search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95492"

    பலி பீடம் என்றதும் பலரும் தங்கள் மனதில், இது ஏதோ உயிர் பலியிடும் இடம்போல என்றுதான் நினைப்பார்கள். அப்படியல்ல.. அது நமது மனதில் உள்ள தீய எண்ணங்களை, குணங்களை பலியிடும் இடம் என்பதே சரியானது.
    அனைத்து ஆலயங்களிலும் கொடி மரத்துக்கு அடுத்தபடியாக பலிபீடம் அமைத்து இருப்பார்கள். கொடி மரத்தை வழிபட்டு முடித்ததும் நாம் பலி பீடத்தை மனதார வழிபட வேண்டும். பொதுவாக பலி பீடங்கள் மூன்று அடுக்கு பீடம் மீது, தாமரை மலர் வடிவம் போன்று அமைக்கப்பட்டிருக்கும். அந்த பீடங்களில் சிற்பங்கள் இருக்கும். சில ஆலயங்களில் வெறும் பீடம் மட்டும் இருக்கும்.

    திருப்பதி போன்ற ஆலயங்களில் பலி பீடத்துக்கும் தங்க கவசம் போர்த்தி இருக்கிறார்கள். இதன் மூலம் கருவறைக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் பலி பீடத்துக்கும் கொடுக்கப்படுவதை அறியலாம்.

    பலி பீடம் என்றதும் பலரும் தங்கள் மனதில், இது ஏதோ உயிர் பலியிடும் இடம்போல என்றுதான் நினைப்பார்கள். அப்படியல்ல.. அது நமது மனதில் உள்ள தீய எண்ணங்களை, குணங்களை பலியிடும் இடம் என்பதே சரியானது.

    அதெப்படி தீய குணத்தையும், தீய எண்ணத்தையும் பலியிடுவது?

    மனிதர்களாகிய நமக்கு ஆழ்மனதில் கெட்ட குணங்கள் இருக்கும். எவ்வளவுதான் பக்குவப்பட்ட பெரிய மனிதர்களாக இருந்தாலும், அவர்கள் மனதுக்குள்ளும் போட்டி, பொறாமை, காமம், குரோதம், கோபம், தாபம், சூது, வாது, வஞ்சனை, வயிற்றெரிச்சல் போன்றவைகளில் ஏதாவது ஒன்றிரண்டு கெட்ட குணங்கள் நீக்க முடியாததாக இருக்கவே செய்யும்.

    இப்படி கெட்ட குணத்துடனும், எண்ணத்துடனும் கருவறைக்குச் சென்றால், கடவுள் நமக்கு எப்படி அருள்புரிவார்? நம் மனது எந்த ஆசாபாசமும் இல்லாமல், தெள்ளத்தெளிவாக, ஒன்றுமே இல்லாமல் சுத்தமாக, வெற்றிடமாக இருந்தால்தான் நமக்கு இறைவன் அருளை வழங்குவார். எந்த எதிர்பார்ப்பும் இல்லாத மனநிலை கொண்டவர்கள்தான் கடவுளை அடையமுடியும். அவர்களின் அருகில்தான் கடவுளும் வருவார்.

    எனவே நம் மனதில் உள்ள தீய குணங்களை எல்லாம் வெளியேற்ற வேண்டும். அதாவது கெட்ட நினைவுகளை பலி கொடுக்க வேண்டும். இது ஆலய வழிபாட்டில் மிகவும் முக்கியமானது. ஏனெனில் நாம் நம் மனதில் உள்ள தீய அழுக்குகளை விரட்டும் போது, நாம் நல்ல மனிதனாக மாறி விடுகிறோம்.

    இத்தகைய அற்புத மாற்றத்தை ஒவ்வொரு பக்தனிடமும் ஏற்படுத்தும் அருமையான இடம்தான் பலிபீடம். உயிர்ப்பலி இல்லாத இந்த ஆன்மிகப் பலி பீடுமானது உயர்வுக்குரியது. இந்த பலி பீடத்தை அமைப்பதற்கு என்று விதிகள் உள்ளன.

    பலி பீடத்தின் உயரம், மூலஸ்தானத்தில் எழுந்தருளியுள்ள மூலவரின் பீடத்து உயரத்துக்கு சமமாக இருக்க வேண்டும்.

    பலி பீடத்தில் பாதுகா, ஜகதி, குமுதம், குமுத பத்திகம், கலா கம்பம், நிதிரவம், சுபோதம், அசுரபத்தி, பத்மம் என்று பல வகைகள் உள்ளன.

    பலி பீடத்தை பொதுவாக ‘பத்ரலிங்கம்’ என்று அழைப்பார்கள். பலி பீடம் அருகில் இருக்கும் நந்தி எனும் ஆன்மாவில் உள்ள ஆணவ மலம், பலி பீடத்தில்தான் ஒதுங்கியிருக்கும். எனவே பலி பீடம் அருகே சென்றவுடன் ஆணவம், மாயை, கன்மம் ஆகிய நமது மும்மலங்களையும் பலியிடுதல் வேண்டும். ‘நான்’ என்ற அகங்காரத்தை பலியிட வேண்டும்.



    சிலர் ‘எல்லாமே நம்மால் தான் நடக்கிறது’ என்ற மாயையில் சிக்கித் தவிப்பார்கள். அகந்தையுடன் நடந்து கொள்வார்கள். அந்த இறுமாப்பை பலிபீடம் அருகில் நின்று பலியிட வேண்டும். பிறகு பலிபீடம் அருகில் தரையில் விழுந்து வணங்க வேண்டும். ஆலயத்தின் கருவறையானது வடக்கு, மேற்கு திசையை பார்த்தபடி இருந்தால், பலி பீடத்தின் இடது பக்கத்திலும், கருவறையானது கிழக்கு மற்றும் தெற்கு நோக்கி இருந்தால் பலி பீடத்தின் வலது பக்கத்திலும் நின்று வணங்க வேண்டும்.

    மூலவருக்கு அபிஷேகம் நடக்கும் போதோ அல்லது சுவாமிக்கு நைவேத்தியம் படைக்கும் போதோ பலி பீடத்தை வழிபடுதல் கூடாது.

    அதுபோல பலிபீட வழிபாட்டை ஒரு தடவை, இரண்டு தடவை மட்டும் செய்து விட்டு நிறுத்தி விடக் கூடாது. 3, 5, 7, 9, 12 என்ற எண்ணிக்கையில் வணங்க வேண்டும். அந்த சமயத்தில் நம்மிடம் உள்ள காம, குரோத, லோப, மோக, மத, மாச்சர்யம் எனும் 6 கெட்ட குணங்களை பலியிடுவதாக மனதில் நினைத்து வணங்க வேண்டும்.

    பலி பீடத்தை வழிபட்டு முடித்ததும், நம் மனதில் மேலான எண்ணங்கள்தான் உள்ளன என்ற நினைப்பை உருவாக்கிக் கொள்ள வேண்டும். அந்த நல்ல மன நிலையுடன் கருவறை அருகில் சென்று இறைவனை வழிபடும்போது, அவர் அருள் நம்மை ஆக்கிரமிக்கும்; ஆசீர்வதிக்கும்.

    பலி பீடத்துக்கு ‘பலி நாதர்’, ‘மாயச் சக்கரம் என்றும் பெயர் உண்டு. அதாவது நமது பிறப்பு - இறப்பு எனும் மாயச் சக்கரமாக பலி பீடத்தைக் கருதுகிறார்கள். இதை சுற்றி வந்து வழிபட்டால், ‘ஸ்தூல சூட்சம காரண சரீரங்களில் இருந்து என்னை விடுவித்து விடு’ என்று வேண்டுவதற்கு சமமாகும்.

    பொதுவாக கோவில்களில் எட்டு மூலைகளில், எட்டு பலி பீடங்கள் அமைத்திருப்பார்கள். அவை இந்திரன், அக்னி, எமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் எனும் எட்டு திக் பாலகர்களை உணர்த்துகிறது.

    இந்த 8 பலி பீடங்களும் ஒவ்வொரு கோவிலின் ஆகம விதிகளுக்கு ஏற்ப கோவில் பிரகாரங்களில் அமைக்கப்பட்டிருக்கும். இவற்றுக்கு தலைமை பலி பீடமாக நந்தி பின்புறம் உள்ள பலி பீடம் அமையும். பொதுவாக தலைமை பலி பீடம், மூலவ மூர்த்தியின் பாதங்களை தாமரை வடிவில் தாங்கியதாக இருக்கும்.

    சில கோவில்களில் பலி பீடத்தின் அடியில் பக்தர்கள் உப்பும், மிளகும் போட்டுச் செல்வார்கள். உப்பாகிய உடம்பையும் மிளகாகிய ஆணவத்தையும் இறைவனிடம் அர்ப்பணித்து விட்டேன் என்பதைச் சொல்லும் வழிபாட்டு முறை இதுவாகும்.

    சக்தி தலங்களில் தலைமை பலி பீடம் தவிர பிராம்மி, மகேசுவரி, கவுமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டி எனும் சப்த மாதாக்களை உணர்த்தும் பலி பீடங்களும் அமைத் திருப்பார்கள். அந்த பலி பீடங்களையும் மறக்காமல் வழிபட வேண்டும்.

    பலி பீடம் முன்பு நின்று ஆத்மார்த்தமாக வழிபட்டால் நம்மிடம் உள்ள தேவையற்ற காமம் போய் விடும். ஆசை போய் விடும். கோபம் போய் விடும். தீராத பற்று போய் விடும். நெறி பிறழாத தன்மை உண்டாகும். பேராசை வரவே வராது. உயர்வு - தாழ்வு மனப்பான்மை விலகும். வஞ்சகக் குணம் வரவே வராது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால், பலிபீடம் மனிதனை மனிதம் கொண்டவனாக மாற்றுகிறது.

    எனவே பலி பீடம் அருகில் நின்று நிதானமாக வழிபடுவதை பழக்கத்துக்கு கொண்டு வாருங்கள். அது உங்களை மேன்மைப்படுத்தும். கோவிலில் கோபுர வாசலுக்கும் கொடி மரத்திற்கும் இடையில் உள்ள பலிபீடத்தில் நித்யபூஜையின் முடிவில், கோவிலுள்ள அனைத்து தெய்வங்களுக்கும், அன்னம் (சாதம்) வைப்பர். இதை ‘பலி போடுதல்’ என்பர். இதனை தெய்வங்கள் சாப்பிட்டுச் செல்வதாக ஐதீகம். வழிபாட்டின் போது, பலிபீடத்தை தொட்டுக் கும்பிடுவதோ, உரசிச் செல்வதோ கூடாது.
    விளக்கு ஏற்றுவது இறைவழிபாட்டின் ஒரு பகுதி என்பதால்தான், வீட்டிலும், கோவில்களிலும் கூட இறைவனை பலரும் விளக்கேற்றியே வழிபடுகிறார்கள்.
    காலையும், மாலையும் வீட்டில் விளக்கு ஏற்றுவது ஐஸ்வரியத்தை வழங்கும் என்பது ஐதீகம். ‘விளக்கு எரிந்த வீடு வீணாய் போகாது’ என்பது பழமொழி. விளக்கு ஏற்றுவது இறைவழிபாட்டின் ஒரு பகுதி என்பதால்தான், வீட்டிலும், கோவில்களிலும் கூட இறைவனை பலரும் விளக்கேற்றியே வழிபடுகிறார்கள்.

    தீபத்தின் சுடருக்கு தன்னை சுற்றி உள்ள தேவையற்ற கதிர்களை (நெகடிவ் எனர்ஜி) ஈர்க்கும் சக்தி உண்டு. அவ்வாறு ஈர்க்கும்போது நம்மை சுற்றி பாசிடிவ் எனர்ஜி அதிகரிக்கும். நம் சுற்றுப்புறம் தெளிவாகவும் பலத்தோடும் காணப்படும். இரண்டு நாள் வீட்டில் விளக்கேற்றாமல் இருந்தால் வீடே களை இழந்தது போல் தோன்றும்.

    நம் உடலில் இருக்கும் ஏழு சக்கரங்களில் மூலாதாரமும், சுவாதிஷ்டானமும் நல்லெண்ணெய் விளக்கு ஏற்றுவதால் தூய்மையடைகிறது. அதேபோல மணிபூரகம், அனாஹதம் இரண்டும் நெய்விளக்கு ஏற்ற தூய்மை அடைந்து நற்பலன்களை பெறுகிறது.

    நம் உடலில் இருக்கும் நாடிகளில் சூரியநாடி, சந்திர நாடி, சுஷம்னா நாடி ஆகியவை மிக முக்கியமாக கருதப்படுகிறது. சூரியநாடி, நல்ல சக்தியையும் வெப்பத்தையும் தருகிறது. சந்திரநாடி குளுமையை தருகிறது. சுஷம்னா நாடி அந்த பரம்பொருளுடன் சம்பந்தப்பட்டு ஆன்மிக பாதையை வகுக்கிறது. நல்லெண்ணெய் விளக்கு ஏற்ற சூரியநாடி சுறுசுறுப்படைகிறது. நெய் விளக்கு சுஷம்னா நாடியை தூண்டிவிட உதவுகிறது.

    நெய் தீபம் சகலவித சுகங்களையும் வீட்டிற்கு நலன்களையும் தருகிறது. திருவிளக்கு எப்போது வேண்டுமானாலும் ஏற்றலாம். இதற்கு தடையேதும் இல்லை. ஆனால் பொதுவாக மாலை 6.30 மணிக்கு ஏற்றுவதே நமது மரபு. இதை ‘கருக்கல் நேரம்’ என்பார்கள்.

    சூரியன் மறைந்ததும் சில விஷ சக்திகள் சுற்றுச்சூழலில் பரவி வீட்டிற்குள்ளும் வர வாய்ப்பு இருக்கிறது. ஒளியின் முன் அந்த விஷ சக்திகள் அடிபட்டு போகும். ஆகையால்தான் அந்த நேரத்தில் விளக்கேற்றுவது நல்லது. 
    ஜூன் மாதம் 19-ம் தேதியில் இருந்து ஜூன் மாதம் 25-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
    19-ந்தேதி (செவ்வாய்) :

    * சஷ்டி விரதம்.
    * திருநெல்வேலி நெல்லையப்பர் ஆலயத்தில் உற்சவம் ஆரம்பம், சுவாமி தங்கப் பூங்கோவிலிலும், அம்பாள் சப்பரத்திலும் பவனி.
    * மதுரை மீனாட்சி அம்மன் ஆலயம், திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் ஆலயங்களில் ஊஞ்சல் சேவை உற்சவம் தொடக்கம்.
    * சிதம்பரம் நடராஜ பெருமான் திருவீதி உலா.
    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் ஆலயத்தில் ஆண்டாள் மூலவருக்கு திருமஞ்சன சேவை.
    * கீழ்நோக்கு நாள்.

    20-ந்தேதி (புதன்) :

    * திருச்செந்தூர் சுப்பிரமணியர் கோவிலில் நடேசர் அன்னாபிஷேகம், ஆனி உத்திர அபிஷேகம், நடராஜர் அபிஷேகம்.
    * திருநெல்வேலி நெல்லையப்பர் கற்பக விருட்ச வாகனத்திலும், அம்பாள் கமல வாகனத்திலும் பவனி.
    * சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் கோவில் உற்சவம் ஆரம்பம்.
    * சிதம்பரம் நடராஜர் கோவில், ஆவுடையார் கோவில் ஆகிய தலங்களில் சிவபெருமான் ரத உற்சவம்.
    * கானாடுகாத்தான் சிவபெருமான் புறப்பாடு கண்டருளல்.
    * கீழ்நோக்கு நாள்.

    21-ந்தேதி (வியாழன்) :


    * திருநெல்வேலி நெல்லையப்பர் தங்க பூத வாகனத்திலும், அம்பாள் சிம்ம வாகனத்திலும் திருவீதி உலா.
    * ராஜபாளையம் சமீபம் பெத்தவ நல்லூர் மயூரநாதர் பவனி.
    * மதுரை மீனாட்சி ஆலயம், திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் ஆலயங்களில் ஊஞ்சல் சேவை.
    * சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் திருவீதி உலா.
    * சமநோக்கு நாள்.

    22-ந்தேதி (வெள்ளி) :

    * திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் காலை சுவாமியும் அம்பாளும் ரிஷப வாகனத்தில் வீதி உலா, இரவு வெள்ளி விருட்ச சேவை.
    * மதுராந்தகம் கோதண்டராம சுவாமி கோவிலில் உற்சவம் ஆரம்பம்.
    * கானாடுகாத்தான், திருக்கோளக்குடி ஆகிய தலங்களில் சிவபெருமான் திருக்கல்யாணம்.
    * மதுரை மீனாட்சி அம்மன் கோவில், திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் ஆலயங்களில் ஊஞ்சல் சேவை.
    * சமநோக்கு நாள்.



    23-ந்தேதி (சனி) :

    * திருச்செந்தூர் சுப்பிரமணியர் கோவிலில் வருசாபிஷேகம்.
    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்ம சுவாமி ஆனி உற்சவம் ஆரம்பம்.
    * திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் கோவில் உற்சவம் ஆரம்பம்.
    * திருநெல்வேலி நெல்லையப்பர் ஆலயத்தில் காலை சுவாமி-அம்பாள் வெள்ளி விருட்ச சேவை, இரவு இந்திர விமானத்தில் வீதி உலா.
    * சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு.
    * சமநோக்கு நாள்.

    24-ந் தேதி (ஞாயிறு) :

    * சர்வ ஏகாதசி.
    * திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் அனுமன் வாகனத்திலும், தாயார் தோளுக்கினியானிலும் பவனி.
    * திருநெல்வேலி நெல்லையப்பர் ஆலயத்தில் சுவாமி வெள்ளி யானை வாகனத்திலும், அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்திலும் வீதி உலா.
    * சமநோக்கு நாள்.

    25-ந்தேதி (திங்கள்) :

    * பிரதோஷம்.
    * திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் சுவாமி பல்லக்கிலும், அம்பாள் தவழ்ந்த திருக்கோலமாய் முத்துப் பல்லக்கிலும் பவனி.
    * திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் அனுமன் வாகனத்திலும், தாயார் சந்திர பிரபையிலும் புறப்பாடு.
    * மதுராந்தகம் கோதண்டராம சுவாமி திருவீதி உலா.
    * கீழ்நோக்கு நாள். 
    நல்ல நாள் என்பது ஜோதிட முறைப்படி அவரவர் நட்சத்திரத்திற்கு உகந்த நாளில் பூமி பூஜை செய்ய வேண்டும் என்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும்.
    வாஸ்து நாளன்று பூமி பூஜை செய்வது விசேஷ பலன்களை அளிக்கும் என்பது தவறான கருத்தே. வாஸ்து சாஸ்திரம் என்பது பஞ்ச பூதங்களாகிய நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், பூமி ஆகிய ஐந்தையும் ஒருங்கிணைத்து அவற்றை நமக்கு சாதகமாக செயல்பட அல்லது நமக்கு நன்மை செய்யும் விதத்தில் விஞ்ஞான முறைப்படி கட்டிடங்களை அமைக்கும் முறையே ஆகும்.

    ஒருவருக்கு தன்னுடைய ஜாதகப்படி எந்த வயதில் எந்த நேரத்தில் வீடு கட்டினால் தடையின்றி சிறப்பாக கட்டி முடிக்க முடியும் என்பது ஜோதிட கணிப்பு. நல்ல நாள் என்பது ஜோதிட முறைப்படி அவரவர் நட்சத்திரத்திற்கு உகந்த நாளில் பூமி பூஜை செய்ய வேண்டும் என்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும்.

    எனவே வாஸ்து நாளில் பூமி பூஜை செய்வதைவிட, வாஸ்து சாஸ்திரப்படி வீட்டை அமைக்கும் முறையிலேயே மிக அதிக கவனம் செலுத்த வேண்டும். கட்டிட உமையாளர் மற்றும் குடும்பத்தினரின் நட்சத்திரத்திற்கு உகந்த நாளில் முகூர்த்த நாளும் கூடி வரும் பட்சத்தில் அந்நாளுக்குரிய நல்ல நேரத்தில் மனைக்கு பூமி பூஜை செய்வது தான் முறை. இந்நாளுடன் வாஸ்து நாளும் வந்தால் மேலும் சிறப்பாகும். இரு நாட்களும் ஒன்றியமைந்தால் கூட இவ்விரு நாட்களுக்குரிய நல்ல நேரங்கள் ஒன்றி வருவது அவ்வளவு சுலபமல்ல.

    வருடத்திற்கு சுமார் 8 நாட்களே வரும் வாஸ்து நாட்களில் பூமி பூஜை செய்வதைவிட மேற்கூறியதைக் கருத்தில் கொண்டு, அத்துடன் கீழே குறிப்பிட்டுள்ள முறைகளும் நல்ல நாளுடன் ஒன்றி வருவது போல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    1. உரிமையாளர் மற்றும் குடும்பத்தினரின் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் வரும் நாட்களை தவிர்ப்பதே மிக முக்கியம்.

    2. அஷ்டமி, நவமி, கரிநாள் ஆகிய நாட்களையும் தவிர்க்க வேண்டும்.

    3. சித்திரை, ஆனி, ஆடி, மார்கழி, பங்குனி ஆகிய மாதங்களில் பூமி பூஜை செய்வதை விட வைகாசி, ஆவணி, கார்த்திகை, தை, மாசி போன்ற மாதங்களில் செய்யலாம்.



    4. தேய்பிறை நாட்களில் செய்வதை விட வளர்பிறை நாட்களில் செய்வது நல்லது.

    5. செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளை விட வரிசைப்படி புதன், வியாழன், வெள்ளி, திங்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பூமி பூஜையை மேற்கொள்ளலாம்.

    பூமி பூஜை செய்வதற்கு உகந்த இடம் ஈசானிய மூலையாகும். வரைபடத்தின்படி கட்டிடத்தின் சரியான வடகிழக்கு மூலையில் பூஜை செய்வதற்குரிய 1 அடிக்கு 1 அடி அளவுக் கொண்ட குழியை தோண்ட வேண்டும். போர்டிக்கோவின் வடகிழக்கு மற்றும் மனையின் வட கிழக்கு மூலைகளில் பூஜைக்குரிய குழியை எடுப்பதும் ஓரளவு நல்ல பலன்களை அளிக்கும். இது தவிர கீழே குறிப்பிட்டவற்றையும் கவனிக்க வேண்டியது அவசியம்.

    1. தூண்களுக்குரிய குழியை தோண்டுமிடத்தில் பூஜைக்குரிய குழியை எடுக்கக் கூடாது.

    2. மனை மற்றும் கட்டிடத்தின் தென்மேற்கு மூலைகளிலிருந்து மனையின் வடகிழக்கு மூலைக்கு இரு கோடுகளை வரைந்து கொள்ளுங்கள். மேலும் கட்டிடத்தின் வடகிழக்கு மூலையிலிருந்து மனையின் வடகிழக்கு மூலை வரை மூன்றாவது கோட்டினை வரைந்து கொள்ளுங்கள். இம்மூன்று கோடுகளுக்கு இடையிலோ, ஒட்டியோ பூமி பூஜை செய்வதற்குரிய குழி, போர்வெல், கிணறு, நிலத்தடி நீர்த்தொட்டி ஆகியவற்றை அமைத்துவிடக்கூடாது. 
    எப்படிப்பட்ட ஜாதக அமைப்புக் கொண்டவர்கள் தங்கு தடையின்றித் தாராளமாக தான, தர்மம் செய்வார்கள் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    ஒரு சிலருக்கு தானம் செய்யும் மனம் இருக்கும்; ஆனால் பணம் இருக்காது. ஒரு சிலரிடம் நிறைய பணம் இருக்கும்; ஆனால் தானம் செய்வதற்கு மனம் இருக்காது. மனமும், பணமும் இணைந்து யாருக்கு இருக்கிறதோ அவர்கள் தான் தான, தர்மங்களை தடையின்றிச் செய்ய இயலும். தானம் செய்து புகழ்பெற்றவன் கர்ணன்.

    அப்படி கலியுலக கர்ணனாக ஒருவர் விளங்க வேண்டுமானால் ஒன்பதாம் இடத்தில் சுப கிரகம் இருக்க வேண்டும். ஒன்பதாம் இடத்திற்கு அதிபதி உச்சம் பெற்றிருக்க வேண்டும். அல்லது ஒன்பதாம் இடத்திற்கு அதிபதி, குருவுடன் சம்பந்தப்பட்டிருக்க வேண்டும். லக்னாதிபதியை, ஒன்பதாம் இடத்திற்கு அதிபதி பார்க்க வேண்டும். இப்படிப்பட்ட ஜாதக அமைப்புக் கொண்டவர்கள் தங்கு தடையின்றித் தாராளமாக தான, தர்மம் செய்வார்கள். 
    தொழில் வளம் சிறக்க, அதிர்ஷ்ட தேவதை இல்லத்தில் அடியெடுத்து வைக்க, நமக்குரிய அதிர்ஷ்ட சின்னங்களை வண்ணப் படங்களை தொழில் நிலையத்தில் பார்வைப் பொருளாக வைத்தால் தொழில் வளர்ச்சியடைந்துவிடும்.
    27 நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 27 விதமான அதிர்ஷ்ட சின்னங்கள் இருக்கின்றன. தொழில் வளம் சிறக்க, அதிர்ஷ்ட தேவதை இல்லத்தில் அடியெடுத்து வைக்க, நமக்குரிய அதிர்ஷ்ட சின்னங்களை வண்ணப் படங்களை தொழில் நிலையத்தில் பார்வைப் பொருளாக வைத்தால் தொழில் வளர்ச்சியடைந்துவிடும்.

    மேல்நோக்கி எரியும் தீபம், விருட்சங்கள் போன்றவற்றை தொழில் நிலையத்தில் வைத்தால் தொழில் வளர்ச்சி ஏற்படும். மேல்நோக்கிச் செல்லும் வரைபடங்களை வைத்தால் தொழில் வளர்ச்சி மேலோங்கும். நீர்வீழ்ச்சி போன்ற கீழ் நோக்கிச் செல்லும் படங்களை அலுவலகத்தில் வைப்பதை தவிர்ப்பது நல்லது.

    இது பொதுநியதி என்றாலும், அவரவர் ஜாதகத்திற்கேற்ற வண்ணப்படங்களைத் தேர்ந்தெடுத்து தொழில் நிலையத்தின் எந்தப் பகுதியில் வைத்தால் செய்யும் தொழிலில் சிறப்பான லாபம் கிடைக்கும் என்பதை அறிந்து செயல்படுவது நல்லது. குறிப்பாக அசுவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குதிரை முகம் அல்லது முழுக்குதிரை படத்தை வைக்கலாம்.

    ரோகிணியில் பிறந்தவர்கள் கிருஷ்ணர் படம் அல்லது ஆழித்தேர், ஆலமரம், கோபுரம் ஆகிய படங்களை வைக்கலாம். இதுபோல் நமது நட்சத்திர அடிப்படையில் படங்களைத் தேர்வு செய்து வைத்தால் கடன் சுமை குறையும். வருமானம் பெருகும். 
    சில முக்கியமான காரியங்களை செய்யும் போது நல்ல நாள் பார்போம். அவ்வாறு நல்லநாள் பார்க்கும் போது சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.
    சில முக்கியமான காரியங்களை செய்யும் போது நல்ல நாள் பார்போம். அவ்வாறு நல்லநாள் பார்க்கும் போது சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.

    1. அன்றைய தினம் கரிநாளாக இருக்கக்கூடாது.
    2. திதியில் அஷ்டமி, நவமி திதிகளை தவிர்க்கவும்.
    3. யோகம், மரணயோக நேரமாக இல்லாமல் சித்த, அமிர்த யோகமாக இருக்கட்டும்.
    4. ஹோரைகளில் சூரியன், செவ்வாய், சனி ஹோரைகளை தவிர்க்கவும்.
    5. ராகுகாலம், எமகண்டம் நேரம் தவிர்க்கவும்.
    6. கவுரி பஞ்சாகத்தில் விஷம், ரோகம், சோரம் நேரங்களில் இருக்கக் கூடாது.
    7. யாருக்காக நாம் நேரம் தேர்ந்தெடுக்கிறோமோ, அவர்களுக்கு அன்றைய தினம் சந்திராஷ்டமம் தினமாக இருக்கக்கூடாது.

    பல்லி நம் உடலில் எந்த பாகத்தில் விழுகிறது என்பதை பொறுத்து பலன் கிடைக்கும். இந்த வகையில் இன்று பல்லி உடலில் விழுந்தால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
    பல்லி நம் உடலில் எந்த பாகத்தில் விழுகிறது என்பதை பொறுத்து பலன் கிடைக்கும். இந்த வகையில் இன்று பல்லி உடலில் விழுந்தால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

    தலை  -  கலகம்
    கூந்தல்  -  லாபம்
    உச்சந்தலை  - மரணம்
    நெற்றி  -  பட்டாபிஷேகம்
    முகம்  -  பந்து தரிசனம்
    புருவம்  -  ராஜானுக்ரகம்
    மேலுதடு  -  தனவிரயம்
    கீழுதடு  -  தனலாபம்
    மூக்கு  -  வியாதி சம்பவம்
    வலது செவி  -  தீர்க்காயுள்
    இடது செவி  -  வியாபார லாபம்
    முகவாய்க்கட்டை  -  ராஜதண்டனை
    வாய்  -  பயம்
    கழுத்து  -  சத்ரு நாசம்
    வலது புஜம்  -  ஆரோக்கியம்
    இடது புஜம்  -  ஸ்த்ரீஸம்போகம்
    வலது மணிக்கட்டு  -  பீடை
    இடது மணிக்கட்டு  -  கீர்த்தி
    ஸ்தனம்  -  பாப சம்பவம்
    மார்பு  -  தனலாபம்
    வயிறு  -  தான்யலாபம்
    நாபி  -  ரத்னலாபம்
    தொடைகள்  -  பிதா அரிஷ்டம்
    முழங்கால்கள்  -  சுபம்
    கணுக்கால்கள்  -  சுபம்
    பாதம்  -  பிரயாணம்
    ப்ருஷ்டம்  -  சுபம்
    நகங்கள்  -  தனநாசம்
    ஆண்குறி  -  தரித்ரம்
    இடக்கை  -  துயரம்
    வலக்கை  -  துக்கம்
    முதுகு  -  நாசம்
    கால்விரல்கள்  -  பயம்
    இடக்கை விரல்கள்  -  துயரம்
    வடக்கை விரல்கள்  -  ராஜபயம்
    தேகத்தில் ஓடல்  -  தீர்க்காயுள்
    ஒவ்வொருவரும் ஜாதகத்தில் அவருக்கு என்ன திசை நடக்கிறது என்பதை அறிந்து அதற்கு உகந்த தெய்வங்களை வணங்கினால் நல்ல பலன் கிடைக்கும்.
    சூரிய திசை நடப்பவர்கள் - வீர ஆஞ்சநேயரை வழிபடுக
    சந்திர திசை நடப்பவர்கள் - பார்வதி-பரமேஸ்வரனை வழிபடுக
    செவ்வாய் திசை நடப்பவர்கள் - முருகன், ஐயப்பனை வழிபடுக.
    புதன் திசை நடப்பவர்கள் - திருமாலை வழிபடுக. திருவெண்காடு அகோர கோர பத்திரகாளியை வழிபடுக.
    குருதிசை நடப்பவர்கள் - குருபகவானை வழிபடுக.
    சுக்கிர திசை நடப்பவர்கள் - ஸ்படிக லிங்கம் மற்றும் அம்பாளை வழிபடுக.
    ராகு திசை நடப்பவர்கள் - சிவனை வழிபடுக
    கேது திசை நடப்பவர்கள் - விநாயகரை வழிபடுக
    சனி திசை நடப்பவர்கள் - திருநள்ளாறு சனிபகவானை வழிபடுக.

    ஒன்பது கட்டுகள் கொண்ட அமைப்புதான் அம்பாளின் எந்திரமான ஸ்ரீசக்கரம். இந்த ஸ்ரீசக்கரங்கள் அமைந்த பிரசித்தி பெற்ற ஆலயங்கள் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.
    அம்பிகையானவளின் உக்கிரத்தைத் தணிக்க சர்வேஸ்வரன் அந்த உக்கிரக்கலையையே ஸ்ரீசக்கரமாக ஸ்தாபித்து ஆகர்ஷித்து அம்பிகைக்கு எதிரில் வைத்து சாந்தமடையச் செய்ததாகச் சொல்லப்படுகிறது. ஒன்பது கட்டுகள் கொண்ட அமைப்புதான் அம்பாளின் எந்திரமான ஸ்ரீசக்கரம். நம் பார்வைக்கு சாதாரணக் கோடுகளும் முக்கோணங்களுமாகத் தெரியும் ஸ்ரீசக்கரம் அம்பிகையின் இருப்பிடம் மட்டுமல்ல, சர்வசக்தியும் இதில் அடக்கம்.

    இந்த ஸ்ரீசக்கரங்கள் அமைந்த பிரசித்தி பெற்ற ஆலயங்கள் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.

    * காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்தில் ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீசக்கரத்திற்கே அனைத்து பூஜைகளும் செய்யப்படுகின்றன.

    * பூந்தமல்லிக்கு அருகே மாங்காட்டில் பிரதிஷ்டை செய்யப்பட்ட அர்த்தமேருவுக்கு புணுகு, சந்தனம் சாத்தப்படுகிறது.

    * கும்பகோணம்-மாயவரம் பாதையில் உள்ள பாஸ்கரராயபுரம் ஆனந்தவல்லி அம்மன் முன் ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

    * புதுக்கோட்டை புவனேஸ்வரி தேவி முன் உள்ள மகாமேரு, சாந்தானந்த சுவாமிகளால் ஸ்தாபிக்கப்பட்டது.

    * ஸ்ரீசைலம் பிரமராம்பிகா தேவியின் முன் ஆதிசங்கரர் ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்துள்ளார்.

    * சென்னை-திருவொற்றியூர் தியாகராஜர் ஆலயத்தில் வட்டப்பாறை அம்மனின் உக்கிரம், ஆதிசங்கரர் நிறுவிய ஸ்ரீசக்கரத்தால் தணிக்கப்பட்டது.

    * திருவானைக்கா அகிலாண்டேஸ்வரியின் ஒரு காதில் ஸ்ரீசக்கர தாடங்கத்தையும் மற்றொரு காதில் சிவசக்ர தாடங்கத்தையும் ஆதிசங்கரர் அணிவித்துள்ளார். அதன் பின்னரே தேவியின் உக்ரம் தணிந்து சாந்தமானார்.

    * கொல்லூர் மூகாம்பிகையின் மகிமைக்கு காரணம் தேவியின் முன் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்துள்ள ஸ்ரீசக்கரமே. 
    மேல்நோக்கு நாட்கள், கீழ்நோக்கு நாட்கள், சம நோக்கு நாட்கள் என்றால் என்ன, அந்த நாட்களில் என்னென்ன வேலைகள் செய்யலாம் என்பது குறித்து பார்க்கலாம்.
    மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள், சம நோக்கு நாள் இப்படியான வார்த்தைகள் தினசரி காலண்டரில் உங்கள் கண்களில் நிச்சயம் பட்டிருக்கும். மேல்நோக்கு நாட்கள், கீழ்நோக்கு நாட்கள், சம நோக்கு நாட்கள் என்றால் என்ன, அந்த நாட்களில் என்னென்ன வேலைகள் செய்யலாம் தெரியுமா?

    மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள், சம நோக்கு நாள் ஆகிய மூன்றும் அந்த நாளுக்குரிய நட்சத்திரத்தின் அடிப்படையிலேயே கணிக்கப்படுகிறது.

    மேல்நோக்கு நாள்: உத்திரம், உத்திராடம், ரோகிணி, பூசம், திருவாதிரை, அவிட்டம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி ஆகிய ஒன்பது நட்சத்திரங்களும் மேல்நோக்கு நட்சத்திரங்கள் ஆகும். இந்த நட்சத்திரங்களை கொண்ட நாட்களே மேல்நோக்கு நாட்கள் என்று குறிப்பிடப்படுகிறது. இந்த நாட்களில் மேல்நோக்கி செய்யும் வேலைகளை தொடங்குவது சிறந்தது. உதாரணத்திற்கு கட்டிடம் எழுப்புவது, மரங்களை நடுவது, மேல்நோக்கி வளரக்கூடிய விதைகளை விதைப்பது போன்றவற்றை செய்யலாம்.

    கீழ்நோக்கு நாள்: கிருத்திகை, பரணி, பூரம் ஆயில்யம், விசாகம், மகம், மூலம், பூராடம், பூரட்டாதி ஆகிய ஒன்பது நட்சத்திரங்களும் கீழ்நோக்கு நட்சத்திரங்கள் ஆகும். இந்த நட்சத்திரங்களை கொண்ட நாட்களே கீழ்நோக்கு நாட்கள் என்று குறிப்பிடப்படுகிறது. இந்த நாட்களில் கீழ்நோக்கி செய்யும் வேலைகளை தொடங்குவது சிறந்தது. உதாரணத்திற்கு கிணறு தோண்ட ஆரம்பிப்பது, வீட் டில் போர்வெல் போடுவது, சுரங்கம் தோண்டுவது, மண்ணிற்கு கீழ் வளரக் கூடிய காய்கறிகள் கிழங்குகளை பயிரிடுவது போன்றவற்றை செய்யலாம்.

    சமநோக்கு நாள்: அஸ்தம், அஸ்வினி, அனுஷம், மிரு கசீரிஷம், சுவாதி, புனர்பூசம், சித்திரை, கேட்டை, ரேவதி ஆகிய ஒன்பது நட்சத்திரங்களும் சமநோக்கு நட்சத்திரங்கள் ஆகும். இந்த நட்சத்திரங்களை கொண்ட நாட்களே சமநோக்கு நாட்கள் என்று குறிப்பிடப்படுகிறது.

    இந்த நாட்களில் ஓரளவிற்கு சமமாக செய்யும் வேலைகளை தொடங்குவது சிறந்தது. உதாரணத்திற்கு சாலை அமைப்பது, சமமான சாலையில் ஓட்டக்கூடிய வாகனங்கள் வாங்குவது, வீட்டிற்கு தளம் அமைப்பது, வயல்களை உழுவது போன்றவற்றை செய்யலாம்.

    ஒருவரது ஜாதகத்தில் புதன் யோகம் பெற்றிருந்தால், அந்த ஜாதகர் அறிவிலும், புத்திக்கூர்மையிலும் சிறந்து விளங்குவார். புதன் பகவானுக்கு உரியவற்றை பார்க்கலாம்.
    காரகன் - மாமன்
    தேவதை - விஷ்ணு (பெருமாள்)
    தானியம் - பச்சைப் பயறு
    உலோகம் - பித்தளை
    நிறம் - பச்சை
    குணம் - தாமஸம்
    சுபாவம் - சவுமியர்
    சுவை - உவர்ப்பு
    திக்கு - வடகிழக்கு

    உடல் அங்கம் - கழுத்து
    தாது - தோல்
    நோய் - வாதம்
    பஞ்சபூதம் - நிலம்
    பார்வை நிலை - தான் நின்ற ராசியில் இருந்து 7-ம் இடத்தை முழு பார்வை. 3, 10-ம் இடம் கால் பங்கும், 5,9-ம் இடம் அரை பங்கும், 4,8-ம் இடத்தை முக்கால் பங்கும் பார்ப்பார்கள்

    பாலினம் - ஆணும், பெண்ணும் இல்லாத நிலை
    உபகிரகம் - அர்த்தபிரகரணன்
    ஆட்சி ராசி - மிதுனம், கன்னி
    உச்சராசி - கன்னி
    மூலத்திரிகோண ராசி - கன்னி

    நட்பு ராசி - ரிஷபம், சிம்மம், துலாம்
    சமமான ராசி - மேஷம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம்
    பகை ராசி - கடகம்
    நீச்ச ராசி - மீனம்
    திசை ஆண்டுகள் - பதினேழு ஆண்டுகள் ஒரு ராசியில்

    சஞ்சரிக்கும் காலம் - ஒரு மாதம்
    நட்பு கிரகங்கள் - சூரியன், சுக்ரன்
    சமமான கிரகங்கள் - செவ்வாய், குரு, சனி, ராகு-கேது
    பகையான கிரகம் - சந்திரன்
    அதிக பகையான கிரகம்- சந்திரன்
    இதர பெயர்கள் - பாகன், கொம்பன், மால், மாலவன், கணக்கன், பண்டிதன், அருணன், சவுமியன்
    நட்சத்திரங்கள் - ஆயில்யம், கேட்டை, ரேவதி 
    ×