search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95602"

    சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படும் என்பதில் நம்பிக்கையாக உள்ளதாகவும், அமெரிக்காவுக்கு நன்மை அளிக்கும் என்றால் மட்டும்தான் சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்துவேன் என டிரம்ப் கூறினார். #DonaldTrump
    வாஷிங்டன்:

    அமெரிக்கா, சீனா இடையே வர்த்தக உறவில் விரிசல் விழுந்துள்ளது. இதன் காரணமாக சீன பொருட்கள் மீது அமெரிக்கா 250 பில்லியன் டாலருக்கு (ஒரு பில்லியன் என்பது 100 கோடி டாலர்.) கூடுதல் வரி விதித்தது. சீனாவும் அமெரிக்க பொருட்கள் மீது 110 பில்லியன் டாலர் கூடுதல் வரி விதித்து பதிலடி தந்தது.

    ஆனாலும், அர்ஜென்டினா நாட்டின் தலைநகர் பியுனோஸ் அயர்ஸ் நகரில் நடந்த ‘ஜி-20’ உச்சி மாநாட்டின் முடிவில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், சீன அதிபர் ஜின்பிங்கும் சந்தித்து பேசினர். இரு தரப்பு வர்த்தகப் போரை நிறுத்தி வைக்கவும், ஜனவரி 1-ந்தேதி முதல் 90 நாட்களுக்கு கூடுதல் வரிகளை விதிப்பதில்லை என்றும் ஒப்புக்கொண்டனர்.

    அதைத் தொடர்ந்து இரு தரப்பு வர்த்தக ஒப்பந்தம் போடுவதற்கு, அமெரிக்கா மற்றும் சீன வர்த்தக அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

    இது தொடர்பாக வாஷிங்டனில் நேற்று முன்தினம் டிரம்ப் நிருபர்களிடம் பேசுகையில், “சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படும் என்பதில் நம்பிக்கையாக உள்ளேன். ஆனால், அமெரிக்காவுக்கு நன்மை அளிக்கும் என்றால் மட்டும்தான் சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்துவேன்” என திட்டவட்டமாக கூறினார்.

    சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படாவிட்டால், சீனப்பொருட்கள் மீது கூடுதல் வரி விதிக்கப்படும் என டிரம்ப் ஏற்கனவே எச்சரித்து இருந்தது நினைவுகூரத்தக்கது.
    பாகிஸ்தானில் புகுந்து இந்திய போர் விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தியது குறித்து ரஷியா மற்றும் சீனாவிடம் சுஷ்மாசுவராஜ் விளக்கம் அளித்தார். #SushmaSwaraj #PulwamaAttack #Chinese #ForeignMinister
    பெய்ஜிங்:

    சீனாவின் பெய்ஜிங்கில் வெளியுறவுதுறை மந்திரிகள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக இந்திய வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் சென்றுள்ளார்.

    அங்கு, பாகிஸ்தானில் புகுந்து இந்திய போர் விமானங்கள் குண்டு வீசி தாக்கியது குறித்து விளக்கம் அளித்தார். இந்தியா நடத்தியது ராணுவ தாக்குதல் அல்ல. ராணுவத்தளங்களை குறிவைத்து இத்தாக்குதல் நடத்தப்படவில்லை.

    ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகளையும் அவர்களது புகலிடத்தையும் குறிவைத்து மட்டுமே தாக்குதல் நடத்தப்பட்டது. ஏனெனில் அவர்கள் இந்தியாவில் புகுந்து மீண்டும் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தனர்.

    அவர்களிடம் இருந்து பொதுமக்களை காக்கவே பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. பயங்கரவாதிகளை கட்டுப்படுத்த இத்தகைய நடவடிக்கைகள் தொடரும் என்றார்.



    இதற்கிடையே, அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகனின் உயர் அதிகாரி ஜெனரல் ஜோசப்டன்கோர்டு பாகிஸ்தான் ராணுவ உயர் அதிகாரி ஜெனரல் ஷூபேர் மக்மூதை டெலிபோனில் தொடர்பு கொண்டு பேசினார்.

    இந்திய ராணுவம் குண்டு வீசி தாக்குதல் நடத்திய பிறகு தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலை குறித்து இருவரும் விவாதித்தனர். இந்த தகவலை பென்டகன் செய்தி தொடர்பாளர் கர்னல் பாட்ரிக் எஸ்.ரைடர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். #SushmaSwaraj #PulwamaAttack #Chinese #ForeignMinister
    இந்தியாவும், பாகிஸ்தானும் சுய கட்டுப்பாட்டை கடைபிடித்து, பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ளுங்கள் என்று சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் கெங் சுவாங் கூறியுள்ளார். #PulwamaAttack #India #Pakistan #China
    பீஜிங்:

    இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் கெங் சுவாங் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    இந்தியாவும், பாகிஸ்தானும் தெற்கு ஆசியாவில் முக்கியமான நாடுகள். இந்த பிராந்தியத்தில் அமைதியும், ஸ்திரத்தன்மையும் நிலவ இரு நாடுகளிடையே நிலையான இருதரப்பு நல்லுறவு நிலவுவது அவசியம்.



    தெற்கு ஆசியா கடைப்பிடித்து வரும் ஒட்டுமொத்த ஸ்திரத்தன்மையை அனைத்து தரப்பும் உறுதி செய்ய வேண்டும். எனவே, இந்தியாவும், பாகிஸ்தானும் சுய கட்டுப்பாட்டை கடைபிடித்து, தங்களுக்கு இடையிலான பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்வார்கள் என்று நம்புகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    சீனா அரசு உரிமை கோரும் அருணாச்சலப்பிரதேசம் எங்கள் நாட்டின் பிரிக்கமுடியாத, ஒருங்கிணைந்த பகுதி என இந்திய அரசு இன்று மீண்டும் குறிப்பிட்டுள்ளது. #ArunachalPradesh #MEAIndia
    புதுடெல்லி:

    அருணாச்சலப்பிரதேசம் மாநிலத்துக்கு இன்று சென்ற பிரதமர் நரேந்திர மோடி, தலைநகர் இட்டாநகர் பகுதியில் உள்ள ஹோல்லோங்கி என்ற இடத்தில் அமையவுள்ள புதிய பசுமை விமான நிலையத்துக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், 4 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.

    சர்ச்சைக்குரிய தங்களது நாட்டின் ஒருங்கிணைந்த எல்லைப்பகுதியான அருணாச்சலப்பிரதேசத்துக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்றதற்கு சீனா அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    ‘தங்கள் நாட்டுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு வந்து செல்வதுபோல் அருணாச்சலப்பிரதேசத்துக்கு இந்திய தலைவர்கள் வந்து செல்வது எங்களது கவனத்துக்கு அவ்வப்போது கொண்டு வரப்பட்டுள்ளது.

    சீனாவின் எல்லையில் உள்ள இப்பகுதி தொடர்பான விவகாரத்தில் எங்களது நிலைப்பாடு உறுதியாகவும், மிகத்தெளிவாகவும் இருந்து வருகிறது. அருணாச்சலப்பிரதேசம் என்னும் ஒரு பகுதியை சீன அரசு எப்போதுமே அங்கீகரித்தது கிடையாது என சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் இன்று குறிப்பிட்டிருந்தார்.

    இந்த கருத்துக்கு இந்திய அரசு சரியான பதிலடி கொடுத்துள்ளது. சீனா அரசு உரிமை கோரும் பகுதியான அருணாச்சலப்பிரதேசம் மாநிலம் இந்தியாவின் பிரிக்கமுடியாத ஒருங்கிணைந்த பகுதி. இந்தியாவின் பிறபகுதிகளுக்கு செல்வதுபோல் எங்களது நாட்டின் தலைவர்கள் அடிக்கடி அருணாச்சலப்பிரதேசத்துக்கு சென்று வந்துள்ளார்கள். எங்களது இந்த உறுதியான நிலைப்பாட்டை பல வேளைகளில் சீன அரக்கு நாங்கள் ஏற்கனவே தெரிவித்துள்ளோம் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரி தெரிவித்துள்ளார். #ArunachalPradesh #MEAIndia
    சர்ச்சைக்குரிய தங்களது நாட்டின் ஒருங்கிணைந்த எல்லைப்பகுதியான அருணாச்சலப்பிரதேசத்துக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்றதற்கு சீனா அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. #Chinaopposes #ModiArunachalvisit
    பீஜிங்:

    இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒண்றான அருணாச்சலப்பிரதேசத்தை தங்கள் நாட்டின் ஆளுமைக்கு உட்பட்ட திபெத்தின் தெற்கு பகுதி எல்லையாக சீன அரசு சொந்தம் கொண்டாடி வருகிறது.

    இந்த பிரச்சனை தொடர்பாக பல ஆண்டுகளாக இந்தியா-சீனா உயர்மட்ட அதிகாரிகளிடையே 21 சுற்று பேச்சுவார்த்தை நடந்தும் இன்னும் தீர்வு காணப்படவில்லை. இருநாடுகளுக்கும் இடையிலான 3488 எல்லைப்பகுதியில் அமைந்துள்ள அருணாச்சலப்பிரதேசம் மாநிலத்துக்கு இந்தியாவை சேர்ந்த தலைவர்கள் செல்லும் போதெல்லாம் சீனா அரசு எதிர்ப்பு தெரிவித்து வருவது வாடிக்கையாக உள்ளது.

    இந்நிலையில், அரசுமுறை பயணமாக அருணாச்சலப்பிரதேசம் மாநிலத்துக்கு இன்று சென்ற பிரதமர் நரேந்திர மோடி, தலைநகர் இட்டாநகர் பகுதியில் உள்ள ஹோல்லோங்கி என்ற இடத்தில் அமையவுள்ள புதிய பசுமை விமான நிலையத்துக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், 4 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திடங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.

    சர்ச்சைக்குரிய தங்களது நாட்டின் ஒருங்கிணைந்த எல்லைப்பகுதியான அருணாச்சலப்பிரதேசத்துக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்றதற்கு சீனா அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    ‘தங்கள் நாட்டுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு வந்து செல்வதுபோல் அருணாச்சலப்பிரதேசத்துக்கு இந்திய தலைவர்கள் வந்து செல்வது எங்களது கவனத்துக்கு அவ்வப்போது கொண்டு வரப்பட்டுள்ளது.

    சீனாவின் எல்லையில் உள்ள இப்பகுதி தொடர்பான விவகாரத்தில் எங்களது நிலைப்பாடு உறுதியாகவும், மிகத்தெளிவாகவும் இருந்து வருகிறது. அருணாச்சலப்பிரதேசம் என்னும் ஒரு பகுதியை சீன அரசு எப்போதுமே அங்கீகரித்தது கிடையாது. இந்தியா-சீனாவின் எல்லைப்பகுதியில் எங்கள் நாட்டின் கிழக்கு எல்லையில் உள்ள இந்த இடத்துக்கு இந்திய தலைவர்கள் வரும்போதெல்லாம் எங்கள் நிலைப்பாட்டை உறுதிப்படுத்தும் வகையில் நாங்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம்.

    இருநாடுகளுக்கு இடையிலான பொது விவகாரங்களை கருத்தில் கொண்டும் சீன அரசின் அக்கறைக்கு மதிப்பளிக்கும் வகையிலும், எல்லைப்பகுதியில் பதற்றத்துக்குரிய சர்ச்சைகளை தவிர்க்கும் வகையிலும்  இதுபோன்ற செயல்களில் இருந்து இந்திய தலைவர்கள் விலகியிருக்க வேண்டும்’ என சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஹூவா சுன்யிங் குறிப்பிட்டுள்ளார். #Chinaopposes #ModiArunachalvisit
    சீன புத்தாண்டான பன்றி ஆண்டு தொடங்கியுள்ள நிலையில், சீனா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளிலும் உள்ள சீன மக்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். #China #Lunarnewyear
    பெய்ஜிங்:

    சீனாவில் பாரம்பரிய லூனார் நாட்காட்டியின்படி, ஒவ்வொரு ஆண்டும் ஒரு விலங்கின் அடிப்படையில் புத்தாண்டு தினம் கொண்டாடப்படுகிறது. சீனாவில் இந்த புத்தாண்டு கொண்டாட்டம் முக்கியத்துவம் வாய்ந்த பண்டிகையாகும். அந்த வகையில் இந்த ஆண்டு, பன்றி ஆண்டாக அமைந்துள்ளது. சீன நாட்காட்டியில் உள்ள 12 விலங்கு ராசிகளில் பன்றியும் ஒன்று. இதனை நம்பிக்கையின் சின்னமாக சீனர்கள் கருதுகின்றனர்.

    பன்றி ஆண்டு இன்று தொடங்கிய நிலையில், சீன மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். சீனா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளிலும் உள்ள சீன மக்கள் கோலாகலமாக கொண்டாட்டத்துடன் பன்றி ஆண்டை வரவேற்றனர்.



    பாங்காக்கில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தில் மனிதருக்கு பன்றி வேஷம் போடப்பட்டு, உண்டியல் போன்ற அமைப்பில் காட்சிப்படுத்தினர். இது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் இந்த புத்தாண்டினை வசந்தகால விழா எனும் பெயரிலும் பல நாடுகளில் கொண்டாடப்படுகிறது.

    இந்தோனேஷியாவின் ஜகார்த்தா பகுதியில் கடலுக்கடியில் ஒருவர் நீந்தி, குழந்தைகளை மகிழ்விக்கும் வண்ணம் வாழ்த்து கூறினார். மேலும் பாலியில் பாரம்பரிய லியோங் நடனம் நடைபெற்றது. இதேபோன்று ஹாங் காங் பகுதியில் மிகப்பெரிய பன்றி சிலை வைக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள ஓபரா ஹவுஸ் புத்தாண்டை வரவேற்கும் விதமாக சிவப்புநிற வண்ண விளக்குகளால் ஜொலிக்கிறது.



    பெய்ஜிங்கில் உள்ள கோவிலில் கலாச்சார முறைப்படி ஆடை அணிந்து வழிபாடுகளில் ஈடுபட்டனர். இதற்கென பல்வேறு நாடுகளில் புலம்பெயர்ந்து வசிக்கும் சீன மக்கள் சொந்த ஊர்களுக்கு வந்துள்ளனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.



    சீனாவின் நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் செல்ல பல மணி நேரம் ஆனபோதும், மக்கள் காத்திருந்து செல்கின்றனர்.  நேற்றிரவு முதலே வாணவேடிக்கைகள், வண்ண விளக்குகள், புத்தாடைகள், பாரம்பரிய உணவுகள் என சீனாவின் அனைத்து இடங்களும் களைகட்டி காணப்படுகிறது. #China #Lunarnewyear 
    சீனாவின் ஜிலின் மாகாணத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கியாஸ் கசிந்த் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 8 பேர் பலியாகினர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #apartmentbuildinggasleak
    பெய்ஜிங்:

    சீனாவின் ஜிலின் மாகாணத்தில் உள்ள சாங்வான் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இன்று அதிகாலை இந்த குடியிருப்பின் நான்காவது மாடியில் சமையல் எரிவாயு கசிந்து திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

    இந்த விபத்தில் சிக்கி 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் என்றும், 3 பேர் படுகாயம் அடைந்தனர் என்றும் தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீ விபத்து குறித்து முதல் கட்ட விசாரணை நடந்து வருகிறது.
    #apartmentbuildinggasleak
    2018-ம் ஆண்டுக்கான ஊழல் நாடுகள் பட்டியலில் இந்தியா 3 புள்ளிகள் குறைந்து 78-வது இடத்தில் உள்ளது. #CorruptCountries #India
    லண்டன்:

    2018-ம் ஆண்டுக்கான ஊழல் நாடுகள் பட்டியலை டிரான்ஸ்பரன்சி இன்டர்நே‌ஷனல் அமைப்பு வெளியிட்டுள்ளது. ஊழலற்ற நிர்வாகம், ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்படுகின்றன.

    180 நாடுகள் இடம் பெற்றுள்ள இப்பட்டியலில் இந்தியா 78-வது இடத்தில் உள்ளது. இது கடந்த ஆண்டை விட குறைவாகும்.

    2014-ம் ஆண்டில் ஊழல் நாடுகள் பட்டியலில் இந்தியா 81-வது இடத்தில் இருந்தது. 2015-ம் ஆண்டில் 5 இடம் குறைந்து 76-வது இடத்துக்கு வந்தது. 2017-ம் ஆண்டில் 81-வது இடத்துக்கு சென்ற இந்தியா கடந்த ஆண்டை விட 3 புள்ளிகள் குறைந்தது. தற்போது 78-வது இடத்துக்கு முன்னேறியது.

    ஊழலுக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த 2011-ம் ஆண்டில் நாட்டு மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதை தொடர்ந்து ஜன் லோக் பால் சட்டம் கொண்டு வரப்பட்டது. அதன் விளைவாக முந்தைய ஆண்டுகளை விட ஊழல் குறைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதே நேரத்தில் அண்டை நாடான சீனா 87-வது இடத்தில் உள்ளது. மற்றொரு பக்கத்து நாடான பாகிஸ்தான் 117-வது இடம் பிடித்துள்ளது.

    ஊழல் மிக குறைந்த நாடுகள் பட்டியலில் டென்மார்க் நியூசிலாந்துகள் முதல் 2 இடங்களில் உள்ளன. சிரியா, சூடான் ஆகிய நாடுகள் கடைசி இடத்தில் உள்ளன. #CorruptCountries #India
    சீனாவுக்கான கனடா நாட்டு தூதர் ஜான் மெக்கலம் தனது பதவியை ராஜினாமா செய்தார். #China #CanadaAmbassador #JohnMcCallum
    ஒட்டாவா:

    சீனாவை சேர்ந்த பன்னாட்டு தொலைத் தொடர்பு நிறுவனமான ஹூவாய் நிறுவனத்தின் அதிபர் ரென் ஜெங்பெய்யின் மகளும், அந்த நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியுமான மெங்வான்ஜவ் கடந்த மாதம் 1-ந் தேதி கனடாவில் வான்கூவர் நகரில் கைது செய்யப்பட்டார்.

    அதனை தொடர்ந்து சீனாவில் உளவு பார்த்த குற்றச்சாட்டில் கனடாவை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். இது இரு நாட்டு உறவில் மேலும் விரிசலை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில், சீனாவுக்கான கனடா நாட்டு தூதர் ஜான் மெக்கலம் தனது பதவியை ராஜினாமா செய்தார். பிரதமர் ஜஸ்டின் டிரிடியு கேட்டுக்கொண்டதன் பேரில் அவர் பதவியில் இருந்து விலகினார். இது குறித்து ஜஸ்டின் டிரிடியு வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், “நான் ஜான் மெக்கலமை பதவி விலகும்படி கேட்டு கொண்டேன். அவரின் ராஜினாமா கடிதத்தையும் ஏற்றுக்கொண்டேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

    ஹூவாய் நிறுவன தலைமை அதிகாரி மெங்வான்ஜவ் கைது விவகாரம் தவறானது என்று விமர்சித்த ஜான் மெக்கலம், அடுத்த நாளே தான் தவறாக பேசிவிட்டதாக கூறியதோடு, தனது பேச்சு குழப்பத்தை விளைவித்ததற்காக மன்னிப்பு கோரியதும் குறிப்பிடத்தக்கது. 
    உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறித்த பட்டியலில் இந்தியா 5-வது இடம் பிடித்துள்ளது. இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி இந்த இடத்துக்கு முன்னேறியுள்ளது. #india #Richest
    லண்டன்:

    சர்வதேச முகவாண்மை நிறுவனமான ‘பி.டபிள்யூ.சி.’ உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறித்த பட்டியலை வெளியிட்டது. உள்ளூர் உற்பத்தி வளர்ச்சி விகிதத்தை அடிப்படையாக கொண்டு இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டது.

    அதன்படி நடப்பு 2019-ம் ஆண்டில் இந்தியா 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு 7-வது இடத்தில் இருந்த இந்தியா இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி இந்த இடத்துக்கு முன்னேறியுள்ளது.

    இதன்மூலம் பணக்கார நாடுகள் பட்டியலில் இந்தியா 5-வது இடம் பிடித்துள்ளது. அதே நேரத்தில் பிரான்ஸ் 6-வது இடத்தை பெற்றுள்ளது.


    இந்தியாவில் மக்கள் தொகை அதிகம். அதனால் மக்களின் உழைப்பு காரணமாக உற்பத்தி திறன் அதிகரித்து பொருளாதார நிலை உயர்ந்துள்ளதாக பி.டபிள்யூ.சி. தெரிவித்துள்ளது. இந்த வளர்ச்சி நிரந்தரமாக இருக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

    கடந்த 10 ஆண்டுகளாக இங்கிலாந்தும், பிரான்சும் முறையே 5 மற்றும் 6-வது இடத்தில் இருந்தன. தற்போது ‘பிரக்ஸிட்’ பிரச்சனையில் இங்கிலாந்து உள்ளது. இதனால் பவுண்டு மற்றும் யூரோ நாணயங்களுக்கு இடையேயான மதிப்பில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

    2 நாடுகளுமே சமமான மக்கள் தொகையை கொண்டது. இருந்தாலும் நாணய மதிப்பில் ஏற்பட்டுள்ள முரண்பாடு காரணமாக இங்கிலாந்தை 7-வது இடத்துக்கு தள்ளிவிட்டு 6-வது இடத்திலேயே பிரான்ஸ் தொடர்ந்து நீடிக்கிறது.

    பொருளாதார வளர்ச்சியில் முன்னேற்றத்துடன் அமெரிக்கா பணக்கார நாடுகளின் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சீனா 2-வது இடத்திலும், ஜப்பான், ஜெர்மனி தலா 3 மற்றும் 4-வது இடத்தில் உள்ளன. #india #Richest
    நிலவின் மறுபக்கத்திற்கு சீனா அனுப்பிய விண்கலத்தில் இருந்த பருத்தி விதை முளைக்க தொடங்கியுள்ளது. #ChangE4 #lunarlander #moon
    சீனாவின் விண்வெளி ஆய்வு நிலையம் கடந்த சில நாட்களுக்கு முன் சாங் இ-4 என்ற விண்கலம் அனுப்பி உள்ள நிலையில், அதன் மூலம் நிலவின் குளிர்நிலையை ஆய்வு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.

    நிலவின் பின் பகுதியை யாராலும் பார்க்க முடிவதில்லை. இது வரை பல்வேறு ஆராய்ச்சிகள் உலக நாடுகள் செய்து வந்தாலும் நிலவின் பின்பகுதியை ஆய்வு செய்வது குறித்து முதலில் தொடங்கியது சீனாதான்.

    இதற்காக கடந்த மாதம் 8ஆம் தேதி சாங் இ-4 என்ற விண்கலத்தை நிலவுக்கு அனுப்பியது. அந்த விண்கலம் இந்த மாதம் 3ஆம் தேதி நிலவின் இருண்ட பகுதி என்று கூறப்படும் யாரும் பார்த்திராத பகுதியில் இறங்கியது. நிலவின் மறுப்பக்கத்தில் யாரும் இதுவரை கண்டிராத புகைப்படங்களை சீன விண்வெளி மையத்திற்கு அனுப்பியது.

    நிலவில் பூமியை போல் இல்லாமல் சற்று மாறுபட்டே கால சூழல் அமைகிறது. அதாவது பூமியின் கணக்குபடி 14 நாட்கள் இரவாகவும், 14 நாட்கள் பகலாகவும் நிலவில் இருக்கும்.

    பகலில் அதிக வெப்பமாகவும் இரவில் கடும் குளிராகவும் இருக்கும். அதாவது விஞ்ஞானிகளின் கணக்குபடி பகலில் 127டிகிரி செல்சியஸ் வெப்பமாகவும், இரவில் -183 டிகிரி செல்சியஸ் உறை பனியாகவும் இருக்கிறது என்று கூறியுள்ளனர்.

    மேலும் விண்கலம் பழுதடையாமல் இருக்க அதில் உள்ள வெப்ப மூட்டிகள் தொடர்ந்து இயக்கப்படும் என்றும், அந்த கருவிகள் உருவாக்கும் மின்சக்திகள் பெற்று நிலவின் குளிர் நிலையை துல்லியமாக ஆய்வு செய்ய உள்ளதாகவும் விண்வெளி ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.



    அங்கு உயிர் வாழ்வதற்கான சூழ்நிலை இருக்கின்றதா என்றும் ஆய்வுகள் நடக்கின்றது. இதற்காக தனது விண்கலனை வித்தியாசமான முறையில் ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளது. புதிய பரிமாணத்தில் ஆய்வும் நடந்து வருகின்றது.

    நிலவின் மறுபக்கத்தில் உள்ள பெருங்குழியில் ஆய்வு நடைபெறுவதாகவும், இந்த ஆய்வில், நிலாவின் தரையில் என்னென்ன தனிமங்கள் உள்ளன, அங்கு கதிர் வீச்சு எப்படி உள்ளது, சூழல் எப்படி இருக்கிறது என்பதை எல்லாம் ஆராய்ந்து வருவதாக சீன விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்

    ஆய்வு செய்து வரும் பணிகளை தனது விண்கலன்கள் மூலம் நேரலையில் சீனா விஞ்ஞானிகள் கண்காணித்து வருகின்றனர். இது விண்வெளி ஆய்வில் வித்தியாசமான முயற்சியாகவும் இருந்து வருகின்றது.

    நிலவில் உயிரியல் பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக ஒரு பெட்டிக்குள் உருளைக்கிழங்கு, பருத்தி விதைகள், மற்றும் பட்டுப்பூச்சி முட்டைகள்  மூன்று கிலோ கொண்ட கொள்கலனில் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

    சீனா சாங் இ-4 மூலம் ஆய்வுக்காக  கொண்டு சென்ற பருத்தி விதைகள் முளைக்க ஆரம்பித்து உள்ளன.

    சாங் இ-4 எடுத்து அனுப்பிய புகைப்படங்களில், பருத்தி விதை முளைக்க தொடங்கி உள்ளதை காட்டியது, ஆனால் வேறு எந்த தாவரங்களும் முளைப்பது காணப்படவில்லை. இதுவரை 170 க்கும் மேற்பட்ட படங்கள் கேமராக்கள் மூலம் எடுக்கப்பட்டு பூமிக்கு அனுப்பப்பட்டு உள்ளது என இந்த குழு கூறி உள்ளது. #ChangE4 #lunarlander #moon
    கோபத்தில் இருப்பவர்களின் மன அமைதிக்காக சீனாவில் இளைஞர் ஒருவர் பொருட்களை உடைக்கும் பிரத்யேக கடை ஒன்றை திறந்துள்ளார். #AngerRoom
    பெய்ஜிங்:

    கோபம் வந்தால் சிலருக்கு கையில் கிடைக்கும் பொருட்களையெல்லாம் தூக்கி எறிய வேண்டும் அல்லது உடைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். அப்படி கோபத்தில் இருப்பவர்களை அமைதிப்படுத்த பொருட்களை உடைக்கும் கடை ஒன்று சீனாவில் திறக்கப்பட்டுள்ளது.

    சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் புதிதாக திறக்கப்பட்டுள்ள கடைக்கு ‘ஆங்ரி ரூம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த அறையில் டிவி, கடிகாரம், தொலைபேசி என அனைத்து பொருட்களும் வைக்கப்பட்டுள்ளன.


    பெரும் கோபத்தில் வரும் வாடிக்கையாளர்கள் பணத்தை கொடுத்துவிட்டு தங்கள் ஆவேசங்களை அந்தப் பொருட்களின் மீது வெளிப்படுத்தலாம். அவ்வாறு அவர்கள் பொருட்களை உடைக்கும் போது பின்னணியில் இசை ஒலிக்கப்படுகிறது.


    இந்த ஆங்ரி ரூமுக்குள் நுழைந்து கண்ணில்பட்ட பொருட்களை எல்லாம் தூக்கியெறிந்து உடைக்க 30 நிமிடங்களுக்கு இந்திய மதிப்பில் 5 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படுகிறது.  இதற்காக பிரத்யேக உடைகளும் கோபக்காரர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்தக் கடைக்கு 20 முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் அதிகமாக வருவதாக கூறப்படுகிறது.

    வாடிக்கையாளர்களின் மன அழுத்தத்தை போக்கவே இந்தக் கடையை திறந்திருப்பதாகவும், வன்முறையை ஊக்குவிப்பது தங்களின் நோக்கமல்ல என்றும் கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார். #AngerRoom
    ×