search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95580"

    திருச்சியில் இன்று திருமணம் நடைபெற இருந்த நிலையில் மணமகன் தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    மலைக்கோட்டை:

    திருச்சி மலைக்கோட்டை சறுக்குப்பாறையை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் தினேஷ் (வயது 31). இவர் லிப்ட் அமைக்கும் தனியார் நிறுவனத்தில் காண்டிராக்ட் பணி எடுத்து செய்து வந்தார். இவருக்கும் மலைக்கோட்டை தாயுமானவர் தெருவை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அவர்களது திருமணம் இன்று சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற இருந்தது. இதையொட்டி அதற்கான ஏற்பாடுகளை இருவீட்டாரும் செய்து வந்தனர்.

    முன்னதாக நேற்று மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இரு வீட்டாரின் உறவினர்கள், நண்பர்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் தினேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் அவர்களது வீட்டிற்கு சென்று விட்டனர். மணமகள் வீட்டார் அவர்களுடைய வீட்டிற்கு சென்று விட்டனர்.

    இந்த நிலையில் தினேஷ் அவரது வீட்டின் மாடிக்கு சென்று அங்குள்ள அறையில் படுத்து தூங்கினார். இன்று காலை மாப்பிள்ளை அழைப்பு நடைபெற இருந்ததால் அவரது தாய் மாடிக்கு சென்று தினேஷ் தூங்கி கொண்டிருந்த அறையின் கதவை தட்டி அழைத்தார். ஆனால் நீண்ட நேரமாகியும் உள்ளே இருந்து எந்தவித சத்தமும் வரவில்லை.

    இதைத்தொடர்ந்து உறவினர்கள் சென்று கதவை தட்டி அழைத்தனர். அப்படியும் அவர் வர வில்லை. இதையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, அறையில் உள்ள மின்விசிறியில் கயிற்றால் தூக்குப்போட்ட நிலையில் தினேஷ் தொங்கினார். அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனே அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது தினேஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இன்று திருமணம் நடைபெற இருந்த நிலையில் தினேஷ் தற்கொலை செய்து கொண்டது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்ததும் கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகவேல், சப்-இன்ஸ்பெக்டர் அம்சவள்ளி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    திருமணம் பிடிக்காததால் தினேஷ்தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தினேஷ் 10ம்வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். அவருக்கு நிச்சயம் செய்யப்பட்டிருந்த மணமகள் பட்டப்படிப்பு படித்துள்ளார். தன்னை விட அவர் அதிகம் படித்திருந்ததால் தினேஷ் ஒரு வித தயக்கத்துடன் இருந்துள்ளார். நேற்று வரவேற்பு நிகழ்ச்சியின் போதும் யாரிடமும் சரியாக முகம் காட்டி பேசாமல் இருந்துள்ளார். இரவு வீட்டிற்கு வந்ததும் தூங்க செல்வதற்கு முன்பு அவரது தாயிடம் நீண்ட நேரம் பேசியுள்ளார். அதன்பிறகு மாடிக்கு சென்ற அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார். மணமகள் தன்னை விட அதிகம் படித்திருந்ததால் தாழ்வு மனப்பான்மை காரணமாக தினேஷ் தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தினேஷ் திருமணத்தையொட்டி அவரது வீடே களை கட்டியிருந்தது. திருமண நிகழ்ச்சிக்கு வருபவர்களுக்காக வித விதமான உணவுகள் தயார் செய்யப்பட்டு வந்தது. அவர் தற்கொலை செய்ததால் களை கட்டியிருந்த திருமண வீடு சோகத்தில் மூழ்கியது.

    பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா-நிக் ஜோனஸ் திருமணம் ஜோத்பூர் அரண்மனையில் நேற்று கிறிஸ்தவ முறைப்படி நடந்தது. #NickJonas #PriyakaChopra #Marry #WesternCeremony #India
    ஜோத்பூர்:

    பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா-நிக் ஜோனஸ் திருமணம் ஜோத்பூர் அரண்மனையில் நேற்று கிறிஸ்தவ முறைப்படி நடந்தது. அவர்கள் இந்து முறைப்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) மீண்டும் திருமணம் செய்து கொள்கின்றனர்.



    பாலிவுட்டில் இருந்து ஹாலிவுட் வரை சென்று புகழ்பெற்ற பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா, தன்னைவிட சுமார் 10 வயது இளையவரான அமெரிக்க பாடகர் நிக் ஜோனசை காதலித்து வந்தார். பாலிவுட் மற்றும் ஹாலிவுட் திரையுலகில் மிகுந்த பரபரப்பாக பேசப்பட்ட இந்த ஜோடிக்கு கடந்த சில நாட்களுக்கு முன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

    பிரியங்கா சோப்ரா இந்து மதத்தையும், நிக் ஜோனஸ் கிறிஸ்தவ மதத்தையும் பின்பற்றுபவர் என்பதால் இரண்டு முறையிலும் திருமணம் செய்ய அவர்கள் முடிவு செய்தனர். அதன்படி ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூர் அரண்மனையில் டிசம்பர் 1 (நேற்று) மற்றும் 2-ந்தேதிகளில் திருமணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.



    அதன்படி நேற்று ஜோத்பூரில் உள்ள உமைத் பவன் அரண்மனையில் பிரியங்கா சோப்ரா-நிக் ஜோனஸ் திருமணம் கத்தோலிக்க கிறிஸ்தவ முறைப்படி நடந்தது. மணமக்கள் இருவரும் பாதிரியார் முன்னிலையில் மண ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டனர். மிகவும் ஆடம்பரமாக நடந்த இந்த திருமணத்தில் மணமக்களின் பெற்றோர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் கலந்து கொண்டனர்.

    அதன்படி பிரியங்கா சோப்ராவின் தாய் மது சோப்ரா, சகோதரர் சித்தார்த், உறவினர்களான பிரனிதி சோப்ரா, மன்னாரா சோப்ரா மற்றும் நிக் ஜோனசின் பெற்றோர் பால் கெவின் சீனியர், டெனிஸ், சகோதரர் கெவின், அவரது மனைவி டேனியல்லி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    மேலும் முகேஷ் அம்பானி தனது குடும்பத்தினருடன் இந்த திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். மேலும் ஹாலிவுட், பாலிவுட் பிரபலங்கள் சிலரும் பங்கேற்றனர்.



    இந்த திருமணத்தையொட்டி அரண்மனை முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. வெளியாட்கள் யாரும் உள்ளே நுழைய அனுமதி மறுக்கப்பட்டு இருந்ததுடன், யாரும் புகைப்படம் எடுப்பதை தவிர்க்கும் வகையில் திருமணத்தில் பங்கேற்ற விருந்தினர்களும் செல்போன் கொண்டு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

    கிறிஸ்தவ முறைப்படி நேற்று திருமணம் முடிவடைந்த நிலையில், பிரியங்கா சோப்ரா-நிக் ஜோனஸ் ஜோடி இன்று (ஞாயிற்றுக்கிழமை) இந்து முறைப்படி மீண்டும் திருமணம் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது. #NickJonas #PriyakaChopra #Marry #WesternCeremony #India
    தேனி அருகே திருமணத்திற்கு மைனர் பெண்ணை கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

    உத்தமபாளையம்:

    தேனி அருகே உத்தமபாளையம் ஆனைமலை யான்பட்டி பள்ளிக்கூடத் தெருவை சேர்ந்த 17 வயது இளம்பெண் தனது தோழி வீட்டிற்கு சென்றபோது மாயமானார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் இது குறித்து ராயப்பன்பட்டி போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மைனர்பெண்ணை தேடி வந்தனர்.

    இன்ஸ்பெக்டர் உலகநாதன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தியதில் போடி அருகே உள்ள சிலமலை மணியம்பட்டி இந்திரா காலனியை சேர்ந்த அர்ஜூனன் (வயது24) என்பவர்தான் மைனர் பெண்ணை கடத்தி சென்று திருமணம் செய்தது தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து அர்ஜூனனை போலீசார் கைது செய்தனர். சிறுமியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

    மரக்காணம் அருகே திருமணமான 6 மாதத்தில் இளம்பெண் மாயமானார். இது குறித்து அவரது கணவர் போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.

    மரக்காணம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள கே.என்.பாளையத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 29). இவருக்கும் அருகில் உள்ள தேவிகுளத்தை சேர்ந்த மகாலட்சுமி (19) என்பவருக்கும் கடந்த 25.5.2018 அன்று திருமணம் நடைபெற்றது.

    மகாலட்சுமி புதுவையில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு மகாலட்சுமி தேவி குளத்தில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்றிருந்தார். இரவில் வீட்டில் படுத்து தூங்கினார். காலையில் பார்த்தபோது அவரை காணவில்லை.

    இதுகுறித்து மரக்காணம் போலீசில் சுரேஷ் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான புதுப்பெண் மகாலட்சுமி எங்கு சென்றார் என விசாரணை நடத்தி, தேடி வருகின்றனர். 

    பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு ஈரோடு மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள ஊஞ்சலூர் கொளத்துப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (வயது 23). திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நவகோம்பு பகுதியை சேர்ந்தவர் அபிநயா (22).

    இருவரும் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்கள். இதையடுத்து இவர்கள் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறி காதலித்து வந்தனர்.

    இவர்களின் காதல் இருவரின் வீட்டுக்கு தெரியவந்தது. இவர்கள் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. இதையடுத்து பெண்ணின் வீட்டில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

    இந்த நிலையில் காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறினர். அவர்கள் தந்தை பெரியார் திடாவிடர் கழக மாவட்ட செயலாளர் குமரகுருபரன் முன்னிலையில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டனர்.

    இதையடுத்து காதல் ஜோடி ஈரோடு மகளிர் போலீஸ் நிலையத்தில் இன்று பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். இது குறித்து அவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வரவழைக்கப்பட்டனர். அவர்களிடம் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. 

    முகேஷ் அம்பானியின் மகள் இஷா திருமணம் வருகிற 12-ந்தேதி நடைபெற உள்ளது. அதற்கான அழைப்பிதழை ராமேசுவரம் கோவில் சன்னதியில் வைத்து சாமி தரிசனம் செய்தனர். #MukeshAmbani
    ராமேசுவரம் :

    ரிலையன்ஸ் நிறுவனங்களின் அதிபரான முகேஷ் அம்பானி, அவருடைய மகன் ஆனந்த் அம்பானி ஆகியோர் சாமி தரிசனம் செய்வதற்காக ராமேசுவரம் கோவிலுக்கு வந்தனர். முன்னதாக குருவாயூர் கோவிலுக்கு சென்ற அவர்கள் அதன்பின்னர் மதுரை வந்து அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மண்டபம் முகாமில் வந்திறங்கினர்.

    ராமேசுவரம் கோவிலில் அவர்களை கோவில் இணை ஆணையர் மங்கையற்கரசி, குருக்கள் ரவி பர்வே ஆகியோர் மாலை கொடுத்து வரவேற்றனர். பின்பு விநாயகர் சன்னதியில் 22 புனித தீர்த்தங்கள் கொண்டு வரப்பட்டு அவர்கள் மீது தெளிக்கப்பட்டது.

    அதனை தொடர்ந்து சுவாமி சன்னதி-அம்மன் சன்னதிகளில் விசேஷ பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. முகேஷ் அம்பானியின் மகள் இஷா திருமணம் வருகிற 12-ந்தேதி நடைபெற உள்ளது. அதற்கான அழைப்பிதழை சன்னதியில் வைத்து சாமி தரிசனம் செய்தனர். அதன் பின்னர் அம்மன் சன்னதியில் திருக்கோவில் சார்பில் அவருக்கு ராமலிங்க பிரதிஷ்டை படம், ராமர் படம், பிரசாதம் வழங்கப்பட்டன. பார்வையாளர்கள் புத்தகத்தில் முகேஷ் அம்பானி குறிப்பு எழுதினார்.

    தனது குடும்பத்தினர் பெயர்களில் 5 உறைகளில் தலா ரூ.11,000 வீதம் வைத்து கோவிலுக்கு நன்கொடை வழங்கினார். மேலும் அவர் கோவிலுக்கு என்ன செய்ய வேண்டும்? என்று இணை ஆணையரிடம் கேட்டார். அதற்கு இணை ஆணையர், கோவிலின் 2-ம் பிரகாரத்தின் ஒரு பகுதி திருப்பணி நிறைவடையாமல் பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து உடனடியாக அந்த பிரகாரத்தை கட்டித்தருவதாக முகேஷ் அம்பானி தெரிவித்தார். பின்னர் அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். #MukeshAmbani

    சுயபாலின காதலால் 31 வயது கனடா நாட்டுப் பெண்ணை திருமணம் செய்துகொண்ட அதிரடி மன்னன் ஜாக்கி சான் மகள் எட்டா என்ஜி(19) ஹாங்காங் நகருக்கு திரும்பியுள்ளார். #JackieChandaughter #EttaNgChokLam #Canadagirlfriend
    ஹாங்காங்:

    அதிரடி ஆக்‌ஷன் படங்களின் மூலம் உலகளாவிய ரசிகர் பட்டாளத்தை கவர்ந்திழுத்தவர் நடிகர் ஜாக்கி சான். ஹாங்காங் அழகு ராணி பட்டம்பெற்ற எலைன் என்ஜி யி லீய் என்ற பெண்ணுடன் கடந்த 1999-ம் ஆண்டுவாக்கில் நெருக்கமான தொடர்பு வைத்திருந்தார். இந்த உறவின் மூலம் பிறந்த ஒரே பெண் குழந்தையான எட்டா என்ஜி சோக் லாம் என்பவருக்கு தற்போது 19 வயதாகிறது.

    ஓரினச்சேர்க்கையில் ஆர்வம் கொண்ட எட்டா என்ஜி, கடந்த ஆண்டில் கனடா நாட்டை சேர்ந்த அன்டி ஆட்டம் என்ற 31 வயது பெண்ணின்மீது காதல்வசப்பட்டார். ஓராண்டாக கனிந்துவந்த இவர்களின் காதல் தற்போது திருமணத்தில் முடிந்துள்ளது.

    கனடா நாட்டில் இவர்கள் திருமணம் செய்து கொண்டதாக நவம்பர் 8-ம் தேதி அந்நாட்டு அரசு இவர்களுக்கு திருமண சான்றிதழ் அளித்துள்ளது. இந்நிலையில், இந்த தம்பதியர் ஹாங்காங் நகருக்கு வந்துள்ளனர்.

    இதுதொடர்பாக, பிரபல தற்காப்பு கலை வல்லுனரான எட்டா என்ஜி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், எங்கு சென்றாலும் சொந்த ஊரில் இருப்பது போன்ற பாதுகாப்பான உணர்வு கிடைப்பதில்லை. மனைவியும், மனைவியுமாக நாங்கள் தற்போது ஹாங்காங் நகருக்கு வந்துள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார்.



    ஜாக்கி சானின் ஆதரவு இல்லாமல் தாயாரின் அரவணைப்பில் வளர்ந்துவந்த எட்டா என்ஜி, கடந்த ஏப்ரல் மாதம் வீட்டில் இருந்து வெளியேறினார். வசிக்க இடமின்றி தனது கனடா காதலியுடன் ஹாங் காங் நகரில் மேம்பாலத்துக்கு அடியில் தங்கி இருந்ததாக முன்னர் செய்திகள் வெளியானது நினைவிருக்கலாம். #JackieChandaughter #EttaNgChokLam #Canadagirlfriend
    திருமணத்துக்கு வற்புறுத்தியதால் ஆற்றில் தள்ளி நர்சை கொன்ற சம்பவம் குறித்து காதலனை போலீசார் கைது செய்தனர்.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் குழித்துறை அருகே மீனச்சல், பாட்டத்துவிளை பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீஜா (வயது 23). நர்சிங் படித்துள்ளார்.

    இவர் தேங்காய் பட்டினத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்து நித்திரவிளையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணிபுரிந்து வந்தார். கடந்த 19-ந் தேதி வீட்டில் இருந்து வேலைக்கு சென்ற ஸ்ரீஜா, அதன் பின்பு வீடு திரும்பவில்லை.

    இதனால் உறவினர்கள் ஸ்ரீஜாவை தேடிவந்தனர். தோழிகளிடமும் கேட்டனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இந்த நிலையில் குழித்துறை ஆற்றில் ஒரு இளம்பெண் பிணம் கடந்த 21-ந் தேதி காலையில் மிதந்தது. இதை கண்ட அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் பிணமாக மிதந்த பெண் யார்? என்று விசாரித்தனர். இதில் அவர் தேங்காய்பட்டினம் உறவினர் வீட்டில் இருந்து மாயமான ஸ்ரீஜா என தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் ஸ்ரீஜாவின் உறவினர்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து ஸ்ரீஜாவின் உடலை அடையாளம் காட்டியதோடு, அவரது சாவில் மர்மம் இருப்பதாக கூறினர்.

    பின்னர் ஸ்ரீஜாவின் உடல் பிரேத பரிசோதனை முடிந்த பின்பு குழித்துறை அருகே மஞ்சரவிளை பகுதியில் மருதங்கோடு - களியக்காவிளை சாலையில் மறியல் போராட்டமும் நடத்தினர்.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் சமரசம் செய்தனர். மேலும் ஸ்ரீஜாவின் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்ததும் அதன் தகவல் அடிப்படையில் விசாரணை நடத்தி குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் எனவும் உறுதி அளித்தனர்.இதையடுத்து உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

    அதன்பின்பு போலீசாரின் விசாரணை தீவிரமானது. மேலும் ஸ்ரீஜாவின் பிரேத பரிசோதனை அறிக்கையும் கிடைத்தது. அதில் ஸ்ரீஜா 5 மாத கர்ப்பிணியாக இருந்தது தெரியவந்தது.

    திருமணத்திற்கு முன்பே ஸ்ரீஜா, கர்ப்பமாக இருந்ததால் அவரது சாவில் மர்மம் இருப்பதை புரிந்து கொண்ட போலீசார், ஸ்ரீஜாவின் கர்ப்பத்திற்கு காரணமானவர் யார் என விசாரித்தனர். இதில் நித்திரவிளையை அடுத்த எஸ்.டி.மங்காடு பகுதியை சேர்ந்த வேன் டிரைவர் பிபின் (26) என்பவரை ஸ்ரீஜா காதலித்து வந்தது தெரியவந்தது.

    போலீசார் பிபினை தேடி சென்றனர். அங்கு அவர் தலைமறைவாகி இருந்தார். இதனால் ஸ்ரீஜா சாவில் பிபினுக்கு தொடர்பு இருப்பதை உறுதி செய்த போலீசார் அவரை தேடி கண்டுபிடிக்க நடவடிக்கை எடுத்தனர்.

    களியக்காவிளை சப்- இன்ஸ்பெக்டர் மோகன அய்யர் தலைமையிலான போலீசார் இன்று அதிகாலையில் பிபினை கண்டு பிடித்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது அவர் தான் ஸ்ரீஜாவை ஆற்றில் தள்ளி கொலை செய்ததாக கூறினார். இதையடுத்து போலீசார் பிபினை கைது செய்தனர்.

    பின்னர் அவர் கொலைக்கான காரணம் குறித்து போலீசாரிடம் கூறியதாவது:-

    நித்திரவிளை ஆஸ்பத்திரிக்கு சென்று வந்த ஸ்ரீஜாவுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி வந்தோம். அப்போது அவரை திருமணம் செய்து கொள்வதாக நான் ஆசை வார்த்தை கூறினேன்.

    இதனால் நாங்கள் இருவரும் உல்லாசமாக இருந்தோம். இதில் ஸ்ரீஜா கர்ப்பம் ஆனார். இது பற்றி ஸ்ரீஜா என்னிடம் கூறினார்.ஆஸ்பத்திரிக்கு சென்று பரிசோதித்த போது அவர் 5 மாத கர்ப்பம் ஆக இருப்பது தெரியவந்தது.

    கர்ப்பிணி ஆனதும் ஸ்ரீஜா தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி என்னை வற்புறுத்தினார். அதற்கு நான் ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் எங்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

    இந்த நிலையில் தான் கடந்த 19- ந் தேதி இரவு நான் ஸ்ரீஜாவை சந்தித்து என்னுடன் வருமாறு கூறினேன். நாங்கள் இருவரும் குழித்துறையில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு சென்று கர்ப்பத்தை கலைத்துவிட முடிவு செய்தோம். கர்ப்பமாகி 5 மாதம் ஆகிவிட்டதால் கர்ப்பத்தை கலைக்க முடியாது என்று ஆஸ்பத்திரியில் கூறிவிட்டனர்.

    இதை கேட்டதும் ஸ்ரீஜா என்னிடம் மீண்டும் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி பிரச்சினை செய்தார். இதில் எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது. எனவே நான் அவரை குழித்துறை ஆற்று பாலம் அருகே அழைத்து வந்தேன். அங்கு ஸ்ரீஜாவுடன் பேசிக்கொண்டிருந்தேன். திடீரென அவரை ஆற்றில் தள்ளிவிட்டேன். இதில் அவர் தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டார்.அவர் இறந்தது தெரிந்ததும் நான் தலைமறைவாகி விட்டேன். ஆனால் போலீசார் என்னை தேடி கண்டுபிடித்து கைது செய்துவிட்டனர். இவ்வாறு அவர் போலீசில் கூறியுள்ளார். இது தொடர்பாக சப்- இன்ஸ்பெக்டர் மோகன அய்யர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews
    பாளை அருகே திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணை கற்பழித்த வேன் டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.
    நெல்லை:

    தூத்துக்குடி மாவட்டம் வாஞ்சி மணியாச்சி அருகே உள்ள சவுந்தர்ராஜபுரத்தை சேர்ந்தவர் கருப்பசாமி. இவர் புதுக்கோட்டை அருகே உள்ள ஒரு கடல் உணவு தயாரிக்கும் நிறுவனத்தில் வேன் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    இவரது வேனில் பாளை அருகே உள்ள குமந்தானூரை சேர்ந்த 17 வயது இளம்பெண். அந்த நிறுவனத்துக்கு தினசரி வேலைக்கு சென்று வந்தார். அப்போது கருப்பசாமிக்கும், அந்த இளம்பெண்ணுக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி வந்தனர்.

    அப்போது கருப்பசாமி எப்படியும் உன்னைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று ஆசைவார்த்தை கூறி அந்த இளம்பெண்ணை கற்பழித்தார். தற்போது கருப்பசாமி அந்த இளம் பெண்ணை திருமணம் செய்ய மறுத்து பேசுவதை நிறுத்தி விட்டாராம்.

    இதனால் அந்த இளம்பெண் பாளை தாலுகா மகளிர் போலீசில் புகார் செய்தார். பெண் போலீசார் விசாரணை நடத்தி கருப்பசாமி மீது கற்பழிப்பு வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி தேடி வருகிறார்கள். #tamilnews
    ஸ்ரீமுஷ்ணம் அருகே திருமணமான 1½ ஆண்டுகளில் இளம்பெண் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஸ்ரீமுஷ்ணம்:

    ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள மேல்பாதிபாளையங் கோட்டையை சேர்ந்தவர் பிரபு. இவரது மனைவி ரம்யா( வயது 21). இவர்களுக்கு திருமணமாகி 1½ ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை.

    கடந்த 6 மாதத்துக்கு முன்பு பிரபு வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்று விட்டார். ரம்யா தனது மாமியாருடன் மேல்பாதி பாளையங்கோட்டையில் வசித்து வந்தார். இந்த நிலையில் ரம்யா தனது தாய் வீட்டுக்கு சென்று வருவதாக மாமியாரிடம் கூறிவிட்டு சென்றார். அதன்பின் அவர் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த அவர் மாமியார் மற்றும் பெற்றோர் பல இடங்களில் ரம்யாவை தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இது குறித்து ரம்யாவின் தாய் கலா சோழத்தரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து மாயமான ரம்யாவை தேடி வருகிறார். #tamilnews
    காங்கயம் அருகே 2-வது திருமணம் செய்வதற்கு கல்லூரி மாணவியை கடத்திய பட்டதாரி வாலிபர் கைது செய்யப்பட்டார்.

    காங்கயம்:

    காங்கயம் அருகே உள்ள ஊதியூர் தாளக்கரையை சேர்ந்தவர் தனசேகரன்(21). பட்டதாரி. இவர் அதே பகுதியை சேர்ந்த பி.காம். முதலாம் ஆண்டு படித்து வரும் மாணவியை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார்.

    மாணவியை திருமணம் செய்து கொள்வதாக கூறி உள்ளார். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தனசேகரனுக்கும் அவரது உறவினர் பெண்ணுக்கும் கடந்த 2 மாதத்திற்கு முன் திருமணம் நடைபெற்றது.

    ஆனாலும் அவர் கல்லூரி மாணவியை 2-வதாக திருமணம் செய்து கொள்ளும் நிலையில் இருந்தார். சம்பவத்தன்று இரவு வீடு அருகே நின்று கொண்டு இருந்த மாணவியை தனசேகரன் சந்தித்தார்.

    தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி வற்புறுத்தி உள்ளார். இதற்கு மாணவி மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த தனசேகரன் மாணவியை மோட்டார் சைக்கிளில் ஊட்டிக்கு கடத்தி சென்று உள்ளார்.

    மாணவியை காணாததால் அவரது தந்தை ஊதியூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை மாணவியுடன் தனசேகரன் ஊட்டியில் இருந்து ஊருக்கு திரும்பி கொண்டு இருந்தார்.

    இந்த தகவல் மாணவியின் உறவினர்களுக்கு தெரிய வந்தது. அவர்கள் பல்லடத்தில் காத்து இருந்தனர். அவர்களை பார்த்ததும் மாணவியை இறக்கி விட்டு விட்டு தனசேகரன் தப்பி சென்று விட்டார்.

    அவரை மாணவியின் உறவினர்கள் மடக்கி பிடிக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. இது தொடர்பாக ஊதியூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு தாராபுரம் - பொள்ளாச்சி சாலையில் ரவுண்டானா அருகே தனசேகரன் நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு விரைந்து சென்ற போலீசார் தனசேகரனை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    பின்னர் அவர் காங்கயம் மாஜிஸ்திரேட்டு சுப்பிரமணியம் முன் ஆஜர்படுத்தப்பட்டார். தனசேகரனை 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    மாதவரம் அருகே திருமணம் செய்தவதாக கூறி பட்டதாரி பெண்ணை ஏமாற்றிய டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
    செங்குன்றம்:

    மாதவரம் பால்பண்ணை மாத்தூர் இடைமா நகரைச் சேர்ந்த 21 வயதுடைய பட்டதாரி பெண்ணும், கொசப்பூர் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த டிரைவர் அசோகனும் கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்தனர்.

    இந்த நிலையில் இளம்பெண் மாதவரம் மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், அசோகன் தன்னை காதலித்து திருமணம் செய்துக் கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிவிட்டதாக கூறி இருந்தார். இது குறித்து இன்ஸ்பெக்டர் லட்சுமி வழக்குபதிவு செய்து அசோகனை கைது செய்தார். #tamilnews
    ×