search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95580"

    முக்கூடல் அருகே திருமணம் நடக்காத விரக்தியில் மனமுடைந்த வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    நெல்லை:

    முக்கூடல் அருகே உள்ள இலந்தகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம் என்ற செல்வராஜ் (வயது 30). இவர் கூலிதொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் தனது பெற்றோரிடம் திருமணம் செய்து வைக்கும்படி கூறினார். அவரது பெற்றோரும் செல்வராஜிக்கு பல இடங்களில் பெண் தேடினர். ஆனால் ஒரு இடத்திலும் அவருக்கு பெண் கிடைக்கவில்லை.

    இதுதொடர்பாக நேற்று செல்வராஜிக்கும் அவரது பெற்றோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது செல்வராஜ் விரக்தியில் வீட்டுக்குள் சென்று கதவை மூடிக்கொண்டார்.

    பெற்றோர் தட்டிப் பார்த்தும் திறக்காததால், சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தனர். அப்போது செல்வராஜ் தூக்கில் பிணமாக தொங்கினார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை புஷ்பராஜ் முக்கூடல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    குளச்சல் அருகே பேஸ்புக் நண்பர் திருமணத்திற்கு வந்த இடத்தில் 2 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    நாகர்கோவில்:

    குளச்சல் அருகே இணையம் புத்தன்துறையைச் சேர்ந்தவர் வினோபின் ராஜ் (வயது 30).

    இவர், ஓமனில் கப்பல் செய்யும் இடத்தில் வெல்டராக வேலைபார்த்து வருகிறார். இவரது திருமணம் நேற்று இணையம் புத்தன் துறை கிறிஸ்தவ ஆலயத்தில் நடந்தது. திருமண விழாவிற்கு அவரது பேஸ்புக் நண்பர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

    திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக வினோபின் ராஜின் பேஸ்புக் நண்பர்கள் திருப்பூர் ஆத்துகிணத்துப்பட்டி சங்கீதா (24), சேலம் ராமலிங்கம் காலணி சங்கராலயம் ரோட்டையைச் சேர்ந்த மோகன் (33) மற்றும் பலரும் வந்திருந்தனர்.

    திருமண விழாவிற்கு வந்திருந்த பேஸ்புக் நண்பர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் நேரில் அறிமுகம் ஆகிக் கொண்டனர். வினோபின் ராஜின் திருமணம் முடிந்த பிறகு அவர்கள் அங்குள்ள கடற்கரைக்கு சென்றனர்.

    கடற்கரையில் நின்று கொண்டு சங்கீதா, மோகன் உள்பட நண்பர்கள் கால் நனைத்துக் கொண்டிருந்தனர். அப்போது சங்கீதாவின் மூக்கு கண்ணாடி கடலில் விழுந்தது. இதை மோகனும், சங்கீதாவும் தேடினார்கள்.அப்போது வந்த ராட்சத அலை ஒன்று இருவரையும் கடலுக்குள் இழுத்துச் சென்றது.

    இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் கூச்சலிட்டனர். பின்னர் கடல் அலையில் சிக்கிய சங்கீதாவை மீட்டனர். மோகனை அலை உள்ளே இழுத்துச் சென்று விட்டது. அவரை தேடும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.

    மீட்கப்பட்ட சங்கீதாவை தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    சங்கீதா பலியானது குறித்து அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சங்கீதா பலியானதை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். நள்ளிரவில் சங்கீதாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து சேர்ந்தனர்.

    பலியான சங்கீதா அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.

    கடல் அலை இழுத்துச் சென்ற மோகனை தேடும் பணி இன்றும் நடந்தது. மோகன் இழுத்துச் சென்ற பகுதியில் இருந்து ஒரு நாட்டிங்கல் தொலைவில் அவர் பிணமாக மிதப்பதை பார்த்த மீனவர்கள் குளச்சல் கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    மீனவர்கள் உதவியுடன் மோகனின் உடலும் மீட்கப்பட்டது. கரைக்கு கொண்டு வரப்பட்ட மோகனின் உடலை பார்த்து அவரது உறவினர்கள், நண்பர்கள் கதறி அழுதனர். பின்னர் அவரது உடல் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    பலியான மோகன் காய்கறி வியாபாரி ஆவார். அவருக்கு பானு என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

    கடலில் மூழ்கி பலியான சங்கீதா, மோகனின் உடல் பிரேத பரிசோதனை இன்று நடக்கிறது.
    திண்டுக்கல் அருகே குடும்ப பிரச்சினையில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

    ஆத்தூர்:

    திண்டுக்கல் அருகே சித்தையன்கோட்டை சேடபட்டியை சேர்ந்தவர் வீரக்குமார் (வயது27). கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் முத்துலாபுரத்தை சேர்ந்த லதா(22) என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

    திருமணத்தின்போது சீர்வரிசை பொருட்கள் கொடுக்கப்பட்டன. சிறிதுகாலம் சந்தோசமாக இருந்த கணவன்-மனைவி இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது. இதனால் மனஉளைச்சலில் இருந்த லதா வாழ்வதை விட சாவதே மேல் என தற்கொலை செய்ய முடிவு செய்தார்.

    அதன்படி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து செம்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து லதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணமாகி 6 மாதமே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    நியூசிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னணி ஆல்-ரவுண்டர் ஹாலெ ஜென்சனும் ஆஸ்திரேலியாவில் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் ஆடும் வீராங்கனை நிகோலா ஹன்கோக்கும் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டனர். #Womencricketers
    கிறைஸ்ட்சர்ச்:

    நியூசிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னணி ஆல்-ரவுண்டர் ஹாலெ ஜென்சன். இவர் நியூசிலாந்து அணிக்காக 8 ஒரு நாள் போட்டி மற்றும் இருபது 20 ஓவர் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். 26 வயதான ஜென்சன், ஒரு ஓரின சேர்க்கை விரும்பி ஆவார். அவரும் ஆஸ்திரேலியாவில் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் ஆடும் 23 வயது வீராங்கனை நிகோலா ஹன்கோக்கும் நெருங்கி பழகி வந்தனர்.

    இந்த நிலையில் அவர்கள் இருவரும் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டதுடன், அந்த புகைப்படத்தையும் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். பெண்கள் கிரிக்கெட் உலகில் கடந்த 3 ஆண்டுகளில் இவ்வாறு ஜோடி சேர்ந்த 3-வது ஓரின சேர்க்கை இணை இதுவாகும். #Womencricketers
    மாற்று அறுவை சிகிச்சையில் 2 கைகள் பொருத்தப்பட்ட வாலிபர் தனது காதலியை திருமணம் செய்து கொண்டார்.
    சென்னை:

    திண்டுக்கல்லை சேர்ந்தவர் நாராயணசாமி. இவர் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் வார்டு மானேஜராக ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வந்தார்.

    கடந்த 2015-ம் ஆண்டு நடந்த சாலை விபத்தில் சிக்கி இரண்டு கைகளையும் இழந்தார். இதனால் அவர் அன்றாட வேலைக்கு கூட மிகவும் சிரமப்பட்டார். இந்த நிலையில் கடந்த ஆகஸ்டு மாதம் கைகள் மாற்று அறுவை சிகிச்சைக்காக நாராயணசாமி சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு பல்வேறு பரிசோதனைகள் நடத்தப்பட்டது.

    கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 6-ந்தேதி நாராயணசாமிக்கு வேறு ஓருவரின் இரண்டு கைகளை பொருத்தும் ஆபரே‌ஷன் நடந்தது. டாக்டர் ரமாதேவி தைலைமையிலான குழுவினர் 13 மணி நேரம் ஆபரே‌ஷன் செய்தனர்.

    இதில் அவருக்கு வெற்றிகரமாக இரண்டு கைகளும் பொருத்தப்பட்டன. பின்னர் சில நாட்கள் சிகிச்சைக்கு பிறகு நாராயணசாமி குணம் அடைந்தார். தற்போது அவர் அன்றாட பணிகளை சிரமமின்றி செய்து வருகிறார்.

    இந்த நிலையில் நாராயணசாமி தனது காதலி நதியாவை திருமணம் செய்து கொண்டார்.

    இதுபற்றி நாராயணசாமி கூறும் போது, நதியாவும் நானும் கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து வந்தோம். நான் விபத்தில் சிக்கி இரு கைகளையும் இழந்ததால் அவரது பெற்றோர் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    ஆனால் நதியா பிடிவாதமாக இருந்தார். இறுதியில் அவரது பெற்றோரை சமாதானம் செய்தோம் என்றார். பொதுமக்கள் தங்களது கைகளை தானம் செய்ய முன்வரவேண்டும் என்று உறவினர்கள் நண்பர்களிடம் உடல் உறுப்பு தானம் செய்ய பதிவு செய்யும்படி வலியுறுத்தி வருகிறேன்.

    ஒருவர் இறந்த பிறகு உடல் உறுப்புகள் வீணாக போவதற்கு பதிலாக அவைகள் தானம் செய்யப்பட்டால் மற்றவர்களுக்கு புதிய வாழ்வு கொடுக்கும் என்றார்.

    நதியா கூறும் போது, நாராயணசாமி விபத்தில் சிக்குவதற்கு 2 மாதங்களுக்கு முன்பு எனது பெற்றோர் எங்கள் திருமணத்துக்கு சம்மதித்தனர். அவருக்கு ஏற்பட்ட விபத்துக்கு பிறகு பெற்றோரை சமாதானப்படுத்துவது கடினமாக இருந்தது.

    ஆனால் நாங்கள் உறுதியாக இருந்து திருமணம் செய்தோம் என்றார். தமிழ்நாட்டில் இரண்டு கைகள் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்ட முதல் நபர் நாராயணசாமி ஆவார்.

    கைகளை தானம் செய்ய பலர் முன்வருவதில்லை. இறந்த பிறகு உடலில் இருந்து கைகளை வெட்டி எடுத்துவிட்டால் அடுத்த பிறவியில் கைகள் இல்லாமல் பிறப்பார்கள் என்ற நம்பிக்கை நிலவுகிறது.

    இதுகுறித்து டாக்டர் ரமாதேவி கூறும் போது கைகளை தானம் செய்வது குறித்து நாம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார்.
    பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியில் திருமணத்துக்கு சென்றவர்களை ஏற்றிவந்த வாகனம் வெள்ளத்தில் அடித்துச் சென்ற விபத்தில் இரு குழந்தைகள் ஆறு பெண்கள் என 8 பேர் உயிரிழந்தனர். #8killed #Pakistanflood
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் நாட்டின் வடமேற்கு பகுதியில் சில நாட்களாக கனமழைபெய்து வருகிறது. இந்நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டு எல்லையை ஒட்டியுள்ள வசிரிஸ்தான் மாவட்டத்தில் சிலர் ஒரு வாகனத்தில் உறவினர் வீட்டு திருமணத்துக்கு சென்றனர்.

    வானா என்ற இடத்தின் வழியாக சென்றபோது சாலையின் குறுக்கே பாய்ந்த வெள்ளத்தில் அந்த வாகனம் அடித்து சென்றது. அதில் சென்ற பலர் நீரில் மூழ்கி தத்தளித்தனர். அருகாமையில் உள்ளவர்கள் அளித்த தகவலை அறிந்து விரைந்து வந்த மீட்பு படையினர் இரு குழந்தைகள் மற்றும் ஆறு பெண்களின் பிரேதங்களை கைப்பற்றினர்.



    காணாமல் போன 6 குழந்தைகளை மீட்க தேடுதல் நடைபெற்று வருகிறது. #8killed #Pakistanflood #Pakistanflashflood
    ஆன்லைனில் திருமணத்துக்கு பதிவு செய்தவரிடம் பெண் குரலில் பேசி பண மோசடி செய்த வாலிபரை கைது செய்தனர்.
    போரூர்:

    பெரம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த்(42). தனியார் நிறுவன ஊழியர்.

    இவர் கடந்த 2017ம் ஆண்டு தனது திருமணத்திற்கு பெண் வரன் வேண்டி ஆன்லைன் மூலம் பதிவு செய்து இருந்தார். சிலநாட்களில் ஆனந்தை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட இளம்பெண் ஒருவர் தங்களின் முழு விபரங்களையும் ஆன்லைனில் பார்த்து விட்டேன். எனக்கு மிகவும் பிடித்து விட்டது. தங்களை திருமணம் செய்து கொள்ள ஆசை படுகிறேன் என்று தெரிவித்தார்.

    இதில் மயங்கிய ஆனந்த் அடிக்கடி செல்போன் மூலம் அந்த பெண்ணிடம் பேசி வந்தார். அப்போது ஒரு நாள் ஆனந்தை தொடர்பு கொண்ட பெண் தனது சித்தியின் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் மருத்துவ சிகிச்சைக்கு பணம் வேண்டும் என்று கேட்டார்.

    உடனடியாக ஆனந்த் ரூ.45 ஆயிரம் வங்கி கணக்கில் செலுத்தினார். பின்னர் சில தினங்களில் மீண்டும் தொடர்பு கொண்ட பெண் மருந்து வாங்க பணம் வேண்டும் என்று கேட்டவுடன் ரூ.12ஆயிரத்தை அதே வங்கி கணக்கில் செலுத்தினார் ஆனந்த். பின்னர் அந்த பெண் தீடீரென தலைமறைவானார். ஆனந்த்திற்கு வேறு பெண்ணுடன் திருமணம் முடிந்து விட்டது.

    இந்த நிலையில் ஒன்றரை வருட இடைவெளிக்கு பின் நேற்று முன்தினம் மீண்டும் ஆனந்த்தை தொடர்பு கொண்ட அந்த பெண் ஆசை வார்த்தை கூறி பேசினார். தனக்கு குளிர்சாதனப் பெட்டி வேண்டும் என்று கேட்டார். வாங்கி தருவதாக கூறிய ஆனந்த் வடபழனி அருகே வருமாறு பெண்ணை அழைத்தார்.

    தன்னிடம் பணம் பறித்த பெண்ணை பிடிக்க ஆனந்த் காத்திருந்தார். ஆனால் அங்கு வாலிபர் ஒருவர் மட்டும் வந்தார். சந்தேகமடைந்த ஆனந்த் அவரை மடக்கி பிடித்தார். தன்னிடம் பெண் குரலில் பேசி பணம் பறித்தது வாலிபர் என்பது தெரிந்து அதிர்ச்சி அடைந்தார்.

    அந்த வாலிபரை வட பழனி போலிசில் ஒப்படைத்தார். குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பாலுசாமி விசாரணை நடத்தியதில் பெண் குரலில் பேசி மோசடியில் ஈடுபட்டது பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த செந்தில்(39) என்பது தெரியவந்தது. வேறு யாரிடமும் இதேபோல் பேசி மோசடியில் ஈடுபட்டுள்ளாரா என்ற கோணத்தில் அவரிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றார். #tamilnews
    இம்மாதம் வெளியான சேரனின் திருமணம் திரைப்படம், பல்வேறு தரப்பினரின் வேண்டுகோளுக்கிணங்க மீண்டும் வெளியாக இருக்கிறது. #Thirumanam
    மார்ச் மாத துவக்கத்தில் இயக்குனர் சேரன் நடித்து இயக்கிய 'திருமணம்' திரைப்படம் வெளியானது.
     கதாநாயகனாக உமாபதி ராமையா, நாயகியாக காவ்யா சுரேஷ் நடித்திருக்க, முக்கிய வேடங்களில் இயக்குனர் சேரன், தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர், சுகன்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    குடும்ப உறவுகள், நடைமுறை வாழ்வின் யதார்த்தங்கள், சென்டிமெண்ட் என நல்ல கதைகளமும், அருமையான விமர்சனங்களும் கிடைத்த போதும், மாணவமணிகளுக்கு தேர்வுகள் இருந்ததால் மக்கள் பெருமளவில் வரவியலாத நிலையிருக்க, திரையிடுவதற்கு போதுமான திரையரங்குகளும் கிடைக்காததால் பல இடங்களில் திரையிட முடியவில்லை.



    பல்வேறு தரப்பினரின் வேண்டுகோளுக்கிணங்கவும், திரையரங்குகளின் மேலான ஒத்துழைப்போடும், இத்திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 12ம் தேதி, 75 திரையரங்குகளில் மறு வெளியீடு செய்யப்படுகிறது.
    கோவை அருகே திருமணமான 4 மாதத்தில் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கோவை:

    கோவை ராக்கிப்பாளையம் அருகே உள்ள பாரதி அவன்யூவை சேர்ந்தவர் விஷ்ணுகுமார். இவரது மனைவி சோபா (வயது 33). இவர்களுக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. சம்பவத்தன்று வீட்டில் இருந்த சோபா அறையில் உள்ள மின்விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அக்கம் இது குறித்து துடியலூர் அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

    உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட சோபாவின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    மேலும் திருமணமான 4 மாதத்தில் சோபா தற்கொலை செய்து கொண்டதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடந்து வருகிறது.

    நியூசிலாந்து மசூதிகளில் நடத்தப்பட்ட தாக்குதல்களின்போது, உயிர்தப்பிய வங்கதேச கிரிக்கெட் வீரர்களுள் ஒருவருக்கு கடந்த வியாழன் அன்று திருமணம் நடந்தது. #NewZealandCricketer #MehadihasanMarriage
    டாக்கா:

    நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள இரண்டு மசூதிகளில் கடந்த 15-ம் தேதி தொழுகை நடைபெற்றபோது, பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியதில் 50 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். இந்த தாக்குதல் நடந்தபோது, அந்த மசூதிக்கு வங்கதேச கிரிக்கெட் அணி வீரர்கள் சென்றனர்.

    உள்ளே துப்பாக்கி சூடு சத்தம் கேட்டதும், கிரிக்கெட் வீரர்களை அதிகாரிகள் அவசரமாக வெளியே அழைத்து வந்தனர். வேகவேகமாக அருகில் இருந்த பூங்கா வழியாக சென்று, மைதானத்தை அடைந்தனர். பின்னர் அங்கிருந்து ஓட்டலுக்குச் சென்றனர்.  வீரர்கள் யாரும் ஓட்டலை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது. வீரர்கள் அனைவரும் பாதுகாப்பாக திரும்பினாலும் அவர்களிடையே உள்ள அச்ச உணர்வு நீங்குவதற்கு வெகுநேரம் ஆனது.



    இந்த சம்பவம் காரணமாக, மறுநாள் நியூசிலாந்து அணியுடனான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை வங்கதேச கிரிக்கெட் வாரியம் ரத்து செய்தது. பின்னர் வங்கதேச வீரர்கள் நாடு திரும்பினர்.

    நியூசிலாந்து தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக தப்பிய கிரிக்கெட்  வீரர்களுள் ஒருவர் மெஹதி ஹசன். இவர் தன் காதலி ரபேயா அக்தர் ப்ரீத்தியை வங்க தேசத்தில் உள்ள குல்னா பகுதியில் கடந்த வியாழன் அன்று திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவர் கூறுகையில், ‘எனது வாழ்க்கையின் புதிய பகுதியை நான் துவங்குகிறேன். என்னை அனைவரும் வாழ்த்துங்கள்’ என கேட்டுக்கொண்டார்.

    இதேபோல் கிரிக்கெட் வீரர் முஸ்தபீர் ரஹ்மானும் விரைவில் திருமணம் செய்யவுள்ளார் என அவரது சகோதரர் தெரிவித்துள்ளார். தன்னை தாக்குதல் அதிர்ச்சியிலிருந்து திருமணம் மீட்டெடுக்கும் என்று நம்புவதாக அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. #NewZealandCricketer #MehadihasanMarriage 
    காதல் திருமணம் செய்த கொண்ட வாலிபருடன் கல்லூரி மாணவி கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.
    கும்பகோணம்:

    கும்பகோணம் சாரங்கபாணி சன்னதி தெருவை சேர்ந்தவர் ரூஸ்வெல்ட். இவருடைய மகள் மோனிஷா (வயது21). இவர் கும்பகோணம் அரசினர் தன்னாட்சி கல்லூரியில் படித்து வருகிறார்.

    இந்த நிலையில் 10 நாட்களில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் கடந்த 7-ந் தேதி இரவு மோனிஷா திடீரென மாயமானார். அவர் நகை, பணத்துடன் மாயமாகி விட்டதாக அவருடைய தாய் கும்பகோணம் கிழக்கு போலீசில் புகார் அளித்து இருந்தார். புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    விசாரணையில் மோனிஷா தன்னுடன் படிக்கும் வலங்கைமான் அருகே உள்ள நரசிங்கமங்கலத்தை சேர்ந்த ரங்கசாமி மகன் விக்னேஷ் (21) என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டது தெரியவந்தது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மோனிஷா, தனது காதல் கணவர் விக்னேசுடன் கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தார்.

    இதையடுத்து கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் மற்றும் போலீசார் மோனிஷா, விக்னேஷ் ஆகியோரிடம் விசாரித்தனர். அப்போது தங்களுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாக புகார் அளித்த காதல் ஜோடி, பாதுகாப்பு தர வேண்டும் என்று போலீசாரிடம் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் தனது கணவர் வீட்டுக்கு செல்வதாக மோனிஷா கூறியதை அடுத்து, இருவரையும் விக்னேசின் தந்தை ரங்கசாமியுடன் போலீசார் அனுப்பி வைத்தனர். #tamilnews
    ஒரத்தநாடு அருகே மகள் திருமணத்திற்காக வைத்திருந்த 15 பவுன் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து தொழிலாளியின் மகன் போலீசில் புகார் அளித்துள்ளார்.
    ஒரத்தநாடு:

    ஒரத்தநாடு அருகே பாச்சூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் பிச்சைமுத்து. கூலித் தொழிலாளி. இவரது மகன் பாலமுருகன்(வயது28). பி.இ. படித்துள்ளார். மகள் கனிமொழி.

    கனிமொழிக்கு திருமண ஏற்பாடுகளை பிச்சை முத்து செய்து வந்தார். அதற்காக 15 பவுன் நகைகள் மற்றும் ரூ. 10 ஆயிரம் ரொக்கத்தை வீட்டில் பீரோவில் வைத்திருந்தனர். பிச்சைமுத்து, அவரது மனைவி கூலி வேலைக்கு செல்லும்போது வீட்டை பூட்டி சாவியை வாசல் நிலைப் படியில் வைத்துவிட்டு செல்வது வழக்கமாம்.

    இந்நிலையில் கடந்த 14-ந்தேதி பாலமுருகன் வெளியூர் சென்றிருந்ததால் பிச்சைமுத்து வீட்டை பூட்டி வழக்கம்போல் சாவியை நிலைப் படியில் வைத்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் அனைவரும் மாலையில் வீடு திரும்பினர். நேற்று காலை பீரோவில் இருந்த நகைகளை சரிபார்க்க திறந்தபோது 15 பவுன் நகைகளையும், ரூ.10 ஆயிரத்தையும் காணாமல் அதிர்ச்சியடைந்தனர்.

    அப்போதுதான் வீட்டு நிலைப்படியில் வைத்திருந்த சாவியை யாரோ எடுத்து திறந்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பாலமுருகன் ஒரத்தநாடு போலீசில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். #tamilnews
    ×