search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95492"

    இந்து மதத்தில் ஒவ்வொரு கடவுளையும் ஒவ்வொரு முறையில் வணங்கி வழிபாடு செய்ய வேண்டும். அந்த வகையில் எந்த கடவுளை எப்படி வணங்க வேண்டும் என்று பார்க்கலாம்.
    * பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளை வணங்கும் போது, சிரசின் மேல் 12 அங்குலம் கைகளை உயர்த்தி வணங்க வேண்டும். மற்ற தெய்வங்களை சிரசின் மேல் கைகளைக் குவித்து வணங்கினாலே போதுமானது.

    * குருவை வணங்கும் போது, நெற்றிக்கு நேராக கைகூப்பி வணங்க வேண்டும்.

    * தந்தையை வணங்கும் போது, வாய்க்கு நேராக கைகூப்பி வணங்க வேண்டும்.

    * தாயை வணங்கும் போது, வயிற்றிற்கு நேராக கை வைத்து வணங்க வேண்டும்.

    * மாதா, பிதா, குரு தெய்வங்களை வணங்கும் போது, ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும். அதாவது பூமியில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்குதல் முறையாகும். அதே போல் பெண்கள் மேற்கண்டவர்களை வணங்கும்போது பஞ்சாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும். 
    நம்மில் பலரும் ருத்ராட்சத்தை அணிவதற்கு அச்சப்படுகிறார்கள். அதனை துறவிகள் மட்டுமே அணியவேண்டும். பெண்கள் ஒருபோதும் ருத்ராட்சம் அணியக்கூடாது என்று சொல்பவர்கள் ஏராளம்.
    ‘ருத்ராட்சமும், விபூதியும் அணிந்தவன் ஒருபோதும் எமலோகம் செல்வதில்லை. ஐஸ்வர்யங்கள் அருளும் ருத்ராட்சம் ஆன்மாவிற்கு மகா பேரானந்தத்தைத் தரும். ருத்ராட்சம் அணிந்து ஒருமுறை எவ்வித மந்திரம் கூறினாலும், அதை 1 கோடி முறை உச்சரித்த பலனைத்தரும். ருத்ராட்சம் அணிந்து ம்ருத்யுஞ்ச மந்திரம் உச்சரிப்பவன் எல்லாவித நோய்களிலிருந்தும் விடுபடுகிறான். அவனை அகால மரணமோ, துர்மரணமோ நெருங்குவதில்லை’ என்கிறார் மகா பெரியவா என்று அழைக்கப்படும் சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள்.

    இன்று நம்மில் பலரும் ருத்ராட்சத்தை அணிவதற்கு அச்சப்படுகிறார்கள். அது புனிதமானது. அதனை துறவிகள் மட்டுமே அணியவேண்டும். இல்லற வாழ்க்கையில் ஈடுபடுபவர்கள் அணியக்கூடாது. பெண்கள் ஒருபோதும் ருத்ராட்சம் அணியக்கூடாது என்று சொல்பவர்கள் ஏராளம்.

    ஆனால் இயற்கையாகவே துளையோடு இருக்கும் ருத்ராட்சம், அனைவரும் அணிந்து கொள்வதற்காகவே அவ்வாறு இருக்கிறது. அதன் ஆண், பெண் பேதம் எதுவும் இல்லை என்பது ஆன்மிகத்தை நன்கு கற்றறிந்தவர்கள் கூறும் வாக்காகும்.

    சிவபெருமான் கண்களில் இருந்து தோன்றியது ருத்ராட்சம். அதை அணிபவரை ஈசன், கண்போலக் காப்பாற்றுவார். எனவே அனைவரும் ஐந்து முகம் கொண்ட ஒரு ருத்ராட்சத்தையாவது அணிய வேண்டியது அவசியம். ருத்ராட்சத்தை யார் வேண்டுமானாலும் அணியலாம். எல்லா நேரத்திலும் அணிந்திருக்கலாம். நீர்பருகும் போதும், உணவு உண்ணும்போதும், தூங்கும்போதும் எல்லாக்காலத்திலும் ருத்ராட்சம் அணிந்திருக்க வேண்டும் என்று சிவபெருமானே கூறியுள்ளதாக சிவபுராணம் தெரிவிக்கிறது.

    சிறுவர், சிறுமியர் ருத்ராட்சம் அணிவதால் அவர்களின் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். பெண்கள் இந்த ருத்ராட்சத்தை அணிவதால், தீர்க்க சுமங்கலியாக வாழும் பாக்கியத்தைப் பெறுவார்கள். அவர்களுடைய கணவருக்கும் தொழிலில் வெற்றி கிடைக்கும். மேலும் ருத்ராட்சம் அணிந்தவர்களின் இல்லத்தில் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்கும் என்பது சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள் சொல்லும் வார்த்தைகளாகும்.

    அதிக விலைகொடுத்து அபூர்வ வகையிலான ருத்ராட்சத்தை வாங்கி அணியவேண்டும் என்று அவசியமில்லை. எல்லா இடங்களிலும் எளிமையாக கிடைக்கும் ஐந்து முக ருத்ராட்சத்தை அணிந்தாலே போதுமானது. சிவபெருமானின் திருமுகம் ஐந்து. நமசிவாய மந்திரம் ஐந்தெழுத்து. பஞ்சபூதங்கள் ஐந்து (நிலம், நீர்,நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம்). நமது கை கால் விரல்கள் ஐந்து. புலன்கள் ஐந்து. ஆகையால் தான் இயற்கையே மிக அதிகமாக ஐந்து முக ருத்ராட்சத்தை பூமிக்கு அருள்கிறது. எனவே ஐந்து முக ருத்ராட்சங்களை அணிவதே சிறப்பு. ஐந்து முக ருத்ராட்சத்திலேயே மற்ற எல்லா முக ருத்ராட்சங்களினால் கிடைக்கின்ற பலன்களும் அடங்கிவிடும்.



    பெண்களின் பெருந்தெய்வமாக விளங்குபவள் ஆதிபராசக்தி. அவள் ருத்ராட்சம் அணிந்திருப்பதை, அருணாசலபுராணம் விவரிக்கிறது. எனவே பெண்கள் தாராளமாக அம்பிகை காட்டும் வழியைப் பின்பற்றி ருத்ராட்சம் அணியலாம். சிவ மகாபுராணத்திலும் பெண்கள் கட்டாயம் ருத்ராட்சம் அணிய வேண்டும் என்று ஈசனே வலியுறுத்தியிருக்கிறார்.

    பெண்கள் தங்களுடைய தாலிக்கொடியை எல்லா நாட்களிலும், எல்லா நேரங்களிலும் அணிந்திருப்பதைப் போல, ருத்ராட்சத்தையும் அனைத்து நேரங்களிலும் அணிந்து கொள்ளலாம். ருத்ராட்சத்தை ஈசன் அருளியது மனிதன் வாழும் உடலுக்காக அல்ல.. உயிரின் ஆன்மாவிற்காக என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

    நீத்தார் கடன் எனப்படும் முன்னோர்களுக்கு திதி கொடுப்பது, பெண்களின் தீட்டு காலம் எனப்படும் மாதவிலக்கு, கணவன்-மனைவி தாம்பத்திய நேரங்களில் கூட ருத்ராட்சம் அணியலாமா? என்ற கேள்வி எழலாம். இவை மூன்று விஷயங்களும் இயற்கையானதே தவிர, எதுவும் செயற்கையானது அல்ல. பித்ரு கடன் நிறைவேற்றும்போது ருத்ராட்சம் அணிந்து கொள்ளலாம். இதனால் முன்னோர்களின் ஆன்மாக்கள் மகிழும். அதனால் பாவமோ, தோஷமோ கிடையாது.

    நீராடும் போது ருத்ராட்சம் அணிந்திருந்தால் கங்கையில் குளித்த புண்ணியம் கிடைக்கும் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன. கங்கையில் மூழ்கினால் பாவம் போகும் என்பது பலரும் சொல்லும் வாக்கு. பாவங்களால் தான் நமக்கு துன்பங்கள் நிகழ்கின்றன. அதற்காக நாம் கங்கையைத் தேடிச் செல்ல வேண்டியதில்லை. ருத்ராட்சத்தை அணிந்து கொண்டாலே கொடிய பாவங்களும் நீங்கும்.

    நம் வாழ்வில் உள்ள துன்பங்கள் படிப்படியாக குறையும் என்கின்ற புராணங்கள், கங்கையில் மூழ்கினால் பாவம் போகும் என்பது நம் அனைவருக்கும் தெரியும். பாவங்களினால் தான் நமக்குக்கஷ்டம் உண்டாகிறது. ருத்ராட்சம் அணிவதால் கொடியபாவங்கள் தீரும். இதனால் நம் வாழ்வில் ஏற்படும் துன்பங்களும் படிப்படியாகக் குறைந்து விடும். ருத்ராட்சம் அணிபவருக்கு லட்சுமி கடாட்சமும், செய்யும் தொழிலில் மேன்மையும், சகலவிதமான ஐஸ்வரியங்களும் கிடைக்கும்.

    ருத்ராட்சம் அணிவதால் இதய நோய், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், புற்றுநோய் போன்றவற்றின் தீவிரம் குறைவதாக ஆய்வுகள் கூறுகின்றன. எனவே தூங்கும்போதும் கூட ருத்ராட்சத்தைக் கழற்றி வைக்க வேண்டிய அவசியம் கிடையாது. திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், வேலை வாய்ப்பு இல்லாதவர்களும் ருத்ராட்சம் அணிந்து, தினமும் 108 முறை எழுத்தாலோ, மனதலோ பஞ்சாட்சரத்தைச் சொல்லி வந்தால், 18 மாதத்தில் மேற்கூறிய பிரார்த்தனைகள் நிறைவேறும் என்கிறார் சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள். 
    ஒரு ஆலயத்தில் நாள் முழுக்க 6 கால பூஜைகள் நடைபெறும். அவற்றை முழுமையாக தெரிந்து கொண்டு வழிபட்டால் நிறைய பலன்களைப் பெற முடியும்.
    ஆலயங்களுக்கு செல்பவர்களில் பெரும்பாலானவர்கள் பூ, பழம், அர்ச்சனைத் தட்டு எடுத்துச் செல்வதுண்டு. அர்ச்சனை முடிந்து மூலவருக்கு தீபாரதனை காட்டப்படும் போது மனம் உருக வேண்டிக் கொள்வார்கள். அதோடு அவர்களது வழிபாடு முடிந்து விடுகிறது.

    சில பக்தர்கள் பொங்கல் வைத்து சாமிக்கு நைவேத்தியம் செய்வார்கள். அதில் அவர்களுக்கு திருப்தி ஏற்பட்டு விடும். எல்லாரும், எல்லா வகை வழிபாடுகளிலும் ஆர்வம் காட்டுவதில்லை. கண்டு கொள்வதும் இல்லை. 90 சதவீத பக்தர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள்.

    ஆனால் ஒரு ஆலயத்தை எடுத்துக் கொண்டால், நாள் முழுக்க 6 கால பூஜைகளிலும் எத்தனையோ விதமான வழிபாடுகள் பூஜைகள் நடைபெறும். அவற்றை முழுமையாக தெரிந்து கொண்டு வழிபட்டால் நிறைய பலன்களைப் பெற முடியும்.

    பொதுவாக ஒரு ஆலயம் அதிகாலை திறக்கப்பட்டதும் திருப்பள்ளி எழுச்சி முடிந்ததும் அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். நிறைய பக்தர்கள், கடவுளுக்கு நடத்தப்படும் அபிஷேகத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஆனால் ஆலயங்களில் நடத்தப்படும் 16 வகை சோடச உபசாரங்களில் அபிஷேகமே மிக, மிக முக்கியத்துவமும் வலிமையும் வாய்ந்தது என்று ஆகமங்களில் கூறப்பட்டுள்ளது.

    தமிழில் திருமுழுக்கு என்று கூறப்படும் அபிஷேகத்துக்கு நம் முன்னோர்கள் 26 வகை திரவியங்களை பயன்படுத்தினார்கள். பிறகு அந்த திரவியங்களின் எண்ணிக்கை 18 ஆக குறைந்தது.

    தற்போது பெரும்பாலான ஆலயங்களில் 12 வகை திரவியங்களைக் கொண்டே அபிஷேகம் செய்யப்படுகிறது. அந்த 12 வகை திரவியங்களை எள் எண்ணெய், பஞ்ச கவ்யம், பஞ்சாமிர்தம், நெய், பால், தயிர், தேன், கரும்புச்சாறு, பழரசம், இளநீர், சந்தனம், தண்ணீர் என்ற வரிசையில் அபிஷேகத்துக்கு பயன்படுத்தும் வழக்கம் உள்ளது.

    சாமி சிலைகளுக்கு ஏன் இப்படி விதம் - விதமான திரவியங்களால் அபிஷேகம் செய்ய வேண்டும்? இதன் பின்னணியில் என்ன தத்துவம் - என்ன அறிவியல் உண்மை அடங்கியுள்ளது என்று நீங்கள் நினைக்கலாம்.

    இதற்கு ஒரே வரியில் பதில் சொல்வதென்றால், ஒரு ஆலயத்தின் மூலவர் சிலை எந்த அளவுக்கு அருள் ஆற்றல் சக்தியை வெளிப்படுத்துகிறது என்பது, அந்த சிலைக்கு செய்யப்படும் அபிஷேகங்களின் அளவையும், சிறப்பையும் பொருத்தே அமையும். இந்த உண்மையை சங்க காலத்துக்கு முன்பே நம் மூதாதையர்கள் கண்டுபிடித்து விட்டனர். எனவே தான் ஆலயங்களில் மூலவர் சிலைக்கு அபிஷேகம் நடத்தப்படுவதற்கு அவர்கள் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தனர். அதோடு அபிஷேக பொருட்கள் தடையின்றி கிடைக்க நிலங்களை கோவில்களுக்கு எழுதி வைத்தனர்.

    எந்த கடவுளுக்கு, எந்தெந்த திரவியங்களால் அபிஷேகம் செய்ய வேண்டும். அதனால் மக்களுக்கும், இந்த உலகுக்கும் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதையும் நம் முன்னோர்கள் வரையறுத்து வைத்துள்ளனர்.



    அந்த வகையில் சிவனை அபிஷேகப் பிரியர் என்றும், விஷ்ணுவை அலங்காரப் பிரியர் என்றும் கூறியுள்ளனர். பொதுவாகவே கடவுளின் உள்ளம் அபிஷேகம் செய்ய, செய்ய குளிரும். அது அபிஷேகத்தை ஏற்பாடு செய்து நடத்தும் பக்தனையும் குளிரச் செய்யும். அபிஷேகங்களில் பல வகைகள் இருந்தாலும் மகா அபிஷேகம், அன்னாபிஷேகம், சங்காபிஷேகம் ஆகிய மூன்றும் சிறந்ததாகும்.

    எந்த வகை அபிஷேகம் செய்தாலும் 24 நிமிடங்கள் மட்டுமே செய்ய வேண்டும் என்று ஆகம விதிகளில் கூறப்பட்டுள்ளது. ஆனால் சில ஆலயங்களில் 2 நாழிகை அளவுக்கு (48 நிமிடங்கள்) அபிஷேகங்கள் செய்யப்படுவது உண்டு.

    அபிஷேகத்துக்கான கால அளவு மட்டுமின்றி, அபிஷேகத்துக்கு பயன்படுத்தும் திரவியங்களையும் எந்த அளவு பயன்படுத்த வேண்டும் என்று வகுக்கப்பட்டுள்ளது.

    எள் எண்ணெய் - 1 லிட்டர், பஞ்ச கவ்வியம் - 5 லிட்டர், மாவு வகைகள் ஒவ்வொன்றும் 1 கிலோ, மஞ்சள் பொடி 200 கிராம், பசும்பால் 7 லிட்டர், தயிர் 15 லிட்டர், தேன் 500 கிராம், நெய் ஒரு கிலோ, நெல்லி முள்ளிப்பொடி - 300 கிராம், கரும்புச்சாறு - 4 லிட்டர், பன்னீர் - 500 கிராம், அன்னம் - 5 கிலோ, வாசனை திரவிய தீர்த்தம் - 20 லிட்டர் என்ற முறையில் தான் அபிஷேகத்துக்குரிய திரவியங்களின் அளவு இருக்க வேண்டும்.

    பஞ்சாமிர்த அபிஷேகத்துக்கு 20 வாழைப்பழம், ஒரு பெரிய பலாபழம், 15 மாம்பழம் மற்றும் தேவையான அளவு நாட்டுச் சர்க்கரை சேர்த்து பஞ்சாமிர்தம் தயாரிக்க வேண்டும். அதுபோல பஞ்சகவ்யம் (பசுஞ்சாணி கோமூத்திரம், பால், தயிர், நெய்) தயாரிப்பது பற்றி கோவில் குருக்களிடம் கேட்டால் சொல்வார்கள்.

    அபிஷேகத்துக்குரிய திரவியங்களை இத்தகைய அளவுகளில் தயாரிப்பது மட்டும் முக்கியமல்ல, அந்த அபிஷேகப் பொருட்களை சுவாமி முன்பு, எப்படி தயாராக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கும் கூட விதிமுறை உள்ளது. இது பற்றி சிந்தியாகமத்தில் கூறப்பட்டிருப்பதாவது:-

    சுத்தமான ஒரு வெள்ளைத் துணியை விரித்துக் கொள்ள வேண்டும். அதன் மீது அரிசியை பரப்ப வேண்டும். நடுவில் அபிஷேகத்துக்குரிய பால் வைக்க வேண்டும். வடக்கில் தேன், தெற்கில் நெய், மேற்கில் நாட்டுச் சர்க்கரை, கிழக்கில் தயிர் வைக்க வேண்டும்.

    வாயு மூலையில் மாம்பழம், நிருதி மூலையில் பலாப்பழம், அக்னி மூலையில் வாழைப்பழம், ஈசான மூலையில் வாசனை திரவிய தீர்த்தம் வைத்தல் வேண்டும்.

    அபிஷேகத்துக்கு பயன்படுத்தும் தண்ணீரில் சுத்த கந்த திரவியங்களான பாதிரிப்பூ, உத்பலம், தாமரைப்பூ, அலரிப்பூ, வெட்டிவேர் ஆகியவற்றை கலந்து தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஆகமப்படி திரவியங்களை வரிசைப்படி எடுத்து அபிஷேகம் செய்ய வேண்டும்.

    முன்பெல்லாம் மூல விக்கிரகத்துக்கு நடத்தப்படும் அபிஷேகத்தை யாரும் பார்க்க மாட்டார்கள். சந்தன அபிஷேகம், விபூதி அபிஷேகம், கலச அபிஷேகம் ஆகியவற்றை மட்டும் பார்க்க பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

    மதுரை மீனாட்சி அம்மன் ஆலயம் உள்பட சில ஆலயங்களில் ஆகமப்படி இன்றும் எந்த ஒரு அபிஷேகத்தையும் பக்தர்கள் பார்க்க முடியாது. ஆனால் மற்ற ஆலயங்களில் இப்போதெல்லாம் பாலாபிஷேகம் உள்பட எல்லா அபிஷேகத்தையும் பக்தர்கள் காண அனுமதிக்கப்படுகிறார்கள். திருவண்ணாமலையில் ஈசனுக்கு நடத்தப்படும் எல்லா அபிஷேகத்தையும் பக்தர்கள் கண்டு களிக்கலாம்.

    மூல விக்கிரகத்துக்கு நடத்தப்படும் எல்லா அபிஷேகங்களையும் பார்க்க கூடாது என்று நம் முன்னோர்கள் தடை விதித்ததற்கு காரணம் உள்ளது. அபிஷேகம் செய்யப்படும்போது அந்த விக்கிரகம் அளவிட முடியாத ஆற்றலை வெளிப்படுத்தும் என்பதால்தான் அபிஷேகத்தை பார்க்க வேண்டாம் என்றார்கள்.

    ஆலய கருவறையில் உள்ள கற்சிலை, பிரபஞ்ச சக்திகளை எல்லாம் ஒருங்கேப் பெற்று அதை ஆலயம் முழுவதும் பரவச் செய்து கொண்டிருப்பதை படித்து இருப்பீர்கள். அபிஷேகம் செய்யப்படும் போது மூலவர் சிலை வெளிப்படுத்தும் சக்தியானது அதாவது அருள் அலைகள் இரட்டிப்பாக உயர்ந்து விடுமாம்.

    நம் முன்னோர்கள் இதை எப்படித்தான் கண்டு பிடித்தார்களோ... தெரியவில்லை. ஆனால் விஞ்ஞானிகள் இந்த உண்மையை சமீபத்தில்தான் கண்டுபிடித்து ஒப்புக் கொண்டுள்ளனர். மூலவர் சிலைகளில் இருந்து வெளிப்படும ஆற்றல் பக்தர்களிடம் பாதிப்பை ஏற்படுத்தி விடக்கூடாது என்ற எண்ணத்தில் பெரும்பாலான ஆலயங்களில் பெயரளவுக்கு சில அபிஷேகங்களை மட்டுமே பக்தர்கள் பார்க்க செய்வார்கள்.

    நமது பழமையான ஆலயங்களில் உள்ள மூலவர் சிலைகள் அரிய மூலிகைகளால் உருவாக்கப்பட்டதாகும். அவற்றின் அடியில் சக்தி வாய்ந்த மந்திர தகடு பதித்து இருப்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த மந்திர தகடும், மூலிகையும் அபிஷேகம் செய்யும் போது அதிக ஆற்றலை வெளிப்படுத்தும்.

    அபிஷேக தீர்த்தத்தை நம் மீது தெளித்துக் கொண்டாலும், சிறிதளவு குடித்தாலும் நமக்கு அபரிதமான புத்துணர்ச்சி கிடைப்பது இதனால்தான்.

    தயிர், பால், சந்தனம், தண்ணீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யும்போது மூலவர் சிலையில் அதிக அளவில் மின் கடத்தும் திறன் ஏற்படுவதை குற்றாலம் பராசக்தி கல்லூரி ஆராய்ச்சிக் குழுவினர் சில ஆண்டுகளுக்கு முன்பு கண்டு பிடித்தனர். அபிஷேகம் செய்ய, செய்ய கருவறையில் உள்ள காற்று மண்டலத்தில் எதிர் மின்னூட்டங்கள் அதிகரிப்பதையும் கண்டு பிடித்தனர்.

    அபிஷேகம் காரணமாக கருவறையில் உள்ள காற்றில் அதிக ஈரப்பதம் இருக்கும். ஈரப்பதத்தில் ஒளி வேகம் அதிகமாக இருக்கும். அதனால்தான் அபிஷேகத்தின் போதும் தீபம் காட்டும்போதும் கருவறை காற்று மண்டலம் அயனியாக்கப்பட்ட மூலக்கூறுகளுடன் வெளியில் வருகிறது. அது பக்தர்களுக்கு உள்ளத்தில் பலத்தை ஏற்படுத்துவதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

    மேலும் அபிஷேகத்தின் போது ஓம் என்று தொடங்கி குருக்கள் சொல்லும் மந்திரம் கற்சிலை மீது பட்டு வெளியில் அலையாக வரும்போது தெய்வீக ஆற்றலை கொடுக்கிறது.

    அபிஷேகம் செய்யப்படும்போது நேர் அயனியும் எதிர் அயனியும் காற்றில் வந்து பக்தர்கள் உடலுக்குள் சென்று புத்துணர்ச்சியை ஏற்படுத்துகிறது.

    நேர் அயனியை சிவமாகவும் எதிர் அயனியை சக்தியாகவும் நம் முன்னோர்கள் உருவகப்படுத்தி, அபிஷேகம் செய்யும்போது சிவசக்தியின் திருவிளையாடல் நடப்பதாக வரையறுத்துள்ளனர்.

    இதை கருத்தில் கொண்டே, ஆலயத்தில் எப்போதும் தெய்வீக ஆற்றல் நிரம்பி இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நம் முன்னோர்கள் கருவறையில் இருந்து அபிஷேக திரவியங்கள் நேராக கோவில் திருக்குளத்தை சென்றடைய ஏற்பாடு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஒவ்வொரு மூல மூர்த்திக்கும் ஒவ்வொருவித அபிஷேகம் மிகவும் உகந்தது. அதற்கு ஏற்ப பலன்கள் கிடைக்கும்.
    பொதுவாக பாலாபிஷேகம் செய்வதை பெரும்பாலான பக்தர்கள் விரும்பி செய்வதுண்டு எல்லா கடவுளுக்கும் பாலாபிஷேகம் அடிக்கடி நடைபெறும்.

    குறிப்பாக பிரதோஷ காலத்தில் நந்திக்கு செய்யப்படும் பல்வேறு அபிஷேகங்களில் பால் அபிஷேகம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அபிஷேகத்துக்கு கொண்டு செல்லும் பாலை, கோவிலை ஒரு தடவை சுற்றி விட்டு கொடுத்தால் இரட்டிப்பு பலன் கிடைக்கும் என்று சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது.
    திருக்கோவில்கள் நம் வாழ்க்கையை மேம்படுத்தும் திருத்தலங்கள். திருக்கோவில்களை எப்படி மதிக்க வேண்டும்? அங்கு எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று பார்க்கலாம்.
    நம்மில் பெரும்பாலானோர் குறைகளை கொட்டுவதற்கும், தேவைகளை கேட்பதற்குமே திருக்கோயில்களை தேடிச் செல்கிறோம். மிகச் சிலரே நம்மை காத்து ரட்சிக்கும் இறைவனுக்கு நன்றி சொல்லவும், அமைதி தேடவும் கோயில்களுக்கு செல்கிறோம். திருக்கோயில்களை எப்படி மதிக்க வேண்டும்? அங்கு எப்படி நடந்து கொள்ள வேண்டும் ஆகிய அடிப்படைகளை பலரும் மறந்து விட்டோம்.

    நம்முடைய திருக்கோயில்கள் பெரும் சக்திகளை உள்ளடக்கியது. யோகியரும் ஞானியரும் பல அற்புத சக்திகளை திருக்கோயில்களில் உணர்ந்து உள்ளனர், நமக்கும் உணர்த்தியுள்ளனர். பழம் பெருமையும் அளவிடமுடியாத சக்தியும் கொண்ட திருக்கோயில்களில் செல்போன் கேமிராவில் செல்பி எடுத்துக் கொள்வதும், அநாகரிக ஆடைகள் அணிந்து செல்வதும், கூச்சலிட்டு ஆரவாரம் செய்வதும், பக்தியில் கவனமின்றி செல்போனில் பேசித் திரிவதும் பாவத்தையே நம்மிடம் சேர்க்கும்.

    திருக்கோயில்கள் நம் வாழ்க்கையை மேம்படுத்தும் திருத்தலங்கள். இறைவனின் இல்லம் அது. எனவே கோயிலுக்கு செல்லும் முன் குளித்து, சுத்தமாக செல்ல வேண்டும். கோயிலுக்கு வெறுங்கையுடன் செல்லாமல் கடவுளுக்குப் படைக்க நம்மால் முடிந்த பூ, பழம் எதையாவது  வாங்கிச் செல்வது உத்தமம். குறிப்பாக அடுத்தவர் கவனத்தை சிதறச் செய்யும் ஆடைகளை அணியாமல், நேர்த்தியான ஆடைகளை அணிந்து செல்ல வேண்டும்.

    * சிவன் கோயிலுக்கு வில்வத்தையும், பெருமாள் கோவிலுக்கு  துளசியை வாங்கி சென்று அர்ச்சனைக்கு கொடுக்கலாம்.

    * கோயிலுக்குள் உள்ளே செல்லும் போது முதலில் கோயில் கோபுரத்தை வணங்கிவிட்டு  செல்ல வேண்டும்.

    * விநாயகர் சன்னதியில் தலையில் மூன்று முறை கொட்டிக் கொண்டு, மூன்று தோப்புக்கரணம் போட வேண்டும்.

    * விநாயகரை ஒரு தரமும், சூரியனை 2 தரமும், அம்பாளையும், விஷ்ணுவையும் 4 தரமும், ஆஞ்சநேயரை 5 முறையும் பிரதட்சணம் செய்ய வேண்டும்.

    * மூலவருக்கு அபிஷேகம் நடந்து கொண்டிருக்கும் போது கோயில் பிரகாரத்தைச் சுற்றக்கூடாது. அபிஷேகத்தை கண்டால் அலங்காரமும் பார்க்க வேண்டும்.

    * இறைவனுக்கு  நமஸ்காரம் செய்யும் போது மேற்கு அல்லது தெற்கில் கால் நீட்டல் வேண்டும். வடக்கிலும், கிழக்கிலும் கால் நீட்டுதல் கூடாது.

    * வேண்டுதல்களையும் பிரார்த்தனைகளையும் கொடிமரத்தின் அருகே நின்று கேட்க வேண்டும்.

    * திருக்கோயிலில் இருக்கும் நேரமாவது சிவ  நாமமும் நாரயண நாமமும் தவிர நமது புத்தியில் மனதில் வேறு எந்த சிந்தனையும் இருக்கக்கூடாது.

    * ஆலயத்திற்குள் எந்த தனி மனிதரையும் வணங்கக் கூடாது. அப்படி வணங்கினால்,  கும்பிட்டவரின் பாவம் எதிரில் உள்ளவரை சேரும்.

    * சனிபகவானை நேருக்கு நேர் நின்று கும்பிடக்கூடாது.

    * கோவிலிலிருந்து, பிரசாதம் தவிர வேறெதையும் எடுத்துச் செல்லக்கூடாது.

    * சண்டிகேசுவரரின் சன்னதியில் நூலை கிழித்துக் போடுவது, கைதட்டுவது போன்றவை செய்தல் கூடாது. சிவ தியானம் பூர்த்தி செய்யச் சொல்லி அவரிடம் வேண்டிவிட்டு, சிவனுடைய அருளைத் தவிர, வேறெதையும் கொண்டு செல்லவில்லை என்று சண்டிகேசுவரரிடம் தெரிவித்துவிட்டு செல்ல வேண்டும்.

    * சிவன் கோவிலில் காலபைரவரையும், பெருமாள் கோவிலில், சக்கரத்தாழ்வாரையும் வழிபட, நம்மை செய்வினை தோஷங்கள் அண்டாது.

    இந்த குறிப்புகளை நெஞ்சில் நிறுத்தி பக்தி சிரத்தையுடன், திருக்கோயில்கள் தெய்வ சன்னதி என்பதை உள்ளப்பூர்வமாக உணர்ந்து வணங்கிட நம் பாவங்கள் தீரும். நோய் நொடி அகலும். வீட்டில் மகாலட்சுமி அருள் நிலைக்கும்.
    ஒவ்வொரு திதியையும் பரிபாலனம் செய்யும் மூல தேவிகளை நாம் மறவாமல் வழிபட்டால், வறுமை நீங்கும். அனைத்து துன்பங்களும் விலகும்.
    லலிதா பரமேஸ்வரியை ஸ்ரீசக்கர ரூபத்தில் வழிபடும் முறை ‘ஸ்ரீவித்யை’ எனப் போற்றப்படுகிறது. ஸ்ரீவித்யை தேவியின் அம்ருத கலைகள், பதினைந்து பாகங்களாகப் பிரிந்து ஒவ்வொரு கலையும் ஒவ்வொரு தேவியாக உருவம் பெற்று பதினைந்து நித்யா தேவிகளாக தேவியைச் சுற்றி கொலுவீற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் அம்பிகையின் ஓர் அங்கமாக பாவிக்கப்படுகின்றனர்.

    பவுர்ணமியுடன் முடிவடையும் சுக்லபட்சம் (வளர்பிறை) 15 நாட்களும், அமாவாசையுடன் முடிவடையும் கிருஷ்ண பட்சம் (தேய்பிறை) 15 நாட்களுமாக ஒரு மாதத்தின் இரு பிரிவுகளாக அமைந்துள்ளன. மகா நித்யாவின் கலைகளில் தோன்றிய பதினைந்து திதி நித்யாக்களும், ஒவ்வொரு பட்சத்திற்கும் ஒருநாள் என மாதத்தில் இரு நாட்கள் இப்பிரபஞ்சத்தை நிர்வகிக்கும் பொறுப்பை மேற்கொள்கின்றனர்.

    தெய்வங்களை கோகுலாஷ்டமி, ராமநவமி போன்ற திதிகளிலும், முன்னோர்கள் கடன்களை அமாவாசை அல்லது அவர்கள் இறந்த திதிகளிலும் நாம் வழிபட்டு வருகிறோம். ஆனால், அதே நாளில் இந்தத் திதிக்குரிய தேவதைகளை நாம் வழிபடுவதில்லை. அதனால் கூட நமக்கு உரிய முழு பலன்களும் கிடைப்பதில்லை என்று சொல்லலாம். ஒவ்வொரு திதியையும் பரிபாலனம் செய்யும் மூல தேவிகளை நாம் மறவாமல் வழிபட்டால், வறுமை நீங்கும். அனைத்து துன்பங்களும் விலகும்.

    ஹோமங்களை நம் வீடுகளில் செய்வதன் மூலமும், ஆலயங்களில் நடைபெறும் ஹோமங்களில் பங்கு பெறுவதன் மூலமும் நமது கர்ம வினைகளை ஓரளவு குறைத்துக் கொள்ள முடியும்.
    ஹோமங்களை நம் வீடுகளில் செய்வதன் மூலமும், ஆலயங்களில் நடைபெறும் ஹோமங்களில் பங்கு பெறுவதன் மூலமும் நமது கர்ம வினைகளை ஓரளவு குறைத்துக் கொள்ள முடியும். ஒவ்வொரு ஜீவ ராசியும் தன் வினைகளுக்கு உரிய பலன்களை அனுபவித்துதான் தீர வேண்டும். என்றாலும், ஹோமங்கள் செய்வதன் மூலமும், பிற இடங்களில் நடைபெறும் ஹோமங்களில் கலந்து கொள்வதன் மூலமும் விசேஷ நற்பலன்களைப் பெற முடியும்.

    வழிபாட்டு முறைகளில் ஹோமங்களுக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. ஒரு குறிப்பிட்ட தெய்வத்தைப் பிரார்த்தனை செய்ய வேண்டு மானால், அதற்குரிய ஹோமத்தை செய்வதன் மூலம் அந்த தெய்வத்தின் அனுக்ரஹத்தைப் பெற முடியும். கோவைக்குச் செல்ல வேண்டும் என்று தீர்மானித்தால், கோவை செல்லும் ரயிலில்தான் ஏறி அமர வேண்டும். மதுரை செல்லும் ரயிலில் ஏறி அமர்ந்தால், கோவைக்குப் போக முடியாது. அது போல நாம் எந்த தெய்வத்தை நினைத்து - என்ன பிரார்த்தனையை வைக்கிறோமோ, அதைக் கட்டாயம் அந்த தெய்வம் நிறைவேற்றித் தந்து விடும்.

    என்ன ஒன்று... நம் பிரார்த்தனையில் ஆத்மார்த்தம் இருக்க வேண்டும். சஞ்சலங்கள் இருக்கக் கூடாது. இன்றைக்கு ஹோமங்கள் என்று எடுத்துக் கொண்டால் ஆயிரக்கணக்கான ஹோமங்கள் பழைய நூல்களில் சொல்லப்பட்டிருக்கின்றன. கணபதி ஹோமம், சுதர்சன ஹோமம், நவக்கிரக ஹோமம், தன்வந்த்ரி ஹோமம், ம்ருத்யஞ்ஜய ஹோமம், சுயம்வரா பார்வதி ஹோமம், வாஸ்து ஹோமம் என்று ஏகப்பட்டவை இருந்தாலும் ஒவ்வொரு ஹோமமும் ஒவ்வொரு விதமான பலனை நமக்கு அருளுகின்றன.

    தேக ஆரோக்கியம், செல்வ வளம், மன நிம்மதி, பரிபூரண ஆயுள், நிரந்தர வேலை, திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், எதிரிகளின் தொல்லை தீர்த்தல், வியாபார அபிவிருத்தி என்று ஒவ்வொருவரும் தங்களுக்குத் தேவைப்படுவதைப் பெறுவதற்கு ஹோமங்கள் பேருதவி புரிகின்றன.

    எல்லா ஹோமங்களையும் நாம் வசித்து வரும் வீடுகளில் செய்ய முடியாது. வீட்டில்தான் ஹோமங்கள் அனைத்தையும் செய்தாக வேண்டும் என்கிற கட்டாயமும் இல்லை (வசதி வாய்ப்பு குறைந்தவர்கள் தங்களால் வீட்டில் ஹோமம் செய்ய முடியவில்லையே என்று ஏங்க வேண்டாம். அத்தகையவர்கள் தங்களால் முடிந்த வழிபாட்டை மனபூர்வமாக இறைவனுக்கு செய்தாலே போதும்).

    தேச நன்மை கருதியும், நாம் வசிக்கும் ஊரின் நலன் கருதியும் ஆலயங்கள், மண்டபங்கள் போன்ற பொது இடங்களில் பிரமாண்ட அளவில் ஹோமங்கள் நடக்கும்போது நம் சக்திக்கு முடிந்த வழிபாட்டுப் பொருட்களை வாங்கி அங்கே அர்ப்பணிக்க வேண்டும்.

    எதுவுமே வாங்கித் தர முடியாதவர்கள், தங்களால் முடிந்த உடல் உழைப்பைக் கொடுக்க லாம். அதற்கு ஈடு இணை இல்லை. ஆலயம் மற்றும் பொது இடங்களில் ஹோமங்கள் நடத்தப்படும்போது அதன் பலன்கள் அனைவருக்கும் போய்ச் சேரும் என்பதில் சந்தேகம் இல்லை. ஹோமத்தின் சங்கல்பதாரர் என்று ஒருவர் இருந்தாலும், இந்த ஹோமத்தில் கலந்து கொள்ளும் அனைவருக்குமே அதற்குண்டான பலன் கிடைக்கிறது. 
    நம்முடைய முன்னோர்களின் காலத்தில் தங்கள் பிள்ளைகளுக்கு தங்கள் இஷ்ட தெய்வத்தின் பெயரை வைத்ததற்கு காரணம் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
    ஒரு மன்னன் பெருமாளிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்தான். தினமும் பெருமாளை வணங்காமலும், அவரது திருநாமங்களை உச்சரிக்காமலும் அவனுக்கு எந்த வேலையையும் செய்ய முடியாது. ஆனாலும் அவனின் முன் வினை அவனை தொடர்ந்தது. அதன் பலனாக அவன் பல நோய்களால் அவதிப்பட்டான். தன்னால் சரிவர நாட்டை கவனிக்க முடியாது போகவே, தன் மூத்த மகனுக்கு பட்டம் சூட்டிவிட்டு, படுத்த படுக்கையாக கிடந்தான்.

    அந்நிலையிலும் அவனுக்கு திருமாலின் பெயர் மட்டும் மறக்கவில்லை. அச்சுதா... அச்சுதா... என் வாழ்வை முடித்து விடு. உன்னோடு சேர்த்துக் கொள், என சதா நேரமும் புலம்பிக்கொண்டே இருந்தான்.ஒருநாள் ஒரு முனிவர் அரண்மனைக்கு வந்தார். அவரிடம், "சுவாமி, நோயின் கொடுமையை சகிக்க முடியவில்லை. என் உயிர் பிரிய மறுக்கிறதே" என அழுதான். முனிவர் அவன் நிலை கண்டு அவனை தேற்றி , "மன்னா! நீ அன்னதானம் செய்தாயா?" என்றார்.

    மன்னனும் ஆமாம் சுவாமி! தினமும் அந்தணர்களுக்கும், ஏழைகளுக்கும் வயிறார உணவு படைக்கிறேன், என்றான். "சரி ,இனிமேல் அப்படி செய்யாதே! அரை வயிற்றுக்கு உணவிடு. அரைகுறையாக உணவிட்டால், சாப்பிடுவோர் உனக்கு சாபமிடுவர். சாபத்தின் கடுமையால் இறந்து போவாய்" என்றார் முனிவர். அவர் சொன்னதில் மன்னனுக்கு உடன்பாடு இல்லையென்றாலும், ஒரு மகானே சொல்கிறாரே என ஏற்றுக்கொண்ட மன்னன் அரை சாப்பாடு போட உத்தரவு போட்டான்.

    சாப்பிட்டவர்கள் சபித்தார்கள். ஆனாலும், மன்னனின் உயிர் பிரியவில்லை.இதென்ன ஆச்சரியம், என வியாதியின் கொடுமையையும், சாபத்தையும் சேர்த்து அனுபவித்த சூழ்நிலையில், முனிவர் மீண்டும் வந்தார்."சுவாமி! நீங்கள் சொன்னது போல செய்தும் உயிர் பிரியவில்லையே" என்றான் மன்னன். "மன்னா! நானும் வரும் வழியில் தான் கவனித்தேன். உன் ஏவலர்கள் தானமிடும் போது, அச்சுதா... அச்சுதா என பரந்தாமனின் பெயரைச் சொல்லி உணவிடுகின்றனர். அச்சுதன் என்று பெயர் சொன்னால், உயிர் பிரியாது. பரந்தாமன் அவர்களைக் கைவிடுவதில்லை. இனி நீ பெருமாள் பெயரைச் சொல்வதையும் நிறுத்து" என்றார்.

    அதிர்ச்சியடைந்த மன்னன் மறுத்து விட்டான். "எனக்கு இன்னும் அவஸ்தை அதிகரிக்குமானாலும் பரவாயில்லை. இந்த நோய் நீடித்து விட்டு போகட்டும். ஆனால், பகவான் பெயரைச் சொல்வதை மட்டும் என்னால் நிறுத்த முடியாது. நீண்டநாளாக ஏற்பட்ட பழக்கத்தை அவ்வளவு எளிதில் ஒருவரால் விட்டுவிட முடியாது" என சொல்லிவிட்டான். மன்னனுடைய மன உறுதியை கண்டு மகிழ்ந்த பரந்தாமனும் மன்னன் முன் தோன்றி, அவனைப் பாராட்டி, வைகுண்டத்தில் வாழும் பாக்கியத்தையும், பிறவா நிலையும் தந்து மகிழ்ந்தார்.

    கடவுளின் நாமத்துக்கு தான் எவ்வளவு சக்தி. நம்முடைய முன்னோர்களின் காலத்தில் தங்கள் பிள்ளைகளுக்கு தங்கள் இஷ்ட தெய்வத்தின் பெயரை வைத்த காரணமும் இது தான். இறைவன் திருநாமத்தை திரும்பத் திரும்பச் சொன்னால் அவன் அருளுக்கு பாத்திரம் ஆவோம்.

    அவ்வையார் அம்மன் கோவிலில் பெண்கள் கூழ், கொழுக்கட்டை படைத்தனர். நீண்ட வரிசையில் பெண்கள் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர்.
    ஆடிமாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதம் ஆகும். இந்த மாதங்களில் வரும் செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு மற்றும் விழாக்கள் நடைபெறுவது வழக்கம்.

    ஆரல்வாய்மொழி தாழக்குடி அருகே அவ்வையார் அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி மாதம் செவ்வாய்க்கிழமைகளில் அம்மனுக்கு பிடித்தமான உணவு பதார்த்தங்களை படைத்து வழிபட்டால் நினைத்த காரியம் நடக்கும். திருமணம் பாக்கியம் கிடைக்க வேண்டியும், குழந்தை வரம் வேண்டியும் ஏராளமான பெண்கள் இங்கு வந்து வழிபடுவது வழக்கம்.

    இதனாலேயே குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளாவின் பிற பகுதிகளில் இருந்தும் ஏராளமான பெண்கள் இங்கு வந்து வழிபாடு செய்து செல்வார்கள்.

    அதன்படி நேற்று ஆடி மாத முதல் செவ்வாய்க்கிழமை தொடங்கியதால் அதிகாலையில் இருந்தே உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பெண்கள் அவ்வையார் அம்மன் கோவிலுக்கு வந்தனர்.


    கோவிலின் அருகில் உள்ள தென்னந்தோப்பில் பெண்கள் அமர்ந்து, அம்மனுக்கு படைப்பதற்காக கொழுக்கட்டையை தயார் செய்யும் காட்சி.

    பின்னர் அவர்கள், கோவில் வளாகத்திலும், அருகில் உள்ள தென்னந்தோப்பிலும் குடும்பம், குடும்பமாக அமர்ந்து தாங்கள் கொண்டு வந்த பொருட்களை வைத்து கூல், கொழுக்கட்டைகளை செய்து அம்மனுக்கு படைத்து, சிறப்பு வழிபாடு நடத்தினர். நண்பகல் 12 மணியளவில் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர். அதைத்தொடர்ந்து கோவிலில் உள்ள கணபதி, முருகன் உள்ளிட்ட சன்னதிகளுக்கும் பூஜை நடந்தது. தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது.

    முப்பந்தல் இசக்கியம்மன் கோவிலிலும் ஆடி செவ்வாய்க்கிழமையையொட்டி அபிஷேகங்கள், சிறப்பு பூஜை, அன்னதானம் நடைபெற்றது. இதேபோல் ஆலமூடு அம்மன் கோவிலிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.

    இதையொட்டி அரசு போக்குவரத்து கழகம் சார்பில் அவ்வையார் அம்மன் கோவில், முப்பந்தல் இசக்கியம்மன் கோவில், ஆலமூடு அம்மன் கோவில்களுக்கு பக்தர்கள் நலன்கருதி சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. 
    சில குழந்தைகள் சோறு ஊட்டும் பொழுது சாப்பிடாது. குழந்தைகள் நல்ல முறையில் உணவு உண்ணவும், உடல் திடகாத்திரம் அடையவும் அன்னபூரணியை வழிபட வேண்டும்.
    சில குழந்தைகள் சோறு ஊட்டும் பொழுது சாப்பிடாது. அதைப் பார்த்து பெற்றோர்கள் கவலைப்படுவர். சில குழந்தைகள் மிட்டாய், ரொட்டி இனிப்புப் பொருட்களை மட்டும் சாப்பிடும். சோறு ஊட்டும்பொழுது சாப்பிடாமல் வெறுத்து ஒதுக்கும். குழந்தைகள் நல்ல முறையில் உணவு உண்ணவும், உடல் திடகாத்திரம் அடையவும் அன்னபூரணியை வழிபட வேண்டும்.

    உணவு ஊட்டும் முன்னால் தினமும் குழந்தையின் கையால் ஒருபிடி அரிசியை வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். 45 நாட்கள் தொடர்ந்து அன்னபூரணி படத்தின் முன் அந்த அரிசியைச் சேர்த்து வைக்க வேண்டும். ஒரு மண்டல அரிசி சேர்ந்த பிறகு, அதோடு நாமும் கொஞ்சம் அரிசியைச் சேர்த்து ஏழைக் குழந்தைகளுக்கு அன்னதானம் செய்யலாம்.

    அதோடு மட்டுமல்லாமல் குருவாயூர் மற்றும் நின்ற கோலத்து விஷ்ணு ஆலயங் களுக்குச் சென்று, குழந்தையின் எடைக்கு எடை வெல்லமும், பச்சரிசியும் கொடுத்து, இறைவனை அர்ச்சித்து வழிபட்டால் சாப்பிட மறுக்கும் குழந்தைகள் நன்றாக உணவு உண்ணத் தொடங்கும். 
    சில தெய்வங்களுக்கு சில அபிஷேகப் பொருட்கள் மூலம் நாம் அபிஷேகம் செய்தால் உடனடியாகப் பலன் கிடைக்கும். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
    சில தெய்வங்களுக்கு சில அபிஷேகப் பொருட்கள் மூலம் நாம் அபிஷேகம் செய்தால் உடனடியாகப் பலன் கிடைக்கும். அந்த அடிப்படையில் திருநீலக்குடி இறைவனுக்கு தைலக்காப்பு அபிஷேகம் (நல்லெண்ணெய்) செய்வது நல்லது. திருப்பாம்புரம் என்ற ஊரில் உள்ள பிரளயம் காத்த விநாயகருக்கு சதுர்த்தியன்று தேனாபிஷேகம் செய்வர்.

    திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமிக்கு குடம், குடமாகப் பாலாபிஷேகம் செய்வர். அபிஷேகப் பொருட்களை ஆகர்ஷிக்கும் ஸ்தலங்களாக விளங்கும் இந்த ஸ்தலங்களுக்கு செல்வதன் மூலமும், பிரதோஷ நேரத்தில் நந்திக்கு செய்யும் 16 வகை அபிஷேகத்தின் மூலமும், கத்திரி வெயில் காலத்தில் சிவனுக்கு மேனியில் சொட்டுச் சொட்டாக வடியும் தீர்த்த அபிஷேகத்தின் மூலமும் நாம் நற்பலன் பெற முடியும்.

    இறைவனின் மேனி குளிர்ந்தால் இதயமும் மகிழும் வரம் நமக்குக் கிடைக்கும். 
    ஒருவர் வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் வெற்றி பெற வேண்டுமானால் வாராகியின் அருளைப் பெற வேண்டியது அவசியமாகும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    அன்னை லலிதாம்பிகை, ஒவ்வொரு அரக்கனையும் கொல்ல ஒரு சக்தியை உருவாக்கினார். அந்த வகையில் விசுக்ரன் எனும் அசுரனை கொல்ல வாராகி எனும் சக்தியை அன்னை லலிதாம்பிகை படைத்தாள். வாராகியின் சிறப்பு பற்றி லலிதா சகஸ்ரநாமத்தின் 78-வது சுலோகத்தில் புகழ்ந்து கூறப்பட்டுள்ளது. ஒருவர் வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் வெற்றி பெற வேண்டுமானால் வாராகியின் அருளைப் பெற வேண்டியது அவசியமாகும். அதற்கு வழிகாட்ட பெரம்பலூரைச் சேர்ந்த வாராகி உபாசகர் சத்தியசீலன் குருக்கள் வாராகி பற்றிய தகவல்களை தருகிறார். படித்து பலன் பெறுங்கள்...

    ஆதிநாயகி அண்டம் படைத்த தாயும் நீ
    பாதி உடல் தான்யேற்ற சிவபத்தினி நீ
    சோதி வடிவாகி சோதனைகளை முறிப்பவள் நீ
    வேத ஒளியாகி இவ்வுலகை காப்பாய் இனி

    “சர்வம் சத்திமயம் அவளின்றி இவ் வுலகில் எது ஜெயம்”-இவ்வுலகமே அவள் பிடியில் தான் இயங்குகிறது, நான்மறையும், நானிலமும், எண் திசையும் அவளின் அருளாட்சியை தான் போற்றி புகழ்கின்றது. அண்டத்தை காக்கதான் எத்தனை வடிவம்? அதில் வரும் பேராற்றலை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. ஆதிசக்தியாய் தோன்றி ஆதிசிவன், ஆதிநாரணன், ஆதிபிரம்மன் ஆகியோரை படைத்த தாய் பற்றி நான்மறை வேதம் போற்றும் புகழ் போதாது,போதாது.

    அன்னையவள் உலக உயிர்காக்க எடுத்த வடிவங்கள் சில. கொடுத்த வரங்களும் நலங்களும் பல,
    காஞ்சியிலே காமாட்சி
    மதுரையில் மீனாட்சி

    காசியிலே விசாலாட்சியாக, உருவெடுத்து உயிர் களை காத்தருள்பவள், வடிவங்களில் வகைகோடி இருந்தாலும் சக்தி என்ற வடிவின் நாயகி தான் அவள், வரங்களை அளிப்பதில் வரலெட்சுமியாய், கல்வியை அளிப்பதில் கலைமகளாய், வீரத்தை கொடுப்பதில் மலை மகளாய் வடிவெடித்து வையகத்தை வாழ செய்பவள்.

    சரி அவள் பெருமைகளை சொல்ல இந்த ஒரு ஜென்ம வாழ்நாள் போதாது சொல்லி கொண்டே போகலாம்.

    அனைத்திலும் அவள் உறைந்திருக்கிறாள், இறுதியில் அவளே கதி என் பதையும் அவளே முக்தி தரும் மூகாம்பிகா என்றும் நம்மை சொல்லால் சொல்ல வைத்து உணர்வால் உணர்த்துகிறாள் என் அன்னை.

    அவள் அவதாரம் மன்மத வருடம் கொண்டே தொடங்கியதை நான் உணர் வேன். அதை உங்களுக்கும் உணர்த்த நான் கடமைபட்டுள்ளேன்.
    யார் இந்த வாராகி?

    (1) சக்திகளிலே சாந்த சொரூபமும் உண்டு, உக்ர சொரூபமும் உண்டு. பக்தர்கள் பூஜை செய்யும் போது சாந்த கோலம் கொண்ட புன்சிரிப்போடு திகழ்கிறாள் அன்னை.

    (2) பக்தர்களை சத்ருக்கள் சோதிக்கும் போது கோபம் கொண்டு அசுரனை வதம் செய்ய உக்ர நிலையை அடைகிறாள், ஆதி பராசக்தி வடிவங்களில் உயர்ந்த வடிவம். தோல்வியை துரத்தி எளிதில் வெற்றி கொடுக்கும் வடிவம்தான் இந்த வாராகி.

    பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம், தபோலோகம் உள்ளிட்ட ஏழு லோகங்களின் காவல் படைத்தலைவி, தன்னை நம்பிய பக்தர்களுக்கு துளிகூட தீவினை அண்டாது காப்பதில் மூங்கில் போன்ற திடமான உடலை கொண்ட வெற்றி தேவதை அவள். எட்டு திசை அதிபர்களின் ஆயுதங்களில் உறைந்திருப்பவள் இந்த வாராகி.

    வாராகி என்றாலே வரம் என்று பொருள். இவள் அதர்வண வேதத்தின் தலைவி யாகவும் விளங்குகிறாள்.

    “எழிற்பெரும் சேனை எதிர்வரினும் விலக்க வல்லாள்
    ஒரு மெல்லியதன் பாதம் விரும்புகவே”

    என கூறுகின்றது வாராகி மாலை, அதாவது எத்தனை சேனைகள் கோடியளவில் நின்றாலும் அவள் பாதத்தை பணிந்த பக்தனுக்காக அத்துனை பேரையும் வீழ்த்தி தன் பக்தனை காத்து ரட்சிப்பாள் என்று வாராகி மாலை அவள் வீரத்தை புகழ்கின்றது.

    வாராகியின் வடிவம்

    வாராகி=வாராகம் என்பது பன்றியை குறிக்க கூடிய சொல், அன்னையவள் எதிரிகளை தவிடு பொடியாக்கி உலகை காக்க இந்த அவதாரம் எடுத்தாள்.
    மனித உடலும் மிருகத்தலையும் கொண்ட வர்கள் அதர்வண வேத தெய் வங்கள். இவர் களுக்கு நூறு மடங்கு சக்தி அதிகம்.

    அதில் அன்னையாகப்பட்டவள் உலக நன்மைக்காக அழகிய பெண்ணின் உட லும் வராகி முகமும் (காட்டு பன்றி முகம்) கொண்டு ஆவேச வடிவாய் எதிரியை வெல்லும் பேராற்றலாய் காட்சியளிக்கிறாள். அவள் வடிவத்தை அழகாய் சொல்கிறது வாராகி மாலை:

    “இருகுழை கோமளம், தாள்புஷ்பராகம் இரண்டுகண்ணும்
    குருமணிநீலம் கைகோமேதகம் நகம் கூர்வ யிரம்
    திருநகைமுத்து கனிவாய் பவளம் சிறந்த வளல்லி
    மரகதநாமம் திருமேனியும் பச்சை மாணிக்கமே-

    வாராகியின் இரு செவிகளும் மாணிக்க ஒளியுடையதாம், இரண்டு பாதங்களும் புஷ்பராகம் போன்று மலர்கிறதாம். அந்த அழகிய இரு விழிகளும் நீலக்கல் போன்றதாம். அவள் நகம் வைரம் போன்று மின்னுகிறதாம். அவள் புன்னகையோ முத்தை போன்று உள்ளதாம். அவள் செவ்வாய் பவள நிறத்தில் அமைந்து ஆர்ப்பரிக்கின்றதாம். இடையோ மரகதம், உடலோ பச்சை நிற ஒளி ரும் திருமேனி என அவள் அம்சத்தை விவரிக்கின்றது.

    இவள் உறுகொண்டு உருவான காரணமே மானிட பிறப்புக்கும், அரசாள் பவர்களுக்கும் வெற்றியை, வாக்கு வலிமையை தருவதற்கே. அதைவிட ஒரு பக்தனை பக்குவப்படுத்தி ஞானத்தை தந்து வெற்றி உருவாக வடிவெடுக்க செய்வதில் வாராகி அன்னையே முதலிடம் வகிக்கின்றாள்.

    அருள்காட்சி வடிவம்:-

    வாராகி என்பவள் புவனேஸ்வரியின் படைத்தலைவி. அவளின் எதிரிகளை பொடிபொடியாக்கும் பைரவியும் வாராகியே.

    புவனேஸ்வரி மாதாவிற்கு யார் எதிரிகள்? அசுரர்கள்தான் மானிட பிறப்பு களில் உள்ள அசுர குணம், காமம், குரோதம், தான் எனும் அகந்தை இவற்றை எல்லாம் அழித்து தவிடுபொடியாக்கி நலமுற செய்யவே அவதரித் திருக்கிறாள் வாராகி.

    வாராகிதேவியின் பிறப்பிடம் பூபுரம் என்று சொல்லப்படும் பதினாறாவது ஆவரணமாகும். இது லலிதா பரமேஸ்வரியின் ஸ்ரீசக்ர மாகும். இது சிந்தாமணி கிருகத்தின் நுழைவுவாயில். இங்கு ஆயிரம் தூண்கள் கொண்ட மாபெரும் கோட் டையில் அவதரித்து சூரிய சந்திரர்கள் முக்கோடி தேவர் களின் ஒட்டுமொத்த வடிவாகி சுடர்விட காட்சியளிக்கிறாள்.

    “ஸ்ரீசக்ர வடிவில் திகழும் அன்னை புவனேஸ்வரிக்கு எட்டு திக்கிலும் அமர்ந்து எட்டு நாமங்களை கொண்டு வாராகி திகழ்கின்றாள்.

    அவை 1. ஆதி வாராகி, 2.லகு வாராகி, 3. பஞ்சமி, 4. அஸ்வாரூடா வாராகி, 5.தண்டநாத வாராகி, 6. தூம்ர வாராகி, 7.பரூகத் வாராகி, 8. ஸ்வப்ந வாராகி.
    வாராகி அன்னை கரிய நிறம் உடையவள். கையில் “உலக்கையும்”, “கலப்பையும்” ஏந்தியவள். வேதவடிவாகி பூமியை நோக்கும் வடிவம் கொண்டு கூரிய இரு பற்களை உடையவள் இந்த வாராகி.

    வாராகி உதித்த நட்சத்திரம்:- ஆயில்யம்
    வாராகி உதித்த திதி:- பஞ்சமி (வளர்பிறை)
    வாராகி உதித்த மாதம்:-ஆடி
    வாராகிக்கு உகந்த நிறம் :- நீலம், கருப்பு, பவள நிறம் ஆனால் நீல நிற வஸ் திரமே முதன்மையானது.
    வாராகிக்கு உகந்த மலர் :- நீல சங்கு பூ, கருந்துளசி, வில்வம்
    வாராகிக்கு வலிமை கூடும் நாள்:- பவுர்ணமி, தேய்பிறை பஞ்சமி, அஷ்டமி, தசமி திதி சிறப்பு
    வாராகி வந்து நம்மோடு பேசும் நேரம்:- இரவு 8 மணிக்கு மேல் 10 மணிக்குள் பூஜை செய்ய சிறப்பு
    பிடித்த அமுது:- சர்க்கரை வள்ளிகிழங்கு, எருமை தயிர், பயிர் வகை கள், மாதுளை, அண்ணாசி, செங்கரும்பு, ஆமை வடை.

    பூர்வபுண்ணிய படி யாரெல்லாம் வாராகியை நாடுவார்கள்?....

    ஒருவர் ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்திருந்தால் அவர்கள் அன்னையின் அருள் பெற்றவர்கள். பிறக்கும் போதே ஜாதகத்தில் (சனி+கேது) அல்லது சனிக்கு(1,5,9) எனும் திருகோண ஸ்தானங்கள் கேது அமர்ந் தாலும் அன்னையின் அருள் எளிமையாக கிட்டும். மேலும் பனிரெண்டாம் இடத்தில் ராகு அமைய பெற்றவரும் (சுக்ரன்+புதன்+ ராகு) சேர்க்கை பெற்று பாவத்தில் அமைந்தவர் அன்னை பிறக்கும் போதே தேடி வருவாள், ராகு என்பவனே ஜோதிடத்தில் மாந்திரீக சக்தி, சித்திக்கு அதிபதி. அவர் மோட்ச ஸ்தானம் எனும் 12-ம் இடத்தில் அமரும் போது நிச்சயம் இப்பிறப்பில் அவன் ‘வாராகி’-யை நாடியே தீர வேண்டும் அவள் அருள் பெற வேண்டும் என்பதே நியதி,

    வாராகி எனும் நாமமே இனி நம்மை கரை சேர்க்க இருக்கின்றது. சிங்கத்தின் மீதேறி அண்டமெல்லாம் அஞ்சிநடுங்க அதர்மங்கள் ஒடுங்கி ஓட, சத்ருக்கள் குடலை பிடுங்கி வீச வருகிறாள் வாராகி.

    இனி உங்கள் வாழ்வில் வசந்தமே. வரம் தர வாழ்வு தர வர இருக்கிறாள் வாரம் தோறும், இனி உங்கள் வாழ்வில் அனைத் தும் சுகமே, நிம்மதியே. செல்கின்ற இடமெல்லாம் அன்னையால் வெகுமதியே

    யார் கையில் எல்லாம் யார் இல்லங்களில் எல்லாம் இந்த மலர் செல்கின்றதோ அங்கெல்லாம் அவள் அமர்ந்து ஆட்சி செய்ய இருக்கிறாள் என்று அர்த்தம்...
    சிங்கிரிகுடி கோவில் கருவறையில் மூன்று நரசிம்மர் அருள்பாலிப்பது சிறப்பாகும். இதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
    தன் பக்தன் பிரகலாதன், அவனது தந்தை இரணியனால் கொடுமைப்படுத்தப்படுவதை அறிந்த திருமால், நரசிம்ம அவதாரம் எடுத்து அவனைக் கொன்றார். அவர் 16 கைகளுடன் சிங்கிரிகுடி தலத்தில் எழுந்தருளியுள்ளார்.

    அவரது கோபத்தை தணிக்கும் வகையில் நரசிம்மரின் இடப்புறம் இரணியனின் மனைவி நீலாவதி, வலதுபுறம் மூன்று அசுரர்கள், பிரகலாதன், சுக்கிரன், வசிஷ்டர் ஆகியோர் உள்ளனர். வடக்கு நோக்கியபடி யோக நரசிம்மர், பாலநரசிம்மர் உள்ளனர். இவ்வாறு ஒரே கருவறையில் மூன்று நரசிம்மர் அருள்பாலிப்பது சிறப்பாகும்.

    உற்சவர் பிரகலாத வரதன், ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். நரசிம்மர் கைகளில் பிரயோக சக்கரம், குத்து கத்தி, பாணம், சங்கு, வில், கதை, கேடயம், வெட்டப்பட்ட தலை ஆகியவற்றை ஏந்தியுள்ளார். மற்ற கைகள் இரணியனை வதம் செய்த நிலையில் உள்ளது. 
    ×