search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95492"

    பரந்து விரிந்த கொங்கு மண்டலத்தின் நடுநாயகமாக அமைந்திருப்பது ஈரோடு. ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஈரோடு நகரம் பல்வேறு சிறப்புகளை பெற்றது. சிறப்பு பெற்ற ஈரோடு நகரில் எழுந்தருளி உலக மக்களுக்கு நன்மை அருள்புரியும் தாயாக வீற்றிருப்பவர் பெரிய மாரியம்மன்.

    ஈரோட்டில் கோட்டை இருந்த காலத்தில் கோட்டையின் உள்ளே இருந்து ஈரோட்டை மட்டுமின்றி கொங்கு 24 நாடுகளையும் காக்கும் தெய்வமாக குடிகொண்டு இருந்த பெரிய மாரியம்மன், கோட்டை பெரிய மாரியம்மன் என்று அழைக்கப்பட்டு வந்தார். தற்போது பன்னீர்செல்வம் பூங்கா அருகே பிரப் ரோட்டில் (மாநகராட்சி அலுவலகத்தின் எதிரில்) பக்தர்களுக்கு அருளாசி புரியும் மாரியம்மனின் திருவிழா காலம் இது.

    பங்குனி மாதத்தில் ஈரோட்டில் வெயில் கொளுத்தினாலும், காவிரிக்கு சென்று தீர்த்தம் எடுத்து வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறையாது என்கிற வகையில் நாள்தோறும் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரித்து வரும் ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் திருவிழாவுடன் வகையறா கோவில்களான நடு மாரியம்மன், வாய்க்கால் மாரியம்மன் கோவில்களிலும் பூச்சாட்டு, கம்பம் நடுதல் நிகழ்வுகள் ஒரே நேரத்தில் நடக்கிறது. நடுமாரியம்மன் கோவில் பெரியார் வீதியிலும், வாய்க்கால் மாரியம்மன் கோவில் காரைவாய்க்காலில் காலிங்கராயன் வாய்க்கால் கரையிலும் அமைந்து உள்ளன.

    பெரிய மாரியம்மன் கோவிலின் குண்டம் வாய்க்கால் மாரியம்மன் கோவிலிலும், தேரோட்டம் நடுமாரியம்மன் கோவிலிலும் நடைபெறும்.

    ஈரோடு மட்டுமின்றி கொங்கு மண்டலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் திரளாக வந்து பெரிய மாரியம்மனை வழிபடுவார்கள். அம்மனுக்கு உகந்த நாளான வெள்ளிக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் இங்கு அதிகம் இருக்கும். திருவிழா நாட்களில் போக்குவரத்து திணறும் அளவுக்கு பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும். இதுபோல் திருவிழா காலத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பெரிய மாரியம்மனை தேடி வரும் பக்தர்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காது.

    பெரிய மாரியம்மன் கோவில் கம்பம் பிடுங்கும் விழா மஞ்சள் நீராட்டு விழா மிக சிறப்பு மிக்கது. மஞ்சள் நகராம் ஈரோடு முழுமையும் மஞ்சள் நகராக மாறும் காட்சி அன்று நடைபெறும். 3 கோவில்களில் இருந்தும் கம்பத்தை பிடுங்கி ஊர்வலமாக நகரில் வீதி உலா நடைபெறும். அப்போது பக்தர்கள் நேர்ச்சைக்கடனாக வீசும் உப்பு தார் சாலையையே வெள்ளை நிறமாக மாற்றும் என்றால் பக்தர்கள் மாரியம்மன் மீது கொண்ட நம்பிக்கைக்கு இதுவே சாட்சியாகும். பெரிய மாரியம்மன் கோவில் வகையறா கோவில்களின் தேர் நடுமாரியம்மன் கோவிலில் உள்ளது.

    இந்த தேர் 30 அடி உயரம் கொண்டது. நுட்பமான வேலைப்பாடுகள் கொண்டது. சிவபெருமான், முருக பெருமானின் திருவிளையாடல்கள் தேரில் செதுக்கப்பட்டு உள்ளன. வீணை, இரட்டைக்குழல், மத்தளம் போன்ற இசைக்கருவிகள் வாசிக்கும் கலைஞர்கள் பற்றி சிற்பங்களும் இந்த தேரில் செதுக்கப்பட்டு உள்ளன. இந்த தேர் அலங்காரம் செய்யப்பட்டு பெரிய மாரியம்மன் பக்தர்களுக்கு அருள் வழங்க தேரேறி வரும் காட்சியை காண கண்கோடி வேண்டும்.

    வெப்பு சம்பந்தமான நோய்களை தீர்க்க பெரிய மாரியம்மனுக்கு வேண்டுதல் வைத்தால் உடனடியாக குணமாகும் என்பது நம்பிக்கை. அம்மை கொப்பளம் வராமல் இருக்க பெரிய மாரியம்மன் அருள் புரிகிறார். குழந்தை இல்லாத தம்பதியருக்கு அந்த குறை இல்லாமல் செய்யும் தாயாக விளங்கும் பெரிய மாரியம்மன் கொங்கு மண்ணுக்கே தாயாக உள்ளார். எனவேதான் நாள்தோறும் அம்மனை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் நீண்டுகொண்டே உள்ளது.
    திருவிடைமருதூர் கோவிலில் உள்ள இறைவன் சுயம்புலிங்க மூர்த்தியாக, மகாலிங்கேஸ்வரர் என்ற திருநாமத்துடன் அருள்பாலித்து வருகிறார்.

    திருவிடைமருதூர் கோவிலில் உள்ள இறைவன் சுயம்புலிங்க மூர்த்தியாக, மகாலிங்கேஸ்வரர் என்ற திருநாமத்துடன் அருள்பாலித்து வருகிறார். இங்குள்ள இறைவன் தன்னைத்தானே அர்ச்சித்து கொண்டு பூஜை விதிகளை சப்தரிஷிகள் மற்றும் முனிவர்களுக்கு போதித்து அருளிய தலம் இது.

    மார்க்கண்டேயர் விருப்பத்தின்படி, இத்தல இறைவன் அர்த்த நாரீஸ்வரராக காட்சி கொடுத்துள்ளார். அம்மன் பிருஹத் சுந்தர குசாம்பிகை, நன்முலைநாயகி என்ற பெயரில் அருள்புரிந்து வருகிறார்.

    திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோவில் அருகே திருவலஞ்சுழி விநாயகர் கோவில், சுவாமி மலை முருகர் கோவில், சிதம்பரம் நடராஜர் கோவில், ஆலங்குடி தட்சிணாமூர்த்தி கோவில், திருசேய்ஞலூர் சண்டேச்சுரர் கோவில், சீர்காழி பைரவர் கோவில், சூரியனார் நவரக்கிரக கோவில் போன்ற பரிவார மூர்த்த தலங்கள் அமையப் பெற்றுள்ளதால் திருவிடைமருதூர் கோவில் மகாலிங்கதலம் என்று அழைக்கப்படுகிறது.

    இந்த தலத்தில் உள்ள மகாலிங்க பெருமானை பூஜித்து, பல உயிர்களும் மேன்மை பெறும் வகையில் அரசாட்சி செய்து வந்ததால் இங்குள்ள விநாயகருக்கு ஆண்ட விநாயகர் என்ற பெயர் வந்ததாக கூறப்படுகிறது. அகத்தியர் உள்ளிட்ட முனிவர்களின் தவத்திற்கு இரங்கி அம்பிகை எழுந்தருளி வந்து காட்சி கொடுத்தார்.

    பின்னர் அம்பிகை, சிவபெருமானை நோக்கிதவம் புரிய அதன் பொருட்டு ஈசன் ஜோதி வடிவமாகவும், ஏகநாயக வடிவமாகவும் அம்பிகை மற்றும் முனிவர்களுக்கு காட்சி கொடுத்தார்.
    பெரியவர்கள் நாகத்தைப் பார்த்து யோகத்தைச் சொல்ல வேண்டுமென்று குறிப்பிடுவார்கள். அதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
    நாகதோஷம் என்பது நவக்கிரக கோள்களில் சாயா கிரகங்கள் எனப்படும் ராகு/கேது ஆகியவைகளால் ஏற்படுவதாகும். ராகு கேது ஆகிய இவ்விருவரும் அசுப கிரகங்கள். இவர்கள் சூரியன், செவ்வாய், சனி ஆகிய இயற்கையான அசுப கிரகங்களைக் காட்டிலும் அதிக தீமை பயப்பவர்கள்.

    இவர்களுக்கு 12 ராசிகளில், தமக்கென உரிய ராசி என்று ஏதும் இல்லையென்றாலும், தாம் சஞ்சரிக்கும் ராசியை தமதாக்கி, அந்தப் பாவத்திற்குரிய நற்பலன்களை நலிவடையச் செய்யும் ஆற்றல் படைத்தவர்கள் அது மட்டுமல்லாமல் அந்த பாவத்திற்குரிய பொறுப்பையும் ஏற்று செயல்படும் வலிமை பெற்றவர்கள்.

    நவக்கிரகத்துத் தலையாய நாயகர்களாகிய சூரியன் மற்றும் சந்திரன் இவர்களுக்கு எதிரிகளாவதோடு, ஒளிதரும் அவர்களைத் தனது நிழலால் மறைத்து கிரகண தோசத்தை உண்டாக்கி உலகை இருளடையச் செய்யும் வல்லமைப் பெற்றவர்கள். இவர்கள் மற்ற கிரகங்களைப் போல் வலமாகச் சுற்றாமல் இடமாக சுற்றுவதோடு, எப்போதும் 7க்கு 7ஆக அமைந்து இயங்குபவர்கள்.

    அதனால் தான் பெரியவர்கள் நாகத்தைப் பார்த்து யோகத்தைச் சொல்ல வேண்டுமென்று குறிப்பிடுவார்கள். இதைப் போல வல்லமைப் படைத்த அசுபகிரகமான அங்காரக பகவான் ஒருவர் சாதகத்தில் 2,4,7,8,12 ஆகிய இடங்களில் இருந்தால் அங்காரக தோஷம் உடையவர்கள் என்று சொல்லப்படுகிறது.
        
    பொதுவாக நாகதோஷங்களில் மிகச் சிறப்பாக குறிப்பிடப்படுவது கால சர்ப்ப யோகதோஷம். ஒருவர் பிறக்கும்போது கணிக்கப்படும் ராசி கட்டத்தில் ராகு-கேது ஆகியவர்களுக்கு இடையே மற்ற 7 கிரகங்கள் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய கிரகங்கள் சஞ்சரிப்பதையே கடுமையான கால சர்ப்ப யோக தோசங்கள் என்று குறிப்பிடப்படுகிறது.

    இதற்கு ஒரே தீர்வு இறைவனை முறையாக வழிப்பட்டால்தான், துன்பங்களிலிருந்து விடுதலைப் பெற முடியும். தினமும் காலையில் சூரிய பகவானை வணங்கி, திருஞான சம்மந்தப் பெருமான அருளிச் செய்த கோளறு பதிகம் 11 பாடல்கள், மாணிக்கவாசகர் அருளிச் செய்த திருவாசகம் மற்றும் ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிச் செய்த சண்முகக் கவசம் முதலானவற்றை தினமும் பாராயணம் செய்து, சோமவாரம், அமாவாசை, பௌர்ணமி, கிருத்திகை, சஷ்டி முதலான புண்ணிய காலங்களில் விரதம் இருந்து ஒன்பது வாரங்கள் பரமேசுவரன் மற்றும் நவக்கிரகங்களை வழிப் படுகிறவர்களுக்கு இறையருளால் பகை வராலோ, கடனாலோ, நோய் களாலோ ஏற்பட்ட துன்பங்கள் நீங்கும்.
    ஈரோடு பெரிய மாரியம்மன் வகையறா கோவில்களின் குண்டம் - தேர்த்திருவிழா விழாவை முன்னிட்டு இன்று (வியாழக்கிழமை) மாலை 5 மணிக்கு திருவிழா கொடியேற்றப்படுகிறது.
    ஈரோடு பெரிய மாரியம்மன் வகையறா கோவில்களின் குண்டம்- தேர்த்திருவிழா கடந்த 18-ந்தேதி இரவு பூச்சாட்டுடன் தொடங்கி நடந்து வருகிறது.

    விழாவை முன்னிட்டு இன்று (வியாழக்கிழமை) மாலை 5 மணிக்கு திருவிழா கொடியேற்றப்படுகிறது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபடுகிறார்கள்.

    விழாவையொட்டி தினமும் 3 கோவில்களிலும் வைக்கப்பட்டுள்ள கம்பங்களுக்கு பெண்கள் மற்றும் பக்தர்கள் தொடர்ந்து புனிதநீர் ஊற்றி வழிபட்டு வருகிறார்கள்.

    வரும் ஏப்ரல் 2-ந்தேதி அதிகாலை 5.30 மணிக்கு காரை வாய்க்கால் மாரியம்மன் கோவிலில் குண்டம் இறங்கும் விழா நடக்கிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து நேர்த்தி கடனை செலுத்துகிறார்கள்.

    அன்று இரவு 9 மணிக்கு மாவிளக்கும் கரகம் நிகழ்ச்சிகளும் நடக்கிறது. பெரிய மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

    மறுநாள் 3-ந்தேதி பொங்கல் விழா நடக்கிறது.தொடர்ந்து சின்ன மாரியம்மன் கோவிலில் இருந்து தேர் வடம் பிடித்து இழுக்கும் தேரோட்டம் நடக்கிறது. மாலை 4 மணிக்கு மீண்டும் தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
    திருவிடைமருதூர் கோவிலுக்கு உரியனவாக முப்பத்தி ஐந்து தீர்த்தங்கள் உள்ளன. அந்த தீர்த்தங்களை பற்றி விரிவாக பார்க்கலாம்.
    திருவிடைமருதூர் தீர்த்தங்கள் 35

    1. காருண்யாமிர்தம்
    2. பாணதீர்த்தம்
    3. பராசர தீர்த்தம்
    4. சோம தீர்த்தம்
    5. சோம தீர்த்தம்
    6. ருத்ர தீர்த்தம்
    7. பதும தீர்த்தம்
    8. பாண்டவ தீர்த்தங்கள்
    9. இந்திர தீர்த்தம்
    10. அக்கினி தீர்த்தம்
    11. யம தீர்த்தம்
    12. நிருதி தீர்த்தம்
    13. வருண தீர்த்தம்
    14. வாயு தீர்த்தம்
    15. குபேர தீர்த்தம்
    16. ஈசான தீர்த்தம்
    17. கிருஷ்ண கூபம்
    18. கனக தீர்த்தம்
    19. கங்கா கூபம்
    20. கருட தீர்த்தம்
    21. வசு தீர்த்தம்
    22. சூரிய தீர்த்தம்
    23. மருந்துகள் தீர்த்தம்
    24. நரசிங்க தீர்த்தம்
    25. நந்தி தீர்த்தம்
    26. துரோண தீர்த்தம்
    27. ராகவ கூபம்
    28. சுர தீர்த்தம்
    29. முனி தீர்த்தம்
    30. கச்சப தீர்த்தம்
    31. கவுதம தீர்த்தம்
    32. கல்யாண தீர்த்தம்
    33. சேஷ தீர்த்தம்
    34. கந்த தீர்த்தம்
    35. ஐராவத தீர்த்தம்
    காவிரிக் கரையில் அமைந்துள்ள ஆலயங்களில் ஆறு சிவதலங்கள் காசிக்கு நிகராக கருதப்படுகின்றன. அவற்றில் ஒன்று திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் திருக்கோவில் ஆகும்.
    காவிரிக் கரையில் அமைந்துள்ள ஆலயங்களில் ஆறு சிவதலங்கள் காசிக்கு நிகராக கருதப்படுகின்றன. அவற்றில் ஒன்று திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் திருக்கோவில் ஆகும். சுமார் 1200 ஆண்டுகளுக்கு முந்தைய பழமைவாய்ந்ததாக உள்ள இந்த கோவில் நீண்ட 3 பிரகாரங்களை கொண்டதாக அமைந்துள்ளது.

    மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூவகையாலும் சிறப்புடையது திருஇடைமருதூர். இந்த ஆலயம் திருவாவடுதுறை ஆதின பரிபாலனத்தில் விளங்குகிறது. “ஈசன் உறைகின்ற இடைமருது” என்று திருஞான சம்பந்தரால் போற்றிப் பாடப்பெற்ற இத்திருத்தலம், மூர்த்தி, தலம், தீர்த்தம் மூன்றிலும் சிறப்புடையது. இத்தலம் ‘மத்தியார்கள் சேத்திரம’ என்று போற்றப்படுகிறது. மருத மரத்தைத் தலவிருட்சமாகக் கொண்ட திருத்தலம்.

    “திருவாரூர் தேரழகு, வேதாரண்யம் விளக்கழகு, திருவிடை மருதூர் தெருவழகு” என்று கூறுவது வழக்கம். அதற்கிணங்க இங்கு தெருக்களின் அமைப்பு சிறப்பான ஒன்றாகும்.

    இத்தலத்தில் அருள்பாலிக்கும் இறைவன் பெயர் அருள்மிகு ஸ்ரீமகாலிங்கப் பெருமான் ஆவார். அம்மையார் பெயர் பெருநலமா முல்லையம்மை.
    இத்தலத்தில் தேரோடும் வீதிகளில் கோடியில் விநாயகர் ஆலயமும், கீழை வீதியில் ஸ்ரீ விசுவநாதர் ஆலயமும், தெற்கு வீதியில் ஸ்ரீ ஆத்மநாதர் ஆலயமும், மேல வீதியில் ஸ்ரீ ரிஷிபுரீசுவரர் ஆலயமம், திருமஞ்சன வீதியில் (வடக்கு வீதி) ஸ்ரீ சொக்கநாதர் ஆலயமும் அமைந்து நடுவில் ஸ்ரீ மகாலிங்கப் பெருமான் திருக்கோவில் அமைந்துள்ளதால் இது பஞ்சலிங்கத் தலம் எனவும் அழைக்கப்படுகிறது.

    ஒரு சமயம் மகாதேவர் தமது ஞானசக்தியாகிய உமா தேவியாருக்கு ஆகமங்களை உபதேசிக்க, அன்னையார் அவற்றையெல்லாம் திருவுளங்கொண்டு மகிழ்ந்து ஏற்று இறைவனை வணங்கி, “பிரபோ! இவ்வுலக வளங்களையும் அதற் கொப்ப ஆன்மாக்கள் வழிபட்டு உய்ய தேவரீர் எழுந்தருளிச் சிறப் பிக்கும் தலங்களையும் அவற்றில் உயர்ந்ததாக- சிறந்ததாக விளங் கும் ஒன்றைக் காட்டியருள வேண்டுகிறேன்” என வேண்டினாள்.

    சிவபெருமான் அதை ஏற்று, ரிஷபாரூடராய்க் கைலாயத்தினின்றும் புறப்பட்டு எல்லாத் தலங்களையும் காட்டி, காவிரியின் தென்கரையில் உள்ள இந்த திருவிடை மருதூர் தலத்தை அடைந்தார். “தேவி! இந்தத் தலம் மிகவும் அழகானது. அமைதியானது. எனக்கு அதிகம் விருப்பமானது. இதன் அழகை நீ காண்பாயாக” என்று திருவாய் மலர்ந்தருளினார்.

    உமாதேவியாரும் அந்தத் தலத்தை நன்கு சுற்றிப்பார்த்து, காசிபர் போன்ற முனிவர்கள் தவஞ்செய்தலையும், மற்ற விசேஷங்களையும் கண்டு களிப்புற்றாள். அங்கே தவஞ்செய்யும் முனிவர்கள் தம்முட் பேசிக் கொள்ளும் வினாவிடைகளைத் தெரிந்துகொள்ளும் பொருட்டு, பார்வதி தேவியோடு ஈஸ்வரனும் ஒரு முகூர்த்த காலம் யாவரும் அறியா வண்ணம் மறைந்திருந்தார்.

    அப்போது அங்கே வந்த அகஸ்திய முனிவரைக் கண்ட தவயோகிகள் அவரை வணங்கி, “தேவரீர் இங்கே எழுந்தருளியிருப்பது நாங்கள் செய்த பாக்கியமே. சுவாமி! யாகம் முதலிய கருமங்களைச் செய்யப் பயனளிப்பது அக்கருமமா? அல்லது ஈஸ்வரனா என்ற சந்தேகம் நெடுநாளாக எங்கள் மனத்தில் உள்ளது தாங்கள் அந்தச் சந்தேகத்தைப் போக்க வேண்டுகிறோம்” என்றனர்.

    அதைக் கேட்ட மலையமுனி “கர்மா தானே பயன் தராது. அதன் பயனைத் தருபவர் ஈஸ்வரனே” என்று விளக்கிக் கூறி முனிவர்களே, அவனருளாலேயே அவனை அடைய வேண்டும் என வேதங்கள் கூறுகின்றன. ஆதலால் நீவிர் அருள்வள்ளலாம் உமாதேவியாரைக் குறித்துத் தவம் செய்து அவள் அருளால் ஈசனைத் தரிசியுங்கள்” என்று கூறினார்.

    இதைக்கேட்ட அன்னை இவர்களுக்குக் காட்சி கொடுத்தல் வேண்டும் என்று இறைவனை வேண்ட, “நாம் இப்போது இவர்களுக்கு வெளிப்படுவது முறையன்று. அகஸ்தியன் கூறியபடியே நடக்கட்டும்” என மொழிந்து உமாதேவியுடன் திருக் கயிலாயம் எழுந்தருளினார். பின்பு அகத்திய முனி கூறியபடி அனைவரும் கலை மகளை நோக்கித் தவம் செய்து வேதாகமங்களின் உண்மைப் பொருள் உணர்ந்து, பின் மலர்மகளான லட்சுமியை நோக்கித் தவம் செய்து, யாகத்துக்குரிய பொருள்கள், தடாகம், மண்டபம், சண்பகச் சோலை, நவமணிக்குவியல், காமதேனு, கற்பகம் போன்றவற்றைப் பெற்றனர். பின்பு முனிவர்களுடன் அகஸ்தியரும் உமாதேவியாரை நினைத்து அந்தச் சண்பகச் சோலையிலிருந்து யாகம் வளர்த்துத் தவம் செய்யத் தொடங்கினார்.

    எப்போதும் உமாதேவியாருடைய திருவடிகளை நினைத்துப் பல நாட்கள் தவம் புரிந்தனர். அம்மையாரின் தரிசனம் கிட்டவில்லை. அகஸ்திய முனிவர் பெரிதும் வருந்தினார். திருவருள் கூட்டினாலன்றி எவ்வித முயற்சியும் பயன் தராதன்றோ! அகஸ்தியர் அம்மையார் அருளாமை குறித்துச் சிவபெருமானை வேண்ட, இறைவன் அகஸ்தியர் பால் கனிந்து உமையைத் தரிசனத்துக்கு அனுப்புகிறார்.

    அம்மையார் வேள்விச்சாலையில் அக்னியில் தோன்றிக் காட்சியளிக்கிறார். முனிவர்கள் அம்பிகை வடிவத்தைத் தரிசித்து ஆனந்தக்கண்ணீர் சொரிந்தார்கள். ஆடினர், பாடினர், அன்புக் கோஷம் எழுப்பினர். அவளை ஆசனத்தில் இருத்திப் பூசையாற்றினார். தங்களது வேண்டுகோளை இறைவரையும் தரிசிக்க வேண்டும் என்ற ஆசையை வெளியிட்டார்கள். அம்பிகை முனிவர்களின் வேண்டுகோளை ஏற்று அம்முனிவர்கள் போல் தாமும் தவவேடம் மேற்கொண்டார்.

    அம்பிகை பக்தியுடன் காவிரியில் நீராடி, நித்திய கர்மங்களை முடித்து திருவைந்தெழுத்தை முறைப்படி ஓதி, வேண்டிய உபகரணங்களை எல்லாம் சேகரம் செய்து ஐவகை சுத்தியும் செய்து சிவபெருமானை நோக்கி பூஜித்து, பின் இறைவனை தியானித்து மோனநிலையை அடைந்து சிவோக பாவனையில் தவமிருந்தார். இத்திருக்கோலமே மூகாம்பிகை என்று அழைக்கப்படுகிறது. இம்மூர்த்தம் இவ்வாலயத்தில் தனிச்சந்நிதியாக திகழ்கிறது.

    இப்படி நிகழும் காலத்தில், அம்பிகை ஹிருதய கமல மத்தியில் இறைவன் ஜோதிர்மய மகாலிங்கமூர்த்தியாய் அவர்களுக்கு தோன்றினார். அதனின்றும் பிறையுடன் கூடிய முடியும், மான், மழு, அபயம், வரதம் அமைந்த திருக்கரங்களுடன் ஏகநாயகமூர்த்தியாய் எழுந்தருளிக் காட்சி அளித்தார்.

    முனிவர்கள் வணக்கத்துடன் துதி செய்து “நாம் செய்த தவம் பலித்தது” என்று கூறி, ஆனந்தப் பரவசமுற்றனர். இறைவன் அம்பிகையை நோக்கி, “உனது தவம் கண்டு மகிழ்ந்தோம். அகஸ்தியர் போன்ற முனிவர்களுக்கும் காட்சியளித்தோம். இனி யாரும் அறியும்படி நாம் முன்னை வடிவமாகக் கொண்ட ஜோதிமய மகாலிங்கத்தை அநாதியாக உள்ள நம் உருவமாகிய லிங்கத்துடன் ஐக்கியத்து பூஜிக்கிறோம்” என்று கூறி தேவர்கள், வானவர்கள் தத்தம் பணிகளைச் செய்து முடித்து இறைவன் அருகே நிற்க, தாம் உரைத்தருளிய வேதாகம் விதிப்படி மகாலிங்கத்தைப் பூஜிக்கலானார்.

    இதைக் கண்ட தேவி, “பிரபோ! பிரம்மன், விஷ்ணு போன்ற தேவர்கள் அன்றோ தங்களை அர்ச்சிப்பர். தாங்கள் இந்த ஜோதிலிங்கத்தில் எவரைப் பூஜித்தீர்கள்?” என்று வினவ, அதற்கு மகேஸ்வரன், “உமையே! பூசித்தோனும் பூசனையை ஏற்றுக் கொண்ட பரம்பொருளும் நாமே. நம்மை நாமே பூஜிப்பதற்கு காரணம்.

    இம்முனிவர்களுக்கு நம்மைப் பூஜிக்கும் முறையை அறிவுறுத்தற்பொருட்டே” என்று கூறி முனிவர்களுக்குச் சிவஞானத்தை அருளி, லிங்கத்தின் பெருமையையும் பூஜை செய்யும் முறையையும் பூஜிப்பவர்கள் அடையும் பயனையும் விவரித்து கூறி உமையுடன் திருக்கயிலாயம் சென்றார்.

    பிறகு தேவர்களும் முனிவர்களும் விஸ்வகர்மாவை அழைத்து ஆலயம் அமைக்கும் முறையைக் கூறி அதன்படி கர்ப்பக்கிரகம், அர்த்தமண்டபம் போன்ற ஆலயக் கட்டிடங்களை எழுப்பினர். இன்னும் இவ்வாலயத்தில் ஐந்தாம் திருவிழா அன்று தம்மைத் தாமே அர்ச்சித்தல் நடைபெறுகிறது.
    திருமுருகன்பூண்டியில் 25 தலை, 50 கைகளுடன் செதுக்கப்பட்டுள்ள மகா சதாசிவ மூர்த்தி சிலை சிவகங்கை மாவட்டத்தில் பிரதிஷ்டை செய்யப்படுகிறது.
    திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டி சுற்று வட்டாரத்தில் 100-க்கும் மேற்பட்ட சிற்ப கலை கூடங்கள் உள்ளன. அங்கு கருங்கல்லால் செதுக்கப்படும் கலை நயமிக்க சிலைகள் தமிழகம் முழுவதும் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது அங்குள்ள ஒரு சிற்ப கலை கூடத்தில் 25 தலை மற்றும் 50 கைகளுடன் கூடிய மகா சதாசிவ மூர்த்தி சிலை செதுக்கப்பட்டுள்ளது.

    இந்த சிலை குறித்து ஸ்பதி சண்முகம் கூறியதாவது:-

    திருமுருகன்பூண்டியில் தினமும் பல சிலைகள் வடிவமைத்தாலும் இதுபோன்ற சிலை வடிவமைக்கப்படுவது முதல்முறையாகும். இந்த சிலை 4 டன் எடையுடன், 7½ அடி உயரத்தில் ஒரே கருங்கல்லால் செதுக்கப்பட்டுள்ளது. மேலும் 25 தலைகள், 50 கைகள் மற்றும் அம்பாள் மடியில் இருப்பது போன்று மிகவும் தத்ரூபமாக மகா சதாசிவ மூர்த்தி சிலையை வடிவமைத்துள்ளோம். இந்த சிலையை 6 பேர் கொண்ட குழு 6 மாத காலத்தில் உருவாக்கி உள்ளோம்.

    இதேபோல் 6¾ அடி உயரத்தில், 3 டன் எடை அளவுள்ள 11 தலைகள் கொண்ட விஸ்வரூப சுப்பிரமணிய சாமி சிலையையும் கலைநயத்துடன் செதுக்கி உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த 2 சிலைகளும் சிவகங்கை மாவட்டம் சொக்கநாதபுரத்தில் உள்ள பிரத்தியங்கர தேவி கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
    வீட்டில் துளசி செடி வளர்ப்பது நல்லது. எந்த இடத்தில் துளசி செடி வளர்கின்றதோ, அந்த இடமெல்லாம் சகல தேவதைகளும் மும்மூர்த்திகளும் வாசம் செய்கின்றார்கள்.
    வீட்டில் துளசி செடி வளர்ப்பது நல்லது. எந்த இடத்தில் துளசி செடி வளர்கின்றதோ, அந்த இடமெல்லாம் சகல தேவதைகளும் மும்மூர்த்திகளும் வாசம் செய்கின்றார்கள்.

    துளசியை வழிபட்டால் துயரங்கள் தீரும், இல்லத்தில் லட்சுமி கடாட்சம் உண்டாகும்.

    துளசி இலைகளைச் சாப்பிட்டால் நோய்கள் குணமாகும். துளசியில் மகிமை ஏராளம் உள்ளது.


    சிவபெருமானின் 64 வடிவங்களுள் ராவண அனுக்கிரக மூர்த்தி அமைந்துள்ள திருத்தலம் திருவிடை மருதூர் மட்டுமே. இந்த கோவில் பற்றிய 41 வழிபாட்டு தகவல்களை அறிந்து கொள்ளலாம்.
    1. திருவிடைமருதூருக்கு செண்பகராண்யம், சக்திபுரம், தபோவனம், முக்திபுரம் ஆகிய பேர்கள் உண்டு.

    2. மருத மரத்தை தல விருட்சகமாக கொண்ட 3 தலங்களில் இந்த தலம் நடுவில் அமைந்து இருப்பதால் இடைமருதூர் என்ற பெயரும் உண்டு.

    3. இத்தலத்தில் அகத்தீஸ்யர்லிங்கம், காஸ்யபர் லிங்கம், சோழ லிங்கம், சேர லிங்கம், பாண்டிய லிங்கம், சகஸ்சர லிங்கம், பஞ்ச பூத லிங்கங்கள் என்று திரும்பிய திசையெல்லாம் லிங்க மயமாக காட்சி அளிக்கிறது. ஆலயத்துக்குள் 30-க்கும் மேற்பட்ட லிங்கங்கள் உள்ளன.

    4. இந்த தலத்தில் லிங்கங்களுக்கு அடுத்தப்படியாக விநாயகர் சிலைகளும் அதிகப்படியாக இருக்கின்றன.

    5. தமிழ்நாட்டில் உள்ள பெரிய தேர்களில் இந்த தலத்து தேரும் ஒன்று. இங்குள்ள தேர் 89 அடி உயரம் கொண்டது.

    6. இத்தலத்தின் கொடி மரம் 24 அடி உயரம் கொண்டது.

    7. சிவாலயங்களில் வலது பக்கம் அம்பிகை சன்னதி அமைந்திருந்தால் அந்த ஆலயம் திருமண கோலதலமாக கருதப்படும். அந்த வகையில் திருவிடைமருதூர் தலம் திருமணகோல தலமாக உள்ளது.

    8. தஞ்சை மாவட்டத்தில் உள்ள காரிய சித்தி தலங்களில் மனநோய் நீக்கும் தலமாக திருவிடைமருதூர் தலம் கருதப்படுகிறது.

    9. விபண்டக முனிவர் முன் தோன்றி சிவபெருமானிடம் வருடந்தோறும் தைப்பூச நாளன்று காவிரிக் கரையில் உள்ள கல்யாண தீர்த்தத்தில் நீராடியவர்கள் பாவம் நீங்கி இன்புற்று வாழ வேண்டும் என்று வேண்டினார். இறைவனும் அவ்வாறே ஆகுக! என்று வரம் அருளினார்.

    10. தஞ்சை மாவட்ட ஆலயங்களில் திருவிடை மருதூர் ஆலயத்துக்குதான் அதிக பாடல்கள் கொண்ட தலபுராணம் உள்ளது. இந்த ஆலயம் பற்றி ஞானக்கூத்த சிவபிரகாச தேசிகர் என்பவர் மூவாயிரம் பாடல்கள் தலபுராணமாக பாடியுள்ளார்.

    11. தஞ்சை மாவட்ட சமய இலக்கியங்களில் திருவிடை மருதூர் தலபுராணம், திருவிடை மருதூர் உலா, திருவிடை மருதூர் மும்மணிக்கோவை, திருவிடை மருதூர் கலம்பகம், திருவிடை மருதூர் நொண்டி நாடகம் முக்கியமானவை.

    12. சிவபெருமானின் 64 வடிவங்களுள் ராவண அனுக்கிரக மூர்த்தி அமைந்துள்ள திருத்தலம் திருவிடை மருதூர் மட்டுமே.

    13. தஞ்சை மாவட்டத்தில் 100-க்கும் அதிகமான பாடல்களை பெற்ற தலங்கள் இரண்டே இரண்டுதான். ஒன்று திருவையாறு, மற்றொன்று திருவிடை மருதூர்.

    14. தஞ்சை மாவட்டத்தில் 4 திசைகளிலும் நான்கு கோபுரங்கள் அமையப்பெற்ற தலங்கள் இரண்டு. ஒன்று கும்பகோண கும்பேஸ்வரர் கோவில். மற்றொன்று திருவிடை மருதூர்.

    16. சோழ நாட்டில் காவிரித் தென்கரையில் இருக்கும் 128 தலங்களுள், இத்தலம் முப்பதாவதாகப் போற்றப்படுகிறது.

    17. திருவிடைமருதூரில் தேரோடும் நான்கு வீதிகளின் மூலைகளிலும் நான்கு விநாயகர் கோவில்கள் உள்ளன.

    18. வைகாசி வசந்த விழா, அறுபத்து மூவர் விழா, நவராத்திரி விழா, மார்கழித் திருவாதிரை ழிழா, தைப்பூசத் திருவிழாவின் போது சுவாமி காவிரிக்கு எழுந்து அருளி ஐராவணத் துறையில் தீர்த்தம் கொடுக்கும் நிகழ்ச்சி சிறப்பானது.

    19. திருவிடைமருதூர் தலத்தில் காமீகாகம முறையில் நான்கு கால பூஜை நடத்தப்படுகிறது.

    20. இத்தலம் காலை 6.00 மணி முதல் பகல் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 9.30 மணி வரை திறந்து இருக்கும்.

    21. இத்தலம் சண்பகாரணியம், சத்திபுரம், தபோவனம், ஜோதிநகர், சர்வதீர்த்தபுரம், வில்வாரணியம், தருமவிருத்திபுரம், முத்திபுரம், பூலோக சிவலோகம், வீரசோழநகரம் முதலிய காரணப்பெயர்களைக் கொண்டு விளங்குகிறது.

    22. உமாதேவியார், விநாயகர், சுப்பிரமணியர், கோடி உருத்திரர், விஷ்ணு, சந்திரன், பிரமாதி தேவர்கள், இலக்குமி, சரஸ்வதி, மூன்று கோடி முனிவர்கள் முதலியேர் பெருமானை பூசித்து பேறு பெற்றுள்ளனர்.

    23. இத்தலத்தில் மகாலிங்கப் பெருமானுக்கு பூசை நடந்தபிறகே விநாயகப் பெருமானுக்கு பூசை நடைபெரும்.

    24. இத்தலம் சந்திரனுக்குரிய தலமாகவும், வரகுண பாண்டியன் இத்தலத்திற்கு வந்து பெருமானை வழிபட்டு புரமஹத்தி தோஷம் நேங்கப் பெற்றதால் பிரமஹத்தி தோஷம் நீங்கும் தலமாகவும், 27 நட்சத்திரங்கள் வழிபட்டு அருள் பெற்றதால் நட்சத்திரத் தோஷ நிவர்த்தி தலமாகவும் விளங்குகிறது.

    25. இத்தலம் காசிக்கு நிகரான தலமாகும்.

    26. பத்திரகிரியார் முத்தி பெற்ற திருத்தலம்.

    27. இத்தலப் பெருமையினை சிவரகஸ்யம், ஸ்காந்தம், இலிங்கப்புராணம், பிரமகைவர்த்தம் முதலிய பிரபல கிரந்தங்கள் சிறப்பாக எடுத்துரைக்கின்றன.
    28. இத்தலத்தில் தைப்பூச திருவிழா மிகவும் சிறப்புடையது.

    29. சோழர், பாண்டியர், நாயக்கர், மராட்டியர் ஆகியோர் இத்திருக் கோவிலைத் திருப்பணி செய்துள்ளனர்.

    30. இந்த கோவிலில் சோழர்காலக் கல்வெட்டுகள் பல உள்ளன.

    31. இத்தலத்தின் தலவிநாயகர் ஆண்ட விநாயகர்.

    32. இத்தலத்தில் சுவாமி, அம்பாள் இருவரது சந்நிதிகளும் கிழக்கு நோக்கியவை.

    33. தமிழ்நாட்டிலே மகாலிங்கேஸ்வரர் திருத்தேர் மூன்றாவது பெரியத் தேர்.

    34. பட்டினத்தார் மற்றும் பத்திரகிரியார் ஆகியோர்க்கு கிழக்கு மற்றும் மேற்கு கோபுர வாசல்களில் சன்னதி உள்ளது.

    35. திருநீலக்குடி சப்தஸ்தானத்தில் இடம் பெறும் ஏழுர்த்தலங்கள் திருநீலக்குடி, இலந்துறை, ஏனாதி மங்கலம், திருநாகேஸ்வரம், திருபுவனம், திருவிடைமருதூர், மருத்துவக்குடி ஆகிய தலங்களாகும்.

    36. இங்கு 27 நட்சத்திரங்களுக்கும் 27 இலிங்கங்கள் உள்ளன.

    37. இங்குள்ள நவக்கிரக விக்கி ரகங்கள் பிற கோவிகளிலும் வேறுபட்டதாக இடம் மாறி அமைந்துள்ளது

    38. மயிலாடுதுறை - கும்பகோணம் சாலையில் இத்தலம் அமைந்துள்ளது. கும்பகோணத்தில் இருந்து 9 கீ.மீ தொலைவில் அமைந்துள்ளது.

    39. இத்திருக்கோவிலில் நடைபெறும் தைப்பூசப் பெருவிழா மிகவும் தொண்மை வாய்ந்த விழாவாக அனைத்து ஊர் பக்தர்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது.

    40. தைப்பூசத்தினத்தன்று விபண்டருக்குக் காட்சி அளித்ததால் இத்தலத்திற்கு இந்நாள் விசேமானது.

    41. கந்த புராணம், இலிங்க புராணம், பிரமகைவர்த்தம், சிவரகசியம் முதலிய நூல்களும் இத்திருத்தலப் பெருமைகளைக் கூறுகின்றன.
    வாஸ்துவின் அடிப்படை நிலைகள் நான்கு பிரிவுகளாக அமைந்துள்ளன. அவற்றின் மூலம் வாழ்க்கை பாதையை இனிமையாக மாற்றிக்கொள்ள தக்க வழிகளை காட்டுவதாகவும் வாஸ்து வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
    வாஸ்து சாஸ்திரம் என்பது வீடு, மனை ஆகியவற்றின் அமைப்பு பற்றிய தகவல்களை சொல்வது என்பதாக அறியப்பட்டுள்ளது. ஆனால், வாஸ்துவின் அடிப்படை நிலைகள் நான்கு பிரிவுகளாக அமைந்துள்ளன. அவற்றின் மூலம் வாழ்க்கை பாதையை இனிமையாக மாற்றிக்கொள்ள தக்க வழிகளை காட்டுவதாகவும் வாஸ்து வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர். அவற்றை பற்றிய கூடுதல் விவரங்களை இங்கே பார்க்கலாம்.

    பூமி வாஸ்து

    நிலம் அல்லது மனையின் தன்மைகள் பற்றி இப்பகுதி குறிப்பிடுகிறது. குறிப்பிட்ட ஒரு மனை அல்லது இடம் நான்கு திசைகளில் எந்த திசையை நோக்கியவாறு அமைந்துள்ளது என்பது பற்றி சொல்கிறது. நான்கு பக்கங்களிலும் சாலைகள் கொண்ட மனைகள் கூட இருக்கலாம் என்ற நிலையில், சம்பந்தப்பட்ட மனைக்கான சாலை அமைப்பு ஒரு பக்கம் மட்டுமே உள்ளதா அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட திசைகளில் உள்ளதா என்ற தகவல்களையும் குறிப்பிடுகிறது. கண்களுக்கு தெரியாத சல்லிய தோஷங்கள், மனையின் சுற்றுப்புறம், மண்ணின் நிறம் மற்றும் இதற்கு முன்னர் மனை எப்படிப்பட்ட பகுதியாக இருந்தது என்ற செய்திகளை குறிப்பிடுகிறது. மேலும், அவற்றில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யவும் வழிகாட்டுகிறது.

    கட்டிட வாஸ்து

    வீடுகள், அடுக்குமாடிகள், பொது கட்டமைப்புகள் ஆகியவற்றின் வகைக்கேற்ப அவற்றில் மேற்கொள்ளப்பட வேண்டிய உள் கட்டமைப்புகள் பற்றிய அனைத்து தகவல்களையும் இப்பகுதி விளக்குகிறது. சொந்த வீடு அல்லது வாடகை வீடு சம்பந்தமான விஷயங்களையும் இப்பகுதி குறிப்பிடுகிறது. வியாபாரம் மற்றும் தொழில் நிறுவனங்கள், பள்ளி-கல்லூரிகள், மருத்துவமனைகள், தங்கும் விடுதிகள், பொதுத்துறை கட்டிடங்கள் உள்ளிட்ட அனைத்து வகை கட்டுமானங்களின் அமைப்பு முறை பற்றியும் இப்பகுதியில் காணலாம். மனை அல்லது இடத்தில் எந்த அளவில், எந்த முறையில், எந்த காலகட்டத்தில் கட்டிடங்களை அமைக்க வேண்டும் என்ற செய்திகள் இப்பகுதில் சொல்லப்படும்.

    கட்டுமானம் அமையும் இடத்தின் நான்கு பிரதான திசைகள் மற்றும் அவை இணையும் நான்கு கோண திசைகள் பற்றியும், அவற்றின் அமைப்புகள் பற்றியும் இப்பகுதி குறிப்பிடும். பிரதான நுழைவாசல், வரவேற்பறை, வீட்டிற்கு பின்புறம் உள்ள வாசல்கள், சமையலறை, உணவு அறை, ஓய்வு அறை, பணியாற்றும் அலுவலகம், தலைமை அதிகாரியின் அறை, மின் சாதனங்கள் அறை, படிக்கட்டுகள், வாகனங்கள் நிறுத்துவதற்கான இடம், விளையாட்டு மைதானங்கள், கேளிக்கை விடுதிகள், பாத்ரூம் டாய்லெட் போன்ற அனைத்து அறைகளின் அமைப்பையும் இது குறிப்பிடும்.

    இருக்கை வாஸ்து

    வீடுகள் மற்றும் வியாபார, தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட இதர கட்டமைப்புகளில் அமரும் இருக்கைகள், ஊஞ்சல்கள், படுக்கைகள் அமைக்கும் விதம் ஆகியவை பற்றி இப்பகுதி கூறுகிறது. அலுவலகம் அல்லது பொது கட்டிடம் ஆகியவற்றில் பணி புரிபவர்கள் அமரும் மீட்டிங் ஹால்கள், கேண்டீன்கள், ஓய்வு எடுக்கும் இடம் பற்றிய தகவல்களை இப்பகுதி தருகிறது. நிறுவனத்தின் தலைவர் எங்கே அமர வேண்டும், அவரைச் சந்திக்க வருபவர்கள் எங்கே அமர வேண்டும், பணிபுரிபவர்கள் எங்கே அமர வேண்டும் என்ற நுட்பமான தகவல்களையும் இப்பகுதி குறிப்பிடுகிறது.

    வாகன வாஸ்து

    இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் உள்ளிட்ட மற்ற போக்குவரத்துச் சாதனங்கள் பற்றி இப்பகுதி குறிப்பிடுகிறது. (மன்னர்கள் காலத்தில் தேர், வண்டி, பல்லக்கு ஆகியவை பற்றி சொல்லப்பட்டது) இன்றைய நாகரிக காலகட்டத்தில் வீடுகளில் இரு சக்கர வாகனம் அல்லது நான்கு சக்கர வாகனம் ஆகியவற்றில் ஒன்றாவது இருப்பது அவசியமாக மாறி இருக்கிறது. அந்த வாகனங்களை வீட்டில் எங்கு நிறுத்த வேண்டும், எந்த திசை நோக்கி நிறுத்த வேண்டும், அவற்றின் வாராந்திர பூஜை போன்ற விஷயங்களை இப்பகுதி குறிப்பிடுகிறது. பயணங்களுக்கு துணை செய்யும் வாகனங்களின் முக்கியத்துவம் பற்றி வாஸ்துவின் இப்பிரிவு கவனம் கொள்கிறது.
    நங்கவள்ளி லட்சுமி நரசிம்மசாமி கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    சேலம் மாவட்டம் நங்கவள்ளியில் பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மசாமி - சோமேஸ்வரசாமி கோவில் உள்ளது. இந்த கோவில் சைவ-வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் கோவில் ஆகும். இந்தாண்டுக்கான தேர்த்திருவிழா கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதைத்தொடர்ந்து நாள்தோறும் அன்னவாகனம், சிம்மவாகனம், சேஷவாகனம், அனுமந்தவாகனம், யானைவாகனம், கருடவாகனம், ரிஷபவாகனம் உட்பட பல்வேறு வாகனங்களில் சாமி திருவீதி உலாவும், திருக்கல்யாண உற்சவமும் நடைபெற்றது.

    நேற்று லட்சுமி நரசிம்மசாமி - சோமேஸ்வரசாமி சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜை செய்யப்பட்டு தேரில் அமர்த்தப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று மாலை நடந்தது. இதையொட்டி கோவில் முன்பு இருந்து தேரோட்டம் தொடங்கி முதலில் விநாயகர் தேரும் 2-வது தேரில் சோமேஸ்வரரும், சவுந்தரவல்லி அம்பாளும், 3-வது பெரிய தேரில் லட்சுமி நரசிம்மசாமி ஸ்ரீதேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்துடன் நடைபெற்றது. தேர் புறப்பட்டு தாரமங்கலம் பிரிவு சாலையில் நிறுத்தப்பட்டது.

    தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம்பிடித்து தேர் இழுத்தனர்.

    இன்று (சனிக்கிழமை) தாரமங்கலம் பிரிவு சாலையில் இருந்து பஸ்நிலையம் வரையும், நாளை (ஞாயிற்றுக்் கிழமை) பஸ்நிலையத்தில் இருந்து பேரூராட்சி அலுவலகம் வரையும், நாளை மறுநாள் (திங்கட்கிழமை) பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து தோப்பு தெரு பிரிவு வரையும், 26- ந்தேதி (செவ்வாய்க்்் கிழமை) தோப்பு தெரு பிரிவில் இருந்து கோவில் முன்பு நிலை சேருகிறது. இவ்வாறு 5 நாட்கள் தேரோட்டம் நடைபெறுகிறது. 27-ந்தேதி (புதன் கிழமை) இரவு 9 மணிக்கு சத்தாபரண நிகழ்ச்சி நடைபெறுகிறது.
    ஆயுள்காரகன் சனி, சுய ஜாதகத்தில் வீற்றிருக்கும் பாதசாரம் அறிந்து, அதற்கேற்ற நாளில் ஆயுள் நீட்டிக்க வரம் அளிக்கும் ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு வந்தால் ஆரோக்கியத் தொல்லை அகலும்.
    திருக்கடையூர் அபிராமி அம்மன் கோவில், கோவில்பாளையம் கால காலேஸ்வரர் ஆலயம், காஞ்சீபுரம் சித்திரகுப்தர் கோவில், ஸ்ரீவாஞ்சியம் வாஞ்சிநாதர் ஆலயம், திருப்பைஞ்ஞீலி திருத்தலத்தில் உள்ள ஞலிவனேஸ்வரர் கோவில். இவை அனைத்தும் ஆயுள் நீட்டிக்க வரம் அளிக்கும் திருத்தலங்கள் ஆகும்.

    ஆயுள்காரகன் சனி, சுய ஜாதகத்தில் வீற்றிருக்கும் பாதசாரம் அறிந்து, அதற்கேற்ற நாளில் மேற்கண்ட ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு வந்தால் ஆரோக்கியத் தொல்லை அகலும். நோய்வாய்ப்பட்டு அவதிப்படுபவர்களுக்கு, வழிபாட்டிற்கு பிறகான மருத்துவமும் கைகொடுக்கும்.
    ×