என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 95580"
திருப்புவனம் அருகே உள்ள மேலராங்கியத்தைச் சேர்ந்தவர் மூக்குசாமி. இவருடைய மகன் கண்ணன் (வயது 21). இவர்கள் பாலமேடு முருகையா நகரில் வசித்தபோது பக்கத்து வீட்டில் வசித்த 17 வயது பெண்ணுடன், கண்ணணுக்கு பழக்கம் ஏற்பட்டது. இதனை பெண்ணின் தாயார் கண்டித்துள்ளார்.
இந்த நிலையில் வீட்டில் இருந்த பெண் திடீரென மாயமாகி விட்டார். அவரை பல இடங்களில் தேடியும் தகவல் கிடைக்கவில்லை.
அவரை கண்ணன் கடத்திச் சென்றிருக்கலாம் என பாலமேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் பால முருகன் வழக்குப்பதிவு செய்து கடத்தப்பட்ட பெண்ணை தேடி வருகிறார்.
மதுரை கோவில்பாப்பா குடிமுல்லைத் தெருவைச் சேர்ந்தவர் மீனா (30). இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர்.
வீட்டில் தனியாக இருந்த மீனா திடீரென்று மாயமானார். அவரை விக்கிரமங்கலம் அருகே உள்ள எழுவம்பட்டியைச் சேர்ந்த காசிநாதன் என்பவர் 3 பேருடன் சேர்ந்து கடத்திச் சென்றிருப்பதாக அலங்காநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
பாகூர்:
பாகூர் அருகே சோரியாங்குப்பத்தை சேர்ந்தவர் லட்சுமணன். இவர் உறுவையாறு அருகே களிச்சிகுப்பத்தை சேர்ந்த தனது தங்கை மகள் மாற்றுதிறனாளி பெண்ணை சிறுவயது முதல் வளர்த்து வந்தார். 37 வயதாகும் அந்த பெண்ணிடம் அதே பகுதியை சேர்ந்த தொழிலாளி தங்கராசு (40) என்பவர் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தைகூறி உல்லாசம் அனுபவித்து வந்தார்.
இதில் அந்த பெண் 8 மாத கர்ப்பமானார். இதையடுத்து அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளுமாறு தங்கராசுவிடம் பலமுறை லட்சுமணன் வலியுறுத்தியும் அதற்கு தங்கராசு மறுத்து வந்தார். இதையடுத்து லட்சுமணன் இதுபற்றி பாகூர் போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரன் வழக்குபதிவு செய்து தங்கராசுவை தேடிவருகிறார்.
இதற்கிடையே திருமணம் செய்வதாக மாற்றுத்திறனாளி பெண்ணை கர்ப்பமாக்கிய தங்கராசுவுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கணவன், மனைவி ஆளாளுக்கு கண்டிஷன் போட்டுக் கஷ்டப்பட்டு வாழ்வதை விட ஆரம்பத்திலிருந்தே நிதி சார்ந்த விஷயங்களில் சற்று கவனத்தைச் செலுத்தி சந்தோஷமாகக் குடும்பம் நடத்த சில முக்கியமான விஷயங்களைப் பார்ப்போம்.
1. திருமண வாழ்க்கையைச் சந்தோஷமாக அனுபவிக்க வேண்டும் என்பதற்காக வாழ் நாள் முழுவதும் கஷ்டப்படும் சூழ்நிலைக்குச் சென்று விடாதீர்கள். ஒவ்வொரு மாதமும் வருமானத்திற்கு அதிகமாகச் செலவு செய்யாதீர்கள். உங்கள் வருமானம் என்னவோ அதை முதலில் உணர்ந்து அந்த வரம்பிற்குள் வாழக் கற்றுக்கொள்ளுங்கள்.
2. அவசரகாலம் என்பது எல்லோருக்குமே வரக்கூடிய ஒன்றுதான். இதில் ஏழை, பணக்காரன் என எந்தவிதமான பாகுபாடும் இல்லை. ஆகையால் வேலை இழப்பு, அவசர மருத்துவ சிகிச்சை என எந்த ஒரு அவசரத் தேவையாக இருந்தாலும் 'எமர்ஜென்சி ஃபண்ட்' அதாவது அவசரத் தேவைக்கான முதலீட்டை மேற்கொள்ளத் திட்டமிடுங்கள்.
3. உங்கள் குழந்தைகளின் எதிர்கால கல்விச் செலவு மற்றும் திருமணத்திற்காக ஆரம்பத்திலிருந்தே சிறுக சிறுக சேமிக்கத் திட்டமிடுங்கள். இதைப்போல வீடு வாங்கும் திட்டம் என எதுவாக இருந்தாலும் கணவன், மனைவி இருவரும் ஆலோசித்து சேமிக்கத் துவங்குங்குகள்.
4. திருமணத்திற்கு முன் உங்கள் நண்பர்களிடமோ அல்லது உறவினர்களிடமோ நீங்கள் அடிக்கடி கடன் வாங்கி இருக்கலாம்; அதைச் சரியாக திருப்பிச் செலுத்தியும் இருப்பீர்கள். ஆனால், திருமணத்திற்குப் பிறகாவது எதற்கெடுத்தாலும் கடன் என்ற நிலையைத் தவிருங்கள்; கடன் வாங்காமல் வாழ்க்கையை இன்பகரமாக வாழ பழகிக்கொள்ளுங்கள்.
5. திருமணத்திற்கு முன் நீங்கள் ப்ளேபாயாக கூட இருந்திருக்கலாம். ஆனால், திருமணத்திற்கு பின்பும் நீங்கள் நிதி சார்ந்த விஷயங்கள் எதுவும் தெரியாமல் ஸ்கூல் பாயாக இருந்தால் சற்று கடினமே. ஆகையால் நிதி சார்ந்த விஷயங்கள் எதுவாக இருந்தாலும் அதை உன்னிப்பாக கவனிக்கத் தொடங்குங்கள். தினமும் எவ்வளவு செலவு செய்கிறோம்; எதற்காகச் செலவு செய்கிறோம் என்பதைக் குறித்துக்கொள்ளுங்கள். தேவையற்ற செலவுகளைத் தவிருங்கள். நிதி சார்ந்த விஷயங்களில் உங்களுக்குத் தேவையானதை தேடித் தெரிந்து கொள்ளுங்கள். குறிப்பாக நிதி சார்ந்த புத்தகங்களை இன்றிலிருந்தாவது படிக்கத் துவங்குங்கள்.
6. கணவன், மனைவி இருவரும் வாழ்க்கையின் இறுதி தருவாயிலும் சந்தோஷமாக வாழ்க்கை நடத்த அவசியம் செய்ய வேண்டியது ஓய்வுக்காலத்திற்கான திட்டமிடுதலே. ஆகையால் திருமணம் முடிந்த ஆண்டே ஒவ்வொரு மாதமும் உங்களுடைய மாதாந்திர சம்பளம் எதுவாக இருந்தாலும் உங்கள் பணத்தை சிறிது சிறிதாக ஒய்வுக்காலத்திற்காக சேமிக்கத் திட்டமிடுங்கள். இல்லையெனில் இது சார்ந்த முதலீட்டுத் திட்டங்களிலோ அல்லது மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களிலோ முதலீடுகளை மேற்கொள்ள ஆரம்பியுங்கள்.
7. இன்றைய சூழ்நிலையில் திருமணத்தின் போது மணமக்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஓரளவு தயாராவதைப்போல, திருமணத்திற்குப் பின் இருவரும் நிதி சார்ந்த விஷயங்களுக்கும் தயார் ஆவது நல்லது. ஏனெனில் மணமக்கள் இருவரும் வெவ்வேறு சூழலில் வளர்ந்தவர்கள், வாழ்ந்தவர்கள். திருமண வாழ்க்கையில் விட்டுக்கொடுத்து வாழ்வதில்தான் வாழ்க்கை இருக்கிறது என்பார்கள். அதைப்போல நிதி சார்ந்த விஷயங்களில் இருவரில் ஒருவாரது இதை உணர்ந்தால்தான் வாழ்க்கை நிம்மதியாகவும், சந்தோஷமாகவும் இருக்கும்.
மண வாழ்க்கை முறிய ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஆனால், கணவன், மனைவி இடையே உறவு நீடிக்க எல்லையற்ற அன்பு காட்டுவதைப்போல நிதி சார்ந்த விஷயங்களில் இருவரும் கவனமாகவும், கட்டுப்பாட்டுடனும் இருப்பது மிக முக்கியம்.
நிச்சயதார்த்தம் என்ற இந்த சடங்கு நாம் இருவரும் (ஆண்- பெண்) திருமணம் செய்துகொள்வதற்கு நிச்சயிக்கப்பட்டு விட்டோம் என்பதை உணர்த்துகிறது.
“நிச்சயதார்த்தம் டூ திருமணம்” இந்த இடைப்பட்ட காலம் நிச்சயிக்கப்பட்ட இருவரும், ஒருவரையொருவர் புரிந்துகொண்டு வெற்றிகரமாக திருமண வாழ்வில் அடியெடுத்து வைக்க அச்சாரமிடுகிறது.
ஆனால், இந்த நேரத்தில் வரம்புமீறும் பட்சத்தில் உறவுகள் சீர்குலையவும் வாய்ப்பிருக்கிறது. உதாரணத்திற்கு அளவுக்கதிமாக மொபைல்களில் உரையாடுவது, டேட்டிங் செல்வது, அளவுக்கதிமான அன்பளிப்புகளை பரிமாறிக்கொள்வது.
அளவுக்கதிகமாக மொபைல்களில் உரையாடுவதன் மூலம், இக்காலத்து பெண்கள் மற்றும் ஆண்களின் மனது உடலுறவில் ஈடுபடுவதற்கு துடிக்கிறது.
திருமணத்திற்கு முன்னான உறவு, எதிர்கால திருமண வாழ்க்கையில் பிரச்சினைகளை ஏற்படுத்திவிடக்கூடும், இதில் ஆண்கள் வரம்பு மீறினாலும், பெண்கள் தான் தங்களை காப்பாற்றிக்கொள்ள ஒழுக்கமாக நடந்துகொள்ள வேண்டும்.
ஏனெனில் இருபாலரும் தவறு செய்யும் பட்சத்தில், இதில் அதிகமாக பாதிக்கப்படுவது பெண்கள்தான். நிச்சயதார்த்தத்துக்குப் பின், திருமணத்துக்கு முன் என்ற இடைவெளியில் அதிகம் நெருக்கமும் தவிர்க்கப்பட வேண்டியது. பேசுவது, சந்திப்பது என்றபோதிலும், அதை ஆவணமாக மாற்றும் சாத்தியங்களை தவிர்ப்பதும் புத்திசாலி பெண்ணுக்கு அழகு.
குறிப்பாக, சேர்ந்த மாதிரி புகைப்படங்கள் எடுத்துக் கொள்வதை தவிர்க்கலாம். தனித்த படங்களை பகிர்ந்து கொள்வதிலும்கூட ஆபத்து இருக்கிறது. பேச்சு, நெருக்கம், பகிர்வு ஆவணம் அனைத்திலும் எச்சரிக்கையும் முன் யோசனையும் அவசியம் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் பகுதியை சேர்ந்த 26 வயது பெண்ணை திருமணம் செய்வதாக கூறி எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவர் கற்பழித்ததாகவும், பின்னர் திருமணம் செய்ய அவர் மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் அந்த பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அந்த பெண்ணின் தந்தை போலீசில் அளித்த புகாரில் ‘எனது மகளை திருமணம் செய்வதாக கூறி எல்லைபாதுகாப்பு படை வீரர் கற்பழித்து விட்டார். அவரிடம் திருமணம் செய்ய எனது மகள் கேட்டபோது, அதற்கு அவர் எனது மகளுடன் இருந்த வீடியோ படங்களை இன்டர்நெட் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக கூறி மிரட்டி உள்ளார். இதனால் தான் என் மகள் தற்கொலை செய்து கொண்டார்’ என குறிப்பிட்டு உள்ளார்.
இதுதொடர்பாக விசாரணை நடத்தப்படும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
நெல்லை மாவட்டம் மூலக்கரைப்பட்டியைச் சேர்ந்தவர் திருமலைநம்பி (வயது 45), தொழிலாளி.
குமரி மாவட்டம் அஞ்சு கிராமத்திற்கு நேற்று திருமலைநம்பி வந்தார். அங்குள்ள டாஸ்மாக் கடை அருகே அவர் நின்று கொண்டிருந்தார். அப்போது திருமலைநம்பியின் உறவினர் செம்புக்குட்டியும், அவரது மகன் சுயம்புலிங்கம் (26) ஆகியோர் அங்கு வந்தனர்.
அவர்களுக்கு இடையே குடும்ப பிரச்சினை தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் வாக்குவாதம் முற்றி தகராறு மூண்டது.
இதில் செம்புக்குட்டியும், அவரது மகன் சுயம்புலிங்கமும் சேர்ந்து திருமலைநம்பியை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். 13 இடங்களில் வெட்டுப்பட்ட திருமலை நம்பி ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். சிறிது நேரத்தில் அதே இடத்தில் அவர், துடி துடித்து இறந்தார்.
இதற்கிடையே சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அவர்களை கண்டதும் செம்புக்குட்டியும், அவரது மகன் சுயம்புலிங்கமும் தப்பியோடி தலைமறைவாகி விட்டனர்.
அஞ்சுகிராமத்தில் தொழிலாளி ஒருவர் கோரமான முறையில் கொலை செய்யப்பட்டது பற்றி அறிந்ததும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். கன்னியாகுமரி டி.எஸ்.பி. முத்துபாண்டியன், சுசீந்திரம் இன்ஸ்பெக்டர் செல்வம், அஞ்சுகிராமம் போலீசாரும் சம்பவ இடத்திற்கு சென்று அதிரடி விசாரணை நடத்தினர்.
மேலும் திருமலைநம்பியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் அவரை கொலை செய்தவர்களை தேடும் பணியை முடுக்கி விட்டனர்.
இதில், சுயம்புலிங்கத்தின் தந்தை செம்புக்குட்டியை போலீசார் பிடித்தனர். பின்னர் அவரை அஞ்சு கிராமம் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது அவர், திருமலை நம்பியை கொலை செய்தது ஏன்? என்பது பற்றி பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். இதுபற்றி போலீசார் கூறியதாவது:-
திருமலைநம்பியும், நானும் உறவினர்கள். அவரது மகளை, எனது மகனுக்கு திருமணம் செய்து வைக்க விரும்பினார். இதற்கு நான், மறுப்பு தெரிவித்தேன். ஆனால் திருமலைநம்பி தொடர்ந்து இதனை வலியுறுத்தி வந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு எனது மகனும், மகளும் மூலக்கரைப்பட்டி சென்றனர். அவர்களிடமும் இத்திருமணம் குறித்து திருமலைநம்பி பேசி உள்ளார். அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் எனது மகனை தாக்கினார். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. நேற்று மாலையில் அஞ்சு கிராமம் டாஸ்மாக் கடை அருகே திருமலைநம்பி நிற்பதை பார்த்தேன். அவரிடம் இதுபற்றி கேட்டேன். அப்போது எங்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் திருமலைநம்பி என்னை தாக்கினார். அந்த நேரம் எனது மகன் சுயம்புலிங்கம் அங்கு வந்தார். அவரும் திருமலைநம்பியை தட்டிக் கேட்டார். இதில் ஏற்பட்ட தகராறில் அவரை அரிவாளால் வெட்டினோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்ததாக போலீசார் கூறினர்.
திருமலைநம்பி கொலையில் தலைமறைவாக உள்ள சுயம்புலிங்கத்தை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர். #tamilnews
இதுபோன்ற விரக்தி எதிர்கால தம்பதிகளின் வாழ்க்கையில் ஏற்படாமல் இருக்க, ‘திருமணத்திற்கு தயாராக இருப்பவர்கள் எப்படிப்பட்ட இணையை தேர்ந்தெடுக்கவேண்டும்? தனது இணையை பற்றி தெரிந்துகொள்ள என்னவெல்லாம் செய்ய வேண்டும்? இறுதி முடிவை எப்படி எடுக்கவேண்டும்?’ என்பதை பற்றி எல்லாம் இங்கு காண்போம்!
திருமணத்திற்கு தயாராக இருப்பவர்கள் இப்போதே நன்றாக ஆலோசித்து சரியான இணையை தேர்ந்தெடுத்தால் அவர்களது எதிர்கால மணவாழ்க்கை சிறப்பாக அமையும். விவாகரத்துக்களும் குறையும். அதை கருத்தில்கொண்டு திருமண விஷயத்தில் பொதுவாக நடக்கும் தவறுகளையும், அதை சரியாக்கும் முறைகளையும் பார்ப்போம்!
தவறான சிந்தனை:
‘தனக்காக தேர்ந்தெடுத்திருக்கும் இணையை தன்னால் முழுமனதோடு தற்போது ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றாலும், திரு மணத்திற்கு பிறகு அவரை திருத்திவிடலாம் என்று நினைக்கிறேன்’ என்ற திருமண சிந்தனை தவறானது.
சரியான வழிமுறை:
இணையின் பேச்சு, செயல், நடத்தை போன்ற குணாதிசய குறைபாடுகள் இருந்தால், திருமணத்திற்கு பின்பு அவரை இயல்பான நடத்தைக்கு கொண்டு வருவது சிரமம். அதனால் அப்படிப்பட்டவரை திருமணம் செய்துகொள்ள முன்வராதீர்கள். திருமண பந்தம் ஆயுள் முழுக்க நீடிக்கவேண்டியது. அதனால் அதில் அவசர முடிவுகளை எடுக்கவேண்டாம். பெற்றோர்களில் சிலர், மகளை ஒரு சுமைபோல் கருதிக்கொண்டு ‘அவளுக்கு திருமணமானால்தான் நிம்மதி பெருமூச்சுவிடுவேன்’ என்பதுபோல் தீவிரம் காட்டுகிறார்கள். அத்தைகய தீவிரம் பிரச்சினைகளை உருவாக்கும் என்பதை உணருங்கள். அதிவேக(பயண)ம் ஆபத்து என்பது சாலை விதிக்கு மட்டுமல்ல மணவாழ்க்கை விதிக்கும் பொருத்தமானது. உங்களுக்கு பிடிக்காதவரை பெற்றோர் தேர்ந்தெடுத்தால் தைரியமாக ‘நோ’ சொல்லுங்கள்.
உங்கள் விருப்பப்படி இணை தேடும் முயற்சி நடந்துகொண்டிருப்பதை ஒவ்வொரு கட்டத்திலும் கண் காணியுங்கள். தேர்ந்தெடுக்கப்படுகிறவர் உங்களுக்கு பிடித்தமானவராக தெரிகிறார் என்றால், திருமண முடிவினை எடுப்பதற்கு முன்னால் அவரோடு பேசிப்பாருங்கள். காதல் திருமணத்திற்கு முயற்சிக்கிறீர்கள் என்றால் ஜாதி, மதம், பொருளாதார சூழல் போன்ற பல விஷயங்கள் இன்று அல்லது நாளை பிரச்சினைக்குரிய விஷயங்களாக மாறும். உங்கள் இருவரிடமும் வற்றாத அன்பும், நம்பிக்கையும், மரியாதையும் இருந்தால்தான் அதில் இருந்து உங்களால் மீளமுடியும். எத்தகைய பிரச்சினைகள் வந்தாலும் கடைசி வரை ஒருங்கிணைந்து சமாளிப்போம் என்ற நெஞ்சுரம் இருந்தால் மட்டும் காதலை, கல்யாணமாக்குங்கள். ‘தெரியாமல் காதலில் சிக்கிக்கொண்டோமே!’ என்ற எண்ணம் இருந்தால், ஒருபோதும் திருமணத்திற்கு சம்மதிக்காதீர்கள்.
தவறான சிந்தனை:
‘எனக்கு தலைக்குமேல் வேலை இருந்துகொண்டிருந்தது. நான் மனதளவிலும், உடலளவிலும் திருமணத்திற்கு தயாராகவில்லை. ஆனாலும் என் பெற்றோர் கட்டாயப்படுத்தினார்கள். அவர்களது விருப்பத்திற்கு அவர்களே தேர்ந்தெடுத்து தந்த துணை இது. அதுதான் இந்த பிரச்சினைக்கு காரணம்’ என்று, ஆணோ, பெண்ணோ சொல்லும் சூழ்நிலை எதிர்காலத்தில் உருவாகுவது தவறானதாகும்.
சரியான வழிமுறை:
இன்றைய இளைஞர்களுக்கும், இளம்பெண்களுக்கும் எத்தனையோ வேலைகள் இருக்கலாம். அதுபோல் திருமணத்தையும் ஒரு வேலையாக எடுத்துக்கொண்டு, நடப்பது நடக்கட்டும் என்று விட்டுவிடாதீர்கள். திருமணத்திற்குரிய முக்கியத்துவத்தைக் கொடுங்கள். அதற்காக மனதளவிலும், உடல் அளவிலும் தயாராகுங்கள். திருமணத்தை பற்றிய தவறான கருத்துக்களோ, தாம்பத்ய தொடர்பு பற்றி தவறான எண்ணங்களோ, பெண் என்றாலே மோசமானவள் (அல்லது ஆண் என்றாலே மோசமானவர்) என்ற முரண்பாடான எண்ணத்தில் ஊறிப்போயிருந்தாலோ அவசரப்பட்டு திருமணத்திற்கு சம்மதிக்காதீர்கள். தெளிவடைந்து, உங்கள் எண்ணங்களை சரிசெய்த பின்னர் திருமணம் செய்துகொண்டால்போதும். அதுபோல் உடல் கோளாறுகள் ஏதேனும் இருப்பதாக அறிந்தால், அதற்குரிய மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்று, திருப்தியடைந்த பின்பு திருமணம் செய்து கொள்ள முன்வாருங்கள்.
திருமணத்தில் ஒரு ஆணும்- பெண்ணும் மட்டும் இணைவதில்லை. இருவேறு சூழ்நிலைகளில் இருந்து இரண்டு குடும்பங்கள் அந்த உறவின் மூலம் இணைகின்றன. கணவரை மட்டுமின்றி அவரது குடும்பத்தினரையும் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ள பெண் தயாராகவேண்டும். அதுபோல் மனைவியை மட்டுமின்றி அவரது குடும்பத்தினரையும் ஏற்றுக்கொள்ள கணவரும் தயாராகவேண்டும். ஆண் தனது அம்மாவுக்கும், சகோதரிக்கும் எவ்வளவு உரிமைகளை கொடுப்பாரோ அதுபோன்ற உரிமைகளை மனைவிக்கு வழங்க முன்வரவேண்டும். திருமண வாழ்க்கை தோல்வியடைந்தால் அந்த பழியை பெற்றோர் தலையில் சுமத்தலாம் என்ற எண்ணத்தில், பொறுப்பில்லாமல் திருமண முடிவு எதையும் எடுத்துவிடாதீர்கள்.
தவறான சிந்தனை:
பெரும்பாலான ஆண்களும், பெண்களும் வேலைக்கு செல்பவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு வேலை பார்க்கும் இடத்திலோ, வெளியிலோ பல்வேறுவிதமான நட்புகள் இருக்கும். அவைகளை அப்படியே திருமணத்திற்கு பின்பும் தொடரலாம் என்று நினைப்பது தவறு.
சரியான வழிமுறை:
நீங்கள் திருமணம் செய்துகொள்ள தயாராகும்போதே, ‘எதிர் காலத்தில் பிரச்சினைகளை உருவாக்கக்கூடும்’ என்று நினைக்கும் உறவுகளுக்கு முற்றுப்புள்ளிவைத்துவிடுங்கள். அலுவலகத்தில் இருப்பவர்களிடம் தொழில்ரீதியான தொடர்பினை மட்டும் வைத் திருங்கள். அதற்கு அப்பால் எந்த உறவையும் கொண்டு செல்ல முயற்சிக்காதீர்கள். கணவரிடம் இருந்து மனைவிக்கு அன்பு கிடைக்காவிட்டாலோ, மனைவியிடம் இருந்து கணவருக்கு அன்பு கிடைக்காவிட்டாலோ அதை அலுவலகத்தில் உள்ள மூன்றாம் நபரிடம் இருந்து பெறும் முயற்சிகளில் ஈடுபடக்கூடாது. அந்த அன்பை வீட்டிலே பெறும் வழியை பற்றி மட்டுமே சிந்திக்கவேண்டும். உடன் பணிபுரிபவர்களிடமிருந்து உதவிகள் பெறலாம். ஆனால் அது எல்லையற்றதாக இருந்தால், பிற்காலத்தில் தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்கும் என்பதை இப்போதே புரிந்துகொண்டு எல்லையை வகுத்திடுங்கள். அலுவலக பிரச்சினைகளை அங்கேயே பேசி முடித் திடுங்கள். வீடு வரை கொண்டு செல்லவேண்டாம். வீட்டில் இருந்துகொண்டு அலுவலக நண்பர்களிடம் அளவுக்கு அதிகமாக பேசும் பழக்கம் உங்களிடம் இருந்தால், நீங்கள் திரு மணத்திற்கு தயாராகும்போதே அதற்கும் முற்றுப்புள்ளிவைத்திடுங்கள். திருமணமான சில மாதங்களிலே பல தம்பதிகள் விவாகரத்தை நோக்கிச்செல்ல இந்தவித அரட்டை காரணமாக இருந்துகொண்டிருக்கிறது.
ஆணும், பெண்ணும் திருமணத்திற்கு முன்பு வாழும் வாழ்க்கை வேறு. திருமணத்திற்கு பின்பு வாழவேண்டிய வாழ்க்கை வேறு. திருமணத்திற்கு முன்பு பேஸ்புக்கிலும், வாட்ஸ்அப்பிலும் எவ்வளவு நேரமானாலும் மூழ்கி கிடக்கலாம். திருமணத்திற்கு பின்பும் அதே நிலை தொடர்ந்தால், அது மணவாழ்க்கையை மங்கவைத்துவிடும். அதனால் இப்போதே அதை குறைத்துக்கொள்ள முன்வாருங்கள். உங்கள் இணையை மனதாலும், உடலாலும், உணர்வுகளாலும், அறிவாலும் மகிழ்ச்சிப்படுத்தவேண்டிய கடமை திருமண பந்தத்தில் இணையும் அனைவருக்கும் தேவைப்படுகிறது. அவை இருதரப்பில் இருந்தும் குறைவின்றி கிடைத்தால் மட்டுமே மணவாழ்க்கையை காப்பாற்றி, மகிழ்ச்சியாக வாழமுடியும். இதை மனதில் வைத்துக்கொண்டு மணவாழ்க்கைக்குள் அடியெடுத்து வையுங்கள்.
- விஜயலட்சுமி பந்தையன்.
மார்த்தாண்டம் அருகே 16 வயது சிறுமியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் போது, அதிகாரிகள் குறுக்கிட்டு மணப்பெண்ணை பிரித்துச் சென்றதால், அவமானம் அடைந்த புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
குமரி மாவட்டம் மார்த்தாண்டம் பாறவிளையை சேர்ந்தவர் வினு (வயது 31), கட்டிட தொழிலாளி. இவருக்கும், தக்கலை அருகே கோழிப்போர்விளையை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் செய்ய இரு வீட்டாரும் பேசி முடிவு செய்தனர். அதன்படி, நேற்று முன்தினம் காலையில் இருவருக்கும் மண்டைக்காட்டில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் நடந்தது.
மாலையில், மார்த்தாண்டத்தில் உள்ள மணமகன் இல்லத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி அங்கு மேடையில் மணமக்கள் அமர்ந்திருந்தனர். உறவினர்களின் வருகையால் திருமண வீடு களைகட்டியிருந்தது.
இந்தநிலையில், மணப்பெண்ணுக்கு 16 வயதே ஆவதாக மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரி குமுதாவுக்கு தகவல் கிடைத்தது. உடனே, அதிகாரி குமுதா மற்றும் சமூக நல அதிகாரி பியூலா, சைல்டு லைன் அமைப்பினர் திருமண வீட்டுக்கு விரைந்து சென்றனர். அங்கு மணப்பெண்ணிடம் விசாரணை நடத்திய போது அவருக்கு 16 வயதே ஆவது தெரிய வந்தது. உடனே திருமண வரவேற்பு நிகழ்ச்சியை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு திரண்டிருந்த உறவினர்கள் இடையே பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து, வினுவையும், சிறுமியையும் நாகர்கோவிலுக்கு அழைத்து சென்றனர். சிறுமியிடம் விசாரணை நடத்திய போது, அவர் தான் 10-ம் வகுப்பு வரை படித்து இருப்பதாகவும், தொடர்ந்து படிக்க விரும்புவதாகவும் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதற்கு நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர், அந்த சிறுமி நாகர்கோவிலில் உள்ள அரசு காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மேலும், வினுவுக்கு அறிவுரை கூறி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
அதன் பின்பு நேற்று முன்தினம் இரவு வினு மிகவும் சோகத்துடன் வீட்டுக்கு வந்தார். திருமண வீடு களை இழந்து போனது. வினு தனது அறைக்கு தூங்க சென்றார்.
நேற்று காலையில் நீண்ட நேரமாகியும் அவரது அறையின் கதவு திறக்கப்படவில்லை. இதனால், சந்தேகம் அடைந்த பெற்றோர் அறையின் கதவை தட்டினர். ஆனால், உள்ளிருந்து எந்த சத்தமும் வரவில்லை.
கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அங்கு அனைவருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது. மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்த நிலையில் வினு பிணமாக தொங்கி கொண்டிருந்தார். இதை பார்த்த பெற்றோர் கதறி அழுதனர். திருமண நாள் இரவில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்த சம்பவத்தால் உறவினர்கள் சோகத்தில் மூழ்கினர்.
இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, வினுவின் உடலை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், திருமண வரவேற்பின் போது அதிகாரிகள் தலையிட்டு மணப்பெண்ணை பிரித்துச் சென்றதால் ஏற்பட்ட அவமானத்தால் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்திருக்கலாம் என தெரியவந்தது.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். நேற்று முன்தினம் மணக்கோலத்துடன் கலகலப்பாக காணப்பட்ட வினு, தனது அறையில் விபரீதமாக தற்கொலை செய்துகொண்டு மறுநாள் காலையில் பிணமாக கிடந்த காட்சி பரிதாபத்தை ஏற்படுத்துவதாக அமைந்திருந்தது.
குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள கோழிப்போர்விளை பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவருக்கும் மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த 29 வயது வாலிபர் ஒருவருக்கும் மார்த்தாண்டத்தில் திருமணம் நடைபெறுவதாக குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரி குமு தாவுக்கு தகவல் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து அதிகாரி குமுதா, சமூக நல அதிகாரி பியூலா, சைல்டு லைன் அமைப்பினர், ஆள் கடத்தல் தடுப்பு போலீசார் ஆகியோருடன் மார்த்தாண்டத்திற்கு சென்றார். அங்கு அவர்கள் விசாரணை நடத்திய போது அந்த சிறுமிக்கு காலையிலேயே திருமணம் நடைபெற்றதும், தொடர்ந்து திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்ததும் தெரியவந்தது.
அங்குச் சென்று அதிகாரிகள் இரு வீட்டாரிடமும் விசாரணை நடத்தினார்கள். அப்போது அந்த பெண்ணுக்கு 17 வயது தான் ஆவது உறுதியானது.
10-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த அவருக்கு பெற்றோர் திருமணம் செய்ததும் தெரிய வந்தது. திருமண வயது ஆவதற்கு முன்பே அந்த சிறுமிக்கு திருமணம் செய்தது சட்டப்படி தவறு என்பதால் இது பற்றி இரு வீட்டாரிடமும் அதிகாரிகள் கூறினார்கள். சிறுமிக்கு 18 வயது நிரம்பிய பின்னர் தான் திருமண வாழ்க்கையை தொடர வேண்டும் என்றும் கூறினார்கள்.
அதைத் தொடர்ந்து திருமண வரவேற்பு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக திரண்டிருந்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பிறகு அந்த சிறுமியையும், வாலிபரையும் நாகர்கோவிலுக்கு அழைத்து வந்து அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது அந்த சிறுமி தனது குடும்ப சூழ்நிலை காரணமாக பெற்றோர் வற்புறுத்தியதால் திருமணத்திற்கு தான் சம்மதித்ததாக கூறினார். மேலும் தனக்கு தொடர்ந்து படிக்க ஆசை இருப்பதாகவும் தெரிவித்தார்.
விசாரணைக்கு பிறகு அந்த சிறுமியை நாகர்கோவிலில் உள்ள அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர். அந்த வாலிபரை கடுமையாக எச்சரித்த அதிகாரிகள் அவரிடம் எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் இன்று காலை மாவட்ட சமூக நல அதிகாரி பியூலா முன்பு அந்த சிறுமி 2-வது நாளாக ஆஜர்படுத்தப்பட்டார். அந்த வாலிபரும் அங்கு வரவழைக்கப்பட்டிருந்தார். அவர்களிடம் விசாரணை நடத்திய பிறகு அந்த சிறுமியை மீண்டும் பள்ளிக்கூடத்தில் சேர்த்து படிப்பை தொடர வைக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
புதுச்சேரி:
வில்லியனூர் கணுவாப் பேட்டை புதுநகர் 7-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகள் கவிதா (வயது 24). இவருடன் அரியாங்குப்பம் அருகே தமிழக பகுதியான சின்ன இரிசாம் பாளையத்தை சேர்ந்த பலராமன் மகன் அய்யனாரப்பன் (27) என்பவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பழக்கமானார். நாளடைவில் இது காதலாக மாறியது.
அப்போது திருமணம் செய்து கொள்வதாக கூறி கவிதாவிடம் இருந்து சிறுக, சிறுக 18 பவுன் நகையை அய்யனாரப்பன் வாங்கி சென்றார்.
இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு திருமணம் செய்து கொள்ளுமாறு அய்யனாரப்பனிடம் கவிதா வற்புறுத்திய போது, அய்யனாரப்பன் திருமணம் செய்ய மறுத்து விட்டார். இதைத்தொடர்ந்து நகையை திருப்பி கேட்டபோது, கவிதாவை கொலை செய்து விடுவதாக அய்யனாரப்பன் மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கவிதா வில்லியனூர் போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலய்யன் விசாரணை நடத்தி அய்யனாரப்பன் மீது மோசடி, கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளில் வழக்குபதிவு செய்து அவரை தேடி வருகிறார்.
கிருஷ்ணகிரி:
அ.தி.மு.க. சார்பில் மறைந்த முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் 70-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி கிருஷ்ணகிரி விளையாட்டு மைதானம் அருகே அமைக்கப்பட்டு இருந்த எம்.ஜி.ஆர்.அரங்கில் இன்று 90 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தப்பட்டது.
இந்த திருமணங்களை அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்- அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சரும், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தாலியை எடுத்து கொடுத்து நடத்தி வைத்தனர்.
இந்த திருமண விழாவுக்கு முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளருமான கே.பி. முனுசாமி தலைமை தாங்கினார். துணை ஒருங்கிணைப்பாளர் ஆர்.வைத்திலிங்கம் எம்.பி., அசோக்குமார் எம்.பி. மனோரஞ்சிதம் நாகராஜ் எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் மணமக்களை வாழ்த்தினார்கள்.
திருமணம் செய்த 90 ஜோடிகளில் அனைத்து சமூகத்தை சேர்ந்தவர்களும் அடங்குவார்கள். மணமக்களுக்கு அ.தி.மு.க. சார்பில் 4 கிராம் தங்கத்தாலி, குத்துவிளக்குகள், காமாட்சி விளக்கு, கட்டில், மெத்தை, தலையணை, சமையல் பாத்திரங்கள், தட்டுகள், பீரோ, குடங்கள், அண்டா, பூஜை சாமான்கள் ஆகியவை உள்ளிட்ட 35 வகையான சீர் வரிசை பொருட்களாக மணமக்களுக்கு வழங்கப்பட்டன.
மேலும் அவர்களுக்கு ஒரு மாதத்திற்கான மளிகை பொருட்களும் வழங்கப்பட்டது. மணமகனுக்கு பட்டு வேட்டியும், பட்டு சட்டையும், மணமகளுக்கு பட்டுச் சேலை மற்றும் துணிகளும் வழங்கப்பட்டன. #edappadipalanisamy #opanneerselvam
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்