search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமெரிக்கா"

    அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடைகளை கண்டு மனம் தளராத் ஈரான் அரசு ‘பயகம்பர்-இ-ஆசம் என்ற பெயரில் முப்படைகளின் போர் ஒத்திகையை தொடங்கியுள்ளது. #Irandrill #massivedrill
    டெஹ்ரான்:

    அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், ரஷியா உள்ளிட்ட நாடுகள் கடந்த 2015-ம் ஆண்டில் ஈரானுடன் அணு ஆயுத தடை ஒப்பந்தம் செய்து இருந்தன. அதில் இருந்து மீறிவிட்டதாக புகார் கூறிய அமெரிக்கா கடந்த மே மாதம் இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகியது.

    மேலும், ஈரான் மீது விலக்கி இருந்த பொருளாதார தடையை மீண்டும் விதிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் அறிவித்தார்.  அமெரிக்காவின் பொருளாதார தடை கடந்த மே மாதத்தில் இருந்து அமலுக்கு வந்தது.

    அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் ஆட்சிக் காலத்தில் படிப்படியாக விலக்கப்பட்ட அனைத்து தடைகளையும் ஈரான் மீது தற்போது டிரம்ப் ஒருசேர திணித்துள்ளார். இதனால் அந்நாட்டின் பொருளாதாரம் மிகப்பெரிய பின்னடைவை சந்திக்க நேரிடும் என சர்வதேச அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.


    ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள அத்தனை பொருளாதார தடைகளையும் தகர்த்து பெருமையுடன் முன்னேறி வருவோம் என ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி இன்று சூளுரைத்துள்ளார்.

    இந்நிலையில், நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள குவெஷேம் தீவில் ‘பயகம்பர்-இ-ஆசம் 12’  என்ற பெயரில் முப்படைகளின் மாபெரும் போர் ஒத்திகையை தொடங்கியுள்ளது.

    ‘முஹம்மது நபி உயர்வானவர்’ என்னும் பொருள்படும் இப்பெயரால் நடைபெற்றுவரும் போர் ஒத்திகையில் ஈரான் நாட்டின் தரைப்படை, விமானப்படை மற்றும் கப்பல்படையை சேர்ந்த வீரர்கள் போர் பயிற்சிகளையும், சாகச ஒத்திகைகளையும் நடத்தி வருகின்றனர். #Irandrill #massivedrill  
    இந்தியாவுக்கு சுற்றுலா செல்லும் அமெரிக்கர்களில், கர்ப்பிணிகள் யாரும் ராஜஸ்தான் மற்றும் அதன் அண்டை மாநிலங்களுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. #zikaVirus
    வாஷிங்டன் :

    இந்தியாவுக்கு சுற்றுலா செல்லும் அமெரிக்கர்களில், கர்ப்பிணிகள் யாரும் ராஜஸ்தான் மற்றும் அதன் அண்டை மாநிலங்களுக்கு செல்ல வேண்டாம் என்று அமெரிக்காவின் தேசிய அளவிலான நோய் கட்டுப்பாட்டு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “மேற்கண்ட மாநிலங்களில் ஜிகா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது. கர்ப்ப காலத்தில் இந்த வைரஸ் தாக்கினால், கடுமையான குறைபாடுடன் கூடிய குழந்தை பிறக்கும். எனவே கர்ப்பிணிகள் அங்கு செல்ல வேண்டாம்” என்று கூறப்பட்டுள்ளது. #zikaVirus
    மெக்சிகோ எல்லைப்பகுதியின் குறுக்கே 2 ஆயிரம் மைல் நீளத்துக்கு தடுப்புச்சுவர் கட்டும் அதிபர் டிரம்ப் திட்டத்துக்கு 570 கோடி டாலர் நிதி ஒதுக்கீட்டுக்கு அமெரிக்க பாராளுமன்றம் ஒப்புதல் அளித்தது. #USHouse #Trump #mexicoborderwall
    வாஷிங்டன்:

    மெக்சிகோ நாட்டில் இருந்து ஆண்டுதோறும் ஏராளமானோர் சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறுவதாக கூறப்படுகிறது. இதைத் தடுப்பதற்காக ஏற்கனவே அங்கு 670 மைல் தொலைவுக்கு பல பகுதிகளிலும் தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இருநாட்டு எல்லைப் பகுதியில் 2 ஆயிரம் மைல் நீளத்துக்கு மிகப்பெரிய தடுப்புச்சுவர் கட்டப்படும் என அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின்போது டொனால்டு டிரம்ப் வாக்குறுதி அளித்திருந்தார்.

    அதன்படி, தேர்தலில் வெற்றி பெற்று, ஜனாதிபதி பதவியை ஏற்றநிலையில், மெக்சிகோ எல்லையில் தடுப்புச்சுவர் கட்டுவதற்கான நிர்வாக உத்தரவில் கடந்த ஆண்டு டிரம்ப் கையொப்பமிட்டார். 

    அதுமட்டுமின்றி, இந்த தடுப்புச்சுவர் கட்டுவதற்கான பணத்தை மெக்சிகோ தர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

    ஆனால், அதை மெக்சிகோ நிராகரித்து விட்டது. இதுதொடர்பாக மெக்சிகோ அதிபர் என்ரிக் பெனா நீட்டோ கருத்து தெரிவிக்கையில், “சுவர்களில் மெக்சிகோவுக்கு நம்பிக்கை இல்லை. நான் இதை பல முறை கூறி விட்டேன். இந்த சுவருக்காக மெக்சிகோ எந்தப் பணமும் தராது” என முன்னர் குறிப்பிட்டிருந்தார்.

    இந்நிலையில் இந்த திட்டத்துக்காக தேவைப்படும் நிதியில் 570 கோடி டாலர் நிதி ஒதுக்கீட்டுக்கு அமெரிக்க பாராளுமன்றம் இன்று ஒப்புதல் அளித்தது. இதுதொடர்பான விவாதத்தின்மீது பாராளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் இந்த நிதி ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக ஆளும் குடியரசு கட்சியை சேர்ந்த 217 உறுப்பினர்களும் எதிராக ஜனநாயக கட்சியை சேர்ந்த 185 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.

    எனினும், டிரம்ப்பின் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த பாராளுமன்ற மேல்சபையில் நாளை இதுதொடர்பாக நடைபெறவுள்ள வாக்கெடுப்பில் அவருக்கு சற்று பின்னடைவு ஏற்படலாம் என கருதப்படுகிறது.

    மதில் சுவர் கட்டுவதற்காக இவ்வளவு பெரிய தொகையை முடக்கினால் அமெரிக்க அரசின் பிற முக்கிய துறைகளுக்காக ஒதுக்கப்படும் நிதியில் பற்றாக்குறை ஏற்படலாம் என்ற காரணத்தை முன்வைத்து மதில் சுவருக்கான நிதி ஒதுக்கீட்டை மேல்சபையில் உள்ள எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நிராகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. #USHouse #Trump #mexicoborderwall
    அமெரிக்காவில் அதிபர் டிரம்புடன் ஏற்பட்ட கொள்கை முரண்பாடுகள் காரணமாக ராணுவ மந்திரி ஜிம் மேட்டிஸ் ராஜினாமா செய்துள்ளார். #USDefenceSecretary #JimMattisResigns
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் அதிபர் டிரம்ப் பதவியேற்ற பிறகு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். வெள்ளை மாளிகையில் முக்கிய பதவி வகித்து வந்த அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். டிரம்புடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக பல அதிகாரிகள் ராஜினாமா செய்தனர்.

    இந்நிலையில், ராணுவ மந்திரி ஜிம் மேட்டிஸ் (வயது 68) தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் அதிபர் டிரம்புக்கு ராஜினாமா கடிதம் அனுப்பி உள்ளார். அதில், பதவி விலக இதுவே சரியான தருணம் என்றும், அதிபர் டிரம்ப் தகுதியான ஒரு தலைவரை ராணுவ மந்திரியாக நியமிப்பதற்கு ஏதுவாக பதவி விலகியிருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

    தனது பதவிக்காலம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 28ம் தேதியுடன் முடிவடைய உள்ளதாகவும், இந்த இடைப்பட்ட காலம் புதிய மந்திரியை தேர்வு செய்வதற்கு போதுமானதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.



    சிரியாவில் இருந்து அமெரிக்க படைகள் வாபஸ் பெறப்படுவதாக டிரம்ப் அறிவித்த மறுநாளே, ராணுவ மந்திரி பதவியில் இருந்து ஜிம் மேட்டிஸ் பதவி விலகியிருக்கிறார். எனவே, டிரம்புடன் ஏற்பட்ட கொள்கை முரண்பாடுகள் காரணமாக அவர் பதவி விலகியிருக்கலாம் என கூறப்படுகிறது.

    ஜிம் மேட்டிஸ் ராஜினாமா கடிதம் அனுப்பியதையடுத்து, பிப்ரவரி மாதம் அவர் ஓய்வு பெற உள்ளதாக அதிபர் டிரம்ப் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், கடந்த இரண்டு ஆண்டுகளாக பாதுகாப்புத் துறையில் ஜிம் சிறப்பாக பணியாற்றியதாகவும், அவரது பதவிக்காலத்தில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டதாகவும் பாராட்டியுள்ளார். #USDefenceSecretary #JimMattisResigns

    தேர்தல் தலையீடு குற்றச்சாட்டு தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டுள்ள அமெரிக்க அரசு, ரஷ்யா தொடர்புடைய மேலும் 22 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது தடை விதித்துள்ளது. #USSanctions #RussianSpies
    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் தேர்தலின்போது, வாக்கெடுப்பில் தலையிட்டு தேர்தல் முடிவின் மீது தாக்கம் செலுத்த முயன்றதாக ரஷ்யாவை அமெரிக்க உளவுத்துறை நிறுவனங்கள் குற்றஞ்சாட்டின. அரசியல் கட்சிகள், தலைவர்களின் இ-மெயில், சர்வர்களில் ஊடுருவி (சைபர் ஹேக்கிங்) அத்துமீறலில் ஈடுபட்டதாக ரஷ்ய உளவு அமைப்புகள் மீது அமெரிக்கா குற்றம்சாட்டியது.

    இந்த  குற்றச்சாட்டை ரஷ்யா ஆரம்பத்தில் இருந்தே மறுத்து வருகிறது. எனினும், தொடர்ந்து சைபர் ஹேக்கிங் குற்றச்சாட்டை அமெரிக்கா முன்வைத்தது. அத்துடன் அமெரிக்காவில் உள்ள ரஷ்ய உளவு அமைப்புகள், நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக புதிய தடைகளை பிறப்பித்து வருகிறது.

    அவ்வகையில், 18 ரஷ்ய தனிநபர்கள் மற்றும் 4 ரஷ்ய நிறுவனங்கள் மீது தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க கருவூலத்துறை தெரிவித்துள்ளது. தடைவிதிக்கப்பட்ட 18 நபர்களில் 15 பேர், ரஷ்யாவின் பிரதான புலனாய்வு அமைப்பின் (ஜிஆர்யு) உறுப்பினர்கள் ஆவர். இவர்கள் 2016 அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிட்டதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.

    இதுவரை ரஷ்யா தொடர்புடைய 272 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது டிரம்ப் நிர்வாகம் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. #USSanctions #RussianSpies
    அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அதிபர் டிரம்ப் மற்றும் கிம் ஜாங் அன் சந்திப்பு நடைபெறும் என நம்புவதாக வெளியுறவு துறை மந்திரி மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார். #DonaldTrump #KimJongUn
    வாஷிங்டன்:

    வடகொரியாவும் அமெரிக்காவும் நிரந்தர பகை நாடுகளாக உள்ளன. சீனா மற்றும் தென்கொரியா நாடுகள் மேற்கொண்ட முயற்சிகள் காரணமாக கிம் ஜாங் அன் தனது மிரட்டல் போக்கை கைவிட்டு அமெரிக்காவுடன் சமரசமாக செல்ல முன்வந்தார்.
     
    இதற்கிடையே, டிரம்ப் - கிம் சந்திப்பு சிங்கப்பூரில் கடந்த ஜூன் மாதம் 12-ம் தேதி நடைபெற்றது. அப்போது இருவரும் பரஸ்பரம் கைகுலுக்கி கொண்டனர்.



    அப்போது, தங்கள் நாட்டில் உள்ள அணு ஆயுத சோதனைக் கூடங்களை அழித்து விடுவோம். இனி அணு ஆயுத சோதனைகளை மேற்கொள்ள மாட்டோம் என்று வடகொரியா அறிவித்தது. அதேபோல், அமெரிக்காவும் வடகொரியா மீது விதித்துள்ள பொருளாதார தடைகளை நீக்குவதாக அறிவித்திருந்தது.

    இந்நிலையில், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அதிபர் டிரம்ப் மற்றும் கிம் ஜாங் அன் சந்திப்பு நடைபெறும் என நம்புவதாக வெளியுறவு துறை மந்திரி மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார். அப்போது, இரு நாடுகளும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். #DonaldTrump #KimJongUn
    அமெரிக்காவுக்கான இந்திய தூதராக ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்ளா நியமனம் செய்யப்பட்டுள்ளார் என இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. #HarshVardhanShringla #IndianAmbassadortoUS
    புதுடெல்லி:

    அமெரிக்காவுக்கான புதிய இந்திய தூதராக ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்ளா நியமிக்கப்பட்டு உள்ளார் என இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, வெளியுறவு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்காவுக்கான இந்திய தூதராக ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்ளா நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் கூடிய விரைவில் தனது பொறுப்பை ஏற்றுக் கொள்வார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    தற்போது ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்ளா வங்காள தேசத்தில் இந்திய தூதரக அதிகாரியாக செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #HarshVardhanShringla #IndianAmbassadortoUS 
    சிரியாவில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பை தோற்கடித்துவிட்டதாக டிரம்ப் அறிவித்ததையடுத்து, அங்கிருந்து தனது படைகளை அமெரிக்கா திரும்ப பெற்று வருகிறது. #SyriaConflict #SyriaISIS #USTroops
    வாஷிங்டன்:

    வடகிழக்கு சிரியாவில் இருந்து ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஒழிக்க சுமார் 2,000 அமெரிக்கப் படையினர் உதவி செய்தனர். இன்னும் சில பகுதிகளில் சண்டை நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஐ.எஸ். குழுவினர் மீண்டும் தலையெடுத்துவிடாமல் தடுப்பதற்காக அங்கே மேலும் சிலகாலம் அமெரிக்க படைகள் தங்கியிருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

    இந்நிலையில் சிரியாவில் ஐஎஸ் அமைப்பினர் வீழ்த்தப்பட்டுவிட்டனர் என்றும், சிரியாவில் வரலாற்று வெற்றிகளை பெற்றுள்ள அமெரிக்க துருப்புகளை நாட்டுக்கு மீண்டும் அழைக்க இதுவே சரியான நேரம் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். இது தொடர்பாக டுவிட்டர் தளத்தில் வீடியோ போஸ்ட் செய்திருந்தார்.



    அதிபர் டிரம்ப் இவ்வாறு அறிவித்ததையடுத்து, போர் நடந்து வரும் சிரியாவில் இருந்து தனது படைகளை அமெரிக்கா திரும்ப பெற்றுவருவதாக டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தாங்கள் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து கொண்டிருப்பதாக அமெரிக்காவின் பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது. ஆனால் அடுத்த கட்ட நகர்வு என்ன? என்பது பற்றி பென்டகன் தகவல் எதுவும் வெளியிடவில்லை. #SyriaConflict #SyriaISIS #USTroops
    சோமாலியாவில் அமெரிக்க போர் விமானப் படைகள் நடத்திய குண்டுவீச்சில் 62 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர்.

    நைரோபி:

    சோமாலியாவில் அல்- ‌ஷபாப் மற்றும் அல் கொய்தா பயங்கரவாதிகள் பெரிய அளவில் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். அவர்களை அழிக்கும் நடவடிக்கையில் சோமாலியாவுக்கு அமெரிக்க ராணுவம் உதவி புரிந்து வருகிறது.

    இந்தநிலையில் காந்தர்சே பகுதியில் முகாம்களில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் மீது அமெரிக்க போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்தன.

    இதையடுத்து கடந்த 17-ந்தேதி நடந்த குண்டு வீச்சில் 34 பயங்கரவாதிகளும், 18-ந்தேதி நடந்த தாக்குதலில் 28 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்.

    2 நாட்கள் நடத்தப்பட்ட குண்டுவீச்சில் 62 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர். இதில் பொதுமக்கள் யாரும் உயிரிழக்கவில்லை. காயம் அடையவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தங்கள் நாட்டின் மந்திரி உள்பட 3 பேர் மீது தடை விதிக்கப்பட்ட விவகாரத்தில் அமெரிக்காவுக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. #NorthKorea
    பியாங்காங்:

    எதிர் எதிர் துருவங்களாக விளங்கிய அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி சிங்கப்பூரில் உச்சி மாநாடு நடத்தி சந்தித்து பேசினர்.

    இந்த பேச்சுவார்த்தையின்போது, கொரிய தீபகற்ப பகுதியை அணு ஆயுதங்கள் அற்ற பகுதியாக ஆக்குவதற்கு ஏற்ற விதத்தில் வடகொரியா செயல்படும் என்ற உறுதிமொழியை டிரம்புக்கு கிம் ஜாங் அன் கொடுத்தார். அதன்படி வடகொரியா மேற்கொண்ட சில நடவடிக்கைகள் இரு நாட்டு உறவில் பதற்றத்தைத் தணிப்பதாக அமைந்தது.

    எனினும் தங்கள் மீது விதித்துள்ள கடுமையான பொருளாதார தடைகளை அமெரிக்கா முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்றும், அப்படி செய்யாவிட்டால் மீண்டும் தாங்கள் அணு ஆயுத கொள்கைக்கு திரும்புவது குறித்து தீவிரமாக பரிசீலிக்க வேண்டியது வரும் என்றும் வடகொரியா எச்சரிகை விடுத்தது. மேலும் கடந்த மாதம் அதிநவீன அணு ஆயுத சோதனையை நடத்தி வடகொரியா அதிரவைத்தது.

    இதற்கிடையே இரு நாட்டுத் தலைவர்களிடையே மீண்டும் பேச்சுவார்த்தை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இதனை டிரம்ப் உறுதி செய்தபோதும், பேச்சுவார்த்தையை நடத்துவதற்கு அவசரம் ஏதும் இல்லை என்று தெரிவித்தார்

    இந்த நிலையில், வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னுக்கு மிக நெருக்கமானவர் மற்றும் ஒரு மந்திரி உள்பட வடகொரியாவை சேர்ந்த 3 பேர் மீது அமெரிக்கா திடீரென தடைகளை விதித்துள்ளது.

    அமெரிக்க செனட் சபையில் வெளியுறவுத் துறை அமைச்சகம் தாக்கல் செய்த ஓர் அறிக்கையில், கிம் ஜாங் அன்னின் வலதுகரமாக செயல்படும் சோ ரியோங் ஹே, வடகொரிய பாதுகாப்புத்துறை மந்திரி ஜோங் கியோங் தாயிக் மற்றும் பிரசார அதிகாரி பாக் குவாங்ஹோ ஆகிய 3 பேரும் மனித உரிமை மீறல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டப்பட்டது.

    அதன் அடிப்படையில் அவர்கள் 3 பேர் மீதும் தடைகளை விதித்துள்ள அமெரிக்கா, அவர்களுக்கு சொந்தமாக அமெரிக்காவில் உள்ள சொத்துகளைப் பறிமுதல் செய்யப்போவதாகவும் அறிவித்துள்ளது.

    அமெரிக்காவின் இந்த நடவடிக்கை வடகொரியாவுக்கு கடும் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக வடகொரியாவின் அரசு ஊடகமான கே.என்.சி. ஏ.வில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:-

    வடகொரியா உடனான உறவை மேம்படுத்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மேற்கொள்ளும் முயற்சிகள் பாராட்டுக்குரியவை. ஆனால் அமெரிக்க வெளியுறவுத்துறையோ, இரு நாட்டு உறவை, கடந்த ஆண்டு இருந்ததை போல கடுஞ்சொற்களை பரிமாறிக்கொள்ளும் நிலைக்கு மீண்டும் கொண்டுவந்து நிறுத்துவது போல தலைகீழாக நிற்கிறது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுத ஒழிப்புக்கான பாதையை நிரந்தரமாக மூடிவிட செய்யும்.

    வடகொரியா மீது அதிகபட்ச அழுத்தம் தர வேண்டும் என்கிற அமெரிக்காவின் எண்ணம் மிகப்பெரிய விளைவை ஏற்படுத்தும். எனவே இரு நாட்டுத் தலைவர்கள் சந்திப்புக்கு பின் எதிர்பார்க்கப்பட்ட பரஸ்பர நம்பிக்கையை அளிக்கும் நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.  #NorthKorea 
    அமெரிக்காவில் இந்திய பெண் மீது தாக்குதல் நடந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் நியூயார்க்கை சேர்ந்த நபரை கைது செய்தனர். #NewYork #IndianOrgin #SubwayAttack
    நியூயார்க்:

    அமெரிக்காவில் வசித்து வருபவர் அவ்னீத் கவுர் (வயது 20). இந்தியப் பெண்ணான இவர், தனது தோழியுடன் சமீபத்தில் நியூயார்க் மேன்ஹாட்டனில் சுரங்க ரெயிலில் பயணம் செய்தார்.

    அப்போது அவ்னீத் கவுருடன், அந்த ரெயிலில் பயணம் செய்த நியூயார்க்கை சேர்ந்த அல்லாஷீத் அல்லா (54) என்பவர் வாய் தகராறில் ஈடுபட்டார்.

    அவ்னீத் கவுரும், அவரது தோழியும் ஓரினச்சேர்க்கையாளர்கள் என கிண்டல் செய்தார்.

    இந்த நிலையில் இறங்க வேண்டிய இடம் வந்ததும் அவ்னீத் கவுரும், அவரது தோழியும் இறங்கி நடந்து சென்றுகொண்டிருந்தனர். அல்லாஷீத் அல்லா அவர்களைப் பின்தொடர்ந்தார். அவர் திடீரென அவ்னீத் கவுரின் பின் தலையில் அடித்தார். அவரது நெஞ்சிலும் குத்தினார்.

    இதில் அவ்னீத் கவுர் கீழே சுருண்டு விழுந்தார். இதில் அவர் படுகாயம் அடைந்தார். அவர் உடனடியாக அங்குள்ள குயின்ஸ் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இது தொடர்பாக அவர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, அல்லாஷீத் அல்லாவை கைது செய்தனர். அவர் அவ்னீத் கவுர் மீது வெறுப்புணர்வு தாக்குதல் நடத்தியதாக வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 15 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்க வாய்ப்பு உள்ளதாக அரசு வக்கீல் ரிச்சர்டு பிரவுன் கூறினார்.

    இந்த சம்பவம், நியூயார்க் இந்திய வம்சாவளி மக்களிடையே மிகுந்த வேதனையை ஏற்படுத்தி உள்ளது.  #NewYork #IndianOrgin #SubwayAttack 
    அமெரிக்காவின் டெலவர் மாகாணத்தில் மகாகவி பாரதியாரின் 137-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் டெலவர் மாகாணத்தில் மகாகவி பாரதியாரின் 137-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவின்போது சிறுவர்-சிறுமிகளுக்கான ஓவியப்போட்டி, வினாடி-வினா போட்டி, பெரியவர்களுக்கான பேச்சுப்போட்டி ஆகியவை நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக வாசு அரங்கநாதன், அகத்தியன் ஜான் பெனடிக்ட் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    இதைத்தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    இந்த விழாவை பிரசாத் பாண்டியன், துரைக்கண்ணன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். இதில், டெலவர், பென்சிலவேனியா மற்றும் நியூஜெர்சி ஆகிய மாகாணங்களை சேர்ந்த தமிழ் மக்கள் கலந்துகொண்டனர்.
    ×