search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95492"

    மகாவிஷ்ணு எடுத்த 4-வது அவதாரம் நரசிம்ம அவதாரம். இந்த அவதாரம் எப்படி நிகழ்ந்தது என்பதற்கான வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    உலகில் அதர்மம் அதிகரித்த போதெல்லாம் மகா விஷ்ணு அவதாரம் எடுத்ததாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது. அந்த வகையில் மகாவிஷ்ணு எடுத்த 4-வது அவதாரம் நரசிம்ம அவதாரம். இந்த அவதாரம் எப்படி நிகழ்ந்தது என்பதற்கான வரலாறு.

    நரசிம்ம அவதாரம் எப்படி தோன்றியது என்பதற்கான புராண வரலாறு வருமாறு:-

    சத்யுகத்தில் காசியப முனிவருக்கும் தித்திக்கும் இரணியர்கள் என அழைக்கப்படும் இரணியகசிபு மற்றும் இரணியாக்சன் இரு அசுர சகோதரர்களும் பிறந்தனர். கூடலுக்கு ஆகாத அந்தி நேரத்தில் கூடியதால் அவர்களுக்கு அசுரர்கள் பிறந்து விட்டதாகக் கூறப்படுகிறது.

    வராக அவதாரத்தில் விஷ்ணுவால் இரணியாக்சன் கொல்லப்பட்ட பின்னர் வெகுண்ட இரணியன் விஷ்ணுவை அழிப்பதற்குத் தக்கபடித் தன்னை வலியவனாக்கிக் கொள்ள பிரம்மாவை நோக்கித் தவமிருந்தான். பிரம்மாவும் காட்சி தந்தார். இரணியன் தனக்கு மனிதர்களாலோ, மிருகங்களாலோ, பறவைகளாலோ, இரவிலோ, பகலிலோ வீட்டிற்கு உள்ளேயோ, வெளியேயோ எந்தவித ஆயுதத்தாலும் மரணம் சம்பவிக்கக் கூடாது. எவ்வுலகிலும் தனக்குப் போட்டியாக யாருமே இருக்கக்கூடாது.

    அனைத்து உயிரினங்களுக்கும் கடவுளருக்கும் தான் மட்டுமே தலைவனாக இருக்க வேண்டும். அத்தகைய சக்தி வேண்டும். யோகங்களினாலும் தவத்தாலும் அடையக்கூடிய காலத்தால் அழியாத வல்லமை தனக்கு வேண்டும் என்று மிக புத்திசாலித்தனமாக வரம் கேட்டான்.
    பிரம்மாவும் அவன் கேட்ட வரத்தை அளித்தார். கிடைத்த சக்தியை வைத்துக்கொண்டு அட்டூழியங்கள் புரிய ஆரம்பித்தான் இரணியன், அவனை அடக்க யாராலும் முடியவில்லை.

    இந்த நிலையில் கொடிய அரக்கனான இரண்யகசிபுக்கும் கயாதுக்கும் மகனாக பிரகலாதன் பிறந்தான். இரணியகசிபு, தான் பெற்ற சாகா வரத்தால் ஈரேழு உலகத்திலும் ஆட்சி புரிந்து வந்தான். தான்தான் கடவுள் என்றும் அனைவரும் தன்னைத்தான் வணங்க வேண்டும் என்றும் அனைவரையும் கட்டாயப்படுத்தி வந்தான்.

    அவனது மனைவி கர்ப்பம் தரித்தாள். நாரத மாமுனி ஆனவர், தாயின் கர்ப்பத்தில் இருந்த குழந்தை பிரகலாதனுக்கு அரி ஸ்ரீமன் நாராயணன் (விஷ்ணு) தான் இந்த ஈரேழு உலகத்திற்கும் கடவுள் என்று போதித்து விட்டார்.

    பிரகலாதன் பிறந்து அவன் கல்வி பயிலும் காலம் வந்ததும் அவனுக்கு அசுரர்களின் குருவான சுக்கிராச்சாரியார் இரணியன் தான் கடவுள் என்று போதிக்க, பிரகலாதன் அரி ஸ்ரீமன் நாராயணன் தான் தன் கடவுள் என்று சாதித்தான். இந்தச் செய்தியறிந்த இரணியன் பிரகலாதனை மாற்றச் சாம, பேத, தான தண்டம் என பலவிதங்களிலும் முயற்சி செய்தான். அவனது முயற்சிகள் எல்லாம் தோல்வியில் முடிந்தன.

    ஆத்திரமடைந்த இரணியன் தன் மகன் என்றும் பாராமல் கொல்ல முயற்சி செய்தான். ஆனால் ஒவ்வொரு முறையும் தோல்வியே அடைந்தான். யானையின் காலால் இடரச் செய்தல், கொடிய விஷம் கொண்ட பாம்புகளோடு அடைத்து வைத்தல், விஷமருந்து செய்தல், தீக்குள் இறங்கச் செய்தல் போன்ற அவனது கொடுமுயற்சிகளில் இருந்து பிரகலாதன், தான் கொண்ட அசைக்க முடியாத விஷ்ணு பக்தியினால் விஷ்ணுவின் உதவியால் காப்பாற்றப்பட்டதாகப் புராணங்கள் கூறுகின்றன.

    இரணியனின் சகோதரி ஹோலிகா அவளை நெருப்பு தீண்டாத வரம் பெற்றிருந்தாள். அவள் மடியில் பிரகலாதனை உட்கார வைத்து தீக்குள் இறக்கிய போது பிரகலாதன் விஷ்ணு பெயரைச் சொல்லி வேண்ட நெருப்பு பிரகலாதனை ஒன்றும் செய்யவில்லை, மாறாக ஹோலிகா நெருப்பில் மாண்டாள். இந்நிகழ்வு இந்தியாவில் ஹோலிப் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது.

    பிரகலாதனைக் கொல்லத் தான் எடுத்த முயற்சிகளில் எல்லாம் தோற்றுப்போன இரணியன் தானே நேராகப் பிரகலாதனைக் கொல்லப் போன போதும் பிரகலாதன் பயமின்றி தான் வணங்கும் கடவுள் தன்னைக் காப்பார் என்றான். அது கேட்டு ஆத்திரத்தில் அறிவிழந்தவனாக இரணியன் விஷ்ணுவைத் தானே கொல்லப் போவதாகக் கூறி உன் கடவுளைக் காட்டு என பிரகலாதனிடம் கேட்க, பிரகலாதனோ தன் கடவுள் அரி ஸ்ரீமன் நாராயணர் எங்கும் இருப்பார் எதிலும் இருப்பார், ஏன் தூணிலும் இருப்பார் எந்தத் துரும்பிலும் இருப்பார் என்று கூறினான்.

    இரணியன் ஒரு தூணைக் காட்டி, இந்த தூணில் உள்ளாரா என்று கேட்டான். ஏனெனில் அந்த தூண், இரணியனே பார்த்து, பார்த்து கட்டிய தூணாகும். பிரகலாதனோ இதை உடைத்து சோதித்துப் பாருங்கள் தந்தையே என்று கூறினான்.



    இரணியன் ஒரு ஆயுதம் எடுத்து தன் எதிரில் இருக்கும் தூணை ஓங்கித் தாக்கினான். மறுவினாடி அந்த தூண் தூள், தூளாக வெடித்து இரண்டாகப் பிளந்தது. தூணில் இருந்து சிங்க முகத்தோடு கூடிய நரசிம்மர் வெளிப்பட்டார்.

    அதாவது ஸ்ரீமந் நாராயணன் பாதி மனித உருவத்திலும், பாதி சிங்க உருவத்திலும் அவதரித்தார்.சிங்கம் போன்ற திருமுகத்தில் தாடியுடனும், கோரைப் பற்களுடனும், சிவந்த கண்களுடனும், தலைக்கு கீழ்பாகம் மனித உடலுடனும், கூர்மையான நகங்களுடனும் தோன்றினார். புதுமையான உருவத்துடன் ஸ்ரீநரசிம்மர் இந்த பூமியில் அவதரித்தார். திருமாலின் நரசிம்ம வடிவம் எட்டுத் திசைகளையும் தாண்டி வளர்ந்தது. அந்த விசுவரூபத்தை முழுவதுமாகக் கண்டவர் யாரும் இல்லை. அரியின் பெரிய வடிவத்துக்கு இந்த உலகம் ஒரு தூசியைப் போன்று காட்சியளித்தது. கடல் ஒரு துளியைப் போலக் காணப்பட்டது.

    பெருங்காற்றானது நரசிங்கப் பெருமாளின் சிறுமூச்சுப் போல இருந்தது. தூய்மையான ஆகாயம் அப்பெருமானின் விரல்களுக்கிடையில் காணப்படும் இடைவெளிக்குச் சமமாக இருந்தது. நரசிம்ம பெருமானின் வடிவத்துக்கு முன்னர் ஐம்பூதங்களும் மிகவும் சிறியதாகவே காணப்பட்டன.

    தூணில் இருந்து தோன்றிய நரசிம்மத்துடன் போர் புரிய இரணியன் தயாரானான். தன் வாளை உருவினான். கடல்களும், மலைகளும் அஞ்சுமாறு பெரிய ஆரவாரம் செய்தான்.

    அவன் எக்காளமாக சிரித்து முடிப்பதற்குள் இரணியனை நரசிம்மப் பெருமான் தன் கைகளால் பற்றினார். அவனை தன் தொடை மேல் கிடத்தி, தன் கூர்மையான நகங்களால் அவன் மார்பினைப் பிளந்தார். பிறகு ரத்தம் பொங்கும் அவன் குடலினை உருவினார். அதை மாலையாகத் தன் மார்பில் அணிந்து கொண்டார்.

    இரணியன் இறந்தது கண்டு எல்லோரும் ஆரவாரம் செய்தனர். ஆனால் நரசிம்மனின் ஆக்ரோசம் தணியவில்லை. இதனால் அவர் அருகே செல்ல பயப்பட்ட அமரர்களும், பிறரும் லட்சுமியின் திருவடிகளை வணங்கி நின்றனர். நரசிம்மரின் சீற்றம் தனிய அருகில் செல்லுமாறு திருமகளை வேண்டிக் கொண்டனர். ஆனால் லட்சுமியும் அவர் அருகே செல்ல அஞ்சினாள்.

    பலரும் வேண்டி நின்றும் அரியின் சீற்றம் தணியவில்லை. ஆனால் பிரகலாதன் மட்டும் நரசிம்மரின் திருவடிகளை வணங்கி ஆனந்தத்தில் மூழ்கியிருந்தான். சிறுவனாகிய பிரகலாதனின் பக்தியைக் கண்டு நரசிம்மப்பெருமானின் கோபம் தணிந்தது. பிரகலாதனை அன்புடன் தன் கரங்களால் தடவிக் கொடுத்தார்.

    பிரகலாதன் நீ விரும்பும் வரத்தைக் கேள் என்று நரசிம்மப் பெருமாள் கூறினார். உடனே பிரகலாதன் உம்மை அன்புடன் வழிபடும் வரம் ஒன்றே எனக்கு வேண்டும் என்றான்.

    பிரகலாதன் சொன்னதைக் கேட்டுத் திருமால் உள்ளம் குளிர்ந்தார். நீ விரும்பவில்லை என்றாலும், சில காலம் இவ்வுலகத்தை ஆளும் பேரரசனாக அனைவரும் போற்ற ஆட்சி புரிந்து வருவாயாக! உலக இன்பத்தை அனுபவித்த பின்னர் என்னிடம் வந்து சேர்வாயாக என்று நரசிம்மர் அருளினார்.

    அரியின் திருநாமத்தை அன்புடன் சொல்லி வணங்கினான் பிரகலாதன். அனைவரும் பயம் நீங்கித் திருமாலின் திருவடிகளை வணங்கித் துதித்தனர்.

    அனைவருக்கும் வரங்கள் தந்து மறைந்தார் வைகுந்தவாசன். நாராயணா எனும் நாமம் எங்கும் ஓங்கி ஒலித்தது.

    பிரகலாதனின் அன்பின் பெருமையை உலகுக்கு உணர்த்தவே திருமால் நரசிம்மப்பெருமானாக அவதாரம் எடுத்தார். தன்னை மனம் உருகி அழைப்பவர்களுக்கு நொடியில் வந்து உதவி செய்வதை நரசிம்ம அவதாரம் நமக்கு உணர்த்துகிறது.

    அது மட்டுமின்றி இறைவன் எங்கும் உள்ளார் என்பதை நரசிம்ம அவதாரம் நமக்கு சுட்டிக்காட்டுகிறது.
    நரசிம்மரை தொடர்ந்து வழிபட்டு வருபவர்களுக்கு எத்தகைய திருஷ்டி தோஷமும் ஏற்படாது. நரசிம்மர் வழிபாடு பற்றிய 20 சிறப்பு தகவல்களை பார்க்கலாம்.
    நரசிம்மரை தொடர்ந்து வழிபட்டு வருபவர்களுக்கு எத்தகைய திருஷ்டி தோஷமும் ஏற்படாது. நரசிம்மர் வழிபாடு பற்றிய 20 சிறப்பு தகவல்களை பார்க்கலாம்.

    1. நரசிம்மரை தொடர்ந்து வழிபட்டு வருபவர்களுக்கு எத்தகைய திருஷ்டி தோஷமும் ஏற்படாது.

    2. நரசிம்மருக்கு சிவப்பு நிற அரளி மற்றும் செம்பருத்தி பூக்கள் மிகவும் பிடித்தமானவையாகும்.

    3. கணவன்-மனைவி அடிக்கடி சண்டை போடு கிறார்களா? நரசிம்மரை வழிபட்டால் தம்பதி இடையே உள்ள கருத்து வேறுபாடுகள் விலகி விடும்.

    4. நரசிம்ம ஜெயந்தி தினத்தன்று கலசம் வைத்து பூஜை செய்ய வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. வெறும் படத்தை வைத்தே பூஜைகள் செய்யலாம்.

    5. நரசிம்மர் அருள் பெற பெண் களும் விரதம் இருக்கலாம். ஆனால் பெண்கள் மிகவும் சுத்தமாகவும், தூய்மையாகவும் இருக்க வேண்டியது அவசியமாகும்.

    6. வீட்டில் நரசிம்மரை வழிபாடு செய்யும்போது வாயு மூலை எனப்படும் வடமேற்கில் வைத்து வழிபடுவது மிகவும் நல்லது.

    7. நரசிம்ம ஜெயந்தி தினத்தன்று வீட்டில் உள்ள சிறுவர்- சிறுமிகளுக்கு நரசிம்ம அவதார கதையை படித்து காண்பித்தால் பிரகலாதனுக்கு கிடைத்த பலன்கள் கிடைக்கும்.

    8. நரசிம்மரை நினைத்து விரதம் இருப்பவர்கள் கண்டிப்பாக பால் மற்றும் பால் தொடர்பான உணவுப் பொருட்களை தவிர்க்க வேண்டும்.

    9. நரசிம்மரின் அருள் பெற விரும்புபவர்கள், ஸ்ரீமத் பாக வதத்தில் உள்ள பிரகலாத சரித்திரத்தின் (7-வது ஸ்கர்தம் 1 முதல் 10 அத்தியாயங்கள் வரை) பாராயணம் செய்ய வேண்டும். பிரகலாதரால் செய்யப்பட்ட ஸ்தோத்திரத்தில் 7-வது ஸ்கந்தம் 9-வது சர்க்கத்தையும் பாராயணம் செய்தல் வேண்டும்.

    10. நரசிம்மரை வழிபட்டு சென்றால் வழக்குகளில் வெற்றி கிடைக்கும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள்.

    11. நரசிம்மனிடம் பிரகலாதன் போல் நாம் பக்தி கொண் டிருக்க வேண்டும். அத்தகைய பக்தியுடன் வழிபடும் பக்தர்களுக்கு, நரசிம்மர் நன்மைகளை வாரி வழங்குவார். நரசிம்மரை தொடர்ந்து வணங்கி வழிபட்டு வந்தால் 8 திசைகளிலும் புகழ் கிடைக்கும்.

    12. நரசிம்மரை ‘மருத்யுவேஸ்வாகா’ என்று கூறி வழிபட்டால் மரண பயம் நீங்கும்.

    13. ‘அடித்தகை பிடித்த பெருமாள்’ என்றொரு பெயரும் நரசிம்மருக்கு உண்டு. அதாவது ‘பக்தர்கள் உரிமையோடு அடித்து கேட்ட மறுவினாடியே உதவுபவன்’ என்று இதற்கு பொருள்.

    14. நரசிம்மர் வீற்றிருக்கும் ஆலயங்களில் ஆஞ்சநேயர் நிச்சயம் இருப்பார்.

    15. வைகாசி மாதம் வளர்பிறை சதுர்த்தியன்று சூரியன் மறையும் நொடியில் (பகலுமின்றி, இரவுமின்றி) மாலை அந்திப்பொழுதில் நரசிம்மர் அவதரித்தார். இதுவே நரசிம்ம ஜெயந்தியாகும்.

    16. நரசிம்மரின் அவதாரம் இறைவன் எங்கும் உள்ளார் என்பதை உணர்த்துவதாகும்.

    17. தீராத வினைகளால் பாதிக்கப்பட்டவர்கள், மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள், மனநிலை தடுமாறி யவர்கள், கிரகங்களின் தோஷத்தால் துன்புறுபவர்கள், கடன் தொல்லையில் கஷ்டப்படுபவர்கள் ஸ்ரீநரசிம்மரை வணங்க துயர் நீங்கி சுக வாழ்வு பெறுவார்கள்.

    18. ஸ்ரீநரசிம்ம அவதாரம் பற்றி கம்பர் தனது ராமா யணத்தில் இரணிய வதை படலம் ஒன்றை தனியாக சேர்த்து உள்ளார். இதை நினைவூட்டவே ஸ்ரீரங்கத்தில் கம்பர் தனது ராமாயணத்தை அரங்கேற்றியபோது ஸ்ரீரங்க கோவிலில் சிங்கமுக மண்டபம் அமைத்து தரப்பட்டது. இதை இன்றும் காணலாம்.

    19. நரசிம்ம தத்துவத்தை “மத்ஸ்ய” புராணத்திலும் “விஷ்ணு தர்மோத்திர” புராணத்திலும் காணலாம்.

    20. கும்பகோணம் மன்னார்குடி மார்க்கத்தில் வலங்கைமான் ஸ்ரீவரதராஜ பெருமாள் ஆலயத்தில் ஸ்ரீயோக நரசிம்மர் சன்னதி உள்ளது. பிரதோஷபூஜை இங்கு சிறப்பாக நடத்தப்படுகின்றது. பூஜையில் கலந்து கொண்டாலும் (அல்லது) பிரதோஷ பூஜையை ஏற்று நடத்தினாலும் கடன் தொல்லை, தீராதநோய், வறுமை, செய்வினை கோளாறுகள் உடனுக்குடன் விலகுகின்றன. சுவாதி நட்சத்திரக்காரர்கள் பிரதோஷ பூஜையை ஏற்று நடத்துவது நல்லது.
    கங்கையில் நீராடினால் அனைத்து பாவங்களும் நீங்கும். கங்கையை விட காவிரியில் நீராடுவது பன்மடங்கு புண்ணியத்தை நமக்கு கிடைக்கச் செய்யும் என்பது எவ்வளவு சிறப்பான விஷயம்.

    கங்கையில் நீராடினால் அனைத்து பாவங்களும் நீங்கும். முக்தி கிடைக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகத்தான் இருக்கும். ஆனால் கங்கையை விட காவிரியில் நீராடுவது பன்மடங்கு புண்ணியத்தை நமக்கு கிடைக்கச் செய்யும் என்பது எவ்வளவு சிறப்பான விஷயம்.

    கங்கையை விட உயர்ந்தது

    இந்த காவிரியின் சிறப்பை எடுத்துரைக்கும் வகையில், ‘கங்கையிற் புனிதமாய காவிரி’ என்று புகழப்பட்டுள்ளது. புண்ணியம் சேர்க்கும் காவிரியின் புனித நீராடலுக்கு, மாதங்களிலேயே சிறப்பு மிகுந்த ஒன்றாக பார்க்கப்படும் ஐப்பசி மாதம்தான் உகந்தது. இந்த மாதத்தில் மயிலாடுதுறையில் ஓடும் காவிரி படித்துறையில் மூழ்கி எழுந்தால், ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினால் என்ன புண்ணியம் கிடைக்குமோ, அந்த புண்ணியம் ஒரே நாளில் கிடைத்துவிடும் என்பது ஐதீகம்.

    இத்தகைய சிறப்பு வாய்ந்த காவிரியின் மகிமையை பற்றி அரிச்சந்திர மன்னனுக்கு, அகத்திய முனிவர் விரிவாக எடுத்துரைத்துள்ளார். இதுபற்றி ஸ்ரீதுலா புராணம் தெளிவாக கூறுகிறது. அகத்திய முனிவர் காவிரியின் சிறப்பு குறித்து கூறியபோது, அதனை அங்கிருந்த பல முனிவர்கள் கேட்டுணர்ந்தனர். அவர்கள் அனைவரும் சாதாரண முனிவர்கள் கிடையாது. தவத்தில் சிறந்து விளங்கிய மகா தபஸ்விகள். அந்த மகா தவவான்களின் பெயர்களை தெரிந்து கொள்ளலாம்.

    மகா தபஸ்விகள்

    வசிஷ்டர், பிருகு, காச்யபர், வாமதேவர், வீதிஹோத்ரர், துர்வாசர், ஜாபாமலி, வாமதேவர், மங்கணர், காலவர், அத்ரி, விசுவாமித்திரர், கண்வர், யாஜர், மார்க்கண்டேயர், அஸிதா, பரத்வாஜர், கவுதமர், உபயாஜர், பராசரர், பைலவர், சாதாதபர், வியாசர், மவுத்கலர், முக்தர், வால்மீகி, கவஷர், ஜாதுகர்ணர், சுதீஷணர், சதானந்தர், சத்யவிரதர், மதங்கர், ஸத்யதபஸ், நாரதர், காந்தர், மாண்டவ்யர், ஆஸூரி, தவும்யர், கவிமதுஹாச்ரயர், ஹோதா, தூமகேது, ஜலப்லவர், சங்கர், லிகிதர், போதாயனர், யக்ஞகேது, யாக்ஞவல்கியர், மருக்ரது, புலஸ்தியர், புலஹர், கவுரர், ஆச்வலாயனர், ஆபஸ்தம்பர், மரீசி, யக்ஞராசி, பப்ரு.

    இத்தனை ரிஷி முனிவர்களும் அறியும்படியாக, காவிரியை பற்றி அகத்திய முனிவர் கூறியதை நாமும் தெரிந்து கொள்ளலாம்.

    புண்ணிய நதிகளின் சங்கமம்

    ஐப்பசி மாதத்தில், புண்ணிய நதிகள் அனைத்தும் காவிரியில் கலக்கின்றன. எனவே அந்த மாதத்தில் காவிரியில் நீராடினால், புண்ணிய தீர்த்தங்கள் அனைத்திலும் நீராடிய யோக பலன் கிடைக்கும். முக்தி பேறும் கிட்டும். அதுமட்டுமின்றி ஐப்பசி மாதத்தில் காவிரியில் நீராடுபவரையும் சேர்த்து அவரது தாயார் வழியில் ஏழு தலைமுறையினரும், தந்தை வழியில் ஏழு தலைமுறையினரும் வைகுண்டப் பதவியை அடைவார்கள் என்று சாஸ்திரம் கூறுகிறது.

    நீராடும் போது இரண்டு கைகளும் நிரம்ப பூக்களை எடுத்து காவிரிக்கு சமர்ப்பணம் செய்து பூலோக வைகுண்டத்தில் வாசம் செய்து வரும் ரங்கநாதரை நினைத்து வழிபட வேண்டும். ஐப்பசி மாதம் அனைத்து நாட்களும் காவிரியில் நீராடுவதாக ஒருவர் நினைத்துக்கொண்டால், சில காரியங்களை நிறைவேற்றவேண்டியது முக்கியம்.


    கடைபிடிக்க வேண்டியவை

    எண்ணெய் தேய்த்துக் கொள்ளக் கூடாது. பகல் நேரங்களில் தூங்கக் கூடாது. முகச்சவரம் மற்றும் முடிவெட்டிக்கொள்ளுதல் கூடாது. தாம்பூலம் போட்டுக்கொள்வது, வீண் பேச்சு, பாய், கட்டில்களில் படுப்பது, சாப்பிட கூடாதவற்றைச் சாப்பிடுவது, வெளியிலோ அல்லது ஓட்டலிலோ சாப்பிடுவது, ஆண்–பெண் சங்கமம், தானம் வழங்குவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

    இதே போல் உணவில் பூசணிக்காய், மொச்சைக்கொட்டை, கேழ்வரகு, தினை, உளுந்து, துவரை, கத்தரிக்காய், கொள்ளு, முருங்கைக்காய், சிறுகீரை, சுரைக்காய் போன்றவற்றை சேர்த்துக்கொள்ளக்கூடாது. இரவு உணவு, காலை சந்தி– மாலை சந்தியில் உணவு உட்கொள்ளக் கூடாது. பழைய சாதம், எருமைப்பால் போன்றவற்றையும் சாப்பிடக்கூடாது.

    கடைபிடிக்க வேண்டியவைகளை படித்து விட்டு அயர்ந்து போய்விட வேண்டாம். தங்களால் இயன்றவரை கடைபிடித்தால் கூட புண்ணியம் கிடைக்கும்.

    முடவன் முழுக்கு

    ஐப்பசி மாதம் காவிரி ஆற்றில் நீராடினாலும், நீராடாவிட்டாலும், கார்த்திகை முதல் நாள் அன்றும், அதற்கு முந்தைய நாளான ஐப்பசி மாத கடைசி தினத்திலும் ஏராளமான பக்தர்கள் காவிரியில் நீராடுவார்கள். ஐப்பசி மாத கடைசி தினத்தில் நடைபெறும் புனித நீராட்டம் ‘கடை முழுக்கு’ என்றும், கார்த்திகை முதல் நாள் அன்று நடைபெறும் புனித நீராட்டம் ‘முடவன் முழுக்கு’ என்றும் அழைக்கப்படுகிறது.

    ‘ஐப்பசி மாதம் முடிந்து விட்டதே!, என்னால் புண்ணிய பலன்களை அடைய முடியாமல் போய்விட்டதே!’ என்று கூறி வருத்தப்பட்டான் ஒரு முடவன். அந்த வருத்தத்தை மயூரநாதரிடம் முறையீடாகவும் வைத்தான். அவனது வருத்தமான புலம்பலைக் கேட்ட ஈசன், அசரீரியாக தோன்றி, ‘நீ சென்று காவிரியில் மூழ்கி எழு, உனக்கும் முக்தி பேறு கிடைக்கும்’ என்று கூறினார். அதன்படியே முடவனும் கார்த்திகை முதல்நாள் அன்று காவிரியில் புனித நீராடி, முக்தி பேற்றை அடைந்தான். ‘முடவன் முழுக்கு’ நடைபெறுவதற்கு காரணமாக இந்தக் கதை கூறப்படுகிறது.

    இடப தீர்த்த சிறப்பு

    ஐப்பசி மாதத்தில் வரும் அமாவாசை தினத்தில் மயிலாடுதுறையில் உள்ள மயூரநாதர் கோவிலில் முன்பு உள்ள காவிரியில் நீராடுவது மிகவும் விசேஷமானது. ஏனெனில் இந்தப் பகுதியில் ஓடும் காவிரியே, இந்தத் தலத்திற்கு மிகப்பெரிய பெருமையை சேர்க்கும் தீர்த்தமாக அமையப்பெற்றிருப்பதுதான். இங்குள்ள காவிரி ஆற்று படித்துறை பகுதிக்கு இடப (நந்தி) தீர்த்தம் என்று பெயர்.

    எவர் ஒருவரும் கயிலை மலையானை தரிசனம் செய்ய செல்லும் முன்பு வாயிலில் வீற்றிருக்கும் நந்தி தேவரிடம் அனுமதி பெற்ற பிறகே உள்ளே செல்ல முடியும். அத்தகைய சிறப்பு வாய்ந்தவர் நந்தி பகவான். ஒருமுறை நந்திதேவருக்கு கர்வம் ஏற்பட்டு விட்டது. அவரது வாக்கினில் ஆணவம் குடிகொள்ளத் தொடங்கியது.

    இதனால் நந்தி பகவானை, பாதாளத்தில் அழுத்தி தள்ளினார் சிவபெருமான். அப்படி அழுத்தி தள்ளிய இடம்தான் மயிலாடுதுறை காவிரியின் துலாக் கட்டம். இந்த இடத்தின் நடுவில் இன்றும் இறைவனின் திருவுருவை கண்டு பரவசம் அடையலாம். இடப தேவர் அழுந்தப்பட்ட இடம் என்பதால் அந்த தீர்த்தம் இடப தீர்த்தம் என்று பெயர் பெற்றது.

    சிவபெருமானால் பாதாளத்தில் அழுந்தப்பட்டதும், நந்தி தேவர் உண்மையை உணர்ந்தார். பின்னர் சிவஞானத்தை உபதேசம் செய்யும்படி சிவபெருமானை விரும்பி கேட்டுக்கொண்டார். சிவனும் அவ்வாறே நந்திதேவருக்கு சிவஞானத்தை உபதேசம் செய்து அருளினார். இது ஐப்பசி மாத அமாவாசை தினத்தன்று, காவிரியின் வட பகுதியில் உள்ள வள்ளலார் கோவில் என்னும் இடத்தில் நடந்தது. இதனால் தான் காவிரியில் ஐப்பசி அமாவாசையன்று நீராடி வழிபடுவது சிறப்பு வாய்ந்ததாக மாறியது.

    ஐப்பசி அமாவாசையில் நடுப்பகல் வேளையில் இடப தீர்த்த துறையில் இருந்து காவிரி தீர்த்தத்தை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்தால், அந்த தீர்த்தம் எத்தனை ஆண்டுகள் ஆயினும், கெட்டுப்போகாது என்பது இன்றும் அனைவராலும் நம்பப்படும் ஐதீகம். இன்றும் பலர் மேலே சொன்ன நேரத்தில் தீர்த்தத்தை பிடிப்பது நடைபெற்று வருகிறது.
    ஒருவரது ஜாதகத்தில் ராகு கிரகம் யோகம் செய்யக்கூடாது என்பார்கள். அவ்வாறு யோகம் செய்யும் போது, மிகப் பெரிய கெடுதலையும் செய்து விடுவார் என்பது பொதுவான கருத்து.
    காரகன் - பிதாமகன்
    தேவதை - பத்திரகாளி
    தானியம் - உளுந்து
    உலோகம் - கருங்கல்
    நிறம் - கறுப்பு

    குணம் - தாமஸம்
    சுபாவம் - குரூரர்
    சுவை - புளிப்பு
    திக்கு - தென் மேற்கு
    உடல் அங்கம் - முழங்கால்

    தாது - இல்லை (நிழல் கிரகம் என்பதால்)
    நோய் - பித்தம்
    பஞ்சபூதம் - ஆகாயம்
    பார்வை நிலை - தான் நின்ற ராசியில் இருந்து 7-ம் இடத்தை முழுமையாகவும், 3, 10 இடங்களை கால் பங்கும், 5,9 ஆகிய இடங்களை அரை பங்கும், 4,8 இடங்களை முக்கால் பங்கும் பார்ப்பார்.

    பாலினம் - பெண்
    உபகிரகம் - வியாதீபாதன்
    ஆட்சி ராசி - இல்லை
    உச்ச ராசி - விருச்சிகம்

    மூலத்திரிகோண ராசி - இல்லை
    நட்பு ராசி - மிதுனம், கன்னி, துலாம், தனுசு, மகரம், கும்பம், மீனம்
    சமமான ராசி - இல்லை
    பகை ராசி - மேஷம், கடகம், சிம்மம்

    நீச்ச ராசி - ரிஷபம்
    திசை ஆண்டுகள் - பதினெட்டு ஆண்டுகள்
    ஒரு ராசியில் சஞ்சரிக்கும் காலம் - ஒன்றரை ஆண்டுகள்
    நட்பு கிரகங்கள் - சுக்ரன், சனி
    சமமான கிரகங்கள் - புதன், குரு

    பகையான கிரகங்கள் - சூரியன், சந்திரன், செவ்வாய்
    அதிகமான பகையான கிரகம் - சூரியன்
    இதர பெயர்கள் - வஞ்சன், நஞ்சன், கரும்பாம்பு
    நட்சத்திரங்கள் - திருவாதிரை, சுவாதி, சதயம் 
    இந்து கோவில்களில் பல்வேறு அதிசயங்கள் நிறைந்துள்ளது. இந்த வகையில் சில அதிசயம் நிறைந்த கோவில்களை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ளது கோட்டையூர். இங்குள்ள நூற்று ஒன்று சாமி மலை மீது உள்ள குகையில் ஒரு அடி உயரம் கொண்ட கல்லால் ஆன அகல் விளக்கு இருக்கிறது. இதில் இளநீர் விட்டு தீபமேற்றினால் அது பிரகாசமாக எரியும் அதிசயத்தைக் காணலாம்.

    ஜெயங்கொண்டத்தில் உள்ள கங்கை கொண்ட சோழபுரம் கோவிலில் உள்ள கிணற்றிற்கு அருகில் ஒரு சிங்கத்தின் சிற்பம் இருக்கும். சிங்கத்தின் வாய் பகுதியில் ஒரு கதவு தென்படும். அதன் வழியாக கீழே இறங்கினால் கிணற்றில் குளிக்கலாம். ஆனால் மேலேயிருந்து பார்த்தால் நாம் குளிப்பது தெரியாது.

    திருநல்லூர் கல்யாணசுந்தரேஸ்வரர் (பஞ்சவர்ணேஸ்வரர்) திருக்கோவிலில், 6 நாழிகைக்கு ஒரு முறை சிவலிங்கம் வர்ணம் மாறுகிறது.

    திருக்கழுக்குன்றத்தின் தெப்பக்குளத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்கு தோன்றுகிறது. சிவனுக்கு படைக்கப்பட்ட பிரசாதத்தை கழுகு உண்ணும் அதிசயத்தையும் இங்கே பார்க்கலாம்.

    திருச்செந்தூரில் சூரனை வதம் செய்ததும், தாமரை மலரைக் கொண்டு சிவபூஜை செய்தார், முருகப்பெருமான். அதை உணர்த்தும் வகையில் மூலவர் சிலையின் வலது கையில் தாமரை மலர் உள்ளது. 
    ஜூன் மாதம் 26-ம் தேதியில் இருந்து ஜூலை மாதம் 2-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
    26-ந்தேதி (செவ்வாய்) :

    * திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் கங்காளநாதர் காட்சியருளல்.
    * கானாடுகாத்தான் ஆலயத்தில் சிவபெருமான் ரத உற்சவம்.
    * மதுரை மீனாட்சி அம்மன் கோவில், திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் கோவில்களில் ஊஞ்சல் சேவை.
    * திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் சேஷ வாகனத்திலும், தாயார் தோளுக்கினியானிலும் பவனி.
    * சமநோக்கு நாள்.

    27-ந்தேதி (புதன்) :

    * பவுர்ணமி
    * காரைக்கால் அம்மையார் மாங்கனித் திருவிழா.
    * திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ரத உற்சவம்.
    * திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் கருட வாகனத்திலும், தாயார் அன்ன வாகனத்திலும் திருவீதி உலா.
    * சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு கண்டருளல்.
    * சமநோக்கு நாள்.

    28-ந்தேதி (வியாழன்) :

    * திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் யானை வாகனத்திலும், தாயார் தண்டியலிலும் பவனி.
    * சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் கோவில் ரத உற்சவம்.
    * மதுராந்தகம் கோதண்டராம சுவாமி புறப்பாடு.
    * கீழ்நோக்கு நாள்.

    29-ந்தேதி (வெள்ளி) :

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் வேதவள்ளி தாயாருக்கு திருமஞ்சன சேவை.
    * திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள், தாயார் இருவரும் கண்ணாடி சப்பரத்தில் பவனி.
    * சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்க பாவாடை தரிசனம்.
    * மதுராந்தகம் கோதண்டராம சுவாமி பவனி வருதல்.
    கீழ்நோக்கு நாள்.



    30-ந்தேதி (சனி) :

    * திருநெல்வேலி டவுண் ராஜராஜேஸ்வரி கோவில் வருசாபிஷேகம்.
    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை.
    * திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் குதிரை வாகனத்திலும், தாயார் பூப்பல்லக்கிலும் பவனி.
    * திருநள்ளாறு சனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை.
    * இன்று விஷ்ணு ஆலய தரிசனம் நன்மை தரும்.
    * மேல்நோக்கு நாள்.

    1-ந்தேதி (ஞாயிறு) :

    * முகூர்த்த நாள்.
    * சங்கடஹர சதுர்த்தி.
    * சிரவண விரதம்.
    * திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் கோவிலில் ரத உற்சவம்.
    * காஞ்சீபுரம் வரதராஜப் பெருமாள் தேஷ்டாபிஷேகம்.
    * கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதி எதிரில் அனுமனுக்கு திருமஞ்சன சேவை.
    * மேல்நோக்கு நாள்.

    2-ந்தேதி (திங்கள்) :

    * முகூர்த்த நாள்.
    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் மூலவருக்கு திருமஞ்சன சேவை.
    * சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.
    * திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் கோவிலில் சப்தாவரணம்.
    * கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதியில் கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை.
    * மேல்நோக்கு நாள். 
    இறை தொண்டு செய்கின்றவர்களுக்கு கர்வம் வந்தால் அது பாபம் என்று நம் சாஸ்திரங்கள் கூறுகின்றன. இதை குறிக்கும் ஆன்மிக கதையை விரிவாக பார்க்கலாம்.
    கயிலாயத்தில் ஒரு நாள் நந்தி பகவானுக்கு தன் மீதும் தன் சிவ பக்தியின் மீதும் அதிக கர்வம் ஏற்பட்டது. உலகத்திற்கே படியளக்கும் எம்பெருமானுக்கு இது தெரியாதா என்ன. நந்தியின் கர்வத்தை அடக்க நினைத்த ஈசனும், நந்தியின் மேல் அமர்ந்தபடி ஒரு முறை பூமியை வலம் வந்தார்.

    அவரைச் சுமந்து சென்ற நந்தீஸ்வரர்க்கு மூன்று லோகங்களையும் தாங்குகின்ற இறைவனையே நான் தாங்குகிறேன். ஆகா! என்னே என் திறமை? என்ற எண்ணத்துடன் நந்தி இறைவனைச் சுமர்ந்து வந்தார். இறை தொண்டு செய்கின்றவர்களுக்கு இந்த மாதிரி எண்ணம் வந்தால் அது பாபம் என்று நம் சாஸ்திரங்கள் கூறுகின்றன.

    நந்தியின் கர்வத்தை அடக்கும் நேரமும் வந்தது. இறைவன் தன் ஜடா பாரத்திலிருந்து ஒரு முடியை எடுத்து தாம் அமர்ந்திருந்த நந்தி முதுகில் வைத்துவிட்டு இறங்கிக் கொண்டார்.

    அந்த பாரத்தைத் தாங்க முடியாமல் நான்கு கால்களும் பின்னலடைய நந்தி அப்படியே நாக்குத் தள்ளியபடியே நின்றுவிட்டார். மொத்த சடாமுடியும் சுமக்கும் போது பாரம் இல்லை. ஏனென்றால் இறைவன் அப்போது நந்தியுடன் இருந்தார். ஆனால் ஆணவம் உண்டாகி, இறைவனை விட்டு பிரிந்த போது ஒரு முடியின் பாரம் கூட தாங்க முடியவில்லை.

    தனது வல்லமையின் மீது கர்வம் கொண்டிருந்த நந்தீஸ்வரரும் தனது தவறை உணர்ந்து கர்வம் நீங்கினார். அவனன்றி இவ்வுலகில் எது அசையும்!
    மதுரையில் உள்ள கோச்சடை ஐய்யனாரை குழந்தை பேறு இல்லாதவர்கள் ஐய்யனாரை வழிபட்டால் அந்த பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    விருதுநகர் அருகே “ஏழாயிரம்பண்ணை’ என்ற பகுதியை சிதம்பரபாண்டியன் என்ற குறுநில மன்னர் ஆண்டு வந்தார். தனது குலதெய்வமான மதுரையில் உள்ள கோச்சடை ஐய்யனார் கோயிலுக்கு குதிரையில் சென்று வழிபட்டு வந்த பின்புதான் மற்ற வேலைகளை ஆரம்பிப்பார் சிதம்பர பாண்டியன்.

    அவரால் தனது முதுமை காலத்தில் ஐய்யனாரை வழிபட முடியாமல் போனது. இதனால் மனம் வருந்தி சோர்வுற்று இருந்தார். ஒரு நாள் அவரின் கனவில் தோன்றிய ஐய்யனார், “நான் உன் அருகில் உள்ள ஒரு கிராமத்தில் குளத்தின் கரையில் தென் மேற்கில் கருவேலமரத்தின் கீழ் காட்சியளிப்பேன்’’ என்றார்.

    இதையடுத்து தனது பரிவாரங்களுடன் “ஏழாயிரம் பண்ணை’ அருகில் உள்ள திருவேங்கடம் மற்றும் பல்வேறு ஊர்களுக்கு சென்று தேடினார் சிதம்பர பாண்டியன். அப்போது மலையின் அடிவாரத்தில் உள்ள குளத்தின் கரையில் ஒரு மயில் பறந்து சென்றது. அதை மன்னரின் கண்கள் நோக்க, அப்போது ஐய்யனார் எலுமிச்சை கனியின் வடிவில் காட்சியளித்தார். மயில் மூலம் தன்னைக் காண்பித்த ஐய்யனாருக்கு அங்கே கோயில் எழுப்பினார் மன்னர். அங்கே பதினெட்டாம்படி கருப்பசாமி மற்றும் இருளாண்டி ஆகிய சுவாமிகளையும் பிரதிஷ்டை செய்தார்.

    சிதம்பர பாண்டியனுக்குப் பிறகு பராமரிப்பு இல்லாமல் இருந்தது இவ்வாலயம். கோயிலின் முன் குதிரைகள் மற்றும் வீரபத்திரன், லாடசன்னாசி, தவசி, தம்பிரான்,சனீஸ்வரர் மற்றும் பல்வேறு சுவாமிகளுக்கு ஆலயம் எழுப்பப்பட்டு கடந்த 2007ஆம் வருடம் குடமுழுக்கு நடைபெற்றது. தற்போது முறையாக பராமரிக்கப்பட்டு, இரண்டு கால பூஜைகள் நடைபெறுகிறது.

    இக்கோயிலின் சிறப்பு ஸ்ரீராமபுலி ஐய்யனார் தவக்கோலத்தில் உட்கார்ந்த நிலையில் காட்சியளிக்கிறார். மேலும் குழந்தை பேறு இல்லாதவர்கள் ஐய்யனாரை வழிபட்டால் அந்த பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    அமைவிடம்: ராஜபாளையத்தில் இருந்து திருவேங்கடம் வழியாக 43 கி.மீ. தொலைவு. கோவில்பட்டியில் இருந்து 14 கி.மீ தொலைவு.
    எந்த மரத்தை சுற்றினால் என்ன பலன் என்று நிறைய பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எந்த மரத்தை சுற்றினால் என்ன பலன் என்பதை பற்றி தெரிந்துக் கொள்வோம்.
    எந்த ஒரு வேலை செய்யும் போதும் அதற்கான காரண காரியத்தை தெரிந்து செய்தால், அதிக பலன் கிடைக்கும். தெய்வத் திருத்தலங்களில் இருக்கும் மரங்களை சுற்றுவது நன்மை பயக்கும் என்பது நமக்கு தெரிந்த செய்தி. ஆனால் எந்த மரத்தை சுற்றினால் என்ன பலன் என்று நிறைய பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எந்த மரத்தை சுற்றினால் என்ன பலன் என்பதை பற்றி தெரிந்துக் கொள்வோம்.

    அரச மரத்தை சுற்றினால் - ஆண்பிள்ளை பிறக்கும்,

    வேப்ப மரத்தை சுற்றினால் - கர்மவினைகள் தீரும்,

    மாமரத்தை கண்டால் - மங்கள செய்தி வரும்,

    விடதாழை மரம் - சனி தோஷம் போக்கும்,

    பின்னை மரம் - திருமண தடைகளை நீக்கும்,

    ஸம்தானாக மரம் - பிள்ளைகளின் தீய பழக்கங்களை நீக்கும்,

    பாரிஜாத மரம் - உடலில் தீராத நோய்களை தீர்க்கும்,

    பும்ஷிக மரம் - புத்திர பாக்கியத்தை உண்டாக்கும்,

    அரிசந்தன மரம் - ஏவல், பில்லி, சூன்யங்களை போக்கும்,

    குறுந்த மரம் - வீடு, வாகன சேர்க்கை உண்டாகும்,

    கொன்றை மரம் - துஷ்ட சக்திகளை விரட்டும்,

    ஞான மரம் - அறிவு, கல்வி, நல்ல ஞானத்தை தரும்,

    கருநெல்லி - மகாலட்சுமியின் அருள் பார்வை உண்டாகும்,

    நத்தைச்சூரி - நினைத்த காரியம் வெற்றியுடன் முடியும்,
    ஏழரைச்சனி என்பது மூன்று இரண்டரை வருடங்களை கொண்ட ஒரு அமைப்பு. ஒருவரின் ராசிக்கு பின் ராசியான பனிரெண்டாமிடத்தில் சனி நுழைவது விரையச் சனி எனப்படுகிறது.
    விரயச் சனி, ஜென்மச் சனி, பாதச் சனி என்பதைப் பற்றியும், ஒரு மனிதனின் வாழ்நாளில் முப்பது வருடங்களுக்கு ஒருமுறை நிகழும் இந்நிகழ்வில் முதல் சுற்று, இரண்டாம் சுற்று, மூன்றாம் சுற்று எனப்படும் மங்குசனி, பொங்குசனி, மரணச்சனி என்ற மூன்று சுற்றுக்களையும் பற்றிய விளக்கங்களை அநேகர் கேட்டிருக்கிறீர்கள்.

    ஏழரைச்சனி என்பது மூன்று இரண்டரை வருடங்களை கொண்ட ஒரு அமைப்பு. ஒருவரின் ராசிக்கு பின் ராசியான பனிரெண்டாமிடத்தில் சனி நுழைவது விரையச் சனி எனப்படுகிறது. இந்தக் காலகட்டத்தில் ஒரு மனிதருக்கு வருமானங்களை சனி தந்தாலும் அவற்றை சேமிக்க முடியாமல் விரயம் செய்வார் என்று இதைப் பற்றிய அனுபவ ஜோதிட நூல்கள் சொல்கின்றன. இது ஒரு பொதுப் பலன்தான்.

    மிக முக்கியமாக இந்த முதல் இரண்டரை ஆண்டு காலத்தில் ஒரு மனிதர் ஏழரைச் சனியின் கெடுபலன் தாக்கத்தை உணர்வது இல்லை. இன்னும் சொல்லப் போனால் சிலருக்கு அதீதமான பொருள் வரவும் விரயச்சனி காலத்தில் கிடைக்கவே செய்கிறது. இந்த காலகட்டத்தில் ஒரு மனிதனிடம் தாராளமாகவே பணம் இருக்கும்.

    ஏழரைச்சனியின் நடுப்பகுதியும், கடுமையான கெடுபலன்களைச் செய்வதுமான, ஒரு மனிதனின் சொந்த ராசியில் இரண்டரை வருடங்களுக்கு சனி இருக்கும் நிலையே, ஜென்மச்சனி எனப்படுகிறது. இந்த இரண்டரை ஆண்டு காலத்தில், ஒருவரின்  சொந்த நட்சத்திரத்தில் சனி செல்லும் ஏறத்தாழ ஒரு ஆண்டு காலத்தில் மிகக் கடுமையான கெடுபலன்களை தருவார். அதிலும் 40 வயதுக்குள் வரும் சனி இந்த நிலைமையை கண்டிப்பாக செய்யும்.

    சுய நட்சத்திரத்தில் சனி செல்லும்போது ஒரு மனிதனுக்கு வாய்விட்டு அழும்படியான கடுமையான மன அழுத்தம் உள்ள நிகழ்ச்சிகள் நடக்கும். இந்த காலகட்டத்தில் ஒரு மனிதனுக்கு எது பிடிக்காதோ அது நடக்கும். அவனை எது பாதிக்குமோ அந்த விஷயத்தில் சனி கடுமையான கெடுபலன்களைச் செய்வார், இது வயதிற்கு ஏற்றார் போல நடக்கும்.

    சென்ற வாரத்தில் நான் எழுதியதைப் போல, இந்த நேரத்தில்தான் ஒரு இருபது வயது வாலிபனை, வயதிற் கேற்றார் போல காதல் தோல்வியிலும், முப்பது வயதுகளில் இருப்பவனை தொழில் அமைப்புகளிலும், நாற்பதில் இருப் பவனை தொழில், குடும்ப அமைப்புகளி லும் கடுமையான சிக்கல்களை சனி தருவார். சிலருக்கு நெருங்கிய உறவினர் மரணத்தின் மூலமாக மனப் பதட்டத்தைத் தருவார்.

    கோட்சாரத்தில் ஒருவரின் ஜென்ம ராசியில் இருளாகிய சனி அமரும்போது, அவனது மனதை ஆளுமை செய்து தவறான வழியில் செல்லவோ, முடிவெடுக்கவோ வைக்கிறார். ராசியில் சனி இருக்கும் போது தனது கெடுபலன் தரும் கொடிய பார்வை மூலம் அந்த மனிதனின் தைரியம், நற்பெயர் ஆகியவற்றிற்கு காரணமான மூன்றாமிடத்தைப் பார்த்து, அவனது பெயரைக் கெடுத்து, தைரியத்தைக் குலைத்து எதிர்காலம் பற்றிய மனபயத்தை உண்டு பண்ணுவார். ஜென்ம ராசியில் சனி இருக்கும்போது அவரது பத்தாம் பார்வையால் தொழில் ஸ்தானத்தைப் பார்ப்பதால்தான் ஜென்மச் சனி நடக்கும்போது வேலையிழப்பு, சஸ்பென்ட். தொழில் சரிவு போன்றவைகள் நடக்கின்றன.

    பாதச் சனி எனப்படும் ராசிக்கு இரண்டாமிடத் திற்கு சனி மாறியவுடன் இதுநாள் வரை நடந்த கெடுபலன்கள் குறைய ஆரம்பிக்கும். ஆனாலும் இந்த நிலையில் முழுமையான நன்மைகள் நடந்து விடுவது இல்லை. சனி முழுவதுமாக முடிந்ததும் அந்த மனிதர் செட்டிலாகும் வாழ்க்கை வாழ்வதற்கான ஆரம்பங்கள் இந்த பாதச் சனி அமைப்பில் நடக்கும்.

    மங்கு, பொங்கு, மரணச்சனி விஷயத்தை எடுத்துக் கொண்டால், பிறந்த உடன் முதலில் வருகின்ற சனி மங்கு சனி எனவும், இந்த சனி கெடுபலன்களைத் தரும் எனவும், இரண்டாவது முப்பது வருடங்களில் வருகின்ற சனி பொங்கு சனி எனவும், அது நல்ல பலன்களைத் தரும் எனவும், மூன்றாவதாக முப்பது வருடங்களில் வரும் சனி மரணச்சனி எனவும், அது முதல் சுற்று சனியைப் போலவே கெடுபலன்களைக் கொடுத்து ஒரு மனிதனின் ஆயுள், ஆரோக்கியத்தை குலைக்கும் எனவும் ஜோதிடர்களால் விளக்கப்படுகிறது.

    இதில் சிலர் புரிந்து கொள்ளாத ஒரு முரண்பாடு என்னவெனில் குழந்தையாய்  இருக்கும் போது வருகின்ற ஏழரைச்சனியை மங்கு சனி எனவும், அடுத்த முப்பது வயதுகளில் வரும் சனியை இரண்டாவது சுற்று பொங்கு சனி எனச்சொல்லி முப்பது வயதுகளில் வரும் சனி நல்லது செய்யும் என தவறாக நினைத்துக் கொள்கிறார்கள்

    உண்மையில் ஏழரைச் சனி என்பது ஒரு மனிதன் எதிர்காலத்தில் நல்லவிதமாக வாழ்வதற்கான அனுபவங்களையும், பணம் என்றால் என்ன என்பதைப் பற்றிய நேரடி அனுபவத்தையும் தருகின்ற ஒரு அமைப்பு என்பதால் சனிக்கு எவரும் விதிவிலக்காக இருக்க முடியாது. எத்தனை பெரிய யோக ஜாதகமாக இருந்தாலும் அந்த ஜாதகத்திற்கு ஏற்ப சனியின் கெடுபலன்கள் இருக்கவே செய்யும். பூமியில் பிறக்கும் எவரும் ஏழரைச்சனிக்கு விதிவிலக்காக இருக்க முடியாது

    விபரம் தெரியாத குழந்தைப் பருவமான ஏறத்தாழ 15 வயது வரை வருகின்ற ஏழரைச் சனியை ஒருபோதும் கணக்கில் எடுத்துக் கொள்ளவே கூடாது. ஒருவரின் கர்மா விழிக்காத பருவத்தில் வரும் சனி அவருக்கு நல்ல, கெட்ட பலன்களைச் செய்யாது. அந்தப் பருவத்தில் வரும் சனி அவரது பெற்றோருக்கும், குடும்பத்திற்கும் மட்டுமே தீமைகளைச் செய்யும். அதன் மூலம் அந்தக் குழந்தையும் பாதிக்கப்படும்.

    ஒருவருக்கு பத்து வயதில் ஏழரைச்சனி முடிந்திருக்குமாயின், முப்பத்து மூன்று  வயதில் இன்னொரு சுற்று சனி ஆரம்பமாகும். அதனை பொங்கு சனி என்று சொல்லி அந்த இரண்டாம் சுற்று நன்மைகளைச் செய்யும் என்று கணக்கிட கூடாது. உண்மையில் அவருக்கு விபரம் தெரிந்த வயதான இந்த 33 வயதில் வருகின்ற சனியே அவருக்கு முதல் சுற்று சனி போன்ற அனுபவங்களை கொடுத்து கெடுபலன்களை செய்யும்.

    குறிப்பாக இந்த வயதில் வரும் சனி, வேலை தொழில் விஷயங்களில் அவருக்கு சில நிர்ப்பந்தங்களைக் கொடுத்து, தேவையற் றவைகளில் அவரைத் தள்ளி, வயதிற்கேற்ற தொழில், சொந்த வாழ்க்கைகளில் சாதகமற்ற பலன்களை தந்து வாழ்க்கை அனுபவங்களைக் கற்றுக் கொடுக்கும். முப்பது வயதுகளில் இருக்கும் மனிதருக்கு பொங்கு சனி எனப்படும் இரண்டாம் சுற்று சனி பலன் தராது.

    உண்மையில் சற்று விபரம் தெரிந்த இளம்பருவமான இருபது வயதுகளில் இருக்கும்போது நடக்கும் முதல் சுற்று ஏழரைச் சனியை, மங்கு சனி என்று சொல்லி, அடுத்த 50 வயதுகளில் நடக்கும் இரண்டாம் சுற்று சனியை பொங்கு சனி என்று சொல்லலாம். ஐம்பது வயதுகளில் வரும் சனி பெரிய கெடுதல்களை தருவதில்லை. மாறாக நன்மைகளைச் செய்யும்.

    சுருக்கமாக கவனிக்க வேண்டியது என்னவெனில், முதல் சுற்று ஏழரைச் சனி நடக்கும்போது சம்பந்தப்பட்ட மனிதருக்கு, வயதிற்கேற்ற மன அழுத்தங்களை, தோல்விகளை, வாழ்க்கையைப் பற்றிய புரிதல்களை சனி கொடுத்திருந்தால் மட்டுமே அது மங்கு சனியாக இருக்கும். விபரம் தெரியாத குழந்தைப் பருவத்தில் வரும் ஏழரைச் சனியை கணக்கில் எடுத்துக் கொள்ளவே கூடாது.
    நவ நரசிம்மர்களை நவக்கிரகங்கள் வழிபட்டிருக்கின்றன. எனவே நவ நரசிம்மர்களை வழிபட்டால், நவக்கிரகங்களின் அனுக்கிரகமும் கிடைக்கும் என்கிறார்கள்.
    அதர்மத்தை அழித்து தர்மத்தைக் காக்க திருமால் எடுத்த அவதாரங்களில் நரசிம்ம அவதாரமும் ஒன்று. இரணியன் இறைவனை நோக்கி கடும் தவம் இருந்து பூமியிலோ, வானத்திலோ, தேவர்கள், மனிதர்கள், அரக்கர்கள், மிருகங்கள் போன்ற உயிரினங்களாலோ மரணம் ஏற்படக்கூடாது என்று வரம் பெற்றான்.

    தான் பெற்ற வரத்தின் ஆணவத்தால் திருமாலையே எதிர்த்தான். மேலும் ‘நாராயணனே கடவுள்’ என்று சொன்ன தன் மகனையே கொல்ல முயன்றான். தன் பக்தன் பிரகலாதனுக்காக ஒரே நொடியில் தூணைப் பிளந்து கொண்டு அவதரித்த நரசிம்மர், இரணியனை தன் மடியில் கிடத்தி கூரிய நகங்களால் வயிற்றைக் கிழித்து அவனை வதம் செய்தார்.

    உக்கிரம் கொண்ட நரசிம்மரை பிரகலாதன் சாந்தம் கொள்ளச் செய்தான். உக்கிரம் நீங்கிய நரசிம்மர் லட்சுமியை மடியில் அமர்த்தி லட்சுமிநரசிம்மராக காட்சிக்கொடுத்தார். நரசிம்மர் அவதாரம் நிகழ்ந்த இடம், ஆந்திராவில் உள்ள அகோபிலம் ஆகும்.

    ‘அகோ’ என்றால் ‘சிங்கம்’, ‘பிலம்’ என்றால் ‘குகை’ என்று பொருள். நரசிம்மர் இத்தலத்தில் குகைக்குள் காட்சியளிப்பதால் இக்கோவிலுக்கு ‘அகோபிலம்’ என்று பெயர் வந்தது.

    அகோபிலம் என்ற திவ்யதேசம் ஆந்திர மாநிலம் கர்நூல் மாவட்டத்தில் இருக்கிறது. கடப்பாவில் இருந்து 112 கி.மீ. தூரம். தமிழ்நாட்டில் இருந்து அகோபிலம் செல்ல சென்னையில் இருந்து கடப்பாவுக்கு செல்லும் ரெயில் அல்லது பேருந்தில் சென்று, அங்கிருந்து அல்லகட்டா வழியாக அகோபிலத்துக்கு பேருந்து அல்லது வேன் மூலமாகச் செல்லலாம்.

    திருமாலின் நரசிம்ம அவதாரத்தை தரிசிக்க விரும்பிய கருடன், கடும் தவம் இருக்க பகவான் அகோபிலத்தில் ஒன்பது நரசிம்ம வடிவங்களில் கருடனுக்குக் காட்சி கொடுத்தார். கருடன் வழிபட்ட ஒன்பது நரசிம்ம மூர்த்திகளும் சுயம்பு வடிவங்களே. இந்த நவ நரசிம்மர்களை நவக்கிரகங்கள் வழிபட்டிருக்கின்றன. எனவே நவ நரசிம்மர்களை வழிபட்டால், நவக்கிரகங்களின் அனுக்கிரகமும் கிடைக்கும் என்கிறார்கள்.

    ஒன்பது நவ நரசிம்மர்களையும் ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.

    அகோபில நரசிம்மர்

    பவன நதிக்கரையில் அமைந்திருக்கும் குகை ஆலயத்தில் வீற்றிருக்கிறார் இந்த நரசிம்மர். இவர் உயர்ந்த பீடத்தில் சுமார் 2 அடி உயரத்தில், சாலகிராம வடிவில் சுயம்புவாக அருள்கிறார். உக்கிர நரசிம்ம சுவாமியான இவர், ஒரு காலை மடித்து மற்றொரு காலை கீழேவிட்டு தொடை மீது இரணியனை படுக்க வைத்து, இரண்டு கைகளால் வயிற்றைக் கிழிக்கும் தோற்றத்தில் காட்சி தருகிறார். இந்த நரசிம்மரை வழிபாடு செய்தால் சுக்ரனால் ஏற்படும் பாதிப்புகள் அகலும்.

    மாலோல நரசிம்மர்


    இவரைக் காண மலையில் நடந்து செல்ல வேண்டும். கனகப்யா ஆற்றின் கரையில் அமைந்திருக்கிறது இந்த நரசிம்மர் ஆலயம். ‘மா’ என்றால் லட்சுமி என்றும், ‘லோ’ என்றால் காதல் என்றும் பொருள். அன்னையை தன் இடதுமடியில் அமர வைத்துக்கொண்டு இடது காலை மடக்கி, வலது காலை தொங்கவிட்டு சுகா ஆசனத்தில் வீற்றிருக்கிறார், இந்த நரசிம்மர். வலது மேல் கரத்தில் சக்கரம், இடது மேல் கையில் சங்கு, வலது கீழ்கரத்தில் அருள்புரியும் அபயஹஸ்தம், இடது கீழ்க்கரம் மகாலட்சுமியை சுற்றி வளைத்திருக்கிறது. இந்த நரசிம்மர் செவ்வாய் கிரகத்தினால் ஏற்படும் அனைத்து தோஷங்களையும் நீக்கி அருள்பவர்.

    ஜ்வாலா நரசிம்மர்

    மேல் அகோபிலத்தில் இருந்து 3½ கி.மீ தொலைவில் அடர்ந்த காட்டுப் பகுதியில் வேதாசலம், கருடாசலம் மலைகளுக்கு நடுவே இந்த நரசிம்மர் அருளும் கோவில் உள்ளது. அசலாசல மேரு என்னும் மலைப்பகுதியில் ஜ்வாலா நரசிம்மரை தரிசிக்கச் செல்லும் வழி மிக சிரமமானது. இந்த சுவாமி மூன்று மூர்த்திகளாக தரிசனம் தருகிறார். மத்தியில் உக்கிர ரூபமாய் நரசிம்மர் எட்டுத் திருக்கரங்களுடன் இடது காலை மடக்கி வலது காலைத் தொங்கவிட்டு மடியில் இரணியனை வைத்துக்கொண்டிருக்கிறார். இரண்டு கரங்களில் சங்கு, சக்கரமும், இரண்டு கரங்கள் வயிற்றை கிழிப்பது போலவும், மற்ற கரங்கள் அவனது உடல் அங்கங்களை அசையாதபடி பற்றிக்கொண்டும் காட்சி தருகிறது. இந்த சிலைக்கு வலதுபுறம் அவதார சமயத்தில் நரசிம்மரின் தோற்றமும், இடதுபுறம் இரணியனுடன் போர்புரிவது போன்ற சிலையும் காணப் படுகின்றன. இந்த நரசிம்மர் சனி பகவானின் தோஷங்களை போக்குகிறார்.



    பார்கவ நரசிம்மர்

    கீழ் அகோபிலத்தில் இருந்து மேல் அகோபிலத்திற்கு செல்லும் பாதையில் 2 கி.மீ. தொலைவில் சிறுகுன்றின் மேல் இந்த நரசிம்மர் வீற்றிருக்கும் ஆலயம் உள்ளது. 130 படிகளில் ஏறிச் செல்ல வேண்டும். படி ஏறும் முன் பார்கவ தீர்த்தக் குளத்தைக் காணலாம். பார்கவ ரிஷி பரந்தாமனை தரிசிக்க இங்கு வந்ததாகவும், அவருக்கு தசவதாரத் தோற்றங்கள் அனைத்தையும் ஒருசேர இறைவன் காட்டியதாகவும் கூறப்படுகிறது. சன்னிதியில் பார்கவ நரசிம்மர் மேல் இரண்டுகரங்களில் சங்கும், சக்கரமும், கீழ் கரங்களில் இரணியனை தன் மடியில் கிடத்தி அவனை வதம் செய்யும் தோரணையில் வீற்றிருக்கிறார். சந்திரனால் ஏற்படும் தோஷங்களை போக்குபவர் இவர்.

    பாவன நரசிம்மர்

    கருடாத்ரி மலைக்கு தென்புறம் அடர்ந்த காட்டுப்பகுதியில் பவன நதிக்கரையில் இந்த நரசிம்மர் கோவில் உள்ளது. மிககடினமான பாதை. நடைப்பயணம் அல்லது ஜீப்பில் மிக சிரமத்துடன் தான் பயணிக்க வேண்டும். கருவறையில் பாவன நரசிம்மர், ஆதிசேஷன் குடைபிடிக்க கரங்களில் சங்கு சக்கரம் ஏந்தியும், தாயாரை அரவணைத்து அபய முத்திரை காட்டியபடியும் 4 கரங்களுடன் திகழ்கிறார். இவரது சன்னிதியில் வரதராஜப்பெருமாள், நவநீதகிருஷ்ணன், கோபால கிருஷ்ணன், ஆஞ்சநேயர் உள்ளனர். பரத்வாஜ மகரிஷி, தனக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தைப் போக்கிப்கொள்ள இங்கு தியானம் செய்ததாக கூறப்படுகிறது. இவரை வணங்குவோருக்கு பாவங்கள் விடுபட்டு அனைத்து நலங்களையும் வளங்களையும் அடைவார்கள் என்று ஆழ்வார்கள் கூறியுள்ளனர். ராகு கிரகத்தால் ஏற்படும் தோஷங்களை இந்த நரசிம்மர் தீர்ப்பாராம்.

    யோகநந்த நரசிம்மர்

    கீழ் அகோபிலத்தில் இருந்து 2 கி.மீ. தொலைவில் தென்கிழக்கு திசையில் இந்த நரசிம்மர் ஆலயம் இருக்கிறது. இங்கு வீற்றிருக்கும் யோக நந்த நரசிம்மர், தனது மேல் இரண்டு கரங்களில் சங்கு, சக்கரம் தாங்கியும், கீழ் இரு கரங்களை யோக முத்திரையில் வைத்தபடியும் காட்சி தருகிறார். இந்த நரசிம்மர், தனது பக்தனான பிரகலாதனுக்கு சில யோக மந்திரங்களையும், முத்திரைகளையும் கற்றுக்கொடுத்தவர் என்று சொல்லப்படுகிறது. இந்த நரசிம்மரை வழிபட்டால் புதன் கிரகத்தால் ஏற்படும் தோஷங்கள் விலகும்.

    சத்ரவட நரசிம்மர்

    கீழ் அகோபிலத்தில் இருந்து கிழக்கு நோக்கி அமைந்திருக்கிறது, இந்த நரசிம்மர் கோவில். இரண்டு கந்தவர்கள் நரசிம்மரைத் துதித்து இனியபாடல்கள் இயற்றி பாடி வர, அந்த சங்கீதத்தை பாராட்டுவதற்காகவே பெருமாள் இங்கு தோன்றினாராம். இங்குள்ள நரசிம்மர், இரண்டு கரங்களில் சங்கு சக்கரமும், மற்ற இரு கரங்களில் ஒரு கரத்தில் அபயமுத்திரையோடும், மற்றொரு கரத்தைக் கொண்டு சங்கீதத்தை கேட்டபடி தாளம் போடுவது போன்ற பாவனையிலும் வைத்திருக்கிறார். சங்கீதத்தில் முன்னேற்றம் காண விரும்புபவர்கள் இந்த நரசிம்மரை வழிபட்டுச் செல்கிறார்கள். மேலும் சூரிய பகவானால் ஏற்படும் தோஷங்களை இந்த நரசிம்மர் போக்குகிறார்.

    வராக நரசிம்மர்

    இந்தக் கோவில் மேல் அகோபிலத்திற்கு 1 கி.மீ. தொலைவில் பவன நதிக்கரை ஓரத்தில் அமைந்துள்ளது. இங்கு வீற்றிருக்கும் வராக நரசிம்மர், தனது இரண்டு கரங்களை இடுப்பில் தாங்கி, நின்றபடியும், பூமாதேவியை அரவணைத்தது போன்ற தோற்றத்திலும் காணப்படுகிறார். இந்த நரசிம்மரை வணங்கினால் குரு பகவானால் ஏற்படும் தோஷங்கள் அகலும்.

    காரஞ்ஜ நரசிம்மர்

    இந்தக் கோவில் கீழ் அகோபிலத்தில் இருந்து மேல் அகோபிலத்திற்கு செல்லும் மார்க்கத்தில் 7 கி.மீ. தொலைவில் சாலை ஓரத்தில் அமைந்துள்ளது. நரசிம்மர் வலது கையில் சுதர்சன சக்கரத்தோடும், இடது கையில் சங்குக்கு பதிலாக வில் ஏந்தியபடியும் தரிசனம் தருகிறார். மற்ற இரண்டு கை தியான முத்திரையோடு இருக்கிறது. மண்டபத்தில் இடதுபுறத்தில் ஆஞ்சநேயர் நரசிம்மரை நோக்கி வணங்குவது போன்ற காட்சி காணப்படுகிறது.

    ஒரு முறை கருங்காலி மரத்தின் கீழ் ராமனை நினைத்து அனுமன் தவம் இருந்தார். அப்போது நரசிம்மர் வில்லுடன் தோன்றி ‘நான்தான் ராமர்’ என்றார். அனுமன் அவரை ராமனாக ஏற்றுக்கொள்ள மறுத்தார். உடனே ராமனாக வில்லேந்தி அழகிய தோற்றத்தில் காட்சிக்கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நரசிம்மரை வணங்கினால் கேது கிரகத்தால் ஏற்படும் பாதிப்புகள் நீங்கும். 
    கோவில்களில் பெரும்பாலும் இறைவனுக்கு தேங்காய் உடைப்பது வழக்கம். தேங்காய் உடைப்பதில் ஒரு பெரிய உண்மை மறைந்து இருக்கிறது.
    கோவில்களில் பெரும்பாலும் இறைவனுக்கு தேங்காய் உடைப்பது வழக்கம். ஏன் தேங்காய் உடைக்கிறோம். இதில் என்ன தத்துவம் இருக்கிறது என்ற விவரம் நம்மில் பலருக்கு தெரியாது. ஏதோ சுவாமிக்கு அர்ச்சனை பண்ணினோம். தரிசனம் செய்தோம் என்றவாறே இதை நாம் தொன்றுதொட்டு செய்து வருகிறோம். அதைப் பற்றி ஒரு சிறிய தத்துவ தகவல்.

    தேங்காய் உடைப்பதில் ஒரு பெரிய உண்மை மறைந்து இருக்கிறது. தேங்காயின் மேல் கடுமையான ஓடும் அதனுள் மென்மையான பருப்புமாகிய காய்ப் பகுதியும் அதனுள் நீரும் உள்ளது.

    உருண்டையான புற ஓடு பிரபஞ்சத்தை ஒத்து இருக்கிறது. இரண்டும் கோள வடிவம் உடையது. இது உலக மாயையைக் குறிப்பது ஆகும். உள்ளே உள்ள வெண்ணிறமான பகுதி பரமாத்மாவை குறிக்கும்.



    இளநீர் அதனால் விளையும் பரமானந்த அமிர்தத்தை ஒத்து இருக்கின்றது. ஜீவாத்மா மாயையினால் பரமாத்மாவை உணராமல் பரமானந்த பிராப்தியையும் பெறாமல் நிற்கின்றது. அதுபோல் வெள்ளை பகுதியையும், நீரையும் காண முடியாமல் ஓடு மறை(க்)கின்றது.

    ஈசுவர சந்நிதியில் மாயையை அகற்றி தேஜோமய சுவரூபத்தை காட்டி அவர் அருளாள் பரமானந்த பேரமுதத்தை நுகரச் செய்யும் செயலையே இது காட்டுகிறது.

    இவ்வளவு உட்கருத்து இருப்பதால் தான் தேங்காயை இறைவழிபாட்டில் முக்கிய பொருளாக வைத்து நம்முன்னோர்கள் வழிபட்டு வந்துள்ளனர் என்கிற உண்மையை நாம் உணர வேண்டும்.
    ×