என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 95540"
கேரளா மாநிலத்தில் ஏற்பட்டுள்ள மழை-வெள்ளம் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்கி உள்ளனர்.
இவர்களுக்கு உதவ இந்தியாவில் உள்ள மக்கள் மட்டுமல்ல வெளிநாடுகளில் வசிப்பவர்களும் உதவி செய்து வருகின்றனர்.
அங்கு முகாம்களில் தங்கி இருப்பவர்களுக்கு 3 நேரமும் உணவு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு ஒவ்வொரு வியாபாரிகளும் தன்னால் ஆன உதவிகளை செய்து வருகின்றனர்.
கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் மொத்தம் 1889 கடைகள் உள்ளன. இந்த கடைகளில் இருந்து ஒவ்வொரு வியாபாரிகளும் மூட்டை மூட்டையாக உருளைக்கிழங்கு, வெங்காயம், தக்காளி, கோஸ், கேரட், காலிபிளவர் என தங்களிடம் உள்ள காய்கறிகளை இலவசமாக வழங்கி வருகின்றனர்.
காய்கறி மார்க்கெட் சங்க தலைவர்கள் தியாகராஜன், சந்திரன், தனஞ்செழியன் ஆகியோர் கடை கடையாக காய்கறி மூட்டைகளை சேகரித்து லாரிகளில் அனுப்பி வருகின்றனர்.
இதுபற்றி தியாகராஜன் கூறுகையில், “மார்க்கெட்டில் ஒவ்வொரு கடைக்காரர்களும் 1 மூட்டை, 2 மூட்டை, 5 மூட்டை அளவுக்கு இலவசமாக காய்கறிகள் தருவதாகவும் அதனால் 150 மூட்டை அளவுக்கு (6 டன்) சேர்ந்து வருவதாகவும் தெரிவித்தனர்.
ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் துரைசங்கர் லாரி மூலம் இவற்றை கேரளாவில் உள்ள அன்னதான சத்திரத்துக்கு அனுப்ப ஏற்பாடு செய்துள்ளதாகவும் கூறினார். #KeralaRains #KeralaFloods
மேட்டுப்பாளையம்:
மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் இருந்து கேரளா மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு தினசரி லாரிகள் மூலம் காய்கறிகள் அனுப்பி வைக்கப்படுகின்றன. அதிலும் குறிப்பாக கேரளாவிற்கு 90 சதவீத காய்கறிகள் அனுப்பி வைக்கப்படுகின்றன.
இந்த நிலையில் மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் இருந்து கேரளாவிற்கு தினசரி 50 ல் இருந்து 60 லோடு வரை காய்கறிகள் அனுப்பி வைக்கப்பட்டு வந்தன. ஆனால் தற்போது கேரளாவில் பெய்துவரும் கனமழை காரணமாக கேரளாவிற்கு காய்கறிகள் செல்வது பாதியாகக் குறைந்துள்ளது. இது குறித்து மேட்டுப்பாளையம் காய்கறி வர்த்தகசபை தலைவர் வைத்திய லிங்கம்,செயலாளர் குமார் ஆகியோர் கூறியதாவது.
மேட்டுப்பாளையம் காய்கறிமார்க்கெட்டில் இருந்து 90 சதவீத காய்கறிகள் கேரளாவிற்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. தினசரி 60 லாரிகளில் காய்கறிகள் அனுப்பி வைக்கப்படும்.ஆனால் தற்போது கேரளாவில் பெய்யும் மழை காரணமாக தினசரி 25 லாரிகளில் காய்கறிகள் கொண்டு செல்லப்படுகின்றன. மேட்டுப்பாளையத்தில் இருந்து கேரளாவிற்கு காய்கறிகளை ஏற்றிச்சென்ற லாரிகள் மழை காரணமாக குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல முடியாமல் பாதிவழியில் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளன.
மேலும் குறிப்பிட்ட இடத்தை சென்றடைந்தாலும் காய்கறிகளை இறக்கிவைக்க முடியாமல் அங்கேயே நிறுத்தப் பட்டுள்ளன. இத்தகைய காரணங்களால் கேரளாவிற்கு செல்லும் லாரிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. காய்கறிகள் தேக்கம் அடையாமல் இருக்க தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
இந்தியா முழுவதும் லாரிகள் வேலைநிறுத்தம் கடந்த 20-ந் தேதி தொடங்கியது. இது போல் கோவை மாவட்டத்திலும் லாரிகள் வேலைநிறுத்தம் தீவிரம் அடைந்துள்ளது. தமிழகம் மற்றும் இந்தியாவின் மற்ற மாநிலங்களில் இருந்து வரும் ஆயிரக்கணக்கான லாரிகள் கோவையை அடுத்த வாளையாறு வழியாக கேரளாவுக்கு செல்வது வழக்கம். வேலைநிறுத்தம் காரணமாக அந்த லாரிகள் அனைத்தும் வாளையாறில் நிறுத்தப்பட்டுள்ளன.
லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக சரக்கு போக்குவரத்து முற்றிலும் முடங்கி உள்ளது. கோவை மாவட்டத்தில் தினமும் ரூ.100 கோடிக்கு வர்த்தகம் பாதிப்பதாக கூறப்படுகிறது. கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். மார்க்கெட்டுக்கு வெளிமாநிலங்களில் இருந்து தினமும் 100 லாரிகளில் பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு, சின்ன வெங்காயம், கேரட், பீட்ரூட், பீன்ஸ் போன்ற காய்கறிகள் கோவைக்கு கொண்டு வரப்படுவது வழக்கம்.
ஆனால் லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக காய்கறி வரத்து குறைந்துள்ளது. ஆனால் 20-ந் தேதிக்கு முன்பு வடமாநிலங்களில் இருந்து பெரிய வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு ஏற்றிய 20 லாரிகள் நேற்றுக்காலை கோவை வந்தன. காய்கறி லாரிகள் என்பதால் அவற்றை யாரும் தடுக்கவில்லை. கோவை வந்த அந்த லாரிகளில் இருந்து இறக்கப்பட்ட பெரிய வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு ஆகியவை கேரளாவுக்கு கொண்டு செல்லப்பட வேண்டும்.
ஆனால் பெரிய லாரிகளை இயக்க முடியாது என்பதால் கேரளாவில் உள்ள காய்கறி வியாபாரிகள் தங்களுக்கு சொந்தமான டெம்போ வேன்களில் கோவையில் இருந்து காய்கறிகளை ஏற்றிக் கொண்டு கேரளாவுக்கு சென்றனர். கோவை எம்.ஜி.ஆர். மார்க்கெட்டில் இருந்து நேற்று 50-க்கும் மேற்பட்ட டெம்போ வேன்களில் காய்கறிகள் கேரளாவுக்கு கொண்டு செல்லப்பட்டன.
இது குறித்து எம்.ஜி.ஆர். மொத்த காய்கறி மார்க்கெட் வியாபாரி ஒருவர் கூறியதாவது:-
லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு ஆகியவற்றின் விலை ஒரு கிலோவுக்கு ரூ.5 வரை உயர்ந்துள்ளன. மற்ற காய்கறிகளும் ஒரு கிலோவுக்கு ரூ.5 முதல் ரூ.10 வரை விலை உயர்ந்துள்ளன. கோவையில் இருந்து கேரளாவுக்கு காய்கறிகளை வியாபாரிகள் தங்கள் சொந்த டெம்போ வேன்களில் கொண்டு செல்கின்றனர். இதனால் கோவை மார்க்கெட்டில் காய்கறிகள் தேக்கம் அடையவில்லை.
காய்கறிகளை ஏற்றிக் கொண்டு கேரளா செல்லும் டெம்போ வேன்களை இதுவரை யாரும் தடுக்க வில்லை. இதே நிலை நீடித்தால் இன்னும் 2 நாட்களுக்கு கேரளாவுக்கு டெம்போ வேன்கள் மூலம் காய்கறி கொண்டு செல்ல முடியும். அதன்பின்னர் கோவை மார்க்கெட்டில் இருப்பு குறைந்த பிறகு கேரளாவில் காய்கறிக்கு தட்டுப்பாடு ஏற்படும்.
கோவையை சுற்றி உள்ள கிராமங்களில் விளையும் காய்கறிகளை ஆட்டோக்கள், டெம்போ வேன்களில் கோவை மார்க்கெட்டுக்கு கொண்டு வந்து விற்கப்படுகிறது அரசு பஸ்களிலும் காய்கறி மூட்டை களை இலவசமாக கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டு உள்ளது. எனவே கோவையின் சுற்று வட்டாரங்களில் விளையும் காய்கறிகளை விற்பனை செய்ய எங்கும் கொண்டு செல்வதில் சிக்கல் இருக்காது. ஆனால் வெளிமாநிலங்களில் வரும் காய்கறிகள் தற்போது தடைபட்டு உள்ளது. அவற்றின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார். #LorryStrick
கால்சியம் கார்பைடு, பாஸ்பரஸ், எத்திலீன் போன்ற ரசாயனங்கள் மூலமாகப் பழங்கள் செயற்கையாகப் பழுக்கவைக்கப்படுகின்றன. இப்படிப் பழுக்க வைப்பதால் அதன் இயல்பு பாதிக்கப்படுகிறது. மாம்பழம் சாப்பிடுவதே அதிலுள்ள மினரல்ஸ், மல்டி வைட்டமின்களுக்காகத்தான். ஆனால், செயற்கையாகப் பழுக்கவைக்கப்பட்டவற்றில் இவை எதுவும் இருக்காது.
செயற்கையாகப் பழுக்கவைக்கப்பட்ட மாம்பழங்களில் அதன் இனிப்புத்தன்மை அதிகரித்துவிடும். அதைச் சாப்பிட்டால் அடிக்கடி வயிற்றுப்போக்கு, வயிறு மந்தம், சருமப் பிரச்னைகள், அல்சர் போன்ற பாதிப்புகள் உண்டாகும். கால்சியம் கார்பைட் கலந்த உணவுகளைத் தொடர்ந்து சாப்பிட்டால் புற்றுநோய் (Carcinogenic) உண்டாவதற்கான வாய்ப்புண்டு. எனவே, வாங்கும்போது கவனமாகப் பார்த்து வாங்க வேண்டும்.
"கால்சியம் கார்பைடால் வயிறு தொடர்பான பிரச்சனைகள், கண் எரிச்சல், சரும அலர்ஜி, வாந்தி போன்றவை உண்டாகலாம். சில நேரங்களில் சுவாசம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது. இதில், ஆர்சனிக் இருந்தால் புற்றுநோய் உண்டாகவும் வாய்ப்பிருக்கிறது. மாம்பழம் சாப்பிட்டதால் வயிற்றுப்போக்கு கோடைக்காலங்களில் பெரும்பாலானவர்களுக்கு ஏற்படும்.
அதற்குக் காரணம் இதுபோன்று ரசாயனங்கள்தான். இதனால் உடலில் நீர்வறட்சி ஏற்பட்டு, உடல் வலுவிழக்க வாய்ப்பிருக்கிறது. அதனால் கவனமாக இருக்கவேண்டியது அவசியம்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்