search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95529"

    உத்திரகாண்ட் மாநிலத்தில் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ளது ஜசோலி கிராமம். இங்கு தான் ஹரியாழி தேவி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    செல்வத்துக்கு அதிபதி மகாலட்சுமி. வாழ்க்கைக்கு தேவையான எல்லாவிதமான வசதிகளையும், அதாவது வீட்டுமனை, மாடு, நிலம், செல்வம் போன்ற அனைத்து செல்வங்களையும் அளிப்பவள். மகா விஷ்ணுவின் பல பெயர்களில் ‘ஹரி’ என்பதும் ஒன்றாகும். அவரின் அம்சமாக அவதரித்தவளே ‘ஹரியாழி தேவி.’ இந்த அன்னைக்கு இமயமலை உச்சியில் ஜசோலி என்ற இடத்தில் கோவில் உள்ளது. இங்கு வீற்றிருக்கும் ஹரியாழி தேவி தன்னை நாடி வரும் பக்தர்களின், குறைகளை நீக்கி, அனைத்து செல்வங்களையும் வாரி வழங்கி வருகிறாள்.

    உத்திரகாண்ட் மாநிலத்தில் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ளது ஜசோலி கிராமம். இங்கு தான் ஹரியாழி தேவி கோவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 1,371 மீட்டர் உயரத்தில் இமயமலை உச்சியில் இந்த ஆலயம் இருக்கிறது. சக்தி பீடத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் அன்னையர் களுக்கு ஈடாக இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் ஹரியாழி அன்னையும் போற்றப்படுகிறாள். இந்த தேவியை தரிசிப்பதன் மூலம் இவ்வுலகில் வாழும்போதே முக்தி கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

    தல வரலாறு :

    மதுராவின் அரசனான கம்சனின் உயிருக்கு, அவனது தங்கை தேவகி வயிற்றில் பிறக்கும் எட்டாவது குழந்தையால் ஆபத்து ஏற்படும் என்று கூறப்பட்டது. இதனால் அச்சமடைந்த கம்சன், தேவகியையும் அவளது கணவன் வசுதேவரையும் சிறையில் அடைத்தான். தேவகிக்கு பிறந்த ஒவ்வொரு குழந்தையையும் இரக்கம் இன்றி வெட்டிக் கொலை செய்தான். தேவகிக்கு ஏழாவது பெண் குழந்தை பிறந்திருப்பதை அறிந்த கம்சன், சிறைச் சாலைக்குச் சென்றான்.

    அந்தக் குழந்தையைக் கொல்வதற்காக தரையில் தூக்கி வீசினான். தரையில் விழுந்த அந்தக் குழந்தையின் உடல் சிதறி விண்ணில் பறந்தது. உடலின் பல பாகங்களும், பல்வேறு இடங்களில் விழுந்தது. அதில் கை விழுந்த இடம் தான் ஜசோலி கிராமம் ஆகும். இந்த இடத்தில் பின்னர் கோவில் ஒன்று எழுப்பட்டது. இந்த கோவில் உயரமான மலையாலும், அடர்த்தியான காடுகளாலும் சூழப்பட்டது. இங்குள்ள அம்மன் மஞ்சள் நிற உடையை அணிந்து, ஒரு சிங்கத்தின் மேல் உட்கார்ந்து காட்சிக்கொடுக்கிறாள். இந்த கோவிலில் சத்ரபாலு மற்றும் ஹீத் தேவி ஆகியோரின் சிலைகளும் உள்ளன.

    ஹரியாழி தேவி

    கோவில் அமைப்பு :

    கோவில் செங்கல் மற்றும் சுண்ணாம்பினால் கட்டப்பட்ட அழகான கட்டமைப்பு ஆகும். கோவிலின் அடிப்படை அலங்காரமானது, பச்சை மற்றும் மஞ்சள் வண்ணங்களைக் கொண்டு செய்யப்படுகிறது. இந்த ஆலயம் புனித தலமாக கருதப்படுகிறது. 1371 மீட்டர் உயரத்தில் உள்ளதாலும், காலநிலைக்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துவதாலும், ஆலயம் பல முறை புதுப்பிக்கப்பட்டு வந்துள்ளது. ஹரியாழி தேவி கோவில், கட்டிடக்கலையை விட ஆன்மிகத்திற்கு முக்கியத்துவம் பெற்றதாக விளங்குகிறது.

    கோவில் முன் இரண்டு சிங்கத்தின் சிலைகள் உள்ளன. கோவிலின் உள்ளே கண் கவரும் வண்ணம் அம்பாள் சிங்கத்தின் மேல் அமர்ந்து காட்சிக் கொடுக்கிறாள். கோவில் அர்ச்சகர் வருபவர்களுக்கு அர்ச்சனை செய்து பக்தர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்கிறார்.

    ஜென்மாஷ்டமி, நவராத்திரி மற்றும் தீபாவளி பண்டிகைகள் இந்த ஆலயத்தில் மிக சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்தக் கோவிலுக்கு வந்து செல்கின்றனர். இந்த புனித நாட்களில், பக்தர்கள் ஹரியாழி சிலையை எடுத்துக்கொண்டு 7 கிலோமீட்டர் தொலைவில் ஹரியியாகி காந்தாவை அடைகின்றனர். இது மலையுச்சியில் இருக்கிறது. இங்கு சக்திவாய்ந்த காளி கோவில் உள்ளது. விரதமிருந்து இக்கோவிலுக்கு செல்கின்றனர்.

    எப்படி செல்வது? :

    விமானத்தில் டெஹ்ராடூன் சென்று அங்கு இருந்து காரிலும், ரெயில் மூலமும் ரிஷிகேஷ் மற்றும் ஹரித்வார் செல்ல வேண்டும். அங்கிருந்து சாலை வழியாக ருத்ரபிரயாக் என்ற பகுதிக்குச் சென்று, அந்த இடத்தில் இருந்து ஹரியாழி தேவி கோவிலை அடையலாம்.
    சமந்தா நடிக்க இருக்கும் புதிய படத்தில் அவரின் வயதான தோற்றத்தில் பிரபல நடிகை நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. #Samantha
    2014-ம் ஆண்டு வெளியான கொரியன் படம் ‘மிஸ் க்ரானி’. சீனா, ஜப்பான், தாய்லாந்து, இந்தோனேசியா உள்ளிட்ட பல மொழிகளில் இந்த படம் ரீமேக் செய்யப்பட்டு வரவேற்பு பெற்றுள்ளது.

    இந்தியாவில் முதலில் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இதன் கதைப்படி வயதானவர் மற்றும் இளமையானவர் என்ற இரண்டு கதாபாத்திரங்களிலுமே சமந்தா நடிக்க திட்டமிட்டு இருந்தார். கணவனை இழந்த 74 வயதான பெண் ஒருத்தி, தான் குடும்பத்துக்குப் பாரமாக இருப்பதை உணர்கிறாள்.

    ஒரு போட்டோ ஸ்டூடியோவுக்கு செல்லும் அவள், மந்திர சக்திகள் மூலம் 20 வயது பெண்ணின் தோற்றத்தைப் பெறுகிறாள். இதன்பிறகு ஏற்படும் சிக்கல்களை சுவாரஸ்யமாகவும் நகைச்சுவையுடனும் திரைக்கதையாக அமைத்திருப்பார்கள்.



    2014ம் ஆண்டு தென்கொரியாவில் வெளியான இப்படம், 8.65 மில்லியன் டிக்கெட்டுகள் விற்று மாபெரும் வெற்றி பெற்றது. சமந்தாவுக்கு வெளிநாட்டு மேக்கப் நிபுணர்களை வரவழைத்து பாட்டி வேடத்துக்கான மேக்கப் போட்டு பார்த்துள்ளார்கள்.

    ஆனால் அது சரியாக அமையவில்லை. எனவே கொரியன் படத்தில் செய்தது போல வயதான தோற்றத்துக்கு ஒரு நடிகையையும் இளமையான தோற்றத்துக்கு சமந்தாவையும் நடிக்க வைக்க போகிறார்கள். அந்த வயதான தோற்றத்தில் மூத்த நடிகை லட்சுமியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
    வெள்ளி மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் மஹாலக்ஷ்மிக்கு பிரியமான இந்த மந்திரம் கூறி வழிபட்டால் சகல சௌபாக்கியங்களும் வந்து சேரும்.
    1 தன லட்சுமி

    யா தேவி ஸர்வ பூதேஷூ புஷ்டி ரூபேண ஸம்ஸ்த்திதா
    நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம

    எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் செல்வத்தின் வடிவாக உறைகிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன்,வணங்குகிறேன்,வணங்குகிறேன்

    2 வித்யா லட்சுமி


    யா தேவி ஸர்வ பூதேஷூ புத்தி ரூபேண ஸம்ஸ்த்திதா
    நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம

    எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் கலை, கல்வியின் வடிவாக உறைகிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன், வணங்குகிறேன், வணங்குகிறேன்.

    3 தான்ய லட்சுமி


    யா தேவி ஸர்வ பூதேஷூ க்ஷுதா ரூபேண ஸம்ஸ்த்திதா
    நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம

    எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் உணவு பொருட்களின் வடிவாக இருக்கிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன், வணங்குகிறேன், வணங்குகிறேன்.

    4 வீர லட்சுமி

    யா தேவி ஸர்வ பூதேஷூ த்ரூதிரு ரூபேண ஸம்ஸ்த்திதா
    நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம

    எந்த தேவியானவள் எல்லா உயிர்களிடத்தும் வீரம், வெற்றியின் அம்சமாக உறைகிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன் வணங்குகிறேன் வணங்குகிறேன்.

    5 ஸௌபாக்ய லட்சுமி

    யா தேவி ஸர்வ பூதேஷூ முஷ்டி ரூபேண ஸம்ஸ்த்திதா
    நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம

    எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் சுகம், நிம்மதியின் வடிவாக இருக்கிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன் வணங்குகிறேன் வணங்குகிறேன்.

    6 சந்தான லட்சுமி

    யா தேவி ஸர்வ பூதேஷூ மாத்ரூ ரூபேண ஸம்ஸ்த்திதா
    நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம

    எந்த தேவியானவள் எல்லா உயிர்களிடத்தும் தாயாக இருக்கிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன் வணங்குகிறேன் வணங்குகிறேன்.

    7 காருண்ய லட்சுமி

    யா தேவி ஸர்வ பூதேஷூ தயா ரூபேண ஸம்ஸ்த்திதா
    நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம

    எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் அன்பு, கருணை வடிவாக இருக்கிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன் வணங்குகிறேன் வணங்குகிறேன்.

    8 ஆதி லட்சுமி

    யா தேவி ஸர்வ பூதேஷூ லக்ஷ்மீரூபேண ஸம்ஸ்த்திதா
    நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம

    எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் அனைத்து செல்வங்களின் வடிவாக இருக்கிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன் வணங்குகிறேன் வணங்குகிறேன்
    காலையில் எழுந்ததும் நம் உள்ளங்கைகளை விரித்துக்கொண்டு, உள்ளங்கையில் சூட்சுமமாக குடியிருக்கும் ஸ்ரீமகா லக்ஷ்மியை வணங்கியபடி, இந்த ஸ்லோகத்தைச் சொல்லுங்கள்.
    காலையில் எழுந்திருக்கும்போதே, காலில் சக்கரமும் தோளில் இறக்கையும் கட்டிக்கொண்டு பரபரக்கிற வாழ்க்கைதான் பலருக்கும்! ஆனாலும் தினமும் எழுந்தவுடன் ஒரு பத்து நிமிடம் கொஞ்சம் நிதானம் பழகுவது நல்லது. குறிப்பாக, காலையில் எழுந்ததும் நம் உள்ளங்கையில் கண்விழிப்பது ரொம்பவே விசேஷம். ஏனெனில், நம் உள்ளங்கையில், ஸ்ரீலக்ஷ்மி வாசம் செய்கிறாள் என்பதாக ஐதீகம்!

    ஆகவே, காலையில் எழுந்ததும் நம் உள்ளங்கைகளை விரித்துக்கொண்டு, உள்ளங்கையில் சூட்சுமமாக குடியிருக்கும் ஸ்ரீமகா லக்ஷ்மியை வணங்கியபடி, இந்த ஸ்லோகத்தைச் சொல்லுங்கள்.  

    கராக்ரே வஸதே லக்ஷ்மீ
    கரமத்யே ஸரஸ்வதீ கரமூலேது
    கோவிந்த: ப்ரபாதே கரதர்சனம்

    நம் ஒவ்வொரு செயலிலும் பக்கபலமாக இருந்து, நம்மையும் நம் இல்லத்தையும் சிறக்கவும் செழிக்கவும் செய்வாள் தேவி!
    மகாலட்சுமிதேவியின் அருளைப் பெற கீழ்க்காணும் ஸ்லோகத்தை தினமும் மாலைவேளையில் விளக்கேற்றி வைத்துச் சொல்லி வாருங்கள்.
    மகாலட்சுமிதேவியின் அருளைப் பெற கீழ்க்காணும் ஸ்லோகத்தை தினமும் மாலைவேளையில் விளக்கேற்றி வைத்துச் சொல்லிவாருங்கள். உங்கள் இல்லத்திலும் மகாலட்சுமி மனமாரக் குடிகொண்டு அருள்வாள். தினமும் இந்த வழிபாட்டைச் செய்ய இயலாதவர்கள், வெள்ளிக்கிழமைகளில் மட்டுமாவது இதைச் செய்வது நல்லது.

    ஸஹஸ்ரதள பத்மஸ்த கர்ணிகா வாஸினீம் பராம்
    சரத்பார்வண கோடீந்து ப்ரபாமுஷ்டிகராம் பராம்
    ஸ்வதேஜஸா ப்ரஜ்வலந்தீம் ஸுகத்ருச்யாம் மனோஹராம்
    ப்ரதப்த காஞ்சனநிப சோபாம் மூர்திமதீம் ஸதீம்
    ரத்நபூஷண பூஷாட்யாம் சோபிதாம் பீதவாஸஸா
    ஈஷத்தாஸ்ய ப்ரஸன்னாஸ்யாம் சஸ்வத்ஸுஸ்திரயௌவனாம்
    ஸர்வஸம்பத்ப்ரதாத்ரீம் ச மஹாலக்ஷ்மீம் பஜே சுபாம்'

    விளக்கம்:

    ஆயிரம் தளங்களுடன் கூடிய தாமரை மலரின் நடுவில் வசிப்பவளும் சிறந்தவளும், சரத் காலத்தில் உள்ள கோடி சந்திரனுக்கு ஒப்பான காந்தி உள்ளவளும், தனது காந்தியால் மிகவும் பிரகாசிக்கின்றவளும், ஆனந்தமயமாகக் காட்சி தருபவளும், பக்தர்களின் மனத்தைக் கவருகின்றவளும், உருக்கி வார்த்த தங்கத்தின் காந்தியே (பிரகாசமே) உருவெடுத்து வந்தது போன்று இருப்பவளும், பதிவிரதையும், ரத்னாபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவளும், தங்கப் பட்டாடையால் விளங்குகின்றவளும், மந்தஹாஸத்தால் பிரசன்ன முகமுடையவளும், சாஸ்வதமாய் அமைந்துள்ள யௌவனத்தை உடையவளும், பக்தர்களுக்கு சர்வ சம்பத்துக்களையும் தருபவளும், மங்கலத்தை அருள்கின்றவளுமான ஸ்ரீ மகாலட்சுமியைப் பூஜிக்கிறேன்.

    ஸ்ரீதேவி பாகவதம் 9-வது ஸ்கந்தம், 42-வது அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ள இந்த ஸ்லோகம் நம் இல்லத்தில் சகல சௌந்தர்யங்களையும் கொண்டுவந்து சேர்க்கக்கூடிய சக்தி கொண்டது.

    "ஸ்ரீ மகாலட்சுமி தாயார் திருவடிகளே சரணம்"
    மகாலட்சுமி குடியிருக்கும் பொருட்களாக சிலவற்றை ஆன்மிகத்தில் குறிப்பிட்டுள்ளனர் நம் முன்னோர்கள். அவை என்னவென்று விரிவாக பார்க்கலாம்.
    உலக வாழ்வில் பொருளின்றி வாழ்வது நரகத்திற்கு ஒப்பாகும். செல்வத்தை அருளும் மகாலட்சுமியின் கடைக்கண் பார்வைக்காக நாம் அனைவருமே ஏங்குகிறோம். அன்னை குடியிருக்கும் பொருட்களாக சிலவற்றை ஆன்மிகத்தில் குறிப்பிட்டுள்ளனர் நம் முன்னோர்கள்.

    அவை: மஞ்சள், பூர்ண கும்பம், குங்குமம், கோலம், வாழை, மாவிலை, சந்தனம், தோரணம், திருவிளக்கு, கண்ணாடி, வில்வம், நெல்லிக்காய், துளசி, கோமியம், தாமரை, சங்கு, ஸ்ரீ சூர்ணம், திருமண் ஆகும்.

    மேலும் பசு, யானை போன்ற விலங்குகளிடமும், முதியவர்களிடமும், பொறுமையும் அன்பும் மிக்கவர்களிடமும், சுமங்கலிகள், பசுக்களை பராமரிப்பவர்கள், நல்ல புத்தி கொண்டவர்கள், ஞானிகள் ஆகியோரிடமும் லட்சுமி நிரந்தரமாக இருப்பதாக ஐதீகம்.

    தினமும் நாம் ஏற்றும் தீபத்தில் முப்பெரும் தேவியர்களான பார்வதி, சரஸ்வதி, லட்சுமி ஆகியோர் இணைந்து இருந்து அருள்புரிகின்றனர் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
    முப்புரம் எரித்த சிவனாரை வழிபடும் விதமாக, திருக்கார்த்திகையில் ஜோதியின் வடிவமாக விளக்குகளை ஏற்றுகிறோம். ஆனால் சிறப்புமிக்க இந்நாளில் மட்டுமல்லாமல், தினமும் நாம் ஏற்றும் தீபத்தில் முப்பெரும் தேவியர்களான பார்வதி, சரஸ்வதி, லட்சுமி ஆகியோர் இணைந்து இருந்து அருள்புரிகின்றனர் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

    தீபத்தில் இருந்து வெளிப்படும் சுடரில் செல்வ வளம் தரும் அன்னை மகாலட்சுமியும், அதன் ஒளியில் அறிவுச்சுடர் பரப்பும் அன்னை சரஸ்வதியும், சுடரில் இருந்து வெளிப்படும் வெப்பத்தில் வீரத்தை தந்து ஆரோக்கியம் தரும் அன்னை பார்வதியும் இருப்பதாக ஐதீகம். ஆகவே தான் ஒரு வீடு எல்லா நலன்களும் பெற தினமும் விளக்கேற்றி வைப்பது சிறந்தது என்று சொல்லியிருக்கிறார்கள்.
    தீபாவளித் திருநாள் பண்டிகையாகக் கொண்டாடப்பட்டாலும், அந்த நாளில் சில சிறப்பு வழிபாடுகளைச் செய்வது நல்ல பலன்களைத் தரும் என்பது நம்பிக்கை.
    தீபாவளித் திருநாள் பண்டிகையாகக் கொண்டாடப்பட்டாலும், அந்த நாளில் சில சிறப்பு வழிபாடுகளைச் செய்வது நல்ல பலன்களைத் தரும் என்பது நம்பிக்கை. அந்த பூஜைகள் விபரம் வருமாறு:-

    மகாலட்சுமி பூஜை- தீபாவளி திருமகளின் அவதார நாள் என்பதால், அன்று மகாலட்சுமி பூஜை செய்வது சிறப்பானது. மகாலட்சுமி படத்தினை அலங்கரித்துவைத்து, தூப தீப ஆராதனைகள் செய்யுங்கள். சர்க்கரைப் பொங்கல் நிவேதியுங்கள். மகாலட்சுமி துதிகளைச் சொல்லுங் கள். மனதார வேண்டுங்கள. திருமணம் கைகூடும். மங் களங்கள் சேரும். இதன் பயனாக கூடுதலாக லட்சுமி கடாட்சமும் கிட்டும்.

    குபேர பூஜை : செல்வத்தின் அதிபதியாக குபேரன் பொறுப்பேற்ற நாள் தீபத் திருநாள். குபேரன் படத்தின் இருபுறமும் விளக்கேற்றி வைத்து, இனிப்பு பலகாரஙகளை நிவேதனம் செய்து வணங்குங்கள். செல்வமகள் உஙகள் இல்லம் தேடி வருவாள்.

    கேதார கவுரி பூஜை : பரமசிவன் பார்வதி படத்தை வைத்து வழிபட வேண்டிய பூஜை அர்த்த நாரீஸ்வரர் படத்துக்கு கூடுதல் சிறப்பு. இதனால் தம்பதியர் ஒற்றுமை கூடும். இல்லற வாழ்வு சிறக்கும்.

    கோ பூஜை : பசுவின் உடலில் சகல தேவர்களும் இருப்பதாக ஐதீகம். வாழ்வு சிறக்கவும், வம்சம் தழைக்கவும் தீபாவளி தினத்தில் கோ பூஜை செய்வது சிறப்பு.

    சத்யபாமா பூஜை : பூமா தேவியின அம்சமான சத்யபாமாவே கிருஷ்ணருடன் சென்று நரகாசுரனை அழித்தாள். எனவே சத்யபாமாவை வீரலட்சுமியாக பாவித்து வழிபடும் பழக்கம் வட இந்தியாவில் உளளது. வாழ்வில் வரும் தடைகள் யாவும் இந்த பூஜை யால் நீங்கும்.

    ஹரிஹர பூஜை : கிருஷ்ண பட்ச சதுர்த்தி, சிவனுக்குரிய மாத சிவராத்திரி. அன்று இரவு முழுக்க கண்விழித்து இருந்து மறுநாள் நாரகாசுரனை அழித்தார் கிருஷ்ணர். எனவே சிவ விஷ்ணு வழிபாடு செய்ய ஏற்ற நாளாக தீபாவளி கரு தப்படுகிறது. இந்த வழிபாட்டால் குடும்பத்தில் அமைதி உண்டாகும். ஆனந்தம் பெருகும்.

    முன்னோர் வழிபாடு : துலாமாத அமாவாசை தினம் முன்னோர் வழிபாட்டிற்குரிய முக்கியமான தினமாகக் கருதப்படுகிறது. அவரவர் இல்லத்து முன்னோரை நினைத்து இயன்ற அளவு அன்னதானம் செய்வதும், ஆடை தானம் செய்வதும் இல்லத்து இனிமையை இரட்டிப்பாக்கும்.

    குலதெய்வ பூஜை : எத்தனை எத்தனை தெய்வங்களை வழிபட்டாலும் குலதெய்வ வழிபாடே முதன்மையானது. வாழ்வில் நாம் அனைத்து பலன்களையும் பெற குலதெய்வத்தின் ஆசி வேண்டும். எந்த ஒரு பூஜை அல்லது பண்டிகையின் போதும் முதலில் அவரவர் வழக்கப்படி குலதெய்வத்தைக் கும்பிட வேண்டும்.  குலதெய்வத்தைக் கும்பிட்ட பின் இயன்ற பூஜை, விரதத்தைக் கடைப்பிடியுங்கள். எல்லா நன்மையும் உங்களைத் தேடிவரும்.
    தீபாவளியன்று லட்சுமி பூஜை செய்வது போன்று அன்னபூரணிக்கும் விரதமிருந்து பூஜை செய்திட அள்ள அள்ள குறையாத செல்வங்களையும், அன்னத்தையும், ஞானத்தையும், அன்னபூரணி வழங்குவாள் என ஞான நூல்கள் கூறுகின்றன.
    அனைத்து ஜீவராசிகளும் பசிப்பிணியின்றி வாழ அருள்புரிபவள் அன்னபூரணி. அகில உலகிற்கும் படி அளப்பவள் அன்னபூரணி. அவளை வணங்கினால்தான் நம் வாழ்நாளில் பசிப்பிணியின்றி வாழ முடியும். நமக்கு எந்த வகை உணவும் வயிற்றுக்கு சென்று பசியாற்றுகிறது என்றால் அதனை தருபவளே அன்னபூரணி. அன்னபூரணியை குறிப்பிட்ட நாளில்தான் வணங்க வேண்டும் என்பதில்லை.

    தினம் தினம் நாம் உணவு உண்ணும்போதும் அன்னபூரணியே நமஹ என்று கூறி உணவருந்தினாலே அவள் நமக்கு வயிற்றுக்கு வஞ்சனை செய்யாமல் பசிக்கும்போது தேவையான உணவை தந்து விடுவாள். உணவாய் உண்ணும் எல்லா பொருள்களை விளைவிப்பதும், அதனை உயிர்ப்பிக்க ஆதாரமாய் இருப்பதும் அன்னபூரணியே. அந்த அன்னபூரணியை தீபாவளி நாளன்றும் அதன்முன், பின் ஆகிய மூன்று நாட்கள் காசியில் தங்கமயமாய் காட்சி தருபவளை வணங்கிட வாழ்நாள் முழுவதற்குமான அன்னத்தை, செல்வத்தை வழங்கிவிடுவாள். காசியில் அன்னபூரணி அள்ள அள்ள குறையாத அட்சயபாத்திரத்தில் பால் அன்னம் தந்து உலக உயிர்களின் அன்னதோஷம் என்னும் வறுமை அண்டாதவாறு அருள்புரிகிறாள்.

    செல்வ வளங்களை பெற தீபாவளியன்று லட்சுமி பூஜை செய்வது போன்று அன்னபூரணிக்கும் விரதமிருந்து பூஜை செய்திட அள்ள அள்ள குறையாத செல்வங்களையும், அன்னத்தையும், ஞானத்தையும், அன்னபூரணி வழங்குவாள் என ஞான நூல்கள் கூறுகின்றன.

    பிட்சாடனார் பசிதீர்க்க அவதரித்த அன்னபூரணி

    சிவபெருமானின் ஐந்து தலைகள் போல் தனக்கும் ஐந்து தலைகள் உள்ளது என பிரம்மதேவன் கர்வம் கொண்டார். அதனை தீர்க்க முற்பட்ட சிவன் தன் மனைவி பார்வதிதேவியை வைத்து ஓர் லீலை புரிந்தார். அதன்படி கயிலைக்கு வந்த பிரம்மனை பார்த்து பார்வதிதேவி சிவபெருமான் என நினைத்து வணங்கிட அதனை கண்டு பிரம்மன் கர்வம் கொண்டு சிரித்து விட்டான். இதனை கண்ட சிவன் பிரம்மனின் ஐந்து தலைகளில் ஒன்றை கொய்து விட்டார். பிரம்மன் தலை துண்டித்த தோஷத்தால் சிவன் கையிலேயே அந்த கபாலம் ஒட்டி கொண்டது. இந்த தோஷம் போக்க சிவபெருமான் பல இடங்களில் பிச்சை பெற்றார். ஆயினும் சிவன் கையை விட்டு கபாலம் விழவில்லை. அதே நேரம் பிரம்மதேவனை பார்த்து சிவனார் என நினைத்து வணங்கியதற்கு தனக்கு தானே தண்டித்து கொண்டு காசியில் அன்னபூரணியாக அவதரித்து தவம் செய்தாள். இச்சமயம் பிட்சாடனாராக வந்த சிவபெருமான் அன்னபூரணியிடம் பிச்சை பெற்றார். அந்த நேரமே பிரம்ம கபாலம் சிவபெருமான் கையை விட்டு விலகியது. சிவனின் பசியை தீர்க்க வந்த அன்னபூரணி உலக பசிப்பிணி தீர்க்க காசியிலேயே தங்கி விட்டாள்.

    உணவை அருளும் சக்தி அன்னபூரணி

    அன்னை சக்தியும், ஈசனும் ஒரு சொக்கட்டான் விளையாட அதில் ஈசன் வெற்றி பெற்றார். ஆனால் சக்தியோ சிவன் ஏதோ தவறாக ஆடியே தன்னை வெற்றி கொண்டார் என எண்ணி வாதம் செய்தார். ஈசனோ “எல்லாம் மாயை. இதில் இந்த ஆட்டமும் மாயை” என்று கூறி, எனவே வெற்றி, தோல்வி குறித்து அதிக கலக்கம் கொள்ள வேண்டாம் என்று கூறினார். தேவியோ எல்லாம் மாயை எனில் உயிர்களின் இயக்கமும் மாயையா? என வினவ, ஆமாம் என்றார் சிவபெருமாள். அதன் காரணமாய் சக்தி தேவி காசி நகரில் வந்து தவமியற்றினாள். தன் பணியை விட்டு பராசக்தி தவமியற்றியதால் உலகத்தில் உயிர்கள் பசியால் வாடின. உலக மக்களின் துயரம் போக்க ஈசன் தாமே காசிக்கு பிச்சாடனார் ஆக சென்று பிச்சை எடுத்து பசியாறினார். அப்போதுதான் சிவபெருமான் “உலகம் மாயைதான். எனினும் உயிர்கள் வாழ ஆதார சக்தி உணவு தேவை. அதனை அருள்பவள் சக்தியே” என்று தன் தவறை உணர்ந்து கூறினார். அது முதல் காசியில் அமர்ந்து அன்னகூடம் அமைத்து சகல ஜீவராசிகளின் பசிப்பிணி போக்குகிறாள் அன்னதயாபரி.

    நவரத்ன சிம்மாசனத்தில் அன்னபூரணி

    நவரத்ன சிம்மாசனத்தில் சம்மணமிட்டு அமர்ந்திருக்கும் அன்னையின் ஒரு கரத்தில் அட்சய பாத்திரமும், மறு கரத்தில் தங்க கரண்டியுடன் கூடிய தங்கத்தில் ஜொலிக்கும் அன்னபூரணியை தீபாவளியின்போது மூன்று நாட்களுக்கு மட்டுமே தரிசிக்க முடியும். அன்னையிடம் பிச்சை கேட்கும் பிட்சாடனார் உருவமும் அருகில் ஆரடி உயரத்தில் உள்ளது. இந்த சிலை வெள்ளியால் செய்யப்பட்டது. தீபாவளியன்று அன்ன கூடம் என்ற நிகழ்வில் பலவித உணவுகள், பலகாரங்கள் வைத்து பூஜை செய்து அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்படும். மறுநாள் லட்டு தேரில் அன்னபூரணி ஊர்வலம் வருவாள். எண்ணற்ற லட்டுகளால் உருவான தேர் திரும்ப வரும்போது ஒரு லட்டு கூட இருக்காது. அன்னபூரணியை தீபாவளியன்று தொடர்ந்து மூன்று நாட்கள் விரதமிருந்து பூஜை செய்து வணங்கலாம். அதுபோல் அன்னபூரணி உருவச்சிலை வைத்து பூஜை செய்து வணங்கிடலாம். அன்னபூரணி அனைத்து நலன்களையும் தருவாள்.
    இந்தியா முழுவதும் பண்டிகைகள் என்பது கொண்டாடப்படும் போது நம்பிக்கை சார்ந்த விஷயங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
    இந்தியா முழுவதும் பண்டிகைகள் என்பது கொண்டாடப்படும் போது நம்பிக்கை சார்ந்த விஷயங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு பூஜைகளும் பண்டிகைகளும் கொண்டாட்ட மகிழ்ச்சியை தரும் என்பதுடன் நமது வாழ்வின் வளங்கள் பன்மடங்கு பெருகுவதற்கும், ஆரோக்கியத்தை பெறுவதற்குமான முயற்சிகள்தான். சமய சடங்குகள் மற்றும் நம்பிக்கைகள் என்பது பெரும்பாலும் வறுமைகோட்டிற்கு கீழ் உள்ளவர்களால் தான் அதிகமாக செயல்படுத்தப்படுகிறது. இறை நம்பிக்கை என்பதுடன், தொடர்ந்து வாழ்வை நகர்த்த மேம்பட்ட முயற்சியாகவும்தான் கொள்ள வேண்டும்.

    அது போல் தீபாவளி பண்டிகை சமயத்திலும் சில சமய சடங்குகள் மற்றும் நம்பிக்கை சார்ந்த விஷயங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. தீபாவளி சமயத்தில் செய்யப்படும் இந்த தீர்வுக்கான முயற்சிகள் என்பது ஓம் வரைவது, சங்கு ஒலிக்க செய்வது, விநாயகர் - லட்சுமி மந்திரங்கள், கரும்பு வேர் வணங்குவது, தாமரை மலரால் பூஜை செய்வது போன்றவாறு உள்ளன. இவற்றை தீபாவளி சமயத்தில் செய்யும் போது நமது வறுமை நிலை ஒழிந்து செல்வ நிலை மேம்பாடு அடையும் என்பதாக நம்பப்படுகிறது. அதன் காரணமாக தீபாவளி பூஜையோடு இந்த நம்பிக்கை சார்ந்த விஷயங்களை மேற்கொள்ளும் பழக்கம் பலரிடமும் இருந்து வருகிறது.

    நற்பலன் தரும் ஓம் வரைதல்

    தீபாவளிக்கு முதல் நாள் தந்தராஸ் பூஜை மேற்கொள்பவர்கள் கண்டிப்பாக இந்த விஷயத்தை செய்து விடுவர். அதாவது வீட்டின் வாசல் நுழைவு பகுதியில் அழகிய ஓம் எனும் எழுத்தை எழுதுவது பச்சரிசி மாவு மற்றும் மஞ்சள் கலந்து ஓம் எனும் பிரணவ எழுத்தை எழுதிட வேண்டும். இதன் மூலம் வீட்டிற்கு செல்வ வளம் விரைவாக வந்து விடும் என்பது நம்பிக்கையாக உள்ளது. இதனை எழுத அதிகம் செலவாகாது. இதனை பலரும் வீட்டின் முன் தந்தராஸ் நாளில் வரைந்து இருப்பர்.

    சங்கு ஒலிக்கச் செய்தல்:

    தீபாவளி நாளில் வீட்டில் மங்கல ஓசை எழுப்புவது நல்ல வளங்களை கொண்டு வருமாம். அந்த வகையில் வீட்டில் சங்கு வைத்திருப்பதே சிறந்த பலனை தரும். அந்த சங்கை தீபாவளி நாளில் அதிக ஒலியுடன் ஊத செய்வது வேண்டுமாம். பண்டிகையின் போது இந்து குடும்பங்களில் பலர் சங்கு ஊதி இறைவனை வணங்குவர். அதுபோல் தீபாவளி அன்று சங்கு ஒலிப்பதன் மூலம் வீட்டிற்கு நல் வளத்தையும் செல்வத்தையும் அழைத்து வர முடியுமாம். அப்படி வீட்டில் சங்கு இல்லாதவர்கள் தீபாவளி நாளில் புதியதாக வாங்கி வந்து பூஜையறையில் வைத்து வழிபட்டு வரலாம். அப்படியில்லையெனில் சங்கு பூஜை செய்து வழிபாடு நடத்தலாம்.

    இறையருள் தரும் கரும்பு வழிபாடு:


    விநாயகர் மற்றும் லட்சுமி பூஜை செய்யும் நபர்கள் அதனுடன் வேருடன் கூடிய கரும்பை வைத்தும் வழிபாடு செய்வர். தீபாவளி நாளில் கரும்பை வைத்து பூஜை செய்து வழிபடுவதன் மூலம் இல்லத்தில் நலன் அதிகரிப்பதுடன், செல்வ வளம் பெருகுமாம். கரும்பு விவசாயிகளின் நல்வருவாய் மற்றும் இனிப்பான சுவை மிகுந்தது என்பதால் இதனை பூஜையில் வைத்து வழிபடுகின்றனர்.

    தாமரை மலர்களால் அர்ச்சனை:

    மகாலட்சுமியின் விருப்பமான மலர் தாமரை. எனவே தீபாவளியன்று லட்சுமி பூஜை செய்வதற்கு தாமரை மலர்களால் லட்சுமியை அலங்கரிப்பதுடன், தாமரை மலரால் அர்ச்சனை செய்து வழிபாடு செய்யலாம். தாமரை மலர் மாலை அணிவித்து லட்சுமி மந்திரம் ஜெபித்து மகாலட்சுமியை வணங்க அவள் நமக்கு லட்சுமி கடாட்சத்தை வழங்கி விடுவாள்.

    அதுபோல் தீபாவளி நேரத்தில் வீட்டில் லட்சுமி கணபதி மந்திரங்களை வைத்து பூஜை செய்திட ஐஸ்வர்யம் பெருகும். தீபாவளி சமயத்தில் ஒவ்வொரு பிராந்திய மக்களும் தங்களுக்கென சில வழிபாட்டு முறைகள், சமய சடங்குகளை செய்து வருகின்றனர். இவற்றில் நமக்கு எது விருப்பமானதோ அதனை செயல்படுத்துவது தீபாவளி கொண்டாட்டத்தில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்று நம்புவோம்.
    கோபம், பொறாமை, காமம், பேராசை போன்ற நோய்க் கிருமிகள் நம் மனதில் புகுந்து விடாமல் இருக்க ஆரோக்கிய லட்சுமியை வணங்கி அவள் அருள் பெற்று ஒளிவீசும் தேகத்துடன் வளமுடன் வாழ்வோம்.
    நாம் நம் உடல் ஆரோக்கியத்தை கவனித்தால் மட்டும் போதாது. உள்ளமும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். கோபம், பொறாமை, காமம், பேராசை போன்ற நோய்க் கிருமிகள் நம் மனதில் புகுந்து விடாமல் இருக்க ஆரோக்கிய லட்சுமியை வணங்கி அவள் அருள் பெற்று ஒளிவீசும் தேகத்துடன் வளமுடன் வாழ்வோம்.

    யாதேவீ ஸர்வபூதேஷு காந்திரூபேண
    ஸம்ஸ்த்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை
    நமஸ்தஸ்யை நமோ நமஹ

    எல்லா உயிரினங்களிலும் ஆரோக்கிய அம்சமாக உறையும் ஆரோக்கிய லட்சுமியே நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.

    தேவர்களால் சொல்லப்பட்ட இந்த ஸ்தோத்திரத்தில் அவரவர் விரும்பியதை 108 முறை சொன்னால் விரும்பியது விரைவில் கிடைக்கும். ஒவ்வொரு ஸ்லோக முடிவிலும் கீழே விழுந்து நமஸ்கரிப்பது சம்பிரதாயம். அனைத்து நலன்களையும் இந்தப் பதினாறு லட்சுமிகளும் இனிதே அருளட்டும்.

    பெண்களின் மாங்கல்யம் நிலைக்க கடைபிடிக்கப்படும் வரலட்சுமி விரதத்தை கூட்டாக சேர்ந்து அனுஷ்டித்தால் பலன் கிடைக்குமா என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
    வரலட்சுமி விரதத்தை கூட்டாக சேர்ந்து அனுஷ்டிக்கலாம். திருமகளை ஆஷாடம் என்கிற ஆடி மாதத்திலும், பாத்ரபதம் என்கிற ஆவணி மாதத்திலும், வளர்பிறை வெள்ளியன்று விரதமிருந்து பூஜிக்கலாம். இந்த நியதியை தென்னாட்டவர் பலரும் குடும்பப் பாரம்பரிய வழக்கமாகவே செய்து வருகின்றனர்.

    தற்சமயம் நாம் பல நாடுகளிலும் நகரங்களிலும் கூடி வாழ்வதாலும் ஆண், பெண் இருவருக்குமே பணிகள் அதிகமாகி விட்டதாலும் வீடுகளிலோ ஆலயங்களிலோ ஒன்றுகூடி ஒன்றாகவே சிலர் நிகழ்த்தி வருகின்றனர். சூரியன் மலை வாயில் இறங்கும் நேரம் அதாவது, சந்தியா காலம் என்கிற மாலை நேரத்தில் பூஜை செய்வது மிகவும் உயர்வை கொடுக்கும்.

    ×