search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமெரிக்கா"

    வடகொரியா மீது ஐக்கிய நாடுகள் சபை விதித்துள்ள பொருளாதார தடைகளை ரஷியா மீறிவிட்டதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.
    வாஷிங்டன்:

    உலக நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி வடகொரியா பலமுறை அணு குண்டுகளையும், கண்டம்விட்டு கண்டம் பாயும் பல ஏவுகணைகளையும் பரிசோதித்தது. மேலும், ஹைட்ரஜன் குண்டு பரிசோதனையிலும் முழுமையான வெற்றி பெற்றதாகவும் அந்நாடு தெரிவித்திருந்தது.

    இதனால், ஆத்திரமடைந்த அமெரிக்கா, ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் வடகொரியாவுக்கு எதிராக கடும் பொருளாதார தடைகள் அடங்கிய தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா தாக்கல் செய்து, ரஷியா, சீனா உள்ளிட்ட அனைத்து நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றியது. 

    இந்நிலையில், வடகொரியாவை சேர்ந்த 10 ஆயிரம் பேருக்கு ரஷியாவில் பணி புரிய அந்நாடு அனுமதி வழங்கியதன் மூலம் வடகொரியா மீது ஐ.நா சபை விதித்த பொருளாதார தடைகளை ரஷியா மீறிவிட்டதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.

    இதுகுறித்து ஐ.நா.விற்கான அமெரிக்காவின் நிரந்திர உறுப்பினர் நிக்கி ஹாலே கூறுகையில், கடந்த செப்டம்பட் மாதம் முதல் ரஷியாவில் பணி புரிவதற்காக வடகொரியாவை சேர்ந்த 10 ஆயிரம் பேருக்கு புதிய பணி ஆணையை ரஷியா வழங்கியுள்ளது.



    இதன்மூலம் ரஷியாவில் ஆண்டு வருமானமாக கிடைக்கும் 150 முதல் 300 மில்லியன் அமெரிக்க டாலர் பணத்தை தொழிலாளர்கள் வடகொரியாவிற்கு அனுப்பி வைக்கின்றனர். 

    அணு ஆயுத சோதனைகளை கைவிடுவதற்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கில் ஐக்கிய நாடுகள் சபை விதித்துள்ள தடைகளில் ஒன்றான வடகொரியா பணியாளர்களை எந்த நாடும் வேலைக்கு வைத்துக்கொள்ள கூடாது எனும் தடையை ரஷ்யாவின் இந்த செயல் மீறிவிட்டது என ஹாலே குற்றம்சாட்டினார்.

    ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள ரஷ்யா, வடகொரியா மீது பொருளாதார தடைகள் விதிப்பதற்கு முன்னதாக கையெழுத்தான ஒப்பந்தங்களின் அடிப்படையில் இப்போது பணி வழங்கப்படுகிறது.

    அதன் அடிப்படையில், 3 ஆயிரத்து 500 வடகொரிய தொழிலாலர்களுக்கு பழைய ஒப்பந்தப்படி தற்போது வேலை வழங்கப்படுகிறது. அவர்கள் வரும் 2019-ம் ஆண்டு வரை ரஷ்யாவில் தங்கி பணிபுரிய முடியும் என ரஷ்யா தெரிவித்துள்ளது.
    சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதலாக வரி விதிக்கும் முடிவை ட்ரம்ப் அரசு அமல்படுத்தினால் அதற்கு தக்க பதிலடி தருவோம் என சீன அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
    பெய்ஜிங் :

    டொனால்டு டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் உலோகங்கள் உள்ளிட்ட உலக நாடுகளின் பொருட்களுக்கான வரியை பன்மடங்காக உயர்த்தியது.  இதன் காரணமாக உலக வர்த்தகம் சீர்குலையக் கூடும் என பொருளாதார நிபுணர்கள் அச்சம் தெரிவித்தனர்.  

    மேலும், வட அமெரிக்காவின் தாராளமய வர்த்தக கொள்கை உடன்பாட்டில் இருந்து வெளியேறப் போவதாகவும் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இதனால், சமீபத்தில் கனடாவில் நடைபெற்ற ஜி-7 உச்சி மாநாட்டில் இதர நாட்டு தலைவர்களுடன் ட்ரம்புக்கு கருத்து மோதல் ஏற்பட்டு, அந்த மாநாட்டின் பாதியில் இருந்து ட்ரம்ப் வெளியேறும் நிலை ஏற்பட்டது.

    இதற்கிடையில்,  அமெரிக்க அரசு சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் சுமார் 5 ஆயிரம் கோடி டாலர்கள் மதிப்பிலான சுமார் 800 பொருட்களுக்கு சமீபத்தில் கூடுதல் வரி விதித்திருந்தது.  

    இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தலைமையிலான அரசு, சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் 200 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்க முடிவு செய்துள்ளது.  

    இதற்கிடையே, சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பு அதிகாரி கெங் ஷுவாங் கூறுகையில், சீனாவின் சட்ட அடிப்படையிலான உரிமைகள் மற்றும் பலன்களை காக்க நிச்சயம் அமெரிக்காவிற்கு பதிலடி தரப்படும் என கூறினார்.  எனினும், பதிலடி என்பதற்கு எந்த மாதிரியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பது பற்றிய விவரங்கள் எதனையும் அவர் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    ஈரானுடனான அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து விலகியதால் ஏற்பட்டுள்ள தற்போதைய பிரச்சனைக்கு காரணமான அமெரிக்கா, தன்னைத் தானே குற்றம்சாட்டிக்கொள்ள வேண்டும் என ஈரான் தெரிவித்துள்ளது. #TrumpmeetRouhani #TrumpRouhani
    டெஹ்ரான் :

    அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகிகொண்ட அமெரிக்கா, அடுத்தடுத்து ஈரான் அரசின்மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. தனது நேசநாடுகளும் ஈரானை புறக்கணிக்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறையின் சார்பில் நிர்பந்திக்கப்படுகிறது.

    இதனால், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே சமீப காலமாக வார்த்தைப் போர் அதிகரித்து ஒருவித மோதல் போக்கு உருவாகியுள்ளது.

    இதற்கிடையே, ஈரான் அதிபர் ஹஸன் ரவுகானியுடன் எவ்வித முன்நிபந்தனைகளும் இல்லாமல் அமைதி பேச்சுக்கு தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    அமெரிக்கா வந்துள்ள இத்தாலி பிரதமர் கியுசெப்பு கோன்ட்டேவுடன் வெள்ளை மாளிகையில் டொனால்ட் டிரம்ப் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

    அப்போது, ஈரான் அதிபர் ரவுகானியை சந்திக்கும் எண்ணம் உள்ளதா? என்னும் கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், நான் சந்திப்புகளில் நம்பிக்கை கொண்டவன். ஈரான் அதிபர் என்னை சந்திக்க விரும்பினால் நான் நிச்சயமாக சந்திப்பேன்.

    இதற்கு ஈரான் தயாரா? என்பது எனக்கு தெரியவில்லை. அணு ஒப்பந்தத்தில் இருந்து நான் விலகியதும் அவர்கள் மிகவும் சிக்கலான நிலையில் உள்ளனர். எனவே, அவர்கள் சந்திப்புக்கு முன்வருவார்கள் என நான் நம்புகிறேன். அவர்கள் எப்போது விரும்பினாலும் நான் சந்தித்துப் பேச தயாராகவே இருக்கிறேன்.

    இந்நிலையில், ரவுகானியை சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ள ட்ரம்பின் கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி முகமது ஜாவத் ஜரிப், தற்போதைய பிரச்சனைகளுக்கு காரணமான அமெரிக்கா தன்னைத் தானே குற்றம்சாட்டிக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.



    ’ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே 2 வருடங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. ஆனால், ஈரானுடனான அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியதாலேயே இருநாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது.

    எனவே, தற்போதைய பிரச்சனைக்கு காரணமான அமெரிக்கா தன்னைத் தானே குற்றம்சாட்டிக்கொள்ள வேண்டும். மிரட்டல்கள் மற்றும் பொருளாதார தடைகள் வேலைக்கு ஆகாது. எனவே, மதிக்க முயற்சி செய்யுங்கள்’ என முகமது ஜாவத் ஜரிப் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், அமெரிக்கா நம்பிக்கைக்குறிய நாடு அல்ல. அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து ஒருதலைப்பட்சமாக விலகிய அந்த நாட்டை எப்படி நம்ப முடியும்?.

    அமெரிக்க அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தைகளில் போது ஏற்கனவே ஏற்பட்ட மோசமான அனுபவங்களின் அடிப்படையில் பார்க்கும் போது டொனால்ட் ரவுகானியை சந்திக்க விரும்புவதாக கூறியுள்ள கருத்தால் எந்த பயனும் ஏற்பட போவதில்லை என ஈரான் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #TrumpmeetRouhani #TrumpRouhani
    தெற்கு ஆசிய நாடுகளில் இந்தியாவுக்கு ‘எஸ்.டி.ஏ-1’ என்ற சிறப்பு அந்தஸ்தை அமெரிக்கா வழங்கி உள்ளது. இதன்மூலம் அந்த நாட்டின் தேசிய பாதுகாப்பு கட்டுப்பாட்டுக்கு உரிய பொருட்களை வாங்கும் தகுதியை இந்தியாவுக்கு தந்து உள்ளது. #STA1 #SouthAsianCountry
    வாஷிங்டன்:

    ஆசிய கண்டத்தில் புறக்கணிக்க முடியாத ஒரு நாடாக நமது நாடு வளர்ந்து வருகிறது. அதனால்தான் அமெரிக்காவில் யார் அதிபராக வந்தாலும் இந்தியா உடன் இணக்கமான உறவை பராமரிக்க விரும்புகிறார்கள். இந்தியாவுக்கு முக்கியத்துவம் அளிக்கிறார்கள்.

    அந்த வகையில் ராணுவத்துறையில் இந்தியா மிக முக்கியமான கூட்டாளி என்ற அங்கீகாரத்தை 2016-ம் ஆண்டு அமெரிக்கா வழங்கியது. இது, அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளிகளைப் போன்று அந்த நாட்டில் இருந்து மேம்பட்ட மற்றும் அதிமுக்கிய தொழில் நுட்பம் வாங்குவதற்கு வழி வகுத்து உள்ளது.

    இந்த நிலையில் இப்போது இந்தியாவுக்கு அமெரிக்கா ‘எஸ்.டி.ஏ-1’ என்ற சிறப்பு அந்தஸ்தை வழங்கி உள்ளது. தெற்காசிய நாடுகளில் இந்தியாவுக்கு மட்டும்தான் இந்த அந்தஸ்து கிடைத்து உள்ளது.

    ஆசியா கண்டத்தில் ஜப்பானுக்கும், தென்கொரியாவுக்கு மட்டுமே இந்த அந்தஸ்தை அமெரிக்கா தந்து உள்ளது.

    இது தொடர்பாக அமெரிக்க வர்த்தக சபை ஏற்பாடு செய்து இருந்த இந்திய பசிபிக் வர்த்தக மன்ற நிகழ்ச்சியில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அமெரிக்க வர்த்தக துறை மந்திரி வில்பர் ரோஸ் பதில் அளித்தார்.

    அப்போது அவர், “ஏற்றுமதி கட்டுப்பாட்டு ஆட்சியில் எஸ்.டி.ஏ-1 அந்தஸ்து மிக முக்கியமான ஒன்று” என்று கூறினார்.

    இந்த அந்தஸ்தினால் இந்தியாவுக்கு என்ன பயன் என்ற கேள்வி எழுகிறது.

    இது குறித்து அமெரிக்க தரப்பில் கூறும்போது, “ வர்த்தக கட்டுப்பாட்டு பட்டியலில் வைத்து உள்ள குறிப்பிட்ட பொருட்களை, அங்கீகாரமற்ற, குறைவான அபாயத்தை கொண்டு உள்ள நாடுகளுக்கு ஏற்றுமதி, மறு ஏற்றுமதி, பரிமாற்றம் செய்து கொள்ள எஸ்.டி.ஏ-1 அந்தஸ்து அங்கீகாரம் அளிக்கிறது” என்கின்றனர்.

    மேலும், அமெரிக்க தேசிய பாதுகாப்பு கட்டுப்பாட்டுக்கு உரித்தான ரசாயன ஆயுதங்கள் அல்லது உயிரி ஆயுதங்கள், குற்ற கட்டுப்பாடு பொருட்களை எஸ்.டி.ஏ-1 அந்தஸ்து நாடுகள் மட்டுமே அமெரிக்காவிடம் இருந்து வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.  #STA1 #SouthAsianCountry  #tamilnews 
    எச்சரிக்கையும் மீறி வடகொரியா மீண்டும் 2 ஏவுகணைகள் தயாரிப்பதாக அமெரிக்க அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர். #us #northkorea
    வாஷிங்டன்:

    வடகொரியா தொடர்ந்து அணுகுண்டு மற்றும் ஏவுகணை சோதனைகளை நடத்தியது. இதனால் அமெரிக்காவும், ஐ.நாவும் வடகொரியா மீது கடும் பொருளாதார தடை விதித்தது.

    இதையடுத்து அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் இடையே கடும் மோதல் போக்கு உருவானது. கொரிய தீபகற்பத்தில் போர் சூழ்நிலை ஏற்பட்டது.

    எனவே பதட்டத்தை தணிக்க கடந்த ஜூன் மாதம் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும், வடகொரிய அதிபர் கிம் ஜாங்-யங்கும் நேரில் சந்தித்து பேசினர்.

    அப்போது ஏவுகணைகள் மற்றும் அணுகுண்டுகளை முற்றிலும் அழிப்பதாக வடகொரியா ஒப்புக் கொண்டது. மேலும் அவற்றை அழிப்பது போன்ற மாயையும் ஏற்படுத்தியது.

    ஆனால் இதை அமெரிக்கா நம்பவில்லை. வட கொரியா மீது உளவு செயற்கைகோளை பறக்க விட்டு அதன் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டன. அப்போது அணுகுண்டு தயாரிக்க பயன்படும் யுரேனியம் செறிவூட்டப்பட்டு வருவது நிறுத்தப்படவில்லை என தெரியவந்தது.

    எனவே அணு ஆயுதம் மற்றும் ஏவுகணைகள் தயாரிப்பு பணிகள் நிறுத்தப்படும் வரை வடகொரியா மீதான பொருளாதார தடைகள் தொடரும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்தார்.



    எச்சரிக்கையும் மீறி வடகொரியா மீண்டும் 2 ஏவுகணைகள் தயாரிப்பதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    தலைநகர் பியாங் யாங் அருகேயுள்ள சனும்டாஸ் என்ற இடத்தில் வைத்து அவை தயாரிக்கப்படுவதாக அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

    இவை கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்கும் திறன் படைத்தது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே வடகொரிய தொழிற்சாலைகள் தொடர்ந்து அணு ஆயுதங்கள் தயாரிக்க பயன்படுத்தும் பொருட்களை உற்பத்தி செய்து வருவதாக அமெரிக்க உள்துறை மந்திரி மைக்பெம்போ குற்றம் சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது. #us #northkorea
    அமெரிக்காவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு பகுதியில் தங்குவதற்கு வீடு இல்லாத இணையதள வடிவமைப்பாளர் ஒருவரின் புதுமுயற்சியால் அவருக்கு தற்போது வேலை வாய்ப்புகள் குவிந்தவண்ணம் உள்ளன. #SiliconValley #DavidCasarez
    நியூயார்க்:

    அமெரிக்காவில் உள்ள வளைகுடா பகுதி சிலிகான் பள்ளத்தாக்கு. இங்கு டேவிட் கசாரேஸ் என்ற இணையதள வடிவமைப்பாளர் வேலை தேடி வந்துள்ளார். இவருக்கு இங்கு சரியான வேலை கிடைக்காததால் தங்குவதற்கு இடம் இன்றி தனது காரிலேயே தங்கி வேலைவாய்ப்பு தேடி அலைந்துள்ளார்.

    எங்கும் தேடியும் வேலை கிடைக்காத டேவிட், புதுமுயற்சியாக, சாலை சிக்னல்களில் தனது பயோடேட்டாவை பொறுத்திவிட்டு, அதில் ஒரு வாசகத்தையும் குறிப்பிட்டுள்ளார். ‘வீடில்லாத நான் வெற்றிக்காக பசித்து இருக்கிறேன், எனது சுயவிவரங்களை எடுத்துக் கொள்ளுங்கள்’ என்பதே அந்த வாசகம்.



    இதனைக் கண்ட ஜாஸ்மின் ஸ்கோய்ஃபீல்ட் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அவருடைய புகைப்படத்தை பதிவிட்டு, இவருக்கு உதவ முடிந்தவர்கள் யாரேனும் இருந்தால் உதவுங்கள் என குறிப்பிட்டிருந்தார். இது ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவலாக பரவியது.

    டேவிட்டின் இந்த புதுவித முயற்சியால் அவருக்கு இப்போது வேலை வாய்ப்புகள் குவிந்துவருகிறது. வீடு இன்றி, வேலையின்றி தவித்த இணைய வடிவமைப்பாளர் டேவிட், தற்போது 200-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை கையில் வைத்துக்கொண்டு எந்த வேலைக்கு போகலாம் என்ற சிந்தனையில் ஆழ்ந்துள்ளார். #SiliconValley #DavidCasarez
    அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளியான தனிஷ்க் என்ற 15 வயது சிறுவன் தனது இன்ஜினியரிங் படிப்பை முடித்துவிட்டு தற்போது பி.எச்.டி படிப்பை தொடங்க உள்ள நிகழ்வு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. #US #India #TanishqAbraham
    நியூயார்க்:

    அமெரிக்காவில் வாழும் இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த சிறுவன் தனிஷ்க் ஆப்ரகாம். இவர் தனது 15 வயதில் உயிரிமருத்துவம் சார்ந்த இன்ஜினியரிங் படிப்பை முடித்துவிட்டு தற்போது பி.எச்.டி படிப்பை துவக்கியுள்ளார். இந்த நிகழ்வு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

    இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தனிஷ்க், மிகவும் மகிழ்ச்சியாகவும், உற்சாகமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.



    மேலும், 15 வயது சிறுவன் தனிஷ்க், தீவிபத்தில் பாதிக்கப்பட்ட நோயாளிகளை அவர்களை தொடாமல், அவர்களின் இதயத்துடிப்பை கண்டறியும் சாதனத்தையும் கண்டறிந்துள்ளார். மேலும், பல புதிய கண்டுபிடிப்புகளின் மீது ஆர்வம் கொண்ட தனிஷ்க், புற்றுநோய்க்கான புதிய சிகிச்சை முறை குறித்தும், நோயை சரிசெய்வதற்கான வழிமுறை குறித்தும் ஆராய உள்ளதாக தெரிவித்துள்ளார்.

    ஏற்கனவே கலிபோர்னியா பல்கலைகழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனிஷ்க், அடுத்த 5 வருடங்களுக்குள் தனது எம்.டி படிப்பை துவங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். #US #India #TanishqAbraham
    பெண்கள் உலக கோப்பை ஆக்கி போட்டியில் இந்திய அணி தனது கடைசி லீக்கில் இன்று தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள அமெரிக்காவுடன் மோதுகிறது. #IndiaAmerica #WomenHockeyWorldCup2018
    லண்டன்:

    16 அணிகள் பங்கேற்றுள்ள 14-வது பெண்கள் உலக கோப்பை ஆக்கி போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் ‘பி’ பிரிவில் அங்கம் வகிக்கும் ராணி ராம்பால் தலைமையிலான இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஒலிம்பிக் சாம்பியன் இங்கிலாந்துடன் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா கண்டது. 2-வது ஆட்டத்தில் அயர்லாந்துடன் 0-1 என்ற கணக்கில் தோல்வியை தழுவியது.

    இந்த நிலையில் இந்திய அணி தனது கடைசி லீக்கில் இன்று, தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள அமெரிக்காவுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் இந்தியாவுக்கு வாழ்வா-சாவா? மோதலாகும். இதில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணியால் கால்இறுதியை எட்டுவதற்கான பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும். முந்தைய ஆட்டத்தில் நிறைய கோல் வாய்ப்புகளை வீணடித்த இந்திய அணி அதே தவறை மீண்டும் செய்யாது என்று இந்திய பயிற்சியாளர் ஜோர்ட் மர்ஜின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    முன்னதாக நேற்று ‘சி’ பிரிவில் நடந்த கடைசி கட்ட லீக் ஆட்டத்தில் ஜெர்மனி 3-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை சாய்த்தது. இதே பிரிவில் நடந்த அர்ஜென்டினா- தென்ஆப்பிரிக்கா இடையிலான மற்றொரு ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் ‘டிரா’ ஆனது. இந்த பிரிவில் ஜெர்மனி 9 புள்ளிகளுடன் கால்இறுதியை உறுதி செய்தது. அர்ஜென்டினா (4 புள்ளி), ஸ்பெயின் (3 புள்ளி) பிளே-ஆப் சுற்றை எட்டின. தென்ஆப்பிரிக்கா (2 புள்ளி) வெளியேறியது. #IndiaAmerica #WomenHockeyWorldCup2018
    அமெரிக்காவுடன் தலீபான் பேச்சு வார்த்தை தொடரும் என ஆப்கானிஸ்தான் தலீபான்கள் அரசின் முன்னாள் நிதி மந்திரி முஸ்டாசிம் ஆகா ஜன் கூறியுள்ளார்.
    பெஷாவர்:

    அமெரிக்க ராணுவ தலைமையகம் பென்டகன், நியூயார்க் உலக வர்த்தக மையம் ஆகியவற்றின் மீது அல்கொய்தா பயங்கரவாதிகள் விமானங்களை மோதி 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை கொன்று குவித்தனர். 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந் தேதி நடந்த இந்த தாக்குதல்கள், உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தின.

    அதைத் தொடர்ந்து அல்கொய்தா பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் தந்த ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா போர் தொடுத்தது. அங்கு தலீபான்களை ஆட்சியில் இருந்து அகற்றியது. அதைத் தொடர்ந்து அங்கு 18-வது ஆண்டாக உள்நாட்டுப்போர் நீடிக்கிறது. இதை முடிவுக்கு கொண்டு வருவதில் அமெரிக்கா தீவிரமாக உள்ளது. இது தொடர்பாக தலீபான்களுடன் அமெரிக்க அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளிவந்தன. அதை இப்போது ஆப்கானிஸ்தான் தலீபான்கள் அரசின் முன்னாள் நிதி மந்திரி முஸ்டாசிம் ஆகா ஜன் உறுதி செய்து உள்ளார்.

    தற்போது துருக்கியில் உள்ள அவர் இதுபற்றி கூறுகையில், “கத்தார் நாட்டில் தலீபான் அரசியல் பிரதிநிதிகளுடன் அமெரிக்க அதிகாரிகள் நேரடி பேச்சு நடத்தினார்கள். இதில் வேறு எந்த தரப்பினரும் பங்கேற்கவில்லை. இப்போது இந்த பேச்சு வார்த்தை அடிமட்ட அளவில் உள்ளது. இரு தரப்பினரும் பேச்சு வார்த்தையை படிப்படியாக அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்வார்கள்” என்று குறிப்பிட்டார்.

    தொடர்ந்து அவர் கூறும்போது, “பேச்சு வார்த்தை உயர் மட்டத்தில் நடைபெறுகிறபோது, நாங்கள் உடன்பாட்டை எட்ட முடியும். தலீபான்களும், அமெரிக்காவும் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்துவார்கள்” என்றார்.

    ஆப்கானிஸ்தான் அரசுடன் தலீபான்கள் பேச்சு நடத்த மறுத்தது பற்றி கேள்வி எழுப்பியபோது, “தலீபான்களின் போர், ஆப்கானிஸ்தானுக்கு எதிரானது அல்ல. அது அமெரிக்காவுக்கு எதிரானது” என பதில் அளித்தார்.

    இந்த தகவல்களை பாகிஸ்தானின் ‘தி டெய்லி டைம்ஸ்” ஏடு வெளியிட்டு உள்ளது. 
    ஐ.நா சபையின் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடுகள் சில இந்த ஆண்டுக்கான நிதியை சரிவர வழங்காததால், கடுமையான நிதி பற்றாக்குறையில் இருப்பதாக ஐ.நா தலைவர் அண்டோனியோ குட்ரஸ் தெரிவித்துள்ளார். #UN
    நியூயார்க்:

    உள்நாட்டுப்போர் மற்றும் கலவரங்களால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளிலும், தீவிரவாதத்தால் நிலைகுலைந்துப் போய்  கிடக்கும் நாடுகளிலும் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படை வீரர்கள் முகாமிட்டு கடமையாற்றி வருகின்றனர்.

    இந்தப் படையில் ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் 193 நாடுகளை சேர்ந்த ராணுவ வீரர்களும், காவல்துறை அதிகாரிகளும் இடம்பெறுகின்றனர். இந்தியாவின் சார்பில் மட்டும் 10 நாடுகளில் 7 ஆயிரத்து 798 அமைதிப்படையினர் இதுபோன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதுதவிர வறுமையால் வாடும் சோமாலியா போன்ற நாடுகளில் வாழும் மக்களுக்கு உணவு உள்ளிட்ட பொருட்களை வழங்குவது, உள்நாட்டு போர் மற்றும் பொருளாதார வீழ்ச்சி போன்ற காரணங்களால், பிற நாடுகளுக்கு அகதிகளாக செல்பவர்களுக்கு முகாம்கள் அமைத்து தருவது போன்றவற்றை ஐ.நா செய்து வருகிறது.

    ஐ.நாவின் செயல்பாடுகளுக்கு அந்த அமைப்பில் அங்கம் வகிக்கும் 193 நாடுகளும் இணைந்து நிதி வழங்கி வருகின்றன. இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான நிதி சரிவர வழங்கப்படாததால், நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், இந்த அளவு நிதி பற்றாக்குறை நடப்பு ஆண்டில் முன்னர் சந்தித்ததே இல்லை எனவும் ஐ.நா தலைவர் அண்டோனியோ குட்ரஸ் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.



    அதே வேளையில், இம்மாதம் 26-ம் தேதி நிலவரப்படி, இந்தியா உள்பட 112 நாடுகள் தங்கள் நிதியை வழங்கிவிட்டதாகவும், அமெரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், பிரேசில், எகிப்த், இஸ்ரேல், மாலத்தீவுகள், செய்ச்செலெஸ், சவுதி அரேபியா, சிரியா, சூடான் மற்றும் ஜிம்பாப்வே உள்ளிட்ட 81 நாடுகள் இந்த ஆண்டுக்கான நிதியை செலுத்தவில்லை எனவும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக, நிதி வழங்காத நாடுகள் உரிய நேரத்தில் நிதி வழங்கி, தனது பணியை ஐ.நா தொடர வழிவகை செய்யுமாறு முறையிட்டுள்ளதாகவும், ஐ.நா தலைவர் அண்டோனியோ குட்ரஸ் தெரிவித்துள்ளார்.

    ஐ.நா சபை இயங்குவதற்கு தேவையான வருடாந்திர வரவு செலவு தொகையான சுமார் 5.4 பில்லியன் கோடி டாலர்களில் 22 சதவிகிதத்தை அமெரிக்கா ஏற்றுள்ளது. மேலும், 7.9 பில்லியன் டாலர்களில் 28.5 சதவிகிதம் தொகையை அமெரிக்கா தனது பங்களிப்பாக ஒப்புக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #UN
    ஈரானை அமெரிக்கா தாக்கினால், அமெரிக்கா வைத்திருக்கும் அனைத்தையும் அழித்து விடுவோம் என்று ஈரான் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளது. #USIranClash #IranNuclearDeal #Trump
    தெஹ்ரான்:

    ஈரானுடன் செய்து கொண்ட அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தில் இருந்து விலகிய அமெரிக்கா, ஈரான் மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது. ஈரானை பொருளாதார ரீதியாக தனிமைப்படுத்தும் வேலைகளையும் தொடங்கி உள்ளது. இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. இதன் காரணமாக இரு நாடுகளுக்குமிடையே பதற்றமான சூழல் நிலவுகிறது.

    ஈரான் அதிபர் ஹசன் ரூஹானி தனது நாட்டின் வெளியுறவு அதிகாரிகள் கூட்டத்தில் நேற்று முன்தினம் பேசும்போது அமெரிக்காவுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கும் விதமாக பேசினார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்க அதிபர் டுவிட்டரில், ஈரான் அதிபருக்கு எச்சரிக்கை விடுத்தார்.



    “இனி எந்தக் காலத்திலும் அமெரிக்காவை மிரட்டக்கூடாது. இதையும் மீறி மிரட்டினால், வரலாற்றில் இதுவரை சந்தித்திராத பேரழிவை ஈரான் சந்திக்க நேரிடும். உங்களது மிரட்டல்களை நீண்டகாலமாக அமெரிக்கா பொறுத்துக்கொண்டு சும்மா இருக்காது. உங்களுடைய அறிவில்லாத வார்த்தைகள் வன்முறையையும், மரணத்தையும்தான் ஏற்படுத்தும். எனவே எச்சரிக்கையாக இருங்கள்” என்று காட்டமாக குறிப்பிட்டு இருந்தார் டிரம்ப்.

    டிரம்பின் இந்த சவாலை ஏற்றுக்கொள்ளும் வகையில் ஈரானும் பதிலடி கொடுத்துள்ளது. ஈரான் நாட்டினை தாக்க அமெரிக்க முயற்சி செய்தால், அமெரிக்காவிடம் இருக்கும் அனைத்தையும் அழித்து விடுவோம் என ஈரான் சிறப்பு படை கமாண்டோ காசிம் சோலிமனி பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.

    ‘டிரம்ப் போரை தொடங்கினார் என்றால் இஸ்லாமிய குடியரசு அதனை முடித்து வைக்கும்’ என்று மேஜர் ஜெனரல் கசிம் சபதம் ஏற்றுள்ளதாக ஈரானின் செய்தி நிறுவனமான டாஸ்னிம் செய்தி வெளியிட்டுள்ளது. #USIranClash #IranNuclearDeal #Trump

    அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் ஜீன் கிளாடும் சந்தித்துப் பேசினர். இதில், பரஸ்பர வரி விதிப்பால் மோசமாகி வந்த இரு தரப்பு வர்த்தக உறவில் சமரசம் ஏற்பட்டு உள்ளது. #DoaldTrump #JeanClaude
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படுகிற உருக்குக்கு 25 சதவீதமும், அலுமினியத்துக்கு 10 சதவீதமும் வரி விதித்து ஜனாதிபதி டிரம்ப் அதிரடி நடவடிக்கை எடுத்தார். இந்த நடவடிக்கையால் ஐரோப்பிய நாடுகள் மட்டுமல்லாமல் கனடா, மெக்சிகோ, இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் பாதிப்புக்கு ஆளாகின.

    மேலும், ஐரோப்பிய நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படக்கூடிய கார்களுக்கும் வரி விதிக்கப்போவதாக டிரம்ப் மிரட்டல் விடுத்தார்.

    அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கத்தக்க விதத்தில் அந்த நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிற பொருட்களுக்கு ஐரோப்பிய கூட்டமைப்பு 2.8 பில்லியன் யூரோ (சுமார் ரூ.22 ஆயிரத்து 120 கோடி) வரி விதித்து நடவடிக்கை எடுத்தது.



    இதனால் அமெரிக்காவுக்கும், ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக உறவு மோசமாகி வந்தது.

    இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் ஜீன் கிளாட் நேற்று முன்தினம் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு இணக்கமான முறையில் நடந்து முடிந்து உள்ளது.

    அது மட்டுமின்றி இரு தரப்பு வர்த்தக உறவிலும் புதிய திருப்பத்தை ஏற்படுத்துவதாக அமைந்து இருக்கிறது.

    இந்த சந்திப்புக்கு பின்னர் வெள்ளை மாளிகை ரோஜா தோட்டத்தில் ஜனாதிபதி டிரம்ப், ஜீன் கிளாடுடன் நிருபர்களை சந்தித்தார். அப்போது டிரம்ப் கூறியதாவது:-

    ஐரோப்பிய கூட்டமைப்புடன் வர்த்தக தடைகளை குறைத்துக்கொள்வதற்கு அமெரிக்கா சம்மதம் தெரிவித்து உள்ளது. இரு தரப்பு வர்த்தக உறவில் புதிய மறுமலர்ச்சி ஏற்பட்டு உள்ளது. இந்த நாள் சுதந்திரமான, நியாயமான வர்த்தகத்துக்கான நல்ல நாள் ஆகும்.

    நாங்கள் இப்போது முதல் பேச்சு வார்த்தையைத் தொடங்கி உள்ளோம். இது எங்கே போய் முடியும் என்பதை நாங்கள் நன்றாக அறிந்து இருக்கிறோம். அமெரிக்காவிடம் இருந்து ஐரோப்பிய நாடுகள் கூடுதலான இயற்கை எரிவாயுவை (எல்.என்.ஜி.) இறக்குமதி செய்யும். ஐரோப்பிய நாடுகளுடனான சேவைகள், விவசாய வர்த்தகம் அதிகரிக்கும்.

    அமெரிக்க விவசாயிகளிடம் இருந்து அதிலும் குறிப்பாக மத்திய மேற்கு பகுதி விவசாயிகளிடம் இருந்து ஐரோப்பிய நாடுகள் மிகக்கூடுதலான அளவில் சோயா பீன்ஸ் வாங்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் ஜீன் கிளாட் நிருபர்களிடம் பேசும்போது, “ஜனாதிபதி டிரம்புக்கு நன்றி தெரிவிக்கிறேன். அவருடனான பேச்சு வார்த்தை நன்றாக அமைந்தது. ஆக்கப்பூர்வமாக இருந்தது. எனது முக்கிய நோக்கம், தொழில் ரீதியிலான பொருட்களுக்கு வரிவிலக்கு பெறுவதற்கு உடன்பாட்டை ஏற்படுத்துவதுதான். தேசிய பாதுகாப்பு தடைகளை விரைவில் மறு மதிப்பீடு செய்வதற்கு ஜனாதிபதி டிரம்ப் ஒப்புக்கொண்டார்” என்று கூறினார்.

    இரு தலைவர்களின் சந்திப்பால் ஏற்பட்டு உள்ள மாற்றங்களை ஐரோப்பிய கூட்டமைப்பு வர்த்தக அதிகாரி செசிலியா மால்ம்ஸ்டிராம் வரவேற்று உள்ளார். 
    ×