என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 95580"
பொதுவாக, வடமாநிலங்களில் சில திருமணங்கள் வினோத காரணங்களுக்காக மேடையிலேயே நின்றுபோகும் நிகழ்வு அவ்வப்போது நடக்கிறது. உதாரணமாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் மாப்பிள்ளை வீட்டாருக்கு ரசகுல்லா இல்லை என்பதற்காக நிறுத்தப்பட்ட கல்யாணம், ஐஸ் கிரீம் வைக்காததால் ஏற்பட்ட தகராறில் மண்டை உடைப்பு என திருமணம் நிறுத்தப்படுவதற்கான காரணங்கள் நீள்கின்றன.
இந்த வரிசையில், பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் நடந்த திருமணத்தின்போது மணமேடையில் இருந்த மாப்பிள்ளை மின்னலை பார்த்து பயந்து, வினோதமாக நடந்து கொண்டார். இதனைக் கண்ட மணப்பெண்ணோ மேடையிலேயே மாப்பிள்ளை வேண்டாம் எனக்கூறி திருமணத்தை நிறுத்தியுள்ளார்.
இதனால் இரு வீட்டாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, மாப்பிள்ளை வீட்டார் சிலர் மீது வழக்கும் பதியப்பட்டுள்ளது. சில வினாடிகள் தோன்றி மறைந்த மின்னல் மணமகனுக்கு வாழ்நாள் முழுவதும் மறக்க முடியா நினைவாக மாறிவிட்டது.
தேவதானப்பட்டி:
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் நயினார்முகமது. இவரது 3-வது மகள் சித்திகா(வயது19). இவருக்கும் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள வலையபட்டியை சேர்ந்த ஆதம் என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
ரம்ஜான் பண்டிகைக்காக சித்திகா சொந்த ஊருக்கு சென்றார். அதன்பின்பு தாய் வீட்டிலேயே இருந்து வந்தார்.
சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு சித்திகாவை கொண்டு சென்றபோது அவர் ஏற்கனவே இறந்த விபரம் தெரியவந்தது. இதுகுறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
திருமணமாகி 3 மாதங்களே ஆவதால் ஆர்.டி.ஓ மேல்விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பேரையூர்:
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள மேலஉப்பிலிக்குண்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சிவபாலன். இவரது மகன் ரஞ்சித்குமார் (வயது27). 8-ம் வகுப்பு படித்துள்ள இவர் கட்டிட வேலைபார்த்து வந்தார்.
இவருக்கும், மைக்குடி கிராமத்தைச் சேர்ந்த சின்னக்கருப்பு மகள் சித்ரா (23) என்பவருக்கும் கடந்த மாதம் 25-ந்தேதி திருமணம் நடந்தது. சித்ராதேவி பட்டப் படிப்பு முடித்துள்ளார்.
திருமணமான நாளில் இருந்து இருவருக்கும் கருத்து வேறுபாடு இருந்ததாக கூறப்படுறது. இதனால் ரஞ்சித்குமார் கடந்த சில வாரமாகவே விரக்தியுடன் காணப்பட்டார். வேலைக்கும் சரியாக செல்லவில்லை.
சம்பவத்தன்று வாழ்க்கையில் விரக்தி அடைந்த ரஞ்சித்குமார் விஷம் குடித்துவிட்டு பரமக்குடிக்கு அரசு பஸ் சில் சென்றார். பஸ்சில் மயங்கி கிடந்த அவரை சக பயணிகள் பரமக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு நிலைமை மோசமானதால் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ரஞ்சித்குமார் பரிதாபமாக இறந்தார்.
திருமணமான ஒரு மாதத்தில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து கூடக்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கன்னியாகுமரி:
நாகர்கோவில் அருகே தெங்கம்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 21). கூலித்தொழிலாளி. இவர் கோவளம் டி.சி. நகர் பகுதிக்கு வேலைக்காகச் சென்றிருந்தார். அப்போது அந்த பகுதியைச் சேர்ந்த 15 வயது பெண்ணுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. அந்த பெண்ணை ராஜேஷ் காதலித்தார்.
இந்த தகவல் அறிந்த அந்த பெண்ணின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த பெண்ணை அழைத்துக் கொண்டு ராஜேஷ் தனது ஊருக்கு வந்தார். அவரது உறவினர்கள் ராஜேசுக்கு அந்த பெண்ணை திருமணம் செய்து வைத்தனர்.
அங்குள்ள ஒரு வீட்டில் ராஜேசும், அந்த பெண்ணும் குடித்தனம் நடத்தினர். இதில் அந்த பெண் கர்ப்பம் ஆனார். இதற்கு பரிசோதனை செய்வதற்காக ராஜேஷ், அந்த பெண்ணை ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றார்.
பெண்ணை பரிசோதித்த டாக்டர்கள் அவர் 3 மாதம் கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்தனர். சிறுமி போல் இருந்ததால் அந்த பெண்ணின் வயதை கேட்டனர். அப்போது அவர் தனக்கு 15 வயதே ஆவதாக தெரிவித்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த டாக்டர்கள் இதுபற்றி கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் மீனாகுமாரி ஆகியோர் நேரில் வந்து அந்த பெண்ணிடம் விசாரித்தனர். அப்போது ராஜேஷ் தன்னை காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும், பலமுறை அவர் தன்னுடன் உறவு கொண்டதால் கர்ப்பமானதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி அவரை கர்ப்பமாக்கியதற்காக ராஜேஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் ராஜேசுக்கு உடந்தையாக இருந்ததாக அவரது உறவினர்கள் அபிஷா, சரோஜா, சுதன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
ராஜேசும், அவரது உறவினர்களும் தலை மறைவாகி உள்ளனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
ஜப்பான் மன்னர் அகி ஹிட்டோவின் மூத்த பேத்தி இளவரசி மாகோ (25). இவர் டோக்கியோவில் உள்ள பல்கலைக்கழகத்தில் படித்தபோது தன்னுடன் படித்த கீ கொமுரோ என்ற வாலிபரை காதலித்தார்.
இதுகுறித்து இளவரசி மாகோ கூறும்போது, “இளவரசியாக இருக்கும் நான் சாதாரண நபரை திருமணம் செய்து கொண்டால் எனது இளவரசி அந்தஸ்து பறிபோய் விடும் என எனக்கு சிறுவயதிலேயே தெரியும்.
ஆனால் எங்களின் இருவரது மனமும் ஒத்துப்போய் விட்டதால் அந்த அந்தஸ்து எனக்கு பெரிதாக தெரியவில்லை. தற்போது வரை அரச குடும்பத்தில் எனது கடமைகளை முழுமையாக நிறைவேற்றியுள்ளேன்” என்றார். #JapanesePrincess
சீர்காழி அருகே காரைமேட்டில் ஒளிலாயம் அமைந்துள்ளது. இங்கு 18 சித்தர்களுக்கு தனித்தனியாக கோயில் அமைந்துள்ளது. மேலும், இக்கோவிலில் சிவன். முருகன், விநாயகர் கோயில்களும் அமைந்துள்ளது. இக்கோயிலில் 27 நட்சத்திரத்திற்குரிய மரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இக்கோயிலுக்கு வந்து பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்து முறைப்படி திருமணம் செய்து செல்கின்றனர்.
சீனா பெய்ஜிங்கை சேர்ந்த யன் என்பவர் மருத்துவதுறையில் பணிபுரிந்து வருகிறார். சீனா சங்காயைச் சேர்ந்த ரூபிங் அழகுகலை நிபுணராக இருந்து வருகிறார். இருவரும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் இந்து முறைப்படி திருமணம் செய்து கொள்ள விருப்பட்டு நாகை மாவட்டத்தில் சீர்காழி அருகே உள்ள காரைமேடு ஒளிலாயத்தை தேர்வு செய்து அங்கு வந்தனர். அருள், கணேஷ், செந்தில், பழனி சிவாச்சாரியார்கள் முன்னிலையில் யன், ரூபிங் திருமணம் நாதஸ்வரம், மேளக்கச்சேரி இசைக்க மணமக்கள் பட்டு வேட்டி, பட்டு புடவை அணிந்து மணமேடைக்கு அழைத்து வரப்பட்டு யன், ரூபிங் கழுத்தில் தாலி கட்டினார்.
அப்போது பலரும் அர்ச்சகை தூவி ஆசி வழங்கினர். பின்னர் இருவீட்டார் சார்பில் மணபெண்ணிற்கு நெற்றி பட்டம் கட்டப்பட்டது. தொடர்ந்து அம்மி மிதித்து, அருந்ததி பார்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மணமக்களுக்கு திரண்டிருந்தவர்கள் அன்பளிப்பு பொருட்களை வழங்கினர். தொடர்ந்து அனைவருக்கு அறுசுவையுடன் விருந்து வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை நாடி முத்து, செந்தமிழன், மாமல்லன் செய்திருந்தனர். #ChineseCouple
நம் நாட்டில் திருமணம் என்பது வாழ்வின் மிக முக்கியமான நிகழ்வுகளில் ஒன்று. இந்த நிகழ்வினை அனைத்து உறவினர்களையும் அழைத்து மிக கோலாகலமாக கொண்டாடுவது வழக்கம்.
பொதுவாக திருமண நிகழ்வுகளில் உறவினர்களிடையே சில சலசலப்புகள் ஏற்படுவதும் இயல்பான ஒன்றே. ஆனால், உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் திருமண விருந்தில் உணவுத்தட்டுகள் இல்லாததால் ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் உயிரை பறிகொடுத்துள்ளார்.
உத்தரப்பிரதேசம் மாநிலம், விக்ராம்பூர் பகுதியில் நேற்று இரவு நடைபெற்ற திருமண விருந்தில் கலந்து கொள்வதற்காக பலர் வந்துள்ளனர். அப்போது அவர்களுக்கு உணவு பரிமாறுவதற்கு உணவுத்தட்டுகள் இல்லாமல் போனதால் வாய்த்தகராறு ஏற்பட்டது. இந்த வாய்த்தகராறு சண்டையாக மாறியதில், விஷால் எனும் இளைஞர் பலியானார். மேலும் 4 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உணவுத்தட்டுக்காக ஏற்பட்ட சண்டையில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மழை பெய்ய வேண்டும் என்று கழுதைகளுக்கு திருமணம் செய்து வைக்கும் பழக்கம் இருந்து வருகிறது. தவளைகளுக்கு திருமணம் என்ற வினோத செய்திகளும் அவ்வப்போது வெளியாகும். மழையின் கடவுளாக வணங்கப்படும் வருண பகவானின் மனதை குளிர்விப்பதற்காக இதுபோன்ற சடங்குகள் செய்யப்படுகிறது.
இதுகுறித்து பா.ஜ.க மந்திரி லலிதா யாதவ் பேசுகையில், “பண்டல்காண்ட் பிராந்தியம் வறட்சியால் பாதிக்கப்பட்டு உள்ளது, விவசாயிகளின் வளர்ச்சிக்காக மழை பெய்ய வேண்டும் என்று பிரார்த்தனை செய்தோம்,” என கூறியுள்ளார்.
திருமண சடங்கு முடிவடைந்தவுடன் தவளைகள் வனப்பகுதியில் விடப்பட்டன. மேலும் 2 தவளைகளுக்கு நடத்தப்பட்ட இந்த திருமணத்தில் உள்ளூர் பா.ஜ.க தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியை அடுத்துள்ள மொட்டையன் வலசையை சேர்ந்தவர் சித்திரவேலு. இவரது மகன் ரஞ்சித் (வயது 23). வெளி நாட்டில் வேலை பார்த்து வந்த இவர் திருமணத்துக்கு பெண் பார்ப்பதற்காக சொந்த ஊருக்கு வந்தார்.
ரஞ்சித்துக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கு பெண் பார்ப்பதில் சிக்கல் இருந்தது.
திருமணத்துக்கு யாரும் பெண் தராததால் கடந்த ஒரு வாரமாகவே ரஞ்சித் விரக்தியுடன் காணப்பட்டார். சம்பவத்தன்று வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ரஞ்சித் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் (பெறுப்பு) யமுனா வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
ஆம்பூர்:
ஆம்பூர் அருகே உள்ள அய்தம்பட்டு ஈச்சந்தோப்பை சேர்ந்த செல்வக்குமார் (வயது 28). இவர், ஆம்பூரில் உள்ள ஒரு ஷூ கம்பெனியில் வேலை செய்து வந்தார். இதே கம்பெனியில், ஆம்பூர் சின்ன வரிகத்தை சேர்ந்த 28 வயது இளம்பெண்ணும் வேலை செய்தார்.
இவர்களுக்குள், காதல் மலர்ந்தது. 5 ஆண்டுகளாக காதலித்தனர். இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி அந்த இளம்பெண்ணிடம் செல்வக்குமார் உல்லாசமாக இருந்தார்.
இதையடுத்து, திடீரென கடந்த மாதம் செல்வக்குமார் வேறு பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். பெற்றோரும் பெண் பார்த்தனர். இதையறிந்த காதலி, செல்வக்குமாரிடம் தகராறு செய்தார்.
‘உன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது. முடிந்தை பார்த்துக்கொள் என்று காதலியிடம் செல்வக்குமார் திட்டவட்டமாக கூறி விட்டார். இதனால் மனமுடைந்த காதலி, ஆம்பூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார்.
போலீஸ் விசாரணைக்கு பயந்து, செல்வக்குமார் தலை மறைவானார். ஒரு மாதமாக அவர் வீட்டிற்கு வரவில்லை. மகன் காணவில்லை என செல்வக்குமாரின் தந்தை, உமராபாத் போலீசில் புகார் அளித்தார். இந்த புகார் மனு மீது போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், தலை மறைவாக இருந்த செல்வக் குமார், காதலிக்கு நேற்று திடீரென போன் செய்தார். ‘நான் ஜோலார்பேட்டையில் இருக்கிறேன். உன்னை திருமணம் செய்து கொள்கிறேன். வீட்டில் இருக்கும் பணம், நகைகளை எடுத்து கொண்டு வா...நான் உனக்காக காத்திருக்கிறேன்’’ என்றார்.
இதுகுறித்து, காதலி தனது பெற்றோர் மற்றும் உறவினர்கள் மற்றும் அனைத்து மகளிர் போலீசாரிடம் தெரிவித்தார். செல்வக்குமாரை பிடிக்க அவர்களும் இளம்பெண்ணிடம் ரூ.30 ஆயிரம் ரொக்கப்பணம், 10 பவுன் நகை கொடுத்து ஜோலார் பேட்டைக்கு அனுப்பினர்.
பெற்றோர், போலீசாரும் பின்தொடர்ந்தனர். ஜோலார் பேட்டை ரெயில் நிலையம் அருகே காத்திருந்த செல்வக்குமாரை, நகை-பணத்துடன் சென்ற காதலி சந்தித்தார்.
அப்போது, காதலியிடம் இருந்த நகை-பணத்தை பறித்துக் கொண்டு தப்பி ஓட முயன்றார். அங்கு இருந்த போலீசார், செல்வக்குமாரை மடக்கி பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். விசாரணையில், தலைமறைவாக இருப்பதால் செலவுக்கு பணம் இல்லை.
இந்த நிலைக்கு காரணமான, காதலியிடம் நகை, பணத்தை பறிக்க திட்டமிட்டு வர வழைத்ததாக செல்வக்குமார் கூறினார். ‘சரி நடந்ததெல்லாம் போகட்டும் காதலியை திருமணம் செய்து கொள்’ என்று போலீசார் தெரிவித்தனர்.
திருமணத்திற்கு செல்வக்குமார் மறுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மிரட்டினர். இதையடுத்து, செல்வக்குமார் திருமணத்திற்கு சம்மதித்தார்.
இன்று காலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் செல்வக்குமாருக்கும், அவரது காதலிக்கும் திருமணம் நடக்கிறது. இதற்காக அவர்கள் நள்ளிரவே அழைத்து செல்லப்பட்டனர். இச்சம்பவத்தால் ஆம்பூர் அனைத்து மகளிர் போலீசில் நள்ளிரவு வரை பரபரப்பு காணப்பட்டது.
பெரும்பாலும், 35-40 வயது வரை உள்ள திருமணமாகாத பெண்கள் அனைவருமே நகர்புறத்தை சேர்ந்தவர்களாகவே உள்ளனர். நகர்புற வாழ்க்கை முறை ஒரு மனிதரின் வாழ்க்கை முற்றிலும் மாற்றி தனித்து வாழும் விருப்பத்தை உண்டாக்குகிறது என்று ஒரு ஆய்வு முடிவு கூறுகின்றது. வாருங்கள் இப்போது 35 வரை அப்படி திருமணமாகாமல் இருப்பதால் நேரக் கூடிய சில அதிர்ச்சி தரும் உண்மைகளைப் பற்றி பார்ப்போம்...
எல்லா உறவுகளுக்கும் ஒரு வரம்பு என்பது உள்ளது. அப்படி எந்த வரம்பும் இல்லாமல் தன்னிச்சையாக தங்கள் விருப்பத்துடன் 35 வயது வரை வாழ்ந்துவிட்டு அதன் பின் அனைவருக்கும் கட்டுப்பட்டு திருமணம் செய்து ஒரு வரம்புடன் வாழ வேண்டும் என்றால் அது கஷ்டமாகத் தான் இருக்கும். எனவே, இது திருமணம் செய்துக் கொள்ளும் ஆசையை மறுத்து தனித்து வாழ மனமானது விரும்பக் கூடும்.
கல்யாணம் செய்து கொள்ளும் போது முதலில் சந்தோஷமாகத் தான் இருக்கும். ஆனால் போக போக மன அழுத்தம், வீட்டு பொறுப்புகள் போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்படலாம். இதுவே நீங்கள் தனியாக இருந்தால் இவை எதுவும் இருக்காது. அதுவும் 35 வயது வரை தனியாக சந்தோஷமாக இருந்துவிட்டு இவை அனைத்தையும் யோசித்து பார்க்கும் போது செய்யாமல் இருப்பதே மேல் என்று தான் தோன்றும்.
தனியாக இருந்தால் வாழ்க்கையை நீங்கள் நினைக்கும் படி மாற்றிக் கொள்ள முடியும். நினைத்த இடத்திற்குப் போகலாம், நினைத்த நேரத்தில் வேலை விடலாம் அல்லது மாற்றிக் கொள்ளலாம். இவை யாரையும் எந்த வகையிலும் பாதிக்காது.
நீங்கள் தனியாக இருந்தால் உங்கள் வேலையில் முழுவதுமாக கவனம் செலுத்த முடியும். தொழில் முன்னேற்றத்தில் அதிக அக்கறை செலுத்த முடியும்.
நீங்கள் தனியாகவே 35 வயது வரை இருந்து பழகிவிட்டால் பின்னர் திருமணமான பிறகு உங்களின் வாழ்க்கை துணையின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதை கண்டிப்பாக விரும்பமாட்டீர்கள் அல்லவா? இது ஒரு முக்கிய காரணம் தனித்து வாழ்வதில்.
சந்தோஷமாக 35 வயது வரை தனியாக வாழ்ந்துவிட்டால், உங்களால் மற்றவர்களைப் போல சாதாரண வாழ்க்கை வாழப்பிடிக்காது பொதுவாக. அதுவும் நீங்கள் பார்த்த கல்யாணமான தம்பதிகள் தினசரி சண்டை போடுபவர்களாகவும், சந்தோஷமான வாழ்க்கை வாழாமலும், ஏமாற்றங்களை சந்தித்தவர்களாகவும் இருப்பதை பார்த்திருந்தால் அது இன்னமும் கடினமாகிவிடும். பின்னர் திருமணத்தைப் பற்றி யோசிக்காமல் இருக்கவும் வாய்ப்புண்டு.
தனித்து வாழ்வதின் சிறப்பம்சம் என்பதே உங்கள் மனதிற்கு பிடித்தவருடன் நினைத்த நேரத்தில் இருக்கலாம். இது தான் நகர்புற பெண்கள் மிக முக்கிய காரணமாக இருக்கிறது தனித்து வாழ்வதற்கு.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்