search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95492"

    மனித வாழ்வில் நவக்கிரகங்களின் செயல்பாடு முக்கியமானது என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. அப்படிப்பட்ட நவக்கிரகங்களுக்குரிய அம்சங்கள் குறித்து இங்கே பார்க்கலாம்.
    மனித வாழ்வில் நவக்கிரகங்களின் செயல்பாடு முக்கியமானது என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. அப்படிப்பட்ட நவக்கிரகங்களுக்குரிய அம்சங்கள் குறித்து இங்கே பார்க்கலாம்.

    சூரியன்

    இவர் காசியப முனிவரின் குமாரர் ஆவார். ஒளிப்பிழம்பானவர். நவக்கிரகங்களில் முதன்மை ஸ்தானம் பெற்றவர். சிம்ம ராசிக்கு அதிபதியான இவர், நவக்கிரகங்களில் நடுவில் அமர்ந்திருப்பார்.

    திக்கு - கிழக்கு
    அதிதேவதை - அக்னி
    ப்ரத்யதி தேவதை - ருத்திரன்
    தலம் - சூரியனார் கோவில்
    நிறம் - சிவப்பு
    வாகனம் - ஏழு குதிரைகள் பூட்டிய ரதம்
    தானியம் - கோதுமை
    மலர் - செந்தாமரை, எருக்கு
    வஸ்திரம் - சிவப்பு
    ரத்தினம் - மாணிக்கம்
    அன்னம் - கோதுமை, ரவா,
    சர்க்கரைப் பொங்கல்

    சந்திரன்

    பாற்கடலில் இருந்து தோன்றியவர் இவர். தண்ணொளி உடையவர். வளர்பிறையில் சுபராகவும், தேய்பிறையில் பாபராகவும் விளங்கும் தன்மை கொண்டவர். இவர் கடக ராசிக்கு அதிபதியாவார்.

    திக்கு - தென்கிழக்கு
    அதிதேவதை - ஜலம்
    ப்ரத்யதி தேவதை - கவுரி
    தலம் - திருப்பதி
    நிறம் - வெள்ளை
    வாகனம் - வெள்ளைக் குதிரை
    தானியம் - நெல்
    மலர் - வெள்ளை அரளி
    வஸ்திரம் - வெள்ளாடை
    ரத்தினம் - முத்து
    அன்னம் - தயிர் சாதம்

    அங்காரகன் (செவ்வாய்)

    இவர் வீரபத்திரரின் அம்சமாக தோன்றியவர். சுப்ரமணியரை தெய்வமாகக் கொண்ட இவர், பாவ பலனைக் கொடுக்கும் குரூரர். மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளுக்கு அதிபதியானவர்.

    திக்கு - தெற்கு
    அதிதேவதை - நிலமகள்
    ப்ரத்யதி தேவதை - ஷேத்திரபாலகர்
    தலம் - வைத்தீஸ்வரன் கோவில்
    நிறம் - சிவப்பு
    வாகனம் - ஆட்டுக்கிடா
    தானியம் - துவரை
    மலர் - செண்பகப்பூ,சிவப்பு அரளி
    வஸ்திரம் - சிவப்பு ஆடை
    ரத்தினம் - பவளம்
    அன்னம் - துவரம் பருப்பு பொடி சாதம்

    புதன்

    இவர் நவக்கிரகங்களில் ஒருவரான சந்திரனின் குமாரர் ஆவார். தீய கிரகங்கள் விளைவிக்கும் பீடைகளை அழிக்கும் ஆற்றல் இவருக்கு உண்டு. இவர் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளுக்கு அதிபதியாக விளங்குபவர்.

    திக்கு - வடகிழக்கு
    அதிதேவதை - விஷ்ணு
    ப்ரத்யதி தேவதை - நாராயணன்
    தலம் - மதுரை
    நிறம் - வெளிர் பச்சை
    வாகனம் - குதிரை
    தானியம் - பச்சைப் பயறு
    மலர் - வெண்காந்தள்
    வஸ்திரம் - வெண்ணிற ஆடை
    ரத்தினம் - மரகதம்
    அன்னம் - பாசிப்பருப்பு பொடி சாதம்



    குரு

    தேவலோகத்தின் தலைவனான இந்திரன் முதலான அனைத்து தேவர்களுக்கும் குருவாக விளங்குபவர். இதனால் ‘தேவ குரு’ என்னும் பட்டத்தைப் பெற்றவர். இவருடைய பார்வையால், தோஷங்கள் அனைத்தும் நீங்கும். இவர் ஒரு பூரண சுப தன்மைக் கொண்டவர். தனுசு மற்றும் மீன ராசிகளுக்கு அதிபதியாக விளங்குபவர்.

    திக்கு - வடக்கு
    அதிதேவதை - பிரம்மா
    ப்ரத்யதி தேவதை - இந்திரன்
    தலம் - திருச்செந்தூர்
    நிறம் - மஞ்சள்
    வாகனம் - மீனம்
    தானியம் - கடலை
    வஸ்திரம் - மஞ்சள் நிற ஆடை
    ரத்தினம் - புஷ்பராகம்
    அன்னம் - கடலைப் பொடி சாதம், சுண்டல்

    சுக்ரன்

    இவர் அசுரர்களுக்கு குருவாக விளங்குபவர். இவரை ‘மழைக்கோள்’ என்றும் அழைப்பர். குரு கிரகத்தைப் போல இவருக்கு சுப கிரகமாக விளங்குபவர். இவர் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளுக்கு அதிபதி ஆவார்.

    திக்கு - கிழக்கு
    அதிதேவதை - இந்திராணி
    ப்ரத்யதி தேவதை - இந்திர மருத்துவன்
    தலம் - ஸ்ரீரங்கம்
    வாகனம் - முதலை
    தானியம் - மொச்சை
    மலர் - வெண் தாமரை
    வஸ்திரம் - வெள்ளாடை
    ரத்தினம் - வைரம்
    அன்னம் - மொச்சைப் பொடி சாதம்

    சனி

    நவக்கிரகங்களில் முதன்மையானவரான சூரியனின் மகன் இவர். பாவ- புண்ணிய பலன் தருவதில் ஈஸ்வர பட்டம் பெற்றவர். ‘சனியைப் போல கெடுப்பாரும் இல்லை, கொடுப்பாரும் இல்லை’ என்பது பழமொழியாகும். இவர் மகரம் மற்றும் கும்ப ராசிகளுக்கு அதிபதி.

    திக்கு - மேற்கு
    அதிதேவதை - எமன்
    ப்ரத்யதி தேவதை - பிரஜாபதி
    தலம் - திருநள்ளாறு
    நிறம் - கருமை
    வாகனம் - காகம்
    தானியம் - எள்
    மலர் - கருங்குவளை, வன்னி
    வஸ்திரம் - கருப்பு நிற ஆடை
    ரத்தினம் - நீலம்
    அன்னம் - எள்ளுப்பொடி சாதம்

    ராகு

    இவர் அசுரத் தலையும், நாக உடலும் பெற்றவர். மிகுந்த வீரம் கொண்டவர். ‘கருநாகம்’ என்று அழைக்கப்படுபவர். இவர் ஒரு நிழல் கிரகமாவார். இவர் எந்த ராசிக்கும் அதிபதி அல்ல.

    திக்கு - தென் மேற்கு
    அதிதேவதை - பசு
    ப்ரத்யதி தேவதை - பாம்பு
    தலம் - காளத்தி
    நிறம் - கருமை
    வாகனம் - நீல சிம்மம்
    தானியம் - உளுந்து
    மலர் - மந்தாரை
    வஸ்திரம் - கருப்பு நிற ஆடை
    ரத்தினம் - கோமேதகம்
    அன்னம் - உளுத்தம் பருப்புப்பொடி சாதம்

    கேது


    இவர் நாக தலையும், அசுர உடலும் கொண்டவர். ‘செந்நாகம்’ என்று அழைக்கப்படுபவர். இவரது ராகுவைப் போலவே நிழல் கிரகம் ஆவார். இவரும் எந்த ராசிக்கும் அதிபதியாக இல்லை.

    திக்கு - வட மேற்கு
    அதிதேவதை - சித்திரகுப்தன்
    ப்ரத்யதி தேவதை - பிரமன்
    தலம் - காளத்தி
    நிறம் - செம்மை
    வாகனம் - கழுகு
    தானியம் - கொள்ளு
    மலர் - செவ்வல்லி
    வஸ்திரம் - பல நிற ஆடை
    ரத்தினம் - வைடூரியம்
    அன்னம் - கொள்ளுப்பொடி சாதம் 
    விநாயகர் ஜாதகத்தை பூஜை அறையில் வைத்து வழிபட்டால் எண்ணற்ற பலன்கள் கிடைக்கின்றன என்பது நம் முன்னோர்கள் கண்டறிந்த உண்மை.
    விநாயகர் ஜாதகத்தை பூஜை அறையில் வைத்து வழிபட்டால் எண்ணற்ற பலன்கள் கிடைக்கின்றன என்பது நம் முன்னோர்கள் கண்டறிந்த உண்மை. விநாயகர் ஜாதகத்தை அச்சிட்டோ, வரைந்தோ அதன் கீழ் விநாயகருக்குரிய பாடலை எழுதி, பூஜை அறையில் வைத்து கோலமிட்டு வழிபட உள்ளம் மகிழும் சம்பவங்கள் தினமும் நடைபெறும்.

    இந்த ஜாதகத்தை வியாபார இடத்தில் வைத்தால் வியாபார விருத்தி ஏற்படும். சூரியனை வெற்றியிலும், சந்திரனை நாபிக் கமலத்திலும், செவ்வாயை வலது தொடையிலும், புதனை வலது கீழ்க் கையிலும், வியாழனை தலையிலும், வெள்ளியை இடது கீழ்க் கையிலும், சனியை வலது மேல் கையிலும், ராகுவை இடது மேல் கையிலும், கேதுவை இடது தொடையிலும் கொண்டு விநாயகர் காட்சியளிக்கிறார். இத்தகைய நவகிரக விநாயகரை மனமார நினைத்து வழிபடுபவர்களுக்கு, நவகிரகங்களினால் ஏற்படும் பாதிப்புகள் வராது.

    அவரவர் பிறந்த நட்சத்திர தினத்தன்று விநாயகருக்கு செய்ய வேண்டிய அலங்காரங்களையும், வழிபாடு செய்ய வேண்டிய முறையை பற்றியும் அறிந்து கொள்ளலாம்.
    அவரவர் பிறந்த நட்சத்திர தினத்தன்று விநாயகருக்கு செய்ய வேண்டிய அலங்காரங்கள்:-

    அஸ்வினி: வெள்ளிக்கவசம், தங்கக் கிரீடத்தால் அலங்கரித்து அருகம்புல் மாலை சாற்றலாம்.
    பரணி: சந்தன அலங்காரம் செய்வித்து, தங்கக் கிரீடம் சார்த்தலாம்.
    கிருத்திகை: வெள்ளிக்கவசம், தங்கக் கிரீடத்தால் அலங்காரம் செய்விக்கலாம்.
    ரோகினி: சந்தன அலங்காரத்தால் அலங்கரித்து, அருகம்புல் மாலை அணிவிக்கலாம்.

    மிருகசீரிடம்: கஸ்தூரி மஞ்சள் அலங்காரத்தில் அழகுபடுத்தி, அருகம்புல் மாலையைச் சாற்றலாம்.
    திருவாதிரை: தங்கக் கிரீடம் அணிவித்து, அருகம்புல் மாலையால் அலங்கரிக்கலாம்.
    புனர்பூசம்: சந்தன அலங்காரத்துடன் அருகம்புல் மாலையும் சாற்றலாம்.
    பூசம்: தங்கக் கிரீடத்தால் அழகுபடுத்தி, அருகம்புல் மாலையை அணிவிக்கலாம்.

    ஆயில்யம்: அருகம்புல் மாலை போதும்.
    மகம்: தங்கக் கிரீடம் அணிவித்து, திருநீறு அலங்காரத்தால் அழகு செய்து, அருகம்புல் மாலையை அணிவிக்கவும்.
    பூரம்: கஸ்தூரி மஞ்சளால் அலங்கரித்து, தங்கக் கிரீடம் சார்த்தவும்.
    உத்திரம்: அழகு தரும் திருநீறு அலங்காரம் செய்வித்து, அருகம்புல் மாலை சாற்றவும்.

    ஹஸ்தம்: குளிர்வூட்டும் சந்தன அலங்காரத்தால் அலங்கரித்து, அருகம்புல் மாலை சாற்றவும்.
    சித்திரை: வெள்ளிக்கவசம் அணிவித்து, அருகம்புல் மாலையால் அலங்கரிக்கவும்.
    சுவாதி: தங்கக் கிரீடம் அணிவித்து அழகு பார்ப்பதுடன், அருகம்புல் மாலையும் சாற்றலாம்.
    விசாகம்: திருநீறு அலங்காரம் போதும்.

    அனுஷம்: கஸ்தூரி, மஞ்சள் அலங்காரம், தங்கக் கிரீடம், அருகம்புல் மாலை, ரோஜா மாலை சாற்றலாம்.
    கேட்டை : தங்கக்கிரீடத்தால் அழகுபடுத்தி திருநீறு அலங்காரம் செய்வதுடன் அருகம்பு-ல் மாலையும் சாற்றவும்.
    மூலம்: சந்தன அலங்காரமும், அருகம்புல் மாலை சாற்றலுமே போதுமானது.
    பூராடம்: தங்கக்கிரீடம் அணிவித்து, திருநீறு அலங்காரத்தால் அலங்கரித்து, அருகம்புல் மாலை சாற்றுங்கள்.

    உத்திராடம்: அருகம்புல் மாலையே போதும்.
    திருவோணம்: சுவர்ணத்தால் அலங்கரித்து, அருகம்புல் மாலை சார்த்தவும்.
    அவிட்டம்: வெள்ளிக்கவசம் சார்த்தி, மலர் அங்காரம் செய்யலாம்.
    சதயம்: குங்கும அலங்காரத்தால் அலங்கரித்து, வெள்ளிக்கவசம் அணிவியுங்கள்.

    பூரட்டாதி: தங்கக் கிரீடம் அணிவித்து, அருகம்புல் மாலையால் அலங்கரிக்கவும்.
    உத்திரட்டாதி: ரோஜா மாலை அங்காரமே போதும்.
    ரேவதி: மலர்களால் அலங்கரித்து, அருகம்புல் மாலை சாற்றி, வெள்ளிக்கவசம் அணி விக்கவும்.
    நவக்கிரகங்களும் விநாயகரின் உடலில் ஒவ்வொரு பாகத்தில் இடம் பெறறுள்ளனர். விநாயகரை வழிபட்டால் அவர்களையும் வழிபட்டதாகவே பொருள்.
    நவக்கிரகங்களும் விநாயகரின் உடலில் ஒவ்வொரு பாகத்தில் இடம் பெறறுள்ளனர். விநாயகரை வழிபட்டால் அவர்களையும் வழிபட்டதாகவே பொருள். எனவே விநாயகரை வழிபடுபவர்களை நவக்கிகரங்கள் இம்சிப்பதில்லை, மாறாக நன்மையே செய்வார்கள் என்பது ஐதீகம்.

    நெற்றி     - சூரியன்
    நாபி     - சந்திரன்
    வலது தொடை - செவ்வாய்
    இடது தொடை - கேது
    வலது கையின் மேல்    - சனி
    வலது கையின்கீழ்     - புதன்
    இடது கையின் மேல் - ராகு
    இடது கையின் கீழ்    - சுக்கிரன்
    தலையில்     - வியாழன்

    ஆகிய கிரகங்கள் உள்ளதாக விநாயக புராணம் கூறுகின்றது. இந்த அமைப்பில் விநாயகரைக் காண கும்பகோணம் மடத்துத் தெருவில் உள்ள பகவத் விநாயகர் கோவிலுக்குச் செல்ல வேண்டும். இவரை வழிபடுபவதால் நவக்கிரக தோஷங்கள் நீங்கி நல்வாழ்வு பெறலாம்.
    விநாயக புராணத்தில் விநாயகளுக்கு என்னென்ன இலைகளை கொண்டு அர்ச்சனை செய்தால் நமக்குக் கிடைக்கும் பலன்கள் என்னவென்பதை விரிவாகவே கூறியுள்ளார்கள்.
    விநாயக புராணத்தில் விநாயகளுக்கு என்னென்ன இலைகளை கொண்டு அர்ச்சனை செய்தால் நமக்குக் கிடைக்கும் பலன்கள் என்னவென்பதை விரிவாகவே கூறியுள்ளார்கள்.
    மருத இலை - மகப்பேறு
    மருவு இலை - துன்பங்கள் நீங்கி இன்பம் பெருகும்
    எருக்க இலை - குழந்தைப் பேறு
    அரச இலை - எதிரிகள் அழிவார்கள்
    அகத்தி இலை - துயரங்கள் நீங்கும்
    அரளி இலை - அனைவரும் அன்போடு இருப்பார்கள்.
    வில்வ இலை - இன்பங்கள் பெருகும்
    வெள்ளெருக்கு - சகலமும் கிடைக்கும்
    மாதுளை இலை - நல்ல புகழை அடையலாம்
    கண்டங்கத்திரி இலை    - லட்சுமி கடாட்சம்
    விநாயகரை கீழ்க்கண்ட மலர்களைக் கொண்டு பூஜித்தால் நமக்கு அனைத்து விதமான பலன்களும் கிட்டும். எந்த மலர் வழிபாடு என்ன பலனைத்தரும் என்று பார்க்கலாம்.
    விநாயகரை கீழ்க்கண்ட மலர்களைக் கொண்டு பூஜித்தால் நமக்கு அனைத்து விதமான பலன்களும் கிட்டும்.

    1. மல்லிகை, முல்லை - தீயவை நீங்கும்
    2. ரோஜா - எண்ணங்கள் ஈடேறும்
    3. பட்டு ரோஜா - இறையருள் பெறலாம்
    4. அரளிப்பூ - மனநிம்மதி கிடைக்கும்
    5. தாமரைப்பூ - செல்வ வளம் பெருகும்
    6. வெள்ளைத் தாமரை - சகல சக்தி கிடைக்கும்.
    7. வில்வப்பூ - அரச பதவி பெறலாம்
    8. சங்குப் பூ - பெருஞ்செல்வம் கிட்டும்
    9. ஜாதிப்பூ - வைகுண்ட பதவி கிட்டும்
    10. அல்லிப் பூ - வளம் தரும்
    11. விருட்சப் பூ - நோய்கள் நீங்கும்
    12. எருக்கம் பூ - மன தைரியம் பெறலாம்
    13. மகிழம்பூ - பொறுமை தரும்
    14. செவ்வந்திப் பூ - ஆன்மீக உயர்வு பெறலாம்
    15. பவளமல்லிகை - நல்ல எண்ணம் வளரும்
    வெள்ளெருக்கு விநாயகரை வீட்டில் வைத்து வழிபாடு செய்து வந்தால் செல்வம் பெருகும். பீடைகள் அகலும். மகிழ்ச்சியுடன் மன அமைதியும் உண்டாகும்.
    வடக்கு நோக்கி செல்லும் வெள்ளெருக்கு வேரைத் தேர்ந்தெடுத்து சாஸ்திர முறைப்படி மஞ்சள் காப்பு கட்டி, மந்திரம் கூறி, எடுத்து வடித்த விநாயகர் திருவுருவத்துக்கு சக்தி அதிகம்.

    சென்னைக்கு அருகில் உள்ள ஓரகடம் எனும் ஊரில் வெள்ளெருக்கு விநாயகர் கோவில் உள்ளது. கோவில் நிலத்தில் வெள்ளெருக்கஞ் செடிகள் வளர்க்கப்படுகின்றன.

    வீட்டில் வெள்ளெருக்கு விநாயகர் இருப்பது விசேஷமானது. அவருக்கு அபிஷேகம் செய்ய வேண்டியதில்லை. எருக்கம்பூ, அருகம்புல், வன்னியிலை ஆகியவற்றைச் சூடி வழிபடலாம். அத்தர், ஜவ்வாது, புனுகு போன்ற வாசனைப் பொருள்களைச் சாத்தலாம்.

    வெள்ளெருக்கு விநாயகர் எழுந்தருளிய வீட்டில் செல்வம் பெருகும். பீடைகள் அகலும். மகிழ்ச்சியுடன் மன அமைதியும் உண்டாகும்.
    கண்ணன் துளசி மாலை அணிந்திருப்பான். இதற்கு முக்கியமான காரணம் ஒன்று உள்ளது. அந்த காரணம் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
    கண்ணன் துளசி மாலை அணிந்திருப்பான். விஷத்தை முறித்து, உடலுக்கு வெப்பத்தை தரும் சக்தி துளசிக்கு உண்டு. கண்ணன் நாகங்களுடன் விளையாடுபவன். ஐந்து தலை நாகத்தின் மீதேறி நடனம் ஆடியவன். குளிர்ந்த மேனியன். எனவே தான், கண்ணன் துளசிமாலை அணிந்து கொள்வான்.

    வீடுகளின் பின்பக்கத்தில் துளசிமாடம் அமைப்பதும் இதனால்தான். பூச்சிகள் நுழையாமல் தடுக்க, நம் முன்னோர்கள் வீட்டின் பின்புறத்தில் துளசிமாடம் வைத்து, அதனை வழிபட்டார்கள்.
    கண்ணன் வணங்கும் அந்த ஆறு பேரை நாமும் வணங்கினால் வாழ்வில் அனைத்தும் வளமும் பெறலாம். கிருஷ்ண பகவான் சொன்ன அந்த ஆறுவகையான மக்களின் முழுப் பெருமைகளைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
    மக்கள் அனைவரும் தங்கள் துன்பங்கள் நீங்கவும், நோய் நொடி இல்லாமல் வாழவும், மறுபிறவி இல்லாமல் இறைவனின் திருப்பதத்தை அடையவும் இறைவனை வேண்டுகிறார்கள். ஆனால் இறைவனும் கூட சிலரை வணங்குகிறார் என்றால் வியப்பாக இருக்கிறதல்லவா?

    ஆம்! திருப்பாற்கடலில் பள்ளி கொண்டபடி, அகிலத்தையே காத்தருளும் திருமாலின் அவதாரமாக விளங்கிய கிருஷ்ண பகவான் ஒரு முறை வழிபாட்டில் ஈடுபட்டிருந்தார். இதைக் கண்ட ருக்மணி தேவி, ‘சுவாமி! உலகில் உள்ள உயிர்கள் அனைத்தும் உங்களை வழிபடுகின் றன. ஆனால் நீங்கள் யாரை வழிபட்டுக் கொண்டிருக் கிறீர்கள்?’ என்று கேட்டார்.

    அதற்கு கிருஷ்ண பகவான், ‘நான் இந்தப் பூமியில் வாழும் ஆறு வகையான மக்களை வணங்குகிறேன். நித்யான்ன தாதா (தினமும் அன்னதானம் செய்வோர்), தருணாக்னிஹோத்ரி (தினமும் அக்னி ஹோத்ரம் செய்வோர்), வேதாந்தவித் (வேதாந்தம் அறிந்தவர்கள்), சந்திர சஹஸ்ர தர்சீ (சகஸ்ர சந்திர தரிசனம் செய்தவர்), மாஸோபாவாசீச (மாதம் தோறும் உபவாசம் இருப்பவர்), பதிவ்ரதா (பதிவிரதையான பெண்கள்) ஆகிய ஆறு பேரை நான் வணங்குவேன்.

    கண்ணன் வணங்கும் அந்த ஆறு பேரை நாமும் வணங்கினால் வாழ்வில் அனைத்தும் வளமும் பெறலாம். கிருஷ்ண பகவான் சொன்ன அந்த ஆறுவகையான மக்களின் முழுப் பெருமைகளைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

    நித்ய அன்ன தாதா


    அந்தக் காலத்தில் ஒருவருக்குக் கிடைக்கும் வருமானத்தில் அல்லது நிலத்தில் அறுவடையாகும் விளைச்சலில் ஆறில் ஒரு பகுதியை மன்னருக்குக் கொடுத்து விட வேண்டும். மீதி ஐந்து பகுதிகளை, அவர் ஐந்து பேரைப் பாதுகாக்கப் (பஞ்ச யக்ஞத்துக்கு) பயன்படுத்தவேண்டும். இதுபற்றி திருவள்ளுவரும் கூட ‘இறந்து போன நம் முன்னோர்கள், கடவுள், வீட்டிற்கு வரும் விருந்தாளி, சுற்றத்தார் (இதில் நாம் வளர்க்கும் பசு முதலிய பிராணிகளும், வீட்டில் ஊர்ந்து செல்லும் எறும்புகளும் அடங்கும்), தனது குடும்பம் என்ற ஐந்து பேரையும் போற்றுவது இல்வாழ்வானின் தலையாய கடமை’ என்கிறார்.

    ‘அதிதி தேவோ பவ’ என்று வேதம் சொல்கிறது. இதற்கு ‘விருந்தாளி என்பவர் இறைவனுக்கு சமம்’ என்று பொருள். முன் காலத்தில், நாம் உண்பதற்கு முன்பாக வாசல் திண்ணையில் சிறிது நேரம் உட்கார்ந்து, யாராவது விருந்தாளிகள் அல்லது வழிப்போக்கன் வருகிறார்களா? என்று பார்த்து விட்டே உணவருந்த செல்வார்கள். அப்படிப்பட்ட பிரதிபலன் பார்க்காது அன்னதானம் செய்பவர்களை இறைவன் வணங்குகிறார்.

    தருண அக்னிஹோத்ரி

    முன் காலத்தில், ஏழு வயதில் பூணூல் போட்டவுடன் அந்தணச் சிறுவர்கள் ‘சமிதாதானம்’ என்று, தினமும் அக்னி வளர்த்து சமித்துக்களை நெய்யுடன் அக்னியில் ஆகுதி கொடுப்பார்கள். குருகுலம் முடித்து வீட்டுக்கு வந்தவுடன் இளைய பருவத்திலேயே அவர்களுக்குத் திருமணமும் நடந்துவிடும். பின்னர் அவர்கள் தினமும் ‘ஔபாசனம்’ என்ற அக்னி காரியத்தைச் செய்து வருவர். இதை தவிர ‘அக்னிஹோத்ரம்’ என்ற அக்னி காரியம், சூரியனை உத்தேசித்து சரியாக சூரியன் உதிக்கும் காலத்திலும், அஸ்தமனம் ஆகும் காலத்திலும் செய்யப்படுவதாகும். இதை எல்லோரும் செய்துவிட முடியாது. தனது தந்தை ஒரு அக்னிஹோத்ரியாக இருந்தால் மட்டுமே, தானும் அக்னிஹோத்ரம் செய்ய முடியும். இப்படிப்பட்டவர்கள் காணக்கிடைப்பது அபூர்வம். இப்படித் தவறாமல் செய்துவருவோரையும் இறைவன் வழிபடுகிறார்.

    வேதாந்த வித்

    வேதங்கள் நான்கு. அதன் முடிவில் இருப்பது உபநிஷத் (வேத+ அந்தம்=முடிவு). அதை உணர்ந்தவர்கள் வேதாந்திகள். ‘அஹம் பிரம் மாஸ்மி’, ‘தத்வம் அஸி’ போன்ற ஞான உணர்வு படைத்தவர்கள். வேதாந் தத்தில் நாட்டம் ஏற்பட வேண்டும் என்றால், பலகோடி ஜென் மங்களில் புண்ணியம் செய்து இருக்க வேண்டும். உலக விஷயங்களை துறந்து, வேதாந்த விஷயங்களுக்காகவே தன் வாழ்வை அர்ப்பணித்து வேதாந்த சிந்தனையிலேயே வாழ்வை கழிப்பவனே உண்மையான வேதாந்த வித். அந்த வேதாந்திகளையும் கிருஷ்ண பரமாத்மா வணங்குகிறார்.

    சந்திர சகஸ்ர தர்சீ

    சிவனுடைய தலையில் இருப்பது மூன்றாம் பிறைச் சந்திரன். அதை மாதம் தோறும் அமாவாசைக்குப் பின்னர் மூன்றாம் நாளில் காணலாம். அடுத்த முறை காண 29 நாட்கள் காத்திருக்க வேண்டும். இப்படி ஆயிரம் முறை காண, 81 ஆண்டு கள் பிடிக்கும். அப்பொழுது அவர்கள் ‘சதாபிஷேகம்’ செய்து கொள்வார்கள். அப்படி ஆயிரம் பிறை கண்ட அதிசய சிகாமணிகளையும், கண்ணபிரான் வணங் குவார். இந்த பிறைச் சந்திரனைக் காணும் வழக்கம் பல மதங்களிலும் இருக்கிறது. ஒருவர் ஆயிரம் முறை சந்திரனைக் காண வேண்டுமானால், ஆயிரம் தடவை சிவனை நினைத்திருக்க வேண்டும்.

    மூன்றாம் பிறை சந்திரனை வழிபட நினைப்பவர்கள், ‘மேகம் மறைக்கிறதே என்ற கவலையில் சந்திரனைக் காண சிவபெருமானை துதித்து நிற்பார்கள். இன்னும் சிலர் தங்களது இஷ்ட தெய்வத்தையும், குலதெய்வத்தையும் வணங்குவார்கள். அப்படிப்பட்டவர் களையும் கிருஷ்ணன் வணங்குகிறார்.

    மாஸோபாவாசீச

    மாதம் தோறும் இரண்டு ஏகாதசிகளிலும் உபவாசம் இருப்பவர். அந்த நேரங்களில் உணவருந்தாமல் இருக்கும் முறையை ஒழுங்காக கடைப்பிடிக்க வேண்டும். சுத்த உப வாசம் என்பது நிர்ஜலமாக (தண்ணீர் கூட பருகாமல்) இருப்பது. அப்படி இருக்க முடியாதவர்கள் தண்ணீர் மட்டுமே பருகி உபவாசம் இருக்கலாம். எப்படியானாலும் மாதந்தோறும் இரண்டு முறை உபவாசம் இருப்பவர் களை கண்ணன் வணங்குவான். ஆனால் அப்படி உபவாசம் இருப்பவர்கள் மிகவும் குறைவு தான்.

    பதிவ்ரதா


    ‘பதிவிரதை’ என்பதற்கு கற்புக்கரசிகள் என்று பொருள். இப்படிப்பட்டவர்களை வணங்கும் முறை நம் நாட்டில் எப்போதுமே உண்டு. சாஸ்திரத்தில் சொல்லபட்ட எல்லா விஷயங்களையும் மூன்று வகையில் அனுஷ்டிக்க வேண்டும். அவை மனோ, வாக், காயம் என்பதாகும். இவற்றை தமிழில் உண்மை, வாய்மை, மெய்மை என்கிறோம். இந்த மூன்று உறுப்புகளாலும் வேறு ஒரு ஆடவனை நினைக்காது, கணவனை மட்டுமே தெய்வம் போல் கருதுபவர்களே ‘பதிவிரதை’ ஆவர்.

    அப்படிப்பட்ட கற்புக்கரசிகளால் எந்த இயற்கை சக்தியையும் கட்டப்படுத்த முடியும். எதையும் எதிர்த்து போரிட முடியும். ஆனால் அவர்கள் அதை எளிதில் பிரயோகிக்கக் மாட்டார்கள்.

    அசோகவனத்தில் சீதையைக் கண்ட அனுமன், ‘தாயே! உங்களைக் காணாமல் ராமன் தவிக்கிறார். என்னுடன் வாருங்கள். அடுத்த நிமிடமே உங்களை ராமபிரானிடம் சேர்க்கிறேன்’ என்றார்.

    அதைக் கேட்ட சீதை சிரித்தாள். ‘என் கற் பின் ஆற்றலால் ஈரேழு உலகங்களையும் எரிக் கும் சக்தி எனக்கு உண்டு. ஆனால் கண வனின் ‘வில்’ ஆற்றலுக்கு இழுக்கு உண்டாக் கும், எதையும் செய்ய மாட்டேன்’ என்றாள்.

    ‘எங்கு பெண்கள் மதிக்கப்படுகிறார்களோ, அங்கு தெய்வம் வாழும். எங்கு பெண்கள் மதிக்கப்பட வில்லையோ, அங்கு என்ன நல்லது செய்தாலும் அதற்குப் பலன் இல்லை’ என்கிறது மனு சாஸ்திரம். மேலும் ‘மரியாதைக் குறைவாக நடத்தப்பட்ட பெண்கள், சாபம் இட்டால் அந்தக் குடும்பம் அடியோடு அழிந்து போகும். தந்தை, கணவன், மைத்துனன், சகோதரர் ஆகியோருக்கு அதிர்ஷ்டம் வேண் டுமானால் அவர்கள் பெண்களை மதிப்போடு நடத்த வேண்டும்’ என்றும் சொல்கிறது.

    இப்படியெல்லாம் பாராட்டப்பட்ட பதிவிரதைகளைத் தான் கண்ணன் வழிபாடு செய்கிறான். 
    மாங்கல்யம், பெண்களின் நெற்றி, தலை வகிட்டு பகுதிகளில் மகாலட்சுமி தேவி வாசம் செய்கிறாள். இந்த இடங்களில் பெண்கள் குங்குமத்தை வைத்துக் கொள்வதால், லட்சுமி தேவியின் அருளை முழுமையாகப் பெற முடியும்.
    படிகாரம், சுண்ணாம்பு தண்ணீர், மஞ்சள் இவைகளின் கூட்டே குங்குமம் ஆகும். இவை தவிர கலர்பொடிகள் எதுவும் கலங்காத குங்குமத்தை ‘ஹரித்ரா குங்குமம்’ என்று சொல்வார்கள். குங்குமத்தில் சேர்க்கப்படும் மஞ்சள் நாளடைவில் இருப்பு சத்தாக மாற்றம் காண்கிறது. படிகாரம் கிருமிநாசினி என்பதால் தோல் சம்பந்தப்பட்ட நோய்களை நீக்குகிறது. தொற்றுநோய்களும் அண்டாது. மூளைக்கு செல்லும் நரம்புகள், அதிகமான உஷ்ணத்தை மூளைக்கு அனுப்பாமல் கட்டுப்படுத்தக்கூடிய பகுதி ெநற்றியாகும். குங்குமம் அணிவதால், நெற்றியில் சூடு தணிகிறது.

    பெண்களின் தலை வகிட்டின் நுனியை, ‘சீமந்தபிரதேசம்’ என்பார்கள். பெண்கள் அணியும் மாங்கல்யம், பெண்களின் நெற்றி, தலை வகிட்டு பகுதி ஆரம்பம் ஆகிய மூன்று இடங்களிலும் மகாலட்சுமி தேவி வாசம் செய்கிறாள். இந்த இடங்களில் பெண்கள் குங்குமத்தை வைத்துக் கொள்வதால், லட்சுமி தேவியின் அருளை முழுமையாகப் பெற முடியும். மேலும் வீட்டில் உள்ள தரித்திர நிலை விலகும்.

    நாம் செய்யும் சேமிப்பு எந்த நிலையிலும் கரையாது. வீட்டிற்கு வரும் சுமங்கலி களுக்கு குங்குமம் கொடுப்பதால், கொடுப்பவர்- பெறுபவர் இருவருக்குமே மாங்கல்ய பலத்தைப் பெருக்கும். பெண்கள் ஒருவருக்கு குங்குமத்தை கொடுக்கும் முன்பாக, தாங்கள் இட்டுக் கொண்டபிறகே கொடுக்க வேண்டும். ஆண்கள் இரு புருவங்களையும் இணைத்தார் போல் உள்ள இடத்தில், குங்குமத்தை அணிவது அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.



    மகாலட்சுமி 108 இடங்களில் வாசம் செய்கிறார். அவை:- வெற்றிலை மேற்புறம், விபூதி, வில்வம், மஞ்சள், அட்சதை, பூரணகும்பம், தாமரை, தாமரைமணி, ஜெபமாலை, வலம்புரிச்சங்கு, மாவிலை, தர்ப்பை, குலை வாழை, துளசி, தாழம்பூ, ருத்ராட்சம், சந்தனம், தேவ தாரு, அகில், பஞ்சபாத்திரம், கொப்பரைக்காய், பாக்கு, பச்சைக்கற்பூரம், கலசம், சிருக்சுருவம், கமண்டலநீர், நிறைகுடம், காய்ச்சிய பால், காராம்பசு நெய், குங்கிலியப் புகை, கஸ்தூரி, புனுகு, பூணூல், சாளக்கிராமம், பாணலிங்கம், பஞ்ச கவ்யம், திருமாங்கல்யம், கிரீடம், பூலாங்கிழங்கு, ஆலவிழுது, தேங்காய்க்கண், தென்னம் பாளை, சங்கு புஷ்பம், இலந்தை, நெல்லி, எள், கடுக்காய், கொம்பரக்கு, பவளமல்லி, மாதுளை, திரு நீற்றுபச்சை, அத்திக் கட்டை, ஆகாசகருடன், வெட்டிவேர், அருகம்புல், விளாமிச்சுவேர், நன்னாரிவேர், களாக்காய், விளாம்பழம், வரகு, நெற் கதிர், மாவடு, புற்றுத்தேன், எலுமிச்சை, மணிநாக்கு, சோளக்கதிர், பாகற்காய், அகத்திக்கீரை, காசினிக்கீரை, பசலைக்கீரை, கூந்தல்பனை, மலைத்தேன், வெள்ளி, தங்கம், வைரம், உப்பு, யானை, மூங்கில், பசு நீர்த்தாரை, குளவிக்கூட்டு மண், நண்டுவளை மண், காளை கொம்பு மண், யானைகொம்பு மண், ஆலஅடி மண், வில்வ அடி மண், வெள்ளரிப்பழம், மோதகம், அவல், காதோலை, கடல்நுரை, கண்ணாடி, மோதிரம் (தந்தம்), பட்டு, தையல்இல்லாத புதுத் துணி, பெண்ணின் கழுத்து, ஆணின் நெற்றி, கோவில் நிலை மண், வெயிலுடன் கூடிய மழைநீர், கீரிப்பிள்ளை, நுனிமுடிந்த கூந்தல், படிகாரம், அரச சமித்து, பன்றிக்கொம்பு, சந்திர காந்தக்கல், பிரம்பு, நாயுருவி, கெண்ட, வாசல் நிலை நெற்றி போன்ற இடங் களிலும் லட்சுமி வாசம் செய்கி றாள். ஆனாலும் ஆணவம் அகற்றி, குருவின் திருவடி பணிந் தவர்களுக்கே அவள் அருள் புரிகின்றாள்.

    எனினும் ஆணவம் அகற்றி, குருவின் திருவடிகளை சரண டைந்தவர்களுக்கே நிரந்தரமாக அருள்புரிகின்றாள். 
    இறைவனுக்கு விருப்பமான பொருட்களால் அபிஷேகம் செய்தால் நம் வேண்டுதல்கள் நிறைவேறும். அந்த வகையில் இறைவனுக்கு எந்த பொருளால் வழிபாடு செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
    இறைவனுக்கு விருப்பமான பொருட்களால் அபிஷேகம் செய்தால் நம் வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும். அந்த வகையில் இறைவனுக்கு எந்ததெந்த  பொருளால் வழிபாடு செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

    சந்தனாதி தைலம் - இன்பம்
    அரிசி மாவு - கடன் விலகும்
    மஞ்சள் தூள் - மங்கலம்
    நெல்லிப்பொடி - பிணிநீக்கம்

    திரவியம் பொடி - இகபர சுகம்
    ரசபஞ்சாமிர்தம் - விவேகம்
    பழபஞ்சாமிர்தம் - முக்தி
    பால் - ஆயுள் விருத்தி

    பஞ்சகவ்யம் - சுத்தம், சகல தோஷ நிவர்த்தி
    இளவெந்நீர் - முக்தி
    தேன் - சுகம், சங்கீத குரல்வளம்
    இளநீர் - ராஜயோகம் கொடுக்கும்

    சர்க்கரைச்சாறு - பகைவரை வெல்லலாம்
    கரும்புச்சாறு - ஆரோக்கியம்
    பழச்சாறு - மகிழ்ச்சி தரும்
    எலுமிச்சம் பழச்சாறு - எமபயம் போக்கும்

    நாரத்தம் பழச்சாறு - மந்திர சித்தி கொடுக்கும்
    பழச்சாறு - சோகம் போக்கும்
    மாதுளம் பழச்சாறு - பகைமை அகற்றும்
    அன்னாபிஷேகம் - விளைநிலங்கள், நன்செய்தரும்



    வில்வங் கலந்தநீர் ( வில்வோதகம்) - மகப்பேறு தரும்
    தர்ப்பைப்புல் கலந்த நீர் ( குரோதகம்) - ஞானம் தரும்
    பன்னீர் - குளிர்ச்சி தரும்
    விபூதி ( திருநீறு) - சகல ஐஸ்வர்யம் தரும்

    தங்கம் கலந்தநீர்
    ( ஸ்வர்ணோதகம்) - சகல சவுபாக்கியம் கிட்டும்
    ரத்னம் கலந்தநீர்
    ( ரத்னோதகம்) - சகல சவுபாக்கியம் கிட்டும்

    சந்தனம் - அரசாட்சி, பெருஞ் செல்வம் கிட்டும்
    கோரசணை - சகல ஆரோக்கியம்
    ஜவ்வாது - ஜன வசியம்
    புனுகு - புகழ் கிட்டும்

    பச்சைக் கற்பூரம் - தெய்வ ஆகர்ஷனம்
    குங்குமப்பூ - இஷ்ட சித்தி
    தயிர் - குழந்தைச் செல்வம் கிட்டும்
    சங்காபிஷேகம் - சகல காரிய சித்தி
    கலசாபிஷேகம் - இறையருள்

    எந்த தெய்வத்தின் அருளை வேண்டுகிறோமோ, அந்த தெய்வங்களுக்கு ஏற்ற வகையில் வழிபாட்டையும் செய்ய வேண்டும். எந்த தெய்வத்திற்கு எந்த வழிபாடு என்று பார்க்கலாம்.
    * அபிஷேகம் செய்து வழிபட்டால் சிவனருள் கிடைக்கும்

    * அலங்காரம் செய்து வழிபட்டால் விஷ்ணு அருள் கிட்டும்

    * துதித்து வழிபட்டால் நவக்கிரகங்களின் அருள் கிட்டும்

    சிவன் அபிஷேகப் பிரியன், விஷ்ணு அலங்காரப் பிரியன், நவக்கிரகங்கள் துதிப்பிரியர்கள். எனவே எந்த தெய்வத்தின் அருளை வேண்டுகிறோமோ, அந்த தெய்வங்களுக்கு ஏற்ற வகையில் வழிபாட்டையும் செய்ய வேண்டும். 
    ×