search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95492"

    திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் மகாளய அமாவாசை தினத்தையொட்டி இன்று அதிகாலை முதலே ஏராளமானோர் குவிந்தனர். அவர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். #MahalayaAmavasya #PitruTharpanam
    புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை மகாளய அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. இதையொட்டி நீர் நிலைகளில் புனித நீராடிய பக்தர்கள் கோவில்களில் குவிந்தனர்.

    திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் மகாளய அமாவாசை தினத்தையொட்டி இன்று அதிகாலை முதலே ஏராளமானோர் குவிந்தனர். அவர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி முன்னோர்கள் நினைவாக அவர்களை வழிபட்டு தர்ப்பணம் செய்தனர்.

    தாய், தந்தை, பாட்டனார் என்று அவர்களை நினைத்து எள், தர்ப்பண நீர், பிண்டம், அரிசி, வாழைக்காய், சாப் பாடு ஆகியவற்றையும் வைத்து வழிபட்டனர். முன் னதாக பக்தர்கள் காவிரி ஆற் றில் இறங்கி புனித நீராடினர். பின்னர் அங்குள்ள காவிரி அம்மன் கோவில் முன்பு விளக்கேற்றி வழிபட்டனர்.

    இதேபோல் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் சாலையில் அமைந்துள்ள கருட மண்டபத்திலும் ஏராளமானோர் திரண்டு சிவாச்சாரியார்கள் மூலம் மறைந்த தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

    மகாளாய அமாவாசை தினத்தையொட்டி இன்று காலை திருச்சி அம்மா மண்டபம் காவிரி ஆற்றில் குவிந்த பக்தர்கள் முன்னோர்கள் நினைவாக தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்திய காட்சி.

    முசிறி, தொட்டியம், துறையூர் உள்ளிட்ட பகுதிகளிலும் காவிரி பாயும் இடங்கள் மற்றும் நீர் நிலைகளில் ஏராளமானோர் புனித நீராடி முன்னோர்களுக்காக தர்ப்பணம் கொடுத்தனர்.

    இன்று மகாளாய அமாவாசை தினத்தையொட்டி சக்தி ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

    மாலை 4 மணிக்கு சமயபுரம் மாரியம்மனுக்கு மகா அபிஷேகம், சந்தனாதி தைலம், திரவியப்பொடி, பச்சரிசி மாவு பொடி, மஞ்சள் பொடி, பஞ்சாமிர்தம், பால், தயிர், இளநீர், பன்னீர், விபூதி, சந்தனம், பழ வகைகள் போன்ற 16 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடத்தப்படுகிறது. அதன்பிறகு மகா தீபாராதனை நடைபெறுகிறது.

    இரவு 7 மணிக்கு மாரியம்மன் ரி‌ஷப வாகனத்தில் வீதி உலா நடைபெறுகிறது. முன்னதாக சமயபுரம் கோவிலை சுற்றியுள்ள கங்கா தீர்த்தம், சர்வேஸ்வரன் தீர்த்தம், அம்மன் தீர்த்தம், கோவில் குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் இன்று காலை பக்தர்கள் புனித நீராடி அம்மனை வழிபட்டனர்.  #MahalayaAmavasya #PitruTharpanam
    ஆதி காலத்தில் அயோத்தி நாட்டை இசுவாகு குலத்தைச் சேர்ந்த சகரர் எனும் மன்னன் ஆண்டு வந்தான். அவனுக்கு சுமதி, கேசினி என்ற 2 மனைவிகள் இருந்தனர்.
    mahalaya amavasya pitru tharpanam












    அவர்கள் இருவருக்கும் நீண்ட நாட்களாக குழந்தை பிறக்க வில்லை. இதனால் சகரர் இறைவனை நோக்கி தவம் இருந்தார். அதன் பயனாக சுமதிக்கு 60 ஆயிரம் குழந்தைகள் பிறந்தனர். கேசினிக்கு ஒரே ஒரு குழந்தை பிறந்தது.

    இதைத் தொடர்ந்து அரசர் சகரர் நாடு பிடிக்கும் ஆசையில் அசுவமேத யாகம் நடத்தினார். அவர் அனுப்பிய குதிரை திடீரென மாயமாகி விட்டது. அந்த குதிரையைத் தேடி சுமதயின் 60 ஆயிரம் மகன்களும் புறப்பட்டுச் சென்றனர். ஒரு குகை அருகில் குதிரை நிற்பதைக் கண்டனர். அந்த குகை அருகில் தவம் செய்து கொண்டிருந்த கபில முனிவர்தான் குதிரையை கடத்தி வந்து விட்டதாக தவறாக புரிந்து கொண்டனர்.

    கபில முனிவரின் தவத்தை கலைத்து சண்டைக்கு சென்றனர். இதனால் வெகுண்ட கபிலமுனிவர், 60 ஆயிரம் பிள்ளைகளையும் சாம்பலாகப் போகும்படி சாபமிட்டார். உடனே சுமதியின் 60 பிள்ளைகளும் சாம்பலாகிப் போனார்கள். கேசினின் ஒரே ஒரு மகன் அரசுரிமைக்கு வந் தான். அவனது மகன் பகீரதன்.
    பகீரதன் அரச பதவிக்கு வந்தபோது பல்வேறு தடைகள் ஏற்பட்டன. அப்போது அவனுக்கு தன் மூதாதையர்கள் 60 ஆயிரம் பேர் சாம்பலாகிப் போனதும், அவர்களுக்கு தர்ப்பணம், சிரார்த்தம் எதுவும் செய்யப்படவில்லை என்பதும் தெரிய வந்தது.

    உடனே பகீரதன் தன் முன்னோர்கள் 60 ஆயிரம் பேருக்கும் தர்ப்பணம் கொடுத்து பித்ரு வழிபாடு செய்ய முடிவு செய்தான். இதற்காக காடுகள், மலைகளில் அலைந்து திரிந்து முன்னோர்களின் எலும்பு சாம்பலை சேகரித்தார். ஆனால் பித்ரு வழிபாடு செய்வதற்கு பகீரனுக்கு தண்ணீர் கிடைக்கிவல்லை. உடனே அவன் சிவபெரு மானை நோக்கி தண்ணீருக்காக தவம் இருந்தான்.

    அவனது தவ வலிமையை மெய்ச்சிய சிவபெரு மான், தன் தலையில் வைத்திருந்த கங்கையை பூமிக்குச் செல்ல உத்தரவிட்டார். அதன்படி கங்கை நதியானது, பாகீரதி, அலக்நந்தா, ஜானவி, மந்தாகினி, பிண்டார், பதமா, பிரம்மாபுத்திரா ஆகிய 7 நதிகளாகப் பிரிந்து தரையில் ஓடியது. கங்கை நதி வங்கக் கடலில் கலக்கும் இடமான சாகர் எனுமிடத்தில் அமர்ந்து பகீரதன் பித்ரு பூஜைகளை செய்தான். புண்ணிய நதியான, புனித நதியான கங்கையின் தண்ணீரால் பகீரதனின் பித்ரு வழிபாடுகள் நிறைவு பெற்றன.

    அதன்பிறகு வட மாநிலம் முழுவதும் பாயும் வகையில் கங்கை மாறியது. பகீரதன் அன்று தொடங்கி வைத்த கங்கை நதியின் புனிதத் தன்மை இன்றும் தொடர்கிறது. கங்கை தண்ணீரை கைகளில் ஏந்தி முன்னோர் களை நினைத்து நீர் விடும்போது பித்ரு பூஜைக்கு தனி மகத்துவமே கிடைத்து விடுகிறது. எனவே வாழ்வில் ஒரு தடவையாவது கங்கையின் புனித தலங்களில் ஏதாவது ஒரு இடத்துக்கு சென்று பித்ரு பூஜை செய்ய வேண்டும்.

    பித்ரு பூஜைக்காகவே கங்கை பூமிக்கு வந்தது என்பதை என்றென்றும் நினைவில் கொள்ள வேண்டும்.
    மகாளய அமாவாசையில் பித்ருக்களை வழிபடவிட்டால் திருமண தடை, குழந்தை பாக்கியம் இல்லாமை, நோய், வறுமை போன்றவை ஏற்படக்கூடும் என்று கருடபூரணம் கூறியுள்ளது.
    பித்ரு வர்க்கம், மாத்ரு வர்க்கம், காருணீக வர்க்கம் என்று பித்ருக்கள் மூன்று வகைப்படுத்தப்பட்டுள்ளார்கள். அப்பா வகையை சார்ந்த பித்ருக்கள் பித்ரு வர்க்கம் எனப்படுவார்கள்.

    அம்மா வகையை சார்ந்த பித்ருக்கள் மாத்ரு வர்க்கம் எனப்படுவார்கள். சித்தப்பா, மாமா, குரு, நண்பர்கள் காருணீக் வர்க்கம் எனப்படுவார்கள். இவர்களை நினனவு கூறி தர்ப்பணங்களை செய்ய வேண்டும்.

    தாய், தந்தையின் இறந்த திதிகளை மட்டும் நினைவு கொண்டு தர்ப்பண காரியங்கள் செய்தால் போதும் எனும் பழக்கம் இன்று பலரிடத்தில் ஏற்பட்டுள்ளது. குடும்பத்தில் இறந்த முன்னோர்கள் அனைவரையும் நினைவு கூர்ந்து தர்ப்பண காரியங்கள் செய்ய வேண்டும். அதுதான் சிறப்பானது. முழு பலன்களையும் தரவல்லது. மகாளய அமாவாசை நாட்களில் எக்காரணம் கொண்டும் மறைந்த முன்னோர்களை திட்டவோ, விமர்சனம் செய்யவோ கூடாது.

    மகாளய அமாவாசை நாட்களில் மோட்சதீபம் ஏற்றி வழிபட்டால் பித்ருக்கள் மகிழ்ச்சி அடைவார்கள். ஞாயிறு, செவ்வாய், வெள்ளிகிழமைகள் மற்றும் ஜென்ம நட்சத்திரத்தில் தர்ப்பணம் செய்ய வேண்டியதிருந்தால் எள்ளுடன் அட்சதையையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    தர்ப்பணத்தை எப்போதும் கிழக்கு முகமாக பார்த்தபடி தான் கொடுக்க வேண்டும். நமக்காக எத்தனையோ கஷ்டங்களை தாங்கிய பித்ருக்களுக்கு, மகாளயபட்சம், அமாவாசை போன்ற நாட்களில் வெங்காயம், பூண்டு, வாசனை திரவியங்கள் போன்றவை வேண்டாம்.

    சாஸ்திரப்படி சிரார்த்த காரியங்கள் செய்பவர் திருமணம் உள்ளிட்ட விழாக்களிலும் மற்றவர் வீடுகளில் உணவு உண்ணக் கூடாது. தர்ப்பணம் செய்யும் நபர் தர்ப்பணம் செய்யும் முன்பாக அந்த மாதத்தில் மற்ற இடங்களில் நடைபெறும் எந்த ஒரு பூஜைகளிலும் ஹோமங்களிலும், ஆலய நிகழ்சிகளிலும் தனது பெயர் சொல்லி சங்கல்பம் செய்து கொள்ளக்கூடாது.

    பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய நாளன்று, தர்ப்பணம் செய்து முடிக்கும் வரை, வீட்டில் தெய்வ சம்பந்தமான பூஜைகளை நிறுத்தி வைத்து விட்டு தர்ப்பணம் செய்து முடிந்த பின்னர் தினசரி செய்ய வேண்டிய தெய்வ சம்பந்தமான பூஜைகளை செய்ய வேண்டும்.

    சிரார்த்த உணவு சென்றடையுமா?

    ஒரே நாளில் ஏராளமான பித்ருகளுக்கு தனித்தனியாக பல பேர் சிராத்தம் செய்யும் போது சிரார்த்த உணவு அவரவர்களின் பித்ருகளுக்கு எவ்வாறு சரியான முறையில் சென்றடைகிறது என்ற சந்தேகம் சிலருக்கு ஏற்படும். இதை கருத்தில் கொண்டுதான் மறைந்த முன்னோர்களின் கோத்ரத்தையும் பெயரையும் தர்ப்பணம் செய்யும் போது சொல்கிறார்கள். இதனால் ஒருவர் கொடுக்கும் தர்ப்பணம் அவரவர்களுக்கு சரியாக சென்றடையும்.

    செய்ய வேண்டிய இடங்கள்:-

    ராமேஸ்வரம், திருவாலங்காடு, கன்னியாகுமரி, திருவெண்காடு ஸ்ரீவாஞ்சியம், திருவள்ளூர், திருமயம் அடுத்து வரும் அரண்மனைப்பட்டி, திருவண்ணாமலை, திருவிடைமருதூர், காசி, கயா, திருநள்ளாறு ஆகிய இடங்ககளில் தர்ப்பணம் செய்வது மிக சிறந்தது.

    பலன்கள்:-


    · மகாளய அமாவாசையில் பித்ருக்களை வழிபடவிட்டால் திருமண தடை, குழந்தை பாக்கியம் இல்லாமை, நோய், வறுமை போன்றவை ஏற்படக்கூடும் என்று கருடபூரணம் கூறியுள்ளது.

    · தற்கொலை செய்பவர்களின் ஆத்மாக்கள் அவதிப்பட்டுக் கொண்டுருக்கலாம். அவர்களுக்குரிய தர்ப்பணம் செய்யும் போது அந்த ஆத்மாக்கள் விஷ்ணுவின் ஆசியை பெற வழிவகை ஏற்படும்.

    · துவாதசி பன்னிரண்டாம் நாளன்று பித்ரு பூஜை செய்பவன் சொர்ண லாபம் பெறுவான் என நம்பப்படுகிறது.

    · மகாளாய அமாவாசை தினத்தன்று பசுவுக்கு கீரை கொடுத்தால், அது மறைந்த உங்கள் தாத்தாவுக்கு தாத்தாவுக்கும் போய் உரிய பலன்களை கொடுக்கும்.

    · பசு மாடுகள் கட்டப்பட்ட தொழுவத்தில் இருந்தபடி சிரார்த்தம் செய்வது அளவற்ற பலன்களை தரும்.

    · மகாளாய பட்சத்தின் 15 நாட்களும் அன்னதானம், புதிய உடை தானம் செய்வது மிக, மிக நல்லது.
    இறைவழிபாட்டின் மூலம் கிடைக்கும் வரங்களை, பித்ரு சாபம் தடுக்கும் வல்லமையுடையது. ஆனால் நமது முன்னோர்கள் ஒரு போதும் நம்மைச் சபிக்க மாட்டார்கள்.
    சூரியன் கன்னி ராசிக்குள் செல்லும்போது, அதாவது புரட்டாசி மாதம், எமதர்மராஜன் பிதுர்க்களை பூமிக்கு அனுப்புவதாக ஐதீகம். அந்த நேரத்தில் நமது முன்னோர்களும் இறந்து போன ரத்தசம்பந்த உறவுகளும் அந்தந்த உறவினரை-குடும்பத்தினரை காண ஆசையுடனும், மகிழ்ச்சியுடனும் நம்மை காணவருவார்கள். அந்த நேரத்தில் அவர்களை நாம் வணங்கினால் மனமகிழ்சியோடு ஆசீர்வாதம் செய்வார்கள்.

    கருடபுராணம், விஷ்ணு புராணம் போன் புராணங்களில், “ ஒருவருக்காவது அன்னதானம் செய்ய வேண்டும், முடியாதவர்கள் காகத்திற்கு அன்னம் வைக்கலாம்,. பசுவுக்கு அகத்திகீரை, பழம் கொடுக்க வேண்டும் என்கிறது.

    பித்ரு லோகத்தில் வசிப்பவர்கள், மாதப்பிறப்பு, அமாவாசை, மஹாளய பட்சம், அவரவர் மறைந்த திதி ஆகிய நாட்களில் மட்டுமே பூலோகப் பிரவேசம் செய்ய இயலும். அதில், மஹாளய பட்சம், ‘பித்ருக்களின் பிரம்மோற்சவம்‘ என்று சிறப்பிக்கப்படுகிறது.

    இந்த 15 நாட்கள் மட்டுமே அவர்கள் தொடர்ச்சியாக பூலோக வாசம் செய்ய இயலும். அவர்கள், இவ்வாறு வாசம் செய்ய பூலோகம் வரும் போது, அவர்களை நினைத்துச் செய்யப்படும் சிரார்த்தம், தர்ப்பணம் முதலியவற்றுக்கு அதிக பலன் உண்டு.

    இந்த பதினைந்து நாட்களும், பித்ரு லோகத்தில் வாசம் செய்யும் முன்னோர்கள், பூமிக்கு வருகை தருகிறார்கள். வாழ்வு முடிந்த பின், 9 நாட்கள், பிரேத சரீரத்துடன் இருக்கும் ஆத்மா, 10-ம் நாள் செய்யப்படும் விசேஷ கர்மாக்களைத் தொடர்ந்து, 12ம் நாள் பிரேத சரீரம் நீங்கப்பெற்று, சூட்சும சரீரத்துடன் பித்ரு லோகத்தை அடைகிறது.

    அங்கிருந்து யமப்பட்டணமாகிய ‘ஸம்யமனீபுரி’யை ஒரு வருட முடிவில் அடைகிறது. அங்கு, அந்த ஆத்மாவின் கர்மாக்களுக்கு ஏற்ப சொர்க்க வாசமோ, நரக வாசமோ கிடைக்கிறது. அதன் பின், மீண்டும் அடுத்த பிறவி எடுக்கவோ, அல்லது தகுந்த காலம் வரும் வரை பித்ரு லோகத்தில் வாசம் செய்யவோ நேரும்.

    நம் முன்னோர்களில், யார் முக்தி அடைந்திருக்கிறார், யார் மறு பிறவி எடுத்திருக்கிறார், யார் பித்ருலோகத்தில் இன்னமும் வாசம் செய்கிறார்கள் என்பதை நாம் அறிய மாட்டோம். ஆகவே, கண்டிப்பாக, பித்ருகர்மாக்களை, முக்கியமாக, மஹாளய சிரார்த்தத்தைச் செய்ய வேண்டும்.

    நமது முன்னோர்கள் யாராவது முக்தி அடைந்திருந்தால், நமது சிரார்த்தத்தின் பலனை அந்த இறைவனே ஏற்று அருள் புரிகிறார். பொதுவாக, நாம் செய்யும் தர்ப்பணம், சிரார்த்தம் முதலியவற்றின் புண்ணிய பலன், சேமித்து வைக்கப்பட்டு, தக்க நேரத்தில் நம்மை வந்தடையும்.

    ஆனால், மஹாளய பட்சத்தில், நமது முன்னோர்களின் ஆத்மாக்கள், ஒன்று சேர்ந்து, நம்மை ஆசீர்வதிக்க வருவதால், அந்த நேரத்தில் செய்யும் சிரார்த்த கர்மாக்களின் பலன்கள், உடனடியாக அவர்களிடம் சேர்ப்பிக்கப்பட்டு, பலனும் உடனடியாக நமக்குக் கிடைத்து, நம் தீராத, நாள்பட்ட பிரச்னைகள் உடனடியாகத் தீர்வுக்கு வருவதை நம் கண்முன் காணலாம். இது மகாளய அமாவாசை வழிபாட்டின் தனிசிறப்பு.

    இந்த மஹாளய பட்சத்தில், ஒருவர், மறைந்த, தம் தாய் தந்தையர், தாத்தா,பாட்டி ஆகியோர்களுக்கு மட்டுமில்லாமல், குழந்தை இன்றி இறந்து போன தம் தாயாதிகளுக்கும் சேர்த்துத் தர்ப்பணம் செய்யலாம். அதன் பலனாக அவர்களின் ஆசிகளையும் பெறலாம். மிகுந்த தெய்வ பக்தி உடையவர்கள், வேதம், தமிழ் மறைகள் ஓதியவர்கள், நீதி நேர்மையுடன் வாழ்ந்தவர்கள், பித்ரு சரீரம் அடையும் போது, மிகுந்த நன்மை செய்பவர்கள் ஆகிறார்கள். அவர்களுடைய சரீரம் ஒளி பொருந்தியது.

    அவர்களுக்குச் செய்ய வேண்டிய சிரார்த்தம், தர்ப்பணம் முதலியவற்றைச் சரியாகச் செய்யும் போது, குடும்பத்தில் இருக்கும் தீராத நோய், கடன், பகை, எதிர்பாராத விபத்துக்கள், குழந்தையின்மை போன்ற பல ப்ரச்னைகள் நீங்குகின்றன. மாறாக, இது தவிர்க்கப்பட்டால், தலைமுறைகள் தாண்டியும் பிரச்சினைகள் தொடரும்.

    இறைவழிபாட்டின் மூலம் கிடைக்கும் வரங்களை, பித்ரு சாபம் தடுக்கும் வல்லமையுடையது. ஆனால் நமது முன்னோர்கள் ஒரு போதும் நம்மைச் சபிக்க மாட்டார்கள். என்றாலும் இப்பூவுலகில், ஒருவர் செய்ய வேண்டிய சிரார்த்தம் தடைபட்டால், அதனால், பித்ருக்களுக்குக் கிடைக்க வேண்டிய உணவு கிடைக்காமல் போகும். அதனால் அவர்கள் அடையும் இன்னலே சாபமாக மாறி நம்மை அடைகிறது.

    மகாளய அமாவாசையான இன்று முழுவதும் உபவாசம் இருந்து முன்னோர்களை நினைத்து வழிபட வேண்டும். இதனால் முன்னோர்களுடைய பரிபூரண ஆசியும், புண்ணியமும் கிடைக்கும்.
    மகாளய அமாவாசையன்று காலையில் எழுந்து வீட்டை சுத்தப்படுத்த வேண்டும். பின்னர் குளித்து முடித்து அருகில் உள்ள கோவில்களில் இருக்கும் நீர்நிலைகளிலோ அல்லது கடற்கரைப் பகுதியிலோ சென்று பிதுர் தர்ப்பணம் செய்ய வேண்டும். அன்று முழுவதும் உபவாசம் இருந்து முன்னோர்களை நினைத்து வழிபட வேண்டும்.

    அவர்களுக்கு பிடித்த உணவு பதார்த்தங்களை நைவேத்தியமாக படைத்து இறைவனை வணங்க வேண்டும். மேலும் அன்றைய தினத்தில் இறை அடியவர்களுக்கு முடிந்தவரை அன்னதானம் வழங்குவது சிறப்பான பலனை தரும். உடல்நிலை சரி இல்லாதவர்கள் தர்ப்பணத்தை இல்லத்தில் வைத்து கொடுக்கலாம். இந்த தர்ப்பணத்தால் பித்ருக்களுக்கு பசியும், தாகமும் தீரும்.

    இந்த நாட்களில் மாட்டு தொழுவத்தில் பித்ருபூஜை செய்தால் வம்சா வழி தோஷம் நீங்கும், ஆயுள்பலம் கூடும். முன்னோர்களுடைய பரிபூரண ஆசியும், புண்ணியமும் கிடைக்கும். பசுவுக்கு அகத்திக்கீரை அளித்தாலும் பலன் உண்டு.

    பித்ருக்கள் மனம் மகிழ்ச்சி அடையும் போது அவர்கள் வழங்கும் ஆசிகள் திருமணத் தடை, குழந்தை இல்லா கவலை, நவக்கிரக தோஷங்கள் ஆகியவற்றை நீக்கி மனஅமைதியையும், நிம்மதியையும் அளிக்கும். தர்ப்பணத்துக்கு பின்னரே வீட்டில் பூஜைகள் செய்ய வேண்டும். நமது பித்ருக்களை திதி நாளில் திருப்திப்படுத்தாத காரணத்தினால் நமக்கு துன்பங்கள் வருகின்றன.

    பித்ருக்களை சாந்தப்படுத்த திலஹோமம் செய்வது அவசியம். ‘மாத்ருதேவோபவ, பித்ருதேவோபவ’ என நம் பெற்றோருக்கு நாம் நன்றிக் கடன்பட்டு இருக்கிறோம். நமக்கு நல்வாழ்வு வழங்கிய பித்ருக்களுக்கு தர்ப்பண பூஜை செய்வது அவசியம்.
    முன்னோர் வழிபாடு செய்யாவிட்டால் உங்களுக்கு கிடைக்க வேண்டிய நல்ல பலன்கள் கிடைக்காமலே போய் விடக்கூடும். ஆகையால் முன்னோர் வழிபாட்டை மறக்காமல், தவறாமல் செய்யுங்கள்.

    மறைந்த முன்னோர்கள் பற்றி மகாளய அமாவாசை, தை அமாவாசை, ஆடி அமாவாசை நாட்களில் மட்டுமே பெரும்பாலானவர்கள் நினைக்கிறார்கள். இந்த நாட்களில் பித்ரு தர்ப்பணம் கொடுத்து விட்டால் போதும் என மன திருப்தி கொள்கிறார்கள்.

    ஆனால் மாதந்தோறும் வரும் ஒவ்வொரு அமாவாசை தினத்தன்றும் முன்னோர் வழிபாடு செய்தால், அதற்குரிய பலன்கள் உங்களுக்கு நிச்சயம் முந்தி வரும். இது பலரும் அனுபவிக்கும் யதார்த்தமான உண்மை.

    இறந்தவர்களின் திதியை தெரிந்து கொண்டு, அந்த கடமையை தவறாமல் செய்து வருபவர்களைப் பாருங்கள், அவர்கள் அனைவரும் வாழ்க்கையில் ஓரளவுக்கு நல்ல நிலையில் இருப்பார்கள். அவர்களுக்கு அவர்களது மறைந்த முன்னோர்களின் ஆசி நிரம்ப கிடைத்து வருவதாக உறுதியாக கருதலாம்.

    ஒவ்வொரு அமாவாசை தினத்தன்றும் விரதம் இருந்து மனம் உருகி பித்ருக்களின் ஆசியை கேட்க வேண்டும். நிச்சயம் பித்ருக்கள் உங்களை வாழ்த்துவார்கள்.

    இதன் மூலம் கிடைக்கும் முதல் பலன் என்ன தெரியுமா? உங்கள் குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் தவழும். உங்களுக்கு வரும் இன்னல்கள் அனைத்தையும் பித்ருக்கள் தடுத்து அருள்வார்கள். உங்கள் முன்னேற்றத்துக்கு தடையாக உள்ள அத்தனை விஷயங்களும் விலகும்.

    நீங்கள் எந்த அளவுக்கு பித்ரு பூஜைகள் செய்கிறீர்களோ..... அந்த அளவுக்கு உங்களுக்கு பலன் கிடைக்கும். பித்ரு வழிபாடு செய்ய, செய்ய செல்வமும் சேரும். வறுமை என்பதே உங்கள் குடும்பத்தினருக்கு வராது.

    நோய்களை தடுத்து காக்கும் சக்தியும் பித்ருக்களுக்கு உள்ளது. அந்த வகையில் நமக்கு சிறு பாதிப்பு என்றாலும் முதலில் ஓடி வருவது பித்ருக்கள்தான்.

    சிலர் குல தெய்வ வழிபாட்டுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பித்ருக்கள் வழிபாட்டுக்கு கொடுப்பது இல்லை. குல தெய்வ வழிபாட்டுக்கு முன்பு செய்ய வேண்டியது பித்ருக்கள் வழிபாடுதான் என்பதை மறந்து விடக்கூடாது.

    பித்ருக்களை உரிய ஐதீகப்படி வழிபட்டால் உங்களின் இந்த பிறவியில் உள்ள தோஷங்கள், பாவங்கள் எல்லாம் விலகும். இதனால் உங்கள் ஆத்மா சுத்தமாகி புனிதம் பெறும். இந்த புனிதம் அதிகரித்தால்தான் நீங்கள் முக்தி பாதைக்கு செல்ல முடியும்.

    எனவே முன்னோர் வழிபாடு செய்யாவிட்டால் உங்களுக்கு கிடைக்க வேண்டிய நல்ல பலன்கள் கிடைக்காமலே போய் விடக்கூடும். ஆகையால் முன்னோர் வழிபாட்டை மறக்காமல், தவறாமல் செய்யுங்கள்.
    ஒவ்வொரு இந்துவின் திருமணச் சடங்கிலும் ஸ்ரீகருடனுக்கு மிகச் சிறப்பான ஒரு இடம் உண்டு. அதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
    ஒவ்வொரு இந்துவின் திருமணச் சடங்கிலும் ஸ்ரீகருடனுக்கு மிகச் சிறப்பான ஒரு இடம் உண்டு. திருமாங்கல்ய தாரணம் என்னும் தாலி அணிவிக்கும் நிகழ்ச்சியின்போது, நாதஸ்வரக் கலைஞர்கள் கருடத்வனி என்னும் ராகத்திலேயே இசைக்கின்றனர்.

    இந்த கருடத்வனியானது வேதத்திற்கு ஒப்பாகும் என்று ஏற்கனவே அறிந்துள்ளோம். வேத மந்திரங்களைக் கூறி நடைபெறும் திருமணத்தில், வேத மந்திரங்களை ஒலிக்கும் போது ஏதாவது தோஷம் ஏற்பட்டாலும் கூட, இந்த கருடத்வனி அதனை நீக்கி விடுகிறது.

    மேலும் திருமணத்தின் முக்கிய அங்கமான திருமாங்கல் யம் என்னும் தாலியைச் செய்யக் கொடுக்கும்போது கருடனின் நட்சத்திரமான சுவாதியில் கொடுப்பது மிகவும் விசேஷமாகும். அல்லது திருமாங்கல்யத்தை வாங்கும்போதாவது சுவாதி நட்சத்திரத்தில் வாங்குவது நல்லது என்பது ஆன்றோர் வாக்கு.
    திருப்பரங்குன்றத்தில் மலைமேல் குமரருக்கு வேல் எடுக்கும் திருவிழா விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    திருப்பரங்குன்றம் மலை உச்சியில் காசி விசுவநாதர் கோவில் வளாகத்தில் காசிக்கு நிகரான என்றென்றும் வற்றாத கங்கை தீர்த்தக்குளம் (சுனை) உள்ளது. இதை தெய்வீக புலவர் நக்கீரரின் பாவ விமோசனத்திற்காக முருகப்பெருமான் தன் திருக்கரத்தில் உள்ள வேல் கொண்டு பாறை பிளந்து உருவாக்கியதாக புராணம் கூறுகிறது.

    இத்தகைய வேலின் மகிமையை நினைவூட்டும் வகையில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் ஒரு வெள்ளிக்கிழமை அன்று திருப்பரங்குன்றம் முருகன் கோவிலின் கருவறையில் இருந்து மலை உச்சியில் உள்ள மலைமேல் குமரருக்கு வேல் எடுக்கும் திருவிழா புராண வரலாறு தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது. அதேபோல் இந்த ஆண்டிற்கான வேல் எடுக்கும் திருவிழா நேற்று விமரிசையாக நடைபெற்றது.

    திருவிழாவையொட்டி திருப்பரங்குன்றம் கோவிலின் கருவறையில் முருகப்பெருமானின் திருக்கரத்தில் உள்ள தங்கவேல் மேளதாளங்கள் முழங்க எடுத்து வரப்பட்டது. பின்னர் கம்பத்தடி மண்டபத்தில் தயாராக இருந்த பல்லக்கில் வேல் வைக்கப்பட்டது. இதனையடுத்து கோவிலில் இருந்து பல்லக்கில் இருந்தபடியே வேல் எடுத்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக மலையில் உள்ள மலைமேல் குமரர் சன்னதிக்கு கொண்டு செல்லப்பட்டது.

    அங்கு காசிக்கு நிகரான கங்கை தீர்த்தக்குளத்தில் தங்கவேலுக்கு புனித தீர்த்த மகா அபிஷேகம் நடந்தது. மேலும் வேலுக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வகையான திரவியங்கள் கொண்டு மகா அபிஷேகம் நடந்தது. அப்போது திருவிழாவில் கலந்துகொண்ட பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர். இதனையடுத்து மலைமேல் குமரருக்கு சிறப்பு அபிஷேகமும், மகாதீப, தூப ஆராதனையும் நடந்தது.

    இதனைத்தொடர்ந்து மலையை விட்டு வேல் எடுத்து வரப்பட்டு மலை அடிவாரத்தில் உள்ள பழனியாண்டவர் சன்னதியில் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பிறகு பூப்பல்லக்கில் வேல் எடுத்து நகர் வலம் வந்து கோவிலுக்குள் கொண்டு செல்லப்பட்டது.

    திருப்பரங்குன்றத்தில் 7 கண்மாய் விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் சார்பில் ஆண்டுதோறும் வேல் எடுக்கும் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் மலையிலேயே காய்கனிகளுடன் சாதம் படைத்து, அதில் குழம்பை சேர்த்து கதம்ப சாதம்(கூட்டாஞ் சோறு) தயார் செய்தனர். பின்னா அதை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கினர்.

    திருப்பரங்குன்றம் கோவிலின் கருவறையானது மலையை குடைந்து அமைந்துள்ளது. எனவே இங்கு சாமிக்கு அபிஷேகம் கிடையாது. அதே சமயம் சாமியின் திருக்கரத்தில் உள்ள வேலுக்கு அபிஷேகம் நடந்து வருகிறது. இதன்மூலம் இங்கு வேல் மகிமை பெறுகிறது. நேற்று மலைக்கு வேல் சென்றதால் கோவிலுக்குள் எந்த அபிஷேகமும் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
    கருடனை வணங்கினால் பகவானை வணங்கிய பலன் உண்டு. கருட பகவானை பற்றிய அரிய தகவல்களை அறிந்து கொள்ளலாம்.
    கருடனின் பராக்கிரமம்

    கருடன் தன் தாயின் ஆணைப்படி தேவலோகத்தில் இருந்து அமிர்த கலசத்தைக் கொண்டு வரும் போது தேவேந்திரன், மகாவிஷ்ணு ஆகிய தேவர்கள், தெய்வம் ஆகியோர்களைப் போரிட்டு வென்று வெற்றி பெற்று அமிர்த கலசத்தை கொண்டு வந்தார். மேலும் ஒரு நிகழ்வில் பலாசுரன் என்ற அசுரனையும் விழுங்கிக் கொன்று துப்பினார். எனவே கருடன் தெய்வம் தேவர், அசுரர், நரர், மிருகாதிபட்சிகள் போன்ற அனைத்தையும் வென்று வீழ்த்தும் பலம், பராக்கிரமம் கொண்டவர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

    எனவேதான் “கருட தரிசனம் சத்ரு விநாசம்” என்று கருதப்படுகிறது. எப்பேர்பட்ட சத்ரு தொல்லைகளையும் கருட தரிசனம் நாசம் செய்துவிடும் என்பதற்கு கருடனின் மேற்கண்ட தேவ, அசுர, தெய்வப் போரிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

    அபூர்வ சக்திகள்

    பத்ம புராணப்படி கருடனுக்கு கீழ்க்கண்ட அபூர்வ சக்திகள் உண்டு.

    1. பிறரை வசியம் செய்வது, 2. பகைவர்களை அடக்குவது, 3. உணர்வை வற்ற வைப்பது, 4. மயங்க வைத்தல், 5. வானத்தில் உலாவுவது, 6. காற்று, நீர், நெருப்புகளில் அச்சமின்றிபுகுவது, 7. இந்திரஜாலம் காட்டுவது, 8. படிப்பில் தேர்ச்சி, நல்ல ஞாபகசக்தி, 9. வாதத்திலும், போரிலும் வெற்றி பெறுதல்.

    தசா புத்தியில் கருட வழிபாடு

    ஒவ்வொருவருக்கும் எந்த தசா புத்தி நடப்பில் இருக்கிறதோ அந்த திசைக்குரிய அல்லது அந்த புத்திக்குரிய கிழமைகளில் ஸ்ரீ கருட பகவானுக்கு துளசி மாலை அணிவித்து, நெய் தீபம் ஏற்றி, அமுத கலசம் என்னும் இனிப்பை படைத்து வழிபட்டு வந்தால் தசா புத்தியால் ஏற்படும் இன்னல்கள் உடனே நீங்கும்.

    கருடா சவுக்கியமா?

    பெருமாள் கருடனுக்கு அபயம் அளித்த தலம் “திருச்சிறு புலியூர்” என்ற தலமாகும். இது மாயவரம் அருகில் உள்ள கொல்லுமாங்குடி என்ற ஊரின் அருகாமையில் உள்ளது. இங்கு பூமிக்குக் கீழ் கருடன் சன்னதியும், பூமிக்கு மிக உயர்ந்த இடத்தில் ஆதிசேஷன் சந்நதியும் இருக்கிறது.
    “கருடா சவுக்கியமா” என்று பாம்பு கேட்டதற்கு “அவரவர்கள் இருக்க வேண்டிய இடத்தில் இருந்தால் எல்லாம் சவுக்கியமே” என்று கருடன் சொன்னதாக புராணங்களில் உள்ளது. இந்த நிகழ்வு நடந்தது இந்த தலத்தில்தான்.

    கருட பத்து

    கருடன் மீது அன்புடனே ஏறி வந்து அருள் செய்யும் ஸ்ரீமந்நாராயணனை துதி செய்யும் “கருட பத்து” என்று பத்து துதி பாடல்கள் உள்ளன. இதனை பாராயணம் செய்வதால் ஸ்ரீமந் நாராயணனின் அருளும், கருட தரிசனமும் கிடைக்கும். சகல நன்மைகளும் உண்டாகும்.

    தர்ப்பை ரகசியம்

    கருடன் தேவலோகத்தில் இருந்து அமிர்த கலசத்தை எடுத்துக் கொண்டு வரும் போது கலசத்தில் ஒட்டிக் கொண்டு வந்த “அமிர்த வீரியம்“ என்பதுதான் தர்ப்பை ஆகும். இது ஒரு தேவலோகப் புல்லாகும். பூலோகத்தில் தர்ப்பை எனப்படுகிறது.

    கருட பகவானின் அங்க லட்சணங்கள்

    இரண்டு கரங்கள் - நான்கு கரங்களும் உண்டு. அருள் ததும்பும் முகம், கவலைக்குறியே இல்லாதவர், தனது இரண்டு இறக்கைகளை விரித்து மண்டலமிட்டு வானத்தில் பறப்பவர், சிறகுகளை விட உடல் பருத்திருக்கும், குண்டலங்களைக் காதுகளில் அணிந்தவர், வளைந்த புருவங்கள், உருண்டை கண்கள், நீண்ட மூக்கு, வெளுப்பான முகம் உடையவர். மூன்று கிளைகளாகப் பிரிந்திருக்கும் ஸ்ரீகருடனுடைய இறக்கைகள், மூன்று வேதங்களாகக் கருதப்படுகின்றன.

    கருடனின் நித்திய வாசஸ்தலம் திருப்பாற் கடலாகும். அவர் சூரிய மண்டலத்திலும், ஞானிகளின் உள்ளங்களிலும் இருப்பவர். பாமர மக்களைக் காப்பதில் திருமாலைப் போன்றவர். அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று புருஷார்த்தங்களை நாடுபவர்களுக்கு ஸ்ரீகருடன் அவற்றைத் தந்து அருள் புரிகிறார்.

    கருடன் வட்டமிடுதல்


    பறவைகளுக்கு ராஜாவான பட்சிராஜன், கருடன் எப்போதும் பறக்கும் போது இறக்கை அசைக்காமல் பறக்கும். ஆகாயத்தில் அழகாய் கருடன் வட்டமிடும் கண்கொள்ளா காட்சியை காண்பதற்கு மிகவும் ரம்மியமாக இருக்கும். நாம் ஒரு காரியம் உத்தேசித்து, போகும் போது கருடன் வட்டமிடும் தரிசனம் கிடைத்தால் வெற்றி கிட்டும், கருடன் வட்டமிடு வதைவிட ஒரு உயர்ந்த சுப சகுணம் வேறெதுவும் இல்லை அரசயோகமே கிட்டுவதற்கு ஈடான பலனைத் தரும்.

    கோவில் கொடியேற்றத்தில் கருடன்

    நம் நாட்டில் உள்ள மிகப்பெரிய கோவில்களில் நடைபெறும் பிரம்மோற்சவத்தின்போது, அக்கோவிலின் கொடி மரத்தில் வேத மந்திரங்களோடு கொடியை ஏற்றுவது வழக்கம். அந்த கொடியில் ஸ்ரீகருடனின் திருஉருவமே எழுதப்பட்டிருக்கும். அந்தக் கொடியையே மிகவும் பவித்ரமாக உயரே ஏற்றி வழிபடுகிறோம். இதற்கும் காரணம், கருடன் வேத வடிவானவன் என்பதால், இங்கு வேதத்திற்கே முதலிடம் கொடுத்து உயரே வைத்துள்ளனர்.

    கருட மனையில் வீடுகட்டுங்கள்

    மனை அமைப்புகளைக் கொண்டு வாஸ்துவில், சிங்க மனை, யானை மனை, கருடமனை எனப் பலவகை உள்ளன. இதில் கருடமனை அமைப்பில் வீடு கட்டினால் அந்த வீட்டிற்கு விஷஜந்துக்கள், சத்துருக்களால் எப்போதும் பாதிப்பு ஏற்படாது. கருடனின் அருட்கடாட்சம் எப்போதும் இருக்கும். வீடுகட்ட தொடங்கும்போது கருடன் தரிசனம் கொடுப்பதும், கருடன் வட்டமிடுவதுமான சகுணம் கண்டால் அந்த வீடு நல்ல முறையில் எளிதாகக்கட்டி முடித்து, கிரக பிரவேசம் செய்யப்படும். மேலும் அந்த வீட்டில் எப்போதும் சுபங்களே நடக்கும். நல்ல வெற்றி, முன்னேற்றம் உண்டாகும்.
    திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா வருகிற 10-ந்தேதி (புதன்கிழமை) விழா தொடங்கி 19-ந்தேதி (வெள்ளிக்கிழமை) வரை நடக்கிறது.
    திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர். மேலும் இக்கோவிலில் கார்த்திகை மாதத்தில் வரும் தீபத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். அதுமட்டுமின்றி பல்வேறு பிரம்மோற்சவ விழா நிகழ்ச்சிகளும் நடைபெறும்.

    இக்கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு வருகிற 10-ந் தேதி (புதன்கிழமை) விழா தொடங்கி 19-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வரை நடக்கிறது.

    விழா நாட்களில் தினமும் மாலையில் திருக்கல்யாண மண்டபத்தில் பராசக்தி அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட உள்ளது.

    10-ந் தேதி பராசக்தி அம்மன் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து புறப்பட்டு வாண வேடிக்கைகளுடன் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது. 11-ந் தேதி அம்மனுக்கு ராஜராஜேஸ்வரி அலங்காரமும், 12-ந் தேதி கெஜலட்சுமி அலங்காரமும், 13-ந் தேதி மனோன்மணி அலங்காரமும், 14-ந் தேதி ரிஷப வாகனத்தில் அலங்காரமும், பஞ்சமூர்த்திகள் அபிஷேகமும் நடக்கிறது.

    15-ந் தேதி ஆண்டாள் அலங்காரமும், 16-ந் தேதி சரஸ்வதி அலங்காரமும், 17-ந் தேதி லிங்க பூஜை அலங்காரமும், 18-ந் தேதி மகிஷோசூரமர்த்தினி அலங்காரமும் செய்யப்பட உள்ளது. மேலும் அன்று சரஸ்வதி பூஜையும், உண்ணாமலை அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரமும் நடக்கிறது.

    19-ந் தேதி விஜயதசமியன்று காலையில் திருக்கல்யாண மண்டபத்தில் பராசக்தி அம்மனுக்கு அபிஷேகமும், பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேகமும் நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ஞானசேகர் மற்றும் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா வருகிற 10-ந்தேதி முதல் தொடங்கி 9 நாட்கள் நடைபெறுகிறது.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான நவராத்திரி பிரம்மோற்சவ விழா வருகிற 10-ந்தேதி (புதன்கிழமை) முதல் 18-ந்தேதி (வியாழக்கிழமை) வரை நடக்கிறது.

    9 நாட்கள் நடைபெறும் இந்த நவராத்திரி விழாவில் உற்சவரான மலையப்பசாமி காலை, இரவு என இருவேளைகளில் திருமலையில் உள்ள 4 மாடவீதிகளில் உலா வருகிறார். விழா நடைபெறும் நாட்களில் ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

    9-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு 7 மணி முதல் 8 மணிவரை அங்குரார்ப்பணம் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து 10-ந்தேதி மாலை 6 மணிக்கு ஊஞ்சல் சேவையும். இரவு 8 மணி முதல் 10 மணிவரை பெரிய சேஷ வாகனத்தில் உற்சவரான மலையப்பசாமி ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    11-ந்தேதி காலை 9 மணி முதல் 11 மணி வரை சின்னசேஷ வாகனத்திலும், இரவு 8 மணி முதல் 10 மணிவரை ஹம்ச வாகனத்திலும், 12-ந்தேதி காலை 9 மணியில் இருந்து 11 மணி வரை சிம்ம வாகனத்திலும், இரவு 8 மணி முதல் 10 மணிவரை முத்துப்பந்தல் வாகனத்திலும் மலையப்பசாமி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் வீதி உலா வருகிறார்.

    தொடர்ந்து 13-ந்தேதி காலை 9 மணி முதல் 11 மணி வரை கல்பவிருட்ச வாகனத்திலும், இரவு 8 மணி முதல் 10 மணி வரை சர்வபூபால வாகனத்திலும், 14-ந்தேதி காலை 9 மணி முதல் 11 மணிவரை பல்லக்கு வாகனத்திலும் மோகினி அலங்காரத்தில் வீதி உலா நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான கருட சேவை இரவு 7 மணி முதல் 12 மணிவரை நடக்கிறது. இதில் கருட வாகனத்திலும் மலையப்ப சாமி 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    15-ந்தேதி காலை 9 மணி முதல் 11 மணி வரை உற்சவரான மலையப்பசாமி அனுமந்த வாகனத்திலும், இரவு 8 மணி முதல் 10 மணிவரை கஜவாகனத்திலும், 16-ந்தேதி காலை 9 மணி முதல் 11 மணிவரை சூரியபிரபை வாகனத்திலும், இரவு 8 மணி முதல் 10 மணிவரை சந்திரபிரபை வாகனத்திலும் மலையப்பசாமி மாடவீதியில் வீதிஉலா நடக்கிறது.

    7-ந்தேதி காலை 7 மணி முதல் 9 மணி வரை தங்க தேரோட்டம் நடக்கிறது. இரவு 8 மணி முதல் 10 மணிவரை குதிரை வாகனத்தில் மலையப்பசாமி வீதிஉலா வருகிறார்.

    18-ந்தேதி காலை 6 மணி முதல் 9 மணி வரை சக்கரஸ்நானம் நிகழ்ச்சியும், இரவு 7 மணிக்கு கொடியிறக்கம் நிகழ்ச்சியுடன் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.

    பிரம்மோற்சவ விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திருமலை- திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    கோவில்களிலும், வீடுகளிலும் நாம் அகல் விளக்கு வைத்து வழிபடுகிறோம். அந்த அகல்விளக்கில் நவக்கிரகங்களும் வீற்றிருக்கின்றன. அது எப்படி? அறிந்து கொள்வோம்.
    கோவில்களிலும், வீடுகளிலும் நாம் அகல் விளக்கு வைத்து வழிபடுகிறோம். அந்த அகல்விளக்கில் நவக்கிரகங்களும் வீற்றிருக்கின்றன. அது எப்படி? அறிந்து கொள்வோம்.

    அகல் விளக்கு - சூரியன்

    நெய்/எண்ணெய் - சந்திரன்

    திரி - புதன்

    எரியும் ஜூவாலை - செவ்வாய்

    கீழே விழும் ஜூவாலையின் நிழல் - ராகு

    ஜூவாலையில் உள்ள மஞ்சள் நிறம் - குரு

    ஜூவாலையால் பரவும் வெளிச்சம் - கேது

    திரி எரிய எரிய குறைந்துகொண்டே வருவது - சுக்ரன்

    தீபம் அணைந்ததும் அடியில் இருக்கும் கரி - சனி

    இதில் சுக்ரன், ஆசையை குறிப்பதாகும். ஆசையை குறைத்துக் கொண்டால், இன்பம் வந்து சேரும். ஆசை தான் நம்மை அழிக்கிறது. அந்த ஆசை தான் முக்தி கிடைக்கவிடாமல் நம்மை மீண்டும் மீண்டும் பிறவி எடுக்கச் செய்கிறது. இதுவே அகல் தீபம் நமக்கு உணர்த்தும் தத்துவம். 
    ×