search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95580"

    கடலூர் அருகே திருமணம் செய்ய மறுத்ததால் காதலன் வீட்டு முன்பு அமர்ந்து காதலி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    கடலூர்:

    கடலூர் குறிஞ்சி நகரை சேர்ந்தவர் ராஜகோபால். இவரது மகள் சிவகலா (வயது 25). கடலூர் அருகே உள்ள கிழக்கு ராமாபுரத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் (30). விழுப்புரம் மாவட்டத்தில் வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். ராஜ்குமாரும் சிவகலாவும் காதலித்து வந்தனர்.

    இந்த நிலையில் சிவகலாவுக்கு திருமணம் செய்து வைப்பதற்காக அவரது பெற்றோர் வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கினர். இதனால் சிவகலா தனது காதலன் ராஜ்குமாரிடம் தன்னை உடனே திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று வற்புறுத்தினார். ஆனால் அவர் திருமணம் செய்ய முடியாது என்று கூறி மறுத்து விட்டார். தன்னை காதலித்து விட்டு ராஜ்குமார் திருமணம் செய்ய மறுக்கிறாரே என்று எண்ணி சிவகலா மனம் வருந்தினார்.

    இது குறித்து சிவகலா கடலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரில், நானும், ராஜ்குமாரும் கடந்த 2010-ம் ஆண்டு முதல் காதலித்து வந்தோம். அவர் என்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி வந்தார். இப்போது என்னிடம் பேச கூட மறுக்கிறார் என்று தெரிவித்திருந்தார். இந்த புகார் தொடர்பாக விசாரணைக்கு வருமாறு ராஜ்குமாருக்கு போலீசார் சம்மன் அனுப்பினர். ஆனால் அவர் விசாரணைக்கு வரவில்லை.

    இதையடுத்து சிவகலா நேற்று ராமாபுரத்தில் உள்ள தன் காதலன் ராஜ்குமார் வீட்டுக்கு சென்றார். அங்கு வீடு பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து காதலன் வீட்டின் முன்பு அமர்ந்து சிவகலா தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து அவர் இரவு வரை தர்ணா செய்தார். இந்த சம்பவம் ராமாபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    நங்கவள்ளியில் திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
    நங்கவள்ளி:

    நங்கவள்ளி போலீஸ் நிலையம் அருகில் வசித்து வருபவர் குமார் (வயது 34). இவர் மேட்டூர் அனல் மின் நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். 

    திருநெல்வேலி மாவட்டம், இலாங்காட்டை சேர்ந்தவர் மகேஸ்வரி (19). இவர் அங்குள்ள தனியார் கல்லூரி யில் பி.காம், 3-ம் ஆண்டு படித்து வருகிறார். முகநூலில் அறிமுகமான இருவரும் கடந்த 2 அண்டுகளாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 18-ந் தேதி வீட்டை விட்டு வெளியேறிய மகேஸ்வரி நங்கவள்ளியில் உள்ள குமார் வீட்டுக்கு சென்றார். நேற்று காலை லட்சுமி நரசிம்மர் கோவிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் பாதுகாப்பு கேட்டு நங்வள்ளி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். 

    இதுகுறித்து மகேஸ்வரியின் பெற்றோரிடம் போலீசார் தொடர்பு கொண்டபோது அவர்கள் மகளை பார்க்க விருப்பம் இல்லை என்று கூறிவிட்டனர். இதனால் புதுமண தம்பதிக்கு போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
    திருவனந்தபுரத்தில் மழை வெள்ளத்தில் நீந்தி சென்ற வாலிபர் மணமகளை கரம்பிடித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #KeralaRain #KeralaFloods
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் வரலாறு காணாத மழை காரணமாக ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சந்தித்து வரும் சோகங்கள், சோதனைகள் வார்த்தைகளில் சொல்ல முடியாத அளவுக்கு உள்ளது.

    இந்த வெள்ளம் காரணமாக கேரளாவில் நடைபெற இருந்த ஏராளமான திருமணங்கள் தடைபட்டு உள்ளது. தற்போது வெள்ளம் வடியத்தொடங்கி உள்ளதை தொடர்ந்து திருமணங்களும் சில இடங்களில் நடைபெற்று வருகிறது.

    உறவினர்களை அழைத்து மிகவும் மகிழ்ச்சியாக நடத்த வேண்டிய இந்த சுப நிகழ்ச்சி மிகவும் எளிமையான முறையிலும், போராட்டத்திற்கு மத்தியிலும் நடைபெற்று வருகிறது.

    எர்ணாகுளத்தை சேர்ந்த ஷைன் என்பவருக்கும் திருவனந்தபுரம் நெடுமங்காடு பகுதியை சேர்ந்த கீது என்பவருக்கும் கடந்த சனிக்கிழமை திருமணம் நடத்த ஏற்கனவே திட்டமிட்டு இருந்தனர். இருவீட்டாரும் அதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடித்துவிட்டனர்.

    இந்த நிலையில் எர்ணாகுளம் மழையால் பெரும் பாதிப்பை சந்தித்ததால் மணமகன் வீட்டார் நெடுமங்காடுக்கு செல்ல முடியவில்லை. இதனால் குறிப்பிட்ட நாளில் திருமணத்தை நடத்தமுடியாத நிலை ஏற்பட்டது.

    நேற்று எர்ணாகுளம் பகுதியில் சற்று மழை வெள்ளம் வடிந்தது. இதை தொடர்ந்து மணமகன் மற்றும் அவரது குடும்பத்தினர் மணமகள் வீட்டுக்கு புறப்பட்டனர். பல இடங்களில் வெள்ளத்தை நீந்திச் செல்லும் நிலை ஏற்பட்டது. பெரும் போராட்டத்திற்கு பிறகு நெடுமங்காடு சென்ற அவர்கள் நேற்று காலை திருமணத்தை நடத்தினார்கள். மிக குறைந்த அளவிலான உறவினர்களே இந்த திருமணத்தில் கலந்து கொள்ள முடிந்தது.

     பாலக்காடு முகாமில் திருமணம் செய்த ஜோடி.

    பாலக்காடு பகுதியை சேர்ந்த சந்திரமோகன்- அனிலாவுக்கும் ஏற்கனவே திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. வெள்ள பாதிப்பு காரணமாக இவர்கள் 2 பேரின் குடும்பத்தினரும் பாலக்காடு வெள்ள நிவாரண முகாமில் தஞ்சம் அடைந்தனர். திருமணம் தடைப்பட்ட வருத்தத்தில் 2 குடும்பத்தினரும் இருந் தனர். உறவினர்கள் அறிவுரைப்படி நேற்று சந்திர மோகன்-அனிலா திருமணம் அவர்கள் தங்கியிருந்த முகாமிலேயே எளிமையாக நடைபெற்றது.  #KeralaRain #KeralaFloods
    மழை வெள்ள பாதிப்புக்கு இடையே நிவாரண முகாமில் தங்கியிருந்த பெண்ணுக்கு பாரம்பரிய முறைப்படி கோவிலில் எளியமுறையில் திருமணம் நடந்தது. #KeralaFlood #ReliefCamp
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் பெய்துவரும் கனமழை, வெள்ளத்தால் வடக்கு மலப்புரம் மாவட்டத்திலும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    அந்த பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர். அஞ்சு (வயது 24) என்பவர் வீடும் வெள்ளத்தில் மூழ்கியதால் அவர் குடும்பத்தினருடன் அங்குள்ள தொடக்க பள்ளியில் 3 நாட்களாக தங்கியுள்ளார். அஞ்சுவுக்கு திருமணம் செய்ய குடும்பத்தினர் முடிவு செய்திருந்த சமயத்தில் கனமழை பெய்யத்தொடங்கியதால் திருமணத்தை தள்ளி வைக்க முடிவு செய்தனர்.

    ஆனால் அவர்களுடன் நிவாரண முகாமில் தங்கியிருந்த பலர் திருமணத்தை ஏன் தள்ளிவைக்கிறீர்கள், நடத்துங்கள் என்று ஊக்கப்படுத்தினார்கள். இதுபற்றி மணமகன் ஷைஜூ குடும்பத்தினரிடம் தெரிவித்தபோது அவர்களும் சம்மதித்தனர். இதனைத்தொடர்ந்து நேற்று காலை அஞ்சு நிவாரண முகாம் அருகில் உள்ள கோவிலுக்கு பாரம்பரிய சிவப்பு பட்டு சேலை அணிந்து நடந்து சென்றார். மணமகன் ஷைஜூவும் குடும்பத்தினருடன் அங்கு வந்துசேர்ந்தார்.

    கோவிலில் எளியமுறையில் அவர்களது திருமணம் நடந்தது. பின்னர் அஞ்சு மணமகன் வீட்டுக்கு புறப்பட்டு சென்றார். இந்த திருமணம் நிவாரண முகாமில் மழை பாதிப்பினால் சோகத்தில் இருந்தவர்கள் மத்தியில் சிறிது உற்சாகத்தை ஏற்படுத்தியது.

    கேரளாவில் மழை, வெள்ளத்தால் நூற்றுக்கணக்கான திருமண விழாக்கள் தள்ளிவைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.  #KeralaFlood #ReliefCamp 
    புதுமாப்பிள்ளை மாயமானதால் இன்று நடைபெற இருந்த திருமணம் நின்று போனது. இதனால் திருமண வீடு களையிழந்து உறவினர்கள் கலைந்து சென்றனர்.

    சேலம்:

    சேலம் கிச்சிப்பாளையம் ஓந்தாப்பிள்ளைக்காட்டை சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவரது மகன் வினோத் (வயது 27).தனியார் பள்ளி ஆசிரியரான இவர் வீட்டிலும் மாணவர்களுக்கு டியூசன் எடுத்து வந்தார்.

    இந்த நிலையில் வினோத்துக்கும், கரூரை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இன்று காலை கரபுரநாதர் கோவிலில் திருமணம் நடத்தவும், மாலையில் கிச்சிப்பாளையத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    மாப்பிள்ளை வீட்டார் நேற்று காலை கரூருக்கு சென்று மணப்பெண்ணை அழைத்து வர தயாராகினர். அப்போது வெளியில் சென்ற வினோத் திடீரென மாயமானார்.அவரை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்ற போது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் வினோத்தை அக்கம் பக்கத்தில் தேடினர். எங்கு தேடியும் அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்த தகவல் அறிந்த பெண் வீட்டாரும் அதிர்ச்சி அடைந்தனர். இன்று நடைபெற இருந்த திருமணமும் நின்று போனது. திருமண வீடு களையிழந்து உறவினர்கள் கலைந்து சென்றனர்.

    வினோத்தின் தாய் இறந்து விட்டதால் அவரது பாட்டி செல்வி தான் வினோத்தை கவனித்து வந்தார். வினோத் மாயமானது குறித்து கிச்சிப்பாளையம் போலீசில் செல்வி புகார் கொடுத்தார். வினோத்தின் தந்தை ராஜமாணிக்கத்திடமும் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை என்று கூறிவிட்டார்.

    மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் வினோத்தும், ஒரு பெண்ணும் காதலித்தாக கூறப்படுகிறது. இதனால் இன்று நடைபெற இருந்த திருமணம் பிடிக்காமல் அந்த காதலியுடன் அவர் மாயமாகி இருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அது குறித்து விசாரித்து வரும் போலீசார் அவரை தொடர்ந்து தேடி வருகிறார்கள்.

    தாரமங்கலம் அருகே 2-வது திருமணத்துக்கு பெண் கொடுக்க மறுப்பு தெரிவித்த தந்தையை செருப்பால் அடித்ததால் விவசாயி கைது செய்யப்பட்டார்.
    சேலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள பள்ளிகொண்டான் பாறை பகுதியை சேர்ந்தவர் வைரமணி (வயது 33). கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்த இவருக்கு குழந்தை இல்லை.

    இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த மாரியப்பன் மகள் ரம்யா (வயது 23) என்பவரை 2-வதாக திருமணம் செய்ய பெண் கேட்டார். அப்போது மாரியப்பன் தனது மகளை 2-வதாக திருமணம் செய்து கொடுக்க விருப்பம் இல்லை என்று கூறினார்.

    உடனே வைரமணி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு உங்களது மகளை திருமணம் செய்து தருமாறு கேட்டதற்கு வயது குறைவாக இருப்பதால் திருமணம் செய்து தர முடியாது என்று கூறினீர்கள், தற்போது 2-வது திருமணத்திற்கு பெண் தர முடியாது என்று செல்கிறீர்கள் என்று ஆவேசமாக கூறினார்.

    இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றியதும் ஆத்திரம் அடைந்த வைரமணி, மாரியப்பனை செருப்பால் அடித்தார். மேலும் ரம்யாவிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளாவிட்டால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுத்தார்.

    இது குறித்து ரம்யா தாரமங்கலம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் வைரமணியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    தேனி அருகே திருமணத்திற்கு மைனர் பெண்ணை கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

    தேனி:

    தேனி அருகே வாழையாத்துப்பட்டி ஊர்காவலன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது19). இவர் போடி திருமலாபுரம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் பழகி வந்தார்.

    பின்பு திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி உள்ளார். அந்த பெண்ணை ஸ்ரீவில்லிபுத்தூர் அழைத்து சென்று திருமணம் செய்து கொண்டார்.

    பின்னர் மேட்டுப்பாளையம் அழைத்துச் சென்று வலுக்கட்டாயமாக உறவு கொண்டுள்ளார். மகளை காணாததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடி பார்த்தனர்.

    எங்கும் கிடைக்காததால் போடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மைனர் பெண்ணை கடத்தி திருமணம் செய்த ரஞ்சித்தை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செய்யாறில் 3 பெண்களை திருமணம் செய்த வாலிபர் குறித்து இரண்டாவது மனைவி போலீசில் புகார் செய்தார். போலீசார் அவரை கைது செய்தனர்.

    செய்யாறு:

    திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அடுத்த திருமணி கிராமத்தை சேர்ந்தவர் குமரேசன் (வயது 30). கட்டிட மேஸ்திரி. இவர், கடந்த 2012-ம் ஆண்டில் செய்யாறு பெரும்பள்ளம் கிராமத்தை சேர்ந்த சுதா என்ற பெண்ணை திருமணம் செய்தார்.

    சுதாவுடன் ஒரு ஆண்டு குடும்பம் நடத்தி விட்டு 2013-ம் ஆண்டு விவகாரத்து பெற்று பிரிந்து விட்டார். அதைத்தொடர்ந்து, திருமணி கிராமத்திலேயே வசிக்கும் தனது அத்தை மகள் அனிதா (22) என்ற இளம்பெண்ணை வற்புறுத்தி இனி ஒழுங்காக இருப்பதாக கூறி கடந்த 2014-ம் ஆண்டு 2-வதாக திருமணம் செய்தார்.

    தட்சிணபிரியா என்ற ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் திருமணியில் உள்ள ஒரு மெடிக்கல் ஷாப்பில் வேலை செய்துவந்த சரிதா (20) என்ற இளம்பெண்ணை கடந்த 1½ ஆண்டுக்கு முன்பு பார்த்தார். சரிதாவிடம் தனக்கு திருமணமாகவில்லை என்று கூறி காதலை சொன்னார். சரிதாவும் குமரேசனை காதலித்தார். இதையடுத்து, சரிதாவை 3-வதாக திருமணம் செய்து கொண்டார்.

    யாருக்கும் தெரியாமல் இருக்க சரிதாவை வேலூரில் குடித்தனம் வைத்தார். இந்த நிலையில், 2-வது மனைவி அனிதாவுக்கு விவகாரம் தெரியவந்தது. அவர் செய்யாறு அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து குமரேசனை கைது செய்தனர்.

    கலவை அருகே உல்லாசம் அனுபவித்து திருமணத்திற்கு மறுப்பதாக வாலிபர் மீது காதலி புகார் அளித்துள்ளார்.
    ஆற்காடு:

    ஆற்காடு அடுத்த கலவை பஜாரில் உள்ள ஒரு துணிக்கடையில் 18 வயது இளம்பெண்ணும், 22 வயது வாலிபரும் ஒன்றாக வேலை செய்தனர். அப்போது, 2 பேரும் நெருங்கி பழகியதால் காதல் மலர்ந்தது. 3 மாதம் மட்டுமே காதலித்த அந்த வாலிபரின் ஆசைக்கு அந்த இளம்பெண் இணங்கினார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இளம்பெண்ணை அந்த வாலிபர் தனிமையில் அழைத்து சென்று உல்லாசம் அனுபவித்தார்.

    இதையடுத்து, இளம் பெண்ணுடன் பேசுவதை வாலிபர் முற்றிலும் தவிர்த்தார். வருத்தமடைந்த காதலி, திருமணம் செய்து கொள்ளுமாறு வாலிபரை வற்புறுத்தினார். திருமணத்திற்கு வாலிபர் ஒத்துக் கொள்ளவில்லை. இதுப்பற்றி கலவை போலீசில் காதலன் மீது இளம்பெண் புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரித்து வருகின்றனர். #tamilnews
    திருமணம் ஆன ஆண்-பெண் கள்ள உறவு பற்றிய வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சுப்ரீம் கோர்ட்டு ஒத்திவைத்தது. #AdulteryLaw #SupremeCourt
    புதுடெல்லி:

    இத்தாலியில் வசிக்கும் இந்தியரான ஜோசப் ஷைன் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் திருமணம் ஆன ஆண்-பெண் இடையேயான கள்ள உறவில் ஆணுக்கு மட்டும் தண்டனை விதிக்க வகை செய்யும் இந்திய தண்டனைச் சட்டத்தின் 497-வது பிரிவு குறித்து கேள்வி எழுப்பி இருந்தார். மேலும் இந்த சட்டப்பிரிவை செல்லாது என்று அறிவிக்கவேண்டும் என்றும் அவர் அதில் கூறியிருந்தார்.

    இந்த வழக்கை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் நீதிபதிகள் ஆர்.எப்.நாரிமன், ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்தி வந்தது.

    நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பிங்கி ஆனந்த் தனது வாதத்தில், “திருமணம் ஆன ஆண்-பெண் இடையேயான கள்ள உறவு திருமண பந்தத்தின் புனிதத்தை அழித்துவிடும் என்பதை மனதில் கொண்டு இந்த தண்டனைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இதுபோன்ற கள்ள உறவு திருமணத்தின் புனிதத்துக்கு அச்சுறுத்தலாகவும் உள்ளது. வெளிநாட்டு கலாசாரத்துடன் இதை தொடர்புபடுத்துவது சரி அல்ல. இது இந்திய சமூக சூழ்நிலையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. எனவே இந்த தண்டனை சட்டம் தொடரவேண்டும்” என்று வாதிட்டார்.

    அப்போது நீதிபதிகள் அமர்வு, பெண்ணின் கணவரின் சம்மதத்துடன் இதுபோன்ற உறவு நடந்து அது கள்ள உறவு இல்லை என கூறப்படும் என்றால் திருமணத்தின் புனிதம் என்னவாகும்? இது பொதுவில் நல்லதுதானா? என்று கருத்து தெரிவித்தது.

    இந்த வழக்கில் நேற்றுடன் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்தன. இதைத்தொடர்ந்து வழக்கின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.  #AdulteryLaw #SupremeCourt  #tamilnews 
    பெற்றோரின் பாதுகாப்பை விட்டு வெளியே வரும் பெண்கள் அவர்களுக்கு சமமான பாதுகாப்பை தரக்கூடிய ஒருவரிடம் தங்கள்வாழ்க்கையை ஒப்படைக்க விரும்புகிறார்கள்.
    பெண்கள் தங்களை விட வயது அதிகமான ஆண்களை விரும்புகிறார்கள். தங்களை வழி நடத்தும் திறமை அவர்களுக்கு இருப்பதாக நம்புகிறார்கள். அதோடு தங்களை முழுமையாக புரிந்து கொண்டு பெருந்தன்மையோடு நடத்துவார்கள் என்றும் எதிர்பார்க்கிறார்கள்.

    தங்கள் ‘லைப் பார்ட்னர்’ தங்களை விட அனுபவமும் ஆற்றலும் மிக்கவர்களாக இருந்தால் நல்லது என்ற எண்ணம் இன்றைய இளம் பெண்களிடம் தலைதூக்கிவிட்டது. அதனால் அப்படிப்பட்டவர்களை தேடத் தொடங்கிவிட்டார்கள்.

    பெண் எதிர்பார்க்கும் புத்திசாலித்தனம் ஆணிடம் இருக்கும் பட்சத்தில் வாழ்க்கையிலும் அவரோடு இணைந்து வெற்றிகளை தக்க வைத்துக் கொண்டால் என்ன என்று சிந்திக்கத் தொடங்குகிறார்கள். இந்த சிந்தனையின் விளைவு திருமணத்தில் முடிகிறது.

    ஆண்களின் அதிகபட்ச அனுபவமும், பக்குவமும் இங்கே கணக்கில் கொள்ளப்பட்டு இந்த இல்வாழ்க்கை இணைப்பு நடந்து விடுகிறது. எப்போதும் நம்பிக்கையை அடிப்படையாக வைத்தே அன்பு வளரும். பெற்றோரின் பாதுகாப்பை விட்டு வெளியே வரும் பெண்கள் அவர்களுக்கு சமமான பாதுகாப்பை தரக்கூடிய ஒருவரிடம் தங்கள்வாழ்க்கையை ஒப்படைக்க விரும்புகிறார்கள்.

    தங்களை விட வயதில் பெரிய ஆண்களை பெண்கள் பெரிதும் மதிக்கிறார்கள். இந்த மதிப்பே நாளடைவில் நம்பிக்கையாக மாறி விடுகிறது. ஆனால் அந்த பாதுகாப்பே பல பெண்களுக்கு எமனாகவும் மாறிவிடுகிறது.
    அல் கொய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடனின் மகனான ஹம்ஜா பின் லேடன், அந்த இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரது மகளை திருமணம் செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. #OsamaBinLaden #HamzaBinLaden
    லண்டன்:

    உலகையே அச்சத்தின் உச்சியில் வைத்திருந்த பயங்கரவாத இயக்கங்களில் ஒன்று அல் கொய்தா.. இந்த இயக்கத்தின் தலைவரான ஒசாமா பின் லேடன் சர்வதேச நாடுகளால் தேடப்பட்டு வந்தார். இவர் 2011-ம் ஆண்டு அமெரிக்க ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டார்.

    அப்போது அவர் பதுங்கி இருந்த இடத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ஒசாமா எழுதிய கடிதம் ஒன்று ராணுவத்தால் கைப்பற்றப்பட்டது. அல் கொய்தா இயக்கத்தில் தனது இடத்தை அவரது மகன்களில் ஒருவரான ஹம்ஜா பின் லேடன் நிரப்புவார் என குறிப்பிடப்பட்டிருந்தார். இதையடுத்து, தலைமறைவாக இருக்கும் ஹம்ஜா பின் லேடன் சர்வதேச அளவில் தேடப்பட்டு வருகிறார்.

    இந்நிலையில், அல் கொய்தா இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரும், அமெரிக்காவில் 2001-ம் ஆண்டு நடத்தப்பட்ட தாக்குதலின் மூளையாகவும் செயல்பட்ட முகமது அட்டாவின் மகளை, ஒசாமா பின் லேடனின் மகன் ஹம்ஜா திருமணம் செய்துகொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவலை அவரது உறவினர் ஒருவர் உறுதிபடுத்தியுள்ளார். #OsamaBinLaden #HamzaBinLaden
    ×