search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமெரிக்கா"

    அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் இந்தியர் சுட்டுக்கொல்லப்பட்டதன் பின்னணி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. #US #SunilEdla
    நியூயார்க்:

    அமெரிக்காவில் நியூஜெர்சி மாகாணத்தில் அட்லாண்டிக் நகரம் அருகே வென்ட்னார் நகரத்தில் நா‌ஷ்வில்லே அவினியூவில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வந்தவர், சுனில் எட்லா (வயது 61). இந்தியர். இவர் அங்கு ஆடிட்டராக பணியாற்றி வந்தார்.

    கடந்த வியாழக்கிழமை இரவு, அவர் தனது அடுக்கு மாடி குடியிருப்பில் இருந்து இரவுப்பணிக்கு செல்ல கீழே இறங்கி வந்தபோது அங்கு மறைந்திருந்த மர்ம நபர் அவரை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு ரத்த வெள்ளத்தில் வீழ்த்தி விட்டு தப்பினார்.

    அங்கிருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்து, அவர்கள் வருவதற்குள் சுனில் எட்லா உயிரிழந்தார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சுனில் எட்லாவின் கார், வீட்டில் இருந்து மாயமாகி விட்டது. எனவே காரை கொள்ளையடிப்பதற்காகத்தான், சுனில் எட்லா படுகொலை செய்யப்பட்டுள்ளார் என கருதப்படுகிறது.

    சுனில் எட்லாவின் கார் வேறு ஒரு இடத்தில் நிறுத்தப்பட்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். அட்லாண்டிக் நகர கண்காணிப்பு மையத்தின் உதவியுடன், அந்த காரை ஓட்டிச்சென்றவர் யார் என கண்டறிந்து கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட நபர் 16 வயது சிறுவன். அவனிடம் போலீசார் விசாரணை நடத்தி விட்டு, எக் ஹார்பர் நகரில் உள்ள சிறுவர்கள் சீர்திருத்த சிறையில் அடைத்தனர்.

    சுனில் எட்லாவுக்கு 2 பிள்ளைகள். பேரக்குழந்தையும் உள்ளது. சுனில் எட்லா சுட்டுக்கொல்லப்பட்டது பற்றி அவரது மகன் மோரிசன் எட்லா கூறும்போது, ‘‘ நான் பேச்சு மூச்சற்றுப்போய் விட்டேன். காரை கொள்ளையடித்தவர்கள், என் தந்தையை விட்டிருக்கலாமே’’ என வேதனையுடன் குறிப்பிட்டார்.

    சுனில் எட்லாவின் நெருங்கிய உறவினரான ராஜ் காசுலா கூறுகையில், ‘‘ அவர் (சுனில் எட்லா) மிகவும் மென்மையானவர். யாரிடமும் எதற்கும் வாக்குவாதம் செய்ய மாட்டார். நான் அவருக்கு மிகவும் நெருக்கமாக இருந்தேன். அவர் 1987-ம் ஆண்டு இங்கு வந்து குடியேறியபோது அவருக்கு தேவையான உதவிகள் செய்தேன். இப்போது அவர் இந்தியாவுக்கு 2 மாதம் செல்வதற்கு திட்டமிட்டிருந்தார். தனது தாயாரின் 95-வது பிறந்த நாளை கொண்டாட வேண்டும், குடும்பத்தினருடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட வேண்டும் என்று விரும்பினார்’’ என தெரிவித்தார்.

    மேலும் அவர் கூறும்போது, ‘‘அவர் இந்தியாவுக்கு சென்று வர திட்டமிட்டிருந்ததால் எல்லோரும் அவரை அழைத்து பேசிக்கொண்டிருந்தார்கள்’’ என்றார்.

    சுனில் எட்லாவின் குடும்ப நண்பர் தவே நேத்தகனி கூறுகையில், ‘‘ சுனில் எட்லா மிகவும் அருமையான மனிதர். அட்லாண்டிக் நகரில் தேவாலய வழிபாட்டில் பியானோ வாசிப்பதில் ஆர்வம் காட்டி வந்தார்’’ என்றார்.

    கொலை செய்யப்பட்டுள்ள சுனில் எட்லா, தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தை சேர்ந்தவர் என தகவல்கள் கூறுகின்றன. #US #SunilEdla
    சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகியை கொன்றது யார்? என இன்னும் இரு நாட்களில் அமெரிக்கா அம்பலப்படுத்தும் என டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். #Khashoggi #SaudiPrince
    வாஷிங்டன்:

    துருக்கி நாட்டு தூதரகத்தில் சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகியை மயக்க மருந்து கொடுத்து வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு சவுதி இளவரசர் முஹம்மது பின் சல்மான் மீது அமெரிக்க உளவுப்படையான சி.ஐ.ஏ. நேற்று குற்றம்சாட்டியுள்ளது. 



    சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் என்பதால் நாட்டின் அனைத்து விவகாரங்களிலும் முக்கிய முடிவெடுக்கும் முஹம்மது பின் சல்மானின் உத்தரவு இல்லாமலும், கவனத்துக்கு வராலும் இதுபோன்ற எந்த காரியமும் நடக்க முடியாது என சி.ஐ.ஏ. உயரதிகாரி ஒருவரும் குறிப்பிட்டிருந்தார்.

    இந்நிலையில், கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள மாலிபு நகரில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜமால் கஷோக்கியை கொன்றது யார்? எப்படி கொல்லப்பட்டார் என்பது தொடர்பான முழு விபரங்களை இன்னும் ஓரிரு நாட்களில் பகிரங்கப்படுத்துவோம் என குறிப்பிட்டுள்ளார். #Khashoggi #SaudiPrince #CIA #Trump
    அமெரிக்காவில் இந்தியர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறுவனை போலீசார் கைது செய்தனர். #Indiankilled

    நியூஜெர்சி:

    தெலுங்கானா மாநிலம் மேடக் பகுதியை சேர்ந்தவர் சுனில் எட்லா (61). இவர் அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் வென்ட்னார் பகுதியில் குடும்பத்துடன் தங்கியிருந்தார்.

    அட்லாண்டிக் சிட்டியில் உள்ள ஒரு நிறுவனத்தில் ஆடிட்டராக பணிபுரிந்தார். கடந்த 15-ந்தேதி இரவு இவர் வேலைக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டு வெளியேவந்தார்.

    அப்போது 16 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் அங்கு காரில் வந்தான். அதில் இருந்து இறங்கிய அவன் திடீரென தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுனில் எட்லாவை சரமாரியாக சுட்டான்.

    இதனால் நிலைகுலைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். உடனே அந்த சிறுவன் காரில் ஏறி தப்பி ஓடிவிட்டான்.


    தகவல் அறிந்ததும் அங்கு வந்த போலீசார் விசாரணை நடத்தி துப்பாக்கியால் சுட்ட சிறுவனை கைது செய்தனர்.

    அவன் மீது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் கொள்ளை மற்றும் சட்டத்துக்கு விரோதமாக கைத் துப்பாக்கி வைத்திருத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழும் வழக்கு போடப்பட்டுள்ளது.

    சுனில்எட்லா கடந்த 1987-ம் ஆண்டு முதல் அமெரிக்காவில் வசித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் இந்தியா வந்து தனது குடும்பத்தினரை சந்தித்தார். டிசம்பர் மாதத்தில் தனது தாயாரின் 98-வது பிறந்த நாள் மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட 2 மாத விடுமுறையில் இந்தியா வர இருந்தார்.

    தாயாரின் பிறந்த நாளை விமரிசையாக கொண்டாட அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தார். அதற்குள் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் சுடப்பட்டதற்கான காரணம் வெளியிடப்படவில்லை. இவர் அட்லாண்டிக் சிட்டியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் பியானோ வாசித்து வந்தார். இதனால் இவர் பிரபலமானவராக திகழ்ந்தார். #Indiankilled

    சீனாவில் இருந்து வட கொரியாவினுள் சட்ட விரோதமாக நுழைந்த அமெரிக்கரை வெளியேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது என வடகொரிய அரசின் செய்தி நிறுவனம் தெரிவித்தது. #NorthKoreya #US
    சியோல்:

    சீனாவில் இருந்து கடந்த மாதம் 16-ந் தேதி, வட கொரியாவினுள் சட்ட விரோதமாக நுழைந்த ஒரு அமெரிக்கர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

    அவரிடம் நடத்திய விசாரணையில் அவரது பெயர் லாரன்ஸ் புரூஸ் பைரன் என தெரிய வந்தது. அவர், “அமெரிக்காவின் மத்திய உளவுப்படை சி.ஐ.ஏ. உத்தரவின்பேரில்தான் நான் வடகொரியாவுக்குள் சட்ட விரோதமாக நுழைந்தேன்” என கூறினார்.

    அவரை நாட்டில் இருந்து வெளியேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது என வடகொரிய அரசின் செய்தி நிறுவனமான கே.சி.என்.ஏ. தெரிவித்தது.

    பொதுவாக வடகொரியா இப்படி சட்டவிரோதமாக தங்கள் நாட்டினுள் நுழைகிற யாரையும் எளிதில் விடுவித்து விடாது. இருப்பினும் அமெரிக்காவுடன் பேச்சு வார்த்தை நடத்துகிற நிலையில் இருப்பதால்தான் லாரன்ஸ் புரூஸ் பைரனை விடுவிக்க முடிவு செய்துள்ளது என தகவல்கள் கூறுகின்றன.

    இதே லாரன்ஸ் புரூஸ் பைரன் பெயரில் ஒருவர் கடந்த ஆண்டு தென்கொரியாவில் சட்டவிரோதமாக நுழைந்து கைது செய்யப்பட்டார். அவர் வடகொரியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே பேச்சு வார்த்தை நடத்துவதற்கான முயற்சியில் ஈடுபடுவதற்குத்தான் தான் தனிப்பட்ட பயணமாக வந்துள்ளதாக தெரிவித்தார். அதைத் தொடர்ந்து அவர் அமெரிக்காவுக்கு திருப்பி அனுப்பப்பட்டார். #NorthKoreya #US
    உரிய அனுமதி இல்லாமல் அமெரிக்காவுக்குள் நுழைந்ததாக 2382 இந்தியர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் தகவல் அறியும் சுதந்திரத்தின் மூலம் தெரியவந்துள்ளது. #2382Indians#IndiansinUSjails #USbordercrossing
    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்ற பின்னர் அங்கு வெளிநாட்டினருக்கு குடியுரிமை அளிக்கும் விவகாரத்தில் மிகுந்த கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். அண்டை நாடான மெக்சிகோ நாட்டு எல்லை வழியாக அமெரிக்காவில் அடைக்கலம் தேடிவரும் மக்கள் கைது செய்து சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.

    இந்நிலையில், உரிய அனுமதி இல்லாமல் அமெரிக்காவுக்குள் நுழைந்ததாக  2382 இந்தியர்கள் கைது செய்யப்பட்டு அந்நாட்டில் உள்ள 86 சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளதாக  தகவல் அறியும் சுதந்திரத்தின் மூலம் தற்போது தெரியவந்துள்ளது.

    வடஅமெரிக்காவில் வாழும் பஞ்சாபிகள் சங்கம் மூலம் பெறப்பட்ட இந்த தகவலின் அடிப்படையில் இவர்களில் பெரும்பாலானவர்கள் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள். சொந்த நாட்டில் வன்முறை மற்றும் அடக்குமுறைக்கு பயந்து இவர்கள் அனைவரும் அமெரிக்காவில் தஞ்சம் அடைய வந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

    30 முதல் 35 லட்சம் ரூபாய் கொடுத்தால் அமெரிக்க குடியுரிமை பெற்று தருவதாக போலி வாக்குறுதி அளிக்கும் சில தரகர்களின் மாயவலையில் விழும் இந்தியர்கள் இங்கு அடைக்கலம் தேடிவந்து குடியுரிமைத்துறை அதிகாரிகளிடன் பிடிபட்டு, சிறையில் அடைபட்டுள்ளனர் என்பது  குறிப்பிடத்தக்கது. #2382Indians#IndiansinUSjails  #USbordercrossing 
    இலங்கையில் பாராளுமன்றத்தை கலைத்திருப்பது அரசியல் நெருக்கடியை மேலும் வலுப்படுத்தும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. #SriLankaParliament #Sirisena #USWarnsSriLanka
    வாஷிங்டன்:

    இலங்கையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே நீக்கப்பட்டு, புதிய பிரதமராக ராஜபக்சே நியமிக்கப்பட்டதில் இருந்து அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது. பாராளுமன்றத்தில் ராஜபக்சே பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதற்காக எம்.பி.க்களை இழுக்கும் முயற்சியில் ராஜபக்சே ஈடுபட்டார். ஆனால் அவரது முயற்சிக்கு எதிர்பார்த்த பலன் கிடைக்காததால், பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தினால் ராஜபக்சே தோற்பது உறுதி ஆனது.



    இதனால் தனக்கு நெருக்கமானவர்களுடன் தீவிரமாக ஆலோசனை நடத்தி வந்த அதிபர் சிறிசேனா, நேற்று இரவு திடீரென்று பாராளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டார். அத்துடன் ஜனவரி 5-ந் தேதி தேர்தல் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

    இலங்கையில் முன்கூட்டியே பாராளுமன்ற தேர்தல் நடத்தப்படும் என்று அதிபர் அறிவிப்பு வெளியிட்டு இருப்பதற்கு, அமெரிக்க வெளியுறவுத்துறை கவலையை வெளிப்படுத்தியுள்ளது.

    அமெரிக்க வெளியுறவுத்துறை அலுவலக டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “இலங்கை பாராளுமன்றம் கலைக்கப்படும் என்று வெளியாகும் செய்திகளால் அமெரிக்கா கவலை அடைந்துள்ளது. இந்த விவகாரம் அரசியல் நெருக்கடியை மேலும் வலுப்படுத்தும். இலங்கையின் மிகச்சிறந்த கூட்டாளி நாடு என்ற அடிப்படையில், நாட்டின் வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மைக்கு ஜனநாயக அமைப்புகள் மதிக்கப்படுவது அவசியம் என்று அமெரிக்கா கருதுகிறது. உங்களுடைய (சிறிசேனா) சமீபத்திய நடவடிக்கைகள் சரி செய்யப்படாவிட்டால், உங்கள் நாட்டின் ஜனநாயக வளர்ச்சிக்கு அச்சுறுத்தலாகவும் சமீப வருடங்களில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சிப்பணிகளை தடம் புரளச்செய்யும் வகையிலும் அமையும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக அமெரிக்க வெளிவிவகாரக் குழு, இலங்கை அதிபர் சிறிசேனாவுக்கு கடிதம் எழுதி உள்ளது. #SriLankaParliament #Sirisena #USWarnsSriLanka
    அமெரிக்க நாட்டுக்குள் சட்டவிரோதமாக நுழைகிறவர்கள், தஞ்சம் கோர முடியாது என்று டிரம்ப் நிர்வாகம் அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. #DonaldTrump #AsylumClaims
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் உலக நாடுகள் பலவற்றில் இருந்தும் மக்கள் குடியேறுவதில் ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாக மத்திய அமெரிக்க நாட்டினர், அமெரிக்கா வந்து தஞ்சம் அடைவதில் ஆர்வம் காட்டி வந்தனர்.

    இது டிரம்புக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. அவர்கள் ‘கேரவன்’ வாகனங்களில் வருவதை ‘படையெடுப்பு’ என்று டிரம்ப் விமர்சித்து வந்தார்.

    நடந்து முடிந்த இடைக்கால தேர்தல் பிரசாரத்தின்போதும், மத்திய அமெரிக்க நாட்டினர் வருகைக்கு எதிரான கருத்துக்களை டிரம்ப் வெளியிட்டார். அது மட்டுமின்றி மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்க வர முயற்சிக்கிறவர்களை தடுத்து நிறுத்தும் நோக்கத்தில் எல்லையில் அவர் பல்லாயிரக்கணக்கில் படை வீரர்களை குவித்துள்ளார்.

    கடந்த புதன்கிழமையன்று வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது, சி.என்.என். நிருபர் அகோஸ்டா இந்தப் பிரச்சினையை எழுப்பியபோதுதான் டிரம்புடன் மோதல் ஏற்பட்டது.

    இந்த நிலையில் அதிரடியாக அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைகிறவர்கள் தஞ்சம் கோர முடியாது என கூறும் புதிய விதியை டிரம்ப் நிர்வாகம் கொண்டு வந்துள்ளது.

    இது தொடர்பாக டிரம்ப் நிர்வாகத்தில் அட்டார்னி ஜெனரல் பொறுப்பு வகிக்கும் மேத்யூ விட்டேகரும், உள்நாட்டு பாதுகாப்பு வல்லுனர் கிர்ஸ்ட்ஜென் நீல்சனும் இடைக்கால இறுதி விதி என்ற பெயரில் ஒரு அறிவிக்கையை வெளியிட்டுள்ளனர்.

    இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் கூறி இருப்பதாவது:-

    நாட்டின் குடியேற்றம் மற்றும் தேசிய பாதுகாப்பு சட்டப்படி, அமெரிக்க நலன்களுக்கு எதிரானவர்கள் என்கிற பட்சத்தில், நாட்டுக்குள் சட்டவிரோதமாக நுழைகிற வெளிநாட்டினரை தடுத்து நிறுத்துகிற அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு. அவர்கள் மீது சரியானது என கருதப்படுகிற எந்தவொரு கட்டுப்பாட்டையும் அவரால் விதிக்கவும் முடியும்.

    இப்படியான ஜனாதிபதியின் தடை உத்தரவை மீறுவோரையும், அகதிகளுக்கான தகுதியில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டவர்களையும் தடை செய்வதற்கு நாடாளுமன்றம் வழங்கியுள்ள அதிகாரத்தை நாங்கள் பயன்படுத்துகிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதன்படி அமெரிக்காவின் தெற்கு எல்லை வழியாகவும் யாரும் சட்டவிரோதமாக நுழைந்து தஞ்சம் கோர முடியாது என கூறப்பட்டுள்ளது. டிரம்ப் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிராக கண்டனங்கள் குவிகின்றன.

    இதுபற்றி அமெரிக்க மனித உரிமைகள் அமைப்பு கருத்து தெரிவிக்கையில், “அகதிகள் தஞ்சம் கோர முடியாது என டிரம்ப் நிர்வாகம் கொண்டு வந்துள்ள விதி, சட்ட விரோதமானது” என கூறியது.

    ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பின் பொதுச்செயலாளர் குமி நாய்டூ வெளியிட்டுள்ள அறிக்கையில், “ இந்த கொள்கை முடிவானது, ஆயிரக்கணக்கான அகதிகளின் வாழ்க்கையை அபாயத்தில் கொண்டு போய் விட்டுள்ளது” என கூறப்பட் டுள்ளது.
    பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக அமெரிக்கா மேற்கொள்ளும் போரின் மூலம் கிளர்ச்சியாளர்கள் உட்பட இதுவரை 5 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. #US #WarOnTerror
    வாஷிங்டன்:

    2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி அமெரிக்காவில் நடத்தப்பட்ட பயங்கரவாதிகளின் தாக்குதல் உலகளவில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதன் எதிரொலியாக பயங்கரவாதிகளுக்கு எதிரான போர் என்ற பெயரில் அமெரிக்கா பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் மிகத்தீவிரமாக செயல்பட்டது.

    இதுகுறித்து ஆய்வு ஒன்றை நடத்திய அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழகத்தின் சர்வதேச மக்கள் நல நிறுவனமான வாட்சன் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த அறிக்கையில், 2001-ம் ஆண்டு முதல் தற்போது வரை அமெரிக்காவின் பயங்கரவாத ஒழிப்பு போர் நடவடிக்கை மூலம் 4 லட்சத்து 80 ஆயிரம் முதல் 5 லட்சத்து 7 ஆயிரம் பேர் வரை உயிரிழந்து இருப்பதாக தெரிவித்துள்ளது.



    கிளர்ச்சியாளர்கள், பாதுகாப்பு படையினர், ராணுவ அதிகாரிகள் பொதுமக்கள் என அனைவரும் இந்த ஆய்வில் அடங்குவர் என்றும், மிக துல்லியமாக உயிரிழப்புகளின் எண்ணிக்கையை கணக்கிட முடியாது எனவும் ஆய்வறிக்கை குறிப்பிட்டுள்ளது.

    குறிப்பாக கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 1 லட்சத்து 10 ஆயிரம் பேர் கொல்லப்பட்டு இருப்பதாக ஆய்வில் தெரிக்கப்பட்டுள்ளது. மேலும், ஈராக் நாட்டில் மட்டும் 1 லட்சத்து 82 ஆயிரத்து 272 முதல் 2 லட்சத்து 04 ஆயிரத்து 575 பொதுமக்கள் இந்த போர் நடவடிக்கை மூலம் கொல்லப்பட்டு இருப்பதாகவும், அதேபோல், 38 ஆயிரத்து 480 பொதுமக்கள் ஆப்கானிஸ்தானிலும், 23 ஆயிரத்து 372 மக்கள் பாகிஸ்தானிலும் கொல்லப்பட்டு இருப்பதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. #US #WarOnTerror
    15 ஆண்டுகளாக அமெரிக்க வெள்ளைமாளிகையில் நடைபெற்று வந்த தீபாவளிக் கொண்டாட்டங்கள் இந்த ஆண்டு நிராகரிக்கப்பட்டுள்ளது. #Diwali #America #WhiteHouse #Trump
    வாஷிங்டன்:

    அமெரிக்க வாழ் இந்திய மக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த 2003-ம் ஆண்டு அப்போதைய அதிபர் ஜார்ஜ் புஷ் வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடும் வழக்கத்தை அறிமுகப்படுத்தினார். பின்னர் பதவிக்கு வந்த அதிபர் ஒபாமாவும் அந்த வழக்கத்தை தொடர்ந்து கடைபிடித்தார்.

    இந்நிலையில் கடந்த 15 ஆண்டுகளாக வெள்ளை மாளிகையில் நடைபெற்ற தீபாவளிக் கொண்டாட்டங்கள் இந்த ஆண்டு நடைபெறவில்லை. கடந்த ஆண்டு வெள்ளை மாளிகையில் தீபாவளிக் கொண்டாட்டங்கள் நடைபெற்ற நிலையில் அதில் அதிபர் ட்ரம்ப் பங்கேற்றார்.

    இந்த ஆண்டு தீபாவளி கொண்டாட்டங்கள் நடத்தப்படாததற்கு, நாடாளுமன்ற இடைக்கால தேர்தல், பிரச்சாரம், வாக்கு எண்ணிக்கை போன்றவை காரணமாக கூறப்படுகிறது. #Diwali #America #WhiteHouse #Trump
    அமெரிக்காவின் அரசு தலைமை வழக்கறிஞராக பதவி வகித்த ஜெஃப் செஸ்ஸன்ஸ் அதிபர் டொனால்ட் ட்ரம்பின் கோரிக்கையை ஏற்று தனது பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார். #JeffSessions #US #Trump #AttorneyGeneral
    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது அமைச்சரவை மற்றும் அரசின் முக்கிய பொறுப்புகளில் ஒரு வாரத்துக்குள் சில மாற்றங்கள் செய்யப்படும் என தெரிவித்து இருந்தார். அதன் முதல் எதிரொலியாக, அமெரிக்க அரசின் தலைமை வழக்கறிஞராக பதவி வகித்து வந்த ஜெஃப் செஸ்ஸன்ஸ் தனது பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், அதிபர் டொனால்ட் ட்ரம்பின் கோரிக்கையை ஏற்று தனது பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து அதிபர் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், ஜெஃப்பின் சேவைக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும், அவரது உடல்நலமுடன் வாழ வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், தலைமை வழக்கறிஞர் பதவிக்கு விரைவில் மேத்யூ ஜி விடாகெர் நியமனம் செய்யப்பட உள்ளார் எனவும் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். #JeffSessions #US #Trump #AttorneyGeneral
    அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடைபெற்ற இடைக்கால தேர்தலில் அதிபர் ட்ரம்பின் குடியரசு கட்சி கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. #DemocraticParty #RepublicanParty #Trump
    வாஷிங்டன்:

    அமெரிக்க ஜனாதிபதியின் 4 ஆண்டு பதவிக்காலத்தில் 2 ஆண்டுகளின் முடிவில் நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் (கீழ்சபை) மொத்தம் உள்ள 435 இடங்களுக்கும், செனட் சபையின் (மேல்சபை) மூன்றில் ஒரு பகுதியான 33 இடங்களுக்கும் தேர்தல் நடத்துவது வழக்கமான ஒன்று. ஜனாதிபதி பதவிக்காலத்தின் மத்தியில் வருவதால் இடைக்கால தேர்தல் என்ற பெயரைப் பெற்றது.

    அந்த வகையில் ஜனாதிபதி தேர்தல் முடிந்து 2 ஆண்டுகள் ஆன நிலையில் இந்த தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. இது 2 ஆண்டு கால டிரம்ப் பதவிக்காலத்துக்கான பொது வாக்கெடுப்பாக அமையும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

    தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்த நிலையில், எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி, நாடாளுமன்றத்தின் கீழ்சபையை கைப்பற்றியுள்ளது. இந்த தேர்தலில் பெரும்பான்மைக்கு 218 இடங்கள் தேவையான நிலையில், எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி, 219 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மை பலம் பெற்றுள்ளது. அதிபர் ட்ரம்பின் குடியரசுக் கட்சி 193 இடங்களை மட்டுமே பெற்றுள்ளது.



    இந்த வெற்றியின் மூலம் நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் பதவி, ஜனநாயக கட்சிக்கு கிடைக்கும். இதன்மூலம் டிரம்ப் நிர்வாகம், தொழில் சார்ந்த முடிவுகள், வருமான வரி விவகாரங்கள் தொடர்பாக ஜனநாயக கட்சியினர் விசாரணை நடத்த முடியும் என்பதால் மீதமுள்ள 2 ஆண்டு காலம் டிரம்புக்கு போராட்டமாக அமையும் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    மேல்சபையான செனட் சபையில் ஏற்கனவே குடியரசு கட்சிதான் பெரும்பான்மை பெற்றிருந்தது. இப்போது 33 இடங்களுக்கு நடந்த தேர்தலிலும் முன்னிலை பெற்ற அதிபர் ட்ரம்பின் குடியரசு கட்சி, மொத்தம் 51 இடங்களையும், எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி 45 இடங்களையும் பெற்றுள்ளது. அதிபரால் அதிக கவனம் செலுத்தப்பட்ட இந்த செனட் சபை தேர்தலில் வெற்றி பெற்றதற்கு ட்ரம்ப் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

    4 ஆண்டுகள் அதிபர் பதவிக்கு இடையே நடைபெற்ற இந்த தேர்தலில் அதிபர் ட்ரம்பின் குடியரசு கட்சி கீழ் சபையை பறிகொடுத்தது அவருக்கான பின்னடைவாக கருதப்படுகிறது. #DemocraticParty #RepublicanParty #Trump
    அமெரிக்காவில் நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. இதுவரை வெளியான முடிவுகளில் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று முன்னிலை வகிக்கிறது. #USpolls
    வாஷிங்டன்:

    அமெரிக்க பாராளுமன்றத்துக்கு மிட்டெர்ம் தேர்தல் எனப்படும் இடைக்கால தேர்தல் நேற்று நடந்தது.  இதில் 100 பேரில் மூன்றில் ஒரு பங்கு செனட் சபை உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

    அமெரிக்க பிரதிநிதிகள் சபையைச் சேர்ந்த 436 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இது அதிபர் தேர்தலுக்கு சமமான தேர்தலாக கருதப்படுகிறது. மேலும் 36 மாகாணங்களுக்கு இந்த வருடம் கவர்னர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

    இந்த தேர்தல் அமெரிக்க அரசியலில் மிக முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்த கூடியது.

    இந்த நிலையில் இடைத்தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. இதுவரை வெளியான முடிவுகளில் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது

    இந்த கட்சி 194 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதிபர் டிரம்பின் குடியரசு கட்சி 174 இடங்களை பிடித்துள்ளது.

    இதன் மூலம் அதிபர் டிரம்புக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஏனெனில் டிரம்புக்கு இன்னும் 2 ஆண்டுகள் மீதம் உள்ளது. புதிய சட்டங்கள் கொண்டு வர வேண்டும் என்றால் இந்த உறுப்பினர்களின் ஆதரவு தேவை.

    அதே நேரத்தில் செனட் சபை தேர்தலில் டிரம்பின் குடியரசு கட்சி வெற்றி பெற்று மெஜாரிட்டியை தக்க வைத்துள்ளது. அதில் உள்ள 100 இடங்களில் குடியரசு கட்சி 51 இடங்களை பிடித்துள்ளது. ஜனநாயக கட்சி 42 இடங்களை கைப்பற்றியுள்ளது. #USpolls
    ×