search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95509"

    பஞ்சபூதங்களில் நீர் தலமான திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது.
    பஞ்சபூதங்களில் நீர் தலமான திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் முதல் கட்டமாக கடந்த 9-ந்தேதி பரிவார மூர்த்திகள் மற்றும் உப சன்னதிகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    2-வது கட்டமாக இன்று (புதன்கிழமை) காலை 6.30 மணிக்கு மேல் 7.15 மணிக்குள் மூலவர் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி சன்னதி மற்றும் ராஜகோபுரம் உள்ளிட்ட 7 கோபுரங்களுக்கு மகா கும்பாபிஷேகம் காஞ்சி சங்கராச்சாரியார் சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில் நடைபெற உள்ளது.

    இதற்கான யாகசாலை பூஜைகள் கோவில் வளாகத்தில் சுந்தர பாண்டியன் கோபுரம் அருகில் அமைக்கப்பட்டுள்ள யாகசாலை மண்டபத்தில் கடந்த 9-ந்தேதி தொடங்கின. நேற்று இரவு 5-ம் கால யாகசாலை பூஜை மற்றும் பூர்ணாஹுதி, தீபாராதனைகள் நடைபெற்றன. இதில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டார். அப்போது அவருக்கு சிறப்பு மரியாதை செய்யப்பட்டது.

    இன்று அதிகாலை 4.30 மணிக்கு 6-ம் கால யாகசாலை பூஜை மற்றும் அதனை தொடர்ந்து கும்பாபிஷேகம் நடக்கிறது.
    திருவானைக்காவலில் இரண்டாம் கட்டமாக ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி மூலவர் சன்னதிகள் மற்றும் ராஜகோபுரம் மகா கும்பாபிஷேகம் நாளை (புதன்கிழமை) நடைபெற உள்ளது.
    பஞ்சபூதங்களில் நீர் தலமாக விளங்கும் திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் முதல் கட்டமாக பரிவார மூர்த்திகள் கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் நடைபெற்றது.

    இரண்டாம் கட்டமாக ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி மூலவர் சன்னதிகள் மற்றும் ராஜகோபுரம் மகா கும்பாபிஷேகம் நாளை (புதன்கிழமை) காலை 6.30 மணிக்கு மேல் 7.15 மணிக்குள் நடைபெற உள்ளது.

    கும்பாபிஷேகத்தையொட்டி மூலவர் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி சன்னதி விமான தங்க கலசங்கள் புதுப்பொலிவு பெற்று உள்ளன. கும்பாபிஷேக விழாவில் பங்கேற்பதற்காக தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 7.40 மணிக்கு விமானம் மூலம் திருச்சி வருகிறார்.

    சுற்றுலா மாளிகையில் தங்கும் அவர் இன்று இரவே ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார்.
    திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் 48 பரிவார மூர்த்தி சன்னதிகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
    பஞ்சபூதங்களில் நீர் தலமாக விளங்குவது திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலாகும். இக்கோவிலில் கடைசியாக கடந்த 2000-வது ஆண்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. இந்து கோவில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கட்டாயம் கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்பது ஐதீகமாகும். ஆனால் 12 ஆண்டுகளை தாண்டியும் பல ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடத்தப்படாமல் இருந்ததால் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் திருப்பணி வேலைகள் தொடங்கி நடந்து வந்தன.

    திருப்பணி வேலைகள் முடிவடைந்து பரிவார மூர்த்தி சன்னதிகளில் டிசம்பர் 9-ந்தேதியும், மூலவர் சன்னதிகள் மற்றும் ராஜகோபுரம் மகா கும்பாபிஷேகம் டிசம்பர் 12-ந்தேதியும் 2 கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதன் படி முதல் கட்ட கும்பாபிஷேகத்துக்கான யாகசாலை பூஜைகள் கடந்த 7-ந்தேதி தொடங்கியது. நேற்று காலை 6 மணியில் இருந்தே கோவில் வளாகத்தில் நவராத்திரி மண்டபம் அருகில் அமைக்கப்பட்டிருந்த யாகசாலை மண்டபத்தில் யாக பூஜைகள், ஹோமம் நடந்தது.

    இந்த பூஜையில் காஞ்சி சங்கராச்சாரியார் சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், திருவாவடுதுறை ஆதீனம் திருவிடை மருதூர் கட்டளை சாமிநாத தம்பிரான் சுவாமிகள், அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் பங்கேற்றனர். அப்போது அவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

    இதனை தொடர்ந்து காலை 7 மணி அளவில் யாக சாலையில் இருந்து அர்ச்சகர்கள் புனித நீர் அடங்கிய குடங்களை தலையில் சுமந்து பரிவார மூர்த்தி சன்னதிகளை நோக்கி சென்றனர். அலங்கரிக்கப்பட்ட கோவில் யானை அகிலா முன்செல்ல சங்கராச்சாரியார், அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள், உபயதாரர்கள் மேளதாளம் உள்ளிட்ட பஞ்ச வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டனர். ராஜகோபுரம் விநாயகர் சன்னதி அருகில் முக்கிய பிரமுகர்களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் அவர்கள் நின்று கொண்டிருந்தனர்.



    அர்ச்சகர்கள் ஆதி அகிலாண்டேஸ்வரி, ஆதி ஜம்புகேஸ்வரர், காசி விஸ்வநாதர், விசாலாட்சி, மீனாட்சி, சுந்தரேஸ்வரர், சங்கமேஸ்வரர், சங்கமேஸ்வரி, குபேரலிங்கம், பிரசன்ன விநாயகர், ஆஞ்சநேயர், பள்ளியறை, நந்தி உள்ளிட்ட 48 சன்னதி விமானங்களுக்கும் அர்ச்சகர்கள் புனித நீர் குடங்கள், மலர் தட்டுகள் எடுத்து சென்று தயார் நிலையில் நின்று கொண்டிருந்தனர். சரியாக 7.55 மணிக்கு சங்கு ஊதப்பட்டது. சங்கொலி எழுப்பப்பட்டதும் அர்ச்சகர்கள் 48 சன்னதி கலசங்களிலும் புனித நீர் ஊற்றினார்கள். பின்னர் தீபாராதனை காட்டப்பட்டது. அதன் பின்னர் கோவில் வளாகத்தில் ஆயிரக்கணக்கில் பக்தி பரவசத்துடன் நின்று கொண்டிருந்த பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. அப்போது பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.

    நாளை மறுநாள் (புதன்கிழமை) ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி மூலஸ்தான சன்னதிகள் மற்றும் ராஜகோபுரம், சுந்தரபாண்டியன் கோபுரம் உள்பட 7 கோபுர விமானங்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கான யாகசாலை மண்டபம் சுந்தரபாண்டியன் கோபுரம் அருகில் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு முதல் கால யாகசாலை பூஜை நேற்று மாலை தொடங்கியது. இன்று (திங்கட்கிழமை) காலை இரண்டாம் கால யாகசாலை பூஜைகளும், மாலை மூன்றாம் கால யாகசாலை பூஜையும், நாளை (செவ்வாய்க்கிழமை) காலை நான்காம் கால யாகசாலை பூஜையும், மாலையில் ஐந்தாம் கால யாகசாலை பூஜையும் நடக்கிறது. 12-ந்தேதி (புதன்கிழமை) காலை 6.30க்கு ராஜகோபுரம் உள்ளிட்ட கோபுரங்களுக்கும், 7 மணிக்கு மூலஸ்தான சன்னதிகளுக்கு கும்பாபிஷேகமும் நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில் உதவி ஆணையர் ஜெயப்பிரியா மற்றும் அதிகாரிகள், பணியாளர்கள் செய்து இருந்தனர். திருச்சி மாநகர போலீஸ் துணை கமிஷனர் நிஷா தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. கும்பாபிஷேகத்தையொட்டி 12-ந்தேதி வரை கோவில் வளாகத்தில் தினமும் பரத நாட்டியம் உள்பட கலை நிகழ்ச்சிகள் மற்றும் பக்தி சொற்பொழிவு, இன்னிசை கச்சேரிகள் நடைபெறுகிறது. 
    திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கன்னியாகுமரியில் திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் கட்டப்பட்டுள்ளது. கட்டுமான பணிகள் நிறைவடைந்ததையடுத்து அடுத்த மாதம் கும்பாபிஷேகம் நடைபெறும் என்று தெரிகிறது.
    திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கன்னியாகுமரி விவேகானந்தபுரம் விவேகானந்த கேந்திர வளாகத்தில் திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் கட்டப்பட்டுள்ளது. 5½ ஏக்கர் பரப்பில் ரூ.22 கோடியே 50 லட்சம் செலவில் பிரம்மாண்டமாக இந்த கோவில் அமைக்கப்பட்டுள்ளது. கோவிலின் கட்டுமான பணிகள் முழுவதும் நிறைவடைந்துள்ளது.

    தொடர்ந்து திருமலை திருப்பதி தேவஸ்தான தலைமை செயல் அலுவலர் அனில்குமார் சங்கால் தலைமையிலான குழுவினர் இந்த கோவிலை ஆய்வு செய்தனர். பின்னர் அடுத்த மாதம் (ஜனவரி) கும்பாபிஷேகம் நடைபெறும் என்றும் கூறினர். தொடர்ந்து கும்பாபிஷேக பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    கன்னியாகுமரியில் உள்ள திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் அமைக்க கொடிமரம், சாமி சிலைகள் தயாராகவே உள்ளது. மேலும், திருப்பதி கோவிலில் உள்ளது போலவே இங்கு தேரோடும் 4 மாட வீதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்தநிலையில் கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலுக்கு தனி அதிகாரியாக சென்னையில் உள்ள திருப்பதி திருமலை தேவஸ்தான உள்ளூர் தகவல் மற்றும் ஆலோசனை மைய உதவி செயல் அலுவலர் ரவி நியமிக்கப்பட்டு உள்ளார். மேலும், கோவிலுக்கு முதல் கட்டமாக 8 அர்ச்சகர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்களை திருமலை திருப்பதி தேவஸ்தானம் நியமித்து உள்ளது.
    திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் பரிவார மூர்த்திகள் கும்பாபிஷேகம் நாளை காலை நடைபெற இருப்பதையொட்டி யாகசாலை பூஜைகள் தொடங்கின.
    பஞ்ச பூதங்களில் நீர் தலமான திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம் இம்மாதம் 9 மற்றும் 12-ந்தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெறுகிறது. கும்பாபிஷேகத்தையொட்டி கோவில் வளாகத்தில் நவராத்திரி மண்டபம், சுந்தர பாண்டியன் கோபுரம் அருகில் ஆகிய இடங்களில் யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு பூர்வாங்க பூஜைகள் நடந்தன.

    நேற்று முன்தினம் மாலை காவிரி ஆற்றில் இருந்து மேளதாளம் முழங்க தங்கம், வெள்ளி, பித்தளை குடங்களில் புனித நீர் எடுத்து வரப்பட்டது. பின்னர், 5-ம் பிரகாரம் விநாயகர் சன்னதி மற்றும் இரணியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

    நேற்று காலை 8.30 மணிக்கு யாகசாலையில் விநாயகர் வழிபாடு, கணபதி ஹோமம், யஜமானர்கள் சங்கல்பம், அனுக்ஞை, நவக்கிரகஹோமம் மற்றும் வாஸ்து சாந்தி பூஜைகள் நடந்தன. மாலை 5.30 மணிக்கு பரிவார மூர்த்திகள் யாகசாலை பிரவேசம், அஷ்டபந்தனம் சாத்துதல் நிகழ்ச்சிகள் நடந்தன. இரவு 8 மணிக்கு மேல் பூர்ணாகுதி, தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இன்று (சனிக்கிழமை) 8.30 மணிக்கு பரிவார யாகசாலை பூஜை ஹோமமும், காலை 11.30 மணிக்கு பூர்ணாகுதி, தீபாராதனையும், மாலை 5.30 மணி மற்றும் இரவு 8.30 மணிக்கு யாகசாலை, ஹோமம் ஜபம் பாராயணமும் நடக்கிறது.

    நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணிக்கு யாகசாலை பூஜைகள் நடக்கிறது. காலை 7 மணிக்கு யாகசாலையில் இருந்து கடங்கள் (புனித நீர் குடங்கள்) புறப்பாடு நடக்கிறது. இதனை தொடர்ந்து காலை 7.30 மணிக்கு மேல் 8.15 மணிக்குள் அனைத்து பரிவார விமானங்கள், பரிவார மூர்த்திகள், உற்சவ மூர்த்திகள் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. அப்போது காஞ்சி சங்கராச்சாரியார் சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில் அர்ச்சகர்கள் பரிவார மூர்த்தி சன்னதி விமானங்கள் மற்றும் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றுவார்கள். இதனை தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது.

    காலை 9 மணிக்கு மகாலட்சுமி தீபாராதனையும், காலை 10.30 மணிக்கு பூர்ணாகுதி தீபாராதனையும், மாலை 4 மணிக்கு பிரதான மூர்த்திகள் யாகசாலை பிரவேசத்தை தொடர்ந்து முதல் கால யாகபூஜை தொடங்குகிறது. 10-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 2-ம் கால யாகசாலை பூஜையும், மாலையில் 3-ம் கால யாகசாலை பூஜையும் நடக்கிறது. 11-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 8.30 மணிக்கு 4-ம் கால யாகசாலை பூஜையும், மாலை 5.30 மணிக்கு 5-ம் கால யாகசாலை பூஜையும் நடக்கிறது.

    12-ந்தேதி (புதன்கிழமை) காலை 6.30 மணிக்கு மேல் 7.15 மணிக்குள் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி மூலஸ்தானங்கள் மற்றும் ராஜகோபுர விமான மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கும்பாபிஷேக விழாவையொட்டி கோவில் வளாகத்தில் இன்று முதல் 12-ந்தேதி வரை காலை மற்றும் மாலை நேரங்களில் பக்தி இன்னிசை நிகழ்ச்சிகள், பரத நாட்டியம், பக்தி சொற்பொழிவு நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகிறது. 
    திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம் 9 மற்றும் 12-ந்தேதிகளில் நடைபெற இருப்பதையொட்டி யாகசாலை பூஜைகள் இன்று தொடங்குகிறது. புனித நீர் ஊர்வலத்தில் சங்கராச்சாரியார் பங்கேற்றார்.
    பஞ்சபூதங்களில் நீர் தலமாக விளங்குவது திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலாகும். இக்கோவில் கும்பாபிஷேகம் வருகிற 9 மற்றும் 12-ந்தேதிகளில் 2 கட்டமாக நடைபெற உள் ளது. 9-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணியில் இருந்து 8.15 மணிக்குள் பரிவார மூர்த்திகள் மகா கும்பாபிஷேகமும், 12-ந்தேதி (புதன்கிழமை) காலை 6.30 மணியில் இருந்து 7.15ணிக்குள் ஜம்புகேஸ்வரர் மற்றும் அகிலாண்டேஸ்வரி மூலஸ்தான மகா கும்பாபிஷேகமும் நடைபெற உள்ளது. 2 கட்ட கும்பாபிஷேகங்களும் காஞ்சி சங்கராச்சாரியார் சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில் நடைபெற உள்ளது.

    கும்பாபிஷேகத்தையொட்டி யாக குண்டங்கள் கோவில் வளாகத்தில் நவராத்திரி மண்டபம், சுந்தரபாண்டியன் கோபுரம் ஆகிய 2 இடங்களில் அமைக்கப்பட்டு உள்ளன. இன்று (வெள்ளிக்கிழமை) காலை 8.30 மணிக்கு விநாயகர் வழிபாடு, கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் தொடங்குகிறது. இன்று மாலை 5.30 மணிக்கு பரிவார மூர்த்திகள் யாகசாலை பிரவேசமும், அஷ்டபந்தனம் சாத்துதல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இரவு 8.15 மணிக்கு பூர்ணாஹுதி, தீபாராதனை நடைபெறும்.

    திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்-அகிலாண்டேஸ்வரி கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலைக்கு புனித நீர் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. ஊர்வலத்துக்கு முன்பாக காஞ்சி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமியை யானைகள் புடை சூழ அழைத்து வந்த போது எடுத்த படம்.

    இன்று யாகசாலை பூஜைகள் தொடங்குவதையொட்டி நேற்று காலை காவிரியில் இருந்து புனித நீர் எடுத்து செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாம்பழச்சாலை பழைய காவிரி படித்துறையில் இருந்து புறப்பட்ட புனிதநீர் ஊர்வலத்தை காஞ்சி சங்கராச்சாரியார் சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கொடியசைத்து தொடங்கி வைத்து பக்தர்களுடன் நடந்து சென்றார்.

    ஊர்வலத்தில் அலங்கரிக்கப்பட்ட 4 யானைகள் வந்தன. அதில் ஒரு யானையின் மீது அமர்ந்திருந்த அர்ச்சகர் தங்க குடத்தில் புனித நீர் எடுத்து சென்றார். மேலும் பல பக்தர்கள் வெள்ளி, பித்தளை குடங்களில் புனித நீரை சுமந்து சென்றனர். ஊர்வலத்தின் முன்பகுதியில் அலங்கரிக்கப்பட்ட குதிரைகள், ஒட்டகங்களும் சென்றன. மேளதாளம் மற்றும் பஞ்சவாத்தியங்கள் முழங்க புனிதநீர் ஊர்வலம் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலை அடைந்தது.

    இன்று யாகசாலை பூஜை தொடங்குவதையொட்டி நேற்று மாலை 5-ம் பிரகாரம் ஈசானிய விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. அதன் பின்னர் காவல் தெய்வமான கும்பகோணத்தான் சாலையில் உள்ள இரணியம்மன் கோவிலிலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. 
    வருகிற 9 மற்றும் 12-ந்தேதிகளில் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம் நடக்க இருப்பதையொட்டி இறுதி கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
    நிலம், நீர், நெருப்பு, ஆகாயம், காற்று ஆகிய ஐம்பூதங்களில் இறைவன் சிவ பெருமான் நீர்த்தலமான திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ் வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் வீற்றிருந்து அருள் பாலித்து வருகிறார். 18 ஏக்கர் பரப்பளவில் உயரமான மதில் சுவர்கள், 4 திசைகளிலும் எழில்மிகு கோபுரங்கள், 5 பிரகாரங்களை கொண்ட இக்கோவிலை 2 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன் கோச்செங்கட் சோழன் என்ற மன்னன் கட்டியதாக கோவில் தல வரலாறு கூறுகிறது.

    இக்கோவிலின் தலமரம் வெண்நாவல் மரமாகும். பிரம்ம தீர்த்தம், இந்திர தீர்த்தம், சம்பு தீர்த்தம், ராம தீர்த்தம், ஸ்ரீமத் தீர்த்தம், அக்னி தீர்த்தம், அகத்திய தீர்த்தம், சோம தீர்த்தம், சூரிய தீர்த்தம் இக்கோவிலின் தல தீர்த்தங்களாகும். இலங்கையில் நடந்த போரில் ராவணன், அவனது தம்பி கும்பகர்ணனை கொன்று சீதையை ராமன் மீட்டு திரும்பியபோது ராமனை பிரம்ம ஹத்தி தோஷம் தொடர்ந்தது.

    இதில் ராவணனை கொன்ற தோஷத்தை ராமன் ராமேஸ்வரத்தில் சிவ வழிபாடு செய்து தீர்த்தார். ஆனால் கும்பகர்ணனின் ஆவி ராமனை பேயுருவில் தொடர்ந்ததால் அயோத்தி செல்லும் பயணம் தடைபடவே சில முனிவர்களின் வழிகாட்டுதல் படி திருவானைக்காவல் நாவற்காட்டில் சிவலிங்கம் அமைத்து சிவ பூஜை செய்து பிரம்ம ஹத்தி தோஷத் தை ராமன் நீங்க பெற்றதாகவும் கூறப்படுகிறது. அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர், மாணிக்க வாசகர் ஆகிய 4 சமய குரவர்களும் இத்திருத்தலத்தில் வழிபாடு செய்து உள்ளனர்.


    யாகசாலை மண்டபம் அமைக்கும் பணி முடியும் நிலையில் இருப்பதை படத்தில் காணலாம்.

    இத்தகைய சிறப்புக்குரிய திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலின் மகா கும்பாபிஷேகம் அடுத்த மாதம் (டிசம்பர்) 9 மற்றும் 12 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக நடைபெற உள்ளது. 9-ந்தேதி பரிவார மூர்த்திகளுக்கும், 12-ந்தேதி அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புகேஸ்வரருக்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்தையொட்டி பரிவார மூர்த்தி சன்னதிகளில் ஏற்கனவே பாலாலயம் செய்யப்பட்டது.

    ராஜகோபுரம் மற்றும் 4 திசைகளிலும் உள்ள கோபுரங்கள், பரிவார மூர்த்திகளின் சன்னதி விமானங்கள் ஆகியவற்றில் ஏற்கனவே சிற்பங்கள் சீரமைக்கப்பட்டு வர்ணங்கள் தீட்டப்பட்டன. கும்பாபிஷேகத்தின் போது கோபுர உச்சியில் அர்ச்சகர்கள் ஏறி புனித நீர் ஊற்றுவதற்கு வசதியாக சவுக்கு கம்புகளால் சாரங்கள் அமைக்கும் பணிகள் உள்ளிட்ட இறுதி கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    இதே போல் கோவில் உள் பிரகாரங்களில் வர்ணம் தீட்டும் பணிகளும் நடந்து வருகின்றன. கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலை பூஜைகள் வருகிற 7-ந்தேதி தொடங்குகிறது. இதற்காக யாக குண்டங்கள் பந்தல் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. முன்னதாக 6-ந்தேதி காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில் காவிரி படித்துறையில் இருந்து புனித நீர் எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    யாகசாலை பூஜைகள் நடைபெறும் நாட்களில் தினமும் கோவில் வளாகத்தில் இன்னிசை நிகழ்ச்சி, ஆன்மிக சொற்பொழிவு, பரதநாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை கோவில் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள், திருப்பணியில் ஈடுபட்டுள்ள சிவ தொண்டர்கள் செய்து வருகிறார்கள்.

    கன்னியாகுமரியில் கட்டப்பட்ட திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் கும்பாபிஷேகம் ஜனவரி 27-ந்தேதி நடக்கிறது என்று திருமலை- திருப்பதி தேவஸ்தான அதிகாரி அனில்குமார் சின்கால் கூறினார்.
    திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர வளாகத்தில் திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக 5½ ஏக்கர் நிலத்தை விவேகானந்த கேந்திரம் நன்கொடையாக வழங்கியது.

    அதைத்தொடர்ந்து 2013-ம் ஆண்டு ஜூலை மாதம் திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் கட்ட பூமிபூஜை நடந்தது. 5 ஆண்டுகளாக நடந்த கோவில் கட்டுமானப்பணி முடிவடைந்துள்ளது.

    அதைத்தொடர்ந்து திருமலை-திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் அனில்குமார் சின்கால் நேற்று காலை கன்னியாகுமரி வந்து கோவில் பணிகளை ஆய்வு செய்தார்.

    பின்னர், அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-

    கன்னியாகுமரியில் திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் கட்டிடப்பணி முழுமை அடைந்துள்ளது. இங்கு பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு உள்ளது. இந்த கோவிலுக்கு சின்னமுட்டத்தில் இருந்து இணைப்பு சாலையும், 4 மாட வீதிகளும், தோரண வாயில்களும் அமைக்கப்பட்டு உள்ளது. அடுத்த மாதம்(டிசம்பர்) 31-ந் தேதிக்குள் அனைத்து பணிகளும் முடிக்கப்படும். கோவில் வளாகத்தை அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.

    இந்த கோவிலின் கும்பாபிஷேகம் வருகிற ஜனவரி மாதம் 27-ந்தேதி நடத்த திட்டமிட்டு உள்ளோம். அதற்கு முன்னதாக 4 நாட்கள் யாகசாலை பூஜைகள் நடைபெறும், கும்பாபிஷேகத்தின்போது, சாமிசிலைகள், கொடிமரம் பிரதிஷ்டை நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின்போது, அவருடன் திருமலை-திருப்பதி தேவஸ்தான தலைமை பொறியாளர் சந்திரசேகர ரெட்டி, நிதி மற்றும் கணக்கு ஆலோசகர் பாலாஜி, செயற்பொறியாளர் சத்திய நாராயணன், உதவி செயற்பொறியாளர் சந்திரமவுலி ரெட்டி, மின்பிரிவு கோட்ட பொறியாளர் ரவிசங்கர் ரெட்டி, உதவி பொறியாளர்கள் பார்த்தசாரதி, அமர்நாத் ரெட்டி, திட்ட பொறியாளர் அப்சாராவ், ஒப்பந்ததாரர் ராஜேந்திரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    முன்னதாக கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர செயலாளர் மற்றும் பொருளாளர் அனுமந்தராவுடன் அனில்குமார் சின்கால் கோவில் கும்பாபிஷேகம் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். 
    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி வடக்கு தெரு, மேலத்தெரு மற்றும் ஜெகன் நகரில் அமைந்துள்ள புல்லாணி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி வடக்கு தெரு, மேலத்தெரு மற்றும் ஜெகன் நகரில் அமைந்துள்ள புல்லாணி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது

    கடந்த 13-ந் தேதி விநாய கர் பூஜை, வாஸ்து பூஜை, காப்பு கட்டுதல், கும்பபூஜை, முதல் யாகசாலை பூஜை, பூர்ணாகுதி ஆகியவை நடைபெற்றது. அதனை தொடர்ந்து இரவு பிரதிஷ்டை சிலையை எடுத்து வைத்தல் மற்றும் மருந்து சாத்துதல் நடைபெற்றது

    14-ந்தேதி காலை புண்ணியாகவாசனம், கோபூஜை, சூரிய நமஸ்காரம் 2-ம் கால யாக சாலை பூஜை, நாடி சந்தானம் யாத்ரா தானம் நடந்தது. பின்னர் கடம் புறப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை சர்வசாதகம் பாபு சாஸ்திரி குழுவினர் செய்திருந்தனர்.
    காஞ்சீபுரத்தில் அகத்திய முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட அகத்தீஸ்வரர் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    காஞ்சீபுரம் அடுத்த பாலுச்செட்டிசத்திரம் கிளார் கிராமத்தில் அகத்திய முனிவரால் பிரதிஷ்டை செய்து வழிபட்ட அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் கண்ட ராதித்ய சோழன் தளபதி வீரசேனன் வழிபட்டதாக வரலாறு உள்ளது.

    பழமை வாய்ந்த இக்கோவிலை புனரமைக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் பணிகள் நிறைவடைந்து கும்பாபிஷேகம் நடந்தது.

    இதையொட்டி கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், கோ பூஜை சிறப்பு யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.

    கும்பாபிஷேக விழாவில் காஞ்சீபுரம் பாலுச்செட்டிசத்திரம் மற்றும் சுற்றியுள்ள கிராம பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
    திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம் வருகிற டிசம்பர் மாதம் 2 கட்டமாக நடைபெற உள்ளது.
    நிலம், நீர், காற்று, நெருப்பு, வானம் ஆகிய பஞ்சபூத தலங்களில் நீர் தலமானது திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில் ஆகும். சைவ கோவில்களில் பிரசித்தி பெற்ற இக்கோவிலில் கும்பாபிஷேக பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கி நடந்து வருகிறது. இந்த பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன.

    இந்த நிலையில் கும்பாபிஷேகத்திற்காக உப சன்னதிகளான 45 பரிவார தெய்வங்களுக்கு பாலாலய பூஜை நேற்று நடந்தது. முன்னதாக நேற்று முன்தினம் இரவு பூர்வாங்க பூஜைகள், ஹோமம் நடந்தது. பாலாலய பூஜையையொட்டி உப சன்னதிகள் மூடப்பட்டுள்ளன. பக்தர்கள் வழிபாட்டிற்காக சுவாமி படங்கள் வெளியில் வைக்கப்பட்டுள்ளன. மூலவர் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி, விநாயகர் சன்னதிகளில் பாலாலய பூஜை வருகிற டிசம்பர் மாதம் 9-ந்தேதி மாலை நடைபெற உள்ளது. இதனால் இந்த சன்னதிகளில் வழக்கம் போல பக்தர்கள் வழிபாடு நடத்தலாம்.

    இந்த நிலையில் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெறும் தேதியை கோவில் நிர்வாகம் நேற்று முறைப்படி அறிவித்துள்ளது. அதன்படி வருகிற டிசம்பர் மாதம் 9, 12-ந்தேதிகளில் 2 கட்டமாக கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. முதல் கட்டமாக 45 பரிவார தெய்வங்கள், விமானங்களுக்கு டிசம்பர் மாதம் 9-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 7.30 மணிக்கு மேல் காலை 8.15 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறும்.

    இதற்காக யாகசாலை பூஜைகள் டிசம்பர் மாதம் 6-ந்தேதி மாலை 6.30 மணிக்கு மேல் தொடங்கும். 2-ம் கட்டமாக மூலவர் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி உள்ளிட்ட பிரதான சன்னதிகளுக்கும், ராஜகோபுரம், மல்லப்பன் கோபுரம், கார்த்திகை கோபுரம், சங்கேமிஸ்வரர் கோபுரம், சுந்தரபாண்டியன் கோபுரம் உள்ளிட்ட கோபுரங்களுக்கும் டிசம்பர் மாதம் 12-ந்தேதி (புதன்கிழமை) காலை 7 மணிக்கு மேல் பிரதான கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அதன்பின் அன்றைய தினம் மாலை பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா நடைபெறும்.

    கும்பாபிஷேக விழாவுக்கான பணிகள் நன்கொடையாளர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கோவில் வட்டாரத்தில் தெரிவித்தனர். ரூ.3½ கோடியில் புனரமைப்பு பணிகளும், ரூ.72 லட்சத்து 58 ஆயிரம் மதிப்பில் மின்விளக்குகள் உள்பட மின்சார தொடர்பான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் பெரும்பாலான பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. இந்த நிலையில் யாகசாலை பூஜைக்காக நேற்று முகூர்த்தகால் நடப்பட்டது. கோவில் அலுவலகம் அருகே யாகசாலை பூஜைகள் நடைபெற உள்ளது. மொத்தம் 18 குண்டங்கள் அமைக்கப்பட உள்ளது.

    2-ம் கட்ட கும்பாபிஷேகத்திற்கு சுந்தரபாண்டியன் கோபுரம் அருகே 23 யாகசாலை குண்டங்கள் அமைக்கப்படும் என அறநிலைய துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கும்பாபிஷேக விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் ஜெயப்பிரியா மற்றும் அதிகாரிகள், கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர். நன்கொடையாளர்களும் பணிகளை பார்வையிட்டு வருகின்றனர். 
    திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம் டிசம்பர் 12-ந்தேதி நடைபெறுகிறது. இதற்காக வருகிற 28-ந்தேதி பாலாலயம் நடக்கிறது.
    நிலம், நீர், நெருப்பு, ஆகாயம், காற்று என்ற ஐம்பூதங் களில் இறைவன் நீர் தலமாக வீற்றிருந்து அருள்பாலிப்பது திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில் ஆகும். இக்கோவிலின் பரிவார சன்னதிகள் மற்றும் கோபுரங்கள், விமானங்கள் சீரமைப்பு செய்யப்பட்டு திருப்பணி வேலைகள் நடந்து வருகிறது. திருப்பணி வேலைகள் இறுதி கட்டத்தை எட்டி இருப்பதையொட்டி வருகிற 28-ந்தேதி பாலாலயம் நடைபெற உள்ளது.

    பாலாலயத்திற்கான யாகசாலை பூஜைகள் அன்றைய தினம் அதிகாலை 4.30 மணிக்கு தொடங்கும். காலை 6 மணியில் இருந்து 7 மணிக்குள் பரிவார மூர்த்திகளின் சன்னதிகளில் பாலாலயம் நடைபெற இருப்பதால் பக்தர்களும், ஆன்மிக மெய்யன்பர்களும் வருகை தந்து இறைவனின் அருள் பெறும்படி கோவில் வளாகத்தில் அறிவிப்பு செய்யப்பட்டு உள்ளது.

    இக்கோவிலின் கும்பாபிஷேகத்தை வருகிற டிசம்பர் மாதம் 12-ந்தேதி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கான பணிகளில் கோவில் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். இந்து சமய அறநிலைய துறையின் அனுமதி கிடைத்ததும் இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ×