என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அமெரிக்கா"
அமெரிக்க பாராளுமன்றத்தின் கீழ்சபை மற்றும் பிரதிநிதிகள் சபையின் சார்பில் அந்நாட்டில் சிறப்பான வகையில் சமூகத் தொண்டாற்றியவர்களுக்கு ஆண்டுதோறும் தங்கப்பதக்கம் அளித்து கவுரவிக்கப்படுகிறது.
அமெரிக்காவின் மிகவும் உயரிய விருதாக கருதப்படும் இந்த தங்கப்பதக்கம் மிகவும் அரிதாக சில வெளிநாட்டவர்களுக்கும் முன்னர் அளிக்கப்பட்டது.
அகிம்சை முறையில் மகாத்மா காந்தி நடத்திய சத்தியாகிரகப் போராட்ட இயக்கம் ஒரு நாட்டுக்கும் இந்த உலகத்துக்கும் ஊக்கசக்தியாக அமைந்தது. பிறரது சேவைக்கு நம்மை அர்ப்பணித்து கொள்ள அவரது வாழ்க்கை ஒரு உதாராணப் பாடமாக அமைந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதைதொடர்ந்து, அமைதி மற்றும் அகிம்சைக்காக போராடிய மகாத்மா காந்தியின் பெயரை இந்த விருதுக்கு பரிந்துரை செய்து 23-9-2018 அன்று அமெரிக்க பாராளுமன்ற பிரதிநிதிகள் சபையில் ஒரு தீர்மானத்தை கரோலின் மலோனே தாக்கல் செய்துள்ளார்.
இந்திய வம்சாவளியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களான அமி பேரா, ராஜா கிருஷ்ணமூர்த்தி, ரோ கன்னா, பிரமிளா ஜெயபால் மற்றும் துல்சி கபார்ட் உள்ளிட்டோர் இந்த தீர்மானத்தை ஆதரித்து வழிமொழிந்துள்ளனர். #USCongressResolution #USCongressionalGoldMedal #MahatmaGandhi
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் ஆலன்டவுன் என்கிற நகரம் உள்ளது. இங்கு உள்ள தெரு முனை ஒன்றில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார் நேற்று முன்தினம் இரவு உள்ளூர் நேரப்படி 9.30 மணிக்கு பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் காரின் அருகே நின்றுகொண்டிருந்த 3 பேர் தீயில் கருகி பரிதாபமாக உயிர் இழந்தனர்.
இது குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் மற்றும் பாதுகாப்புபடை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த பகுதியை சுற்றிவளைத்து தங்களின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்தனர்.
கார் வெடித்து சிதறியது எப்படி? இதற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
அதே சமயம் இது பயங்கரவாத தாக்குதல் கிடையாது என்றும் பொதுமக்களுக்கு எந்த வித அச்சுறுத்தலும் இல்லை என்றும் போலீசார் உறுதிபட தெரிவித்தனர். #Pennsylvania #CarExplosion
அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளிடையே தடையில்லா வர்த்தகம் மூலம் பொருளாதார வளர்ச்சி பெறுவதற்காக கடந்த 1994ம் ஆண்டு ‘வட அமெரிக்கா தடையில்லா வர்த்தக ஒப்பந்தம்’ (நாப்டா) அமல்படுத்தப்பட்டது.
ஆனால் அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பின் இந்த வர்த்தக ஒப்பந்தத்தை எதிர்த்தார். மிக மோசமான ஒப்பந்தங்களில் இதுவும் என்று என கூறிய அவர், தற்போதையை சூழலில் நாப்டா ஒப்பந்தத்தால் அமெரிக்காவுக்கு எந்த நன்மையும் இல்லை என தெரிவித்தார். மேலும் இந்த ஒப்பந்தத்தில் தனக்கு திருப்தியளிக்கும் வகையில் மாற்றங்கள் செய்யாவிட்டால் நாப்டா ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகும் என டிரம்ப் அறிவித்தார்.
இதையடுத்து மூன்று நாடுகளிடையே பேச்சுவார்த்தை தொடங்கியது. இதில் எந்த முன்னேற்றமும் ஏற்படாமல் அடுத்தடுத்து பேச்சுவார்த்தை நீண்டது. அதன்பின்னர் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் (ஞாயிறு) கனடா புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும், தவறினால் இந்த ஒப்பந்தமானது அமெரிக்காவுக்கும் மெக்சிகோவுக்கும் இடையிலான இருதரப்பு ஒப்பந்தமாக மாற்றப்படும் என்றும் டிரம்ப் கெடு விதித்தார். அதன்பின்னர் கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் வாகனங்களுக்கு வரி விதிப்போம் என்றும் கூறினார்.
இந்த கேடு முடிவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னதாக, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையில் நேற்று இரவு அமைச்சரவை அவசரமாக கூடி இதுபற்றி ஆலோசித்தது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கனடாவின் நலன்களை பாதுகாக்கும் வகையில் புதிய ஒப்பந்தத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதன்மூலம் வட அமெரிக்கா தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தை சீர்திருத்தம் செய்வது தொடர்பான கனடா மற்றும் அமெரிக்கா குழுவினரிடையே இன்று உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக கனடா ஊடகம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக இரு நாடுகளும் கூட்டாக அறிக்கை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய நாப்டா ஒப்பந்தத்தின் குறிப்பிட்ட பிரிவுகளில் உடன்பாடு ஏற்பட்டிருப்பதாக மற்றொரு கனடா ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
கனடாவின் பாதுகாக்கப்பட்ட பால் சந்தையை அமெரிக்க அதிக அளவில் அணுகுவதற்கு புதிய ஒப்பந்தம் வழிவகை செய்கிறது. #NAFTADeal #CanadaUSDeal
வாஷிங்டன்:
மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் வெளிநாட்டினர் சட்ட விரோதமாக நுழைந்து குடியேறுகின்றனர். அவர்களை தடுத்து நிறுத்தும் முயற்சியில் டிரம்ப் அரசு ஈடுபட்டுள்ளது. இதற்காக மெக்சிகோ எல்லையில் சுவர் கட்ட அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
அமெரிக்க சுங்க இலாகா மற்றும் எல்லைப் பாதுகாப்பு படையினர் விழிப்புடன் கண்காணித்து வருகின்றனர். இருந்தும் ஊடுருவும் வெளி நாட்டினரின் எண்ணிக்கை குறையவில்லை.
அவர்களில் மெக்சிகோவை சேர்ந்தவர்கள் தான் பெரும்பாலானோர். அவர்களை தொடர்ந்து கவுதமலா, ஹோண்டுராஸ் மற்றும் எல்சால்வேடர் நாடுகளை சேர்ந்தவர்கள் சட்ட விரோதமாக நுழைகின்றனர். இவர்களுக்கு அடுத்த படியாக இந்தியர்கள் நுழைவதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மெக்சிகோ எல்லை வழியாக நுழையும் இவர்கள் அமெரிக்காவில் அடைக்கலம் கேட்டு மனு செய்கின்றனர். அதில் வேறு சாதி அல்லது மதத்தினரை திருமணம் செய்ததால் கொலை மிரட்டல் வருவதாகவும் எனவே அடைக்கலம் தரும்படியும் கோரிக்கை விடுக்கின்றனர்.
2012 முதல் 2017-ம் ஆண்டு வரை அடைக்கலம் கேட்ட 42 சதவீத இந்தியர்களின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அதேநேரத்தில் 79 சதவீதம் எல்சால்வேடர் நாட்டினரின் மனுவும், 78 சதவீதம் ஹோண்டுராஸ் நாட்டினரின் மனுவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு மட்டும் சட்ட விரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்து அங்கு குடியேறிய 9 ஆயிரம் இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது கடந்த ஆண்டைவிட அதிகமாகும். கடந்த ஆண்டில் 3,162 பேர் கைதாகினர். இந்த தகவலை அமெரிக்க சுங்க இலாகா மற்றும் எல்லை பாதுகாப்பு படையின் செய்தி தொடர்பாளர் சால்வேடர் ஷமோரா தெரிவித்துள்ளார். #Trump
அமெரிக்க ஜனாதிபதியாக ஒபாமா பதவி வகித்த காலத்தில் ‘எச்-1’ பி விசாவில் பணியாற்றுகிறவர்களின் வாழ்க்கைத்துணைவர்களுக்கும் (ஆண் என்றால் மனைவிக்கும், பெண் என்றால் கணவருக்கும்), அவர்களின் 21 வயதுக்குட்பட்ட பிள்ளைகளுக்கும் ‘எச்-4’ விசா அளித்து, வேலை பார்க்கும் வாய்ப்பினை வழங்கினார்.
இந்த திட்டத்தால், ‘எச்-1’ பி விசாவில் அமெரிக்காவில் வேலை பார்க்கிற ஆண்களின் மனைவிமாருக்கும், பெண்களின் கணவர்களுக்கும் அங்கேயே வேலை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இது அமெரிக்காவில் வேலை பார்த்து வருகிற தகவல் தொழில்நுட்ப பணியாளர்களுக்கு குறிப்பாக இந்தியர்களுக்கு வரமாக அமைந்தது.
அந்தக் கடிதத்தில் அவர்கள் ‘எச்-1’ பி விசாதாரர்களின் வாழ்க்கைத்துணைவர்களுக்கு ‘எச்-4’ விசா வழங்கி வேலை பார்க்க அனுமதி வழங்கும் திட்டத்தை ரத்து செய்து விடக்கூடாது, அப்படிச்செய்தால் அது பெண்களுக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும் என வலியுறுத்தி உள்ளனர். #H4Visa #H1BVisa
சீனாவை சேர்ந்தவர் ஜி சாக்குன் (வயது 27). அவர் மாணவர் விசாவில் கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் அமெரிக்காவுக்கு சென்றார். அங்கு அவர் சிகாகோ நகரில் இல்லினாய்ஸ் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் சேர்ந்து படித்தார். 2015-ம் ஆண்டு மின் பொறியியலில் முதுநிலை பட்டம் பெற்றார்.
அமெரிக்காவில் குடியேறுகிற பிற நாட்டினர் அங்கு ராணுவத்தில் சேர்ந்து பணி புரிய முடியும் என்பதால், ஜி சாக்குனும் 2016-ம் ஆண்டு அமெரிக்க ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றி உள்ளார்.
இந்த நிலையில், இவர் சிகாகோவில் கைது செய்யப்பட்டார். இவர் அமெரிக்காவில் சட்டவிரோத உளவு ஏஜெண்டாக பணியாற்றினார் என்ற புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக சிகாகோ கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
வழக்கில், அமெரிக்காவில் பணியாற்றுகிற சீன என்ஜினீயர்களையும், விஞ்ஞானிகளையும் குறிப்பாக அமெரிக்க ராணுவ ஒப்பந்தக்காரர்களாக இருப்பவர்களை ஜி சாக்குன் உளவு பார்த்தார் என்று கூறப்பட்டுள்ளது. உளவுத்துறை உயர் அதிகாரி ஒருவருக்காகத்தான் இவர் உளவு வேலையில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் தன் மீதான குற்றச்சாட்டுகளை ஜி சாக்குன் திட்டவட்டமாக மறுத்துள்ளார். கடந்த 7 ஆண்டுகளில் எந்தவொரு வெளிநாட்டு அரசுடனும் எனக்கு தொடர்பு இல்லை என்று கூறியுள்ளார். #ChineseNational #Spy
இரு பெரும் வல்லரசுகளான அமெரிக்காவும், சீனாவும் வர்த்தகப்போரில் ஈடுபட்டு வருகின்றன. இரு நாடுகளும் ஒன்றிலிருந்து மற்றொன்று இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு தலா 50 பில்லியன் டாலர் (சுமார் ரூ.3½ லட்சம்) அளவுக்கு கூடுதல் வரி விதித்து அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கிய இந்த மோதல் மேலும் தீவிரமடைந்து வருகிறது.
அதாவது இரு நாடுகளும் பரஸ்பரம் புதிய வரி அறிவிப்பை வெளியிட்டு உள்ளன. அதன்படி சீனாவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 200 பில்லியன் டாலர் அளவுக்கு அமெரிக்கா வரிவிதித்து உள்ளது. சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மின் துடைப்பான் முதல் இணையதள கருவிகள் வரை இந்த வரி விதிப்பு பொருந்தும்.
இதைப்போல அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் திரவ இயற்கை எரிவாயு முதல் குறிப்பிட்ட ரக விமானங்கள் வரையிலான பொருட்களுக்கு 60 பில்லியன் டாலர் அளவுக்கு புதிய வரி விகிதத்தை சீனா அறிவித்து உள்ளது. இந்த புதிய வரிவிதிப்பு நடைமுறைகள் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு இரு நாடுகளும் தங்களுக்கு இடையேயான வர்த்தக மோதலை தீவிரப்படுத்தி இருந்தாலும், இதை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறினார். எனினும் அதற்கான காலத்தைப்பற்றி அவர் குறிப்பிடவில்லை. #China #US #TradeWar
அமெரிக்காவில் எச்.1பி விசாவில் பணிபுரிவோரின் கணவர் அல்லது மனைவி வேலை செய்ய முன்னாள் அதிபர் ஒபாமா அரசு அனுமதி வழங்கியது. அதற்காக ‘எச் 4’ விசா வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில் அங்கு ஏராளமான இந்தியர்கள் உள்பட வெளி நாட்டினர் பணி புரிகின்றனர்.
இதை எதிர்த்து அமெரிக்காவை சேர்ந்த சேவ் ஜாப்ஸ் என்பவர் கொலம்பியாவில் உள்ள மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தார். அதில் ஒபாமா அரசின் இத்தகைய கொள்கை முடிவால் அமெரிக்க தொழிலாளர்களின் வேலை வாய்ப்பு பறிபோகிறது. எனவே அதை தடுத்து நிறுத்த வேண்டும் என தெரிவித்து இருந்தார்.
இந்த வழக்கு விசாரணை கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. கடந்த பிப்ரவரி 28, மே 22 மற்றும் ஆகஸ்டு 20-ந்தேதிகளில் விசாரணை நடைபெற்றது. இந்த நிலையில் இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது.
இந்த விவகாரம் குறித்து டிரம்ப் அரசு ஏற்கனவே கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்து இருந்தது. அதில் கோர்ட்டு விரும்பினால் ‘எச்4’ விசாவை ரத்து செய்ய அரசு தயாராக இருப்பதாக தெரிவித்து உள்ளது.
தற்போது எச் 4 விசாவை ரத்து செய்ய வகை செய்யும் புதிய சட்டம் இன்னும் 3 மாதத்தில் தயாராகி விடும் என கோர்ட்டில் பகிரங்கமாக அறிவித்துள்ளது. டிரம்ப் அரசின் இத்தகைய நடவடிக்கையால் அமெரிக்காவில் தங்கி ‘எச் 4’ விசாவில் பணிபுரிவோர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எச் 4 விசாவில் பணிபுரிய 1 லட்சத்து 26 ஆயிரத்து 853 விண்ணப்பங்களுக்கு அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற துறை அனுமதி வழங்கியுள்ளது. இவர்களில் 93 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் இந்தியர்கள் 5 சதவீதம் பேர் சீனாவை சேர்ந்தவர்கள். மீதமுள்ள 2 சதவீதம் பேர் மற்ற நாடுகளை சேர்ந்தவர்கள். #H4Visa #Trump #US
அமெரிக்கன் கம்யூனிட்டி சர்வே என்ற அமெரிக்க மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையின்படி, அமெரிக்காவில் வாழும் 5 வயதுக்கும் மேற்பட்டவர்களில் 21.8 சதவீதம் பேர் தங்கள் வீடுகளில் அயல் மொழி பேசுவதாகக் கூறியுள்ளது. அமெரிக்காவில் பேசப்படும் இந்திய மொழிகளில் இந்தியை 33 சதவீதம் பேரும், குஜராத்தி மற்றும் தெலுங்கை 17 சதவீதம் பேரும் பேசுவதாகக் குறிப்பிட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையின்படி கடந்த 8 ஆண்டுகளில் அமெரிக்காவில் வசிக்கும் தெலுங்கு மொழி பேசும் மக்களின் எண்ணிக்கை 86 சதவீதம் அதிகரித்துள்ளது. பெங்காலி மொழி பேசுபவர்கள் எண்ணிக்கை 57 சதவீதமும், தமிழ் மொழி பேசுவோரின் எண்ணிக்கை 55 சதவீதமும் அதிகரித்துள்ளதாக அதில் சுட்டிக்காட்டியுள்ளது.
அயல் மொழி பேசுவோரின் எண்ணிக்கை முக்கிய நகரங்களில் குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்திருப்பதையும் அந்த ஆய்வு குறிப்பிட்டுள்ளது. #America #Hindi #India
சீனா, ரஷியா ஆகிய நாடுகளின் மீது அமெரிக்க அரசு நேற்று பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது. குறிப்பாக, ரஷியாவை சேர்ந்த 33 உளவு நிறுவனங்கள் மற்றும் ராணுவத்துடன் தொடர்புடையை தனியார் நிறுவனங்கள் இந்த தடை வளையத்துக்குள் வந்துள்ளனர்.
அமெரிக்கா விதித்துவரும் தடைகளால் ரஷியாவின் நிலைப்பாட்டில் இதுவரை எந்த மாற்றமும் ஏற்பட்டு விடவில்லை. ஏற்கனவே தடை விதிக்கப்பட்டவர்கள் மீது மீண்டும் தடை விதிப்பது வேடிக்கையாக உள்ளது. அமெரிக்காவில் இருப்பவர்கள் பொழுதுப்போக்குக்காக இப்படி செய்கிறார்கள் என்று நினைக்கத் தோன்றுகிறது.
அமெரிக்காவின் இந்த அர்த்தமற்ற செயல்களால் ரஷியா-அமெரிக்கா இடையிலான உறவுகள் பாதிக்கப்படுவதுடன், சர்வதேச அரசியலில் பதற்றமும் உருவாகும் என்பதை அவர்கள் கவனிக்க தவறி விடுகின்றனர். நெருப்புடன் விளையாடுவது சிறுபிள்ளைத்தனமானது மட்டுமல்ல, அபாயகரமானது என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று செர்கேய் ரியாப்க்கோவ் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். #RussiawarnsUS #USSanctions
வடகொரியா அணு ஆயுத சோதனை நடத்துவதை அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அதனை நிறுத்தும் முயற்சியில் அமெரிக்கா தீவிரமாக ஈடுபட்டது. அதன் அடிப்படையில், அமெரிக்க அதிபருடனான பேச்சுவார்த்தைக்கு பின்னர் அணு ஆயுத சோதனையை நிறுத்த ஒப்புக்கொண்டார்.
இந்நிலையில், வடகொரியாவில் உள்ள அணு ஆயுத சோதனை மையங்களை அமெரிக்க அதிகாரிகள் மற்றும் உலக அணு ஆயுத தடுப்புப்பிரிவு அதிகாரிகள் முன்னிலையில் முற்றிலும் நிறுத்த கிம் ஜாங் அன் ஒப்புக்கொண்டார். இதனை அடுத்து அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளரின் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2012-ம் ஆண்டுக்குள் அணு ஆயுதங்கள் இல்லாத பகுதியாக கொரியன் தீபகற்பத்தை உருவாக்கும் முயற்சியாக இந்த சந்திப்பு அமையும் எனவும் வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார். #NorthKorea #MikePompeo #US
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்