என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 95580"
பல்லடம்:
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள பொம்மநாயக்கன் பட்டியை சேர்ந்தவர் முத்துராஜ். இவரது மகன் சவுந்திரபாண்டி(வயது 27). இவர் கடந்த 3 வருடங்களாக திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையத்தில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்து சின்னக்கரையில் உள்ள பனியன் கம்பெனியில் டெய்லராக வேலை பார்த்து வந்தார்.
இந்தநிலையில் சவுந்திரபாண்டிக்கு பனியன் கம்பெனியில் வேலை பார்த்த அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்தனர். இந்த சமயத்தில் சவுந்திரபாண்டி திருமணம் செய்வதாக சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்தார்.
பின்னர் கடந்த 2 மாங்களுக்கு முன்பு சவுந்திரபாண்டி ஊருக்கு சென்றார். மீண்டும் அவர் திரும்பி வரவில்லை. கடந்த 3 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்த சிறுமி மயங்கி கீழே விழுந்தார். அவரை அவரது பெற்றோர் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அப்போது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து பெற்றோர் சிறுமியிடம் நடத்திய விசாரணையில் அவர் சவுந்திரபாண்டியுடன் பழகியதால் கர்ப்பமானதாக கூறினார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் பல்லடம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் மாணிக்கம் சவுந்திரபாண்டியை அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் சிறுமியை கர்ப்பமாக்கியதை ஒப்புக்கொண்டார். மேலும் ஊருக்கு சென்ற சவுந்திரபாண்டி சிறுமியிடம் பழகியதை மறைத்து கடந்த 9-ந் தேதி உறவினர் பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் சவுந்திரபாண்டியை போக்சோ சட்டத்தில் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள குப்பதாசன் காட்டுவளவு பகுதியை சேர்ந்த 16 வயது மாணவி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
அவரை ஓசூர் பகுதியில் உள்ள ஓர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ஜலகண்டாபுரம் பகுதியை சேர்ந்த மணி (26) என்பவர் ஆசை வார்த்தை கூறி கடந்த மே மாதம் கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.
இதையடுத்து மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் மணி மீது வழக்கு பதிவு செய்த எடப்பாடி போலீசார், அவர்கள் இருவரையும் தீவிரமாக தேடிவந்தனர். இதனிடையே பள்ளி மாணவியை கடத்தி சென்ற மணி அவரை கோவிலில் வைத்து திருமணம் செய்ததுடன் திருப்பூர் மாவட்டத்தில் தங்கி தனிக்குடித்தனம் நடத்திவந்ததாக கூறப்படுகிறது.
இதனை அறிந்த மாணவியின் தந்தை மற்றும் அவரது உறவினர்கள் மணியை சந்தித்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதுடன் அவரை தீபாவளிக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.
மாமானரின் அழைப்பினை ஏற்ற மணி தனது மனைவியை அழைத்துக் கொண்டு கடந்த சில தினங்களுக்கு முன்பு குப்பதாசன் காட்டுவளவு பகுதியில் உள்ள மாமனார் வீட்டிற்கு வந்திருந்தார்.
இந்த நிலையில் தீபாவளி தினமான நேற்று காலை புதுமாப்பிள்ளை மணி மாமனார் வீட்டில் தலைக்கு எண்ணெய் வைத்து குளித்து, புத்தாடை அணிந்து தலை தீபாவளியினை கொண்டாட தயாராக இருந்தார்.
அப்போது இளம்பெண்ணை கடத்தி சென்ற மணி வந்திருக்கும் தகவல் அறிந்த எடப்பாடி போலீசார் மாமானார் வீட்டில் மகிழ்ச்சிகரமாக தீபாவளி கொண்டாட தயாராக இருந்த மணியை கைது செய்து எடப்பாடி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
தீபாவளி பண்டிகையினை கொண்டாட அனுமதிக்கும்படியும் பண்டிகை முடிந்து தானே நேரில் வந்து ஆஜராக தயாராக உள்ளதாகவும் மணி போலீசாரிடம் மன்றாடி கேட்டும் போலீசார் கேட்கவில்லை. மணியிடம் தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.#Diwali #GroomArrested
கோவை பூண்டி அருகே உள்ள, செம்மேடு கிராமத்தை சேர்ந்த வேலுச்சாமி- வெள்ளையம்மாள் தம்பதியரின் மகன் சிவகார்த்திகேயன்(33). எம்.எஸ்.சி., படித்துள்ளார். இவர் 2008-ல் ஸ்காட்லாந்தில் உள்ள பிரபலமான நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார்.
இவர் அதே நிறுவனத்தில் பணிபுரிந்த அலிஷியா டெய்லர் (26) என்பவரை 5 ஆண்டுகள் காதலித்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதற்கு இரு வீட்டு பெற்றோரும் சம்மதம் தெரிவித்தனர்.
அதன் படி பெற்றோர் விருப்பத்துடன் ஜூலை 27-ல் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.இதையடுத்து தன் பெற்றோர் முன்னிலையில், இந்து முறைப்படி திருமணம் செய்வதற்கு சிவகார்த்திகேயன் முடிவு செய்தார்.
கடந்த, 22-ந் தேதி ஸ்காட்லாந்திலிருந்து, இருவரும் கோவை வந்தனர். பின்னர் செம்மேடு முட்டம் நாகேஸ்வரர் கோவிலில் பெற்றோர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில், சிவகார்த்திகேயன்-அலிஷியா டெய்லர் திருமணம் தமிழ் கலாசார படி எளிமையாக நடந்தது. இத்தம்பதிகள், தீபாவளி பண்டிகை முடிந்தவுடன் மீண்டும் ஸ்காட்லாந்து செல்ல உள்ளனர். #tamilnews
தூத்துக்குடி தாளமுத்துநகர் தாய்நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவருடைய மகன் அருண்குமார் (வயது 22). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் ரெயில்வேயில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார்.
தூத்துக்குடி-எட்டயபுரம் ரோட்டில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் ஸ்ரீஜா (20). திருநங்கையான இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. படித்து வருகிறார்.
இவரும், அருண்குமாரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இதையடுத்து 2 பேரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். இதற்கு அருண்குமார் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது. எனினும் பெற்றோர் எதிர்ப்பையும் மீறி ஸ்ரீஜாவை திருமணம் செய்ய அருண்குமார் முடிவு செய்தார்.
அதன்படி, அக்டோபர் 31-ந் தேதி (நேற்று) தூத்துக்குடி சிவன் கோவிலில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து, திருமண அழைப்பிதழ் அச்சிட்டு உறவினர்கள், நண்பர்களுக்கு கொடுத்தனர்.
இதையடுத்து, மணமக்கள் நேற்று காலை சிவன் கோவிலுக்கு வந்தனர். அவர்களுடன் ஸ்ரீஜாவின் கல்லூரி தோழிகள், அருண்குமாரின் சில உறவினர்கள் மற்றும் நண்பர்களும், ஏராளமான திருநங்கைகளும் வந்து இருந்தனர். அருண்குமாரின் பெற்றோர் வரவில்லை.
மணமக்கள் கோவில் அலுவலகத்துக்கு சென்றபோது, இந்த திருமணத்தை நடத்த அனுமதிக்க முடியாது என்று அங்கிருந்த ஊழியர்கள் தெரிவித்தனர். இந்து திருமண சட்டப்படி ஒரு ஆண், பெண்ணைத்தான் திருமணம் செய்ய முடியும் என்றும் திருநங்கையை திருமணம் செய்ய முடியாது என்றும் அவர்கள் திட்டவட்டமாக கூறினர்.
ஆனால், திருநங்கையை திருமணம் செய்ய அரசு அங்கீகாரம் அளித்து உள்ளதாகவும், எனவே சட்டப்படி இந்த திருமணத்தை நடத்தலாம் என்றும் கூறி திருமண வீட்டார் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் திடீரென திருநங்கைகள் கோவில் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள் கோவில் நிர்வாக அதிகாரி மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு தெரிவித்தனர். பின்னர் அவர்கள், திருமணத்தை வேண்டுமானால் கோவிலில் நடத்திக் கொள்ளுங்கள். அதற்கான பதிவு சான்றிதழை தரமுடியாது என்று கூறினார்.
ஆனால், அதனை ஏற்க மறுத்த திருநங்கைகள் இந்த திருமணத்தை சட்டப்படி பதிவு செய்ய வேண்டும் என்றும் முறைப்படி சான்றிதழ் வழங்க வேண்டும் என்றும் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி மத்தியபாகம் போலீசார் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அருண்குமாரிடம், திருநங்கையை திருமணம் செய்ய அரசு அங்கீகாரம் அளித்ததற்கான அரசாணை நகல் இருந்தால் கொடுங்கள், அதிகாரிகளிடம் பேசி திருமணத்தை நடத்த அனுமதி பெறலாம் என்று போலீசார் தெரிவித்தனர். ஆனால் அருணிடம் அதற்கான நகல் ஏதும் இல்லை.
அதன்படி காலை 11.40 மணிக்கு மணமக்கள் மாலை மாற்றினர். பின்னர் திருநங்கை ஸ்ரீஜா கழுத்தில் அருண்குமார் தாலி கட்டினார். அப்போது அங்கு கூடி இருந்த திருநங்கைகள் உற்சாகமாக ஆரவாரம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மணமக்களுக்கு கல்லூரி மாணவிகள், நண்பர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
இதுகுறித்து திருநங்கைகள் கூறும்போது, ‘தற்போது திருமணம் நடந்து உள்ளது. இந்த திருமணத்தை முறைப்படி பதிவு செய்வதற்கான நடவடிக்கை எடுப்போம்’ என்று தெரிவித்தனர். #TransgenderMarriage
கோத்தகிரி:
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள ரோஸ் காட்டேஜ் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் குமார். சவுதி அரேபியாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி லோகேஸ்வரி (25). இவர்களுக்கு கார்த்திகேயன் (4) என்ற மகன் உள்ளான். லோகேஸ்வரி தனது மகனுடன் தனியாக வசித்து வந்தார்.
இவர் கழுத்து அறுபட்ட நிலையில் வீட்டில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவரது மகன் கார்த்திகேயன் கழுத்தும் அறுக்கப்பட்டு இருந்தது.
அவன் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறான். லோகேஸ்வரியை கொன்ற கொலையாளியை பிடிக்க குன்னூர் டி.எஸ்.பி. கிருஷ்ண மூர்த்தி தலைமையில் 4 தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள நஞ்சை ஊத்துக்குளியை சேர்ந்த திருமூர்த்தி மகன் கவுரி சங்கரை (27) பிடித்து விசாரணை நடத்தினார்கள்.
அப்போது அவர் லோகேஸ்வரியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். இதனை தொடர்ந்து அவரை கைது செய்தனர். கைதான கவுரி சங்கர் போலீசாரிடம் கொடுத்த வாக்கு மூலத்தில் கூறி இருப்பதாவது-
நான் ஈரோடு பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான எண்ணை நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறேன். மேலும் பகுதி நேர வேலையாக தனியார் நிறுவனத்தின் உடல் எடையை குறைக்கும் பொருட்களை வாங்கி விற்பனை செய்து வந்தேன்.
இந்த நிறுவனம் மாதந் தோறும் ஈரோட்டில் விற்பனையாளர் கூட்டம் நடத்தியது. அந்த கூட்டத்தில் லோகேஸ்வரியும் கலந்து கொள்ள வந்தார். அப்போது அவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் காதலாக மாறியது.
கடந்த சில மாதங்களுக்கு முன் சென்னிமலை கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டோம். பின்னர் நான் அடிக்கடி கோத்தகிரி வந்து லோகேஸ்வரியுடன் தங்கி வந்தேன். அப்போது தான் அவருக்கு ஏற்கனவே திருமணம் நடைபெற்றது தெரியவந்தது.
மேலும் லோகேஸ்வரிக்கு பல ஆண்களுடன் தொடர்பு இருப்பது எனக்கு தெரிய வந்தது. கடந்த 27-ந் தேதி மாலை 5 மணிக்கு கோத்தகிரி வந்தேன்.
லோகேஸ்வரியிடம் இது குறித்து கேட்டபோது தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அவர் நான் கட்டிய தாலியை கழற்றி வீசினார். இதனால் கோபம் அடைந்த நான் வீட்டில் இருந்த கத்திரிகோலால் லோகேஸ்வரி கழுத்தில் குத்தினேன்.
இதில் அவர் மயங்கி விழுந்தார். பின்னர் அவரது கழுத்தை அறுத்தேன். இதில் இறந்து விட்டார். அப்போது அவரது மகன் அங்கு நின்றான். அவன் வெளியில் யாரிடமும் சொல்லி விடுவான் என்ற பயத்தில் அவனது கழுத்தையும் அறுத்தேன்.
பின்னர் லோகேஸ்வரி கழற்றி வீசிய தாலியை எடுத்து கொண்டு திருப்பூர் வந்தேன். அங்குள்ள அடகு கடையில் அதனை அடகு வைத்து பணம் பெற்று ஈரோட்டுக்கு சென்றேன்.
பின்னர் நான் பயன்படுத்திய செல்போன் சிம் கார்டை கழற்றி வைத்து விட்டேன். ஆனாலும் போலீசார் எனது செல்போன் எண்ணை வைத்து கைது செய்து விட்டனர்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
கைதான கவுரி சங்கரை திருப்பூர் அழைத்து சென்ற போலீசார் அவர் அடகு வைத்த நகையை மீட்டனர். பின்னர் அவரை கோத்தகிரி அழைத்து வந்து மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிபதி ஸ்ரீதர் முன்னிலையில் ஆஜர் படுத்தினர். அவரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து கவுரி சங்கர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
கொலையாளியை விரைந்து பிடித்த தனிப்படை போலீசாரை நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முக பிரியா பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
மதுரை:
மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள ஹார்விபட்டியைச் சேர்ந்த 17 வயதுடைய இளம்பெண் வில்லாபுரம் மீனாட்சி நகரில் உள்ள ஒரு டெய்லர் கடையில் வேலை பார்த்து வந்தார்.
அப்போது இவருக்கும், அவனியாபுரம் வைக்கம் பெரியார் நகரைச் சேர்ந்த கணேசன் மகன் ராஜசேகரன் (வயது 22) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது.
இருவரும் பல்வேறு இடங்களில் சுற்றித் திரிந்தனர். அப்போது திருமணம் செய்வதாக கூறி ராஜசேகரன், அந்த பெண்ணுடன் நெருங்கி பழகினார்.
இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக ராஜசேகரன், அந்த பெண்ணிடம் பழகுவதை நிறுத்தினார். மேலும் பிரச்சினை செய்ததாகவும் தெரிகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜசேகரனை கைது செய்தனர்.
வேலூர்:
வேலூர் சத்துவாச்சாரி பிராமணர் தெருவை சேர்ந்தவர் சோனா (வயது 19). வேலூர் அண்ணாசாலையில் உள்ள கல்லூரியில் பி.எஸ்.பி. 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.
சோனாவும், ஆரணியை சேர்ந்த கார் டிரைவரான வில்லவன் கோதை (24) என்பவரும் காதலித்தனர். இவர்களது காதலுக்கு பெண் வீட்டு தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில், கடந்த 19-ந் தேதி வீட்டில் இருந்த சோனா திடீரென மாயமானார்.
மகளை கண்டுபிடித்து தரக்கோரி சத்துவாச்சாரி போலீசில் பெற்றோர் புகார் அளித்தனர். மாணவியை போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில், மாயமான மாணவி சோனா காதலன் வில்லவன் கோதையை திருமணம் செய்து கொண்டு மணக்கோலத்தில் வேலூர் எஸ்.பி. அலுவலகத்தில் இன்று தஞ்சமடைந்தார்.
போலீசாரிடம், பாதுகாப்பு கேட்டு மனு கொடுத்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருக்கோவிலூர்:
திருக்கோவிலூர் வடக்கு வீதி, கங்கையம்மன்கோவில் தெருவைச் சேர்ந்தவர் சீனுவாசன். இவரது மனைவி கீதா (வயது45). இவர்களது மகள் பிரியதர்ஷனி.
இவர் திருவண்ணாமலையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பி.எஸ்.சி 2-ம் ஆண்டு படித்து வருகின்றார். பிரியதர்ஷினி தினமும் கல்லூரிக்கு போகும் போதும், வீடு திரும்பும் போது திருக்கோவிலூர் வடக்கு மாடவீதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் தமிழ்ச்செல்வன் (வயது 39) என்பவர் அவரை திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தி வந்தார்.
அவ்வாறு தன்னை திருமணம் செய்து கொள்ளா விட்டால் முகத்தில் ஆசிட் வீசிவிடுவேன் எனவும் கொலை மிரட்டல் விடுத்தார். மேலும் தமிழ்ச் செல்வன் கீதாவின் கடைக்கு சென்று அங்கிருந்த கீதா மற்றும் அவரது மகள் பிரியதர்ஷினி ஆகிய 2 பேரையும் தரக்குறைவான வார்த்தைகளால் பேசி மிரட்டினார்.
இது குறித்து கீதா திருக்கோவிலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் உடனே நடவடிக்கை எடுக்க துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் உத்தரவிட்டார். அதன்பேரில் திருக்கோவிலூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ் பெக்டர் மகேஷ்வரி, சப்- இன்ஸ்பெக்டர் சுமதி ஆகியோர் ஆட்டோ டிரைவர் தமிழ்ச்செல்வன் மீது வழக்குபதிவுசெய்து வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் திருக்கோவிலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை:
மதுரை திருமங்கலம் அருகே உள்ள மேல உரப்பனூரைச் சேர்ந்த ராஜேந்திரன் மகள் லதா (வயது 22). இவர் அதே பகுதியைச் சேர்ந்த சிவா (23) என்பவரை ஓராண்டாக காதலித்து வந்தார்.
இந்த நிலையில் சிவா திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி லதாவை கற்பழித்து விட்டாராம்.
இதையடுத்து லதா திருமணம் செய்ய வற்புறுத்தி உள்ளார். ஆனால் சிவா, அவரது தாயார் வெண்ணிலா மற்றும் உறவினர் ராஜா தூண்டுதலின் பேரில் திருமணத்திற்கு மறுத்து விட்டார்.
இது தொடர்பாக லதா திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சிவசக்தி வழக்குப்பதிவு செய்து சிவாவை கைது செய்து தீவிர விசரணை நடத்தி வருகிறார்.
இதேபோல் மதுரை வளங்கன் குளத்தைச் சேர்ந்த பழனி மகள் சின்னபாண்டியம்மாள் (வயது 17). இவரை செல்லம் பட்டியைச் சேர்ந்த பிரபு (24) என்பவர் காதலித்து வந்தார்.
இந்த நிலையில் பிரபு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமண ஆசை வார்த்தை கூறி சின்ன பாண்டியம்மாளை கடத்திச் சென்று விட்டார். இது தொடர்பாக பழனி சிந்துப்பட்டி போலீசில் புகார் செய்தார். இதையடுத்து பிரபு, காதலி சின்ன பாண்டியம்மாளை போலீசிடம் ஒப்படைத்தார்.
இந்த நிலையில் பழனி சம்பவத்தன்று காலை வீட்டில் இருந்தார். அப்போது அங்கு வந்த பிரபு, பழனியை தாக்கிவிட்டு சின்ன பாண்டியம்மாளை மீண்டும் கடத்திச் சென்று விட்டார். இது தொடர்பாக பழனி செக்கானூரணி போலீசில் புகார் செய்தார். இன்ஸ் பெக்டர் வனிதா வழக்குப்பதிவு செய்து பிரபுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்