search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமெரிக்கா"

    உலகின் அழகான நாய் என்கிற பெயரை பெற்றது ‘பூ’ என பெயரிடப்பட்ட பொமரேனியன் வகையை சேர்ந்த நாய் இதயம் வெடித்து உயிரிழந்தது. #WorldCutestDog #Boo
    வாஷிங்டன்:

    உலகின் அழகான நாய் என்கிற பெயரை பெற்றது ‘பூ’ என பெயரிடப்பட்ட பொமரேனியன் வகையை சேர்ந்த நாய். அமெரிக்காவை சேர்ந்த இந்த நாய் சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலம் வாய்ந்தது.



    இந்த ‘பூ’ வின் பெயரில் ‘பேஸ்புக்’ ‘இன்ஸ்ட்ராகிராம்’ போன்றவற்றில் தொடங்கப்பட்ட பக்கங்களை லட்சக்கணக்கானோர் பின் தொடர்கிறார்கள். இந்த சமூக வலைத்தள பக்கங்களில் ‘பூ’ வின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தினசரி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு அந்த நாய் இறந்தது.

    12 வயதான ‘பூ’ தூங்கிக்கொண்டிருந்த போது இதயம் வெடித்து உயிரிழந்ததாக அதன் உரிமையாளர்கள் தெரிவித்தனர். ‘பூ’ வின் நெருங்கிய நண்பனாக விளங்கி வந்த புட்டி என்கிற நாய் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இறந்தது குறிப்பிடத்தக்கது.  #WorldCutestDog #Boo
    அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது ஏற்பட்ட தீ விபத்தில் பலியான 3 சகோதர, சகோதரிகளின் உடல்கள் ஐதராபாத் வந்தன. அதன்பின்னர் அவர்களது உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டன. #USFireAccident #Telangana
    ஐதராபாத்:

    அமெரிக்காவில் மிசிசிப்பி மாகாணத்தில் உள்ள பிரெஞ்ச் கேம்ப் அகாடமியில் படித்து வந்த சாத்வீகா ஷெரோன் (வயது 17), ஜாய் சுசித்ரா (14), ஆரோன் சுஹாஸ் (15) ஆகியோர் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த சகோதர, சகோதரிகள் ஆவர். அவர்கள், அங்கு டென்னிசி மாகாணத்தில் காலியர் வில்லே நகரத்தில் உள்ள டேனி என்பவருடைய வீட்டுக்கு கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட சென்றிருந்தபோது ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.



    அவர்களது உடல்கள் நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) ஐதராபாத் சர்வதேச விமான நிலையம் வந்து சேர்ந்தன. அவற்றை குடும்ப உறுப்பினர்கள் பெற்றுக்கொண்டனர். அங்கிருந்து நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள சொந்த ஊருக்கு உடல்கள் எடுத்துச்செல்லப்பட்டன. நேற்று இறுதிச்சடங்கு நடந்தது. இதில் திரளானோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். அதன்பின்னர் அவர்களது உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டன.
    தனியுரிமை விதிமீறல் காரணமாக ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு பெரும் தொகையை அபராதமாக விதிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #Facebook



    அமெரிக்க அரசாங்கத்தின் ஒழுங்குமுறை அதிகாரிகள் ஒன்றுகூடி பேஸ்புக் நிறுவனத்தின் மீது பெரும் தொகையை அபராதமாக விதிப்பது பற்றிய விவாதத்தில் ஈடுப்பட்டதாக அமெரிக்க செய்தி நிறுவனம் வெளியிட்டிருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஃபேஸ்புக் பயன்படுத்துவோரின் தகவல்களை பாதுகாக்கும் நோக்கில் அபராதம் விதிக்கும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. அமெரிக்க வர்த்தக ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் அபராதம் விதிக்கப்படுகிறது. ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு எதிராக பூதாகாரமாய் வெடித்த கேம்ப்ரிட்ஜ் அனாலடிகா விவகாரத்தை தொடர்ந்து முதல் முறையாக நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது.



    இம்முறை ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு விதிக்கப்பட இருக்கும் அபராத தொகை 2012 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தின் மீது விதிக்கப்பட்டதை விட அதிகளவு நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது. கடந்த முறை கூகுள் நிறுவனத்திற்கு 2.25 கோடி டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டது.

    கடந்த சில நாட்களாக அமெரிக்க வர்த்தக ஆணையத்தின் ஐந்து பேர் அடங்கிய விசாரணை குழு ஃபேஸ்புக் நிறுவனம் மீது மேற்கொண்ட விசாரணையில் கிடைத்த விவரங்களுடன் விவாதித்து வருவதாக கூறப்படுகிறது. எனினும், அபராத தொகை பற்றி இன்னும் முடிவு எட்டப்படவில்லை என தெரிகிறது.

    விசாரனை குழுவினர் சமர்பித்து இருக்கும் விவரங்களை கொண்டு அபராத தொகையை விரைவில் பரிந்துரைக்கலாம் என கூறப்படுகிறது. இதுதவிர அமெரிக்க வர்த்தக ஆணையத்திடம் விசாரணை பற்றிய பேச்சுவார்த்தைகளில் ஃபேஸ்புக் ஈடுபட்டதாக தெரிகிறது. 

    எனினும், அபாரதம் விதிக்கப்படும் பட்சத்தில் வர்த்தக ஆணையத்தின் பரிந்துரையை ஃபேஸ்புக் ஏற்றுக் கொள்ளுமா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை.
    அமெரிக்காவில் ஜனாதிபதி டிரம்ப் தனது நிர்வாகத்தில் முக்கிய பதவிகளில் பணியாற்ற 3 இந்திய வம்சாவளிகளை தேர்வு செய்துள்ளார். #DonaldTrump
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் ஜனாதிபதி டிரம்ப் தனது நிர்வாகத்தில் முக்கிய பதவிகளில் பணியாற்ற 3 இந்திய வம்சாவளிகளை தேர்வு செய்துள்ளார். அவர்கள், ரீட்டா பரன்வால், ஆதித்யா பம்சாய், பீமல் பட்டேல் ஆவார்கள்.

    இவர்களில் ரீட்டா பரன்வால், எரிசக்தித்துறை (அணுசக்தி) உதவி செயலாளராகவும், ஆதித்யா பம்சாய் தனிஉரிமைகள் மற்றும் சிவில் உரிமைகள் மேற்பார்வை வாரியத்தின் உறுப்பினராகவும், பீமல் பட்டேல் நிதித்துறை உதவி செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    இவர்களின் தேர்வு குறித்து அமெரிக்க நாடாளுமன்ற செனட் சபைக்கு ஜனாதிபதி டிரம்ப் எழுதி உள்ளார். அந்த சபை, இவர்களின் தேர்வுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

    செனட் சபையில் டிரம்பின் குடியரசு கட்சிக்கு பெரும்பான்மை உள்ளதால், அதன் ஒப்புதல் கிடைப்பதில் பிரச்சினை இல்லை. இந்த ஒப்புதல் கிடைத்து விட்டதால், ரீட்டா பரன்வால் செல்வாக்கு மிகுந்த எரிசக்தித்துறைக்கு (அணுசக்தி) தலைமை பொறுப்பு ஏற்பார். இந்த துறைதான் அணுசக்தி தொழில் நுட்ப ஆராய்ச்சி, வளர்ச்சி, நிர்வாகம் என அனைத்தையும் கவனிப்பது குறிப்பிடத்தக்கது.

    டிரம்ப் நிர்வாகத்தில் கேபினட் மந்திரி அந்தஸ்தில் ஐ.நா. சபைக்கான அமெரிக்க தூதராக பதவி வகித்த இந்திய வம்சாவளி நிக்கி ஹாலியும், வாஷிங்டன் வெள்ளை மாளிகை துணை செய்தி தொடர்பாளர் ராஜ் ஷாவும் சமீபத்தில் பதவி விலகியது நினைவுகூரத்தக்கது. 
    சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டுள்ள, மத்திய நிதியமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, அருண் ஜெட்லி மருத்துவ பரிசோதனைக்காக, அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். #ArunJaitley #BJP
    புதுடில்லி:

    மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியின் சிறுநீரகங்கள் பழுதடைந்ததால், 2018ல், அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அந்த சமயத்தில், ரெயில்வே அமைச்சர் பியுஷ் கோயலிடம், நிதித்துறை, கூடுதலாக ஒப்படைக்கப்பட்டது. பின், உடல்நிலை சீரானதை அடுத்து, கடந்தாண்டு, ஆகஸ்டு மாதம் மீண்டும் நிதியமைச்சர் பொறுப்பை, ஏற்றுக் கொண்டார்.



    மத்தியில், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணி அரசின், கடைசி பட்ஜெட்டை, வரும், பிப்., 1-ம் தேதி அருண் ஜெட்லி தாக்கல் செய்ய உள்ளார். இந்த பட்ஜெட், பொதுத் தேர்தலுக்கு முந்தைய, இடைக்கால பட்ஜெட்டாக தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், யாரும் எதிர்பாராவிதமாக, நேற்று, மருத்துவ பரிசோதனைக்காக, அருண் ஜெட்லி, அமெரிக்கா சென்றுள்ளார். அவர் எப்போது இந்தியா திரும்புவார் என்பது பற்றிய விபரம் வெளியிடப்படவில்லை. #ArunJaitley #BJP
    அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் ஆகிய இருவரும் வியட்நாமில் சந்தித்து பேச அமெரிக்கா விருப்பம் தெரிவித்துள்ளது. #DonaldTrump #KimJongUn #Vietnam
    டோக்கியோ:

    ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறி தொடர்ந்து அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனை நடத்தி வந்ததால் வடகொரியா சர்வதேச நாடுகளின் எதிர்ப்பை சந்தித்தது. குறிப்பாக அமெரிக்கா வடகொரியாவை நேரடியாக எதிர்த்தது. அந்நாட்டின் மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்தது.

    அதோடு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் இடையே வார்த்தை யுத்தம் நடந்தது. இருநாடுகளின் மோதல் போக்கு சர்வதேச நாடுகளுக்கு கவலை அளிப்பதாக அமைந்தது. இதற்கிடையில் தென்கொரியாவில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் வடகொரியா பங்கேற்றதை தொடர்ந்து, வடகொரியாவின் நடவடிக்கைகளில் பெரிய அளவில் மாற்றம் நிகழ தொடங்கியது.

    அதன் தொடர்ச்சியாக எதிர் எதிர் துருவங்களாக விளங்கி வந்த டிரம்ப், கிம் ஜாங் அன் சந்தித்து பேசுவதற்கான சூழல் உருவானது.

    அதன் படி கடந்த ஆண்டு ஜூன் 12-ந்தேதி சிங்கப்பூரில் உச்சி மாநாடு நடத்தி இருநாட்டு தலைவர்களும் சந்தித்து பேசினர். உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த பேச்சுவார்த்தையின் போது இரு நாட்டு தலைவர்களிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

    அதோடு, கொரிய தீபகற்ப பகுதியை அணு ஆயுதங்கள் அற்ற பகுதியாக ஆக்குவதற்கு ஏற்ற விதத்தில் வடகொரியா செயல்படும் என கிம் ஜாங் அன் உறுதிமொழி அளித்தார். அதன்படி தங்கள் நாட்டில் உள்ள அணு ஆயுத சோதனை கூடங்கள் மற்றும் ஏவுகணை தளங்களை வடகொரியா மூடியது.

    எனினும் வடகொரியா மீது விதித்துள்ள கடுமையான பொருளாதார தடைகளை அமெரிக்கா விலக்கி கொள்ளாததால், எந்த நேரத்திலும் அணு ஆயுத கொள்கைக்கு திரும்பி விடுவோம் என வடகொரியா எச்சரித்து வருகிறது.

    புத்தாண்டையொட்டி வடகொரிய மக்களிடையே உரையாற்றிய கிம் ஜாங் அன், ஒட்டுமொத்த உலகத்தின் முன்னிலையில் அளித்த வாக்குறுதிகளை அமெரிக்கா காப்பாற்றத் தவறினால் வடகொரியா புதிய நடவடிக்கைகளை கையாளும் என எச்சரிக்கை விடுத்தார்.

    அதே சமயம் சர்வதேச சமூகம் வரவேற்கும் வகையில், எதிர்காலத்தில் எந்த நேரத்திலும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்புடன் அமர்ந்து பேச்சு வார்த்தை நடத்த தயாராக இருப்பதாக கிம் ஜாங் அன் அறிவித்தார்.

    அதே போல் டிரம்பும், கிம் ஜாங் அன்னை சந்திக்க தான் ஆவலுடன் இருப்பதாகவும், இந்த சந்திப்பு விரைவில் நடக்கும் என்றும் தெரிவித்தார்.

    அதன் படி இருநாட்டு தலைவர்கள் சந்தித்து பேசும் 2-வது உச்சி மாநாட்டை எங்கு? எப்போது? நடத்துவது என்பது குறித்து அமெரிக்கா மற்றும் வடகொரியா அதிகாரிகள் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர். அந்த வகையில் டிரம்ப்-கிம் ஜாங் அன் சந்திப்பு தாய்லாந்து அல்லது வியட்நாமில் நடக்கலாம் என தகவல்கள் வெளியாகின.

    அந்த இருநாட்டு அரசுகளும் இந்த சந்திப்புக்கு முழு ஆதரவு அளிப்பதாகவும், தங்கள் தரப்பில் செய்ய வேண்டிய நடவடிக்கைகளை செய்துதர தயாராக இருப்பதாகவும் உறுதி அளித்தன. அதன் படி அமெரிக்க வெள்ளை மாளிகையின் ஆய்வு குழு தாய்லாந்தின் பாங்காங் மற்றும் வியட்நாமின் ஹனோய் நகரங்களுக்கு சென்று ஆய்வு நடத்தின.

    வடகொரியா மற்றும் அமெரிக்க அதிகாரிகள் வியட்நாமின் ஹனோய் நகரில் பலமுறை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தென் கொரிய ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

    இந்த நிலையில் வியட்நாமில் அடுத்த மாதம் (பிப்ரவரி) மத்தியில் இருநாட்டு தலைவர்களின் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யா வடகொரியாவுக்கு அமெரிக்கா அனுமதி அளித்துள்ளதாக புதிய தகவல் கிடைத்திருக்கிறது. ஜப்பானில் வெளிவரும் தினசரி நாளிதழ் ஒன்றில் இது பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது.

    வியட்நாமில் உச்சி மாநட்டை நடத்தலாம் என்கிற அமெரிக்காவின் திட்டம் குறித்து வடகொரியா தீவிர ஆலோசனை நடத்தி வருவதாகவும் அந்த நாளிதழில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் இது பற்றி அமெரிக்கா மற்றும் வடகொரியா தரப்பில் எந்த வித விளக்கமும் அளிக்கப்படவில்லை.

    இதற்கிடையே, பாதுகாப்பு காரணங்களையொட்டி ஹனோய் நகரத்துக்கு பதிலாக டா நாங் நகரில் இந்த சந்திப்பை நடத்திட வியட்நாம் விரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  #DonaldTrump #KimJongUn #Vietnam
    மெக்சிகோ எல்லை சுவர் விவகாரத்தில் அமெரிக்காவில் விரைவில் அவசர நிலை பிரகடனம் செய்ய ஆலோசித்து வருவதாக டிரம்ப் சூசகமாக தெரிவித்துள்ளார். #DonaldTrump
    வாஷிங்டன் :

    அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்பும் திட்டத்தில் டிரம்ப் விடாப்பிடியாக உள்ளார். அதே போல் இந்த திட்டத்துக்கு உள்நாட்டு நிதியை ஒதுக்க முடியாது என்பதில் ஜனநாயக கட்சியினர் உறுதியாக உள்ளனர். இது விவகாரம் தொடர்பாக சமீபத்தில் ஜனநாயக கட்சி தலைவர்களுடன் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடந்தபோது, டிரம்ப் வெளிநடப்பு செய்தார்.

    இந்த நிலையில் தெற்கு எல்லையையொட்டி உள்ள டெக்சாஸ் மாகாணத்துக்கு டிரம்ப் பயணம் மேற்கொண்டார். அங்கு அவர் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் அமெரிக்காவில் அவசர நிலையை பிரகடனப்படுத்துவீர்களா? என கேள்வி எழுப்பினர்.

    அதற்கு பதில் அளித்த டிரம்ப், ‘‘ஆம், அது பற்றி நான் தீவிரமாக ஆலோசித்து வருகிறேன். நாம் அதை விரைவாக செய்ய வேண்டும். ஏனெனில் அது மட்டும்தான் தீர்வு. அதற்கு செலவு கிடையாது. நாம் ஆண்டு தோறும் எல்லை பாதுகாப்புக்கு செலவிடுவதை விட, சுவருக்கு குறைந்த செலவுதான் ஆகும்’’ என தெரிவித்தார். #DonaldTrump
    அமெரிக்கா உடனான அமைதி பேச்சுவார்த்தையை தலீபான்கள் ரத்து செய்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #Taliban
    தோகா:

    ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளுக்கு எதிராக சண்டையிட்டு வரும் அமெரிக்கா, அங்கு அமைதியை ஏற்படுத்தும் விதமாக தலீபான்களுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தது. இதற்கு தலீபான்களும் சம்மதித்தனர். அமெரிக்க அதிகாரிகள் மற்றும் தலீபான்கள் இடையேயான அமைதி பேச்சுவார்த்தையை சவுதி அரேபியாவில் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    ஆனால் தலீபான்களோ கத்தார் தலைநகர் தோகாவில்தான் அமைதி பேச்சுவார்த்தை நடக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். அமெரிக்கா அதனை ஏற்றுக்கொண்டது.

    அதன்படி இருதரப்புக்கும் இடையேயான 2 நாள் பேச்சுவார்த்தை நேற்று தொடங்க இருந்தது. ஆனால் தலீபான்கள் இதில் பங்கேற்க முடியாது எனக்கூறி அமைதி பேச்சுவார்த்தையை ரத்து செய்துவிட்டனர். அமைதி பேச்சுவார்த்தை தொடர்பான செயல் திட்டத்தில் தலீபான்களுக்கு உடன்பாடு இல்லாததால் அவர்கள் இந்த முடிவை எடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    அமைதி பேச்சுவார்த்தையில் ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் பங்கேற்க தலீபான்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. 
    அமெரிக்காவில் அவசர நிலை பிரகடனம் செய்வேன் என்று அதிபர் டொனால்டு டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். #DonaldTrump

    வாஷிங்டன்:

    அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக ஊடுருவும் வெளிநாட்டினரை தடுக்க மெக்சிகோ எல்லையில் சுவர் கட்ட அதிபர் டொனால்டு டிரம்ப் முடிவு செய்துள்ளார், அதற்காக ரூ.39,693 கோடி (5.7 பில்லியன் டாலர்) நிதி ஒதுக்கும்படி அமெரிக்க பாராளுமன்றத்திடம் ஒப்புதல் கேட்டார்.

    அதற்கு எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்து ஒப்புதல் வழங்கவில்லை. அதனால் ஆண்டு பட்ஜெட் பாராளுமன்றத்தில் நிறைவேறவில்லை. இதனால் கடந்த 18 நாட்களாக பாதி அரசு அலுவலகங்கள் செயல்படாமல் முடங்கி கிடக்கின்றன.

    இந்த நிலையில் அதிபர் டிரம்ப் நேற்று டெலிவி‌ஷனில் நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறியதாவது:-

    அமெரிக்காவுக்குள் வெளி நாட்டினர். சட்ட விரோதமாக ஊடுருவுகின்றனர். அதனால் மெக்சிகோ எல்லை வழியாக போதைப் பொருட்கள் கடத்தி வரப்படுகின்றன. இது அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.

    எனவேதான் அங்கு தடுப்பு சுவர் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதை ஜனநாயக கட்சியினர் எதிர்க்கின்றனர். பாராளுமன்றத்தில் ஒப்புதல் தர மறுக்கின்றனர். அதனால் எத்தனை அமெரிக்கர்கள் ரத்தம் சிந்த வேண்டும் என எதிர்பார்க்கின்றனர் என்றார்.

    மேலும் அவர் கூறும் போது சட்டவிரோதமாக ஊடுருவும் வெளிநாட்டினரால் நடந்த கொலைகளை பட்டியலிட்டார். இந்த நிலை தொடர்ந்தால் எனது அதிபர் அதிகாரத்தை பயன்படுத்தி நாட்டில் அவசர நிலையை பிரகடனம் செய்வேன்.

    அதன் மூலம் மெக்சிகோ எல்லையில் தடுப்பு சுவர் கட்ட தேவைப்படும் நிதியை பாராளுமன்ற ஒப்புதல் இன்றி என்னால் பெற முடியும் என்றார்.

    நாளை (10-ந்தேதி) அவர் தென் மேற்கு எல்லை பகுதியில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அதற்கு முன்னதாக தேசிய அளவில் அவசர நிலை பிரகடனம் செய்வாரா? என்ற தகவல் முழுமையாக வெளியாக வில்லை.

    அதேநேரத்தில் எல்லையில் சுவர் கட்ட டிரம்ப் உத்தரவிட்டால் சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஜனநாயக கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தெரிவித்தனர்.

    2016-ம் ஆண்டு அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போது எல்லையில் சுவர் கட்ட மெக்சிகோவிடம் இருந்து நிதி பெறப்படும் என டிரம்ப் உறுதி அளித்தார். ஆனால் மெக்சிகோ அரசு அதற்கு மறுத்துவிட்டது. #DonaldTrump

    மெக்சிகோ எல்லைச்சுவர் பிரச்சனையை மனிதாபிமான நெருக்கடியாக பார்க்க வேண்டும் என அமெரிக்க மக்களிடையே தொலைக்காட்சி மூலம் உரையாற்றிய அதிபர் டிரம்ப் குறிப்பிட்டார்.
    வாஷிங்டன்:

    அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் தன்னுடைய கனவு திட்டமான அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் பிரமாண்ட சுவர் எழுப்புவேன் என்பதில் விடாப்பிடியாக உள்ளார்.
     
    இதற்காக உள்நாட்டு நிதியில் இருந்து 500 கோடி டாலர் (சுமார் ரூ.35 ஆயிரம் கோடி) வழங்க வேண்டும் என்று அமெரிக்க நாடாளுமன்றத்தை அவர் வலியுறுத்தி வருகிறார்.

    ஆனால். மெக்சிகோ எல்லைச்சுவருக்காக நாட்டு மக்களின் வரிப்பணத்தை பயன்படுத்தக்கூடாது. மேலும், அந்த திட்டத்தையே ரத்து செய்ய வேண்டும் என்பதில் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி உறுதியாக உள்ளது.

    இதனால், உள்நாட்டு அரசு செலவினங்களுக்கான மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதில் சிக்கல் எழுந்தது. குடியரசு கட்சியினர் பெரும்பான்மையாக இருக்கும் நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்ட செலவின மசோதா  செனட் சபையில் எதிர்க்கட்சியான  ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் ஆதரவை பெற தவறியதால் நிறைவேற முடியாமல் போனது.

    இதன் காரணமாக வெளியுறவு, உள்நாட்டு பாதுகாப்பு, போக்குவரத்து, விவசாயம், நீதித்துறை உள்ளிட்ட 9 துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு கிடைக்காமல் அந்த துறைகள் முடங்கின.

    மெக்சிகோ எல்லை சுவர் விவகாரத்தில் டிரம்புக்கும் ஜனநாயக கட்சியினருக்கும் சமரசம் ஏற்படாததால் இரு வாரங்களுக்கும் மேலாக அரசு துறைகள் முடக்கம் நீடிக்கிறது.

    இந்நிலையில், நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை தேர்தலில் வெற்றிபெற்ற புதிய உறுப்பினர்கள் சமீபத்தில் பொறுப்பேற்றனர். இதன் மூலம் பிரதிநிதிகள் சபையின் ஜனநாயக கட்சியின் பலம் கூடியது. மேலும் பிரதிநிதிகள் சபை  தலைவராக ஜனநாயக கட்சியை சேர்ந்த நான்சி பெலோசி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    இதைதொடர்ந்து அரசுத்துறைகள் முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் நிலுவையில் உள்ள இரு செலவின மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால், அந்த இரு மசோதாக்களிலும் மெக்சிகோ எல்லை சுவர் திட்டத்துக்கான நிதி ஒதுக்கப்படவில்லை. அந்த மசோதாக்கள் பிரதிநிதிகள் சபையில் வெற்றிகரமாக நிறைவேறியது.



    இருப்பினும், தற்போது செனட் சபையில் குடியரசு உறுப்பினர்கள் பெரும்பான்மையாக இருப்பதால் அங்கு இந்த மசோதாக்களை நிறைவேற்ற முடியாமல் போகலாம் என தெரிகிறது. ஒருவேளை செனட் சபையிலும் அந்த மசோதாக்கள் வெற்றிகரமாக நிறைவேறிவிட்டால் ஜனாதிபதி டிரம்பின் ஒப்புதலுக்காக அவை அனுப்பிவைக்கப்படும்.

    அமெரிக்க-மெக்சிகோ எல்லை சுவர் திட்டத்துக்கு நிதி அளிக்காத எந்த தீர்மானத்தையும் ஏற்கமாட்டேன் என ஏற்கனவே டிரம்ப் தெரிவித்துள்ளார். 

    எனவே, இந்த செலவின மசோதாக்கள் இரு சபைகளிலும் நிறைவேறினாலும் தனக்குரிய சிறப்பு வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி டிரம்ப் அவற்றை ரத்து செய்துவிடுவார் என தெரிகிறது. இதனால் அமெரிக்காவில் அரசுத்துறைகள் முடக்கம் முடிவுக்கு வருவது கேள்விக்குறியாகவே உள்ளது. 

    இதற்கிடையில், எல்லைப்பகுதியில் இரும்பிலான தடுப்பு வேலி அமைக்கலாம். இரும்பு தடுப்புகள் பலமானதாகவும் இருக்கும் என்று நேற்று தெரிவித்தார். இதற்கு 570 கோடி டாலர்கள் வரை செலவாகும் என்பதால் எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தன.

    இந்நிலையில், தனது நிலைப்பாட்டை மக்கள் மன்றத்தில் முன்வைக்க டிரம்ப் தீர்மானித்தார். அதிபராக பதவியேற்ற பின்னர் முதல்முறையாக அவரது அலுவலகத்தில் இருந்தவாறு தொலைக்காட்சி வழியாக நேற்று அவர் மக்களிடையே உரையாற்றினார்.

    அமெரிக்கா-மெக்சிகோ இடையே பலமான எல்லைச்சுவர்  இல்லாததால் இங்கு குடியேறவரும் மக்கள் வழியில் தடுத்து நிறுத்தப்படுகிறார்கள். கைது செய்யப்படுகிறார்கள். அவர்கள்படும் வேதனையை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

    இதை மனிதாபிமான நெருக்கடியாக நாம் கருத வேண்டும். எல்லைச்சுவர் ஒன்றினால் மட்டுமே இந்த பிரச்சனையை களைய முடியும். எனவே, இதயத்துக்கும் ஆன்மாவுக்குமான முக்கிய பிரச்சனையாக இதை மதித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் என்னை சந்தித்து பேச வேண்டும். மக்களிடம் பிரதிநிதிகளாக இருக்கும் அவர்கள் எதுவுமே செய்யாமல் இருப்பது நல்லதல்ல என தனது தொலைக்காட்சி உரையில் டிரம்ப் குறிப்பிட்டார். 

    அவரது இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள எதிர்க்கட்சி தலைவர்கள் எல்லை பிரச்சனையை மனிதாபிமான நெருக்கடியாக மாற்றி, மனித உரிமை மீறல் என பிறநாடுகள் குற்றம்சாட்டும் அளவுக்கு ஊதிப் பெரிதாக்கும் டிரம்ப் அரசின் முடிவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். #Trumpurges #wallfunding #bordercrisis #borderwall
    அமெரிக்காவில் கடந்த 10 வருடமாக கோமாவில் இருந்த பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #US #ComaPatient
    நியூயார்க்:

    அமெரிக்காவில் அரிசோனா மாகாணத்தில் உள்ள பீனிக்ஸ் நகரில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் ஒரு பெண் கடந்த 10 வருடங்களாக ‘கோமா’ நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு டாக்டர்கள் மற்றும் நர்சுகள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த டிசம்பர் 29-ந்தேதி ‘கோமா’வில் இருந்த பெண் திடீரென வேதனை கலந்த குரலில் முனகினார். அதை அருகில் இருந்த நர்சு கவனித்தார். திடீரென அப்பெண்ணுக்கு பிரசவத்துக்கான அறிகுறிகள் தெரிந்தன.

    உடனே அவரை பிரசவ அறைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை நலமாக உள்ளது. இச்சம்பவம் டாக்டர்கள் மற்றும் நர்சுக்கு அதிர்ச்சியை அளித்தது.

    இவர் கர்ப்பமாக இருந்த விவரம் யாருக்கும் தெரியவில்லை. நோயாளியாகவே சிகிச்சை அளித்து வந்தனர். அப்படி இருக்கும்போது அவரை யாரோ மர்மநபர் கற்பழித்து இருக்கலாம். அதன்மூலம் அவர் கர்ப்பம் அடைந்து குழந்தை பெற்று இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    அதுகுறித்து அரிசோனா மாகாண சுகாதாரத்துறை விசாரணை நடத்தி வருகிறது. ஆஸ்பத்திரிகளில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. #US #ComaPatient
    அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் கேளிக்கை விடுதியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #CaliforniaShooting
    வாஷிங்டன்:

    கலிபோர்னியா மாநிலத்தின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் டாரன்ஸ் பகுதியில் அமைந்துள்ள கேளிக்கை மையத்தில் இன்று திடீரென துப்பாக்கிச் சூடு நடைபெற்றது.

    இந்த தாக்குதலில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 4 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் பாதிக்கப்பட்ட அனைவரும் ஆண்கள் என போலீசார் தெரிவித்தனர். இதுதொடர்பாக, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த ஆண்டில் சுமார் 40,000 பேர் துப்பாக்கி சூடு தொடர்புடைய சம்பவங்களில் பலியானதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். #CaliforniaShooting
    ×