search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமெரிக்கா"

    டிரம்ப் அரசின் நடவடிக்கையால் ஏப்ரல் 19-ந் தேதி தொடங்கி, மே 31-ந் தேதி வரையிலான 6 வார காலத்தில் 1,995 குழந்தைகள் பெற்றோரிடம் இருந்து பிரித்து தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். #DonaldTrump
    வாஷிங்டன்:

    அமெரிக்காவுக்கு மெக்சிகோவில் இருந்து சட்ட விரோதமாக எல்லை தாண்டி வருகிறவர்கள் மீது டிரம்ப் நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக, பெரியவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள். அவர்களுடன் வருகிற குழந்தைகள், பெற்றோரின் பாதுகாப்பில் இருந்து பிரிக்கப்படுகின்றனர். அவர்கள், ஆதரவற்றவர்களாக வகைப்படுத்துப்படுகின்றனர். இந்த குழந்தைகள் அமெரிக்க அரசின் சுகாதாரத்துறை மற்றும் மனிதாபிமான சேவைகள் துறையின் பராமரிப்புக்கு மாற்றப்பட்டு, அரசு தடுப்பு முகாம்களுக்கும், குழந்தை வளர்ப்பு மையங்களுக்கும் மாற்றப்படுகின்றனர்.



    அந்த வகையில் ஏப்ரல் 19-ந் தேதி தொடங்கி, மே 31-ந் தேதி வரையிலான 6 வார காலத்தில் 1,995 குழந்தைகள் இப்படி பெற்றோரிடம் இருந்து பிரித்து தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

    இந்த நடவடிக்கையை அமெரிக்கா உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று ஐ.நா. சபை கேட்டுக்கொண்டு உள்ளது.

    ஆனால் அமெரிக்க அட்டார்னி ஜெனரல் ஜெப் செசன்ஸ். இதற்கு கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளில் புனித பவுலடியார் ரோமாபுரியாருக்கு எழுதிய நிருபத்தில் (கடிதத்தில்), அரசின் சட்டத்துக்கு அனைவரும் கீழ்ப்படிய வேண்டும் என்று கூறி இருப்பதை சுட்டிக்காட்டி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    பெற்றோரிடம் இருந்து குழந்தைகளை பிரிக்கிற பரிதாபத்தை டிரம்பின் குடியரசு கட்சியினர் சிலர் ஆதரிக்கின்றனர். மற்றபடி அனைவரும் எதிர்க்கின்றனர்.

    அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் பால் ரேயான், இந்த உத்தியை நான் விரும்பவில்லை என்று குறிப்பிட்டு உள்ளார்.  #DonaldTrump #Tamilnews 
    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடனான வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்புக்கு ஏற்பாடு செய்த சிங்கபூர் தமிழ் மந்திரிக்கு வட கொரிய தலைவர் கிம் ஜாங் அன் நன்றி தெரிவித்தார். #TrumpKimSummit #USPresidentDonaldTrump
    சிங்கப்பூர்:

    அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மற்றும் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உடனான சிங்கப்பூர் சந்திப்பு வெற்றிகரமாக நடந்து முடிந்தது.

    சீனாவுக்கு பின்னர் வட கொரிய ஜனாதிபதியின் 2-வது வெளிநாட்டு பயணம் இதுவாகும்.

    இந்த மாநாடு வெற்றிகரமாக நிகழ சிங்கப்பூர் வெளி விவகாரத்துறை மந்திரி விவியன் பாலகிருஷ்ணன் முக்கிய காரணமாக இருந்தார். இந்திய வம்சாவளி தமிழரான விவியன் பாலகிருஷ்ணன் சிங்கப்பூரின் முக்கிய மந்திரியாக இருக்கிறார்.

    தமிழ் சமூகத்தை சேர்ந்த தந்தைக்கும், சீன சமூகத்தை சேர்ந்த தாய்க்கும் மகனாக பிறந்தவர் பாலகிருஷ்ணன். 57 வயதாகும் பாலகிருஷ்ணனுக்கு 4 குழந்தைகள் உள்ளனர்.

    2001-ம் ஆண்டு அரசியலில் நுழைந்து 2004-ம் ஆண்டில் இணை மந்திரியானார். தொடர்ந்து சுற்றுச் சூழல் மற்றும் நீர்வளத்துறை மந்திரியாகி 2015-ம் ஆண்டில் வெளிவிவகாரத்துறை மந்திரி ஆனார்.

    டிரம்ப் மற்றும் கிம் உடன் கணிசமான நேரத்தை செலவிட்ட ஒரே சிங்கப்பூர் தலைவர் இவராவார்.

    இரு நாட்டு தலைவர்களின் குழுவை இணைப்பதில் முக்கிய பங்காற்றிய பால கிருஷ்ணன், வடகொரிய ஜனாதிபதி சிங்கப்பூரை சுற்றிப்பார்க்க சென்ற போது கிம்முடன் செல்பியும் எடுத்துக் கொண்டார்.



    அத்துடன் டிரம்ப் சிங்கப்பூர் வந்திறங்கிய போது விமான நிலையம் சென்று டிரம்பை வரவேற்றதும் இவர்தான்.

    தொடர்ந்து இருநாட்டு தலைவர்களிடமும் மாநாட்டை பற்றி விவரித்துள்ளார். இதனை ஒருங்கிணைத்தற்காக வடகொரிய ஜனாதிபதி கிம் தனிப்பட்ட முறையில் பாலகிருஷ்ணனிடம் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

    இதற்கிடையே ரஷிய அதிபர் புதினும், வடகொரிய அதிபர் கிம்மு தங்கள் நாட்டுக்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்துள்ளார். #TrumpKimSummit #USPresidentDonaldTrump
    அமெரிக்காவில் மகாத்மா காந்தி கடந்த 1924-ம் ஆண்டு அன்னி பெசண்ட் அம்மையாருக்கு எழுதிய கடிதம் ஒன்று ரூ.13.73 லட்சத்துக்கு ஏலம் போயுள்ளது. #MahatmaGandhi #GandhisignedPostcard

    வாஷிங்டன்:

    இந்திய விடுதலை போராட்டத்தின் தந்தை என போற்றப்படுபவர் மகாத்மா காந்தி. இவர் கடந்த 1924-ம் ஆண்டு அன்னி பெசண்ட் அம்மையாருக்கு எழுதிய கடிதம் ஒன்றை அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் ஒன்று ஏலத்தில் விட்டது.

    அந்த கடிதத்தில், உங்களது கடிதத்துக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். என் மகன் தேவதாஸ் இன்றிரவு புறப்படுகிறான். அவரது செலவுகள் பற்றி கவலைப்பட வேண்டாம் என பிரார்த்தனை செய்கிறேன். அவன் உங்கள் விருந்தாளியாக ஒரு கவுரவத்தை பெற்றுள்ளார். நீங்கள் அனுப்பிய கதர் துண்டுகளை ஜம்னதாஸ் என்னிடம் கொடுத்தார். நான் அந்த பரிசை பத்திரமாக வைத்து கொள்வேன்: நூற்பு மிகவும் நன்றாக இருந்தது, என எழுதியிருந்தார்.

    இந்த கடிதத்தில் மகாத்மா காந்தி கையொப்பமிட்டிருந்தார். அந்த கடிதத்திற்கான ஏலம் கடந்த 13-ம் தேதியுடன் நிறைவடைந்தது. இறுதியில் அந்த கடிதத்தை ஒருவர் 20,233 அமெரிக்க டாலருக்கு (இந்திய மதிப்பில் ரூ. 13,73,112) ஏலத்தில் எடுத்துள்ளார்.  #MahatmaGandhi #GandhisignedPostcard
    அணு ஆயுதங்கள் அழிக்கப்பட்டு விட்டதை உறுதிசெய்த பின்னர் தான் வட கொரியா மீதான பொருளாதார தடையை நீக்குவது குறித்து முடிவு செய்ய முடியும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி கூறியுள்ளார். #Denuclearisation #NKorea #US
    வாஷிங்டன்:

    வடகொரியாவும், தென்கொரியாவும் பரம்பரை எதிரி நாடுகளாக இருந்து வந்தன. தென்கொரியாவுக்கு அமெரிக்கா ஆதரவாக இருந்தது.

    இதனால் அமெரிக்காவையும் வடகொரியா பகை நாடாக கருதியது. அணு ஆயுதங்கள் உள்ளிட்ட நவீன ஆயுதங்களை உருவாக்கிய வடகொரியா அமெரிக்கா மீது அணுகுண்டு தாக்குதல் நடத்தப்போவதாக மிரட்டியது.

    வடகொரியா மிரட்டலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்க அதிபர் டிரம்பும் கடும் எச்சரிக்கை விடுத்தார். இந்த நிலையில் இரு நாடுகளுக்கும் மத்தியில் சமரசம் ஏற்படுத்த சீனா முயற்சித்தது. தென்கொரியாவும் இறங்கி வந்து அமைதி நடவடிக்கைகளை மேற்கொண்டது.

    இதற்கு வடகொரிய அதிபர் கிம்ஜாங் உன் சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து அமெரிக்கா-வடகொரியா அதிபர்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

    அதன்படி நேற்று முன்தினம் சிங்கப்பூரில் இருநாட்டு அதிபர்களும் சந்தித்து பேசினார்கள். அப்போது டிரம்ப்-கிம்ஜாங்உன் இடையே சமரச ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

    அதில், வடகொரியாவில் உள்ள அணுஆயுதங்கள் அனைத்தையும் அழித்து விடுவதாக கிம்ஜாங்உன் ஒப்புதல் தெரிவித்திருந்தார்.

    ஏற்கனவே வடகொரியாவுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் பல்வேறு பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்து இருந்தது.

    இருநாடுகளுக்கும் இடையே சமரச ஒப்பந்தம் இப்போது ஏற்படுத்தப்பட்டு இருப்பதால் இந்த பொருளாதார தடைகள் உடனடியாக நீக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.



    ஆனால் வடகொரியா அணு ஆயுதங்களை முற்றிலும் ஒழிக்கும் வரை பொருளாதார தடை நீடிக்கும் என்று அந்த நாட்டின் வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.

    தென்கொரியா தலைநகரம் சியோலில் அவர் தென்கொரியா வெளியுறவு மந்திரி, ஜப்பான் வெளியுறவு மந்திரி ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனை முடிவுக்கு பிறகு நிருபர்களிடம் கூறிய மைக்பாம்பியோ இந்த கருத்தை தெரிவித்தார்.

    ஒப்பந்தத்தின்படி அணு ஆயுதங்களை முற்றிலும் வடகொரியா அழிக்க வேண்டும். அவை அழிக்கப்பட்டு விட்டதை உறுதிசெய்த பின்னர் தான் நாங்கள் எங்களது பொருளாதார தடையை நீக்குவது குறித்து முடிவு செய்ய முடியும் என்று அவர் கூறினார்.

    சமரசம் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட நிலையில் அமெரிக்கா திடீரென இப்படி கூறியிருப்பது சமரச உடன்பாட்டிற்கு சிக்கலை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. #Denuclearisation #NKorea #US
    ரூ.6 ஆயிரம் கோடிக்கு 6 ஹெலிகாப்டர்களை இந்தியாவுக்கு விற்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. #Helicopter
    வாஷிங்டன்:

    ராணுவ தாக்குதலில் பல்வேறு சாகசங்களை புரியும் ‘அப்பச்சி’ ரக ஹெலிகாப்டர்களை அமெரிக்காவிடம் இருந்து கொள்முதல் செய்ய இந்தியா விரும்பியது. இந்தியாவின் விருப்பத்துக்கு இணங்கியுள்ள அமெரிக்க அரசு, 6 அப்பச்சி ரக ஹெலிகாப்டர்களை இந்தியாவுக்கு விற்பனை செய்ய ஒப்புதல் அளித்துள்ளதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான ‘பென்டகன்’ கூறியுள்ளது.

    இது குறித்து ‘பென்டகன்’ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘அமெரிக்க நிர்வாகம் ‘வெளிநாட்டு ராணுவத்துக்கு விற்பனை’ என்ற அடிப்படையில் 930 மில்லியன் டாலருக்கு (சுமார் ரூ.6 ஆயிரம் கோடி) 6 ஏ.எச்-64இ அப்பச்சி ஹெலிகாப்டர்களை இந்தியாவுக்கு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது’ என்று கூறப்பட்டு உள்ளது.

    அத்துடன், ஹெல்பயர், ஸ்டிங்கர் ஏவுகணைகள், 14 டி700-ஜி.இ-701டி ரக என்ஜின்கள், 4 ஏ.என் மற்றும் ஏ.பி.ஜி.78 தீத்தடுப்பு ரேடார்கள், 4 ரேடார் எலக்ட்ரானிக் அலகுகள், இரவுநேர பயன்பாட்டுக்கு உதவும் சென்சார்கள் உள்ளிட்ட ஏராளமான தளவாடங்களையும் இந்தியாவுக்கு விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல் அளித்து இருப்பதாக பென்டகன் மேலும் கூறியுள்ளது.

    இதுபற்றி அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு ‘பென்டகன்’ தனது அறிவிக்கையை அனுப்பி வைத்துள்ளது. எந்த எம்.பி.யும் எதிர்ப்பு தெரிவிக்காவிட்டால், இந்த விற்பனை விவகாரத்துக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்கும்.

    ‘பென்டகன்’ தனது அறிவிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:-

    ‘அப்பச்சி’ ரக ஹெலிகாப்டர்கள், அமெரிக்க ராணுவத்தாலும், சர்வதேச படைகளாலும் பயன்படுத்தப்படுபவை. இவற்றை பயன்படுத்துவதிலோ, தனது ராணுவத்தில் சேர்ப்பதிலோ இந்தியாவுக்கு எந்த கஷ்டமும் இருக்கப்போவதில்லை.

    தனது நாட்டை பாதுகாத்துக்கொள்ளவும், பிராந்திய அச்சுறுத்தலை சமாளிக்கவும் இந்தியாவுக்கு இது வலிமையை அளிக்கும். தனது படைகளை நவீனமயமாக்குவதற்கும் உதவும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் அடுத்த மாதம் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோர் அமெரிக்காவின் வெளியுறவு மந்திரி மற்றும் ராணுவ மந்திரியுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். அதற்கு முன்பாக இந்த ஹெலிகாப்டர்கள் விற்பனைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு இருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.
    வடகொரியாவும் அமெரிக்காவும் சிங்கப்பூரில் சமாதானம் செய்துகொண்டது போல் இந்தியாவும் பாகிஸ்தானும் சமாதானமாக போக வேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் பிரதமரின் தம்பி குறிப்பிட்டுள்ளார். #ShahbazSharif #Indiapaktalks
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப் ஊழல் வழக்கில் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அந்நாட்டின் ஆளும்கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக்(நவாஸ்) தலைவர் பதவியில் இருந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளதால் அவரது தம்பி ஷாபாஸ் ஷரிப் கட்சி தலைவர் பதவியை ஏற்றுள்ளதுடன் வரும் ஜூலை மாதம் 25-ம் தேதி நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் பதவிக்கான வேட்பாளராகவும் முன்நிறுத்தப்பட்டுள்ளார்.



    இந்நிலையில்,  சிங்கப்பூரில் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பரம எதிரிகளாக இருந்து வந்த வடகொரியாவும் அமெரிக்காவும் சமாதானம் செய்துகொண்டது போல் இந்தியாவும் பாகிஸ்தானும் சமாதானமாக போக வேண்டும் என ஷாபாஸ் ஷரிப் குறிப்பிட்டுள்ளார்.

    ‘கொரியா போரின் ஆரம்பகட்டத்தில் இருந்தே அமெரிக்காவும் வடகொரியாவும் பரம எதிரிகளாக இருந்து வந்துள்ளன. அணு ஆயுத வலிமையை காட்டி ஒருநாட்டை மற்றொரு நாடு அச்சுறுத்தி வந்தன. அணு ஆயுதம் என்ற கொள்கையை கைவிட்டு வடகொரியாவும் அமெரிக்காவும் அமர்ந்துப் பேசி சமாதானம் செய்துகொள்ள முடியுமானால், காஷ்மீர் விவகாரத்தை மையமாக வைத்து முதலில் பேச்சுவார்த்தையை தொடங்கி, அதே பாதையை இந்தியாவும் பாகிஸ்தானும் ஏன் கையாள கூடாது?’ என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
     
    நமது பிராந்தியத்தில் இருதரப்பு அமைதி பேச்சுவார்த்தைக்கான நேரம் கனிந்துள்ளது. ஆப்கானிஸ்தானில் அமைதி நிலவுவதை சர்வதேச சமுதாயம் உறுதிப்படுத்த வேண்டும். ஐக்கிய நாடுகள் சபை தீர்மானத்துக்கு உடன்பட்டு நீண்டகாலமாக நிலுவையில் உள்ள காஷ்மீர் விவகாரத்துக்கு தீர்வு காணப்பட வேண்டும் எனவும் ஷாபாஸ் ஷரிப் வலியுறுத்தியுள்ளார். #ShahbazSharif #Indiapaktalks
     
    அமெரிக்காவும் வடகொரியாவும் இணைந்து புதிய வரலாறு படைக்க தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். #singaporesummit #Trumpkimsummit #Trumpspeech
    சிங்கப்பூர்:

    சிங்கப்பூரில் அணு ஆயுத ஒழிப்பு தொடர்பான வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் இன்று கையொப்பமிட்டனர்.

    பின்னர், செய்தியாளர்களிடையே பேசிய டொனால்ட் டிரம்ப், இன்றைய ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டதுபோல், அதில் உள்ள அம்சங்களின்படி கிம் ஜாங் அன் வாழ்ந்து காட்ட வேண்டும் என தெரிவித்தார்.

    பின்னர் டிரம்ப் பேசியதாவது:-

    இன்றைய நாள் உலக வரலாற்றில் மிக முக்கியமான உயர்வான நாளாகும். புதிய வரலாறு படைக்கவும், புதிய அத்தியாயத்தை எழுதவும் நாங்கள் தயாராகி விட்டோம். எதிர்காலம் எப்படி அமைய வேண்டும் என்பதை கடந்தகாலம் வரையறுக்க முடியாது. யார் வேண்டுமானாலும் போரை ஏற்படுத்தலாம். ஆனால், விவேகமானவர்களால் மட்டுமே அமைதியை ஏற்படுத்த முடியும்.

    போரின் பயங்கரங்களை அமைதிக்கான வரங்களால் நாம் மாற்றி அமைக்க முடியும். அணு ஆயுதங்களை ஒழிக்கும் வடகொரியாவின் நடவடிக்கைகள் உடனடியாக தொடங்கும். இன்றைய ஒப்பந்தத்துக்கு பின்னர் வடகொரியாவுடன் உறவுகளை ஏற்படுத்தி கொள்ள உலக நாடுகள் ஆர்வம் காட்டும்.



    தனது நாட்டு மக்களின் வளமான எதிர்காலத்தை உறுதிப்படுத்த பாடுபடும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் மிகவும் திறமைசாலி. எங்கள் இருவருக்கும் இடையிலான பேச்சுவார்த்தை நேர்மையாகவும், நேரடியாகவும் ஆக்கப்பூர்வமாகவும் அமைந்திருந்தது.

    முந்தைய அமெரிக்க அதிபர்கள் மூலம் இந்த ஒப்பந்தம் உருவாகி இருக்க முடியாது என நம்பியதாக கிம் ஜாங் அன் என்னிடம் தெரிவித்தார். இந்த சந்திப்பு வடகொரியா மக்களுக்கு மட்டுமின்றி, அமெரிக்க மக்களுக்கும் நன்மையாக அமையும் என எண்ணுகிறேன்.

    அணு ஏவுகணைகள் ஒரு பொருட்டல்ல என்ற நம்பிக்கை எங்களுக்கு ஏற்படும்போது, முன்னர் (வடகொரியா மீது) விதிக்கப்பட்ட தடைகள் எல்லாம் நீக்கப்படும் நாளுக்காக நான் காத்திருக்கிறேன். அணு ஆயுதங்களை கைவிடுவதால் வடகொரியா பெறும் நன்மைகள் ஏராளம். உரிய நேரம் வரும்போது அமெரிக்காவுக்கு வருமாறு கிம் ஜாங் அன்-ஐ அழைக்கப் போவதாக நான் தெரிவித்தேன். அவரும் அதற்கு சம்மதித்துள்ளார்.

    கிம் ஜாங் அன் வடகொரியாவுக்கு போய் சேர்ந்ததும் இந்த ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள பணிகளை தொடங்குவார் என நான் நினைக்கிறேன். கொரிய தீபகற்பத்தில் இனி அமெரிக்கா போர் பயிற்சியில் ஈடுபடாது.

    இவ்வாறு அவர் பேசினார். #singaporesummit #Trumpkimsummit #Trumpspeech
    சிங்கப்பூரில் நடைபெற்ற வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பின் நிறைவில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வட கொரிய தலைவர் கிம் ஜாங் அன் இருவரும் அமைதிக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். #TrumpKimSummit #USPresidentDonaldTrump #TrumpKimSignedDocument
    சிங்கப்பூர்:

    அமெரிக்கா, வடகொரியா இடையிலான பகைமை உணர்வு மறைந்து நட்புறவுக்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கி உள்ளன. சீனா மற்றும் தென்கொரியா நாடுகள் மேற்கொண்ட முயற்சிகள் காரணமாக வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் தனது மிரட்டல் போக்கை கைவிட்டு அமெரிக்காவுடன் சமரசமாக செல்ல முன்வந்தார். அதன்பின்னர் பேச்சுவார்த்தைக்கான கதவுகள் திறந்தன. இதற்காக சிங்கப்பூரில் ஜூன் 12-ம் தேதி அமெரிக்க அதிபர், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் சந்திப்பு நடைபெறும் என நாள் குறிக்கப்பட்டது.

    எனினும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இந்த சந்திப்பு நடைபெறுமா? என்பதில் சந்தேகம் நீடித்தது. பின்னர் நீண்ட இழுபறிக்குப் பிறகு சந்திப்பு உறுதி செய்யப்பட்டது. அதன்படி சிங்கப்பூரில் உள்ள சென்ட்டோசா தீவில் கேபெல்லா ஓட்டலில் இன்று டிரம்ப்- கிம் ஜாங் அன் சந்திப்பு நடந்தது. உலகமே உற்றுநோக்கிய இந்த சந்திப்பின்போது அணு ஆயுத ஒழிப்பு, பொருளாதார தடை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேசப்பட்டது.

    இந்த சந்திப்பு எதிர்பார்த்ததைவிட சிறப்பாக அமைந்ததாகவும், மிகப்பெரிய பிரச்சனைகளை தீர்க்க முடியும் என்றும் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தார். இதேபோல் கிம் ஜாங் அன்னும் சாதகமான கருத்தையே கூறினார்.



    அதன்பின்னர், இரு நாடுகளிடையே முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில், டிரம்ப், கிம் ஜாங் அன் இருவரும் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தத்தில் உள்ள அம்சங்கள் குறித்த தகவல் வெளியாகவில்லை. ஆனால், அமைதி மற்றும் நட்புறவு தொடர்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கான ஒப்பந்தமாக இருக்கலாம் என தெரிகிறது.  #TrumpKimSummit #USPresidentDonaldTrump #TrumpKimSignedDocument

    அமெரிக்கா, கனடா நாடுகளில் உள்ள நவீன தொழில்நுட்பங்களை மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைமுறைப்படுத்தும் நோக்கில் ஒருவார பயணமாக முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் இன்று புறப்பட்டு சென்றார். #MaharashtraCM
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநில முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அமெரிக்கா, கனடாவில் ஒருவார சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக மும்பையில் இருந்து விமானம் மூலம் இன்று புறப்பட்டு சென்றார்.

    அமெரிக்காவில் நியூயார்க், வாஷிங்டன், சான்பிரான்சிஸ்கோ நகரங்களுக்கு செல்லும் அவர், அங்குள்ள பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை பார்வையிடுவதுடன் அந்த தொழில்நுட்பங்களை மகாராஷ்டிர மாநிலத்தில் கையாள்வது தொடர்பாக ஒப்பந்தம் செய்யவும் திட்டமிட்டுள்ளார்.

    மேலும், மும்பை நகரை புனேவுடன் இணைக்கும் அதிநவீன சாலை வசதி தொடர்பான ஒப்பந்தத்தை செய்துள்ள விர்ஜின் குழுமத்தின் சான்பிரான்சிஸ்கோ நகர தலைமையகத்தையும் அவர் பார்வையிடுகிறார்.

    பின்னர், கனடா நாட்டின் மான்ட்ரியல் நகருக்கு செல்லும் பட்னாவிஸ், உள்கட்டமைப்பு மற்றும் வேளாண்மை துறைகளில் செயற்கை நுன்னறிவை பயன்படுத்துவது தொடர்பாக விரிவான பேச்சுவார்த்தை நடத்துகிறார். #tamilnews #MaharashtraCM
    அமெரிக்காவில் சிப்பி வகை மீன் உணவு சாப்பிடும் போட்டியில் 8 நிமிடத்தில் 40 டஜன் அதாவது 480 சிப்பி மீன்களை சாப்பிட்டு விரிஜீனியா மாகாணத்தை சேர்ந்தவர் சாதனை படைத்தார்.
    நியூயார்க்:

    அமெரிக்காவில் நியூ ஒர்லியன்ஸ் நகரில் சிப்பி வகை மீன் உணவு சாப்பிடும் போட்டி நடைபெற்றது. அதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். இறுதிப் போட்டிக்கு அவர்களில் 7 பேர் மட்டும் தேர்வு செய்யப்பட்டனர்.

    தெற்கு லூசியானாவில் இருந்து 4 ஆயிரம் சிப்பி மீன்கள் கொண்டு வரப்பட்டு நன்றாக பொரித்து வைக்கப்பட்டிருந்தன. இத்துடன் சேர்ந்து சாப்பிட பீர், மற்றும் பிற பானங்கள் வைக்கப்பட்டிருந்தன.


    போட்டி தொடங்கியதும் அதில் பங்கேற்றவர்கள் ஆர்வத்துடன் சாப்பிட தொடங்கினர். அவர்களில் விரிஜீனியா மாகாணத்தை சேர்ந்த டேரன் பிரீடன் வெற்றி பெற்றார். அவர் 8 நிமிடத்தில் 40 டஜன் அதாவது 480 சிப்பி மீன்களை சாப்பிட்டு சாதனை படைத்தார்.

    அவருக்கு அடுத்தப்படியாக 156 சிப்பி மீன்களை சாப்பிட்ட மைக்கேல் லெஸ்கோ 2-வது இடம் பிடித்தார். இவர் அரிசோனாவை சேர்ந்தவர். இந்த போட்டி நடுவர்கள் மத்தியில் நடைபெற்றது. போட்டியில் வென்ற டேரன் பிரீடனுக்கு உலக சிப்பி மீன் சாப்பாட்டு சாம்பியன் பட்டம் வழங்கப்பட்டது. #Tamilnews
    அமெரிக்காவின் பிரபல சமையல் கலைஞரான அந்தோணி போர்டைன் மரணம் அடைந்ததையொட்டி, அதிபர் டிரம்ப் மற்றும் முன்னாள் அதிபர் ஒபாமா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். #AnthonyBourdain #died
    நியூயார்க்:

    அமெரிக்காவின் பிரபல சமையல் கலைஞர் அந்தோணி போர்டைன் (வயது 61). இவர் சமையல் மட்டுமின்றி எழுத்தாளர், தொலைக்காட்சி பிரபலம் என பன்முகத் தன்மை கொண்டவர்.

    உலகம் முழுவதும் பயணம் மேற்கொண்டு சிறந்த உணவு மற்றும் பானங்கள் குறித்து நிகழ்ச்சிகளை நடத்தியுள்ள அந்தோணி, ஏராளமான விருதுகளையும் வென்றுள்ளார். அமெரிக்காவின் சிஎன்என் தொலைக்காட்சியில் ‘பார்ட்ஸ் அன்நோன்’ என்ற சமையல் நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்தி வருகிறார். இந்த நிகழ்ச்சிக்காக சிறப்பு விருதும் பெற்றுள்ளார்.

    இந்நிலையில்,  பிரான்சில் தங்கியிருந்து பார்ட்ஸ் அன்நோன் சீரியலுக்காக பணியாற்றி வந்த போர்டைன் நேற்று திடீரென தற்கொலை செய்துகொண்டார். அவர் தங்கியிருந்த ஓட்டல் அறையில் சடலமாக மீட்கப்பட்டார். அவரது மறைவுக்கு சக சமையல் கலைஞர்கள், ஊழியர்கள் மற்றும் பல்வேறு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரது மறைவு தங்களுக்கு பேரிழப்பு என சிஎன்என் தெரிவித்துள்ளது.

    அந்தோணி மறைவு தனக்கு மிகவும் வேதனை அளிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். அந்தோணி மறைவு குறித்த தகவல் அதிர்ச்சி அளித்ததாகவும், அவரது குடும்பத்திற்கு தனது இதயப்பூர்வமான இரங்கலையும் ஆறுதலையும் தெரிவிப்பதாகவும் டிரம்ப் கூறினார்.



    அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவும் அந்தோணியின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அந்தோணியின் சீரியலை மிகவும் ரசித்து பார்ப்பதாகவும், கதாபாத்திரமாகவே அவர் வாழ்ந்ததாகவும் கூறினார். மேலும், வியட்நாம் சென்றபோது அந்தோணியுடன் அமர்ந்து உணவு அருந்தியதையும் ஒபாமா நினைவு கூர்ந்தார்.  #AnthonyBourdain #died
    அமெரிக்காவில் வெட்டப்பட்ட பாம்பின் தலை கடித்ததில் வாலிபர் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
    ஹுஸ்டன்:

    அமெரிக்காவில் உள்ள ஹுஸ்டன் நகரை சேர்ந்தவர் ஜெனீபர் சுட்கிளிப். கடந்த மாதம் (மே) 27-ந்தேதி இவரது கணவர் தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு ரேட்டில் சினேக் எனப்படும் கிளுகிளுப்பை பாம்பு ஒன்று ஊர்ந்து சென்று கொண்டிருந்தது. அதை பார்த்த அவர் பாம்பின் தலையை வெட்டினார்.

    அதை அங்கிருந்து அகற்ற வெட்டப்பட்ட பாம்பின் தலையுடன் தூக்கிச் சென்றார். அப்போது வெட்டிய பாம்பின் தலை அவரை கடித்தது.

    கிளுகிளுப்பை பாம்பின் வி‌ஷம் கடுமையானது. அது அவரது உடலில் வேகமாக பரவியது. அதனால் மயக்கம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    தற்போது அவர் கண் பார்வையை இழந்து விட்டார். உடலில் உள்ள உறுப்புகளில் ரத்தக் கசிவு உள்ளது. எனவே, உயிர் பிழைக்க மாட்டார் என டாக்டர்கள் கை விரித்து விட்டனர். #Tamilnews
    ×