஓம் மலைமேல் நிற்பாய் போற்றி
    ஓம் மாகடல் சேர்ப்பாய் போற்றி
    ஓம் முந்நீர் வண்ணா போற்றி
    ஓம் முழுதும் கரந்துறைவாய் போற்றி

    ஓம் கொற்றப் புள்ளுடையாய் போற்றி
    ஓம் முற்றவிம் மண்ணளந்தாய் போற்றி
    ஓம் அனைத்துலக முடையாய் போற்றி
    ஓம் அரவிந்த லோசன போற்றி
    ஓம் மந்திரப் பொருளே போற்றி
    ஓம் இந்திரனுக்கருள்வாய் போற்றி
    ஓம் குரும்பரம்பரை முதலே போற்றி
    ஓம் விகனைசர் தொழும் தேவா போற்றி
    ஓம் பின்னை மணாளா போற்றி
    ஓம் என்னையாளுடையாய் போற்றி

    ஓம் நலம்தரும் சொல்லே போற்றி
    ஓம் நாரண நம்பி போற்றி
    ஓம் பிரகலல்லாதப்ரியனே போற்றி
    ஓம் பிறவிப் பிணியறுப்பாய் போற்றி
    ஓம் பேயார் கண்ட திருவே போற்றி
    ஓம் ஏழு மாமுனிவர்க்கருளே போற்றி
    ஓம் ஏமகூட விமானத்திறைவா போற்றி
    ஓம் ஆணையின் நெஞ்சிடர் தீர்த்தாய் போற்றி
    ஓம் கல்மாரி காத்தாய் போற்றி
    ஓம் கச்சி யூரகத்தாய் போற்றி

    ஓம் வில்லியறுத்த தேவா போற்றி
    ஓம் வீடணனுக்கருளினாய் போற்றி
    ஓம் இனியாய் போற்றி
    ஓம் இனிய பெயரினாய் போற்றி
    ஓம் புனலரங்கா போற்றி
    ஓம் அனலுருவே போற்றி
    ஓம் புண்ணியா போற்றி
    ஓம் புராணா போற்றி
    ஓம் கோவிந்தா போற்றி
    ஓம் கோளரியே போற்றி

    ஓம் சிந்தாமணி போற்றி
    ஓம் ஸ்ரீதரா போற்றி
    ஓம் மருந்தே போற்றி
    ஓம் மாமணி வண்ணா போற்றி
    ஓம் பொன் மலையாய் போற்றி
    ஓம் பொன்வடிவே போற்றி
    ஓம் பூந்துழாய் முடியாய் போற்றி
    ஓம் பாண்டவர்க் கன்பா போற்றி
    ஓம் குடந்தைக் கிடந்தாய் போற்றி
    ஓம் தயரதன் வாழ்வே போற்றி

    ஓம் மதிகோள் விடுத்தாய் போற்றி
    ஓம் மறையாய் விரிந்த விளக்கே போற்றி
    ஓம் வள்ளலே போற்றி
    ஓம் வரமருள்வாய் போற்றி
    ஓம் சுதாவல்லி நாதனே போற்றி
    ஓம் சுந்தரத் தோளுடையாய் போற்றி
    ஓம் பத்தராவியே போற்றி
    ஓம் பக்தோசிதனே போற்றி 
    கண்ணனின் திருவடிக் கோலத்தை, எல்லா மாதங்களிலும் வரும் அஷ்டமி அன்று போடலாம். அதன்மூலம் திருமாலின் அருளும், சிவபெருமானின் அருளும் ஒரு சேர கிடைக்கும்.
    அந்த பாதத்தைக் கவனித்துப் பாருங்கள். எட்டு என்ற எண்ணைப் போல காட்சி தரும். அதற்கு மேல் உள்ள விரல்கள் 5 புள்ளிகளாகக் காட்சி தரும். இங்கு 8-ம், 5-ம் சேருகின்றது.

    8 என்பது எட்டெழுத்து மந்திரமான ஓம் நமோ நாராயணா என்பதையும், 5 என்பது ஐந்தெழுத்து மந்திரமான சிவாயநம என்பதையும் குறிப்பதாகும். அஷ்டாச்சரமும், பஞ்சாட்சரமும் இணைந்து, கண்ணனின் திருவடிக் கோலமாக மாறுகிறது.

    எனவே கண்ணனின் திருவடிக் கோலத்தை, எல்லா மாதங்களிலும் வரும் அஷ்டமி அன்று போடலாம். அதன்மூலம் திருமாலின் அருளும், சிவபெருமானின் அருளும் ஒரு சேர கிடைக்கும்.
    தனக்கு அபசாரம் செய்தவர்களை நரசிம்மர் பொறுத்துக் கொள்வார். ஆனால் தனது பக்தர்களுக்கு அநீதி செய்பவர்களைப் பொறுத்துக் கொள்ள அவரால் முடியாது.
    நரசிம்மருடைய அவதாரத் தோற்றம், சிம்ம முக உருவில் பயங்கரமாகவும், பக்தனான குழந்தை பிரகலாதனுக்கு இரணிய கசிபு இழைத்த கொடுமைகளினால் உக்கிரமான கோபம் கொண்டவராகவும் சேவை சாதிப்பதால், அவரைப் பூஜிப்பது கடினம் என்று பலர், தவறான கருத்தைக் கொண்டுள்ளனர்.

    தனக்கு அபசாரம் செய்தவர்களை நரசிம்மர் பொறுத்துக் கொள்வார். ஆனால் தனது பக்தர்களுக்கு அநீதி செய்பவர்களைப் பொறுத்துக் கொள்ள அவரால் முடியாது.
    ஏனெனில் தன்னை நம்பும் பக்தர்களிடம் அத்தனை அன்பும், கருணையும் அவருக்கு உண்டு. ஆதலால்தான் ‘‘பக்தவத்ஸலன்’’ என்ற திருநாமம் ஏற்பட்டது.

    அதாவது, தன் பக்தர்களுக்குக் குழந்தை போன்றவன் என்பது பொருள். நம்மிடம் அளவற்ற கருணை கொண்ட ஸ்ரீ நரசிம்மரிடம் பயம் ஏன்?
    நரசிம்மரை பூஜித்து வழிபடுவது மிகவும் சுலபம். அனைவருக்கும் அவர் எளிதானவர்.

    முற்பிறவித் தவறுகளின் பலனாக ஏற்படும் மிகக் கொடிய துன்பத்தையும் ஒரு நொடியில் போக்கி அருளக் கூடிய ஆற்றல் நரசிம்மரிடம் உள்ளது. ஆதலால், ஸ்ரீலட்சுமி நரசிம்மரைக் கிரக தோஷப் பரிகாரமாக எவரும் வழிபடலாம். அதற்கு உடனடியாகப் பலனும் காண முடியும்.

    தஞ்சையைச் சுற்றி உள்ள சாலியமங்கலம், நீடாமங்கலம், மெலட்டூர், ஊத்துக்காடு, சூலமங்கலம் முதலான ஊர்களில் ஆண்டு தோறும் பாகவதமேளா நாடகங்கள் பல நாள்கள் நடத்தப்படுவதுண்டு. தற்போது மெலட்டூர் மற்றும் சாலியமங்கலத்தில் மட்டும் பாகவதமேளா நாடகங்கள் நடைபெறுகின்றன.

    மெலட்டூரில் நரசிம்ம ஜெயந்தி தோறும் சுவாமி சன்னதியில் ஒரே குடும்ப மரபில் வந்த பிராமண ஆண்கள் பிரகலாத நாடகத்தை நிகழ்த்துகின்றனர். தெலுங்கு மொழியில்தான் நாடகம் நடத்தப்படுகிறது. தெலுங்கு மொழி தெரியாத தமிழர்களே பெருமளவில் வந்திருந்து நாடகத்தைக் காண்கின்றனர். திருவள்ளூர், காஞ்சி, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் போன்ற மாவட்டங்களில் தமிழில் கூடிய மகாபாரத, பாகவத, ராமாயண நாடகங்கள் நடத்தப்படுகின்றன.
    வேலூர் மாவட்டம், குடியாத்தம் கோபாலபுரத்தில் உள்ள அருள்மிகு கெங்கையம்மன் திருக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் 1-ம்தேதி அம்மன் சிரசு ஊர்வலம் நடைபெறுவது வழக்கம்.
    வேலூர் மாவட்டம், குடியாத்தம் கோபாலபுரத்தில் உள்ள அருள்மிகு கெங்கையம்மன் திருக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் 1-ம் தேதி அம்மன் சிரசு ஊர்வலம் நடைபெறுவது வழக்கம். பக்தர்கள் வெள்ளத்தில் கெங்கையம்மன் சிரசு மிதந்து வரும் கண்கொள்ளா காட்சியை காண்பதற்கே ஆயிரம் கண்கள் வேண்டும்.

    கோவிலில் நடைபெறும் வைகாசி திருவிழாவையொட்டி இன்று (புதன்கிழமை) தரணம்பேட்டை முத்தாலம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு அதிகாலை சுமார் 5 மணி அளவில் கெங்கைஅம்மன் சிரசு ஊர்வலம் புறப்படும். ஊர்வலம் தரணம்பேட்டை, என்.ஜி.செட்டி தெரு, காந்தி ரோடு, ஜவகர்லால் தெரு, கோபாலபுரம் வழியாக கெங்கையம்மன் கோவிலை வந்தடையும்.

    அம்மன் சிரசு ஊர்வலம் வருகிற வழிநெடுகிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடிநின்று அம்மனை தரிசனம் செய்வார்கள். நேர்த்திக்கடனாக அம்மனுக்கு மாலை அணிவித்து, கற்பூரம் ஏற்றி, தேங்காய் உடைத்து வழிபடுவர். மேலும் நேர்த்திக்கடனாக பலர் அம்மன், காளி உள்ளிட்ட வேடம் அணிந்து வழிபடுவார்கள். சிலம்பாட்டம், புலி ஆட்டம் போன்றவை ஊர்வலத்தினை பின்தொடர்ந்து நடைபெறும்.

    கெங்கையம்மன் கோவிலை சிரசு வந்தடைந்த பின்னர் சிரசு மண்டபத்தில் உள்ள சண்டாளச்சி உடலில் அம்மன் சிரசு பொருத்தப்பட்டு கண் திறப்பு நிகழ்ச்சி நடத்தப்படும். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் சாந்த சொரூபியாக மாறும் கெங்கைஅம்மன் தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு வேண்டும் வரங்களை அருள் பாலிக்கிறார். பின்னர் இரவு 8 மணி அளவில் சண்டாளச்சி உடலில் இருந்து பிரிக்கப்பட்ட அம்மன் சிரசு வீதிஉலாவாக கவுண்டன்ய நதியின் வழியே சென்று புங்கனூர் அம்மன் கோவிலை அடையும். அப்போது கண்ணை கவரும் சிறப்பு வாண வேடிக்கை நடைபெறும்.
    தலவிருட்சம் என்பது கோவில் கட்டுவதற்கு முன்பு இறைவன் எழுந்தருளி இருந்த இடமாகும். அதனால் தெய்வத்துக்கு ஒப்பான சக்தி அதற்கு உண்டு.
    கோவில் என்பது மூர்த்தி, தீர்த்தம், தலம் என்ற மூன்று விஷயத்தால் சிறப்பு பெறுகிறது. ‘மூர்த்தி’ என்பது மூலஸ்தானத்தில் வீற்றிருக்கும் தெய்வத்தையும், ‘தலம்’ என்பது தலவிருட்சத்தையும் (மரம்), ‘தீர்த்தம்’ என்பது கோவில் குளத்தையும் குறிக்கும். தலவிருட்சம் என்பது கோவில் கட்டுவதற்கு முன்பு இறைவன் எழுந்தருளி இருந்த இடமாகும். அதனால் தெய்வத்துக்கு ஒப்பான சக்தி அதற்கு உண்டு.

    கோவில் தோன்றுவதற்கு முன்பே அந்த மரம் இருப்பதால், அதனை தலவிருட்சம் என போற்றுகிறோம். தீர்த்தம் எனப்படும் குளம், நீராடுவோரின் பாவத்தை போக்கி புண்ணியம் தருவதாகும். மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் மூன்றிலுமே தெய்வசக்தி நிரம்பி இருப்பதால், இதுபோன்ற கோவில்களில் வழிபாட்டால் நிறைவான பலன் கிடைக்கும். குழந்தைப்பேறு இல்லாதவர்கள் தலவிருட்சத்தை தினமும் மூன்று முறை வலம் வந்து கடவுளை வழிபட விரைவில் புத்திர பாக்கியம் கிடைக்கும்.

    விருட்சம் என்பது மரத்தை குறிக்கும். மரங்களிலும் கடவுள் தன்மை உண்டு என சொல்வதற்காகவும், அந்த மரத்தின் நலன்களை தலைமுறை தாண்டி கொண்டு செல்லவும் தலவிருட்சங்கள் அமைக்கப்பட்டன. ஆல், புளி, வேம்பு என ஒவ்வொரு மரத்திற்கும் உள்ள தனிப்பட்ட மருத்துவ குணநலன்களை மக்களுக்கு உணர்த்தவே இவ்வாறு செய்யப்பட்டன. வன்னி மரம், வில்வமரம் போன்றவை, கோவில்களை தவிர மற்ற இடங்களில் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றன.

    கோவில் என்பது மூர்த்தி, தீர்த்தம், தலம் என்ற மூன்று விஷயத்தால் சிறப்பு பெறுகிறது. ‘மூர்த்தி’ என்பது மூலஸ்தானத்தில் வீற்றிருக்கும் தெய்வத்தையும், ‘தலம்’ என்பது தலவிருட்சத்தையும் (மரம்), ‘தீர்த்தம்’ என்பது கோவில் குளத்தையும் குறிக்கும். தலவிருட்சம் என்பது கோவில் கட்டுவதற்கு முன்பு இறைவன் எழுந்தருளி இருந்த இடமாகும். அதனால் தெய்வத்துக்கு ஒப்பான சக்தி அதற்கு உண்டு.

    கோவில் தோன்றுவதற்கு முன்பே அந்த மரம் இருப்பதால், அதனை தலவிருட்சம் என போற்றுகிறோம். தீர்த்தம் எனப்படும் குளம், நீராடுவோரின் பாவத்தை போக்கி புண்ணியம் தருவதாகும். மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் மூன்றிலுமே தெய்வசக்தி நிரம்பி இருப்பதால், இதுபோன்ற கோவில்களில் வழிபாட்டால் நிறைவான பலன் கிடைக்கும். குழந்தைப்பேறு இல்லாதவர்கள் தலவிருட்சத்தை தினமும் மூன்று முறை வலம் வந்து கடவுளை வழிபட விரைவில் புத்திர பாக்கியம் கிடைக்கும்.

    விருட்சம் என்பது மரத்தை குறிக்கும். மரங்களிலும் கடவுள் தன்மை உண்டு என சொல்வதற்காகவும், அந்த மரத்தின் நலன்களை தலைமுறை தாண்டி கொண்டு செல்லவும் தலவிருட்சங்கள் அமைக்கப்பட்டன. ஆல், புளி, வேம்பு என ஒவ்வொரு மரத்திற்கும் உள்ள தனிப்பட்ட மருத்துவ குணநலன்களை மக்களுக்கு உணர்த்தவே இவ்வாறு செய்யப்பட்டன. வன்னி மரம், வில்வமரம் போன்றவை, கோவில்களை தவிர மற்ற இடங்களில் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றன.
    நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் - இவை ஐந்தும், ‘பஞ்சபூதங்கள்’ என்று அழைக்கப்படுகிறது. நமக்குக் கட்டுப்படாத சக்திகள் அனைத்தையும், முன்னோர்கள் தெய்வமாக கொண்டாடினர்.
    விளக்கு எரிய தீபம் தேவை, பயிர் வளர மழை தேவை, மனித வாழ்விற்கு பக்தி தேவை, இயற்கைக்கு அப்பாற்பட்ட ஒருசக்தி - அது தெய்வம்.

    நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் - இவை ஐந்தும், ‘பஞ்சபூதங்கள்’ என்று அழைக்கப்படுகிறது. நமக்குக் கட்டுப்படாத சக்திகள் அனைத்தையும், முன்னோர்கள் தெய்வமாக கொண்டாடினர்.

    நாமும் அந்த இயற்கை சக்திகளை நல்ல நாள் பார்த்து வழிபட்டால், வாழ்வு வளமாகும். பஞ்சபூதங்களை வழிபட பஞ்ச பூத ஸ்தலங்கள் உள்ளன. அவற்றிற்கு சென்று வழிபட்டால் இயற்கையின் ஒத்துழைப்பு கிடைக்கும். நிலம் - காஞ்சிபுரம், நீர் - திருவானைக்கா, நெருப்பு- திருவண்ணாமலை, காற்று- திக்காளஹஸ்தி, ஆகாயம் - சிதம்பரம்.

    செல்வாக்கு பெற்ற மனிதர்களின் தொடர்பு மற்றும் நட்பு காரணமாக ஏற்படும் ஆதாயங்கள் மற்றும் இதர நன்மைகளை அளிக்கும் கலாநிதி யோகம் பற்றி ஜோதிடம் குறிப்பிட்டுள்ளது.

    சுபக்கிரகங்களான புதன், குரு, சுக்கிரன் ஆகிய மூன்று கிரகங்களும் இணைந்து 2-ம் வீட்டிலோ அல்லது 5-ம் வீட்டிலோ இருப்பது அல்லது அந்த ராசிகளில் ஏதேனும் ஒன்றில் குரு அமர்ந்த நிலையில், அந்த வீட்டை புதன் மற்றும் சுக்கிரன் கிரகங்கள் பார்ப்பது ஆகிய நிலைகளில் கலாநிதி யோகம் ஏற்படுகிறது.

    மிகவும் அரிதாக அமையக் கூடிய இந்த யோகத்தில் பிறந்தவர்கள் நல்ல குண நலன்களை கொண்டவர்களாக இருப்பார்கள். பிறக்கும்போது இவர்களின் குடும்பம் ஓரளவிற்கு பொருளாதார வசதி கொண்டதாக இருக்கும். இவர்கள் பிறந்த பின்னர் குடும்பத்திற்கு சிறப்பான பொருளாதார வளம் உண்டாகும் என்று சொல்லப்பட்டுள்ளது.

    இவர்கள் எளிதில் நோய்களால் பாதிக்காத பலம் வாய்ந்த உடலும், பிறரை வசீகரிக்கும் முகத்தோற்றமும், குரல் வளமும் கொண்டவர்களாக இருப்பார்கள். சிறந்த பேச்சாற்றலால் அனைவரையும் தன் பக்கம் ஈர்க்கும் திறன் பெற்ற இவர் தங்களது 24 வயது முதல் பொருளாதார உயர்வை அடைவார்கள். ஆடம்பரமான வீடு, வாகனங்கள் ஆகியவற்றை பெற்றிருப்பார்கள். அரசியல் துறையில் உள்ளவர்களால் ஆதாயங்களை பெறுவார்கள்.
    பாண்டவர்கள் வம்சத்தைச் சேர்ந்த வம்சாவளியினர் திரவுபதியை அவர்களது குலதெய்வமாக ஏற்றுக்கொண்டு வழிபாடு செய்து வருவதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
    மகாபாரத யுத்தம் முடிந்த நிலையில், தர்மர் ஆட்சியில் அமர்ந்தார். அவர் சுமார் 36 ஆண்டுகள் நாட்டை ஆண்டு வந்தார். ஆட்சியில் அமர்ந்ததும் கிருஷ்ணர் துவாரகைக்கு சென்று விட்டார். தர்மர் ஆட்சியில் இருந்தபோது கிருஷ்ணர் இவ்வுலகை விட்டு நீங்கி விட்டார் என்ற செய்தியைக் கேட்டு அனைவரும் துயர் அடைந்தார்கள். கிருஷ்ணர் இன்றி இனி தமக்கும் இந்த உலகில் வாழ அருகதை இல்லை என்று நினைத்த பாண்டவர்கள், ராஜ்ஜியத்தை அர்ச்சுனனின் பேரன் பரிஷித்திடம் ஒப்படைத்தனர். பின்னர் அவர்கள் சிவலோக பதவி அடைய இமயமலையை நோக்கி பயணம் செய்தனா். சிவபெருமானே அவர்களுடைய வம்சத்துக்கு குல தெய்வமாக இருந்தார்.

    இமயமலையை அடைந்தபோது, அவர்கள் தவறான பாதையில் நுழைய இருந்தனர். அதைத் தடுக்கும் நோக்கத்தில், சிவபெருமான் தன்னை ஒரு பெரிய கல்லாக மாற்றிக் கொண்டு மேலிருந்து உருண்டு விழுந்து, அவர்கள் செல்ல இருந்த பாதையை மறைத்து நின்றார். தனது சகோதரர்கள் மற்றும் திரவுபதியுடன் நடந்து கொண்டிருந்த பீமன், அந்தப் பாறையைப் பிளக்க தனது கதையை ஓங்கினான். அப்போது அவர்கள் முன் சிவபெருமான் தோன்றினார்.

    உடனே பீமனும் அவரது சகோதரர்களும் சிவபெருமானை நமஸ்கரித்து, முக்தி தருமாறு வேண்டினார்கள். அவர்களுக்கு முக்தி தந்த பின், சிவபெருமான் அங்கேயே சிவலிங்கமாக மாறினார். பூர்வ ஜென்மத்தில் சாபம் பெற்று பூமியில் பிறந்து இருந்த திரவுபதி, சிவபெருமானை தரிசித்தவுடன் சாப விமோசனம் பெற்று மறைந்துவிட்டாள். அதைக் கண்டு பாண்டவர்கள் அழுதார்கள். அவர்களை தேற்றிய சிவபெருமான், “இனி பாண்டவர்கள் வம்சத்தைச் சேர்ந்த வம்சாவளியினர் திரவுபதியை அவர்களது குல தெய்வமாக ஏற்றுக்கொண்டு வாழ்வார்கள் என்று அருள்புரிந்தார். இமயமலையில் சிவன் அவர்களுக்கு காட்சி தந்த இடத்தில்தான் தற்போது கேதார்நாத் ஆலயம் இருப்பதாக சொல்லப்படுகிறது.
    திருவாரூரில் உள்ள பதஞ்சலி மனோகர் ஆலயத்தில் ஒவ்வொரு அமாவாசை அன்றும் அன்னாபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள். மேலும் மகாளய அமாவாசை அன்று, சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்வதோடு, பித்ரு தர்ப்பணமும் செய்கின்றனர்.
    திருவாரூரில் இருந்து தஞ்சாவூர் செல்லும் சாலையில் 4 கிலோமீட்டர் தொலைவில் விளமல் என்ற ஊர் இருக்கிறது. இங்கு பதஞ்சலி மனோகர் ஆலயம் உள்ளது. இத்தலத்தில் ஒவ்வொரு அமாவாசை அன்றும் அன்னாபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள். மேலும் மகாளய அமாவாசை அன்று, சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்வதோடு, பித்ரு தர்ப்பணமும் செய்கின்றனர். பொதுவாக சிவன் கோவில்களில் ஐப்பசி பவுர்ணமி தினத்தில்தான் அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.

    பித்ருக்களுக்கு முறையாக திதி, தர்ப்பணம் செய்யாதவர்கள், அமாவாசை தினத்தில், திருவாரூர் கமலாலய தீர்த்தத்தில் (தெப்பக்குளம்) உள்ள பிதுர் கட்டத்திலும், விளமல் கோவிலில் உள்ள அக்னி தீர்த்தத்திலும் நீராடுகின்றனர். பின், பதஞ்சலி மனோகரருக்கு அன்னாபிஷேகம் செய்து, மோட்ச தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள். இதனால் முன்னோர்கள் மகிழ்ச்சி யடைந்து, தலைமுறை சிறக்க ஆசீர்வதிப்பார்கள் என்பது நம்பிக்கை.
    ×