search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95585"

    • புத்தி அல்லது ஞானத்தின் அடிப்படையில் செய்யப்படுவதே ‘தியானம்’ ஆகும்.
    • தியானப் பயிற்சி மேற்கொள்பவர்கள், முதலில் தன்னை ஆன்மா என்று உணர வேண்டும்.

    'நான் ஒரு ஆன்மா' என்ற உணர்வு ஏற்படாதவரை, ஒருவரால் இறைவனுடன் எந்த உறவும் கொள்ள முடியாது. பரமாத்மாவுடனான மனிதனின் உறவு, உடலால் அழியக்கூடிய தற்காலிகமானது அல்ல. ஆன்மா என்னும் மனதால் ஏற்படுத்திக்கொள்ள வேண்டிய நிலையான உறவு.

    எனவே தியானப் பயிற்சி மேற்கொள்பவர்கள், முதலில் தன்னை ஆன்மா என்று உணர வேண்டும். அதற்கு தடையாக இருப்பது உடல். அதுதான் ஆன்மாவிற்கும், பரமாத்மாவிற்கும் இடையே சுவரை எழுப்புகிறது. உடலின் மீதான மோகம், இறைவனிடம் இருந்து நாம் விலகவும், ஆத்மா என்ற உணர்வு, நாம் இறைவனிடம் நெருங்கவும் முதல் படியாக அமைந்துள்ளது.

    தியானம் எளிமையானது

    இன்றைக்கு யோகப் பயிற்சி என்பது, உடலை வருத்திச் செய்யும் பயிற்சியாக மாறிவிட்டது. அது ஆரோக்கியத்திற்கு வேண்டுமானால் உதவலாம். ஆனால் ஆன்மாவை, பரமாத்மாவுடன் இணைக்க ஒதுபோதும் உதவாது. உடலை வருத்தும் விரதம் இருப்பது, தவம் மேற்கொள்வது போன்ற முயற்சிகளும் கூட, உடலின் மீதான அடிப்படை செயல்களில் இறங்க தூண்டுகோலாக மாறிவிடும். புத்தி அல்லது ஞானத்தின் அடிப்படையில் செய்யப்படுவதே 'தியானம்' ஆகும். இறைவனையே சிந்தித்தபடி இருந்து, அவனிடம் நம் முழு கவனத்தையும் திருப்ப வேண்டும். அவ்வாறு செய்வதே எளிய ராஜயோகமாகும்.

    • சீரான வழக்கமாக மேற்கொள்ளும் தியானம் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
    • தியானம் ஒருவரின் உள்ளுணர்வுத் திறனை அதிகரிக்கிறது.

    "மனம் கிளர்ச்சியிலிருந்து விடுபட்டு, அமைதியாகவும், நிம்மதியாகவும் இருக்கும்போது, ​​தியானம் நிகழ்கின்றது. தியானம் செய்வதன் மூலம், உங்கள் உடலை ஒரு ஆற்றல் மூலமாக உருவாக்குவதன் மூலம் உங்கள் உடலை ஒரு சக்தி நிறைந்த ஆற்றல்மய்யமாக மாற்ற முடியும். "

    ~ குருதேவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்

    1. தியான நிலை ஆழமாக இருக்கும்போது, ​​ தியானம் முடிந்த பின்னரும் தியானத்தின் விளைவு சில நிமிடங்களுக்கு தொடர்கிறது.

    2. உடல் நிதானமாக இருந்தாலும் மனம் எச்சரிக்கையாக இருக்கிறது. இது முழுமையான ஓய்வு அளிக்கிறது.

    3. தியானம் ஒருவரின் உள்ளுணர்வுத் திறனை அதிகரிக்கிறது.

    4. உடலில் ஆக்ஸிஜன் நுகர்வு வீதம் குறைகிறது. ஆகையால், உடலியல் ரீதியாக ஒருவர் ஆறு அல்லது எட்டு மணிநேர தூக்கத்திலிருந்து பெறுவதை விட அந்த சில தியான நிமிஷங்களில் ஆழமாக ஓய்வு பெறுகிறார். இருப்பினும், தியானம் தூக்கத்திற்கு மாற்றானது அல்ல.

    5. சீரான வழக்கமாக மேற்கொள்ளும் தியானம் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, மனம் எச்சரிக்கையாக இருக்கிறது, புத்தி கூர்மையாகிறது. நல்ல ஆரோக்கியமும் நிதானமான மனமும் இயல்பாகவே உற்சாகத்தையும் ஆற்றலையும் அதிகரிக்கும்.

    • இன்று நாம் சந்திக்கும் பல பிரச்னைகளுக்கு காரணம் நம் மனம்தான்.
    • மனதை ஒருமுகப்படுத்தி பல சாதனைகளை புரிய உதவுகிறது தியானம்.

    அடக்கப்பட்ட மனம் நமது நண்பன். அடங்காத மனம் நம் விரோதி. இன்று நாம் சந்திக்கும் பல பிரச்னைகளுக்கு காரணம் நம் மனம்தான். நமக்கு ஏற்படும் நோய்களுக்குக் காரணமும் ஆரோக்கியமற்ற எண்ணங்களைக் கொண்ட மனம்தான். எனவே முள்ளை முள்ளால் எடுப்பதுபோல, மனதை மனதால்தான் அடக்கமுடியும். இதற்கு நம் கையில் இருக்கும் ஒரே கருவி தியானம். இருப்பினும் தியானத்தினால் வரும் பயன்கள் என்ன? தியானத்தை ஒருவர் தொடர்ந்து செய்யும்போது அவர் சந்திக்கும் தடைகள் என்ன ?

    தியானத்தில் ஒவ்வொரு நிலையை அடையும்போதும் இப்படிப் பல தொல்லைகள் வருவது சகஜம். அதை சரியாகப் புரிந்துக்கொண்டு, சமயோசிதத்தால் அவற்றை உணர்ந்து குருவின் உதவியால் அவற்றைத் தாண்டினால் பேராற்றல் கிடைப்பது நிச்சயம்.

    தியானம் செய்யும் போது வரக்கூடிய 10 முக்கிய தடைகள்...

    1. சிலருக்கு ஆரம்பகாலத்தில் தியானம் செய்தபோது இருந்த ஆர்வம் போகப்போக குறைந்துவிடும். இதற்குக் காரணம் தியானத்தில் உடனடி பலன்களை எதிர்பார்ப்பதால்தான். தியானத்தில் உயர்ந்த நிலை அடைய குறைந்தது 6 ஆண்டுகளாவது ஆகும். "தியானம் செய்வதினால் என்ன பயன் ?" என்னும் அலட்சியம் கூடவே கூடாது. பொறுமையும் நம்பிக்கையும் அவசியம். தியானத்தில் வெற்றிபெற்ற யோகிகளான விவேகானந்தர், ரமணர், போன்ற யோகிகளை முன்மாதிரியாக வைத்துக்கொள்ளுங்கள்.

    2. ஓசைகள், குப்பைக்கூளங்கள், தீயவர்கள் உடனிருக்கும் சூழல்களில் தியானம் செய்ய மனம் வராதுதான். முடிந்தவரை சூழலை மாற்றிக்கொள்ளுங்கள். இல்லையெனில், தியானம் மனதில்தானே நடக்கின்றது என்பதைத் தெளிவாக புரிந்துக்கொண்டு எதைப்பற்றியும் கவலை கொள்ளாமல் தியானம் செய்யுங்கள்.

    3. நோய்கள் வந்தால் தியானத்தை நிறுத்துவது கூடாது. எப்படி ஒருவேளை உணவை நாம் எப்போதும் தவிர்க்க நினைப்பதில்லையோ, எந்த ஒரு நிமிடமும் நாம் சுவாசிப்பதை எப்படி நிறுத்துவதில்லையோ அதுபோல தியானமும் நம் அன்றாட வாழ்வில் ஒரு அங்கமாக மாற வேண்டும். ஆசனம், தியானம், பிராணாயாமம் ஆகியவற்றை தொடர்ந்து செய்யுங்கள் நோய்களைத் தவிருங்கள்.

    4. எல்லோரிடமும் சம்பந்தம் இல்லாமல் தியானப்பயிற்சியை பற்றி பேசாதீர்கள். ஒவ்வொரு குருவும் அவர்களின் சிஷ்யர்களுக்கு சொல்லித்தரும் தியானத்தில் ஒரு சில வேறுபாடுகள் இருக்கும். அதைப் பற்றி யோசித்துக்கொண்டு நம்முடையது சரியில்லையோ என்று நினைப்பதால் தியானம் செய்ய மனம் வராது.

    5. தியானத்தை விட்டு விட்டு செய்யாதீர்கள். கண்ட நேரத்திலும், கண்ட இடங்களிலும் அதை செய்யாதீர்கள். காலை 4 மணிக்கோ அல்லது 6 மணிக்கோ, மாலை 6 மணிக்கோ அல்லது இரவு 8 மணிக்கோ தொடர்ந்து ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் செய்வதை பழக்கமாக்கிக்கொள்ளுங்கள்.

    6. நாவை அடக்கவேண்டும். அதிகம் பேசுவதால் மனம் அலைபாயும். நாவை காக்காவிட்டால் துக்கம் வரும்.அடுத்தவரை குறை கூறுவது, ஒருவர் இல்லாதபோது அவர்களைப் பற்றி தவறாக பேசுவது கூடாது. அடுத்தவருக்கு உபதேசிக்காமல் உங்கள் வேலையை சிறப்பாக நீங்கள் பாருங்கள்.இரண்டாவதாக கண்ட நேரத்தில் கண்ட உணவை உண்ணக்கூடாது. நாவை அடக்கிவிட்டால் மீதியுள்ள நான்கு புலன்களையும் எளிதாக அடக்கிவிடலாம்.

    7. சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். அதுபோல சத்துக்கள் நிரம்பிய, ஆரோக்கியமான, எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவுகளை அளவோடு மற்றும் நேரத்தோடு எடுத்துக்கொள்ளுங்கள். உடற்பயிற்சியும் அவசியம் தேவை. உடல்பலம் இல்லாமல் ஆத்ம பலம் கிடைக்காது.

    8. தியானத்தில் நிறைவு அடைந்துவிட்டது போலவும், ஞானம் அடைந்துவிட்டது போலவும், உயர் நிலை அடைந்துவிட்டதாகவும் உங்களுக்குள்ளேயே நீங்களே கற்பனை செய்துகொண்டு பிறரிடம் உங்கள் புகழைப் பாடாதீர்கள். இப்படி சாதனை நிலையைத் தீர்மானித்துக் கொள்வதால் அவர்களுடைய சாதனை கெடும்.

    9. தியானப்பாதையில் செல்லும்போது அவர்களை வழிநடத்தவும், கஷ்டம் வரும்போது உபதேசித்து தைரியம் கூறுவதற்கும் நிச்சயம் ஒரு குரு தேவை. தியானப் பாதையில் வெற்றி பெற்ற குருவாக அவர் இருக்கவேண்டும்.

    10. மறதி, சோம்பல், அதீத தூக்கம் ஆகிய மூன்று குறைகளும் தியானத்தின் முக்கிய தடைகளாகும்.பதஞ்சலி மகரிஷி நோய், உலகப்பற்று, சந்தேகம், மனச்சலிப்பு, சோம்பல், அலட்சியம், எழுச்சிகள், தவறாக புரிந்துக்கொள்ளுதல், அடைந்த நிலையில் வழுவிவிடல் ஆகியவை தியானத்திற்கான தடைகள் என்கிறார்.

    • யோகா நித்ரா முக்கியமாக 45 நிமிட அமர்வாகும்.
    • யாரெல்லாம் தூக்கத்தை தொலைக்கிறார்களோ அவர்களுக்கு இது உதவும்.

    யோகா நித்ரா என்பது மிகவும் பயனுள்ள தியான நுட்பமாகும், இது கற்றுக் கொள்ளவும் பராமரிக்கவும் எளிதானது. இந்த யோகாவைப் பயிற்சி செய்வது ஒரு நபர் பஞ்ச மாயா கோஷாவைக் கடந்து செல்ல உதவுகிறது, இது சுயத்தின் ஐந்து அடுக்குகள் என்றும் அழைக்கப்படுகிறது, மேலும் அவர்களுக்கு முழுமை மற்றும் நல்வாழ்வு உணர்வுடன் இருக்கும். யோகா நித்ரா முக்கியமாக 45 நிமிட அமர்வாகும், இது மூன்று மணிநேர தூக்கத்தின் நிதானமான உணர்வை கொடுக்க உதவும்.

    இந்த ஆசனம் முந்தைய காலத்தில் மேற்கொண்ட ஆசனம் ஆகும். நமது உடல் மற்றும் புத்தி இவற்றை அமைதியாக்க இந்த ஆசனம் உதவுகிறது. யாரெல்லாம் தூக்கத்தை தொலைக்கிறார்களோ அவர்களுக்கு இது உதவும்.

    மெதுவாகவும் ஓய்வெடுக்க உதவுவது யோகா நித்ராவின் முக்கிய கூறுகள். தியானமும் அதே விளைவைக் கொண்டுள்ளது. சிலர் அவற்றை ஒரே மாதிரியாகக் கருதினாலும், அவர்கள் இல்லை. இரண்டு செயல்முறைகளுக்கும் இடையே சில ஒற்றுமைகள் இருந்தாலும், அவை இரண்டும் சில குறிப்பிடத்தக்க மாறுபாடுகளை உள்ளடக்கியது.

    யோகா நித்ராவில், மக்கள் ஆழ்ந்த உறக்க நிலைக்கு நகரும் நோக்கத்துடன் படுத்துக் கொள்கின்றனர். எனவே அடிப்படையில், விழித்திருக்கும் போது நனவில் இருந்து கனவு காண்பதற்கும், பின்னர் கனவு காணாததற்கும் விழித்திருப்பதற்கும் மாறுவது அடங்கும்.

    மறுபுறம், தியானம் என்பது விழிப்புணர்வோடு உட்கார்ந்து, மனதில் கவனம் செலுத்தி, எண்ணங்களை வந்து செல்ல விடாமல் செய்வதாகும். தியானம் நம்மை தீட்டா நிலைக்கு நுழைய அனுமதிக்கிறது, இது தூக்க சுழற்சியின் ஆழமான பகுதியாகும், இதில் ஆழ் மனம் நனவான மனதில் இருந்து எடுக்கும்.

    யோக நித்ரா உடலும் மனமும் ஓய்வில் இருக்கும் போதும், உணர்வு விழித்திருக்கும் போதும் அதையே அடைய முனைகிறது.

    • வாழ்க்கை ஒட்டாது இருக்கத் தெளிவாய் பலதும் புலப்படும்.
    • தனிமை தியானத்தை வலுப்படுத்தும்.

    தியானம் தெளிவின் துவக்கம்.

    தியானம் மனதை, அதாவது எண்ணத்தை இல்லாது செய்யும் முயற்சி. வேறொரு கோணத்தில் எண்ணம் எங்கே தோன்றுகிறதோ அங்கேயே நிற்கும் கலை. நிற்க, எண்ணங்கள் தோன்றுகிற போதே அதை புனிதப்படுத்தும் செயல் உன்னை அறியாது நடைபெறும்.

    ஆரம்பகட்ட தெளிவுகள் வந்து விடும். வம்புக்கு போகாத அமைதி ஏற்படும். கனவுகளில் மூழ்காத நிதானம் வரும். சொற்களில் பரபரப்பு இருக்காது. பதட்டம் ஏற்படாது.

    கும்பலிலிருந்து பிரியும் எண்ணம் வரும். தனிமை தியானத்தை வலுப்படுத்தும். தியானம் தனிமையினை அதிகப்படுத்தும். தியான பலத்தால் எண்ணம் தோன்றும் போதே ஏன் எது என்கிறது சடசடவென்று புரியும். செயல் சுத்தமாகும், தெளிவாகும்.

    கோபம் குறைய நியாயங்கள் தெளிவாய் தெரியும்.

    ஆத்திரம் குறைய நல்லது கெட்டது எது என்று அறிய முடியும்.

    எவரோடும் பிணக்கு வர முடியாது. கைகோர்த்து அலைந்தால்தான் நட்பா. கைகோர்த்து அலைந்தவன்தானே கன்னத்தில் இடிக்கிறான்.

    கையும் கோர்க்க வேண்டாம். கைகலப்பும் வர வேண்டாம். ஒரு அடி விலகியே நில். விருப்பும் இல்லை. வெறுப்பும் இல்லை. பிரியமும் இல்லை. அலட்சியமும் இல்லை.

    வாழ்க்கை ஒட்டாது இருக்கத் தெளிவாய் பலதும் புலப்படும்.

    நேரம் கிடைக்கும் பொழுது, அலுவலகம், பஸ்சில் அல்லது காரில் செல்லும்பொழுது கண்களை மூடி உங்களது மனதை, மூச்சை முதுகுத்தண்டின் கடைசி கீழ்ப்பகுதியில் வைத்து ஐந்து நிமிடம் தியானிக்கவும்.
    விரிப்பில் அமர்ந்து நிமிர்ந்து உட்காரவும், முதுகெலும்பு நேராக இருக்கட்டும். இயல்பாக நடக்கும் மூச்சை ஒரு இருபது வினாடிகள் தியானிக்கவும். பின் மிக மெதுவாக இரு நாசிவழியாக மூச்சை இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும். பத்து முறைகள் செய்யவும். பின் உங்களது மனதை முதுகுத்தண்டின் கடைசி கீழ் பகுதி உள் பகுதியில் நிலைநிறுத்தவும். இயல்பாக நடக்கும் மூச்சை அந்த இடத்தில் நிலை நிறுத்தவும். நல்ல பிராண சக்தி அந்த இடத்தில் கிடைப்பதாக எண்ணவும். ஐந்து நிமிடம் உங்களது உணர்வை முதுகு தண்டு கடைசி உள் பகுதியில் நிலை நிறுத்தவும். பின் மெதுவாக கண்களை திறந்து சாதாரண நிலைக்கு வரவும்.

    இந்த மூலாதார சக்கரா தியானம் கோனாடு சுரப்பியை கட்டுப்படுத்துகின்றது. கோனாடு சுரப்பி சிறுநீரகம், சிறுநீரகப்பையை கட்டுப்படுத்துகின்றது. இந்த இடத்தில் தியானம் செய்யும் பொழுது மூச்சை நினைக்கும் பொழுது நல்ல பிராண சக்தி அந்த சக்கரத்திற்கு கிடைக்கும். அதனால் சிறுநீரகம் நன்கு பிராண சக்தி பெற்று இயங்குகின்றது. அடிக்கடி சிறுநீர் கழிப்பது சரி செய்யப்படுகின்றது.

    நமது அன்றாட வாழ்க்கையில் மூலாதார தியானம்

    காலை முதல் இரவு வரை உழைத்துக் கொண்டே இருக்கின்றோம். நிறைய நபர்களுக்கு நேரம் கிடைப்பது ஒரு பெரிய கேள்விக் குறியாக இருக்கின்றது. அவர்கள் நேரம் கிடைக்கும் பொழுது, அலுவலகம், பஸ்சில் அல்லது காரில் செல்லும்பொழுது கண்களை மூடி உங்களது மனதை, மூச்சை முதுகுத்தண்டின் கடைசி கீழ்ப்பகுதியில் வைத்து ஐந்து நிமிடம் தியானிக்கவும். யாரையாவது பார்ப்பதற்கு சென்றால், காத்திருக்க சொன்னால், அமர்ந்திருக்கும் பொழுது மெதுவாக மூச்சை இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும். பின் கண்களை திறந்தவாரே உங்களது மூச்சை, உணர்வை முதுகுத்தண்டின் அடிப்பகுதியில் வைத்து தியானிக்கவும்.

    இரவு படுப்பதற்கு முன்பாக விரிப்பில் அமர்ந்து கண்களை மூடி பிராண முத்திரையில் உங்களது உணர்வை முதுகுத்தண்டின் அடிப்பகுதியில் வைத்து ஐந்து நிமிடம் தியானிக்கவும். காலை எழுந்தவுடன் இதே போல் ஐந்து நிமிடம் தியானிக்கவும். அலுவலகத்திற்கு பத்து நிமிடத்திற்கு முன்பு சென்றால் அந்த நேரத்தை நாற்காலியில் அமர்ந்து முதுகு தண்டின் கடைசி உள் பகுதியில் வைத்து ஐந்து நிமிடம் தியானிக்கவும். நல்ல பிராண சக்தி அந்த இடத்தில் கிடைப்பதாக எண்ணவும். இப்படி கிடைக்கின்ற நேரத்தை சரியாகப் பயன்படுத்தினால் ஒரு நாளில் பத்து முறை இந்த மூலாதார சக்கரா தியானத்தை நம்மால் செய்ய முடியும். நிச்சயம் சிறுநீரகம், சிறு நீரகப்பை நன்கு இயங்கும்.

    காலை 6 மணி முதல் 6 .20 மணிக்குள் சூரிய தியானம்

    காலை 6 மணிக்கு சூரியன் உதயமாகி வரும்பொழுது சூரிய ஒளி நமது உடலில் படும்படி அமர்ந்து சக்தி முத்திரையில் இருக்கவும். இதனை வாரம் மூன்று நாட்கள் சூரிய ஓளி மேல்படும்படி பயிற்சி செய்யவும்.

    இதேபோல் மாலை சூரியன் மறையும் நேரம் 5.30 மணி முதல் 6 மணிக்குள் சூரிய ஓளி உடம்பில் படும்படி பிராண முத்திரையை மட்டும் செய்யவும். சூரிய ஓளி நமது உடலில் படும்படி ஒரு முத்திரையை பயிற்சி செய்யும் பொழுது மிக நல்ல பலன் கிடைக்கும். நமது உடலில் உள்ள கழிவுகள் சரியாக வெளியேறும். உடல் இயக்கம் நன்றாக இருக்கும்.

    யோகக் கலைமாமணி
    பி.கிருஷ்ணன் பாலாஜி M.A.(YOGA)
    6369940440
    ஆரம்பத்தில் இந்த தியானம் கஷ்டமாகத் தோன்றினாலும் செய்யச் செய்ய நாளடைவில் இது மிக சுலபமானதாக மாறி விடும். இந்த தியானம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    ஆரம்பத்தில் இந்த தியானம் கஷ்டமாகத் தோன்றினாலும் செய்யச் செய்ய நாளடைவில் இது மிக சுலபமானதாக மாறி விடும். இதில் அந்தந்த சக்ராக்களின் பெயரைச் சொல்வதும், மந்திரங்களைச் சொல்வதும் சத்தமாகவோ, மனதினுள்ளோ உங்கள் வசதிப்படி சொல்லலாம். அந்தந்த சக்ராவின் சின்னங்களை உருவகப்படுத்திக் கொள்ள சிரமம் இருந்தால் அந்தந்த சக்ராவின் நிறமுள்ள சக்கரங்களாகவும் உருவகப்படுத்திக் கொள்ளலாம்.

    1) மற்ற தியானங்களைப் போலவே அமைதியான ஓரிடத்தில் உங்களுக்கு வசதியானபடி சம்மணமிட்டோ, பத்மாசனத்திலோ, நாற்காலியிலோ நிமிர்ந்து நேராக அமருங்கள். உங்கள் உள்ளங்கை மேலே பார்த்த வண்ணம் திறந்திருக்கும் படி தொடைகளில் கைகளை வைத்துக் கொள்ளுங்கள். கைகளின் கட்டை விரலின் அடிப்பாக நுனியில் சுட்டு விரல் நுனியை வைத்து ஒரு முத்திரையை உருவாக்கிக் கொள்ளுங்கள். உங்கள் மூச்சு சீராகும் வரை மூச்சில் கவனம் வையுங்கள்.

    2) உங்கள் மூலாதாரச் சக்ராவை மனதில் அந்தச் சின்னமாகவோ அல்லது சிவப்பு நிறச் சக்கரமாகவோ உருவகப்படுத்திக் கொள்ளுங்கள். அப்படி உருவகப்படுத்திக் கொள்ள ஆரம்பத்தில் சிறிது நேரம் தேவைப்படலாம். அவசரமில்லாமல் அமைதியாக உருவகப்படுத்திக் கொண்டு உங்கள் கவனத்தை அந்த சக்ராவிற்கு கொண்டு செல்லுங்கள்.

    மனதில் இந்த சக்ரா சின்னமாகவோ, சிவப்பு நிற சக்கரமாகவோ பதிந்த பின்னர் “ஓம் மூலாதார” என்று சத்தமாகவோ, மனதிற்குள்ளோ சொல்லுங்கள். பின் மூச்சை உள்ளிழுக்கையில் இந்தச் சக்ரா நல்ல ஒளி பெறுவதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். மூச்சை வெளி விடும் போது இந்த சக்ரா திறப்பதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். மூச்சை வெளியே விடும் போது லா........ம்/ங் என்ற மந்திரத்தை சத்தமாகவோ, மனதிற்குள்ளோ நிதானமாக உச்சரித்த படியே வெளியே விடுங்கள்.

    இந்த மந்திர ஒலியால் அந்த திறக்கப்படும் சக்ரா சக்தி பெறுவதாக உணருங்கள். இப்படி லா........ம்/ங் மந்திரத்தை ஒரு முறையிலிருந்து ஏழு முறை வரை வெளிமூச்சு விடும் போது உச்சரிக்கலாம். இதைச் செய்யும் போது உங்கள் முழுக்கவனமும் இந்த சக்ராவிலேயே இருக்கட்டும். (நீங்கள் இந்த மந்திரத்தை எத்தனை முறை இந்த சக்ராவிற்குச் சொல்கிறீர்கிறீர்களோ அத்தனையே முறை தான் மற்ற ஆறு சக்ராக்களுக்கும் உரிய மந்திரத்தை நீங்கள் சொல்ல வேண்டும்.) முடிக்கையில் அந்த சக்ரா குறைபாடுகள் ஏதாவது இருந்திருக்குமானால் நீங்கி வலிமையடைந்து ஜொலிப்பதாக உணருங்கள்

    3) அடுத்ததாக உங்கள் கவனத்தை சுவாதிஷ்டானா சக்ரா அமைந்துள்ள இடத்திற்குக் கொண்டு செல்லுங்கள். அந்த சின்னமாகவோ, ஆரஞ்சு நிற சக்கரமாகவோ அந்த சக்ராவை அந்த இடத்தில் மனக்கண்ணில் காணுங்கள். உங்கள் உருவகம் தெளிவான பின் “ஓம் ஸ்வாதிஸ்தான” என்று சொல்லுங்கள். பின் மூச்சை உள்ளிழுக்கையில் இந்தச் சக்ரா நல்ல ஒளி பெறுவதாக கற்பனை செய்து கொள்ளுங்கள்.

    மூச்சை வெளி விடும் போது இந்த சக்ரா திறப்பதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். மூச்சை வெளியே விடும் போது வா........ம்/ங் என்ற மந்திரத்தை நிதானமாக உச்சரித்த படியே வெளியே விடுங்கள். இந்த மந்திர ஒலியால் அந்த திறக்கப்படும் சக்ரா சக்தி பெறுவதாக உணருங்கள். இந்த மந்திரத்தையும் நீங்கள் மூலாதார மந்திரத்தை எத்தனை முறை சொன்னீர்களோ அத்தனை முறை சொல்ல வேண்டும். முடிக்கையில் அந்த சக்ரா குறைபாடுகள் ஏதாவது இருந்திருக்குமானால் நீங்கி வலிமையடைந்து ஜொலிப்பதாக உணருங்கள்.

    4) இதே போல் மற்ற சக்ராக்களுக்கும் செய்தல் வேண்டும். மணிப்புரா சக்ராவுக்கு அந்த சின்னம் அல்லது மஞ்சள் நிற சக்கரம் நினைத்து “ஓம் ஸ்ரீ மணிபத்மே ஹம்” என்று சொல்லி ரா........ம்/ங் என்ற மந்திரத்தைச் சொல்ல வேண்டும். மற்ற சக்ராக்களுக்கு ஓம் அனாஹத, ஓம் விஷுத்தி, ஓம் ஆஜ்னேய, ஓம் சஹஸ்ரார என்று சொல்லி, அந்தந்த சின்னங்கள் அல்லது அந்தந்த நிறச் சக்கரங்களை எண்ணி, முறையே யா........ம்/ங், ஹா.......ம்/ங், ஓ.......ம் (a…u….m), ஓ...கூம்...சத்யம்....ஓ...ம்” என்ற மந்திரங்களைச் சொல்ல வேண்டும்.

    5) சக்ராக்களின் பெயர்களைச் சொல்வதில் மணிபுரா சக்ராவிற்கு மட்டும் “ஓம் ஸ்ரீ மணிபத்மே ஹம்” என்று சொல்ல வேண்டும். மற்ற சக்ராக்களுக்கு ஓம் என்று சொல்லி அந்தந்த சக்ராவின் பெயரையே சொல்ல வேண்டும். அதே போல் மந்திர ஒலிகள் உச்சரிப்பதில் சஹஸ்ராரா சக்ராவுக்கு மட்டும் ’ஓகூம் சத்யம் ஓம்’ என்ற மந்திரத்தைச் சொல்ல் வேண்டும். மற்ற சக்ராக்களுக்கு முன்பு நாம் சொன்ன மந்திரங்கள் தான். இந்த இரு வித்தியாசங்களைத் தவிர எல்லா சக்ராக்களையும் எண்ணி சக்ரா தியானம் செய்வது ஒரே மாதிரி தான். இதை நினைவில் கொள்ளவும்.

    இந்த சக்ரா தியானம் மிக சக்தி வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இதில் ஒவ்வொரு சக்ராவுக்கும் சமமான முக்கியத்துவத்தைத் தருவது முக்கியம். ஒரு சங்கிலியின் உண்மையான வலிமை அதன் மிக பலவீனமான பகுதியைப் பொறுத்தே இருக்கிறது என்று சொல்வார்கள். ஒரு பகுதி மிக வலிமையாக இருந்து இன்னொரு இணைப்பு மிக பலவீனமாக இருந்தால் அந்த இடத்தில் அது சுலபமாகத் துண்டிக்கப்படும் அல்லவா? அது போலத் தான் சக்ராக்களும். எல்லா சக்ராக்களையும் சமமாக பாவித்து ஒரே மாதிரியான முக்கியத்துவம் அளியுங்கள்.

    (குறிப்பு: கூடுமான அளவு எளிமையாக இந்த தியான செய் முறை விளக்கப்பட்டு இருந்தாலும் தகுந்த பயிற்சியாளர்களிடம் இருந்து இந்த தியானத்தைக் கற்றுக் கொள்வது சிறந்தது)

    (குண்டலினி சக்தியை மேலுக்குக் கொண்டு வருவதும் இந்த சக்ராக்கள் மூலமாகத் தான். மூலாதார சக்ராவில் உறங்கிக் கிடக்கும் குண்டலினியை சஹஸ்ரார சக்ராவிற்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் அதற்கு முறையான பயிற்சியும், கடுமையான கட்டுப்பாடும், தகுந்த சுத்தமான சூட்சுமமான மனநிலையும் இருப்பது மிக அவசியம். அதில் ஏதாவது சிறு குறைகள் ஏற்பட்டால் கூட பெரிய ஆபத்தை அவை ஏற்படுத்த வாய்ப்புண்டு. எனவே முறையாக சரியாக தயார்ப்படுத்திக் கொள்ளாமல், உண்மையான நிபுணரின் கண்காணிப்பில் அல்லாது முயற்சி செய்வதும் ஆபத்தே. குண்டலினியை நான் எழுப்பிக் காட்டுகிறேன் என்று பலரும் இணையத்திலும், பத்திரிகைகளிலும் விளம்பரம் செய்வதை உடனே நம்பி ஏமாந்து விடாமல் இருப்பது நல்லது. மிகச் சிலரே உண்மையில் அதில் தேர்ச்சி பெற முடியும் என்பதையும் அதிலும் வெகுசிலரே பொது வாழ்வில் காணக் கிடைப்பார்கள் என்பதையும், அவர்களும் கூட தகுதிகளை பரிசோதித்து தெளிவடையாமல் கற்றுக் கொடுக்க முனைய மாட்டார்கள் என்பதையும் நினைவில் வைக்கவும்.)

    இந்த சக்ரா தியானம் உடலின் எல்லா சக்ராக்களையும் சூட்சுமமாகவும், வலிமையாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறது. ஆரோக்கியம், வலிமை, அறிவு, ஞானம் ஆகிய அனைத்துமே சக்ரா தியானம் செய்யச் செய்ய மேம்படும் என்பது உறுதி.
    ×