search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95492"

    பொதுவாகக் கோவில்களுக்குச் சென்றால் பிரகாரம் (வலம்) வருவது வழக்கம். ஆனால் பிரகாரம் வலம் வரும் போது சிலவழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
    பொதுவாகக் கோவில்களுக்குச் சென்றால் பிரகாரம் (வலம்) வருவது வழக்கம். அதை ஒற்றைப் படையில் சுற்றுவதா? இரட்டைப் படையில் சுற்றுவதா? என்பது சிலரது கேள்வியாக இருக்கும்.

    விநாயகருக்கு ஒரு சுற்று பிரகாரம் சுற்ற வேண்டும்.

    சிவனுக்கு மூன்று சுற்று சுற்ற வேண்டும்.

    விஷ்ணுவிற்கு நான்கு சுற்று.

    நவக்கிரகத்திற்கு ஒன்பது சுற்று சுற்றுவது நல்லது.

    பிரகாரம் வரும்பொழுது, பிறர் கதைகளையோ, வீட்டுக் கதைகளையோ பேசாமல், தெய்வ நம்பிக்கையோடு வரம் தரும் தெய்வப் பாடல்களையோ, சுலோகங்களையோ உச்சரித்தபடி பிரகாரம் சுற்றினால் பெரும் பாக்கியம் கிடைக்கும். பிறர் போற்றும் அளவிற்கு வாழ்க்கைப் பாதையும் அமையும்.

    சிவாலயத்தை வலம் வரும்போது ‘சிவாயநம’ என்று உச்சரிக்கலாம்.

    விஷ்ணு ஆலயத்தை வலம் வரும் பொழுது ‘ஓம் நமோ நாராயணாய நமஹ’ என்று உச்சரிக்கலாம். ஏராளமான முறை இறைவன் நாமத்தை உச்சரித்தால் தாராளமாகத் தனவரவு வந்துசேரும்.
    கலங்கும் உள்ளத்தைக் காப்பதற்கு விலங்குகள் பெரிதும் உதவுகின்றன. கோ பூஜை செய்வதன் மூலம் ஆபத்துக்கள் அகலும். கோடி புண்ணியம் கிடைக்கும்.











    கலங்கும் உள்ளத்தைக் காப்பதற்கு விலங்குகள் பெரிதும் உதவுகின்றன. பசு ஒரு சக்தி வாய்ந்த விலங்கு. வீடுகளில் பசுக்களை வளர்ப்பது நல்லது.

    கோ பூஜை செய்வதன் மூலம் ஆபத்துக்கள் அகலும். பாவம் தீரும். செல்வம் செழிக்கும். கிரகப் பிரவேசத்தில் கோ பூஜை செய்வார்கள்.

    அதேபோல் மணிவிழாவின் போதும், கணபதி ஹோமம் செய்யும் பொழுதும் கோ பூஜை செய்வார்கள். பசு நுழைந்த வீட்டில் தீய சக்திகள் அண்டாது.

    முன்பு அரசர்களின் ஊர்வலங்களில் பசு முதலில் செல்லும். அதிகாலையில் பசுவைத் தரிசித்தால் எல்லா தீர்த்தங்களிலும் நீராடிய பலன் கிடைக்கும்.
    ‘புஷ்கரம்’ என்பது 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை புனித நதிகளில் நடைபெறும் கும்பமேளா. ‘மகா புஷ்கரம்’ என்பது 144 (12x12) ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளா. அதன்படி இந்த ஆண்டு மகாபுஷ்கரம் நடைபெறுகிறது.
    12-10-2018 முதல் 23-10-2018 வரை

    பிரம்மதேவரின் கையில் இருந்தது தீர்த்தம் ‘புஷ்கரம்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த புஷ்கர தீர்த்தத்தை கடுமையான தவம் இருந்து பிரம்மதேவரிடம் இருந்து வரமாகப் பெற்றார், குரு பகவான். ‘புஷ்கரம்’ என்பது 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை புனித நதிகளில் நடைபெறும் கும்பமேளா. ‘மகா புஷ்கரம்’ என்பது 144 (12x12) ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளா. அதன்படி இந்த ஆண்டு மகாபுஷ்கரம் நடைபெறுகிறது.

    நம் நாட்டில் உள்ள முக்கியமான 12 நதிகள், 12 ராசிகளுக்குஉரியவைகளாகச் சொல்லப்பட்டுள்ளன. அதன்படி விருச்சிக ராசிக்குரியதாக தாமிரபரணி நதி சொல்லப்பட்டு ள்ளது. குரு பகவான் எந்த ராசியில் சஞ்சரிக்கிறாரோ, அந்த ராசிக்குரிய நதியில் பிரம்ம புஷ்கரம் தங்கியிருக்கும் என்பது ஐதீகம். அதன்படி இந்த ஆண்டு விருச்சிக ராசியில் குரு சஞ் சரிப்பதால், தாமிரபரணியில் பிரம்ம புஷ்கரம் தங்கியிருக்கும். அப்போது பிரம்மா, விஷ்ணு, சிவன் மற்றும் அவர்களின் தேவியர்கள், இந்திரன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்கள் மற்றும் நதி தேவதைகளும் அந்த நதியில் தங்கியிருப்பார்கள்.

    நதிகளெல்லாம் தெய்வீகம் வாய்க்கப் பெற்றவை என்று கருதுவது நம் நாட்டு ஐதீகம் ஆகும். இயற்கையாக அமைந்த நீர் நிலைகளில் தெய்வத் தன்மை உண்டு. அதில் மகிமை காண்பவர்கள், அதனுள்ளே கடவுள் உறைந்திருப்பதை உணர்கின்றனர். தென் தமிழக நதிகளில் தெய்வ சொரூபமாக விளங்குவது தாமிரபரணி.

    அகத்தியரை ‘தென் நாடு செல்க’ எனக் கட்டளையிட்டார், சிவபெருமான். அதற்கு அகத்தியர், தனக்கு அங்குள்ள தமிழ் மொழியை உணர்த்தும்படி வேண்டினார். சிவபெருமானும், அகத்தியரை தன் அருகே அமர வைத்து தமிழ்மொழியைக் கற்பித்தார். பின்னர் அங்கிருந்து பொதிகைமலை வந்து அமர்ந்த அகத்தியர், கடும் தவம் செய்தார். அவர் முன் தோன்றிய சூரிய பகவான், அகத்தியருக்கு தமிழ் இலக்கணங்களை கற்றுக் கொடுத்தார்.

    இதையடுத்து முதல் தமிழ்ச் சங்கத்தின் முதல்வராய் இருந்து தமிழை வளர்த்தார் அகத்தியர். இந்த நிலையில் அகத்தியர் நீராடும் பொருட்டு, சிவபெருமான் பொதிகை மலையில் ஒரு நதியை உருவாக்கி, அதை அவருக்கே தானமாகக் கொடுத்தார். அந்த நதி தாம்பிர வர்ணத்தில் இருந்ததால் அதற்கு ‘தாம்பிர வர்ணி’ என்று பெயர் வந்தது. காலப்போக்கில் அதுவே மருவி ‘தாமிரபரணி’ என்றானது.

    அகத்தியருக்காக ஈசனால் உருவாக்கப்பட்டு, வற்றாத ஜீவ நதியாய் ஓடிக் கொண்டிருக்கும் தாமிரபரணி நதிக்கரையில் ஏராளமான திருக் கோவில்கள் உள்ளன. பாபநாசம் முதல் புன்னக்காயல் (முகத்து வாரம்) வரையான இதன் கரையோரத்தில் மொத்தம் 143 படித்துறைகள் அமைந்துள்ளன. இப்புனித நதிக்கரையில் அமைந்துள்ள குறுக்குத்துறை படித்து றையில் 12-10-2018 அன்று மகாபுஷ்கரத் திருவிழா தொடங்கி வைக்கப்பட இருக்கிறது.

    திருக்கணித பஞ்சாங்கப்படி விருச்சிக ராசியில் 11-10-2018 (வியாழன்) அன்று இரவு 7.20 மணிக்கு குரு பகவான் பிரவேசிக்கிறார். மறுநாள் 12-10-2018 (வெள்ளி) அன்று தாமிரபரணி புஷ்கரம் ஆரம் பம். 23-10-2018 (செவ்வாய்) அன்று புஷ்கரம் விழா பூர்த்தியாகும். மொத்தம் 12 நாட்கள் இந்த விழா நடக்க இருக்கிறது.

    இந்த 12 நாட்களும் 12 ராசிகளைக் குறிப்பதாக அமைந்துள்ளது. 12-ந் தேதி (வெள்ளி) - விருச்சிகம், 13-ந் தேதி (சனி)- தனுசு, 14-ந் தேதி (ஞாயிறு) - மகரம், 15-ந் தேதி (திங்கள்)- கும்பம், 16-ந் தேதி (செவ்வாய்) - மீனம், 17-ந் தேதி (புதன்) - மேஷம், 18-ந் தேதி (வியாழன்) - ரிஷபம், 19-ந் தேதி (வெள்ளி) - மிதுனம், 20-ந் தேதி (சனி) - கடகம், 21-ந் தேதி (ஞாயிறு) - சிம்மம், 22-ந் தேதி (திங்கள்) - கன்னி, 23-ந் தேதி (செவ்வாய்) - துலாம்.

    ஒவ்வொருவரும் தமது ஜென்ம ராசிக் குரிய தேதி, கிழமையில் தாமிரபரணி நதியில் நீராடுவதால் முழுப்பலன் கிட்டும். குடும்பத் தலைவரோடு தொலை தூரத் திலிருந்து நீராட வருகின்றவர்கள் குடும்பத் தலைவரின் (தந்தையின்) ஜென்ம ராசி எது வோ, அந்த ராசிக்குரிய நாள், கிழமையில் நீராடினாலே போதும். அது குடும்பம் முழுவதும் பிரகாசத்தைக் கொண்டு வரும். 12 நாட் களிலும் தொடர்ந்து நீராடுவது இந்தியாவில் உள்ள அனைத்து புனித நதிகளிலும் நீராடுவதற்குச் சமமானது.

    இந்த 12 நாட்களிலும் தாமிரபரணிக் கரையில் தானம் செய் வது சிறப்பு. தானங்களுள் ‘கோ தானம்’ முக்தியை அளிப்பதாக சொல்லப்படுகிறது. நல்ல பசுவைத் தானம் செய்வதால், மோட்ச சித்தி உண்டாகும் என்று புராணங்கள் கூறுகின்றன.

    இது தவிர புஷ்கரம் தங்கியிருக்கும் 12 நாட்களிலும், தாமிர பரணி நதிக்கரையில் முன்னோர்களுக்கு திதி கொடுப்பதும் சிறந்ததாகும். இதனால் பித்ரு தோஷம் விலகி, உங்கள் வாழ்வு பொலிவும் வலுவும் பெறும். பாபநாசம் முதல் புன்னக்காயல் வரையான 143 படித்துறைகளில் எவற்றில் வேண்டுமானாலும் நீராடலாம், தானம் செய்யலாம், திதி கொடுக்கலாம்.

    சூரிய உதயத்திற்கு முன்பு நான்கு நாழிகைகள் (96 நிமிடங்கள்) அருணோதய காலமாகும். இந்த 96 நிமிட காலத்தில் நீராடுவது மிக மிகப் புண்ணியமாகும்.

    திருமணமாகாத ஆண், பெண்கள் அதிகாலை வேளையில் நீராடினால் மட்டுமே நற்பலன் கிட்டும். திருமணமானவர்கள் அதிகாலை, மதியம் ஆகிய இரண்டு வேளைகளிலும் நீராட லாம். துறவு வாழ்க்கை மேற்கொள்பவர்கள் அதி காலை, மதியம், சூரிய அஸ்தமனம் ஆகிய மூன்று வேளைகளிலும் நீராடலாம்.

    நவக்கிரகங்களில் குரு பகவானை ‘புத்திரகாரகன்’ என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. புத்திர பாக்கியத்திற்கு காரணகர்த்தா இவரே. குரு பகவானின் அனுக்கிரகம் நிரம்பப் பெற்ற தலங்களிலும், குரு பகவான் சஞ்சாரத்தால் சிறப்பு பெறும் புஷ்கர நதியிலும் நீராடினால் புத்திரப்பேறு கிடைப் பது நிச்சயம். அந்த வகையில் தாமிரபரணியில் நீராடுவது சிறந்த பலனைத் தரும். குரு திசை, குரு புத்தி நடப்பில் உள்ளவர்கள் மற்றும் குரு தோஷத்தால் பாதிக்கப்பட்டு, முன்னேற இயலாத நிலையில் இருப்பவர்கள், புஷ்கர நாளில் தாமிரபரணியில் நீராடினால் புதுவாழ்வு பூக்கும்.

    ராசிகளுக்குரிய நதிகள்

    மேஷம் - கங்கை

    ரிஷபம் - நர்மதை

    மிதுனம் - சரஸ்வதி

    கடகம் - யமுனை

    சிம்மம் - கோதாவரி

    கன்னி - கிருஷ்ணா

    துலாம் - காவிரி

    விருச்சிகம் - தாமிரபரணி

    தனுசு - சிந்து

    மகரம் - துங்கபத்ரா

    கும்பம் - பிரம்மநதி

    மீனம் - பிரணீதா
    வடமாநிலங்களில் கொண்டாடப்படும் துர்கா பூஜை, தமிழகத்தில் நவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. இதை புரட்டாசியில் கொண்டாட ஜோதிட ரீதியான காரணமும் உண்டு.
    வடமாநிலங்களில் கொண்டாடப்படும் துர்கா பூஜை, தமிழகத்தில் நவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. இதை புரட்டாசியில் கொண்டாட ஜோதிட ரீதியான காரணமும் உண்டு. நவக்கிரகங்களின் சஞ்சாரத்தை ‘கோள்சாரம்’ என்றும் குறிப்பிடுவர். இதில் சூரியனுக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு.

    இவர் புரட்டாசி மாதத்தில் புதன் கன்னி ராசியில் சஞ்சரிப்பார். புதன் கல்வி, கலைகளுக்கு உரியவராகவும், புத்திகாரகராகவும் (புத்திக்கு உரியவர்), பண்பு நலன்களைத் தருபவராகவும் இருப்பவர். அதனால் தான் கல்வி, கலைகளுக்குரிய கலை மகளை இம்மாதத்தில் வழிபாடு செய்கிறோம்.

    இசை, நடனம், விளையாட்டு போன்ற கலை பயில்பவர்களும், ‘அட்சர அப்யாசம்’ என்னும் முதல் படிப்பு சடங்கு செய்பவர்களும் புரட்டாசியில் வரும் விஜய தசமி நாளிலேயே தொடங்குகிறார்கள். புரட்டாசியில் வரும் இந்த நவராத்திரியை சரஸ்வதியின் பெயரை இணைத்து ‘சாரதா நவராத்திரி’ என்று அக்காலத்தில் அழைத்தனர். (சரஸ்வதிக்கு, சாரதா என்ற பெயரும் உண்டு).

    கல்வி மட்டுமல்லாமல் செல்வமும், தைரியமும் மனிதனுக்கு அவசியம். அவற்றை பெற்று வாழ்வு வளம் பெறுவதற்காகவே புதனுக்குரிய புரட்டாசியில் தேவியை கலைமகள், அலைமகள், மலைமகள் என்னும் மூன்று அம்சங்களில் வழிபடுகிறோம்.

    விநாயகப் பெருமானை உரிய முறைப்படி வழிபாடு செய்தால் நிச்சயம் தடைபட்டு வரும் திருமணம் விரைவில் கைகூடும். குழந்தை பாக்கியமும் கிடைக்கும்.
    விநாயகப் பெருமானை உரிய முறைப்படி வழிபாடு செய்தால் நிச்சயம் திருமணம் கைகூடும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். விநாயக சதுர்த்திக்கு எட்டு நாட்களுக்கு முன்பாக உப்பூரில் ஸ்ரீவெயிலுகந்த விநாயகர், பக்தர்களுக்கு மயில் வாகன ரூபமாக காட்சி தருவார். ஆவணி மாதம் கிருஷ்ண பட்சம் ஏகாதசி அன்று மட்டும் இந்த தரிசனத்தை காணப்பெற்றவர்கள் குழந்தை பாக்கியம் பெறுவது உறுதி!

    தஞ்சை மாவட்டம் சுவாமிமலை அருகே ஒரு கி.மீ தொலைவில் காவிரிக்கரையில் உள்ளது. இத்தல விநாயகருக்கு திருவலஞ்சுழி வெள்ளை வாரணர் கோவில் கமலாம்பாள், வாணி என இரு மனைவியர் உண்டு. இவரை வணங்கினால் திருமணத்தடை நீங்கும். பிள்ளைச் செல்வம் உண்டாகும் என்பது ஐதீகம்.

    திருவாரூரில் திருமஞ்சன வீதியும், காரைக்காட்டு தெருவும் சந்திக்கும் நாற் சந்தியில் அமர்ந்து அருள்புரிந்து வருகிறார் ஸ்ரீ பெருநாட்டு பிள்ளையார். இக்கோவில் தினமும் மாலை ஆறு மணி முதல் இரவு எட்டு மணி வரை தான் திறந்திருக்கும்.

    இந்த கோவிலின் சிறப்பே அரை மணிநேரத்திற்கு நடக்கும் அபிஷேகம் தான். அதைக்காண தொழில் அபிவிருத்தி, குழந்தை பாக்கியம், கல்வி வளர்ச்சி, திருமண கைகூடுவது என்று அனைத்து வேண்டுதல்களுக்கும் சில வாரங்கள் அல்லது சில மாதங்களுக்குள் செவிசாய்த்து பெருநாட்டுப் பிள்ளையார் நிறைவேற்றி தருகிறார்.

    திண்டுக்கல்லில் இருந்து சுமார் 14 கி.மீ தொலைவில் உள்ள மேலக் கோட்டையின் கன்னி மூலையில் ஸ்ரீதலை வெட்டி பிள்ளையார் இருக்கிறார். கல்யாணத்தடையால் கலங்கி தவிப்பவர்கள் இங்கு வந்து, பொங்கல் படையலிட்டு ரோஜா மற்றும் சம்பங்கி மாலையை விநாயகருக்கு அணிவித்து, பச்சரிசி, எள், வெல்லம் எனக் கலந்த கலவையை கீழே சிந்தியபடி விநாயகரை மூன்று முறை வலம் வர வேண்டும்.

    பிறகு விநாயகரின் கழுத்தில் உள்ள மாலையை வாங்கி, கழுத்தில் இரண்டு முறை எடுத்து போட்டுக்கொள்ள வேண்டும். விநாயகரின் கழுத்திலேயே திரும்பவும் அந்த மாலையை அணிவித்து விட்டுத் திரும்பி பார்க்காமல் வந்துவிட வேண்டும். இதையடுத்து சீக்கிரமே கல்யாண வரன் தேடி வரும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை.

    திண்டிவனம்- திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் 12 கி.மீ மேற்கே அமைந்துள்ள கிராம் தீவனூர். அந்தக் கிராமத்தில் உள்ள பொய்யாமொழிப் பிள்ளையார் கோவிலில் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு முதல் குழந்தை ஆண் குழந்தையாகப் பிறக்கும் என்பது அங்குள்ளவர்களின் நம்பிக்கை.

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்திற்கு அருகேயுள்ள தேவதானம் என்னும் இடத்தில் கோரையாற்றின் கரையில் அமைந்துள்ளார் மதுரவிநாயகர். திருமணத்தடை உள்ள ஆண், பெண் யாராக இருந்தாலும் இந்தக் கோவிலுக்கு வந்து கோவிலின் எதிரேயுள்ள புனித ஊற்றுக் கிணற்றில் குளித்து, புத்தாடைகள் அணிந்து விநாயகரை வணங்க வேண்டும். அரளி, சிகப்பு அரளி, அருகம்புல் மாலை போன்றவற்றால் விநாயகரை அலங்கரித்து அவருக்குப் பிடித்த தேங்காய், வாழைப்பழம், வெற்றிலை, அவல், பொரி, கொழுக்கட்டை ஆகியவற்றை நைவேத்தியமாகப் படைத்து அருகில் உள்ள மரத்திற்கு தாலிகட்ட வேண்டும். அதனைத்தொடர்ந்து மூன்று அல்லது ஒன்பது வாரங்கள் தொடர்ந்து இதேபோல் வணங்கி வந்தால் திருமணத்தடை நீங்கி நல்வாழ்க்கை அமையும்.

    நெல்லை காந்திமதி அம்மன் ஆலயத்தில் அருள்புரியும் பொல்லாப்பிள்ளையாரை வேண்டிக்கொண்டு தினமும் அவரை மனதில் தியானம் செய்தால் குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை நிச்சயம் பிறக்கும். குழந்தை பிறந்ததும் இங்கு சந்நிதிக்கு வந்து குழந்தையை இங்குள்ள ஜன்னல் போல் உள்ள பகுதியில் உட்புறமாகத்தந்து வெளிப்புறமாக குழந்தையை வாங்கிக்கொள்ளும் சம்பிரதாயம் இன்றும் நடைபெற்று வருகிறது.

    திண்டுக்கல் நகரின் மத்தியில் கோபாலசமுத்திரம் குளக்கரையில் 108 விநாயகர்கள் கோவில் இருக்கிறது.  எந்தவிதமான பிரச்சினையாக இருந்தாலும் இங்கு வந்து திருவுளச்சீட்டு போட்டுப்பார்த்து நன்மை அடைந்தவர்கள் ஏராளம். சங்கடஹர சதுர்த்தியில் விநாயாகருக்கு தயிர் அபிஷேகம் செய்தால் பிள்ளை பாக்கியம் பெறலாம். விநாயகரின் 32 வடிவங்களில் ஒன்று உச்சிஷ்ட கணபதி ஒரு பெண்ணை ஆலிங்கனம் செய்தபடி உள்ள வடிவம்தான் “உச்சிஷ்ட கணபதி” வடிவமாகும். இந்த உச்சிஷ்ட கணபதியை வணங்கும் பெண்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பது ஐதீகம்.

    குழந்தைப்பேறுக்குத் தயாராக இருப்பவர்கள் வல்லபை கணபதிக்கு நைவேத்தியங்கள் படைத்து நல்ல அழகான குழந்தையைத் தர வேண்டும் என்று வழிபட்டால் அதன்படி நடக்குமாம். சுவாமி மலையில் முருகன் சந்நிதானத்தில் வல்லபை கணபதியைக் காணலாம்.

    சிதம்பரம் நகரின் தெற்கு தெருவில் மிகச்சிறிய கோவிலில் நடராஜர் சன்னதியை நோக்கியவாறு சக்தி பாலவிநாயகர் உள்ளார். சிதம்பர ரகசிய ஓலைச்சுவடியில் 64-ம் பக்கத்தில் இந்த விநாயகரைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. நடராஜர் கோவில் இருந்தபோது இவ்விநாயகர் கோவில் இருந்தது என்பதால் இவரே ஆதி விநாயகர் என்பர். குழந்தை முகமும், கோரமான பற்களும், இடது கையில் அமிர்த கலசமும், வலது கையில் மோதிரமும் அணிந்துள்ளார். மாங்கல்ய பாக்கியம், குழந்தைபேறு அருளும் விநாயகர் இவர்.
    அம்மனை வழிபடும் விழாக்கள் ஏராளமாக இருந்தாலும், தொடர்ச்சியாக ஒன்பது நாட்கள் அம்பாளை பூஜிக்கும் நவராத்திரியானது அதில் முக்கியத்துவம் பெறுகிறது.
    சிவனுக்கு நிகரான சக்தியை வழிபடும் ஒன்பது நாட்களை உள்ளடக்கிய விழாவே நவராத்திரி. அம்மனை வழிபடும் விழாக்கள் ஏராளமாக இருந்தாலும், தொடர்ச்சியாக ஒன்பது நாட்கள் அம்பாளை பூஜிக்கும் நவராத்திரியானது அதில் முக்கியத்துவம் பெறுகிறது. புரட்டாசி வளர்பிறை பிரதமை திதியில் தொடங்கி ஒன்பது நாட்கள் நவராத்திரி விழா கொண்டாடப்படும். 10-வது நாளான தசமி அன்று விஜயதசமி விழா நடைபெறும்.

    மகிஷாசுரனுடன் ஒன்பது நாட்கள் போரிட்ட அம்பாள், பத்தாவது நாளான தசமி அன்று வெற்றி பெற்றார். பெரும்பாலும் கோவில் களில் 10 நாட்கள் திருவிழா நடத்தப்படும். அவற்றை பிரம்மோற்சவ விழா என்று அழைப்பார்கள். அதுபோல் வீட்டில் 10 நாட்கள் தொடர்ச்சியாக நடத்தப்படும் ஒரே விழாவான நவராத் திரி விழா, வீடுகளில் கொண்டாடப் படும் பிரம்மோற் சவம் என்று கூறினால் அது மிகையாகாது.

    சித்திரை, புரட்டாசி ஆகிய இரு மாதங் களையும் எமனின் கோரப் பற்கள் என்று கூறுவார்கள். இந்த இரு மாதங்களிலும் பிணிகள் உடலை துன்புறுத்தி, நலிவடையும்படி செய்யும். அதனைப் போக்கும் விதமாகவே சக்தி வழிபாடு உள்ளது. சித்திரை மாதத்தில் வசந்த நவராத்திரியும், புரட்டாசி மாதத்தில் சாரதா நவராத் திரியும் கொண்டாடப் படுகிறது. இதில் சாரதா நவராத்திரி அனைவரும் கொண் டாடும் தனிச் சிறப்பு பெற்றது.

    நவராத்திரியின் ஒன்பது நாட்களும் முப் பெரும் தேவியரின் வழிபாடாக இருக்கிறது. முதல் மூன்று நாட்கள் துர்க்கையை வேண்டியும், இடை மூன்று நாட்கள் லட்சுமி தேவியை வேண்டியும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவியை போற்றியும் வழிபாடு செய்ய வேண்டும்.

    லட்சுமிதேவி, அலமேலுமங்கை என்ற நாமத்துடன் பிறந்து, திருப்பதி வெங்கடேசப் பெருமாளை அடையும் பொருட்டு ஒன்பது நாட்கள் விரதம் இருந்து பெருமாளை அடைந்ததாக ஒரு கதையுண்டு. அதன் காரண மாகவே இந்த நவராத்திரி விழா கொண்டாடப்படுவதா கவும் கூற்று உள்ளது. நவரா த்திரி விழாவை வைணவர் கள் சிறப்பாக கொண்டாடு கிறார்கள். இதேபோன்று நவராத்திரி பற்றி பல கதைகள் உலவுகின்றன.

    இந்தியா மட்டுமின்றி இல ங்கை மற்றும் ஆசிய நாடுகளில் உள்ள இந்து மக்கள் மற்றும் உல கில் உள்ள இந்து மக்கள் ஆகியோ ரால் எங்கும் நவராத்திரி விரதம் சிறப்பாக அனுஷ்டிக்கப்படுகிறது.

    நவராத்திரி விழாவின் ஒன்பது நாட்களில் வீடுகளில் கொலு வைக்கும் நிகழ்ச்சி அரங் கேறும். கலை உணர்வு, பக்தி ஆகியவற்றை வெளிப் படுத்தும் விதமாக இது அமைந்துள்ளது.

    இந்த விரதத்தை அனுஷ்டித்ததன் பயனாக இந்திரன், விருத்திராசுரனை அழித்தான் என்று புராணம் கூறுகிறது. நவராத்திரி விரதத்தை மேற்கொண்டால் தாங்கள் விரும்பிய பலனை அடையலாம் என்றும் சொல்லப்படுகிறது. இவ்விரதம் இருப்பவர்கள் வீரம், செல்வம், கல்வி ஆகிய மூன்று பலன்களையும் அடைவார்கள்.

    இவ்விரதத்தை மேற்கொள் ளும் கன்னிப் பெண்கள் திரு மணப் பயனையும், திருமணமா னப் பெண்கள் மாங்கல்யப் பயனையும் பெறுவார்கள். மூத்த சுமங்கலி பெண்கள் மன மகிழ் ச்சியையும், மன நிறைவையும் பெறுவார்கள். இந்த வழிபாட்டை மேற்கொள்ளும் மற்றவர்களுக்கு பரிபூரண திருப்தி கிடைக்கும்.
    அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் நவராத்திரி விழா நேற்று தொடங்கியது. இதையொட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத சுந்தரராஜபெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.
    அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் நவராத்திரி விழா நேற்று தொடங்கியது. இதையொட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத சுந்தரராஜபெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.

    மாலையில் கல்யாணசுந்தரவள்ளி தாயாருக்கு சிறப்பு அலங்காரம், பூஜை நடந்தது. இதைதொடர்ந்து உற்சவர் தாயார் புறப்பாடு மேளதாளம் முழங்க நடந்தது. அப்போது ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    இதற்காக நவராத்திரி கொலுமண்டபம் வண்ண விளக்குகளாலும், தோரணங்களும், கதம்ப மாலைகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் அம்மன் காட்சி அளித்தார்.
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி உற்சவ விழா நேற்று தொடங்கியது. வருகிற 18-ந் தேதி வரை விழா நடக்கிறது. இதையொட்டி சாமி சன்னதி 2-ம் பிரகாரத்தில் கொலு அலங்காரம் வைக்கப்பட்டுள்ளது. அங்கு சாமியின் திருவிளையாடலை விளக்கும் கதைகள், சிவனின் வடிவங்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளன. அம்மன் சன்னதி 2-ம் பிரகாரத்தில் உள்ள கொலு மண்டபத்தில் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் அம்மன் காட்சி அளித்தார்.

    விழாவையொட்டி 18-ந் தேதி வரை தினமும் மாலை 6 மணிக்கு மூலஸ்தான சன்னதியில் உள்ள மீனாட்சி அம்மனுக்கு திரை போட்டு அபிஷேகம், அலங்காரம் நடந்து கல்பபூஜை, சகஸ்ரநாம பூஜை போன்ற பூஜைகள் நடைபெறுகிறது. அந்த பூஜை காலங்களில் பக்தர்களின் தேங்காய் உடைத்தல் மற்றும் அர்ச்சனை மூலஸ்தான மீனாட்சி அம்மனுக்கு நடத்தப்படாது. ஆனால் கொலு மண்டபத்தில் எழுந்தருளும் உற்சவ மீனாட்சி அம்மனுக்கு தேங்காய் உடைப்பு மற்றும் அர்ச்சனைகள் செய்யப்பட்டது.

    நவராத்திரி விழாவையொட்டி தினமும் திருக்கல்யாண மண்டபத்தில் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி மற்றும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் ஆன்மிக சொற்பொழிவு, பரதநாட்டியம், வீணை இசை கச்சேரி, கர்நாடக சங்கீதம், தோற்பாவை கூத்து, பொம்மலாட்டம், வில்லுப்பாட்டு போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. விழாவையொட்டி பொற்றாமரை குளம், அம்மன், சாமி சன்னதி, பிரகாரங்கள், கோபுரங்கள் போன்றவை மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.



    கோவிலில் வரையப்பட்டிருந்த நீர்கோலம் பக்தர்களை வெகுவாக கவர்ந்தது.

    இந்த விழாவையொட்டி 18-ந் தேதி வரை மூலவர் மீனாட்சி அம்மனுக்கு அபிஷேகம் செய்யும் நேரம், திரை போடும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி காலை 4.30 மணி முதல் 5 மணிக்கு திருப்பள்ளி எழுச்சியும், 5 மணியில் இருந்து 7 மணி வரை சாமி தரிசனம். பின்னர் 7 மணியில் இருந்து 8 மணி வரை திரை போட்டு அபிஷேகம் நடைபெறுகிறது. பின்பு 8 மணியில் இருந்து 10 மணி வரை சாமி தரிசனம் செய்யலாம். அதை தொடர்ந்து 10 மணியில் இருந்து 10.45 மணி வரை திரை போடப்படும். பின்பு 10.45 மணியில் இருந்து 12.45 வரை சாமியை தரிசனம் செய்யலாம். மதியம் 1 மணி முதல் மாலை 4 மணி வரை நடை அடைக்கப்படுகிறது.

    பின்பு மாலை 4 மணியில் இருந்து 5.30 மணி வரை தரிசனம் செய்யலாம். 5.30 மணியில் இருந்து இரவு 7.30 மணி வரை மீனாட்சி அம்மனுக்கு அபிஷேக, அலங்காரம் நடைபெறும். அந்த நேரங்களில் கொலுமண்டபத்தில் உள்ள உற்சவர் மீனாட்சியை தரிசனம் செய்யலாம். பின்பு இரவு 7.30 மணியில் இருந்து 10 மணி வரை அம்மனை தரிசனம் செய்யலாம். விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன் ஆகியார் செய்து உள்ளனர். 
    நவராத்திரியின் சிறப்பு அம்சம் கொலு வைப்பதே ஆகும். ஒவ்வொரு படிகளும் ஒவ்வொரு தத்துவத்தை மிக எளிதாக சொல்லிச் செல்கின்றன.
    ‘ஐம்பூதங்களில் ஒன்றான மண்ணால் ஆன பொம்மையால் என்னை பூஜித்தால், அவர்களுக்கு சகல சுகங்களையும், சவுபாக்கியங்களையும் அளிப்பேன்’ என்று தேவி புராணத்தில் அம்பிகை கூறியுள்ளார். அன்னையின் அந்த வார்த்தையை சுரதா என்ற மன்னன் கடைப்பிடித்து, தன் பகைவர்களை வீழ்த்தியதோடு, பலவிதமான இன்னல்களில் இருந்தும் விடுதலை அடைந்தான். எனவே கொலு பொம்மைகளை வைத்து வழிபாடு செய்வது என்பது நவராத்திரி விழாவில் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது.

    மனிதன் படிப்படியாக தன் ஆன்மிக சிந்தனைகளை வளர்த்து, இறுதியாக இறைவனுடன் கலக்க வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்துவதற்காகவே, கொலுவில் படிகள் அமைக்கப்பட்டு, அதில் பொம்மைகள் அடுக்கி வைக்கப்படுகின்றன. ஒன்பது படிகள் அமைப்பது மரபு. ஒவ்வொரு படியிலும் ஐதீகப்படி பொம்மைகளை வைக்க வேண்டும். பொம்மைகளை வைக்கும் மரபையும், அந்த பொம்மைகள் கூறும் தத்துவத்தையும் இங்கு காணலாம்.

    நவராத்திரியின் சிறப்பு அம்சம் கொலு வைப்பதே ஆகும். கொலு என்பது பல படிகளை கொண்ட மேடையில் பலவித பொம்மைகளை நேர்த்தியாக அலங்கரித்து வைப்பது என்பது பொருளாகும். ஐம்பூதங்களில் ஒன்றான மண்ணினால் செய்யப்பட்ட பொம்மைகளை சக்தியின் அம்சங்களாக எண்ணி நவராத்திரியில் பூஜிப்பவர்களுக்கு சகல நலங்களையும் தருவேன் என்று அம்பிகையே கூறியிருக்கின்றார். நவராத்திரியில் வீட்டில் வைக்கப்படும் கொலு மேடையானது, 9 படிகள் கொண்ட தாக அமைக் கப்பட்டு இருக்க வேண்டும். ஒவ்வொரு படிகளும் ஒவ்வொரு தத்துவத்தை மிக எளிதாக சொல்லிச் செல்கின்றன.

    முதலாம் படி

    கொலு மேடையில் கீழிருந்து முதல் படியில் ஓரறிவு கொண்ட உயிர்களான புல், செடி, கொடி போன்ற தாவரங்களின் பொம்மைகளை கொலுவாக வரிசைப்படுத்தி வைக்க வேண்டும்.

    இரண்டாம் படி

    அடுத்ததாக அமைந்த இரண்டாவது படியில் ஈரறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற உயிர்களின் பொம்மைகளை கொலுவில் வைக்க வேண்டும்.

    மூன்றாம் படி


    மூன்றறிவு படைத்த உயிரினங்களான கறையான், எறும்பு போன்றவற்றின் பொம்மைகளை கொண்டு மூன்றாவது படியை அமைக்க வேண்டும்.

    நாலாம் படி

    நான்கறிவு உயிர்களை விளக்கும் நண்டு, வண்டு போன்றவற்றின் பொம்மைகளை வைத்து நான்காவது படியை அலங்கரிக்க வேண்டும்.

    ஐந்தாம் படி

    ஐந்தறிவு கொண்ட உயிர்களான மிருகங்கள் மற்றும் பறவைகளின் பொம்மைகளை வைத்து ஐந்தாவது படியை அமைக்க வேண்டும்.

    ஆறாம் படி

    இந்த படி மனிதர்களுக்கு உரியது. எந்த உயிருக்கும் இல்லாத சிந்திக்கும், சிரிக்கும் சக்தியை இறைவன் மனிதனுக்கு வழங்கியுள்ளார். அத்தகைய ஆறாவது அறிவு கொண்ட மனிதர்களின் பொம்மைகளை வைத்து ஆறாவது படியை நிர்மாணிக்க வேண்டும்.

    ஏழாம் படி

    மனித நிலையிலிருந்து உயர்நிலையை அடைந்த சித்தர்கள், ரிஷிகள், மகரிஷிகள் (ரமணர், வள்ளலார்) போன்றோரின் பொம்மைகள் கொண்டு ஏழாவது படியை அமைக்க வேண்டும்.

    எட்டாம் படி

    தேவர்கள், அட்டதிக்கு பாலகர்கள், நவக்கிரக அதிபதிகள் போன்ற தெய்வங்கள், தேவதைகள் போன்றோரின் பொம்மைகளைக் கொண்டு எட்டாவது படியை அலங்காரம் செய்ய வேண்டும்.

    ஒன்பதாம் படி

    பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய முப்பெரும் தேவர்கள், சரஸ்வதி, லட்சுமி, பார்வதி தேவி போன்ற முப்பெரும் தேவிகள் ஆகிய தெய்வங்களையும், அவர்களின் நடுவில் நடுநாயகமாக ஆதிபராசக்தியின் உருவ பொம்மையையும் வைத்து ஒன்பதாவது படியை நிறைவு செய்ய வேண்டும்.

    மனிதன் படிப்படியாக உயர்ந்து தெய்வ நிலையை அடைய வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாகவே இதுபோன்ற வரிசையில் கொலு அமைக்கச் சொல்லப்பட்டுள்ளது.
    முப்பெரும் தேவியர்களை 9 நாட்களும் வழிபடுவதுடன், ஒவ்வொரு நாளும் வழிபட வேண்டிய தெய்வங்களையும், படைக்க வேண்டிய நைவேத்தியங்களையும் இங்கே பார்க்கலாம்.
    முப்பெரும் தேவியர்களை வழிபடும் நவராத்திரி விழாவில், ஒன்பது நாட்கள் சிறப்பான வழிபாடு நடைபெறும். அந்த ஒன்பது நாட்களும் அன்னையை ஒவ்வொரு தேவியாக பாவித்து வழிபடுவதுடன், அவர்களுக்கு ஏற்ற நைவேத்தியத்தையும் படைத்து வழிபாடு செய்ய வேண்டும். ஒவ்வொரு நாளும் வழிபட வேண்டிய தெய்வங்களையும், படைக்க வேண்டிய நைவேத்தியங்களையும் இங்கே பார்க்கலாம்.

    முதலாம் நாள்:

    சக்தியை முதல்நாளில் சாமுண்டியாக கருதி வழிபடவேண்டும். தெத்துப்பல் திருவாயும், முண்ட மாலையும் அணிந்தவள். முண்டன் என்ற அசுரனை சம்ஹாரம் செய்தவள் என்பதால் சாமுண்டா எனவும் அழைப்பர். கோபம் கொண்டவளாக காட்சி யளிக்கும் இந்த அன்னையின் கோபம் மற்றவர்களை திருத்தி நல்வழிப்படுத்தவே ஆகும்.

    நைவேத்தியம்: சர்க்கரைப் பொங்கல்.

    இரண்டாம் நாள்

    இரண்டாம் நாளில் அன்னையை வராகி தேவியாக வழிபட வேண்டும். வராகி (பன்றி) முகமும் தெத்துபற்களும் உடையவள். சூலமும் உலக்கையும் ஆயுதங்கள். பெரிய சக்கரத்தை தாங்கியிருப்பவள். தனது தெத்து பற்களால் பூமியை தூக்கியிருப்பவள். இவளுக்கு மங்கள மய நாராயணி, தண்டினி, பகளாமுகி போன்ற திருநாமங்களும் உண்டு. இவள் அன்னையின் சேனாதிபதி ஆவாள். ஏவல், பில்லி,சூனியம், எதிரிகள் தொல்லையில் இருந்து விடுபட இவளின் அருளைப் பெறுவது அவசியம்.

    நைவேத்தியம்: தயிர் சாதம்.

    மூன்றாம் நாள்

    மூன்றாம் நாளில் சக்தித் தாயை இந்திராணியாக வழிபட வேண்டும். இவளை மாகேந்தரி, சாம்ராஜதாயினி என்றும் அழைப்பர். இவள் இந்திரனின் சக்தி ஆவாள். கிரீடம் தரித்து வஜ்ராயுதம் ஏந்தியவள். ஆயிரம் கண்ணுடையவள். யானை வாகனம் கொண்டவள். விருத்திராசுரனை அழித்தவள். தேவலோகத்தை பரிபாலனம் செய்பவளும் இவளே ஆகும். பெரிய பெரிய பதவிகளை அடைய விரும்புபவர்களுக்கு இவளது அருட்பார்வை கட்டாயம் வேண்டும். மற்றும் வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்க, பதவியில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்க அருள்புரிபவளும் இந்த அன்னையே ஆவாள்.

    நைவேத்தியம்: வெண் பொங்கல்.

    நான்காம் நாள்

    இந்நாளில் சக்தித்தாயை வைஷ்ணவி தேவியாக கருதி வழிபாடு செய்ய வேண்டும். சங்கு, சக்கரம், கதை, வில் ஆகியவற்றை தன் கையில் கொண்டிருப்பவள். தீயவற்றை சம்ஹரிப்பவள். இவளின் வாகனம் கருடன் ஆகும்.

    நைவேத்தியம்: எலுமிச்சை சாதம்.

    ஐந்தாம் நாள்

    ஐந்தாம் நாளில் அன்னையை மகேஸ்வரி தேவியாக கருதி வழிபாடு செய்ய வேண்டும். அன்னை மகேஸ்வரனின் சக்தியாவாள். திரிசூலம், பிறைச் சந்திரன், பாம்பு தரித்து இடப வாகனத்தில் எழுந்தருளி இருப்பவள். அளக்க முடியாத பெரும் சரீரம் உடையவள். சர்வ மங்களம் தருபவள். தர்மத்தின் திருவுருவம். கடின உழைப்பாளிகள் உழைப்பின் முழுப்பலனை பெற இந்த அன்னையின் அருள் அவசியம் வேண்டும்.

    நைவேத்தியம்: புளியோதரை.

    ஆறாம் நாள்

    இந்த நாளில் அன்னையை கவுமாரி தேவியாக நினைத்து வழிபடவேண்டும். மயில் வாகனமும், சேவல் கொடியும் கையில் ஏந்தியவள். தேவசேனாதிபதியான முருகனின் வீரத்திற்கு ஆதாரமானவள். ஓங்கார சொரூபமானவள். சகல பாவங்களையும் விலக்கி விடுபவள். வீரத்தை தருபவள்.

    நைவேத்தியம்: தேங்காய் சாதம்.

    ஏழாம் நாள்

    அன்னையை ஏழாம் நாள் அன்று மகா லட்சுமியாக கருதி வழிபட வேண்டும். கையில் ஜெபமாலை, கோடரி, கதை, அம்பு, வில், கத்தி, கேடயம், சூலம், பாசம், தண்டாயுதம், சக்தி ஆயுதம், வஜ்ராயுதம், சங்கு, சக்கரம், மணி, மதுக்கலயம், தாமரை, கமண்டலம் ஆகியவற்றைக் கொண்டிருப்பவள். விஷ்ணு பத்தினியாவாள். பவளம் போன்ற சிவந்த நிறத்தையுடையவள். தாமரை ஆசனத்தில் அமர்ந்து சகல ஐஸ்வரியங்களையும் தருபவள். இந்த அன்னையை வேண்டினால் அனைத்து செல்வங்களும் வந்து சேரும்.

    நைவேத்தியம்: கல்கண்டு சாதம்.

    எட்டாம் நாள்

    இன்று அன்னையை நரசிம்மகி ஆக வழிபாடு செய்ய வேண்டும். மனித உடலும், சிம்ம தலையும் உடையவள். கூரிய நகங்களுடன் சங்கு, சக்கர தாரிணியாக சிம்ம வாகனத்தில் காட்சி தருபவள். சத்ருக்கள் தொல்லையில் இருந்து விடுபட அன்னையின் அருள் வேண்டும்.

    நைவேத்தியம் : சர்க்கரைப் பொங்கல்.

    ஒன்பதாம் நாள்


    இன்று அன்னையை பிராக்மி ஆக வழிபட வேண்டும். அன்ன வாகனத்தில் இருப்பவள். வாக்கிற்கு அதிபதியாவாள். ஞான சொரூபமானவள். கல்விச் செல்வம் பெற இந்த அன்னையின் அருள் மிகவும் அவசியமாகும்.
    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி மகா புஷ்கர விழா நாளை தொடங்கி வருகிற 22-ந் தேதி வரை நடக்கிறது.
    குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயரும் போது, ஒவ்வொரு ஆண்டும் அந்தந்த ராசிக்கு உரிய நதிக்கு புஷ்கர விழா நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு குரு பகவான் விருச்சிக ராசிக்கு இடம் பெயர்ந்ததையடுத்து விருச்சிக ராசிக்கு உரிய தாமிரபரணி ஆற்றுக்கு புஷ்கர விழா நடத்தப்படுகிறது.

    இந்த புஷ்கர விழா 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரக்கூடிய மகாபுஷ்கர விழாவாகும். இதையடுத்து புஷ்கர விழாவை பிரமாண்டமாக கொண்டாட சிருங்கேரி, காஞ்சி மடங்கள், துறவிகள் சங்கம், சித்தர்கள் கோட்டம், தாமிரபரணி புஷ்கர ஒருங்கிணைப்பு குழு உள்பட பல்வேறு அமைப்புகள் சார்பில் பூஜைகள், சிறப்பு யாகங்கள், தாமிரபரணிக்கு ஆரத்தி வழிபாடு நடத்த‌ ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பாபநாசம் முதல் புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள 64 தீர்த்த கட்டங்கள், 143 படித்துறைகளில் புஷ்கர விழா பூஜைகள் நடைபெறுகின்றன. நெல்லை அருகன் குளம் ஜடாயு தீர்த்தம், செப்பறை கோவில், மணி மூர்த்தீசுவரம் உச்சிஷ்ட கணபதி கோவில் படித் துறைகள் முற்றிலும் புதுப் பித்து கட்டப்பட்டு உள்ளன.

    தூத்துக்குடியில் முறப்ப நாடு தலத்தில் படித்துறைகள் சீரமைக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு படித்துறைகள் புதுப்பிக்கப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டு உள்ளன. இந்த தாமிரபரணி மகா புஷ்கர விழா நாளை (11-ந்தேதி) தொடங்குகிறது.

    நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் தாமிரபரணி புஷ்கர விழாவை நாளை காலையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைக்கிறார். பின்பு அங்குள்ள படித்துறையில் புனித நீராடும் கவர்னர் பாபநாசம் சேனைத்தலைவர் சமுதாய கூடத்தில் நடக்கும் தாமிரபரணி புஷ்கர துறவிகள் மாநாட்டிலும் பங்கேற்கிறார்.

    மாலை 5.15 மணிக்கு நெல்லை அருகன்குளம் ஜடாயு தீர்த்த பகுதியில் நடைபெறும் புஷ்கர விழாவில் கலந்துகொண்டு தாமிர பரணிக்கு ஆரத்தி பூஜையை தொடங்கி வைக்கிறார். இதற்காக தீர்த்த கட்டத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நதிக் கரையில் 144 அடியில் படித்துறை அமைக்கப்பட்டுள்ளது. .

    ஆரத்தி பூஜையின்போது காசியில் கங்கைக்கு நடப்பது போன்று மகாபாரணி ஆரத்தி செய்யப் படுகிறது. இதற்காக காசியில் இருந்து 7 சிறப்பு ஆரத்தி தட்டுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. சிறப்பு வேத பண்டிதர்களும் வந்துள்ளனர். படித்துறையில் 7 அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன.

    தைப்பூச மண்டபம் அருகே அமைக்கப்பட்டுள்ள தடுப்புகள்.

    விழாவின்போது தாமிர பரணியின் மையப்பகுதியில் படகுகளில் மீட்பு படையினரும், போலீசாரும் பாது காப்பு பணியில் ஈடுபடு கிறார்கள். புஷ்கர விழாவுக்காக எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலையில் பிரமாண்டமான யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது. 54 யாக குண்டங்களும், நடுவில் பத்ம குண்டமும் அமைக்கப் பட்டுள்ளன.

    இதேபோல் பாபநாசம் சித்தர்கோட்டம் சார்பாக நடைபெறும் விழாவில் நாளை காலை 7.30 மணி யளவில் புனித தீர்த்தமான கல்யாண தீர்த்தத்தில் இருந்து அடியார்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் தீர்த்த கலசங்களுடன் ஊர்வலமாக வந்து நதிக்கு வழிபாடு தொடங் குதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்றைய தினம் மாலை 6.15 மணியளவில் பஞ்சபூத மேடையில் 16 வகை தீபங்கள், 5 வகை உபச்சாரங் களுடன் தமிழ் ஆகம விதிப்படி சிவனடியார்களால் மகா ஆரத்தி நிகழ்ச்சி நடைபெறும்.

    ஸ்ரீவைகுண்டம் படித்துறை யில் நாளை முதல் 23-ந்தேதிவரை புஷ்கர விழா நடக்கிறது. விழாவில் தினசரி கோ பூஜை, சுமங்கலி பூஜை, திருமணம் கைகூடுவதற்கு, புத்திர பாக்கியம், தம்பதி ஒற்றுமை, விவசாயம் மற்றும் தொழில் வளர்ச்சி உள்ளிட்ட நிகழ்வுகளுக்கான சிறப்பு பூஜைகள், சுதர்‌ஷண ஹோமம், பாராயணம் முற்றோதுதல், நாலாயிர திவ்ய பிரபந்தம், வித்யா ஹோமம், பொங்கல் வழிபாடு, கனக தாரா ஜெயம் மற்றும் இதர பூஜைகள் நடைபெற உள்ளன.

    புஷ்கர விழாவில் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் இருந்து லட்சக் கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது. விழாவை யொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப் பட்டுள்ளன. இதற்காக தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. சண்முக ராஜேசுவரன் நெல்லையில் முகாமிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்து வருகிறார்.

    ஏற்கனவே ஆற்றுக்குள் உள்ள ஆழம் குறித்தும், எந்தெந்த இடங்களில் எத்தனை அடி தூரம் வரை பக்தர்களை அனுமதிப்பது என்றும் விழா குழுவினர் அறிக்கை தயார் செய் துள்ளனர். அதன்படி குறிப்பிட்ட தூரத்துக்கு மேல் பக்தர்கள் ஆற்றுக்குள் செல்ல முடியாத வகையில் இரும்பு கம்பிகளை நிறுவி, இரும்பு வலைகளை கட்டி பாதுகாப்பு வளையம் அமைக்கப் பட்டுள்ளது.

    புஷ்கர விழாவுக்காக நெல்லை மாநகரில் 600 போலீசாரும், மாவட்டத்தின் பிற பகுதிகளில் 3500 போலீ சாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். குமரி மாவட்டத்தில் இருந்து போலீசார் பாதுகாப்புக்கு வரவழைக்கப்பட உள்ளனர். தேவைப்பட்டால் இதர மாவட்டங்களில் இருந்தும் போலீசார் பாதுகாப்புக்கு வரவழைக்கப்படுவார்கள் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

    தாமிரபரணி மகா புஷ்கர விழாவையொட்டி மாவட் டத்தில் பக்தர்கள் நீராடுவதற் காக 29 படித்துறைகள் கண்டறியப்பட்டிருக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. அதன்படி முறப்பநாடு, அகரம், நாணல்காடு, ஆழிக்குடி, கருங்குளம், ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவில் அருகில், ஆழ்வார் திருநகரி திருசங் கனை, அகோப்பில்லா, காந்தீஸ்வ ரர், பட்சிராஜன், நாயக்கர் பகுதி, பிள்ளையார் கோவில், தோணித்துறை, பால்குளம், தென்திருப் பேரை, குரங்கனி, ஏரல் இரட்டை திருப்பதி, மங்கள குறிச்சி, சேர்மன் அருணாசலசுவாமி கோவில், வாழவல்லான், உமரிக்காடு, சேதுக்குவாய்த்தான், சொக்கப்பழங்கரை, முக்காணி ஆற்றுப்பாலம் மேற்கு மற்றும் கிழக்கில் 2 இடங்கள், சேர்ந்த பூமங் கலத்தில் 2 இடங்கள் ஆக மொத்தம் 29 இடங்களில் உள்ள படித்துறைகளில் பக்தர்கள் நீராட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    விழாவையொட்டி 3 போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில், 5 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 16 துணை போலீஸ் சூப்பிரண்டு கள் உள்பட சுமார் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். சிறப்பு பயிற்சி பெற்ற 90 போலீசார் அடங்கிய பேரிடர் மீட்பு குழுவினரும், 27 படகுகளும் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றன.
    காவேரிப்பாக்கம் கொங்கணீஸ்வரர் கோவில் சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு நடந்தது. இதனை திரளான பொதுமக்கள் கண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    காவேரிப்பாக்கத்தில் கொங்கணர் மகரிஷி வழிபட்ட ஞானகுழலேந்தி உடனுறை கொங்கணீஸ்வரர் கோவில் உள்ளது. மிகவும் பழமை வாய்ந்த வரலாற்று சிறப்புமிக்க இக்கோவில் ஒருகாலத்தில் கோட்டை கோவில் என்றும், ஞானகுழலேந்தி குங்கும வள்ளிஅம்பாள் உடனுறை கொங்கணீஸ்வரர் கோவில் என்றும் அழைக்கப்பட்டு வந்தது.

    கோட்டை கோவில் என்று அழைக்கப்பட்ட இக்கோவில் இன்று அதற்கான அடையாளம் எதுவும் இன்றி மூலவர் விமான கோபுரம், சுற்றுச்சுவர்கள் சிதிலமடைந்து காணப்படுகிறது. இப்பகுதியில் உள்ள சைவபுரம் என்று அழைக்கப்படும் கொண்டாபுரம் கிராமம் திருக்குறளை எழுதிய திருவள்ளுவர் மனைவி வாசுகி பிறந்த ஊராகும். கலிங்கம், காந்தாரம், அயோத்தியா, அவந்தியா, பர்மா, பாரசீகம் உள்ளிட்ட 56 தேசங்களை ஆண்ட கொங்கணர் இல்லறத்தை துறந்து கானகம் மேற்கொண்டபோது இந்த ஊருக்கு வந்து இங்குள்ள ஈஸ்வரனை வழிபட்டுள்ளார்.

    அதனால் இக்கோவில் கொங்கணீஸ்வரர் கோவில் என்று அழைக்கப்பட்டது. அவருடன் மனைவி ஞானகிளியாம்பிகை உடன் வந்துள்ளார். பின்னர் கொங்கணர் இங்கு ஆசிரமம் அமைத்து ஈஸ்வரருக்கு பூஜைகள் செய்து தவம் புரிந்துள்ளார். சிறிது காலத்துக்கு பின்னர் அவர் திருப்பதி மலையடிவாரம் சென்று அங்கு ஜீவசமாதி அடைந்ததாக கோவில் வரலாறு கூறுகிறது. இக்கோவிலில் மூலவர் கொங்கணீஸ்வரர் மேற்கு நோக்கியும், குங்குமவள்ளி அம்மன் வடக்குதிசை நோக்கியும் பக்தர்களுக்கு காட்சி தருகின்றனர்.

    ஒவ்வொரு ஆண்டும் இக்கோவிலில் புரட்டாசிமாத மகாளய அமாவாசையன்றும், அதனை தொடர்ந்து 2 நாட்கள் மூலவர் கொங்கணீஸ்வரர் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்ச்சி நடைபெறும். அதன்படி நேற்று முன்தினம் மாலை மூலவர் சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் நிகழ்வு நடந்தது. இக்காட்சியை திரளான பொதுமக்கள் வரிசையாக நின்று தரிசனம் செய்தனர். அப்போது அவர்கள் ஓம் சிவாய நம, தென்னாடு உடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று பக்தி பரவசத்துடன் கோஷங்கள் எழுப்பியபடி சாமி தரிசனம் செய்தனர்.
    ×