என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 95580"
ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் குமார் ராவுத். மில் தொழிலாளி. இவரது மனைவி கல்பனா மொகந்தி (வயது 27). இவர்களுக்கு கடந்த 1½ வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. பின்னர் 2 பேரும் கோவை சூலூர் அருகே வீடு வாடகைக்கு எடுத்து குடும்பத்துடன் வசித்து வந்தனர். சம்பவத்தன்று வீட்டில் இருந்த கல்பனா மொகந்தி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து பேரூர் அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று தற்கொலை செய்து கொண்ட கல்பனா மொகந்தியின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் திருமணமான 1½ வருடத்தில் கல்பனா மொகந்தி தற்கொலை செய்து கொண்டதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடந்து வருகிறது. #tamilnews
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி வடக்கு மலையை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் ஜெயதேவன் (வயது 30). கடந்த 2011-ம் ஆண்டு காவல் துறையில் பணிக்கு சேர்ந்தார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு பாதுகாப்பு பணிக்காக ராமேஸ்வரத்திற்கு சென்ற போது, அங்கு பணியில் இருந்த பெண் போலீஸ்காரர் சேலம் மாவட்டத்தை சேர்ந்த செண்பகம் (27) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் காதலாக மாறியது.
இதனிடையே இருவரும் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் போலீஸ் நிலையத்தில் ஒன்றாக பணியாற்றி வந்தனர். செண்பகம் திருவெறும்பூர் காவல் நிலைய குடியிருப்பில் வசித்து வந்தார். அவர்கள் காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரியவரவே, முதலில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் காதலை ஏற்றுக்கொண்டனர். இதையடுத்து இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.
அதன்படி அடுத்த மாதம் 17-ந்தேதி திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டு, நிச்சயதார்த்தம் நடத்தி முடித்தனர். இதனிடையே கடந்த 17-ந்தேதி ஜெயதேவன் நவல்பட்டு அருகே உள்ள அண்ணா நகர் பகுதியில் உள்ள காவலர் பயிற்சி பள்ளிக்கு பணிமாற்றம் செய்யப்பட்டார்.
ஏற்கனவே அவர் வயிற்றுப்புண் மற்றும் குடல் வால்வு நோயால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சை செய்திருந்தார். ஆனாலும் தொடர்ந்து வயிற்று வலியால் அவதிப்பட்டார். இதனால் விடுப்பு எடுத்து சிகிச்சை மேற்கொண்டார்.
கடந்த 28-ந்தேதி வயிற்று வலி அதிகமாகவே, வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் எலி மருந்தை சாப்பிட்டு விட்டார். அவரை உறவினர்கள் மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். காதலன் விஷம் அருந்திய தகவல் கிடைத்ததும் திருச்சிக்கு விரைந்து வந்த செண்பகம், ஜெயதேவனை உடனிருந்து கவனித்து கொண்டார். இருப்பினும் உடல்நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
ஜெயதேவன் தற்கொலை முயற்சி குறித்து திருச்சி துவாக்குடி போலீசாரும், செண்பகம் தற்கொலை முயற்சி குறித்து ராமேஸ்வரம் போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஜெயதேவன் இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
திருமணம் நடைபெற இருந்த நிலையில் அவர் தற்கொலை செய்தது அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews
செவ்வாயின் நட்சத்திரங்களான :- மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் இம்மூன்றும் ஒன்றுக்கொன்று சேரக்கூடாது. அதாவது ஆண்,பெண் இருவருக்கும் இவற்றில் ஏதாவது ஒரு நட்சத்திரமாக இருப்பின் சேர்க்கக்கூடாது. எளிமையாக புரியும்படி:-
பெண்————————-ஆண்
மிருகசீரிடம் —— சித்திரை, அவிட்டம்
சித்திரை————— மிருகசீரிடம், அவிட்டம்
அவிட்டம்——— சித்திரை, மிருகசீரிடம்
இவை ஒன்றுக்கொன்று இணையக்கூடாது.
சூரியனின் நட்சத்திரங்களான :- கார்த்திகை, உத்திரம், உத்திராடம்
குருவின் நட்சத்திரங்களான:- புனர்பூசம், விசாகம், பூரட்டாதி
இந்த ஆறு நட்சத்திரங்களும் ஒன்றுக்கொன்று சேர்க்கக்கூடாது.
சந்திரனின் நட்சத்திரங்களான:- ரோகிணி,அஸ்தம்,திருவோணம்,
ராகுவின் நட்சத்திரங்களான:- திருவாதிரை, சுவாதி, சதயம்.
இந்த ஆறு நட்சத்திரங்களையும் இணைக்கக்கூடாது.
சுக்ரனின் நட்சத்திரங்களான:- பரணி, பூரம், பூராடம்,
சனியின் நட்சத்திரங்களான:- பூசம், அனுசம், உத்திரட்டாதி,
இந்த ஆறு நட்சத்திரங்களையும் ஒன்றுக்கொன்று சேரக்கூடாது.
புதனின் நட்சத்திரங்களான:- ஆயில்யம், கேட்டை, ரேவதி.
கேதுவின் நட்சத்திரங்களான:- அசுவினி, மகம்,மூலம்.
இந்த ஆறு நட்சத்திரங்களையும் ஒன்றுக்கொன்று சேர்க்கக் கூடாது.
இதுதான் “கழுத்து பொருத்தம் என்னும் ரஜ்ஜு பொருத்தம்” ஆகும்.
சரி, நாங்கள் இதையெல்லாம் பார்க்காமல் திருமணம் செய்துவிட்டோம். இதனால் ஏதாவது உயிருக்கு ஆபத்து வருமா? என்ற பயம் இயல்பானதே.
செவ்வாயின் நட்சத்திரங்களின் மணம் முடித்தவர்களுக்கும், சந்திரன் மற்றும் ராகு நட்சத்திரங்களில் மணம் முடித்தவர்கள் மட்டுமே சற்று கவனமாக இருக்க வேண்டும். அடிக்கடி விபத்து, உணவு விசம் ஆகுதல்(food poison), கீழேவிழுதல், திடீரென உண்டாகும் தலைவலி, ரத்தகொதிப்பு, மயக்கம், இன்னும் சில.. இது போன்ற பாதிப்புகளை தரும்.
செவ்வாய் - தலை ரஜ்ஜு
சந்திரன்,ராகு- கழுத்து ரஜ்ஜு
அஸ்வினி:- ஆண் குதிரை
பரணி:- ஆண் யானை
கார்த்திகை:- பெண் ஆடு
ரோகிணி:- ஆண் நாகம்
மிருகசீரிடம்:- பெண் சாரை
திருவாதிரை:- ஆண் நாய்
புனர்பூசம்:- பெண் பூனை
பூசம்:- ஆண் ஆடு
ஆயில்யம்:- ஆண் பூனை
மகம்:- ஆண் எலி
பூரம்:- பெண் எலி
உத்திரம்:- பெண் எருது
அஸ்தம்:- பெண் எருமை
சித்திரை:- பெண் புலி
சுவாதி:- ஆண் எருமை
விசாகம்:- ஆண் புலி
கேட்டை :- ஆண் மான்
மூலம்:- பெண் நாய்
பூராடம்:- ஆண் குரங்கு
உத்ராடம்:- கீரி,மலட்டு பசு
திருவோணம்:- பெண் குரங்கு
அவிட்டம்:-பெண் சிங்கம்
சதயம்:- பெண் குதிரை
பூரட்டாதி:- ஆண் சிங்கம்
உத்ரட்டாதி:- பெண் பசு
ரேவதி:- பெண் யானை
இப்போது உங்கள் யோனி மிருகம் எது என அறிந்து கொண்டிருப்பீர்கள். இதில் எதை எதனுடன் இணைக்கலாம் என்பதை நான் கூறினால் பாடம் நடத்துவது போல ஆகிவிடும். எனவே எளிமையான வழி ஒன்றைச் சொல்லுகிறேன். தாவர உண்ணிகள், தாவர உண்ணிகளோடு சேர்க்கலாம், மாமிசபட்சினிகள், மாமிசபட்சினிகளோடு சேரலாம். அதேசமயம் , நாய்க்கு பூனை பகை, சிங்கம், புலிக்கு பசு, எருது, மான், ஆடு, குதிரை யானை பகை, பாம்புக்கு எலி பகை, எலிக்கு, கீரி பகை, குரங்குக்கு, ஆடு பகை.
சரி இது திருமண பொருத்ததிற்கு மட்டுமா என்றால்
அதற்கு மிக மிக முக்கியம். அதேசமயம் உங்கள் நண்பர்கள், தொழில் கூட்டாளிகள் என பலவிஷயங்களுக்கும் முக்கியம். சரி... இந்தப் பொருத்தம் பார்க்காமல் திருமணம் நடந்தால் என்னாகும்? சந்ததியை உருவாக்கும் “தாம்பத்யம்” மிக முக்கியம் அல்லவா. இதில் பகை மிருக அமைப்பு, தாம்பத்யத்தில் நாட்டம் இல்லாமலும், வெறுப்பு எண்ணமும் உண்டாக்கும்.
தாம்பத்ய திருப்தி என்பது மிகவும் அவசியம். பகை மிருக அமைப்பு ஒருவருக்கு திருப்தியும், மற்றவருக்கு ஏமாற்றத்தையும் தரும். இன்றைய காலகட்டத்தில் மணமுறிவும், தவறான தொடர்புகளும் அதிகரிக்க இந்த பொருந்தாத இணைப்பும் ஒரு காரணம் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். எனவே, திருமணப் பொருத்தத்தின்போது இந்த மிக முக்கிய பொருத்தங்களை மட்டுமாவது கவனமாகப் பாருங்கள் , அவை:- ரஜ்ஜு, யோனி, கணம், இம்மூன்றும் மிகமிக முக்கியம்.
ஆணுக்கு ஆண் யோனியும், பெண்ணுக்கு பெண் யோனியும் ... மிக அற்புதம்
பெண்ணுக்கு ஆண் யோனியும், ஆணுக்கு பெண் யோனியும் :-மனைவிக்கு அடங்கிப்போவார்கள்.
இருவரும் ஆண் யோனி :- அதீத முரட்டுத்தனம்
இருவரும் பெண் யோனி:- ஏமாற்றம்
எனவே ஜாதகப் பொருத்தம் பார்க்கும் போது, இவற்றில் கவனம் செலுத்துங்கள். பொருத்தம் உடலிலும் வேண்டும்... புரிந்தவன் மணமாகவேண்டும் என்று கவியரசர் பாடியிருப்பதை நினைவில் கொள்ளுங்கள்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் மாரிமுத்து ரோடு பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 55). இவர் கேரள மாநில பெண்களை ஆத்தூர், கெங்கவல்லி பகுதிகளில் பலருக்கு திருமணம் செய்து வைக்கும் தரகர் வேலை செய்து வருகிறார். கண்ணனிடம் ஆத்தூர் அருகே உள்ள தாண்டவராயபுரம் கிராமத்தை சேர்ந்த கொத்தனார்கள் சக்திவேல், விஸ்வநாதன், பாலமுருகன் ஆகியோர் தனித்தனியே அணுகி தங்களுக்கு கேரள மாநிலத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து வைக்க கூறியுள்ளனர்.
அதற்கு அவர், தனக்கு புரோக்கர் கமிஷன் ரூ.25 ஆயிரம் மற்றும் கேரளாவுக்கு சென்று வர போக்குவரத்து செலவு, நிச்சயதார்த்த பெண்ணுக்கு மோதிரம் என ஒவ்வொருவரிடமும் ரூ.65 ஆயிரம் வரை செலவு செய்ய வைத்துள்ளார். பின்னர் அவர்கள் 3 பேரையும் சமீபத்தில் கேரள மாநிலத்திற்கு தனித்தனியாக அழைத்து சென்று, அங்குள்ள ஒரே பெண்ணுக்கு 3 பேரையும் மோதிரம் போட்டு நிச்சயதார்த்தம் செய்து வைத்துள்ளார். அப்போது அவர்கள் அந்த மணப்பெண்ணை தங்கள் செல்போனில் படம் எடுத்துள்ளனர்.
இந்த புகைப்படம் தான், பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்ற ரீதியில் இந்த தரகரின் மோசடி வேலையை அடுத்த சில நாட்களிலேயே வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. கொத்தனார்கள் 3 பேரும் அவர்கள் நிச்சயம் செய்த பெண் குறித்து ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டனர்.
பேச்சுவாக்கில், தாங்கள் திருமணம் செய்து கொள்ள போகும் கேரள பெண்ணின் படத்தை அவர்கள் 3 பேரும் மற்றவர்களிடம் காண்பித்தனர். அப்போது தான் அவர்கள் 3 பேரும் ஒரே பெண்ணை நிச்சயம் செய்திருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவர்கள் 3 பேரும் ஒரே பெண்ணை நிச்சயம் செய்ததையும், தாங்கள் ஏமாற்றபட்டதையும் அறிந்து ஆத்தூர் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் திருமண தரகர் கண்ணனிடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அமிர்தலிங்கம் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த மோசடி சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது. #tamilnews
As usual at the end of the year some useless people looking for news has come up with rumours of me getting Married again.. IM NOT GETTING MARRIED.. I’m here to stay.. work and kick everybody’s ass..!!! So dear losers better luck next time..I know who u r.. #cantbringmedown..!! pic.twitter.com/HM3q8CQshv
— varu sarathkumar (@varusarath) December 30, 2018
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள கே.முத்துச்சாமி புரத்தை சேர்ந்தவர் வீரபாண்டி- அமுதா தம்பதியின் 17 வயது மகனுக்கும் மாரியப்பன்- சுப்பம்மாள் தம்பதியின் 15 வயது மகளுக்கும் கடந்த ஆகஸ்ட் மாதம் 18-ந் தேதி திருமணம் நடைபெற்றது.
திருமணத்திற்கு பின்னர் சிறுமி கர்ப்பமுற்ற நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதற்காக அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிறுமியை டாக்டர்கள் பரிசோதித்தனர். அவரது உடல் நிலையை கருத்தில் கொண்டு கடந்த 6-ந் தேதி சிறுமிக்கு கரு கலைப்பு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தெரியவந்ததும், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் விசாரணை நடத்தி மாவட்ட சமூக நல அதிகாரி ராஜத்திற்கு தகவல் கொடுத்தார். அவரது உத்தரவின் பேரில் சாத்தூர் யூனியன் விரிவாக்க அலுவலர் விஜயலட்சுமி சாத்தூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதைதொடர்ந்து குழந்தை திருமணம் செய்து வைத்த தாக சிறுமியின் பெற்றோர் மாரியப்பன்- சுப்பம்மாள், சிறுவனின் பெற்றோர் வீரப்பாண்டி- அமுதா ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
புகழ் பெற்ற அமெரிக்க ‘பாப்’ இசை நட்சத்திரம் மைலி சைரஸ் (வயது 26). இவர் ‘தி லாஸ்ட் சாங்’ என்ற படத்தின் படப்பிடிப்பு தளத்தில் ஆஸ்திரேலிய நடிகர் லியாம் ஹெம்ஸ்வொர்த்தை (28) 10 ஆண்டுகளுக்கு முன்னர் சந்தித்தார். இருவருக்கு இடையேயும் காதல் மலர்ந்தது.
இருவரும் பல இடங்களில் சந்தித்து தங்கள் காதலை வளர்த்துக்கொண்டார்கள். 2012-ம் ஆண்டு அவர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து, நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால் அடுத்த ஆண்டே அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர்.
பிரிந்த ஜோடி, 2015-ம் ஆண்டு திரும்பவும் சேர்ந்தது.
இருவரும் மறுபடியும் காதல் வானில் சிறகடித்துப் பறந்தனர்.
கலிபோர்னியாவில் கடந்த மாதம் ஏற்பட்ட காட்டுத்தீயில் இந்த ஜோடியின் வீடு எரிந்து நாசமானது. ஆனால் அது அவர்களுடைய காதலுக்கு ஒரு தடையாக இல்லை.
இந்த நிலையில் டென்னிசி மாகாணத்தில் உள்ள தனது பங்களாவில் வைத்து மைலி சைரஸ், தன் காதலர் லியாமை மணந்து கொண்டார். இதை அவர் உறுதி செய்துள்ளார். இந்த திருமணத்தில் மிக நெருக்கமானவர்கள் மட்டுமே கலந்து கொண்டதாக தகவல்கள் கூறுகின்றன.
டுவிட்டரில் மைலி சைரஸ் திருமணம் தொடர்பான படத்தை வெளியிட்டுள்ளார்.#MileyCyrus #LiamHemsworth
சுரண்டை:
சுரண்டை அருகில் உள்ள வீராணத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் என்பவரது மகள் சங்கீதா (வயது 20). இவரை காணவில்லை என கிருஷ்ணன் வீ.கே.புதூர் போலீஸ் நிலையத்தில் கடந்த 16-ந் தேதி புகார் கொடுத்தார்.
இந்நிலையில் நேற்று வீ.கே.புதூர் போலீஸ் நிலையத்தில் சங்கீதா, மதுரை ஜெய்ஹிந்த் நகரை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவருடன் மணக்கோலத்தில் தஞ்சமடைந்தார். அப்போது சங்கீதா ஆலங்குளத்தில் உள்ள ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில் படிக்கும் போது ஆலங்குளத்தில் இருந்து கல்லூரிக்கு பாலகிருஷ்ணன் ஆட்டோவில் செல்லும் போது இருவருக்கும் காதல் மலர்ந்ததாகவும் இதையடுத்து மதுரை அழகர்கோவிலில் திருமணம் செய்து கொண்டதாகவும், எங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் எனவும் கூறினர்.
இதையடுத்து சப்-இன்ஸ் பெக்டர் சத்யவேந்தன், சங்கீதாவின் பெற்றோரை அழைத்து சமாதானம் பேசினார். ஆனால் திருமணத்தை ஏற்க சங்கீதாவின் பெற்றோர் மறுத்து விட்டனர். பெண்ணுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என கூறிவிட்டு சென்றுவிட்டனர். இருவருக்கும் திருமண வயதை தாண்டியதால் சங்கீதாவை, அவரது கணவருடன் போலீசார் அனுப்பி வைத்தனர்.
வத்தலக்குண்டு அருகே கே.உச்சப்பட்டியை சேர்ந்தவர் சரத்குமார். விவசாயி. இவருக்கும் பாண்டி மகள் ஐஸ்வர்யா(வயது19) என்பவருக்கும் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
திருமணத்திற்கு பின் கணவன்-மனைவி உச்சபட்டியில் வசித்து வந்தனர். ஐஸ்வர்யா நிலக்கோட்டை அருகே குளத்துப்பட்டியில் உள்ள மகளிர் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இந்நிலையில் பாண்டியை தொடர்பு கொண்டு தங்களது மகளுக்கு உடல்நிலை சரியில்லை என செல்போனில் பேசியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பாண்டி மற்றும் அவரது மனைவி விரைந்து சென்று மகளை பார்த்தனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கணவன் வீட்டார் கூறியுள்ளனர். எங்களது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக பாண்டி விருவீடு போலீசில் புகார் அளித்தார்.
வத்தலக்குண்டு இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் வழக்குபதிவு செய்து தலைமறைவான சரத்குமாரை தேடி வருகின்றனர்.
ஐஸ்வர்யா உடல் வத்தலக்குண்டு அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. அதன்முடிவு வந்தபிறகே கொலையா? அல்லது தற்கொலையா? என்பது தெரியவரும். திருமணமாகி 9 மாதங்களே ஆவதால் ஆர்.டி.ஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. #tamilnews
சிவகாசி அருகே உள்ள கோபிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த மாரிச்செல்வி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-
எனக்கும், சிவகாசியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவருக்கும் கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அப்போது 3ம் பவுன் நகையும், ரூ.10 ஆயிரம் ரொக்கமும் வழங்கப்பட்டது.
குழந்தை இல்லாததை காரணம் காட்டி, கூடுதலாக 10 பவுன் மற்றும் பணம் கேட்டு கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் சித்ரவதை செய்தனர்.
இந்த நிலையில் எனக்கு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் என்னையும், குழந்தையையும் ஏற்க கணவர் மாரிமுத்து மறுத்துவிட்டார். மேலும் அவர் சிவகாசி சார்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த விவாகரத்து மனுவும் தள்ளுபடி ஆகிவிட்டது.
இந்த நிலையில் மதுரை சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த முத்துலட்சுமி என்பவரை மாரிமுத்து 2-ம் திருமணம் செய்துள்ளார். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த மனு மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் உத்தரவிட்டதை தொடர்ந்து சிவகாசி அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து மாரிமுத்து, அவரது பெற்றோர் சுந்தரலிங்கம்-பாப்பா, சகோதரிகள் பொன்னுத்தாய், திலகராணி மற்றும் எலிசபெத்ராணி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். #tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்