search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமெரிக்கா"

    அமெரிக்காவில் பத்திரிகை அலுவலகத்தில் புகுந்து 5 பேரை சுட்டுக் கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். #Annapolis #MarylandShooting
    மேரிலேண்ட்:

    அமெரிக்காவின் மேரி லேண்ட் மாகாணத்தில் உள்ள அன்னாபோலீஸ் நகரில் ‘கேபிட்டல் கெசட்’ பத்திரிகை அலுவலகம் உள்ளது. நேற்று மதியம் அங்கு ஒரு மர்ம வாலிபர் புகுந்தார். செய்தி அறை பகுதிக்குள் நுழைந்த அவர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் கண்ணாடி கதவு வழியாக சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார்.

    இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. என்ன நடக்கிறது என தெரியாமல் திகைத்த ஊழியர்கள் உயிர் பிழைக்க அங்குமிங்கும் ஓடி பதுங்கினர்.

    இந்த துப்பாக்கி சூட்டில் 5 பேர் பலியாகினர். பலர் காயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து வந்து துப்பாக்கியால் சுட்ட மர்ம நபரை தேடினர். பின்னர் 60 வினாடிகளில் பத்திரிகை அலுவலகத்தில் பதுங்கியிருந்த வாலிபரை பிடித்து கைது செய்தனர்.

    அவனது பெயர் ஜரோட் ரமோஸ். இவனுக்கு 35 வயது இருக்கும். சமூக வலை தளங்களில் ‘கேபிட்டல் கெசட்’ பத்திரிகைக்கு மிரட்டல் விடுத்து வந்தார். இந்த நிலையில் பத்திரிகை அலுவலகத்துக்குள் புகுந்து திடீர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார்.

    துப்பாக்கியால் சுட்டதற்கான காரணத்தை போலீசார் வெளியிடவில்லை. கடந்த 2012-ம் ஆண்டு இந்த பத்திரிகை மீது இவர் நஷ்டஈடு வழக்கு தொடர்ந்திருந்தார். ஆனால் அது கிடைக்காததால் ஆத்திரத்தில் துப்பாக்கியால் சுட்டதாக தெரிகிறது.

    பத்திரிகை அலுவலகத்தில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு அதிபர் டொனால்டு டிரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார். துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் கூறியுள்ளார்.  #Annapolis #MarylandShooting
    அமெரிக்காவின் மேரிலேண்ட் பகுதியில் உள்ள ‘தீ கேப்பிட்டல்’ என்னும் தனியார் செய்தி நிறுவனத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் நான்கு பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. #US #TheCapital #NewsPaperofficefiring

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் மேரிலேண்ட் மாகாணத்தின் அன்னாபோலிஸ் பகுதியில் ‘தீ கேப்பிட்டல்’ எனப்படும் தனியார் செய்தி நிறுவனத்தின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

    இந்நிலையில், நேற்று மதியம் அப்பகுதிக்கு வந்த ஒரு நபர் அலுவலத்திற்குள் நுழைந்து அங்கிருந்தவர்கள் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் நான்கு பேர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

    துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் யார்?, எதற்காக துப்பாக்கிச்சூடு நடத்தினார்? என இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. 

    செய்தி நிறுவனத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #US #TheCapital #NewsPaperofficefiring
    பயங்கரவாதிகளின் சொர்க்கமாக பாகிஸ்தான் உருவாகிக் கொண்டிருப்பதை பொறுத்துக்கொள்ள முடியாது என ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே தெரிவித்துள்ளார். #NikkiHaley
    புதுடெல்லி :

    ஐ.நா.விற்கான அமெரிக்க தூதரான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹாலே இரண்டு நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். முதல் நாளான நேற்று நிக்கி இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் கென்னத் ஜஸ்டருடன் இணைந்து வரலாற்று சிறப்பு மிக்க இடங்களை சுற்றி பார்த்தார்.

    இந்நிலையில், இரண்டாம் நாளான இன்று டெல்லியில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் கலந்துகொண்டு பேசினார். அதில், அவர் குறிப்பிட்டுள்ளதாவது :-

    பயங்கரவாதிகளின் சொர்க்கமாக பாகிஸ்தான் உருவாகிக்கொண்டிருப்பதை பொறுத்துக்கொள்ள முடியாது. இதை பாகிஸ்தான் அரசிடமும் தொடர்புகொண்டு தெரிவித்துவிட்டோம் .

    இந்தியா மற்றும் அமெரிக்கா பயங்கரவாதத்திற்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இனி வரும் காலங்களில் இதைவிட சிறப்பான நடவடிக்கைகளில் இரு நாடுகளும் இணைந்து ஈடுபட முடியும்.

    மத சுதந்திரம் ஒரு நாட்டுக்கு மிகவும் முக்கியமானதாகும். ஆகவே, இந்தியா மற்றும் அமெரிக்கா நாடுகள் சகிப்புத்தன்மையை பின்பற்றுவதால் மட்டுமே ஒற்றுமையாக இருக்க முடியும்.

    பிரதமர் நரேந்திர மோடி, சிங்கப்பூரில் நடைபெற்ற ஷாங்கரி-லா பேச்சுவார்த்தையில் உரையாற்றும் போது, இந்திய பசுபிக் பிராந்தியத்தில் சுதந்திரமான சரக்கு போக்குவரத்து மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்ய வேண்டும் என் தெரிவித்திருந்தார். இந்திய பசுபிக் பிராந்திய பாதுகாப்பில் மோடியின் பார்வையையே டிரம்ப்பும் கொண்டுள்ளார் என அவர் தெரிவித்தார். #NikkiHaley
    யுரேனியம் செறிவூட்டும் விவகாரத்தில் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் அதன் நட்புறவு நாடுகள் தடை விதித்துள்ளதால் ஈரானின் பணமதிப்பு (ரியால்) வீழ்ச்சி அடைந்துள்ளது.
    தெக்ரான்:

    ஈரானுக்கும் அமெரிக்கா, ரஷியா, இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா மற்றும் ஜெர்மனி ஆகிய வளர்ந்த நாடுகளுக்கும் இடையே அணு ஆயுத பரவல் தடுப்பு ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது. அதில் இருந்து அமெரிக்கா வெளியேறிவிட்டது.

    அத்துடன் ஈரான் மீது பொருளாதார தடை விதிப்பதாக அறிவித்தது. மேலும் தனது நட்பு நாடுகளையும் ஈரான் மீது பொருளாதார தடை விதிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது.

    இதனால் ஈரானின் பணமான ரியாலின் மதிப்பு குறைந்துள்ளது. பொருட்களின் இறக்குமதிக்கான செலவு அதிகரித்துள்ளது. ஈரானின் பணமதிப்பு மிகப்பெரிய அளவில் வீழ்ச்சி அடைந்ததால் வர்த்தகர்கள் தெக்ரானில் பாராளுமன்றம் முன்பு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    இதனால் ஏற்பட்டுள்ள பதட்டத்தை தணிக்கும் விதமாக ஈரான் மக்களிடையே அந்நாட்டு அதிபர் ஹசன் ரக்கானி டி.வி.யில் உரையாற்றினார். அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகிய அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் முடிவால் உலகளாவிய அளவில் அமெரிக்கா மீதான நன் மதிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. அமைதியான முறையில் ஆக்கபூர்வமான தேவைகளுக்கு யுரேனியத்தை செறிவூட்டும் உரிமை ஈரானுக்கு உள்ளது. அமெரிக்காவின் நெருக்கடிக்கு ஒருபோதும் அடிபணிய மாட்டோம்.

    எங்கள் நாட்டின் சுதந்திரத்தையும், இஸ்லாமிய நடைமுறைகளையும் பாதுகாக்க ஒருநாளும் தவர மாட்டோம். ஈரானின் பொருளாதாரம் சமீப காலமாக சீராக சென்று கொண்டிருக்கிறது. அதில் எந்தவித பிரச்சினையும் இல்லை.

    நம்மிடம் போதுமான அளவுக்கு சர்க்கரை- கோதுமை மற்றும் சமையல் எண்ணை உள்ளது. மார்க்கெட்டில் செலுத்த தேவைப்படும் அன்னிய செலாவணி இருப்பு உள்ளது’’ என்றார். #IranRiyal
    அமெரிக்க செனட் சபையில் பேசிய அதிபர் டிரம்ப், வடகொரியா அதிபருடனான சந்திப்பு மிக பெரிய வெற்றி என தெரிவித்துள்ளார். #Trump #NorthKoreaIssue
    வாஷிங்டன்:

    எலியும் பூனையுமாக கடந்த பல ஆண்டுகளாக இருந்த அமெரிக்கா - வடகொரியா சமீபத்திய சிங்கப்பூர் சந்திப்புக்கு பிறகு நண்பர்களாக மாறியுள்ளது.

    ஏவுகணை மனிதர் என டிரம்ப்பால் விமர்சிக்கப்பட்ட வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன், கடந்த 12-ம் தேதி சிங்கப்பூரில் டிரம்பை சந்தித்து பேசினார். இந்த வரலாற்று சிறப்புமிக்க சந்திப்புக்கு உலக தலைவர்கள் பலரும் பாராட்டு தெரிவித்தனர்.

    இந்நிலையில், வடகொரியா அதிபருடனான சந்திப்பு மிக பெரிய வெற்றி என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.  

    கிம்முடனான சந்திப்புக்கு பிறகு அமெரிக்காவின் வாஷிங்டன்னில் செனட் சபை நேற்று கூடியது. அதில் அதிபர் டிரம்ப் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது பேசிய டிரம்ப், வடகொரியா அதிபர் கிம்முடனான சந்திப்பு மிக பெரிய வெற்றியாக அமைந்து விட்டது. அந்த சந்திப்பு மறக்க முடியாத அனுபவத்தை தந்துள்ளது.

    இரு நாடுகளுக்கு இடையே நல்ல உறவு நிலவி வருகிறது. வடகொரியா அறிவித்தபடி ஏற்கனவே இயங்கி வந்த அணு ஆயுத சோதனை மையங்களை அழித்துள்ளது. அணு ஆயுத ஏவுகணை சோதனைகளையும் நிறுத்தியுள்ளது என குறிப்பிட்டுள்ளார். #Trump #NorthKoreaIssue
    அமெரிக்க ராணுவத்தில் விண்வெளிப் படைப்பிரிவு உருவாக்க வேண்டும் என்ற டிரப்பின் அறிவிப்புக்கு ரஷியா கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. #SpaceForce #Trump #Russia
    மாஸ்கோ:

    பூமியை போலவே விண்வெளியிலும் அமெரிக்கா தனது ஆதிக்கத்தை செலுத்த முழுமூச்சாக முயன்று வருகிறது. ஆனாலும், பூமியை போலவே விண்வெளியிலும் ரஷியா அமெரிக்காவுக்கு சரிக்கு சமமான போட்டியாளராக இருந்து வருகிறது. 

    விண்வெளியில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச ஆய்வு மையத்தில் இரு நாடுகளும் இணைந்து பணியாற்றினாலும், தனிப்பட்ட ஆதிக்கத்தை அங்கு செலுத்த இரு நாடுகளுமே முயற்சித்து வருகின்றன.

    சமீபத்தில், அமெரிக்க ராணுவத்தில் விண்வெளி படை என்ற புதிய படைப்பிரிவை உருவாக்க வேண்டும் என அதிபர் டிரம்ப் கேட்டுக்கொண்டார். அதற்கான, பணிகளை மேற்கொள்ள அந்நாட்டு பாதுகாப்பு துறைக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். மேலும், விண்வெளியில் ரஷியா, சீனாவை பின்னுக்கு தள்ளி அமெரிக்காவே முதலிடத்தில் இருக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.



    இந்நிலையில், டிரம்ப்பின் விண்வெளிப்படை அறிவிப்புக்கு ரஷியா தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. இது தொடர்பாக பேசிய அந்நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மரியா ஷஹரோவா, “டிரம்ப்பின் விண்வெளிப்படை அறிவிப்பை கேட்டுக்கொண்டோம். விண்வெளியிலும் ஆதிக்கம் செலுத்துவது அவர்களின் நோக்கம். ஆனால், இது ஆபத்தான ஒன்று.” என கூறினார்.

    மேலும், “விண்வெளியில் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கத்துடன் அங்கு ஆயுதங்களைக் கொண்டு வருவதற்கான திட்டங்களை வளர்ப்பது சரியானதாக இருக்காது. அமைதியின் நோக்கத்தை சிதைப்பதாக இது அமையும்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக மூன்றாவது நாடு தலையிடக் கூடாது என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. #America #Kashmir #ThirdParty
    வாஷிங்டன்:

    தலைநகர் டெல்லியில் சமீபத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் இந்தியாவுக்கான சீனத் தூதர் லோ சாங்குயி பேசினார்.

    அப்போது அவர் கூறுகையில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியா, சீனா, பாகிஸ்தான் ஆகிய 3 நாடுகளும் அங்கம் வகித்து  வருகிறது. இந்த அமைப்பின்கீழ் 3 நாடுகளும் ஒத்துழைப்பை அதிகரித்துக் கொள்ள வேண்டும். அப்படி செய்வதால் இந்தியா, பாகிஸ்தான் இடையேயான விவகாரங்களுக்கு தீர்வு காண உதவியாக இருக்கும் என தெரிவித்தார்.
    ஆனால் சீனாவின் இந்த கருத்தை இந்தியா திட்டவட்டமாக மறுத்துவிட்டது.

    இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாவது நாடு தலையிடக் கூடாது என்று அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது.

    அமெரிக்காவின் வாஷிங்டனில் அந்நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது:

    ஜம்முகாஷ்மீர் விவகாரம் தொடர்பாக அமெரிக்கா கடைப்பிடித்து வரும் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை. காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இந்தியாவும், பாகிஸ்தானும் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது. இதில் மூன்றாவது நாடு தலையிடக் கூடாது என வலியுறுத்தினார். #America #Kashmir #ThirdParty
    அமெரிக்காவில் நுழையும் அகதிகளின் குழந்தைகளை பிரித்து தனியே சிறையில் அடைக்கும் உத்தரவுக்கு தடை விதித்து அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார். #Trump #immigrantFamilySeparations
    வாஷிங்டன்:

    எல்லை வழியாக சட்டவிரோதமாக குடியேறுபவர்களை கட்டுப்படுத்தும் வகையில் அகதிகளின் குழந்தைகளை அவர்களிடம் இருந்து பிரித்து வைக்கும் வகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் உத்தரவிட்டார்.

    குழந்தைகளுடன் அமெரிக்காவுக்குள் வருபவர்களை பிடித்தால் குடியுரிமை சட்டத்தை மீறியதாக குழந்தைகள் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய சட்டத்தில் இடமில்லை என்பதால் பெற்றோர்களிடம் இருந்து குழந்தைகளை பிரித்து எல்லையோரங்களில் உள்ள பிரத்யேக காப்பகங்களில் வைக்கப்படுகின்ற சூழல் உருவாகியுள்ளது.

    இந்த புதிய உத்தரவு அமலுக்கு வந்த கடந்த ஏப்ரல் மாதம் 19-ம் தேதியில் இருந்து மே மாதம் 31-ம் தேதிவரை எல்லை வழியாக அத்துமீறி அமெரிக்காவுக்குள் நுழைந்ததாக 1940 பேர் எல்லை காவல் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    அவர்களுடன் வந்த 1995 சிறுவர், சிறுமியர் தங்களது பெற்றோர் அல்லது பாதுகாவலர்களிடம் இருந்து பிரிக்கப்பட்டு கூண்டுகள் போன்ற காப்பகங்களில் வைக்கப்பட்டுள்ளனர்.

    டொனால்ட் டிரம்ப்பின் இந்த அதிரடி நடவடிக்கை மனிதநேயமற்ற செயல் என உலகளாவிய அளவில் எதிர்ப்புக்குரல் கிளம்பியுள்ளது. குறிப்பாக, அமெரிக்கர்களில் பலரும் இதற்கு கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்

    இந்நிலையில், அமெரிக்காவில் நுழையும் அகதிகளின் குழந்தைகளை பிரித்து தனியே சிறையில் அடைக்கும் உத்தரவுக்கு தடை விதித்து அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார். 

    இதுதொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், எல்லை வழியாக ஊடுருவும் அகதிகளின் குழந்தைகளை அவர்களிடம் இருந்து பிரித்து வைப்பதற்கு அதிபர் டிரம்ப் முடிவு கட்டியுள்ளார். இதுதொடர்பான உத்தரவில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #Trump #immigrantFamilySeparations
    எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் நுழையும் குடியேறிகள் சிறையில் அடைக்கப்பட்டு, பெற்றோரிடம் இருந்து பிரிக்கப்பட்ட குழந்தைகள் கதறி அழும் ஆடியோ பதிவை ஒரு இணையதளம் வெளியிட்டுள்ளது. #USborderpolicy #Trump #VoiceofChildren

    வாஷிங்டன்:

    உலக அகதி நாள் ஆண்டுதோறும் ஜூன் 20-ம் நாளன்று நினைவுகூரப்பட்டு வருகின்றது. 2000 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் சிறப்புத் தீர்மானமொன்றின்படி, அகதிகளுக்கான தமது ஆதரவினை வெளிப்படுத்தும் முகமாக, உலக அகதிகள் தினமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

    அன்றைய நாள் உலகின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெறும் பல்வேறு போர்களால் அரசியல், சமூகச் சூழல்களால் அகதிகளாக அல்லலுறும் அகதிகளை நினைவு கூரும் வகையில் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், கருத்தரங்குகள், இசை நிகழ்ச்சிகள், நினைவஞ்சலி நிகழ்வுகளெனப் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. 

    இந்நிலையில், அகதிகள் தினமாக இன்று அகதிகளாக அமெரிக்காவிற்குள் நுழைந்த பெற்றோரிடம் இருந்து பிரிக்கப்பட்ட குழந்தைகள் கதறி அழும் ஆடியோ ஒன்றை புரோபப்ளிகா (Propublica) என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.



    அமெரிக்காவுக்குள் எல்லை வழியாக சட்டவிரோதமாக குடியேறுபவர்களை கட்டுப்படுத்தும் வகையில் அகதிகளின் குழந்தைகளை அவர்களிடம் இருந்து பிரித்து வைக்கும் வகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் உத்தரவிட்டார்.

    குழந்தைகளுடன் அமெரிக்காவுக்குள் வருபவர்களை பிடித்தால் குடியுரிமை சட்டத்தை மீறியதாக குழந்தைகள் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய சட்டத்தில் இடமில்லை என்பதால் பெற்றோர்களிடம் இருந்து குழந்தைகளை பிரித்து எல்லையோரங்களில் உள்ள பிரத்யேக காப்பகங்களில் வைக்கப்படுகின்ற சூழல் உருவாகியுள்ளது.

    இந்த புதிய உத்தரவு அமலுக்கு வந்த கடந்த ஏப்ரல் மாதம் 19-ம் தேதியில் இருந்து மே மாதம் 31-ம் தேதிவரை எல்லை வழியாக அத்துமீறி அமெரிக்காவுக்குள் நுழைந்ததாக 1940 பேர் எல்லை காவல் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    அவர்களுடன் வந்த 1995 சிறுவர், சிறுமியர் தங்களது பெற்றோர் அல்லது பாதுகாவலர்களிடம் இருந்து பிரிக்கப்பட்டு காப்பகங்களில் வைக்கப்பட்டுள்ளனர்.

    டொனால்ட் டிரம்ப்பின் இந்த அதிரடி நடவடிக்கை மனிதநேயமற்ற செயல் என உலகளாவிய அளவில் எதிர்ப்புக்குரல் கிளம்பியுள்ளது. குறிப்பாக, அமெரிக்கர்களில் பலரும் இதற்கு கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.


    இந்நிலையில், புரோபப்ளிகா  வெளியிட்ட அந்த ஆடியோ பதிவில் பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்டதால் அழும் குழந்தைகளை, அதிகாரிகள் சமாதானப்படுத்துகின்றனர். அதில், ஒரு அதிகாரி குழந்தைகள் மொத்தமாக அழுவதை கச்சேரி என கிண்டல் செய்கிறார். மேலும் அதை சரிசெய்ய சரியான நடத்துனர் இல்லை எனவும் கூறுகிறார்.

    மேலும் ஒரு குழந்தை, அமெரிக்காவில் தனது உறவினர் இருப்பதாகவும், அவரிடம் தன்னை ஒப்படைக்குமாறும் கூறுகிறது. அதற்கு அதிகாரிகள் முதலில் காப்பகத்துக்கு சென்று அங்கிருந்து போன் மூலம் தொடர்புகொள்வோம் என சமாதானப்படுத்துகிறார்கள். அந்த ஆடியோ கேட்போர் மனதை கலங்க வைக்கும் வகையில் உள்ளது.  #USborderpolicy #Trump #VoiceofChildren

    அந்த ஆடியோ பதிவை கீழே இருக்கும் வீடியோவை கிளிக் செய்யவும்.....

    இந்தியாவுடனான ராணுவ உறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக 71 ஆயிரத்து 600 கோடி டாலர்கள் மதிப்பிலான மசோதாவுக்கு அமெரிக்க பாராளுமன்ற மேல்சபை ஒப்புதல் அளித்துள்ளது.
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் மிகப்பெரிய ராணுவ கூட்டாளியாக இந்தியாவை அமெரிக்க அரசு கடந்த 2016-ம் ஆண்டில் அறிவித்தது. இந்நிலையில், அந்நாட்டின் தேசிய பாதுகாப்புத்துறை அங்கீகார மசோதாவுக்கு(2019) ஒப்புதல் அளிக்க அமெரிக்க பாராளுமன்ற மேல்சபையில் நேற்று வாக்கெடுப்பு நடந்தது.

    71 ஆயிரத்து 600 கோடி டாலர்கள் மதிப்பிலான இந்த மசோதாவை ஆதரித்து 85 உறுப்பினர்களும், எதிராக 10 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.

    விரைவில் பாராளுமன்ற காங்கிரஸ் சபையிலும் இரு சபைகளின் கூட்டுக் குழுவிலும் ஒப்புதல் பெற்று அதிபர் டொனால்ட் டிரம்ப் கையொப்பமிட்டதும் சட்டவடிவம் பெறும் இந்த மசோதாவில் அமெரிக்காவின் மிகப்பெரிய ராணுவ கூட்டாளியான இந்தியாவுடனான ராணுவ உறவுகளை பலப்படுத்தும் அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.


    இஸ்ரேல் நாட்டுக்கான ஏவுகணை தடுப்பு கூட்டுறவு திட்டத்துக்கு 50 கோடி டாலர்களும், காஸா எல்லைபகுதியில் உள்ள குகைகளை அழிப்பதற்கான அமெரிக்கா - இஸ்ரேல் கூட்டுப்படைகளின் செலவினங்களுக்கு 5 கோடி டாலர்களும் ஒதுக்க இந்த மசோதா வகை செய்கிறது.

    மேலும், ஆப்கானிஸ்தான் நாட்டு பாதுகாப்பு படை நிதியாக 520 கோடி டாலர்களும், இதர நாடுகளில் உள்ள அமெரிக்க படைகளின் செலவினங்களுக்காக 35 கோடி டாலர்களும், சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஒழிக்கும் போரில் ஈடுபட்டுள்ள அந்நாட்டு அரசுக்கு எதிரான படைகளுக்கு பயிற்சி மற்றும் ஆயுதங்கள் வழங்க 30 கோடி டாலர்களும் ஒதுக்க இந்த மசோதாவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

    மிகப்பெரிய கூட்டாளியான இந்தியாவுடனான ராணுவ உறவுகளை பலப்படுத்தவும், அதிகரிக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதுடன், ரஷியாவிடம் இருந்து துருக்கி நாட்டு அரசு அதிநவீன S-400 ரக விமான தாக்குதல் தடுப்பு கேடயங்களை கொள்முதல் செய்தால் அமெரிக்க அதிபர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி துருக்கிக்கு எதிராக பொருளாதார தடைகளை விதிக்கவும் இந்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
    வடகொரியாவுடன் இணக்கமான சூழல் உருவாகிவரும் நிலையில் தென்கொரியாவுடன் வழக்கமாக நடத்தும் கூட்டு ராணுவ பயிற்சியை அமெரிக்கா ரத்து செய்துள்ளது.
    சியோல்:

    கொரியா தீபகற்பத்துக்கு உட்பட்ட கடல்பகுதி மற்றும் நிலப்பரப்பில் ஆண்டுதோறும் தென்கொரியா மற்றும் அமெரிக்க ராணுவ வீரர்கள் போர் பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம்.

    சிங்கப்பூர் நகரில் சமீபத்தில் அமெரிக்கா - வடகொரியா இடையே அணு ஆயுத ஒழிப்பு உடன்பாடு ஏற்பட்ட பின்னர், வடகொரியாவை அச்சுறுத்தும் வகையில் இனி போர் விளையாட்டுகளில் அமெரிக்கா ஈடுபடாது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டிருந்தார்.

    இதற்கிடையில், வரும் ஆகஸ்ட் மாதம் ஆண்டுதோறும் தென்கொரியா மற்றும் அமெரிக்க ராணுவ வீரர்கள் பங்குபெறும் போர் பயிற்சி நடத்த முன்னர் திட்டமிடப்பட்டிருந்தது. இந்த பயிற்சியில் பங்கேற்க 17 ஆயிரத்து 500 அமெரிக்க வீரர்கள் தயார் நிலையில் இருந்தனர்.


    இந்நிலையில், இந்த கூட்டு போர் பயிற்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்கொரியா அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை வழிமொழிந்துள்ள அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை, கொரிய தீபகற்பத்தில் போர் பயிற்சிகள் மேற்கொள்வது பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளது. #SKoreamilitarydrills  #USmilitarydrills  #SKoreasuspendmilitarydrills
    அமெரிக்காவில் கிரீன் கார்டு வழங்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், தற்போதுள்ள இந்தியர்கள் கிரீன் கார்டு பெறுவதற்கு 151 ஆண்டுகள் ஆகும் என்று தெரியவந்துள்ளது.
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் வாழும் வெளிநாட்டினர் நிரந்தரமாக வசிக்கவும், பணிபுரியவும் அங்கீகாரம் அளிக்கும் வகையில் ‘கிரீன் கார்டு’ வழங்கப்படுகிறது. எனவே இதை பெற அங்கு வாழும் வெளிநாட்டினர் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.

    ஆனால் தற்போது கிரீன் கார்டு வழங்க கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளது. அதன்படி 2017-ம் ஆண்டு அமெரிக்க குடியேற்றத்துறை வழங்கிய கிரீன் கார்டு அடிப்படையில் கணக்கிட்டு பார்த்தால் 4 லட்சம் இந்தியர்கள் கிரீன் கார்டு பெற 151 ஆண்டுகள் ஆகும்.

    2018-ம் ஆண்டு எப்ரல் 20-ந்தேதி நிலவரப்படி 6 லட்சத்து 32 ஆயிரத்து 219 இந்தியர்கள் கிரீன் கார்டு கேட்டு விண்ணப்பித்துள்ளனர். மிக உயர்ந்த பதவியில் இருப்பவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மிக குறுகிய காலத்தில் இ.பி.-1 குடியேற்ற சான்று வழங்கப்படுகிறது. இதற்கே 6 ஆண்டுகளாகும்.

    இளங்கலை பட்டம் பெற்று இ.பி.-3 பட்டியலில் காத்திருப்போர் கிரீன்கார்டு பெற 17 ஆண்டுகள் ஆகும். இந்த பட்டியலில் 54,892 இந்தியர்களும், அவர்களது மனைவிகள் மற்றும் குழந்தைகள் என 60,381 பேர் உள்ளனர். மொத்தம் 1 லட்சத்து 15 ஆயிரத்து 273 பேர் உள்ளனர்.

    இருந்தபோதிலும் இ.பி.2 பட்டியலில் கிரீன் கார்டு வழங்கப்படாமல் நீண்ட நாட்களாக பலர் காத்திருக்கின்றனர். இவர்கள் முதுகலை பட்டம் பெற்றவர்கள். இப்போது கிரீன்கார்டு வழங்கும் விகிதம் அடிப்படையில் இவர்கள் கிரீன்கார்டு பெருவதற்கு 151 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.

    விதிமுறைகளில் மாற்றம் செய்யப்படாவிட்டால் கிரீன்கார்டு கிடைக்காமல் அமெரிக்காவிலேயே இவர்கள் இறக்க வேண்டும். அல்லது இந்தியாவுக்கு திரும்ப நேரிடும்.

    தற்போதுள்ள விதிமுறைகளின்படி ஒவ்வொரு நாட்டுக்கும் 7 சதவீதம் பேருக்கு மேல் கிரீன்கார்டு வழங்க கூடாது என்று உள்ளது. ஆரம்ப நிலையில் 2 லட்சத்து 16 ஆயிரத்து 684 பேரும், அவர்களது மனைவி மற்றும் குழந்தைகள் என மொத்தம் 4 லட்சத்து 33 ஆயிரத்து 368 பேர் உள்ளனர்.

    மொத்தத்தில் ஆரம்ப நிலையில் 3 லட்சத்து 6 ஆயிரத்து 400 பேரும், இவர்களது மனைவி மற்றும் குழந்தைகளின் எண்ணிக்கை 3 லட்சத்து 25 ஆயிரத்து 819 பேரும் ஆக மொத்தம் 6 லட்சத்து 32 ஆயிரத்து 219 பேரும் காத்திருக்கின்றனர். #US #GreenCard #Indians
    ×